என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பவனுதாயி என்கிற பெயரில் தாய் கிழவியாக ஊரில் வலம் வருபவர் ராதிகா. அங்குள்ளவர்களுக்கு வட்டிக்கு விட்டு மிரட்டி வட்டி வசூலில் ஈடுபட்டு வருகிறார்.

    ஒரு கட்டத்தில் கிழவி எப்போது இறக்கும் என ஊரே காத்திருக்கிறது. ராதிகாவிற்கு அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என 3 மகன்கள், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது.

    இன்னும் சில நாட்களில் ராதிகா இறந்து விடுவார் என்று ஊரே காத்திருக்கிறது. அப்போது, ராதிகா 160 சவரன் சேர்த்து வைத்துள்ளது மகன்களுக்கு தெரியவருகிறது. பாசத்தால் இல்லாவிட்டாலும், நகை சொத்துக்காகவாவது தாய் ராதிகாவை காப்பாற்ற வேண்டும் என மெனக்கிடுகிறார்கள்.

    இறுதியில் தாய் கிழவி உயிர் பிழைத்தாரா? அந்த 160 சவரன் நகை என்னவாயிற்று? என்பது படத்தின் மீதிக்கதை.

    இப்படம் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    சுமார் பத்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'தாய் கிழவி' படம் வெளியான முதல் நாளே நாடு முழுவதும் ரூ.2 கோடியே 50 லட்சத்திற்கும் மேல் வசூலித்தது.

    இந்நிலையில் 'தாய் கிழவி' படம் வெளியாகி 3 நாட்களில் ரூ.22 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இப்படத்தை தொடர்ந்து கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தை சிவகுமார் முருகேசன் இயக்க உள்ளார். இதன் அறிமுக டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விபத்துக்குள்ளான விமானத்தை விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனம் தான் பராமரித்து வந்தது.
    • தந்தையின் மரணத்திற்கு இந்த அலட்சியமே காரணம்.

    மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி தனது தொகுதியான பாரதமதிக்கு சென்றுகொண்டிருந்தபோது தனி விமானம் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் அவருடன் விமானிகள் இருவர், உதவியாளர் ஒருவர், விமான பணிப்பெண் ஒருவர் என மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர்.

    மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் தான் அங்கம் வகித்த பாஜக கூட்டணிக்கு எதிர் கூட்டணியில் அஜித் பவார் கட்சி போட்டியிட்டது.

    உள்ளாட்சிகளில் பாஜக ஊழல் செய்வதாக அஜித் பவார் பிரசாரம் செய்தார். எனவே அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினார்.

    குறிப்பாக விபத்துக்குள்ளான விமானத்தின் தகவல்கள் அடங்கிய கருப்புப்பெட்டி சேதம் அடைந்தது அஜித் பவார் மகன் உட்பட பலரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் விபத்துக்குள்ளான லியர்ஜெட் 45 என்ற அந்த தனி விமான சேவையை வழங்கிய விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் (VSR Ventures) நிறுவனத்தின் உரிமையாளர் ரோஹித் சிங் மீது அஜித் பவாரின் மகன் ஜெய் பவார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    விபத்துக்குள்ளான விமானத்தை விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனம் தான் பராமரித்து வந்தது.

    ஜெய் பவார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் உரிமையாளர் ரோஹித் சிங், விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே விமானி இருக்கையில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருப்பது பதிவாகி உள்ளது. இது மற்றொரு விமானம் ஆகும்.

    "விமானம் பறக்கும் போது இத்தகைய அலட்சியம் ஏற்புடையதல்ல. இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    தனது தந்தையின் மரணத்திற்கு இந்த அலட்சியமே காரணம் என்று கூறியுள்ள ஜெய் பவார், ரோஹித் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    அதேநேரம் விமான விபத்து விசாரணை வாரியம் சமீபத்தில் வெளியிட்ட முதற்கட்ட அறிக்கை குறித்து ஜெய் பவார் மிகுந்த ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார்.

    இந்த விசாரணை முடியும் வரை விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் அனைத்து விமானச் சேவைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மகாராஷ்டிரா மக்களுக்கும் விபத்து குறித்த உண்மையான மற்றும் வெளிப்படையான தகவல்கள் கிடைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விவாதித்தார்.
    • ஈரான் நடத்தும் தாக்குதல்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக கண்டித்துள்ளது.

    ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டாக கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் உச்சந்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். பதிலடியாக இஸ்ரேல் மீதும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது

    துபாய், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. விமான சேவைகள் அனைத்தும் முடங்கியது.

