என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாதனைகள், கொள்கைகள் மட்டும் நம்முடைய பலம் இல்லை; நான்காவது பொதுத் தேர்தலை இணைந்து சந்திக்கும் கூட்டணியும், நம்முடைய பெரிய பலம்தான்.
    • தமிழ்நாட்டைத் தொடர்ந்து நம்பர்-1 மாநிலமாக்க எங்கள் ஸ்டாலினுக்கு ஆதரவு கொடுங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் 12-வது மாநில மாநாடு இன்று திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    "திமுக தொண்டர்களுக்கு நான் வைக்கும் மற்றொரு வேண்டுகோள், உதயசூரியன் சின்னம் வெற்றி பெற நீங்கள் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு உழைக்கிறீர்களோ, அதே உழைப்பை நம்முடைய கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களின் வெற்றிக்கும் கொடுக்க வேண்டும். ஏனென்றால், நம்முடைய சாதனைகள், கொள்கைகள் மட்டும் நம்முடைய பலம் இல்லை; நான்காவது பொதுத் தேர்தலை இணைந்து சந்திக்கும் கூட்டணியும், நம்முடைய பெரிய பலம்தான்.

    மற்றவர்களைப்போல் வெறும் தேர்தலுக்காக, எலக்ஷன் சீசனில் மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை; கொள்கையின் அடிப்படையில், கொள்கைத் தோழர்களான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகவும் நீங்கள் களத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மக்களைச் சென்று சந்திக்கின்ற நீங்கள், இன்னொரு விஷயத்தையும் சொல்லுங்கள். "தமிழ்நாட்டில், இதுவரை பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராக வேண்டும் என்று வாக்களித்து மக்கள் தேர்ந்தெடுத்தீர்கள். அவர்களுக்குப் பின்பு, நீங்கள் வாக்களித்து ஜெயிக்க வைத்தது இந்த ஸ்டாலினைத்தான்!

    கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளை விட, அடுத்த 5 ஆண்டுகள் இன்னும் தமிழ்நாட்டிற்கு அதிக சாதனைகள் செய்வார் எங்க தலைவர் என்று தைரியமாக மக்களிடத்தில் சொல்லுங்கள். தமிழ்நாட்டைத் தொடர்ந்து நம்பர்-1 மாநிலமாக்க எங்கள் தலைவருக்கு ஆதரவு கொடுங்கள் என்று நம்பிக்கையோடு வீடு வீடாக சென்று சொல்லுங்கள். நம்மால் பயனடைந்த அவர்கள், நிச்சயம் உங்களை வரவேற்பார்கள்.

    இந்த ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிதான், சொன்னதைச் செய்யும், சொல்லாததையும் செய்யும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அதனால், தேர்தலுக்காக உழைக்க, நான் ரெடி... நீங்கள் ரெடியா? நம் மண்- மொழி- மக்களை காக்க, நான் ரெடி... நீங்கள் ரெடியா? திராவிட மாடல் 2.0-விற்கு, நான் ரெடி... நீங்கள் ரெடியா? நம்முடைய வெற்றி, கழகத்தின் வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வெற்றி! அதை உணர்ந்து நீங்கள் உழைக்க வேண்டும்! ஏழாவது முறையும் நாம்தான்! இனி எப்போதும் நாம்தான்! திருச்சியின் எழுச்சி தமிழ்நாடெங்கும் பரவட்டும்! திராவிட மாடல் நல்லாட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்" என தெரிவித்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா வென்ற மூன்று ஐசிசி கோப்பைக்கான அணியிலும் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்திருந்தார்.
    • 2024 மற்றும் தற்போதைய டி20 உலகக் கோப்பையில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையையும் இந்தியாதான் கைப்பற்றியது. கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி சாம்பியன் பட்டத்தையும் இந்தியாதான் வென்றது. இந்த மூன்று தொடரையும் வென்ற இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்திருந்தார். இடம் பிடித்திருந்தது மட்டுமல்லாமல் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கியமான நபர்களில் ஒருவராகவும் இருந்தார்.

    இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையை வென்றது குறித்து ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2024 டி20 உலகக் கோப்பையை பார்படோசில் வென்ற பிறகு, எனக்கு நானே ஒரு வாக்குறுதி செய்து கொண்டேன். அது, எந்தவொரு தொடரில் நான் விளையாடினாலும் வெற்றிக்காக விளையாட வேண்டும். சாம்பியன் கோப்பையை தூக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். அகமதாபாத்தில் நியூசிலாந்திற்கு எதிரான இந்த வெற்றி, நான் எனக்கு அளித்த வாக்குறுதி நிஜமாகிவிட்டது என்பதற்கான சான்றாகும். அணியின் ஆதிக்கத்தில் இது ஜஸ்ட் தொடக்கம்தான்.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிலிண்டர்களை முன்பதிவு செய்வதில் புதிய கட்டுப்பாட்டை அரசு அமல்படுத்தியுள்ளது.
    • சிலிண்டர்களைச் சேமித்து வைப்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தவும், விநியோகத்தைச் சீர்செய்யவும் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சிலிண்டர்களை முன்பதிவு செய்வதில் புதிய கட்டுப்பாட்டை அரசு அமல்படுத்தியுள்ளது.

    ஒரு சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்ட பிறகு, அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். (முன்பு இது 15 முதல் 21 நாட்களாக இருந்தது).

    எரிவாயு தட்டுப்பாடு நிலவும் சூழலில், வசதி படைத்தவர்கள் அல்லது அச்சப்படுபவர்கள் அதிகப்படியான சிலிண்டர்களைச் சேமித்து வைப்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் அனைத்துக் குடும்பங்களுக்கும் சமமான விநியோகம் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகர் விஜய் நாளை ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
    • சம்மனை பெறவும், பதிலளிக்கவும் செந்தில்பாலாஜி மறுப்பு

    கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

    கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக இன்று நேரில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை. அவர் சிபிஐ சம்மனைப் பெறவோ அல்லது அதற்குப் பதிலளிக்கவோ மறுத்துவிட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கரூரில் நடந்த துயரச் சம்பவத்திற்குச் செந்தில் பாலாஜியே காரணம் என்று ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மாநாட்டிற்குப் போதிய பாதுகாப்பு வழங்கக் கூடாது என்று காவல்துறையினருக்கு அவர் அழுத்தம் கொடுத்ததாகவும், சம்பவ இடத்தில் திட்டமிட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த செந்தில் பாலாஜி, போதிய திட்டமிடல் இல்லாததே நெரிசலுக்குக் காரணம் என்று தவெக நிர்வாகத்தைக் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  

    இதனிடையே நடிகர் விஜய் நாளை ஆஜராகுமாறு சிபிஐ ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் தேர்தல் பணிகளால் நாளை ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறும், மேலும் விசாரணையை சென்னை சிபிஐ அலுவலகத்திற்கு மாற்றுமாறும் சிபிஐ தலைமைக்கு விஜய் கோரிக்கை வைத்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அயதுல்லா காமேனி மகன் புதிய உச்ச தலைவர் என ஈரான் முறையாக அறிவித்தது.
    • ரஷிய அதிபர் புதின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை கூட்டாக கடந்த மாதம் 18-ந்தேதி (சனிக்கிழமை) ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரான் பாராளுமன்ற நிபுணர்கள் குழு இவரை புதிய தலைவராக தேர்வு செய்துள்ளனது. ஈரான் ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் மொஜ்தபாவுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிலையில் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மொஜ்தபாவுக்கு வாழ்த்துகள். ரஷியா தொடர்ந்து ஈரானுக்கு துணை நிற்கும். ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவு மற்றும் நமது ஈரானிய நண்பர்களுடன் ஒற்றுமையை உறுதிப்படுத்த விரும்புவதாக புதின் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கேட்பதற்கெல்லாம், ‘நோ’ சொல்லும் NDA-வுக்கு, தமிழ்நாடும் ‘நோ’தான் சொல்லும்.
    • அ.தி.மு.க. என்ற கட்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறார்கள்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் 12-வது மாநில மாநாடு இன்று திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் அதிமுக தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  

    "அ.தி.மு.க. கூட்டணி… சாரி… சாரி… அப்படி சொன்னால், மோடியும், அமித் ஷாவும் கோபித்துக் கொள்வார்கள். N.D.A. கூட்டணி என்று சொல்ல வேண்டும். கூட்டணிக்குப் பெயர் வைக்கக் கூட முடியாத நிலையில்தான், இன்றைக்கு அ.தி.மு.க. இருக்கிறது. சரி அவர்கள் சொல்வது போன்று, அந்த N.D.A. கூட்டணி தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறது?

    கடந்த 5 ஆண்டுகளில், நமக்கு தர வேண்டிய கல்வி நிதி, ஜல் ஜீவன் திட்ட நிதி, நூறு நாள் வேலைத்திட்ட நிதி, பேரிடர் நிவாரண நிதி என்று நாம் கேட்ட எதையும் தரவில்லை. மாநிலத்திற்கான சிறப்புத் திட்டங்களையும் தரவில்லை. ஏன், கோவை, மதுரை, திருச்சி மெட்ரோ உள்ளிட்ட எந்த உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் அனுமதி தரவில்லை.

    ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருந்தால், அடிப்படையாக மாநிலத்துக்குக் கேட்டதையாவது அவர்கள் கொடுத்திருக்க வேண்டும். பா.ஜ.க. தமிழ்நாட்டுக்குத் தந்ததெல்லாம் என்ன தெரியுமா? ஆளுநர் மூலமாகக் குடைச்சல், மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வு, இந்தித் திணிப்பு, மிரட்டிப் பார்க்க ரெய்டுகள், இப்படிப்பட்ட ஆட்சிதான், பிரதமர் மோடி சொல்லும் N.D.A. ஆட்சி.  தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாத இவர்கள்தான், நம்மை எதிர்த்து நிற்கிறார்கள். 

    தமிழ்நாடு மீது எந்த அளவிற்கு வன்மம் இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்றால், தேர்தல் வருகிறதே என்று கூட தெரியாமல், அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், நமக்கான எதையும் அறிவிக்க இவர்களுக்கு மனது வரவில்லை. நான் கேட்கிறேன்… இப்படி திட்டமிட்டுத் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கின்ற N.D.A. கூட்டணிக்கு, எங்கள் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்?

    எந்த நம்பிக்கையில் நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வருகிறீர்கள்? தமிழ்நாடு கேட்பதற்கெல்லாம், 'நோ' சொல்லும் NDA-வுக்கு, தமிழ்நாடும் 'நோ'தான் சொல்லும். இங்கே உங்களுக்கு எப்போதும் 'நோ எண்ட்ரி' தான். உங்கள் டப்பா எஞ்சினுக்கு தமிழ்நாடு எப்போதுமே, 'No Entry'-தான் சொல்லும். 

    சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன். இந்தத் தேர்தல், தமிழ்நாடு vs NDA இன்னும் சொன்னால், தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்று பார்க்கும் தேர்தல் சொன்னேன். உடனே நம்முடைய எதிரிகள் என்ன சொன்னார்கள்? இது சட்டமன்றத்துக்கு நடக்கும் தேர்தல்தானே? இதை ஏன் தமிழ்நாடு Vs NDA என்று தி.மு.க. சொல்கிறது? தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்குமான தேர்தல் என்று ஏன் ஸ்டாலின் சொல்கிறார் என்று கேட்கிறார்கள்.

    தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கம், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களிடம் வரும் கட்சியல்ல. மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் களத்தில் நிற்கும் கட்சி. எங்களுக்குத் தெரியும்; தமிழ்நாட்டின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின், உண்மையான எதிரி யார் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த எதிரியை எதிர்க்கும் தெம்பும், திராணியும் கொண்ட ஒரே இயக்கம் தி.மு.க என்பது மக்களுக்கும் நன்றாக தெரியும்!

    அ.தி.மு.க. என்கிற முகமூடியை போட்டுக் கொண்டு வந்தால், எங்களுடைய தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களை அடையாளம் தெரியாமல் போய்விடுமா? உங்களின் முகத்திரையைக் கிழித்து, தமிழ்நாட்டு மக்களிடம் நாங்கள் அம்பலப்படுத்துவோம். தமிழ்நாட்டை எப்படியாவது நம்மிடம் இருந்து, விழுங்கிடலாம் என்று நினைக்கிறது காவிக் கூட்டம். எங்கள் கருப்பு - சிவப்புp பட்டாளம் இருக்கிறவரை அது நடக்கவே நடக்காது. நடக்க விடமாட்டோம். இது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

    அதனால்தான், அ.தி.மு.க. என்ற கட்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறார்கள். அரசியலில் நேர் எதிராக இருந்தாலும், அ.தி.மு.க தொண்டர்கள் மீது நான் உண்மையாகவே பரிதாபப்படுகிறேன். அவர்களுடைய உணர்வுக்கு மாறாக கட்சியைக் கொண்டு போய் டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி. தன் சொந்த நலனுக்காக, சுயலாபத்துக்காக, எப்படியாவது முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற நப்பாசையில், பழனிசாமி அடிமையாகக் கிடக்கிறார். அவரை வைத்து, ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையும் அழிக்கும் வேலையை பா.ஜ.க செய்து கொண்டிருக்கிறது. " என தெரிவித்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர் இடம் பிடித்துள்ளார்.
    • இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

    ஐசிசி நடத்தும் மெகா தொடருக்குப் பின் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு ஐசிசி அணி அறிவிக்கப்படும். அதன்படி நேற்றுடன் டி20 உலகக் கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், ஐசிசி அணியை அறிவித்துள்ளது.

