என் மலர்

    இந்தியா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் 150-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
    • ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உணவருந்தும் வகையில் மிகப்பெரிய அறையும் இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனையில் ரூ.2 கோடி நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் கவடியார் பகுதியில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் வசிக்கும் பிரமாண்ட அரண்மனை உள்ளது. கடந்த 1934-ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னராக இருந்த பாலராம வர்மா இந்த அரண்மனையை கட்டியுள்ளார். 3 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் 150-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.

    ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உணவருந்தும் வகையில் மிகப்பெரிய அறையும் இருக்கிறது. தற்போது இங்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை.

    இந்த நிலையில் இங்குள்ள ஒரு அறையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள ரத்தின கற்கள், மரகத மாலைகள், வைரங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ஆனால் இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் கொடுக்காமல் அரண்மனைக்குள்ளேயே மன்னர் குடும்பத்தினர் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    ஆனால் பல கட்ட விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்காததால் இது குறித்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த கவுரி லட்சுமி பாய் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் பேரூர்க்கடை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    பார்வையாளர்கள் யாருக்கும் இங்கு அனுமதி கிடையாததால் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முதலில் ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    அதே சமயத்தில் அரண்மனைக்கு வந்தவர்கள் யார்? யார்? என்பது குறித்த விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். பாதுகாப்பு மிகுந்த மன்னர் அரண்மனையில், நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கன்ஷிராம் இந்திய அரசியலின் தன்மையை மாற்றியமைத்தவர்.
    • இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தினார் என்றார்.

    புதுடெல்லி:

    பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனரான கன்ஷி ராம் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, கன்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

    இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    கன்ஷி ராம் இந்திய அரசியலின் தன்மையை மாற்றியமைத்தவர். தனது இயக்கங்கள் மூலம் ஏழைகளிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவர்களின் வாக்கு, குரல் மற்றும் பிரதிநிதித்துவம் முக்கியம். இந்த நாடு அனைவருக்கும் சமமானது.

    நமது அரசியலமைப்பு ஒவ்வொரு இந்தியருக்கும் சமத்துவம், கண்ணியம் மற்றும் பங்கேற்பை உறுதியளிக்கிறது.

    சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு இந்த வாக்குறுதிகளை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்காக கன்ஷிராம் ஜி தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவ்வாறு செய்வதன் மூலம் அவர் இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தினார்.

    அவருக்கு மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்குவது நமது நாட்டிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும்.

    இது அவரை அதிகாரமளித்தல் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக தொடர்ந்து பார்க்கும் மில்லியன் கணக்கான மக்களின் விருப்பங்களை மதிக்கும் என தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலியாக உள்ள 6 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மகாராஷ்டிரம், குஜராத்தில் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவாவில் காலியாக உள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மகாராஷ்டிரம், குஜராத்தில் ஏப்ரல் 23-ம் தேதியும், கர்நாடகம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவாவில் ஏப்ரல் 9ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    கோவாவில் - போன்டா

    குஜராத்தில் - அம்ரேத்

    கர்நாடகத்தில் - பாகல்கோட், தாவநாகரி தெற்கு

    மகாராஷ்டிரத்தில் - ராஹூரி, பாராமதி

    நாகாலாந்தில் - கோரிடாங்க்

    திரிபுராவில் - தர்மாநகர்

    வாக்குப்பதிவு முடிந்து மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும், அதன் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ந்தேதி வாக்குப்பதிவு.
    • அசாம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 9-ந்தேதி வாக்குப்பதிவு

    5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார். அதன்பின் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களுக்கு ஒரு கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.

    இதில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களுக்கு ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்தார்.

    மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.

    முதற்கட்டமாக ஏப்ரல் 23-ந்தேதி 152 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக ஏப்ரல் 29-ந்தேதி 142 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என ஞானேஷ்குமார் அறிவித்தார்.

