என் மலர்

    ஒடிசா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடைபெற்றது.
    • ஆண்கள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் வென்றார்.

    கட்டாக்:

    ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், இந்தோனேசியாவின் முகமது யூசுப் உடன் மோதினார்.

    ஆரம்பம் முதலே பொறுப்பாக ஆடிய கிரண் ஜார்ஜ் முதல் செட்டை 21-14 என வென்றார். இதற்கு பதிலடியாக முகமது யூசுப் 2வது செட்டை 21-13 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கிரண் ஜார்ஜ் 21-16 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடைபெற்றது.
    • பெண்கள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வென்றார்.

    கட்டாக்:

    ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான ஈஷாராணி பரூவா உடன் மோதினார்.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-17, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
    • பெண்கள் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.

    கட்டாக்:

    ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான தஸ்னீம் மிர் உடன் மோதினர்.

    முதல் செட்டை 18-21 என இழந்தார் உன்னதி ஹூடா. இதனால் சுதாரித்துக் கொண்ட் அவர் அடுத்த இரு செட்களை 21-16, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    இறுதிப்போட்டியில் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனை ஈஷாராணி பரூவா உடன் மோதுகிறார்.

    இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் கிரண் ஜார்ஜ் முன்னேறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
    • பெண்கள் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.

    கட்டாக்:

    ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான அனுபமா உபாத்யாயா உடன் மோதினர்.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
    • பெண்கள் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.

    கட்டாக்:

    ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தாய்லாந்தின் டிடாரோன் கிளிபைசன் உடன் மோதினர்.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-7, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 25 நிமிடங்களில் முடிவடைந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எம்.எல்.ஏ.க்களுக்கு தற்போதுள்ள சம்பளத்தை விட 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
    • ரூ.1.11 லட்சம் சம்பளம் பெறும் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.3.45 லட்சமாக உயர்த்தப்பட்டது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநில எம்.எல்.ஏ.க்கள் தங்களது சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கடந்த சில ஆண்டுளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில், ஒடிசாவில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை 3 மடங்காக உயர்த்த சட்டப்பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

    ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் ஒரு மனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, எம்.எல்.ஏ.க்களுக்கு தற்போதுள்ள சம்பளத்தை விட 3 மடங்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

    தற்போது எம்.எல்.ஏ.க்கள் ரூ.1.11 லட்சம் சம்பளம் பெறுகின்றனர். இது ரூ.3.45 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    முதல் மந்திரி, மந்திரிகள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    தற்போது பதவியில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் யாராவது உயிரிழந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

    கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-வது சட்டசபை பொறுப்பேற்றது. அன்றைய தினம் முதல் இந்த சம்பள உயர்வு அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
    • பெண்கள் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.

    கட்டாக்:

    ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரகிருதி பாரத் உடன் மோதினர்.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-12, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் தான்வி சர்மா 21-8, 17-21, 21-18 என ஜப்பானின் அனா இவாகியை வீழ்த்தினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 175 ரன்கள் எடுத்தது.

    கட்டாக்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

    திலக் வர்மா 26 ரன்னும், அக்சர் படேல் 23 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 28 பந்தில் 59 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 6 பவுண்டரி அடங்கும்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டும், லூதோ சிபம்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-0 என வென்றது.
    • அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.

    கட்டாக்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் டெஸ்ட், ஒருநாள் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவும், ஒருநாள் தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின.
    • இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்நிலையில், இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம் உருவாக்கியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஷோரூமில் பணிபுரியும் அந்த பெண், பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

    ஒடிசாவில் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் மூன்று பேரால் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ஒடிசாவின் சுபர்ணபூர் மாவட்டத்தில் ஷோரூமில் பணிபுரியும் அந்த பெண் கடந்த வியாழக்கிழமை பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

    அவரை பின்தொடர்ந்து சென்ற முகமூடி அணிந்த மூவர் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் இளம்பெண் மீது மயக்க மருந்து தெளித்துள்ளது. அப்பெண் மயங்கியதும் கடத்திச் சென்று மூவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    சுயநினைவுக்கு திரும்பிய அப்பெண் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய காவல்துறை, இரண்டு சந்தேக நபர்களை வெள்ளிக்கிழமை காலையில் பிடித்துள்ளது.

    மூன்றாவது நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆந்திரா, மேற்குவங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ஊழல் பரவியுள்ளதால், விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
    • ஊழலில் மாநிலங்களுக்கு இடையே குற்றவியல் கும்பலின் தொடர்பும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

    பா.ஜ.க. ஆட்சி செய்யும் ஒடிசா மாநிலத்தில் காவல்துறையில் துணை ஆய்வாளர்கள் தேர்வில் நடந்த பல கோடி ரூபாய் ஊழல் புகாரை சி.பி.ஐ.-க்கு மாற்றுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்வில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தத்தை கொடுத்து வந்தன.

    இந்நிலையில் காவல் துணை ஆய்வாளர் பணியமர்த்தலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றி ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

    ஆந்திரா, மேற்குவங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு இந்த ஊழல் பரவியுள்ளதால், விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்த ஊழலில் மாநிலங்களுக்கு இடையே குற்றவியல் கும்பலின் தொடர்பும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் ஒடிசா காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார், இதுவரை 123 பேரை கைது செய்துள்ளனர். இதில் 114 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தவர்களும் அடங்குவர்.

    இந்த திடீர் சம்பவம் எதிர்பாராத சூழ்நிலைகளைக் காரணம் காட்டி ஒடிசா காவல் ஆட்சேர்ப்பு வாரியம் தேர்வை காலவரையின்றி ஒத்திவைக்க வழிவகுத்தது.

    ஒடிசா காவல்துறையில் 933 காவல் துணை ஆய்வாளர் பதவிகளுக்கு சுமார் ஒரு லட்சத்து ஐம்பத்து மூவாயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    ×