ஆன்மிக களஞ்சியம்
பிரம்மா செய்த யாகமும் கோபம் கொண்ட சரஸ்வதி தேவியும்
- காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் காஞ்சியின் தெற்கே, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
- மூலவர் வரதர் மேற்கு பார்த்தவாறு திருநின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் காஞ்சியின் தெற்கே, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
மூலவர் வரதர் மேற்கு பார்த்தவாறு திருநின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
தாயார் பெருந்தேவியார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
திருவேங்கடம் என்றால் திருமலையையும், பெருமாள் கோவில் என்றால் அது காஞ்சிபுரத்தையும் குறிக்கும் அளவுக்கு இக்கோவில் சிறப்பு வாய்ந்தது.
ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு நாராயணனைத் தாங்கி நின்றமையால் இத்தலம் அத்திகிரி என்றும் அழைக்கப்படுகிறது.
பிரம்மா தன் மனம் பரிசுத்தமாவதற்கு காஞ்சியில் யாகம் செய்தார்.
அவ்வமயம் அவருடைய பத்தினியாகிய சரஸ்வதியை விடுத்து மற்ற இரு மனைவியராகிய சாவித்திரி, காயத்திரி ஆகியோருடன் இருந்து யாகம் செய்யத் தொடங்கினர்.
அதனை அறிந்த சரஸ்வதி மிகவும் கோபம் கொண்டு வேகவதி என்ற ஆறாய் வந்து யாகத்தை அழிக்க முயற்சி செய்தாள்.
பிரம்மாவின் வேண்டுகோளின்படி மகாவிஷ்ணு யதோத்தகாரியாக வந்து பிறந்த மேனியாக குறுக்கே சயனித்துக் கொண்டார்.
பிரம்மாவின் யாகம் பூர்த்தியான உடனே யாக குண்டத்திலிருந்து புண்ணியகோடி விமானத்துடன் பெருமாள் தோன்றினார்.
பின்பு, பிரம்மா அத்திமரத்தில் ஒரு சிலை வடித்து இங்கே பிரதிஷ்டை செய்தார்.
வேண்டும் வரம் தருபவர் என்பதால் இவர், "வரதராஜர்' எனப் பெயர் பெற்றார்.
வரதராஜபெருமாளின் தேவிக்கு பெருந்தேவி என்றுபெயர். 24 நான்கு படிகள் ஏறி அத்திகிரியை அடைய வேண்டும்.