என் மலர்

    இந்தியா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விடுதி அருகில் உள்ள டீக்கடை எரிந்து சாம்பலாகியுள்ளது.
    • டீக்கடை நடத்தி வந்தவரின் மகன் உயிரிழந்த நிலையில், தாய் படுகாயத்துடன் உயிர் பிழைத்துள்ளார்.

    அகமதாபாத் விமான விபத்தில், விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானம் பி.ஜே. மருத்துவ கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், விடுதி மற்றும் விடுதி அருகில் இருந்தவர்களும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

    விடுதியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விடுதி அருகே டீக்கடை நடத்தி வந்த பெண் ஒருவர், படுகாயம் அடைந்த நிலையில், மரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்த அவரது 14 வயது மகன் தீயில் கருகி உயிரிழந்துள்ளான். அவரை அடையாளம் காண முடியாததால் டிஎன்ஏ பரிசோதனைக்காக காத்திருக்கிறார்கள்.

    சீதாபான் என்ற அந்த பெண் டீக்கடையில் இருந்துள்ளார். அவரது மகன் ஆகாஷ் படானி (வயது 14) டீக்கடை அருகில் உள்ள மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளான். விமானம் மோதி தீப்பிடித்ததில் டீக்கடையும் எரிந்துள்ளது. இதில் சீதாபென் படுகாயம் அடைந்துள்ளார்.

    அப்போது விமானத்தின் உடைந்த பாகம் ஒன்று ஆகாஷ் படானியின் தலையை பலமாக தாக்கியுள்ளது. அதேவேளையில் சீதாபானுவுக்கு தீக்காயம் ஏற்பட்டதால் மகனை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகாஷ் தலையை தாக்கிய பாகம் எரியத் தொடங்கியுள்ளது. இதில் ஆகாஷ் கரிக்கட்டையாகியுள்ளார். தன் கண்முன்னே மகன் கருகிய நிலையில் காப்பாற்ற முடியவில்லையே என சிகிச்சை பெற்று வரும் சீதாபென் கதறியது பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

    திருமணம் ஆன 2 நாளிலேயே விமானத்தில் பயணம் செய்த நபர் பலியான சோகம்

    பவிக் மகேஷ்வாரி (26) என்பவர் லண்டனில பணிபுரிந்து வந்துள்ளார். இவர் விடுமுறைக்கான வதோதராவிற்கு கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னதாக வந்துள்ளார். விடுமுறைக்கு வந்த பவிக் மகேஷ்வாரிக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

    அவசரமாக பெண் பார்த்துள்ளனர். தற்போது எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம். பின்னர் வரும்போது பெரிய அளவில் வரவேற்பு விழா எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் திருமணம் முடிந்து 2 நாள் கழித்து லண்டனுக்கு சென்றபோது, விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். விமான நிலையத்திற்கு அவருடைய மனைவி வழி அனுப்ப வந்துள்ளார். வழி அனுப்பிவிட்டு வீடு திரும்புவதற்குள் இப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

    பவிக் மகேஷ்வாரி லண்டனில் படித்து அங்கேயே வேலை பார்த்து வந்துள்ளார். வருடத்தில் இரண்டு வாரம் குடும்பத்தினரை சந்திக்க வதோதரா வந்து செல்வாராம். அப்படி இந்த வருடம் வரும்போது கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என குடும்பத்தினர் வற்புறுத்தியதால் திருமணம் செய்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜூன் 10ஆம் தேதி திருமணம் முடிந்து வீடே மகிழ்ச்சியில் திகைத்தது. தற்போது துக்க வீடாக மாறியுள்ளதாக பவிக் மகேஷ்வர் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • இன்ஜின் செயல்பாடு உள்ளிட்டவற்றை சோதனை செய்த பிறகே விமானத்தை இயக்க வேண்டும்.

    ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானங்களில் ஆய்வு செய்யுமாறு விமான போக்குவரத்து துறை இயக்குநகரம் உத்தரவிட்டுள்ளது.

