என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலியாக உள்ள 6 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மகாராஷ்டிரம், குஜராத்தில் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவாவில் காலியாக உள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மகாராஷ்டிரம், குஜராத்தில் ஏப்ரல் 23-ம் தேதியும், கர்நாடகம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவாவில் ஏப்ரல் 9ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    கோவாவில் - போன்டா

    குஜராத்தில் - அம்ரேத்

    கர்நாடகத்தில் - பாகல்கோட், தாவநாகரி தெற்கு

    மகாராஷ்டிரத்தில் - ராஹூரி, பாராமதி

    நாகாலாந்தில் - கோரிடாங்க்

    திரிபுராவில் - தர்மாநகர்

    வாக்குப்பதிவு முடிந்து மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும், அதன் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய வங்கதேசம் 50 ஓவரில் 290 ரன்கள் குவித்தது.

    டாக்கா:

    பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசமும், 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானும் வென்றன.

    இந்நிலையில்,இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹசன் தமிம் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 107 ரன்னில் அவுட்டானார். லிட்டன் தாஸ் 41 ரன்னும், சயிப் ஹசன் 36 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் தவ்ஹித் ஹிருடோய் பொறுப்புடன் ஆடி 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். சல்மான் ஆகா சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர்106 ரன்னில் வெளியேறினார். சாத் மசூத் 38 ரன்னும், ஷஹீன் அப்ரிடி 37 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பாகிஸ்தான் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இறுதியில், பாகிஸ்தான் 50 ஓவரில் 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரை என கைப்பற்றி அசத்தியது.

    வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், நஹித் ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    யூகி சேதுவின் வேடமும்,பேசும் வசனங்களும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

    காதலை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் வௌவல்ஸ் (Vowels). ஆங்கிலத்தில் உள்ள A,E,I,O,U என்கிற வௌவல்ஸ் எழுத்துகளின் பின்னணியில் ஐந்து கதைகளாக படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.

    முதல் கதை கற்பனை காட்சியை நிஜமாக்க நினைக்கும் காதலால் நடக்கும் கொலை.

    2வது கதை ஆபத்தான பயணத்தை விரும்பும் ஒருவரால் மற்றவர்களுக்கு நேரும் பாதிப்பு.

    3வது கதை காதல் பிரிவால் தற்கொலைக்கு தயாராகும் மனங்களை மாற்றும் உணர்வுப்பூர்வமான காதல்.

    4வது கதை உண்மை அன்பை தேடி வரும் காதல் மருத்துவம் தொடர்புடையது.

    5வது கதை உதடுகள் சொல்லும் காதல் பொய், உள்ளத்தில் இருக்கும் காதலே மெய் என்பதை சொல்லும் கதை.

    நடிகர்கள்

    யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா உள்ளிட்ட ஐந்து கதைகளில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

    யூகி சேதுவின் வேடமும்,பேசும் வசனங்களும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

    இயக்கம்

    5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் 5 குறும்படங்களை ஒன்றாக்கி ஒரு முழு நீளத் திரைப்படமாக கொடுத்திருப்பது தான் 'வெளவல்ஸ்'. தொடக்கம் மற்றும் முடிவு என்று குறிப்பிட்ட நேரத்திற்குள் தாங்கள் சொல்ல வேண்டிய விசயங்களை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள். 5வது கதையில் குழப்பம் ஏற்படுகிறது.

    இசை

    ஐந்து கதைகளுக்கு ஒரே இசையமைப்பாளர்.சரவண சுப்பிரமணியம் இசையமைத்திருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    ஐந்து இயக்குநர்களுக்கு இரண்டு ஒளிப்பதிவாளர்கள். கீர்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி ஆகியோர் கதைக்கு மெனக்கெட்டிருக்கிறார்கள்.

