என் மலர்

    ஐ.பி.எல்.(IPL)

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10 வயதில் இருந்தே நாள் ஒன்றுக்கு 600 பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார்.
    • டோனி உலக கோப்பையை வென்ற ஆண்டில் (2011) தான் அவர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வைபவ் சூர்யவன்ஷி 2011-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி பீகார் மாநிலம் சமஸ்கிபூர் மாவட்டம் தாஜ்பூர் கிராமத்தில் பிறந்தார். தலைநகர் பாட்னாவில் இருந்து 86 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கிராமம் இருக்கிறது.

    தனது இளம் வயதில் பீகார் அணிக்கு ரஞ்சி டிராபியில் அறிமுகம் ஆனார். அவருக்கு அப்போது 12 வயதாகும். முதல் தர போட்டியில் விளையாடியதன் மூலம் ஐ.பி.எல்.லில் ஆட தகுதி பெற்றார்.

    13 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஐ.பி.எல்.லில் ரூ.1.1 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. தற்போது தனது 14 வயதில் சதம் அடித்து சூர்யவன்ஷி புதிய வரலாறு படைத்துள்ளார்.

    சூர்யவன்ஷியின் கிரிக்கெட் கனவை நனவாக்குவதற்காக அவரது தந்தை சஞ்சீவ் விவசாய நிலத்தை விற்றுள்ளார். 10 வயதில் இருந்தே நாள் ஒன்றுக்கு 600 பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார். 16 முதல் 17 வயதுடைய பந்து வீச்சாளர்களை அவர் எதிர்கொண்டு விளையாடினார். மகனுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அவரது தந்தை வழங்கினார். கடினமான உழைப்புக்கு ஏற்ற பலன் தற்போது கிடைத்திருக்கிறது. மிக இளம் வயதில் சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

    ஷர்துல் தாக்கூருக்கு எதிரான முதல் பந்தில் சிக்சர் அடித்து தனது ஐ.பி.எல்.லில் வாழ்க்கையை அவர் தொடங்கினார். இன்று உலகம் முழுவதும் போற்றும் நபராக வைபவ் சூர்யவன்ஷி உள்ளார். சிறிய கிராமத்தில் இருந்து வந்து ஐ.பி.எல்.லில் முத்திரை பதித்துள்ளார்.

    டோனி உலக கோப்பையை வென்ற ஆண்டில் (2011) தான் அவர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 20 ஓவர் போட்டிகளில் இளம் வயதில் சதம் அடித்தவர் என்ற புதிய சாதனையை சூர்யவன்ஷி படைத்தார்.
    • சூர்யவன்ஷியின் ஸ்கோரில் 94 ரன் பவுண்டரி, சிக்சர் மூலம் வந்தது. இதுவும் புதிய சாதனையாகும்.

    ஐ.பி.எல். போட்டியில் நேற்று குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் 210 ரன் இலக்கை 25 பந்து எஞ்சி இருந்த நிலையில் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ராஜஸ்தான் இந்த வெற்றிக்கு தொடக்க வீரரும், 14 வயதே நிரம்பியவருமான வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான ஆட்டமே காரணமாகும்.

    ஐ.பி.எல்.லில் தனது 3-வது போட்டியிலேயே அவர் சதம் அடித்து முத்திரை பதித்தார். அவர் 38 பந்துகளில் 101 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும், 11 சிக்சர்களும் அடங்கும். சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்தார்.

    இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் அதிவேகத்தில் சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை சூர்ய வன்ஷி படைத்தார். அதே நேரத்தில் இந்திய வீரர்களில் அதிவேகத்தில் சதம் அடித்து புதிய வரலாறு நிகழ்த்தினார்.

    வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல் (பெங்களூரு) 2013-ம் ஆண்டு புனே வாரியர்சுக்கு எதிராக 30 பந்தில் சதம் அடித்தார். அவருக்கு அடுத்தப்படியாக வைபவ் சூர்யவன்ஷி இருக்கிறார். இந்திய வீரர்களில் யூசுப் பதான் (ராஜஸ்தான் ராயல்ஸ்) 2010-ம் ஆண்டு மும்பைக்கு எதிராக 37 பந்துகளில் செஞ்சுரி அடித்தார். 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை இளம் வீரர் சூர்யவன்ஷி முறியடித்தார்.

