என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது.
    • இந்தத் தடையானது கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அமலுக்கு வந்தது.

    லண்டன்:

    இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கிக் கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.

    எனவே 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தடையானது கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அமலுக்கு வந்தது. ஸ்பெயின், பிரான்சிலும் சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்திலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். சமூக ஊடக தடை சட்டத்திற்கான ஆலோசனை கடந்த மாதம் தொடங்கப்பட்டது. விரைவில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அசாம் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
    • மாநில காங்கிரசில் தனக்கு உரிய பொறுப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது.

    கவுகாத்தி:

    தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுடன் சேர்த்து அசாமுக்கும் வரும் ஏப்ரலில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, அசாம் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா அக்கட்சியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், கட்சித் தலைமையால் புறக்கணிக்கப்பட்டதாகவும், மாநில காங்கிரசில் தனக்கு உரிய பொறுப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் அசாம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பூபேன் குமார் போராவுக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்திருக்கின்றன. பா.ஜ.க.வில் போரா சேர்ந்தால் உடனடியாக அவருக்கு சீட் தரப்படும். பிப்ரவரி 22ம் தேதி போரா பாஜகவில் சேர உள்ளார். இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் போராவிடம் பேசி வருகிறார் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐரீ 23 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • புர்டெல் 35 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார். ஷேக் 27 பந்தில் 33 ரன்கள் அடித்தார்.

    டி20 உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சி பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து- நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நேபாளம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் மைக்கேல ஜோன்ஸ் அபாரமாக விளையாட, ஜார்ஜ் முன்சே நிதானமாக விளையாடினார். முன்சே 29 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த பிரெண்டன் மெக்கல்லம் 19 பந்தில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கிடையே மைக்கேல் ஜோன்ஸ் 45 பந்தில் 71 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவர் ஆட்டமிழக்கும்போது ஸ்காட்லாந்து 15.2 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் ஸ்காட்லாந்து விக்கெட்டுகள் மளமளவென சரிய ஆரம்பித்தது. இறுதியாக 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. நேபாளம் அணி சார்பில் சோம்பால் கமி 3 விக்கெட்டும், நந்தன் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான குஷால் புர்டெல், ஆசிஃப் ஷேக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புர்டெல் 35 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார். ஷேக் 27 பந்தில் 33 ரன்கள் அடித்தார். அடுத்து வந்த கேப்டன் ரோஹித் பவுடல் 16 ரன்னில் வெளியேறினார்.

    அப்போது நேபாளம் 13.2 ஓவரில் 98 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து திபேந்திர சிங் ஐரீ உடன் குல்சன் ஷா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் நேபாளம் 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐரீ 23 பந்தில் 50 ரன்களும், குல்சன் ஜா 17 பந்தில் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் தொடரை நேபாளம் நிறைவு செய்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொழில்நுட்பத்தால் வேலை அழிந்துவிடாது என்பதை வரலாறு காட்டுகிறது.
    • அதன் இயல்பு மாறுகிறது மற்றும் புதிய வகையான வேலைகள் உருவாக்கப்படுகின்றன.

    செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக தொழில்நுட்ப துறையில் வேலையிழப்பு குறித்து அதிக அச்சம் நிலவி வருகிறது. டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி ஏ.என்.ஐ. (ANI) செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தொழில்நுட்பத்தால் வேலை அழிந்துவிடாது என்பதை வரலாறு காட்டுகிறது. அதன் இயல்பு மாறுகிறது மற்றும் புதிய வகையான வேலைகள் உருவாக்கப்படுகின்றன. சில வேலைகள் மறுவரையறை செய்யப்படலாம் என்றாலும், டிஜிட்டல் மாற்றம் இந்தியாவின் பொருளாதாரத்தில் புதிய தொழில்நுட்ப வேலைகளையும் சேர்க்கும்.

    பல நூற்றாண்டுகளாக புதுமை மற்றும் தொழில்நுட்ப புரட்சிகள் வேலைகளை அழித்துவிடும் என்ற அச்சம் உள்ளது. இருப்பினும், புதுமை நிகழும் போதெல்லாம் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்பதை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. AI யுகத்திலும் இதுவே உண்மையாக இருக்கும்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மரகத நாணயம் இரண்டாம் பாகத்தையும் ஏகேஆர் சரவணன்தான் இயக்குகிறார்
    • இப்படத்தில் கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர்.

