என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் வீடு அமைந்துள்ளது.

    இந்நிலையில், தனது குடியிருப்பு முன் நின்றுகொண்டிருந்த அலக்ஸியேவ் மீது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்தக் கொலை முயற்சிக்கு பின்னணியில் உக்ரைன் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அலெக்ஸியேவ் அந்நாட்டின் அதிபர் புதினுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய ஆன்லைன் வகுப்புகள் பிப்ரவரி 8-ந் தேதி தொடங்குகிறது
    • வகுப்புகள் தினசரி மாலை 6.30 முதல் 8.30 மணி வரை நடைபெறும்.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆன்லைன் வழியாக படித்தவர்கள், மாதிரித் தேர்வு எழுதியவர்கள் என மொத்தம் 2,106 பேர்களை தேர்ச்சி பெறச் செய்து ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி தமிழக அளவில் அசாத்திய சாதனையைப் படைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் 2026ம் ஆண்டுக்கான புதிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 8-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமின் இயக்குநர் ச.வீரபாபு கூறியதாவது:-

    ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி

    ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறது. இந்த அகாடமியில் படித்து, இதுவரையில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு அரசின் பல்வேறு பணிகளில் முக்கிய பதவி வகித்து வருகின்றனர்.

    கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆன்லைன் வழியாக படித்தவர்கள், மாதிரி வினாத்தாள்கள் பெற்று பயிற்சி செய்தவர்கள், மாதிரித் தேர்வு எழுதியவர்கள் என மொத்தம் 2,106 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, கடந்த மாதம் வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விலும் 500க்கும் மேற்பட்டோர் இந்த அகாடமியில் படித்தவர்கள் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய ஆன்லைன் வகுப்புகள்

    இந்நிலையில், 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான புதிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 8-ந்தேதி தொடங்குகிறது. இந்த வகுப்புகள் தினசரி மாலை 6.30 முதல் 8.30 மணி வரை நடைபெறும். அதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    முன்பதிவு செய்க

    இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர, 'TNTET ONLINE COACHING-2026' என்று டைப் செய்து, தங்களது முழு முகவரியை 7550151584-என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 7550151584, 7550151589, 7550053400 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • கூகுள் தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது.

    புதுடெல்லி:

    10-வது ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

    மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஏ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். லீக், சூப்பர் 8, அரையிறுதி, பைனல் என மொத்தம் 55 போட்டிகள் நடக்கிறது.

    இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி, மும்பை, இலங்கையில் கொழும்பு, பல்லேகலே ஆகிய மைதானங்களிலும் போட்டிகள் நடக்கின்றன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • U19 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷிக்கு அளிக்கப்பட்டது.
    • சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஹராரே:

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நேற்று நடைபெற்றது.

    இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 411 ரன்கள் குவித்து அசத்தியது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் மிரட்டினார். அவர் 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆயுஷ் மாத்ரே 53 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் பால்கெனர் தனி ஆளாகப் போராடினார். அவர் 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து அவுட்டானார். பென் டாக்கின்ஸ் 66 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், U19 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் மற்றும் ஆட்ட நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷிக்கு அளிக்கப்பட்டது.

    சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்துக்கு முன்னாள், இந்நாள் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டது.
    • விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பனையூரில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை:

    தமிழக சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு அக்கட்சி இன்று முதல் விருப்ப மனு வழங்குவதாக அறிவித்தது.

    அதன்படி, இன்று மதியம் 12.00 மணி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டது. த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் பனையூரில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, விருப்ப மனு விநியோகம் நிறுத்தப்பட்டது.

    விருப்பமனு விநியோகம் 12 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில் 2.30 மணிக்குள் மனுக்கள் காலியானதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில், தவெக பொதுச் செயலாளர் என் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருப்ப மனுக்கள் பெறுவதற்காக தொண்டர்கள் யாரும் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூருக்கு வரவேண்டாம். விருப்ப மனுக்களை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருப்ப மனுவை பூர்த்தி செய்து பிப்ரவரி 14-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இருவரும் முதல் காதலை தேடி செல்கிறார்கள்.

    குடும்ப சூழ்நிலை காரணமாக திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்த நாயகன் அபிஷன் ஜீவிந்த் மேட்ரிமோனி மூலம் ஒரு பெண்ணை ரெஸ்டாரண்டில் பார்க்க செல்கிறார். அங்கு சென்று பார்க்கும் போது தேடி வந்த பெண் தனது பள்ளி தோழி அனஸ்வரா ராஜன் என தெரிய வருகிறது. தொடர்ந்து திருமணம் குறித்து அபிஷனும், அனஸ்வரா ராஜனும் பேசிக் கொண்டிருக்கும் போது அனஸ்வரா ராஜன் திருமணத்துக்கு அபிஷனிடம் ஒரு நிபந்தனை விதிக்கிறார்.

