என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நீங்கள் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள்.

    தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நேஷனல் கிரஷ் என்று வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமணம் செய்து கொள்ள உள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

    தங்கள் திருமணத்துக்கு The Wedding of ViRosh என்று பெயரிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ViRosh என்பது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகிய பெயர்களின் சுருக்கமாக ரசிகர்கள் தங்களுக்கு சூட்டியதால் அதை பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நாங்கள் எதையும் திட்டமிடுவதற்கு முன்பே, எங்களுக்காக எதையும் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே.. நீங்கள் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள். மிகுந்த அன்புடன் எங்களுக்கு ஒரு பெயரைச் சூட்டினீர்கள்.

    எங்களை 'வி்ரோஷ்' என்று அழைத்தீர்கள். எனவே இன்று முழு மனதுடன், எங்கள் திருமணத்திற்கு உங்கள் நினைவாக 'தி வெடிங் ஆஃப் வி்ரோஷ்' என்று பெயரிடுகிறோம். எங்களை இவ்வளவு நேசித்ததற்கு நன்றி. நீங்கள் எப்போதும் எங்கள் வாழ்வின் ஒரு அங்கமே!" என்று பதிவிட்டுள்ளனர்.

    இருப்பினும் எப்போது திருமணம் என்று அவர்கள் அறிவிக்கவில்லை. ஆனால் தகவலின்படி, பிப்ரவரி 26 அன்று மிக நெருக்கமானவர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற உள்ளதாக தெரிகிறது.

    மேலும் மார்ச் 4 அன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, நீண்ட நாட்களாகக் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.    

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விமான நிலையங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
    • மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.

    ஐரோப்பாவின் நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயன்றதை எதிர்த்து அந்நாடு மீது ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது.

    இந்த போரானது கடந்த 5 வருடங்களாக முடிவின்றி நடந்து வருகிறது. போரை நிறுத்த கடந்த வருடம் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற டிரம்ப் கடுமையாக முயன்று வருகிறார்.

    பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் எந்த ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை.

    இதற்கிடையே நேற்று உக்ரைனின் வடக்கு பகுதியில் ரஷியா நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

    மாஸ்கோவில் உள்ள நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

    மாஸ்கோவை நோக்கி வந்த 10 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.

    இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்க்கோவின் 4 சர்வதேச விமான நிலையங்களும் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

    இதற்கிடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மறுபுறம் இரு நாடுகளின் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. கைப்பற்றிய பிராந்தியங்களை விட்டுக்கொடுக்க ரஷியா மறுப்பதால் ஒப்பந்தம் எட்டுவதில் இழுபறி நீடித்து வருகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சபா மாநிலத்தின் கடற்கரைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • அண்டை மாநிலமான சரவாக் பகுதியிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக

    மலேசியாவின் போர்னியோ தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    போர்னியோ தீவில் உள்ள சபா மாநிலத்தின் கடற்கரைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    சபாவின் தலைநகரான கோட்டா கினபாலுவில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் பூமியின் அடியில் சுமார் 619.8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    சபாவின் மேற்கு கடற்கரை பகுதிகள் மற்றும் அண்டை மாநிலமான சரவாக் பகுதியிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நிலநடுக்கம் மிக ஆழத்தில் ஏற்பட்டதால், பெரிய அளவிலான உயிர்ச்சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை.

    நிலநடுக்கத்தின் ஆழம் அதிகமாக இருப்பதால், சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தற்போதைக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினருக்குக் காட்டிக்கொடுத்தது.
    • கொல்லப்பட்டவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தப்பியோடிக் கொண்டிருந்த ஜெய்ஷ் இ முகமது கமாண்டர் சைபுல்லாவும் ஒருவர்.

    ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தின் சத்ரூ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் துல்லியமான இடத்தை கண்டறிய, ராணுவத்தின் பாரா பிரிவைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாயான 'டைசன்' அழைத்துச் செல்லப்பட்டது.

