என் மலர்

    பெண்கள் உலகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உணவுக் கழிவுகளில் இருந்து இதே முறையில் உயிரி வாயுவை உருவாக்க முடியும்.
    • பொதுவாக, உணவுக்கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு தயாரிக்க எளிய ஒரு அமைப்பு போதுமானது.

    வளைகுடா நாடுகளில் போர் நாளுக்கு நாள் தீவிரமைடந்து வருகிறது. இதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் ஏற்கனவே எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கிவிட்டது. தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அதிகளவில் பயன்படுத்தும் எரிவாயுக்கு மாற்றாக பயோ கியாஸ் பயன்படுத்த முடியும்.

    உலகின் பல பகுதிகளிலும் இயற்கை கழிவுகளில் இருந்து எரிவாயுவை இலவசமாக உற்பத்தி செய்து கொள்ள உதவும் "ஹோம் பயோ கியாஸ்" அமைப்பை உருவாக்கி வருகின்றனர்.

    இந்த ஹோம் பயோ கியாஸ் என்பது, வீடுகளில் மீதமாகும் இயற்கை மற்றும் உணவுக் கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயுவை உருவாக்குவது ஆகும். இது 'காற்றில்லா செரிமானம்' என்ற செயல்முறையில் கரிமக்கழிவுகளாக உள்ள தாவர மற்றும் விலங்குகளின் கழிவுகளை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் மக்க வைத்து அவற்றில் உள்ள பாக்டீரியாக்களை உடைத்து நொதிப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

    இதே போல, உணவுக் கழிவுகளில் இருந்து இதே முறையில் உயிரி வாயுவை உருவாக்க முடியும். பொதுவாக, உணவுக்கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு தயாரிக்க எளிய ஒரு அமைப்பு போதுமானது. இதன் முக்கிய பகுதி `பயோ டைஜஸ்டர்' என்று அழைக்கப்படுகிறது. காற்றில்லாத ஒரு கலனில் உணவுக்கழிவுகளை வைக்கும் போது மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, பின்னர் எரிவாயுவாகிறது.

    காய்கறி தோல் உள்பட சமையலறை கழிவுகள் அனைத்தையும் சிறிய துண்டுகளாக வெட்டி, தண்ணீர் கலந்து போட்டால் 7 முதல் 10 நாட்களில் மக்கி மீத்தேன் வாயு வெளியாகும். இந்த வாயுவை குழாய் மூலம் அடுப்புக்கு இணைத்து, எரிவாயுவாக்கி சமைக்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்றைய காலத்தில் யு.பி.ஐ. சேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
    • அடுத்த முறை தேவையில்லாத செலவுகளை தவிர்க்க உதவும். பணமும் மிச்சமாகும்.

    இன்றைய நாட்களில், டீக்கடையில் கொடுக்கும் 10 ரூபாய் முதல் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆயிரக்கணக்கான ரூபாய் வரை எளிதாக யு.பி.ஐ. மூலம் செலுத்துகிறோம். பணத்தைச் சுமந்து திரியும் சிரமம் இல்லாததாக, சில்லறைப் பிரச்சனை இல்லாததாக இது தோன்றுகிறது.

    ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகில் நாம் ஒரு பொருளை வாங்கும்போது, பணத்தை பாக்கெட்டில் இருந்து எடுத்து எண்ணிக் கொடுப்பதில்லை. மாறாக, ஒரு கியூஆர் கோடை ஸ்கேன் செய்கிறோம். இந்த எளிமையான செயல்முறைக்குப் பின்னால் இருக்கும் விஷயத்தை நாம் அதிகம் சிந்திப்பதில்லை.

    அதாவது ஒரு பொருளுக்கான பணத்தை உங்கள் பர்சில் இருந்தோ அல்லது பாக்கெட்டில் இருந்தோ கொடுக்கும் போது, மூளை அதை இழப்பாக கருதும். அதனால் பணம் கையில் இருந்து செல்லும்போது அது ஓர் இனம்புரியாத வலியை ஏற்படுத்தும்.

    ஆனால் அதுவே, யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும்போது, நம் கையில் இருந்து எதுவும் செல்வதில்லை. உங்கள் போனில் சில எண்களை தட்டுகிறீர்கள், அவ்வளவுதான். இதனால் மூளைக்கு, நாம் பணத்தை இழக்கிறோம் என்ற எச்சரிக்கை மணி அடிப்பதில்லை. இந்த உணர்வு குறைவதால், தேவையற்ற பொருட்களை வாங்கும் வேகமும் அதிகரிக்கிறது. செலவும் கூடுகிறது.

    ஆனால் இன்றைய காலத்தில் யு.பி.ஐ. சேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆக அதை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால் 'டிஜிட்டல்' வாயிலான செலவுகளைக் கட்டுப்படுத்த சில வழிகளை கையாளலாம்.

    அவை பற்றி...

    தினசரி வரம்பு: நீங்கள், பார்த்ததற்கு எல்லாம் செலவு செய்பவராக இருந்தால், உங்கள் யு.பி.ஐ. செயலியில் ஒரு நாளைக்கு இவ்வளவுதான் செலவு செய்வேன் என்று ஒரு உச்ச வரம்பை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இந்த வரம்பைத் தாண்டி செலவு செய்யவும் முடியாது. அதுவே ஓர் எச்சரிக்கை உணர்வையும் உருவாக்கும்.

    சிறு செலவுகளுக்கு... டீ குடிப்பது, காய்கறி வாங்குவது, பால் வாங்குவது போன்ற சிறு செலவுகளுக்கு கையில் காசு கொடுத்து வாங்கப் பழகுங்கள். இது உங்கள் செலவை உணர வைக்கும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்கவும் உதவும்.

    மாதாந்திர பட்ஜெட்-கண்காணிப்பு: ஒவ்வொரு மாதமும் ஒரு பட்ஜெட் போட்டு, வார இறுதியில் உங்கள் வங்கி ஸ்டேட்மென்டை பார்த்து தேவையற்ற செலவுகளை கண்டறியுங்கள். அது அடுத்த முறை தேவையில்லாத செலவுகளை தவிர்க்க உதவும். பணமும் மிச்சமாகும்.

    தள்ளிப்போடுங்கள்: ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒரு பொருளை பிடித்துவிட்டால் உடனே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தாமல், கொஞ்சம் தள்ளிப் போடுங்கள். அடுத்த நாள் அந்தப் பொருள் தேவையில்லை என்று உங்களுக்கே தோன்றலாம்.

    தனி வங்கிக் கணக்கு: யு.பி.ஐ. செலவுகளுக்காக மட்டும் ஒரு தனி வங்கிக் கணக்கை வைத்துக் கொண்டு, அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை போட்டு பயன்படுத்துங்கள். இது தேவையற்ற அதிக பயன்பாட்டை குறைக்க வழிவகுக்கும். உங்கள் சேமிப்பையும் கரைக்காது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெயர்ப்பலகையில் வைக்கப்படும் சிறிய ஸ்பாட் லைட்டுகள், இரவில் அந்த இடத்தை அழகாக மாற்றும்.
    • மரம் அல்லது கல்லில் இருக்கும் எழுத்துகள், அழகாகக் காட்சி தரும்.

    வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், நுழை வாயிலை வைத்தே வீட்டின் சூழலை தீர்மானித்து விடுவார்கள். நுழைவாயில் அழகாக இருப்பது விருந்தினர்களுக்கு மட்டுமல்ல, வீட்டில் உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

    எனவே, வீட்டின் நுழைவாயிலை அலங்கரிப்பதற்கான யோசனைகளை காண்போம்...

    பித்தளை மணிகள்

    வீட்டின் நுழைவாயிலை புனிதமாகவும், நல்லவிதமாகவும் உணர வைப்பதில் பித்தளை மணிகளுக்கு தனி இடம் உண்டு. ஒரு கனமான பித்தளை தோரணம் அல்லது சட்டகத்தில் தொங்கும் கோவில் பாணி மணிகளின் சரம், காற்று வீசும்போது அசைந்து மென்மையான ஓசையை ஏற்படுத்தி வீட்டை ஓர் இனிய சரணாலயம் போல உணரவைக்கும். அடர்ந்த நிறங்கள் கொண்ட மரக் கதவுகளில் பித்தளை ஒளிர்ந்து, விலை உயர்ந்ததாக தோன்றச் செய்யும்.

    தொங்கும் அடுக்கு விளக்கு

    நுழைவாயிலில் தொங்கவிடப்படும் மஞ்சள் ஒளி கொண்ட தொங்கும் அடுக்கு விளக்கு, ஓர் ஆடம்பர ஓட்டல் 'லாபி'யை போல தோற்றமளிக்கச் செய்து மிகச் சிறந்த வரவேற்பை வழங்கும்.

    மேலும் பெயர்ப்பலகையில் வைக்கப்படும் சிறிய ஸ்பாட் லைட்டுகள், இரவில் அந்த இடத்தை அழகாக மாற்றும்.

    பீங்கான், கான்கிரீட் தொட்டிகள்

    கதவின் ஒவ்வொரு பக்கத்திலும் உயரமான பீங்கான் அல்லது கான்கிரீட் தொட்டிகளைப் பயன்படுத்தி பெரிய தாவரங்களை வளர்ப்பது, வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு இனிய உணர்வைத் தரும். அடுக்குமாடி குடியிருப்புகளிலும் ஆடம்பர 'வில்லா' சூழலை உருவாக்கும்.

    அலங்கார பெயர்ப்பலகைகள்

    வீடு உலகுக்கு அளிக்கும் முதல் 'ஹலோ' பெயர்ப் பலகைதான் என்பதால், கையால் வரையப்பட்ட பீங்கான் ஓடுகள் அல்லது பிசின் கலவையால் செய்யப்பட்ட பெயர்ப்பலகைகள் உங்கள் ஆளுமையை தெளிவாகக் காட்டும். மரம் அல்லது கல்லில் இருக்கும் எழுத்துகள், அழகாகக் காட்சி தரும்.

    கீ டிராப் கன்சோல் டேபிள்

    சாவிகள் மற்றும் தபால்கள் வைக்க பயன்படும் கன்சோல், அதாவது கால்கள் இல்லாமல் சுவற்றில் இணைக்கப்பட்டவை, தரையை தெளிவாக காட்டி, வீட்டின் நுழைவாயிலை ஸ்டைலாக்குவதோடு, நேர்த்தியாகவும் காண்பிக்கும்.

    நுழைவாயில் கண்ணாடிகள்

    சிறிய நுழைவாயில்களை காற்றோட்டமாக உணர வைக்கக்கூடியவை, வளைந்த மற்றும் ஜரோக்கோ பாணி கண்ணாடிகள். இவற்றை அடுக்குமாடிக் குடியிருப்புகளின் இருண்ட நுழைவாயிலில் வைக்கும் போது வெளிச்சத்தை உள்ளிழுத்து, உயர்வையும் தனித்துவத்தையும் சேர்க்கும்.

    வண்ணக் கம்பளம்

    வீட்டின் நுழைவாயிலில் களிமண் மற்றும் 'நேவி புளூ' வண்ணங்களில் அழகிய வடிவமைப்புகளுடன் இருக்கும் நல்ல கம்பளம், வெளிப்புற தூசுகளை வடிகட்டி, அழகான, உயர்வான தோற்றத்தைத் தரும்.

    மேற்கூறிய பொருட்களில் சிலவற்றை வைத்தாலும் கூட, வீட்டின் நுழைவாயிலில் மாற்றத்தை உடனடியாக உணரலாம். செய்துதான் பாருங்களேன்!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை, தர்மபுரி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த அதிநவீன சாதனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • அதிநவீன கருத்தடை சாதனமானது, 3 வருடத்திற்கு கர்ப்பத்தடைக்கானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகப்பேறியல் துறை சார்பாக, பெண்களுக்கான 'இம்பிளானன் என்.எக்ஸ்டி' என்ற அதிநவீன கருத்தடை சாதனம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. டீன் அருள் சுந்தரேஷ்குமார் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் ஜோஸ்பின் ஹேமா, டாக்டர்கள் சித்ராதேவி, ஜெயந்தி பிரசாத். மருத்துவ இருப்பிட அதிகாரிகள் சரவணன், முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த சாதனத்தின் செயல்பாடுகள் குறித்து குடும்ப நலத்துறை துணை இயக்குனர் நடராஜன், மகப்பேறு சிகிச்சை பிரிவு தலைவர் காயத்ரி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை, தர்மபுரி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த அதிநவீன சாதனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தென் மாவட்டங்களில் முதன்முறையாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது பெண்களுக்கு மிகவும் பயன் உள்ள ஒரு சாதனம். கருத்தடை மாத்திரைகள், காப்பர்-டி போன்ற மருத்துவ முறைகளை காட்டிலும் இது பெண்களுக்கு பாதுகாப்பானது, வசதியானது.

    இது தீக்குச்சி போன்று 3 செ.மீ நீளம் கொண்டது. வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு, இடது கையிலும், இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது கையிலும் இந்த சாதனம் பொருத்தப்படுகிறது. தீக்குச்சி வடிவில் இருப்பதால், தோலுக்கு அடியில் செலுத்தும்போது கையில் இருப்பது தெரியாததுபோல் இருக்கும். இதனால், எந்தவித பாதிப்பும் வராது.

    இந்த அதிநவீன கருத்தடை சாதனமானது, 3 வருடத்திற்கு கர்ப்பத்தடைக்கானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒருமுறை செலுத்தினால் போதும். அதில் உள்ள மருந்து தினசரி உடலில் வெளியாகி கரு உருவாதலை தடுக்கும். இதன் மூலம் பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்கு கர்ப்பத்தைத் தடுக்க முடியும். ஒரு வருடம் கழிந்த உடன் குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தாலும், உடனடியாக அதனை வெளியே எடுத்துவிடலாம்.

    குழந்தை பெற்று கொண்ட பெண்களுக்குதான் இது செலுத்தப்படுகிறது. இதன் மூலம் பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பும் வராது. 18 வயது முதல் 45 வரை உள்ள பெண்களுக்கு இது பொருத்தப்படுகிறது. இதன் விலை ரூ.3 ஆயிரம். அரசு அஸ்பத்திரியில் உள்ள பெண் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. உடம்பில் அந்த சாதனம் இருப்பது போன்று தெரியாது. எந்தவித தொந்தரவு, அசவுகரியமும் இருக்காது. நமது அன்றாட பணிகளை செய்ய முடியும். குறிப்பாக, இதய நோய் உள்ளிட்ட இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சாதனம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். 3 வருடங்கள் கடந்துவிட்டால், அதனை எடுத்து விட்டு புதிதாக வேறு ஒன்றை பொருத்தி கொள்ளலாம்.

