என் மலர்

    சினிமா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ் சினிமா இதுவரை அதிகம் கண்டிராத ஒரு புதிய ஜானரில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வெளியான திரைப்படம் 'கலியுகம்'.
    • சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, குடும்ப ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற '3BHK' திரைப்படம்

    திரையரங்குகளுக்கு நிகராக, ஓடிடி தளங்கள் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பெரும் விருந்தளித்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரமும் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் விறுவிறுப்பான த்ரில்லர் முதல் மனதை வருடும் குடும்பக் கதை வரை பல திரைப்படங்கள் வெளியாகின்றன. அவற்றில் சில முக்கியப் படங்களைப் பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

    1. கலியுகம் (Kaliyugam)

    தமிழ் சினிமா இதுவரை அதிகம் கண்டிராத ஒரு புதிய ஜானரில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வெளியான திரைப்படம் 'கலியுகம்'. இது ஒரு போஸ்ட்-அபோகாலிப்டிக் சயின்ஸ்-ஃபிக்ஷன் த்ரில்லர் வகையைச் சார்ந்தது. 2050-ல் நடக்கும் இக்கதையில், உலகப் போருக்குப் பிந்தைய சூழலில் உயிர் பிழைப்பதற்காகப் போராடும் மனிதர்களின் உணர்ச்சிகளை மையமாக வைத்து, ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கிஷோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    2. 3BHK

    சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, குடும்ப ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற '3BHK' திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. சரத்குமார் மற்றும் சித்தார்த் நடிப்பில், ஒரு நடுத்தரக் குடும்பத்தின் சொந்த வீடு கனவை யதார்த்தமாகப் பதிவு செய்துள்ள இப்படம், குடும்பத்துடன் பார்க்க ஒரு சிறந்த தேர்வாகும். இத்திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் டெண்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    3. தம்முடு (Thammudu) - தெலுங்கு

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நிதின் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் மற்றும் குடும்ப சென்டிமென்ட் நிறைந்த திரைப்படம் 'தம்முடு'. அண்ணன்-தம்பி பாசத்தை மையமாகக் கொண்ட இக்கதையில், ஒரு தம்பி தன் அண்ணனுக்காக எதையும் செய்யத் துணிவதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள். இது அதிரடி ஆக்ஷன் விரும்பிகளுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    4. கரமில கந்தர ஸ்வப்னம் (Karamila Kanthara Swapnam) - மலையாளம்

    வழக்கமான மலையாளப் படங்களின் பாணியில், ஆழமான உணர்வுகளைப் பேசும் ஒரு நாடகத் திரைப்படமாக 'கரமில கந்தர ஸ்வப்னம்' வெளியாகிறது. கனவுகள், லட்சியங்கள் மற்றும் மனித உறவுகளுக்கு இடையேயான சிக்கல்களைப் பற்றி பேசும் இப்படத்தில், ஸ்ரீநாத் பாசி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் போன்றோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    5. குப்பர் ஜிந்தகி (Kuppar Zindagi) - மலையாளம்

    இது ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையையும், அவன் சந்திக்கும் சவால்களையும் மையமாகக் கொண்ட ஒரு ஃபீல்-குட் திரைப்படமாக இருக்கும். மனோரமா மேக்ஸ் தளத்தில் வெளியாகும் இப்படம், யதார்த்தமான கதையம்சம் கொண்ட மலையாளப் படங்களின் ரசிகர்களைக் கவரும்.

    6. கட்ஸ் (Guts)

    அறிமுக இயக்குநர் ரங்கராஜ் இயக்கி நடித்துள்ள படம் கட்ஸ். ரங்கராஜ், நான்சி, டெல்லி கணேஷ், ஸ்ருதி நாராயணன், சாய் தீனா, பிர்லா போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்தியாசமான கதை களத்தில் உருவான இப்படம்  டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகி  உள்ளது.

    7. சிதாரே ஜமீன் பர் (Sitaare Zameen Par)

    இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டு மற்றும் உணர்ச்சிகரமான நாடகத் திரைப்படம் 'சிதாரே ஜமீன் பர்'. இந்தத் திரைப்படம் எந்த ஒரு ஓடிடி தளத்திலும் சந்தா முறையில் வெளியாகவில்லை. மாறாக, யூடியூப் (YouTube) தளத்தில் ஆகஸ்ட் 1, 2025 முதல், 'பே-பர்-வியூ' (Pay-per-view) முறையில், அதாவது பணம் செலுத்திப் பார்க்கும் வசதியுடன் வெளியாகிறது. இப்படத்தை மக்கள் 100 ரூபாய் கட்டி பார்க்கலாம்.