    கரடுமுரடான அந்தப் பகுதிக்குள் டைசன் நுழைந்தபோது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் டைசனின் காலில் தோட்டா பாய்ந்து பலத்த காயமேற்பட்டது.

    காயமடைந்த போதிலும், டைசன் பின்வாங்காமல் தொடர்ந்து முன்னோக்கிச் சென்று பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினருக்குக் காட்டிக்கொடுத்தது.

    டைசன் காட்டிய இடத்தை வைத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்டவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தப்பியோடிக் கொண்டிருந்த ஜெய்ஷ் கமாண்டர் சைபுல்லாவும் ஒருவர்.

    சம்பவ இடத்திலிருந்து இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    காயமடைந்த டைசன் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதன் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம்பட்டபோதும் டைசனின் செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் காங்கிரஸ் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது.
    • போராட்டத்தைக் கண்டித்து உண்மையை ஆதரித்து நின்றதற்காக இந்தியா கூட்டணி காட்சிகளுக்கு நன்றி.

    டெல்லியில் கடந்த 16 முதல் 20 ஆம் தேதி வரை பாரத் மண்டபத்தில் வைத்து ஏஐ தாக்க உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் உலக அரசியல் மற்றும் தொழில்நுட்ப தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

    கடந்த 20 ஆம் தேதி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரசார் சிலர் புகுந்து தங்கள் மேலாடைகளை கழற்றி அமெரிக்க - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த ஹாலுக்குள் புகுந்த நான்கு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், திடீரென தங்கள் சட்டைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை காட்டி கோஷமிட்டனர்.

    பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இது நாட்டின் இளைஞர்களின் அதிருப்தியின் வெளிப்பாடு என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இந்நிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நமோ பாரத் ரயில் மற்றும் மீரட் மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி உரையாற்றியபோது இந்த சம்பவத்தை கண்டித்தார்.

    அவர் கூறியதாவது, "டெல்லியில் நடந்த சர்வதேச ஏஐ மாநாட்டை காங்கிரஸ் தனது தரம் தாழ்ந்த மற்றும் நிர்வாண அரசியலுக்கு ஒரு களமாகப் பயன்படுத்தியுள்ளது.

    வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்தியதன் மூலம் காங்கிரஸ்  கொள்கை ரீதியான திவாலானது உறுதி ஆகி உள்ளது.

    வளர்ந்த நாடாக மாறுவதற்கு இந்தியா கடுமையாக உழைத்து வரும் வேளையில், இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் காங்கிரஸ் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது.

    இது தனிப்பட்ட முறையில் எனக்கு எதிரான போராட்டம் அல்ல, மாறாக நாட்டின் கௌரவத்திற்கு எதிரானது

    காங்கிரஸ் தலைவர்களே, உங்கள் நிர்வாணத்தை நாடு ஏற்கனவே நன்கு அறியும். இப்போது மீண்டும் சட்டையைக் கழற்றி அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன?" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், காங்கிரஸின் இத்தகைய அநாகரீகமான போராட்டத்தைக் கண்டித்து உண்மையை ஆதரித்து நின்றதற்காக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், திமுக, மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்டவற்றுக்கு நன்றி என்றும் மோடி குறிப்பிட்டார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் 1,524 பேர் பங்கேற்று வாக்கு செலுத்தினர்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி 2026-2029 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் இன்று (பிப். 22) நடைபெற்றது.

    சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது.

    இதில் இராம நாராயணன் அணி, நலம் காக்கும் அணி என 2 அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் 1,524 பேர் பங்கேற்று வாக்கு செலுத்தினர். 

    வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நலம் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட GKM தமிழ்குமரன்,  788 வாக்குகள் பெற்று தலைவர் பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் நிர்வாகிகளும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். 

    தற்போதைய பொறுப்பாளர்களின் பதவி காலம் வருகின்ற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் புதிய தலைவர் 2029 வரை தலைமையில் இருப்பார்.   