    ஐந்து மாநிலங்களில் மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி வாக்காளர்களுக்கு வாழ்த்துகள்.
    • 5 மாநிலங்களிலும் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிடுவது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

    டெல்லியில் இந்திய தேர்தல் தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

    அப்போது அவர் உரையாற்றியதாவது:-

    கடந்த சில மாதங்களாக 5 மாநிலங்களிலும் உயரதிகாரிகள், அரசியல் கட்சிகளை சந்தித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ததை அடுத்து இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி வாக்காளர்களுக்கு வாழ்த்துகள். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் களத்தில் உழைத்த, ஒத்துழைத்த ஊழியர்களுக்கு வாழ்த்துகள்.

    5 மாநிலங்களிலும் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில், தமிழகத்தில் உள்ள 5.67 கோடி வாக்காளர் உள்பட 5 மாநிலங்களிலும் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்.

    சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்.

    தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் பணியில் 8.5 லட்சம் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 25 லட்சம் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
    • தமிழ்நாட்டில் முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம் ஆகும்.

    தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் மே 10-ந்தேதி முடிவடைகிறது. புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந்தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ந்தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20-ந்தேதியும், கேரள சட்டசபை மே 23-ந்தேதியும் நிறைவு பெறுகிறது.

    இதனைத் தொடர்ந்து இந்த 5 மாநிலத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அரசு திட்டங்கள் ஏதும் அறிவிக்க முடியாது. தேர்தல் பிரசாரம் மேற்கொண்டால், அதன் செலவு கட்சி மற்றும் வேட்பாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பழமை வாய்ந்த புகழ்பெற்ற அரண்மனையில் இருந்து நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தை சேர்ந்தவர் அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமிபாய். இவர் புகழ்பெற்ற கவடியார் அரண்மனையில் வசித்து வருகிறார். அவரது உறவினர்கள் மற்றும் 15 ஊழியர்கள் அரண்மனையில் உள்ளனர். இங்கு அரச காலத்து புராதன நகைகள் உள்ளன. இதில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் மாயமாகி இருப்பதாக பேரூர்கடா போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    பழமை வாய்ந்த புகழ்பெற்ற அரண்மனையில் இருந்து நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நகைகள் கடந்த நவம்பர் மாதமே மாயமானதாக தெரிகிறது. இதுதொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியும் நகைகள் மாயமானது பற்றி தெரியவராதததால் தான் தற்போது போலீசில் புகார் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரண்மனையில் உள்ள அலமாரியில் ஏராளமான நகைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் ரத்தினக் கற்கள் உள்ளிட்ட தங்க நகைகள் ஒரு இரும்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. கடந்த நவம்பர் மாதம் அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமிபாய் பெங்களூருவுக்குச் செல்வதற்கு முன்பு அலமாரியை திறந்தபோது நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களாக, அரண்மனையில் உள்ளவர்கள் அதை தங்கள் சொந்த உபயோகத்திற்காக எடுத்துச் சென்றார்களா? என்று குடும்ப உறுப்பினர்கள் விசாரித்து வந்தனர். யாரும் அதை எடுத்துச் செல்லவில்லை என்பது கண்டறியப்பட்டபோது, திருட்டு சந்தேகத்தின் பேரில் தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன பொருட்களில் பாரம்பரியமான மிகவும் அரிதான 12 நகைகள் அடங்கும் என்றும், மாயமான நகைகளின் மொத்த மதிப்பு ரூ.2 கோடி என்றும் கூறப்படுகிறது. அதே அலமாரியில் மற்ற மதிப்புமிக்க நகைகளும் வைக்கப்பட்டிருந்தன, அவை அப்படியே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் 30 வினாடிகளில் இருந்து 3 முதல் 5 வினாடிகளாக குறையும்.
    • ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    இந்தியாவில் தினமும் 2.3 கோடி மக்கள் ரெயில்களை பயன்படுத்துகிறார்கள். இந்திய ரெயில்வே, 1986-ம் ஆண்டில் இருந்தே பயணிகள் முன்பதிவு அமைப்பு (பி.ஆர்.எஸ்.) எனப்படும் முன்பதிவு நடைமுறையையே பயன்படுத்தி வருகிறது.

    இது பல ஆண்டுகளாக சிக்கல்களை சந்தித்து வந்தது. தட்கல் முன்பதிவின் போது அடிக்கடி செயலி செயலிழப்பது, 30 வினாடி தாமதம் ஏற்படுவது மற்றும் தொழில்நுட்ப சிக்கல் என பல பிரச்சனைகள் இருந்தது.