    இதனை நோயாளிகளுக்கு பொருத்துவது குறித்து அரசு டாக்டர்களுக்கும். தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கும் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 72 சாதனம் கையிருப்பு உள்ளது. தேவைப்படும்பட்சத்தில், கூடுதலாக அரசிடம் கேட்டு பெற்று கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலைக்குச் சென்று நல்ல சம்பளம் பெறும் பெரும்பாலானவர்கள் செய்யக்கூடிய தவறு, வருமானத்தை தவறான வழிகளில் முதலீடு செய்வது.
    • பாரம்பரியமான பிக்சட் டெபாசிட், ரியல் எஸ்டேட் முதலீடு போன்றவற்றை அளவோடு, விவேகத்தோடு செய்ய வேண்டும்.

    நம் நாட்டில், பெரும்பாலானோர் உழைப்பதில் வேறுபாடில்லை. ஒவ்வொருவரும் தத்தமது குடும்பத்துக்காக தம்மால் இயன்ற வரை கடுமையாகத்தான் உழைக்கிறார்கள்.

    ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே, வாழ்வில் வசதியாக, வளமாக இருக்கிறார்கள்.

    இதன் காரணம் பெரும்பாலானோருக்குப் புரிவதில்லை. அந்த பின்னணி ரகசியத்தை நிதி ஆலோசனை நிபுணர்கள் விளக்குகிறார்கள்.

    அந்த விவரம்...

    பணம்தான் நமக்கு பணத்தைச் சம்பாதித்துக் கொடுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    அதேபோல, புதிதாக வேலைக்குச் செல்பவர்கள், பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் சேர முயல வேண்டும். அந்த நிறுவனப் பணிகள் 'கோல்டு ஸ்டாண்டர்டு ஜாப்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன.

    பெரிய நிறுவனங்களில் பணிபுரிவது உங்கள் திறமையை மட்டுமல்ல, உங்களது 'புரொபைலையே' வளர்ந்துவிடும். பெரிய நிறுவனத்தில் நீங்கள் பணிபுரிந்து விலக நேர்ந்தால், உடனே அதைப் போன்ற மற்றொரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்துவிடும்.

    ஆனால் நடுத்தர, சிறு நிறுவனத்தில் இருந்து விலகினால் அப்படி அமையாது. நீங்கள் வேலைக்குச் சேரும் நிறுவனத்தின் 'பிராண்ட் வேல்யூ' மிக முக்கியமானது. மதிப்புமிக்க நிறுவனங்களில்தான் உங்களால் குறுகிய காலத்திலேயே பெரிய சம்பளத்துக்குச் செல்ல முடியும்.

    ஆனால் இவ்வாறு வேலைக்குச் சென்று நல்ல சம்பளம் பெறும் பெரும்பாலானவர்கள் செய்யக்கூடிய தவறு, வருமானத்தை தவறான வழிகளில் முதலீடு செய்வது.

    பாதுகாப்பானது என்ற கருத்தில், பிக்சட் டெபாசிட்களில் நாம் பணத்தைப் போடுவோம். ஆனால் அந்த தொகை வளர்ந்து இருக்கும்போது, பணவீக்கம் காரணமாக அந்தப் பணம் போதுமானதாக இருக்காது. எனவே நாம் தொடர்ந்து நெருக்கடி நிலையிலேயே இருப்போம்.

    அதேநேரம், கண்ணை மூடிக்கொண்டு ஏதோ ஒரு 'இன்புளூயன்சர்' சொல்கிறார் என்பதற்காக நாம் எந்த திட்டங்களிலும் முதலீடு செய்யக் கூடாது.

    பாரம்பரியமான பிக்சட் டெபாசிட், ரியல் எஸ்டேட் முதலீடு போன்றவற்றை அளவோடு, விவேகத்தோடு செய்ய வேண்டும்.

    இளம் பருவத்தினர், இந்த வயதில்தான் 'ரிஸ்க்' எடுக்க முடியும் என்பதால் ஈக்விட்டி முதலீடுகள் குறித்து தெரிந்துகொள்ளவும், அவற்றில் ஈடுபடவும் நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர்.

    நிதி ஆலோசகர்கள் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக் காட்டுகிறார்கள். அதாவது, பணக்காரர்களுக்கும் நடுத்தரவர்க்க மக்களுக்கும் இருக்கக்கூடிய வித்தியாசம், பணக்காரர்கள் அதிக வருமானம் ஈட்டுவார்கள், அரசுக்குச் செலுத்தவேண்டிய வரியை சரியாகத் திட்டமிட்டு குறைப்பார்கள். ஆனால் நடுத்தர மக்களோ, எவ்வளவு வரி வருகிறதோ அதைச் செலுத்துவார்கள். மாறாக, திட்டமிட்டு முதலீட்டையும் சேமிப்பையும் செய்தால் வரியையும் குறைவாக செலுத்தலாம். உங்களுடைய செல்வத்தையும் பெருக்கலாம் என்கின்றனர்.

    பெரும் பணக்காரர்கள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்வதெல்லாம் கிடையாது. அவர்கள் பணத்தைக் கொண்டுதான் பணத்தைப் பெருக்குகிறார்கள். எனவே உங்களுடைய பணத்தை சரியாக முதலீடு செய்யுங்கள் என்பதுதான் நிதி நிபுணர்களின் முக்கியமான அறிவுரையாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடைந்த பொருட்களை உங்கள் அலுவலக மேஜையில் வைத்திருப்பது அமைதியின்மை மற்றும் வேலையில் அடிக்கடி இடையூறுகளை ஏற்படுத்தும்.
    • முக்கியமான காகிதங்களை மட்டுமே மேஜையில் வைக்கவும்.

    நீங்கள் அலுவலகத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலையை செய்தாலும் 10-15 நிமிடங்களுக்குள் உங்கள் மனம் அலைபாயும், பணி முடிக்கப்படாமலேயே இருக்கும். உங்கள் ஜாதகம் அல்லது கடின உழைப்பு குறைபாடாக இருந்தாலும், நீங்கள் பணியில் இன்னும் கவனம் செலுத்த முடியாது. வாஸ்து குறைபாடுகள் முக்கிய காரணமாக இருக்கலாம். உங்கள் அலுவலக மேஜையில் உள்ள சில பொருட்கள் எதிர்மறை சக்தியைப் பரப்புகின்றன. அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.

    உடைந்த பொருட்கள்

    வாஸ்துவின் படி, உடைந்த அல்லது சேதமடைந்த பொருட்கள் எதிர்மறை ஆற்றலின் மிகப்பெரிய மூலமாகும். உடைந்த பேனா, விரிசல் பேனா, சேதமடைந்த கடிகாரம் அல்லது உடைந்த பொருட்களை உங்கள் அலுவலக மேஜையில் வைத்திருப்பது அமைதியின்மை மற்றும் வேலையில் அடிக்கடி இடையூறுகளை ஏற்படுத்தும். இந்த பொருட்கள் மேஜையின் ஆற்றலைத் தடுக்கின்றன. உடைந்த பொருட்களை உடனடியாக அகற்றி, அவற்றை புதியவற்றால் மாற்றவும். இது கவனத்தை ஈர்க்கிறது மற்றும் வேலையை விரைவுபடுத்துகிறது.

