என் மலர்

    பெண்கள் உலகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடும்பம் உருவாக்கி கொடுக்கும் நினைவுகளே உண்மையான செல்வமாகும்.
    • குடும்பத்தின் அன்பே வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதமாக அமையும்.

    குடும்பம் என்ற கட்டமைப்புதான் வாழ்வியலின் அடிப்படை அம்சங்களை கற்றுக்கொடுக்கிறது. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதையும் தீர்மானிக்க செய்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு வகையில் வழிகாட்டியாக இருந்து வாழ்க்கையை செம்மையாக வாழ வழி வகை செய்வார்கள். எல்லா காலகட்டத்திலும் பக்கபலமாக இருக்கும் குடும்பத்தின் முக்கியத்துவத்தை சிலர் காலம் கடந்துதான் உணர்வார்கள். வாழ்க்கையின் அஸ்திவாரமாக அமையும் குடும்பத்தை பற்றிய உன்னத விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

    குடும்பம்தான் எல்லாமே

    குழந்தை பருவத்தில் குடும்பம்தான் உலகமாக அமைந்திருக்கும். வெளி உலக தொடர்பை ஏற்படுத்துவதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்களே எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும் ஆசானாக இருப்பார்கள். ஆனால் இளமை பருவத்தில் குடும்பம் பற்றிய பார்வை மாறத்தொடங்கும். சிலர் குடும்பத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கருதுவார்கள். சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் பயன்படுத்தும் இடமாகவே கருதுபவர்களும் உண்டு. ஆனால் படித்து முடித்து திருமணமாகி குடும்ப பந்தத்துக்குள் முழுமையாக இணையும்போதுதான் குடும்பம் பற்றிய புரிதல் முழுமையடையும். வாழ்க்கை என்ற வட்டம் குடும்பத்தை சூழ்ந்துதான் கட்டமைக்கப்பட்டிருப்பதை உணர்வார்கள். இன்பமோ, துன்பமோ எல்லா காலகட்டத்திலும் நமக்கு முதலில் ஆதரவாக இருப்பது குடும்பம்தான் என்பதை அறிவார்கள். தொழில், பணம், சாதனை எதுவும் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் வசப்படாது.

    எதிர்காலத்தை கட்டமைக்கும்

    தாத்தா, பாட்டி சொல்லும் கதைகள், அவர்களின் கடந்த கால வாழ்க்கை நாம் வாழ்ந்திராத வாழ்க்கையை அறிந்து கொள்ள உதவிடும். அவர்களின் வாழ்க்கையை, அனுபவங்களை பின்பற்றி வாழ்வதற்கு வழிகாட்டும். குடும்பம்தான் ஆணி வேர். அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய இல்லற பாடங்களை நினைவூட்டும். குடும்ப பொறுப்புகள், கடமைகளை உணர வைக்கும். அவர்களின் எதிர்காலத்தை வலுவாக கட்டமைத்து கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர வைக்கும்.

    நினைவுகளே உண்மையான செல்வம்

    குடும்பம் உருவாக்கி கொடுக்கும் நினைவுகளே உண்மையான செல்வமாகும். குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து பேசிய தருணங்கள், சிரித்து மகிழ்ந்த சம்பவங்கள் என்றென்றும் நினைவை விட்டு மறையாது. காலங்கள் கடந்தும் நினைவூட்டி மகிழ வைக்கும். இன்பமோ, துயரமோ எல்லா அனுபவங்களும் வாழ்நாள் முழுவதும் நம்மோடு இருக்கும். நினைவுகள்தான் குடும்பத்தினர் ஒவ்வொருவருடனும் நம்மை இணைக்கும் பாலமாக அமையும். செல்வம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆதரவளிக்கும் இடம்

    குடும்பத்தினரில் சிலர் அதிகம் பேச மாட்டார்கள். ஆனால் மற்ற உறுப்பினர்கள் தங்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும், தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். குடும்பத்தினருடன் இருப்பதுதான் அவர்களை நிம்மதி அடைய செய்யும். அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த தயங்குவார்கள். அவர்களுக்கு ஆதரவளிக்கும் இடமாக குடும்பமே என்றென்றும் விளங்கும்.

    ஆரம்பமும்.. முடிவும்..

    பள்ளி, கல்லூரி படிப்புகளின்போது நண்பர்கள் மாறலாம். வேலைக்கு செல்லும் இடத்தில் புதிய நண்பர்கள் கிடைக்கலாம். தொழில் நிமித்தமாக அடிக்கடி நகரத்தில் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள நேரிடலாம். நட்பும், வசதி வாய்ப்பும் வாழ்க்கை சூழலை மாற்றலாம். ஆனால் குடும்பம் என்றென்றும் நிலையானது. வாழ்க்கையை ஆரம்பிக்கும் இடமும், இறுதி காலத்தை நிலையாக ஓரிடத்தில் கழிக்க சரணடையும் இடமும் குடும்பமாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் எவ்வளவு தூரம் சென்றாலும், எல்லை கடந்து பயணித்தாலும் இறுதியில் மனம் குடும்பத்தையே நாடி வரும்.

    வழிகாட்டும் திசைகாட்டி

    ஏதேனும் மன குழப்பத்தில் இருக்கும்போதோ, தடுமாற்றம் அடையும்போதோ பெற்றோர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் நம்மை வழிநடத்தும். தோல்வியை சந்தித்தால் குடும்பம் ஆதரவுக்கரம் நீட்டி அதிலிருந்து மீள வழிகாட்டும். எங்கு சென்றாலும் திசைகாட்டியாய் பின்தொடர்ந்து வாழ்க்கையை சிறப்பாக வாழ வழிகாட்டும். குடும்பத்தினரின் அன்பும், நம்பிக்கையும் நம்மை முன்னேற்றும்.

    ஆதாரம்

    குடும்பம் என்பது வாழ்க்கையின் இயற்கையான ஆதாரம். சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்ப பந்தம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. அன்னிய எண்ணத்துடன் அணுகாது. அரவணைத்து செல்லும்.

    வீட்டின் இதயம்

    சில வீடுகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் உள்ளே நுழைந்தால் வெறுமையாக தோன்றும். அங்கு வசிப்பவர்கள் தனிமை சூழலை அனுபவிப்பவர்களாக இருப்பார்கள். அதற்கு மாறாக சிறிய வீடாக இருக்கும். அங்கு வசிப்பவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள். அந்த வீடு அன்பு நிறைந்ததாக உணரப்படும். வீட்டின் இதயம் குடும்பம்தான். ஒரு வீட்டை குடும்பமாக உணர வைப்பது அங்கு வசிக்கும் மனிதர்களும், அவர்கள் காட்டும் அன்பும்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆசீர்வாதம்

    குடும்பத்தின் அன்பே வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதமாக அமையும். குடும்ப அன்பு தான் மற்றவர்களையும் அன்புடன் நேசிக்க கற்றுத்தரும். எத்தகைய நெருக்கடியான சூழலையும் சமாளிக்க மன தைரியத்தை கற்றுக்கொடுக்கும்.

    இணைப்பு

    குடும்பம் என்பது மரக்கிளைகள் போன்றது. சகோதர, சகோதரிகள் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். ஆனால் ஒருவரையொருவர் சந்திக்கும்போது இணக்கத்தையும், அன்பையும் உணர வைக்கும். அந்த நெருக்கம்தான் குடும்ப பந்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. வெகு தூரத்தில் வசித்தாலும் குடும்பம் நம்மை எப்போதும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடல் ரீதியான தொடுதல் மூலம் அன்பு, ஆறுதல், அரவணைப்பு போன்றவற்றை வெளிப்படுத்தலாம்.
    • தம்பதியருக்குள் ஆரோக்கியமான உறவு நீடிக்க சுதந்திரமான செயல்பாடு இன்றியமையாதது.

    இல்லற வாழ்க்கையை இனிமையாக வாழ கணவன்- மனைவி இருவரும் பரஸ்பர புரிதலோடும், அன்போடும், விட்டுக்கொடுத்து செல்லும் மனதோடும் இருக்க வேண்டும். மேலும், ஒருவரின் உணர்வுகளை மற்றவர் புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் அவர் மனம் நோகாதபடி நடக்க வேண்டும். அதிலும் பெண்களுக்கு தங்கள் கணவரிடம் ஒருசில எதிர்பார்ப்புகள் இருக்கும். சொல்லாமலேயே தன்னுடைய உணர்வுகளை கணவர் புரிந்து கொண்டு நடந்து தன்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் பற்றியும், அதனை கணவர்மார்கள் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்...

    ஆதரவாக இருத்தல்

    குடும்ப விஷயமோ, நண்பர்கள் மத்தியில் நடக்கும் விவாதமோ மனைவியின் கருத்துக்கு கணவர் ஆதரவாக இருக்க வேண்டும். மற்றவர்கள் முன்னிலையில் ஒருபோதும் மனைவியின் மதிப்பு, மரியாதை குறைவதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. எந்த சூழலிலும் அசைக்கமுடியாத ஆதரவை அளிக்கும் பட்சத்தில் மனைவி பாதுகாப்பான சூழலை உணர்வார். கணவர் தனக்கு துணையாக இருப்பதை எண்ணி மன வலிமையும் கொள்வார்.

    கனவு-லட்சியத்துக்கு ஆதரவு அளித்தல்

    பெரும்பாலும் மனைவியின் அதிகபட்ச ஆசையே தன்னுடைய நெடுநாளைய கனவு, லட்சியம் நிறைவேற கணவர் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். தன்னுடைய செயல்பாடுகளை பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

    தனது கனவை நிறைவேற்றித்தர வேண்டும் என்று விரும்புவார். அதனை நிறைவேற்றுவதற்கு சிறு முயற்சி எடுத்தாலே போதும். அகமகிழ்ந்து கணவரை கொண்டாட தொடங்கி விடுவார். அவரின் ஒவ்வொரு முயற்சியையும் ஊக்குவித்தாலே போதுமானது.

     

    அன்பை வெளிப்படுத்துதல்

    உடல் ரீதியான தொடுதல் மூலம் அன்பு, ஆறுதல், அரவணைப்பு போன்றவற்றை வெளிப்படுத்தலாம். உதாரணமாக மனைவி சோர்வாக இருக்கும் போது அவரது கைகளை இறுக பற்றிக்கொள்வது, கால்களை நீவி விடுவது, கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுவது போன்ற செயல்பாடுகளின் மூலமும் அன்பை வெளிப்படுத்தலாம்.

    'நான் உனக்காக இருக்கிறேன்', 'உன் நலனில் அக்கறை கொள்கிறேன்', 'உன்னை பற்றி கவலைப்படுகிறேன்' என்பன போன்ற வார்த்தைகள் மனைவியிடத்தில் கணவர் மீதான மதிப்பை கூட்டும்.

    வேலை செய்தல்

    ஒருசில வேலைகளை மனைவிதான் செய்தாக வேண்டும் என்ற ஆணாதிக்க எண்ணம் இல்லாமல் கணவர் செயல்பட வேண்டும். மனைவிக்கு வீட்டு வேலைப்பளு அதிகரிக்கும்பட்சத்தில் அவர் கேட்காமலேயே கணவர் சின்ன சின்ன உதவிகளை செய்ய முன்வர வேண்டும்.

    காபி தயாரிக்கலாம், காய்கறிகளை நறுக்கலாம், துணிகளை அயர்ன் செய்யலாம் என்பன போன்ற அன்றாட பொறுப்புகளில் மனைவியின் சுமையை குறைக்க முன்வர வேண்டும். அது கணவர் மீதான மதிப்பை உயர்த்தும்.

    சுதந்திரம் கொடுத்தல்

    தம்பதியருக்குள் ஆரோக்கியமான உறவு நீடிக்க சுதந்திரமான செயல்பாடு இன்றியமையாதது. கணவனோ, மனைவியோ ஒருவரையொருவர் கட்டுப்படுத்தும் எண்ணத்துடனோ, ஒருவர் மற்றவருடைய செயல்பாடுகளை கண்காணிக்கும் நோக்கத்துடனோ நடந்து கொள்வது நல்லதல்ல.

    முதலில் இருவருக்குமிடையே நம்பிக்கை நிலவ வேண்டும். அதுவே உறவை வலுவாக கட்டமைத்து விடும். அவரவர் விருப்பங்களுக்கு மதிப்பளிப்பது, பிடித்தமான பொழுதுபோக்குகளை தொடர அனுமதிப்பது என சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். அதனை மனைவி ரொம்பவே விரும்புவார்.

     

    ஆச்சரியப்படுத்துதல்

    மனைவியை திடீரென்று ஆச்சரியத்தில் ஆழ்த்தவைக்கும் வித்தை கணவருக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆச்சரியப்படுத்த வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பரிசளிக்க வேண்டியதில்லை. அர்த்தமுள்ள செயல்பாட்டில் ஈடுபட்டாலே போதுமானது. மனைவி விரும்பும் புத்தகத்தையோ, ஒப்பனை பொருளையோ வாங்கி கொடுக்கலாம்.

    வீட்டிற்கு வர தாமதமாகும் பட்சத்தில் அவரை இதயப்பூர்வமாக நெகிழவைக்கும் குறுஞ்செய்தியை அனுப்பலாம். அவர் விரும்பி சாப்பிடும் இனிப்பு பலகாரத்தை பரிசளிக்கலாம். அவர் விரும்பி சுற்றிப்பார்க்க சுற்றுலாத்தலத்திற்கு செல்வதற்கான பயண திட்டத்தை இறுதி செய்து பஸ், ரெயில் டிக்கெட் அல்லது ஓட்டல் அறை பதிவு செய்த தகவலை காண்பித்து அவரை குஷிப்படுத்தலாம்.

    கவனச்சிதறல் இன்றி கேட்டல்

    மின்னணு சாதனங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த டிஜிட்டல் காலத்தில் வீட்டில் இருக்கும் சமயங்களிலும் கூட பெரும்பாலான நேரத்தை மொபைல் போனிலேயே செலவிடும் சுபாவம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதிலும் மனைவி பேசிக்கொண்டிருக்கும்போது மொபைல்போனை பார்த்தபடியே கவனிக்கும் பழக்கம் நிறைய கணவன்மார்களிடம் இருக்கிறது. சில சமயங்களில் மனைவி என்ன சொல்கிறார் என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல் ஒப்புக்காக தலையை ஆட்டுவதும் உண்டு. அப்படி கவனச்சிதறலுடன் கேட்பதை மனைவி ஒருபோதும் விரும்ப மாட்டார்.

    கணவர் தான் சொன்னதை கவனித்தாரா? என்று குறுக்கிட்டு கேள்வி கேட்கவும் செய்வார். அப்போது சரியாக பதில் சொல்ல முடியாமல் கணவன் தடுமாறுவது மனைவியிடத்தில் கோபத்தை அதிகப்படுத்திவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் மனைவி பேச ஆரம்பித்ததுமே மொபைல்போனை ஒதுக்கிவைத்துவிட்டு கேட்பது தனக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக மனைவியை உணர வைக்கும். பெரும்பாலும் மனைவி மனக்கஷ்டமாக உணரும் தருணத்தில்தான் கணவரிடத்தில் உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், புரிதலையும் தேடுகிறாள். தன் எண்ணங்களை கணவரிடத்தில் வார்த்தையாக கொட்டுவதற்கு விரும்புவார். அதனை புரிந்து கொண்டு கணவர் செயல்பட்டாலே போதும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாழ்க்கை மிகவும் குறுகியது. நிச்சயமில்லாதது.
    • ஒப்பீடு செய்வது போலவே மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள்.

    வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கும், வசந்தமாக்குவதற்கும் அன்றாட வாழ்வியலில் ஒருசில விஷயங்களை முறையாக பின்பற்றினாலே போதுமானது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியத்தை தக்கவைப்பதாக அவை இருக்க வேண்டும். அத்தகைய பழக்கவழக்கங்கள் பற்றி பார்ப்போம்.

    அமைதி

    தினமும் குறைந்தபட்சம் பகலில் 10 நிமிடங்களாவது மனதுக்கு ஓய்வு கொடுங்கள். எந்த வேலையிலும் ஈடுபடாமல், எது பற்றியும் சிந்திக்காமல் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருங்கள். அந்த சமயத்தில் மனதில் ஏதேனும் நினைவுகளோ, வேறு எது பற்றிய யோசனையோ கூடாது. மனம் தெளிவாக இருக்க வேண்டும்.

    திட்டமிடல்

    மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஊடுருவுவதற்கு சரியான திட்டமிடுதல் இல்லாததே காரணமாகும். காலையில் எழுந்ததும் இன்றைய நாளில் உங்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் என்னென்ன? என்பதை பட்டியலிட்டு திட்டமிடுதல் வேண்டும். அதற்கு ஏற்ப அந்த செயலில் ஈடுபட்டாலே அதற்கே நேரம் சரியாக இருக்கும். அடுத்தடுத்த வேலையை நோக்கி நகர வைத்து விடும். தேவையற்ற சிந்தனை, எண்ணங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.

    நேர்மறை

    கடந்த கால பிரச்சனைகள், எதிர்மறை எண்ணங்கள்தான் பெரும்பாலானவர்களின் மன நிம்மதியையும் குலைக்கும். அதுபற்றிய சிந்தனையில் மூழ்க வைத்து நேரத்தை வீணடிக்கும். வாழ்க்கை மீது வெறுப்புணர்வை உண்டாக்கும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். அத்தகைய எண்ணங்கள் தலைதூக்கும்போது கவனத்தை திசை திருப்பும் செயலில் ஈடுபடுங்கள். நேர்மறையான விஷயங்களில் மனதை பதியவையுங்கள்.

    மன்னிப்பு

    வாழ்க்கை மிகவும் குறுகியது. நிச்சயமில்லாதது. வாழும் வரை ஆனந்தமாக, வாழ்க்கையை ரசித்து வாழபழகுங்கள். யார் மீதும் வெறுப்பு காட்டாதீர்கள். உறவோ, நட்போ பகைமை கொள்ளாதீர்கள். அவர்கள் பற்றிய எண்ணங்களே மனதை ஆக்கிரமித்து நிம்மதியை குலைக்க இடமளிக்காதீர்கள். யாரையும் விரோதியாக பார்க்காதீர்கள். உங்கள் மனதை புண்படுத்தும் வகையில் தவறு செய்திருந்தாலும் சில காலம் கழித்தாவது மன்னிக்க பழகுங்கள். மன்னிப்பு அவர்களை பற்றி மனதில் பதிந்திருக்கும் எதிர்மறை எண்ணங்களை விட்டொழித்து விடும். அவர்களை பற்றிய எண்ண ஓட்டங்கள் இல்லாமல் நிம்மதியாக வாழ்க்கையை நகர்த்த உதவிடும்.

    உதவி

    நண்பரோ, உறவினரோ, முன்பின் அறியாதவரோ யாராக இருந்தாலும் தக்க சமயத்தில் அவர்கள் எதிர்பார்க்காமலேயே உதவி செய்ய முன் வாருங்கள். உதவி கேட்க தயக்கம் காட்டுபவர்களாக இருந்தால் உடனே உதவிடுங்கள். அவர்களாக கேட்கும் வரை காத்திருக்காதீர்கள். பிறருக்கு உதவி செய்யும் குணம் உள்ளவராக, கொடுத்து மகிழும் சுபாவம் கொண்டவர்களாக இருங்கள். பிறரிடம் இருந்து 'வாங்குபவர்களாக' இருக்காதீர்கள்.

    விருப்பம்

    ஒப்பீடு செய்வது போலவே மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள். உங்களுக்கு பிடித்தமான செயலாக இருந்தால் தாராளமாக செய்யுங்கள். மற்றவர்கள் என்ன நினைத்தாலும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் வாழ்க்கை உங்களுக்கானது. அதை எப்படி வாழ வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

    குடும்பம்

    வேலைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே அளவுக்கு குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடல் நலம் மீதும் அக்கறை கொள்ள வேண்டும். உடல் நலம் பாதிப்புக்குள்ளானால் வேலை உங்களை விலக்கி வைத்துவிடும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும்.

    மகிழ்ச்சி

    வாழ்க்கையில் சின்ன சின்ன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடந்தாலும் அதனை கொண்டாடுங்கள். அது தரும் இன்பத்தை உங்களால் மட்டுமே உணர முடியும். அதனை சாதாரணமாக கடந்து சென்று விடாதீர்கள். அதனை மீண்டும் அனுபவிக்க முடியாது.

    மனப்பக்குவம்

    எந்த விஷயத்துக்கும் சட்டென்று டென்ஷன் ஆகாதீர்கள். நல்லதோ, கெட்டதோ எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். எதுவும் அப்படியே இருக்காது. நிலைமை மாறும். கடந்த கால கசப்பான நிகழ்வுகளை நினைவு கூராதீர்கள். அது நிகழ்காலத்தை பாழாக்கி விடும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலை செய்யும்போது எளிய பயிற்சிகளை இணைத்துக் கொள்ளுங்கள்.
    • அலுவலகத்தில் லிப்டை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளில் ஏற பழகுங்கள்.

    வங்கி பணி முதல் ஐ.டி. நிறுவனங்கள் வரை இளைஞர்கள் பெரும்பாலும் அமர்ந்தே வேலை செய்யும் நிலை உள்ளது. இருக்கையில் நீண்ட நேரம் அசைவு இல்லாமல் அமர்ந்து வேலை செய்வது உடல் பருமன், தசை வலி, இதய பிரச்சனை போன்ற பல உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அமர்ந்து செய்யும் வேலையில் சுறுசுறுப்பாக இருக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில குறிப்புகளை இந்த தொகுப்பில் காணலாம்...

    * இடைவெளி எடுங்கள்

    ஒவ்வொரு 30 முதல் 60 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நின்று நடைப்பயிற்சி செய்யுங்கள். தண்ணீர் எடுக்க செல்வது, கடைக்கு செல்வது, செல்போனில் நடந்து கொண்டே பேசுவது போன்ற குறுகிய நடைப்பயிற்சி செய்யலாம். இருந்த இடத்திலேயே `ஸ்ரெட்சிங்' எனப்படும் நீட்சி பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். இந்த இடைவெளிகள் எடுப்பதை நினைவூட்ட, அலாரம் அல்லது பிட்னெஸ் செயலியை பயன்படுத்தலாம்.

     

    சக ஊழியருடன் உரையாடுவதற்கு செல்போனை அல்லது மின்னஞ்சலை பயன்படுத்தாமல் நேரில் செல்லுங்கள். இது உங்கள் அன்றாட வாழ்க்கையில் நடைபயிலும் வழக்கத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், சக ஊழியர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்கவும், கூட்டுப் பணிச்சூழலை மேம்படுத்தவும் உதவும்.

    * பணி சூழல் அமைப்பு

    அலுவலகத்தில் வேலை செய்யும் பணி சூழல் உங்களுக்கு ஏற்றவாறு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நாற்காலி, மேசை, மானிட்டர் ஆகியவற்றை சரியான முறையில் (கோணத்தில்) அமைத்து கொள்ளுங்கள். இது முதுகு மற்றும் கழுத்தில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும்.

    * மேசை பயிற்சிகள்

    வேலை செய்யும்போது எளிய பயிற்சிகளை இணைத்துக் கொள்ளுங்கள். அதாவது அமர்ந்திருக்கும்போது காலை தூக்குதல், கையை நீட்டுதல், மேசை புஷ்-அப்கள் போன்ற எளிய அசைவுகள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். கழுத்தை சுழற்றுதல், மணிக்கட்டை தளர்த்துதல் மற்றும் தோள்பட்டையை தளர்த்துதல் போன்றவை பதற்றத்தைக் குறைத்து, நீண்ட நேரம் இருக்கையில் இருந்து வேலை செய்வதால் ஏற்படும் பிரச்சனையைக் குறைக்கும்.

    * நடக்க பழகுங்கள்

    அலுவலகத்துக்கு நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்ல முயற்சி செய்யுங்கள். பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் ஒரு நிறுத்தத்துக்கு முன்பாகவே இறங்கி மீதமுள்ள தூரத்தை நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். இது நாளுக்கு நாள் உடல் செயல்பாடுகளை அதிகரிப்பதோடு, மன அழுத்த அளவையும் குறைக்கும்.

    * படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள்

    அலுவலகத்தில் லிப்டை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளில் ஏற பழகுங்கள். இந்த சிறிய மாற்றம் அன்றாட உடல் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் இதயத் துடிப்பை சீராக்கவும், கால்களை வலுப்படுத்தவும் உதவும். உடற்பயிற்சியை வாழ்க்கையில் ஒருங்கிணைக்க இது ஒரு எளிதான மற்றும் பயனுள்ள வழியாகும்.

    * ஆரோக்கியமான உணவு

    நீரேற்றமாக இருங்கள். உடல் ஆற்றல் அளவை பராமரிக்க நட்ஸ், பழங்கள் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். சரியான ஊட்டச்சத்தை உட்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியம், நல்வாழ்வு, கவனம் மற்றும் செயல்திறனையும் மேம்படுத்தும்.

    * தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்

    உங்களை தொடர்ந்து கண்காணிக்கவும், உடற்பயிற்சிகள் செய்வதை நினைவூட்டவும் செயலி மற்றும் கையில் அணியத்தக்க சாதனங்களை பயன்படுத்தலாம். இந்த தொழில்நுட்ப கருவிகள் நடைப்பயிற்சி இலக்குகளை அடையவும், உடலை தொடர்ந்து கண்காணிக்கவும் உதவும். இந்த சாதனங்கள் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க ஒரு உந்துதல் கருவியாகவும் அமையும்.

    வீட்டில் உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறையுங்கள். லேசான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது, நடைப்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகளை செய்வது போன்றவற்றின் மூலம் நாள் முழுவதும் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம். மேலும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் மேம்படுத்தலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும்.
    • இது முழு நாளையும் கெடுத்துவிடும்.

    இன்றைய கால கட்டம் எவ்வளவு நவீனமயமானாலும் இன்னும் பெரும்பாலானவர்களால் சில வாஸ்து சாஸ்திரம், இறை நம்பிக்கைகள் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் வீட்டில் வாஸ்து விதிகளைப் பின்பற்றினால், பாதிக்கும் மேற்பட்ட பிரச்சனைகள் தானாகவே நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. அத்தகைய வீடுகள் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த சாஸ்திரம் திசைகளைக் கையாள்வது மட்டுமல்லாமல், நமது அன்றாட விஷயங்களுடன் தொடர்புடைய சில பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் வழங்குகிறது. அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் நாம் பார்க்கக்கூடாத விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்...

    அழுக்கு பாத்திரங்கள்

    வாஸ்து சாஸ்திர விதிகளின்படி, அதிகாலையில் அழுக்குப் பாத்திரங்களைப் பார்ப்பது சரியல்ல. காலையில் உடனடியாக அவற்றைப் பார்ப்பது மிகவும் அசுபமாகக் கருதப்படுகிறது. விதிகளின்படி, இதைத் தொடர்ந்து செய்பவர்கள் தங்கள் நிதி நிலைமையில் எதிர்மறையான தாக்கத்தை சந்திக்கிறார்கள். மேலும் அவர்களின் வாழ்க்கையில் எதிர்மறையை அதிகரிக்கிறார்கள். இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு எப்போதும் அனைத்து பாத்திரங்களையும் கழுவ வேண்டும் என்றும் வாஸ்து கூறுகிறது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றல் குவிவதைத் தடுக்கிறது.

    கண்ணாடி

    பலர் பொதுவாக காலையில் எழுந்தவுடன் முதலில் கண்ணாடியைப் பார்ப்பார்கள். இது ஒரு பழக்கமாக இருக்கலாம், ஆனால் அது தவறு. வாஸ்து சாஸ்திரத்தின்படி, காலையில் முதலில் கண்ணாடியைப் பார்ப்பது நல்லதல்ல, ஏனெனில் இது எதிர்மறையை அதிகரிக்கிறது மற்றும் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும்.

    நிழல்

    வாஸ்து விதிகளின்படி, காலையில் ஒருவர் தனது சொந்த நிழலைப் பார்க்கக்கூடாது. இது முழு நாளையும் கெடுத்துவிடும். மேலும் ஒரு பெரிய வேலையை கூட நிறுத்திவிடும். அத்தகைய சூழ்நிலையில், காலையில் முதலில் உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைவில் கொண்டு, உங்கள் கையை, உங்கள் முகத்தின் மீது வைத்து, சிறிது நேரம் அதைப்பாருங்கள். அதன்பிறகு எந்த வேலையையும் செய்ய தொடங்குங்கள். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடைக்கு பொருட்கள் வாங்க செல்வதற்கு அவை உபயோகமாக இருக்கும்.
    • பசுமை திருமணத்திற்கு ஏற்ப விருந்து உபசரிப்பிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை இடம் பெற செய்யலாம்.

    இன்றைய இளைஞர்கள் திருமணத்தை பிரமாண்டமாக, அதேவேளையில் அதிக செலவில்லாமல் விமரிசையாக நடத்துவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். மணமேடை அமைந்திருக்கும் இடம் உள் அரங்கமாக இல்லாமல் பசுமை சூழ்ந்த திறந்தவெளியாக இருக்க விரும்புகிறார்கள். அதற்கேற்ற இயற்கை எழில் கொஞ்சும் பசுமை சூழ்ந்த இடங்களை தேர்வு செய்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், திருமணத்திற்கு வருகை தருபவர்கள் திறந்தவெளி பகுதியில் இயற்கை அழகை ரசித்தபடியும், இதமான காற்றை சுவாசித்தபடியும் உறவினர்களோடு பேசி மகிழும் அம்சத்தையும் பசுமை திருமணங்கள் கொண்டிருக்கின்றன. அப்படி நடைபெறும் 'பசுமை' திருமணங்களை நடத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    அலங்காரம்

    பசுமை திருமணத்துக்கு அலங்கார வேலைப்பாடுகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்காது. இயற்கை சூழலும், எளிய அலங்காரமுமே பிரமாண்ட தோற்றத்தை தரும். இருப்பினும் அலங்காரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க விரும்புபவர்கள் வண்ணமயமான காகித விளக்குகளை பயன்படுத்தலாம்.

    அவை அலங்காரமாக மாறி பசுமை சூழலுக்கு கூடுதல் அழகு சேர்க்கும். மண் பானைகள், கண்ணாடி பாட்டில்கள், கொட்டாங்குச்சிகள் போன்றவற்றில் அலங்காரங்களை செய்து ஆங்காங்கே தொங்கவிட்டு அசத்தலாம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக காகிதம் மற்றும் துணி அலங்காரங்களை அழகுற வடிவமைக்கலாம்.

    தாம்பூலம்

    திருமணத்திற்கு வருகை புரிந்தவர்களுக்கு கொடுக்கும் தாம்பூலம், சணல் பையாகவோ, துணிப் பையாகவோ அமைவது சிறப்பு. கடைக்கு பொருட்கள் வாங்க செல்வதற்கு அவை உபயோகமாக இருக்கும். பசுமை திருமணத்தை நினைவூட்டும் வகையில் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு மரக்கன்று வழங்கலாம். விதை பந்து, காய்கறி விதைகள் வழங்கவும் செய்யலாம்.

    விருந்து

    பசுமை திருமணத்திற்கு ஏற்ப விருந்து உபசரிப்பிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை இடம் பெற செய்யலாம். திருமண விருந்தில் பிளாஸ்டிக் பொருட்கள் இடம் பெறுவதை தவிர்த்து அதற்கு மாற்றாக கண்ணாடி டம்ளர், மண் குவளை போன்றவற்றை இடம் பெற செய்யலாம். திருமண விருந்தில் பசுமை நிறத்திலான பொருட்களை இடம் பெற செய்வதும் அழகு சேர்க்கும்.

    திறந்த வெளி

    பசுமை திருமணம் என்றாலே திறந்தவெளி இடம்தான் என்ற நியதிக்கு ஏற்ப இயற்கை எழில் கொஞ்சும் விசாலமான திறந்தவெளி பரப்பளவு கொண்ட பகுதியை தேர்வு செய்ய வேண்டும். அந்த திறந்தவெளி இடத்தில் மண மேடை அலங்காரமும் இயற்கை அலங்கார பொருட்களாக அமைந்திருக்க வேண்டும்.

    அடர்ந்த மரங்கள் சூழ்ந்திருக்கும் பகுதியாகவும் அமைந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் திருமணத்திற்கு வருகை தரும் நண்பர்கள், உறவினர்களுக்கு சவுகரியமானதாக இருக்கும். அதிலும் பூத்துக்குலுங்கும் மரங்களாக இருந்தால் மலர்கள் அலங்கார செலவும் குறையும். திருமண பந்தத்தை என்றென்றும் நினைவில் கொள்ளும் அம்சம் கொண்ட இடமாக அமைந்திருக்க வேண்டும்.

     

    முகூர்த்த நேரம்

    திருமணம் என்றாலே காலை வேளையில் முகூர்த்த நேரம் குறிக்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இரவில் திருமண வரவேற்பு அரங்கேறும். பசுமை திருமணத்திற்கும் காலை நேரத்தையே தேர்வு செய்யலாம். காலை 10 மணிக்குள் திருமணத்தை நடத்தும் விதமாக திட்டமிட்டால் வெயிலின் தாக்கம் அதிகமிருக்காது.

    அப்படி இருந்தாலும் மரங்களும், இயற்கை சூழலும் இதமான சூழலை உருவாக்கி கொடுக்கும். அந்த இடத்திலேயே இரவில் திருமண வரவேற்பை நடத்தினால் மின்னொளியும், இயற்கை அழகும் ஒருசேர மிளிர்ந்து பிரமாண்ட திருமண வைபவமாக மாற்றிவிடும்.

    திருமண ஆடை

    திருமண பந்ததத்தை என்றென்றும் நினைவுபடுத்தக்கூடிய அம்சம் கொண்டது என்பதால் திருமண ஆடை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மண மேடை திறந்தவெளி பரப்பளவில் அமைந்திருப்பதால் திருமணத்திற்கு வந்திருப்பவர்கள் தூரத்தில் இருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரியும் வகையிலும், அந்த இடத்தின் சூழலுக்கு ஏற்ற வகையிலும் வண்ணங்களை கொண்ட ஆடைகளாக அமைந்திருப்பது சிறப்பானது.

    அழைப்பிதழ் தேர்வு

    பசுமை திருமணங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சத்தை கொண்டிருப்பதால் திருமண அழைப்பிதழிலும் அது பிரதிபலிக்க வேண்டும். காகிதத்தில் திருமண அழைப்பிதழை அச்சடிக்கும் நடைமுறைக்கு மாற்றாக இளந்தலைமுறையினர் பலரும் டிஜிட்டல் மின் அழைப்பிதழ்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். அது காகித பயன்பாட்டை குறைக்கும் அம்சத்தை கொண்டிருப்பதால் பசுமை திருமணத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது. டிஜிட்டல் வழியாக சில நொடிகளில் அழைப்பிதழ்களை அனுப்பிவிடலாம் என்பதால் அதற்கு ஆகும் செலவும் குறைவும்.

    அதேவேளையில் டிஜிட்டலில் அழைப்பிதழ் அனுப்பியதும் சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு திருமணத்திற்கு வருமாறு அழைப்புவிடுப்பது முக்கியமானது. நாம்தான் டிஜிட்டலில் அழைப்பிதழ் அனுப்பிவிட்டோமே என்று நினைப்பது ஏற்புடையதல்ல. அது திருமணத்திற்கு அழைப்பதற்கு உகந்த முறையும் அல்ல.

    அழைப்பிதழ் அடித்து அழைப்புவிடுக்க விரும்புபவர்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களை கொண்டு அழைப்பிதழ் அச்சடிக்க முயற்சிக்கலாம். அந்த அழைப்பிதழுடன் விதை பதித்தும் கொடுக்கலாம். அவை குப்பைக்கு சென்றடைந்தாலும் அதிலிருக்கும் விதை துளிர்த்து செடியாகி பசுமை திருமணத்திற்கு பலம் சேர்க்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மலிவான புடவைகளில் செயற்கை ஜரிகை அல்லது ரோமன் ஜரிகை பயன்படுத்தப்பட்டிருக்கும்.
    • ஜரிகை வேலைப்பாடு அடர்த்தியாகவும், கலைநயத்துடனும் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும்.

    பட்டுச் சேலைகளில் காஞ்சிபுரத்தைப் போல, பனாரசுக்கும் தனி மதிப்பு உண்டு. சரி, அசல் பனாரஸ் பட்டுச் சேலையை அறிவது எப்படி?

    பட்டு நூலின் தரம்:

    ஒரு பனாரஸ் சேலையின் தரம், அதன் பட்டு நூலின் தரத்தைப் பொறுத்தது. உண்மையான பனாரஸ் புடவைகள் தூய மல்பெரி பட்டு நூலில் நெய்யப்படுகின்றன. மல்பெரி பட்டு மென்மையாகவும், பளபளப்பாகவும், பார்ப்பதற்கு மிகவும் ஆடம்பரமாகவும் இருக்கும்.

    தூய பட்டு மென்மையாகவும், வழுவழுப்புடனும் இருக்கும். அசல் பட்டுக்கு ஓர் இயற்கையான பளபளப்பு இருக்கும்.

    பட்டுப்புடவையின் ஒரு சிறிய நூல் பகுதியை எடுத்து மெதுவாக எரிக்கவும். தூய பட்டு எரிந்தால், முடி கருகும் வாசனை வரும். செயற்கைப்பட்டு என்றால் பிளாஸ்டிக் எரிவது போல வாசனை வரும்.

    ஜரிகையின் நேர்த்தி :

    பனாரஸ் புடவைகளின் தனிச்சிறப்பு, அவற்றின் ஜரிகை வேலைப்பாடுதான். இந்த ஜரிகை பெரும்பாலும் தங்கம் அல்லது வெள்ளி இழைகளால் நெய்யப் பட்டிருக்கும்.

    உண்மையான பனாரஸ் புடவைகளில் பயன்படுத்தப்படும் ஜரிகை, தூய வெள்ளி இழைகளின் மீது தங்க முலாம் பூசப்பட்டு அல்லது செப்பு இழைகளின் மீது தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும்.

    மலிவான புடவைகளில் செயற்கை ஜரிகை அல்லது ரோமன் ஜரிகை பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜரிகை வேலைப்பாடு அடர்த்தியாகவும், கலைநயத்துடனும் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும்.

     

    உண்மையான கைத்தறி பனாரஸ் பட்டுப்புடவைகளில், முன்புறத்தில் உள்ள அதே வடிவமைப்பு, பின்புறத்திலும் தெரியும்.

    நெசவு நுட்பம் மற்றும் வடிவமைப்பு :

    பனாரஸ் பட்டுப் புடவைகள் தனித்துவமான கைத்தறி நெசவு நுட்பத்துக்காக அறியப்படுகின்றன. வடிவமைப்புகள் புடவையில் நேரடியாக நெய்யப்பட்டிருக்கும்.

    தறியில் நெய்யப்பட்டிருந்தால் அவை மெஷின் வேலைப்பாடு போல் இல்லாமல், சற்று ஒழுங்கற்ற அல்லது கையால் செய்யப்பட்டதன் அடையாளத்தைக் கொண்டிருக்கும்.

    அசல் பனாரஸ் பட்டுப்புடவைகளில் 'ஜலா' அல்லது 'ஜாக்கார்டு' தறி மூலம் நெய்யப்படும் சிக்கலான வடிவங்கள் காணப்படும்.

    இவை பொதுவாக முந்தானையிலும், பார்டர்களிலும் பிரதானமாக இருக்கும்.

    புடவையின் எடை, அடர்த்தி:

    தூய பட்டு மற்றும் அடர்த்தியான ஜரிகை வேலைப்பாடுகள் காரணமாக, உண்மையான பனாரஸ் புடவைகள் மற்ற பட்டுப் புடவைகளை விட சற்றே கனமாக இருக்கும்.

    புடவையை கையில் எடுத்துப் பாருங்கள். அப்போது கனமாக உணர்ந்தால், அது உண்மையான பட்டு மற்றும் ஜரிகையை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அதிக எடை, பயன்படுத்தப்படும் பட்டு மற்றும் ஜரிகையின் அளவைக் குறிக்கும்.

    துணியை தொட்டுப் பார்த்தால், அது அடர்த்தியாகவும், இறுக்கமாகவும் நெய்யப்பட்டிருப்பதைக் காணலாம். தரம் குறைந்த புடவைகள் மெல்லியதாகவும், தளர்வாகவும் இருக்கும்.

    விலை, சான்றிதழ்:

    பனாரஸ் புடவைகள் தயாரிப்பதற்கு அதிக நேரம், நுட்பமான வேலைப்பாடு மற்றும் உயர்தர மூலப்பொருட்கள் தேவைப்படுவதால், அவற்றின் விலை சற்றே அதிகமாக இருக்கும்.

    மலிவான விலையில் கிடைக்கும் புடவைகள் பெரும்பாலும் கலப்படமாகவோ அல்லது செயற்கைப்பட்டுடன் கூடியவையாகவோ இருக்கும்.

    இந்திய அரசின் சில்க் மார்க் சான்றிதழ், புடவையின் தரத்தை உறுதிப்படுத்தும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, நம்பகமான கடைகளில் மட்டுமே பனாரஸ் பட்டுப் புடவைகளை வாங்குவது சிறந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றனர்.
    • அப்போது பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ சிட்டியில் இருந்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஏராளமான பயணிகள் பேருந்து ஒன்றில் சிகோன்டெபெக் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

    இந்த பேருந்து வெராக்ரூஸ் மாநிலத்தில் உள்ள ஜோன்டெகோமட்லான் என்ற மலைப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாஞ்சாலி, தனது கணவர்கள் பேச்சை கேட்டதில்லை. தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்டு நடந்தவர்.
    • சிறந்த உறவில் கணவன் தோழனாகவும் இருப்பான்.

    கணவனா? தோழனா? என்னும் நம் தலைப்பிலேயே எவ்வளவு அர்த்தங்கள், பொருட்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலான பெண்களிடம் உங்கள் கணவரா? தோழரா? எனக்கேட்டால், தோழரையே சொல்வார்கள். ஏன் மகாபாரத நாயகி திரௌபதியை கேட்டிருந்தால்கூட தனது தோழர் கிருஷ்ணனைத்தான் கூறியிருப்பார். " ஐந்து ஆண்களுக்கு மனைவியான பாஞ்சாலி தனது கணவர்கள் எவரின் பேச்சையும் கேட்டதில்லை, தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்கவில்லை. நடந்தவர்" என பலரும் சொல்வதே அந்த பதிலுக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த பதிலுக்கான உண்மையான காரணம் என்ன?

    குந்தியின் சொல்லோ, அல்லது முன்ஜென்ம வரமோ ஏதோ ஒரு காரணத்தால் திரௌபதி ஐந்து கணவர்களை ஏற்க வேண்டிய சூழல். ஏற்றாள். ஐந்து கணவர்கள் இருந்தும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது யார்? அவளது தோழன் கிருஷ்ணன்தானே. எப்போதெல்லாம் அவள் மனம் குழப்பத்தில் ஆழ்கிறதோ, எப்போதெல்லாம் அவள் இடரை அனுபவிக்கிறாளோ அப்போதெல்லாம் உறுதுணையாக இருந்து தோள் கொடுத்தவன் கண்ணன் ஒருவன்தானே. தனது மனைவியை சூதாட்டத்தில் வைத்து விளையாடியவர்களா? இல்லை சபையில் தனது துயில் உரியபோது துணி கொடுத்து அவள் மானத்தை காப்பாற்றியவனா? யாரைச் சொல்வாள்?

    தர்மத்தில் சிறந்தவன் யுதிர்ஷ்டன். பலத்தில் சிறந்தவன் பீமன். வில்வித்தையில் சிறந்தவன் அர்ஜுனன். திரௌபதியால் முதலில் மாலை சூட்டப்பட்ட, முதலில் நேசிக்கப்பட்ட கணவன். குதிரைகள் பற்றிய அறிவிலும், அழகிலும் சிறந்து விளங்கியவன் நகுலன். திரௌபதி துயில் உரியப்படுவது உட்பட முக்காலத்தையும் முன்னரே அறிந்தவன் சகாதேவன். இப்படி உலகில் சிறந்திருந்த இவர்களின் தர்மமோ, அறமோ, திறனோ, எதுவாலும் திரௌபதி துயில் உரியப்படுவதை தடுக்க முடியவில்லை. தடுக்கவில்லை. அத்தனை பலம் கொண்ட பீமன், வில்வித்தையில் சிறந்த அர்ஜூனன், ஞானத்திலும், வீரத்திலும், தர்மத்திலும் சிறந்திருந்த பீஷ்மர் உட்பட அரங்கில் சில தர்மர்கள் நினைத்திருந்தால், தடுத்திருந்தால் திரௌபதி அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கமாட்டாள். தன்னை அர்ப்பணித்த கணவன்மார்களே உதவாதபோது, கையில் சிறிது காயம் பட்டபோது தனது உடையை கிழித்து கண்ணனுக்கு கட்டியதை நினைவுகூர்ந்து, துணியை விட்டு மானம் காத்தான் கிருஷ்ணன். இதில் யார் சிறந்தவர்கள்? யார் திரௌபதி மீது உண்மையான பாசமும், அன்பும், அக்கறையும் கொண்டிருந்தவர்கள்? நட்பின் அடிப்படையில் வந்த ஒருவர் தனக்காக இவ்வளவு செய்யும்போது, காதல், திருமணப் பந்தம் மூலம் வந்த கணவர்கள் பயனற்றதாக இருந்தது ஏன்?


    திரௌபதிக்கு கண்ணன் உதவும் காட்சி

    இந்த பாண்டவர்களைப் போல பல கணவர்மார்கள் உள்ளனர். எப்போது தனது துணைக்கு தேவையோ அப்போது உதவமாட்டார்கள். சிறந்த உறவில் கணவன் தோழனாகவும் இருப்பான். அப்படி இருந்தால்தான் அந்த உறவு சிறக்கும். தோழன் கணவனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு கணவன் கண்டிப்பாக தோழனாக மாறமுடியும். பெண்களின் பதிலுக்கும் இதுதான் காரணம். தன் உணர்வுகளை மதிக்கும் ஒருவரையே பெண் தேர்ந்தெடுப்பாள். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காதல் மொழிகள் அன்பை வெளிப்படுத்தும் வழிகள்.
    • தொடுதல் மனித வாழ்வுக்கு மிக அவசியமான ஒன்று.

    காதல் ஒருவரை பைத்தியமாக்கும் எனக்கூறுவார்கள். அதற்கு காரணம் காதல் வந்தால் தனிமையில் சிரிப்பார்கள், கூட்டத்தின் மத்தியிலும் தனியாக உணர்வார்கள், ஏதோ ஒரு யோசனையிலேயே இருப்பார்களாம். அதாவது மற்றவர்கள் கூறுவதை செவிகொடுத்து கேட்க அவர்களுக்கு நேரம் இருக்காது. அதனால் அப்படி கூறுவார்களாம். இப்படிப்பட்ட இந்த காதலுக்கு 5 மொழிகள் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? எங்களுக்கு தெரிந்தது எல்லாம் தமிழும், ஆங்கிலமும்தான். அதென்ன 5 மொழிகள் என பலரும் ஆச்சர்யப்படலாம். ஆம் காதலில் 5 மொழிகள் உள்ளனவாம். அதாவது காதலில் உள்ளவர்கள் அன்பை வெளிப்படுத்தும் வழிகள். காதலில் இந்த மொழிகளைத்தான் பெரும்பாலும் பெண்கள் விரும்புவார்கள். 

    வார்த்தை

    நமது காதலரிடமோ அல்லது நமக்கு பிடித்தவர்களிடமோ வார்த்தைகள் மூலம் அன்பை வெளிப்படுத்துதல். நீ அழகாக இருக்கிறாய் எனக்கூறுதல், அவர்களை புகழ்தல், பாராட்டுதல், ஊக்குவித்தல், நான் இருக்கிறேன் என தைரியம் கொடுத்தல் போன்ற அனைத்தும் காதலின் முதல் மொழியாகும். இப்படி செய்யும்போது உண்மையில் உங்கள் அன்புக்குரியவர்கள் உள்ளிருந்து மகிழ்ச்சியடைவார்கள். ஒரு உறவு நீடிக்க தொடர்பு (communication) மிகவும் அவசியமானது. பல உறவுகளுக்கிடையே பேச்சு இல்லாததே அதன் பிரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. 

    நேரம்

    பலரும் தங்கள் துணையோடு நேரம் செலவிட விரும்புவர். பல திருமணங்கள் முடிவுக்கு வரக்காரணமே நேரம் ஒதுக்காமைதான். வேலை, வீடு என சாக்குப்போக்கு கூறாமல் உங்கள் துணைக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். அவர்கள் விரும்புவது அதைத்தான். நேரம் பொன் போன்றது எனக்கூறுவார்கள். நேரத்தை கொடுக்காமல், நீங்கள் பொன்னையே கொடுத்தாலும் அதை பலரும் ஏற்கமாட்டார்கள். 

    தொடுதல்

    தொடுதல் என்பது உடலுறவை குறிப்பது அல்ல. தொடுதல் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. அது காதலரைத்தான் தொடவேண்டும் என்றல்ல. உங்கள் நாய்க்குட்டியை கட்டியணைக்கலாம். நண்பர்களை ஆரத்தழுவலாம். தழுவுதல் மனித வாழ்க்கைக்கு ஒரு ஆறுதலைத் தரும். அதுபோல காதலில் ஒருவரின் கையை ஒருவர் பிடித்து நடப்பது போன்றவை பெண்கள் அதிகம் விரும்பும் ஒன்றாகும். பெண்களின் நகங்களை பிடித்து அவர்களுக்கு நெய்ல்பாலிஷ் போடலாம், மருதாணி போடலாம். அதுபோல பெண்களும் ஆண்களின் கையை பிடித்து அவர்களுக்கு ஆறுதல் கூறலாம். அன்பாக பேசலாம். இந்த தொடுதல் பலருக்கும் பல மனநன்மைகளை தருகிறது. 


    எந்த வழியாக, மொழியாக இருந்தாலும் காதலை வெளிப்படுத்துங்கள்

    துணைக்கு சேவை

    சொல்லைவிட செயலில்தான் ஒருவரின் காதல் வெளிப்படும். உங்களின் காதல் செயல்களாக இருந்தால், நீங்கள் அவர்களுக்காகச் செய்யும் சிறிய விஷயங்களைக்கூட அவர்கள் பெரிதாக எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள். அதாவது வீட்டில் அதிக வேலை இருந்தால், உங்கள் துணைக்கு ஆதரவாக பாத்திரங்களை சுத்தம் செய்யுதல், வீட்டை பெருக்குதல், குழந்தைகளை கவனித்தல், காதலர்கள் அலுவலக வேலைகளில் உதவுதல் என சின்ன சின்ன உதவிகளை செய்தாலே போதும்.

    பரிசு

    உங்கள் அன்பை பரிசுகள் மூலம் வெளிப்படுத்தலாம். அந்தப் பரிசின் அளவு முக்கியமல்ல, ஆனந்தம்தான் முக்கியம். பெண்கள் பரிசு கொடுத்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்ற எண்ணம் பொதுவாகவே ஆண்களிடம் உள்ளது. ஆனால் அது பரிசுக்கான ஆனந்தமோ, மகிழ்ச்சியோ கிடையாது. பரிசு வாங்க அவர்கள் செலவிடும் நேரமும், அவர்களின் அந்த முயற்சியும் ஈர்க்கிறது, மகிழ்விக்கிறது. நமக்காக யோசித்து செய்கிறார்கள் என ஒரு ஆனந்தம். நாம் நேசிக்கும் ஒருவர் கொடுக்கும் பரிசுகள் பொக்கிஷமானவை.  

    இவை மட்டும்தான் காதல்மொழியா?

    இவை மட்டும்தான் காதலை வெளிப்படுத்துவதற்கான வழிகள் என்று இல்லை. அன்பை வெளிப்படுத்தவும், பெறவும் பல்வேறு வழிகள் உள்ளன. இவை அன்பை கட்டமைக்கக்கூடிய சில வழிகளே. வெளிப்படுத்தப்படாமலும் பல காதல்கள் இங்கு வாழ்கின்றன. ஆனால் சொல்லாமல் இருந்தால், அவர்கள் மீதான உங்கள் அன்பு எப்படி அவர்களுக்கு தெரியும்? ஆகையால் உங்கள் காதலை எந்த வழியாக இருந்தாலும் அந்த காதலின்வழி வெளிப்படுத்துங்கள். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அழகோ, அதிகாரமோ, பண பலமோ ஒருவரின் தனித்துவத்தைக் காட்டாது.
    • நாம் நடந்துகொள்ளும் விதமும், நம்மை சுற்றி இருப்பவர்களின் நம் மீதான கருத்தும்தான் நம்மை தனித்துவமாக எடுத்துக்காட்டும்.

    ஒரு அறையில், ஒரு அலுவலகத்தில், ஒரு கல்லூரியில் இப்படி எங்கு இருந்தாலும் நம்மைச்சுற்றி பலர் இருப்பார்கள். எல்லோரும் ஒன்றுதான். ஆனால், "நான் அவர்களிடமிருந்து வேறுபட்டு தனியாக தெரிய வேண்டும்" என பலரும் நினைப்பார்கள். அதுவும் இந்த எண்ணம் பெண்களுக்கு அதிகம் உண்டு.  உங்களுக்கான பதிவுதான் இது. அழகோ, அதிகாரமோ, பண பலமோ ஒருவரை தனித்துவமாக காட்டாது. நாம் ஒருவரிடம் நடந்துகொள்ளும் விதமும், நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதும்தான் நம்மை தனித்துவமாக எடுத்துக்காட்டும். மற்றவர்களிடமிருந்து நீங்கள் வேறுபட்டு தெரியவேண்டுமென்றால் உங்களின் சில செயல்பாடுகளை மாற்றினாலே போதும். 

    பார்வை...

    நாம் யாரிடம் பேசினாலும் அவர்களின் கண்களைப் பார்த்து பேசவேண்டும். பொய் பேசாதவர்கள், நேர்மையானவர்கள் கண்களை பார்த்து பேசுவார்கள் என்ற பேச்சு நீண்டகாலமாக நம்மிடையே உள்ளது. அதனால் ஒருவரின் கண்களை பார்த்து நீங்கள் பேசும்போது உங்கள் வார்த்தைகள்மீது நம்பிக்கை வரும். மேலும் நாம் பேசும்போது நம் கண், நம் உதடுகளை தாண்டி உணர்ச்சிகளை பிரதிபலிக்கும். அதற்காக அதிகம் கண்களால் தொடர்புகொண்டால் சிலர் தவறாக நினைக்கலாம். சிலருக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும். எந்த விஷயங்களுக்கெல்லாம் கண்களை பார்த்து பேசவேண்டும் அதற்கு மட்டும் கண்களை பயன்படுத்துங்கள்.   

    தெளிவான பேச்சு

    நாம் சொல்ல நினைப்பதை நேரடியாக சொல்லவேண்டும். தேவையற்ற பேச்சுகளை குறையுங்கள். தெளிவாக பேசவேண்டும். தேவையானவற்றை மட்டுமே பேசவேண்டும் என கடகடவென ஓடவும் கூடாது. மெதுவாக, உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும். நமது பேச்சுத்திறனே ஒருவரை கவரும். 


     நம் வார்த்தைகளைவிட செயல்கள்தான் சத்தமாக பேசும்

    உறுதியாக மாறுங்கள்

    மரியாதை கொடுத்து மரியாதை வாங்கவேண்டும் எனக்கூறுவார்கள். ஆம், நாம் ஒருவரிடம் எவ்வாறு நடந்துகொள்கிறோமோ அதுபோலத்தான் அவர்கள் நம்மை பிரதிபலிப்பார்கள். நீங்கள் ஒருவரை நடத்தும்விதம், மதிக்கும்விதம்தான் உங்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. உயிர்களிடத்தில் கருணையுடன் நடந்துகொள்ளுங்கள். அதுபோல தேவையான இடத்தில் வேண்டாம் என்பதை சொல்ல பழகுங்கள். ஒரு தெளிவான நிராகரிப்பு என்பது பல இடங்களில் தேவையான ஒன்று. எங்கு வேண்டாமோ அங்கு வேண்டாம் என சொல்வது உங்களுக்கு அமைதி, நன்மையை கொடுப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களின் மரியாதையையும் பெறச் செய்யும். அதைவிடுத்து என்ன நினைப்பார்களோ என எண்ணி, விருப்பமே இல்லாமல் ஒரு செயலை செய்ய ஒத்துக்கொள்வது உங்களையும் சங்கடத்தில் ஆழ்த்தும். சுற்றியுள்ளவர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தும். 

    உடை

    நமது உடை பாணியும் பலரை கவரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு பெற நம்பிக்கையுடன் பேசுவதுபோலவே, தனித்துவமாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு உடை அணிவதும் பலரின் கவனத்தையும் ஈர்க்கும். நேர்த்தியாக உடை உடுத்துவது, சிறந்த தோரணையை வெளிப்படுத்துவது உங்களை இன்னும் தனித்துவமாக காட்டும்.

    "சொல்லைவிட செயலே முக்கியம்"

    வார்த்தையை காப்பாற்ற வேண்டும். அதாவது கொடுத்த வாக்குறுதியை காக்கவேண்டும். நம் வார்த்தைகளைவிட செயல்கள்தான் சத்தமாக பேசும். நாம் சொன்ன செயலை செய்வது, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவது என்பது மேற்கூறியவற்றை தாண்டி உங்கள்மீது அதிக நம்பிக்கையை பெறச்செய்யும். "ஓ... அவங்களா..., சொன்ன சொல்லை காப்பாத்துவாங்கப்பா" என ஒருவரை சொல்லச்செய்யும். சொன்னநேரத்தில் செய்வது, நேரத்திற்கு இருப்பது போன்ற எதுவாக இருந்தாலும் ஒரு நற்பெயரை பெற்றுக்கொடுக்கும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வையுங்கள்!
    • துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் பல பிரச்சனைகளை தீர்க்கலாம்.

    மழைக்காலம் வந்தாலே, பெண்களுக்கு சலவைப் பணிகள் ஒரு பெரும் சவாலாக மாறிவிடுகின்றன. வெயிலும், காற்றின் வேகமும் குறையும் போது, துணிகளை உலர்த்துவது மிகவும் கடினமாகிறது. ஈரப்பதம் வெளியேறாமல், துணிகள் சீக்கிரம் காயாமல் பூஞ்சை வாடை வீச ஆரம்பிப்பது பலரது வீட்டிலும் நடக்கும் பொதுவான பிரச்சனை. துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாகாமல், துணிகளை விரைவாகவும், சுகாதாரமாகவும் உலர்த்துவது எப்படி? அதிகபட்ச நீரை வெளியேற்றுவது முதல், சரியான காற்றோட்டத்தை உருவாக்குவது மற்றும் பூஞ்சை வாடையை அகற்றும் சமையலறை ரகசியம் வரை, மழைக்காலத்தில் சலவை செய்யும் உத்திகள் குறித்து இப்போது விரிவாகக் காணலாம்.

    துணிகளை விரைவாக உலர்த்த

    மழைக்காலத்தில், வெயில் மற்றும் காற்றின் ஈரப்பதம் இல்லாத காரணத்தால் துணிகளை உலர்த்துவது பெரும் சவாலாக உள்ளது. இதனால் துணிகள் சீக்கிரம் காயாமல் பூஞ்சை வாடை வீச ஆரம்பிக்கிறது. இதற்குத் தீர்வாக, முதலில் துணிகளில் உள்ள அதிகபட்ச நீரை வெளியேற்ற வேண்டும்; வாஷிங் மெஷினில் துவைப்பவர்கள் துணிகளை அதிக வேகத்தில் இரண்டு முறை 'சுழற்றுதல் (Spin Cycle)' செய்ய வேண்டும், கைகளால் துவைப்பவர்கள் துணிகளை ஒரு சுத்தமான, உலர்ந்த டவலில் வைத்து இறுக்கமாகச் சுருட்டி அழுத்தி நீரை உறிஞ்சச் செய்யலாம். மேலும், துணிகளை உலர்த்தப் போடும் முன் ஒவ்வொன்றையும் நன்கு உதறி, அதன் இழைகளைப் பிரித்து, துணியின் மேற்பரப்பை அதிகப்படுத்துவதன் மூலம் ஆவியாதல் சீக்கிரமாக நடைபெறும்; குறிப்பாக ஜீன்ஸ் போன்ற கனமான துணிகளை மடிப்பு இல்லாமல் பரப்பிப் போடுவது மிகவும் அவசியமாகும்.


    பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தை தவிர்க்க கடைசி அலசலின்போது சிறிதளவு வினிகர் சேர்த்துக் கொள்ளலாம்

    உட்புறத்தில் காற்றோட்டமே முக்கியம்

    வீட்டிற்குள் துணிகளை உலர்த்துவதற்குச் சரியான காற்றோட்டமே மிக முக்கியமாகும். துணிகளை உலர்த்த ஒரு மடிப்பு ஸ்டாண்டைப் பயன்படுத்தி, அதை சீலிங் ஃபேன் அல்லது டேபிள் ஃபேன் இயங்கும் அறையில் வைக்க வேண்டும். ஃபேன் காற்று நேரடியாகத் துணிகள் மீது படுமாறு வைத்தால், ஈரப்பதம் வேகமாக ஆவியாகும். முக்கியமாக, துணிகளை நெருக்காமல், ஒவ்வொரு துணிக்கும் இடையில் குறைந்தபட்சம் 3 அங்குலமாவது இடைவெளி விட வேண்டும். துணிகள் ஒன்றோடு ஒன்று தொட்டால், ஈரப்பதம் தங்கிக் கொண்டே இருக்கும், இதனால் துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வைத்தால், அவை காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை ஈர்த்து, உலர்த்தும் செயல்முறையைத் துரிதப்படுத்த உதவும்.

    பூஞ்சை வாடைக்குத் 'தடா'

    மழைக்காலத்தில் சலவை செய்யப்பட்ட துணிகளில் ஏற்படும் பூஞ்சை வாசனை மற்றும் துர்நாற்றத்தைத் தவிர்க்க ஒரு எளிய, செலவு குறைந்த சமையலறை ரகசியம் உள்ளது. துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையையும் கையாளலாம். வினிகர் பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் சக்தி வாய்ந்தது; மேலும், அதன் வாசனை துணி காய்ந்தவுடன் முற்றிலும் ஆவியாகிவிடும். துர்நாற்றம் நீங்கவில்லை எனில், மீண்டும் அலசும் தண்ணீரில் வினிகர் சேர்த்து ஒரு முறை அலசி, பின்னர் உலர வைக்கலாம். இந்த எளிய மற்றும் பயனுள்ள உட்புற நிர்வாக உத்தியின் மூலம், விலை உயர்ந்த இயந்திரங்களைப் பற்றிய கவலை இல்லாமல், எந்தவொரு குடும்பத் தலைவியும் மழைக்காலச் சலவைப் பணிகளை மிகச் சிறப்பாகவும், துர்நாற்றமின்றியும் நிர்வகிக்க முடியும். 

    ×