    ஒவ்வொரு நாளும் இது ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த சூழலில் பழைய நடைமுறையை மாற்றியமைத்து, 5 மடங்கு வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் அடுத்த தலைமுறை அமைப்பு அறிமுகமாக உள்ளது.

    அதாவது தற்போதைய பயணிகள் முன்பதிவு அமைப்பு நிமிடத்திற்கு 8 ஆயிரம் டிக்கெட்டுகளை கையாளும் தன்மை கொண்டது. புதிய அமைப்பானது கிளவுட்-நேட்டிவ் மைக்ரோ சர்வீசஸ் கட்டமைப்பு மூலம் ஒரு நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

    இதன் மூலம், தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் 30 வினாடிகளில் இருந்து 3 முதல் 5 வினாடிகளாக குறையும். அதேபோல் இப்போது தட்கல் டிக்கெட் எடுக்கும்போது தொழில்நுட்ப சிக்கல் ஏற்படுகிறது. இதனால் உண்மையாகவே டிக்கெட் கிடைக்க வேண்டிய மக்களுக்கு அவை கிடைப்பதில்லை.

    இந்த தொழில்நுட்ப சிக்கலை கண்டறிந்து அதை சரிசெய்யும் தொழில்நுட்பமும் இந்த புதிய அமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளையும் தடுக்கும். அதிக தேவை உள்ள முன்பதிவுகளுக்கு ஆதார் ஓ.டி.பி. மற்றும் முக அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டு, இணைய அச்சுறுத்தல்கள் முறியடிக்கப்படும்.

    குபெர்னெட்ஸ் தொழில் நுட்பம் ஒருங்கிணைந்த கிளஸ்டர்கள் மூலம் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிக டிக்கெட்டுகள் கையாள முடியும். இது தற்போதைய 2 கோடி தினசரி பரிவர்த்தனைகளை விட 10 மடங்கு அதிகமாகும். பி.ஆர்.எஸ்., யு.டி.எஸ். மற்றும் இ-டெண்டரிங் ஆகியவற்றை "ரெயில்ஒன் சூப்பர் செயலி" என்ற ஒற்றை தளத்தில் இணைத்து, டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்தல், பணத்தை திரும்ப பெறுதல், பி.என்.ஆர். நிலை, இருக்கையின் தன்மை போன்ற அனைத்து சேவைகளுக்கும் ஒரே உள் நுழைவை இது வழங்கும்.

    ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். சரிபார்க்கப்படாத பயன்பாட்டாளர்கள் 2-ம் நாளில் இருந்து முன்பதிவு செய்ய வேண்டும். இதுவே மோசடியை ஓரளவுக்கு தடுக்கும்.

    இதில் தற்போதைய இருக்கையின் நிலை, நடைமேடை எண்கள், ரெயில் டிக்கெட் கட்டண விவரம் என எல்லாமே இருக்கும். அதேபோல காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகளின் உறுதிப்படுத்தும் வாய்ப்பும் கணிசமாக மேம்படும்.

    இந்த புதிய திட்டத்தின் மூலம் மோசடிகள் குறைக்கப்பட்டு ஆண்டுக்கு சுமார் ரூ.60 ஆயிரம் கோடி பாதுகாக்கப்படும். ரூ.500 கோடி மதிப்பிலான தட்கல் கருப்பு சந்தை தடுக்கப்படும். மேலும், பிரீமியம் ரெயில்களில் மாறும் விலை நிர்ணயம் செய்வதன் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது வழக்கமான சாப்ட்வேர் மேம்பாடு மட்டுமல்லாமல், 2047-ம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் அதிவேக ஹைப்பர்லூப் ரெயில்களின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1986-ம் ஆண்டில் இருந்த 2ஜி டிக்கெட்டிங்கில் இருந்து 2026-ம் ஆண்டுக்கான 6ஜி டிக்கெட்டிங்கிற்கு முன்னேற்றம் அடையவுள்ளது. இது பண்டிகை காலங்களில் ரெயில்களை பயன்படுத்தும் பல கோடி பேருக்கு வரபிரசாதமாக அமையும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹார்திக் பழகி வந்த பெண் தொடர்பாக பேச்சு எழுந்தது. இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • ஆத்திரமடைந்த ஹார்திக் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஹிம்ஷிகாவை பயங்கரமாக உடலில் பல இடங்களில் குத்தினார்.

    உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் மொராதாபாத் படாயூனை சேர்ந்தவர் ஹிம்ஷிகா (வயது25), இவரது சகோதரர் ஹார்திக். இரட்டையர்களான இவர்கள் டெல்லி குருகிராமில் தங்கி வேலை செய்து வந்தனர். இவர்களது தந்தை பிரிந்து சென்று விட்டார். தாய் காப்பீட்டு நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    ஹிம்ஷிகா எம்.பி.ஏ. படித்து கொண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஹார்திக் என்ஜினீயரிங் முடித்துள்ளார். ஹார்திக் கடந்த ஒரு ஆண்டாக பணிக்கு செல்லவில்லை. ஹார்திக் வேறு மத பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்தார். அந்த பெண்ணை அவர் நேரில் சந்திக்கவில்லை. இருவரும் சமூக ஊடகங்கள் வாயிலாக பழகி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவருக்குமான தொடர்பு முறிந்து போனது. இதனால் ஹார்திக் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ஹிம்ஷிகா, ஹார்திக் 2 பேரும் கோலி பண்டிகை கொண்டாடுவதற்காக தனது சொந்த கிராமத்திற்கு வந்தனர். அங்கு 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஹார்திக் பழகி வந்த பெண் தொடர்பாக பேச்சு எழுந்தது. இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த ஹார்திக் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஹிம்ஷிகாவை பயங்கரமாக உடலில் பல இடங்களில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் வீட்டிலேயே கிடந்தது.

    அதைத்தொடர்ந்து எதுவும் நடக்காததுபோல் இருந்த ஹார்திக் தனது தாயின் அலுவலகத்திற்கு சென்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது அங்கு அறையில் ஹிம்ஷிகா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை தாயிடம் அவர் காண்பித்தார். இதனை பார்த்து தாய் அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டார்.

    அப்போது திடீரென ஹார்திக் தாயையும் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி ஹார்திக்கை கைது செய்தனர்.

    ஹிம்ஷிகாவின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் ஹிம்ஷிகாவை ஹார்திக் 50 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்றது தெரியவந்தது.

    அவரது கழுத்து, மார்பு, வயிறு, கைகள், கால்கள், தோள்பட்டைகள், முகம் என அவரது உடல் முழுவதும் 50 இடங்களில் ஆழமான கத்தி குத்து காயம் இருந்ததை டாக்டர்கள் கண்டறிந்தனர். அவரது இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்பட பல முக்கிய உறுப்புகள் கடுமையாக சேதமடைந்து அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள் பறிமுதல்.
    • அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து அந்த பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினரும், ஜம்மு-காஷ்மீர் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதி ஒருவன் ஊடுருவ முயற்சித்துள்ளான்.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

    பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகள் ஆகியவற்றை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

    அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போதைப் பொருள் விருந்து நடைபெற்ற பண்ணை வீட்டிற்கு போலீசார் விரைந்தனர்.
    • போலீசார் வருவதை அறிந்து துப்பாக்கில் ஒருவர் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், மைனா பாத் அஜீஸ் நகரை சேர்ந்தவர் பைலட் ரோஹித் ரெட்டி. இவரது பண்ணை வீட்டில் வார இறுதி விடுமுறை நாள் மது மற்றும் போதை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    சட்ட விரோதமாக இந்த விருந்து செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. நேற்று இரவு மது மற்றும் போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் மற்றும் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் இரவு 9 மணிக்கு பண்ணை வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர். போலீசார் பண்ணை வீட்டிற்குள் வருவதை கண்ட டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் மிஸ்ரா என்பவர் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். துப்பாக்கி சூட்டில் போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதையடுத்து விருந்தில் கலந்து கொண்ட பைலட் ரோஹித் ரெட்டி, ஏலூரு எம்.பி. மகேஷ் குமார் யாதவ், மிஸ்ரா, ரமேஷ் குமார், விஜய் கிருஷ்ணா, ரித்தேஷ் ரெட்டி, காசிக் ரவி, அர்ஜுன் ரெட்டி மற்றும் ஒரு பெண் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் போலீசார் பரிசோதனை செய்தபோது மிஸ்ரா, ரோஹித் ரெட்டி, ரித்தேஷ், காசிக் ரவி, அர்ஜுன் ரெட்டி ஆகியோர் போதை பொருள் உட்கொண்டது தெரிய வந்தது.