    திருச்சியில் இருவரும் ஒரே பள்ளியில் படித்த போது அபிஷனுக்கு- காவ்யா அனிலுடனும், அனஸ்வராவுக்கு வேறு ஒரு மாணவருடனும் ஒருதலைக் காதலாக மலர்ந்து காதல் கைகூடாமலேயே பள்ளி வாழ்க்கை முடிந்து விடுகிறது. தங்களது பழைய காதலனையும், காதலியையும் தேடி சென்று சந்திப்போம். அப்புறம் நம் திருமணத்தை பற்றி பேசலாம் என்று சொல்லி, இருவரும் முதல் காதலை தேடி செல்கிறார்கள்.

    இறுதியில் அபிஷன், அனஸ்வரா ராஜன் இருவரும் முதல் காதலர்களை சந்தித்தார்களா? இருவருக்கும் திருமணம் நடைபெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அபிஷன் ஜீவிந்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு இளம் இளைஞனின் குழப்பம், கோபம், பொறாமை, தவிப்பு ஆகியவற்றை மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார். முன்னாள் காதலி காவ்யா குழந்தையுடன் அபிஷனை சந்திக்கும் போது அபிஷன் அவரிடம் காதலை சொல்லும் போது ரசிக்க வைக்கிறது.

    நாயகியாக நடித்து இருக்கும் அனஸ்வரா ராஜன் அழகான முகபாவனைகளை வெளிப்படுத்தி இருக்கிறார். சின்ன சின்ன குறும்பு, சேட்டைகள், கோபம் என கண்களாலேயே அதிகம் பேசி ரசிக்க வைத்து இருக்கிறார்.

    பள்ளி வாழ்க்கையில் நடந்த முதல் காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மதன். உணர்வோடு மட்டுமின்றி கலகலப்போடும், ரசனையோடும் சொல்லி இருக்கிறார். பள்ளிப்பருவ காதலை இளம் தலைமுறையினரை மட்டுமின்றி அனைவரையும் பள்ளி பருவத்திற்கு அழைத்து செல்லும் விதமாக படத்தை கொடுத்து இருக்கிறார்.

    சான்ரோல்டன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். 'அவள் வருவாளா' பாடல் மீண்டும் திரையில் ஒலித்தது இனிமை. ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.   

    மாலைமலர் ரேட்டிங்: 3.5 / 5

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.
    • இந்தியா மற்றும் இலங்கையில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    மும்பை:

    டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளன.

    இந்திய அணி உலகக் கோப்பை தொடருக்காக தயார் நிலையில் உள்ளது. முன்னதாக, நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி அதை 4-1 என கைப்பற்றியது. உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 30 ரன்னில் வீழ்த்தியது.

    இதற்கிடையே, இந்திய அணியில்இடம் பிடித்திருந்த ஹர்ஷித் ராணா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், காயம் காரணமாக விலகிய ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக முகமது சிராஜ் அணியின் இடம்பிடித்துள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கல்லூரி பின்னணியில் அமைந்த கிரைம் – சஸ்பென்ஸ் திரில்லர் கதையை, பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.

    கல்லூரி காலத்தில் அடிதடி, போலீஸ் வழக்குகள் என பிரச்சனைகளில் சிக்கியிருந்த நாயகன் லெனின், கல்லூரி முடிந்த பிறகு அந்த வாழ்க்கையை முழுமையாக விட்டு விட்டு, தொழில் மற்றும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தனது பழைய கல்லூரியில் நடைபெறும் மாணவர் தலைவர் தேர்தல் காரணமாக மீண்டும் கல்லூரிக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.

    அடிதடியை தவிர்த்து அமைதியான முறையில் செயல்பட வேண்டும் என்ற முடிவுடன் கல்லூரிக்குள் வரும் லெனின், எதிர்பாராத விதமாக கல்லூரி வளாகத்திற்குள் ஒருவரை கொலை செய்து விடுகிறார். ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருப்பதால், இந்த கொலை குற்றம் அவரது எதிர்காலத்தை முற்றிலும் பாதிக்கும் என்பதால், அதிலிருந்து தப்பிக்க தனது காதலியின் உதவியுடன் ஒரு திட்டத்தை உருவாக்குகிறார். இதற்கிடையில், கொலை செய்யப்பட்டவரை தேடி போலீசும், அவரது ஆதரவாளர்களும் கல்லூரி வளாகத்திற்குள் நுழைகிறார்கள்.

    இறுதியில்  லெனின் தனது திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி தப்பித்தாரா? அவர் யாரை, எதற்காக கொலை செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக நடித்திருக்கும் லெனின், அறிமுக நடிகர் என்ற அடையாளம் தெரியாத அளவுக்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கல்லூரி மாணவர் காலகட்டமும், அதன் பிந்தைய வாழ்க்கையும் என இரண்டு விதமான மனநிலைகளை தோற்றத்திலும் நடிப்பிலும் வேறுபடுத்திக் காட்ட முயன்றிருப்பது திரையில் தெரிகிறது.