    போயிங் 787 விமானங்களில் கூடுதல் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விமானத்தின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

    எரிபொருள் இருப்பு நிலவரம், இன்ஜின் செயல்பாடு உள்ளிட்டவற்றை சோதனை செய்த பிறகே விமானத்தை இயக்க வேண்டும்.

    ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் நேற்று அகமதாபாத்தில் வெடித்து சிதறியதில் 241 பேர் பலியான நிலையில் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விமானம் மருத்துவ விடுதியில் பயங்கரமாக மோதியது.
    • விடுதியில் இருந்து பலர் உயிரிழந்துள்ளனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவமனை கட்டிட வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

    விமானம் மோதிய கட்டிடத்தில் பி.ஜே. மருத்துவ கல்லூரியின் மருத்துவ விடுதி உள்ளது. மதிய நேரம் என்பதால் பயிற்சி மருத்துவர்கள் ஏராளமானோர் (சுமார் 60 பேர்) மெஸ்சில் உணவு அருந்தி கொண்டிருந்தனர். விமான விபத்தில் இந்த மெஸ் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விபத்து ஏற்பட்டபோது மெஸ்சில் சமையல் வேலை செய்யும் பெண்மணி, தனது இரண்டு வயது பேத்தியுடன் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களது உடலை தேடும் நிலை, அந்த பெண்மணியின் மகனுக்கு ஏற்பட்டுள்ளது.

    விடுதி மெஸ்சில் சமையல் ஊழியராக ஷர்லாபென் தாகூர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வழக்கம்போல் சப்பாத்தி, கறி சமைத்துள்ளார். ஷர்லாபென் தாகூர், தனது மகனின் 2 வயது மகளையும் (பேத்தி) அன்றைய தினம் அழைத்துச் சென்றுள்ளார்.

    வழக்கமாக சமைக்கும் உணவை ஷர்லாபென் தாகூர் மகன், மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று ஸ்டாஃப்கள் மற்றும் மருத்துவர்களுக்கு வழங்குவார். அதேபோல் விபத்து நடைபெற்ற நேற்றைய தினம் உணவு வழங்க சென்றபோதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது.

    விமானம் மோதி பலத்த சேதம் அடைந்தது, வழக்கமாக அவரது தாயார் இருக்கும் இடம். இதனால் தனது மகளுடன் தாய் இறந்திருக்கலாம் என அஞ்சுகிறார். இன்னும் கட்டிட இடிபாடுகள் முற்றிலுமாக அகற்றப்படவில்லை. முற்றிலுமாக அகற்றப்பட்டால்தான் விடுதியில் இருந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது தெரியவரும்.

    இதனால் தனது தாய் மற்றும் இரண்டரை வயது மகளை கவலையுடன் தேடிவருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விமான விபத்தில் 2 விமானி மற்றும் 10 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
    • மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு விமனப் பணிப் பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவமனை கட்டிட வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.

    விபத்தில் இரண்டு விமானிகள், 10 பணியாளர்களும் உயிரிழந்தனர். மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு விமான பணிப்பெண்கள் இதில் அடங்குவார்கள். அதில் ஒருவர் லாம்னுந்தெம் சிங்சன் என்ற 26 வயது பெண் ஆவார்.

    மணிப்பூர் வன்முறையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், இவருடைய ஒருவரின் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில்தான் இந்த துயர விபத்து ஏற்பட்டுள்ளது.

    லாம்னுந்தெம் சிங்சன் உடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள். தந்தை இறந்த நிலையில் விதவை தாய் உடன் வாழ்ந்து வந்துள்ளார். மூத்த சகோதரர் நீண்ட நாள் நோய் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். தாயும் எந்த வேலைக்கும் செல்லவில்லை. இரண்டு சகோதரர்கள் படித்து வருகிறார். இவரது வருமானத்தை வைத்தான் வாழ்ந்து வந்துள்ளனர்.

    தனது தாயாரிடம் வியாழக்கிழமை (விபத்து நடந்த நாள்) லண்டனுக்கு செல்ல இருக்கிறேன். அதனால் முன்னதாக தூங்கச் செல்கிறேன் என புதன்கிழமை பேசியுள்ளார். அதன்பின்தான் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.