    ஐ.பி.எல்.லில் அதிவேகத்தில் சதம் அடித்த முதல் 3 வீரர்களில் கெய்ல் (30 பந்து), சூர்யவன்ஷி (35), யூசுப் பதான் (37) உள்ளனர்.

    20 ஓவர் போட்டிகளில் இளம் வயதில் சதம் அடித்தவர் என்ற புதிய சாதனையை சூர்யவன்ஷி படைத்தார். அவருக்கு 14 வயது 32 நாட்கள் ஆகிறது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு மகாராஷ்டிரா வீரர் விஜய் ஜோல் மும்பைக்கு எதிராக 18 வயது 118 நாட்களில் சதம் அடித்து இருந்தார்.

    ஐ.பி.எல். போட்டிகளில் இளம் வயதில் சதம் அடித்து இருந்தவர் மனீஷ் பாண்டே. 2009-ம் ஆண்டு அவர் தனது 19 வயது 253 நாட்களில் செஞ்சுரி அடித்து இருந்தார். இந்த சாதனையையும் சூர்யவன்ஷி முறியடித்தார். மேலும் இளம் வயதில் அதிவேகத்தில் அரை சதம் அடித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

    ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்களில் அவர் முரளி விஜய்யுடன் இணைந்து முதல் இடத்தை பிடித்தார்.

    சி.எஸ்.கே. அணிக்காக ஆடிய முரளி விஜய் 2010 -ல் மும்பைக்கு எதிராக 11 சிக்சர்கள் அடித்தார். சூர்யவன்ஷி நேற்று 11 சிக்சர்கள் அடித்து அதை சமன் செய்தார்.

    முரளி விஜய், சூர்ய வன்ஷி ஆகியோருக்கு அடுத்தப்படியாக சஞ்சு சாம்சன் 10 சிக்சர் அடித்துள்ளார். சர்வதேச வீரர்களில் கெய்ல் 17 சிக்சர்களும், மேக்குலம் 13 சிக்சர்களும், டி வில்லியம்ஸ் 12 சிக்சர்களும் ஒரு ஆட்டத்திலும் அடித்துள்ளனர்.

    சூர்யவன்ஷியின் ஸ்கோரில் 94 ரன் பவுண்டரி, சிக்சர் மூலம் வந்தது. இதுவும் புதிய சாதனையாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொடர் மீதான சுவாரசியமும், தரமான கிரிக்கெட்டையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம்.
    • இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத ஒரு அணி இந்த முறை மகுடம் சூட வேண்டும் என்று விரும்புகிறேன்.

    10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது மார்ச் கடைசியில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 74 ஆட்டங்கள் கொண்டதாக நடத்தப்படுகிறது. 2022-ம் ஆண்டில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. பெரும்பாலும் அந்த சமயம் சர்வதேச போட்டிகள் இல்லாத வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை சரிகட்டியுள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 ஆண்டில் ஆட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    இது குறித்து ஐ.பி.எல். சேர்மன் அருண் துமால் கூறுகையில், 'ஐ.பி.எல்.-ல் ஒவ்வொரு அணியும் முழுமையாக உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோதும் வகையில் போட்டி அட்டவணையை விரிவுப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இத்தகைய பாணியில் ஆடும் போது, மொத்தம் 94 ஆட்டங்கள் நடத்த வேண்டி இருக்கும். அடுத்த டி.வி. ஒளிபரப்பு உரிமம் வழங்கும் காலக்கட்டமான 2028-ல் இருந்து அதற்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் 94 ஆட்டங்கள் என்றால் போட்டிக்குரிய நாட்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டி இருக்கும்.

    போட்டி அட்டவணைக்கு ஏற்ப காலக்கட்டத்தை உருவாக்க, இரு நாட்டு கிரிக்கெட் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டிகளை எல்லாம் பார்க்க வேண்டி உள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் விவாதிக்கிறோம்.