    நாயகியாக நடித்துள்ள அஸ்மின், தோற்றத்தில் பெரிதாக ஈர்க்காதபோதிலும், அளவான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்தை நேர்மையாக செய்திருக்கிறார். திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் அவரது கேரக்டர், இறுதியில் கவனம் ஈர்க்கிறது.

    காமெடி கலந்த வில்லத்தனத்துடன் திரையில் தோன்றும் ஆர்.வி.உதயகுமார், தனது நடிப்பால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். முனீஷ்காந்த், அனுமோகன் ஆகியோர் குறைந்த காட்சிகளில் வந்தாலும், தங்களுக்கான இடத்தை சரியாகப் பிடித்துள்ளனர்.

    கல்லூரி பின்னணியில் அமைந்த கிரைம் – சஸ்பென்ஸ் திரில்லர் கதையை, பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார் பொன். பார்த்திபன். குறிப்பிட்ட பட்ஜெட்டில், புதுமுகங்களை வைத்து எந்த இடத்திலும் தொய்வின்றி படத்தை நகர்த்தியுள்ள இயக்குநர் கே.ஆர். வினோத், இரண்டாம் பாதியை எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக கையாண்டிருக்கிறார்.

    ஒரே கல்லூரி வளாகத்தை மையமாகக் கொண்டு கதை நகர்ந்தாலும், வெவ்வேறு கேமரா கோணங்கள் மூலம் காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன். கைலாஷ் மேனின் இசை, பாடல்களாகவும் பின்னணி இசையாகவும் கதைக்கு துணையாக பயணிக்கிறது. 

    மாலைமலர் ரேட்டிங்: 2.5 / 5

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெலுங்கானாவை சேர்ந்த பிரபாகரின் தலைக்கு ரூ.25 லட்சம் விலை வைப்பட்டிருந்தது.
    • இந்தத் தாக்குதலின் போது பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.

    மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூத்த நக்சல் தலைவர் பிரபாகர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதற்குப் பதிலடி கொடுத்த கமாண்டோக்கள் நடத்திய தாக்குதலில் 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்டவர்களில் நக்சலைட் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான பிரபாகர் என்பவரும் அடங்குவார். தெலுங்கானாவை சேர்ந்த பிரபாகரின் தலைக்கு ரூ.25 லட்சம் விலை வைப்பட்டிருந்தது.

    கொல்லப்பட்டவர்களிடம் இருந்து ஏகே-47 ரகத் துப்பாக்கிகள் உள்ளிட்ட  ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்தத் தாக்குதலின் போது பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆறாவது 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை பட்டம், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தைப் பறைசாற்றும் ஒரு பெருமிதமான அடையாளம்.
    • இந்திய அணியில் தமிழ்நாடு வீரர்கள் ஆர்.எஸ். அம்ப்ரீஷ் , தீபேஷ் தேவேந்திரன் இடம் பெற்றுள்ளனர்

    U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இதன்மூலம் ஆறாவது முறையாக U19 உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியுள்ளது.

    இந்திய அணியின் இந்த வெற்றிக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

    ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

    "அபாரமான உலகக் கோப்பை வெற்றியைப் பெற்றுள்ள நமது 19 வயதுக்குட்பட்டோர் ஆடவர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!உங்களுடைய நிதானம், அச்சமின்மை மற்றும் உறுதிப்பாடு ஆகியவையே இன்றைய இந்தியாவின் ஜென்-இசட் (Gen Z) தலைமுறையை வரையறுக்கிறது. இந்த ஆறாவது 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை பட்டம், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தைப் பறைசாற்றும் ஒரு பெருமிதமான அடையாளம். சிறப்பாக விளையாடினீர்கள், சாம்பியன்களே!" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், 

    "ஐசிசி ஆடவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று, நாட்டிற்கு மற்றொரு பெருமைமிக்க தருணத்தை வழங்கிய நமது இந்திய அணிக்கு வாழ்த்துகள். இது திறமை மற்றும் மனவுறுதியின் உண்மையான வெற்றி. இறுதிப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் பிரமிக்க வைக்கும் ஆட்டமும், இந்தத் தொடர் முழுவதும் அவரது அசாதாரணமான செயல்பாடும் வரும் ஆண்டுகளில் பலராலும் நினைவு கூரப்படும். இந்த இளம் வீரர்கள் எதிர்காலத்தில் இந்திய தேசிய அணிக்காக விளையாடும்போது, இப்போது காட்டும் அதே திறமையுடன் நாட்டுக்காகப் பல வெற்றிகளைப் பெற்றுத் தர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த யு19 உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழ்நாடு வீரர்கள் ஆர்.எஸ். அம்ப்ரீஷ் , தீபேஷ் தேவேந்திரன் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


    ×