என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மொத்தம் 4 மணி நேரம் 31 நிமிடங்கள் கிரகணம் நிகழ உள்ளது.
    • மோதிரம் அல்லது வளையம் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும்.

    பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவும் வரும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று(செவ்வாய்க்கிழமை) நிகழ்கிறது.

    இன்று மதியம் 3:26 மணிக்கு கிரகணம் தொடங்குகிறது. மாலை 5:41 மணிக்கு கிரகணம் அதன் உச்சத்தை எட்டும். இரவு 7:57 மணிக்கு நிறைவடையும். மொத்தம் 4 மணி நேரம் 31 நிமிடங்கள் கிரகணம் நிகழ உள்ளது.

    நிலவு, சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சரியாகப் பொருந்தும்போது, சூரியனின் 96.20% பகுதியை மறைக்கும். இதனால் சூரியன் ஒரு பிரகாசமான மோதிரம் அல்லது வளையம் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும்.

    இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. முழு சூரிய கிரகணம் அண்டார்டிகாவிற்கு மேலே தெரியும். அர்ஜென்டினா, சிலி, தென்னாப்பிரிக்கா, அண்டார்டிகா ஆகிய நாடுகளில் இதனை பகுதி அளவு பார்க்க முடியும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்கிறார்.
    • யூனுஸ் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

    வங்கதேசத்தில் 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

    ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த 18 மாதங்கள் கழித்து கடந்த பிப்ரவரி 12 அன்று அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது.

    மொத்தம் உள்ள 300 இடங்களில் 212 இடங்களைக் கைப்பற்றி தாரிக் ரஹ்மான் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) கூட்டணி வெற்றி அமோக வெற்றி பெற்றது.

     BNP சார்பில் போட்டியிட்ட நான்கு சிறுபான்மை சமூக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் கோயேஷ்வர் சந்திர ராய் மற்றும் நிதாய் ராய் சவுத்ரி ஆகிய இரண்டு இந்துத் தலைவர்களும் அடங்குவர். 

    இந்நிலையில் வங்கதேசத்தில் நிலவி வந்த இடைக்கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்காலத் தலைவர் முஹம்மது யூனுஸ் தனது பதவியை நேற்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.

    தொடர்ந்து தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக இன்று பொறுப்பேற்கிறார். முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் கடந்த 17 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தார்.

    கடந்த டிசம்பரில் தாய் கலீதாவின் மரணத்தின் பின் அவர் நாடு திரும்பினார். கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற 3 மாதத்தில் மாபெரும் வெற்றி பெற்று வங்கதேச பிரதமர் ஆகிறார். சுமார் 32 முதல் 42 பேரை கொண்ட அமைச்சரவையை தாரிக் ரஹ்மான் அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இன்று அவரின் பதவியேற்பு விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்கிறார்.

    இதற்கிடையே தொலைக்காட்சியில் உரையாற்றிய யூனுஸ், "இன்று இடைக்கால அரசு விலகுகிறது. ஆனால், நாம் தொடங்கியுள்ள ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுவன் 10-ஆம் வகுப்பு மாணவன் என்பதாலும், தேர்வுகள் இருப்பதாலும் ஜாமீன் வழங்கியது.
    • கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனால் என் மகன் கொல்லப்பட்டான்.

    டெல்லியின் துவாரகாவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி அருகே கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சஹில் தனேஷ்ரா என்ற 23 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, பிப்ரவரி 3 காலை 11:57 மணியளவில் அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார், எதிரே வந்த சஹிலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டாக்ஸி மீதும் மோதியுள்ளது. சஹில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டாக்ஸி ஓட்டுநரும் காயமடைந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை. காரில் அந்த சிறுவனுடன் அவனது சகோதரியும் இருந்துள்ளார். அவர்கள் காரை அதிவேகமாக ஓட்டி ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் சிறுவன் 10-ஆம் வகுப்பு மாணவன் என்பதாலும், அவனுக்கு தேர்வுகள் இருப்பதாலும் நீதிமன்றத்திம் அவனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

    இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த சஹில் தனேஷ்ராவின் தாய் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், தாயின் குமுறல்: "23 ஆண்டுகளாக கணவர் இன்றி தனியாக கஷ்டப்பட்டு என் மகனை வளர்த்தேன். பிப்ரவரி 3 அன்று, அதிவேகமாக கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனால் என் மகன் கொல்லப்பட்டான். நான் ஒரு ஆதரவற்ற தாய், எனக்கு நீதி வேண்டும்" என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

    இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமணத்திற்கு முன் யாரையும் முழுமையாக நம்பிவிடக் கூடாது.
    • ஒருவேளை நாங்கள் பழமைவாதிகளாக இருக்கலாம்.