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இஷான் கிஷன் டக் அவுட்டாக திலக் வர்மா 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
    • அபிஷேக் சர்மா 15 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின.

    அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் மில்லர் - ப்ரேவிஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ப்ரேவிஸ் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுறையில் சிறப்பாக விளையாடிய மில்லர் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டப்ஸ் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து 188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இஷான் கிஷன் டக் அவுட்டாக திலக் வர்மா 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட்டான அபிஷேக் சர்மா இந்த போட்டியில் 15 ரன்கள் அடித்து அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் 11 ரன்னில் வெளியேறினார்.

    18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியாவால் 111 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றியை சுவைத்தது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு பூனையைக் கண்ட ஆலன், அதைத் துரத்திக் கொண்டு ஓடியுள்ளான்.
    • இறைவன் எங்களுக்கு வேறு திட்டங்களை வைத்திருந்தான். அவன் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் முன்னோக்கிச் செல்ல முயல்கிறோம்

    ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் வசித்து வந்த கேரளாவை சேர்ந்த ஷெராபுதீன் தனது மனைவி மற்றும் 22 மாதக் குழந்தை (1.8 வயது) ஆலன் ரூமி உடன் வசித்து வந்தார்.

    கடந்த வாரம் ஒரு மாலை வேளையில், ஷெராபுதீனின் மனைவி மற்றும் குழந்தையை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஒரு பூனையைக் கண்ட ஆலன், அதைத் துரத்திக் கொண்டு ஓடியுள்ளான்.

    தாய் தன்னை துரத்தி வருவதை கண்ட குழந்தை, அது ஒரு விளையாட்டு என நினைத்து வேகமாக ஓடியபோது, அந்தப் பாதையில் வந்த காரின் அடியில் சிக்கினான்.

    காரை ஓட்டி வந்த இந்திய நபர், உடனடியாகக் குழந்தையை  தனது காரிலேயே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், உள் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஆலன் ரூமி உயிரிழந்தான்.

    குழந்தையை இழந்த துக்கத்திலும் அந்தப் பெற்றோர் காட்டிய மனிதாபிமானம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

    விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மீது எந்தப் புகாரும் அளிக்கப் போவதில்லை என ஷெராபுதீன் தம்பதியினர் முடிவெடுத்தனர். விபத்து ஏற்படுத்தியவரை மன்னிப்பதாக அவர்கள் அதிகாரிகளிடம் எழுத்துபூர்வமாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பேசிய ஷெராபுதீன், "எங்கள் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஆனால், தெரியாமல் நடந்த ஒரு விஷயத்திற்காக மற்றொரு குடும்பம் துன்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

    இந்தக் குடும்பம் வரும் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் உம்ரா செல்லவும், பின்னர் ஈத் பண்டிகையைக் கொண்டாட இந்தியா வரவும் திட்டமிட்டிருந்தது.

    ஈத் முடிந்து மீண்டும் அமீரகம் வந்ததும், நிரந்தரமாக அங்கேயே செட்டில் ஆவதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து வந்தனர். ஆனால், ஒரு விபத்து அவர்களின் அனைத்துக் கனவுகளையும் கலைத்துவிட்டது.

    "இறைவன் எங்களுக்கு வேறு திட்டங்களை வைத்திருந்தான். அவன் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் முன்னோக்கிச் செல்ல முயல்கிறோம்" என்ற ஷெராபுதீன் கண்ணீருடன் தெரிவித்தார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸையும் நாட்டையும் பிரிக்க முடியாது. காங்கிரஸ் இந்த நாட்டின் ஆன்மா
    • ஒரு மேலிடத்தின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கும் அரசிற்கு தெலங்கானா மக்கள் தகுதியானவர்கள் அல்ல

    காந்திக் குடும்பத்திற்குத் தேவைப்பட்டால் தெலங்கானா காங்கிரஸ் தொண்டர்கள் ரூ.1,000 கோடி திரட்டி தருவார்கள் என அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறிய கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

    சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ரேவந்த் ரெட்டி, காந்தி குடும்பத்தினர் நாட்டிற்காக மூன்று தலைமுறைகளாகத் தியாகம் செய்தவர்கள். உண்மையில், காந்தி குடும்பத்திற்கு பணம் தேவை என்றால், காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களுக்காக ரூ. 1,000 கோடியை ஏற்பாடு செய்ய முடியாதா? காங்கிரஸையும் நாட்டையும் பிரிக்க முடியாது. காங்கிரஸ் இந்த நாட்டின் ஆன்மா எனப் பேசியிருந்தார்.

    இதற்கு அம்மாநில பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கட்சியின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தேசியப் பொறுப்பாளர் அமித் மாளவியா,

    "தெலுங்கானா இளைஞர்கள் டி.எஸ்.சி (ஆசிரியர் தேர்வு) அறிவிப்புகளுக்காகக் காத்திருக்கும் வேளையிலும், விவசாயிகள் ரைது பரோசா (விவசாயிகளுக்கான நிதி உதவித்திட்டம்) உதவிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சூழலிலும், காந்தி குடும்பத்தின் 'நிதித் தேவைகளுக்காக' ரூ.1,000 கோடியைத் திரட்டி தருவதாக முதலமைச்சர் பெருமை பேசுகிறார்.

    சிறிது காலத்திற்கு முன்புதான், கடனைத் திருப்பிச் செலுத்தவும், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியிருந்தார். தெலங்கானா மக்கள் கஷ்டப்பட்டு ஈட்டிய வருவாய் பொது நலனுக்கா அல்லது டெல்லியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வம்சத்தினருக்கா?

    காங்கிரஸ் கட்சிக்கு, தெலங்கானா என்பது வளர்ச்சி பெற வேண்டிய ஒரு மாநிலமா அல்லது வெறும் 10 ஜன்பத்க்கான ஏடிஎம் இயந்திரமா?

    தெலங்கானா மக்கள் தங்கள் அபிலாஷைகள், வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் அரசிற்கு தகுதியானவர்கள்; ஒரு மேலிடத்தின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கும் அரசாங்கத்திற்கு அல்ல." என தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதற்குப் பதிலளித்த ரேவந்த் ரெட்டி, காந்தி குடும்பத்திற்குப் பணம் ஒரு பொருட்டல்ல என்றும், அவர்கள் எப்போதும் நாட்டின் நலனுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் கூறினார். மேலும், மோடி அரசாங்கம் அவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டுப் பழிவாங்குவதாகவும் குற்றம் சாட்டினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 5 லட்சம் பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும்.
    • முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு, பொன்னேரி தொகுதிக்குட்பட்ட தடாபெரும்பாக்கம், பொன்னேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எழுச்சியுரை மேற்கொண்டார்.

    அப்போது இபிஎஸ் பேசியதாவது, ''இன்னும் இரண்டு மாதம் தான்… ஏப்ரலில் தேர்தல் வரும். இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடித் தரவேண்டும். நம் கூட்டணி வலிமையானது அதிமுக தான் தலைமை. வெற்றி பெற்று அதிமுக தான் ஆட்சி அமைக்கும், அதிமுக தலைவர் தான் முதல்வர்.

    திமுக கூட்டணி அப்படியா இருக்கிறது? காங்கிரஸ் பங்கு கேட்கிறது. எப்போதும் உங்களுக்கு அடிமையாக இருக்கிறோம் என்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடம் என்று பிரச்னை. தேர்தல் வரை இந்தக் கூட்டணி நிலைக்குமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.

