என் மலர்

    ஐ.பி.எல்.(IPL)

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த விழாவிற்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 11:00 மணிக்கு தொடங்குகிறது.
    • தற்போதைய சிஎஸ்கே வீரர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    ஐபிஎல் 2026 சீசன் வருகிற மார்ச் 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது ரசிகர்களுக்காக 'Roar at Chepauk' என்ற பிரம்மாண்ட கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சியை மார்ச் 22-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் முன்னாள் ஜாம்பவான்களான சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், முரளி விஜய் மற்றும் எஸ். பத்ரிநாத் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இந்த விழாவில் ஒரு சிறப்பு நேரடி இசை நிகழ்ச்சியை வழங்க உள்ளார்.

    மேலும் தற்போதைய சிஎஸ்கே வீரர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் இடையே சில சுவாரஸ்யமான கிரிக்கெட் போட்டிகள் மற்றும் சவால்கள் இந்த விழாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விழாவிற்கான டிக்கெட் விற்பனை மார்ச் 15, 2026 (நாளை) காலை 11:00 மணிக்கு தொடங்குகிறது. ரசிகர்கள் சிஎஸ்கே-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் (chennaisuperkings.com), அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் அல்லது District.in தளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி நடக்கிறது.
    • ஏப்ரல் 11-ந் தேதி 2-வது ஆட்டம் சேப்பாக்கத்தில் நடக்கிறது.

    19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்தப்போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. ஏப்ரல் 12-ந்தேதி வரை 20 ஆட்டங்களுக்கான விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரில் நடை பெறும் தொடக்க ஆட்டத் தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி கவுகாத்தியில் வருகிற 30-ந்தேதி நடக்கிறது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி நடக்கிறது. இதில் பஞ்சாப் அணியுடன் சி.எஸ்.கே. மோதுகிறது. ஏப்ரல் 11-ந் தேதி 2-வது ஆட்டம் சேப்பாக்கத்தில் நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிடல்சுடன் மோதுகிறது.

    இந்த நிலையில் தோனி இந்த சீசனில் நடைபெறும் அனைத்து ஆட்டத்திலும் விளையாடுவார் என்று சி.எஸ்.கே. அணி தெரிவித்துள்ளது.

    இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் கூறியதா வது:-

    என்னை பொறுத்தவரை தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார். இது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அணி நிர்வாகம் அவரிடம் ஆலோசித்து அவரது பங்கு குறித்து இறுதி முடிவு எடுக்கும்.

    தோனி பேட்ஸ்மேனாக ஆடுவாரா அல்லது விக்கெட் கீப்பராக விளையாடுவாரா அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக இருப்பாரா? என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

    20 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் தொடர்ச்சியாக வென்று உள்ளது. சி.எஸ்.கே. வீரர்களான சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மிகச்சிறப்பாக செயல்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    இருவரும் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஐ.பி.எல். போட்டிக்காக சி.எஸ்.கே.வீரர்களின் பயிற்சி நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையில் CSK அணி 4 போட்டிகளில் விளையாடுகிறது.
    • CSK அணி விளையாடும் 2 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.

    19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

    தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வந்தது.

    இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடரின் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் ஐதராபாத் அணி மோதுகிறது.

    முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 2 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.

    மார்ச் 30 ஆம் தேதி இரவு கவுகாத்தியில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. ஏப்ரல் 3 ஆம் தேதி இரவு சென்னையில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

    ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு பெங்களூரில் நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. ஏப்ரல் 11 ஆம் தேதி இரவு சென்னையில் நடைபெறும் போட்டியில் டெல்லி அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது
    • ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

    தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வந்தது.

    இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடரின் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் ஐதராபாத் அணி மோதுகிறது.

    5 மாநில தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு மீதமுள்ள அட்டவணை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது
    • ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

    தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வந்தது.

    இந்தநிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் ஐதராபாத் அணி மோதவுள்ளது என்று ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதீஷா பத்திரனாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்தது.
    • நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பத்திரனா விலகினார்ர்.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மதீஷா பத்திரனாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.18 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

    இதனுடையே இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பத்திரனா காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்ர்.

