என் மலர்

    பைக்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்கூட்டர் ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
    • மாடல் தனிப்பட்ட பயணத்திற்கு மட்டுமல்ல, சிறு வணிகங்கள் மற்றும் சரக்கு பயன்பாட்டிற்கும் ஏற்றதாக அமைகிறது.

    கைனடிக் கிரீன் எனர்ஜி அண்ட் பவர் சொல்யூஷன்ஸ் புதிய E லூனா பிரைம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய E லூனா பிரைம் மாடல் ரூ. 82,490 (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இந்த மின்சார ஸ்கூட்டர் 110 கிலோமீட்டர் மற்றும் 140 கிலோமீட்டர் என இருவித ரேஞ்ச் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய E லூனா பிரைம், பயணிகள் பிரிவுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் வழக்கமான 100 சிசி மற்றும் 110 சிசி பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்படுகிறது.

    புதிய E லூனா பிரைம் மாடலில் 16 இன்ச் அலாய் வீல்கள், பிரகாசமான எல்இடி ஹெட்லேம்ப், டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்போர்ட்டியான ஒற்றை இருக்கை மற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல விசாலமான பகுதி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த மாடல் தனிப்பட்ட பயணத்திற்கு மட்டுமல்ல, சிறு வணிகங்கள் மற்றும் சரக்கு பயன்பாட்டிற்கும் ஏற்றதாக அமைகிறது. இந்த ஸ்கூட்டர் ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    கரடுமுரடான நிலப்பரப்புகளுக்கு நீடித்து உழைக்கும் அதே வேளையில், செயல்திறன் மற்றும் வசதியையும் பராமரிக்கும் வகையில் E லூனா பிரைம் இருக்கும் என்று கைனடிக் கிரீன் கூறுகிறது. இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்களை கொண்ட நிறுவனம், E லூனா பிரைம் மாடல் பரவலாகக் கிடைக்கச் செய்யத் திட்டமிட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய அரசு 350 சிசி-க்கும் மேல் உள்ள பைக்குகளுக்கான ஜிஎஸ்டி வரியை பழைய 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
    • அனைத்து பெரிய பைக்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.

    சர்வதேச சந்தையில் மிகவும் புகழ்பெற்ற சூப்பர்பைக் மாடல்களில் ஒன்று ஹயபுசா. வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்புமிக்க சூப்பர் பைக் மாடல்களில் ஒன்றாக விளங்கும் ஹயபுசா விலை இந்திய சந்தையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி 2.0 மாற்றத்திற்கு பிறகு ஹயபுசா மாடலின் விலையை ரூ. 1.16 லட்சம் உயர்த்த சுசுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    ஹயபுசாவின் பழைய விலை சுமார் ரூ. 17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருந்தது. ஆனால் இப்போது இந்த விலை உயர்வால், இந்த சூப்பர் பைக் ரூ. 18.06 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய அரசு 350 சிசி-க்கும் மேல் உள்ள பைக்குகளுக்கான ஜிஎஸ்டி வரியை பழைய 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, அனைத்து பெரிய பைக்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.

    இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் சூப்பர்பைக் மாடல் சுசுகி ஹயபுசா ஆகும். ஸ்டைலிங், அதிக செயல்திறன் மற்றும் அதீத வசதி ஆகியவற்றின் கலவையானது இந்த மோட்டார் சைக்கிளை சுசுகிக்கு அதிகம் விற்பனையாகும் பைக்காக மாற்றியுள்ளது.

    ஆனால் இந்த ஜிஎஸ்டி உயர்வால், இந்த சூப்பர் பைக் விற்பனை குறுகிய காலத்தில் மந்தநிலையை சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது. எனினும், ஹயபுசா ஒரு பிராண்டு என்பதால் அதற்கென மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர். காலப்போக்கில், ஒட்டுமொத்த விற்பனை ஜிஎஸ்டிக்கு முந்தைய காலத்திற்கு வரலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த மோட்டார் சைக்கிளில் 449 சிசி பேரலல் டுவின் லிக்விட் கூல்டு மோட்டார் இடம் பெற்றுள்ளது.
    • உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிஎப் மோட்டோ நிறுவனம், 450 MT என்ற அட்வெஞ்சர் டூரர் மோட்டார்சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை கால கொண்டாட்டத்தையொட்டி, இது சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மோட்டார் சைக்கிளில் 449 சிசி பேரலல் டுவின் லிக்விட் கூல்டு மோட்டார் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,500 ஆர்.பி.எம். மில் 44 பி.எச்.பி. பவரையும், 6,250 ஆர்.பி.எம்.மில் 44 நியூட்டன் மீட்டர் டார்க்கை வெளிப்படுத்தும். 20 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தும் வகையில் இதன் என்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது.

    உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எந்த இந்திய நிறுவனம் இதனை சந்தைப்படுத்தும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

    புதிய ஜிஎஸ்டி விதிகளின்படி, இது 40 சதவீத வரி விதிப்பு பிரிவில் (ஆடம்பர பொருள்) இடம் பெறுகிறது. சர்வதேச சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் சுமார் ரூ.3.99 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கவாசகி Z900 பைக்கில் 948cc, இன்லைன்-4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது.
    • இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் பல்வேறு பொருட்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ஜி.எஸ்.டி. வரிகள் மாற்றியமைக்கப்பட்டு அவை அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்தும், குறைக்கப்பட்டும் இருக்கின்றன. அந்த வரிசையில், ஜிஎஸ்டி 2.0 வரி அமலுக்கு வந்த பிறகு கவாசாகி Z900 மோட்டார்சைக்கிள் விலை அதிகரித்துள்ளது.

    அதன்படி இன்லைன்-4, ஸ்டிரீட் நேக்கட் கவாசகி Z900 பைக்கின் விலை இப்போது ரூ.10.18 லட்சமாக மாறியுள்ளது. இது முந்தைய விலையை விட ரூ.66,000 அதிகம் ஆகும். புதிய வரி விதிப்பு பெரிய பைக்குகளை வாங்குபவர்களின் திட்டங்களை நிச்சயமாக பாதிக்கும். மேலும் பல பைக்குகளின் விலைகள் உயரும்.

    2025ஆம் ஆண்டிற்காக, இந்த பைக் ஏராளமான புதுப்பிப்புகளைப் பெற்றுள்ளது. 'சுகோமி' வடிவமைப்பு கொண்டுள்ளது. மேலும், இதில், புதிய LED ஹெட்லைட், நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட டேங்க் எக்ஸ்டென்ஷன்களுடன் கூடிய ஃபியூவல் டேன்க் மற்றும் புதிய LED டெயில் லைட்டுடன் கூர்மையான தோற்றமுடைய டெயில் பகுதியைப் பெறுகிறது.



    கவாசகி Z900 பைக்கில் 948cc, இன்லைன்-4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 123hp பவர் மற்றும் 97.4Nm டார்க்கை உருவாக்குகிறது. மேலும் இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ப்ளூடூத் இணைப்புடன் கூடிய புதிய வண்ண TFT டிஸ்ப்ளே, இரண்டு பவர் மோட்கள், ரைடு மோட்கள், IMU-அசிஸ்ட், கார்னரிங் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் ABS ஆகியவற்றைப் பெறுகிறது.

    இந்த பைக் ரூ.10.86 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் உள்ள ட்ரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர் உடன் போட்டியிடுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய ஸ்கூட்டரில் 2.3 kWh LPF பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
    • LPF பேட்டரி 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வருகிறது.

    கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் மின்சார இருசக்கர வாகன நிறுவனமான ஆம்பியர், இந்தியாவில் மேக்னஸ் கிராண்ட் குடும்ப ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. புதிய மேக்னஸ் கிராண்ட் மாடல் அசத்தலான ஸ்டைல், சௌகரியம், ஆயுள், பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட LFP பேட்டரி தொழில்நுட்பத்தில் புதிய தரநிலைகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.

