என் மலர்

    இந்தியா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கரூர் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • கரூர் துயர சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.

    இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தது கரூரில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
    • இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.

    இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.

    விபத்துக்கான சூழ்நிலை மற்றும் எடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று கரூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பிரசார கூட்டத்தின்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது.

    தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன.

    இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்கவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாழ்நாள் அர்ப்பணிப்புக்காக ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் ராமன் மக்சேசே விருது அவருக்கு வழங்கப்பட்டது.
    • தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க செயற்கை பனிக்கட்டிகள் (Ice Stupas) உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.

    கடந்த 2019 இல் மத்திய அரசு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அதை யூனியன் பிரதேசமாக அறிவித்தது. அதனுடன் இருந்த லடாக் தனி யூனியன் பிரதேசமானது.

    மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் துணை நிலை ஆளுநர் மேற்பார்வையில் லடாக் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

    லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கக் கோரி சுற்றுச்சூழல், காலநிலை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் (59 வயது) தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

    6-வது அட்டவணையில் சேர்ப்பதால் பழங்குடி மக்களின் நிலம், கலாச்சாரம், மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க சுயாட்சி நிர்வாகம் அமையும்.

    இந்தச் சலுகை லடாக்கின் பழங்குடிக் கலாச்சார அடையாளம், எளிதில் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாக அமைப்புகளைப் பாதுகாக்கும் என்று அவர் வாதிடுகிறார்.

    இது லடாக்கின் 90% க்கும் அதிகமான பழங்குடி மக்களுக்கு பிழைப்புக்கான வழி என்றும் அவர் வாதிடுகிறார்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் அவரது தலைமையில் காலவரையற்ற உண்ணாவிர போராட்டம் தொடங்கியது. அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடந்த புதன்கிழமை லே-வில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் வன்முறையாக மாறியது.

    இதற்கிடையே அவர்களுக்கு ஆதரவாக தலைநகர் லே-வில் முழு அடைப்பு போராட்டதற்கு 'லே அபெக்ஸ் பாடி' என்ற அமைப்பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்தது. கடந்த புதன்கிழமை நடந்த இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

    போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன், லே-வில் உள்ள பாஜக அலுவலகத்தையும் தாக்கினர்.

    செப்டம்பர் 10 முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த சோனம் வாங்க்சுக், வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இளைஞர்கள் அமைதிக்காக வேண்டும் என்று கூறி தனது போராட்டத்தை நிறுத்திக்கொண்டார்.

    ஆனால் வன்முறைக்குக் காரணம் வாங்க்சுக்கின் தூண்டுதல் பேச்சுகளே என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை மூலம் குற்றம் சாட்டியது.

    அரபு வசந்தம் மற்றும் நேபாள 'ஜென் இசட்' போராட்டங்களைப் பற்றி அவர் பேசியது வன்முறையைத் தூண்டியதாக அமைச்சகம் தெரிவித்தது.

    இந்தக் குற்றச்சாட்டுகளை வாங்க்சுக் கடுமையாக மறுத்தார். இப்பிரச்சனையின் மூல காரணிகளைத் தீர்க்காமல் பலிகடா தேடும் தந்திரமாகவே மத்திய அரசு தன்னைக் குறிவைப்பதாக அவர் விமர்சித்தார்.

    அவரது கல்வி நிறுவனமான SECMOL (Students' Educational and Cultural Movement of Ladakh)-ன் வெளிநாட்டுப் நிதி பெறும் உரிமத்தை (FCRA) உள்துறை அமைச்சகம் இரத்து செய்தது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று மதியம் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளதாக கூறியிருந்த நிலையில் வன்முறையைத் தூண்டியதாக காலையிலேயே அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் கைது செய்தது. லே பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    தற்போது ஜோத்பூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் கைது எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் காலநிலை செயல்பாட்டாளர் சோனம் வான்சுக் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

     யார் இந்த சோனம் வாங்சுக்?

    1966 ஆம் ஆண்டு லடாக்கின் தொலைதூர கிராமமான உலேடோக்போவில் பிறந்தார்.