    8. சீஃப் ஆஃப் வார் (Chief of War)

    'Aquaman' புகழ் ஜேசன் மோமோவா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள பிரம்மாண்ட வரலாற்றுத் தொடர் 'சீஃப் ஆஃப் வார்'. இத்தொடர் ஆப்பிள் டிவி+ (Apple TV+) தளத்தில் வெளியாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் இலங்கையில் தொடக்கப்பட்டுள்ளது.
    • இயக்குநர் அமீர், லப்பர் பந்து கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பவா செல்லத்துரை மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    இலங்கையில் ட்ரீம் லைன் என்கிற பெயரில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் அமீர், லப்பர் பந்து கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பவா செல்லத்துரை மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    இலங்கையில் சினிமா கலைஞர்களுக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடாக யாழ்ப்பாணம் நீர்வேலியில் சிறீஸ்கந்தராஜா அவர்கள் ட்ரிம்லைன் புரடக்ஷன்ஸ் எனும் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளார்.

    ஒரு திரைப்படத்திற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இந்த நிறுவனத்தில் அமைந்துள்ளன. DI, Edit, Atmos Sound with Mix Preview Theater, Foly Sounds, Dubbing Theater போன்ற ஒழுங்கமைப்புகளுடன் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் நடக்கும் தொழில்நுட்பக்கூடமும் அதற்கான ஸ்டுடியோவும் அமைந்துள்ளன.


    திரைப்படங்களை எடுப்பதற்கான நவீன தரத்திலான ஏரி அலெக்ஸா SXT கேமரா, அபெச்சர் (Aputure) மற்றும் ஆமரான் (Amaran) லைட்ஸ் போன்ற ஒளி அமைக்கும் யூனிட் ஒன்றையும் யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக அறிமுகம் செய்து வைத்திருக்கின்றனர். ஒரு திரைப்படம் எடுப்பதற்கான தயாரிப்பு வசதிகள் முதல் விஷுவல் எபெக்ட்ஸ் ஸ்டுடியோ , ஒலிக் கலவை என அனைத்தையுமே ஒரிடத்தில் பெறுவதற்கான வசதிகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன

    இந்த தொடக்கவிழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து பருத்திவீரன் திரைப்பட புகழ் இயக்குநர் அமீர், லப்பர் பந்து கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் - கதை சொல்லி பவா செல்லத்துரை, டிராபிக் ராமாசாமி திரைப்பட இயக்குநர் விக்கி, ஆவணப்படம் மற்றும் திரைப்பட இயக்குநர் சோமீதரன், படத்தொகுப்பாளர் அஹமத் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.

    இவர்களோடு இலங்கைத் தமிழ் கலைஞர்களாக 'வெந்து தணிந்தது காடு' திரைப்பட இயக்குநர் மதிசுதா, சரிகம புகழ் கில்மிஷா, இசையமைப்பாளர்கள் பத்மயன், பூவன் மதீசன், முரளி, ஒளிப்பதிவாளர்கள் ஏ.கே. கமல், ரிஷி செல்வம், ரெஜி செல்வராசா, படத்தொகுப்பாளர் அஞ்சலோ ஜோன்ஸ், துஷிகரன், அதிரன் திரைப்பட இயக்குநர் தினேஷ் கனகராஜ், தீப்பந்தம் திரைப்பட இயக்குநர் சிவராஜ், இதுவே ஆரம்பம் திரைப்பட இயக்குநர் சஞ்சய் யோ, தீ மாதர் திரைப்பட இயக்குநர் பிரவீன் கிருஷணராஜா, நடிகைகள் அஜித்தா, சப்னா படுக்க, நடிகர்கள் ஜெராட் நோயல், சிந்தர் அமிர்தலிங்கா ஆகியோருடன் இன்னும் பல கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

    இவர்கள் மட்டுமில்லாமல் தென்னிலங்கையிலிருந்து கோமாளி கிங்ஸ் திரைப்பட இயக்குநர் கிங் ரட்ணம், இலங்கை சார்க் அமைப்பின் தலைவர் கெளசல்யா குமாரசிங்க, VFX தொழிநுட்பக் கலைஞர் சாதா வீரம, திரைப்பட இயக்குநர் சனேஷ் டிசா நாயக்க போன்ற இலங்கை முன்னணித் திரைக் கலைஞர்களும் இலங்கை திரைப்பட கூட்டு ஸ்தாபன தலைவர் சுடத் மஹாடிவுலுவேவா மற்றும் சரசவிய ஊடகங்களில் இருந்து ஹேமாலி விஜயரத்ன, நயனாஞ்சலி டேகிபிட்டிய, நிஷங்க விஐயரத்ன, காயன் ரத்னாயக்க, யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஒழுங்கமைப்பாளர் அனோமா ராஜகருணாயக்க போன்றோரும் வருகை தந்து சிறப்பித்தனர்.