    ஆம்பியர் பிரான்டின் புதிய மேக்னஸ் கிராண்ட் ஸ்கூட்டர் விலை ரூ.89,999 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆம்பியர் மேக்னஸ் நியோவை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் மேக்னஸ் கிராண்ட், பெரும்பாலான வடிவமைப்பு சிறப்பம்சங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    இந்த நிறுவனம் அதன் புதிய குடும்ப ஸ்கூட்டரை இரண்டு புதிய டூயல் டோன் பிரீமியம் நிறங்கள்- மேட்சா கிரீன் மற்றும் ஓஷன் புளூ ஆகியவற்றுடன், கோல்டு ஃபினிஷ் வழங்கியுள்ளது. மேலும், இது இப்போது வலுப்படுத்தப்பட்ட கிராப் ரெயில், மேம்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பம், விசாலமான இருக்கை மற்றும் அதிக சுமை தாங்கும் திறன் ஆகியவற்றுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.



    அம்சங்களைப் பொருத்தவரை, புதிய ஸ்கூட்டரில் 2.3 kWh LPF பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 80-95 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. LPF பேட்டரி 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வருகிறது.

    அறிமுகத்தின் போது, கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் நிர்வாக இயக்குனர் விகாஸ் சிங் கூறுகையில், "புதிய மேக்னஸ் கிராண்ட் மாடல் ஆம்பியரின் நிஜ உலக செயல்திறன், பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பில் கவனம் செலுத்துவதை எடுத்துக்காட்டுகிறது. குடும்பங்கள் மற்றும் பயணிகளின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர், ஸ்டைல், ஆயுள் மற்றும் உறுதித்தன்மையின் இணக்கமான கலவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது," என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பைக் 217 கிலோ எடையைக் கொண்டுள்ளது. இது மிகவும் கனமாக உள்ளது.
    • இந்த பைக்கில் முழுமையாக LED விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஹோண்டா நிறுவனம் ஒருவழியாக தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளை வெளியிட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் பைக் WN7 என்று அழைக்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் சில மாதங்களில் விற்பனைக்கு வரும்.

    பெயரில் உள்ள 'W' என்பது கான்செப்ட்-ஐ குறிக்கிறது, மேலும் 'N' என்பது 'நேக்கட்' என்பதைக் குறிக்கிறது. 7 என்ற எண் அது சேர்ந்த திறனை குறிக்கிறது. இந்த பைக் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 130 கிலோமீட்டர்கள் வரை செல்லும். இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் பைக்கின் பேட்டரியை வெறும் 30 நிமிடங்களில் 20 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்ற முடியும். 6kVA சார்ஜரின் உதவியுடன், இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

    பவர்டிரெயினைப் பொறுத்தவரை, இது 18kW லிக்விட்-கூல்டு மோட்டாரை பெறுகிறது. இது 600cc ICE மோட்டார்சைக்கிளின் சக்தியை வழங்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த பைக் 217 கிலோ எடையைக் கொண்டுள்ளது. இது மிகவும் கனமாக உள்ளது.

    ஹோண்டா இந்த பைக்கில் 5-இன்ச் ஃபுல் கலலர் TFT ஸ்கிரீனை பொருத்தியுள்ளது. இது ஒருங்கிணைந்த RoadSync இணைப்புடன் வருகிறது. இந்த பைக்கில் முழுமையாக LED விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஹோண்டா WN7 முதலில் இங்கிலாந்தில் GBP 12,999 (இந்திய மதிப்பில் ரூ. 15.5 லட்சம்) விலையில் விற்பனைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த பைக்கில் 349 சிசி ஜே சிரீஸ் ஏர் கூல்டு எஞ்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
    • இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது மீட்டியோர் 350 பைக்கை நவீனப்படுத்தி, புதிய வண்ணங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் பயர்பால், ஸ்டெல்லர், அரோரா, சூப்பர் நோவா என நான்கு வேரியன்ட்களில், புதுமையான நிறங்களில் காட்சியளிக்கிறது.

    புதுமையான எல்இடி ஹெட்லைட், டிரிப்பர் நேவிகேஷன் பாட், எல்இடி இண்டிகேட்டர், டைப்-சி யூஎஸ்பி பாஸ்ட் சார்ஜிங் போர்ட், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் போன்ற நவீன அம்சங்கள் இந்த பைக்கின் பயர்பால் மற்றும் ஸ்டெல்லர் வேரியன்ட்களில் இடம்பெறுகின்றன.

