என் மலர்

    ஒடிசா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒலியைவிட அதிவேகத்தில் நீண்ட தூரம் பயணித்து எதிரி நாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும்
    • DRDO விஞ்ஞானிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

    இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) ஒடிசா கடற்கைரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், Solid Fuel Ducted Ramjet (SFDR) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

    நேற்று, செவ்வாய்க்கிழமை காலை 10:45 மணியளவில் SFDR தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ஏவுகணையை ஏவி இந்த சோதனை நடைபெற்றது.

    ஏவுகணைகள், ஒலியைவிட அதிவேகத்தில் (சூப்பர்சோனிக்) நீண்ட தூரம் பயணித்து எதிரி நாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும் ஆற்றலை இந்த SFDR தொழில்நுட்பம் வழங்குகிறது.

    சோதனை வெற்றி பெற்ற நிலையில், மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் வான்வழி Long-range Air-to-Air Missiles ஏவுகணைகளை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.

    இந்த வெற்றிக்காக DRDO விஞ்ஞானிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் தற்காப்புத் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று அவர் கூறியுள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
    • ஒரு கூட்டம் இந்த துணிச்சலான செயலை அச்சத்துடன் காண்கிறது.

    ஒடிசாவின் பாலசோரில், ஒருவர் ஒரு ராட்சத பாம்பை தன் கைகளால் மட்டுமல்லாமல், வாயாலும் கையாளும் திகிலூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தக் குறுகிய வீடியோவின் தொடக்கத்தில், ரெமுனாவை சேர்ந்த காகா பாய் என்ற அந்த நபர், ஒரு பாம்பை பிடித்து தன் வாயில் வைத்துக் கொள்கிறார். அவர் இதை மிக வேகமாக செய்கிறார், அதனால் அந்த பாம்பு எதுவும் செய்ய முடியாதவாறு தெரிகிறது.

    அடுத்து, அவர் அந்த பாம்பை தன் வாயில் வைத்தபடியே சுற்றி திரிகிறார், பின்னர் அதை தரையில் வைத்து, வெறும் கைகளால் பிடித்து கொள்கிறார். ஒரு கட்டத்தில், யாரோ ஒருவர் அந்த பாம்பை அவரிடமிருந்து எடுக்க முயற்சிக்கிறார், ஆனால் அவர் அவரை தள்ளிவிட்டு, விலகி நிற்குமாறு கூறுகிறார். ஒரு கூட்டம் இந்த துணிச்சலான செயலை அச்சத்துடன் காண்கிறது.

    சில வினாடிகளுக்கு பிறகு, அவர் அந்த பாம்பைத் தரையில் மெதுவாக வைத்து, அதனுடன் விளையாடிவிட்டு, பின்னர் எந்த கருவிகளும் இல்லாமல் ஒரு சாக்குப்பையில் போடுகிறார். வீடியோவின் இறுதியில் அவர் மற்றொரு பாம்பை எடுக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.

    முன்னதாக, ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது, அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் விஷம் கொண்ட கருநாக பாம்பால் கடிக்கப்பட்டார். உதவிக்காக ஓடுவதற்கு பதிலாக, அந்த நபர் தன்னைக் கடித்த உடனேயே அந்த பாம்பை பிடித்து அதன் தலையை கடித்து துண்டித்தார்.

    பின்னர் அவர் அந்த இறந்த பாம்பை வீட்டிற்கு எடுத்து சென்று, அதைத் தன் அருகில் வைத்துக்கொண்டு, அதனுடனேயே உறங்க சென்றதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். நள்ளிரவுக்குள் விஷம் அவரது உடல் முழுவதும் பரவி, அவரது நிலைமை மோசமடைந்தது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பல்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாராக இருந்தது.
    • முன்பதிவு செய்த ஏசி கோச் இல்லாததைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மகாராஷ்டிராவின் நான்டேட் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட தயாராக பிளாட்பார்ம் வந்தடைந்தது.

    அப்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏசி கோச் ஒன்று இல்லாததைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு சிறிது குழப்பம் நிலவியது.

    இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடையை அடைந்தபோது முன்பதிவு செய்யப்பட்ட 3 அடுக்கு ஏசி பெட்டியில் முன்பதிவு செய்த 57 பயணிகளுக்கு அவர்களின் பெட்டியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டது.

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்பதிவு செய்யப்பட்ட BE2 ஏசி கோச்சை ரெயிலில் இணைக்க முடியவில்லை. இதனால் முன்பதிவு செய்த பயணிகளை ரெயிலில் காலியாக உள்ள மற்ற பெர்த்களில் டிக்கெட் பரிசோதகர்கள் தங்க வைத்தனர் என தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்கள் நலனுக்கான நிதி ஒதுக்கீடு என்று வரும்போது ஒடிசா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது
    • பௌத்தச் சுற்றுலா வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தில் ஒடிசா முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் குழப்பமளிக்கிறது.

    ஒடிசாவின் இயற்கை வளங்களை வெளியே கொண்டு செல்வதற்கான பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    "ஒன்றிய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட் மீதான எனது ஏமாற்றத்தை இங்கு வெளிப்படுத்துகிறேன். இந்த பட்ஜெட் ஒடிசா மாநிலத்திற்கும், அதன் மக்களுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதையும் வழங்கவில்லை.

    இரட்டை என்ஜின் அரசு, உள்கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் என்று ஒடிசா மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மாநிலத்திற்கு மிகக் குறைந்த அளவே கிடைத்துள்ளது.

    ஒடிசாவில் அரிய மண் தாது வழித்தடத்தை அமைப்பதற்கான முன்மொழிவை நான் வரவேற்கிறேன். ஒடிசா பல முக்கிய கனிமங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி மாநிலமாக உள்ளது. மேலும் தனது வளமான இயற்கை வளங்கள் மூலம் தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளில் எப்போதும் தனது பங்களிப்பை வழங்கும்.

    கனிம வளம் நிறைந்த பகுதிகள் மற்றும் தொழில் மையங்களைத் துறைமுகங்களுடன் இணைக்க தேசிய நீர்வழிகளை அமைப்பதாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பே இது அறிவிக்கப்பட்டதுதான். தற்போது வரை காகித அளவில் மட்டும்தான் இருக்கிறது. களத்தில் எந்த பணியும் நடக்கவில்லை. 

    ஏழு அதிவேக ரயில் வழித்தடங்களை உருவாக்கும் அறிவிப்பில் ஒடிசா இடம்பெறாதது ஒடிசா மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒடிசா பாஜக ஏற்கனவே புவனேஸ்வர் மெட்ரோ திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டது; மக்களின் தேவைகளைப் புறக்கணிப்பது வழக்கம் போல இப்போதும் தொடர்கிறது.

    எங்களது டைமண்ட் ட்ரையாங்கிள் உள்ளிட்ட மிக முக்கியமான பல பௌத்தத் தலங்கள் இருந்தபோதிலும், பௌத்தச் சுற்றுலா வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தில் ஒடிசா முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் குழப்பமளிக்கிறது.

    மத்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஒடிசாவின் இயற்கை வளங்களை வெளியே கொண்டு செல்வதற்கான பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; ஆனால், மக்கள் நலனுக்கான நிதி ஒதுக்கீடு என்று வரும்போது ஒடிசா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

    மாநில பாஜக அரசு ஒடிசா மக்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டிய நேரமிது; மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். ஒன்றிய பட்ஜெட்டில் ஒடிசாவும் அதன் மக்களும் இன்னும் சிறப்பான திட்டங்களை பெற தகுதியுடையவர்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சைக்கிள் ரிக்ஷா வானில் படுக்க வைத்து, அங்கிருந்து கட்டாக் நகரில் உள்ள மருத்துவமனைக்குத் தள்ளிக்கொண்டே சென்றார்.
    • என்னிடம் பணம் இல்லை. என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான்.

    ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தின் தொலைதூர கிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர்,  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லாமல் தவித்துள்ளார்.

    எனவே தனது மனைவியை ஒரு சைக்கிள் ரிக்ஷா வானில் படுக்க வைத்து, அங்கிருந்து கட்டாக் நகரில் உள்ள மருத்துவமனைக்குத் தள்ளிக்கொண்டே சென்றார்.