    பழைய காகிதங்கள் அல்லது பில்கள்

    பழைய பில்கள், ரசீதுகள், பழைய கோப்புகள் அல்லது பயனற்ற காகிதங்களை மேஜையில் வைப்பது எதிர்மறை சக்தியைக் குவிக்கிறது. இது புதிய வேலையைத் தொடங்குவதை கடினமாக்குகிறது மற்றும் பழைய பிரச்சனைகள் மனதில் நீடிக்க வைக்கிறது. முக்கியமான காகிதங்களை மட்டுமே மேஜையில் வைத்திருக்க வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. பழைய காகிதங்களை உடனடியாக அகற்றுங்கள் அல்லது அழிக்கவும். இது மனதை இலகுவாக்கி கவனத்தை மேம்படுத்துகிறது.

    உலர்ந்த பூக்கள் அல்லது தாவரங்கள்

    உங்கள் அலுவலக மேஜையில் உலர்ந்த பூக்கள், வாடிய செடி அல்லது பழைய பூ மாலையை வைத்திருப்பது ஒரு பெரிய வாஸ்து குறைபாடாகும். உலர்ந்த பொருட்கள் மரணம் மற்றும் தடையை குறிக்கின்றன. இது சோகம், விரக்தி மற்றும் வேலையில் கவனம் செலுத்த இயலாமைக்கு வழிவகுக்கும். உலர்ந்த பூக்கள் மற்றும் செடிகளை உடனடியாக அகற்றி, அவற்றை ஒரு புதிய செடியால் மாற்றவும். இது மேஜைக்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது மற்றும் நீங்கள் கவனம் செலுத்த உதவுகிறது.

    அழுக்கு கப்கள் அல்லது மீதமான உணவு

    அலுவலக மேஜையில் அழுக்கு கப், மீதமான உணவு அல்லது உணவுத் துண்டுகளை வைப்பது வாஸ்துவின் படி அபசகுனமாகக் கருதப்படுகிறது. இது எதிர்மறை சக்தியைப் பரப்புகிறது, மனதைத் திசைதிருப்புகிறது மற்றும் வேலையில் ஆர்வமின்மையை ஏற்படுத்துகிறது. சாப்பிட்ட பிறகு, உடனடியாக கப்கள் மற்றும் தட்டுகளை அகற்றி சிங்க்கில் வைக்கவும். மேஜையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். இது கவனத்தை ஈர்க்கிறது மற்றும் வேலையை விரைவுபடுத்துகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜீன்ஸை மடித்து, இரண்டு விரல் இடைவெளி இருக்கிறதா என்று பாருங்கள்.
    • ஜீன்ஸ் வாங்கும்போது துணியை சரிபார்க்க மறக்காதீர்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில் இளம்பெண்களுக்கு ஏற்ற ஆடையாக ஜீன்ஸ் உள்ளது. இது அணிவதற்கு எளியதாகவும், ஸ்டைலாக இருப்பதாக கருதப்படுகிறது. ஜீன்ஸ் வாங்கும் போது பெரும்பாலும் ஒரு போராட்டமாக இருக்கலாம். கடைக்குச் செல்வது சிரமம் அல்லது அவசரத்தில் பெண்கள் ஜீன்ஸ் வாங்கும் போது சரியானதை வாங்காமல் போவது. அவ்வாறு வாங்கி அணியும்போது, சில நேரங்களில் இடுப்பைச் சுற்றி சரியாகப் பொருந்தாது. இதைவிட ஆன்லைனில் வாங்கினால், சரியானதைப் பெறுவது இன்னும் கடினமாகிவிடும்.

    இதனால் இளம்பெண்களால் அதிகம் விரும்பப்படும் ஜீன்ஸை வாங்கும்போது 5 விஷயங்களை கவனித்தால் போதும். உங்களுக்கென பிரத்யேகமான ஜீன்ஸை அணியலாம்.

     

    * ஜீன்ஸ் வாங்கும்போது, பின்புறத்தில் V-வடிவ தையல் இருக்கிறதா என்றுபார்க்கவும். V-வடிவ தையல் இல்லாமல், பின்புறத்தில் சரியான இடம் இல்லாமல் போகும், இதனால் இடுப்பு பகுதி தட்டையாகவும் சுருக்கப்பட்டதாகவும் தோன்றும்.

    * உங்கள் ஜீன்ஸை மடித்து, இரண்டு விரல் இடைவெளி இருக்கிறதா என்று பாருங்கள். இடைவெளி இரண்டு விரல்களுக்குக் குறைவாக இருந்தால், ஜீன்ஸ் மிகவும் இறுக்கமாக இருக்கும், மேலும் அது உங்கள் சருமத்தில் உராய்வது மட்டுமல்லாமல், அசிங்கமாகத் தோன்றும் மடிப்புகளையும் உருவாக்கும்.

    * பெல்ட் சுழல்கள் மிகச் சிறியதாக இருந்தால், ஜீன்ஸ் எளிதில் கிழிந்துவிடும். சற்று பெரிய சுழல்கள் கொண்ட ஜீன்ஸ் இடுப்பைச் சுற்றி சிறந்த பிடியை வழங்குகிறது மற்றும் எளிதில் கிழிக்காது.

     

    * ஜிப்பரைச் சுற்றியுள்ள துணி ஜீன்ஸைப் போலவே இருக்க வேண்டும். ஜிப்பர் பகுதி உயர் தரத்தில் இல்லாவிட்டால், ஜீன்ஸ் விரைவாக தேய்ந்துவிடும்.

    * ஜீன்ஸ் வாங்கும்போது, துணியை சரிபார்க்க மறக்காதீர்கள். 100% பருத்தியால் செய்யப்பட்ட ஜீன்ஸைத் தவிர்க்கவும். இந்த ஜீன்ஸ் எளிதில் கிழிந்துவிடும். பருத்தியுடன் சுமார் 3% ஸ்பான்டெக்ஸ் கலந்து தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் நல்லது மற்றும் நீண்ட காலம் நீடிக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மொத்தவிலைக் கடைகளில் விலை குறைவாக வாங்கவும் வாய்ப்பு அதிகம்.
    • மளிகைப்பொருட்கள் வாங்கச் செல்லும்போது கையில் பணம் எடுத்துச் செல்வதே மிகவும் சிறந்தது.

    ஒவ்வொரு குடும்பத்திலும் மாதந்தோறும் செய்யும் தவிர்க்கமுடியாத செலவு, மளிகைப் 'பொருட்கள் வாங்குவது.

    ஆனால், மளிகைப்பொருட்கள் வாங்கும்போது சில விஷயங்களில் கவனமாக இருந்தால், குறிப்பிடத்தக்க அளவு பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    அது பற்றி...