    அட்ஜெஸ்டபிள் பிரேக் மற்றும் கிளட்ச் லிவர்கள் போன்றவை சூப்பர் நோவா, அரோரா ஆகிய வேரியன்ட்களில் கூடுதல் அம்சங்களாக கிடைக்கிறது.

    இந்த பைக்கில் 349 சிசி ஜே சிரீஸ் ஏர் கூல்டு எஞ்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 20.2 பி.எச்.பி. பவரையும், 27 என்.எம். டார்க் திறனையும் வழங்கும். இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இதன் ஆரம்ப விலை ரூ.1.96 லட்சம்.

    இந்த பைக்கின் பயர்பால் வேரியன்ட் ஆரஞ்ச் மற்றும் கிரே நிறங்களிலும், ஸ்டெல்லர் மேட் கிரே மற்றம் மெரைன் புளூ ஆகிய நிறங்களிலும், அரோரா வேரியன்ட் ரெட்ரோ கிரீன், அரோரா ரெட் ஆகிய நிறங்களிலும், சூப்பர் நோவா கருப்பு நிறத்திலும் கிடைக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய ஹோண்டா பைக்கில் 999cc இன்லைன் 4-சிலிண்டர் மோட்டார் உள்ளது.
    • இந்த யூனிட் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    ஹோண்டாவின் முதன்மை ஸ்போர்ட் பைக் CBR1000RR-R இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் டாப் எண்ட் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 28.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலின் விலையை விட சுமார் ரூ. 2.23 லட்சம் விலை அதிகம் ஆகும். இந்த பைக் புதுப்பிக்கப்பட்ட பாடிவொர்க் மற்றும் திருத்தப்பட்ட வன்பொருளைப் பெறுகிறது.

    இந்த பைக்கின் முன்பக்க அமைப்பு அதன் முந்தைய மாடலை போலவே உள்ளது. இந்த பைக்கின் ஃபேரிங்கில் புதிதாக ஏரோடைனமிக் விங்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பைக் அதிவேகத்தில் செல்லும் போது டவுன்ஃபோர்ஸ் அதிகப்படுத்துகிறது.

    புதிய ஹோண்டா பைக்கில் 999cc இன்லைன் 4-சிலிண்டர் மோட்டார் உள்ளது. இது 14,000rpm-இல் 214.5bhp பவர் மற்றும் 12,000rpm இல் 113Nm டார்க் உருவாக்குகிறது. இந்த செயல்திறன் முந்தைய மாடலைப் போலவே உள்ளன. இந்த யூனிட் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பை-டைரக்ஷனல் குயிக்ஷிஃப்டர் மற்றும் அக்ரபோவிக் டைட்டானியம் எக்சாஸ்ட் உள்ளது.



    சஸ்பென்ஷனுக்கு ஒலின்ஸ் யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குகள் மற்றும் பின்புற மோனோஷாக் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டும் மின்னணு முறையில் சரிசெய்யக்கூடியவை. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் டூயல் 330mm டிஸ்க், பின்புறத்தில் 220mm ஒற்றை டிஸ்க் பெற்றிருக்கிறது.

    எலெக்ட்ரானிக்ஸ்-ஐ பொருத்தவரை 5 லெவல் பவர் மோட்கள், 9 லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல், 3-லெவல் எஞ்சின் பிரேக் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • யமஹா Nmax 155 மாடல் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
    • யமஹா ஏற்கனவே ஏரோக்ஸ் 155 மற்றும் ஆர்15 ஆகியவற்றை இந்தியாவில் தயாரித்து வருகிறது.

    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் நவம்பர் 11ஆம் தேதி புதிய வாகனம் வெளியிடுவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி யமஹா நிறுவனம் தனது XSR 155 அல்லது Nmax 155 மாடலை நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யும் என்று நம்பலாம்.

    இரண்டில் ஒன்று அல்லது இரண்டு மாடல்களையும் கூட யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம். XSR 155 மற்றும் Nmax 155 என இரண்டு மாடல்களும் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் மேக்ஸி-ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டதால், யமஹா Nmax 155 மாடல் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.



