என் மலர்

    இந்தியா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.
    • 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயத் தயாரிப்புகளை இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    பிரதமர் மோடியுடன் நேற்று தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்தார்.

    ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி அளித்ததால், இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25 பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்த டிரம்ப், இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.

    அதேநேரம், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாய  பொருட்களை  இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் இந்தியாவுடனான ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என அமெரிக்க விவசாயத்துறை செயலாளர் தெரிவித்தார். இது இந்திய விவசாயிகளைப் பாதிக்குமோ என்ற கவலை எழுந்தது.

    இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் இந்திய விவசாயிகளின் நலன்களை எவ்விதத்திலும் பாதிக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அதாவது, அமெரிக்காவிலிருந்து பெரும்பாலும் பருத்தி, பாதாம், மற்றும் வால்நட்ஸ் போன்ற இந்தியாவில் தேவை அதிகமாக உள்ள பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும், அரிசி அல்லது கோதுமை போன்ற இந்திய விவசாயிகள் அதிகம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குப் பாதிப்பு இருக்காது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.   

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இதை தெரிவித்துள்ளார்.
    • வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கான (SMS) கட்டணமாக மட்டும் ரூ.3,387.77 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மூன்று ஆண்டுகளில் 11 பொதுத்துறை வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத கணக்குகளிலிருந்து அபராதமாக மொத்தம் ரூ.8,092 கோடி வசூலித்துள்ளன.

    மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இதை தெரிவித்துள்ளார்.

    அதன்படி, 2022-23 நிதியாண்டில் ரூ.2,407 கோடி, 2023-24 நிதியாண்டில்: ரூ.2,909 கோடி, 2024-25 நிதியாண்டில்: ரூ.2,775 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கான (SMS) கட்டணமாக மட்டும் ரூ.3,387.77 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்துள்ளான்.
    • தடுக்க முயன்ற போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஒசாஃப் அலி கான் என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம், 11-ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு போபால் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஒசாஃப் அலி கானை போலீசார் இன்று ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த வழக்கறிஞர்கள், அலி கான் மீதான கோபத்தில் நீதிமன்ற வளாகத்தில் அவனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    தடுக்க முயன்ற போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    வழக்கறிஞர்கள் அலி கானை சரமாரியாகத் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த Louis Vuitton பிராண்ட் பெல்ட் வெளியே தெரிந்தது.
    • பெல்ட் தெரிவதை உணர்ந்த அவர், உடனடியாக அமர்ந்து கொண்டு, மீண்டும் எழுந்து பேசும்போது தனது கோட்-உடையை கொண்டு அந்த பெல்ட்டை மறைக்க முயன்றார்.

    மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பாஜக எம்.பி அனுராக் தாகூர் அணிந்திருந்த ஒரு விலையுயர்ந்த பெல்ட் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று, நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே அனுராக் தாகூர் பேச எழுந்தபோது, அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த Louis Vuitton பிராண்ட் பெல்ட் வெளியே தெரிந்தது.

    கேமராவில் பெல்ட் தெரிவதை உணர்ந்த அவர், உடனடியாக அமர்ந்து கொண்டு, மீண்டும் எழுந்து பேசும்போது தனது கோட்-உடையை கொண்டு அந்த பெல்ட்டை மறைக்க முயன்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அவர் அணிந்திருந்த பெல்ட்டில் 'LV' என்ற சின்னம் தெளிவாகத் தெரிந்தது. லூயி விட்டான் பெல்ட்கள் பொதுவாக 40,000 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன. அனுராக் தாகூர் அணிந்திருந்தது போன்ற குறிப்பிட்ட மாடல்கள் 80,000 முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

    நாடாளுமன்றத்தில் ஒரு மூத்த தலைவர் இது போன்ற விலையுயர்ந்த வெளிநாட்டு பிராண்ட் பெல்ட் அணிந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராணுவத்தில் தங்களது முழு பணிக்காலத்தையும் முடித்துவிட்டு ஓய்வுபெற்ற வீரர்கள், பணி காலத்தில் மாற்றுத்திறனாளி ஆகியிருந்தாலும் வரி விலக்கு கிடையாது.
    • முதலில் அக்னிவீர் திட்டம் நாட்டின் பாதுகாப்பைச் சிதைத்தது, இப்போது மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்தின் மீதான இந்தத் தாக்குதல் ராணுவ வீரர்களின் மன உறுதியைக் குறைக்கும்.