    மேலும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிம்லா மற்றும் கோவாவில் இருந்து வரும்போது போதைப்பொருள் உட்கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

    பண்ணை வீட்டில் 2 கிராம் எடையுள்ள வெள்ளை பொடியை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    போதைப்பொருளா? என்பதை அறிவதற்காக அந்த வெள்ளைபொடியை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மது மற்றும் போதை விருந்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அரசியல்வாதிகள் என போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விருப்பம் வழங்கப்பட்டு இருப்பது மற்றொரு புயலைத் தூண்டியது.
    • இந்த விவகாரம் அரசியல் சர்ச்சையை தூண்டியது.

    பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ஃபிளிக்ஸ்-இல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படமான 'கூஷ்கோர் பந்தட்' சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, உத்தர பிரதேச மாநிலத்தின் காவல் துறை ஆட்சேர்ப்புத் தேர்வில் சந்தர்ப்பவாதிகள் குறித்த கேள்விக்கு "பண்டிட்" என்ற விருப்பம் வழங்கப்பட்டு இருப்பது மற்றொரு புயலைத் தூண்டியுள்ளது.

    கேள்விக்கு வழங்கப்பட்ட பதில்களில் பண்டிட் என்ற வார்த்தையால் சர்ச்சை அதிகரித்ததால், உத்தர பிரதேச காவல்துறை ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு வாரியம் (UPPRPB) இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

    உத்தர பிரதேச மாநில காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆட்சேர்ப்புக்காக நேற்று (மார்ச் 14) நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் இந்தி பிரிவில் இடம்பெற்ற கேள்வி, வாய்ப்புக்கு ஏற்ப மாறும் ஒரு நபருக்கு ஒரு வார்த்தை பதிலைத் தேர்வு செய்யுமாறு தேர்வர்களைக் கேட்டுக் கொண்டது.

    அதன் படி கேள்வி ஒன்றுக்கு தேர்வர்கள் தேர்வு செய்ய வேண்டிய ஒருவார்த்தை விருப்ப பதில்களில் "பண்டிட்", "சந்தர்ப்பவாதி", "அப்பாவி" மற்றும் "விர்ச்சுவஸ்" ஆகியவை இடம்பெற்று இருந்தது.

    இந்த விவகாரம் பேசு பொருளான நிலையில், உத்தர பிரதேச பா.ஜ.க. செயலாளர் அபிஜத் மிஸ்ரா, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதி, கேள்வியை உருவாக்கியதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரினார். "பண்டிட்" என்ற வார்த்தையை விருப்பங்களில் சேர்ப்பது பிராமண சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறியதை தொடர்ந்து, இந்த விவகாரம் அரசியல் சர்ச்சையை தூண்டியது.

    "வாய்ப்புக்கு ஏற்ப மாறும் ஒரு நபரின் சரியான அர்த்தம் 'சந்தர்ப்பவாதி', ஆனால் விருப்பங்களில் 'பண்டிட்' என்பதை சேர்ப்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துகிறது," என்று மிஸ்ரா கூறினார், "பண்டிட்" என்ற சொல் அறிவு மற்றும் மத மரியாதையுடன் தொடர்புடையது.

    எந்தவொரு தனிநபர், சாதி, மதம் அல்லது சமூகத்தின் கண்ணியம் அல்லது மத உணர்வுகள் குறித்து அவமதிப்பான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு அனைத்து ஆட்சேர்ப்பு வாரியங்களின் தலைவர்களுக்கும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    ×