    அவரது சகோதரர் நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் குஜராத் அகமதாபாத் விரைந்துள்ளார். அவரின் மற்றொரு சகோதரர் மற்றும் உறவினர் நாகலாந்து திமாபூர் சென்று அங்கிருந்து அகமதாபாத் செல்ல இருக்கிறார்.

    இந்தச் செய்தியால் நாங்கள் மிகவும் மனமுடைந்து போனோம். விபத்து பற்றிய செய்திகள் வெளியானதிலிருந்து அவரது தாயார் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார், சாப்பிட மறுத்துவிட்டார் என உறவினர் கிப்ஜென் தெரிவித்துள்ளார்.

    நேற்றிரவு விமானப் பணிப்பெண்ணின் தாயாராக்கு போன் செய்த ஏர் இந்தியா அதிகாரிகள், உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
    • விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.

    மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    AI-171 விமான விபத்தில் காயமடைந்தவர்களை சந்திக்க பிரதமர் மோடி அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு வந்தார். விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார்.

    இந்நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விமான விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
    • விமானத்தில் இருந்த 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் இருந்ததால், யாரையும் காப்பாற்ற வாய்ப்பில்லை என அமித் ஷா தெரிவித்திருந்தார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 (போயிங் 787 ட்ரீம்லைனர்), புறப்பட்ட சில வினாடிகளில் அருகில் உள்ள பி.ஜே. மருத்துக் கல்லூரி வளாகத்தில் மோதி நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து குறித்து கூறும்போது, விபத்துகளை யாராலும் தடுக்க முடியாத எனக் கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் மத்திய அமைச்சர் உள்துறையின் கருத்து உணர்ச்சியற்றது என காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    விமானம் விபத்துக்குள்ளாகி மக்கள் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம பொறுப்புக்கூறல் உறுதிமொழியாவது அமித் ஷா வழங்கியிருக்க வேண்டும். விபத்துகளை யாராலும் தடுக்க முடியாது என்பது பொறுப்புக்கூறல் உறுதி மொழியின் தோல்வியாகும். எதையும் தடுக்க முடியாவிட்டால், நமக்கு ஏன் அமைச்சகங்கள் உள்ளன?

    விமான விபத்துகள் கடவுளின் செயல்கள் அல்ல. அவை தடுக்கக்கூடியவை. அதனால்தான் விமான ஒழுங்குமுறை அமைப்புகள், பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் நெருக்கடி பதில் அமைப்புகள் உள்ளன.

    இவ்வாறு பவன் கெரா தெரிவித்துள்ளார்.

    ஜெய்ராம் ரமேஷ் "இதைத்தான் மத்திய உள்துறை அமைச்சர் இப்போது சொல்ல வேண்டுமா? இது மிகவும் உணர்ச்சியற்றது" எனத் தெரிவித்துள்ளார்.

    "விமானத்தில் 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் இருந்தது. எரிபொருள் தீப்பற்றி எரிந்ததால், யாரையும் காப்பாற்ற வாய்ப்பில்லை. இந்த துயர சம்பவத்தால் ஒட்டுமொத்த நாடும் ஆழந்த அதிர்ச்சியில் உள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என அமித் ஷா தெரிவித்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
    • உடல் கருகிய நிலையில் உள்ளதால், அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 (போயிங் 787 ட்ரீம்லைனர்), புறப்பட்ட சில வினாடிகளில் அருகில் உள்ள பி.ஜே. மருத்துக் கல்லூரி வளாகத்தில் மோதி நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