    சிறுவயதில் பள்ளிகள் வெகு தொலைவில் இருந்ததால், அவருடைய தாயார் வீட்டிலேயே அடிப்படைகளைக் கற்றுக் கொடுத்தார்.

    ஒன்பது வயதில் ஸ்ரீநகரில் உள்ள பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு புதிய மொழியால் படிப்பில் சிரமப்பட்ட அவரை மந்தமானவர் என்று முத்திரை குத்தினர்.

    அந்த சூழ்நிலையை சோனம் வாங்சுக்கால் தாங்க முடியவில்லை. அப்பொழுது ஒருநாள் சோனம் யாருக்கும் சொல்லாமல் தன் வீட்டிலிருந்து டில்லிக்கு ஓடி வந்துவிடுகிறார். 

    அங்கு ஒரு கட்டத்தில் விஷேஷ் கேந்திர வித்தியாலயா பள்ளியில் தலைமை ஆசிரியரைச் சந்திக்கிறார். வாங்சுக் -இன் மொழி தெரிந்த நிலையில் அவருடன் பேசி பிரச்னையை  புரிந்து கொன்றார்.

    வாங்சுக்கை மீண்டும் ஸ்ரீநகருக்குச் அனுப்பி வைத்து அங்கு அவர் படிப்பதற்காக உதவுகிறார். அவரின் உதவிக்குப் பின்பு சோனம் நன்றாகப் படிக்கத் தொடங்கினார்.

    பின் 1987 ஆம் ஆண்டில், ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ( NIT) மெக்கானிக்கல் இன்ஜியரிங்கில் பி.டெக். பட்டம் பெற்றார்.

    பெயர் பெற்ற கல்வி நிறுவனத்தில் படிப்பை முடித்தும் வேலைக்கு செல்லமால் 1988 ஆம் ஆண்டில் லடாக்கின் சீரற்ற கல்வி முறையைச் சீர்திருத்த சொந்த ஊருக்குத் திரும்பினார். 

    சகோதரர்களுடன் சேர்ந்து லடாக் மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கம் (SECMOL) என்ற அமைப்பை நிறுவினார்.

    அவரது கல்வி நிறுவனத்தில் லடாக்கிற்கு ஏற்ற ஒரு கல்வி முறையை அவர் உருவாக்கினார்.

    அந்தக் கல்வி முறை லடாக்கின் கலாசார, சுற்றுச்சூழல் தன்மைக்கு ஏற்றதாக இருக்கும் என்று அவர் குரல் கொடுத்து வந்தார்.

     சாஸ்போல் என்ற பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியை உருவாக்கி அதில் அவர் திட்டத்தின் படி  தொடங்கி பாரம்பரிய கல்வி முறையால் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவினார்.

    அந்த பள்ளியில் மற்ற பள்ளியில் படித்த மாணவர்கள் சேர வேண்டும் என்றால் கட்டாயம் அவர்கள் அந்த பள்ளியில் பெயில் ஆகியிருக்க வேண்டும். 

    அந்த பள்ளிக்கு மின்சாரம் வெளியிலிருந்து வராது அந்த பள்ளிக்குத் தேவையான மின்சாரத்தை அங்குப் படித்த மாணவர்கள் தயாரித்த சூரிய மின் சக்தியிலிருந்தே பயன்படுத்தப்படுகிறது.

    அந்த பள்ளிக் கட்டிடமே செங்கல்களால் கட்டப்படவில்லை முற்றிலும் களிமண்ணை வைத்துக் கட்டப்படுகிறது.

    ஏட்டுக் கல்வியோடு நிறுத்தாமல் மாணவர்களுக்கு செயல்முறை கல்வி வழங்க வேண்டும் என்பதே அவரது இலக்கு.

    இதற்கிடையில் 2001ம் ஆண்டு அரசு கல்வித்துறையின் ஆலோசகராகச் சேர்ந்தார்.

    2002ம் ஆண்டு சில தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து லடாக் வாலென்டரி நெட்வோர் என்ற அமைப்பையும் உருவாக்கினர்.

    அடுத்த 20 ஆண்டுகளில் லடாக்கில் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு பெரும் திட்டத்தை வகுத்து அதை அரசிடம் சமர்ப்பித்தார்.

    இது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கின் பார்வைக்குச் சென்றது. அசந்து போன பிரதமர் அவரை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் தொடக்க நிலை கல்வி கவுன்சில் உறுப்பினராக நியமித்தார். 

     2007-2010 வரை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த வாங்சுக் பின் நேபாள அரசின் கல்வித்துறை அமைச்சராகவும் இருந்தார்.

    லடாக் பகுதியின் நீர் பஞ்சத்தை தீர்க்க குளிர்காலத்தில் செயற்கை பனிக்கட்டிகள் (Ice Stupas) உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தது மற்றும் லடாக் மக்களுக்காக மைனஸ் 15 டிகிரி குளிரையும் தாக்குப்பிடிக்கும் வகையிலான களிமண் வீடுகளை உருவாக்கியது அவரது சாதனைகளில் ஆகும்.

    இந்த உயரமான Ice Stupas கட்டமைப்புகள் குளிர்காலத்தில் உருகும் நீரைக் கொண்டு கட்டப்படுகின்றன. இது வசந்த காலத்தில் விவசாயிகளுக்கு மிகவும் தேவைப்படும்போது நீரை மெதுவாக வெளியிடுகிறது.

    இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றது.   2018 ஆம் ஆண்டில், அவரது வாழ்நாள் அர்ப்பணிப்புக்காக ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் ராமன் மக்சேசே விருது அவருக்கு வழங்கப்பட்டது.

    சோனம் வாங்சுக்கின் கதை பாலிவுட் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் கவனத்தை ஈர்த்தது. அவரை மையமாக 3 இடியஸ்ட்ஸ் என்ற ஹிட் படத்தை இயக்கினார். அதில் அமீர் கான் கதாபத்திரம் சோனம் வாங்சுக் உடைய நேரடி இன்ஸபிரேஷன் ஆகும்.

    தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரீமேக்காக உருவான நண்பன் படத்தில் விஜய்,  கொசக்சி பசபுகழ் என்ற பெயரில் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    2024 மார்ச் மாதம் லடாக் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து 21 நாட்கள் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார்.

    தொடர்ந்து 2024 செப்டம்பரில் வாங்சுக், லே முதல் டெல்லி வரை 'டெல்லி சலோ' பாதயாத்திரை என்ற பெயரில் மாநில அந்தஸ்துக்கான பாதயாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.

    தற்போது அவரின் கைது அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே லடாக் டிஜிபி, சோனம் வான்சுக் பாகிஸ்தான்  முகவரியுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிஎஸ்என்எல் உடைய வெள்ளி விழா ஆண்டு ஆகும்.
    • உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு 4ஜி சேவைகளைத் தொடங்கிய உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது.

    இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் வெற்றிகரமாக இன்று முதல் நாடு தழுவிய அளவில் '4G' சேவையை தொடங்கி உள்ளது.

    இது பிஎஸ்என்எல் உடைய வெள்ளி விழா ஆண்டு (25 வருடங்கள் நிறைவு) ஆகும்.

    ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளா்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை பிஎஸ்என்எல் வழங்கி வந்தது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் 100% சதவீத 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு 30,000 கிராமங்களில் புதிதாக 97,500 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டுக்கு வந்தன.

    டென்மாா்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து 5வதாக உள்நாட்டிலேயே தொலைத்தொடா்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் நாடாக இந்தியா மாறியுள்ளது.

    இன்று (செப்டம்பர் 27) பிரதமர் மோடி, ஒடிசாவில் பல்வேறு திட்டங்களுடன் சுதேசி '4G' சேவையையும் காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் பேசிய மோடி, உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு '4G' சேவைகளைத் தொடங்கிய உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது.

    பிஎஸ்என்எல் வாயிலாக இந்தியா உலகளாவிய தொலைதொடர்பு உற்பத்தி மையமாக மாறும்" என்று தெரிவித்தார். 