    ரேட்டிங்-2/5

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுமக்கள் கையில் அதிக பணம் எடுத்துச்செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்
    • 50 ஆயிரம் ரூபாய் கொண்டுசெல்ல எந்த ஆவணமும் தேவையில்லை

    தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை  தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் கையில் அதிக பணம் எடுத்துச்செல்லும்போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு இல்லை என்றால் தேர்தல் பறக்கும் படையினர், பணத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்துவிடுவர். 

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி அமல்!

    தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று முடியும்வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். தேர்தலை அமைதியாக நடத்தவே இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன. தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க காவல்துறையினருடன், அரசு அதிகாரிகளும் பறக்கும் படையாக பணியாற்றுவார்கள். 

    கையில் நிறைய பணம் வேண்டாம்

    தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கவும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கவும் பறக்கும் படையினர் தொடர் சோதனையில் ஈடுபடுவர். எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும்வரை அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் கண்டிப்பாக கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக பண விஷயத்தில் அனைவருக்கும் ஒரே விதிமுறைதான்.

    அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம்!

    மக்கள் தங்கள் கையில் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு செல்லலாம். 50 ஆயிரம் ரூபாய் கொண்டு செல்ல எந்த ஆவணமும் தேவையில்லை. அதற்கு மேல் பணம் கொண்டு செல்ல, நிச்சயம் உரிய ஆவணங்கள் கையில் இருக்க வேண்டும். இல்லையென்றால் நம் பணம் பறிமுதல் செய்யடும்.

    சிக்கினால் வருமான வரித்துறை தான்!

    ஒருவர் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றீர்கள் என்றால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உடனடியாக வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கப்படும். வருமான வரித்துறையினர் விசாரணை நடத்துவர்.

    அதேபோல் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பரிசு பொருட்கள் எடுத்து செல்லும்போதும் அதற்கு உண்டான ஆவணங்கள் கட்டாயம் கையில் இருக்க வேண்டும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்.
    • ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியே மொபைல் டெபாசிட் மையம் அமைக்கப்படும்.

    திமுக வேட்பாளர்கள் நேர்காணல் வரும் 17ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    மேலும், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளரகளுக்காக ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது.

    தேர்தல் அதிகாரிகள் 3 மணி நேரம் பயணம் செய்து வெள்ளிமலை பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்க உள்ளனர்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியே மொபைல் டெபாசிட் மையம் அமைக்கப்படும். வாக்களிக்க வருபவர்கள் தங்கள் செல்போனை பத்திரமாக வாக்குச்சாவடிக்கு வெளியே வைத்துச்செல்ல ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.67 கோடி
    • முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 12.51 லட்சம்

    தமிழகத்தின் 16-வது  சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 10ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் 17-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார். அதன்படி வரும் ஏப்ரல் 23ம் தேதி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 

    வியாழன் தேர்தல்! திங்கள் ரிசல்ட்!

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு முடிந்து 10 நாட்கள் கழித்து மே 4-ம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

    வேட்புமனு விவரம் :

    மனு தாக்கல் தொடக்கம்

    மார்ச் 30

    மனு தாக்கல் முடிவு

    ஏப்ரல் 06

    வேட்புமனு பரிசீலனை

    ஏப்ரல் 07

    வேட்புமனு திரும்பபெற

    ஏப்ரல் 09

    ஆண்களை விட பெண்களே அதிகம்!

    தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், அதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்.  

    மொத்த வாக்காளர்கள்

    5.67 கோடி

    முதல் முறை வாக்காளர்கள்

    12.51 லட்சம்

    85 வயதுக்கு மேற்பட்டவர்கள்

    4 லட்சம்

    பெண் வாக்காளர்கள்

    2.90 கோடி

    ஆண் வாக்காளர்கள்

    2.77 கோடி

    மூன்றாம் பாலினத்தவர்கள்

    7,617

    தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள்!

    தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும், அதில், நகர்ப்புறங்களில் 30,967 வாக்குச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 44,065 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியை பெற்றுத்தரும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    • இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக திமுக என்ன செய்தது.