    தனது கிராமத்திலிருந்து கட்டாக் சென்று, மீண்டும் அங்கிருந்து வீடு திரும்பியது என மொத்தம் 600 கி.மீ தூரத்தை அவர் சைக்கிள் ரிக்ஷாவிலேயே கடந்துள்ளார்.

    "என்னிடம் பணம் இல்லை. என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான். அதனால் தான் நான் ரிக்ஷாவிலேயே அவரை அழைத்துச் சென்றேன்." என்று அம்முதியவர் இதுகுறித்து பதில் அளித்துள்ளார். 

    இந்தச் சம்பவம் இணையத்தில் கண்டனத்தை குவித்து வருகிறது. இந்த சம்பவம் வைரலானதை தொடர்ந்து இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'இந்தியாஒன் ஏர்' நிறுவனத்திற்கு சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானமாகும்.
    • விமானத்தில் 4 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 6 பேர் இருந்துள்ளனர்.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கிச் சென்ற சிறிய ரக தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

    ரூர்கேலாவில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜல்தா என்ற இடத்தில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    இது 'இந்தியாஒன் ஏர்' நிறுவனத்திற்கு சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானமாகும்.

    விபத்தின்போது விமானத்தில் 4 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 6 பேர் இருந்துள்ளனர்.

    விபத்தில் சிக்கிய 6 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த விசாரணைக்கு DGCA உத்தரவிடப்பட்டுள்ளது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வழிமறித்த மூன்று பேர் சிறுமியை தனிமையான இடத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
    • 3 இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒடிசாவில் விறகு சேகரிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

    ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் நாயரா கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, திங்கள்கிழமை மதியம் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்றுள்ளார்.

    சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வழிமறித்த மூன்று பேர் சிறுமியை தனிமையான இடத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட சிறுமி நடந்ததை தனது பெற்றோரிடம் கூற அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெடிபொருட்கள் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்வால் பாறைகள் உருண்டு விழுந்தன.
    • குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

    ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் கருங்கல் குவாரி ஒன்று செயல்பட்டு வந்தது.

    இன்று, பாறைகளைத் தகர்க்க வைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்வால் பாறைகள் உருண்டு விழுந்தன.

    இந்த விபத்தின் போது குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.

    மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒடிசாவின் சந்திப்பூரில் இரண்டு பிரளய் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதனை செய்தது.
    • அவை திட்டமிடப்பட்ட பாதையைப் பின்பற்றி அனைத்து இலக்குகளையும் துல்லியமாக அடைந்தன.

    புவனேஸ்வர்:

    இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

    அவ்வாறு தயாரிக்கப்படும் ஆயுதங்களும், ஏவுகணைகளும், டி.ஆர்.டி.ஓ.வால் சோதனை செய்யப்பட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.

    இதற்கிடையே, போர்க்கள பயன்பாட்டிற்காக பிரளய் என்ற குறுகிய தூர ஏவுகணை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரளய், அதன் உயர் துல்லியம் மற்றும் அதிநவீன வழிகாட்டுதல் அமைப்புகளுக்கு பெயர் பெற்ற, ஒரு திடமான உந்துசக்தி கொண்ட ஏவுகணையாகும். பல்வேறு வகையான ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை 150 முதல் 500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கும்.

    இந்நிலையில், ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து டி.ஆர்.டி.ஓ. இரண்டு பிரளய் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதித்தது.

    இரு ஏவுகணைகளும் திட்டமிடப்பட்ட பாதையைப் பின்பற்றி அனைத்து இலக்குகளையும் துல்லியமாக அடைந்தன.

    இந்த வெற்றி ஏவுகணையின் நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது என ராணுவ மந்திரியான ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விரைந்து வந்த போலீசார், சிறுவனின் தாயை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • பொழுது விடிந்தபிறகு சாலைக்கு சென்று வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டுள்ளான்.

    ஒடிசாவின் தியோகர் மாவட்டத்தின் காட்டுப்பகுதியையொட்டி செல்லும் சாலை ஒன்றில் நேற்று முன்தினம் காலையில் 5 வயது சிறுவன் ஒருவன் அழுதவாறே அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி உதவி கேடடுக்கொண்டு இருந்தான். அவனுக்கு அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் சிலர் அவனிடம் விவரம் கேட்டனர். அப்போது அவர்களை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அவன் அழைத்து சென்றான்.