    இதற்கிடையே மக்களை கவரும் விதமாக ரூ.225க்கு 30 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 2.25 ஜிபி '4G' டேட்டா திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பதிலுக்கு 'ஐ லவ் மகாதேவ்' பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பேரணி நடைபெற்றது.

    இந்த மாத தொடக்கத்தில் மீலாதுன் நபியை முன்னிட்டு உத்தர பிரதேசத்தின் கான்பூரில் 'ஐ லவ் முஹமது' (I Love Mohammad) என்ற பேனர் வைக்கப்பட்டது சர்ச்சையானது.

    இதுதொடர்பாக உத்தரப் பிரதேச போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்ததே சர்ச்சைக்கு காரணம். இதைத்தொடர்ந்து உத்தர பிரதேசம் மற்றும் நாட்டின் பல நகரங்களில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு இந்து அமைப்பினர் 'ஐ லவ் மகாதேவ்' பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ''ஐ லவ் முஹமது' என்பது குற்றமா என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் உ.பி.போலீசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். 

    இதுதொடர்பாக பல்வேறு நகரங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    'ஐ லவ் முஹமது' பதாகைகள், சுவரொட்டிகள் தொடர்பாக கடந்த சில வரங்களாகவே வட மாநிலங்களில் இந்து குழுக்களுக்கும் இஸ்லாமிய குழுக்களுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

    இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியில் சிலர் போலீசார் மீது கற்களை வீசியதால் வன்முறை ஏற்பட்டது. போலீசார் பேரணியை கலைக்க தடியடி நடத்தினர். இதில் ஏற்பட்ட மோதலில் 10 போலீசார் காயமடைந்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்தது.

    இதுவரை, எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

    இந்த தொடர் போராட்டங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் காவல்துறையினரைத் தாக்குதல் மற்றும் கலவரத்தில் ஈடுபடுதல் போன்ற பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது மொத்தம் 1700 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்றைய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்த உள்ளூர் மதத்தலைவரும் இத்தேஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான தௌகிர் ராசாவை போலீசார் இன்று (சனிக்கிழமை) கைது செய்தனர்.

    ஐ லவ் முஹம்மது' பிரச்சாரத்தை ஆதரித்து அவர் செய்த வீடியோ அழைப்பிற்குப் பிறகே நிலைமை பதற்றமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு நடிகர்கள் காத்திருந்தனர்.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபையில் சலசலப்பு

    ஆந்திர சட்டசபையில் சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தின்போது, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏவும் நடிகருமான பாலகிருஷ்ணா, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை, சட்டப்பேரவையில் வைத்து சைக்கோ என திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை கேட்டு ஆத்திரமடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஆவேசமுற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.

    சட்டசபையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. காமினேனி ஸ்ரீனிவாஸ், 'முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில், முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு நடிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர்களை சந்திக்க ஜெகன் மோகன் நேரமே ஒதுக்கவில்லை. சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின்னரே, அவர் நேரம் ஒதுக்கினார்" என்று தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட பாலகிருஷ்ணா, "தெலுங்கு நடிகர்கள் ஒரு 'சைக்கோ'வை சந்திக்க சென்றனர்" என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பேசிய பாலகிருஷ்ணா, "சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின் தான், தெலுங்கு நடிகர்களை ஜெகன் மோகன் சந்தித்தாக கூறுவது பொய்" என்று தெரிவித்தார்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய சிரஞ்சீவி, "ஜெகன் மோகன் அழைப்பின் பேரிலேயே அவரது வீட்டுக்குச் சென்றேன். தெலுங்கு திரையுலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவரிடம் விளக்கினேன்" என்று தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரசியல் தலைவர்களையும், பல்கலைகழக மாணவர்களையும், தொழில்த்துறை தலைவர்களையும் சந்திக்கிறார்.
    • அமெரிக்காவின் வரிவிதிப்புகள் குறித்து தொழில்துறை தலைவர்களிடம் அவர் விவாதிப்பார்

    மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா, ராகுல் காந்தி தென்னமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

    4 நாடுகளை உள்ளடக்கிய இந்த பயணத்தில் அரசியல் தலைவர்களையும், பல்கலைகழக மாணவர்களையும், தொழில்த்துறை தலைவர்களையும் சந்தித்து உரையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.

