என் மலர்

    இந்தியா (National)

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
    • கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட தீவிர இந்து அமைப்பினரால் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மத்திய பாஜக அரசின் முன்னெடுப்பில் ரூ.1,800 கோடி பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் உள்ளது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் சூழ இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் இப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்பிறகே 2020 இல் பாஜகவால் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    தற்போது இந்த தீர்ப்பை வழங்கிய அனுபவம் குறித்து தனது சொந்த ஊரான புனேவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரசூட் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சில வழக்குகளில் ஒரு முடிவுக்கு வரவே முடியாதபடி இருக்கும். அப்படித்தான் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி பிரச்சனை [குறித்த வழக்கு] மூன்று மாதங்களாக என் முன் இருந்தது.

    அப்போது தினமும் நான் கடவுளின் சிலைக்கு முன்னாள் அமர்ந்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லும்படி வேண்டினேன். என்னை நம்புங்கள், உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் நிச்சயம் அவர் ஒரு வழியை காண்பிப்பார் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் இந்த கருத்தை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காண கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். ஒரு சாமானியனுக்கு உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பணம் இல்லாமல் நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்திருந்தால் இந்த பிரச்சனை தீர்ந்திருக்கும். ED, CBI மற்றும் IT ஆகியவற்றின் தவறான பயன்பாடு நிறுத்தப்பட்ட வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்திருந்தால் நிறுத்தப்பட்டிருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காரில் கட்டிப்போட்டு, இருக்கையில் மிளகாய் பொடி தூவியதாகவும் அவர் தெரிவித்தார்.
    • தன்னை காரில் கட்டிப்போட்டு, இருக்கையில் மிளகாய் பொடி தூவியதாகவும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பையோலி பகுதியைச் சேர்ந்தவர் சுகைல் (வயது 25). இவர் தனியார் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் கோழிக்கோடு அரிக்குளம் பகுதியில் சுகைல் காரில் பணத்துடன் சென்றபோது, பர்தா அணிந்த 2 பேர் வழிமறித்து தாக்கியதோடு ரூ.25 லட்சத்தை பறித்துச் சென்றதாக போலீசாரிடம் புகார் கூறினார்.

    மேலும் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள், தன்னை காரில் கட்டிப்போட்டு, இருக்கையில் மிளகாய் பொடி தூவியதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து சுகைலை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    முதலில் ரூ.25 லட்சம் பறிபோனதாக கூறிய அவர், பின்னர் ரூ.75 லட்சம் என்று கூறினார். பெரிய தொகை கொண்டு செல்லும் போது அவர் ஏன் துணைக்கு யாரையும் அழைத்துச் செல்லாமல் தனியாக சென்றார் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சுகைல், திட்டமிட்டு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுகைல், அவனது கூட்டாளிகள் தாஹா மற்றும் யாசர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.37 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோழிக்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிதின்ராஜ் கூறுகையில், ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்ப, ஒரு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுகைல், சில காலமாகவே பணத்தை மோசடி செய்து வந்துள்ளார். தற்போது போலீசாரின் கவனத்தை திசைதிருப்பி முதலில் அவர் நாடகமாடினார். ஆனால் தீவிர விசாரணையில் அவரது குட்டு அம்பலத்திற்கு வந்துள்ளது என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாலஸ்தீனத்தில் நடப்பது போர் அல்ல, இனப்படுகொலை.
    • இஸ்ரேல் விரும்பும் ஆயுதங்களை தயாரிக்கும் பூமியாக இந்தியா மாறியுள்ளது.

    பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலின் தாக்குதலை பெயரளவில் கண்டித்தாலும் இந்த விவகாரத்தில் இந்தியா எந்த நாட்டிற்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலைமை வகிக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திருப்திப்படுத்தவே பாலஸ்தீனத்திற்கு பதிலாக இஸ்ரேல் நாட்டை இந்திய அரசு ஆதரித்து வருகிறது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

    கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற சி.எச்.கனராம் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை நேற்று தொடங்கி வைத்துப் பேசிய பினராயி விஜயன் இவ்வாறு தெரிவித்தார்.

    பொதுக்கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், "இஸ்ரேல் மற்றும் நம் நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்களும் உடன் பிறந்தவர்கள் போன்றவர்கள். இருவரில் ஒருவரின் பெயர் சியோனிஸ்டுகள் மற்றொருவரின் பெயர் சங் பரிவார். இந்த 2 பேருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

    இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த சொல்லி ஐநா சபையில் உள்ள பெரும்பாலான நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்கா போன்ற சில நாடுகள் மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன.

