என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரே காரில் வந்த இருவரும், ஒரே நிறத்தில் ஆடைகள் அணிந்துவந்ததும் கவனம் ஈர்த்துவருகிறது.
    • நடிகை ஒருவருடன் உடனான தகாத உறவே விவாகரத்திற்கு காரணம்

    AGS குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமணம் இன்று சென்னையில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் மாலை திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    ஒரே காரில் வந்த இருவரும், ஒரே நிறத்தில் ஆடைகள் அணிந்துவந்ததும் கவனம் ஈர்த்துவருகிறது. கடந்தவாரம் விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்துக்கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நடிகை ஒருவருடன் உடனான தகாத உறவே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த விவாகரத்திற்கு நடிகை த்ரிஷாவுடனான தொடர்புதான் காரணம் என சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. எனினும், இது குறித்து விஜய் அல்லது த்ரிஷா தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வமான விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இருவரும் ஒன்றாக விழாவில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 253 ரன்கள் குவித்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 253 ரன்கள் குவித்தது.

    தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இன்றும் அதிரடியில் மிரட்டினார். அவர் 42 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். ஷிவம் துபே 43 ரன்னும், இஷான் கிஷன் 39 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் வில் ஜாக்ஸ், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே பெத்தேல் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் தனி ஆளாகப் போராடினார். வில் ஜாக்ஸ் 35 ரன்னும், ஜாஸ் பட்லர் 25 ரன்னும் எடுத்தனர்.

    பெத்தேல் சதமடித்து 105 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இந்தியா இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.
    • மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஆனந்த போஸ் பதவி விலகினார். இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு ஆளுநர் உள்பட பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

    மேற்கு வங்கம் - ஆர்.என்.ரவி

    தெலுங்கானா - ஷிவ்பிரதாப் சுக்லா

    மகாராஷ்டிரா - ஜிஷ்ணு தேவ் வர்மா

    நாகாலாந்து - நந்து கிஷோர் யாதவ்

    பீகார் - சையத் அடா ஹஸ்னன்

    இமாசல பிரதேசம் - கவிந்தர் குப்தா

    டெல்லி - தரன்ஜித் சந்து

    லடாக் - வினய் குமார் சக்சேனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கேரள ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

    மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஆனந்த போஸ் பதவி விலகினார். இந்த நியமனங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி மாற்றப்பட்டுள்ளார்.
    • அவர் மேற்கு வங்கத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு மேற்கு வங்கத்துக்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி 2021 செப்டம்பர் 18-ம் தேதியிலிருந்து இன்றுவரை பதவி வகித்து வந்தார்.

    கேரள ஆளுநரான ராஜேந்திர அர்லேகருக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநராக பதவி வகிப்பார். இந்த மாற்றங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அசாமின் ஜோர்ஹட்டில் இருந்து சுகோய்-30 ரக போர் விமானம் புறப்பட்டது.
    • சுமார் 7.42 மணிக்கு ரேடாரில் இருந்து மறைந்ததாக தகவல் வெளியானது.

    கவுகாத்தி:

    இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போர் விமானம் காணாமல் போனதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இருந்து புறப்பட்ட சுகோய்-30 ரக போர் விமானம் சுமார் 7.42 மணிக்கு திடீரென ரேடாரில் இருந்து மறைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    விமானம் காணாமல் போனது குறித்து விமானப்படை குழு ஆய்வு செய்து வருகிறது என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குண்டுவீச்சில் சுமார் 160 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.
    • அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் இலக்காகி வருவது உலகெங்கிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பள்ளிகள், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்டு வருகின்றன.

    இன்று மதியம், ஈரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பரண்ட் (Parand) நகரில் உள்ள இரண்டு பள்ளிகள் மீது அமெரிக்காவின் ஏவுகணைகள் விழுந்து வெடித்தன. 