    மேலும், யமஹா ஏற்கனவே ஏரோக்ஸ் 155 மற்றும் ஆர்15 ஆகியவற்றை இந்தியாவில் தயாரித்து வருகிறது. எனவே, என்மேக்ஸ் 155 மற்றும் எக்ஸ்எஸ்ஆர் 155 ஆகியவற்றை இந்தியாவில் உள்ளூர்மயமாக்குவதற்கு அதிக செலவு ஏற்படாது. ஏனெனில் இவை ஏரோக்ஸ் மற்றும் ஆர்15 போன்ற அதே தளங்களை அடிப்படையாகக் கொண்டவை.

    புதிய ஜிஎஸ்டி விகிதங்களுடன், இந்த இரண்டு தயாரிப்புகளும் 18 சதவீத ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருவதால் அவற்றை எளிதாக அணுக முடியும். அறிமுகப்படுத்தப்பட்டால், இவை ஏரோக்ஸ் மற்றும் ஆர்15-ஐ விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2026 கவாசகி நிஞ்ஜா ZX-10R மாடலில் உள்ள எஞ்சின் 193.1bhp பவர் மற்றும் 112Nm டார்க் திறன் கொண்டிருக்கிறது.
    • பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் இரட்டை 330mm டிஸ்க்குகள், பின்புறம் ஒற்றை 220mm டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கவாசகி நிறுவனம் 2026 நிஞ்ஜா ZX-10R பைக்கை ரூ. 19.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது ரூ. 18.50 லட்சம் விலை கொண்ட 2025 மாடலை விட ரூ. 99,000 அதிகமாகும். விந்தையாக, இந்த மோட்டார்சைக்கிள் அதன் சக்தி மற்றும் டார்க் உள்ளிட்டவைகளில் லேசான சரிவை சந்தித்துள்ளது.

    சமீபத்திய மாடலோடு சேர்த்து, 2025 நிஞ்ஜா ZX-10R மாடலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. பழைய மாடலின் இருப்பை அகற்றுவதற்கான கவாசகியின் உத்தியாக புதிய மாடலின் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. புதிய மாடலை அதிக விலைக்கு பட்டியலிடுவது நிச்சயமாக 10R ஐ வாங்குபவர்களை பழைய மாடலைத் தேர்வுசெய்யவும், சிறிது பணத்தை மிச்சப்படுத்தவும் ஊக்குவிக்கும்.

    மேலும், பழைய மாடலின் சற்று அதிக பவர் மற்றும் டார்க் 2026 மாடலை விட அதைத் தேர்வுசெய்ய மற்றொரு காரணமாகும். அதனுடன் சேர்த்து, 2025 மாடலில் ரூ. 1.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தெளிவாக மிகவும் நியாயமான மற்றும் சிறந்த தேர்வாக அமைகிறது. தள்ளுபடி சலுகை செப்டம்பர் 30ஆம் தேதியோ அல்லது ஸ்டாக் இருக்கும் வரையிலோ செல்லுபடியாகும்.



    2026 கவாசகி நிஞ்ஜா ZX-10R மாடலில் உள்ள எஞ்சின் 193.1bhp பவர் மற்றும் 112Nm டார்க் திறன் கொண்டிருக்கிறது. இது முந்தைய மாடலின் எஞ்சினை விட 7bhp மற்றும் 2.9Nm குறைவு ஆகும். இவை தவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றமும் இல்லை.

    அம்சங்களின் பட்டியலில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி கொண்ட TFT கன்சோல், பல ரைடு மோட்கள், டூயல் சேனல் ஏபிஎஸ், குரூயிஸ் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், எஞ்சின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவை அடங்கும். பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் இரட்டை 330mm டிஸ்க்குகள், பின்புறம் ஒற்றை 220mm டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹோண்டாவின் பிரபல மாடல்களான ஆக்டிவா, ஷைன் 125, யூனிகார்ன், சிபி350 மற்றும் பல மாடல்களும் அடங்கும்.
    • பிரீமியம் பைக் பெறும் விலை உயர்வுகளை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

    ஹோண்டா நிறுவனம், அதன் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை, மாடல் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து, ரூ.18,887 வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஹோண்டா நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு முழு ஜிஎஸ்டி பலன்களை வழங்க உள்ளது.

