என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு பிரச்சினையை பூதாகரமாக பார்க்காதீர்கள். முடிந்தவரை அதனை சிறு துண்டுகளாக உடைத்து விடுங்கள்.
    • கோபம் உங்கள் சிந்தனையை, எண்ண ஓட்டத்தினை சுருங்க வைத்து விடும்.

    கொளுத்தும் வெயிலில் தண்ணி குடியுங்கள்... தண்ணி குடியுங்கள்... என விடாமல் அறிவுறுத்தப்படுகின்றது. வீட்டிலே இருந்தால் கூட இந்த வெயிலில் வாடி விடுவீர்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணி குடியுங்கள். இதை அனைவரும் செய்துதான் ஆக வேண்டும். செய்வோம். ஆனால் தினந்தோறும் 8 கிளாஸ் தண்ணி குடியுங்கள் என்று சொல்றாங்களே. அதை எப்படி செயல்படுத்த சொல்கின்றார்கள். தெரியுமா?

    * காலை 6 மணி முதல் 7 மணிக்குள் தூங்கி எழுந்து பல் விளக்கிய பிறகு 2 கிளாஸ் நீர் பருகுவது. * உடலில் நச்சுக்களை நீக்கும். * மூளைக்கு நீர் சத்து கிடைக்கும். * ஜீரண உறுப்புகள் சீராய் செயல்பட ஆரம்பிக்கும்.

    * காலை 8 மணி முதல் 9 மணி அளவில் சிற்றுண்டிக்குப் பிறகு ஒரு கிளாஸ் நீர் பருகுவதால் மூட்டுக்கள் இறுக்கமின்றி இருக்கும்.

    * மதிய உணவிற்கு 1 மணி நேரம் முன்னால் ஒரு கிளாஸ் நீர் பருகுவது அதிக கொழுப்பினை எரிக்கும். உடல் செயல் பாட்டுத்திறன் கூடும். ஜீரண சக்தி கூடும்.

    * மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் அதாவது மதிய உணவு அருந்தி ஒரு மணி நேரம் சென்று ஒரு கிளாஸ் நீர் பருகுவது சீக்கிரம் முதுமை எற்படுவதினைத் தவிர்க்கும். திசுக்களின் உறுதிக்கு உதவும்.

    * மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் ஒரு கிளாஸ் நீர், டீ பருகு வதற்கு முன்னால் அருந்தி னால் அசிடிடி பாதிப்பு குறையும்.

    * மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் ஒரு கிளாஸ் நீர் அருந்துவதால் (இரவு உணவிற்கு முன்னால்) அதிக உணவு உட்கொள்வதினைத் தவிர்க்கும்.

    * குடல் புற்றுநோய் பாதிப்பு அபாயம் 45 சதவீதம் குறைகின்றதாம்.

    * இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் ஒரு கிளாஸ் நீர் அருந்துவது. இரவு உணவிற்கு பிறகு ஒரு மணி நேரம் சென்று சத்துகள் உடலில் நன்கு உறிஞ்சப்படுகின்றன.

    * மலச்சிக்கல் இன்றி இருக்க உதவுகின்றது.

    * இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் ஒரு கிளாஸ் நீர் அருந்துவது (தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்னால்) உடலில் நீர்சத்து குறையாமல் இருக்க உதவும்.

    * பக்கவாத பாதிப்பு, இருதய பாதிப்பினை தவிர்க்க உதவலாம். இந்த ஆய்வு கட்டுரையினை படித்தேன். ஆரோக்கியம் என்பது சத்துணவு, நீர் இவற்றினை எடுத்துக் கொள்ளும் முறை என பல விரிவாக்கங்களைப் பெற்றுள்ளது. கடிகாரம் பார்த்து நிமிடம் தவறாமல் கடை பிடிக்க வேண்டும் என்ப தில்லை. ஆனால் முடிந்தவரை பின்பற்றலாம்.

    பொதுவில் நீர் குடிப்பதற்கு விதி முறை போல சில விடாத முயற்சி களையும் நம் ஆரோக்கி யத்திற்காக நாம் செய்ய வேண்டும்.

     

    * உங்கள் உணவு, தூக்கம், உடற்பயிற்சி மிக முக்கியம்.

    * நம் நிலைக்கு நாம் முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    * எது கடினம் என்று வாழ்வில் எதிர் வந்து நிற்கின்றதோ அதனை அடித்து விரட்டி விடுங்கள். இல்லை எனில் கவலை ஆரோக்கியத்தினை விழுங்கி விடும்.

    * எல்லா சூழ்நிலைகளையும் வெயிலோ, குளிரோ, கஷ்டமோ, நஷ்டமோ, நாம் அதனை ஈடு கொடுத்து வாழத்தான் வேண்டும். (கரப்பான்பூச்சி போல, கரப்பான் பூச்சி எந்த சூழலுக்கும் தன்னை சரி செய்து கொள்ளும்).

    * ஒரு பிரச்சினையை பூதாகரமாக பார்க்காதீர்கள். முடிந்தவரை அதனை சிறு துண்டுகளாக உடைத்து விடுங்கள்.

    * சம்பாதித்து சேமிக்க வேண்டும். இதுவும் தேவையான அளவிற்கு அவசியமே.

    * குடைந்து குடைந்து யோசித்துக் கொண்டே இருக்க வேண்டாமே. வாழ்க்கை முடிந்து விடும். * நாம் நம் மீது அன்பு செலுத்தினால், நாம் நம்மீது மரியாதை செலுத்தினால், பிறரும் நமக்கு அதனைச் செய்வர்.

    * அழிவுப் பூர்வமான சிந்தனை உடையவர்கள் பக்கத்தில் இருந்தால் உங்கள் சக்தியை இழந்து விடுவீர்கள். அவர்களிடம் இருந்து ஓடி விடுங்கள். உடல் நலம்! உடல் ஆரோக்கியம்தான் முதன்மை யான செல்வம் என்பதனை உணர வேண்டும். ஆகவே உடல் ஆரோக்கியத்தில் முழு அக்கறை செலுத்துங்கள்.

    எப்போதும் பிறர் தோளில் சாய்ந்து பயணிக்காதீர்கள். மற்றவர்களையும் உங்கள் மீது சுமையாக ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஏனெனில் ஒவ்வொருவரின் இலக்கும் தனித்தனியானது. இதில் கூட்டு வேண்டாம்.

    மற்ற மனிதர்களிடம் எதனையும் எதிர்பார்க்காமல் இருந்தாலே ஆரவாரமற்ற மகிழ்ச்சி இருக்கும். சக்தி நம் பொக்கிஷம். இதனை நம் வளர்ச்சிக்கு திறமையை வளர்ப்பதற்கும் உருவாக்குவதற்கும் பயன்படுத்த வேண்டும். சக்தியினை பயத்தால் விரயம் செய்யக்கூடாது. இளமைக் காலம் நிரந்தரமற்றது. அதனை திறமையை சேமிக்கும் காலமாக மாற்றிவிட வேண்டும். எதற்கு பிறரை மாற்ற முயல வேண்டும்.

    அனைவர் கூறும் அறிவுரையினையும் ஏற்றால் குழம்பிதான் நிற்போம். சுய ஒழுக்கம் இல்லாமல் எந்த முன்னேற்றமும் பெற முடியாது.

    ஒருவர் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதற்கு சுய ஒழுக்கம் அவசியம். இறப்பும் பிறப்பும் யாருக்கு இல்லை. இடைபட்ட காலத்தில் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டாமா?

    அதற்கு உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் உங்களுக்குள்ளேயே இருக்கட்டுமே. பிறரிடம் புள்ளி மாறாமல் சொல்ல வேண்டுமா என்ன?

    தனித்து இருக்கும் பொழுது அமைதி உங்களை நோக்கி கவர்ந்து வரும். தீய சக்திகள் சுத்தி இருக்காது. சுயமரியாதை உங்கள் வாழ்வில் முதல் இடத் தில் இருக்க வேண்டும். கோபம், வேகம் இவற்றினை ஒருவர் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

     

    பிறரை கட்டுப்படுத்துவது கட்டுப்பாடு ஆகாது.

    கோபம் உங்கள் சிந்தனையை, எண்ண ஓட்டத்தினை சுருங்க வைத்து விடும். மற்றவர் உங்களை எரிச்சல் அடையச் செய்யும் போது, கட்டுப்பாடுதான் மிகப் பெரிய சக்தி. அதனை இழக்க மாட்டேன் என உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.

    மன உறுதி கொண்டவர்கள் கடுமையான சூழ்நிலைகளில் கூட, இது நிரந்தரமற்றது. தற்காலிகமானது. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. தெளிவு பெற்று செயலாற்றுவோம் என்றே நினைப்பார்கள்.

    நேர்கொண்ட பார்வை அமைதியான மூச்சு, தெளிவான படபடப்பற்ற குரல், பேச்சு இவற்றுடனேயே காணப்படுவர்.

    ஒரு நல்ல மனிதராக பண்புள்ளவராக ஒருவர் உருவாக வேண்டும். என்றால் சில பழக்கங்கள் நம் ரத்தத்தில் இருக்க வேண்டும்.

    மேலே கூறப்பட்டுள்ள சுய ஒழுக்கங்கள் அவசியம். தீய பழக்கங்களை ஒவ்வொன்றாக சீக்கிரம் விட்டு விட வேண்டும். வருங்காலம் பற்றிய கவலை கூடாது. தோல்விகளைக் கண்டு சுருங்க கூடாது.

    தவறு செய்துவிட்டால் தவறு என்று ஒப்புக் கொள்ளலாமே.

    எளிமையைவிட பணக்கார வாழ்வே கிடையாது. கடந்த காலம்- அது போய்விட்ட காலம். சிறு வியாபாரம் செய்து பார்க்கலாமே. ஆக்கப்பூர்வ எண்ணம், ஆக்கப்பூர்வ மக்கள் இது மட்டுமே தேவை.

     

    கமலி ஸ்ரீபால்

    உங்களிடம் இருக்கும். எதனையும் போற்றி கொண்டாடுங்கள். உதாரணம்- புத்தகங்கள், உங்கள் தாத்தா கால நாற்காலி,

    திறமைகள்தான் உண்மையான சொத்து. சாக்கு போக்கு சொல்வது கவுரவக் குறைவு தான். தைரியம், துணிச்சல் இல்லாவிட்டால் வீட்டிலேயே முடங்கிவிடலாம்.

    காலை 6 மணிக்குள் எழுந்திருப்பின் சாதனையாளன். உங்கள்வாழ்க்கையை நீங்கள் விரும்ப வேண்டும். அதற்கு காரணமும் வேண்டும். உங்கள் சக்தியினை அரட்டை அடிப்பதிலும், தேவையற்று ஊர் சுற்றுவதிலும் செல வழிக்காதீர்கள். வேண்டாத விஷயங் களையோ, வேண்டாத நபர்களையோ ஒதுக்கத் தெரிய வேண்டும். பொறாமை கூடவே கூடாது. ஒரு வரை அது அரித்து விடும். அன்றாடம் தனியாக சிறிதுநேரம் இருக்க வேண்டும்.

    இந்த நொடியில் வாழுங்கள்.

    நீங்கள் நீங்களாக மட்டுமே எப்பொழுதும் இருங்கள்.

    * உடல் ஆரோக்கியம் வேண்டு மென்றால் 80 சதவீதம் உணவில் கட்டுப்பாடு தேவை. உடற்பயிற்சி 20 சதவீதம் தேவை.

    * நிலைத்த மகிழ்ச்சி வேண்டு மென்றால் 80 சதவீதம் கொள்கையோடு, நோக்கத்தோடு வேலை செய்ய வேண்டும்.

    20 சதவீதம் தமாஷ், கேளிக்கை என்று இருக்க வேண்டும்.

    * பணம், செல்வம் வேண்டும் என்றால் நல்ல பழக்க வழக்கங்கள், குணங்கள் 80 சதவீதம் தேவை. 20 சதவீதம் கணக்காக இருக்க வேண்டும்.

    * ஒரு இலக்கை அடைய வேண்டும் என்றால் 80 சதவீதம் பலர் அனுபவங்களை படித்து, கேட்டு முயலுங்கள்.

    20 சதவீதம் மட்டுமே பேசுங்கள். * படித்து அறிய வேண்டுமா 80 சதவீதம் புரிந்து கொள்ளுங்கள்.

    20 சதவீதம் நன்றாக படிப்பு கூடும்.

    * 80 சதவீதம் கடும் முயற்சி கண்டிப்பாய் முன்னேற்றம் தரும். இதில் 20 சதவீதம் பல புது கருத்துக்கள், யுக்திகள் சேரும்.

    * முக்கியமான செயல்களுக்கு 80 சதவீதம் முதலிடம் கொடுங்கள். 20 சதவீதம் வேலைகள் தானாகவே வரிசையில் அமைந்து விடும்.

    முன்பெல்லாம் இப்படித்தான் செய்தார்களாம்

    * தலை வலித்தால் வாழைப்பழம் சாப்பிடுவார்களாம். இதிலுள்ள மக்னீஷியம் ரத்த குழாய்களை தளர்த்தும்.

    * மூட்டுவலிக்கு அன்னாசி பழம் சாப்பிடுவார்களாம். இது வீக்கத்தினை குறைக்க வல்லது.

    * மலச்சிக்கலுக்கு ஆப்பிள் - இது நார்சத்து மிகுந்தது.

    * தொண்டை வலிக்கு தேன் - கிருமி நாசினி.

     

    * உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்குமாம்.

    * வயிற்றுப்போக்குக்கு வாழைப்பழம்- பொட்டாசியம் சத்து நிறைந்தது.

    * நீர் சத்து குறைவுக்கு தர்பூசணி- நீர்சத்து மிகுந்தது.

    * சதை பிடிப்புக்கு இளநீர்- தாது உப்புகள் நிறைந்தது.

    * அஜீரணம் கோளாறுக்கு இஞ்சி - வயிற்று பிரட்டல், அஜீரணம் நீக்கும்.

    * சோர்வுக்கு ஓட்ஸ் - சக்தி அளிக்க வல்லது.

    * ரத்த சோகைக்கு பசலை கீரை - இரும்பு சத்து அளிப்பது.

    இவை 'சிகிச்சை அல்ல' உபசத்தாக பயன்படுத்தலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நகைச்சுவை காட்சிகளாக கதை முழுவதையும் சொல்ல சொல்ல கேட்க நன்றாக இருந்தது.
    • டைரக்டர் சொன்னது போலவே கதை வித்தியாசமாக இருந்தது.

    நடிகர் பிரித்விராஜை 'வாடா என் மூத்த மவனே...' என்று நான் அழைத்தால் எப்படி இருக்கும்! அப்படியும் நடந்தது!

    ஐதராபாத்தில் படப்பிடிப்பு தளத்தில் படமாக்கப்பட்ட முதல் காட்சி அது. ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பிரித்விராஜை அப்படித்தான் அழைத்தபடி வருவேன். அந்த காட்சி சூப்பராக அமைந்தது. ஷாட் முடிந்ததும் என் அருகில் பிரித்விராஜ் வந்தார். மெதுவாக 'மாம்... ஷாட் எடுத்து கொண்டிருந்த போது பலத்த வெடிச் சத்தம் கேட்டதே கவனிச்சீங்களா...? என்றார். வெடிச்சத்தமா.....? என்றதும் "ஆமாம்..... என் குட்டி இதயம்தான் அப்படி வெடித்து..." உங்களுக்கு சத்தம் கேட்கவில்லையா? என்று கேட்டு விட்டு அவரும் சிரித்து விட்டார்.

    நான் எனது மகனாக அவரை பாவித்ததை நினைத்து அவருக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அவருக்கு மட்டுமா? எனக்கும்தான்!

    அது ஒரு வித்தியாசமான மலையாள படம். 'புரோ டாடி' இதுதான் படத்தின் பெயர். படம் முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகள் நிறைந்தது.

    கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு எல்லோருமே சகஜ நிலைக்கு திரும்பி கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அந்த படம் பற்றி பேச வந்தார்கள். எனக்கு மோகன்லால் ஜோடி என்றதும் மகிழ்ச்சி அடைந்தேன். நானும் மோகன்லாலும் இணைந்து நடித்த மலையாள படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களாக அமைந்தது.

    அந்த வரிசையில் மீண்டும் மோகன்லால் ஜோடி என்றதும் மகிழ்ச்சி. நகைச்சுவை காட்சிகளாக கதை முழுவதையும் சொல்ல சொல்ல கேட்க நன்றாக இருந்தது. அப்போது எனக்கு மகனாக நடிக்கப் போவது யார்? என்றேன். பிரித்விராஜ் என்றார்கள்.

    அதை கேட்டதுமே எனக்கு சிரிப்பு வந்து விட்டது. பிரித்விராஜ் என்ன சின்ன பையனா? அவர் ஒரு சிறந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என்று மலையாள திரை உலகில் பன்முக திறமைகளோடு முன்னணி நட்சததிரமாக இருப்பவர்.

    அவர் எனக்கு மகனாக நடித்தால் எப்படி இருக்கும்? அவரது அம்மா வயதுக்கு நான் பொருத்தமாக இருப்பேனா? என்று ஏகப்பட்ட குழப்பங்களோடு கதை சொன்ன போதே டைரக்டரிடம் 'என்ன சார் இது....? மோகன்லால் ஜோடியாக நான். அது ஓ.கே! என் மகனாக பிரித்விராஜ் என்றால்... அது எப்படி...? என்று இழுத்தேன்.

    அப்போது டைரக்டர் 'மேடம் நீங்க. கதாபாத்திரங்களை வைத்து மட்டும் எடை போட வேண்டாம். கதை அமைப்பு நன்றாக இருக்கும். திரையில் வரும் போது ரொம்ப காமெடியாக இருக்கும். நிச்சயமாக ரசிகர்கள் ரசிப்பார்கள் என்றார். எனது எண்ணம் வேறு விதமாக இருந்தது. மலையாளத்தில் நானும் மோகன்லாலும் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே 'ஹிட்' படங்களாக அமைந்தவை. அதே போல் இந்த படமும் மோகன்லால் ஜோடியாக நடிப்பதால் நன்றாக வரும் என்ற நம்பிக்கையோடு ஒத்துக் கொண்டேன்.

    படத்தின் முதல் நாள் முதல் காட்சி படமாக்கப்பட்ட போதுதான் எங்களுக்குள் சிரிப்பை அடக்க முடியவில்லை.