    யாழ்ப்பாணத்தில் மாபெரும் நிகழ்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவில் இந்த வருடத்திற்கான 5 முழுநீளத் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான ஆரம்ப நிகழ்வும் நிடைபெற்றது.

    லூயிஸ், அந்தோனி, மிஷன் லங்கா, சாசுவதம், திரவி போன்ற வரிசையில் திரைப்படத் தலைப்புக்களை அறிமுகப்படுத்தி இயக்குநர்கள் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.

    இலங்கையில் ட்ரீம் லைன் புரொடக்ஷன்ஸ் ஒரு முக்கியமான திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக முன்னேறிவரும் என்பதில் சந்தேகம் இல்லை என வந்திருந்த பிரபலங்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்து வாழ்த்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'சலம்பல' பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது.
    • மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவரது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

    இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சலம்பல' பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் சில சுழ்நிலைக்காரணமாக பாடலை வெளியிட கூறிய நேரத்தில் வெளியிட முடியவில்லை.

    இந்நிலையில் தற்போது இந்த பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார். இப்பாடல் ஒரு ஃபன் காதல் தோல்வி பாடலாக உருவாகியுள்ளது. மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவர் தனது வீட்டிற்கு வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வேடன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

    கேரளாவை சேர்ந்த பிரபல மலையாள ராப் பாடகர் ஹிரந்தாஸ் முரளி எனப்படும் "வேடன்" மீது இளம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்துள்ளார்.

    காவல்துறையின் கூற்றுப்படி, புகார்தாரர் 2021 இல் இன்ஸ்டாகிராம் மூலம் வேடனொடு பழகி வந்துள்ளார். அதே ஆண்டு, அவர் தனது வீட்டிற்கு வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்ணின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போலீசில் புகார் அளிக்க நினைத்தபோது, வேடன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அதன் பிறகு சம்மதமின்றி தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

    ஐந்து முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    2023 ஆம் ஆண்டு முதல், வேடன் தன்னை விட்டு விலகத் தொடங்கியதால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சமீபத்தில் தைரியம் பெற்று புகார் அளித்ததாகவும் அப்பெண் கூறினார்.

    இந்த வழக்கில் விரைவில் விரிவான வாக்குமூலம் பதிவு செய்யப்படும் போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், வேடன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த புகார் தனக்கு எதிரான சதியின் ஒரு பகுதி என்று அவர் கூறியுள்ளார்

    தனது கூற்றுகளை ஆதரிக்க ஆதாரம் இருப்பதாகவும், விரைவில் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோகன்லால் நடிப்பில் வெளியான துடரும் படம் வசூலை வாரிக் குவித்தது.
    • அப்படத்தை இயக்கிய தருண் மூர்த்தியை அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார் கார்த்தி.

    மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான சஸ்பென்ஸ் திரில் படமான துடரும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இப்படத்தை தருண் மூரத்தி இயக்கியிருந்தார்.

    இந்த நிலையில் அடுத்த படத்தில் இணைவது தொடர்பாக தருண்மூர்த்தியுடன் கார்த்தி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பேரம் இணைந்து பணியாற்ற முடிவு செய்தால், மாமன், கருடன் படத்தை தயாரித்த ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கும் எனவும் தெரிகிறது.

    துடரும் படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடியபோது கார்த்தி, தருண் மூர்த்தியை அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இப்படத்தின் கதை 1991 ஆம் ஆண்டில் நடைப்பெறுகிறது.
    • விஜய் தேவரகொண்டா கான்ஸ்டபுளாக வேலை பார்க்கிறார்.

    கதைக்களம்

    இப்படத்தின் கதை 1991 ஆம் ஆண்டில் நடைப்பெறுகிறது. விஜய் தேவரகொண்டா கான்ஸ்டபுளாக வேலை பார்க்கிறார். சிறு வயதில் இருந்தே அவரது அண்ணனை தேடி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அப்பொழுது விஜய் தேவரகொண்டாவை ஒரு பெரிய டிரக் மாஃபியா நடத்தும் ஒரு கும்பலில் அண்டர்கவர் ஸ்பையாக செல்ல கூறுகின்றனர். முதலில் இதற்கு விஜய் தேவரகொண்டா மறுக்கிறார். அதன்பின் அந்த கும்பலின் தலைவனாக இருப்பவர் இத்தனை வருடங்கள் இவர் தேடி வரும் அவரது அண்ணன் என தெரிய வருவதால் போலீஸ் கூறும் விஷயங்களுக்கு ஒப்புக்கொள்கிறார்.