    அதே சமயம் அணிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை. 10 அணிகள் என்பதே நன்றாகத் தான் இருக்கிறது. தொடர் மீதான சுவாரசியமும், தரமான கிரிக்கெட்டையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டி வளர்ச்சி அடைந்து வருகிறது. ரசிகர்களின் ஆர்வத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், 'இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத ஒரு அணி இந்த முறை மகுடம் சூட வேண்டும் என்று விரும்புகிறேன். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் கோப்பையை வெல்லவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு முறை இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் அவ்வப்போது நன்றாக ஆடுகிறது. இந்த அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தால், இந்த சீசனில் ஒரு புதிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். அவ்வாறு நடந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்.' என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • கொல்கத்தா 18 ஆட்டங்களிலும், டெல்லி 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் இன்றிரவு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (2 முறை லக்னோ, ஐதராபாத், சென்னை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியுடன் (மும்பை, குஜராத், பெங்களூரு அணிகளிடம்) 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் சரியான பார்ட்னர்ஷிப் அளிக்காததும், வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் (51 ரன்) ரன்னை வாரி வழங்கியதும் பாதகத்தை ஏற்படுத்தியது.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (364) அபிஷேக் போரெல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். கருண் நாயர், அஷூதோஷ் ஷர்மா கணிசமான பங்களிப்பை அளித்தால் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், விப்ராஜ் நிகம் நம்பிக்கை அளிக்கின்றனர்.

    கொல்கத்தா அணி இந்த சீசனில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி தடுமாறி வருகிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம்) என 7 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. கடைசி 2 ஆட்டங்களில் பஞ்சாப், குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து பணிந்த கொல்கத்தா அணி, பஞ்சாப்புடன் இரண்டாவது முறையாக மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்தானது. இதில் 202 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி ஒரு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்திருந்த நிலையில் மழை பலமாக கொட்டியதால் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது.

    கொல்கத்தா அணிக்கு பேட்டிங் பெரும் தலைவலியாக இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரராக சுனின் நரினுடன் களம் கண்ட குயின்டான் டி காக் சோபிக்காததால் ரமனுல்லா குர்பாஸ் அந்த இடத்துக்கு கொண்டு வரப்பட்டார். அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அந்த அணியில் கேப்டன் ரஹானே (271 ரன்) தவிர யாரும் 200 ரன்னை கூட தாண்டவில்லை. வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங்கிடம் இருந்து இயல்பான அதிரடி வெளிப்படவில்லை. பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் பலம் சேர்க்கிறார்கள்.

    உள்ளூர் ரசிகர்களுக்கு மத்தியில் 7-வது வெற்றியை குறிவைத்து டெல்லி அணி களம் காண்கிறது. சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவதுடன், அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இனி வரும் எல்லா ஆட்டங்களும் முக்கியம் என்பதால் கொல்கத்தா அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா 18 ஆட்டங்களிலும், டெல்லி 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    டெல்லி: பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், கருண் நாயர், லோகேஷ் ராகுல், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், அஷூதோஷ் ஷர்மா அல்லது மொகித் ஷர்மா.

    கொல்கத்தா: ரமனுல்லா குர்பாஸ், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ரோமன் பவெல், ஆந்த்ரே ரஸ்செல், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, சேத்தன் சகாரியா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரர் வைபவ் 35 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
    • வைபவ் 101 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் தொடரின் 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் தீக்ஷனா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - வைபவ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர்.

    தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரர் வைபவ் 35 பந்தில் சதம் விளாசி அசத்தினார். அவர் 101 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் குவித்தது.

    அடுத்த சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் அரை சதம் விளாசினார். அடுத்து வந்த நிதிஷ் ரானா 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனை தொடர்ந்து ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் ரியான் பராக் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    இறுதியில் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுப்மன் கில் 50 பந்தில் பவுண்டரி, 4 சிக்சருடன் 84 ரன்கள் விளாசினார்.
    • ஜாஸ் பட்லர் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    ஐபிஎல் தொடரின் 47ஆவது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.2 ஓவரில் 93 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 30 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஜாஸ் பட்லர் களம் இறங்கினார். இவர் களம் இறங்கியதில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுப்மன் கில் 29 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 50 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 84 ரன்கள் அடித்தார். கில் ஆட்டமிழக்கும்போது குஜராத் டைட்டன்ஸ் 16.4 ஓவரில் 167 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது குஜராத் டைட்டன்ஸ் 18.4 ஓவரில் 193 ரன்கள் குவித்திருந்தது. 4ஆவது விக்கெட்டுக்கு பட்லர் உடன் டெவாட்டியா ஜோடி சேர்ந்தார்.