    முதல் முறையாக மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பு முற்றிலும் ஐதாபாத்தில் நடந்ததும் இந்த படத்துக்குத்தான்.

    டைரக்டர் சொன்னது போலவே கதை வித்தியாசமாக இருந்தது. ஒரே நேரத்தில் மாமியராக இருக்கும் நானும் கர்ப்பிணியாக இருப்பேன். எனது மருமகளும் கர்ப்பமாக இருப்பார். சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் காட்சி அமைப்புகளை பார்த்து ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

    44 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பட வேலைகள் முடிவடைந்ததும் தியேட்டர்களில் படத்தை வெளியிட எல்லோருக்கும் தயக்கமாக இருந்தது. ஏனென்றால் கொரோனா விலகினாலும் மக்களிடம் பீதி விலகவில்லை. எனவே தியேட்டருக்கு ஜனங்கள் வருவார்களா? என்ற சந்தேகம் இருந்தது. எனவே வேண்டாம் விஷப்பரீட்சை என்று படக்கு ழுவினர் படத்தை ஒ.டி.டி. தளத்தில் வெளியிட முடிவு செய்து வெளியிட்டார்கள்.

    படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தின் நகைச்சுவைகளும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது வித்தியாசமான படம்.

    வாழ்க்கை எவ்வளவோ அனுபவங்களை கற்றுத்தருகிறது. கடந்த காலங்களை கொஞ்சம் பின்னோக்கி திரும்பி பார்த்தால் பல விசயங்கள் ஆச்சரியத்தை தரும்.

    ஐந்து வயதில் நடிக்க வந்த போது எதுவும் தெரியாது. சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போலத் தான் இருந்தேன். அப்போதெல்லாம் நடிப்புன்னா என்ன? என்பது கூட தெரியாது. டைரக்டர் சொன்னதை செய்வேன் அவ்வளவு தான். அப்போது கேட்டதெல்லாம் கிடைக்கும். முக்கியமாக எல்லோரும் சாக்லெட் வாங்கி தருவார்கள். அப்போது அந்த சாக்லெட் மட்டும் தான் எனக்கு சந்தோசத்தை தந்தது. வேறு எதைப்பற்றியும் அந்த வயதில் நினைக்க தோன்றவில்லை.

    குழந்தை பருவத்தை கடந்து கதாநாயகியாக ஆன பிறகுதான் பல விசயங்கள் தெரிய வந்தது. ஒரு சிறந்த கதாநாயகி என்று நான் நினைப்பதை விட பலர் என்னை லக்கி ஹீரோயின் என்று நினைத்ததும் பாராட்டியதும் தான் எனக்கு பெருமையாக இருந்தது.

    ஒவ்வொரு படத்திலும் நடித்த போது எவ்வளவோ கஷ்டங்கள், சிரமங்களை தாங்கி இருக்கிறேன். ஆனால் அந்த படம் வெளியாகி வெற்றி பெறும் போது பட்ட கஷ்டங்களும், சிரமங்களும் மறைந்து போகும்.

    சினிமா வெறும் நடிப்பு தான். அது நிஜம் கிடையாது. டீன் ஏஜ் பருவத்தில் கதா நாயகியாக நடித்த போது பல படங்களில் கர்ப்பிணி, பிரசவிக்கும் தாய் என்ற வேடங்களில் நடித்து இருக்கிறேன். அந்த அனுபவம் கூச்சமாகவும், ஒருவித அனுபவத்தையும் கொடுத்தது. அதை கூட குக்கிராமங்களில் படப்பிடிப்பு நடந்த போது கிராமத்து ஜனங்கள் நிஜமாகவே நான் கர்ப்பிணி என்று நினைத்து வருத்தப் பட்டதை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது. அதே நேரம் மற்றவர்களை மனிதாபி மானத்தோடு பார்க்கும் கள்ளமில்லா அவர்களி்ன உள்ளம் மெய்சிலிர்க்க வைத்தது.

    ஆனால் நிஜ வாழ்க்கையில் நானும் கர்ப்பிணியாகி, குழந்தையை பெற்றெடுத்தது மறக்க முடியாத அனுபவம்.

    தாய்மை உணர்வு என்பது அனுபவித்து ரசிப்பது. அது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இப்படிப்பட்ட எத்தனையோ அனுபவங்களின் தொகுப்புதானே வாழ்க்கை...? அதிர வைத்த மற்றொரு அனுபவத்தை அடுத்த வாரம் சொல்கிறேன்.

    (தொடரும்...)

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தன்னைப் படைத்த கடவுளையே அறிந்து கொள்வதற்கு இணையானது ஆகும்.
    • அடுத்தவர் மதிப்பீடுகளாலேயே நம்முடைய வாழ்க்கையின் மதிப்பீடு அளவிடப்பெறுகிறது என்பது தவறான கணிப்பு ஆகும்.

    வாழ்க்கையைப் பற்றிச் சிந்திப்பதே வாழ்க்கை! என்று வாழ்ந்து கொண்டிருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்.

    வாழ்க்கையின் ஒவ்வொரு செயல் அசைவிலும் நாம் கவனத்தோடு ஈடுபட வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் நமது வாழ்க்கையே மதிப்புமிக்கது ஆகும். விழிப்பது தொடங்கி, உறங்கப்போவது வரை.. ஏன் உறங்கிய பின்னரும்கூட, ஒவ்வொரு மனிதரும், தன்னைப்பற்றிய, தனது அங்கங்களைப் பற்றிய, தனது செயல் அசைவுகளைப் பற்றிய மிகுந்த கவனத்தோடு வாழ வேண்டியது அவசியமானது ஆகும். நமது அங்கங்களின் மதிப்புகளை, நமது வாழ்வியல் செயல்பாடுகளின் மதிப்புகளை ஆழமான நம்பிக்கையோடு தீர்மானித்துக்கொண்டு, அவற்றிற்கேற்பச் சிந்தனைத் திறத்தோடு வாழத் தொடங்கினால், உண்மையிலேயே நாம் வாழ்வது மதிப்புமிக்க வாழ்க்கையாக ஆகிப்போகும்.

    நம்முடைய வாழ்வின் மதிப்பு என்பது என்ன?; நம்முடைய மதிப்பை எப்படி மதிப்பீடு செய்வது?; எந்தத் தராசு கொண்டு நம்மை நிறுத்துப் பார்ப்பது? நம்மை மதிப்பீடு செய்யச் சரியான நபர் யார்?.. இப்படிப் பல கேள்விகளோடு மனிதர் ஒவ்வொருவரும் தம்மைப்பற்றிய மதிப்பீட்டுத் தேடலில் ஈடுபடத் தொடங்கலாம்; உண்மையில் ஒவ்வொரு மனிதரும் தன்னை அறிந்து கொள்வது என்பதுகூடத், தன்னைப் படைத்த கடவுளையே அறிந்து கொள்வதற்கு இணையானது ஆகும். இதையே இன்னொரு வகையில், 'தன்னை அறிதலே கடவுளறியும் தத்துவம்' என்றும் கொள்ளலாம்.

    ஓர் இளைஞன் திடீரெனக் கடவுளைக் காண வேண்டும் என்ற ஆவலோடு தவம் இயற்றத் தொடங்கினான்; இளைஞனின் புதுமையான ஆவலைப் புரிந்துகொண்ட கடவுள், அவனை ரொம்பவும் சோதித்துக் காலம் தாழ்த்தாமல், திடீரென அவன் கண்முன்னே தோன்றிக் காட்சி தந்து, "நான் தான் கடவுள்! உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். 'வாழ்க்கையின் மதிப்பு என்ன?. இதைத் தெரிந்துகொள்ள மிக்க ஆவலாய் இருக்கிறேன்!' என்றான் இளைஞன். கடவுள் அந்த இளைஞனின் கையில் ஒரு சிறிய கல்லைக் கொடுத்து, 'இதைக் கொண்டுபோய் ஊருக்குள் இருக்கும் வணிகப் பெருமக்களிடம் இதன் மதிப்பு எவ்வளவு என்று அறிந்து வா!. சாதாரண சாலையோர வியாபாரி தொடங்கி, நகரின் மிகப்பெரிய வைர வியாபாரி வரை சென்று மதிப்பை விசாரி!; ஆனால் யாரிடமும் விற்றுவிடாதே!. ஒவ்வொருவரும் சொல்லும் மதிப்பீட்டைக் கேட்டுக்கொண்டு வந்து என்னிடம் சொல்!. பிறகு நான் வாழ்க்கையின் மதிப்பைப் பற்றிச் சொல்கிறேன்!" என்றார் கடவுள்.

    கல்லைப் பெற்றுக்கொண்டு கடைவீதிக்கு வந்த இளைஞன், ஓர் ஆரஞ்சுப்பழ வியாபாரியிடம் சென்று, கல்லைக் காண்பித்து," இதன் மதிப்பு எவ்வளவு?" என்று கேட்டான். அந்தக் கல்லை இருமுறையும் இளைஞனை ஒருமுறையும் ஏற இறங்கப் பார்த்த ஆரஞ்சு வியாபாரி," இந்தக் கல்லுக்கு, என்னிடமுள்ள ஆரஞ்சில் பனிரெண்டு பழங்கள் தரலாம்; அவை தாம் இந்தக்கல்லுக்கான மதிப்பு" என்றான் பழ வியாபாரி.

    அந்த இடத்தைவிட்டு நகர்ந்த இளைஞன், கொஞ்சம் தொலைவில் இருந்த ஒரு காய்கறிக் கடைக்குச் சென்றான். வியாபாரியிடம், "இந்தக் கல்லின் மதிப்பு எவ்வளவு? இதைப் பெற்றுக்கொண்டு இதற்கு மாற்றாக நீ என்ன தருவாய்?" என்று கேட்டான். கல்லை வாங்கிக் கல்லாப் பெட்டிக்குள் போட்டுக்கொண்ட காய்கறி வியாபாரி, இதற்கு மாற்றாக, ஒரு சாக்குப்பை நிறைய உருளைக் கிழங்கு தருகிறேன்!; வீட்டிற்குக் கொண்டுபோய்ச் சமைத்துச் சாப்பிடு!" என்றான்.

    காய்கறிக் கடைக்காரனிடம் கல்லைத் திரும்பப் பெற்றுக்கொண்ட இளைஞன் அதனை அருகில் இருந்த ஒரு பெரிய நகைக் கடைக்குக் கொண்டு சென்றான். கல்லை முழுமையாக ஆராய்ச்சி பண்ணிய நகைக் கடைக்காரர், இந்தக் கல்லுக்கு மதிப்பாக என்னால் ஒரு லட்சம் ரூபாய் காசாக வழங்க இயலும்" என்று பெருமிதமாகச் சொன்னார். "வேண்டாம்!. இது கடவுள் தந்தனுப்பிய கல்! வெறும் மதிப்பு மட்டுமே கேட்டு வரப்பணித்திருக்கிறார்!; கல்லைத் திருப்பித் தாருங்கள்! "என்றான் இளைஞன். உடனே நகைக்கடைக்காரர், "மேலும் ஐம்பதினாயிரம் சேர்த்து, ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் தருகிறேன்!" என்று பேரம் பேசத் தொடங்கினார்.

    கல்லை வாங்கிக் கொண்டு அந்த ஊரிலேயே மிகப்பெரிய வைர நகைக் கடைக்குச் சென்றான் இளைஞன்; அங்குதான் அசல் அருவிலை மணிகள் எல்லாம் கிடைக்கும். கல்லைப் பெற்றுக்கொண்டு பரிசோதித்த வைர வியாபாரி, மிகுந்த மன மகிழ்ச்சியோடும், முக மலர்ச்சியோடும் இளைஞனைப் பார்த்துப் பேசினார், " இந்த விலை மதிக்க முடியாத கல்லை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? என்பது பெரிய புதிராக இருக்கிறது; இந்தக் கல்லை மதிப்பிட்டு விலைபேசி விற்கவோ, வாங்கவோ இந்த மண்ணில் யாராலும் முடியாது; உலகம் முழுவதையும் விலையாகப் பேசித், தனது வாழ்நாளையும் யாரால் முழுமையாக ஒப்படைக்க இயலுமோ… அவரால்கூட இந்தக் கல்லை வாங்கிவிட முடியாது. ஏனெனில் இந்த உலகிலேலேயே விலைமதிக்க முடியாத அரிய பொருள் இந்தக் கல்!" என்றார்.

    கல்லை வாங்கிக் கொண்டு மீண்டும் கடவுளிடம் போய் நின்றான் இளைஞன்; நடந்ததையெல்லாம் விலாவாரியாக விளக்கிச் சொன்னான். மீண்டும் கேட்டான்,

    'வாழ்க்கையின் மதிப்பு என்ன?' கடவுள் சிரித்துக்கொண்டே விளக்கத் தொடங்கினார். " நீ கொண்டு சென்ற கல் ஒன்றுதான்; ஆனால் மதிப்பீடுகள் வெவ்வேறானவை. ஆரஞ்சுப்பழ வியாபாரி, காய்கறி வணிகர், நகைக் கடைக்காரர், வைர வியாபாரி இவர்கள் அனைவரிடம் இருந்தும் நீ பெற்ற பதில்கள் தாம் உனது வாழ்க்கையின் மதிப்பைத் தீர்மானிக்கின்றன.

    சுந்தர ஆவுடையப்பன்


    நீ உண்மையில் விலை மதிக்க முடியாத 'மதிப்பை' உடைய வாழ்க்கைக்குச் சொந்தக்காரனாக இருக்கலாம்; ஆனால் சிலர் பழக்கடைக்காரர், காய்க்கடைக்காரரைப் போல உன்னைக் குறைத்து மதிப்பிடக்கூடும்; சிலர். நகைக் கடைக் காரரைப் போலச் சற்று உயர்த்தியும் மதிப்பீடு செய்யலாம். ஆனால் நமது வாழ்க்கையின் மதிப்பு, உலகில் எவர் மதிப்பீட்டையும் விஞ்சி நிற்கிற மதிப்பீடாகச், சிகரம் தாண்டிய உயரம் உடையதாகத் திகழ வேண்டும்.

    உலகில் வாழ்க்கையின் மதிப்பு என்பது அவரவர் சிந்தையின், வாழ் தரத்தின் உயரம் சார்ந்ததாகவே அமைவு பெறுகின்றது. 'வெள்ளத்தனைய மலர்நீட்டம் போல மனிதர்களின் உள்ளத்தனையது உயர்வு' என்று கூட வள்ளுவப்பெருந்தகை இதன் சீர்மை பாராட்டுகிறார். அடுத்தவர் மதிப்பீடுகளாலேயே நம்முடைய வாழ்க்கையின் மதிப்பீடு அளவிடப்பெறுகிறது என்பது தவறான கணிப்பு ஆகும். அடுத்தவர் போற்றும் வாழ்வாக நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குமுன், முதலில் நாம் போற்றும் வாழ்வாக அது அமைகிறதா?: நாம் விரும்பும் வாழ்க்கையாக அதனை மாற்றிக்கொள்ள முடிகிறதா? என்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

    நம்மைப் பற்றிய மதிப்பை நாம் உயர்த்திக்கொள்வதன் மூலமாகத் தான் நமது வாழ்க்கையை மதிப்புமிக்க வாழ்க்கையாக வடிவமைத்துக்கொள்ள முடியும். நம்முடைய வாழ்க்கை குறித்த மதிப்பீட்டை முதலில் நமக்கு நாமே குறைத்து மதிப்பிடாமல், உயர்த்தி மதிப்பிடக் கற்றுக்கொள்ள வேண்டும்; இது உயர் மனப்பான்மை அல்லது ஆணவப்போக்கு என்று கூட சிலர் எண்ணிப் பின் வாங்கலாம்.

    ஆனால் எந்த நேரமும் தன்னைப்பற்றிய சோக மதிப்பீட்டிலேயே வாழ்க்கையை நடத்தினால், அது எப்போதும் மதிப்பு மிக்கதாக உயரவே உயராது. சிலருக்கு எப்போதும் அடுத்தவர்கள் அவரையே விடாது கண்காணித்துக் கொண்டிருப்பதாக எண்ணம் தோன்றும்; அவர்களுக்காக வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டுமே என்கிற பரபரப்புப் பற்றிக் கொள்ளும். தனக்கு எவருமே மதிப்பு மிக்க அங்கீகாரம் வழங்குவதில்லையே என்கிற கழிவிரக்கம் பற்றிக்கொண்டு, எந்தச் செயலிலுமே விரும்பி ஈடுபட முடியாத அளவுக்கு மனத்தை வெற்றிடம் தொற்றிக்கொள்ளும்.

    இவற்றில் இருந்தெல்லாம் விடுபட்டு வெளி வருவதற்கு முதலில் தம்மைப் பற்றிய, தமது திறமைகளைப் பற்றிய மதிப்புகளில் நம்பிக்கை வைக்க வேண்டும். அடுத்தவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்கிற கவலையை அடிப்படையில் நம்மிடமிருந்து அகற்றி விட்டால் போதும்; சுதந்திர உணர்வு நம்மிடம் இருந்து பொங்கிப் புறப்படத் தொடங்கும். அடுத்தவர் நம்மைப் பற்றிப் பேசுவதை வைத்தே உழப்பிக்கொண்டிராமல், மனம் இலகுவாகி விட்டால், நமது செயலிலும், சிந்தையிலும் தன்னம்பிக்கை ஊற்றெடுத்துக் கிளம்பி, நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விடும்.

    நம்மைப்பற்றி அடுத்தவர் நினைப்பது அப்புறம் இருக்கட்டும்; முதலில் நம்மைப்பற்றி நாம் பெருமையாகக் கருதுவதற்குப் பயிற்சி பெறுவோம். நம்மை எப்போதும் நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருந்தால், நம்முடைய செயல்களை, நம்முடைய மதிப்புகளை யார் பாராட்டுவார்? யார் கொண்டாடுவார்?.

    இந்த உலகம் பொறாமையாளர்களின் கூடாரம். இந்த உலகில் நமக்கு இணையானவர்கள் மட்டுமல்ல; நம்மைவிடத் தகுதியில் குறைந்தவர்கள்கூட, நமது வளர்ச்சிகண்டு பொறாமைப்படுகிறார்கள்.