    திருமணம் செய்வதாகப் பொய் வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவரால் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது.

    விசாரணையில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளது.

    நீதிபதி நாகரத்னா கூறியதாவது, திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் முற்றிலும் அந்நியர்களே.

    அவர்களது உறவு எவ்வளவு நெருக்கமானதாக இருந்தாலும், திருமணத்திற்கு முன்பே அவர்கள் எப்படி உடலுறவில் ஈடுபட முடிகிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    ஒருவேளை நாங்கள் பழமைவாதிகளாக இருக்கலாம், ஆனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமணத்திற்கு முன் யாரையும் முழுமையாக நம்பிவிடக் கூடாது.

    உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் அதன் விளைவுகளைச் சிந்திப்பது அவசியம்" என்று கூறினார்.

    மேலும், புகாரளித்த பெண், குற்றம் சாட்டப்பட்டவருடன் சம்மதத்துடன் நடந்த உறவு வைத்ததாக தெரிவதாகக் குறிப்பிட்டனர்.

    எனவே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடு வழங்கி வழக்கை முடிக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு இரு தரப்பிற்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எங்களின் இந்தப் புதிய பயணத்திற்கு உங்கள் ஆசி வேண்டும்.

    தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நேஷனல் கிரஷ் என்று வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியது. 

    இந்நிலையில் இருவரின் திருமண பத்திரிகை புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மை தெரியாவிட்டாலும், பலரும் இதை வைரல் செய்து வருகின்றனர்.

    அந்தப் பத்திரிகையின்படி, இவர்களது திருமணம் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    "எங்கள் குடும்பத்தினரின் ஆசியுடன் பிப்ரவரி 26 அன்று ஒரு சிறிய விழாவில் ராஷ்மிகாவும் நானும் இணைகிறோம். எங்களின் இந்தப் புதிய பயணத்திற்கு உங்கள் ஆசி வேண்டும்" என்று அதில் எழுதப்பட்டுள்ளது.

    குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் எளிமையாக நடைபெறும் என்றும், அதைத் தொடர்ந்து மார்ச் 4-ஆம் தேதி ஐதராபாத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, நீண்ட நாட்களாகக் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உதவியுடன் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றனர்.
    • FBI வசம் ஒப்படைக்கவும் அந்த மின்னஞ்சலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.

    கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    எப்ஸ்டீன் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி வைத்திருந்தார். அவை எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

    நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    மேலும் வெளியிடப்பட்ட ஆவணங்களில் எப்ஸ்டீன் வழக்கில் அமெரிக்க அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன.

    அந்த வகையில் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு இந்திய பெண்(அல்லது சிறுமி) இருந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் திட்டம் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. எனவே அந்த திட்டத்தின் கீழ் இந்திய பெண் ஒருவருக்கு நிதியுதவியும், மனநல ஆலோசனையும் அளிக்க அவரை அமெரிக்க அதிகாரிகள் தேடியுள்ளனர்.

    2020 ஜனவரி 13-ஆம் தேதியிட்ட மின்னஞ்சல் ஒன்றில், இந்தியாவில் இருக்கும் இந்தப் பெண்ணைக் கண்டறியும் அமெரிக்க அதிகாரிகளின் முயற்சிகள் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அவரது முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் கிடைத்தால், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உதவியுடன் அவரைத் தொடர்பு கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.

    இந்த மின்னஞ்சலில், அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முக்கியத் தகவல்கள் கறுப்பு மையால் மறைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆவணங்களை FBI வசம் ஒப்படைக்கவும் அந்த மின்னஞ்சலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு நிதி மூலம் அந்தப் பெண்ணிற்கு உதவி வழங்க அவரைத் தேடி வந்ததாகத் தெரியவந்துள்ளது.