    2026-27 பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான வருமான வரி விலக்கை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

    இதற்கு நாடு முழுவதும் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    பட்ஜெட் அறிவிப்பின்படி, உடல் குறைபாடு காரணமாக ராணுவ சேவையிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கு மட்டுமே இனி வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

    ராணுவத்தில் தங்களது முழு பணிக்காலத்தையும் முடித்துவிட்டு ஓய்வுபெற்ற வீரர்கள், பணி காலத்தில் மாற்றுத்திறனாளி ஆகியிருந்தாலும், அவர்களுக்கு இனி அந்த ஓய்வூதியத்திற்கு வரி விலக்கு கிடையாது.

    பெரும்பாலான மாற்றுத்திறனாளி வீரர்கள் தங்களது பணிக்காலத்தை முடித்த பிறகே ஓய்வு பெறுகிறார்கள். எனவே அரசின் இந்த முடிவால் பலர் பாதிக்கப்படுவர்.

    பணியின் போது காயமடைந்து அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி ஆகும் வீரர்களுக்கு, நிர்வாகப் பணிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. அவர்கள் ஓய்வு பெறும்போது வரி விலக்குடன் கூடிய கூடுதல் ஓய்வூதியம் மற்றும் மருத்துவச் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.

    தற்போது அந்த வரி விலக்குச் சலுகையை அரசு பறிக்கப்பட்டுள்ளது நாட்டின் பாதுகாப்பிற்காகப் போராடி ஊனமுற்ற வீரர்களின் உரிமைகளைப் பறிப்பதாக இருப்பதாகப் முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.

    முன்னாள் மேஜர் ஜெனரல் ஷைல் ஜா இது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில், "முதலில் அக்னிவீர் திட்டம் நாட்டின் பாதுகாப்பைச் சிதைத்தது, இப்போது மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்தின் மீதான இந்தத் தாக்குதல் ராணுவ வீரர்களின் மன உறுதியைக் குறைக்கும்" என்று விமர்சித்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறு விஷயத்துக்காக சிவம் குப்தாவிற்கும், உணவு டெலிவரி செய்யும் 3 இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • இதில் அவர் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    டெல்லியில் உணவு டெலிவரி ஊழியர்கள் தொழிலதிபரை ஹெல்மெட்டால் அடித்துக் கொன்ற சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சிவம் குப்தா (36).

    கடந்த ஜனவரி 3 இரவு, டெல்லியின் மிகவும் நெரிசலான பகுதியான Connaught Place-இல் சிறு விஷயத்துக்காக சிவம் குப்தாவிற்கும், உணவு டெலிவரி செய்யும் 3 இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், தங்கள் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டுகளால் சிவம் குப்தாவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுமார் 16 நாட்கள் உயிருக்குப் போராடிய சிவோம் குப்தா, சிகிச்சை பலனின்றி ஜனவரி 19-ஆம் தேதி உயிரிழந்தார்.

    சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, 2 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மூன்றாவது நபரைத் தேடி வருகின்றனர்.

     

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒலியைவிட அதிவேகத்தில் நீண்ட தூரம் பயணித்து எதிரி நாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும்
    • DRDO விஞ்ஞானிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

    இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) ஒடிசா கடற்கைரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், Solid Fuel Ducted Ramjet (SFDR) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

    நேற்று, செவ்வாய்க்கிழமை காலை 10:45 மணியளவில் SFDR தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ஏவுகணையை ஏவி இந்த சோதனை நடைபெற்றது.