    அதுமட்டுமல்ல, சில இடங்களில் நம்மைவிடத் தகுதியில் பெரியவர்கள் கூட நம்மைக்கண்டு பொறாமைப் படுகிறார்கள். பெரும்பான்மையும் பொறாமைக் கண் கொண்டு மட்டுமே காணப் பழகி விட்டவர் களிடம் நம்மைப்பற்றி நல்ல மதிப்பீடுகளை எப்படி எதிர்பார்க்க முடியும். அவர்கள் சொல்வது எப்படி சரியான மதிப்பீடுகளாக ஏற்றுக் கொள்ளப்படும்?. எல்லா மதிப்பீடுகளும் அவர்களது அளவு கோல்களாலேயே அளக்கப்படுகின்றன.

    நமக்கு இணையான அளவு கோல்களை நாம்தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும்?.

    நாம் ஈடுபடும் சின்னச்சின்னச் செயல்களை எல்லாம் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்; நிகழுகின்ற சின்னச் சின்னத் தவறுகளுக்கெல்லாம் வருந்துவதோடு மட்டுமல்லால், நேர்ந்துவிட்ட தவறு மீண்டும் நிகழாமல் இருக்க உறுதி பூணுங்கள். நம்மிடமுள்ள திறமைகளை எல்லாம் தன்னம்பிக்கையோடு நமது மதிப்புகளாக வெளிக்கொணர அயராது பாடு படுங்கள்.

    மனிதப்பிறப்பு மாண்புடைய பிறப்பு. அதன் ஒவ்வொரு செயலும் மதிப்பு மிக்கதாகவே இருக்கும். அடுத்தவர் நம்மைப் பார்த்துக் குறைகள் கூறலாம்; திருத்தங்கள் செய்யச் சொல்லலாம்; கண்ணை மூடிக்கொண்டு வாய்க்கு வந்தபடிப் பாராட்டி மகிழலாம்; நாம் எதற்குமே லாயக்கில்லை என்று தரைமட்டத்திற்கு அடித்தும் வீழ்த்தலாம். வருத்தப்படாதீர்கள்!; எதற்கும் வருத்தப்படாதீர்கள்!; வீணான பாராட்டிற்கும் மயங்கிப் போகாதீர்கள்!. நம்முடைய உயரம் என்னவென்பது அடுத்தவர் களைவிட நமக்குத்தான் தெளிவாகத் தெரியும்; தன்னம்பிக்கையோடு பயணப்படுங்கள்.

    உலகம் உற்சாக உலகம்தான். ஆனால் அந்த உற்சாகம் அடுத்தவர் மூலமாக நூறு சதவீதம் வந்து விடும் என்று மட்டும் எண்ணி விடக்கூடாது. நம்முடைய மதிப்பை நன்றாகவே கணித்து வைக்கப் பழகிவிட்டால் அடுத்தவர் கணிப்புகளுக்குக் கலங்கவோ, களிப்பெய்தவோ அவசியம் இருக்காது. மதிப்புமிக்கது வாழ்க்கை; அதை மேலும் மேலும் மதிப்புமிக்கதாக ஆக்க, மதிப்புமிக்க செயல்களைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும்.

    தொடர்புக்கு 9443190098

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயற்கைக் காட்சிகளையும் கீழே உள்ள கடற்கரையையும் பார்த்து மகிழலாம்.
    • லைட் ஹவுஸ் கண்டிப்பாக பார்த்து மகிழ வேண்டிய இடமாகும்.

    ஆந்திரபிரதேசத்தில் ஒரு அழகிய காஷ்மீர் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் கடற்கரைகள், நீர்வீழ்ச்சி, அருங்காட்சியகங்கள், அருமையான ஆலயங்கள் உள்ள இடமாகும். குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த மகிழ்ச்சி தரும். இங்கு பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. அவற்றில் சில இதோ:

    கைலாச கிரி

    நூறு ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்கா 360 அடி உயரத்தில் ஒரு குன்றில் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது.


    ச.நாகராஜன்

    இங்கிருந்து இயற்கைக் காட்சிகளையும் கீழே உள்ள கடற்கரையையும் பார்த்து மகிழலாம். இங்குள்ள முக்கியமான ஈர்ப்பு வெண்மை வண்ணத்தில் உள்ள சிவ பார்வதியின் அழகிய சிலைகளாகும். 40 அடி உயரம் உள்ளவை இந்தச் சிலைகள்.

    இங்கு ரோப் கார் வசதி உள்ளது. ஆகவே அதிக உயரத்தில் இருந்து கண்கொள்ளாக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

    ஆர்.கே.பீச்

    ராமகிருஷ்ணா கடற்கரை என்பதன் சுருக்கமே ஆர்.கே.பீச். இதன் அருகே தான் டால்பின் நோஸ் உள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் இது உள்ளது. மக்கள் விரும்பி வரும் கடற்கரை இது.

    சப்மரீன் மியூசியம்

    இந்த அருங்காட்சியகம் நிஜமாகவே ஒரு சப்மரீனுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கிறது. ஐ.என்.எஸ். குருசுரா என்ற இந்த சப்மரீன் இந்தியாவின் ஐந்தாவது சப்மரீன் ஆகும்.

    இந்த மியூசியம் ஆர்.கே. கடற்கரை அருகில் வார் மெமோரியல் அருகே உள்ளது. நமது வலிமை, தேசபக்தி, வீரர்கள் ஆகியவற்றைச் சித்தரிக்கும் செய்திகள், கட்டுரைகள், படங்கள் இங்கு உள்ளன.

    டால்பின் நோஸ்

    விசாகப்பட்டினத்தின் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ள டால்பின் நோஸ் பகுதியில் இருந்து வங்கக் கடலில் அழகைப் பார்த்து மகிழலாம்.1175 அடி உயரத்தில் இருந்து சூர்ய அஸ்தமனத்தையும் பார்த்து மகிழலாம்.

    இங்குள்ள லைட் ஹவுஸ் கண்டிப்பாக பார்த்து மகிழ வேண்டிய இடமாகும். இது யாரடா மற்றும் கங்குவரம் துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. டால்பினின் மூக்கை நினைவுபடுத்துவது போல் உள்ளதால் இதற்கு டால்பின் நோஸ் என்ற பெயர் ஏற்பட்டது.

    ரிஷிகொண்டா கடற்கரை

    வங்கக் கடலில் அமைந்துள்ள அழகிய கடற்கரை இது. 15 கிலோ மீட்டர் தூரத்தில் இது உள்ளது. பெயருக்கேற்றபடி இது கிழக்குக் கடற்கரையின் மணிமகுடமே தான்!

    கடலில் பல்வேறு நீர் விளையாட்டுக்களை விளையாட விரும்புவோர் இங்கு அவற்றை விளையாடி மகிழலாம்.

    போர்ரா குகைகள்

    விசாகப்பட்டினத்தில் இருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது போர்ரா குகைகள்.

    சுமார் 2600 அடி உயரத்தில் இருந்து 4300 அடி உயரம் வரை உள்ளன. அனந்தகிரி மலைத்தொடரில் 2310 அடி உயரத்தில் அமைந்துள்ளது போர்ரா குகைகள்.

    இதைப் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. பசுக்களை மேய்க்கும் சிறுவன் பசு ஒன்றை மேய்த்துக் கொண்டிருந்த போது அது அங்கிருந்த துளை ஒன்றின் வழியே கீழே விழுந்து விட்டது. அதைத் தேடிச் சென்றவர்கள் இந்த குகையைக் கண்டு அதிசயித்தனர். அங்கு ஒரு சிவலிங்கமும் காணப்பட்டது. சிவபிரானே பசுவைக் காப்பாற்றியதாக ஐதீகம் நிலவுகிறது. இங்கு பின்னர் ஒரு ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.

    இந்தியாவில் உள்ள பெரிய குகைகளுள் இதுவும் ஒன்று.

    யாரடா கடற்கரையில் சூர்ய அஸ்தமனக் காட்சி

    யாரடா கடற்கரை விசாகப்பட்டினத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. கங்காவரம் கடற்கரை மற்றும் துறைமுக, டால்பின் மூக்கு, ஆகியவை இதன் அருகிலேயே உள்ளன.

    இந்தக் கடற்கரையில் சூரியன் மறையும் காட்சி அழகிய காட்சி என்பதால் இங்கு ஏராளமானோர் திரள்வது வழக்கம்.


    இங்கு படிந்துள்ள வண்டல் மண் பற்றிய ஆய்வில் இந்த மண்ணானது அருகில் உள்ள புறா மலை அமைந்திருப்பதன் விளைவால் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வண்டல்கள் சேர்வதும் பின்னர் அரிமானத்தால் அவை நீங்குவதுமாக இருக்கின்றன!

    விசாகப்பட்டினம் மிருகக்காட்சி சாலை

    விசாகப்பட்டினம் ரெயில் நிலையத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இது.


    இங்கு அழகிய மான்கள், யானைகள், இமயமலைக் கருங்கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளையும், பட்டாம்பூச்சிகளையும் ஏராளமான பறவைகளையும் பார்த்து மகிழலாம். சிறுவர்கள் மகிழ்ச்சி அடைவர். மூன்று பக்கம் கிழக்குத்தொடர்ச்சி மலைகள் இருக்க நான்காவது பக்கம் வங்கக் கடல் திகழ 625 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது இது.

    சிம்மாச்சலம் கோவில்

    விசாகப்பட்டினத்திற்கு வடக்கே பத்து மைல் தூரத்தில் உள்ள இந்தக் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது சிம்மாச்சலம் மலையில் ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. வராக நரசிம்மர் எழுந்தருளி அருளும் இந்தத் தலம் 32 நரசிம்மத் தலங்களில் ஒன்றாகும்.


    5 வாயில்களுடன் அமைந்துள்ள இது ஒரு கோட்டையைப் போல காட்சியளிக்கிறது. இதைப் பற்றிய புராண வரலாறுகளும், சரித்திர வரலாறுகளும் ஏராளம் உள்ளன.

    கடிகி நீர்வீழ்ச்சி

    கடிகி நீர்வீழ்ச்சி இயற்கைச் சூழலில் அமைந்த ஒரு நீர்வீழ்ச்சி. கோஸ்தானி ஆற்றில் இருந்து வரும் நீர் 50 அடி உயரத்தில் இருந்து கடிகி என்ற கிராமத்தில் நீர்வீழ்ச்சியாக விழுகிறது. போர்ரா குகை அருகே உள்ளது இது.

    இங்கு மலைமீது டிரெக்கிங் செய்ய வசதிகள் உண்டு. இங்கு முகாமிட்டும் தங்கலாம். நுழைவுக் கட்டணம் எதுவும் இங்கு கிடையாது. மேலே செல்ல ஜீப் வசதிகள் வாடகைக்குக் கிடைக்கும். போர்ரா குகைக்கும் இதற்கும் உள்ள தூரம் 5 கிலோமீட்டர் தான்!

    அரக்கு பள்ளத்தாக்கு

    கடிகி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் பார்க்க வேண்டிய இடம் அரக்குப் பள்ளத்தாக்கு என்ற மலை வாசஸ்தலம் ஆகும். காடுகள் அடர்ந்த இயற்கைச் சூழல் நிறைந்த பகுதி இது. இது காப்பித் தோட்டங்களுக்குப் பெயர் பெற்றது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இது உள்ளது. இந்தப் பகுதியில் தான் 30-க்கும் மேற்பட்ட போர்ரா குகைகள் உள்ளன.

    பீம்லி பீச்

    பீமுனிப்பட்டினம் கடற்கரை என்பதே பீம்லி பீச்சாக மருவி அழைக்கப்படுகிறது.

    பஞ்ச பாண்டவரில் ஒருவரான பீமனின் பெயரைக் கொண்டது இது. கொஸ்தனி ஆறு வங்காள விரிகுடாவுடன் கலக்கும் இடத்தில் இந்தக் கடற்கரை உள்ளது. பக்கத்தில் உள்ள பவுரலகொண்டா மலைப்பகுதியில் ஏராளமான தேவதாரு மரங்களைக் கண்டு மகிழலாம். 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தக் கடற்கரை விசாகப்பட்டினத்தில் பார்க்க வேண்டிய ஒரு இடமாகும்.

    மொத்தத்தில் அழகிய கடற்கரைகள், ஆறு கடலில் கலக்கும் சங்கம இடம், கோவில், நீர்வீழ்ச்சி, அருங்காட்சியகங்கள் என பல்வேறு சுற்றுலா அம்சங்களைக் கொண்ட விசாகப்பட்டினம் சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்ற ஒரு இடமாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சமுதாயத்திற்கு தீங்கு இழைப்பவரைக் கண்டு நாம் ஒதுங்கி வாழ்வதே நன்று.
    • சான்றோர்களின் உபதேசம் பெற முன்ஜென்ம புண்ணியம் இருக்க வேண்டும்.

    அதிகாரம்: சிற்றினம் சேராமை

    இந்த அதிகாரத்தில்,

    சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

    சுற்றமாச் சூழ்ந்து விடும்.

    என்ற குறளில் தொடங்கி

    நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

    அல்லற் படுப்பதூஉம் இல்.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    சமுதாயத்தில் மேல்மக்கள் என்ற தகுதியை உடையவர்கள் உயிர்க்கொலை செய்யாதவர்களாகவும் ஜீவதயவு உடையவர்களாகவும் இருப்பார்கள்.

    தாய்-தந்தை, மனைவியிடம் அன்பு காட்டுவார்கள். நண்பர்களிடமும், உறவினர்களிடமும் நட்பு பாராட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். பிறர் மனம் வருந்தும்படியான செயல்களையோ, பேச்சுக்களையோ பேச மாட்டார்கள். இவர்கள் சான்றோர்களின் தொடர்பும், சன்மார்க்க சங்கத்தில் அல்லது சாது சங்கங்களின் தொடர்பும் உள்ளவர்களாக இருப்பார்கள்.

    திருஅருட்பா, திருவாசகம், திருமந்திரம் போன்ற முற்றுப்பெற்ற ஞானிகளின் நூல்களை இவர்கள் படிப்பார்கள். நண்பர்களுக்கு பாதுகாவலாக இருப்பார்கள். சிறுமை புத்தி உள்ளவர்களிடம் நட்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வார்கள்.

    ஒரு சிலர் புலால் உண்ணுவார்கள். துஷ்ட தேவதைகளுக்கு உயிர்பலி கொடுப்பார்கள். வரம்புக்குட்படாத பேச்சுக்களை பேசுவார்கள். அவர்கள் சொல்லும், செயலும் தான்தோன்றித் தனமாகவே இருக்கும். பாவ, புண்ணியத்தைப் பார்க்காமல் பிறருக்கு தீங்கு இழைப்பதையே பெருமையாக நினைத்து ஆணவமாகவே செயல்படுவார்கள். இத்தகையவர்களை நீச்சர்கள் எனக் கூறுவதுண்டு. இவர்களையே இந்த அதிகாரத்தில் சிற்றினத்தார் என்று வள்ளுவர் கூறுகின்றார். குணப்பண்பு இல்லாமல் பாவத்தை மட்டுமே செய்கின்ற மக்களிடம் ஆன்மீகவாதிகள், மேல்மக்கள், ஜென்மத்தை கடைத்தேற்றுபவர்கள் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதையும் ஆசான் திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார்.

    சமுதாயத்திற்கு தீங்கு இழைப்பவரைக் கண்டு நாம் ஒதுங்கி வாழ்வதே நன்று. இல்லையேல் அவர்களின் எண்ண அலைகள் நம்மை பாதிக்கும். அதனால் நம்முடைய அறிவும் குழப்பமடையும்.

    பொருள் பற்று உள்ளவர்கள், நெறி தவறி பொருள் சேர்ப்பவர்கள், சாவை பற்றி சிந்திக்காமல் மனம்போன போக்கில் வாழ்பவர்கள் மீண்டும் பிறவி எடுத்து நரகத்தை அனுபவிப்பார்கள்.

    உடலாலும் உள்ளத்தாலும், செயலாலும் பிறருக்குத் தீமை செய்யாதிருக்க வேண்டும். உலகநடையில் இருந்தாலும் தலைவன் மீது பக்தி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

    உடம்பில் காமம் இருக்கும் வரை மனம் தூய்மை அடையாது, விகாரமாகவே இருக்கும். இது இருள் தேகம், மருள்தேகம், நச்சுதேகம், விஷதேகம். எனவே இந்த தேகத்தின் குண இயல்பை அறிய வேண்டும்.

     

    தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    இந்த தேகம் மனிதனுக்கு நரகத்தை உண்டாக்கும் என அறிந்து அதில் உள்ள களிம்பை, மாசை, குற்றத்தை நீக்க வேண்டும். அதனை நீக்கி காமத்தை வென்றவர்கள் ஞானிகள். அவர்களின் திருவடியைப் பற்றினால் ஒழிய தேகக்குற்றத்தை நீக்க முடியாது. இதற்கு உபாயம் ஒன்று தியானம், மற்றொன்று புண்ணியம்.

    புண்ணியவான்களின் திருவடியைப் பற்றினால் அன்றி புண்ணியம் செய்ய முடியாது. பூஜை செய்ய செய்ய ஜீவதயவு உண்டாகும். ஜீவதயவு இல்லையென்றால் அருள்பெற முடியாது. அருளில்லை என்றால் ஜென்மத்தை கடைத்தேற்ற முடியாது.

    கீழ்த்தரமான எண்ணமும், செயலும் உள்ளவர்களிடம் சான்றோர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள். இவர்களிடம் சேராததையே சிற்றினம் சேராமை என்று கூறுவார்கள்.

    தாழ்ந்த புத்தி உள்ளவர்களுக்கு சான்றோர்களின் உபதேசம் கிடைக்காது, கேட்டாலும் அவர்களுக்கு புரியாது. அவர்களுக்கு எந்த விதத்திலும் பலிக்காது.

    சான்றோர்களின் உபதேசம் பெற முன்ஜென்ம புண்ணியம் இருக்க வேண்டும். முற்றுப்பெற்ற முனிவர்களின் திருவடியைப் பற்றினால் சான்றோர்களின் உபதேசம் புரியும். சிறுமை புத்தி உள்ளவர்களுக்கு எதுவுமே புரியாது.

    எந்த இயற்கை இந்த உடம்பை கொடுத்ததோ அந்த இயற்கையின் துணைக்கொண்டு பூஜை, புண்ணியம் செய்து இந்த காமதேகத்தை வெல்ல வேண்டும். எல்லாவற்றிற்கும் திருவருள் துணை வேண்டும்.