    இந்த தாக்குதலில் பள்ளிக் கட்டடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமான புகைப்படங்களை ஈரானின் 'பார்ஸ்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    பள்ளிகளுக்கு அருகிலுள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த துல்லியமான எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை

    முன்னதாக, கடந்த சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் சுமார் 160 சிறுமிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, இஸ்ரேலில் உள்ள ரேடார் மையங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

    மேலும், பாரசீக வளைகுடாவின் வடக்குப் பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பல் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    நேற்று இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் அமெரிக்காவால் தாக்கப்பட்டு 87 பேர் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக வெளிப்படையாக எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.
    • மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் ரஷ்யாவில் பெட்ரோல் விலையை "பாதிக்க முடியாது, பாதிக்கக்கூடாது”

    ஈரான் ஆரம்பத்திலிருந்து தற்போதுவரை தங்களிடம் இருந்து எந்த ராணுவ உதவியையும் கோரவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த 6 நாட்களாக ஈரான் மீது தாக்குதலைத் தொடர்ந்துவரும் நிலையில், 'இந்த விவகாரத்தில் ஈரானிடமிருந்து எந்தக் கோரிக்கைகளும் வரவில்லை' என செய்தியாளர்களிடம் ரஷ்ய தலைமை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் ரஷ்யாவில் பெட்ரோல் விலையை "பாதிக்க முடியாது, பாதிக்கக்கூடாது" என்றும் தெரிவித்துள்ளார்.

    கமேனி உயிரிழப்புக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்திருந்தாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக வெளிப்படையாக எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. ஆனாலும் தாக்குதலுக்கு அமெரிக்கா முன்வைத்த முக்கிய காரணமான அணு ஆயுத தயாரிப்பிற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளது.

    இருநாடுகளின் கூட்டுத் தாக்குதலால் ஈரானில் தற்போதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 6000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈரானும் பதிலடித் தாக்குதலை தொடர்ந்துவருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமின்றி, வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதலை தொடர்ந்துவருகிறது. இதனால் அந்த நாடுகளும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

    மறுபுறம் ஈரானின் நட்பு நாடுகளான ரஷ்யா, வடகொரியா, சீனா போன்றவை அதற்கு உதவவேண்டும் என பலரும் எதிர்பார்க்கும் நிலையில், எந்த நாடுகளும் இதுவரை ராணுவ உதவி குறித்து பேசவில்லை. மேலும் ஈரானும் உதவிக் கோரியதாக தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் ரஷ்யா இந்தக் கருத்தை முன்வைத்துள்ளது. 

    2025-ஆம் ஆண்டில், ரஷ்யாவும் ஈரானும் ஒரு மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தில் (strategic partnership agreement) கையெழுத்திட்டன. இதில் பொதுவான அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கான பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், வடகொரியாவுடன் ரஷ்யா கையெழுத்திட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் போலன்றி, இந்த ஒப்பந்தம் பரஸ்பர பாதுகாப்பு கடப்பாடுகளை (mutual defense obligations) கொண்டிருக்கவில்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 527 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
    • இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு சேர்ந்து கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி மற்றும் 700க்கும் அதிகமானோர் ஈரானில் கொல்லப்பட்டனர்.

    ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் கடந்த 4 நாட்களாக தாக்குதல் வருகிறது.

    லெபனான் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 77 கொல்லப்பட்டனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    லெபனான் சுகாதார அமைச்சர் கூறுகையில், கடந்த 4 நாட்களில் மட்டும் 77 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 7 குழந்தைகள் அடங்குவர். சுமார் 527 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

    உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள், எத்தனை பேர் ஹிஸ்புல்லாவை சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    இதற்கிடையே இன்று (வியாழக்கிழமை) தெற்கு லெபனானில் உள்ள நபதியே பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், லெபனானில் இருந்து இதுவரை சுமார் 83,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இது அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 89 ரன்கள் விளாசி அவுட்டானார்

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    கொல்கத்தாவில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

    இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்னில் அவுட்டானார். சஞ்சு சாம்சன் 15 ரன்கள் அடித்திருந்தபோது கொடுத்த கேட்சை இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் தவறவிட்டார்

