என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாலிவுட் நடிகரான ரன்வீர்சிங் சமீபத்தில் துரந்தர் படத்தில் நடித்திருந்தார்.
    • இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருந்தது.

    மும்பை:

    பாலிவுட் நடிகரான ரன்வீர்சிங், சமீபத்தில் துரந்தர் படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருந்தது. அத்துடன் வசூலையும் வாரிக் குவித்தது.

    இந்நிலையில், ரன்வீர் சிங்கின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதில் கோடிக்கணக்கில் பணம் தரவேண்டும் என கோரியுள்ளார். இதுதொடர்பாக, மும்பை போலீசிடம் ரன்வீர் சிங் புகார் அளித்தார்.

    இதையடுத்து, ரன்வீர்சிங் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தனியார் பாதுகாவலர்களும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    மிரட்டல் விடுத்தவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்ற கோணத்தில் போலீசாரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

    பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.
    • வரும் 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் கட்சித் தொண்டர்கள் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த நடவடிக்கை நிறைவடைந்திருக்கிறது.

    இதற்காக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், பகுதி-நகர-ஒன்றியக் கழகச் செயலாளர்கள்-நிர்வாகிகள், சார்பு அணியினர். வாக்குச்சாவடி முகவர்கள்- குழுவினர் என லட்சக்கணக்கானோர் கடந்த சில வாரங்களாகத் தீவிர பணியாற்றி வந்துள்ளனர்.

    'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை, 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி', மேற்கு மற்றும் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு . டெல்டா மற்றும் தெற்கு மண்டல மகளிரணி மாநாடு என வெற்றிக்கனி பறிப்பதற்கான அடிப்படைப் பணிகளை அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறார்கள்.

    இனி வரும் நாட்களில் வீடு வீடாக, வெல்லும் தமிழ்பெண்கள் பிரசாரத்தை, மகளிர் படை மேற்கொள்ளவிருக்கிறது.

    மேலும், வாக்குச்சாவடி குழுவினருக்கு 4 பயிற்சி மாநாடுகள், திருச்சியில் 'ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்' மாநாடு என இடைவிடாத களப் பணிகள் ஒரு புறமும், திராவிட மாடல் அரசின் மூலம் அடுக்கடுக்கான நலத்திட்டங்களின் அமலாக்கம் மறுபுறமும் ஒவ்வொரு நாளும் நடந்து வருகின்றன.

    தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, அக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து வருகின்றனர். இதுவரையிலும் 75,000 கோரிக்கைகளும் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன.

    வரும் 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது.

    கட்சித் தலைவரால் விரைவில் அமைக்கப்படவுள்ள தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழுவானது சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், பிப்ரவரி 22-ம் தேதி முதல் தோழமை கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகிறது.

    தொகுதி பங்கீட்டுக் குழு தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இந்த அறிவிப்பை தி.மு.க. வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை பாரிமுனையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் சர்வே எடுக்கச் சென்றனர்.
    • அப்போது அங்கு வந்த ரவுடிகள் த.வெ.க. கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    சென்னை பாரிமுனையில் சர்வே எடுக்கச் சென்ற த.வெ.க. கட்சியினர் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

    இந்தத் தாக்குதலில், 4 மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர. அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் 6 பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

    இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். தி.மு.க.வின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது.

    இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்தார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் பிரிவு 2வது சுற்றில் நேரடியாக களமிறங்கிய நம்பர் 4 வீராங்கனையும், அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காப், இத்தாலி வீராங்கனை எலிசபெட்டா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி வீராங்கனை எலிசாபெட்டா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் கத்தார் ஓபன் தொடரில் இருந்து முன்னணி வீராங்கனையான கோகோ காப் வெளியேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 190 ரன்கள் குவித்தது.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 12-வது லீக் போட்டியில் பாகிஸ்தான், அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது. பர்ஹான் 73 ரன்னும், பாபர் அசாம் 46 ரன்னும் எடுத்தனர்.

    அமெரிக்காவின் வான் சால்க்விக் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    தொடர்ந்து ஆடிய அமெரிக்கா 20 ஓவரில் 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது. ஷயான் ஜஹாங்கீர் 49 ரன் எடுத்தார். ஷுபம் ரஞ்சனே அரை சதம் கடந்து 51 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் தாரிக் 3 விக்கெட்டும், ஷதாப் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாங்கள் வங்கதேசத்தை தவிர்த்து வேறு எதையும் விவாதிக்கவில்லை.
    • எங்களுடைய ஒரே குறிக்கோள் வங்கதேசம் மரியாதை பெற வேண்டும் என்பதுதான்.

    வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அரசு தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், கடுமையான நிதி அபராதத்திற்கு உள்ளாகும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்தது.

    அதன்பின் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி, வங்கதேசம் கிரிக்கெட் போர்டு தலைவர் அமினுல் இஸ்லாம், ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா ஆகியோர் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின் பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான் அணி விளையாட அனுமதி அளித்தார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி கூறியதாவது:-

    நாங்கள் வங்கதேசத்தை தவிர்த்து வேறு எதையும் விவாதிக்கவில்லை. எங்களுடைய ஒரே குறிக்கோள் வங்கதேசம் மரியாதை பெற வேண்டும் என்பதுதான். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது சுட்டிக்காட்டினோம். வங்கதேச கிரிக்கெட் போர்டு தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகள், ஐசிசி-யால் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவ்வளவுதான்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட நலனை கருதவில்லை. எங்களுடைய எங்கள் பணி முற்றிலும் வங்காளதேசத்துடன் தொடர்புடையது. அதனடிப்படையில் அரசு முடிவு எடுத்துள்ளது. அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகு, நாங்கள் அதன் பிறகு விளையாடுகிறோம்.