    மாதத்தின் முதல் தேதி வருவதற்கு முன்பாகவே அதாவது 25-ம் தேதியின்போதே வீட்டில் இருக்கும் மளிகைபொருட்களை கணக்கிட்டு, அடுத்த மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருட்களை மட்டும் பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும். இதனால், தேவையற்ற பொருட்கள் வாங்குவது தவிர்க்கப்பட்டு பணம் மிச்சமாகும்.

    மளிகைப்பொருட்கள் வாங்கப் போகும்போது வீட்டில் இருந்தே பைகளை எடுத்துச் செல்வதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம். ஏனெனில் சில கடைகளில் பைகளுக்கும் சேர்த்து 'பில்' போடுகிறார்கள்.

    மளிகைப்பொருட்களை மொத்தவிலைக் கடைகளில் வாங்க வேண்டும். சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கும்போது நாம் தேவையில்லாத பொருட்களை எடுத்துப் போடுவதை இதன் மூலம் தவிர்க்கலாம். மேலும், மொத்தவிலைக் கடைகளில் விலை குறைவாக வாங்கவும் வாய்ப்பு அதிகம்.

    ஷாம்பூ, காபித்தூள் போன்றவற்றை பாட்டில்களில் வாங்குவதை விட பவுச்சுகளில் வாங்குவதால் நாம் சரியான அளவில் உபயோகிப்பதோடு, பணத்தையும் மிச்சப்படுத்தலாம். ஏனெனில் பாட்டிலுக்கும் சேர்த்து தான் பணம் வாங்குகிறார்கள்.

    ஹேண்ட் வாஷை லிக்விடாக வாங்குதைவிட, ஹேண்ட் வாஷ் பவுடராக வாங்கி அதனை நாம் தண்ணீர் ஊற்றி லிக்விடாக கலக்கி வைத்து உபயோகப்படுத்தும்போது அதிக நாட்கள் வருவதோடு, பணமும் மிச்சம் ஆகிறது.

     

    மொத்த மளிகைக் கடைகளில் வாங்கும்போது பொருட்கள் புதிதாகவும், விலை குறைவாகவும் இருக்கும். இதே பொருட்களை பிராண்டுகளில் வாங்கும்போது விலை அதிகமாக இருக்கும்.

    நமக்குத் தேவையான மளிகைப்பொருட்களை பட்டியலாக எழுதி மொத்த கடையில் கொடுத்து வாங்கும்போது பணமும் நேரமும் மிச்சம் ஆவதோடு டென்ஷனும் தவிர்க்கப்படுகிறது.

    சூப்பர் மார்க்கெட்டுகளில் மளிகைப்பொருட்கள் வாங்கச் செல்லும்போது குழந்தைகளை கூட்டிச் சென்றால், நம் பட்ஜெட்டை மீறி பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே முடிந்தவரை அதைத் தவிர்க்க வேண்டும்.

    மளிகைப்பொருட்கள் வாங்கச் செல்லும்போது கையில் பணம் எடுத்துச் செல்வதே மிகவும் சிறந்தது. ஏனெனில் நாம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதை இதன் மூலம் தெளிவாகத் தெரிந்துகொண்டு பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    மேற்கூறிய முறைகளைக் கையாண்டு பாருங்கள்... பணம் மிச்சமாவதை நீங்களே கண்கூடாக உணர்வீர்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறந்த தகவல் தொடர்பு திறன்தான் உறவுக்குள் நெருக்கத்தை பேணுவதற்கு அடிப்படையானது.
    • தம்பதியரை பொறுத்தவரை ஒரே கனவுகள், இலக்குகள் கொண்டு செயல்படுதல் உறவை வளர்க்கும்.

    குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், இளம் தம்பதியர்கள், நட்பாக பழகி குடும்ப இன்ப, துன்பங்களில் பங்கெடுக்கும் அளவுக்கு உரிமை கொண்டிருப்பவர்கள் என உறவு வட்டத்துக்குள் இருப்பவர்களுக்குள் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் மனஸ்தாபம் ஏற்படலாம். அது உறவுக்குள் விரிசலை உண்டாக்குவதற்கு வித்திடலாம். அதற்கு இடம் கொடுக்காமல் ஆரம்ப நிலையிலேயே முற்றுப்புள்ளிவைத்து, உறவுக்குள் நெருக்கத்தை அதிகரிக்க செய்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

    உடல் ரீதியான அன்பு

    தம்பதியரை பொறுத்தவரை நெருக்கம் என்பது உடல் தொடுதலால் மட்டுமே நிர்ணயிக்கப்படாது. அன்பான தொடுதல், அரவணைப்பு, கைகளை பற்றி ஆதரவு அளித்தல், அருகில் அமருதல், ஆறுதலாக பேசுதல் போன்றவை உறவை நெருக்கமாக வைத்திருக்க உதவிடும். மற்ற உறவுகளை பொறுத்தவரை அடிக்கடி உரையாடுவது, அன்பை வெளிப்படுத்துவது உறவை வலுப்படுத்தும்.

    திறந்த மனம்

    தம்பதியரில் ஒருவருக்கொருவர் உணர்வுகளை பகிர்வதற்கு சிரமப்பட்டாலோ, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களிடம் ஏதேனும் முக்கியமான விஷயத்தை கூட பகிர்வதற்கு தயக்கம் கொண்டாலோ உறவுக்குள் நெருக்கம் குறையும்.

    தம்பதியரை பொறுத்தவரை தங்களின் ஆசைகள், கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான சூழல் இருந்தால்தான் உண்மையான நெருக்கம் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த சூழலை உருவாக்குவதற்கு திறந்த மனதுடன் பேச வேண்டும். தம்பதியர் மட்டுமல்ல மற்ற உறவுகளும் திறந்த மனதுடன் செயல்பட்டால்தான் உறவுக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

    தகவல் தொடர்பு

    சிறந்த தகவல் தொடர்பு திறன்தான் உறவுக்குள் நெருக்கத்தை பேணுவதற்கு அடிப்படையானது. அதற்காக எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதல்ல. நீண்ட நாட்கள் பேசாமல், தொடர்பு கொள்ளாமல் இருப்பதுதான் தவறானது. குடும்பத்தினரை தவிர உறவினர்களுடன் நிலையான தகவல் தொடர்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    வெளியூரில் வசிப்பவர்களாக இருந்தால் வாரம் ஒருமுறையோ முடியாதபட்சத்தில் மாதம் ஒருமுறையாவது அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரிக்கும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். யார் முதலில் பேசுவது என்ற ஈகோவுக்கு இடம் கொடுக்கக்கூடாது. முதல் அடியை எடுத்து வைப்பது நீங்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் உறவுக்குள் நெருக்கம் மேம்படும்.

    பரஸ்பர மரியாதை

    நம்மை மதிக்கிறார்கள், நம் பேச்சுக்கு உரிய மரியாதை கொடுக்கிறார்கள் என்ற உணர்வே உறவை வலுப்படுத்தும். உறவுக்குள் யாரேனும் உங்களுக்கு சின்ன உதவி செய்தாலும் கூட தவறாமல் 'நன்றி' கூற மறக்காதீர்கள். என்றென்றும் நன்றிக்கடன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

    எந்த விஷயமாக இருந்தாலும், அவர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் பட்சத்தில் 'நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள்', 'உங்கள் யோசனை எனக்கு பிடிக்கும்' என்பன போன்ற சிறிய பாராட்டுகள் கூட உறவுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும்.