    2019 ஆகஸ்ட் மாதம் எப்ஸ்டீன் சிறையில் மரணமடைந்த சில மாதங்களுக்குப் பிறகு இந்தத் தகவல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

    இந்தத் தகவல் எப்ஸ்டீனின் பாலியல் சுரண்டல் நெட்வொர்க் இந்தியா வரை பரவியிருந்தது என்பதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏராளமான மக்கள் பன் வாங்கி சாப்பிட்டு, அவருக்குத் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
    • அமைச்சர் நாரா லோகேஷ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன்

    தெலங்கானாவின் புகழ்பெற்ற மேதாரம் ஜாத்ரா திருவிழாவில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியரான ஷேக் ஷா வாலி, சாலையோரம் கடை அமைத்து 'கோவா பன்' விற்று வந்துள்ளார்

    அங்கு வந்த சில யூடியூபர்கள் அவரிடம், அந்த பன் பாதுகாப்பானதுதான் என்பதை நிரூபிக்க வாலியை கோவா பன்-ஐ சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். அவரின் அடையாளத்தை சரிபார்க்க ஆதார் அட்டையைக் கேட்டு வற்புறுத்திய அவர்கள், அவரின் வியாபாரத்தை 'உணவு ஜிகாத்' என குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ கண்டனத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஏராளமான மக்கள் வாலியின் கடைக்குச் சென்று பன் வாங்கி சாப்பிட்டு, அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தச் சம்பவத்தைக் கண்டித்த ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், "அன்புச் சகோதரர் வாலி அவர்களே, உங்களுக்கு நேர்ந்த இந்த கசப்பான அனுபவத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன். சகோதரத்துவத்திற்கும் பரஸ்பர மரியாதைக்கும் பெயர் போன நமது தெலுங்கு சமூகத்தில் இத்தகைய பிரிவினைவாதப் போக்கிற்கு இடமில்லை.

    நான் விரைவில் உங்களைச் சந்தித்து, உங்கள் கைகளால் அந்தப் புகழ்பெற்ற 'கோவா பன்'-ஐ ருசிப்பேன். நாம் அனைவரும் உங்கள் பக்கம் நிற்கிறோம்." என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாரா லோகேஷ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மயக்க நிலையில் இருந்த பெண்கள் குப்பைத் தொட்டிக்கு அருகிலும், திறந்தவெளி தரையிலும், கடும் வெயிலிலும் படுக்க வைக்கப்பட்டனர்.
    • குடிக்கத் தண்ணீரும் இல்லை. அழுக்கான அந்த இடத்தில் தொற்று ஏற்படும் என்று தெரிந்தே எங்களை விட்டுவிட்டார்கள்.

    மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள பாக் பகுதியில் உள்ள சமூக நல மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு திட்டத்தின் கீழ் குடும்பக் கட்டுப்பாட்டு முகாம் நடைபெற்றது.

    சுற்றுவட்டாரப் பகுதிகளை சுமார் 180 பழங்குடியினப் பெண்கள் இந்த முகாமிற்கு வந்திருந்தனர்.

    30 படுக்கைகள் மட்டுமே கொண்ட அங்கு, வந்திருத்தவர்களில் 175 பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    முகாம் மருத்துவரான ராகேஷ் தாவர், மதியம் 3 மணிக்கு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

    அவர் ஒரு அறுவை சிகிச்சையை வெறும் 2 முதல் 5 நிமிடங்களுக்குள் முடித்துள்ளார். சில மணி நேரங்களிலேயே 175 அறுவை சிகிச்சைகளை அவர் செய்துள்ளார்.

    அறுவை சிகிச்சை முடிந்த பின், மயக்க நிலையில் இருந்த பெண்கள் குப்பைத் தொட்டிக்கு அருகிலும், திறந்தவெளி தரையிலும், கடும் வெயிலிலும் படுக்க வைக்கப்பட்டனர்.

    பெண்களுக்குக் குடிநீர், உணவு, நிழலுக்குக் கூடாரம் என எதுவுமே வழங்கப்படவில்லை. நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் இருந்தும், சுகாதாரமற்ற முறையில் தரையில் கிடத்தப்பட்டுள்ளனர்.