    சென்னை எழும்பூர் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்ற இபிஎஸ் என்டிஏ கூட்டணி கட்சி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது இபிஎஸ் கூறியதாவது:-

    என்டிஏ கூட்டணி கட்சி தலைவர்களுடன் விரைவில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும். தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் பொறுமையாக உணர்வுப்பூர்வமாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியை பெற்றுத்தரும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் பொறுமையாக உணர்வுப்பூர்வமாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். என்டிஏ கூட்டணி சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்களில் இஸ்லாமியர்கள் இருப்பார்கள்.

    இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக திமுக என்ன செய்தது. கடந்த தேர்தலில் திமுக அறிவித்த வாக்குறுதிகளில் 4ல் ஒரு பங்கு வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை.

    சிறுபான்மை மக்களுக்கு திமுக பாதுகாப்பாக இருக்கும் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி. அவசரமாக புதிய புதிய திட்டங்களுக்கு திமுக அடிக்கல் நாட்டுவது ஏன்? தமிழகத்தில் இன்று ஊழல் இல்லாத துறைகளே இல்லை.

    தவெக உடன் இதுவரை எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் இதுவரை தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • ஒரு நாளில் காலை 9 மணி, மாலை 4 மணி என இரண்டு கட்டமாக நேர்காணல் நடக்கிறது.

    திமுக வேட்பாளர்கள் நேர்காணல் வரும் 17ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், திமுக வேட்பாளர்கள் நேர்காணல் மார்ச் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    ஒரு நாளில் காலை 9 மணி, மாலை 4 மணி என இரண்டு கட்டமாக நேர்காணல் நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார்.

    புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு மார்ச் 17ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர்களுக்கு மார்ச் 18ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது. மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மார்ச் 18ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.

    கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்ட வேட்பாளர்களுக்கு மார்ச் 19ம் தேதி நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்களுக்கான நேர்காணல் மார்ச் 20ம் தேதி நடக்கிறது.

    திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு தொகுதி வேட்பாளர்களுக்கு 21ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.

    கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்ட வேட்பாளர்களுக்கு மார்ச் 22ம் தேதி அன்று நேர்காணல் நடத்தப்படும் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண்களை மையப்படுத்தியே பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்தி வருகிறது.
    • திமுக அரசின் மிகப்பெரிய பலமே பெண்கள்தான்.

    சென்னை அமைந்தகரையில் நடைபெறும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசியதாவது:-

    புனித ரமலான் மாதத்தில் திமுக சிறுபான்மை பிரிவு நடத்தும் பேரன்பின் ஈகை பெருவிழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    இஸ்லாமியர்களுக்கும் திமுகவினருக்குமான தொடர்பு தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது.

    ஈகைப்பண்பும் அடுத்தவருக்கு உதவக்கூடிய மனமும் அனைவரையும் சமமாக கருதி அன்பு செலுத்துபவரகள் இஸ்லாமியர்கள்.

    பெண்களை மையப்படுத்தியே பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்தி வருகிறது. திமுக அரசின் மிகப்பெரிய பலமே பெண்கள்தான்.

    அனைவரையும் சமமாக பாவிக்கும் எண்ணம் கொண்ட தூய இஸ்லாமியர்கள் கூடி இருக்கின்றனர்.

    திமுக- இஸ்லாமியர் உறவு என்பது தலைமுறை கடந்த உறவு.

    அனைத்து சிறுபான்மை இயக்கங்களும் ஒரே மேடையில் இணைந்துள்ளனர். இஸ்லாமிய இயக்கங்களின் ஒற்றுமை தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே அவசியம்.

    இஸ்லிமியர்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்கள் நிம்மதியாக கிறிஸ்துமஸ் கொண்டாட முடியவில்லை.

    சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து இபிஎஸ் வாய் திறந்தாரா? அதிமுகவை மட்டுமல்லாமல் தனது மனசாட்சியையும் பாஜகவிடம் அடகு இபிஎஸ் வைத்திருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிஸ்டல் ஷூட்டராக அஜித் குமார் திகழ்கிறார்.

    தமிழ் திரைப்பட உலகில் 30 வருடங்களுக்கும் மேலாக கொண்டாடப்படும் நடிராகவும், திறமையான மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலராகவும் திகழ்பவர் அஜித் குமார். 'கிங் ஆஃப் ஓப்பனிங்ஸ்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர், வசூல் சாதனைகள் படைத்த பல வெற்றி படங்களையும், பல்வேறு சவாலான கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறனையும் நிரூபித்து விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

    நடிப்பு, ரேசிங் மட்டுமின்றி பிஸ்டல் ஷூட்டிங் மற்றும் அட்வென்ச்சரில் அதிக ஈடுபாடு கொண்டவர் அஜித் குமார். 46 ஆவது மற்றும் 47 ஆவது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று மாநில அளவிலான பிஸ்டல் ஷூட்டராக அஜித் குமார் திகழ்கிறார்.

    தற்போது ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அஜித் குமார் அடுத்த ஒரு ஆண்டு பங்கேற்க இருக்கும் ரேஸ் விவரங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி வரும் மாதங்களில் க்ரெவென்டிக் ஐரோப்பிய தொடர், மிஷெலின் லீ மான்ஸ் கப் மற்றும் ஆசிய லீ மான்ஸ் கோப்பை தொடரில் அஜித் குமார் பங்கேற்றகிறார். மேலும், இந்த இரு தொடர்களின் அட்டவணையும் வெளியாகி உள்ளது.

    க்ரெவென்டிக் ஐரோப்பிய தொடர்

    ரேஸ் 1: மார்ச் 20-22, 2026 - முகெல்லோ சர்க்யூட், இத்தாலி

    ரேஸ் 2: ஏப்ரல் 17-19, 2026 சர்க்யூட் டி ஸ்பா-ஃபிராங்கோர்சாம்ப்ஸ், பெல்ஜியம்

    ரேஸ் 3: ஜூன் 5-7, 2026 - சர்க்யூட் பால் ரிக்கார்ட், பிரான்ஸ்

    ரேஸ் 4: ஜூலை 3-5, 2026 நூர்பர்க், ஜெர்மனி

    ரேஸ் 5: செப்டம்பர் 18-20, 2026 சர்க்யூட் டி பார்சிலோனா, ஸ்பெயின்

    மிஷெலின் லீ மான்ஸ் கப்

    ரேஸ் 1: 12 ஏப்ரல் 2026 - பார்சிலோனா, ஸ்பெயின்

    ரேஸ் 2:3 மே 2026 - லீ காஸ்டெல்லெட், பிரான்ஸ்

    ரேஸ் 3:5 ஜூலை 2026 - இமோலா, இத்தாலி

    ரேஸ் 4: 23 ஆகஸ்ட் 2026 - சர்க்யூட் டி ஸ்பா-ஃபிராங்கோர்சாம்ப்ஸ், பெல்ஜியம்

    ரேஸ் 5:13 செப்டம்பர் 2026 - சில்வர்ஸ்டோன், யுகே

    ரேஸ் 6:10 அக்டோபர் 2026 - போர்டிமாவோ, போர்ச்சுகல்

    ஆசிய லீ மான்ஸ் தொடர் 2026/ 27

    ரேஸ் 1: நவம்பர் 13-15, 2026-யாஸ் மெரினா சர்க்யூட், அபுதாபி

    ரேஸ் 2: நவம்பர் 20-22, 2026 -துபாய் ஆட்டோட்ரோம், யுஏஇ

    ரேஸ் 3: ஜனவரி 15-17, 2027-செபாங் இன்டர்நேஷனல் சர்க்யூட், மலேசியா

    ×