என் மலர்

    சினிமா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை இவானா.
    • இவர் தற்பொழுது #சிங்கிள் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை இவானா. இவர் தற்பொழுது தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் தற்பொழுது #சிங்கிள் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்க ஸ்ரீ விஷ்னு கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இவர்களுடன் கேடிகா ஷர்மா மற்றும் வென்னிலா கிஷோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இப்படம் ஒரு முக்கோண காதலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. கதாநாயகனான ஸ்ரீ விஷ்ணு கேடிகா ஷர்மாவை காதலிக்கிறார் ஆனால் கேடிகாவுக்கு இவரை பிடிக்கவில்லை. ஆனால் இவானானிற்கு ஸ்ரீயை பிடித்துள்ளது ஆனால் ஸ்ரீக்கு இவானாவை பிடிக்கவில்லை. இப்படி ஒரு சூழலி சிக்க தவிக்கும் கதாநாயகனின் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியானது பாகுபலி திரைப்படம்.
    • பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்தது.

    2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பாகுபலி திரைப்படம். இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

    பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.

    இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இதனால் படத்தை ரீரிலீஸ் செய்யுமாறு நெட்டிசன்கள் படக்குழுவிடம் இணையத்தில் சில மாதங்களாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

     

    இதற்கு தற்பொழுது பதில் கூறும் வகையில் படக்குழு பாகுபலி பாகம் 1 திரைப்படத்தை இந்த வருடம் அக்டோபர் மாதம் மீண்டும் வெளிவிடுவதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இப்படம் ரீரிலீஸ்-லும் மாபெரும் வெற்றியை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

    சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

    படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பற்றி பல பிரபல இயக்குநர்கள் பாராட்டி புகழ்ந்து படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசினர். திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சசிகுமார் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

    "2010 ஆம் ஆண்டு நீங்கள் ஒரு பீரயட் கதையான ராஜா ராணி கதையை வைத்து இருந்தீங்க. அதனை சூர்யா மற்றும் விஜயிடம் சொன்னீங்க. அதுக்கு அப்பறம் பெரிய கேப் ஆயிடுச்சு இன்னமும் அந்த கதைய வச்சுருகீங்களா?" என தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அதற்கு அவர் " கதை இன்னும் அப்படியே இருக்குது சார். கண்டிப்பா அந்த படத்த நான் இயக்குவேன். கதைக்கான கதாநாயகனை அது தேர்வு செய்யனும். இந்த படத்த இயக்குவதுக்கு முன்னாடி இன்னொரு ஒரு கிராமத்துல நடக்குற மாதிரி பீரியட் திரைப்படம் இயக்கப்போறேன். அதுக்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த வருஷ கடைசியில் அல்லது அடுத்தாண்டு ஜனவரி அப்படத்தோட ஷூட்டிங் பணிகள் தொடங்கிடுவேன்" என கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் டிரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவு பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 1.5 லட்ச டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முதல் நாள் வசூல் மட்டும் 13 கோடு ரூபாயை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    48 மணிநேரத்தில் வேறு எந்த பெரிய தமிழ் நடிகர்களுக்கும் இவ்வளவு முன்பதிவுகள் நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
    • இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான DD Next Level உருவாகியுள்ளது.

    முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இவர்களுடன் கீத்திகா திவாரி, யாஷிகா, கஸ்தூரி,பிரமாஜி, நிழல்கள் ரவி, ஷா ரா, லொல்லு சபா மாறன், ராஜேந்திரன், லொல்லு சபா ஜீவா மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. DD Next Level திரைப்படம் மே 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டிரெய்லர் நாளை ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு  வெளியாகிறது.

    இப்படத்தில் சந்தானம் ஒரு யூடியூப் விமர்சகர் கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • அஜித் குமார் ஃபார்முலா- 2 பந்தய வீரராக சிறந்து விளங்குகிறார்.

    டெல்லியில் நேற்று நடிகர் அஜித்குமாருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷண் விருது வழங்கினார்.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக பத்ம விருது பெறும் தமிழ் நடிகர் என்கிற பெருமையை அஜித்குமார் பெற்றுள்ளார்.

    அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்ததை அவரது ரசிகர்கள் நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழையாக பொழிந்தது.

    இந்த நிலையில், அஜித் குமாருக்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

    பத்ம பூஷண் விருதைப் பெற்ற புகழ்பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குடும்பம், காதல் கதை போன்ற பல்வேறு வகையான படங்களில் நடித்து, அனைத்து வயதினரையும் மகிழ்வித்து உள்ளார்.