    ஏவுகணைகள், ஒலியைவிட அதிவேகத்தில் (சூப்பர்சோனிக்) நீண்ட தூரம் பயணித்து எதிரி நாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும் ஆற்றலை இந்த SFDR தொழில்நுட்பம் வழங்குகிறது.

    சோதனை வெற்றி பெற்ற நிலையில், மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் வான்வழி Long-range Air-to-Air Missiles ஏவுகணைகளை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.

    இந்த வெற்றிக்காக DRDO விஞ்ஞானிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் தற்காப்புத் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று அவர் கூறியுள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மும்பையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், பயணிகளுடன் ஓடுபாதையில் புறப்படுவதற்காகக் காத்திருந்தது.
    • ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை முனை பலத்த சேதமடைந்தது.

    மும்பை விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்த இரு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்று, மும்பையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், பயணிகளுடன் ஓடுபாதையில் புறப்படுவதற்காகக் காத்திருந்தது.

    அப்போது  ஐதராபத்தில் இருந்து இண்டிகோ விமானம் பயணிகளுடன் ஓடுபாதையில் வந்திறங்கியது. இதன் போது இரு விமானிகளும் பக்கவாட்டில் மோதிக்கொண்டன.

    இதில் இரண்டு விமானங்களின் இறக்கை முனைகளும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை முனை பலத்த சேதமடைந்தது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

    விபத்தைத் தொடர்ந்து பயணம் ரத்து செய்யப்பட்டு, விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பத்திரமாக இறக்கப்பட்டனர்.

    பாதிக்கப்பட்ட பயணிகளை அவர்களது இடங்களுக்கு அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

    விமானங்கள் ஓடுபாதையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அங்கிருந்தவர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடினர்.
    • திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28 அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.

    அவரின் இறுதிச் சடங்கு கடந்த வியாழக்கிழமை பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

    அதிக கூட்டத்தை பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், அங்கிருந்தவர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடினர்.

    இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு, சுமார் 15 பேர் தங்கள் தங்கச் சங்கிலிகள் மற்றும் பொருட்கள் திருடு போனதாகப் போலீசில் புகார் அளித்தனர்.

    திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 7 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

    அவர்களின் வாக்குமூலம் அடிப்படையில் திருடப்பட்ட பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிரிக்கெட் என்பது அதிகாரிகளால் அல்ல, அது கிரிக்கெட் வீரர்களால்தான்.
    • குறைந்தபட்சம் இந்த அளவு மரியாதையாவது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

    மகாராஷ்டிரா மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெற இருந்தது. தேர்தலையொட்டி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ரோகித் பவாருக்கு வேண்டியவர்கள் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் இந்திய வீரரும், பாஜக தலைவருமான கேதர் ஜாதவ் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு தடைவிதித்தது.

    இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், ஜாய்மல்யா பாக்சி, விபுல் எம். பன்சோலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் மும்பை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், தலைமை நீதிபதி கொண்ட அமர்வு கூறியதாவது:-

    1986-ல் இருந்த 2023 வரை 164 உறுப்பினர்கள் இருந்தனர். 2023 முதல், நீங்கள் ஒரு பிரமாண்டமான குலுக்கலை நடத்தினீர்களா?.

    இது சிறந்த கிரிக்கெட் வீரர்கள் நிறைந்த ஒரு நாடு. ஓய்வு பெற்றவர்கள் அந்த வரிசையில் மிகச் சிறந்தவர்களாக இருந்தனர். நீங்கள் யாரைக் கொண்டு வருகிறீர்கள்? ஆட்டத்தைப் பற்றித் துளியும் தெரியாதவர்களை... மட்டையை எப்படிப் பிடிப்பது என்று கூடத் தெரியாதவர்களை... என்ன நடக்கிறது என்பது குறித்து நாங்கள் எங்கள் உணர்வுகளை அதிகமாக வெளிப்படுத்தும்படி செய்யாதீர்கள்.