    கடைசி ஓவரை ஆர்ச்சர் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் 2 ரன் அடித்து பட்லர் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார். குஜராத் இந்த ஓவரில் 13 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 புள்ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது
    • குஜராத் அணி 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 47-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி, 7-ல் தோல்வி என 4 புள்ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. குஜராத் அணி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று வலுவான நிலையில் காணப்படுகிறது.

    இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் குஜராத் 58 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அந்த ஆதிக்கத்தை நீட்டிக்கும் வேட்கையுடன் ஆயத்தமாகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெல்லி அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
    • கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவு இல்லையுடன் 7 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல் போட்டியின் 48-வது லீக் ஆட்டம் டெல்லியில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் அக்ஷர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ்- ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கொல்கத்தாவை வீழ்த்தி 7-வது வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவு இல்லையுடன் 7 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. வெற்றி நெருக்கடியில் இருக்கும் அந்த அணி டெல்லியை அதிர்ச்சிகரமாக வீழ்த்தும் ஆர்வத்துடன் காணப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • இந்த போட்டியில் அங்கத் பும்ரா அமைதியாக இருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

    மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து, 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 19 ஆவது ஓவரில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இப்போட்டியை பும்ராவின் மனைவி சஞ்சனா மற்றும் அவரது மகன் அங்கத் பும்ரா ஆகியோர் நேரில் கண்டுகளித்தனர்.

    இந்நிலையில், இந்த போட்டியில் அங்கத் பும்ரா அமைதியாக இருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. ஏன் அங்கத் சிறிது சந்தோசமாக இல்லமால் அமைதியாக இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

    இதனையடுத்து, நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு பும்ரா மனைவி சஞ்சனா காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "என் மகன் அங்கத் பும்ரா ஒரு வைரல் செய்தியாக ஆக்கப்படுவதில் எங்களுக்கு துளியும் விருப்பமில்லை. ஆன்லைனில் உள்ளவர்கள் வெறும் 3 வினாடி வீடியோவை வைத்து அங்கத் யார்? அவர் எப்படிப்பட்டவர்? என தீர்மானிக்கின்றனர். Trauma, Depression போன்ற வார்த்தைகளை ஒன்றரை வயதான ஒரு குழந்தையின் குணாதிசயங்களுடன் ஒப்பிட்டு பேசுவதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. எங்களின் மகனை பற்றியும், வாழ்க்கையை பற்றியும் உங்களுக்கு ஒன்றும் தெரியாது" என்று பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோலி பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது கீப்பிங் செய்த ராகுலிடம் சென்று வாக்குவாதம் செய்தார்.
    • இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.

    டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கியபெங்களூரு அணி 18.3 ஓவரில் 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

    இந்த போட்டியின் போது வீராட் கோலிக்கும், கே.எல் ராகுலுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.

    கோலி பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது கீப்பிங் செய்த ராகுலிடம் சென்று வாக்குவாதம் செய்தார். அவரும் பதில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடுமையான வாக்குவாதத்துக்கு என்ன காரணம் என்று தெளிவாக தெரியவில்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்று மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின
    • இப்போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

    மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து, 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 19 ஆவது ஓவரில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் லக்னோ அணி குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசி முடிக்கவில்லை. கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. மெதுவாக பந்து வீசியதற்காக லக்னோ அணி கேப்டன் ரிஷப்பண்ட் மீது ஐ.பி.எல். விதிமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அவருக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட் டுள்ளது. 2-வது முறையாக அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அணியில் உள்ள மற்ற வீரர்கள் மீதும் ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை எழுந்துள்ளது. அவர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் இதில் எது குறைவாக இருக்கிறதோ அது அபராதமாக விதிக்கப்படும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
    • அப்போட்டியில் கே.எல்.ராகுல், தனது பேட்டை தரையில் வட்டமிட்டு அடித்து ஆக்ரோஷமாக கொண்டாடினார்.

    டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கியபெங்களூரு அணி 18.3 ஓவரில் 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

    இதனையடுத்து "MY HOME GROUND"என பெங்களூரு மைதானத்தில் கே.எல்.ராகுல் செய்த சைகையை டெல்லி மைதானத்தில் ஜாலியாக ரீ-க்ரியேட் செய்து விராட் கோலி கிண்டலடித்தார்.

    முன்னதாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. அப்போட்டியில் 93 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட கே.எல்.ராகுல், தனது பேட்டை தரையில் வட்டமிட்டு அடித்து ஆக்ரோஷமாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×