என் மலர்

    பெண்கள் உலகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குறட்டை, மாறுபட்ட பணிநேரம் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன
    • நிம்மதியான தூக்கத்தைப் பெற விரும்பி இந்த SLEEP DIVORCE பழக்கத்தை கைக்கொண்டுள்ளனர்.

    இந்தியர்களிடையே அண்மையில் Sleep Divorce என்ற பழக்கம் உருவெடுத்துள்ளது.

    திருமணத்திற்கு பின்பும் கணவன், மனைவி தனித்தனியே தூங்கும் இந்த தூக்க விவாகரத்து பழக்கத்தை 70% பேர் விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

    இப்பழக்கம் உருவாக குறட்டை, மாறுபட்ட பணிநேரம் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. வேலை செய்து களைத்த தம்பதிகள் நிம்மதியான தூக்கத்தைப் பெற விரும்பி இந்த Sleep Divorce பழக்கத்தை அதிகம் கைக்கொண்டுள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆய்வின் முதன்மை ஆசிரியர் ஆடம் போடே கூறுகிறார்.
    • அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    பெண்களை விட ஆண்களே சற்று அதிகமாக காதலில் விழுகின்றனர், ஆனால் பெண்கள் ஆண்களை விட தங்கள் துணையைப் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்கள் என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (ANU) பாலின வேறுபாடுகளை ஆராயும் ஆய்வு தெரிவிக்கிறது.

    ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட இந்த Peer review மதிப்பாய்வில், ஆண்கள், பெண்களை விட சராசரியாக ஒரு மாதம் முன்னதாகவே காதலில் விழுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

     இந்த ஆய்வின் ஆசிரியரும், ANU முனைவர் பட்ட மாணவருமான ஆடம் போடே கூறுகையில், "ஆண்கள் தங்கள் காதலியின் மனதை கவர தங்கள் அர்ப்பணிப்பைக் அதிகம் காட்ட வேண்டியிருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம்" என்று தெரிவிக்கிறார்.

    ஆனால் பெண்கள் ஆண்களை விட தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றி சிந்திப்பதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பட்டு புடவைகள் வாஷிங்மெஷினில் சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்ய எப்போதும் கையில்தான் துவைக்க வேண்டும்.
    • நேரடி சூரிய ஒளியில் இருந்து விலகி நன்கு காற்றோட்டமான பகுதியில் பட்டு புடவையை தொங்கவிடுங்கள்.

    பெண்கள் பலருக்கும் தங்கள் பட்டு புடவையை பராமரிப்பது கடினமாக உள்ளது. குறிப்பாக திருமணத்திற்கு வாங்கும் பட்டு புடவைகள் கனமாகவும், பராமரிக்க கடினமாகவும் இருக்கும். இதனை கையில் துவைப்பது அவ்வளவு எளிதல்ல. பட்டு புடவைகளை வீட்டிலேயே துவைத்து பராமரிக்க சில எளிய டிப்ஸ்களை பற்றி பார்க்கலாம்.

    1. குளிர்ந்த நீரை பயன்படுத்துங்கள்

    பட்டு புடவைகளை துவைக்கும் போது, சூடான தண்ணீருக்கு பதிலாக குளிர்ந்த நீரை பயன்படுத்துவது முக்கியம்.

    சூடான நீர் பட்டு இழைகளை சுருக்கி அதன் பளபளப்பை இழக்கச் செய்யலாம். குளிர்ந்த நீர் மென்மை தன்மை கொண்டிருக்கும் என்பதால் அதன் அசல் பிரகாசத்தை பாதுகாக்க உதவும்.

    2. மென்மையான சோப்பு பயன்படுத்துங்கள்

    பட்டு புடவைகளை துவைக்கும்போது, மென்மையான துணிகளுக்கு வடிவமைக்கப்பட்ட சோப்பை பயன்படுத்துவது சிறந்தது. கடுமையான சோப்பு, பட்டு இழைகளை சேதப்படுத்தி புடவையில் உள்ள நிறங்களை மங்கச்செய்யலாம். குறிப்பாக நீங்கள் பயன்படுத்தும் துணி துவைக்கும் சோப்பு, பட்டுப்புடவையை சலவை செய்ய பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சோப்பு மீதுள்ள லேபிளை படிக்கவும்.

    3. மெதுவாக கையில் துவைக்க வேண்டும்

    பட்டு புடவைகள் வாஷிங்மெஷினில் சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்ய எப்போதும் கையில்தான் துவைக்க வேண்டும். ஒரு பக்கெட்டில் குளிர்ந்த நீரை நிரப்பி, பட்டுப்புடவையை துவைப்பதற்கான பிரத்யேக வாஷிங் திரவத்தை சேர்க்கவும். அந்த மென்மையான தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். அப்போது பட்டு புடவையை முறுக்கவோ அல்லது திருப்பவோ கூடாது. சிறிது நேரத்துக்கு பிறகு சோப்பு நுரையை அகற்ற, பட்டு புடவையை குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும்.

    4. காற்றில் உலர வேண்டும்

    பட்டு புடவையை வீட்டில் துவைத்த பிறகு, ஹீட்டர் அல்லது ஸ்டீமர் பயன்படுத்துவதற்கு பதிலாக அதை காற்றில் உலர்த்துவது முக்கியமானது. நேரடி சூரிய ஒளியில் இருந்து விலகி நன்கு காற்றோட்டமான பகுதியில் பட்டு புடவையை தொங்கவிடுங்கள். இல்லாவிட்டால் வெயிலோ, வெப்பமோ மென்மையான பட்டு இழைகளை சேதப்படுத்தும். புடவை உலர்ந்தவுடன், அதில் இருக்கும் சுருக்கங்களை அகற்ற குறைந்த வெப்ப அமைப்பில் அதை அயர்ன் செய்யலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'சமூக உளவியல் மற்றும் ஆளுமை அறிவியல்' என்ற அறிவியல் இதழில் முடிவுகள் வெளியாகி உள்ளன.
    • முன்னாள் காதலரை மறக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை ஆராய்ந்தது.

    முன்னாள் காதலரை மறக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது.

    'சமூக உளவியல் மற்றும் ஆளுமை அறிவியல்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, முன்னாள் துணையை மறக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை ஆராய்ந்தது.

    சராசரியாக, முன்னாள் காதலருடனான உணர்ச்சி ரீதியான பற்றுதல் பாதியளவு மறைய சுமார் 4.18 ஆண்டுகள் ஆகலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    பெரும்பாலான காதலர்களுக்கு, சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிணைப்பு முற்றிலும் மறைந்துவிடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கறைபட்ட இடத்தை அழுத்தி தேய்க்கக் கூடாது.
    • டால்கம் பவுடர் தூவி சுத்தம் செய்ய வேண்டும்.

    பெண்களின் மனதுக்கு நெருக்கமான பட்டுப்புடவையில் கறை ஏற்படும்போது, அவர்கள் கலங்கிவிடுவார்கள். ஆனால், அதிகம் அலட்டிக்கொள்ளாமல், பட்டுப் புடவை கறைகளை நீக்க முடியும். அதுகுறித்து...


    பூஜை போன்றவற்றின்போது பட்டுப் புடவையில் எண்ணெய் பட்டு விடலாம். அப்படி எண்ணெய்க் கறை பட்டால், நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக ஈரம் இல்லாத சுத்தமான காட்டன் துணியை கொண்டு அந்த இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். துணி கிடைக்காவிட்டால், 'டிஷ்யூ' பேப்பர் கொண்டும் குறிப்பிட்ட இடத்தில் ஒற்றி எடுக்கலாம்.


    மிகவும் கவனமாக இதை செய்ய வேண்டும். கறைபட்ட இடத்தை அழுத்தி தேய்க்கக் கூடாது. அழுத்தி தேய்த்தால் மற்ற இடங்களுக்கும் கறை பரவும் வாய்ப்புள்ளது. அதனால் முடிந்தவரை எண்ணெய் பட்ட இடத்தை மட்டும் மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும்.

    இந்த மாதிரி துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுத்த பின்னர், அந்த இடத்தில் டால்கம் பவுடர் தூவி சுத்தம் செய்ய வேண்டும். பவுடர் தூவியதும், கறைபட்ட இடத்தை குழாயில் ஓடும் நீரில் அலசினால் போதும். படிந்துள்ள எண்ணெய், அழுக்குகள் எல்லாமே நீங்கிவிடும். மறந்தும் கூட வெந்நீரில் கறையை நீக்க முயற்சி செய்ய வேண்டாம். வெந்நீர் பட்டால் கறை நீங்கவே நீங்காது.


    சோப்பு கரைசலை வைத்தும் பட்டுப்புடவையில் உள்ள கறைகளை நீக்க முடியும். இதற்கு கடின சோப்பை பயன்படுத்தாமல் மென்மை தன்மை கொண்ட லிக்விட் சோப்பை உபயோகிக்கலாம்.

    லிக்விட் சோப்பை குளிர்ந்த தண்ணீரில் கரைத்து, அதை ஒரு சுத்தமான காட்டன் துணியில் நனைத்துக்கொள்ள வேண்டும். இதை, விடாப்பிடி யான கறையின் மீது மெதுவாக வைத்து தேய்க்க வேண்டும். வேகமாகவோ அல்லது அழுத்தி துடைத்தாலோ பட்டுப்புடவையில் உள்ள நூலிழைகள் அறுந்துவிடும் வாய்ப்புள்ளது.

    எனவே, மெதுவாக தேய்க்க வேண்டும். அடுத்தகட்டமாக, இந்த நுரைகளை நீக்குவதற்கு கறை உள்ள இடத்தை குளிர்ந்த நீரால் அலச வேண்டும். அப்போது கறை நீங்கி, பட்டுப் புடவை பழைய நிலைக்கு வந்துவிடும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆண், பெண் பாலினங்களுக்கு இடையே செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.
    • ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

    செல்போன்கள் தற்போது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போன்களில் திரையை தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.

    ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் என எப்போது பார்த்தாலும் அதிக அளவில் இளைஞர்கள் இதில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

    இதில் யாருக்கு அதிக அளவில் ஆபத்து மற்றும் மன அளவில் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

    இதில் 25 வயது உடைய 104 ஆண்கள் 293 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த சிலரை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் 100 சதவீதம் தொடர்ந்து ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வந்தனர் .

    இந்த ஆய்வின் முடிவில் ஆண், பெண் பாலினங்களுக்கு இடையே செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.

    அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இளம்பெண்கள் மனம் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

    ஸ்மார்ட்போன் அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள் அதிக துன்பங்களை எதிர்கொள்ள கூடும். ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் போன் பயன்படுத்துவதால் சமூகப் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிக அளவில் ஏற்படுவது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    மேலும் மன உளைச்சல், தீங்கு விளைவிக்கும் நடத்தை, தற்கொலை எண்ணம் அதிகரிப்பதற்கு இந்த ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணங்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    சிக்கலான ஸ்மார்ட்போன் பயன்பாடு இளைய தலைமுறையினர் இடையே உள்ள பிரச்சனையை தீர்ப்பதற்கும் அதன் காரணம் மற்றும் விளவுகளை கண்டறிய தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் உணவு முறையை மேற்கொள்வது அவசியம்.
    • விட்டமின் பி-12 ஊட்டச்சத்து சரியான அளவு உணவில் இருக்க வேண்டும்.

    ஒரு பெண்ணின் வாழ்க்கையை முழுமை செய்யும் விஷயம் தாய்மைப்பேறு அடைவதாகும். குழந்தையை கருவில் தாங்கி அதை சீராக போற்றி வளர்த்து, பெற்றெடுத்து, சீரும் சிறப்புமாக வளர்க்கும் பொறுப்பு தாய்க்கே உரியது.

    குழந்தைப்பேறுக்குப் பின்னர் உடலில் உள்ள காயங்களை ஆற்றும் வகையில் மஞ்சள் செயல்படுகிறது. மஞ்சளில் விட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் அடங்கியிருப்பதால் உடலின் உட்புற மற்றும் வெளிப்புற காயங்களை அது விரைவாக குணப்படுத்துவதோடு, உடல் வீக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வருகிறது. அதனால் ஒரு டம்ளர் பசும்பாலுடன் சிறிதளவு நல்ல மஞ்சள் தூள் கலந்து பருகலாம்.

    குழந்தை பேற்றுக்குப்பின் பின்னர் தாயின் உடலில் பல்வேறு சத்துக்களின் இழப்பு ஏற்பட்டு, உடல் பலவீனமும் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டிய பெரும் பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும். அதனால், அவர்களுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் உணவு முறையை மேற்கொள்வது அவசியம்.

    குழந்தை பெற்றெடுத்த பின்னர் தாயின் உடல் நிலையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. உடல் மற்றும் மனநிலையில் அந்த தாய் பல சிக்கல்களை சந்திக்கிறாள். அந்த சிக்கல்களை தாங்கும் அளவுக்கு அவள் தன்னை உடல் ரீதியாக தகுதியுள்ளவளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று தாய்-சேய் நல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    அந்த வகையில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்பது அந்த தாய்க்கு மட்டுமல்லாமல், குழந்தைக்கும் உடல் நலனை ஏற்படுத்தும். அத்துடன் பிரசவத்தால் ஏற்பட்ட உடல் வலி, காயங்கள் ஆகியவை விரைவில் குணமடையும் விதத்திலும் அந்த உணவு சத்துள்ளதாக இருக்க வேண்டும். தேவையான அளவிற்கு தாய்ப்பால் சுரக்க உதவுவதாகவும் அந்த உணவு அமைவதும் அவசியம்.

    ஒரு நாளைக்கு 3 முதல் 4 அவுன்ஸ் புரதச்சத்து அடங்கிய உணவுகளை அந்த தாய் எடுத்துக் கொள்வது நல்லது. அத்துடன் 4 அல்லது 5 முறை பால் மற்றும் பால் பொருட்களை உண்ணலாம். அதன் மூலம் உடலுக்கு தேவைப்படும் புரதம், கால்சியம் ஆகியவை ஈடுகட்டப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன், முட்டை, பன்றி இறைச்சி, பருப்புகள், பல்வேறு விதைகள் ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    விட்டமின் பி-12 ஊட்டச்சத்து சரியான அளவு உணவில் இருக்க வேண்டும். அதன் மூலம் உடல் சோர்வு, எடை குறைதல், வாந்தி வருதல் ஆகிய சிக்கல்கள் விலகும். பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உடல் சோர்வை அகற்றும் விதமாக இரும்புச்சத்து, விட்டமின்-சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் தக்காளி, சிட்ரஸ் பழங்கள், உருளைக்கிழங்கு, பிரக்கோலி ஆகியவற்றை உண்ணலாம். அத்துடன் கீரை வகைகள், எள் சேர்த்த தின்பண்டங்களையும் உட்கொள்ளலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மார்ச் 8-ந் தேதி ஒரு மாபெரும் பேரணியை பெண்கள் நடத்தினார்.
    • பெண்களின் முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக அறிவிப்பு

    சர்வதேச பெண்கள் தினம் இந்த வாரம் (மார்ச் 8-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த தினம் தோன்றியது, கொண்டாட்டத்தில் அல்ல, போராட்டத்தில்.

    பெண்கள் தினத்துக்கும், அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கத்துக்கும், ரஷியப் புரட்சி இயக்கத்துக்கும் பங்கு உண்டு என்றால் ஆச்சரியமாக இருக்கும்.

    1975-ம் ஆண்டுதான் இந்த நாளை சர்வதேச பெண்கள் தினமாக ஐ.நா. சபை அங்கீகரித்தது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் இருந்து வருகிறது.


    இந்த நாளின் வரலாறு தெரியுமா?

    மார்ச் 8-ந் தேதி ஒரு மாபெரும் பேரணியை பெண்கள் நடத்தினார். வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தியும், வாக்களிக்கும் உரிமை கோரியும் சுமார் 15 ஆயிரம் உழைக்கும் பெண்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

    இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி.

    இந்த நாளை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர். பெண்ணுரிமைப் போராளி கிளாரா ஜெட்கின்.

    டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா, அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டனர்.

    அதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டே 2011-ம் ஆண்டு நூறாவது சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

    ஆனால் 1975-ம் ஆண்டில்தான் ஐ.நா. சபை, மார்ச் 8-ந் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது.

    அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக் கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்துவருகிறது. இதன்படி ஐ.நா.சபை அறிவிப்புக்குப் பின் வந்த முதல் பெண்கள் தினத்தின் முழக்கம், 'சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாக கட்டியெழுப்பு, மாற்றத்துக்காக புதுமை யாக சிந்தி.

    சமூகம், அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக இந்த நாள் உருவெடுத்துள்ளது.

    ஆனால், பாலின பாகுபாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள்தான் இந்த நாளின் பின்னணியில் இருக்கின்றன .

    முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது 1917-ஆண்டு, ரஷியாவில் போர் வேண் டாம். 'அமைதியும் ரொட்டியும்' தான் தேவை என்று வலியுறுத்தி மார்ச் 8-ந் தேதி பெண்கள் போராட்டத்தை தொடங்கினர். நான்குநாள்கள் நடந்த இந்த போராட்டம், சர்வ தேசமகளிர் தினம் என்ற கருத்துக்கு உறுதியான ஒரு வடிவத்தைக் கொடுத்தது.

    நான்கு நாள்கள் நீடித்த இந்த போராட்டம் கடைசியில் ரஷிய மன்னரான ஜார், அரியணை துறப்பதற்கு காரணமாக அமைந்தது. மன்னராட்சி முடிவுக்கு வந்த நிலை யில், அதற்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம், பெண்களுக்கு வாக்குரிமையும் அளித்தது.

    இந்த மாற்றம்தான், 1917-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த புகழ்பெற்ற ரஷியப் புரட்சிக்கு காரணமாக அமைந்தது. அப்படி புரட்சியின் பின்புலமாக இருந்த மகளிர் தினம், பெண்களின் பெருமை போற்றும் நாளாக உருவெடுத்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காற்றோட்டமான அறைகளுக்கு வாசனை ‘ஸ்ப்ரே’வைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.
    • நாணல் எரிகருவியைப் படுக்கையறையில் பயன்படுத்துவதற்குச் சிறந்தது.

    வீட்டிற்குள் நுழைந்தவுடன் புத்துணர்ச்சி மணம் கமழ, என்னென்ன வழிவகைகள் இருக்கின்றன என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்.

    * மெழுகுவர்த்திகள்

    வீட்டின் நறுமணத்துக்காக இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுபவை வாசனை மெழுகுவர்த்திகள்தாம். வாசனைப் பொருட்களில் மெழுகுவர்த்திகள் பிரபலமாக இருக்கின்றன. அவை வாசனையை அழகாக அறையில் பரவவைப்பதோடு, அறைக்கு புத்துணர்ச்சி தரும் வெளிச்சத்தையும் வழங்குவதுதான் அதற்குக் காரணம். வீட்டில் அதிகமான நேரத்தை எந்த அறையில் செலவிடுகிறோமோ, அந்த அறையில் வாசனை மெழுவர்த்திகளைப் பயன்படுத்துவது சிறந்தது.

    வரவேற்பறை, சமையலறை ஆகிய இரண்டு அறைகளும் வாசனை மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துவதற்குச் சிறந்தவை. நீண்ட நேரம் அறையில் வாசம் தங்க வேண்டுமென விரும்பினால், வாசனை மெழுகுவர்த்தியைக் குறைந்தது மூன்று மணி நேரமாவது எரியவிட வேண்டும். மெழுகுவர்த்தி உருக உருக அறையில் வாசனை பரவத் தொடங்கும். இந்த வாசனை மெழுகுவர்த்திகள் அறையை அலங்கரிக்கவும் சிறந்தவை.



    * ஸ்ப்ரே

    காற்றோட்டமான அறைகளுக்கு வாசனை 'ஸ்ப்ரே'வைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். உணவு, செல்லப்பிராணிகளின் வாசத்தைப் போக்குவதற்குச் சிறந்தது வாசனை 'ஸ்ப்ரே'. உடனடியாக, அறையின் வாசத்தை மாற்றுவதற்குச் சரியானது வாசனை 'ஸ்ப்ரே'தான். வாசனைப் பொருட்களைப் பொறுத்தவரை, அறையில் முதலில் ஸ்ப்ரேவைப் பயன்படுத்திய பிறகு, வாசனை மெழுகுவர்த்திகள், எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

    * எண்ணெய் எரிகருவி

    எண்ணெய் எரிகருவி (Oil Burner), சிறிய மெழுகுவர்த்தி பரப்புவான் (Tea light diffuser) ஆகிய இரண்டு வாசனைப் பொருட்களைப் பெரிய அறைகளில் பயன்படுத்தலாம். 10-15 நிமிடங்களில் அறையின் வாசத்தை அடியோடு மாற்றக்கூடிய இந்தச் சிறிய மெழுகுவர்த்திகள், வரவேற்பறையில் பயன்படுத்துவதற்கு உகந்தவை. ஆனால், இந்த எண்ணெய் எரிகருவியில் இருக்கும் எண்ணெய்யை அடிக்கடி மாற்ற வேண்டி இருக்கும். அறையின் அழகை மெருகேற்றுவதற்கும் இந்தச் சிறிய மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தலாம்.

    * நாணல் எரிகருவி

    கண்ணாடிக் குடுவையில் வைக்கப்படும் நாணல் எரிகருவி (Reed Diffuser) இயற்கை எண்ணெய்யை உறிஞ்சிய பிறகு, அதை அறையில் வாசமாகப் பரப்பும். சிறந்த நாணல் எரிகருவி, ஓர் அறையில் ஒரு மணி நேரம் வெளியிடும் வாசமானது பல நாட்களுக்கு நீடிக்கும். காற்றோட்டம் இருக்கும் இடத்தில் இதை அமைக்கும்போது இதன் வாசம் கூடுதலாக அறையில் நீடிக்கும். இந்த நாணல் எரிகருவியைப் படுக்கையறையில் பயன்படுத்துவதற்குச் சிறந்தது.

    * காற்றோட்டம், வெளிச்சம் அவசியம்

    நீங்கள் எப்படிப்பட்ட வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும், அந்த இடத்தில் காற்றோட்டம், வெளிச்சம் இருக்க வேண்டியது அவசியம். எவ்வளவு சிறப்பான நறுமணப் பொருளாக இருந்தாலும், இயற்கையான வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லாத இடத்தில் பயன்படுத்தினால் எந்தப் பலனும் இருக்காது. அத்துடன், இந்த நறுமணப் பொருட்கள் அறையில் இருக்கும் கிருமிகளை அழிக்கவும் உதவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கர்ப்பத்தின்போது உடல் எடை அதிகரிப்பது என்பது இயல்பு.
    • நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைப்பது நல்லது.

    ஆபரேஷனுக்கு பிறகு 5 முதல் 10 ஆண்டுகள் கழித்து இடுப்பு வலி வருகிறது என்றால் அது இடுப்பு எலும்பு, குருத்தெலும்புகளின் தேய்மானம், அதிக உடல் எடை, கடின உழைப்பு, வயதுக்கு ஒவ்வாத உடற்பயிற்சிகள் போன்றவை கூட இடுப்பு வலியை ஏற்படுத்தலாம்.

    கர்ப்பத்தின்போது உடல் எடை அதிகரிப்பது என்பது இயல்பு. ஆனால் இந்த அதிகரிக்கும் உடல் எடை உங்கள் தோற்ற நிலையை மாற்றி முதுகு பக்கம் வளைந்து உங்களது வயிற்றுப்பகுதி தசைகளை வலுவிழந்ததாக ஆக்கிவிடுகிறது.


    இதனால் உங்கள் இடுப்பெலும்புக்கும், குருத்தெலும்புக்கும் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் உடலின் பின்பக்கமுள்ள தசைகளும், எலும்பு இணைப்புகளும் அதிக எடையினால், அதிக பளுவை பல மாதங்கள் சுமக்க நேரிடுகிறது.

    பிரசவத்துக்குப் பிறகு சில பேருக்கு சில காலங்களுக்கு இடுப்பு வலி வந்து பின்பு பூரண குணமாகிவிடுகிறது. ஆனால் சில பேருக்கு இந்த இடுப்பு வலி ஓரிரு ஆண்டுகள் இருந்து பின் சரியாகிவிடுகிறது.

    இடுப்பு தசைப்பிடிப்பு, தசை பிறழ்தல், ஜவ்வு இறுக்கம், குருத்தெலும்பு வரிசை சீராக இல்லாமலிருப்பது, கீல் வாத நோய், எலும்பு வலு இழப்பு நோய், மடங்காநிலை முதுகெலும்பு வீக்கம், விபத்து, சதைப்பிடிப்பு, இடுப்பு எலும்பைச் சுற்றியுள்ள தசைகள் பிறழ்தல், நீண்டு, கிழிந்து போதல் போன்றவைகளினாலும் இடுப்பு வலி ஏற்படலாம்.


    அதிக எடை தூக்காமல் இருப்பது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராமல் அடிக்கடி எழுந்து நடப்பது, முறையாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது போன்றவற்றை கடைப்பிடித்து வருவது நல்லது.


    மேலும் இடுப்பு வலி மறைய மருத்துவர் மற்றும் பிசியோதெரபி நிபுணர் ஆலோசனையின் பேரில் அவர்கள் அளிக்கும் மருத்துவம் மற்றும் உடல் இயக்க பயிற்சிகளை செய்வது பலன் தரும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தினசரி காலை, மாலை இருவேளையும் ரோஜா எண்ணெய்யை உதடுகளில் பூசி வரலாம்.
    • உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைக்க இயற்கையான பொருட்கள் கொண்டு தயரிக்கப்பட்ட ‘லிப் பாம்' பூசவும்.

    சுற்றுச்சூழலில் உள்ள மாசு, பருவநிலை மாறுபாடு, ரசாயனங்களின் பயன்பாடு, உடலில் நீர்ச்சத்து குறைவது போன்ற பல்வேறு காரணங்களால் உதடுகள் வறட்சி அடைவது, உதட்டில் தோல் உரிவது போன்ற பாதிப்புகள் உண்டாகும். உதடுகள் மென்மையாகவும், பொலிவோடும் இருக்க அவற்றை தினசரி பராமரிப்பது அவசியமாகும். அதற்கான குறிப்புகள் இங்கே...

    * உதடுகள் அதிகமாக கருமை அடைவது ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறியாகும். புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் கருமையை போக்க முடியும்.

    * உதட்டுச்சாயம் பூசிய பிறகு அடிக்கடி கைகளால் உதடுகளை தொட்டுப்பார்ப்பதை தவிர்க்கவும். உதட்டுச் சாயத்தில் எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களும் இருக்காது. நீங்கள் உதடுகளை தொடும்போது கைகளில் உள்ள கிருமிகள் உதடுகளில் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும்.

    * உதடுகள் வறட்சி அடையும்போது அடிக்கடி நாக்கினால் ஈரப்படுத்துவதைத் தவிர்க்கவும். உமிழ்நீர் உலர்ந்தவுடன் உதடுகள் மேலும் அதிகமாக வறட்சி அடையும். உமிழ்நீரில் உள்ள நொதிகள் உதடுகளின் மென்மையான தோலில் பாதிப்புகளை உண்டாக்கும்.

    * தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றத்தோடு வைத்திருப்பதோடு, உதடுகளையும் ஆரோக்கியமாக பராமரிக்க உதவும்.

    * இரவு நேரத்தில் ஆழ்ந்து தூங்குவது முழு உடலுக்கும் தேவையான ஓய்வு அளித்து புத்துணர்ச்சியாக்கும். தூங்க செல்வதற்கு முன்பு உதடுகளில் பூசியுள்ள உதட்டுச்சாயத்தை நீக்குவது முக்கியமானது.

    * உதடுகளை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க அவற்றில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும். இதற்கு இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மென்மையான லிப் ஸ்கிரப்பர்களை பயன்படுத்துவது நல்லது.

    * தோல் உரிவதால் உதடுகளில் உண்டாகும் காயங்களை குணப்படுத்த தேன் மெழுகு உதவும். சிறிதளவு தேன் மெழுகை உதட்டில் சீராக பூசவும். அது உலர்ந்த பின்பு மீண்டும் ஒரு படலமாக தேன் மெழுகை பூசவும். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து அதைக்கொண்டு உதடுகளை சுத்தமாக துடைக்கவும். தேன் மெழுகில் உள்ள ஊட்டச்சத்துகள் உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைத்து, தோல் உரிவதால் ஏற்பட்ட காயங்களை எளிதில் குணமாக்கும்.

    * தினசரி காலை, மாலை இருவேளையும் ரோஜா எண்ணெய்யை உதடுகளில் பூசி வரலாம். இது உதட்டில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்துவதோடு, உதடுகள் விரைவில் வறட்சி அடைவதில் இருந்து பாதுகாக்கும்.

    * சிறிதளவு கோகோ, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து உதட்டில் பூசவும். இது கடினமான உதட்டின் தோலை மென்மையாக்கி, உதடுகள் வறட்சி அடைவதைத் தடுக்கும்.

    * உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைக்க இயற்கையான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட 'லிப் பாம்' பூசவும். வெளியில் செல்லும்போது புறஊதாக்கதிர் தாக்கத்தை தடுக்கும் மூலக்கூறுகள் சேர்க்கப்பட்ட லிப் மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்தவும்.

    * உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைக்க இயற்கையான பொருட்கள் கொண்டு தயரிக்கப்பட்ட 'லிப் பாம்' பூசவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாதவிடாய் சுழற்சியுடன் மாறிக்கொண்டே இருக்கும்.
    • எண்டோமெட்ரியத்தின் தடிமனை சரிபார்க்க வேண்டியது அவசியம்.

    எண்டோமெட்ரியம் என்பது பெண்ணின் கருப்பையின் உட்புற பகுதி ஆகும். ஒரு பெண்ணின் சாதாரண நாட்களில் இதன் வளர்ச்சி மாறிக்கொண்டே இருக்கும் உறுப்புகளில் இதுவும் ஒன்று.


    ஒவ்வொரு மாதமும் இந்த எண்டோமெட்ரியல் லைனிங் மாதவிடாய் சுழற்சியுடன் மாறிக்கொண்டே இருக்கும். இது இனப்பெருக்க ஹார்மோன்களான புரோஸ்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் ஆகியவற்றுக்கு ஏற்ப அதன் தடிமன் மாறுபடும்.

    சிலநேரங்களில் எண்டோமெட்ரியல் லைனிங் தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ இருக்கும் போது மாதவிடாய் காலங்களில் ஒழுங்கற்ற ரத்தப்போக்கு ஏற்படுகிறது.

    எண்டோமெட்ரியத்தின் பயன்பாடு:

    ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஆரோக்கியமான எண்டோமெட்ரியம் மிகவும் முக்கியமானது. வெற்றிகரமான கர்ப்பத்திற்கு இது மிகவும் மெல்லியதாகவோ அல்லது மிகவும் தடிமனாகவோ இருக்கக்கூடாது.

    ஒரு வெற்றிகரமான கர்ப்பத்திற்கு, உங்கள் ஃபோலிகுலர் ஆய்வின் போது 7 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட எண்டோமெட்ரியல் தடிமன் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த அளவு தடிமன் கருவை உள்வைப்பதற்கும் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதற்கும் போதுமானதாக இருக்கும்.

    எண்டோமெட்ரியத்தின் முதன்மை செயல்பாடு ஒரு பெண்ணின் இனப்பெருக்க நாட்களில் ஆகும்.


    ஒரு பெண்ணின் ஃபலோபியன் குழாயிலிருந்து முட்டையை வெளியிடுவதற்கு சற்று முன்பு, எண்டோமெட்ரியத்தின் செயல்பாட்டு அடுக்கு குறிப்பிட்ட மாற்றங்களுக்கு உட்படுகிறது.

    கருப்பையின் உட்புறப் புறணி தடிமனாகத் தொடங்குகிறது மற்றும் கருவை மற்றும் நஞ்சுக்கொடியை ஆதரிக்க தன்னை தயார்படுத்துகிறது.

    மாதவிடாய் சுழற்சிக்கு பின்னர் கருத்தரித்தல் நடக்கவில்லை என்றால் இந்த எண்டோமெட்ரியல் லைனிங் மாதவிடாய் எனப்படும் செயல்பாட்டில் தன்னைத்தானே உதிர்த்துவிடும்.

    எனவே எண்டோமெட்ரியத்தின் தடிமனை சரிபார்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் கருப்பையின் புறணி கர்ப்பத்தை ஏற்றுக்கொள்வதற்கு நுண்ணறை அளவுடன் பொருந்த வேண்டும்.

    எண்டோமெட்ரியத்தின் தடிமன் மெல்லியதாக இருந்தால் அது கர்ப்பம் தரிக்க சாதகமாக இருக்காது.

    ×