    புதிய ஜிஎஸ்டி விகிதங்களின் கீழ், 350 சிசிக்கு கீழ் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு முந்தைய 28 சதவீதத்திலிருந்து 18 சதவீத வரி குறைக்கப்பட்டுள்ளது. ஹோண்டாவின் பிரீமியம் இறக்குமதி செய்யப்பட்ட பெரிய பைக்குகள் (350 சிசிக்கு மேல்) தவிர, மற்ற பைக் மாடல்கள் அனைத்தும் விலைக் குறைப்பைக் கண்டுள்ளது.



    இதில் ஹோண்டாவின் பிரபல மாடல்களான ஆக்டிவா, ஷைன் 125, யூனிகார்ன், சிபி350 மற்றும் பல மாடல்களும் அடங்கும். 18 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் பைக்குகளுக்கான விலைக் குறைப்பை ஹோண்டா அறிவித்துள்ளது.

    ஆனால் அதன் பிரீமியம் பைக் பெறும் விலை உயர்வுகளை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. புதிய ஜிஎஸ்டி விகிதங்களின் கீழ், 350 சிசிக்கு மேல் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு முந்தைய 31 சதவீதத்திலிருந்து 40 சதவீத வரி விதிக்கப்படும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய அப்ரிலியா SR GT ரெப்ளிகா யூரோ 5+ விதிகளுக்கு உட்பட்ட லிக்விட்-கூல்டு எஞ்சின் கொண்டுள்ளது.
    • இதன் 125cc சிங்கில் சிலிண்டர் எஞ்சின் 8,900rpm இல் 14.75bhp பவர் மற்றும் 6,750rpm இல் 12Nm டார்க் வெளிப்படுத்துகிறது.

    ஐரோப்பிய சந்தைக்கான அப்ரிலியா SR GT ரெப்ளிகா 2025 வெளியிடப்பட்டது. இது 125cc மற்றும் 200cc வேரியண்ட்களைக் கொண்ட அதன் "அர்பன் அட்வென்ச்சர்" ஸ்கூட்டர் வரிசையின் மிகவும் ஸ்போர்ட்டியான மாடல் ஆகும். இந்த மாடல் உலக சாம்பியன் ஜார்ஜ் மார்ட்டின் மற்றும் மார்கோ பெஸ்செச்சி ஆகியோரால் பந்தயத்தில் பயன்படுத்திய அப்ரிலியா RS-GP மாடலின் இயந்திரங்களை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.

    சுங்கம் மற்றும் வரிகளைத் தவிர்த்து ஐரோப்பிய ஒன்றியத்தில் SR GT ரெப்ளிகா ரூ. 4.7 லட்சத்தில் இருந்து விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது கேள்விக்குறியான விஷயம் தான்.

    இந்த ஸ்கூட்டர் மேட் பிளாக் நிற பேஸ், ரெட் மற்றும் பர்ப்பில் நிற கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது. சாம்பியன்ஷிப் இயந்திரங்களுடன் வலுவான இணைப்பிற்காக ரைடர்ஸ் மார்ட்டின் மற்றும் பெஸ்ஸெச்சியின் பந்தய எண்களைக் கூட தேர்வு செய்யலாம். ரெட் ஹைலைட் உடன் பிளாக் நிற ரிம், டெய்சி-ப்ரொஃபைல் பிரேக் டிஸ்க்குகள் மற்றும் ஸ்போர்ட்டி டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய அப்ரிலியா SR GT ரெப்ளிகா யூரோ 5+ விதிகளுக்கு உட்பட்ட லிக்விட்-கூல்டு எஞ்சின் கொண்டுள்ளது. இதன் 125cc சிங்கில் சிலிண்டர் எஞ்சின் 8,900rpm இல் 14.75bhp பவர் மற்றும் 6,750rpm இல் 12Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதன் 200cc எஞ்சின் 8,650rpm இல் 17.4bhp பவர் மற்றும் 7,000rpm இல் 16.5Nm டார்க் வழங்குகிறது.

    இந்த மாடல்களில் அகலமான ஹேண்டில்பார், அப்ரைட் சீட்டிங், லாங்க டிராவல் சஸ்பென்ஷன் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான டயர்கள், பயணிகள் தார் சாலையிலிருந்து கற்கள் அல்லது மண் பாதைகளுக்கு எளிதாக மாற அனுமதிக்கின்றன.

    ×