    பலதரப்பு பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட முடிவுகள் மற்றும் நட்பு நாடுகளின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அரசு பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அறிவுறுத்தியுள்ளது.

    ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கும், இந்த உலகளாவிய தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளை ஆதரிப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டில் தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்துள்ளார்.
    • மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.

    திமுக அமைச்சரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளுக்காகத் தொடர் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். 

    இந்நிலையில் இன்று வீட்டில் தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயிற்சி ஆட்டத்தின் போது அவருக்கு இடது கால் தசையில் மீண்டும் காயம் ஏற்பட்டது.
    • பிரேஸ்வெல்லுக்குப் பதிலாக கோல் மெக்கோஞ்சி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பல வீரர்கள் காயம் காரணமாக விலகி வருகின்றனர். மேலும் தொடர் தொடங்கியதில் இருந்தும் சில வீரர்கள் விலகி வருகின்றனர்.

    அந்த வகையில் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல், காயம் காரணமாக 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.

    அவர் சனிக்கிழமை நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது அவருக்கு இடது கால் தசையில் மீண்டும் காயம் ஏற்பட்டது. முன்னதாக இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட அதே தசைநார் கிழிவு, தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

    பிரேஸ்வெல்லுக்குப் பதிலாக ஆப்-ஸ்பின் ஆல்-ரவுண்டர் கோல் மெக்கோஞ்சி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து அணி ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே-வை காயம் காரணமாக இழந்த நிலையில், தற்போது அனுபவமிக்க பிரேஸ்வெல்லின் விலகல் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 17-ந்தேதி மும்பையில் இருந்து தனது பயணத்தை தொடங்குகிறார்.
    • 19-ந்தேதி டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் 3 நாள் சுற்றுப் பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருகிறார். இந்தியாவில் நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாடு (AI Impact Summit) மாநாட்டில் கலந்து கொள்கிறார். வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய துறையில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    பிப்ரவரி 17-ந்தேதி மும்பையில் இருந்து தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். பிரதமர் மோடியுடன் சேர்ந்து இந்தியா- பிரான்ஸ் Year of Innovation-ஐ தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மும்பையில் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பின்னர் டெல்லியில் பிப்ரவரி 19-ந்தேதி நடைபெறும் ஏ.ஐ, உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து மேக்ரானின் சுற்றுப்பயணம் அமைய இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உச்ச நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, நீதி கிடைக்கும்
    • குல்தீப் சிங் செங்காருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்

    உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் மரணமடைந்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குற்றவாளி குல்தீப் சிங் செங்கார் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

    செங்காரின் மேல்முறையீட்டு மனுவை முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் இறுதி தீர்ப்பு வழங்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்திற்கும் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து பிணை வழங்கிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

    இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த முடிவால் தான் நிம்மதி அடைந்துள்ளதாகவும், எட்டு ஆண்டுகளாக நீதி கிடைக்கப் போராடி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு தொடர்பாக பேசிய அவர்,

     "இன்று நான் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றேன். நீதிபதி தீர்ப்பளித்தபோது நான் நீதிமன்றத்தில் இருந்தேன். இந்தத் தீர்ப்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விசாரணையை 3 மாதங்களுக்குள் விரைவில் முடிக்க நீதிபதி உத்தரவிட்டதில் நான் திருப்தி அடைகிறேன். என் தந்தை திரும்பி வரப்போவதில்லை. குல்தீப் செங்காரின் சகோதரர்கள் அதுல் சிங் செங்கார் மற்றும் ஜெய்தீப் சிங் செங்கார் ஆகியோர் என் தந்தையைக் கொன்றனர்.

    அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளும் வெளியே உள்ளனர். குல்தீப் சிங் செங்காரைப் பொறுத்தவரை, அவர் எனக்கு எதிராக ஒரு கொடூரமான செயலைச் செய்துள்ளார். அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். நான் அதை எப்படி நிரூபிக்க முடியும்? நான் உயிருடன் இருக்கிறேன் என்பதற்காக அதை செய்யவேண்டுமா?

    நானும் நிர்பயா மாதிரி இறந்திருந்தால், நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன் என்று எல்லோரும் நம்பியிருப்பார்கள். நான் உயிருடன் இருக்கிறேன். எனக்கு என்ன நடந்தது என்பதை நிரூபிக்க பல வருடங்கள் ஆனது. நான் 8 வருடங்களாக போராடி வருகிறேன். இப்போதும் கூட, நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன் என்பதை நிரூபிக்க வேண்டும்.

    அவரது மகள் இது ஒரு சாதாரண விபத்து என்று கூறினார். விபத்து சாதாரணமானதா என்று எனக்குத் தெரியவில்லை. நான் வென்டிலேட்டரில் இருந்தேன். என் தந்தைக்கு உச்ச நீதிமன்றம் நீதி வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்துள்ளேன். என் தந்தையின் ஆன்மா சாந்தியடையவும், அவருக்கு நீதி கிடைக்கவும் குல்தீப் செங்காரை தூக்கிலிட வேண்டும்." என தெரிவித்துள்ளார். 

    ×