    இதற்கிடையே வளைகுடா நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் மோடி தொடர்ந்து பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாகப் பேசி வருகிறார்.

    அந்த வகையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது சவுதி அரேபியா மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்த பிரதமர், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விவாதித்தார்.

    பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீபாவுடன் பேசிய பிரதமர் மோடி, பஹ்ரைன் மீதான ஈரான் தாக்குதல் நிலைமை குறித்தும் இந்தியர்கள் பாதுகாப்பு குறித்தும் பேசினார்.

    ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானுடன் பேசிய பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

    முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசித்தார்.

    இதற்கிடையே வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச் சூழலை ஆய்வு செய்ய, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவின் அவசரக் கூட்டமும் நடைபெற்றது.

    போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது மற்றும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை உறுதி செய்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    வளைகுடா நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக ஈரான் நடத்தும் தாக்குதல்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக  கண்டித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டார்.
    • சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி ஆகிய 4 முனை போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து கூட்டணி கட்சிகளிடயே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வருகிறது.

    மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டனர். பிரதமர் மோடி கடந்த மாதம் சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    நேற்று 2-வது முறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடி மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம், மதுரையில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனையின்போது அவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாக தெரிகிறது.

    பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக காலை 9.50 மணிக்கு தனபால் எம்.பி. விமானம் மூலம் டெல்லி சென்றார்.

    எடப்பாடி பழனிசாமி கடந்த முறை, டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அவருடன், தனபால் எம்.பி. சென்றிருந்தார். எனவே இப்போதும் அவர் சென்றுள்ளார்.

    டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி இன்று இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சுமார் 2 மணி நேரம் ஆலோசனைக்கு பின்னர் பின் அவர் அங்கிருந்து காரில் புறபட்டு சென்றார்.

    கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிரதமர் மோடி வருகிற 7-ந்தேதி மீண்டும் தமிழகம் வந்து வேலூரில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    வருகிற 11-ந்தேதி அவர் திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். எனவே 7-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முன்பு தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஷியா முஸ்லிம் சமூகத்தினர் காமேனியைத் தங்கள் ஆன்மீகத் தலைவராக கருதுகின்றனர்.
    • கூட்டத்தை கலைக்கக் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

    ஈரானில் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கடந்த சனிக்கிழமை அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    ஜம்மு காஷ்மீரில் உள்ள ஷியா முஸ்லிம் சமூகத்தினர் காமேனியைத் தங்கள் ஆன்மீகத் தலைவராகக் கருதுவதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று, ஸ்ரீநகரின் மையப்பகுதியான லால் சவுக்கில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அங்கு வந்தனர்.

    இதற்கிடையே இன்று ஸ்ரீநகரின் பட்டமாலு பகுதியில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

    அங்கு காமேனியின் உருவப்படங்கள் மற்றும் கருப்புக்கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

    தடைகளை மீறி முன்னேற முயன்ற போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் மீது கற்களை வீசித் தாக்கினர்.

    வன்முறையைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தப்பட்டது. மேலும் கூட்டத்தை கலைக்கக் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

    நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து, பல பகுதிகளில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன மற்றும் கூடுதல் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தினமும் சுமார் 40 குழந்தைகளை அந்தப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • விபத்துக்குக் காரணமான பேருந்தை அடித்து நொறுக்கினர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தின் தளம் உடைத்து ஓட்டை வழியாக கீழே விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.

    தனியார் பள்ளியில் பயின்று வந்த 7 வயது சிறுமி அனன்யாவும் அவரது 10 வயது அண்ணன் யாஜத்தும் கடந்த சனிக்கிழமை மதியம் சுமார் 3 மணியளவில் மற்ற மாணவர்களுடன் பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    பிர்ஹார் கிராமம் அருகே பேருந்து சென்றபோது, அனன்யா அமர்ந்திருந்த இருக்கைக்குக் கீழே இருந்த பேருந்தின் தளம் திடீரென உடைந்தது.

    இருக்கைக்குக் கீழே ஏற்பட்ட பெரிய ஓட்டை வழியாக அனன்யா ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்தார்.

    இதைக் கண்டு அவரது அண்ணன் கூச்சலிட்டும், ஓட்டுநர் பேருந்தை நிறுத்துவதற்குள் பின்சக்கரம் சிறுமியின் மீது ஏறியது.

    அந்தப் பேருந்து மிகவும் பழையதாகவும், துருப்பிடித்த நிலையிலும் இருந்துள்ளது. அனன்யா அமர்ந்திருந்த இருக்கைக்குக் கீழே ஏற்கெனவே ஒரு பெரிய ஓட்டை இருந்தும், தினமும் சுமார் 40 குழந்தைகளை அந்தப் பேருந்தில் பள்ளி நிர்வாகம் ஏற்றிச் சென்றுள்ளது.