    இதில் மகத்தான வரலாற்றை கொண்ட நம் நாடு எங்கே இருக்கிறது? இப்பிரச்சனையில் ஐநா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நாம் நடுநிலைமை வகிக்கிறோம். நாம் பாலஸ்தீனத்தின் பக்கம் இல்லை. பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரும் குழுவில் நாம் இல்லை. அதன் பொருள் நாம் இஸ்ரேல் பக்கம் நிற்கிறோம்.

    இத்தாலி போன்ற பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்தாலும், இந்தியா இன்னும் அதை நிறுத்தவில்லை. இஸ்ரேலுடன் அதிக ஆயுத வியாபாரம் செய்யும் நாடு இந்தியா தான். இஸ்ரேல் விரும்பும் ஆயுதங்களை தயாரிக்கும் பூமியாக இந்தியா மாறியுள்ளது

    பாலஸ்தீனத்தில் நடப்பது போர் அல்ல, இனப்படுகொலை. 2 தரப்பினரிடமும் போதுமான ஆயுதங்கள் இருந்தால் தான் அதை போர் என்று அழைக்க முடியும். இஸ்ரேல் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்துகிறார்கள், இது ஒருதலைபட்சமான தாக்குதல்" என்று தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்தியர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
    • சிஆர்பிஎப் பள்ளி அருகே நடந்த குண்டுவெடிப்புக்குப் பாகிஸ்தானில் இயங்கும் காலிஸ்தான் அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.

    இந்தியாவில் கடந்த 1 வாரத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவை போலியானது என்றாலும் விமான சேவைகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்தியர்களுக்கு மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் யாரும் பயணிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். பன்னுன் மீதான கொலை முயற்சி வழக்கில் தற்போது அமெரிக்காவில் தேடப்பட்ட இந்திய உளவுத்துறை முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    தொடர்ந்து டெல்லியில் நேற்றைய தினம் சிஆர்பிஎப் பள்ளி அருகே நடந்த குண்டுவெடிப்புக்குப் பாகிஸ்தானில் இயங்கும் காலிஸ்தான் அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. இந்த அனைத்து சம்பவங்களும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவையாக இருக்கும் சூழலில் இந்த எச்சரிக்கையை பன்முன் விடுத்துள்ளார்.

    சீக்கிய இனப்படுகொலையின் 40 வது ஆண்டு விழா விரைவில் வர உள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை பன்னுன் விடுத்துள்ளதாக யூகிக்க முடிகிறது. கடந்த வருடமும் பன்னுன் இதுபோன்று மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தேசத்துரோகம் மற்றும் பிரிவினைவாதத்தின் அடிப்படையில் ஜூலை 2020 முதல் உள்துறை அமைச்சகத்தால் பன்னுன் பயங்கரவாதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆவதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு.
    • சர்வீஸ் மையத்திற்கு சென்றால் சரியாக ரிப்பேர் பார்த்து தரும் சேவையில் அதிருப்தி.

    ஓலா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அடிக்கடி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிப்பேர் ஆகிறது. சர்வீஸ் சென்டர் சென்றால் சரியான பதில் கிடைப்பதில்லை என்ற வாடிக்கையாளர்களின் குமுறல் செய்தியாக வெளிவந்த வண்ணம் உள்ளது. சர்வீஸ் சென்டர் முன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ வைத்து எரிப்பு, ஷோ ரூம்-க்கே தீ வைப்பு போன்ற சம்பவங்கள் விரக்தியான வாடிக்கையாளர்களால் நடந்துள்ளன. பெங்களூரு பெண் ஒருவர் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வேஸ்ட் என பெரிய போர்டு தொங்கவிட்டு சென்றார்.

    இந்த நிலையில் சர்வீஸ் சென்டர்களில் ஓலா நிறுவனம் பவுன்சர்களை நிறுத்தியுள்ளதாகவும் பல வாடிக்கையாளர்கள் தங்களது ஆதங்களை வெளிப்படுத்தியுள்ளனர். சில வாடிக்கையாளர்கள் Stand-up காமெடியன் குணால் கம்ராவை டேக் செய்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    அந்த எக்ஸ் தள பதிவுகளை சுட்டிக்காட்டி குணால் கம்ரா ரீ-ட்வீட் ஓலா நிறுவனம் மீது குற்றச்சாட்டை கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது.

