என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 42 வயதான மத்திய அரசு ஊழியர் உடன் பணிபுரியும் 54 வயது பெண்ணை காதலித்தார்.
    • அப்பெண்ணும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.

    மத்தியப் பிரதேசத்தை சேர்த்த 42 வயதான மத்திய அரசு ஊழியர் ஒருவர் கடந்த 23 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் திருமண பந்தத்தில் இருந்து வந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவர் தன்னுடன் பணிபுரியும் 54 வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், இதனால் குடும்பத்தை அவர் கண்டுகொள்வதில்லை என்றும் மனைவி போபால் குடும்ப நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார்.  

    நீதிமன்றம் மூன்று பேரையும் அழைத்து ஆலோசனைகளை வழங்கியது. ஆனால், கணவர் தனது காதலியுடன்தான் வாழ்வேன் என்று கூறிவிட்டார். எனவே நீதிமன்றம் தம்பதிக்கு விவாகரத்து அளித்தது.

    ஆனால் மனைவி தனது கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு பதிலாக தனது கணவரை விட்டுக்கொடுக்க ரூ.1.5 கோடி இழப்பீடு வேண்டும் என்று அப்பெண்ணிடம் கோரினார். அப்பெண்ணும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.

    கணவன் மனைவி மற்றும் காதலிக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு வீடு, மற்றும் ரூ.27 லட்சம் என மொத்தம் ரூ.1.5 கோடியை காதலி வழங்க உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏழு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    • கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்க உத்தரவிட்டது.

    மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ. 400 கோடி கொள்ளை சமைப்பவத்தில் அதிர்ச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    சந்தீப் பாட்டில் என்ற லாரி ஓட்டுநர், கடந்த அக்டோபர் 22 அன்று கர்நாடகாவிலிருந்து மகாராஷ்டிராவிற்கு செல்லாத 2000 ரூபாய் நோட்டுகளாக ரூ.400 கோடியைக் கொண்டு சென்றபோது, தன்னை ஏழு பேர் கொண்ட கும்பல் தாக்கி, பணத்தைக் கொள்ளையடித்ததாக போலீசில் புகார் அளித்தார்.

    சந்தீப் பாட்டில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மகாராஷ்டிர போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ஏழு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சந்தீப் குறிப்பிட்ட பயண பாதை, சம்பவ நடந்ததாகச் சொல்லப்பட்ட நேரம், அவரது செல்போன் அழைப்பு விவரங்கள் ஆகியவற்றில் பல முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    எதுவுமே அவர் சொன்ன விவரங்களுடன் ஒத்துப்போகவில்லை. விரிவான விசாரணைக்கு பிறகு, அப்படி ஒரு கொள்ளைச் சம்பவமே நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    நேற்று இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிராவின் இகத்புரி நீதிமன்றம், கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்க உத்தரவிட்டது.

    மேலும், தவறான தகவலைக் கொடுத்து போலீசாரையும் நீதிமன்றத்தையும் திசைதிருப்பிய ஓட்டுநர் சந்தீப் பாட்டில் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. சந்தீப் பொய் புகார் அளிக்க என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆள் கடத்தலை காமெடியான பாணியில் நலன் குமாரசாமி அமைத்த விதம் கல்ட் கிளாசிக்.

    நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான 'சூது கவ்வும்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    ஆள் கடத்தலை காமெடியான பாணியில் நலன் குமாரசாமி அமைத்த விதம், டார்க் காமெடி அம்சங்கள் நிறைந்த காட்சிகள் என படம் கல்ட் கிளாசிக் ஆக மாறியது.

    இப்படத்தின் இரண்டாம் பாகம் 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களுக்கும்' எம்.எஸ். அர்ஜூன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியானது.

    இந்நிலையில் அணமைக் காலமாக கல்ட் கிளாசிக் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரும் வரிசையில் சூது கவ்வும் முதல் பாகம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

    வரும் 20 ஆம் தேதி "சூது கவ்வும்" ரீ-ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான டிக்கெட் கட்டணம் ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக காதலர் தினத்தை முன்னிட்டு, காதலர் தினம், மௌனம் பேசியதே, மின்னலே, உயிருள்ளவரை உஷா ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அப்துல் சத்தார் மாட்டுக்கறி உண்பவர்.
    • அதனால்தான் நாங்கள் கோமியம் தெளித்து சுத்திகரித்தோம்.

    மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் சில்லோட் பகுதியில் ரஹிமாபாத் கிராமம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவசேனாவை சேர்ந்த சில்லோட் தொகுதியின் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான அப்துல் சத்தார் ரஹிமாபாத் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

    அப்துல் சத்தாரின் வருகைக்கு பாஜக மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அவர் சென்ற பிறகு, கோவிலின் புனிதத்தைக் காப்பதாகக் கூறி அவர்கள் கோவில் வளாகம் முழுவதும் கோமியம் தெளித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சில்லோட் நகர பாஜக தலைவர் மனோஜ் மொரல்லு இது குறித்துக் கூறுகையில், "அப்துல் சத்தார் மாட்டுக்கறி உண்பவர் என்பதால், அவர் கோவிலுக்குள் வந்தது அதன் புனிதத்தைக் கெடுத்துவிட்டது.

    அவர் முஸ்லிம்களையும் இந்துக்களையும் ஏமாற்றி வருகிறார். சமீபத்தில் ஹஜ் பயணம் சென்று வந்தவர், இப்போது கோவிலுக்கு வந்து நாடகமாடுகிறார். அதனால்தான் நாங்கள் கோமியம் தெளித்து சுத்திகரித்தோம்." என்று கூறினார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன.
    • தகவல் அறிந்து ஹெலிகாட்பர்களில் மீட்புப்படை விரைந்தது.