    மழை பெய்யும்போது மழைநீர் தூய்மையாகவே இருக்கும். ஆனால் அந்த நீர் எந்த நிலத்தில் விழுகின்றதோ அந்த இடத்தின் தன்மை அல்லது அந்த நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மாறும். அதுபோல் எந்த இடத்தைச் சார்ந்து நாம் இருக்கின்றோமோ நமது செயல்பாடுகளும் அவ்வாறே அமையும். எனவே சான்றோர்களைச் சார்ந்து வாழ்வது நமக்கு சிறப்பறிவைத் தரும்.

    மனம் எந்த அளவிற்கு செம்மையாக உள்ளதோ அந்த அளவுக்கு அங்கே பொது உணர்வு இருக்கும். ஞானிகளை வணங்கினால் பொது உணர்வு, சான்றோர் தொடர்பு, ஆன்மீக நாட்டம் ஏற்படும்.

    மனம் தூய்மையாக இருந்தால் செய்கின்ற செயலில் தூய்மை இருக்கும். பொதுசேவையில் ஈடுபடுபவர்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று சுயநலத்திற்கோ, சுயவிளம்பரத்திற்கோ பயன்படுத்துதல் கூடாது. அத்தகையவர்கள் தீராத பழியை ஏற்பார்கள்.

    சிற்றினம் சேர்ந்தால் வினை சூழும். ஞானிகளின் திருவடியைப்பற்றி சான்றோர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் நல்ல வாழ்க்கை, நிறைந்த செல்வம், நல்ல நட்பு, நல்ல உறவு, பலரும் கரம் கூப்பி நம்மை நல்லவர்கள், உயர்ந்தவர்கள் என்று கூறுகின்ற வாழ்க்கை உண்டாகும்.

    பண்புள்ள மக்கள் தொடர்பு இருந்தால் நல்ல செயலை செய்யலாம். வஞ்சகர்கள் தொடர்பு இருந்தால் தீமை செய்து பாவியாகலாம்.

    முற்றுப் பெற்றவர்களின் திருவடியைப்பற்றி பூஜை செய்வோம், புண்ணியம் செய்வோம், ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வோம். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முழுமனம் என்றால் என்ன என்பதை நன்றாகப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
    • நமது உணர்மனதுடன் முழு மனதும் இணைந்து கொள்ளும்.

    முழுமனம் என்பது என்ன? உணர் மனம் என்பது என்ன என்பதைப் பார்த்து வருகிறோம்.

    நிச்சயமற்ற தன்மையுடன், தடுமாற்றத்தோடு செயல்படுவது தான் உணர் மனம் ஆகும். தடுமாற்றம் இல்லாமல், திட மனதுடனும் முழு ஈடுபாட்டுடனும் செயல்படுவது தான் முழு மனம் ஆகும்.

    திருடனுடைய மகன் திருடுவதற்கு கற்றுக் கொடுக்கச் சொல்லி தகப்பனைக் கேட்டான்.

    இருவரும் சேர்ந்து ஒரு பெரிய மாளிகையினுள் நுழைந்தார்கள். பெரிய திருடன் கள்ளச் சாவிகளைக் கொண்டு இரும்புப் பெட்டியைத் திறந்தான். மகனை உள்ளே அனுப்பி நகைகளையும் பணத்தையும் மூட்டையாகக் கட்டச் சொன்னான்.

    மகனும் இரும்புப் பெட்டியினுள் நுழைந்து மூட்டையாகக் கட்டினான்.

    அந்நிலையில் அந்தத் தகப்பன், மகனை இரும்புப் பெட்டியினுள் வைத்துப் பூட்டிவிட்டு தான் மட்டும் தப்பிச் சென்றுவிட்டான்.

    உள்ளே மாட்டிக் கொண்ட மகனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

    பொழுதும் விடிந்துவிட்டது. வீட்டில் உள்ளவர்கள் நடமாட ஆரம்பித்துவிட்டார்கள்.

    இரும்புப் பெட்டி இருந்த அறையை சுத்தம் செய்ய வேலைக்காரி ஒருத்தி வந்தாள்.

    பெட்டியினுள் மாட்டிக் கொண்டிருந்த மகனும், ஒரு பூனை மாதிரி குரல் கொடுத்துக் கொண்டே பூனையைப் போல் இரும்புப் பெட்டியைப் பிராண்டினான்.

    எஜமானி அம்மாள் தெரியாத்தனமாக பூனையை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டதாக வேலைக்காரி நினைத்தாள்.

    சாவிக் கொத்தும் இரும்புப் பெட்டியிலயே தொங்கிக் கொண்டிருந்தது.

    பூனையை விடுவிக்கும் நோக்கத்தில் அவள் பெட்டியைத் திறந்தாள்.

    அதனை பயன்படுத்திக் கொண்ட மகனும், மூட்டையோடு தப்பி ஓடி வீடு வந்து சேர்ந்தான்.

    "இப்படியா என்னைக் கொல்லப்

    பார்ப்பது?" என்று கேட்டு தகப்பனை திட்டு திட்டு எனத் திட்டினான்.

    தகப்பன் அதனை சட்டையே செய்யாமல்

    மிக அமைதியாகக் கூறினான்: "இப்படித்தான் அப்பா திருட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும்!".

    எதற்காக இந்தக் கதை?

    திருடனுடைய மகன் நெருக்கடியில் மாட்டிக் கொண்டான். அந்நிலையில் இந்த முழுமனம் செயல்பட்டதால் ஏதோவொரு உபாயம் செய்து தப்பிச் சென்றான்.

    அந்நிலையில் முழு மனமே

    Presence of mind ஆக வேலை செய்துள்ளது.

    இந்த முழுமனம் மனிதர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அல்லது மிருகங்களுக்கும் இது பொருந்துமா?

    அப்போது நான் ஏழாவது வகுப்பு

    படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீடு ஒரு கிராமத்துத் தோட்டத்தில் இருந்தது. எங்கள் தோட்டத்தில் நாய் ஒன்றை கட்டாமல் விட்டிருப்போம்.

    ஒரு நாள் காலை பள்ளிக்கூடம் செல்லும் போது அதுவும் என்னோடு வர ஆரம்பித்தது. விரட்டிப் பார்த்தேன். அது என்னையும் முந்திக்கொண்டு எனக்கு முன்னால் போக ஆரம்பித்தது.

    நான் பள்ளிக்கூடம் போகும் வழியில் சில தெருக்கள் உண்டு. அங்கே பல தெரு நாய்கள் உண்டு. நமது நாயைக் கண்டால் விடாது.

    நான் நினைத்த படியே முதல் தெருவினுள் நுழையும் போது பத்துப் பதினைந்து நாய்கள் கொலை வெறியோடு பாய்ந்து வந்தன.

    நமது நாய் தொலைந்தது என்றுதான் எண்ணினேன். ஆனால் அங்கு நடந்தது வேறு.

    ஏதாவது ஒரு விசேஷத்தின் போது உங்களுடைய பழைய நண்பர்களை பல வருடங்கள் கழித்து சந்திக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.

    என்ன செய்வீர்கள்?

    "நீ நல்லா இருக்கிறாயா? நீ நல்லா இருக்கிறாயா?" என்று ஒவ்வொருவரையும் பார்த்து கேட்பீர்கள் அல்லவா?

    அப்படி நமது நாயும் ஒரு வகை அன்பு ஒலியை ஏற்படுத்திக்கொண்டு, வாலையும் ஆட்டியவாறே அந்த நாய்களுக்குள் வலம்வர ஆரம்பித்தது.

    கொலைவெறியோடு வந்த நாய்கள் அனைத்தும் குழப்பமடைந்து விட்டன. அவை கடிப்பதை மறந்து வெறுமனே உறுமிக்கொண்டிருந்தன.

    அந்த நாய்களுக்கு இடையே வலம் வந்த நமது நாய், ஒரு இடைவெளியைக் கண்டுபிடித்து ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து நமது தோட்டத்துக்கே போய்ச் சேர்ந்து விட்டது.

    அந்த நாய்க்குக் கூட முழுமனம் வேலை செய்துள்ளது.

    முழுமனம் என்றால் என்ன என்பதை நன்றாகப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் இதுதான் நம்முடைய வாழ்க்கை முழுவதும் நம்மோடு வந்து நமக்கு உதவிசெய்யப்போகிறது.

    இரவு நேரத்தில் நாம் ஒரு புதர் நிறைந்த பகுதியில் நடந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

    நல்ல இருள். வெளிச்சம் எதுவும் இல்லை. பாதை குண்டும் குழியுமாக உள்ளது.

    தடுமாற்றத்துடனேயே நடந்து செல்கிறோம். இடறி விழுந்து விடாமல் இருக்க, பார்த்துப் பார்த்து கால்களை வைக்கிறோம். புதர் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக கைகளாலும் தடவிப் பார்த்தபடியே நடக்கிறோம்.

    உதவிக்கு இறைவனையும் பிரார்த்தனை செய்து கொள்கிறோம். எவ்வளவுதான் கவனமாக நடந்தாலும், எங்கேயோ ஓரிடத்தில் தடுமாறி விழுந்து விடுகிறோம்.

    இனி நாம் சுதாரித்துக் கொண்டு எழுந்திட வேண்டும். இப்படி எழும்புவதா, அப்படி எழும்புவதா என்று தடுமாறிக் கொண்டிருக்க மாட்டோம். நம்மையறியாமலேயே எழுந்து விடுவோம்.

    எழுந்து கொண்ட பிறகுதான் எழுந்ததே தெரியும்.

    அப்படி எழுந்து கொள்வதற்கு இறைவனைக் கூட கூப்பிட மாட்டோம்.

    முதலில் நாம் தடுமாறிக் கொண்டு நடக்கும் போது உணர்மனம் மட்டுமே வேலை செய்துள்ளது.

    உணர் மனம் எப்போதும் தடுமாற்றத்துடனேயே இருக்கும்.

    நாம் எழுந்து கொள்ளும்போது முழுமனம் வேலை செய்துள்ளது. அங்கு தடுமாற்றம் எதுவுமே இருக்காது.

    நாம் ஒரு பைக்கில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம். ஓர் இடத்தில் வலது பக்கமாக நாம் திரும்பவேண்டும். நமக்கு எதிராக அந்தப் பக்கமிருந்தும் பைக் ஒன்று வேகமாக வருகிறது.

    நாம் அவருக்கு ஒதுங்க வேண்டும். அவர் நமக்கு ஒதுங்க வேண்டும்.

    நம்மையறியாமலேயே ஒருவருக்கு ஒருவர் சாமர்த்தியமாக ஒதுங்கிக் கொள்வோம்.

    இங்கு அந்த முழுமனம் வேலை செய்துள்ளது.

    நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். நீங்கள் பணியாற்றும் பிரிவில் மட்டும் நூறு நபர்கள் வேலை பார்க்கிறார்கள்.

    உங்கள் நூறு நபர்களுக்கும் ஒரு மேலாளர் இருக்கிறார். அவரோ ஒன்றாம் நம்பர் சிடுமூஞ்சி.

    நீங்கள் விடுப்பு ஏதாவது எடுக்கவேண்டும் என்றால் அவர்தான் பரிந்துரை செய்யவேண்டும். ஒரேயொரு நாள் விடுப்பு கேட்டாலே அவர் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிப்பார்.

    இப்போது உங்களுக்கு பத்து நாட்கள் விடுப்பு தேவைப்படுகிறது.

    அவரிடம் நீங்கள் விண்ணப்பத்தை நீட்டினால் என்ன ஆகும்?

    அந்நிலையில் நீங்கள் எப்படி செயல்படுவீர்கள்?

    உங்களிடம் உணர் மனம் செயல்பட்டால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

    அதே சமயம் உங்கள் முழுமனம் செயல்படுமேயானால், பத்து நாட்கள் விடுப்பு கூட பரிந்துரை செய்யப்பட்டுவிடும்.

    அந்தத் தருணத்தில் நீங்கள் எப்படி செயல்படுவீர்கள் என்பதை முன்கூட்டியே

    திட்டமிட முடியாது. ஆனால் தேவையான நேரத்தில் தேவையானதைக் கூறி சாதித்து விடுவீர்கள்.

    முப்பது படிகள் உள்ள ஒரு படிக்கட்டில் நீங்கள் இறங்குவதாக வைத்துக் கொள்வோம்.

    அது ஒரு நேரான படிக்கட்டு. நீங்கள் இரண்டாவது மூன்றாவது படிகளில் இறங்குகிறீர்கள். நீங்கள் சேர்ந்திட வேண்டியது முப்பதாவது படி. அந்த முப்பதாவது படியும் உங்கள் கண்களுக்கு நேரடியாகவே தெரிகிறது.

    உங்கள் இரண்டு கைகளிலும் பொருட்களை வேறு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கைப்பிடிச் சுவரைக் கூட உங்களால் பிடிக்கமுடியவில்லை.

    இப்போது உங்களுடைய கவனம் எதன் மீது இருக்கவேண்டும்?

    நீங்கள் அடைய வேண்டிய முப்பதாவது படியிலா?அல்லது நீங்கள் இறங்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது படியிலா?

    நீங்கள் இறங்கும் படிகளில் உங்களது முழுக் கவனமும் இருந்தால் மட்டுமே நீங்கள் பாதுகாப்பாக இறங்க முடியும்.

    அதனால் நீங்கள் அடைய வேண்டிய முப்பதாவது படியின் மீதுள்ள ஈடுபாட்டை சற்று நேரத்துக்கு தவிர்த்தாக வேண்டும்.

    நாம் நமது வாழ்க்கையிலும் சிக்கலான பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றோம். அவை வெற்றிகரமாக முடியும் என்ற உத்திரவாதம் எதுவும் கிடையாது.

    நாம் செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தும் நிகழ் காலத்தில் உள்ளன. ஆனால் அதன் விளைவான முடிவு மட்டும் எதிர்காலத்திலேயே உள்ளது.

    இப்போது உங்களுடைய கவனம் எதன் மீது இருக்க வேண்டும்?

    நிகழ்காலத்தில் நீங்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களிலா?

    அல்லது நீங்கள் அடைய வேண்டிய முடிவுகளிலா?

    அடைய வேண்டிய முடிவுகள் சம்பந்தமான உங்கள் ஈடுபாடுகளை சற்றே தள்ளி வைத்தால்தான், செய்யவேண்டிய செயல்களுக்கு தேவையான ஈடுபாட்டை உங்களால் காட்ட முடியும்.

    அடைய வேண்டிய முடிவுகளை எப்படி தள்ளி வைப்பது. நமது செயல்களின் எதிர்காலத்தை எவ்வாறு தள்ளி வைப்பது?

    நமது செயல்களின் எதிர்காலத்தை - முடிவுகளை, ஆற்றல் மிகுந்த முழுமனதிடமோ அல்லது இறைவனிடமோ ஒப்படைப்பது ஒன்றுதான் சாத்தியமான வழியாகும்.

    பொறுப்பற்ற ஒருவரிடம் நமது வேலையை ஒப்படைத்தால் என்ன ஆகும்?அவர் அதை சரியாகச் செய்திடுவாரோ, மாட்டாரோ என்று நாம் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டியிருக்கும்.

    அதே சமயம் அந்த வேலையை, பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைத்திருந்தோம் என்றால் என்ன ஆகும்?

    நாம் அந்த வேலையையே சுத்தமாக மறந்து விடலாம். ஏனெனில் அந்த வேலையை ஏற்றுக் கொண்டவர் நம்மை விடவும் சிறப்பாக அந்த வேலையை செய்து முடித்து விடுவார்.

    அப்படி செயலின் விளைவை முழுமனதிடமோ அல்லது இறைவனிடமோ ஒப்படைப்பதனால் என்ன நடக்கிறது?

    இதனால் நாம் நமது முழு ஈடுபாட்டையும் நாம் செய்ய வேண்டிய செயல்களின் மீது காட்ட முடிகிறது.

    ஈடுபாட்டுடன் செயல்படும்போது நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும்.

    நாம் செய்யும் செயல்களில் ஈடுபாட்டுடன் செயல்படும்போது, நமது உணர்மனதுடன் முழு மனதும் இணைந்து கொள்ளும்.

    இவை அனைத்துக்கும் முதற்படியாக, நமது உணர்மனமானது, முழுமனம் என ஒன்று இருப்பதையும், அது நமக்கு உதவத் தயாராக உள்ளது என்பதையும் நம்ப வேண்டும்.

    தொடர்புக்கு: வாட்ஸ்அப் - 8608680532

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை ஆணுடன் பங்கிட்டுக்கொள்ள பெண் வேலைக்குப் போகிறாள்.
    • உதிரப்போக்குக் காலமும், கர்ப்ப காலமும் இயல்பாக இருந்தாலே குழந்தைப் பேறும் இயற்கையாக அமையும்.

    பெண்கள் பூப்பெய்திய காலம் தொட்டு உதிரப்போக்கு நிற்கும் காலம் வரை தொடர் தொல்லைகளை அனுபவித்து வருகிறார்கள். அன்றாடக் கூலி வேலை செய்து வாழ்வினை ஓட்டும் குடும்பப் பெண்கள் இதனால் அடையும் இன்னல் சொல்லில் அடங்காதது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சர்க்கரை ஆலைக்காக கரும்பு வெட்டும் பருவத்தில் உதிரப்போக்கினால் வேலைக்கு வரவியலாது. அந்நாட்களில் கரும்பு வெட்டுப் பாதிக்கப்படுகிறதென்று மருத்துவ சோதனை என்ற பெயரில் சினைப்பையில் புற்றுநோயென்று அச்சுறுத்தி சினைப்பையையே அகற்றும் அவலம் நடந்தேறி வருகிறது. மேல்த்தட்டு வர்க்கப் பெண்களிடம் கூட இந்நாட்களில் உடல் உபாதைகளால் அளவு கடந்த கோபம் தலைக்கேறி விடுகிறது. இது உடலியல் தொடர்பான பிரச்சனை, தற்காலிகமானதுதான் என்பதைப் புரிந்து கொள்ளாத தம்பதியர் அந்நாட்களில் கோபத்தின் உச்சத்திற்கு சென்று நிரந்தர பிரிவிற்கான முடிவைக்கூட எடுத்து விடுகின்றனர்.

    ஐம்பதாண்டுகளுக்கு முன்னரும் கூட பெண்களின் உதிரப்போக்குக் காலத்தில் உபாதைகள் இருந்து வந்ததுதான். ஆனால் அன்று இத்தனை தீவிரமாக இருந்ததில்லை. இன்று இப்பிரச்சனை பெண்களுக்கு நிரந்தர தொல்லைகளாக மாறி விட்டதற்குக் காரணம் கடந்த வாரத்தில் பார்த்தது போல உடலுழைப்பு இன்மை, இடையறாத மூளை உழைப்பு, அதீத மனவழுத்தம் ஆகியவை ஆகும். அதனோடு மிக முக்கியமான காரணி உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் இன்மை.