    இதனால் ஒரு கைதி போல் இலங்கைக்கு சென்று தன் அண்ணனின் கும்பலில் சேர்ந்துக் கொள்கிறார்.இதற்கு அடுத்து என்ன ஆனது இவரது அண்ணனை காப்பாற்றினாரா? இல்லை தன் கடமையை ஆற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    விஜய் தேவரகொண்டா இப்படத்தில் சூரி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறுவதை விட வாழ்ந்துள்ளார் என்றே கூற வேண்டும்.தன் அண்ணனை தேடி ஒரு ஸ்பை ஆக அவர் கூட்டத்திற்குள் சென்று, அவர் அண்ணனுக்கு தெரியாமல் விஷயத்தை தெரிந்துக்கொள்ள போராடும் தருணம் என அவரது கெரியர் பெஸ்ட் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    அண்ணனாக நடித்துள்ள சத்ய தேவ் இவருக்கு இணையாக குறையாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார்.

    பாக்யஸ்ரீ கதாப்பாத்திரம் படத்தில் எதற்காக இருக்கிறது என தெளிவில்லாமல் இருந்தாலும அவரது பங்கை அழகாக வந்து அளவாக நடித்துள்ளார். வில்லன் கதாப்பாத்திரத்தில் முருகன் கவனம் ஈர்த்துள்ளார்.

    இயக்கம்

    இரண்டு எதிர்மறை துறைகளில் உள்ள அண்ணன் தம்பி கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் கவுதம் தின்னனுரி. படத்தின் முதல் பாதி நன்றாக செல்கிறது ஆனால் இரண்டாம் பாதி அப்படி இல்லாதது வருத்தம் அளிக்கிறது . இரண்டாம் பாதி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும். சில இடங்களில் நம் பொறுமையை சோதிக்கிறது.

    ஒளிப்பதிவு

    கிரிஷ் கங்காதரன் மற்றும் ஜோமோன் டி ஜான் இருவரின் ஒளிப்பதிவும் மிகவும் எதார்த்தமாக படம்பிடித்து காட்டியுள்ளனர். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளனர்.

    இசை

    அனிருத் - இன் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.

    தயாரிப்பு

    சித்தாரா எண்டெர்டெயின்மண்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    ரேட்டிங்- 3/5

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவரது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

    சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவரது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சலம்பல' பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் சில சுழ்நிலைக்காரணமாக பாடலை வெளியிட முடியவில்லை எனவே பாடலை இன்று இரவு வெளியிட இருக்கின்றனர். இப்பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார். பாடலை குறித்த எதிர்ப்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்பாடல் ஒரு ஃபன் காதல் தோல்வி பாடலாக உருவாகியுள்ளது.

    இந்நிலையில், அனிருத் மற்றும் சாய் அபயங்கர் ஒன்றாக இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனேவே வெளியான இப்பாடலின் ப்ரோமோ வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவரது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

    சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவரது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சலம்பல' பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார். பாடலை குறித்த எதிர்ப்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்பாடல் ஒரு ஃபன் காதல் தோல்வி பாடலாக உருவாகியுள்ளது.

    இந்நிலையில், அனிருத் மற்றும் சாய் அபயங்கர் ஒன்றாக இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனேவே வெளியான இப்பாடலின் ப்ரோமோ வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டி.ராஜாவேல் இயக்கத்தில் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது
    • குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் Mr.Zoo Keeper.

    இந்த வார இறுதியில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக எட்டு புதிய படங்கள் திரையரங்குகளில் நாளை வெளியாக இருக்கிறது. பல்வேறு வகை கதைக்களங்களோடு வெளியாகும் இந்த படங்களின் மீது, ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

    ஹவுஸ்மேட்ஸ்

    டி.ராஜாவேல் இயக்கத்தில் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா சந்தினி பைஜு, வினோதினீ, தீனா, அப்தூல் லீ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையை ராஜேஷ் முருகேசன் மேற்கொள்கிறார் மற்றும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    மிஸ்டர். ஜூ கீப்பர்

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் Mr.ZooKeeper.படத்தின் நாயகியாக ஷிரின் காஞ்ச்வாலா நடித்துள்ளார். படத்தை ஜே.சுரேஷ் இயக்கியுள்ளார். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொள்ள ஒளிப்பதிவு பணிகளை தன்வீர் மிர் செய்துள்ளார். படத்தை ஜே4 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

    முதல் பக்கம்

    வெற்றி நடிப்பில் கிரைம் இன்வஸ்டிகேஷன் திரில்லராக முதல் பக்கம் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அனிஷ் அஷ்ரஃப் இயக்கியுள்ளார். படத்தின் நாயகியாக ஷில்பா மஞ்சுனாத் நடித்துல்ளார். மேலும் இவர்களுடன் நயனா சாய், மகேஷ் தாஸ் , தம்பி ராமியா மற்றும் ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏஜிஆர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேஷ்வரன் தேவதாஸ் தயாரித்துள்ளார்.