    "எங்களை காலை 8 மணிக்கே வரச் சொன்னார்கள். ஆனால், நாள் முழுவதும் எங்களுக்கு உணவோ அல்லது தண்ணீரோ கூட வழங்கப்படவில்லை" என்று பாதிக்கப்பட்ட ஒரு பெண் தெரிவித்தார்.

    மற்றொரு பெண், "மயக்க மருந்து கொடுத்ததால் உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை முடிந்ததும் என்னை வெளியே தூக்கி வந்து வெயிலில் தரையில் கிடத்தினார்கள்.

    அங்கு படுக்கைகள் இல்லை, குடிக்கத் தண்ணீரும் இல்லை. அழுக்கான அந்த இடத்தில் தொற்று ஏற்படும் என்று தெரிந்தே எங்களை விட்டுவிட்டார்கள்." என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    இந்தச் சம்பவம் குறித்து செய்தி பரவியதை அடுத்து, சுகாதாரத் துறை, சம்பந்தப்பட்ட பி.எம்.ஓவை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தி காட்பாதர்', 'அபோகாலிப்ஸ் நவ்' உள்ளிட்ட பல உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களில் நடித்தார்.

    மூத்த ஹாலிவுட் நடிகர்களில் ஒருவரான ராபர்ட் டுவால் மறைந்த செய்தி சினிமா உலகை சோகத்தை ஆழ்த்தி உள்ளது.

    95 வயதான ராபர்ட் டுவால் நேற்று தனது வீட்டில் காலமானார்.

    அவரது மனைவி லூசியானா டுவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது அன்புக்குரிய கணவர், சிறந்த நண்பர் மற்றும் நம் காலத்தின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவருக்கு நாங்கள் விடை கொடுத்தோம்.

    பாப் வீட்டில் அன்பானவர்களால் சூழப்பட்ட நிலையில் அமைதியாக மறைந்தார். உலகிற்கு அவர் ஒரு ஆஸ்கார் விருது பெற்ற நடிகர், இயக்குனர் மற்றும் கதைசொல்லி. ஆனால் எனக்கு அவர் எல்லாமும் ஆனவர்" என்று தெரிவித்துள்ளார்.

    'தி காட்பாதர்', 'அபோகாலிப்ஸ் நவ்' உள்ளிட்ட பல உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. 

    1983-ஆம் ஆண்டு வெளியான 'டெண்டர் மெர்சீஸ்' திரைப்படத்தில் நாட்டுப்புறப் பாடகர் வேடத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். மேலும் 'தி அப்போஸ்தல்' உள்ளிட்ட சில படங்களை இயக்கியும் உள்ளார். 

    ராபர்ட் டுவாலின் மறைவு சர்வதேசத் திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 42 வயதான மத்திய அரசு ஊழியர் உடன் பணிபுரியும் 54 வயது பெண்ணை காதலித்தார்.
    • அப்பெண்ணும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.

    மத்தியப் பிரதேசத்தை சேர்த்த 42 வயதான மத்திய அரசு ஊழியர் ஒருவர் கடந்த 23 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் திருமண பந்தத்தில் இருந்து வந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவர் தன்னுடன் பணிபுரியும் 54 வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், இதனால் குடும்பத்தை அவர் கண்டுகொள்வதில்லை என்றும் மனைவி போபால் குடும்ப நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார்.  

    நீதிமன்றம் மூன்று பேரையும் அழைத்து ஆலோசனைகளை வழங்கியது. ஆனால், கணவர் தனது காதலியுடன்தான் வாழ்வேன் என்று கூறிவிட்டார். எனவே நீதிமன்றம் தம்பதிக்கு விவாகரத்து அளித்தது.

    ஆனால் மனைவி தனது கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு பதிலாக தனது கணவரை விட்டுக்கொடுக்க ரூ.1.5 கோடி இழப்பீடு வேண்டும் என்று அப்பெண்ணிடம் கோரினார். அப்பெண்ணும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.

    கணவன் மனைவி மற்றும் காதலிக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு வீடு, மற்றும் ரூ.27 லட்சம் என மொத்தம் ரூ.1.5 கோடியை காதலி வழங்க உள்ளார்.

    ×