    தமிழ் திரையுலகில் பேண்டஸி மற்றும் நகைச்சுவை இணைந்து வெற்றிகரமாக உருவான சில படங்களில், ஒன்று மரகத நாணயம். நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனைத்தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தையும் ஏகேஆர் சரவணன்தான் இயக்குகிறார். இதில் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், முனிஷ்காந்த், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

    பேஷன் ஸ்டூடியோஸ், அக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து படத்தை தயாரித்துள்ளது. அண்மையில் மரகத நாணயம் 2' படத்தின் பூஜை நடைபெற்றது.பூஜையில் நடிகர் கார்த்தி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், 'மரகத நாணயம் 2' படப்பிடிப்பின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாரிக் ரஹ்மான் பதவி ஏற்பு விழாவில் ஓம் பிர்லா கலந்து கொண்டார்.
    • தாரிக் ரஹ்மானிடம் பிரதமர் எழுதிய கடிதத்தை ஓம் பிர்லா வழங்கினார்.

    வங்கதேசம் பிரமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த பதவி ஏற்பு விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். பின்னர் தாரிக் ரஹ்மானை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி அவருக்கு எழுதிய கடிதத்தை ஓம் பிர்லா வழங்கினார்.

    பிரதமர் மோடி, தாரிக் ரஹ்மானுக்கு எழுதியுள்ள கடிதத்தில் "இரண்டு நெருங்கிய அண்டை நாடுகளாக, இந்தியாவும் வங்கதேசமும் பகிரப்பட்ட வரலாறு, கலாச்சார உறவுகள் மற்றும் அமைதி மற்றும் செழிப்புக்கான நமது மக்களின் அபிலாஷைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஆழமான வேரூன்றிய நட்பைக் கொண்டுள்ளன" குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், வளர்ச்சி முன்னுரிமைகளில் ஒருங்கிணைவு எதிர்கால ஒத்துழைப்பை வழி நடத்தும் என்றும், இணைப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், கல்வி, எரிசக்தி, சுகாதாரம் மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் ஆகியவற்றில் உறவுகளை விரிவுபடுத்த நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    அத்துடன் குடும்பத்துடன் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். பிரமாண்ட வரவேற்று உங்களுக்காக காத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எந்த நாற்காலியும் நிரந்தரமானது அல்ல
    • இந்த அரசாங்கம் [மத்திய அரசு] 2026 க்கு மேல் நீடிக்காது.

    தேர்தல் ஆணையம் ஒரு குறிப்பிட்ட கட்சியால் நடத்தப்படும் 'துக்ளக் ஆணையமாக' மாறிவிட்டது என செய்தியாளர் சந்திப்பில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    பா.ஜ.க.வை திருப்திப்படுத்த தேர்தல் ஆணையத்தால் மேற்குவங்கம் குறிவைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். வங்காள அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் பாதிக்கப்பட்டால், நாங்கள் அவர்களை 100 சதவீதம் பாதுகாப்போம் எனவும் தெரிவித்தார்.

    "ERO-க்களை இடைநீக்கம் செய்வதற்கான காரணம் என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ERO-க்களிடம், அவர்களின் குற்றம் என்ன, அவர்களின் தவறு என்ன என்று கேட்டீர்களா? என ஏழு உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினார். 

    தர்க்கரீதியான முரண்பாடுகளைக் காரணம் காட்டி, ஜனநாயக உரிமைகளைப் பறித்து, சாதாரண மக்களை பயங்கரவாதிகள் போல நடத்துகிறது தேர்தல் ஆணையம். நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை அழித்து, மாநில அரசாங்கத்தின் செயல்பாட்டில் தலையிடுகிறார்கள். எந்த நாற்காலியும் நிரந்தரம் அல்ல எனவும் தெரிவித்தார். மேலும் பாஜக ஐடி பிரிவில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நீக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.   

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னையில் ஒரு போட்டியை நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
    • இந்தியா கிரிக்கெட்டுக்கான லாபகரமான சந்தை என்பதால் முதலீட்டை ஈர்க்கும் வகையில் திட்டமிடுகிறது.

    உலகளவில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக்கும் ஒன்று. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடருக்குப் பிறகு மிகப்பெரிய லீக் தொடராக விளங்குகிறது.