    கிரிக்கெட் என்பது அதிகாரிகளால் அல்ல, அது கிரிக்கெட் வீரர்களால்தான். ஹாக்கி சங்கம் என்பது ஹாக்கி வீரர்களால்தான் அறியப்படுகிறது. குறைந்தபட்சம் இந்த அளவு மரியாதையாவது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

    இவ்வாறு பெஞ்ச் தெரிவித்தது.

    மேலும், மனுதாரர்கள் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள நீதிபதிகள் அனுமதித்ததுடன், புதன்கிழமை இந்த வழக்கை விசாரிக்க உள்ள மும்பை உயர் நீதிமன்றத்தின் முன் அனைத்து வாதங்களையும் முன்வைக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டது. அத்துடன், உயர் நீதிமன்றம் இந்த வாதங்களைக் கருத்தில் கொள்ளும் என்றும், இந்த வழக்கை விரைவாகத் தீர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அண்டை நாடுகளை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்கா உடன் ஏற்பட்டுள்ளது.
    • சீனாவுக்கு 37 சதவீதம், வங்கதேசத்திற்கு 20 சதவீதம், பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் வரி விதித்துள்ளது.

    இந்தியா- அமெரிக்கா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை குறைப்பதாக இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் இந்தியா மீதான 50 சதவீதம் வரி விதிப்பை 18 சதவீதமாக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

    இந்தியா- அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தை இந்திய அரசுதானே முதலில் அறிவிக்க வேண்டும். டிரம்ப் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

    இதற்கு பியூஷ் கோயல் பதில் அளிக்கும் வகையில் கூறியதாவது:-

    இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து டொனால்டு டிரம்ப் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியதை பார்த்தேன். அமெரிக்கா இந்தியா மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தியது. இதனால் அது நீக்கப்பட்டதை அவர்கள் அறிவித்திருக்க வேண்டும்.

    பல தடைகள் மற்றும் பல மாத பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அண்டை நாடுகளை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்கா உடன் ஏற்பட்டுள்ளது.

    போட்டி பொருளாதாரத்திற்கான குறைந்த வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா, பாகிஸ்தான் நாடுகளை விட இந்தியாவுக்கான வரி விதிப்பு குறைவானதாகும்.

    நெருக்கடியின் கீழ் பிரதமர் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ராகுல் காந்தி தெரிவிக்கிறார். அவர் மக்களை தவறாக வழி நடத்த விரும்புகிறார். இந்தியாவின் வளர்ச்சி குறித்து அவர் கவலைப்படவில்லை. ராகுல் காந்தியின் பிரச்சனைதான் என்ன?. எதிர்மறையான மனநிலையால் அவர் சாதிக்க விரும்புவது என்ன? என்பதை மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டியிருக்கும்.

    இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

    சீனாவுக்கு 37 சதவீதம், வங்கதேசத்திற்கு 20 சதவீதம், பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் வரி விதித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்களவையில் இன்று பேசுவதற்கான ஜனநாயக உரிமை நிராகரிக்கப்பட்டுள்ளது.
    • தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் என்னைப் பேசவிடாமல் செய்ய திட்டமிட்டு முயற்சி நடந்தது.

    புதுடெல்லி:

    எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    மக்களவையில் இன்று பேசுவதற்கான ஜனநாயக உரிமை நிராகரிக்கப்பட்டுள்ளது.

    என்னை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் தடுத்தது ஜனநாயகம் மீதான கரும்புள்ளி.

    எதிர்க்கட்சி தலைவரான என்னை மத்திய அரசின் அழுத்தத்தால் சபாநாயகர் பேச விடவில்லை.

    தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் என்னைப் பேசவிடாமல் செய்ய திட்டமிட்டு முயற்சி நடந்துள்ளது.

    மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிக்கப்படுகின்றன. இது ஜனநாயகத்தின்மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளார்.

    ×