    இரண்டு மாதம் முன்பு ஸ்டாலின் என்ன பேசினார்..? இபிஎஸ் கடையை விரித்து வைத்திருக்கிறார், யாரும் வரவில்லை என்றார். பலமான கூட்டணி அமைந்துவிட்டது. இது, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் என்பதற்கு உருவான கூட்டணி. உங்கள் கூட்டணி அப்படியில்லை சுயநலம் நிறைந்த கூட்டணி. அதனால் தான் திமுகவின் நிலை தெரிந்து காங்கிரஸ் பங்கு கேட்கிறது, விசிக பட்டும் படாமலும், பங்கு இருந்தால் பரவாயில்லை என்று கேட்கிறார்கள்.

    இப்போது புதிதாக ஒரு கட்சி சேர்ந்திருக்கிறது. அந்தம்மா மாநாடு நடத்தியபோது, அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்கிறது. அப்படிப்பட்ட கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கூட்டணி வைத்துள்ளன.

    நம் கூட்டணி ஒரே நிலைப்பாடு அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும், மக்கள் விரோத திமுகவுக்கு நிரந்தர விடுதலை கொடுக்க வேண்டும். இதுதான் நம் கூட்டணிக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். லேட்டாக கூட்டணி அமைத்தாலும் லேட்டஸ்டா அமைத்த கூட்டணி.

    சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா..? நாட்டு மக்களை ஏமாற்றும் திமுகவுக்கு இதுதான் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும். பல வாக்குறுதிகளைக் கொடுத்து இன்னும் பலவற்றை நிறைவேற்றவே இல்லை. திமுக வாக்குறுதியில் நான்கில் ஒரு பங்கு தான் நிறைவேற்றினர், வெள்ளை அறிக்கை கேட்டேன், பதிலில்லை.

    இது கிராமங்கள் நிறைந்த பகுதி. விவசாயத் தொழிலாளிகள் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்று சொன்னார்கள் செய்யவில்லை. நாம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததால் மத்திய அரசு 125 நாளாக உயர்த்தியது. ஆனால் திமுகவினர் போராட்டம் நடத்துகிறார்கள்.

    பணிப் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இதை ரத்துசெய்ய முடியாது. ஊராட்சிக்கு பணியை தேர்வுசெய்ய அதிகாரம் கொடுத்துள்ளனர். ஊழியர்களுக்கு 15 நாளில் பணம் பட்டுவாடா செய்யப்படும். இதெல்லாம் செய்துகொடுத்தது மத்திய அரசு. அதிமுகவின் வேண்டுகோளை ஏற்று. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 125 நாள் 150 நாளாக உயர்த்தப்படும்.

    10 அறிவிப்புகளை நான் அறிவித்தேன். குடும்பத் தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் கொடுப்போம். நாங்கள் அறிவித்ததால் பயந்துபோய் அவர் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார், ஏன் கோடை காலத்துக்கு முன்பு கொடுக்கவில்லை.? மக்களை பற்றி சிந்தித்தார்களா? தேர்தல் வருவதால் வாக்கு தேவை அதனால் கொடுத்தனர். 2022, 23, 24, 25 நான்கு கோடைக் காலம் முடிந்தது, அப்போதெல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லை, உங்களுக்கு சும்மா கொடுக்கவில்லை, வாக்குக்கு விலை பேசி கொடுத்துள்ளனர்.

    உரிமைத் தொகையை 28 மாதம் கழித்து, அதிமுகவின் அழுத்தத்தால் தான் கொடுத்தனர். சட்டமன்றத்தில் பேசினோம் வேறு வழியின்றி கொடுத்தார். தாய்மார்கள் கஷ்டத்தைப் பார்த்துக் கொடுக்கவில்லை. இப்போது தேர்தல் வருவதால் ஆயிரம் ரூபாய் நிறுத்தப்படும் என்கிறார், அப்படியென்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லவா..? நிறுத்தவில்லை. மக்களிடம் பொய் சொல்லி ஓட்டுகளைப் பெறுவதற்கு தந்திரமாக ஸ்டாலின் சொல்லும் காரணம். தொடர்ந்து நடைபெறும் திட்டத்தை எந்த அரசும் நிறுத்த முடியாது. இந்த 3 மாதம் உங்களுக்கு பணம் வராது. மே மாதம் அதிமுக ஆட்சியில் 2 ஆயிரம் ரூபாய் வரும்.

    ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் கொடுக்கப்படும். ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். கணவன், மனைவி இருவரும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம். பட்டியலின மக்கள், ஏழை மக்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டி தரப்படும். தனிக்குடித்தனம் சென்றாலும் பட்டியலின மக்களுக்கு வீடு கட்டித்தரப்படும். ஒவ்வொரு தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச் சேலை வழங்கப்படும். பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 5 லட்சம் பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும்.

    முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மாணவர் கல்விக் கடன் ரத்துசெய்யப்படும். ஜல்லிக்கட்டு வீரர் மரணம் அடைந்தால் 10 லட்சம் குடும்பத்துக்கு கொடுக்கப்படும். சிறுபான்மை மகளிர் தொழில் தொடங்க கடனுதவி வழஙப்படும். நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் தள்ளுபடி, புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும்.

    உதயநிதி இன்று இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருக்கிறார். எடப்பாடி பாஜகவுக்கு முரட்டு அடிமையாம். புதிதாக கண்டுபிடித்திருக்கிறார், இதற்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். உதயநிதி சிந்தியுங்கள், எனக்கு முரட்டு அடிமை என்றால் உங்க தாத்தாவுக்கு என்ன பட்டம் கொடுப்பது..? வாஜ்பாயோடு கூட்டணியில் இருந்தாரே, அவருக்கு என்ன பட்டம் கொடுக்கப்போறீங்க..? கத்துக்குட்டி நீங்க, வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. நீங்க கூட்டணி வைத்தால்

    பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் கெட்ட கட்சியா?

    அரசியலில் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுகள் சிதறாமல் இருக்க கூட்டணி வைப்போம். அதிமுகவோடு கூட்டணி வைத்தவர்கள் தான் திமுகவோடும், திமுகவோடு கூட்டணியில் இருந்தவர்கள் அதிமுகவோடும் கூட்டணி வைத்துள்ளனர். தேர்தலுக்கு தேர்தல் இது மாறுபடும். இதை வைத்துக்கொண்டு உதயநிதி பேசுகிறார். நான் முரட்டு அடிமை இல்லை, உங்கள் தாத்தாதான் முரட்டு அடிமை.

    தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். ஊழல் நடக்காத துறையே இல்லை.

    ரெய்டை கண்டு பயப்பட மாட்டேன், ஆட்சி போனால் போகட்டும் என்கிறார், ஆட்சி போகத்தான் போகிறது, மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஆக ஆட்சி போகப்போகிறது என்று ஸ்டாலினே முடிவுசெய்து அறிவித்துவிட்டார். ஸ்டாலின் கட்டுப்பாட்டில் எந்த துறையும் இல்லை, எல்லா அமைச்சர்களும் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

    சமீபத்தில் தீர்ப்பு வந்தது, நகராட்சி நிர்வாகத்துறையில் ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்கு ஒவ்வொரு பணியிடத்துக்கும் லட்சக்கணக்கில் பணம் வாங்கியும், டெண்டர் விட்டு கமிஷனும் வாங்கி இருக்கிறார்கள். அதெல்லாம் ஆதாரத்தோடு அமலாக்கத்துறை அனுப்பியது. அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்தோம் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர், ஆக, லஞ்சம் வாங்குவது உண்மையாகிவிட்டது.

    திட்டங்களை கொண்டுவர நிதி இல்லை, எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க 82 கோடி. தேவையா? எழுதும் பேனாவை அரசு மாணவர்களுக்கு கொடுத்தால் பாராட்டுவார்கள். காலுக்கு செருப்பே இல்லாமல் இருக்கிறார்கள். நான் விவசாயிகள் கஷ்டத்தை அனுபவ ரீதியாக உணர்ந்தவன், இவர்கள் கஷ்டத்தை அனுபவிக்காதவர்கள். சென்னையில் கார் ரேஸ் நடத்துகிறார். ஏழை மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவிடும் அரசு தேவையா?