    மருத்துவ வளாகத்தில் பயிற்சி மருத்துவர்கள் விடுதியும் அடங்கும். இங்கு மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் விடுதி மெஸ்சில் இருந்த மருத்துவ மாணவர்களில் சிலரும் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இதுவரை 265 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 பேர் உடல் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததில் உடல்கள் கருகின. இதனால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனால் உறவினர்கள் ரத்த மாதிரிகளை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட 215 பேரின் உறவினர்கள் ரத்த மாதிரிகளை வழங்கியுள்ளனர். இதனை வைத்து உடல்களை அடையாளம் காண மருத்துவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். டி.என்.ஏ. பரிசோதனை ஒத்துப்போகும்போது, அவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை பிரதமர் மோடி விமான விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனை சென்று காயம் அடைந்து சிகிச்சை பெற்றவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார். விமான விபத்தில் உயிர் பிழைத்தவரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாடா ஏ.ஐ.ஜி. ஜெனரல் இன்சூரன்ஸ், லண்டன் மறுகாப்பீட்டாளர்கள் தலைமையிலான இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் இந்த இழப்பீட்டை செலுத்த வேண்டியதிருக்கும்.
    • விமானக் கொள்கைகளின்படி மறுகாப்பீட்டாளர்கள் கணிசமான தொகையை செலுத்தும் வகையில் விதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத்தில் ஏர்-இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய மறுகாப்பீட்டாளர்கள் 120 மில்லியன் முதல் 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,000 கோடி முதல்-1,292 கோடி) வரை இழப்பீடு வழங்க வேண்டியதிருக்கும் என்று விமான காப்பீட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    விபத்தில் சிக்கிய விமானத்துக்கு இழப்பீடாக 80 மில்லியன் டாலர்களும் (ரூ.689 கோடி), பயணிகள் மற்றும் 3-ம் தரப்பு இழப்பீடுகளில் 40 மில்லியன் முதல் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இழப்பீடுகள் கோருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். டாடா ஏ.ஐ.ஜி. ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் லண்டன் மறுகாப்பீட்டாளர்கள் தலைமையிலான இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் இந்த இழப்பீட்டு தொகைகளை செலுத்த வேண்டியதிருக்கும்.

    அதேவேளையில் விமானக் கொள்கைகளின்படி மறுகாப்பீட்டாளர்கள் கணிசமான தொகையை செலுத்தும் வகையில் விதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இழப்பீட்டு கோரிக்கைகளில் பெரும்பாலானவை உலகளாவிய மறுகாப்பீட்டு நிறுவனங்களால் ஏற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனைவி மற்றும் மகளைச் சந்திக்க லண்டன் சென்று கொண்டிருந்தார்.
    • அவரது ஆரம்பகால ஸ்கூட்டரிலும், அவர் முதலமைச்சரானபோது அவரது அதிகாரப்பூர்வ காரிலும் இருந்தது.

    குஜராத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த பாஜக தலைவருமான விஜய் ரூபானி (68), நேற்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.

    நேற்று (ஜூன் 12) விமானம் விமானம் 232 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் உட்பட 242 பேருடன் பயணித்தது. ரூபானி தனது மனைவி மற்றும் மகளைச் சந்திக்க லண்டன் சென்று கொண்டிருந்தார். விமானப் பதிவேட்டில் அவர் 2D இருக்கையில் பயணித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து விமானம் தீப்பிடித்ததில் அவருடன் 240 பேர் உயிரிழந்தனர்.

    எண் 1206, ரூபானியின் வாழ்க்கையில் ஒரு முக்கிய எண் ஆக இருந்தது. அவர் தனது வாகனங்களின் எண் பலகைகளில் "1206" ஐப் பயன்படுத்தி வந்தார். இந்த எண் அவரது ஆரம்பகால ஸ்கூட்டரிலும், அவர் முதலமைச்சரானபோது அவரது அதிகாரப்பூர்வ காரிலும் இருந்தது. இது அவருக்கு அதிர்ஷ்ட எண்ணாக நம்பப்பட்டு வந்தது.

    ஆனால், விதிவசமாக, ஜூன் 12 (12/06) அன்று அவரது மரணம் நிகழ்ந்தது ஒரு துயரமான நிகழ்வாக மாறியுள்ளது. ரூபானி ஆகஸ்ட் 2016 முதல் செப்டம்பர் 2021 வரை குஜராத்தின் 16வது முதல்வராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1950களின் முற்பகுதியில் ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் ரொனால்ட் டி மே வாரன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
    • 80க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தகவல்களைப் பதிவு செய்யும்.