    இதையடுத்து சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 18 பந்துகளில் 39 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    இதையடுத்து அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அவுட்டானார். கடந்த போட்டியில் 97 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்த சஞ்சு சாம்சன் இந்த போட்டியிலும் சதம் அடிக்காததது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    சிறப்பாக விளையாடிய சிவம் துபே 25 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். கடைசி நேரத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்ட திலக் வர்மா 7 பந்துகளில் 21 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    கடைசி ஓவரில் சிக்ஸர்களை பறக்கவிட்ட ஹர்திக் பாண்ட்யா 11 பந்துகளில் 26 ரன்கள் விளாசி அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 253 ரன்களை குவித்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மூன்றே மாதங்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்.
    • அமித் ஷாவுடன் இவருக்கு மிக நெருக்கமான நட்பு உள்ளது.

    முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த நவம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெரும் வெற்றியை பெற அதில் இடம்பெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வர் ஆனார். பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர் ஆகினர்.

    இந்நிலையில் மூன்றே மாதங்களில் தனது பதவியை ராஜினாமா செய்த நிதிஷ், எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

    இதனால் பீகாரின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவை சேர்ந்த ஒருவரே முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளது.

    பீகாரில் ஜாதி பிரதிநிதித்துவத்தை கருத்தில் வைத்து பாஜக மூவரை முதல்வர் பதவிக்கு பரிசீலித்து வருகிறது.

    சாம்ராட் சௌத்ரி - நிதிஷ் குமார்  

    பீகார் மாநில துணை முதலமைச்சராக உள்ள சாம்ராட் சௌத்ரி பட்டியலில் முதலில் உள்ளார்.

    குஷ்வாஹா சமூகத்தை சேர்ந்த இவர் ஓபிசி பிரிவில் வருவார். பீகாரில் நிதிஷ் குமாருக்கு மாற்றாக ஒரு வலுவான ஓபிசி தலைவரை உருவாக்க பாஜக விரும்புகிறது.

    எனவே கட்சியிலும், ஆட்சியிலும் இவருக்கு இருக்கும் செல்வாக்கு இவரை முதல்வர் பதவிக்கு முதல் தேர்வாக மாற்றியுள்ளது.

    இரண்டாமவர் மத்திய அமைச்சராக உள்ள நித்யானந்த ராய். இவர் யாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்.

    பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சிக்கு இருக்கும் யாதவ வாக்கு வங்கியை உடைக்க, நித்யானந்த ராயை முதலமைச்சராக்குவது ஒரு சிறந்த உத்தியாக இருக்கும் என்று பாஜக கருதுகிறது.

    மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் இவருக்கு மிக நெருக்கமான நட்பு உள்ளது.

    திலிப் ஜெய்ஸ்வால்

    மூன்றாமவர் தற்போது பீகார் அமைச்சரவையில் உள்ள திலிப் ஜெய்ஸ்வால். இவர் வைசிய சமூகத்தை சேர்ந்தவர். பாஜகவின் பாரம்பரிய வாக்கு வங்கியான வைசிய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், கட்சியின் மேலிடத்தில் இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.

     விஜய் குமார் சின்ஹா 

    பீகாரின் மற்றொரு துணை முதல்வரான பாஜகவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா ஆதிக்க சாதியாக கருதப்படும் பூமிஹார் சமூகத்தைச் சேர்ந்தவர்.

    பீகார் அரசியலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது ஓபிசி மற்றும் மிகவும் பின்தங்கிய சமூக வாக்குகள்தான் என்பதால் இவருக்கு முதல்வர் வாய்ப்பு எட்டாக்கனியே என்று கூறப்படுகிறது. 

    நிதிஷ் குமார் ராஜினாமா செய்தவுடன், பாஜக தனது புதிய முதலமைச்சர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

    மொத்தத்தில் மகாராஷ்டிராவை போல் கூட்டணி கணக்கில் கவனம் செலுத்தி மாநில சக்திகளை பின்னுக்கு தள்ளி ஆட்சி அதிகாரத்தை பீகாரில் பாஜக முழு கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.  

    ×