    ஒரே இலக்கு

    தம்பதியரை பொறுத்தவரை ஒரே கனவுகள், இலக்குகள் கொண்டு செயல்படுதல் உறவை வளர்க்கும். அதனை நோக்கி ஒருசேர திட்டமிட்டு செயல்பட வழிவகை செய்யும். உறவுக்குள் நெருக்கத்தை பலப்படுத்தும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடும்பம் உருவாக்கி கொடுக்கும் நினைவுகளே உண்மையான செல்வமாகும்.
    • குடும்பத்தின் அன்பே வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதமாக அமையும்.

    குடும்பம் என்ற கட்டமைப்புதான் வாழ்வியலின் அடிப்படை அம்சங்களை கற்றுக்கொடுக்கிறது. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதையும் தீர்மானிக்க செய்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு வகையில் வழிகாட்டியாக இருந்து வாழ்க்கையை செம்மையாக வாழ வழி வகை செய்வார்கள். எல்லா காலகட்டத்திலும் பக்கபலமாக இருக்கும் குடும்பத்தின் முக்கியத்துவத்தை சிலர் காலம் கடந்துதான் உணர்வார்கள். வாழ்க்கையின் அஸ்திவாரமாக அமையும் குடும்பத்தை பற்றிய உன்னத விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

    குடும்பம்தான் எல்லாமே

    குழந்தை பருவத்தில் குடும்பம்தான் உலகமாக அமைந்திருக்கும். வெளி உலக தொடர்பை ஏற்படுத்துவதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்களே எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும் ஆசானாக இருப்பார்கள். ஆனால் இளமை பருவத்தில் குடும்பம் பற்றிய பார்வை மாறத்தொடங்கும். சிலர் குடும்பத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கருதுவார்கள். சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் பயன்படுத்தும் இடமாகவே கருதுபவர்களும் உண்டு. ஆனால் படித்து முடித்து திருமணமாகி குடும்ப பந்தத்துக்குள் முழுமையாக இணையும்போதுதான் குடும்பம் பற்றிய புரிதல் முழுமையடையும். வாழ்க்கை என்ற வட்டம் குடும்பத்தை சூழ்ந்துதான் கட்டமைக்கப்பட்டிருப்பதை உணர்வார்கள். இன்பமோ, துன்பமோ எல்லா காலகட்டத்திலும் நமக்கு முதலில் ஆதரவாக இருப்பது குடும்பம்தான் என்பதை அறிவார்கள். தொழில், பணம், சாதனை எதுவும் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் வசப்படாது.

    எதிர்காலத்தை கட்டமைக்கும்

    தாத்தா, பாட்டி சொல்லும் கதைகள், அவர்களின் கடந்த கால வாழ்க்கை நாம் வாழ்ந்திராத வாழ்க்கையை அறிந்து கொள்ள உதவிடும். அவர்களின் வாழ்க்கையை, அனுபவங்களை பின்பற்றி வாழ்வதற்கு வழிகாட்டும். குடும்பம்தான் ஆணி வேர். அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய இல்லற பாடங்களை நினைவூட்டும். குடும்ப பொறுப்புகள், கடமைகளை உணர வைக்கும். அவர்களின் எதிர்காலத்தை வலுவாக கட்டமைத்து கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர வைக்கும்.

    நினைவுகளே உண்மையான செல்வம்

    குடும்பம் உருவாக்கி கொடுக்கும் நினைவுகளே உண்மையான செல்வமாகும். குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து பேசிய தருணங்கள், சிரித்து மகிழ்ந்த சம்பவங்கள் என்றென்றும் நினைவை விட்டு மறையாது. காலங்கள் கடந்தும் நினைவூட்டி மகிழ வைக்கும். இன்பமோ, துயரமோ எல்லா அனுபவங்களும் வாழ்நாள் முழுவதும் நம்மோடு இருக்கும். நினைவுகள்தான் குடும்பத்தினர் ஒவ்வொருவருடனும் நம்மை இணைக்கும் பாலமாக அமையும். செல்வம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆதரவளிக்கும் இடம்

    குடும்பத்தினரில் சிலர் அதிகம் பேச மாட்டார்கள். ஆனால் மற்ற உறுப்பினர்கள் தங்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும், தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். குடும்பத்தினருடன் இருப்பதுதான் அவர்களை நிம்மதி அடைய செய்யும். அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த தயங்குவார்கள். அவர்களுக்கு ஆதரவளிக்கும் இடமாக குடும்பமே என்றென்றும் விளங்கும்.

    ஆரம்பமும்.. முடிவும்..

    பள்ளி, கல்லூரி படிப்புகளின்போது நண்பர்கள் மாறலாம். வேலைக்கு செல்லும் இடத்தில் புதிய நண்பர்கள் கிடைக்கலாம். தொழில் நிமித்தமாக அடிக்கடி நகரத்தில் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள நேரிடலாம். நட்பும், வசதி வாய்ப்பும் வாழ்க்கை சூழலை மாற்றலாம். ஆனால் குடும்பம் என்றென்றும் நிலையானது. வாழ்க்கையை ஆரம்பிக்கும் இடமும், இறுதி காலத்தை நிலையாக ஓரிடத்தில் கழிக்க சரணடையும் இடமும் குடும்பமாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் எவ்வளவு தூரம் சென்றாலும், எல்லை கடந்து பயணித்தாலும் இறுதியில் மனம் குடும்பத்தையே நாடி வரும்.

    வழிகாட்டும் திசைகாட்டி

    ஏதேனும் மன குழப்பத்தில் இருக்கும்போதோ, தடுமாற்றம் அடையும்போதோ பெற்றோர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் நம்மை வழிநடத்தும். தோல்வியை சந்தித்தால் குடும்பம் ஆதரவுக்கரம் நீட்டி அதிலிருந்து மீள வழிகாட்டும். எங்கு சென்றாலும் திசைகாட்டியாய் பின்தொடர்ந்து வாழ்க்கையை சிறப்பாக வாழ வழிகாட்டும். குடும்பத்தினரின் அன்பும், நம்பிக்கையும் நம்மை முன்னேற்றும்.

    ஆதாரம்

    குடும்பம் என்பது வாழ்க்கையின் இயற்கையான ஆதாரம். சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்ப பந்தம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. அன்னிய எண்ணத்துடன் அணுகாது. அரவணைத்து செல்லும்.

    வீட்டின் இதயம்

    சில வீடுகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் உள்ளே நுழைந்தால் வெறுமையாக தோன்றும். அங்கு வசிப்பவர்கள் தனிமை சூழலை அனுபவிப்பவர்களாக இருப்பார்கள். அதற்கு மாறாக சிறிய வீடாக இருக்கும். அங்கு வசிப்பவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள். அந்த வீடு அன்பு நிறைந்ததாக உணரப்படும். வீட்டின் இதயம் குடும்பம்தான். ஒரு வீட்டை குடும்பமாக உணர வைப்பது அங்கு வசிக்கும் மனிதர்களும், அவர்கள் காட்டும் அன்பும்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆசீர்வாதம்

    குடும்பத்தின் அன்பே வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதமாக அமையும். குடும்ப அன்பு தான் மற்றவர்களையும் அன்புடன் நேசிக்க கற்றுத்தரும். எத்தகைய நெருக்கடியான சூழலையும் சமாளிக்க மன தைரியத்தை கற்றுக்கொடுக்கும்.