    இரண்டு தலைமுறைக்கு முன்னர்வரை உதிரப் போக்குக் காலத்தை வீட்டிற்குத் தூரம் என்றனர். அம்மூன்று நாட்களும் அவர்களை இயல்பான வேலையில் ஈடுபடுத்துவதில்லை. உதிரப்போக்கு சீராக செல்ல வேண்டும் என்பதற்காக உடலின் வெப்பத்தைத் தணிந்திடாத வகையில் குளிக்க மாட்டார்கள். குறிப்பாகத் தலைக்குக் குளித்து உடல் குளிர்ந்து விடாமல் இயல்பான வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.

    இன்றோ நமது கல்வி முறை அதுவும் போட்டிக்கல்வி முறை பெண்களை அந்நாட்களில் ஓய்வெடுக்க அனுமதிக்காது. நிறுவனம் சார்ந்த வேலைக்குப் போகும் பெண்களையும் விடுப்பு எடுக்க அனுமதிக்காது. எனவே மேற்படி உதிரப்போக்கு சார்ந்த பிரச்சனைகளோடு வீட்டில் சிற்சிறு வேலைகளைக் கூடச் செய்யாது ஒதுங்கி இருந்த பெண்கள் வீட்டை விட்டு வெகுதொலைவுக்குச் செல்ல நிர்பந்திக்கிறது இன்றைய பொருள்சார்ந்த வாழ்க்கை முறை. விளைவு, குடும்பத்தின் ஆதார சக்தியான பெண் எப்போதும் தொல்லைக்குள், நிரந்தர நோய்மைக்குள் சிக்கிக் கொள்கிறாள்.

    இனப்பெருக்கத்திற்கு வெப்பம் – குளிர்மையும் சீரான வகையில் இருந்தாக வேண்டும். நிலப்பகுதியில் கூட எங்கே ஒரே சீரான வகையில் பொருத்தமாக அமைந்திருக்கிறதோ அங்குதான் பல்லுயிர்ப்பெருக்கமும் நிறைந்து காணப்படுகிறது. அந்த வகையில் மனித இனப்பெருக்கத்திற்கு ஆதார சக்திகளான ஆண் வெப்பம், பெண் குளிர்மை.

    ரத்தம் தான் வெப்பம். ஆணின் உடலியல்பு, உடலமைப்பு, உணவுத் தேர்வு, உடலியக்கம் ஆகிய அனைத்தும் போதிய ரத்தத்தை உருவாக்கிக் கொள்ளும் விதமாகவே அமைந்துள்ளது. ஆனால் இன்று மாறிவரும் உலகியல் போக்கு பெண்ணுடலுக்கும், அவள் இன்னொரு உயிரை உருவாக்குவதற்குரிய உடலமைப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்குப் பொருத்தமானதாக இல்லை. ஒரு பெண் பொதுவெளிக்கு வருவது பொருத்தமானது தான். பெண்ணானவள் நிர்வாகத்தில், பொருளுற்பத்தியில் பங்கெடுப்பது உலக வளமைக்குக் கூடுதல் நன்மை செய்யும் தான்.

    ஆனால் பெண், பொதுவெளிக்கு வரும் அதே நேரத்தில் அவளது உடலியல்பை, பிள்ளையைப் பெறுவதில் அவளுக்குள்ள கூடுதல் சுமையை சமூகம் கருத்தில் கொண்டாக வேண்டும். அவளுக்குப் போதிய ஓய்வினைத் தரக்கூடிய பெருமனது கொண்டிருக்க வேண்டும்.

    குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை ஆணுடன் பங்கிட்டுக்கொள்ள பெண் வேலைக்குப் போகிறாள். ஆனால் பெண்ணின் வீட்டு வேலைச் சுமையை ஆண் பங்கிட்டுக் கொள்கிறானா? அவ்வாறு பங்கிடுவது சரி என்று சமூகம் நினைக்கிறதா?

    பெரிய பெரிய உணவகங்களில், நட்சத்திர விடுதிகளில், ஆயிரமாயிரம் பேர் பங்கேற்கும் விருந்துகளில் ஆண் சமைப்பதைப் பெருமைப்படுத்தும் அதே சமூகம் தான், வீட்டுச் சமையலில் ஆண் ஈடுபடுவதை கேலிச் சித்திரமாக மாற்றுகிறது. மனைவியின் உடையை ஒரு டெய்லர் கடைக்குக் கொண்டு போவதைக் கூடக் கீழ்மைச் செயலாகக் கருதுகிறது.

    அவ்வளவு ஏன் உதிரப்போக்குக் காலத்தில் கெண்டைக்கால் நரம்பு இழுக்க எழக்கூடத் திராணியற்ற போதில் ஒரு ஆண் நாப்கின் வாங்கப் போனால் கூட அதனை கருப்புப் பையில் சுற்றி இரண்டாம் நபரது கண்ணில் படாத வகையில் ரகசியப் பொருளாகத் தருகிறது. அது இயற்கையானது தானே என்ற பார்வை நம்மில் யாருக்கும் தோன்றுவதில்லை.

    பெண்ணின் சினை முட்டை முதிர்ந்து வெளியேறி பெண்ணுடலின் ரத்தம் தூய்மை அடையாமல் இந்த உலகம் புத்துயிரைக் காண முடியாது. இந்த எளிமையான இயற்கை உண்மையை ஒப்புக் கொண்டால் நெருக்கடியான நேரத்தை சிரமமின்றிக் கடந்து விட முடியும்.

    பெண்களுக்குரிய தனித்துவமான உணவு முறை, விரதமுறை, வழிபாட்டு முறை எனப் பலவகையில் தம்மைப் பராமரித்துக் கொள்ள வாய்ப்பிருந்தது.

    இன்றைய நவீன வாழ்க்கை முறையில் ஒரு பெண் தனக்குரிய தனித்துவமான சிக்கலை உளப்பூர்வமாகப் பகிர்ந்துகொள்ளக் கூட வாய்ப்பில்லை. கூட்டுக்குடும்பம் இல்லை. அக்கம் பக்கத்தாருடன் பேச வாய்ப்பில்லை. ஊர்த்தெரு கூடி தமக்கான கொண்டாட்டங்களைக் களிக்க வாய்ப்பில்லை.

    குடும்பம், படிப்பு, வேலை, குழந்தைகள் பராமரிப்பு என இடையறாத கடப்பாடுகளுக்கு இடையே தன் மீது அக்கறை கொள்ளுதல் சுயநலமென்ற குற்றவுணர்வுக்கு உள்ளாகும் உளவியல் சிக்கலுக்குத் தள்ளப்பட்டுள்ளாள். எனவே தான் மேற்பூச்சான உடை, உதட்டுச் சாயம், க்ரீம் போன்றவற்றோடு தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்கிறாள். மற்றபடி ஆண்டுக்கணக்காக குடும்ப நெருக்கடியோடு உடல் சார்ந்த நெருக்கடிகளுக்குள்ளும் உழல்பவளாகவே இருக்கிறாள் பெண்.

    இன்றைய நெல் (அரிசி), பயிறு, இறைச்சி, பால் அனைத்தும் அவற்றின் உற்பத்தி முறையால் மூலாதார சத்துக்களை இழந்து விட்டன. இந்நிலையில் நம்முடைய பாரம்பரியமான தானிய வகைகளே பெண்ணுடலுக்கு உரிய தனித்துவமான சத்துக்களை வழங்குகின்றன.

     

    கடந்தவாரம் பார்த்த கேழ்வரகு மாவில் சமைக்கும் கூழ், புட்டு, பணியாரம் போன்றவற்றோடு சிமிலி உருண்டைகள் பெண்ணின் உதிரப்போக்குக் காலம் தொடங்கி கர்ப்ப காலம் வரை பெருநன்மைகள் அளிக்க வல்லவை. உதிரப்போக்குக் காலமும், கர்ப்ப காலமும் இயல்பாக இருந்தாலே குழந்தைப் பேறும் இயற்கையாக அமையும்.

    தமிழகத்தில் தானிய வகைகளில் அதிக நீர்ச்செலவின்றி விளைபவற்றில் கேழ்வரகிற்கு அடுத்த நிலையில் இருப்பது கம்பு. நம்முடைய நாட்டுக் கம்பு சிறுதானிய வகையைச் சேர்ந்தது தான். ஆனால் பசுமைப்புரட்சி என்ற சொல்லப்பட்ட 1960 களின் நடுப்பகுதியில் கலப்பின வீர்யக் கம்பு உருவாக்கப்பட்டது. அது பெருந்தானியம் என்று சொல்லுமளவு அளவில் பெரியதாகவும் ஆகிவிட்டது. அதேநேரத்தில் அதன் ஆதாரமான ஆற்றலும் குறைக்கப்பட்டு விட்டது. எனினும் அரிசியைக் காட்டிலும் அதிக சத்துக்கள் மிக்கவை தான் என்பதில் சந்தேகம் இல்லை.

    தானியங்களில் புரதச் சத்து நிறைந்துள்ள தானியம் கம்பு மட்டுமே. இதில் சுமார் 12 சதவீதம் புரதம் உள்ளது. போக கால்சியம், நியாமின், இரும்புச் சத்து, விட்டமின் பி' ஆகியவையும் நமது உடலுக்குப் பொருத்தமான வகையில் பொதிந்துள்ளது. உயிர்ப்பண்பு மிகுந்த கம்பு தானியத்தை உண்பதால் புத்துணர்ச்சி மிளிரும்.

     

    போப், 96293 45938

    கம்பு தானியத்தைக் கூழாகக் காய்ச்சுவதை விட கெட்டியாக கஞ்சியாகக் காய்ச்சி குழம்பு ஊற்றி உண்பார்கள் விவசாயப் பெருங்குடி உழைக்கும் மக்கள். கம்பங்கஞ்சியைக் காய்ச்சும் போதே மேலேட்டில் எண்ணை மிதக்கும். இந்த கொழுப்புத் தன்மை வாய்ந்த எண்ணை நம்முடைய ரத்தநாளங்களில் படியக்கூடிய கொழுப்பு அல்ல. எளிதில் கரையக்கூடிய (unsaturated) அமிலக் கொழுப்பு என்பதால் நாம் தொடர்ந்து கம்பு தானிய உணவுகளை உட்கொண்டாலும் கொழுப்பு சார்ந்த பிரச்சனைகள் உடலுக்கு ஏற்படாது. போக இந்த எண்ணைத் தன்மை நம்முடைய உடலுக்கு பளபளப்பைக் கொடுக்கக் கூடியதாகும். இலகுவான எளிதில் கரையக்கூடிய கொழுப்பு இறுகல் தன்மையற்ற நெகிழ்வுத் தன்மை உடைய பெண்ணுடலுக்கு மிகவும் ஏற்றதாகும்.

    இன்றைய நவீன சமையல் கலாச்சாரத்தில் கம்பு மாவினை இயந்திரத்தில் அரைத்து வைத்துக் கொண்டு தோசையாக ஊற்றி உண்பதே பரவலாக உள்ளது. தோசை மட்டுமாக அல்லாமல் பல்வேறு விதமான எளிய புதிய பலகார வகைகளுக்கு ஏற்றது தான் கம்பு. அதிலும் குறிப்பாக வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நீரிழப்பை ஈடுகட்ட வல்லது கம்பினை ஆதாரமாகக் கொண்ட உணவு வகைகளைப் பார்ப்போம்.

    தொடர்ந்து பார்ப்போம்...

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு.
    • அனைவரின் வாழ்விலும் நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகள், இன்ப துன்பங்கள், நிறைந்து தான் இருக்கும்.

    "மனசத் தொட்டுச் சொல்லு" "மனசாட்சியோடதான் பேசுறியா? "நீங்க மனசு வச்சாப் போதும்" என்று பேச்சு வழக்கில் நாம் பல இடங்களில் பயன்படுத்துகிறோம். மனமே! நீ ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இதைத்தான் சிந்திக்க வேண்டும் என்று நம்மால் கட்டளை இட முடியுமா? உடலைக் கொண்டு வேலைகளை எளிதாகச் செய்யும் நம்மால், மனத்தை ஒருமுகப்படுத்துவதில் எத்தனை சிக்கல்கள்! ஆனால் உண்மையில் மனம் என்ற ஒன்று நம் உடலில் எங்கு உள்ளது? என்று சிந்தித்தோமேயானால், பல உண்மைகள் புரியும். மனம் என்றால் என்ன? என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் தருவீர்கள்?

    மனம் என்றால் என்ன?

    மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு. எண்ணங்கள் என்பது நாம் பார்ப்பவை, கேட்பவை, பேசுபவை, உணர்பவை ஆகியவற்றில் இருந்துதான் தோன்றுகின்றது. இதுவரை நம் வாழ்வில் எதிர்கொள்ளாதவற்றிலிருந்து எண்ணங்கள் வருவதில்லை. எனவே நம் மனம் என்பது, எண்ணங்களைக் கொண்டுதான் உருவாக்கப்படுகின்றது. பலதரப்பட்ட அறிவியல் வளர்ச்சிகள் உள்ள இக்காலத்திலும், மனம் என்பது ஒரு புரியாத புதிராகத் தானே உள்ளது.

    நம் எண்ணங்களில் நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் என்ற இரண்டு வகைகள் உள்ளன. அன்பு, கருணை, பாசம், நேசம், காதல், மகிழ்ச்சி, மனநிறைவு, ஆர்வம், மனஉறுதி போன்ற நேர்மறை எண்ணங்களும், கோபம், வெறுமை, பற்றின்மை, பயம், குற்றஉணர்வு, மனச்சோர்வு, மனக்கசப்பு, தோல்வி, சோகம், பொறாமை, இயலாமை போன்ற எதிர்மறை எண்ணங்களும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை.

    இப்போதுள்ள பரபரப்பான உலகத்தில், எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இதற்கு மாறிவிட்ட நம் வாழ்வியலும் ஒரு காரணம்தான். இதனால் சிலர் மனநிறைவை இழந்து தவிக்கிறார்கள். பலர் மனஅழுத்தம் அதிகரித்து, தம் தினசரி வேலைகளைக் கூட சரிவரச் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். மனஅழுத்தம் உள்ளதா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ள மன அழுத்தத்தினால் ஏற்படும் அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வு வேண்டும்.

     

    மனஅழுத்தத்தினால் ஏற்படும் அறிகுறிகள்:

    மனஅழுத்தம் தலை முதல் கால் வரை பல அறிகுறிகளைத் தோற்றுவிக்கிறது. அதில் மிக முதன்மையானவை இதோ,

    தலைவலி, தலைப்பாரம், முடி உதிர்தல், உடல் சோர்வு, செயல்களில் பிடித்தம் இல்லாமை, கழுத்து வலி, உடல் சதையில் இறுக்கம், தோள்ப்பட்டை வலி, நெஞ்சு வலி, நெஞ்சு படபடப்பு, உடலில் சதைகள் துடித்தல், பசியின்மை, மலம் வெளியேறுவதில் சிக்கல், உறக்கமின்மை, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகம் கோபப்படுதல், தலைசுற்றல்

    மற்றவர்களுடன் சரளமாகப் பேசத் தயங்குவது, அதிகச் சத்தம் கேட்டால் நெஞ்சுப் படபடப்பு, உடலுறவில் நாட்டமின்மை, உடலில் ஒரு சில பகுதிகளில் அழுத்துவது போன்ற உணர்வு உடல் வெலவெலத்து, அதிக அளவில் வியர்ப்பது போன்ற உணர்வுகள் ஏற்படலாம். இவை அனைத்துமே ஒருவருக்கு வருவதில்லை இதில் ஏதேனும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் ஏற்படலாம்.

    எதிர்மறை எண்ணங்கள் நிறைந்த மனத்தோடு, நேர்மறையான வாழ்க்கை எப்படி வாழ முடியும்? எண்ணங்கள் எப்படியோ அப்படித் தானே வாழ்க்கையும். சிலர் மனநிம்மதி இல்லாமல், எந்நேரமும் மன அழுத்தத்துடன் இருப்பதனால், வாழ்வியல் முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களில் சிக்கித் தவிக்கிறார்கள்.

     

    மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.

    வாழ்வியல் முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்கள் யாவை?

    நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய், மன அழுத்த நோய், மனச்சோர்வு நோய் என்று கூறிக்கொண்டே போகலாம்.

    அனைவரின் வாழ்விலும் நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகள், இன்ப துன்பங்கள், நிறைந்து தான் இருக்கும். துன்பங்கள் மற்றும் எதிர்மறை நிகழ்வுகளை மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பதால், வாழ்வில் எதிர்கொள்ளும் மகிழ்ச்சியான தருணங்களை நாம் அனுபவிக்க மறந்து விடுகிறோம். கடந்த காலத்தின் தோல்விகளை மட்டுமே சிந்திப்பதால், எதிர்காலத்தில் வாழ்க்கைக்குத் தேவையான செயல்களைச் செய்ய முற்படாமல் விட்டு விட்டு, எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடுகிறோம். முதலில் நீங்கள் மனஅழுத்தத்துடன் இருக்கிறீர்களா? இல்லையா? என்பதைக் கண்டறிய வேண்டும்.

    மன அழுத்தத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

    மனம் என்ற ஒன்று உடலின் இன்ன பகுதியில் தான் உள்ளது என்பதை வரையறுத்துக் கூற முடியாதபோது இதைப் ஆய்வு செய்து எவ்வாறு கண்டறியமுடியும்? அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து உங்கள் எண்ணங்களில் எது மேலோங்கி உள்ளது? எது ஆதிக்கம் செலுத்துகிறது? என்பதைக் கண்டறியுங்கள். இப்படி உங்கள் எண்ணங்களை நீங்கள் கவனித்தாலே போதும். நீங்கள் மன அழுத்தத்துடன் இருக்கிறீர்களா? இல்லையா? என்பது உங்களுக்கே புரியும். அப்படி மனஅழுத்தம் இருப்பின், எதனால் ஏற்பட்டது? அதற்கு தீர்வு ஏதேனும் உண்டா? என்பதைச் சிந்திக்கவேண்டும்.