    241 பேர் உயிரிழந்த அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில், 'பிளாக் பாக்ஸ்' (கருப்புப் பெட்டி) என அழைக்கப்படும் விமானப் பதிவு கருவி முக்கியப் பங்கு வகிக்கிறது.

    விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு நடந்த இந்த சோகமான விபத்துக்கான உண்மையான காரணத்தை இந்தக் கருவி வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விமானம் "மேடே" (MAYDAY) அழைப்பை விடுத்த பிறகு ஏற்பட்ட தகவல்தொடர்பு துண்டிப்பு மற்றும் பிற எச்சரிக்கைகள் குறித்த தகவல்களை இது வெளிப்படுத்தும்.

    பிளாக் பாக்ஸ் என்றால் என்ன?

    பிளாக் பாக்ஸ் என்பது விமானப் பயணத்தின்போது விமானம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பதிவு செய்யும் ஒரு சிறிய கருவியாகும். இது 1950களின் முற்பகுதியில் ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் ரொனால்ட் டி மே வாரன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது பொதுவாக ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். வெடிப்புகள், தீ, நீர் அழுத்தம் மற்றும் அதிவேக விபத்துக்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பிளாக் பாக்ஸில் என்ன இருக்கும்?

    ஒரு பிளாக் பாக்ஸில் முக்கியமாக இரண்டு பதிவு கருவிகள் உள்ளன.

    காக்பிட் குரல் பதிவு கருவி (Cockpit Voice Recorder - CVR) - இது விமானிகளின் குரல்கள், காக்பிட் ஒலிகள் மற்றும் வானொலி தகவல்தொடர்புகளைப் பதிவு செய்யும்.

    விமானத் தரவு பதிவு கருவி (Flight Data Recorder - FDR) - இது உயரம், வேகம், விமானப் பாதை, ஆட்டோபைலட் நிலை போன்ற 80க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தகவல்களைப் பதிவு செய்யும்.

    விபத்துக்களை எவ்வாறு தாங்குகிறது?

    பிளாக் பாக்ஸ், எஃகு அல்லது டைட்டானியம் போன்ற வலுவான பொருட்களால் ஆனது. 3,400 மடங்கு ஈர்ப்பு விசையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, துருப்பிடிக்காத எஃகு அல்லது டைட்டானியத்தால் ஆன 'கிராஷ் சர்வைவபிள் மெமரி யூனிட்' (Crash Survivable Memory Unit). இதில் உள்ளது.

    இது அதிக வெப்பம் மற்றும் குளிர் போன்ற வெளிப்புற காரணிகளிலிருந்து தப்ப உதவுகிறது. மேலும், விபத்தின் தாக்கம் பொதுவாக குறைவாக இருக்கும் விமானத்தின் வால் பகுதியின் கடைசியில் இந்த கருவிகள் வைக்கப்படுகின்றன.

    விசாரணைக்கு எப்படி உதவுகிறது?

    விமான விபத்துக்கான காரணங்களை கண்டறியவும், விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளை மறுகட்டமைப்பு செய்யவும் இந்த இரண்டு கருவிகளும் உதவுகின்றன. விபத்துக்குப் பிறகு பிளாக் பாக்ஸ்களிலிருந்து தரவுகளை ஆய்வு செய்ய பொதுவாக 10-15 நாட்கள் ஆகும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரிட்டிஷ் குடிமகனான விஷ்வாஸ் குமார், 20 ஆண்டுகளாக லண்டனில் இருந்து வருகிறார்.
    • விமானம் புறப்பட்ட 30 வினாடிகளுக்குள் விபத்தில் சிக்கியது.

    அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில், அதில் பயணித்த 241 பயணிகள் பலியாகிவிட்ட நிலையில், அந்த விமானத்தில் பயணித்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற வாலிபர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

    விமானம் வெடித்து சிதறியதால் அதில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட நிலையில், விஷ்வாஸ் குமார் தப்பியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

    விஷ்வாஸ் குமார் அமர்ந்திருந்த இருக்கை விமானத்தில் இருந்து உடைந்து விழுந்ததால் அவர் உயிர் தப்பி உள்ளார். அவருக்கு முகம், கால்கள், மார்பு உள்ளிட்ட உடலில் பல இடங்களில் காயம் இருப்பதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பிரிட்டிஷ் குடிமகனான விஷ்வாஸ் குமார், 20 ஆண்டுகளாக லண்டனில் இருந்து வருகிறார். இந்தநிலையில் இந்தியாவுக்கு வந்திருந்த அவர், தனது சகோதரர் அஜய்குமார் ரமேசுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியா வந்திருக்கிறார்.