    இணைப்பு

    குடும்பம் என்பது மரக்கிளைகள் போன்றது. சகோதர, சகோதரிகள் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். ஆனால் ஒருவரையொருவர் சந்திக்கும்போது இணக்கத்தையும், அன்பையும் உணர வைக்கும். அந்த நெருக்கம்தான் குடும்ப பந்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. வெகு தூரத்தில் வசித்தாலும் குடும்பம் நம்மை எப்போதும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடல் ரீதியான தொடுதல் மூலம் அன்பு, ஆறுதல், அரவணைப்பு போன்றவற்றை வெளிப்படுத்தலாம்.
    • தம்பதியருக்குள் ஆரோக்கியமான உறவு நீடிக்க சுதந்திரமான செயல்பாடு இன்றியமையாதது.

    இல்லற வாழ்க்கையை இனிமையாக வாழ கணவன்- மனைவி இருவரும் பரஸ்பர புரிதலோடும், அன்போடும், விட்டுக்கொடுத்து செல்லும் மனதோடும் இருக்க வேண்டும். மேலும், ஒருவரின் உணர்வுகளை மற்றவர் புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் அவர் மனம் நோகாதபடி நடக்க வேண்டும். அதிலும் பெண்களுக்கு தங்கள் கணவரிடம் ஒருசில எதிர்பார்ப்புகள் இருக்கும். சொல்லாமலேயே தன்னுடைய உணர்வுகளை கணவர் புரிந்து கொண்டு நடந்து தன்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் பற்றியும், அதனை கணவர்மார்கள் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்...

    ஆதரவாக இருத்தல்

    குடும்ப விஷயமோ, நண்பர்கள் மத்தியில் நடக்கும் விவாதமோ மனைவியின் கருத்துக்கு கணவர் ஆதரவாக இருக்க வேண்டும். மற்றவர்கள் முன்னிலையில் ஒருபோதும் மனைவியின் மதிப்பு, மரியாதை குறைவதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. எந்த சூழலிலும் அசைக்கமுடியாத ஆதரவை அளிக்கும் பட்சத்தில் மனைவி பாதுகாப்பான சூழலை உணர்வார். கணவர் தனக்கு துணையாக இருப்பதை எண்ணி மன வலிமையும் கொள்வார்.

    கனவு-லட்சியத்துக்கு ஆதரவு அளித்தல்

    பெரும்பாலும் மனைவியின் அதிகபட்ச ஆசையே தன்னுடைய நெடுநாளைய கனவு, லட்சியம் நிறைவேற கணவர் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். தன்னுடைய செயல்பாடுகளை பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

    தனது கனவை நிறைவேற்றித்தர வேண்டும் என்று விரும்புவார். அதனை நிறைவேற்றுவதற்கு சிறு முயற்சி எடுத்தாலே போதும். அகமகிழ்ந்து கணவரை கொண்டாட தொடங்கி விடுவார். அவரின் ஒவ்வொரு முயற்சியையும் ஊக்குவித்தாலே போதுமானது.

     

    அன்பை வெளிப்படுத்துதல்

    உடல் ரீதியான தொடுதல் மூலம் அன்பு, ஆறுதல், அரவணைப்பு போன்றவற்றை வெளிப்படுத்தலாம். உதாரணமாக மனைவி சோர்வாக இருக்கும் போது அவரது கைகளை இறுக பற்றிக்கொள்வது, கால்களை நீவி விடுவது, கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுவது போன்ற செயல்பாடுகளின் மூலமும் அன்பை வெளிப்படுத்தலாம்.

    'நான் உனக்காக இருக்கிறேன்', 'உன் நலனில் அக்கறை கொள்கிறேன்', 'உன்னை பற்றி கவலைப்படுகிறேன்' என்பன போன்ற வார்த்தைகள் மனைவியிடத்தில் கணவர் மீதான மதிப்பை கூட்டும்.

    வேலை செய்தல்

    ஒருசில வேலைகளை மனைவிதான் செய்தாக வேண்டும் என்ற ஆணாதிக்க எண்ணம் இல்லாமல் கணவர் செயல்பட வேண்டும். மனைவிக்கு வீட்டு வேலைப்பளு அதிகரிக்கும்பட்சத்தில் அவர் கேட்காமலேயே கணவர் சின்ன சின்ன உதவிகளை செய்ய முன்வர வேண்டும்.

    காபி தயாரிக்கலாம், காய்கறிகளை நறுக்கலாம், துணிகளை அயர்ன் செய்யலாம் என்பன போன்ற அன்றாட பொறுப்புகளில் மனைவியின் சுமையை குறைக்க முன்வர வேண்டும். அது கணவர் மீதான மதிப்பை உயர்த்தும்.

    சுதந்திரம் கொடுத்தல்

    தம்பதியருக்குள் ஆரோக்கியமான உறவு நீடிக்க சுதந்திரமான செயல்பாடு இன்றியமையாதது. கணவனோ, மனைவியோ ஒருவரையொருவர் கட்டுப்படுத்தும் எண்ணத்துடனோ, ஒருவர் மற்றவருடைய செயல்பாடுகளை கண்காணிக்கும் நோக்கத்துடனோ நடந்து கொள்வது நல்லதல்ல.

    முதலில் இருவருக்குமிடையே நம்பிக்கை நிலவ வேண்டும். அதுவே உறவை வலுவாக கட்டமைத்து விடும். அவரவர் விருப்பங்களுக்கு மதிப்பளிப்பது, பிடித்தமான பொழுதுபோக்குகளை தொடர அனுமதிப்பது என சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். அதனை மனைவி ரொம்பவே விரும்புவார்.

     

    ஆச்சரியப்படுத்துதல்

    மனைவியை திடீரென்று ஆச்சரியத்தில் ஆழ்த்தவைக்கும் வித்தை கணவருக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆச்சரியப்படுத்த வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பரிசளிக்க வேண்டியதில்லை. அர்த்தமுள்ள செயல்பாட்டில் ஈடுபட்டாலே போதுமானது. மனைவி விரும்பும் புத்தகத்தையோ, ஒப்பனை பொருளையோ வாங்கி கொடுக்கலாம்.

    வீட்டிற்கு வர தாமதமாகும் பட்சத்தில் அவரை இதயப்பூர்வமாக நெகிழவைக்கும் குறுஞ்செய்தியை அனுப்பலாம். அவர் விரும்பி சாப்பிடும் இனிப்பு பலகாரத்தை பரிசளிக்கலாம். அவர் விரும்பி சுற்றிப்பார்க்க சுற்றுலாத்தலத்திற்கு செல்வதற்கான பயண திட்டத்தை இறுதி செய்து பஸ், ரெயில் டிக்கெட் அல்லது ஓட்டல் அறை பதிவு செய்த தகவலை காண்பித்து அவரை குஷிப்படுத்தலாம்.