    ஆர்.ஜே. காஷ்யப் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் "ஓலா தற்போது ஒவ்வொரு சர்வீஸ் சென்டருக்கும் 5 முதல் 6 பவுன்சர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஓலா சர்வீஸ் சென்டருக்கு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள பவுன்சர்கள் பெண் வாடிக்கையாளர்கள் உள்பட அனைத்து ஓலா வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்க்க முடியாது. ஆகவே, இதுபோன்ற சர்வீஸைதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதை ரீ-ட்வீட் செய்த குணால் கம்ரா, "தயவு செய்து செய்தியாளர்கள் இதுகுறித்து சரிபார்க்கலாம். இது உண்மையாக இருந்தால் உண்மையிலான தனித்துவமானது. விற்பனை குழு விற்பனைக்கான. விற்பனைக்குப் பிறகு பவுன்சர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பாருங்கள் குணால் கம்ரான் அமோல் சவுத்ரி என்பவர் 20-10-2004 அன்று ஓலா சர்வீஸ்க்காக அப்பாயின்ட்மென்ட் பெற்றிருந்தேன். ஸ்கூட்டரை ரிப்பேர் பார்ப்பதற்கு யாரும் எடுத்துச் செல்லவில்லை. பவுன்சர்கள் மையத்தில் உள்ளனர். அவர்கள் ஆயுதங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு பதில் அனித்தனர் என்றார்.

    இந்த பதிவை ரீ-ட்வீட் செய்த குணால் கம்ரா "ஓலா நிறுவன உரிமையாளர் பவிஷ் அகர்வாலை டேக் செய்து, இதுபோன்ற புதுமையான இந்தியா தயாரிப்பை விற்றுவிட்டீர்கள். ஊழியர்களை பாதுகாக்க பவுன்சர்சளை அமர்த்த வேண்டியிருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

    குணால் கம்ரா முதன்முறையாக ஓலாவை விமர்சிக்கவில்லை. இதற்கு முன்னதாக வாடிக்கையாளர்களின் புகார் குறித்து வெளிப்படைதன்மை இல்லை, தற்போதைய வாடிக்கையாளர்களின் புகார்களை நிவர்த்தி செய்வதற்கான காலக்கெடு இல்லை என விமர்சித்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாகிஸ்தானில் இயங்கும் ஜஸ்டிஸ் லீக் இந்தியா என்ற பெயரில் இயங்கும் அந்த டெலிகிராம் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.
    • இந்திய கோழை ஏஜன்சியும் அதன் எஜமானர்களுக்கும் நமது உறுப்பினர்கலாய்

    தலைநகர் டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் நேற்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. வெடிவிபத்தைத் தொடர்ந்து தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேசிய புலன் விசாரணை அமைப்பு, தேசிய பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டோரும் இதை விசாரித்துவருகின்றனர்.

    இந்நிலையில் இந்த தாக்குதல் காலிஸ்தான் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டது என்று டெலிகிராமில் அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானில் ஜஸ்டிஸ் லீக் இந்தியா என்ற பெயரில் இயங்கும் அந்த டெலிகிராம் சேனலில் பதிவிடப்பட்டவை டெல்லி குண்டுவெடிப்போடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

    அந்த பதிவில், டெல்லி குண்டுவெடிப்பு வீடியோ இடம்பெற்றுள்ளது. மேலும் கீழே காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வாட்டர் மார்க் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி,' இந்திய கோழை ஏஜன்சியும் [Indian coward agency] அதன் எஜமானர்களுக்கும் நமது உறுப்பினர்களை [காலிஸ்தான் ஆதரவாளர்களை] அமைதிப்படுத்த, நமது குரலை நசுக்க கேடுகெட்ட ரவுடிகளை பணம் கொடுத்து ஏற்பாடு செய்யலாம் என்று நினைக்கின்றனர்.

    அப்படி நினைத்தால் அவர்கள் முட்டாள்களின் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்று அர்த்தம் . நாம் அவர்களுக்கு எவ்வளவு நெருக்கத்தில் இருக்கிறோம் என்றும், நம்மால் என்ன செய்ய முடியும் என்றும்,  அவர்களால் கற்பனை கூட செய்துபார்க்க முடியாது.  நம்மால் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த முடியும். #காலிஸ்தான் ஜிந்தாபாத் #ஜஸ்டிஸ் லீக் இந்தியா என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு குறித்து என்ஐஏ விசாரணையில் இறங்கியுள்ளது.

     

    முன்னதாக கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்புள்ளதாகவும், லாரன்ஸ் பிஸ்னோய் ரவுடி கும்பலுடன் இந்திய அதிகாரிகள்  தொடர்பு வைத்துள்ளதாகவும் கனடா குற்றம் சாட்டியது. மேலும் அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி தொடர்பாக இந்திய உளவுத்துறை [RAW] முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 9 விமான நிலையங்கள் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது.
    • சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 125 நாட்களில் 6 முதல் 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

    டெல்லியில் நடைபெற்று வரும் தனியார் டி.வி.யின் உலக மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    இந்தியா அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவில் சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு கவலைகளில் மூழ்கியுள்ள உலகிற்கு இந்தியா நம்பிக்கை அளிக்கிறது.

    நாங்கள் 3-வது முறையாக ஆட்சிய அமைத்து 125 நாட்கள் முடிவடைந்துள்ளது. 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

    15 புதிய வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 9 விமான நிலையங்கள் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது. 5 லட்சம் வீடுகளின் கூரை மேல் சோலார் அமைக்கப்பட்டுள்ளது. 90 கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 125 நாட்களில் 6 முதல் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. நம்முடைய அந்நிய செலாவணி 700 பில்லியனுக்கு மேல் உயர்ந்துள்ளது.

    'விக்சித் பாரத்' பற்றிய விவாதங்கள் இப்போது பொது விழிப்புணர்வின் ஒரு பகுதியாக உள்ளது. இது 'ஜனசக்தி' 'ராஷ்டிர சக்தி'க்கு மிகப்பெரிய உதாரணம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் நேற்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது
    • பாஜகவுக்கு பணி செய்வதற்கான திறமையோ எண்ணமோ கிடையாது.

    தலைநகர் டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் நேற்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. வெடிவிபத்தைத் தொடர்ந்து தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் மத்திய பா.ஜ.க. அரசால் டெல்லியின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி முதல்வர் அதிஷி விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிஆர்பிஎப் பள்ளி அருகில் நடந்த இந்த வெடிவிபத்து டெல்லியின் பாதுகாப்பு அமைப்பு சிதைந்துவருவதைக் காட்டுகிறது.

    டெல்லியின் சட்ட ஒழுங்கு மத்திய பா.ஜ.க. அரசின் கீழ் வருகிறது. ஆனால், பா.ஜ.க. அதை கவனிப்பதை விட்டுவிட்டு, டெல்லி அரசை முடக்குவதையே முழு நேர வேலையாக செய்து வருகிறது. மும்பையில் 1990 களில் இருந்த நிழல் உலகைப் போல் தற்போது டெல்லி உள்ளது.

    நகரத்தில் வெட்டவெளிச்சமாகத் துப்பாக்கிச்சூடும் வழிப்பறிகளும் நடக்கின்றன . பாஜகவுக்கு பணி செய்வதற்கான திறமையோ எண்ணமோ கிடையாது. டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்துவிட்டால் சட்ட ஒழுங்கை சீர்குலைத்ததை போல, பள்ளிகள், மருத்துவமனை என அனைத்து கட்டமைப்பையும் சிதைத்து விடுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

    இந்நிலையில் இந்த விமர்சனத்தால் கொந்தளித்த பாஜக அதிஷியை பொம்மை முதல்வர் என்று விமர்சித்துள்ளது. மேலும் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது முதலமைச்சர் குடியிருப்பில் அதிக செலவு செய்து பொருட்களை வாங்கியாக ஒரு லிஸ்டை வெளியிட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்களிடம் 65 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு டிக்கெட் வாங்கி கொடுத்ததாக சாய் குமார் தெரிவித்தார்.
    • ஜாகியா கானம் பொருளாதார ரீதியாக பலனடைந்தாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வததற்காக பெங்களூருவைச் சேர்ந்த சாய்குமார் என்பவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேருடன் 'விஐபி பிரேக்' தரிசன வரிசையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, அவர் வைத்திருந்த தரிசன டிக்கெட்டை வாங்கி பார்த்த ஊழியர்களுக்கு, சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி தேவஸ்தான விஜிலென்ஸ் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த விஜிலென்ஸ் அதிகாரிகள், இது பற்றி சாய்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

    அதில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆந்திர சட்டசபை மேலவை துணைத்தலைவர் மாயண்ணா ஜாகியா கானம் என்பவர் பரிந்துரை அடிப்படையில், அவரது செய்தி தொடர்பாளர் கிருஷ்ணதேஜா, மற்றொரு நபரான சந்திர சேகர் ஆகியோர், தங்களிடம் 65 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு டிக்கெட் வாங்கி கொடுத்ததாக சாய் குமார் தெரிவித்தார்.

    இதுபற்றி தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அளித்த புகாரின்பேரில், மேல்சபை துணைத்தலைவர் ஜாகியா கானம் உட்பட 3 பேர் மீதும் திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் சட்ட சபை மேல்சபை துணைத்தலைவர் ஜாகியா கானம் பொருளாதார ரீதியாக பலனடைந்தாரா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    அதுமட்டுமின்றி, அவருடைய பரிந்துரை அடிப்படையில் இதற்கு முன்னர் 'விஐபி பிரேக்' தரிசன டிக்கெட் வாங்கி ஏழுமலையானை வழிபட்ட பக்தர்களிடம் விசாரணை நடத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள், மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் செயல்படுத்துவதை காண்காணிக்க குழு.
    • கண்காணிக்கும் குழுவின் தலைவராக சிவராஜ் சிங் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பிரதமர் மோடி அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் செயல்படுத்துவதை காண்காணிக்க விவசாயம், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் காண்காணிப்பு குழுவை அமைத்துள்ளார் பிரதமர் மோடி.

    பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், கட்டமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் செயல்படுவதை இந்த குழு கண்காணிக்கும்.

    இந்த குழுவின் முதல் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் கடந்த 18-ந்தேதி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் அனைத்து துறைகளின் செயலாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

    அனைத்து திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்கும் அதிகாரத்தை சிவராஜ் சிங் சவுகானிடம் பிரதமர் மோடி வழங்கியுள்ளார். 2014-ல் பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து தற்போது வரையிலான திட்டங்கள் குறித்து சிவராஜ் சிங் தலைமையிலான குழு காண்காணிக்கும்.

    திட்டங்களில் ஏதாவது குறைபாடு இருந்தாலோ அல்லது மந்திரிகளிடையிலான ஆதரவு தேவைப்பட்டாலோ பிரதமர் அலுவலகம் எதிர்பார்ப்பதை சம்பந்தபட்ட துறைகளின் செயலாளர்களிடம் சவுகான் எடுத்துரைப்பார்.

    அன்றாட நிர்வாகம் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் ஆகிய இரண்டிலும் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதால், அரசாங்க திட்டங்களைச் செயல்படுத்துவதில் கால தாமதம் குறித்து கவலைப்படுவதாகவும், தனது அச்சங்களை அடிக்கடி தனது செயலர்கள் மற்றம் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளுடன் தனிப்பட்ட கூட்டங்களில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாகத்தான் சிவராஜ் சிங் தலைமையில் கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேச முன்னாள் முதல்வராவார். மூன்று முறை இவர் மத்திய பிரதேச மாநில முதல்வராக இருந்துள்ளார். 2024-ல் பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு செய்யப்பட்டபோது, இவரது பெயரும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது
    • கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தார்

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட தீவிர இந்து அமைப்பினரால் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மத்திய பாஜக அரசின் முன்னெடுப்பில் ரூ.1,800 கோடி பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் உள்ளது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் சூழ இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

     

    மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் இப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்பிறகே 2020 இல் பாஜகவால் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    தற்போது இந்த தீர்ப்பை வழங்கிய அனுபவம் குறித்து தனது சொந்த ஊரான புனேவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரசூட் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சில வழக்குகளில் ஒரு முடிவுக்கு வரவே முடியாதபடி இருக்கும். அப்படித்தான் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி பிரச்சனை [குறித்த வழக்கு] மூன்று மாதங்களாக என் முன் இருந்தது.

     

    அப்போது தினமும் நான் கடவுளின் சிலைக்கு முன்னாள் அமர்ந்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லும்படி வேண்டினேன். என்னை நம்புங்கள், உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் நிச்சயம் அவர் ஒரு வழியை காண்பிப்பார் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
    • 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

    வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி களம் இறக்கப்பட்டுள்ளார். முதன்முறையாக பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக அவரது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    பலவருடங்கள் கழித்து பிரியங்கா காந்திக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சோனியா காந்தி கேரள வர இருப்பதாக, மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

    வரும் செவ்வாய்க்கிழமை பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார்கள். இதில் சோனியா காந்தியும் பங்கேற்கிறார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். எதாவது ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் என்பதால் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பாலக்காடு மற்றும் செலக்காரா சட்டமன்ற தொகுதிகளுடன் வயநாடு தொகுதிக்கு நவம்பர் 23-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

    ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் சுமார் 3,64,422 வாக்கு வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனி ராஜாவை வீழ்த்தினார்.

    வயநாட்டில் பிரியங்கா காந்தியை சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் பணியாற்றி வரகிறார்கள்.

    காஙகிரஸ் கட்சியின் பொது செயலாளரும், அமைப்பாளருமான கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பாளராக செயல்பட இருக்கிறார்.

    ×