    பின்பு இருவரும் லண்டன் திரும்பியபோது விமான விபத்தில் சிக்கிக் கொண்டனர். விமான விபத்து குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    விமானம் புறப்பட்ட 30 வினாடிகளுக்குள் விபத்தில் சிக்கியது. பலத்த சத்தத்துடன் விமானம் வெடித்து சிதறியது. நான் எழுந்து பார்த்தபோது என்னை சுற்றி இறந்த உடல்கள் கிடந்தன. அதனைப்பார்த்து நான் மிகவும் பயந்தேன். இதையடுத்து நான் எழுந்து ஓடினேன்.

    விபத்து நடந்த இடம் முழுவதும் விமானத்தின் இடிபாடுகளாக கிடந்தன. பின்னர் யாரோ ஒருவர் என்னை பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். என்னுடன் பயணித்த எனது சகோதரர் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விமானத்தில் உள்ள 2 என்ஜின்களில் ஒரு என்ஜின் மட்டும் செயல் இழந்து இருந்தால் விமானத்தை தொடர்ந்து இயக்கி இருக்க முடியும்.
    • விபத்துக்குள்ளான விமானம் புறப்பட்டதும் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

    அகமதாபாத் விமான விபத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பது இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது. விமான நிலைய ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு உயரே பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் பலரது கண் எதிரில் திடீரென கீழே இறங்கிய விமானம் அரசு கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியது ஏன் என்பது தெரியவில்லை.

    அகமதாபாத் நகரையே உலுக்கும் வகையில் எழுந்த வெடிகுண்டு போன்ற சத்தத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது. விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்பும், அடர்கரும்புகையும் எழுந்தததை கண்ட மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட நேரம் ஆனது.

    விபத்துக்குள்ளான விமானம் சுமார் 800 மீட்டர் வரையே உயரே பறந்தது. அதற்கு பிறகு அந்த விமானத்தால் தொடர்ந்து உயரே பறக்க இயலவில்லை. அந்த இடத்தில்தான் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அது என்ன கோளாறு என்பதைதான் நிபுணர்களால் உடனடியாக கண்டுபிடிக்க இயலாத நிலை உள்ளது.

    இந்த விபத்துக்கு பொதுவாக 5 விதமான காரணங்கள் கூறப்படுகிறது. பெரும்பாலான நிபுணர்கள் விமானத்தில் உள்ள 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் செயல் இழந்து இருக்கலாம் என்பதை பிரதானமான காரணமாக சொல்கிறார்கள்.

    விமான என்ஜின்கள் செயல் இழந்ததால் விமானம் மேல் எழுந்து பறப்பதற்கு தேவையான உந்து விசையை விமானத்தால் பெற இயலவில்லை என்று கருதப்படுகிறது. விமானத்தில் உள்ள 2 என்ஜின்களில் ஒரு என்ஜின் மட்டும் செயல் இழந்து இருந்தால் விமானத்தை தொடர்ந்து இயக்கி இருக்க முடியும்.

    ஒரு என்ஜினியுடன் விமானத்தை 330 நிமிடங்கள் இயக்குவதற்கு போயிங் ட்ரீம் லைனர் ரக விமானத்தில் வாய்ப்புகள் இருப்பதாக அந்த விமான தயாரிப்பு நிறுவனம் கூறி உள்ளது. ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தில் அதற்கு சாத்தியம் இல்லாமல் போய் விட்டது.



