என் மலர்

    ஐ.பி.எல்.(IPL)

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆர்.சி.பி. வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு RCB Cares தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.

    இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி அந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் ஆர்.சி.பி. அணி, கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு மேலும், தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என RCB Cares அறிவித்துள்ளது.

    இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு விராட் கோலி அஞ்சலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆர்.சி.பி. அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், "ஆர்சிபி அணி வரலாற்றில் சந்தோஷம் நிறைந்ததாக இருக்க வேண்டிய நாள், துக்கம் நிறைந்ததாக மாறியது. கொண்டாட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நான் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்கள் கதையின் ஒரு அங்கமாகி விட்டது. அன்பு, அக்கறை, மரியாதையுடன் ஒன்றாக முன்னோக்கி செல்வோம்!" என்று கோலி தெரிவித்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
    • கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி அந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் ஆர்.சி.பி. அணி, கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என RCB Cares அறிவித்துள்ளது.

    முன்னதாக, நேற்று முன்தினம் ஆர்.சி.பி. அணி நிர்வாகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    நாங்கள் இந்த தளத்தில் கருத்துகளை வெளியிட்டு 3 மாதங்கள் ஆகிவிட்டது. நாங்கள் வெளியே சென்றுவிடவில்லை. அமைதியாக இருப்பது என்பது இல்லாமல் போய்விட்டதாக இல்லை. இது துக்கம். ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை வெற்றி பெற்ற பிறகு நினைவுகளை கூறும் வகையில் சக்தியுடன் நீங்கள் கொண்டாடினீர்கள். மகிழ்ச்சி நிரம்பி இருந்தது. ஆனால் ஜூன் 4-ந்தேதி (கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்) இது அனைத்தையும் மாற்றிவிட்டது.

    அந்த நாளில் நமது இதயம் வெடித்து சிதறியது. அதன் பிறகு ஏற்பட்ட அமைதி நமது இடத்தை நிறுத்தி வைத்தது. இந்த அமைதியில் நாங்கள் துக்கத்தில் இருந்தோம், எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்தோம், கற்றுக் கொண்டிருந்தோம். இப்போது நிதானமாக வெறும் பொறுப்பை தாண்டி நாங்கள் மீண்டும் ஏதாவது செய்வதை தொடங்கி இருக்கிறோம். இதில் நாங்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டுள்ளோம்.

    நாங்கள் இன்று (அதாவது நேற்றுமுன்தினம்) முதல் மீண்டும் இந்த தளத்திற்கு திரும்பியுள்ளோம், கொண்டாட்டத்துடன் அல்ல, அக்கறையுடன் வந்துள்ளோம். உங்களுடன் கூட்டாக நிற்க, முன்னேறி நடக்க தயாராக உள்ளோம். கர்நாடகத்தின் பெருமையாக இருக்க நாங்கள் தொடர்ந்து பயணிக்கிறோம். இந்த ஆர்.சி.பி. கேர்ஸ் நிதி குறித்து முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
    • லலித் மோடி, மைக்கேல் க்ளார்க் உங்கள் இருவரையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது சீசனில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் 'பளார்' விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த சீசனில் எஞ்சிய 11 ஆட்டங்களிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட ஹர்பஜன்சிங்குக்கு தடை விதித்தது. அதன் பிறகு பலக்கட்டங்களில் ஹர்பஜன் சிங்கிடமும் சரி, ஸ்ரீசாந்திடமும் சரி எதற்காக இருவரிடையே சண்டை ஏற்பட்டது என கேட்கப்பட்ட போது பதில் சொல்லாமல் சிரித்தே மழுப்பினர்.

    இந்த நிலையில் 17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஆட்டம் முடிந்து வீரர்கள் கைகுலுக்கும் போது, ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் தடாலடியாக அடிப்பதும், பிறகு இருவரும் ஒருவரையொருவர் அடிப்பது போல் பாயும் போது நடுவர்கள், சக வீரர்கள் சமாதானப்படுத்துவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இப்போதும் அவர்கள் எதற்காக மோதிக் கொண்டார்கள், ஹர்பஜன்சிங்கை கோபமூட்டும் வகையில் ஸ்ரீசாந்த் என்ன சொன்னார் என்பது மர்மமாகவே உள்ளது.

    இந்த நிலையில், வீடியோ வெளியானதற்கு இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஷ்வரி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    லலித் மோடி, மைக்கேல் க்ளார்க் உங்கள் இருவரையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக 2008-ல் நடந்த ஒரு சம்பவத்தை நீங்கள் இழுப்பதை பார்க்கும்போது மனிதாபிமானமற்றவர்களாக தெரிகிறீர்கள்.

    அந்த சம்பவத்தில் இருந்து ஹர்பஜனும், ஸ்ரீசாந்தும் மீண்டு வந்துவிட்டனர். ஆனாலும் அந்த பழைய காயத்தை நீங்கள் மீண்டும் கிளறி விடுகிறீர்கள். இது அருவருப்பாக உள்ளது என கூறியுள்ளார். 



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மௌனம் என்பது இல்லாமை அல்ல. அது துக்கம்.
    • ஜூன் 4 ஆம் தேதி எல்லாவற்றையும் மாற்றியது.

    அண்மையில் நடந்து முடிந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.

    ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை இத்தொடரில் கைப்பற்றி அசத்தியது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவத்திற்கு ஆர்சிபி அணியின் நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசின் பொறுப்பற்ற நிர்வாகமே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.

    இந்த சோக சம்பவத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 3 மாதங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் எந்தவித பதிவும் போடாமல் இருந்தது.

    இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் இன்று ஒரு அறிக்கையை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நிர்வாகம் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் கடைசியாக இங்கு பதிவிட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. மௌனம் என்பது இல்லாமை அல்ல. அது துக்கம். இந்த இடம் ஒரு காலத்தில் நீங்கள் மிகவும் ரசித்த ஆற்றல், நினைவுகள் மற்றும் தருணங்களால் நிரம்பியிருந்தது.

    ஆனால் ஜூன் 4 ஆம் தேதி எல்லாவற்றையும் மாற்றியது. அந்த நாள் எங்கள் இதயங்களை உடைத்தது. அன்றிலிருந்து மௌனம் எங்கள் இடத்தைப் பிடித்துக் கொள்ளும் வழியாக இருந்து வருகிறது. அந்த மௌனத்தில், நாங்கள் துக்கப்படுகிறோம். கேட்டல், கற்றல், மெதுவாக, வெறும் பதிலை விட வேறு ஒன்றை உருவாக்கத் தொடங்கினோம். நாங்கள் உண்மையிலேயே நம்பும் ஒன்று.

    அப்படித்தான் RCB CARES உருவானது. இது எங்கள் ரசிகர்களுடன் இருக்கவும், கவுரவிக்கவும், குணப்படுத்தவும், அர்த்தமுள்ள செயலுக்காக எங்கள் சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மேடை. நாங்கள் இன்று இந்த இடத்திற்கு மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை. ஆனால் அக்கறையுடன் திரும்புகிறோம். உங்களுடன் பகிர்ந்து கொள்ள, ஒன்றாக நிற்க... ஒன்றாக முன்னேற... கர்நாடகாவின் பெருமையாக தொடர ஆர்.சி.பி கேர்ஸ். எப்போதும் அப்படியே இருக்கும். விரைவில் மேலும் விவரங்கள்... என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வடக்கு மண்டல அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக அங்கித் குமாரும் நியமிக்கப்பட்டனர்.
    • துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி தொடங்குகிறது.

    துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. இந்த போட்டியில் வடக்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்கு மண்டலங்கள் காலிறுதியில் மோதுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதியில் விளையாட உள்ளன.