    இந்நிலையில், காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத கொல்கத்தா வீரர் மதீஷா பத்திரனா நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    டி20 உலக கோப்பை தொடரில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • முதல் போட்டியில் பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

    தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வருகிறது.

    இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முதல்கட்ட அட்டவணை இன்று இரவுக்குள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே சிஎஸ்கேவின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படவுள்ளார் என இணையத்தில் தகவல் பரவியது.

    இதுகுறித்து பேசிய சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதன், "சிஎஸ்கேவின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படவுள்ளார் என பரவும் தகவலில் உண்மையில்லை. எங்களது பயிற்சியாளர்கள் குழுவில் எந்த மாற்றமும் இல்லை" என்று தெரிவித்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிஎஸ்கே அணியின் போட்டிகள் ராஞ்சி மைதானத்திற்கு மாற்றப்படும் என தகவல் வெளியானது.
    • சென்னை அணியின் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.

    19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

    தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வருகிறது.

    இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முதல்கட்ட அட்டவணை நாளை (12-ந்தேதி) அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே தேர்தல் காரணமாக சிஎஸ்கே அணியின் போட்டிகள் ராஞ்சி மைதானத்திற்கு மாற்றப்படும் என தகவல் வெளியானது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.

    இந்நிலையில், சிஎஸ்கே அணியின் போட்டிகள் ராஞ்சி மைதானத்திற்கு மாற்றப்படும் என்ற தகவல் உண்மையல்ல எனவும் அப்படி எந்த வழிகாட்டுதலையும் ஐபிஎல் நிர்வாகம் எங்களுக்கு கொடுக்கவில்லை என்று சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இதனால் சென்னை அணியின் அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் போட்டியில் பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
    • ஐபிஎல் தொடருக்கான தீவிர பயிற்சியில் விராட் கோலி ஈடுபட்டுள்ளார்

    19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

    தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வருகிறது.

    இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முதல்கட்ட அட்டவணை நாளை (12-ந்தேதி) அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், ஐபிஎல் தொடருக்கான தீவிர பயிற்சியில் விராட் கோலி ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை விராட் கோலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐபிஎல் தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
    • 2 ஆவது போட்டியில் பஞ்சாப் - குஜராத் அணிகள் மோத வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது.

    19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

    தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வருகிறது.

    இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முதல்கட்ட அட்டவணை நாளை (12-ந்தேதி) அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    29ம் தேதி நடைபெறும் பஞ்சாப் முல்லான்பூரில் நடைபெறும் 2 ஆவது போட்டியில் பஞ்சாப் - குஜராத் அணிகள் மோத வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை 2 கட்டமாக அறிவிக்க முடிவு செய்துள்ளோம்.
    • சட்டசபை தேர்தல் தவிர வேறு எந்த காரணங்களாலும் தற்போது கிரிக்கெட் வாரியம் பாதிக்கப்படவில்லை.

    19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

    தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வருகிறது.

    இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முதல்கட்ட அட்டவணை நாளை (12-ந்தேதி) அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் தேவஜித் சைகியா கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை 2 கட்டமாக அறிவிக்க முடிவு செய்துள்ளோம். 20 நாட்களை உள்ளடக்கிய முதல் கட்ட அட்டவணை நாளை (12-ந்தேதி) அல்லது நாளை மறுநாள் (13-ந்தேதி) வெளியிடுவோம்.

    2-வது கட்ட அட்டவணை 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு வெளியிடுவோம்.

    போட்டிக்கான நகரங்களில் இருந்து உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவை வந்தவுடன் முதல் கட்ட தேதிகளை அறிவிப்போம். ராய்ப்பூர் புதிய மைதானமாக இருக்கும்.

    சட்டசபை தேர்தல் தவிர வேறு எந்த காரணங்களாலும் தற்போது கிரிக்கெட் வாரியம் பாதிக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் முழு அட்டவணை வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஐ.பி.எல். போட்டிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பதை அவர் தெளிவுப்படுத்தினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த சீசனுக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது.
    • எம்.எஸ். தோனி பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் முயற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த சீசனுக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், புதிய ஜெர்ஸியில் தோனி இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. 

    ×