    சரண்டர்

    கௌதமன் கணபதி இயக்கத்தில் தர்ஷன் தியாகராஜன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் சரண்டர். இப்படத்தில் லால், சுஜித் ஷங்கர், மன்சூர் அலி கான், முதிஷ்காந்த் மற்றும் பதின் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். விகாஸ் இசையமைத்த படத்தை வி.ஆர்.வி குமார் தயாரித்துள்ளார்.

    மேலும் உதயா நடித்த அக்யூஸ்ட், டிஜே நடித்த உசுரே , கதிர் நடித்த மீஷா மற்றும் சுவாஸிகா நடித்த போகி திரைப்படங்கள் வெளியாகிறது.



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது.

    பிரபாஸ் கடைசியாக நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் 1100 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் இப்படத்தின் பாகம் இரண்டிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    அடுத்ததாக மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வீடியோவை சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருந்தது ஆனால் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்தது. இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திரைப்படம் அடுத்தாண்டு சங்கிராந்தியை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது. பிரபாஸ் மிகவும் ஜாலியாக நகைச்சுவைத்தனத்துடன் நடித்துள்ளார்.

    பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் வெளியாகவுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மஹா அவதார் நரசிம்ஹா கடந்த வாரம் வெளியானது.
    • திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

    அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மஹா அவதார் நரசிம்ஹா கடந்த வாரம் வெளியானது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகாலாதனின் கதையாகும்.

    திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. திரைப்படம் முதல் நாள் வசூலாக 1.75 கோடி, 2 ஆம் நாள் 4.6 கோடி, 3-வது நாள் 9.5 கோடி ரூபாய் மற்றும் 4-5 ஆம் நாளில் 13.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மொத்தம் திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் அதிகம் வசூலிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    படத்தின் நல்ல வரவேற்பை முன்னிட்டு திரைப்படம் இலங்கை, ஆஸ்திரேலயா, மலேசியா மற்றும் யூரோப் ஆகிய மாநகரங்களில் இன்று வெளியாகியுள்ளது.

    இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிக்க சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த சினிமாடிக் யூவிவெர்ஸ் விஷ்ணுவின் 10 அவதாரங்களை படமாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். 2025 முதல் 2037 ஆண்டுகள் மத்தியில் இப்படங்கள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி இருக்கும் 'மதராஸி' படத்தின் வெளியீட்டை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார் சிவா.
    • இயக்குனர் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் நடிப்பில் தனது அடுத்த படத்தில் பணிபுரிய இருப்பதை உறுதி செய்துள்ளார்.

    நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமியின் 'அமரன்' படத்திற்கு பின், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி இருக்கும் 'மதராஸி' படத்தின் வெளியீட்டை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.

    மதராஸி திரைப்படத்தில் ருக்மிணி வசந்த், விக்ரந்த், வித்யுத் ஜாம்வால், ஷபீர் கள்ளாரக்கல், பிஜு மேனன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் ஒளிப்பதிவு சுதீப் எலமோன் மற்றும் எடிட்டிங் ஏ. ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் மேற்கொள்கிறார்கள்.

    தமிழுடன், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் படம் வெளியாக உள்ளது. ஹிந்தி பதிப்புக்கு 'தில் மாதராசி' என பெயரிடப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு, அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைப்படம் இயக்க இருப்பதாக உறுதி செய்தார்.

    இதனிடையே, சிவகார்த்திகேயன் அடுத்ததாக புஷ்கர்-காயத்ரி இயக்குநர் ஜோடியுடன் கூட்டணி சேரவுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. மேலும், இப்படத்துக்கு இசையமைப்பாளராக சாம் சிஎஸ் இணைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஆனால், இந்த தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட குழுவினர் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.

    புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மற்றும் கிரியேட்டர் ப்ரொடியூசராக பணியாற்றி சுழல் மற்றும் சுழல் 2 இணைய தொடர் வெளியானது.

    ×