    அந்த ஒரு என்ஜின் இயங்கும்போது விமானம் அந்தரத்தில் சற்று தடுமாறும். என்றாலும் விமானத்தை திருப்பி தரை இறக்கி இருக்க முடியும். ஆனால் விபத்துக்குள்ளான விமானம் தடுமாறவில்லை. நிலையாக ஒரே சீராக தாழ்வாக பறந்து விழுந்துள்ளது. இதனால் தான் 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் பழுதாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இது தவிர விமானம் மேலே பறக்க தொடங்கிய சில வினாடிகளில் பறவைகள் மோதி இருக்கலாம். அதனால் விமான என்ஜின் செயல்இழந்து இருக்கலாம் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது. ஆனால் விபத்துக்குள்ளான விமானம் போயிங் ட்ரீம் லைனர் என்பதால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    ஏனெனில் போயிங் ட்ரீம் லைனர் ரக விமானங்களில் என்ஜின்கள் மிகப்பெரியதாக இருக்கும். விமான வகைகளில் இந்த ரக விமானத்தின் என்ஜின் உலகிலேயே பெரியது. எனவே சின்ன பறவைகள் மோதுவதால் அது செயல் இழந்து இருக்காது என்ற கருத்தும் உள்ளது.

    ஆனால் விமான போக்குவரத்து நிபுணர்களில் ஒருவரான கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறுகையில், "அகமதாபாத் விமான நிலைய ஓடுதளம் அருகே மிகப்பெரிய அளவில் புற்கள் வளர்ந்துள்ளன. அந்த புற்கள் இடையே நிறைய பூச்சிகள் காணப்படுகின்றன. அந்த பூச்சிகளை சாப்பிடுவதற்கு ஏராளமான பறவைகள் வருவது உண்டு. எனவே அந்த பறவைகள் விமானத்தின் 2 என்ஜின் பகுதிக்குள் மோதி இருக்கலாம் என்ற வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

    மூன்றாவதாக விமான சக்கரங்கள் உள்இழுக்கப்படுவதை ஒரு காரணமாக நிபுணர்கள் கருதுகிறார்கள். விபத்துக்குள்ளான விமானம் புறப்பட்டதும் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அந்த சக்கரங்கள் வெளியிலேயே இருந்துக் கொண்டு இருந்தன. லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான சக்கரங்கள் பழுதாகி இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.



    இது தொடர்ச்சியாக அடுத்தடுத்து விமானத்துக்குள் தொழில்நுட்ப கோளாறை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

    நான்காவதாக விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கலாம் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது. எடை அதிகமாக இருந்ததால் விமானத்தின் இறக்கைகள் விமானம் மேல் எழும்பி பறக்க ஒத்துழைக்கவில்லை என்ற கருத்து நிலவுகிறது.

    போயிங் ட்ரீம்லைனர் விமானங்கள் சராசரியாக 227.9 டன் அளவுக்கு எடையை தூக்கும் ஆற்றல் கொண்டது. நேற்று விபத்து ஏற்பட்டபோது இதை விட கூடுதல் எடை இருந்ததா? என்பது பற்றி ஆய்வு நடந்து வருகிறது. கூடுதல் எடை ஏற்றப்பட்டு இருந்தால் அதுவும் விபத்துக்கு ஒரு காரணமாக கூறப்படலாம்.

    ஆனால் பெரும்பாலான நிபுணர்கள் இதை மறுக்கிறார்கள். விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் விமானம் ஓடு தளத்தில் பறக்க சாத்தியம் இருந்து இருக்காது என்று கூறியுள்ளனர். என்றாலும் இந்த காரணம் அடிப்படையிலும் ஆய்வு நடந்து வருகிறது.

    ஐந்தாவதாக விமானத்தில் எரிபொருள் சப்ளையில் அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று போயிங் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். எரிபொருள் தொடர்ந்து கிடைக்காத நிலையில் 2 என்ஜின்களும் செயல் இழந்து இருக்கலாம் என்ற கருத்தும் காணப்படுகிறது. இந்த 5 விதமான காரணங்களில் உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து வருகிறது.

    இந்த விசாரணைகள் நடந்து முடிய நீண்ட காலம் தேவைப்படும் என்றும் எனவே உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய சில மாதங்கள் ஆகலாம் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ×