என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படும் மாவட்டமும் இந்த மாவட்டம்தான்.
    • அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளுமே இந்த தொகுதிக்கு அமைச்சர் பிரதிநிதித்துவமும் வழங்கி இருக்கிறது.

    கன்னியாகுமரி... இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டம். இந்த மாவட்டம் 1956-ல் உருவாக்கப்பட்டு தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. அதுமுதல் சட்டமன்ற தேர்தல்களையும் சந்தித்து வருகிறது. இந்த மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    இந்த 6 தொகுதிகளிலும் தேர்தலில் அறுவடை செய்ய இப்போதே அரசியல் கட்சிகளுக்குள் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதிகளை பற்றிய ஒரு கண்ணோட்டம்.

    இந்த தொகுதியில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 968 வாக்காளர்கள் இருக்கிறார்கள். 1971 முதல் இந்த தொகுதியை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி கைப்பற்றி வருகிறது. முதல் முறையாக அமைச்சர் பிரதிநிதியும் இந்த மாவட்டத்தின் தொகுதியில் தான் கிடைத்தது. தற்போது அ.தி.மு.க. கைவசம் இருக்கிறது. தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    எல்லா தேர்தல்களிலும் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையேதான் நேரடி போட்டி ஏற்படும். எனவே இந்த முறையும் அந்த மாதிரி சூழல்தான் ஏற்படும் என்பதை உறுதியாக நம்பலாம். அ.தி.மு.க. சார்பில் மீண்டும் தளவாய்சுந்தரமே களம் இறக்கப்படுவார் என்று அந்த கட்சியினர் கூறுகிறார்கள். அவர்கள் தேர்தல் பணிகளையும் தொடங்கி விட்டார்கள். தி.மு.க. சார்பில் மோதப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

    வாய்ப்பு கேட்டு பலர் பல வழிகளிலும் காய் நகர்த்துகிறார்கள். அவர்களில் பிரபா ராமகிருஷ்ணன், பாபு, தாமரை பாரதி, ஆர்.எஸ்.பார்த்தசாரதி, பி.டி.செல்வகுமார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

    நாகர்கோவில்

    கன்னியாகுமரி மாவட்டத்தின் தலை நகரான இந்த தொகுதியில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 22 பேர் வாக்காளர்களாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண் வாக்காளர்களே அதிக அளவில் இருக்கிறார்கள். இந்த தொகுதியில் நாகர்கோவில் மாநகராட்சியும் அமைந்து உள்ளது.

    1977 முதல் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கைப்பற்றி வந்த இந்த தொகுதியை முதல்முறையாக கடந்த தேர்தலில் பா.ஜனதா கைப்பற்றியது. எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். மீண்டும் இந்த தொகுதியை கைப்பற்ற தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. கூட்டணியில் தி.மு.க.வுக்குதான் இந்த தொகுதி ஒதுக்கப்படும் என்று உடன்பிறப்புகள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

    தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டால் கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மீண்டும் களம் இறக்கப்படுவார் என்று பரவலாக பேசப்படுகிறது. அதே நேரம் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் ஆகியோரும் சீட் கேட்டு காய் நகர்த்தி வருகிறார். மேயர் பதவி முடிவடைய இன்னும் காலம் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்க கட்சி தலைமை யோசிக்கும். கடைசியில் சுரேஷ்ராஜனா? ஹெலன் டேவிட்சனா? என்பது போல் தலைமை யோசிக்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள்.

     

    அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய இரு கட்சிகளுமே தங்களுக்குதான் இந்த தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறி வருகிறார்கள். யாருக்கு ஒதுக்கப்படுகிறதோ? அதன் பிறகே போட்டி கடுமையாகும். பா.ஜனதா வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மீண்டும் தக்க வைப்பதில் அந்த கட்சியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    குளச்சல்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் சற்று குறைவாக இருக்கும் ஒரே தொகுதி இந்த தொகுதி. மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 448 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 885. பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 562 பேர்.

    பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குளச்சல் மீன்பிடி துறைமுகம் இந்த தொகுதியின் முக்கிய அடையாளங்கள். கடந்த 1971 முதல் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 3 கட்சிகளும் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றன. கடந்த 2011 முதல் 3 முறை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தன் கைவசம் வைத்துள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படும் மாவட்டமும் இந்த மாவட்டம்தான். குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 3 தொகுதிகளும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த முறையும் குளச்சல் தொகுதியும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கப்படும் என்று கதர் சட்டைகாரர்கள் உறுதியாக கூறுகிறார்கள். இந்த தொகுதி எம்.எல்.ஏ.வான பிரின்ஸ் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஒருவேளை 3 முறை எம்.எல்.ஏ.வாக இருப்பதால் வேட்பாளர் வேண்டுமானால் மாறலாம். ஆனால் தொகுதி மாறப் போவதில்லை என்பது கதர் சட்டைகாரர்களின் வாதம்.

    இந்த சூழலில் சைக்கிள் கேப்பில் தி.மு.க.வும் இந்த தொகுதியை இந்த முறை கைப்பற்ற முனைப்புடன் இருப்பதாக உடன்பிறப்புகளும் கூறி வருகிறார்கள். எனவே தொகுதி யாருக்கு? என்பது தெரிந்த பிறகு வேட்பாளர் தேர்வு களைகட்டும். அதே நேரம் அ.தி.மு.க. கூட்டணியிலும் இந்த தொகுதி அ.தி.மு.க.வுக்கா, பா.ஜனதாவுக்கா என்ற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது.

    பத்மநாபபுரம்

    இந்த தொகுதியில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 56 வாக்காளர்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ், மார்க்சிஸ்டு, அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் மாறி மாறி கைப்பற்றி வந்துள்ளன. தமிழகத்தில் முதல் முறையாக பா.ஜனதா தடம் பதித்ததும் இந்த தொகுதியில்தான். 1996-ல் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட வேலாயுதன் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த 15 ஆண்டுகளாக தி.மு.க. கைவசம் இந்த தொகுதி இருந்து வருகிறது.

    அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளுமே இந்த தொகுதிக்கு அமைச்சர் பிரதிநிதித்துவமும் வழங்கி இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் கு.லாரன்ஸ், ராஜேந்திர பிரசாத் ஆகியோர் அமைச்சர்களாக இருந்து இருக்கிறார்கள். தற்போது தி.மு.க.வை சேர்ந்த மனோதங்கராஜ் அமைச்சராக இருக்கிறார். அதே நேரம் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதாவும் இந்த தொகுதியை பெறுவதில் தீவிரமாக இருக்கிறது. எனவே 3 கட்சிகளிலும் வாய்ப்புக்காக பலர் காய் நகர்த்தி வருகிறார்கள்.

    விளவங்கோடு

    இந்த தொகுதியில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 219 வாக்காளர்கள் இருக்கிறார்கள். கடந்த 1971 முதல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கைவசமே இந்த தொகுதி இருந்து வருகிறது. 2011 முதல் 3 முறை இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2023-ல் அவர் காங்கிரசை விட்டு விலகியதால் 2024-ல் இந்த தொகுதி இடைதேர்தலை சந்தித்தது. அப்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாரகை கத்பட் வெற்றி பெற்றார்.

    மீண்டும் இந்த தொகுதியை கைப்பற்ற காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதே நேரம் ஏற்கனவே பல முறை வெற்றியை ருசித்த இந்த தொகுதியை இந்த முறை கைப்பற்ற கம்யூனிஸ்டு கட்சியும் தீவிரமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் சீட்டை கைப்பற்ற தற்போதைய எம்.எல்.ஏ. தாரகை கத்பட்டும், ரூபி மனோகரனும் இப்போதே மல்லு கட்ட தொடங்கி விட்டார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணியில் மீண்டும் பா.ஜனதாவுக்கே இந்த தொகுதி வழங்கப்படும். விஜயதாரணியே களம் இறங்குவார் என்கிறார்கள் தாமரை சொந்தங்கள்.

    கிள்ளியூர்

    இந்த தொகுதியில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 837 வாக்காளர்கள் இருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு பாடுபட்ட பொன்னப்ப நாடார், மார்ஷல் நேசமணி போன்றவர்கள் போட்டியிட்டு வென்ற தொகுதி என்ற சிறப்புக்குரியது. அதுமட்டுமல்ல தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இதுவரை இந்த தொகுதியை கைப்பற்றியது இல்லை.

    1971 முதல் காங்கிரஸ், ஜனதா தளம், த.மா.கா. ஆகிய கட்சிகள்தான் தொடர்ந்து கைப்பற்றி வந்துள்ளன. 2006 முதல் தொடர்ச்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது. இதில் கடந்த 2 முறை தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராஜேஷ்குமார் வெற்றி பெற்று வருகிறார். தற்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார்.

    இந்த தொகுதியில் காங்கிரசுக்கு அடுத்ததாக பா.ஜனதாவுக்கும் கணிசமான செல்வாக்கு இருக்கிறது. எனவே தேசிய கட்சிகளான காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் நேரடி போட்டி உருவாகும் தொகுதியாகவும் பார்க்கப்படுகிறது.

    எது எப்படியாகினும் எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்பது தெரிந்த பிறகே மற்ற விவரங்கள் தெளிவாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 30- தனித்த குருவின் ஆதிக்கம் நிறைந்த எண்.
    • கல்வியில் சாதனை மேல் சாதனை செய்யும் அமைப்பு உண்டாகும்.

    3, 12, 21, 30, 39, 48, 57, 66, 75, 84, 93, 102 ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர்களும் 3,12,21,30-ந் தேதிகளில் பிறந்தவர்களும் குருவின் ஆதிக்கம் பெற்றவர்கள். மூன்றாம் எண் குருவின் ஆதிக்கம் கொண்டது. ஒன்பது எண்களில் 3ம் எண்ணிற்குத் தனி மகத்துவம் உண்டு. அடக்கம்,பொறுமை,பெரியோருக்கு கீழ்படிதல், தன்னம்பிக்கை, நீதி, நேர்மை, கவுரவம் ஆகிய குணங்கள் மிகுதியாகவே இருக்கும். முன்னோர்களை பின்பற்றி நடப்பவர். முன்னோர்களின் நல்லாசி பெற்றவர்கள். மற்றவர்கள் போற்றத்தக்க குணங்களைக் கொண்டவர்கள். எதையும் நேர்வழியில் செய்யக் கூடியவர்கள். புகழ், அந்தஸ்து சுயகவுரவம் இவர்களது தாரக மந்திரம்.

    பெயரெண்:3- தனித்த குருவின் ஆதிக்கம் நிறைந்த எண். சிறந்த சிந்தனையாளர்கள். பொறியியல், கணிதம், விஞ்ஞானம் போன்ற ஏதாவது ஒரு துறையில் வல்லுநர்களாக வருவார்கள். வெற்றியையும் மகிழ்ச்சியான வாழ்க்கை கல்வியையும் அந்தக் கல்வியால் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அடைவார்கள்.

    பெயரெண்:12- சூரியன் மற்றும் சந்திரனின் ஆதிக்கம் இணைந்த எண். பேச்சுத் திறமை உண்டு. இவர்களின் திறமையான பேச்சாற்றலே இவர்கள் வாழ்க்கை உயர்வுக்கு காரணமாக அமையும். சிறந்த எழுத்தாளராகவும் கதை, கவிதை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும்.

    பெயரெண்:21- சந்திரன் மற்றும் சூரியனின் ஆதிக்கம் சேர்ந்த எண். அதிகாரமாகப் பேசி தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். படிப்பு, தொழில் ஆகியவற்றில் இவர்கள் சுயமாகவே போராடி முன்னேறிவிடுவார்கள். சுய லாபத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பணத்தால் சாமர்த்தியமாக எதையும் சமாளிப்பார்கள்.

    பெயரெண்:30- தனித்த குருவின் ஆதிக்கம் நிறைந்த எண். வாழ்க்கையில் தனியாகப் போராடப்பிறந்தவர்கள். தாய், தந்தை, உறவினர்களின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். நுண்ணிய அறிவு மற்றும் தீர்க்கமான யோசனையால் இஷ்டம்போல் செயல்படுவார்கள். அடுத்தவர் மனதை சுலபமாக அறிந்து வெற்றியை பெறுபவர்கள். தங்கள் தகுதியால் நீதிபதிகள், வக்கீல்கள், பேராசிரியர்கள் ஆகிய பெரும்பதவிகளை வகிப்பவர்கள்.

    பெயரெண்:39- குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை கலந்த பிரதிபலன் தரும் எண். தீவிர உழைப்பாளி. புகழுக்காக உழைத்தாலும் புகழ் பெற மாட்டார்கள். பலமுறை தோல்விகளைச் சந்தித்தாலும் சளைக்காமல் உழைப்பார்கள். நடுவயதில் இவர்கள் பல வாழ்க்கைப் பிரச்சினைகளை சந்திப்பார்கள். ஆரோக்கிய குறைவு உண்டு. இவரின் உழைப்பு இவரைவிட பிறருக்கே பயன்படும். வாழ்வின் பிற்பகுதியில், தாங்கள் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, ஆனந்தமான வாழ்க்கை வாழ்வார்கள்.

    பெயரெண்:48- ராகு மற்றும் சனியின் ஆதிக்கம் ஒருங்கிணைந்த எண். நித்திய கண்டம் பூரண ஆயுளான வாழ்க்கை அமையும். திடீர் ஏற்றம் அல்லது எதிர்பாராத இறக்கம் மிகைப்படுத்தலாக இருக்கும். பரிட்சயம் இல்லாத தொழிலில் ஆர்வத்துடன் இறங்குவார்கள். எல்லாம் தெரிந்தவர்கள் போல் பாசாங்கு செய்வார்கள். மத விஷயங்களில் தீவிரவாத எண்ணம் உண்டு.

    பெயரெண்: 57- புதன் மற்றும் கேதுவின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய நலம் மிகுந்தவர்கள். எப்போதும் தங்களின் நலன் பற்றியே சிந்திப்பார்கள். வாழ்க்கையின் முன் பகுதியில் பல ஏற்றத் தாழ்வுகள் மூலம் நல்ல அனுபவங்களைப் பெறுவார்கள். உலகத்தில் புதிதாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வாழ்நாள் முழுவதும் யாரையாவது காதலித்துக் கொண்டே இருப்பார்கள்.

    பெயரெண்: 66- சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த எண். அழகு ஆடம்பரம் பற்றிய சிந்தனை மிகைப்படுத்தலாக இருக்கும். கலை உணர்வு உண்டு. இசை, நாட்டியம், நடிப்பு, சின்னத்திரை, சினிமா போன்றவற்றில் இவர்களின் பங்களிப்பு பாராட்டத் தகுந்த வகையில் இருக்கும். சூழ்நிலைக்கு

    ஏற்ப தங்களை மாற்றி அனுசரித்து செல்பவர்கள். பேச்சாற்றல் மிக்கவர்கள். அரசாங்க அரசியல் தொடர்பு சுகபோக வாழ்க்கை உண்டு.

    பெயரெண்: 75- கேது மற்றும் புதனின் பண்புகள் இணைந்த எண்.மிகுந்த திறமைசாலிகள், பணத்தைவிடச் சுய திருப்தியை பிரதானமாக நினைப்பார்கள். எதையும் துருவித் துருவி ஆராயும் குணம் உண்டு. திடீரென புகழ் ஏற்படும். வெகுவிரைவில் அதிக நண்பர்களை அடைவார்கள். கதை, கவிதை, கட்டுரை, எழுதுவார்கள். இசைக் கலையில் தனித்துவம் படைப்பவர்கள். காதலுக்காக உயிரையும் தியாகம் செய்பவர்கள்.

    பெயரெண்: 84- சனி மற்றும் ராகுவின் ஆதிக்கம் நிறைந்த எண். பால்ய வயதில் கஷ்டமான வாழ்க்கை வீண் விரோதம் உண்டு. கவலையே அதிகம். முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் இல்லை. காரணமே இல்லாமல் பலருடைய விரோதமும் எதிர்ப்பும் ஏற்படும்.

    பெயரெண்: 93- செவ்வாய் மற்றும் குருவின் ஆதிக்கம் நிறைந்த எண். கவுரவம் எப்போதும் கிடைக்கும். தனிமையிலே சிந்திப்பதில் நாட்டம் உள்ளவர்கள். அரசியல் தொடர்பும் ஏற்படும். உலக அறிவு மிகுதியாக உண்டு. அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் எண். வெளிநாட்டு வாணிபம் தொடர்புடைய தொழில்கள் சிறப்படையும். பல அரிய காரியங்களை சாதிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.

    பெயரெண்: 102- சூரியன் மற்றும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். பொதுவாக பூஜ்யத்துடன் இணைந்த எண்கள் சுப பலனைத் தருவதில்லை.ஆரம்பத்தில் வெற்றியும் நடுவில் சோர்வும் முடிவில் குழப்பமும் ஏற்படும். விசேஷமான பலன்களை தராது. வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். பிறவி எண் என்பது ஒருவர் பிறந்த தேதியைக் குறிக்கும் எண் ஆகும். விதி எண் என்பது ஒருவரின் முழு பிறந்த தேதி மாதம், வருடம் அனைத்தையும் கூட்டி வரும் ஒற்றை இலக்க எண் ஆகும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

     

    பிறவி எண் 3 விதி எண்.1

    குரு மற்றும் சூரியனின் ஆதிக்கம் கலந்த எண். சுய ஜாதகத்தில் குருவும், சூரியனும் பலம் பெற்றால் அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் நிரம்பியவர்கள். மிடுக்கான தோற்றமும் நளினமும் நிரம்பியவர்களாக இருப்பார்கள். தாயும், தந்தையும் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். கல்வி, நிதி, நீதி, ஆசிரியர், வங்கிப் பணி, நிர்வாகப் பதவியில் இருப்பார்கள். சுய ஜாதகத்தில் குருவும், சூரியனும் வலிமை இழந்தால் பணத்தால் பிரிந்த குடும்பங்கள், பல உண்டு. சில நேரங்களில் அதீத இரக்கப்பட்டு ஏமாறும் நிலையும் ஏற்படும்.

    பிறவி எண் 3 விதி எண்.2

    குரு மற்றும் சந்திரனின் ஆதிக்கத்தை பிரதிபலிக்கும் குருச் சந்திர யோகம் நிறைந்த எண். இவர்களுக்கு பணப் புழக்கம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். சுய ஜாதகத்தில் தன, லாப கிரகம் பலம் பெற்றால் தொட்டது துலங்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை நல்ல நிலையில் இருக்கும். பள்ளிப் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். தொழில் உத்தியோகம் மூலமாக வருமானம் வந்து கொண்டே இருக்கும். அதன் மூலம் புகழ், அந்தஸ்து, கவுரவம் கூடும். சுய ஜாதகத்தில் குருவும் சந்திரனும் கெட்டால் இது கெடுதியான கொடூரமான அமைப்பு. கடனில் வாழ்க்கை எனும் கப்பல் முழ்கும்.

    பிறவி எண் 3 விதி எண்.3

    தனித்த குருவின் ஆதிக்கம் நிறைந்த எண் என்பதால் அற்புதமான உன்னத பலன்களை அனுபவிக்கிறார்கள் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால் தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு என நூற்றுக்கணக்கான வகையில் தன வரவு உண்டாகிறது. கல்வியில் சாதனை மேல் சாதனை செய்யும் அமைப்பு உண்டாகும். சிறப்பான மண வாழ்க்கை, தொழில் ரீதியாக மேன்மை, பொருளாதார உயர்வுகள், சமுதாயத்தில் பெயர், புகழ் உயரக்கூடிய வாய்ப்பு போன்ற யாவும் உண்டாகும். சுய ஜாதகத்தில் குரு பலவீனமாக இருந்தால் முறையான திட்டமிடுதல் இல்லாமல் ஏற்ற இறக்கமான வாழ்க்கை வாழுகிறார்கள்.

    பிறவி எண் 3 விதி எண்.4

    குரு மற்றும் ராகுவின் ஆதிக்கம் நிறைந்த எண். இதை ஜோதிட ரீதியாக குரு சண்டாள யோகம் என்று கூறலாம். இந்த கிரக கூட்டணி சுபமாகவோ அல்லது பலமாகவோ அமைந்து விட்டால் அங்கு யோகம் தான் அதிகமாக வேலை செய்யும். மாறாக ஜனன ஜாதகத்தில் பலவீனமாகவோ அல்லது அசுபமாகவோ அமைந்து விட்டால் அங்கு தோஷமே அதிகமாக வேலை செய்யும். கடுமையான புத்திர தோஷத்தை ஏற்படுத்துகிறது. குரு ராகுவோடு 8 டிகிரிக்குள் இணைந்தால் ராகு தசையில் சம்பாதித்த அனைத்தும் குரு தசையில் இழக்க நேருகிறது.

    பிறவி எண் 3 விதி எண்.5

    குரு மற்றும் புதனின் ஆதிக்கம் கலந்த அற்புதமான எண்கள். இந்த அமைப்பில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் தனகாரகன் குரு மற்றும் புத்திக்காரகன் புதன் பலம் பெற்றால் தொழில், வியாபாரம், செய்பவர்களை பார்த்து தாமும் தொழில் செய்ய வேண்டும் என்று ஓர் உந்து சக்தி இவர்கள் மனதில் தோன்றும். வாக்கு சாதுர்யத்தால் உடல் உழைப்பு இல்லாமல் மூளையை பயன்படுத்தி பேச்சின்மூலம் பணம் சேர்க்கிறார்கள். சுய ஜாதகத்தில் குருவும் புதனும் பலம் குறைந்தால் முறையான திட்டமிடுதல் இன்மை யால் தவறான கூட்டாளிகள் மற்றும் நண்பர்களால் கூட்டுத் தொழிலில் பிரிவினை அல்லது நட்டம் ஏற்படுகிறது.

    பிறவி எண் 3 விதி எண்.6

    குரு மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் கலந்த எண்.ஜோதிட ரீதியாக குரு, சுக்ரன் பகை கிரகச் சேர்க்கை என கூறப்பட்டாலும் இந்த கிரக இணைவு பலமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதிர்ஷ்டமான தொழில், உத்தியோகம் மூலம் பொன், பொருள், அசையும், அசையா சொத்துகள் அமைகிறது. இந்த அமைப்பு பொருளாதாரத்தில் தன் நிறைவைத் தந்தாலும் ஆண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண வாழ்க்கை அல்லது பெண்கள் தொடர்பை ஆண்களுக்கு வழங்கத் தவறுவது இல்லை.

    பிறவி எண் 3 விதி எண்.7

    குரு மற்றும் கேதுவின் ஆதிக்கம் கலந்த கோடீஸ்வர யோகமான அமைப்பாகும். குருவிற்கு கேந்திரம் திரிகோண இடங்களில் கேது நிற்பதும், குரு 5, 7, 9ம் பார்வையால் கேதுவைப் பார்ப்பதும், உயர்தர கோடீஸ்வர யோகத்தைத் தரும். சொகுசான வாழ்க்கை ஏற்பட்டு, கோடீஸ்வரனாகும் யோகம் உண்டாகும். வெளி போர்வைக்கு பணக்காரனாக வாழ்ந்தாலும் கையில் காசு பணம் தங்காத நிலை, வட்டி, வட்டிக்கு வட்டி, கடன், நகைக் கடன், வங்கிக் கடன் வாகனக் கடன், வீடு, நிலம் வாங்கியதில் கடன் என்று பணம் பல்வேறு வகைகளில் கையில் இருப்பு இல்லாத அமைப்பு ஏற்படும்.

    பிறவி எண் 3 விதி எண்.8

    குரு மற்றும் சனியின் ஆதிக்கம் இணைந்த தர்மகர்மாதிபதி யோக அமைப்பாகும்.ஒருவருக்கு இந்த கிரக எண்களால் வாழ்நாள் முழுவதும் புண்ணிய பலன்கள் கிடைக்க ஜனன கால ஜாதகத்தில் குருவும் சனியும் சுப வலிமை பெற வேண்டும். கூரை வீட்டில் வாழ்ந்தவரை கூட குபேரனாக மாற்றி யுள்ளது என்பதிலும் மாற்றுக் கருத்துஇல்லை. பிள்ளைகள் பிறந்த பின்பு வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். சுய ஜாதகத்தில் குருவும், சனியும் பலம் குறைந்தால் குல தெய்வ அனுகிரகம், முன்னோர்களின் நல்லாசி இருக்காது. கஷ்ட ஜீவனம் கடன் வறுமை நீடிக்கும்.

    பிறவி எண் 3 விதி எண்.9

    குரு மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் கலந்த குரு மங்கள யோகமாகும். சுய ஜாதகத்தில் குரு செவ்வாய் பலம் பெற்ற இந்த எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு பூமி, மனை சேர்க்கை, செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.தாய், தாய் வழி உறவி னர்களின் அன்பும் அனுசரனையும் பெற்றவர்கள். இல்வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வீட்டில் அதிகம் இருக்கும்.ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டி பறப்பவர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும். குரு, செவ்வாய் பலம் குறைந்தால் வீடு மனை அமைவது சிரமம். பொதுவாக மூன்றாம் எண் ஆதிக்கத்தில் பெயர் அமைந்தால் கவுரவத்திற்காகவும் தற்பெரு மைக்காகவும் வாழ்வார்கள்.

    செல்: 98652 20406

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நல்லவனுக்கு தீயவர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்வதே பெரும் பாடாக இருக்கின்றது.
    • நம்ப வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது.

    மனிதன் முழு மனநிம்மதியுடன் வாழ்ந்தான்' -என்பது எந்த காலத்திலாவது ஒத்து வந்த வார்த்தையா- வாக்கியமா என்று பார்த்தால் சற்று யோசித்து தான் பார்க்க வேண்டும். ஆமாம்... என்று முழுமையாக மனம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் நல்லவனோ, தீயவனோ இரு பிரிவினருமே 'நிம்மதி' இல்லாமல்தான் வாழ்ந்துள்ளனர். நல்லவனுக்கு தீயவர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்வதே பெரும் பாடாக இருக்கின்றது. ஞானிகளையும், மகான்களையும் இந்த இடத்தில் நாம் பேசக்கூடாது.

    அவர்கள் எல்லாம் கடந்தவர்கள். அதனால் தான் அவர்கள் சித்தர்கள், ஞானிகள், மகான்கள், முனிவர்கள் என குறிப்பிடப்படுகின்றனர். ஆக மனிதன் தனக்கு தேவையான ஒன்றிற்காக உயர் சக்தியினை நாடுகின்றான். வணங்குகின்றான். தன்னால் முடிந்த பரிகாரங்களை செய்து நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றான்.

    நம்பினால் உறுதியான நம்பிக்கை இருந்தால் மலையினைக் கூட நகர்த்திவிட முடியும் என்ற ஆங்கில சொற்றொடர் உண்டு. அதன்படி நம் முன்னோர்கள், வழிகாட்டிகள் கூறிய உரிய வழி முறைகளை நாம் பின்பற்றி வருகின்றோம். அதனை பரிகாரங்கள் என்று சொல்கின்றோம். இதனைப் பற்றி வயதில் மூத்த ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர், கூறியவற்றினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். அவர் இதனை ஆன்மீக நம்பிக்கை சார்ந்த பரிகாரங்கள் என்றார். இவை அவரவர் நம்பிக்கையினைப் பொறுத்தது. நம்ப வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. பாரம்பரிய வழியில் வருவனவற்றை அவர் கூறினார். அவர் கூறியது மற்றும் படித்தவை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

    * செவ்வாய்க்கிழமை சக்தி தேவிகளுக்குரியது. அன்று காளியம்மனை சிவப்பு மலர் சாற்றி தேன் சிறிது வைத்து எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் எதிர்மறை சக்திகள், மன அழுத்தம் நீங்கும் என்றார். சிறு வெல்ல துண்டு, கற்கண்டு கூட வைக்கலாம். சர்க்கரை பொங்கல், மசால் வடை காளிக்கு பிடித்தமானவை.

    * அமாவாசை அன்று எள் தீபம் ஏற்றுவது பித்ருகள் மற்றும் சூட்சும சக்திகளுக்குரிய நாள். கருப்பு எள், நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவது பித்ரு தோஷ நிவாரணத்திற்கும், மறைமுக தடைகள் நீங்கவும் செய்யப்படுகின்றது.

    * விபூதி மனிதனின் நிலையற்ற வாழ்வினை உணர்த்தும். மனக்கட்டுப்பாடு, வைராக்கியத்தினைத் தரும்.

    * அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்வது குடும்பத்தில் தொடர்ச்சியாக வரும் தடைகள், மனச்சோர்வு, வம்ச தோஷம் ஆகியவை குறைய உதவும்.

    * செவ்வாய், சனிக்கிழமைகளில் ராகு காலத்தில் மந்திரஜபம் செய்வது திருஷ்டி, பயம், பகை இவற்றினைக் குறைக்கும்.

     

    * கறுப்பு உளுந்து சனிக்கிழமைகளில் தானம் செய்ய சனி சம்பந்தமான தோஷங்களை நீக்கும்.

    * துர்கா கவசம் படிப்பது பாதுகாப்பு கவசம்.

    * வீட்டில் அன்றாடம் முடிந்தால் நெய் தீபம் ஏற்றலாம்.

    * சிவனுக்கு விளக்கு காணிக்கை செய்வது கர்ம வினைகளை குறைக்கும் என ஆகமங்கள் கூறுகின்றன.

    * நவதானியங்களை தானம் செய்வது நவக்கிரக தோஷங்களை குறைக்கும். ஒவ்வொரு தானியமும் 100 கிராம் இருந்தால் கூட போதும்.

    * பஞ்சமுக ஆஞ்சநேயர் வழிபாடு பயம், திடீர் அபாயம் இவைகளை வெகுவாய் குறைக்கும்.

    * பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்வது கோப சக்தியை சாந்தப்படுத்தும் என்று சொல்லப்படுகின்றது.

    * வேப்பிலை தீய சக்திகளை விரட்டும் என்பது நாட்டுப்புற ஐதீகம். காளி,மாரியம்மன் வழிபாட்டில் முக்கியம்.

    * கால பைரவருக்கு எள் தீபம் ஏற்ற கால தோஷம், திடீர் தடைகள் குறையும்.

    * சனி பகவானுக்கு எள் எண்ணை தீபம் ஏற்ற வேலை தாமதம், மன அழுத்தம் குறையும்.

    * கருப்பு ஆடை தானம் செய்வது சனி பாதிப்பை குறைக்கும்.

    * அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது பாரம்பரிய படையல் போடுவதால் நோய், தொற்று, குடும்ப அச்சம் நீங்கும்.

    * 'ஓம் நமச்சிவாய'- ஆன்மீக உயர்வு தரும்.

    * வீட்டில் வடகிழக்கு திசையில் விளக்கு ஏற்றுவது வாஸ்து தோஷத்தினை நீக்கும்.

    * தாமிரம் உலோகம் காந்த சக்தி போல் செயல்படும்.

    * அன்னதானம்-மகா சக்தி, பெரிய புண்ணியம்.

    * வெள்ளிக்கிழமை பால் பாயாசம் நைவேத்தியம் அம்பாளுக்கு உகந்தது.

    * சனி பகவானுக்கு நல்ல எண்ணை (எள் எண்ணை) அபிஷேகம் சிறந்தது.

    * சிவ பூஜைக்கு வில்வம் அவசியமானது.

    * சிவனுக்குச் செய்யும் தேன் அபிஷேகம் வாக்கு இனிமை, மன அமைதி தரும்.

    * தினமும் நாம ஜபம் செய்வதால் மனக் கட்டுப்பாடு கிடைக்கும்.

    கமலி ஸ்ரீபால்


     

    * அம்மன் கோவிலில் குங்கும தானம் செய்வது பெண் சக்தி அனுக்கிரகம் கிடைக்கும்.

    * பைரவருக்கு வெல்லம் நிவேதனம் செய்வது கோப சக்தியினை சாந்தம் செய்யும்.

    * அமாவாசை அன்று மவுன விரதம் இருப்பதால் உள் உணர்வு அதிகரிக்கும்.

    * சிவ பூைஜயில் வெள்ளை மலர் இருந்தால் சமத்துவ குணம் பெருகும்.

    * துர்கா அஷ்டோத்ரம், நாம ஜபம் இவை தினமும் பாதுகாப்பு தரும்.

    * சிவ ராத்திரியில் முழு இரவு ஜபம் ஆன்மீக உயர்வு தரும்.

    * நாக பிரதிஷ்டை செய்வது வம்ச நன்மை தரும்.

    * சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது ஆரோக்கியம் தரும்.

    * துர்க்கைக்கு விளக்கு தானம் செய்வது வாழ்க்கையை ஒளி மயமாக்கும்.

    * குல தெய்வ பூஜை ஆண்டுக்கொரு முறையாவது செய்ய வேண்டும்.

    * ஸ்ரீ சக்தி நவாவரண பூஜை உயர்ந்த சக்தி தரும்.

    * பைரவருக்கு தேங்காய் தீபம் ஏற்றுவது திடீர் தடைகளை நீக்கும்.

    * வெள்ளிக்கிழமை-ஸ்ரீ சக்ர பூஜை- ஸ்ரீ சக்ரம் லலிதா பரமேஸ்வரியின் எந்திர வடிவம். வெள்ளிக்கிழமை பூஜை செய்தால் மனநிலை உறுதியாய் இருக்கும். குடும்பம் அன்புடன் ஒற்றுமையுடன் இருக்கும். செல்வ நிலை பெருகும் என நம்பப்படுகின்றது.

    * ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சரம் சிவ தத்துவத்தின் சாரம். சிவராத்திரி அன்று ஜபம் செய்வதால் கர்ம வினைகள் குறையும் என அனுபவங்கள் கூறுகின்றன.

    * தினமும் குங்குமம் கொண்டு லலிதா தரிஸதி சொல்லி வீட்டிலேயே பாராயணம் செய்தால் பெண்களுக்கான மனம், உடல்நிலை நன்கு இருக்கும்.

    * கறுப்பு எள் தானம் செய்வது சனி, ராகு சம்பந்தமான தோஷங்களை நீக்கும். எள்ளு பொடி சாதம் செய்து கொடுக்கலாம்.

    * நவக்கிரக ஹோமம் என்பது ஒன்பது கிரகங்களையும் சமநிலைப்படுத்தி தடை, நோய், தாமதங்களை நீக்கும் என்பது நம்பிக்கை.

    * குல தெய்வத்திற்கு நெய் தீபம் ஏற்றுவது நல்லது.

    * துர்கா சப்தசதி பாராயணம் செய்வது எதிரிகள், பயம், மனதளர்வு ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு தரும் என்பது ஐதீகம்.

    * சிவனுக்கு செய்யும் பால் அபிஷேகம் பாவ நிவாரணம், மன அமைதி தரும்.

    * செவ்வாய்க்கிழமைகளில் சிகப்பு மலர் கொண்டு அம்மனுக்கு சமர்ப்பிக்கலாம். இது சக்தி ரூபம்.

    * கால பைரவரை ஜபம் செய்ய பயம், திருஷ்டி நீங்கும்.

    * எலுமிச்சை எதிர்மறை சக்திகளை நீக்கும் என நாட்டுப்புற நம்பிக்கை உள்ளது.

    * பிரதோஷ நாளில் விளக்கேற்றுவது காரிய சித்தி தரும்.

    * சர்ப்ப தோஷ நிவாரண பூஜை-நாக தேவதை வழிபாடு செய்வது குழந்தை பாக்கியம் தரும், திருமணத் தடை நீக்கும்.

    * கால பைரவ அஷ்டகத்தினை படிப்பது திடீர் பயம், தடைகள் நீங்க உதவும்.

    * தாமரை கொண்டு லட்சுமி வழிபாடு செய்வது செல்வம் தரும்.

    * அம்மன் கோவிலில் வெற்றிலை தானம் செய்வது வாக்கு சக்தி அதிகரிக்கும்.

    * தினமும் மன சுத்தியுடன் தியானம் செய்வது அனைத்து பரிகாரங்களின் சாரம் எனப்படுகின்றது.

    இந்திய ஆன்மீக மரபில் பரிகாரங்கள் வாழ்வில் உடல், மனம், ஆன்மா இந்த மூன்றினையும் சமநிலைப்படுத்தும் வழிகளாகக் கருதப்படுகின்றன. இவை மந்திரம், எந்திரம், தந்திரம், பூஜை, விரதம், தானம், ஹோமம், ஜபம், தானம் போன்ற பல பிரிவுகளை உள் கொண்டவை. ஆகமங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் மற்றும் தமிழ்நாட்டுப் புற வழிபாட்டு மரபுகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவானவை இப்பரிகாரங்கள்.

    வாழ்க்கையில் ஏற்படும் தடைகள், பயம், மன அமைதி குறைவு, குடும்ப சிக்கல், பொருளாதார நெருக்கடி, நோய், திருமண தாமதம், பித்ரு தோஷம், நாக தோஷம் போன்ற பல கஷ்டங்களுக்கு ஆன்மீகத் தீர்வாக இவை கருதப்படுகின்றன.

    ஆயிரம், லட்சம் என பணம் செலவழிக்காமல் நாம் விரும்பும் உயர் சக்தி வடிவினை வணங்கி எளிய முறையில் பரிகாரங்கள் செய்யலாமே.

    இவை மருத்துவ, உளவியல் சிகிச்சைகளுக்கு மாற்றாக கூறப்படவில்லை என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    இவை அனைத்தும் உடனே பலித்து விடும என்று கூறப்படவில்லை. உயர் சக்தியினை வேண்டும்போது அதற்கு பலன் இருக்கும். பரிகாரங்கள் மனம், உடலுக்கு பாதுகாப்பு தரும். உறுதியான மனமும், வலிவான உடலும் தந்து தடைகளை உடைத்து முன்னேறும், வெற்றி பெறும்.

    தியான முறையும், பிரார்த்தனை முறையும், பக்தி முறையும் அனைத்து மதங்களிலும் அறிவுறுத்தப்படுகின்றது. ஒளி மயமான உயர் சக்தியை ஒருவர் என்ன பெயர் கொண்டு அழைத்தாலும் சக்தி வந்திறங்கும். நம்மை நாம் முன்னேற்றிக் கொள்ள செலவில்லாது நாமே செய்யும் பரிகாரங்களும் ஒரு வழியே என்பதனை அறிவோமாக.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரத்த நாளங்களில் கொழுப்பு படிகின்றது.
    • நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இதய நோய் அபாயம் இரண்டு முதல் நான்கு மடங்கு கூடுதலாக இருக்கின்றது.

    சர்க்கரை நோயினைப் பற்றி அடிக்கடி பல மருத்துவர்கள் தொடர்ந்து பேசியும், எழுதியும் வலியுறுத்தி வருகின்றனர். இன்று இந்த பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த கருத்து வலியுறுத்தப்படுகின்றது. சர்க்கரை என்பது உடலுக்குத் தேவையான ஆற்றல் மூலமாக இருந்தாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு நீண்ட காலம் அதிகமாக இருந்தால் அது உடலின் பல முக்கிய உறுப்புகளை மெதுவாகவும், ஆழமாகவும் பாதிக்கின்றது. இந்த பாதிப்புகள் "நீரிழிவு பாதிப்புகள்" என்று அழைக்கப்படுகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் உடல் உறுப்புகள் வருமாறு:-

    மூளை- அதிக சர்க்கரையால்

    * மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கிறது.

    * நினைவாற்றல் குறைவு ஏற்படுகின்றது.

    * மூளையில் ரத்த கசிவு, அடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

    * சிந்திக்கும் திறன் தடைப்படும்.

    * மனச் சோர்வு ஏற்படும்.

    * செயல் திறன் குறையும்.

    * முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும்.

    * கூர்ந்து கவனிக்கும் செயல் திறன் மாறுப்படும்.

    * பலவீனம், நடப்பதில் சிரமம், நடுக்கம் போன்றவை இருக்கும்.

    * மனசோர்வு, எதிர்ப்பு, உணர்ச்சி வசப்படுதல் ஏற்படும்.

    கண்கள் நீரிழிவு பாதிப்பால் விழித்திரை நோய் ஏற்படும்.

    * பார்வை மங்கல்

    * கண் ரத்த நாளங்களில் கசிவு

    * முழுமையான பார்வை இழப்பு

    * காட்டராக்ட்

    * கிளா கோமா ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.

    இதயம்- கொலஸ்டிரால் அளவினை உயர்த்துகின்றது

    * ரத்த நாளங்களில் கொழுப்பு படிகின்றது. அதனால்

    * இருதய நோய்

    * இருதய ரத்த குழாய்களில் அடைப்பு

    * இருதய செயலிழப்பு

    * நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இதய நோய் அபாயம் இரண்டு முதல் நான்கு மடங்கு கூடுதலாக இருக்கின்றது.

    சிறுநீரகங்கள்- அதிக சர்க்கரையால்

    * சிறுநீரில் புரதம் வெளியாகின்றது.

    * சிறுநீரக வடிகட்டும் திறன் குறைகின்றது

    * சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகின்றது.

    * டயாலிசிஸ் அல்லது மாற்று சிறுநீரக சிகிச்சை தேவைப்படுகின்றது.

    நரம்பு மண்டலம்- கை, கால் விரல்களில் பின் குத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.

    * மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு

    * உணர்ச்சி இழப்பு ஆகியவை ஏற்படும். இதன் காரணமாக

    * காயம் ஏற்பட்டாலும் தெரியாமல் போகும்.

    கமலி ஸ்ரீபால்

     

    * பாதங்களில் புண்கள் ஏற்படும்.

    கல்லீரல்

    * கொழுப்பு கல்லீரல் ஏற்படும்.

    * இன்சுலின் எதிர்ப்பு ஏற்படும்.

    * கல்லீரல் செயல்பாடு பாதிக்கும்.

    ஜீரண அமைப்பு-

    * வயிறு செரிமான செயலில் தாமதம்

    * வாந்தி

    * அஜீரணம்

    * மலச்சிக்கல் ஆகியவை ஏற்படும்.

    தோல்- * தோல் வறட்சி * புண்கள் ஆற தாமதம் * பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று * கருப்பு நிற தடிப்பு ஆகியவை ஏற்படும்.

    இனப்பெருக்க உறுப்பு- ஆண்களுக்கு விந்தணு தரம் குறைவு ஏற்படும். * பெண்களுக்கு ஹார்மோன் சீரற்ற நிலை, கர்ப்ப சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

    நோய் எதிர்ப்பு சக்தி- * நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கின்றது. *அடிக்கடி தொற்று நோய்கள் ஏற்படும். * காயம் ஆற தாமதம் ஏற்படும்.

    சர்க்கரை நோய் என்பது ஒரே ஒரு நோய் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அது முழு உடலையும் மெதுவாக பாதிக்கும் ஒரு அமைதியான ஆபத்து.

    சரியான உணவு பழக்கம், உடற்பயிற்சி, ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, காலாண்டு மருத்துவ பரிசோதனை இவைகளை கடைபிடித்தால் உறுப்புகளை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    உடல் எடை குறைப்பு- உடல் எடை குறைப்பு என்பது இன்று மிகப்பெரிய சவாலாகவே இருக்கின்றது. எளிதில் கூடி விடும் எடையினை குறைக்க படாதபாடாக இருக்கின்றது. ஆனால் அன்றாடம் நம் பழக்கங்களில் சிறிது கவனம் செலுத்தினாலே போதும். அறிவியல் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட சில அன்றாட பழக்கங்களை பார்ப்போம்.

    எடை குறைப்பிற்கு உதவும் காலை பழக்கங்கள்-

    அதிகாலையில் எழுதல்- காலை 5 மணி அளவில் முதலில் எழுந்து பழக வேண்டும். இது உடல் கடிகாரம் சீராக இயங்க உதவும். ஹார்மோன்களை சமநிலைப் படுத்தும். உடல் இயக்கத்தினை சீராய் தூண்டும்.

    காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீர் 1 அல்லது 2 கிளாஸ் குடிப்பது ஜீரண சக்தியினை அதிகரித்து உடலில் தேங்கிய நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றது.

    வெறும் வயிற்றில் உடல் பயிற்சி- மிதமான நடை, யோகா, சூரிய நமஸ்காரம் அல்லது லேசான ஸ்ட்ரெச் செய்வது கொழுப்பு எடுப்பை அதிகரிக்கின்றது. தினமும் 20 நிமிட உடற்பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகின்றது.

    புரதம் நிறைந்த காலை உணவு- முட்டை, பருப்பு, முளை கட்டிய தானியங்கள், தயிர் போன்ற புரத உணவுகள் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தி அதிக கலோரி உட்கொள்ளுதலை தவிர்க்கின்றன.

     

    சர்க்கரை மற்றும் வெள்ளை மாவு உணவுகளைத் தவிர்த்தல்- காலை நேரத்தில் இனிப்புகள் மற்றும் ரிபைன் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது இன்சுலின் திடீர் உயர்வை குறைத்து எடை அதிகரிப்பைத் தடுக்கும்.

    * போதுமான சூரிய ஒளி பெற வேண்டும்.

    மன அழுத்தம் குறைக்கும் பயிற்சிகள்:

    தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவை கார்டிசோர் அளவை குறைத்து வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதை தடுக்க உதவுகின்றது.

    * சரியான நேரத்தில் மாலை சிற்றுண்டி 4 முதல் 5 மணிக்குள் (இரவு உணவைப் பொறுத்தும், பகல் உணவை பொறுத்தும் இது சற்று மாறுபடும்).

    * பழங்கள், வறுத்த கடலை, முளை கட்டிய பயறு, கிரீன் (அ) மூலிகை டீ எடுத்துக் கொள்ளலாம்.

    * மாலை நேரத்தில் நடை அல்லது உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். இரவு நல்ல தூக்கம் வரும்.

    * சர்க்கரை, எண்ணை அதிகமான உணவுகளை பஜ்ஜி, போண்டா, இனிப்பு வகைகள் இவைகளை அவசியம் தடுக்க வேண்டும்.

    * தண்ணீர் போதுமான அளவு குடிப்பது.

    * இரவு உணவை முன்னதாகவே தீர்மானித்து எளிமையான கலோரி சத்து அதிகமில்லாத உணவுகளை எடுத்துக் கொள்வது.

    * இரவில் அதிக நேரம் டி.வி, செல்போன் தவிர்ப்பது போன்ற பழக்கங்கள் எடைகூடாமல் சீராக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    பார்வைத்திறனை இயற்கையாகவே மேம்படுத்த:

    * பார்வைத்திறன் குறைபாடு பல காரணங்களால் ஏற்படுகிறது. வயது மாற்றம், அதிக நேரம் கணினி திரை பயன்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு போன்ற நோய்கள், கண் சோர்வு ஆகியவை முக்கியமானவை. இயற்கை முறைகளின் மூலம் கண்களின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தலாம்.

    * சரியான உணவுமுறை அவசியம்: கண் நலத்திற்கு முக்கியமான சத்துக்களாக உள்ள வைட்டமின் ஏ நிறைந்த காரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, முருங்கை கீரை, பசலைக்கீரை ஆகியவை ரெட்டினாலின் செயல்பாட்டிற்கு அவசியம். இது இரவு கண் தெரியாமையினைத் தடுக்கும்.

    * லூட்டின், சீ ஆக்சாந்தின் சத்துகள் பச்சை கீரை வகைகள், மக்காச்சோளம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கின்றது. இவை மாக்குலா பாதுகாப்பிற்கு உதவும். வயது சார்ந்த மாக்குலா சேதத்தினைத் தடுக்கும்.

    ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை வால்நட், ஆலிவ் எண்ணை, ஆளிவிதை இவற்றில் கிடைக்கும். இவை கண் ஆரோக்கியத்தினை பாதுகாத்து கண் உலர்வினையும் தடுக்கும்.

    வைட்டமின் சி, ஈ போன்றவை ஆரஞ்சு, நெல்லிக்காய், பழங்கள், பாதாம் இவற்றில் கிடைக்கும். ஆண்டி ஆக்சிடென்ட் செயல்பாடு கொண்டவை.

    கண் பயிற்சிகள்

    20-20-20 விதி:

    20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகள் பாருங்கள்.

    * கைகளால் கண் ஓய்வு: கைகளால் உரசி சூடு ஏற்படுத்தி கண்களின் மேல் மெதுவாக பொத்தி 1 முதல் 2 நிமிடங்கள் வைத்திருக்கவும். நரம்பு தளர்ச்சி குறையும். தவிர்க்கப்படும்.

    * அருகில் உள்ள பொருளை 10 நொடிகள் பாருங்கள். தூரத்தில் உள்ள பொருளை 10 நொடிகள் பாருங்கள். கண் தசைகள் வலுப்படும்.

    * 7 மணி முதல் 8 மணி நேரம் தூங்கினால் ரெட்டினா மற்றும் நரம்பு அமைப்பிற்கு ஓய்வு கிடைக்கின்றது. கண் உலர்வு குறைகின்றது.

    * மொபைல், கம்ப்யூட்டர் பயன்பாட்டினை குறைத்து விடுங்கள்.

    * நீலநிற பில்டர் பயன்படுத்துங்கள்

    * உங்கள் அறையில் ஒளி சரியாக இருக்க வேண்டும்.

    * வெய்யில் காலத்தில் யூ.வி. பாதுகாப்பு கண்ணாடி அணிய வேண்டும்.

    * தூசி சூழலில் பாதுகாப்பு கண்ணாடி அணிய வேண்டும்.

    * தராடகா. ஒரு நிலையான பொருளை (உதாரணமாக) தீபம் போன்றதை கண் இமைக்காமல் கவனிப்பது, பார்ப்பதால் - ஒரு முக கவனம் மற்றும் கண் தசை ஒருங்கிணைப்பு மேம்படும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சூரிய கிரகணத்தை நேரடியாக வெறும் கண்களால் பார்க்க கூடாது.
    • ரிஷபம் ராசிக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது.

    கிரகணம் என்பது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, ஒரு விண்பொருளின் நிழல் மற்றொரு விண்பொருளின் மீது படர்ந்து தற்காலிகமாக மறைக்கப்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். சந்திரன் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணமாகும். பூமி நிலாவை மறைத்தால் அது சந்திர கிரகணமாகும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது, சூரியனின் ஒளி பூமியை அடையாமல் சந்திரன் தடுக்கிறது. இது அமாவாசை நாளில் மட்டுமே நடக்கும். சந்திர கிரகணம் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது. இது பௌர்ணமியன்று சம்பவிக்கும்.

    சூரிய கிரகணத்தை நேரடியாக வெறும் கண்களால் பார்க்க கூடாது. சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம். கடந்த அமாவாசை அன்று சூரிய கிரகணம் ஏற்பட்ட நிலையில் அது இந்தியாவில் தெரியவில்லை. தற்போது ஸ்ரீ மங்களகரமான விசுவாவசு வருடம் நாளை (செவ்வாய்க்கிழமை) பூரம் நட்சத்திரத்தில் நிகழும் சந்திர கிரகணம் கேது கிரகஸ்த சந்திர கிரகணமாக இந்தியாவில் சில இடங்களில் சந்திர உதயத்தில் தெரியும். கிரகண நேரம் மதியம் 3.19 முதல் மாலை 6.47மணி வரை. கிரகண தோஷம் உள்ள நட்சத்திரங்கள் மகம், பூரம், உத்திரம், பூராடம், பரணி. கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவைகள் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு பிறகு உணவு உண்ணக் கூடாது. கிரகண நேரத்தில் சமையல் செய்யவோ, சாப்பிடவோ கூடாது.

    கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்ப்பையை போட்டு வைக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் நோயாளிகள் கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பவுர்ணமி திதி சிரார்தம் மறுநாள் புதன்கிழமை செய்யவேண்டும். உயிர் காக்க தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்றவர்கள் ஒரு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம். அறுவை சிகிச்சை அவசியம் செய்ய வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இடுப்பில் சர்ப்பம் தரித்த விநாயகரை வழிபட்டு சிகிச்சை செய்யலாம்.

    கிரகண காலங்களில் செய்யக் கூடியவை கிரகணம் ஏற்படும் பவுர்ணமி நாளில் ஆன்மகாரகன் சூரியன் மற்றும் மனோகாரகன் சந்திரன் இருவரும் மிகவும் அதீத சக்தி நிலையில் இருப்பார்கள். சந்திரன், ராகு, சூரியன் கேது இவைகள் இரண்டுமே நல்ல இணைவுகள் இல்லை. அதனால் தான் உடலையும் உள்ளத்தினையும் அன்று ரிலாக்சாக வேறு எந்த வேலையும் இல்லாமல் உடலின் செயற்கை இயக்கத்தினை நிறுத்தி வைக்கிறோம். (ஜீரணம் முதல் கடும் வேலைகள் வரை)மனதின் ஆற்றலும் ஆன்மாவின் ஆற்றலும் வெளிப்படும் இந்த நொடிகளை அனைவரும் ஆன்ம சுத்திக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனதின் சக்திகள் ராகுவினால் பாதிக்கப்படும் படி உள்ளதால் வீட்டிலிருந்து மானசீகமாக குலதெய்வ, உபாசனை தெய்வ வழிபாடு நடத்தலாம்.

    ராகு கேதுக்களின் பாதையில் பூமி, சூரியன், சந்திரன் நேர்கோட்டில் வரும், அந்த நொடிகள் அமானுஷ்யமான விசயங்களை உண்டாக்கும். அந்த நேரத்தில் நாம் இறைவனை சரணடைந்து விட்டால் இறைவனின் அரிய சக்திகள் நம்முள்ளும் நிறைந்து பலவிதமான நன்மைகள் உண்டாகும். கிரகண காலங்களில் செய்யப்படும் வழிபாடுகள் பல மடங்கு புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும். சுய ஜாதகத்தில் உள்ள கிரகண தோஷம் வீரியம் குறையும்.

    கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்யலாம் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும். காயத்திரி மந்திரம் மற்றும் ராம நாம பாராயனம் செய்யலாம். கிரகண தோஷமுள்ள பரிகார நட்சத்திரங்களான மகம், பூரம், உத்திரம், பூராடம், பரணியில் பிறந்தவர்கள் கிரகணம் முடிந்த பிறகு கல் உப்பு அல்லது மஞ்சள் கலந்த நீரில் குளித்து முடித்து அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து 1 கிலோ பச்சரியை தானம் தர வேண்டும்.

    பிறகு புதியதாக சமைத்த உணவை சாப்பிட வேண்டும். இனி 12 ராசியினருக்கும் கிரகணம் பலன்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

     

    மேஷம் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது. ஆழ்மன எண்ணங்களை கட்டுப்படுத்தும் தியானம் யோகா மூச்சுப் பயிற்சி மனநிறைவு மன நிம்மதியை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு கோடி குற்றங்களை நிவர்த்தி செய்யும். மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கிரகணம் முடிந்த பிறகு அருகில் உள்ள சிவன் கோவிலில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்வது நல்லது.

    ரிஷபம் ராசிக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. தாய் தந்தை, தந்தை வழி உறவுகளுடன் மோதல் கருத்து வேறுபாடு வரலாம். தாய் தந்தையரை அனுசரித்துச் செல்ல வேண்டும். சொத்து வாங்குவது விற்பது ஆகியவற்றில் தவறான விலை நிர்ணயம் ஏற்படலாம். முதல் முறையாக நோய்க்கு வைத்தியம் செய்வது நல்லதல்ல. தாயின் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வரலாம். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகளை பெறுவதால் சுய ஜாதகரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.

    மிதுன ராசிக்கு மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. குடும்ப ஸ்தான அதிபதி சந்திரன் கேதுவுடன் இணைவதால் மனப்போராட்டம் அதிகரிக்கும் ஞாபக சக்தி குறையும். வீடு மாற்றுவது, வேலை மாற்றுவது தொழில் நிறுவனத்தை மாற்றுவது, உத்தியோக மாற்றம், பத்திரப்பதிவு பாகப்பிரிவினை ஆகியவற்றை தவிர்தல் நல்லது. முக்கிய ஆபரணம் மற்றும் ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். கிரகண நாளில் வெளியூர் பயணங்களை தவிர்த்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.

    கடக ராசிக்கு இரண்டாம் இடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது. பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு உணவு ஒவ்வாமை. அலர்ஜி, கண் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். காரசாரமான விவாதங்கள் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். யாரையும் சபிக்க கூடாது. யாரிடமும் சாபம் வாங்க கூடாது. அடிப்படை வசதிகள் அற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும்.

    சிம்ம ராசியில் சந்திர கிரகணம் நடக்கப்போகிறது. விரயாதிபதி சந்திரன் கேதுவுடன் இணைவதால் கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகள் வரலாம். தவிர்க்க முடியாத கடுமையான உடல் பாதிப்பு உள்ளவர்கள் அன்று வைத்தியம் செய்யலாம். சுய வைத்தியம். சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மனதின் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துவது நல்லது. மன வளர்ச்சியற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது நல்லது.

    கன்னி ராசிக்கு 12-ம்மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் லாப ஸ்தான அதிபதி சந்திரனுடன் கேது இணைந்து சந்திர கிரகண தோஷம் ஏற்படுகிறது. தூக்கம் சற்று குறைவுபடும். மனசஞ்சலம் பய உணர்வும் இருக்கும். உயிர் காக்க தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்றவர்கள் ஒரு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம். அறுவை சிகிச்சை அவசியம் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள் குல இஷ்ட தெய்வத்தை வழிபட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். கண் அறுவை சிகிச்சை செய்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும்.

    துலாம் ராசிக்கு 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. தொழில் ஸ்தான அதிபதி சந்திரன் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் கிரகணம் அடைகிறார். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு கோடி குற்றங்களை நிவர்த்தி செய்யும். அன்று போரிங் போடுதல் கிணறு வெட்டுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தாயையும் தாய்வயதில் உள்ளவர்களை மதிப்பதும் ஆசீர்வாதம் பெறுவதும் இன்னல்களை நீக்கும்.

    விருச்சிக ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் கேது சேர்க்கை ஏற்படுகிறது. அன்று உங்களின் ஒன்பதாம் அதிபதி சந்திரன் பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். சுப விரயங்கள், சுப நிகழ்வுகள் மிகுதியாகும். புதிய வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும்.

    தனுசு ராசிக்கு 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கப்போகிறது. செய்த தர்மம் தலை காக்கும். சாதிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் மேலோங்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும். தொழிலில் வெற்றியும், மேன்மையும் லாபமும் உண்டாகும். தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும். தந்தையின் ஆரோக்கியத்தில் விழிப்பு தேவை. தந்தை அல்லது ஆன்மீக குருமார்களிடம் நல்லாசி பெறுவது நல்லது.

    மகரம் ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் கேது சேர்க்கையுடன் கிரகணம் சம்பவிக்கிறது. வழக்குகள், அறுவை சிகிச்சை, வெளியூர் வெளிநாட்டுப் பயணம் கொடுக்கல் வாங்கல், வீண் வாக்குவாதங்கள் சண்டை சச்சரவு, தற்பெருமை சுய கவுரவம் எதிர்பார்ப்பது, ஆகியவற்றை தவிர்ப்பதால் இன்னல்கள் குறையும். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் தேவை அறிந்து உதவி செய்வதால் உங்களின் தேவைகள் நிறைவேறும்.

    கும்பம் ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. தொழில் தொடர்பான புதிய முயற்சிகள், திருமணம், திருமண ஒப்பந்தம், விவாகரத்து வழக்குகளை விசாரித்தல், வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் இவைகளை சில நாட்களுக்கு தவிர்க்கவும். வாழ்க்கை துணை, நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களை பகைக்க கூடாது. நலிந்தவர்களின் வாழ்வாதாரம் உயரத் தேவையான உதவிகளை செய்வது நல்லது.

    மீன ராசிக்கு 6-ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இன்றைய நாளில் கடன் தீர்ப்பதால் நிரந்தரமாக கடன் தொல்லை குறையும். எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் நோயாளிகள் கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஸ்ரீ ருத்ரம் படிப்பதால் கேட்பதால் ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பய உணர்வு அகலும்.

    கிரகணம் வானியல் நிலவு என்றாலும் சந்திர கிரகணம் மன ரீதியான உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நோய்த் தாக்கம் உள்ளவர்கள் பலவீனமான மனமுள்ளவர்கள் சிவபுராணம் படிப்பது நல்லது.

    செல்: 98652 20406

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுவாக, ஒவ்வொரு மாதத்திலும் வரும் திதி, நட்சத்திரம், நாள் மட்டும்தான் சிறப்பு பெறும்.
    • அனைத்து தெய்வங்களையும் வழிபட ஏற்ற மாதமாகவும் மாசி மாதம் கருதப்படுகிறது.

    தமிழ் மாதங்களில் 11-வது மாதமாக அமைவது மாசி மாதம் ஆகும். சூரியன் கும்ப ராசியில் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 48 நொடி, 24 விநாடி கொண்ட கால அளவே இந்த மாதமாகும். புராணங்களின் படி, மாசி மாதம் வழிபாட்டிற்குரிய மாதமாக கருதப்படுகிறது.

    பொதுவாக, ஒவ்வொரு மாதத்திலும் வரும் திதி, நட்சத்திரம், நாள் மட்டும்தான் சிறப்பு பெறும். ஆனால், மாசி மாதத்தில் வரும் அனைத்து நாட்களுமே ஒவ்வொரு வகையிலும் சிறப்பினைக் கொண்டுள்ளது. இந்த மாதத்தில் வரும் அனைத்து விரத நாட்களும் சிறப்பான பலன்களை தரக் கூடியதாகும். அனைத்து தெய்வங்களையும் வழிபட ஏற்ற மாதமாகவும் மாசி மாதம் கருதப்படுகிறது.

    மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது வீடு மாறிக் குடியேறினால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதும் ஐதீகம். முருகப் பெருமானை தகப்பன் சுவாமி என அழைக்கிறோம். அப்படி முருகப் பெருமான், தனது தந்தை சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்தது மாசி மாத பூசம் நட்சத்திர நாளில் தான்.

    அதனால் தான் மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது, உயர்கல்வி தொடங்குதல் போன்றவை செய்யப்படுகின்றன. இதன் மூலம் அந்தத் துறைகளில், எடுத்துக்கொண்ட கல்வியில் மிகப்பெரிய உச்சம் தொடலாம் என்பது நம்பிக்கை. தை மாதம் வரும் பூச நட்சத்திரம் மிகவும் தெய்வ அருள் பெற்ற நட்சத்திர நாளாகும். அன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. அதே போல மாசி பூசம் முருகனின் துணைவி தெய்வானைக்குரியது. அம்மையிடம் வரம் கேட்டால் அப்பனும் சேர்ந்து தருவார் அல்லவா. அந்த வகையில் மாசி பூசமும் தெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாள்.

     

    மாசி பூசம் நாளான நாளை அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாள் மற்றும் லட்சுமி தேவிக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவதால் சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி விரும்பிய பலன்களை உண்டாக்கும். பூச நட்சத்திரத்திற்குரிய தல விருட்சமாக அரச மரம் இருக்கிறது. அரசமரம் தலவிருட்சமாக இருக்கும் கோவிலுக்கு சென்று அரசமரத்தையும் அங்குள்ள இறைவனையும் வழிபடுவதால் வாழ்வில் மிகுந்த அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் ஏற்படுத்தும்.

    இந்த ஆண்டு மாசி மாத பூசம் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி 34 நிமிடம் 58 நொடிகளில் தொடங்குகிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி 34 நிமிடம் 18 நொடிகளில் நிறைவடைகிறது. பூசம் சனியின் ஆதிக்க நட்சத்திரம் என்பதால், திருநள்ளாறு போன்ற சனி தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விளங்குளம் அட்சய புரீஸ்வரர் கோவில் பூச நட்சத்திரக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய முக்கிய தலம் ஆகும். பூச நட்சத்திரத்தின் அதிதேவதையான குரு பகவானை வழிபடுவது குரு தோஷங்களை நீக்கும்.

    பூசம் என்பதன் வடிவங்கள் மகுடி, புற்று, அம்பு கூடை, முருகனின் வேல், மயில்தோகை கொத்து, பசுவின் மடி. கோமாதா. ஆகவே மேற் கண்ட வடிவம் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்க கூடிய தெய்வம் அல்லது மகான் அல்லது அந்த ரூபங்களையே நாம் வழிபாடு செய்வதும் தினமும் பார்த்து தியானம் செய்து வருவதும் நமக்கு நல்ல வழிகாட்டுதலை, நல்ல சிந்தனையும், யோசிக்கும் திறனையும், ஆற்றலையும் நமக்கு கொடுக்கும்.

    மாசி பூசம் நட்சத்திர நாளான நாளை புட்லூரில் இருக்கும் பூங்காவனத்தம்மன், சங்கரன்கோவிலில் இருக்கும் கோமதியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், மலேசியா பத்துமலை முருகன் கோவில், அறுபடை வீடு முருகன் கோவில்கள், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி வழிபடுவது சிறப்பாகும். மாசி பூச வழிபாடு மிகச்சிறந்த நேர்மறை எண்ணங்களை கொடுத்து உங்களுக்கு வாழ்வில் வெற்றியை பெற உதவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுவாக இந்த 1-ம் எண்ணின் ஆதிக்கம் தொழில், அரசியல், சமூகரீதியாக நல்ல பலன்களைக் கொடுக்கும்.
    • பெயரெண் 55: புதனின் ஆதிக்கம். சூட்சம அறிவு, ஞானம் திட்டமிடுதல், ராஜ தந்திரம் மிகைப்படுத்தலாக இருக்கும்.

    சூரியன். ஒன்று என்ற எண் சூரியனுடைய ஆதிக்கத்தைக் குறிக்கின்றது. யாருக்கும் வளைந்து கொடுக்காதவர்கள். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதவர்கள். பழகுவதற்கும், பார்வைக்கும் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை அதிகமானவர்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத்தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள்.

    அடுத்தவர்களுடன் விவாதித்தால் கவுரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள். ரகசியங்களை பாதுகாக்கும் வல்லமை உண்டு. ஏட்டுக் கல்வியை விட அனுபவ பாடம் அதிகம் கற்றவர்கள். இந்த எண் சுறுசுறுப்பையும், படிப்பில் ஆர்வத்தையும் கொடுக்கும். 1,10,19,28,37,46,55,64,73,82,91,100 ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர்களும் 1,10,19,28ம் தேதிகளில் பிறந்தவர்களும் சூரியனின் ஆதிக்கம் பெற்றவர்கள்.

    பெயரெண் 10: சூரியனின் தனித்தன்மை நிறைந்த எண் என்பதால் புகழ், தன்னம்பிக்கை, நேர்மை, நாணயம், ஒழுக்கம் ஆகிய பண்புகள் நிறைந்திருக்கும்.

    பெயரெண் 19: சூரியன், செவ்வாயின் ஆதிக்கம் கலந்து இருப்பதால் சுயமுடிவு, சுய கவுரவம் இவர்களின் தனித்துவமாக இருக்கும்.

    பெயரெண் 28: சந்திரன், சனியின் ஆதிக்கம் நிறைந்த எண் என்பதால் கடின முயற்சிக்குப்பிறகு வெற்றியுண்டு. அதிர்ஷ்டம் குறைவுபடும்.

    பெயரெண் 37: குரு மற்றும் கேதுவின் ஆதிக்கம் நிறைந்த எண் என்பதால் சுயநல மற்றவர்கள். மகா உன்னத பலன் உண்டு. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கடனாளியாவார்கள்.

    பெயரெண் 46: ராகு மற்றும் சுக்கிரன் ஆதிக்கம் கலந்த எண். சிறு வயதில் மனசபலம் மிகுதியாக இருக்கும். வாழ்வின் பிற்பகுதியில் பலன் தரும்.

    பெயரெண் 55: புதனின் ஆதிக்கம். சூட்சம அறிவு, ஞானம் திட்டமிடுதல், ராஜ தந்திரம் மிகைப்படுத்தலாக இருக்கும்.

    பெயரெண் 64: சுக்கிரன், ராகு ஆதிக்கம் ஒருங்கே சேர்ந்து இருக்கும். நண்பர்களையும் எதிரிகளையும் எளிதில் அடையாளம் காண முடியாது. சில எதிர்பிற்குப் பின் வெற்றி உண்டு.

    பெயரெண் 73: கேது, குரு ஆதிக்கம் சேர்ந்து இருப்பதால் தெய்வ பக்தி மிகுதியால் நினைத்ததை சாதிப்பவர்கள். 50 வயதிற்கு மேல் இருப்பதை எல்லாம் இழப்பார்கள்.

    பெயரெண் 82: சனி, சந்திரன் ஆதிக்கத்தை பிரதிபலிப்பதால் கடின உழைப்பால் சாதாரண மனிதனும் சக்ரவர்த்தியாகுவார்கள்.

    பெயரெண் 91: செவ்வாய், சூரியன் ஆதிக்கம் நிறைந்த எண் என்பதால் உலகப் புகழ், சரித்திரத்தில் இடம் பெறும் யோகம் உண்டாகும்.

    பெயரெண் 100: சூரியனின் ஆதிக்கத்தை மட்டும் கொண்டு இருந்தாலும் பூஜ்யம் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தாது. உப்பு, சப்பு இல்லாத மன நிறைவற்ற வாழ்க்கையே நீடிக்கும். பலர் 100 சதம் நல்ல பலன் தரும் என்ற மனக்கணக்கில் இந்த எண்ணில் பெயர் வைத்து கவிழ்கிறார்கள்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

     

    பிறவி எண் என்பது ஒருவர் பிறந்த தேதியைக் குறிக்கும் எண் ஆகும். விதி எண் என்பது ஒருவரின் முழு பிறந்த தேதி மாதம், வருடம் அனைத்தையும் கூட்டி வரும் ஒற்றை இலக்க எண் ஆகும்.

    பிறவி எண்:1 விதி எண்.1

    சூரியனின் ஆதிக்கம் நிறைந்த ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறவி எண்ணும் விதி எண்ணும் அமைவது சிறப்பு. சுய ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றால் ஆன்ம பலம் ஆளுமைத் தன்மை, நிர்வாகத் திறன், சுய கவுரவம், கம்பீரத் தோற்றம் நிறைந்தவர். புகழ், முன்னேற்றம், அந்தஸ்து அனைத்தும் தேடி வரும். அரசியல் ஆதாயம் உண்டு. எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை தீமைகளை முன்பே அறியும் ஞானம் இருக்கும்.தந்தையின் ஆதரவு உண்டு. ஏதாவது ஒரு துறையில் நிச்சயம் முன்னேற்றம் உண்டு. சூரியன் பகை நீசம் அஸ்தமனம் பெற்று இருந்தால் புகழ், அந்தஸ்து கவுரவம் மட்டுப்படும். முன்னேற்றம் கிடைக்காது. தாய், தந்தையின் ஆதரவு குறையும். தலை, கண், இருதயம் சார்ந்த பாதிப்பு உண்டு.

    பிறவி எண் 1- விதி எண் 2

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்து சந்திரனின் 2ம் எண் ஆதிக்கத்தில் விதி எண் அமைந்தால் சுய ஜாதகத்தில் சூரியன், சந்திரன் பலம் பெற வேண்டும். இவர்கள் இருவரும் பலம் பெற்றால் தாய், தந்தையின் ஆதரவு மற்றும் ஆதாயம் உண்டு. சிந்தித்து செயல் ஆற்றுவதில் வல்லவர்கள். அரசியல், அரசு சார்ந்த தொழில் உத்தியோகங்கள் அமையும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை உண்டு. தாராள தன வரவு இருக்கும். திரண்ட சொத்து உண்டு. பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்வதில் வல்லவர்கள். சூரியன், சந்திரன் பலம் குறைந்தால் தாய், தந்தையின் ஆதரவு கிடைக்காது. பொருளாதார தட்டுப்பாடு அதிகம் இருக்கும். வெப்ப நோய், ஜீரணக் கோளாறு, பார்வை குறைபாடு, தண்ணீர் கண்டம், வீசிங் தொந்தரவு இருக்கும்.

    பிறவி எண் 1- விதி எண்.3

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்து குருவின் 3ம் ஆதிக்கத்தில் விதி எண் அமைந்தால் அதிர்ஷ்ட சாலிகள். சூரியனும் குருவும் பலம் பெற்றால் பேரதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். தெய்வ பக்தி நிறைந்தவர்கள். பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்கள். பொருளாதாரத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் தன்னிறைவு உண்டு. அரசருக்கு உரிய அந்தஸ்துடன் வாழ்வார்கள். சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்க்கையில் அதிக ஆர்வம் இருக்கும். சூரியனும் குருவும் பலம் குறைந்தால் அரசியல் ஈடுபாடு இருக்கும் ஆனால் ஆதாயம் இருக்காது. பல சமயங்களில் பிறருக்காகவே உழைப்பார்கள். தொழில் மந்தம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, மனக்கஷ்டம் ஏற்படும். மஞ்சள் காமாலை, எலும்பில்லாத உறுப்புகளில் அடிக்கடி தொந்தரவு இருக்கும்.

    பிறவி எண் 1, விதி எண் 4

    சூரியனின் ஓன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்து ராகுவின் 4ம் எண் ஆதிக்கத்தில் விதி எண் அமைவது சிறப்பான பலன் அல்ல. தந்தைக்கு முன்னேற்றம் குறையும். அல்லது தந்தையை பிரிந்து வாழ்வார்கள். சாண் ஏறினால் முழம் சறுக்கும். முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் இருக்காது. பலருடைய விரோதமும் எதிர்ப்பும் இருக்கும். பூர்வீகத்தில் வாழும் வாய்ப்பு குறைவு. அல்லது பூர்வீகச் சொத்து விரயமாகும். திடீர் ஏற்றம் அல்லது எதிர்பாராத இறக்கம் அமையும். தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டு மன வேதனை அடைவார்கள், இவர்களின் உழைப்பு பிறருக்கே பயன்படும். சுய ஜாதகத்தில் சூரியன், ராகு பலம் பெற்றால் அரசாங்க ஆதரவு, சுகபோக வாழ்க்கையுண்டு. அதன் மூலம் பெரும் புகழும் செல்வமும் அடைவார்கள்.

    பிறவி எண் 1, விதி எண் 5

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும் புதனின் 5-ம் எண் விதி எண்ணாகவும் அமைந்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். சுய ஜாதகத்தில் சூரியனும் புதனும் சுப வலுப்பெற்றால் நல்ல கல்வி அறிவு உண்டு. கற்ற கல்வியால் பயன் உண்டு. பெரும்பாலும் ஆசிரியர், வங்கிபணி, கல்வி நிறுவனம், ஜோதிடத்தில் புகழ் அடைகிறார்கள். சமுதாய அந்தஸ்து நிறைந்த நண்பர்கள் உண்டு. அவர்கள் மூலம் கூட்டுத் தொழில், ஆதாயம் உண்டு. கவுரவமான காதல் பின்னணி உள்ளவர்கள். சூரியனும் புதனும் அசுப வலுப்பெற்றால் கல்வி அறிவு குறைவுபடும். ஆனால் படிக்காத மேதை. கண் அளவு, கை அளவு என பார்த்த மாத்திரத்தில் எதையும் கணிக்கும் நிபுணத்துவம் உண்டு. தண்ணீர் இல்லாத காட்டையும் விலை பேசும் தந்திரவாதிகள்.

    பிறவி எண் 1 விதி எண் 6

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும் சுக்கிரனின் 6ம் எண் விதி எண்ணாகவும் அமைந்தால் சாதகமும் பாதகமும் கலந்தே இருக்கும். சூரியன், சுக்ரன் சுப வலுப்பெற்றவர்களுக்கு அழகு, ஆடம்பரம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். அதிகார பதவிகள் தேடி வரும். மனித நேயமும் தொழில் நியாயமும் இவர்களது நோக்கமாக இருக்கும். சூரியன், சுக்ரன் அசுப வலிமை பெற்றால் தொழில், அரசியல், சமூகரீதியாக நல்ல பலன்களைக் கொடுத்தாலும் திருமண வாழ்க்கை மன நிறைவு தருவதில்லை. தம்பதிகளுக்குள் கவுரவ பிரச்சினையால் அன்யோன்யம் குறைந்து பிரிவினை ஏற்படுகிறது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து வாழும் தன்மை இருக்காது. கடன் பெற்று நிர்வாகச் செலவு, ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள்.

    பிறவி எண் 1 விதி எண் 7

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும் கேதுவின் 7ம் எண் விதி எண்ணாகவும் அமைவது பொது வாழ்க்கைக்கும், சந்நியாசிகளுக்கும் சிறப்பு. நாணயமான அரசியல்வாதிகள் என்று பெயர் எடுப்பார்கள். சிவ வழிபாட்டில் ஆர்வம் அதிகம். பலருக்கு திருமணம் நடக்காது. திருமணம் நடந்தவர்கள் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்கிறார்கள். அல்லது திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பற்று குறைந்து இல்லற சந்நியாசியாக வாழ்கிறார்கள். இளமையில் வறுமையுடன் வாழ்கிறார்கள். இந்த அமைப்பை பெற்ற பலர் குழந்தையின்மையால் அவதிப்படுகிறார்கள். பலர் ஆன்மபலம் இழந்து சூழ்நிலை கைதியாக வாழ்கிறார்கள். பல திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் கடனால் வம்பு, வழக்கால் பாதிப்பு அடைகிறார்கள்.

    பிறவி எண் 1 விதி எண்.8

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும் சனியின் 8ம் எண் விதி எண்ணாகவும் அமைவது பொது வாழ்க்கை, அரசியல்வாதிகளுக்கும் சிறப்பு. சூரியன், சனி பலம் பெற்றால் நீதிபதிகள், வக்கீல்கள், பேராசிரியர்கள் ஆகிய பெரும் பதவிகளை வகிப்பவர்கள். பார்ப்பதற்கு கடுமையானவர்களாகத் தோன்றினாலும் கள்ளம், கபடம் இல்லாமல் வெள்ளை மனதுடன் அன்பாக மற்றவர்களிடம் பழகுவார்கள். சூரியன், சனி பலம் குறைந்தால் கடின உழைப்பில் குறைந்த ஊதியம் பெறுவார்கள். நடுவயதில் இவர்கள் பல வாழ்க்கைப் பிரச்சினைகளை சந்திப்பார்கள். ஆரோக்கிய குறைவு உண்டு. இவர்களின் உழைப்பு பிறருக்கே பயன்படும். வாழ்வின் பிற்பகுதியில், தாங்கள் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, ஆனந்தமான வாழ்க்கை வாழ்வார்கள். தந்தை மகன் கருத்து வேறுபாடு உண்டு. வெளியூர் அல்லது வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு.

    பிறவி எண்.1 விதி எண்.9

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும் செவ்வாயின் 9ம் எண் விதி எண்ணாகவும் அமைவது மிகச் சிறப்பான பலன். நிர்வாகத் திறன் கொண்ட சூரியனும் அதிகார தோரணை நிறைந்த செவ்வாய் ஜாதகத்தில் பலம் பெற்றவர்கள் அன்பிற்கு அடிபணிவார்கள். அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் அடிபணிய மறுப்பார்கள். புகழ் பெற்றவர்களாகவும் தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளை கேட்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். ராணுவம், போலீஸ் போன்ற துறையில் தனித் திறமையுடன் மிளிர்வார்கள்.

    எல்லாம் எனக்குத் தெரியும் என்ற கர்வத்துடன் எல்லா விசயத்திலும் தனித்து செயல்படுவார்கள். சூரியன், செவ்வாய் பலம் குறைந்தால் வாழ்க்கையில் தனியாக போராட பிறந்தவர்கள். தாய், தந்தை, உறவினர்கள், உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்காது. முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் கிடைக்காது. பலருடைய விரோதமும் எதிலும் அவசரமும் ஆத்திரமும் உண்டு. தங்கள் முயற்சியில் அடுத்தவர் தலையீட்டை விரும்ப மாட்டார்கள். பொதுவாக இந்த 1-ம் எண்ணின் ஆதிக்கம் தொழில், அரசியல், சமூகரீதியாக நல்ல பலன்களைக் கொடுக்கும்.

    செல்: 98652 20406

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரத்த சோகை தடுப்புக்கு உதவுகிறது.
    • கருவேப்பிலையில் உள்ள இரும்புசத்து மற்றும் போலிக் அமிலம் ஹீமோகுேளாபின் அளவை உயர்த்த உதவுகின்றன.

    கோடை வரப் போகின்றது வழக்கம் போல் வெயில் கொளுத்தும். நாம் வாடி வதங்கி வெயிலால் தவிப்போம். இது வருடம் தவறாது நடக்கும் நிகழ்வுதான். கோடைக் கால பராமரிப்பு, கோடைக்கால நோய்கள் என கோடையை சமாளிக்க பல வழிகளை பின்பற்றுவோம். நன்கு அறிந்தனவற்றினைக் கூட மீண்டும் ஞாபகப்படுத்தி செயல்படுத்துவோம். அந்த வகையில் உடலின் நீர் தன்மை வற்றாது இருக்கவும், கூடவே நீருடன் சில பொருட்களை பயன்படுத்தி உடலுக்குத் தேவையான சில தாதுக்கள் மற்றும் பல நன்மைகளைப் பெறும் வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.

    நமது உணவு முறையில் நீரே சிகிச்சை தன்மை கொண்டதாக முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. தினமும் 2 முதல் 3 லிட்டர் நீர் பருகுவது அவசியம் என வலியுறுத்தப்படுகின்றது. இத்துடன் இயற்கை மூலிகைகள், பழ சாறுகள் சேரும் போது அது மருந்தாக, ஊட்டச் சத்தாக பயன்படுகின்றது. பல தலைமுறைகளாக நம் நாட்டில் பயன்படுத்தப்படும் முறைகள் இவை. குறைந்த செலவு, நிறைந்த பலன் என்ற முறையிலே பலன் தருபவை. பாதுகாப்பானவை. எளிமையானவை. ஆரோக்கியமானவை.

    எலுமிச்சை நீர்- ஒரு கிளாஸ் வெகு வெதுப்பான நீரில் அரை எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கலாம். சிலர் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்வர்.

    எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம், பிளாவரைய்டுகள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன.

    நன்மைகள்- செரிமானத்தினை மேம்படுத்தும். அஜீரணம், வயிற்று வீக்கம் போன்ற பிரச்சினைகள் குறைய உதவுகிறது.

    * நோய் எதிர்ப்பு சக்தி கூடுகின்றது. சளி, இருமல், தொண்டை வலி என்பவர்களுக்கு சிறந்த பலன் அளிக்கும்.

    * உடல் நச்சுகளை நீக்கும். கல்லீரல் செயல்பாட்டினை ஊக்குவித்து உடலில் சேரும். நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவும்.

    கமலி ஸ்ரீபால்


     

    * சரும ஆரோக்கியம் கூடும், முதுமை கட்டுப்படும், கரும் புள்ளிகள் நன்கு குறையும்.

    உடல் எடை கட்டுப்பாடு- எலுமிச்சை நீர் குடிப்பதால் பசி உணர்வு கட்டுப்படும். அதிக கலோரி உணவுகள் தவிர்க்க உதவுகின்றது.

    சீரக நீர்- ஒரு டீஸ்பூன் சீரகத்தினை நன்கு கழுவி 2 டம்ளர் நீரில் இரவு முழுவதும் நன்கு ஊற வைக்கவும். காலையில் இதனை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

    சீரகத்தின் மருத்துவத்தன்மை- சீரகம் ஒரு கார்மினேட்டிவ் வாயுவை வெளியேற்றும் என ஆயுர்வேதம் கூறுகின்றது.

    * சீரக நீர் குடிப்பதால் வயிற்றில் தேங்கிய வாயு வெளியேறி வயிற்று வலி, வீக்கம் குறைகின்றது.

    * ரத்த சர்க்கரை கட்டுப்பாடுடன் இருக்க உதவுகிறது- சீரகம் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றது. நீரிழிவு நோயாளிகள் மருத்துவர் ஆலோசனை பெற்று குடிக்கலாம்.

    * ரத்த சோகை தடுப்புக்கு உதவுகிறது. சீரகத்தில் இரும்பு சத்து உள்ளது. தொடர்ந்து சீரக நீர் குடிப்பது ஹீமோகுளோபின் அளவை உயர்த்த உதவும்.

    * மகப்பேறு கால நன்மைகள்- பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களுக்கு சீரக நீர் பால் சுரப்பை அதிகரிக்கவும், உடல் சோர்வை குறைக்கவும் பயன்படுகின்றது.

    * உடல் அழற்சி குறைப்பு ஏற்படும். மூட்டு வலி, உடல் வலிகளை குறைக்க உதவுகின்றது.

    கொத்தமல்லி நீர்- தனியா விதைகளை கழுவி, நன்கு ஊற வைத்து பின் கொதிக்க வைத்து வடிக்கட்டி குடிக்கலாம்.

    * சீரணத்திற்கு உதவுகின்றது. இதில் உள்ள என்சைகள் அஜீரணத்தை சீர் செய்யும். வயிறு உப்பிசம், வாயு நீங்கும். ஆரோக்கியமான குடல் உருவாகும்.

    * ரத்தத்தில் உயர் சர்க்கரை ஏற்றத்தினை கட்டுப்படுத்தும்.

    * நச்சுகளை நீக்கும்- கல்லீரல், சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும்.

     

    * சரும ஆரோக்கியம்- சரும தடிப்பு, பரு, சிகப்பு திட்டுகள் நீங்கும்.

    * வைட்டமின் ஏ, சி, கே. சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டும். சிறுநீர் போக்கில் எரிச்சலுக்கு துணை மருந்தாக உதவும்.

    * உடலில் அதிக நீர் தேங்காது இருக்கச் செய்யும்.

    * வயிறு உப்பிசம், சதை பிடிப்புகள் நீங்கும்.

    உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று பிறகு எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்களும் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.

    வெந்தய நீர்- வெந்தயம் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து நன்கு கழுவி ஒரு கிளாஸ் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் குடிக்கவும். பொதுவில் அனைவருமே மருத்துவர் ஆலோசனை பெற்று இதனை எடுத்துக் கொள்வது அவசியம்.

    * வயிறு உப்பிசம், மலச்சிக்கல் நீங்கும்.

    * சர்க்கரை நோய் பிரிவு 2 பாதிப்பு உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுப்படும்.

    மாத்திரை, ஊசி என எடுத்துக் கொள்பவர்கள், சாதாரண உடல் நலத்துடன் இருப்பவர்கள் இரு பிரிவுமே சர்க்கரை ரத்தத்தில் அதிக அளவு குறையாமல் இருக்க மருத்துவர் ஆலோசனை அவசியம் பெற வேண்டும்.

    * கொழுப்பு சத்தினைக் குறைக்கும். இருதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

    * மூட்டு வலி குறையும் என ஆயுர்வேதம் குறிப்பிடுகின்றது.

    * ஹார்மோன் சீராக இயங்க உதவும். மாதவிடாய் கால பிரச்சினைகள், மாத விலக்கு நிற்கும் கால பிரச்சினைகளை குறைக்க உதவும்.

    * சருமம், முடி ஊட்டம் பெறும்.

    கருவேப்பிலை சாறு- நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் கருவேப்பிலை ஒரு மூலிகை என்றே ஆயுர்வேத, சித்த மருத்துவத்தில் குறிப்பிடுகின்றனர். இதனை சாறாக எடுத்துக் கொள்ளும் போது சிறந்த மருத்துவ பலன்களைப் பெறுகின்றோம். சர்க்கரை நோய், செரிமானக் கோளாறு, முடி உதிர்வு போன்றவைகளுக்கு கருவேப்பிலை சாறு சிறந்த பயன் அளிக்கின்றது.

    புதிய பறித்த கருவேப்பிலையினை சிறிதளவு நீர் விட்டு அரைத்து வடிகட்டி சுமார் 20 மி.லி. அளவு எடுத்துக் கொள்வது வீட்டு வைத்தியமாக பரிந்துரைக்கப்படுகின்றது.

    கருவேப்பிலை சாறு இன்சுலின் சுரப்பதனையும், அதன் செயல் திறனையும் மேம்படுத்த உதவுகின்றது. இதனால் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவுகின்றது. நீரிழிவு நோயாளிகள் இதனை துணை மருந்தாக பயன்படுத்தலாம்.

    'செரிமானத்தினை மேம்படுத்தும்- அஜீரணம், வயிறு வீக்கம், வாந்தி உணர்வு போன்றவை குறைய உதவுகின்றது. கல்லீரல் செயல்பாட்டினை ஊக்குவித்து பித்த சுரப்பை போக்குகின்றது.

    கருவேப்பிலையில் உள்ள இரும்புசத்து மற்றும் போலிக் அமிலம் ஹீமோகுேளாபின் அளவை உயர்த்த உதவுகின்றன. முடி ஆரோக்கியத்திற்கு, முடிவேர் வலுப்படுதலுக்கு கருவேப்பிலை சாறு உதவுகின்றது. உடலில் தேவையில்லாத கொழுப்பு நீங்குகின்றது. கல்லீரலை பாதுகாக்கின்றது. மதுபானம் அல்லது மருந்துகளால் ஏற்படும் கல்லீரல் அலற்சியை குறைக்க உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி கூடுகின்றது.

    கவனிக்க வேண்டியவை:

    கருவேப்பிலை சாறு அதிகம் எடுத்துக் கொண்டால் வயிற்று எரிச்சல் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் இதனை தவிர்ப்பது நல்லது. இது மருந்தல்ல. சிகிச்சை முறையாக பயன்படுத்தக் கூடாது. இந்த தகவல்கள் ஆதாரத்துடன் சேகரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன.

    புதினா சாறு: இது நம் நாட்டு சமையலில் அதிகம் இடம் பெறுவது தான். இருப்பினும் சாறு குடிக்கும் பொழுது இதன் பலன்கள் கூடுதலாக இருக்கும். 30 மிலி அளவு சாற்றினை எடுத்துக் கொள்ளலாம். புதினாவில் உள்ள முக்கிய ஊட்ட சத்துக்கள்: வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஈ சத்து நிறைந்தது. இரும்பு சத்து, கால்சியம், மெந்தால் ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகமாக உள்ளன.

    நன்மைகள்: புதினா சாறு, செரிமானத்தினை மேம்படுத்தும். அஜீரணம், வயிற்று எரிச்சல், வாந்தி உணர்வு இவற்றினை குறைக்கும். அசிடிடி குறையும். கல்லீரல் செயல் பாட்டினை மேம்படுத்தும். மூக்கடைப்பு, சளி, இருமல் குறைக்கும். இதனால் சுவாசம் எளிதாகும். தலைவலி, மனஅழுத்தம், சோர்வு, இவற்றினைக் குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

    கவனிக்க வேண்டியவை: அதிக அளவில் குடித்தால் வயிற்று எரிச்சல் ஏற்படும். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்த்து விடலாம். கர்ப்பிணி பெண்களும் தவிர்த்து விடலாம். நீண்ட நாள் நோயாளிகள் மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மோர்: மோர் என்பது தயிரை நீருடன் கலந்து வெண்ணெய் பிரித்து தயாரிக்கப்படும். பாரம்பரிய தயிரை விடவும் கூட மோர் நன்மை கொண்டது. மோர் குறைந்த கொழுப்பு, நிறைந்த கலோரி சத்து கொண்டது. நன்மை தரும் புரோபயாடிக் பாக்டிரீயா கொண்டது. கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி12, பி2, மற்றும் சிறிது புரதம் கொண்டது. குடல்நலம் காக்கப்படுகின்றது. அஜீரணம், வயிற்று வீக்கம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகள் குறைக்கின்றன. சோர்வு, நீர் இழப்பு தடுக்கப்படுகின்றது. அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் குறைகின்றது. மோரில் உள்ள கால்சியம் எலும்பு வலிமை பெற மற்றும் எலும்பு தளர்வு தடுப்பு ஆகியவற்றிற்கு உதவுகின்றன. பசியை கட்டுப்படுத்தவும் சர்க்கரை பானங்களுக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.

    கவனிக்க வேண்டியவை: சிலருக்கு சளி அதிகரிப்பு, மூக்கடைப்பு ஏற்படலாம். வயிற்று வலி, வயிற்றுப் போக்கு ஏற்படலாம். இரவு நேரத்தில் மோர் தவிர்க்க வேண்டும். அதிகமாக மோர் குடித்தால் வயிறு கனத்த உணர்வு. குடல் இயக்கம் பாதிப்பு ஏற்படலாம். உப்பு அதிகம் இருந்தால் தாதுச் சமநிலை பாதிப்பு ஏற்படலாம். காய்ச்சல் மற்றும் குடல் தொற்று உள்ள போது மோரை தவிர்க்க வேண்டும். மோர் புதிய தயிரில் தயாரித்து நல்ல அளவில் நீர் சேர்க்க வேண்டும். இஞ்சி, சீரகம், கருவேப்பிலை சேர்த்து பகலில் அருந்தலாம். இப்படி பல விதங்களில் உடலை, குடலை பராமரிக்க முடியும். எளிமையான இந்த பானங்களை அருந்தலாமே.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாதாரண மனிதர்கள் முதல் சாதனையாளர்கள் வரை அனைவருக்கும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று தேவைப்படுகிறது.
    • எண் கணிதம் வேறு ஜோதிடம் வேறு கிடையாது.

    எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பது அவ்வையாரின் வாக்கு.