    சுவிட்சர்லாந்தின் வலைஸ் மாகாணத்தில் கோபென்ஸ்டைன் அருகே இன்று காலை பனிச்சரிவு காரணமாக பயணிகள் ரெயில் ஒன்று தடம் புரண்டது.

    பிரிக் நகரிலிருந்து புறப்பட்ட ரெயில், ஸ்டாக்ராபன் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மலை உச்சியிலிருந்து சரிந்து விழுந்த பனியில் சிக்கியது.

    இதில் ரெயிலின் பல பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன. விபத்தின்போது ரெயிலில் சுமார் 80 பயணிகள் இருந்தனர்.

    தகவல் அறிந்து ஹெலிகாட்பர்களில் வந்த மீட்புப்படையினர் மோசமான வானிலைக்கு மத்தியில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

    ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காயமடைந்த 5 பேருக்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பதும் நிசாங்கா சதம் விளாசினார்.
    • குசால் மெண்டிஸ் அரைசதம் அடித்தார்.

    டி20 உலகக் கோப்பையில் இலங்கை- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி கண்டியில் நடைபெற்றது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது மிட்செல் மார்ஷ் (54), டிராவிஸ் ஹெட் (56) ஆகியோரின் அரைசதத்தால் ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. பதும் நிஷாங்கா, குசால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். குசால் பெரேரா 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து நிஷாங்கா உடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிசாங்கா 32 பந்தில் அரைசதமும், குசால் மெண்டிஸ் 35 பந்தில் அரைசதமும் அடித்தனர்.

    குசால் மெண்டிஸ் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து பவன் ரத்னாயகே களம் இறங்கினார். பதும் நிசாங்கா அரைசதத்தை வெற்றிகரமாக சதமாக மாற்றினார். அவர் 52 பந்தில் சதம் விளாசினார். இந்த டி20 உலகக் கோப்பையில் முதல் சதம் இதுவாகும். இவரது சதத்தால் இலங்கை 18 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நிசாங்கா 100 ரன்களுடனும், ரத்னயகே 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் இலங்கை 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு மிகவும் மங்கியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநாட்டில் உள்ள கண்காட்சியையும் மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    • அதிபர் மேக்ரான், சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

    டெல்லி பாரத் மண்டபத்தில் ஐந்து நாள் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடு இன்று தொடங்கியது. அனைவரின் நலன், அனைவரின் மகிழ்ச்சி என்பது இந்த மாநாட்டின் கருப்பொருள் ஆகும்.

    சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்அப் நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இதில் பங்கேற்கும்.

    விழாவை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைத்தார். மாநாட்டில் உள்ள கண்காட்சியையும் மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    கண்காட்சியில் ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 10க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. இதில் ஏஐ குறித்த நேரடி செயல் விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த கண்காட்சி மற்றும் உச்சி மாநாட்டிற்காக 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 10 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த கண்காட்சியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

    இந்த மாநாட்டில் வரும் 19ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் உள்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்கின்றனர்.   

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இருவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
    • நயினார் நாகேந்திரன் உடன் மத்திய அமைச்சர் எல். முருகனும் உடன் சென்றிருந்தார்.

    தமிழக சட்டசபை தேர்தலுக்காக பாஜக- அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பா.ம.க. உள்பட பல கட்சிகள் இடம் பிடித்துள்ளன.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்திற்கு சென்று தமிழக காங்கிரஸ் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அமைச்சர் எல். முருகனும் உடன் சென்றிருந்தார்.

    இந்த சந்திப்பு குறித்த கேள்விக்கு "எடப்பாடி பழனிசாமியுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு" என வேறேதும் கூறாமல் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    அடுத்த மாதம் தொடக்கத்தில் பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகம் வருகிறார். அதற்கு முன்பாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நிறைவு செய்ய பாஜக விரும்புவதாக தெரிகிறது. இதனால் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலியா 8.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 104 ரன்கள் குவித்தது.
    • கடைசி 3 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே அடித்தது.

    டி20 உலகக் கோப்பையில் இலங்கை- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி கண்டியில் நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மிட்செல் மார்ஷ் 27 பந்தில் 54 ரன்களும், டிராவிஸ் ஹெட் 29 பந்தில் 56 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.

    கேமரூன் கிரீன் (3), டிம் டேவிட் (6) ஏமாற்றம் அடைந்தனர். ஜோஷ் இங்லிஸ் 27 ரன்களும், மேக்ஸ்வெல் 22 ரன்களும் அடித்தனர்.

    ஆஸ்திரேலியா 17 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்திருந்தது. கடைசி 3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 13 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்துள்ளது.

    ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 8.2 ஓவரில் 104 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் விக்கெட்டுகளை மளமளவென இழந்து 200 ரன்களை தாண்ட முடியவில்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் தோற்றது.
    • அதன்பின் தொடர்ந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது- எம்.ஏ. பேபி

    கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான LDF-க்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மேயர் பதவியை பாஜக கைப்பற்றியுள்ளது. இது வரவிருக்கின்ற சட்டசபை தேர்தலிலும் தொடரும் என பாஜக சொல்கிறது.

    இந்த நிலையில் இந்த தோல்வி தற்காலிகமானது. பினராயி விஜயன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எம்.ஏ. பேபி கூறியதாவது:-

    கடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. ஆனால், அதன்பின் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆகவே, எங்களுடைய உள்ளாட்சி தேர்தல் பின்னடைவு இதேபோல் சென்று கொண்டிருக்கிறது.

    டெல்லியில் இருந்து வந்த காங்கிரஸ் தலைவர் (மணிசங்கர் அய்யர்) பினராயி விஜயன் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று கூறியுள்ளார். பொதுவாக மக்களின் நினைப்பதை அவர் கூறியுள்ளார்.

    இவ்வாறு எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.

    ×