    கவனச்சிதறல் இன்றி கேட்டல்

    மின்னணு சாதனங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த டிஜிட்டல் காலத்தில் வீட்டில் இருக்கும் சமயங்களிலும் கூட பெரும்பாலான நேரத்தை மொபைல் போனிலேயே செலவிடும் சுபாவம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதிலும் மனைவி பேசிக்கொண்டிருக்கும்போது மொபைல்போனை பார்த்தபடியே கவனிக்கும் பழக்கம் நிறைய கணவன்மார்களிடம் இருக்கிறது. சில சமயங்களில் மனைவி என்ன சொல்கிறார் என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல் ஒப்புக்காக தலையை ஆட்டுவதும் உண்டு. அப்படி கவனச்சிதறலுடன் கேட்பதை மனைவி ஒருபோதும் விரும்ப மாட்டார்.

    கணவர் தான் சொன்னதை கவனித்தாரா? என்று குறுக்கிட்டு கேள்வி கேட்கவும் செய்வார். அப்போது சரியாக பதில் சொல்ல முடியாமல் கணவன் தடுமாறுவது மனைவியிடத்தில் கோபத்தை அதிகப்படுத்திவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் மனைவி பேச ஆரம்பித்ததுமே மொபைல்போனை ஒதுக்கிவைத்துவிட்டு கேட்பது தனக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக மனைவியை உணர வைக்கும். பெரும்பாலும் மனைவி மனக்கஷ்டமாக உணரும் தருணத்தில்தான் கணவரிடத்தில் உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், புரிதலையும் தேடுகிறாள். தன் எண்ணங்களை கணவரிடத்தில் வார்த்தையாக கொட்டுவதற்கு விரும்புவார். அதனை புரிந்து கொண்டு கணவர் செயல்பட்டாலே போதும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாழ்க்கை மிகவும் குறுகியது. நிச்சயமில்லாதது.
    • ஒப்பீடு செய்வது போலவே மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள்.

    வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கும், வசந்தமாக்குவதற்கும் அன்றாட வாழ்வியலில் ஒருசில விஷயங்களை முறையாக பின்பற்றினாலே போதுமானது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியத்தை தக்கவைப்பதாக அவை இருக்க வேண்டும். அத்தகைய பழக்கவழக்கங்கள் பற்றி பார்ப்போம்.

    அமைதி

    தினமும் குறைந்தபட்சம் பகலில் 10 நிமிடங்களாவது மனதுக்கு ஓய்வு கொடுங்கள். எந்த வேலையிலும் ஈடுபடாமல், எது பற்றியும் சிந்திக்காமல் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருங்கள். அந்த சமயத்தில் மனதில் ஏதேனும் நினைவுகளோ, வேறு எது பற்றிய யோசனையோ கூடாது. மனம் தெளிவாக இருக்க வேண்டும்.

    திட்டமிடல்

    மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஊடுருவுவதற்கு சரியான திட்டமிடுதல் இல்லாததே காரணமாகும். காலையில் எழுந்ததும் இன்றைய நாளில் உங்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் என்னென்ன? என்பதை பட்டியலிட்டு திட்டமிடுதல் வேண்டும். அதற்கு ஏற்ப அந்த செயலில் ஈடுபட்டாலே அதற்கே நேரம் சரியாக இருக்கும். அடுத்தடுத்த வேலையை நோக்கி நகர வைத்து விடும். தேவையற்ற சிந்தனை, எண்ணங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.

    நேர்மறை

    கடந்த கால பிரச்சனைகள், எதிர்மறை எண்ணங்கள்தான் பெரும்பாலானவர்களின் மன நிம்மதியையும் குலைக்கும். அதுபற்றிய சிந்தனையில் மூழ்க வைத்து நேரத்தை வீணடிக்கும். வாழ்க்கை மீது வெறுப்புணர்வை உண்டாக்கும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். அத்தகைய எண்ணங்கள் தலைதூக்கும்போது கவனத்தை திசை திருப்பும் செயலில் ஈடுபடுங்கள். நேர்மறையான விஷயங்களில் மனதை பதியவையுங்கள்.

    மன்னிப்பு

    வாழ்க்கை மிகவும் குறுகியது. நிச்சயமில்லாதது. வாழும் வரை ஆனந்தமாக, வாழ்க்கையை ரசித்து வாழபழகுங்கள். யார் மீதும் வெறுப்பு காட்டாதீர்கள். உறவோ, நட்போ பகைமை கொள்ளாதீர்கள். அவர்கள் பற்றிய எண்ணங்களே மனதை ஆக்கிரமித்து நிம்மதியை குலைக்க இடமளிக்காதீர்கள். யாரையும் விரோதியாக பார்க்காதீர்கள். உங்கள் மனதை புண்படுத்தும் வகையில் தவறு செய்திருந்தாலும் சில காலம் கழித்தாவது மன்னிக்க பழகுங்கள். மன்னிப்பு அவர்களை பற்றி மனதில் பதிந்திருக்கும் எதிர்மறை எண்ணங்களை விட்டொழித்து விடும். அவர்களை பற்றிய எண்ண ஓட்டங்கள் இல்லாமல் நிம்மதியாக வாழ்க்கையை நகர்த்த உதவிடும்.

    உதவி

    நண்பரோ, உறவினரோ, முன்பின் அறியாதவரோ யாராக இருந்தாலும் தக்க சமயத்தில் அவர்கள் எதிர்பார்க்காமலேயே உதவி செய்ய முன் வாருங்கள். உதவி கேட்க தயக்கம் காட்டுபவர்களாக இருந்தால் உடனே உதவிடுங்கள். அவர்களாக கேட்கும் வரை காத்திருக்காதீர்கள். பிறருக்கு உதவி செய்யும் குணம் உள்ளவராக, கொடுத்து மகிழும் சுபாவம் கொண்டவர்களாக இருங்கள். பிறரிடம் இருந்து 'வாங்குபவர்களாக' இருக்காதீர்கள்.

    விருப்பம்

    ஒப்பீடு செய்வது போலவே மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள். உங்களுக்கு பிடித்தமான செயலாக இருந்தால் தாராளமாக செய்யுங்கள். மற்றவர்கள் என்ன நினைத்தாலும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் வாழ்க்கை உங்களுக்கானது. அதை எப்படி வாழ வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

    குடும்பம்

    வேலைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே அளவுக்கு குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடல் நலம் மீதும் அக்கறை கொள்ள வேண்டும். உடல் நலம் பாதிப்புக்குள்ளானால் வேலை உங்களை விலக்கி வைத்துவிடும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும்.

    மகிழ்ச்சி

    வாழ்க்கையில் சின்ன சின்ன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடந்தாலும் அதனை கொண்டாடுங்கள். அது தரும் இன்பத்தை உங்களால் மட்டுமே உணர முடியும். அதனை சாதாரணமாக கடந்து சென்று விடாதீர்கள். அதனை மீண்டும் அனுபவிக்க முடியாது.

    மனப்பக்குவம்

    எந்த விஷயத்துக்கும் சட்டென்று டென்ஷன் ஆகாதீர்கள். நல்லதோ, கெட்டதோ எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். எதுவும் அப்படியே இருக்காது. நிலைமை மாறும். கடந்த கால கசப்பான நிகழ்வுகளை நினைவு கூராதீர்கள். அது நிகழ்காலத்தை பாழாக்கி விடும்.

    ×