    முதலில் உங்களின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை ஒரு தாளில் எழுதுங்கள். எதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாக மாற்றுவது மட்டுமே, நாம் மகிழ்ச்சியாகவும், நோய்நொடி இல்லாமலும் வாழ்வதற்கான ஒரே வழி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

    எடுத்துக்காட்டுக்கு ஒரு பாத்திரத்தில் உள்ள காற்றை வெளியே அகற்ற, எப்படி அரிசி மற்றும் பிறதானியங்கள் அல்லது தண்ணீர் கொண்டு நிரப்புகிறோமோ, அது போன்று, தினம் தினம் நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக் கொண்டே வரும்போது, எதிர்மறை எண்ணங்கள் நம்மைவிட்டு நீங்கிவிடும் அல்லது குறைந்துவிடும். அதற்கான செயல்திட்டங்களை நமக்கு நாமே உருவாக்கினால் மட்டுமே, மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, மகிழ்வான வாழ்க்கையை வாழலாம்!  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவப் பருவத்திலேயே அவர் எழுதிய `போற்றிப் பத்து` என்ற கவிதை `ஒற்றுமை` என்ற இதழில் வெளிவந்தது.
    • சங்க நூல்கள் காவியங்கள் பிரபந்தங்கள் இப்படிப் பலவற்றைப் படித்தார்.

    தமிழறிஞரும் எழுத்தாளரும் புகழ்பெற்ற பேச்சாளருமான வாகீச கலாநிதி கிருஷஷ்ணராயபுரம் வாசுதேவன் ஜகந்நாதன் என்கிற கி.வா.ஜ. அவர்கள், வாசுதேவ ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் 1906 ஏப்ரல் 11ஆம் நாள் மகனாகப் பிறந்தவர். கி.வா.ஜ. காலமான நாள் 1988 நவம்பர் 4.

    தம் 82ஆம் வயதில் காலமான அவர், அதற்குள் செய்துமுடித்த எழுத்துப் பணிகளும் பதிப்புப் பணிகளும் எண்ணற்றவை. புகழ்பெற்ற பேச்சாளராகவும் அவர் விளங்கினார்.

    கி.வா.ஜ. முருக பக்தர். இளம் வயதிலேயே காந்த மலை முருகனிடம் பேரன்பு கொண்டிருந்தார். பின்னாளில் தன் இல்லத்திற்கே காந்தமலை என்றுதான் பெயர் வைத்தார்.

    மாணவப் பருவத்திலேயே அவர் எழுதிய `போற்றிப் பத்து` என்ற கவிதை `ஒற்றுமை` என்ற இதழில் வெளிவந்தது. அவரது தமிழறிவை வியந்த நண்பர்கள் இளம்பூரணன் என்றுதான் அவரை மாணவப் பருவத்திலேயே அழைத்தார்கள்.

    வாலிப வயதில் சுதந்திரப் போரால் ஈர்க்கப்பட்டு நூல் நூற்றுக் கதர் உடுத்தலானார். இறுதிவரை கதர் ஆடையே அணிந்தார். தமிழ் நூல் மேலும் கதர் நூல் மேலும் அவருக்கிருந்த ஆர்வம் குன்றவேயில்லை.

    இளம்வயது முதலே அவருக்கு ஆன்மிக நாட்டம் அதிகமாக இருந்தது. சேந்தமங்கலத்தில் இருந்த சுயப்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். அவரிடம் தமக்குத் துறவு தரும்படி வேண்டினார். ஆனால் பெற்றோர் அனுமதியில்லாமல் துறவு தர இயலாது என மறுத்துவிட்டார் சுவாமிகள்.

    கி.வா.ஜ.வுக்குத் தமிழ்த் தாத்தா தான் திருமணம் செய்துவைத்தார். கி.வா.ஜ.வின் மனைவி பெயர் அலமேலு. அவருக்கு `சாமிநாதன், குமரன், முருகன்` என மூன்று புதல்வர்களும் `உமா` என்ற புதல்வியும் உண்டு.

    திருப்பூர் கிருஷ்ணன்


    திருமுருகாற்றுப்படை அரசு, தமிழ்க் கவி பூஷணம், உபன்யாச கேசரி, தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி என்று இன்னும் பற்பல பட்டங்கள் கி.வா.ஜ.வுக்கு உண்டு.

    ஆனால் வாகீச கலாநிதி என்ற பட்டத்தை மட்டும்தான் ஆசீர்வாதமாகக் கருதிப் போட்டுக் கொண்டார். காரணம் பட்டம் தந்தவரின் பெருமை. பட்டம் தந்தவர் காஞ்சி மகாப் பெரியவர்,

    தம் இருபத்தோரு வயதில் தமிழ்த் தாத்தா உ.வே.சா.விடம் தமிழ் மாணவராகச் சேர்ந்தார் கி.வா.ஜ.. உ.வே.சா. காலமாகிற வரை (1942) 14 ஆண்டுகள் அவரிடம் மாணவராக இருந்தார்.

    ராமன் பகைவர்களை வென்று சிறைப்பட்டிருந்த சீதையை மீட்டார். இவர் குருகுல வாசம் செய்து தமிழின் பெருமை அறியாத பாமரர்களிடமிருந்து பழந்தமிழ் ஏடுகளை வாங்கித் தமிழை மீட்டார்.

    தம் 35 வயதுவரை தமிழ்த் தாத்தாவின் மாணவனாக இருந்தார். உ.வே.சா.விடம் பல மாணவர்கள் தமிழ் பயின்றாலும் அவருக்கு அதிகம் பிடித்த மாணவர் கி.வா.ஜ. தான். உ.வே.சா. இல்லத்திற்கு எதிர் வரிசையில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஒரு நாளில் 11 மணிநேரம் ஆசிரியருடனேயே இருந்து பாடங்கேட்டார்.

    பாடங்கேட்பது சில மணிநேரம். மற்றபடி அவர் இல்லத்திலேயே அமர்ந்து ஓலைச் சுவடிகளைப் படிப்பார். சங்க நூல்கள் காவியங்கள் பிரபந்தங்கள் இப்படிப் பலவற்றைப் படித்தார்.

    1930இல் உ.வே.சா.வுக்குக் காலில் ஒரு புண் ஏற்பட்டது. அப்போது குருவுக்கு அவர் செய்த பணிவிடை அவரை உ.வே.சா.வின் குடும்பத்தாருடன் நெருக்கமாகப் பிணைத்தது.

    அப்பொழுது முதல் உ.வே..சா.வின் பதிப்புப் பணியிலும் கி.வா.ஜ. ஈடுபடலானார். தக்கயாகப் பரணி நூல் முன்னுரையில்

    `இந்நூலைப் பதிப்பிக்கும்காலை உடனிருந்து எழுதுதல், ஆராய்தல், ஒப்புநோக்குதல் போன்ற பணிகளில் மோகனூர்த் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி கி.வா. ஜகந்நாத ஐயரின் உழைப்பு பாராட்டத்தக்கது` என எழுதி அவர் உழைப்புக்கு அங்கீகாரம் அளித்தார் உ.வே.சா.

    `எனக்குத் தள்ளாமை வந்துவிட்ட நேரத்தில் எனக்கு உதவியாக இறைவன்தான் உமமை எம்மிடத்தில் அனுப்பியிருக்கிறான்` என்று மனம் நெகிழ்ந்த உ.வே.சா., அவரைத் தம் குடும்பத்தில் ஒருவராகவே சேர்த்துக் கொண்டுவிட்டார்.

    1935 இல் உ.வே.சா.வுக்கு எண்பதாம் ஆண்டுவிழா நடைபெற்றது. பின் அவர் உடல் பெரிதும் தளர்ந்தது. நோயால் தாக்குண்டார்.

    கி.வா.ஜ.வுக்கு வெளியூர்களில் பெரிய பதவிகள் வந்தன. ஆனால் குருநாதருக்குப் பணிவிடை செய்வதைத் தவிர வகிக்கத் தக்க பெரிய பதவி ஒன்றுமில்லை என வந்த வாய்ப்பையெல்லாம் மறுத்துவிட்டார்.

    தந்தையை இழந்த மூன்றாம் நாள் குருவையும் இழந்தார் கி.வா.ஜ. தந்தையையும் குருவையும் அடுத்தடுத்து இழந்த துயர் கி.வா.ஜ.வைப் பெரிதும் பாதித்தது. எனினும் வாழ்வின் நிலையாமையை உணர்ந்திருந்த அவரது ஆன்மிக மனம் மெல்ல மெல்லத் தேறியது.

    உ.வே.சா.வின் மகன் கல்யாண சுந்தரமையர் எழுத நினைத்த வரலாறு அவர் விரைவில் மறைந்ததால் கைகூடவில்லை. பின் `என் ஆசிரியப் பிரான்` என்ற தலைப்பில் உ.வே.சா. அவர்களின் வரலாற்றை எழுதி நிறைவு செய்தவர் கி.வா.ஜ. தான்.

    மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அவர் சீடர் உ.வே.சா., அவர் சீடர் கி.வா.ஜ. எனத் தமிழ்சார்ந்த குருபரம்பரை தொடர்ந்தது.

    கலைமகள் மாத இதழில் உ.வே.சா. பரிந்துரையின் பேரில் கி.வா.ஜ. உதவி ஆசிரியரானார். இதனிடையே வித்வான் இறுதித் தேர்வு எழுதி முதல் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றுத் தேறினார். அதற்காக திருப்பனந்தாள் மடம் தரும் ஆயிரம் ரூபாய்ப் பரிசைப் பெற்றார்.

    கலைமகள் ஆசிரியராக இருந்த டி.எஸ். ராமசந்திர ஐயர் காலமானார். அதனைத் தொடர்ந்து ஹரிஜன் சாஸ்திரி எனப் பெயர்பெற்ற ஆர்.வி. சாஸ்திரி கலைமகள் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். கலைமகள் அதிபர் நாராணயசாமி ஐயர் உ.வே.சா.வுடன் கலந்துபேசி துணையாசிரியராக இருந்த கி.வா.ஜ.வைப் பின்னர் ஆசிரியராக்கினார்.

    கலைமகள் இதழில் `புதுமைப்பித்தன், அழகிரிசாமி, சி.சு. செல்லப்பா, த.நா. குமாரசாமி, சிதம்பர சுப்பிரமணியன், நா. பார்த்தசாரதி, தி.சா.ராஜு, ஆர்வி, அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன்` போன்ற சிறந்த எழுத்தாளர்களின் கதைகளையெல்லாம் வெளியிட்டார். கலைமகளில் நாவல் போட்டி நடத்தினார்.

    கி.வா.ஜ. சிறந்த எழுத்தாளரும் கூட. நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். அவரது பழந்தமிழ்ப் பாடல் விளக்கக் கட்டுரைகள் நெஞ்சை அள்ளுபவை.

    அவர் சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தார். ஜோதி என்ற புனைபெயரில் ஏராளமான மரபுக் கவிதைகளை எழுதியுள்ளார். உடனடியாக வெண்பா எழுதுவதில் தேர்ச்சி பெற்றிருந்தார். பல திருமண அழைப்புகளுக்கு வெண்பாவிலேயே வாழ்த்துகள் எழுதி அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

    ஏராளமான சிறுகதைகள் எழுதிய சிறுகதை எழுத்தாளரும் கூட. அவரது சிறுகதைகள் பத்துத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவர் ஆசிரியராக இருந்த கலைமகளில் மட்டுமல்லாது ஆனந்த விகடன், தினமணி மலர்கள், சுதேசமித்திரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் இவர் கதைகள் வந்துள்ளன.

    `கலைஞன் தியாகம், அறுந்த தந்தி, பவழ மல்லிகை, நீலமணி, வளைச்செட்டி, அசையா விளக்கு, குமரியின் மூக்குத்தி, பூக்காரி` போன்ற இவரது சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை. தமிழ் வளர்ச்சிக் கழகம் தந்த பரிசுகளையும் இவர் சிறுகதைத் தொகுதிகள் பெற்றுள்ளன.

    சிறந்த கட்டுரையாசிரியர். சங்கப் பாடல் விளக்கங்கள், தமிழ் இலக்கிய அறிமுகங்கள்,தொல்காப்பியம் உருவான கதை போன்ற இவரது இலக்கியக் கட்டுரைகள் தனி முத்திரை பதித்தவை.

    திருமுருகாற்றுப் படை, அருணகிரிநாதரின் திருப்புகழ் போன்ற முருகக் கடவுள் சார்ந்த பக்தி இலக்கியங்களுக்கு உரை எழுதியிருக்கிறார்.

    இவரது `வீரர் உலகம்` என்ற இலக்கியப் படைப்பிற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. கம்பன் கழகம் இவர் நினைவாக இவரது பெயரில் ஒரு விருதை நிறுவி ஆண்டுதோறும் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கி கெளரவித்து வருகிறது.

    மிகச் சிறந்த சொற்பொழிவாளர். தமிழ் இலக்கியங்களைக் கரைத்துக் குடித்த அவரது உரையைத் தமிழுலகம் விரும்பி வரவேற்றது. அவர் பேசாத இலக்கியத் தலைப்புமில்லை. அவர் போய்ப் பேசாத நாடுமில்லை.

    இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பர்மா, ஐரோப்பா போன்ற உலக நாடுகள் பலவற்றில் அவர் உரை நிகழ்த்தியுள்ளார். மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்ட பெருமையும் அவருக்கு உண்டு.

    அவரது மேடைப் பேச்சிலும் சரி, உரையாடலிலும் சரி, பாயசத்தினிடையே முந்திரிப் பருப்பாய் சிலேடை நயம் இழையோடும். தமிழில் காளமேகப் புலவருக்குப் பிறகு சிலேடை நயத்தை அதிகம் பயன்படுத்தியவர் இவர்தான். அதனால் கி.வா.ஜ.வை உரைநடைக் காளமேகம் என்று சொல்வதுண்டு. அவரது சிலேடைகள் தொகுக்கப்பட்டுப் புத்தகமாகவும் வந்துள்ளன.

    பல இடங்களில் அலைந்து ஆயிரக்கணக்கான நாடோடிப் பாடல்களைத் தொகுத்தவர். 22000 பழமொழிகளையும் தொகுத்தார். அவற்றை எங்கு கேட்டாலும் முதலில் தனித்தனிக் காகிதங்களில் எழுதிக் கொள்வார். வீட்டுக்கு வந்ததும் அவற்றை அவற்றுக்கென்று உரிய நோட்டுப் புத்தகத்தில் எழுதிய பின்னரே மற்ற காரியங்களில் ஈடுபடுவார்.

    `பெண்கள் பாடு என்றால் பாடமாட்டார்கள். ஆனால் அவர்களிடம் நாம் பாடத் தொடங்கினால் பின்னர் நாணத்தை விட்டுப் பாட ஆரம்பிப்பார்கள். அப்படித்தான் பல நாட்டுப்புற சகோதரிகளிடமிருந்து இந்தப் பாடல்களைக் கேட்டு எழுதினேன்` எனக் குறிப்பிடுகிறார் கி.வா.ஜ.

    ஏற்றப் பாட்டுக்கள், திருமணப் பாட்டுக்கள், தெய்வப் பாடல்கள் என அவர் தொகுத்த பாடல்கள் பலவகைப் பட்டவை. கி.வா.ஜ. தொகுத்திராவிட்டால் அந்தப் பாடல்கள் காற்றில் கலந்து மறைந்திருக்கும். கி.வா.ஜ.வின் நூல்களை அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

    தமிழ்த் தாத்தாவின் அன்புக்குரிய சீடராக, ஒப்புயர்வற்ற தமிழ் அறிஞராக வாழ்ந்து மறைந்த வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்களைத் தமிழுலகம் ஒருபோதும் மறக்காது.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுநீர் கசிவு ஏற்படும் பெண்களுக்கு முறையாக சில நரம்பு சம்பந்தமான பரிசோதனைகளையும் செய்ய வேண்டும்
    • பொதுவாக 40 வயதை கடந்தவுடன் பெரி மொனோபாஸ், மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்ணுறுப்பில் ஒருவித மாற்றங்கள் ஏற்படும்.

    பெண்களுக்கு 40 வயதாகும்போது ஏற்படும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று சிறுநீர் கசிவு பிரச்சினையாகும். இந்த பிரச்சினை உள்ள பெண்களுக்கு எப்போதுமே சிறுநீர்ப்பை நிரம்பி இருப்பது போன்ற உணர்வு காணப்படுகிறது. இதனால் அவர்களால் சிறுநீர் கசிவதை கட்டுப்படுத்த முடிவதில்லை. இருமல், தும்மல் வரும் போது கூட அவர்களை அறியாமல் சிறுநீர் கசிந்து விடும். சில நேரங்களில் சிரிக்கும்போது கூட சிறுநீர் கசிவு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகள் எதனால் ஏற்படுகிறது என்பதை கடந்த வாரம் பார்த்தோம். அதற்கு ஹார்மோன் ரீபிளேஸ்மெண்ட் தெரபி மூலம் சிகிச்சை அளித்து சரி செய்ய முடியும் என்பது பற்றியும் அறிந்தோம்.

    சிறுநீர் கசிவு பிரச்சினையை சரி செய்வதற்கான உடற்பயிற்சிகள்:

    பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு பிரச்சினையை சரி செய்வதற்கு சில உடற்பயிற்சிகளும் உள்ளன. அதாவது தசைகள் தளர்வாவதை தடுக்க, தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இதில் கிகில் உடற்பயிற்சி மிக முக்கியமான ஒன்று. இது இடுப்பு தள தசைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு உடற்பயிற்சி ஆகும். இந்த உடற்பயிற்சியானது சிறுநீர்ப்பை, குடல் மற்றும் பிற உறுப்புகளை பாதுகாக்கும் தசைகளை வலுவடைய செய்கிறது.

    மேலும் இதற்கான சிறுநீர்ப்பை தொடர்பான பயிற்சி முறைகளும் உள்ளன. இதற்கான பயிற்சிகளை அளிக்கும்போது, சிறுநீர் கசிவதை கட்டுப்படுத்த முடியும். மேலும் இந்த பயிற்சி மூலம் சிறுநீர்ப்பையில் சிறுநீரை தேக்கி வைக்கும் கொள்ளளவும் அதிகமாகும். இதனால் அந்த பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படுவது குறைவாகி, அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் சீராக்கப்படுகிறது.

    சிறுநீர் கசிவு ஏற்படும் பெண்களுக்கு முறையாக சில நரம்பு சம்பந்தமான பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். இதன்மூலம் நரம்பு இடைவெளிகள் சீராக்கப்படும். தொற்றுகள் சரி செய்யப்படும். சிறுநீர்ப்பை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தும்போது அந்த பெண்ணின் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, அவர்களுடைய சிறுநீர் கசிவு பிரச்சினை சரியாகி, அதனால் ஏற்படும் மனக்குறைபாடுகளில் இருந்தும் ஒரு நல்ல மாற்றங்களை உருவாக்கலாம்.

    சிறுநீர் கசிவு ஏற்படுகிற பெண்களுக்கு இவற்றை சீரான முறையில் சரியாக செய்தால் இதை முழுமையாக சரி செய்ய முடியும். மேலும் இதற்கு சில நல்ல மருந்துகள் கூட இருக்கிறது. அவற்றின் மூலமும் சரி செய்ய முடியும். ஆனாலும் பிரத்தியேகமான சிறுநீர்ப்பை தொடர்பான உடற்பயிற்சி முறைகளை கற்றுக் கொடுத்து கட்டுப்படுத்தும்போது இந்த பிரச்சினைக்கு முறையான தீர்வு கிடைக்கும்.

     

    திரும்பத் திரும்ப ஏற்படும் சிறுநீர் தொற்றுக்கள்:

    மேலும் சிலருக்கு 40 வயதை தாண்டிய பிறகு தொடர்ச்சியாக சிறுநீர் தொற்றுக்கள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் சிறுநீர் தொற்றுக்கள் திரும்பத் திரும்ப வரும். தொற்றுக்கள் இருப்பதால் இவர்களுக்கு சிறுநீர் கசிவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கும். மேலும் அவர்களுக்கு தொற்றுகள் ஏற்படுவதும் அதிகமாகும்.

    சில பெண்களுக்கு தாம்பத்திய உறவு வைத்தவுடன் சிறுநீர் தொற்று ஏற்படலாம். இதற்கான தீர்வு என்ன என்று பலரும் கேட்கிறார்கள். 40 வயதை கடக்கும்போது பெண்களுக்கு ஏற்படுகின்ற ஹார்மோன் மாற்றத்தினால் சிறுநீர் கசிவு ஏற்படலாம். இதனால் அவர்களுக்கு சிறுநீர் தொற்றுகள் அதிகமாகிறது. இதற்கான முக்கியமான காரணத்தை பார்ப்போம்.

    பொதுவாக 40 வயதை கடந்தவுடன் பெரி மொனோபாஸ், மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்ணுறுப்பில் ஒருவித மாற்றங்கள் ஏற்படும். அதனால் லூப்ரிகேஷன் குறைவாகி மிகவும் உலர்வு தன்மை காணப்படும். இந்த உலர்வு தன்மை என்பது பெண்கள் எதிர்நோக்குகிற மிக முக்கியமான பிரச்சினையாகும்.

    லூப்ரிகேஷன் குறைவாக இருக்கும்போது பெண்ணுறுப்பில் உள்ள திசுக்கள் அனைத்தும் உலர்வடைந்து காணப்படுவதால் தாம்பத்திய உறவின்போது திசுக்களில் சின்னச்சின்ன காயங்கள் ஏற்படலாம். வழக்கமாகவே நமது தோல் பகுதி உலர்வாக காணப்படும்போது அரிப்பு தன்மை இருக்கும். அரிப்பு தன்மை ஏற்படும்போது தோல் பகுதியில் லேசாக தேய்த்தால் கூட புண்ணாகிவிடும். ஏனென்றால் நமது தோல் அந்த அளவுக்கு மென்மையாக இருக்கும்.

    அதேபோல் தான் மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு பெண்ணுறுப்பில் ஹார்மோன் குறைபாடுகளால் தோல் பகுதியில் உலர்வு தன்மை ஏற்படும். லூப்ரிகேஷன் சீராக இல்லாததால் பல நேரங்களில் பெண்ணுறுப்பின் வல்வா பகுதியில் எளிதாக தொற்றுக்கள் உருவாகும். அதில் ஏற்படுகிற சில காயங்கள் மற்றும் சேதங்கள் ஆகியவற்றால் தொற்றுகள் எளிதில் பரவும்.

    பாலியல் உறவால் ஏற்படும் சிறுநீர் தொற்று பிரச்சினை:

    மேலும் பெண்ணுடைய யோனி பகுதிதான் அந்த சிறுநீர் செல்வதற்கு பயன்படும் பாதையின் ஒரு பகுதி ஆகும். சிறுநீர் செல்லும் குழாயின் பின் பகுதியில் தான் யோனி இருக்கிறது. யோனி பகுதியில் ஏற்படும் எந்த விதமான அழுத்தங்களும் மாற்றங்களும் இந்த தொற்றுகளை அதிகரிப்படுத்தும்.

    குறிப்பாக லூப்ரிகேஷன் இல்லாமல் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது ஏற்படுகிற பலவிதமான காயங்களும் தொற்றுக்களை அதிகப்படுத்தலாம். சில நேரங்களில் சிறுநீர்க்குழாய் சுருங்கி பாதிப்பு ஏற்படுவதால் தொற்றுகள் எளிதாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.

    பல நேரங்களில் இந்த பாலியல் உறவு கொள்ளும்போது ஏற்படுகிற சில தொற்றுகளாலும் சிறுநீர் தொற்றுக்கள் பிரச்சினை ஏற்படலாம். பெண்களுக்கு இயற்கையாகவே இந்த கால கட்டத்தில் செல்களில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் உலர்வு தன்மையாலும் சில தொற்றுக்கள், அதாவது பூஞ்சை தொற்றுக்கள் ஏற்படும். மேலும் தோல் பகுதியில் உருவாகும் மாற்றங்கள் போன்று ஏற்படுகிற உலர்வு தன்மைகளாலும் தொற்றுகள் ஏற்படலாம்.

    எனவே திரும்பத் திரும்ப சிறுநீர் தொற்றுக்கள் வந்தால் முறையாக முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும். சிறுநீர் கல்ச்சர் பரிசோதனை செய்து என்ன தொற்றுக்கள் இருக்கிறது என்று பார்த்து, அதற்கான சரியான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் சாப்பிட வேண்டும்.

    அடுத்ததாக பெண்களின் யோனி பகுதியில் ஏற்படும் உலர்வு தன்மையை சரி செய்வதற்கு சில மருந்துகள் இருக்கிறது. நமது தோல் பகுதிக்கு பயன்படுத்துவது போன்று, யோனி பகுதியில் பயன்படுத்துவதற்கான லூப்ரிகேஷன் இருக்கிறது. அதனை பயன்படுத்தலாம். வல்வாவில் உள்ள தோல் பகுதியிலும் லூப்ரிகேஷன் பயன்படுத்தலாம். இவற்றின் மூலமாக உலர்வு தன்மை குறைவாகும் போது அந்த திசுக்களின் ஸ்டெம்செல் திறன் அதிகமாகும். இது மிகவும் முக்கியமான ஒன்று.

    அடுத்து சிறுநீர்ப்பையின் பலவீ னத்தால் ஏற்படும் பிரச்சினையை யூரோடைனமிக் பரிசோதனை மூலமாகவும், எளிமையான ஸ்கேன் பரிசோதனை மூலமாகவும் பார்க்கலாம். இந்த பரிசோதனைகள் மூலம் சிறுநீர் கழித்த பிறகு சிறுநீர்ப்பையில் எஞ்சி இருக்கும் சிறுநீரின் அளவு கணக்கிடப்படும். எஞ்சி இருக்கும் சிறுநீரின் அளவு அதிகமாக இருக்கிற பெண்களுக்கு திரும்பத் திரும்ப சிறுநீர் தொற்றுக்கள் ஏற்படும்.

    எனவே இதனை தீர்ப்பதற்கு தொற்றுக்களை சரிசெய்வதற்கான முறையான சிகிச்சைகளை பெற வேண்டும். சிறுநீர்ப்பையில் உள்ள சிறுநீரை முழுமையாக காலி செய்வதற்கு சில பயிற்சிகள் உள்ளன. அந்த பயிற்சிகளை கொடுத்து சிறுநீர்ப்பையில் சிறுநீரை முழுமையாக காலி செய்யும் போது சிறுநீர் தொற்றுக்கள் சரி செய்யப்படும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    சிறுநீர்ப்பையை காலியாக வைத்திருப்பதற்கான பயிற்சி:

    ஏனென்றால் பொதுவாக இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு முக்கியமான விஷயமாக, அந்த சிறுநீர்ப்பையில் ஏற்படும் தளர்வு காரணமாக சிறுநீர்ப்பை சற்று இறங்கி காணப்படும். சிறுநீர்ப்பை இறங்கி காணப்படுவதால் சிறுநீர் கழித்த பின்னரும் சிறுநீர்ப்பையில் சிறுநீர் தேங்கி காணப்பட்டு தொற்றுக்கள் ஏற்படும்.

    அதற்கான தீர்வாகத்தான் சிறுநீர்ப்பையை எப்படி காலியாக வைத்திருக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கான முறை யான பயிற்சிகளை மருத்துவர்கள் சொல்லித்த ருவார்கள். அதன் மூலமாக சிறுநீர்ப்பையில் உள்ள சிறுநீரை முழுமையாக காலியாக்கும் போது தொற்றுக்களை குறைக்க முடியும்.

    எனவே மெனோபாஸ் பெண்களுக்கு ஏற்படும் தொற்றுக்களை சரி செய்வதற்கு, முறையான சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் சிஸ்டாஸ்கோபி பரிசோதனை செய்யலாம். இந்த பரிசோதனை மூலம் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் குழாயின் உட்புறத்தை பார்த்து அதில் எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கிறது என்பதை கண்டறிய முடியும். ஒளியுடன் கூடிய ஒரு மெல்லிய குழாய் மூலம் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் சிறுநீரை எடுத்தும் பரிசோதனை செய்து தொற்றுக்களை சரி செய்வோம்.

    பல நேரங்களில் அந்த சிறுநீர்க்குழாய் சுருங்கிவிடும். அது சுருங்குவதால் சரியான முறையில் சிறுநீர் காலியாகாத நிலை வரலாம். சிறுநீர்க்குழாயை விரிவடைய செய்யும் சிகிச்சை இதற்கு ஒரு தீர்வு தீர்வாக அமையும்.

    இந்த வகையில் மாதவிலக்கு நின்று மெனோபாஸ் வந்த பெண்களுக்கு பெண்ணு றுப்பில் ஏற்படும் உலர்வு தன்மை தொற்றுக்கள் ஏற்படுவதற்கும், சிறுநீர்க்கசிவு ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக இருக்கும். இதனை சரியான முறையில் பரிசோதித்து கண்டுபிடித்து சரி செய்யும் போது தொற்றுக்கள் வருவதை குறைக்க முடியும். சிறுநீர் கசிவையும் தவிர்க்க முடியும். ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற்பயிற்சியுடன், பெண்ணுறுப்பு சுகாதாரத்தையும் சரியாக பராமரித்தால் இந்த பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வானில் செக்கு அல்லது லிங்கம் போல் பிரகாசிப்பதால் இதன் தமிழ் பெயர் செக்கு.
    • ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு பிரமாண்ட எண்ணங்கள் இருக்கும்.

    கால புருஷ தத்துவப்படி ராசி மண்டலத்தின் 24-வது நட்சத்திரம் சதயம். இதில் கும்ப ராசி அமைந்துள்ளது. இந்த ராசியின் அதிபதி சனி பகவான். இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு. சதயம் என்பதன் சமஸ்கிருத பெயர் சதாபிஷா. இதன் பொருள் நூறு மருத்துவர்கள். சதய நட்சத்திரத்தின் உருவம் பூங்கொத்து, தராசு, ஒட்டகம் என பலவாறாக கூறப்படுகிறது.

    இது வானில் செக்கு அல்லது லிங்கம் போல் பிரகாசிப்பதால் இதன் தமிழ் பெயர் செக்கு. இது நூறு நட்சத்திரங்கள் சேர்ந்த கூட்டமாகும்.

    இந்த நட்சத்திரம் குணப்படுத்தும் மற்றும் சுத்திகரிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நட்சத்திரம் நோய்களைக் குணப்படுத்தும், ஒரு நபரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும் சக்தி கொண்டது என்று நம்பப்படுகிறது.

    சதயம் நட்சத்திர பொது பலன்கள்

    ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு பிரமாண்ட எண்ணங்கள் இருக்கும். அந்த எண்ணம் நிறைவேறுமா? என்பதை சுய ஜாதகத்தில் ராகு நின்ற நிலையை வைத்தே முடிவு செய்ய முடியும்.

    இந்த நட்சத்திரத்தின் கீழ் பிறந்தவர்கள் உள்ளுணர்வு சிறப்பாக இருக்கும். நேர்மறை எண்ணங்கள் கொண்டு இருப்பார்கள். இதில் பிறந்தவர்களுக்கு மருத்துவ ஞானம் அதிகம் உண்டு. அரசியல், அரசாங்கம் போன்றவற்றில் தனி ஆளுமைத் திறன் உண்டு. அரசியல், ஆன்மிகத்தில், பொறுப்பான நிர்வாகப் பதவிகளில் தனித் திறமையுடன் ஜொலிப்பார்கள்.

    ஆன்ம பலம் நிறைந்தவர்கள் வம்சா வழியாக அரசியல் அல்லது அரசு உத்தியோகம் மூலம் வருமானம் உண்டு. தந்தையால் ஆதாயம் உண்டு. திட்டமிட்டு காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். தோல்வி பயம் இல்லாதவர்கள். விடா முயற்சி, தன்னம்பிக்கை, துணிச்சல் மிகுந்தவர்கள். புகழ், கீர்த்தி, வெற்றி, சுய வருமானம், நேர்மை, திறமை, மங்காத புகழ் எதையும் சமாளிக்கும் திறன், நல்ல உடற்கட்டு, ஸ்திரபுத்தி, நல்ல கல்வி அறிவு, வீடு, வாகன வசதி, சொகுசு வாழ்க்கை, ஆடம்பர பொருட்கள் சேர்க்கை, போக சுகம் உண்டு. தந்தை, தந்தை வழி முன்னோர்களின் ஆதரவு கிடைக்கும்.

    முயற்சி, திறமை, முன்னேற்றமான வாழ்க்கை, உறவினர்களால், லாபம் உண்டு. நம்பிக்கை, நாணயம் மிகுந்தவர்கள். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபடுவார்கள். இவரின் முயற்சி, திட்டமிடுதலுக்கு குடும்ப உறவுகள் பக்க பலமாக இருப்பார்கள். செல்வாக்கு, சொல்வாக்கு மிகுந்தவர்கள். வாக்கு வன்மையால் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள். இவர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டாலும் அலைச்சல், அசதி மன சஞ்சலம், பய உணர்வு மிகுதியாக இருக்கும்.

    கல்வி

    இவர்கள் ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்பதால் பள்ளி பருவத்தில் ராகு தசா நடக்கும். அதனால் பள்ளி பருவத்தில் கல்வியில் சற்று பின் தங்கியே இருப்பார்கள். பாடத்திட்டம் சாரா பிற கல்வியில் ஆர்வம் மிகுதியாக இருக்கும். கணிதம் இவர்களின் காலை வாரும். அனுபவ பாடத்தில் மனக் கணக்கில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். பொறியியல், கனிமம், சுரங்கம், சுங்க சாவடி, விவசாயம், மின்னனுவியல், கெமிக்கல், பயோ கெமிஸ்ட்ரி, பரிசோதனை செய்யும் லேப் பற்றிய படிப்பு, இயந்திரங்கள் தொடர்பான படிப்புகள், ரேடியாலஜி, ஸ்கேனிங் தொடர்பான படிப்புகள், தகவல் தொழில்நுட்பம் ஆய்வு மையம் சார்ந்த கல்விகள் படிக்கலாம்.

    தொழில்

    குறைந்தது 10 நபர்களை வைத்து வேலை வாங்கும் ஆர்வம் மிகுதியாக இருக்கும். சட்டம், நிதித்துறை, நீதித் துறை, கல்வித்துறை, ஆசிரியர், பொருளாதாரம், அறிவியல் சார்ந்த துறைகள் வங்கிப்பணி, பொருளாதாரம், திரைப்படம், தொலைக்காட்சி, இயல், இசை, நாடகம், நடிப்பு, அழகு கலை, ஆடை, ஆபரணம், நெசவு சார்ந்த தொழில்கள் சிறப்பாக இருக்கும். வட்டித் தொழில் அல்லது பணம் அதிகம் புழங்கும். தொழிலில் ஆர்வம் உண்டு.

    ஐ.ஆனந்தி


     

    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்

    சுய உழைப்பால் அதிர்ஷ்டம் தேடி வரும். ஜாதகர் முயற்சியை மூலதனமாக கொண்டு முன்னேறுபவர். தன்னைப்பற்றி உயர்வான சிந்தனை உண்டு.

    சுமாரான குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட படிப்படியாக கோடீஸ்வர யோகம் அடைவார்கள். காதல் பாடத்தில் டாக்டரேட் பட்டம் பெறுவார்கள். சிலருக்கு காதலன், காதலி பட்டியல் நீண்டு கொண்டே போகும். இளம் வயதில் திருமணம். வீடு, வாசல் என செட்டிலாகுவார்கள். அன்பான மனைவி, மக்கள் கிடைக்கப் பெறுவார்கள். உறவுகளிடம் நல்ல மதிப்பு மரியாதை இருக்கும். நல்ல தேக ஆரோக்கியம் இருக்கும். பிறரின் பிரச்சினைகளுக்கு தீர்வு, உதவிகள் வழங்குவார்கள். தாயார், உற்றார், உறவினர்கள் போற்றுவார்கள். அதே சமயம் கஷ்டங்கள், சோதனைகள் வந்தால் அதை எதிர் கொள்ளும் வல்லமை உள்ளவராக இருப்பார்கள்.

    தசா பலன்கள்

    ராகு தசா: இது ஜென்ம தாரையின் தசாவாகும்.

    இந்த தசா வருடம் 18 ஆண்டுகள். பிறந்த கால நட்சத்திர பாதத்திற்கு ஏற்ப இதன் தசா வருடம் இருக்கும். பிறந்த காலத்தில் தாய், தந்தையை விட தாத்தாவின் மேல் அதிக பாசத்துடன் இருப்பார்கள். சிலர் தாத்தா பாட்டி வீட்டில் வளர்வார்கள். சிறு சிறு உடல் உபாதைகள் இருக்கும்.