    திரை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் அவர் பதித்துள்ளார். ஃபார்முலா- 2 பந்தய வீரராகவும் சிறந்து விளங்குகிறார். ஒரு நடிகராகவும், கார் பந்தய வீரராகவும் அஜித் குமார் இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

     

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை எண்ணி நான் வருந்துகிறேன்.
    • இந்த சூழலில் சாதி, மத பேதமின்றி நல்லிணக்கமாக எப்படி வாழ்வது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

    காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர்.

    மிருகத்தனமான இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் குடியரசு தலைவரிடம் இருந்து பத்ம பூஷன் விருதை பெற்ற நடிகர் அஜித்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை எண்ணி நான் வருந்துகிறேன். இந்த விவகாரத்தில் அரசு தன்னால் முடிந்ததை நிச்சயம் செய்யும் என்று நம்புகிறேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். இந்த சூழலில் சாதி, மத பேதமின்றி நல்லிணக்கமாக எப்படி வாழ்வது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நமக்குள் எந்த மோதலும் இருக்க கூடாது. அமைதியாகவும், ஒற்றுமையாகவும் நாம் வாழ வேண்டும் என்று கூறினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது.
    • மத்திய அரசின் உயரிய விருதுகளில் பத்ம பூஷன் விருது ஒன்று.

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை அஜித்குமாருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார்.

    அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 12-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • கிங்டம் படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார்.

    விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 12-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

    கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கிங்டம் படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார்.

    கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இத்திரைப்படம் மே 30ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோவை வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.
    • திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

    சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

    படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பற்றி பல பிரபல இயக்குநர்கள் பாராட்டி புகழ்ந்து படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசினர். இந்நிலையில் படத்தை பார்த்த லைகா நிறுவனத்தின் தலைவரான தமிழ் குமரன் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்

    "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தை பார்த்தேன். அது என்னை மிகவும் ஈர்த்தது; மனதையும் உருக்கிய ஒரு படமாக அமைந்தது. சசிகுமார், சிம்ரன் மற்றும் யோகி பாபு ஆகியோரின் நடிப்பு மிகவும் புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது. படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடித்துள்ளனர். குறிப்பாக முள்ளி தாஸ் (கமலேஷ்) என்கிற கதாபாத்திரம் பாராட்டத்தக்க வகையில் இருந்தது.

    முதல் திரைப்படத்திலேயே அற்புதமான கதை மற்றும் நகைச்சுவையை வழங்கிய இயக்குநர் அபிஷன், யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், இந்த அருமையான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

    மில்லியன் டாலர்ஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள "டூரிஸ்ட் ஃபேமிலி" மாபெரும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்! கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று கொண்டாட வேண்டிய படம் இது." என கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பார்க்கிங்', 'லப்பர் பந்து' போன்ற படங்களில் நடித்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
    • தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

    'பார்க்கிங்', 'லப்பர் பந்து' போன்ற படங்களில் நடித்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இந்தப் படத்தின் முதல் பாடல் 'பீர் சாங்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான தில்லுபரு ஆஜா வெளியானது. இப்பாடலை சிம்பு பாடினார். இப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.

    சமீபத்தில் நடந்த தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிம்பு, சாய் அபயங்கர், ஹரிஷ் கலயாண் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். அப்பொழுது ஹரிஷ் கல்யாணின் விருதை சிலம்பரசன் அவருக்கு வழங்கினார். அப்பொழுது தொகுப்பாளர் "நீங்கள் இருவரும் சகோதரர் போல் இருப்பது எங்கள் அனைவருக்கு தெரியும். நீங்கள் இருவரும் இணைந்து திரைப்படம் நடிப்பீர்களா? எம்மாதிரி கதைக்களத்தில் நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பினார்"

    அதற்கு சிம்பு " கண்டிப்பாக நடிக்கலாம் அதற்கான கதையமைந்தால் சந்தோஷம் தான், மேலும் ஹரிஷ் அதற்கு நாங்கள் நடிக்கும் திரைப்படத்தை சிம்பு அண்ணன் இயக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்" என கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    சமீபத்தில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரபல இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ராஜமவுலி தன்னுடைய இயக்கத்தில் பிரமாண்ட உருவாக உள்ள 'மகாபாரதம்' படத்தில் நடிகர் நானியை ஒரு பகுதியை நடிக்க வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

    இதற்கிடையில், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'எஸ்எஸ்எம்பி 29' என்ற படத்தை தற்பொழுது இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் 'மகாபாரதம்' திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×