    ஒவ்வொரு ரூபாயும் மக்களின் வரிப்பணம். கருணாநிதியின் குடும்ப பணம் இல்லை. ஊழல் அரசை வீட்டுக்கு அனுப்ப தேதி நெருங்கிவிட்டது, குடும்ப ஆட்சி தேவையா வாரிசு அரசியல் தேவையா? இரண்டுக்கும் முடிவுகட்டும் தேர்தல். மிகப்பெரிய பணக்கார குடும்பம் ஸ்டாலின் குடும்பம். இப்படியே விட்டுவிட்டால் குடும்ப ஆட்சியைக் கொண்டுவந்து நாட்டை குட்டிச்சுவராக்கி விடுவார்கள். அதனால் விழிப்புடன் இருந்து அதிமுகவை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும்.

    மின்கட்டணம், வரி உயர்வு, குப்பைக்கும் வரி, வரிமேல் வரி போடும் அரசு வேண்டுமா? வாக்குறுதி நிறைவேற்றவில்லை, எல்லோரும் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டக்களமாகிவிட்டது. மக்களை ஏமாற்றும் ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல். கொரோனா காலத்தில் விலைவாசி உயரவில்லை, ஓராண்டு விலையில்லா பொருட்கள் கொடுத்தோம், ஆயிரம் ரூபாய் கொடுத்தோம், தைப்பொங்கல் அன்று 2500 ரூபாய் கொடுத்தோம். அற்புதமான ஆட்சி கொடுத்தோம். மாணவர்கள் மன உளைச்சலில் இருந்தனர், ஆல்பாஸ் போட்டோம். மாணவர்கள் குறைகளையும் போக்கினோம்.

    ஏரி குளம் குட்டை குடிமராமத்து திட்டம் மூலம் தூர் வாரினோம். விவசாயத்துக்கு, குடிப்பதற்கு தேவையான நீர் கொடுத்தோம். மும்முனை மின்சாரம் கொடுத்தோம். ஒரே ஆண்டில் இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்தோம். நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்துகொடுத்தோம்.

    7.5% இடஒதுக்கீடு, ஏழை அரசு பள்ளியில் படிக்கிறார்கள், அவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க இடஒதுக்கீடு கொடுத்தோம். 3 ஆயிரம் பேர் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் மருத்துவம் படித்தனர். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி, 68 கலை கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம், 4 பொறியியல் கல்லூரி, 4 வேளாண்மை கல்லூரி, 7 சட்டக்கல்லூரி ஏழை மாணவர்களுக்கும் பட்டப்படிப்பு படிக்கும் சூழல் உருவாக்கினோம்.

    இளைஞர்கள் சிந்திக்க வேண்டும், யார் யாரோ புதுப்புது கட்சி நடத்துகிறார்கள். அவர்களா இதெல்லாம் செய்தார்கள்? ஏழை மாணவர்கள் பட்டப்படிப்பு சூழல் உருவாக்கி தந்தது அதிமுக. கல்விச்செல்வம் அழியாச்செல்வம், உயிர் இருக்கும் வரை ஒரே செல்வம் கல்வி செல்வம். அதை கொடுத்தது அதிமுக அரசு. இளைஞர்கள் அதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த தேர்தலில் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் அனைவரும் தே.ஜ.கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    மீனவ மக்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் நிவாரண நிதி உயர்த்தினோம். இப்போது 8 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள், அந்த தொகை அதிமுக ஆட்சி அமைந்ததும் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற நற்செய்தியை சொல்லிக்கொள்கிறேன். அதிமுக வேட்பாளர் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால் அவர்களின் சின்னத்துக்கும் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின். வந்திருக்கும் அனைவரும் பாதுகாப்பாக வீடுபோய் சேர வேண்டும்…" என்று முடித்தார்.

    ×