    அங்கு சென்று பார்த்தபோது சிறுவனின் தந்தை இறந்து கிடந்தார். அருகே அவனது தாய் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், சிறுவனின் தாயை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தாயும் உயிரிழந்தார்.

    பின்னர் இது குறித்து விசாரித்தபோது, அவர்கள் ஜியானந்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. கடந்த 27-ந் தேதி மூவரும் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    உடனே அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மூன்று பேரும் சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து அடர்ந்த காட்டுக்குள் சென்றனர். பின்னர் அங்கே விஷம் குடித்துள்ளனர். சிறுவனுக்கும் அவர்கள் விஷம் கொடுத்துள்ளனர்.

    ஒரு சில மணி நேரத்தில் கணவர் உயிரிழந்தார். மனைவி மயங்கி விழுந்து உயிருக்குப்போராடியவாறே இருந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுவன், அடர்ந்த காட்டுக்குள் இரவு முழுவதும் கடும் குளிரில் தனது தந்தையின் உடலுக்கும், மயங்கி கிடந்த தாய்க்கும் காவல் இருந்துள்ளான். பின்னர் பொழுது விடிந்தபிறகு சாலைக்கு சென்று வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டுள்ளான்.

    நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தில் தாய்-தந்தையை பறிகொடுத்த சிறுவனை அவனது தாத்தா-பாட்டியிடம் போலீசார் சேர்த்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிஜு ஜனதா தளம் கட்சி பிளவு படும் என்று சிலர் மற்றும் சில கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன.
    • பிஜு ஜனதா தளம் ஒன்று அல்லது இரண்டு தலைவர்களை பற்றியது அல்ல.

    ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக், தங்களுடைய கட்சி ஒடிசா மக்களுக்காக அடுத்த 100 ஆண்டுகள் சேவையாற்றும் எனத் தெரிவித்துள்ளார்.

    நவீன் பட்நாயக்கின் தந்தையும், ஒடிசா முன்னாள் முதல்வருமான பிஜு பட்நாயக்கால் 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி பிஜு ஜனதா தளம் கட்சி தொடங்கப்பட்டது. இக்கட்சியின் 29-வது தொடக்க நாளான இன்று நவீன் பட்நாயக் கட்சி தலைவர்கள், தொண்டர்களிடையே உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பிஜு ஜனதா தளம் கட்சி பிளவு படும் என்று சிலர் மற்றும் சில கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. இதுபோன்ற வதந்திகள் பரவி வருகின்றன. பிஜு ஜனதா தளம் ஒன்று அல்லது இரண்டு தலைவர்களை பற்றியது அல்ல. இதை நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். ஒடிசாவின் விருப்பம் மற்றும் பெருமையில் வேரூன்றிய மக்கள் இயக்கம். பிஜு ஜனதா தளம் ஒடிசா மக்களுக்காக அடுத்த 100 ஆண்டுகள் குரல் கொடுக்கும்.

    தேர்தல் தோல்வி ஜனநாயகத்தின் ஒரு பகுதி. அரசியலில் அமைதி காப்பது மிகவும் முக்கியமானது. கட்சி தொண்டர்களின் கடின உழைப்பு, கமிட்மெண்ட் ஆகியவற்றில் நான் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளேன். வலுவான ஒடிசாவை எழுப்ப இன்றைய சவால்களை நாளையை வாய்ப்புமாக மாற்ற எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும்.இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாரத ரத்னா விருது பெற்ற அடல் பிகாரி வாய்பாயின் 101வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
    • ஒடிசா கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் வாஜ்பாய் மணல் சிற்பத்தை உருவாக்கினார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

    இதற்கிடையே, முன்னாள் பிரதமரான பாரத ரத்னா விருது பெற்ற அடல் பிகாரி வாய்பாயின் 101வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் வாஜ்பாயின் மணல் சிற்பத்தை உருவாக்கி அஞ்சலி செலுத்தினார்.

    ×