    இந்நிலையில் இந்த தொடருக்கான வடக்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், அங்கித் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த தொடரில் இருந்து கேப்டன் சுப்மன் கில் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கித் குமார் தலைமையில் வடக்கு மண்டல அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இருப்பினும், வரவிருக்கும் ஆசியக் கோப்பைக்கு அவர் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து எந்தக் கவலையும் இல்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.
    • அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் தொடர்வார் என்று தோனி தெரிவித்துள்ளார்.

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது எம்.எஸ்.தோனி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    மேலும், அடுத்தாண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என்று தோனி தெரிவித்துள்ளார்.

    சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி, "அடுத்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் வந்துவிடுவார், அவர் வந்ததும் அனைத்தும் சரியாகிவிடும். ஐபிஎல் 2025-ல் நாங்கள் சரியாக விளையாடவில்லை என்று சொல்லவில்லை. இருப்பினும் சில இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். மினி ஆக்சன் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதில் அணியில் சில வீரர்களை எடுக்க உள்ளோம்.

    அடுத்த 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு, என்னுடைய கண்கள் நன்றாக உள்ளது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். சூட்சமம் என்னவென்றால், உடல் தகுதிக்கு இன்னும் TICK மார்க் கிடைக்கவில்லை. கண்களை வைத்து மட்டுமே விளையாட முடியாதே" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென் ஆப்பிரிக்கா ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
    • நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ள உலக சாம்பியன்ஷிப் லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது.

    பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. கடைசி பந்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைபட்ட நிலையில் அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.

    இதனால் தென் ஆப்பிரிக்கா ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    நாளை நடைபெறும் இறுதி ஆட் டத்தில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய 4 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.
    • பிளே-ஆப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியும் திண்டுக்கல்லில் நடக்கிறது.

    9-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் கடந்த 5-ந்தேதி கோவையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் போட்டி நடந்தது.

    நெல்லையில் நேற்று இரவு நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் நெல்லை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி தோற்கடித்தது.

    இத்துடன் நெல்லையில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்தன. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். இன்னும் 4 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் பிளே-ஆப் சுற்றுக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுவிட்டன.

    கோவை கிங்ஸ் அணி வெளியேற்றப்பட்டது. எஞ்சிய ஒரு இடத்திற்கு 6 புள்ளிகளுடன் உள்ள சேலம் ஸ்பார்டன்ஸ், தலா 4 புள்ளிகளுடன் உள்ள திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய 4 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. அந்த அணிகளுக்கு தலா ஒரு ஆட்டம் எஞ்சி உள்ளது.

    கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நாளை திண்டுக்கல்லில் தொடங்குகிறது. நாளை 2 ஆட்டங்கள் நடக்கிறது. மதியம் 3.15 மணிக்கு நடக்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.

    ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட அந்த அணி கடைசி லீக் போட்டியிலும் வெற்றி பெற்று தோல்வியே சந்திக் காமல் பிளே-ஆப் சுற்றுக்குள் செல்லும் முனைப்பில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் விஜய் சங்கர், ஜெகதீசன், ஹரி கரன், ஆஷிக், அபிஷேக் தன்வர், பிரேம்குமார், எம். சிலம்பரசன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    சதுர்வேத் தலைமையி லான மதுரை அணி வெற்றி பெற்றால்தான் பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். தோற்றால் தொட ரில் இருந்து வெளியேற்றப் படும். இதனால் அந்த அணி வெற்றி நெருக்கடியில் உள்ளது.

    இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட கோவை அணி வெற்றியுடன் தொடரை முடிக்க விரும்பும். இப்போட்டியில் சேலம் அணி வெற்றி பெற்றால் 8 புள்ளிகளுடன் கடைசி அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதனால் சேலம் அணி வெற்றிக்காக போராடும்.

    பிளே-ஆப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியும் திண்டுக்கல்லில் நடக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பை வென்றது.
    • ஆர்சிபி வீரர்களுக்கு பெங்களூருவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பை வென்றது. இதனை ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்கள் கொண்டாடினர்.

    ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதற்காக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கண்டுகளிப்பதற்காக அங்கு மக்கள் ஏராளமானோர் கூடினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் நடந்த நெரிசலைப் போல எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கு 3 பேர் கொண்ட குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது.

    பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தலைமையில், பொருளாளர் பிரப்தேஜ் சிங் பாட்டியா, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் குழுவில் உள்ளனர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேட்டர்கள் பந்தை எதிர்கொள்வதை மேலும் மேலும் கடினமாக்குவோம்.
    • பேட்டர்களுக்கு பந்து வீசுவது வேடிக்கையாக இருந்தது.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். அவர் மட்டுமே இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அவருக்கு நிச்சயம் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் தனது பயிற்சி குறித்து பேசிய அர்ஷ்தீப் சிங்,

    பயிற்சி அமர்வைப் பொறுத்தவரை, எனது ஒரே வேலை சரியான இடத்தில் பந்துவீசுவது மட்டும் தான். ஏனெனில் எனது உடல் எப்படி ஒத்துழைக்கிறது, சிவப்பு பந்து கையிலிருந்து எப்படி வெளியே வருகிறது என்பதை நான் சரி பார்க்கிறேன்.

    ஏனெனில் அனைத்து வீரர்களும் நீண்ட காலமாக வெள்ளை பந்தை வைத்து விளையாடி வருகின்றனர். அதனால் நான் இந்த பயிற்சியை மிகவும் ரசித்தேன்.

    மேலும் பேட்டர்கள் பந்தை எதிர்கொள்வதை மேலும் மேலும் கடினமாக்குவோம். பேட்டர்களுக்கு பந்து வீசுவது வேடிக்கையாக இருந்தது. அவர்கள் மிகவும் கச்சிதமாகத் தெரிந்தனர். மேலும் அவர்களிடம் போட்டி மனப்பான்மையும் இருந்தது. நாங்கள் எங்களின் ரிதமில் மட்டுமே வேலை செய்தாலும், அவர்கள் முழுமையான பயிற்சியை மேற்கொண்டனர். அதனால் அது இன்னும் வேடிக்கையாக இருந்தது. அதனால் நாங்கள் சரியான திட்டத்துடன் அவர்களை வெளியேற்ற முயற்சிக்க வேண்டியிருந்தது.

    சாய் முதல் முறையாக அணியில் இணைந்துள்ளார். அவரும் மிகவும் கச்சிதமாகத் தெரிந்தார். கேப்டனும் நல்ல ஃபார்மில் தொடர்பில் இருந்தார். அதனால் நான் தொடர்ந்து முன்னேறவும், அவர்களை அடிக்கடி வெளியேற்றவும் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவருகிறேன்.

    என்று தெரிவித்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பண்டிற்கு லக்னோ அணி கொடுத்த ரூ.27 கோடி என்பது மிகப்பெரிய தொகை
    • லக்னோ அணி இன்னும் சில திறமையான வீரர்களை வாங்கலாம்.

    ஐ.பி.எல். வரலாற்றில் அதிக (ரூ.27 கோடி ) தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப்பண்ட் தனது மோசமான பேட்டிங்கால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

    இந்நிலையில், ரிஷப் பண்டிற்கு லக்னோ அணி கொடுத்த ரூ.27 கோடி என்பது மிகப்பெரிய தொகை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, "தன்னை பொருத்த வரை ரிஷப்பை அணியில் இருந்து விடுவித்து விட்டு மினி ஏலத்தில் ரூ.14 அல்லது ரூ.15 கோடிக்கு ஏலம் எடுக்கலாம். மீதமுள்ள தொகையை வைத்து இன்னும் சில திறமையான வீரர்களை வாங்கலாம். அதன்மூலம் நீங்கள் அடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணியாக மாறலாம்" என்று தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆர்சிபி அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது
    • சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    11 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், 2026 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்கு தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

    ஐபிஎல் வரலாற்றில், ஒரு அணியை தடை செய்வது ஒன்றும் புதிதல்ல. மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் 2015 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×