    விபத்துக்குக் காரணமான பேருந்தை அடித்து நொறுக்கிய கிராம மக்கள், பேருந்து ஓட்டுநரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர்.

    சிறுமியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு மக்கள் சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பேருந்து ஓட்டுநரை கைது செய்துள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 31 பேர் உயிரிழந்ததாகவும் 149 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.
    • 2024 நவம்பர் மாதத்தில் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு முதல் முறை தாக்கியுள்ளது.

    அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட அந்நாடு முழுவதும் இஸ்ரேல் தாக்குதல்களை தொடுத்தது.

    இந்த தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்ததாகவும் 149 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

    பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

    தெற்கு லெபனானில் உள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்புக் கருதி உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லா அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர் முகமது ராத் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் வேறு சில மூத்த அதிகாரிகளும் உயிரிழந்ததாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.

    2024 நவம்பர் மாதத்தில் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, தற்போதுதான் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது முதல்முறையாக ராக்கெட் தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளது.

    ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானின் பாதுகாப்பை விட ஈரானுக்கே அதிக முன்னுரிமை அளித்து வருவதாக இஸ்ரேல் ராணுவத்தின் வடக்கு கட்டளை தலைவர் ராபி குற்றம் சாட்டியுள்ளார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.
    • அவர்களுக்கான சிறப்பு விமானம் இயக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

    அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது, மேலும் சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் போன்ற நாடுகளின் முக்கிய இடங்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த அங்குள்ள இந்தியர்கள், இந்தியாவில் இருந்து சென்றவர்கள் இந்தியா திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இண்டிகோ 10 சிறப்பு விமானங்களை இயக்குகிறது.

    முன்னதாக அபுதாபியில் இருந்து 8 நகரங்களுக்கு சிறப்பு விமானங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் கமேனி கொல்லப்பட்டார்.
    • அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்ட நிலையில் அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவி மன்சரே கோஜஸ்தே, இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் காயமடைந்து உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    தெஹ்ரானிலும் அதைச் சுற்றியுள்ள பல இடங்களையும் குறிவைத்து அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

    கோஜஸ்தே அதே தாக்குதல்களில் காயமடைந்த நிலையில், 2 நாட்களுக்கு பிறகு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    78 வயதான கோஜஸ்தே, கமேனியின் மனைவி. அவர்கள் 1964 இல் திருமணம் செய்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை மட்டுமே நடைபெறும்.
    • 2025-2026 ஆம் ஆண்டிற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை வீணடிக்கும்.

    கடந்தாண்டு தமிழ்நாட்டின் 12 இடங்களில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரியிருந்தது. இதில் 4 திட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8 இடங்களுக்கான இறுதி அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் நிலுவையில் உள்ள மீதமுள்ள 8 அகழாய்வு திட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி தரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

    "கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 இடங்களுக்கான தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய பாஜக அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமென தமிழ்நாடு கோரியுள்ளது. இதற்கான முன்மொழிவுகள் 2025 ஜூலை மாதமே சமர்ப்பிக்கப்பட்டு, நவம்பர் மாதம் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

    இருப்பினும், கடந்த 8 மாதங்களாக இதற்கான அனுமதி நிலுவையில் உள்ளது. நாங்கள் மீண்டும் மீண்டும் இந்த கோரிக்கையை எழுப்பி வருகிறோம், ஆனால் தொடர்ந்து இது புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை மட்டுமே நடைபெறும். இந்த காலக்கட்டத்தைத் தவறவிட்டால், பருவமழை காரணமாக களப்பணிகள் முடங்கிவிடும்; இது முக்கியமான ஆராய்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்துவதுடன், 2025-2026 ஆம் ஆண்டிற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியையும் வீணடிக்கும்.

    நான் கேட்க விரும்புவது இதுதான், ஏன் இந்த தயக்கம்? தமிழ் நாகரிகத்தின் தொன்மை இந்தியாவைக் குறைத்து மதிப்பிடாது; அது இந்தியாவின் நாகரிகப் பெருமைக்கு மேலும் வலு சேர்க்கும். பாஜக அரசு எதைக் கண்டு பயப்படுகிறது? அகழ்வாராய்ச்சிகளுக்கு ஒப்புதல் அளியுங்கள், வரலாறு பேசட்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    இந்த ஆய்வுகளுக்காக பட்ஜெட்டில் ரூ.7 கோடி தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. 

    ×