    குரு தசா: இது இரண்டாவதாக வரக் கூடிய தன தாரையின் தசாவாகும்.

    இதன் தசா வருடம் 16 ஆண்டுகள்.

    இந்த காலகட்டத்தில் பலர் திருமணம், குழந்தை என இல்வாழ்க்கை துவங்குவார்கள். பலர் குரு தசாவில் நன்றாக சம்பாதிக்க துவங்குவார்கள்.

    சகல யோகங்களையும் அனுபவிக்க கூடியவராக இருப்பார். உழைக்காத வருமானம் உண்டு. கடினமாக உழைக்க விரும்ப மாட்டார்கள்.

    சனி தசா: இது மூன்றாவதாக வரக் கூடிய விபத்து தாரையின் தசாவாகும்.

    இதன் ஆண்டுகள் 19. சமுதாயம், மத நம்பிக்கை குறைந்தவர்களாக இருப்பார்கள்.குறுக்கு வழியில் முன்னேறுவார்கள். யாரையும் அனுசரித்து செல்ல மாட்டார்கள். உதட்டளவில் மட்டும் உறவாடுவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்கள்.

    முயற்சிகள், திட்டமிடுதல் தோல்வி தரும். உறவுகளிடம் பகை, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை, கடன், அவமானம் ஏற்படும்.

    புதன் தசா: இது நான்காவதாக வரக் கூடிய சாதக தாரையின் தசாவாகும்.

    இதன் தசா வருடம் 17 ஆண்டுகள்.

    வாழ்க்கை முழுவதும் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சம்பாதிப்பார்கள். வசதி குறைந்த, வாஸ்து குறைபாடு நிறைந்த சொத்து அமையும். இவர்கள் பெரும்பாலும் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வதால் இவர்களுடைய சொத்துக்கள் உறவுகளால் பராமரிக்கப்படுகிறது. கோபம், பிடிவாதம் மிகுதியாக இருக்கும் இதனால் பல நல்ல வாய்ப்புகள் தள்ளிப் போகும்.

    கேது: இது ஐந்தாவதாக வரக் கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும்.

    பலர் இந்த காலகட்டத்தில் பலர் 60 முதல் 70 வயதை கடந்து கொண்டிருப்பார்கள். வயதானலும் அழகு குறையாது. ஆன்மீக யாத்திரை செய்வதிலும் தான தர்மங்கள் செய்வதிலும் ஆர்வம் மிகுதியாக இருக்கும். சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதிகள், எலும்பு, நரம்பு, மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் அவதி இருக்கும். ஆனாலும் மனம் தளர மாட்டார்கள்.

    சுக்ர தசா: இது ஆறாவதாக வரக்கூடிய சாதகதாரரின் தசாவாகும். இதன் தசாவருடம் 20 ஆண்டுகள்.வயது மூப்பு காரணமாக ஓய்வையும் தனிமையையும் விரும்புவார்கள். உயிர் எழுதுவது பாகப்பிரிவினை செய்வது போன்ற பணியில் ஈடுபடுவார்கள். பூர்வீகத்தில் செட்டிலாக விரும்புவார்கள். சான்றோர்களின் நட்பு கிடைக்கும்.

    சதயம் நட்சத்திரத்தின் சிறப்புகள்

    மருத்துவ நுழைவுத் தேர்வில் வெற்றியடைய விரும்புபவர்கள் இந்த நட்சத்திர நாளில் கால பைரவரை வழிபட வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். சனி வீட்டு ராகு என்பதால் சுய தொழில் இந்த நட்சத்தி ரத்தில் துவங்க கூடாது.

    கர்ப்பதானம், சாந்தி முகூர்த்தம் போன்றவற்றிற்கு சிறப்பான நட்சத்திரமாகும்.

    இதன் உருவம் ஒட்டகம் என்பதால் ஆடு மாடு குதிரை கழுதை வாங்கலாம்.

    தொழிலிலில் கடுமையான இழப்புகளை சந்திப்பவர்கள், அதிக நஷ்டம் உள்ளவர்கள் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்ய உயர்வு உண்டாகும்.

    கை, கால், மூட்டு வலி உள்ளவர்கள் அடிக்கடி விபத்து கண்டங்களை சந்திப்பவர்கள் சதயம் நட்சத்திரம் வரும் நாளில் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டு வந்தால் உடம்பில் உள்ள எல்லா வலிகளும் நீங்கும். செய்வினை கோளாறு, மாந்திரீக பாதிப்பில் இருந்து விடுபட முடியும். இந்த நட்சத்திரம் வரும் நாளில் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரரை வழிபட குணப்படுத்த முடியாத நோய்கள் எல்லாம் குணமாகும் ஏவல் பில்லி சூனியம் பாதிப்புகள் விலகும்.

    நட்சத்திர பட்சி: அண்டங்காக்கா

    யோகம்: சுப்ரம்

    நவரத்தினம் : கோமேதகம்

    உடல் உறுப்பு: வலது தொடை

    திசை: வடக்கு

    பஞ்சபூதம் : ஆகாயம்

    அதிதேவதை: எமன்

    நட்சத்திர மிருகம்: பெண் குதிரை

    நட்சத்திர வடிவம்: பூங்கொத்து

    நன்மை தரும் நட்சத்திரங்கள்:

    சம்பத்து தாரை : பூரட்டாதி, புனர்பூசம், விசாகம்

    சேம தாரை: ரேவதி, ஆயில்யம்,

    கேட்டை சாதக தாரை: பரணி, பூரம், பூராடம். பரம மித்ர தாரை : அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை

    பொதுவான பரிகாரங்கள்

    ராஜா ராஜ சோழனின் ஜென்ம நட்சத்திரம் சதயம். இவர் சிவ வழி பாட்டின் மூலம் வெற்றி மேல் வெற்றியை அடைந்தார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சிவ வழிபாடு செய்து வர வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று வர ஏற்றமான பலன் உண்டு.

    செல்: 98652 20406

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களால் கயத்தாரில் தூக்கில் போடப்பட்ட போது அவர் கடைசி வார்த்தையாக திருச்செந்தூர் முருகா என்றுதான் சொன்னார்.
    • கட்டபொம்மன் உருவாக்கிய திருவிழா வழிபாடுகள் திருச்செந்தூர் ஆலயத்தில் அவரது வாரிசுகளால் இன்றளவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.

    திருச்செந்தூர் முருகன் ஆலயம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. முருகப்பெருமான் தமிழ்நாட்டிலேயே திருச்செந்தூர் மற்றும் சுவாமி மலை ஆகிய 2 ஆலயங்களில்தான் தெய்வமாகவும், குருவாகவும் அருள் பாலிக்கிறார். அதன் பின்னணியில் வரலாறும் உள்ளது.

    அதை ஆய்வு செய்தால் திருச்செந்தூர் தலத்தில் முருகப் பெருமானுக்கு குரு பகவான் சூரனை வதம் செய்ய முக்கிய தகவல்களை அளித்ததாக தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் குரு பகவானுக்கு முருகப்பெருமான் திருச்செந்தூர் தலத்தில் அருளாசி வழங்கினார். எனவேதான் திருச்செந்தூர் தலம் முருகனை குருவாக வணங்குவதற்கும் ஏற்ற தலமாக அமைந்துள்ளது.

    ஒருவரது வாழ்வில் குரு என்பவர் மிக மிக முக்கியமானவர். நாம் வாழ்வில் நல்லது செய்து புண்ணியம் சேர்க்க வேண்டுமானால் குருவின் வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே முடியும். அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் தனது பக்தர்களில் பலருக்கு குருவாக திகழ்ந்து அவர்களது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றி இருக்கிறார்.

    திருச்செந்தூரில் இதற்கான அதிசயங்கள் பல நடந்துள்ளன. குறுநில மன்னர்களாகத் திகழ்ந்த கட்டபொம்மன்களையும் திருச்செந்தூர் முருகன் குருவாக இருந்து வழி நடத்தியது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. முருகப் பெருமான் மீது கட்டபொம்மன் மன்னர்கள் வைத்திருந்த பக்திக்கு ஈடு இணையே இல்லை என்று சொல்லலாம்.

    தூத்துக்குடி அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் 250 சிற்றூர்களை உள்ளடக்கி கோட்டை அமைத்து கட்டபொம்மன் மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். வீரத்தில் சிறந்த குறுநில மன்னர்களில் ஒருவராக அவர்கள் திகழ்ந்தனர். எந்த அளவுக்கு அவர்கள் வீரம் கொண்டவர்களாக இருந்தார்களோ அதே அளவுக்கு அவர்களிடம் பக்தியும் அபரிதமாக இருந்தது.

    இதற்கு வழிவகுத்தது கட்டபொம்மன் பரம்பரையின் வழி வந்த 40-வது தலைமுறையை சேர்ந்த கட்டபொம்மன் மன்னர் ஆவார். அவரது குல தெய்வம் ஜக்கம்மா. அந்த தெய்வத்தை வழிபடுவதற்காக பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிலேயே ஆலயம் உருவாக்கி இருந்தார். என்றாலும், அவரது மனம் முழுவதும் திருச்செந்தூர் முருகனிடமே இருந்தது.

    திருச்செந்தூர் முருகனை நினைக்காமல், வணங்காமல் அவர் எந்த ஒரு செயலையும் செய்ததே இல்லை. திருச்செந்தூர் முருகனிடம் உணர்விலும், உரிமையிலும் அவர் இரண்டற கலந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். மூச்சுக்கு மூச்சு திருச்செந்தூர் முருகா என்று உச்சரிப்பதையே அவர் வழக்கத்தில் வைத்திருந்தார்.

    அது மட்டுமல்ல.... திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும் மதியம் கருவறை யில் முருகப் பெருமானுக்கு நைவேத்தியம் படைத்து பூஜைகள் முடிந்தபிறகே மதிய உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

     

    திருச்செந்தூரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் பாஞ்சாலங்குறிச்சி உள்ளது. அப்படி இருக்கும்போது தினமும் மதியம் திருச்செந்தூரில் முருகனுக்கு நைவேத்தியம் ஆகி விட்டது என்பது அவருக்கு எப்படி தெரிந்தது? இதற்கு அந்த காலத்திலேயே அந்த கட்டபொம்மன் அருமையாக ஒரு ஏற்பாடு செய்து இருந்தார்.

    அதாவது திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுரத்தின் 7-வது மாடத்தில் அவர் மிக பிரமாண்டமான வெண்கல மணி ஒன்றை அமைக்க உத்தரவிட்டார். அது போன்று திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை சுமார் 2 கிலோ மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே மணி கட்டி தொங்கவிடப்பட்டு இருந்த மண்டபங்களை அமைத்தார்.

    ஒவ்வொரு மணி மண்டபத்திலும் பணியாட்களை நியமனம் செய்து இருந்தார். திருச்செந்தூர் கோவிலில் மதியம் முருகப் பெருமானுக்கு நைவேத்தியம் படைத்து பூஜைகள் முடிந்ததும் ராஜகோபுரத்தில் 7-வது மாடத்தில் கட்டப்பட்டு இருக்கும் வெண்கல மணியை ஒருவர் வேகமாக அடித்து ஒலிக்க செய்வார்.

    அந்த ஒலி சத்தம் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் அடுத்த மணி மண்டபத்துக்கு கேட்கும். உடனே அந்த மண்டபத்தில் இருப்பவர் அங்கிருக்கும் மணியை அடிப்பார். அது அடுத்த 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மணி மண்டபத்துக்கு கேட்கும். அந்த சத்தம் கேட்டதும் அடுத்த மணி மண்டபத்தில் இருப்பவர் பிரமாண்டமான வெண்கல மணியை ஒலிக்க செய்வார்.

    இப்படியே திருச்செந்தூரில் அடிக்கப்படும் வெண்கல மணி ஓசை அடுத்தடுத்து மணி மண்டபங்கள் மூலம் கடந்து பாஞ்சாலங்குறிச்சியை எட்டி விடும். அந்த மணி ஓசை கேட்டதும் கட்டபொம்மன் மன்னர் மகிழ்ச்சி அடைவார். அதன் பிறகே அவர் திருச்செந்தூர் முருகனை மனதில் நினைத்துக் கொண்டு மதிய உணவு அருந்த அமருவார்.

    இது ஒருநாள் இரண்டு நாள் நடந்தது அல்ல. 40-வது வழிவந்த மன்னரான கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி அரண்மனையில் வாழ்ந்த அனைத்து நாட்களிலும் நடந்தது. இதன் மூலம் கட்டபொம்மன் திருச்செந்தூர் முருகன் மீது வைத்திருந்த பக்தியும், அன்பும் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை உணர்ந்துக் கொள்ள முடியும்.

    கட்டபொம்மன் அமைத்த அந்த மணி மண்டபங்கள் இன்றும் ஆறுமுகநேரி, ஆத்தூர், பழைய காயல், ஒட்டப்பிடாரம் உள்பட பல இடங்களில் இருப்பதை காண முடியும். அந்த 40-வது கட்டபொம்மனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு மன்னர்களும் திருச்செந்தூர் முருகனுக்கு மதியம் நைவேத்தியம் முடிந்த பிறகு சாப்பிடுவதையே வழக்கத்தில் வைத்திருந்தனர்.

    கட்டபொம்மன் மன்னர்கள் வரிசையில் 47-வது மன்னராக பதவி ஏற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி நிறைவு பெற்ற பிறகு அந்த மணி மண்டபங்கள் பயன் இல்லாமல் போய் விட்டன.

    அதுபோல திருச்செந்தூர் ஆலய ராஜகோபுரத்தின் 7-வது மாடத்தில் கட்டப்பட்ட பிரமாண்ட மான வெண்கல மணியும் பயன்படுத்தாமலேயே இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் ஆலயத்தில் கும்பாபிஷேக பணிகள் நடந்தபோது அந்த மணியை சீரமைத்து மீண்டும் ஒலிக்க செய்தனர்.

    மேலும், திங்கட்கிழமை தோறும் அதிகாலையில் கட்டபொம்மனுக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருந்து இலை விபூதி பிரசாதத்தை குதிரை வீரர்கள் கொண்டு வந்து கட்டபொம்மனிடம் கொடுத்துச் செல்வார்கள். விபூதி கையில் கிடைத்தபிறகே அன்றாட பணிகளை கட்டபொம்மன் தொடங்குவார்.

    வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந்தூர் முருகன் மேல் கொண்டிருந்த பக்தியால், தன்னுடைய நெற்களஞ்சியங்களில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அன்னதானம் அளிக்க பல ஆயிரம் கோட்டை நெல்லை அனுப்பிக் கொண்டிருக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். குடிமக்களும் தம் வயல்களில் இருந்து நெல்லைக் காவடியாகச் சுமந்து கோவிலுக்குச் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வந்து பணித்திருந்தார்.

    ஒரு சமயம், தன் மனைவிக்கு தங்க அட்டிகை ஒன்றை அன்பளிப்பாக வழங்க விரும்பி பொற்கொல்லரிடம் அதைத் தயாரிக்கும்படி சொல்லி இருந்தார் கட்டபொம்மன்.

    அன்றிரவு அவர் கனவில் தோன்றிய முருகன் அந்த அட்டிகையை நீ எனக்குத் தந்திருக்கலாமே? என்றாராம். அட்டிகை தயாரான உடனேயே அதை எடுத்துப் போய் திருச்செந்தூர் கோவிலில் முருகனுக்கு அணிவித்து விட்டார்.

    இந்த சம்பவம் நடந்து எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடி விட்டன. காலங்கள் மாறி விட்டன. என்றாலும் வீரபாண்டிய கட்டபொம்மன் கொடுத்த ரத்தின மாலையும் இதர ஆபரணங்களும் இன்றும் பொலிவோடு திருச்செந்தூர் முருகனுக்கு அலங்கரிக்கப்படுகிறது.

    இன்னொரு சமயம், திருச்செந்தூரில் மாசி திருவிழா நடந்து கொண்டிருந்தது. தேரோட்டத்துக்குத் தேர் தயாராக நிற்கிறது. கட்டபொம்மன் வந்து வடம் பிடித்து கொடுக்க வேண்டும். ஏனோ அன்று, வர முடியவில்லை.

    சரி, நாமே தேரை இழுத்து விடலாம், என பக்தர்கள் தேரை இழுத்தனர். தேர் சிறிது தூரம்தான் உருண்டது. அதற்கு மேல் நகராமல் நின்று விட்டது. தேரின் சக்கரம் ஓரிடத்தில் பதிந்து நின்று கொண்டது. எவ்வளவோ பக்தர்கள் முயற்சித்தும் தேர் நகரவில்லை. இதற்கிடையில் கட்டபொம்மனுக்கு செய்தி கொண்டு சேர்த்து, அவரும் அங்கு வந்து சேர்ந்தார்.

    கட்டபொம்மன் தேர்வடத்தை பற்றி பிடித்தார். உடனே தேர் நகர்ந்தது. இதுபோல பல அற்புதங்களை கட்டபொம்மன் மூலம் முருகன், அவரின் பக்தியை மெச்சி அருளி இருக்கிறார். கட்டபொம்மன் மன்னர்கள் திருச்செந்தூர் முருகனுக்காக அளித்த நிலங்கள் ஏராளம். அவை இன்றும் "செந்தில் பண்ணை" என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன.

    நிலங்கள் மட்டுமின்றி திருச்செந்தூர் முருகனின் தினசரி பூஜைக்காக உதய காலம், உச்சி காலம், நையினார் கட்டளை, ஞானாபிஷேகம், நிறைஅலங்காரம், நைவேத்தியம் போன்ற பல்வேறு பணிகளை உருவாக்கி இருந்தனர். தங்கள் சொத்துக்களில் இருந்து இந்த பணிகளை செய்ய ஏற்பாடு செய்து இருந்தனர். இன்றும் இந்த பணிகள் தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல கட்டபொம்மன் உருவாக்கிய திருவிழா வழிபாடுகள் திருச்செந்தூர் ஆலயத்தில் அவரது வாரிசுகளால் இன்றளவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களால் கயத்தாரில் தூக்கில் போடப்பட்ட போது அவர் கடைசி வார்த்தையாக திருச்செந்தூர் முருகா என்றுதான் சொன்னார்.

    கட்ட பொம்மன் மன்னர்கள் போல திருச்செந்தூர் முருகன் மீது பக்தி வைத்திருந்த குடும்பத்தினரை பார்ப்பது அரிதிலும் அரிது. இதே போன்ற இன்னொரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.

    ×