    ராகுல் பயணிக்கும் 4 நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. எனினும் அவரின் அவற்றுள் பிரேசில், கொலம்பியா நாடுகள் இடம்பெறும் என்று தெரிகிறது.

    அமெரிக்காவின் வரிவிதிப்புகள் குறித்து தொழில்துறை தலைவர்களிடம் அவர் விவாதிப்பார் என்றும் மாணவர்கள் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி, பிரச்சனைகள் குறித்து பேசுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
    • பெண்ணின் 3 குழந்தைகளையும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் உமாசங்கர். ஊர் காவல் படையை சேர்ந்தவர் கிரண் குமார்.

    இருவரும் அதே பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். யாரிடமாவது சொன்னால், அந்த பெண்ணின் 3 குழந்தைகளையும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். ஆனால், இவருடைய புகாரை போலீசார் தொடர்ந்து நிராகரித்துள்ளனர். இதனால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேட்டி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து பங்காருபாளையும் போலீசார் வழக்கு பதிவு செய்து உமாசங்கர், கிரண்குமாரை கைது செய்தனர். இந்த தகவலை பலமனுார் டி.எஸ்.பி. தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
    • வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் நலன்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை எதிர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதேநேரம், சட்டபூர்வமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை அரசு ஊக்குவிக்கிறது.

    கடந்த ஜனவரியில் இருந்து அமெரிக்கா 2,417 இந்தியர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தி இருக்கிறது அல்லது திருப்பி அனுப்பி இருக்கிறது.

    சட்டவிரோதமாக இந்தியர்கள் தங்கள் நாட்டில் இருப்பதாக ஒரு நாடு கூறுமேயானால், நாங்கள் அத்தகைய நபர்களின் ஆவணங்களைச் சரிபார்க்கிறோம்.

    சட்டபூர்வமற்ற முறையில் இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்கிறோம்.

    சட்டவிரோத இடப்பெயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

    தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வேலைவாய்ப்புகளில் இருந்து விலகி இருக்குமாறு இந்தியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

    வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் நலன்களுக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது.

    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட விசா முறைகள் குறித்து நாங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இந்திய மாணவர்களின் விண்ணப்பம் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் சரியான நேரத்தில் தங்கள் கல்வி நிலையங்களில் சேரமுடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆயுதப்படைகள் சிறப்பு சட்டம் மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசத்தில் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
    • அக்டோபர் 1, 2025 முதல் 6 மாத காலத்திற்கு இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகள், உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் அங்கு மத்திய அரசின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டம் மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    பதற்றம் மிகுந்த பகுதிகளாக அறிவிக்கப்படும் இடங்களில் நீதிமன்றம் அனுமதியின்றி தேடுதல், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரங்கள் இந்த ஆயுதப்படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    நம்சாய் மாவட்டத்தில் உள்ள திராப், சாங்லாங், லாங்டிங் மாவட்டங்கள், நம்சாய் மாவட்டத்தில் நம்சாய், மகாதேவ்பூர், சௌகாம் ஆகிய காவல் நிலையங்களின் அதிகார வரம்புக்குள் வரும் பகுதிகளில் இந்தச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 1, 2025 முதல் 6 மாத காலத்திற்கு இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை மீண்டும் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நீட்டிப்பு, மார்ச் 31, 2026 வரை அமலில் இருக்கும் என்று கூறி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • BC-க்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இரண்டு மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
    • ஜனாதிபதி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.

    தெலுங்கானா மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி தலைமயிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் BC-க்கு (பிற்படுத்தப்பட்டோர்) 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியது.

    இந்த மசோதாக்கல் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதி இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளார்.

    பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் ரேவந்த் ரெட்டி கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி போராட்டம் நடத்தினா்.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு, இது ஓபிசி-க்கு எதிரான மசோதா என குற்றம்சாட்டியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக BC-க்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. முன்னதாக 23 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    ×