    இதில் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. 2011-ல் இருந்து பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வமுள்ள அதிகமான ரசிகர்கள் மற்றும் மிகப்பெரிய லாபகரமான சந்தையை கொண்ட இந்தியாவில் ஒரு போட்டியை நடத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் விரும்புகிறது. அந்த போட்டியை சென்னையில் நடத்த விரும்புகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

    இதை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூத்த தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. கிரிக்கெட்டின் தலைமை பிசிசிஐ. பிசிசிஐ சம்மதம் தெரிவித்தால்தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

    மிகப்பெரிய கிரிக்கெட் சந்தையை கொண்ட இந்தியாவுடன் உறவை வலுப்படுத்தவும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், பிக் பாஷ் லீக்கில் உள்ள 8 அணிகளில் 2 அணியின் உரிமையாளர்கள் அணியை விற்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் இந்த முடிவை எடுத்துள்ளது.

    பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சென்னையில் விளையாட விருப்பம் தெரிவித்து்ளளது. இந்த அணி 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2025-26 சீசனிலும் இந்த அணிதான் சாம்பியன்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாங்கள் ஒன்றாக இருந்தோம், ஒன்றாகவும் இருக்கிறோம்
    • யாருக்கும் பொதுவெளியில் பேசுவதற்கு உரிமை கிடையாது.

    தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வார்த்தை மோதலாகவும் நீடித்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து வருவது காங்கிரஸ்-திமுக இடையே மட்டுமல்லாமல் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் மாணிக்கம் தாகூர் தொடர்பாக தலைமையிடம் பேசு முடிவெடுக்கப்படும் என மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். இச்சூழலில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று சென்னை மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    நிகழ்ச்சிகளை தொடர்ந்து முகப்பேரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய அவர், 

    "காங்கிரசும் திமுகவும் நீண்டகால கூட்டாளிகள். பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் திமுக-காங்கிரஸ் ஒன்றாக உள்ளது. பொதுவான பிரச்சினைகளில் கூட்டணி வைத்து, பாசிச சக்திகளை எதிர்த்துப் போராட... வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் பாரம்பரியம் எங்களுக்கு உண்டு. நாங்கள் ஒன்றாக இருந்தோம், ஒன்றாகவும் இருக்கிறோம். நிச்சயமாக, சட்டமன்றத் தேர்தல்கள் வருகின்றன... நாங்கள் செயல்பாட்டில் இருக்கிறோம், எங்கள் மக்களுக்கும் அரசியல் லட்சியம் உள்ளது காங்கிரஸில் இருந்து வெவ்வேறு குரல்கள் எழுந்தாலும் நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். தெளிவான கூட்டணி விவாதம் இருக்க வேண்டும். விவாதத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அது எப்போது தொடங்கும் என்பதை திமுக எங்களுக்குத் தெரிவிக்கும் என்று நினைக்கிறேன்". என தெரிவித்தார். 

    தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 

    "காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள 'வெவ்வேறு குரல்களைப்' பொறுத்தவரை, நான் திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகிறேன். கூட்டணி குறித்து வெளிவரும் கருத்துகள், அவரவர்களின் தனிப்பட்ட கருத்து. அது கட்சியின் கருத்து அல்ல. இறுதி முடிவு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் எடுக்கப்படும். தமிழ்நாடு கூட்டணி குறித்து உயர்மட்டக் குழுவால் இறுதி முடிவு எடுக்கப்படும். தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உள்ளோம். கலந்தாலோசிக்க காத்திருக்கிறோம். யாருக்கும் கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் பேசுவதற்கு உரிமை கிடையாது. இப்போது தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். மாநிலத் தலைவர்கள் உட்பட யாருக்கும் கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க உரிமை கிடையாது." என தெரிவித்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மைக்கேல் ஜோன்ஸ் 45 பந்தில் 71 ரன்கள் விளாசினார்.
    • சோம்பால் கமி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் சி பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து- நேபாளம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற நேபாளம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் மைக்கேல ஜோன்ஸ் அபாரமாக விளையாட, ஜார்ஜ் முன்சே நிதானமாக விளையாடினார். முன்சே 29 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த பிரெண்டன் மெக்கல்லம் 19 பந்தில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கிடையே மைக்கேல் ஜோன்ஸ் 45 பந்தில் 71 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவர் ஆட்டமிழக்கும்போது ஸ்காட்லாந்து 15.2 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் ஸ்காட்லாந்து விக்கெட்டுகள் மளமளவென சரிய ஆரம்பித்தது. இறுதியாக 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. நேபாளம் அணி சார்பில் சோம்பால் கமி 3 விக்கெட்டும், நந்தன் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×