    இதில் நான்கு இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். கேப்டனாக மார்க்கிராமை தேர்வு செய்துள்ளது. இறுதிப் போட்டியில் விளையாடிய இரண்டு கேப்டன்கள் பெயரும் இடம் பெறவில்லை.

    ஐசிசி அறிவித்துள்ள அணி விவரம்:-

    1. சஹிப்சதா ஃபர்ஹான், 2. சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), 3. இஷான் கிஷன், 4. ஏய்டன் மார்க்கிராம் (கேப்டன்), 5. ஹர்திக் பாண்ட்யா, 6. வில் ஜேக்ஸ், 7. ஜேசன் ஹோல்டர், 8. பும்ரா, 9. லுங்கி நிகிடி, 10. அதில் ரஷித், 11. முசாரபானி. 12-வது வீரர் வான் ஸ்கால்விக்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எண்ணெய் நிறுவனங்கள் வணிகரீதியான சிலிண்டர் விநியோகத்தை திடீரென நிறுத்தியுள்ளன.
    • ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகளில் (ஈரான்-இஸ்ரேல்) நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, எண்ணெய் நிறுவனங்கள் வணிகரீதியான சிலிண்டர் விநியோகத்தை திடீரென நிறுத்தியுள்ளன.

    கடந்த சனிக்கிழமை (மார்ச் 7), வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60-ம், வணிக சிலிண்டர் விலை ₹115-ம் உயர்த்தப்பட்டது.

    சிலிண்டர் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த ₹150 தள்ளுபடி நிறுத்தப்பட்டதால், ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு மொத்தம் ₹265 கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

    இதனால், பெங்களூருவில் நிலவி வரும் வணிகரீதியான சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, நாளை முதல் (மார்ச் 10, 2026) ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வளைகுடா நாடுகளில் போர்ச் சூழல் காரணமாக அங்கிருந்து இந்தியாவுக்கு எரிபொருள் வருகை முற்றிலும் தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
    • சிபிஐ சம்மன் அனுப்பியதற்கும், எங்களுக்கும் (பாஜக) எந்த தொடர்பும் இல்லை

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், விஜய்யை என்.டி.ஏ. கூட்டணியில் இணைக்க பா.ஜ.க. தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீண்டநாட்களாகவே தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்காக தங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அவ்வப்போது தவெக தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் இந்த செய்திக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில் பவன் கல்யாணை வைத்து பாஜக, விஜய்யிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில் இந்த தகவலுக்கு 'வதந்தி' எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 

    "தவெகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுவது ஒரு வதந்தி... வதந்தி... தவெகவில் நாளை வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற உள்ள நிலையில் சிபிஐ சம்மன் அனுப்பியதற்கும், எங்களுக்கும் (பாஜக) எந்த தொடர்பும் இல்லை. அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கும்போது சொல்கிறேன்." என தெரிவித்துள்ளார். 

    விஜய் பாஜகவை தனது கொள்கை எதிரி எனவும், மதவாத சக்தி எனவும் முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலை தொடங்கியது.
    • இன்று 10-வது நாளாக தாக்குதல் தொடர்கிறது.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்ற. கடந்த சனிக்கிழமை இந்த தாக்குதல் தொடங்கப்பட்டது. முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

    இதனால் கோபம் அடைந்த ஈரான் பயங்கரமாக வகையில் பதிலடி கொடுத்து வருகிறது. வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே அயதுல்லா அலி காமேனியின் மகன் மொஜ்தபா காமேனியை புதிய உச்ச தலைவராக ஈரான் தேர்ந்தெடுத்துள்ளது.

    அவருக்கு விசுவாசமாக இருப்போம் என் ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் ஒன்று கூடி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிலையில் நாட்டை பிரிக்கவும், எண்ணெயை எடுக்கவும் அமெரிக்கா விரும்புகிறது என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

    அயதுல்லா அலி காமேனியை கொன்று விட்டால் ஈரான் சரணடைந்துவிடும் என்று அமெரிக்கா மற்றும் ஈரான் கணக்கு போட்டன. தற்போது அந்த கணக்கு தப்பாகிவிட்டது. ஈரான் புதிய உச்ச தலைவரை தேர்ந்தெடுத்துள்ளது. புதிய தலைவரை தேர்ந்தெடுந்தால் அவர்களையும் கொலை செய்வோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எந்தவொரு எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    ×