என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பொன்னான நாள். புதிய பாதை புலப்படும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

    ரிஷபம்

    சிக்கல்கள் விலகி சிறப்புகள் வந்து சேரும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளைச் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும். கட்டிய வீட்டைப் பராமரிக்கும் யோகம் உண்டு.

    மிதுனம்

    உற்சாகமாகப் பணிபுரியும் நாள். பிறர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தடைபட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

    கடகம்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். உறவினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். மறைமுக எதிர்ப்புகள் மாறும்.

    சிம்மம்

    ஆதாயம் தரும் தகவல்களில் அக்கறை காட்டும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய பங்குதாரர்களால் தொழில் வளர்ச்சி கூடும்.

    கன்னி

    வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். நடைபெறாது என நினைத்த காரியம் ஒன்று நடைபெறும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.

    துலாம்

    மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். எதிர்பாராத தன லாபம் இல்லம் தேடி வரும். தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்.

    விருச்சிகம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வீணான வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டாம். உடல் நலனில் தொந்தரவு வரலாம்.

    தனுசு

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழிலில் ஆக்கபூர்வமான மாற்றங்களைச் சந்திப்பீர்கள். பக்கபலமாக இருப்பவர்கள் பணிக்கு உதவி செய்வர்.

    மகரம்

    யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில்கூட வெற்றி கிடைக்கும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    கும்பம்

    பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடருவீர்கள்.

    மீனம்

    நிதி நிலை உயரும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சையில் சிக்கினார்.
    • எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகளை ஒரு பெரிய தவறு என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.

    கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    பில்கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீனுக்கு இடையிலான பல சந்திப்புகளை விவரிக்கும் படங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கேட்ஸைச் சுற்றி பல விமர்சனங்கள் எழுந்தன. ஆவணங்களில் பில் கேட்ஸ், முகங்கள் மறைக்கப்பட்ட பெண்களுடன் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது

    இந்நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸ் தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் பொது மன்னிப்பு கோரி உள்ளார்.

    இதுதொடர்பாக, அறக்கட்டளை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    சமீபத்திய டவுன் ஹால் கூட்டத்தின்போது பில்கேட்ஸ் தனது செயல்களுக்குப் பொறுப்பேற்றார். அங்கு அவர் எப்ஸ்டீனுடனான தனது உறவுகளைச் சுற்றியுள்ள கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    டவுன் ஹாலில் எப்ஸ்டீன் கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ரஷிய பெண்களுடன் தனக்கு இரண்டு உறவுகள் இருந்ததாக ஒப்புக் கொண்ட பில் கேட்ஸ், அந்த உறவுகள் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையது இல்லை என தெளிவுபடுத்தினார்.

    எப்ஸ்டீனுடன் நேரத்தைச் செலவிட்டதும், மூத்த அறக்கட்டளை நிர்வாகிகளை அவருடன் சந்திப்புகளில் ஈடுபடுத்தியதும் ஒரு பெரிய தவறு எனக்கூறிய பில்கேட்ஸ், நான் செய்த தவறு காரணமாக இதில் ஈர்க்கப்பட்ட மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.

    2014 வரை எப்ஸ்டீனைச் சந்தித்ததாகவும், எப்ஸ்டீனுடன் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பறந்ததாகவும், ஜெர்மனி, பிரான்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் அவருடன் நேரத்தைச் செலவிட்டதாகவும் பில்கேட்ஸ் கூறினார். நான் ஒருபோதும் எப்ஸ்டீனின் தீவுக்குச் சென்றதில்லை என்பதை உறுதிபடுத்தினார் என தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா இதுவரை சோபிக்கவில்லை.
    • பவுலிங்கில் வருண் சக்ரவர்த்தி இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

    சென்னை:

    டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜிம்பாப்வே அணியுடன் மோகிறது.

    லீக் சுற்றில் 3 போட்டியிலும் வென்ற இந்தியா சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் 76 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் அடுத்த 2 போட்டிகளில் கட்டாய வெற்றி தேவை.

    பேட்டிங்கில் அபிஷேக் சர்மா இதுவரை சோபிக்கவில்லை. கேப்டன் சூர்யகுமார் 180, இஷான் கிஷன் 176, ஷிவம் துபே 158 ரன் அடித்துள்ளனர்.

    பவுலிங்கில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், சுழலில் வருண் சக்ரவர்த்தி இடத்தை தக்கவைத்துக் கொள்வர். கடந்த போட்டியில் அக்சர் படேலுக்கு வாய்ப்பு அளிக்காதது தான் தோல்விக்கு காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளதால், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அவர் களம் இறங்கலாம்.

    ஜிம்பாப்வே லீக் சுற்றில் பி பிரிவில் வலுவான ஆஸ்திரேலியா, இலங்கையை வீழ்த்தி முதலிடம் பிடித்து கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.

    சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீசிடம் 107 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் இன்று கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.

    பேட்டிங்கில் பிரையன் பென்னட் 180 ரன் அடித்து முதுகெலும்பாக உள்ளார். கேப்டன் சிக்கந்தர் ராசா, மருமணி, ரியான் பர்ல் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்ப்பர்.

    பவுலிங்கில் முசரபானி 4 போட்டியில் 11 விக்கெட் எடுத்து 2வது இடத்தில் உள்ளார். பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் ஙகரவா, சுழலில் கிரேம் க்ரீமர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கலாம்.

    இன்று யார் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற நிலையில் களம் இறங்குகிறது. இந்திய வீரர்கள் நேற்று சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்தியா-ஜிம்பாப்வே அணியுடனான போட்டிக்கு முன் மாலை 6 மணிக்கு அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பாடல்களை பாடி அவர் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
    • அப்போது பயங்கரவாதத்தால் ஏற்படும் வலியை இந்தியாவும் உணர்ந்துள்ளது என்றார்.

    ஜெருசலேம்:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளார். சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார்.

    இதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராகச் சென்று உரையாற்றினார். இதனால் அங்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அந்நாட்டு சபாநாயகர் உயரிய விருதை அளித்து கவுரவித்தார்.

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்ற ஒரே உலக தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 107 ரன் மட்டுமே எடுத்தது.
    • இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 46-வது லீக் ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரின் பிரேமதாசா மைதானத்தில் நடந்தது. இதில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின.

    முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மிட்செல் சான்ட்னர் 26 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 32 ரன்னும், மெக்கன்சி 31 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில், சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைப் பெற்ற இலங்கை அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    குரூப் 2 பிரிவில் இருந்து இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் களத்தில் உள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
    • அப்போது இஸ்ரேலைப் போல் இந்தியாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    ஜெருசலேம்:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இன்று இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றார். சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார்.

    இதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராகச் சென்று உரையாற்றினார். இதனால் அங்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

    கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் படைகளின் கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரின் குடும்பத்திற்கும் இந்திய மக்களின் இரங்கல் செய்தியை கொண்டு வந்துள்ளேன்.

    நாங்கள் உங்கள் வலியை உணர்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிப்பாட்டில் இஸ்ரேலுடன் இந்தியா இன்றும் என்றும் துணை நிற்கும். பயங்கரவாதத்தை எந்தவொரு காரணமும் நியாயப்படுத்த முடியாது.

    இந்தியாவும் பயங்கரவாதத்தால் ஏற்படும் வலியை நீண்ட காலமாக உணர்ந்துள்ளது. இஸ்ரேலியர்கள் உள்பட ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் நினைவு கூர்கிறோம்.

    உங்களைப் போலவே எங்களுக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான இரட்டை நிலைப்பாடு இல்லாத பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்ட கொள்கையுள்ளது.

    காசா அமைதித்திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் யூதர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.

    பிரதமர் மோடி இஸ்ரேல் செல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 168 ரன்கள் எடுத்தது.
    • மிட்செல் சான்ட்னர் 26 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 46-வது லீக் ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரின் பிரேமதாசா மைதானத்தில் நடந்தது. இதில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மிட்செல் சான்ட்னர் 26 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 32 ரன்னும், மெக்கன்சி 31 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை சார்பில் தீட்சனா, சமீரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. கமிந்து மெண்டிஸ் 31 ரன்னும், வெல்லாலகே 29 ரன்னும் எடுத்தனர்.

    இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.

    நியூசிலாந்து சார்பில் ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை
    • அ.தி.மு.க. மகளிரணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெகவின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

    கடந்த 14 ஆண்டுகளாக ஐ.ஜே.கேவில் இருந்த இவர், தனது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், சில கசப்பான அனுபவங்கள் காரணமாகவும் விலகுவதாக தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    இந்நிலையில் அவருக்கு அ.தி.மு.க. மகளிரணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி எனும் புதிய அரசியல் கட்சியை கடந்தாண்டு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கி அமலாக்கத்துறை சீல்.
    • அடுத்தகட்ட விசாரணைக்கு விரைவில் சம்மன் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    அனில் அம்பானியின் ரூ.3,716 கோடி மதிப்பிலான மும்பை இல்லத்தை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கி அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது.

    Yes Bank தொடர்பான பணமோசடி வழக்கில் இதோடு சேர்த்து ரூ.15,700 கோடி மதிப்பிலான சொத்துக்களை ED முடக்கியுள்ளது. அடுத்தகட்ட விசாரணைக்கு விரைவில் சம்மன் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர்
    • பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர், நடிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அய்யா நல்லக்கண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    ×