என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 20 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார்.
    • அவர் பவர் பிளே கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பைத் தொடரின் 18வது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில் இந்தியா, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடியது. சஞ்சு சாம்சன் 8 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து இஷான் கிஷனுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷன் பவர் பிளேவின் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். அவர் 20 பந்தில் அரைசதம் விளாசி அசத்தினார். அதனால் இந்திய அணி 6.5 ஓவரில் 100 ரன்களைக் கடந்து சாதனை படைத்தது.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 100 ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 7 ஓவரில் 100 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கேரளாவில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
    • அதற்கான ஆயத்த வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

    புதுடெல்லி:

    சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை முதல் முறையாக பா.ஜ.க. கைப்பற்றி அசத்தியது.

    45 ஆண்டாக இடதுசாரிகள் கட்டுப்பாட்டில் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சி முதல் முறையாக பா.ஜ.க. வசமாகியது.

    இதற்கிடையே, கேரளாவில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், கேரள சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரக் குழு மற்றும் அறிக்கைக் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பிரசாரக் குழுவிற்கு ரமேஷ் சென்னிதலா தலைவராகவும், சசி தரூர் இணைத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தேர்தல் அறிக்கை குழுவையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த ஜனநாயகப் போரில் தமிழ்நாடு தலைகுனியாது.
    • தமிழ்நாடு வெல்லட்டும்! வெல்வோம் ஒன்றாக என தெரிவித்தார்.

    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததைக் கண்டித்து சென்னையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.

    இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    பட்ஜெட்டில் "ஜீரோ" கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா?

    தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மட்டுமே எண்ணமாகக் கொண்டு செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திரண்டு தமிழ்நாட்டு மக்களின் குரலாகக் கேள்வி கேட்டுள்ளது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!

    தமிழ்நாட்டுக்கான நிதிகளை மறுத்து அநீதியை இழைக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு "ஜீரோ"-வைத் திருப்பியளிப்போம்.

    தமிழ்நாடு vs தேசிய ஜனநாயகக் கூட்டணி எனும் இந்த ஜனநாயகப் போரில் தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு வெல்லட்டும்! வெல்வோம் ஒன்றாக! என பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 209 ரன்கள் குவித்தது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 18-வது லீக் போட்டியில் இந்தியா, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 24 பந்தில் 61 ரன்கள் குவித்தார். பாண்ட்யா 28 பந்தில் 52 ரன்கள் குவித்தார்.

    நமீபியாவின் ஜெர்ஹார்டு எராமஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா களமிறங்கியது. ஸ்டீன் கேம்ப் 29 ரன்னும், ஜேன் பிரிலிங்க் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், நமீபியா 18.2 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், பாண்ட்யா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?
    • மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது அவரது பாரம்பரியத்தை மறைக்கும் செயல்

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை 'விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் - கிராமப்புறம்' என்று மத்திய அரசு மாற்றியது. இது சுருக்கமாக விபி-ஜி ராம்ஜி என அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இத்திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். காந்தியின் பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று இத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போதுவரை மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது அவரது பாரம்பரியத்தை மறைக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.  இந்நிலையில் காந்தியாக இருந்தால் என்ன, ராமராக இருந்தால் என்ன பெயரா முக்கியம், வேலைதான் முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.

    விழுப்புரத்தில் அதிமுக நிர்வாகிகளிடையே பேசிய அவர், 

    "திமுக அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றிவிட்டது எனக்கூறி வருகிறது. வேலையை நிறுத்திவிட்டார்கள் எனக்கூறுகிறார்கள். என்ன பெயராக இருந்தால் என்ன? ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? எங்களுக்கு என்ன? எங்களுக்கு சோறு கிடைத்தால் போதும். காந்தி பெயரை வைத்தால் என்ன? ராமர் பெயரை வைத்தால் என்ன? திட்டம்தான் முக்கியம். பெயரில் என்ன இருக்கிறது?

    காந்திமேல் ரொம்ப பாசம். இந்திரா காந்தியை கல்லால் அடித்தார்கள். ஆனால் காந்திமேல் பாசம் வந்துள்ளது திமுகவுக்கு. எங்களுக்கு தேவை வேலை". எனப் பேசியுள்ளார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 122 மீட்டர் உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை ஜாஸ் பட்லர் பிடித்துள்ளார்.
    • இந்த சாதனை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் ஜாஸ் பட்லர் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    ட்ரோன் மூலம் 122 மீட்டர் உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை பிடித்து ஜாஸ் பட்லர் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த்துள்ளார்.

    கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் Highest Cricket Catch பிரிவில் இந்த சாதனை பதிவாகியுள்ளது. இந்த சாதனை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு வீடு கட்டுவதற்குத் தலா ரூ. 3.50 லட்சம் நிதி உதவியைத் தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
    • "குடிசைகள் இல்லாத மாநிலமாக" மாற்றுவதற்காகத் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட திட்டம்

    கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    குடிசை மற்றும் சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாதவர்கள், ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தகுதியுடைய பயனாளிகளுக்கு, 360 சதுர அடி நிலம் இலவசமாக வழங்கப்பட்டு, ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டித்தரப்படும்.

    இதுவரை இத்திட்டத்தின்கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கலைஞர் கனவு இல்லம் திட்டம், 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை "குடிசைகள் இல்லாத மாநிலமாக" மாற்றுவதற்காக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. 2030-க்குள் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பழைய வீடியோவின் ஒரு பகுதி மட்டும் வெட்டப்பட்டு மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.
    • அன்பு என்ற வார்த்தையை நீங்கள் வேறுவிதமாக எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப்,

    "மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் என்னை நேசிக்கிறார்... அன்பு என்ற வார்த்தையை நீங்கள் வேறுவிதமாக எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. அவரது அரசியல் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை" எனப் பேசியிருந்தார். அதாவது காதல் என்ற வார்த்தையை அரசியல் ரீதியாகத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக நகைச்சுவையாக, "அவரது அரசியல் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை" என்று விளக்கம் அளித்தார்.

    கடந்தாண்டு ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பான வர்த்தகப் பதற்றங்கள் நிலவியபோது ட்ரம்ப் இந்தக் கருத்தை முன்வைத்திருந்தார். தற்போது இந்தியா-அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், பழைய வீடியோவின் ஒரு பகுதி மட்டும் வெட்டப்பட்டு மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை... இருப்பினும், அத்தகைய வீடியோ இருந்தால், அது உண்மையாக இருந்தாலும் சரி, பொய்யாக இருந்தாலும் சரி, நாங்கள் அதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கார் கண்ணாடி மூடப்பட்டிருந்தாலும் கூட, இந்த இசை காருக்குள் இருப்பவர்களுக்குத் தெளிவாகக் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • சாலையில் 'ரம்பிள் ஸ்டிரிப்ஸ்' பயன்படுத்தப்பட்டுள்ளது.

    மும்பையின் தர்மவீர் பகுதியில் இந்தியாவின் முதல் "மெலோடி சாலை" திறக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் முதல் இசை சாலை திறக்கப்பட்டுள்ளது. தர்மவீர் பகுதியில் உள்ள கடற்கரை சாலையில் அமர்சன்ஸ் கார்டன் முதல் பிரீச் கேண்டி வரையிலான பகுதியில் வாகனங்கள் 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் செல்லும்போது, ஏ.ஆர்.ரகுமானின் புகழ்பெற்ற "ஜெய் ஹோ" பாடல் தானாகவே ஒலிக்கும் வகையில் சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மும்பை மாநகராட்சிக்குட்பட்ட இந்த சாலையை நேற்று முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தனர். ஹங்கேரி நாட்டு நிபுணர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், சாலையை இசைக்கருவிப்போல மாற்றியுள்ளது.

    எவ்வாறு சாலையில் ஒலி எழும்பும்?

    சாலையில் மின்னணு ஸ்பீக்கர்களுக்குப் பதிலாக 'ரம்பிள் ஸ்டிரிப்ஸ்' பயன்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் மணிக்கு 70–80 கி.மீ. என்ற வேகத்தில் இந்தப் பள்ளங்களின் மீது உருண்டு செல்லும்போது, அதன் உராய்வினால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிர்வுகள் ஒலி அலைகளை உருவாக்கி, எந்தப் பாடல் பொருத்தப்பட்டுள்ளதோ அப்பாடலின் குறிப்பிட்ட இசைப்பகுதி ஒலிக்கும்.

    கார் கண்ணாடி மூடப்பட்டிருந்தாலும் கூட, இந்த இசை காருக்குள் இருப்பவர்களுக்குத் தெளிவாகக் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஓட்டுநர்களுக்கும், பயணிகளுக்கும் ஒரு புது அனுபவத்தை தருகிறது. இதன்மூலம் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய உலகின் ஐந்தாவது நகரமாக மும்பை உள்ளது. இதேபோல ஹங்கேரி, ஜப்பான், தென் கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த யோசனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் ஷெவாலேவால் முன்மொழியப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 24 பந்துகளில் 61 ரன்கள் அடித்து இஷான் கிஷன் ஆட்டமிழந்தார்.
    • அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா அரைசதம் அடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    இந்நிலையில், இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் விளையாடினார்.

    இப்போட்டியில் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 22 ரன்னில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இதையடுத்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 24 பந்துகளில் 61 ரன்கள் அடித்து இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய திலக் வர்மா 25 ரன்னிலும் சூர்யகுமார் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து ஹர்திக் பாண்ட்யா - துபே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து. அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா அரைசதம் அடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்தது. 

    ×