    ஒரு உடலுக்குக் கண்கள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல மனித வாழ்க்கைக்கு எண்களும் எழுத்துகளும் மிக முக்கியம். நமது அன்றாட தேவை மற்றும் பயன்பாட்டில் பணம், நேரம், தூரம், வயது, மற்றும் அளவீடுகள் என அனைத்திலும் எண்களின் பங்களிப்பு இன்றியமையாதது. ஒருவரின் வாழ்க்கையை முறைப்படுத்தவும், அன்றாடச் செயல்பாடுகளில் சரியான முடிவுகளை எடுக்கவும் எண்கள் வழிகாட்டுகின்றன. எண் கணிதம் பற்றிய முழுமையான விழிப்புணர்வு உள்ளவர்களே வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

    சாதாரண மனிதர்கள் முதல் சாதனையாளர்கள் வரை அனைவருக்கும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று தேவைப்படுகிறது. உலகில் பல்வேறு விதமான அதிர்ஷ்ட வாய்ப்புகள் மனிதருக்கு பல வரப்பிரசாதமாக உள்ளது. அதில் ஒன்றுதான் என் கணிதம். இதை சில பேர் நக்கல் நையாண்டித்தனமாக இரண்டு எழுத்தை மாற்றி வைத்தால் தலைவிதி மாறிவிடுமா என்று கேட்பார்கள். நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றி நாம் கவலைபடக் கூடாது. உலகில் சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்த பலர் தங்களது பெயரை எண் கணித முறையில் மாற்றி அமைத்த பிறகு வாழ்வாதாரம் உயர்ந்து உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் எண் கணிதம் வேறு ஜோதிடம் வேறு கிடையாது. ஜோதிடத்தின் பல்வேறு உட்பிரிவுகளில் எண்கணிதமும் ஒன்றாகும். சுய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளுக்கு ஏற்ப பெயரை அமைத்துக் கொள்வது அனைவரின் சுவாசக் காற்றான மொபைல் போன் எண்கள் மற்றும் வாகன எண்களை அதிர்ஷ்டத்திற்கு தகுந்தார் போல் மாற்றிக் கொள்வது உயர்வான நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். அதிர்ஷ்டம் என்பது புதையல் யோகம் அல்ல. ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் எப்படி வேண்டுமானாலும் தேடி வரலாம். பூமியை பிளந்து தான் அதிர்ஷ்டத்தை பெற வேண்டும் என்ற கணக்கு இல்லை.

    தொழில், உத்தியோக ரீதியான அதிர்ஷ்ட லாபமும் புதையல் யோகமே. உண்மையான உழைப்பின் மூலம் வருவது தான் நிலையான நிரந்தரமான அதிர்ஷ்டமாகும். எனக்கு அதிர்ஷ்டம் இல்லை ஜாதகம் சரியில்லை என்று புலம்பிக் கொண்டு ஒரே இடத்தில் நின்றால் அதற்குப் பெயர்சோம்பேறித்தனமாகும். அதிர்ஷ்ட எண்களை வங்கி கணக்கு எண், வாகன எண், வீட்டு எண், மொபைல் எண், பெயர் எண் அல்லது முக்கியமான வேலைகளைத் தொடங்கும் தேதிகளாகவும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.

    பிறந்த தேதி மற்றும் பெயர் எண்ணுக்கு ஏற்றவாறு தொழில், திருமணம், மற்றும் பெயர் திருத்தம் போன்றவற்றைச் செய்வதன் மூலம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் ஒருவர் தன் ஆளுமை, பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொண்டு சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.

    நல்ல வாய்ப்புகளை அடைய தேவையான அதிர்ஷ்டத்தை அதிகரித்துக் கொண்டு வெற்றியை நோக்கி ஓட வேண்டும். அதேபோல் உழைக்காமல் அதிர்ஷ்டம் வராது. அதிர்ஷ்ட போன் நம்பர் அதிர்ஷ்ட பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் அதிர்ஷ்டத்தை அடைய முடியாது முறையான உழைப்பாளிகளுக்கு சரியான திட்டமிடுதல் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கும். நிற்கும் குதிரைக்கு மதிப்பு இல்லை. ஓடும் குதிரைக்கு மட்டுமே மதிப்பு. வெற்றியை நோக்கி ஓடுபவர்களுக்கு தோல்வி இல்லை வெற்றி புதையலாக மாறும். புதையலை நோக்கி ஓடி காலத்தை நகர்த்துவதை விட உழைப்பை நோக்கி ஓடினால் ஏராளமான தனவரவும் வாய்ப்புகளும் உண்டாகுவது உறுதி. கற்பனையில் அதிர்ஷ்டத்தை நம்பினால் வாழ்க்கை கெட்டுவிடும் என்பது முன்னோர்களின் அனுபவ உண்மை.

    பல வெளிநாடுகளில் எண்ணியதை பிரதான சக்தியாக பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பல புதிய உண்மைகளை உலகிற்கு வழங்கியுள்ளார்கள். தற்போது மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த எண்ணியல் கலை சிலருக்கு அசுர வளர்ச்சியையும் பலருக்கு வீழ்ச்சியையும் தருகிறது.

    பொதுவாக ஜோதிடம் அறியாத நியுமராலஜி நிபுணர்கள் பிறந்த தேதியை அடிப்படையாக வைத்து ஒரு தனி மனிதன் அல்லது நிறுவனத்தின் பெயரை தேர்வு செய்து தருகிறார்கள். இது காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையாக சிலருக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுத்து விடுகிறது. தவறான அதிர்ஷ்ட எண்ணில் பெயர் மாற்றி வைத்துக் கொண்டால் நிலையான, நிரந்தமான புகழ், பணம், உயர்வு கிடைக்காது. பலர் தவறு எங்கே என்ற புரிதல் இன்றி தொடர் தோல்வியை சந்திக்கிறார்கள். சிலருக்கு பெரிய பெயர் மாற்றத்தைத்தரும் நீயுமராலஜி பலருக்கு ஏன் வெற்றி தருவதில்லை என்ற காரணத்தையும் எல்லோருக்கும் நியூமராலஜி பயன்தர அதை எப்படி பயன் தருவது போன்ற அறிய தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

     

    ஒருவருடைய ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் அமைந்தாலும் அதை சிறப்பாக பெற வேண்டுமானால் உடல் எண் உயிர் எண்ணிற்கு ஏற்றவாறு பெயர் வைப்பது அவசியம். ஒருவருடைய ஜாதகத்தில் மோசமான யோகம் இருந்தாலும் உடல், உயிர் எண்ணுக்கு ஏற்ற பெயர் வைப்பதால் கெடுதலை ஓரளவு குறைக்கலாம். ஆனால் முழுவதும் நீக்க முடியாது.

    ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெற பிறந்த ஜாதகம் நன்றாக இருக்க வேண்டும். அல்லது பிறந்த தேதியின் உடல், உயிர் எண்ணிற்கு ஏற்ற படி பெயர் வைத்துக் கொள்வது உத்தமம். இயலாதவர்கள் உடல், உயிர் எண்களை ஆதிக்கம் செய்யும் கிரகங்களை வழிபாடு செய்வதன் மூலமும் நல்ல பலன்களை பெற முடியும். சிலர் அதிர்ஷ்ட பெயரை பிறந்த ஜென்ம நட்சத்திரப்படியும், சிலர் பிறவி எண் படியும், சிலர் விதி எண் படியும், சிலர் விதி எண்ணிற்கு பொருத்தமான நட்பு எண்ணிலும், பொதுவாக அதிர்ஷ்டம் தரக்கூடிய 1,5,9 ஆகிய எண்ணிலும் பெயரை அமைக்கிறார்கள். இந்த முறைகள் வெகு சிலருக்கு பலன் தருகிறது. பலருக்கு நேர்மறையான பலன்களை மட்டுமே தருகிறது.

    ஜாதகப்படி பெயர் அமைத்தல் பலர் ஜோதிடத்தையும், எண்ணியலையும் பிரித்துப் பார்க்கிறார்கள். அது தவறு. ஒருவருக்கு சுய ஜாதகத்தை மீறிய நற்பலன்கள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. பிறவி எண், விதி எண் இவற்றோடு ஒருவருடைய ஜாதக ரீதியாக யோகத்தை தரக்கூடிய கிரகத்தின் எண்ணில் பெயரை அமைத்துக் கொண்டால் பலன் நூறு சதவிகிதம் உறுதி. பிறவி எண், விதி எண் இவற்றோடு ஜாதகத்தையும் ஒப்பிட்டு, அந்த ஜாதகப்படி எந்த கிரகம் நன்மை தரும் என்பதை ஆய்வு செய்து அந்த கிரகத்திற்குரிய எண், பிறந்த தேதி எண்ணிற்கு பொருத்தமாக இருக்கிறதா என ஆராய்ந்து அதற்கு பொருத்தமான எண்ணில் பெயரை அமைப்பதே மிக உன்னத முறையாகும். ஜாதகத்தில் வலிமை பெற்ற கிரகத்தின் எண்ணை அல்லது அதன் நட்பு எண்ணின் அடிப்படையில் பெயர் வைக்கும் போது நல்ல பலன் கிடைக்கும்.

    இவ்வாறு தேர்வு செய்யும் எண் ஜாதகரின் சுய ஜாதக லக்ன ரீதியான அசுபர்களாக உள்ள கிரகத்தின் எண்ணின் பெயராக இருக்க கூடாது. ஒருவரின் ஜாதகத்தில் பலமாக உள்ள கிரகம் வாழ்நாள் முழுவதும் ஜாதகத்தை இயக்கும். அதே கிரகம் லக்ன ரீதியான சுபர் எனில் ஜாதகருக்கு சுபபலன்கள் மிகுந்து கொண்டே இருக்கும்.

    ஜோதிடமும் நியூமராலஜியும்

    ஒரு குழந்தை பிறக்கும் பொழுதுவான மண்டலத்திலுள்ள கிரகங்களில் சில கிரகங்கள் வலிமையாக இருக்கலாம். சில கிரகங்கள் வலிமை இழந்து நிற்கும். லக்ன ரீதியான அசுப கிரகம் வலிமை இழந்தால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் லக்ன ரீதியான சுபர் எனில் அதன் தசா புக்தி காலங்களில் நற்பலன்களை அனுபவிக்க முடியாமல் போய்விடும். வலிமையற்ற கிரகத்தை பலப்படுத்த பல்வேறு பூஜை பரிகாரமுறைகள் ஜோதிட சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தாலும் பரிகாரம் குறுகிய காலத்திற்கு மட்டுமே பலன்கள் தரும். ஆனால் நிரந்தரமான பலன்களைத் தருவதில் எண் கணித பெயர்கள் என்றால் அது மிகைப்படுத்தலாகது. வெறும் அதிர்ஷ்டப் பெயரை மட்டும் அமைத்துக் கொண்டால் 25 சதவீதம் மட்டுமே பலன் கிடைக்கும். அந்த நல்ல பெயரை ஜாதகம் பார்த்து பிறந்த எண், விதி எண் இவற்றோடு ஒப்பிட்டு ஒருவருடைய ஜாதகத்திற்கு யோகத்தை அளிக்கக்கூடிய எண்ணில் பெயரை வைத்துக் கொண்டால் வாழ்க்கை ஒளிமயமாகும்.

    உடல் எண்: ஒருவருடைய பிறந்த தேதியைக் கூட்டினால் வருவது உடல் எண் எனப்படும்.

    உயிர் எண்: ஒருவருடைய பிறந்த, தேதி, மாதம், வருடம் இவைகளை கூட்டினால் வருவது உயிர் எண் எனப்படும்.

    பெயரெண்: ஒருவருடைய பெயருக்கு உண்டான எழுத்துக்களுக்கான எண்களை கூட்ட வருவது பெயரெண் எனப்படும்.

    எண்ணும் எழுத்தும்

    ஆங்கில மொழியே உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தும் எண் என்பதால் ஆங்கில எழுத்துக்களே எண் கணித சாஸ்திரத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மனிதனையும் நவ கிரகங்கள் ஆள்வது போல் சில எண்களும் ஆளும். அதன்படி ஒருவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தக்கூடிய அதிர்ஷ்ட எண்களை கண்டறிந்து அதன்படி பெயரை திருத்தி அமைத்துக் கொண்டால் வாழ்க்கை வசந்தமாகும். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் 9 எண்களுக்கு மேல் எழுத்துக்கள் இல்லை. ஒவ்வொரு எழுத்தும் ஒரு கிரகத்தைச் சார்ந்துள்ளது.

    எழுத்துக்கள் எண்கள்

    A,I,J,Q,y 1

    B,K,R 2

    C,G,L,S 3

    D,M,T 4

    E,H,N,X 5

    U,V,W 6

    0, Z 7

    F, P 8

    9ம் எண்ணிற்கு எந்த எழுத்தும் கிடையாது. நவகிரகங்களும் 1 முதல் 9 வரையான எண்களின் ஆளுமைக்கு உட்பட்டது.

    எண்கள் கிரகங்கள்

    1. சூரியன்

    2. சந்திரன்

    3. குரு

    4. ராகு

    5. புதன்

    6. சுக்கிரன்

    7. கேது

    8. சனி

    9. செவ்வாய்

    பெயரில் சில எழுத்துக்களை மட்டும் மாற்றம் செய்வதால் வாழ்க்கை மாறாது. ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒரு ஆளும்கிரகம் உண்டு அந்த ஆளும் கிரகத்திற்கு ஏற்ற எண்களை சூட்சும முறையில் பெயரில் சேர்க்கும் பொழுது வலுவான வாழ்வியல் மாற்றம் நடக்கும். இன்று உலகத்தில் மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு நபரிடம் இரண்டு முதல் மூன்று செல்போன்கள் உள்ளது. இவ்வளவு ஏன் பிறந்த குழந்தைக்கு கூட சாப்பாடு ஊட்ட செல்போன் தேவைப்படுகிறது. பிறந்த குழந்தையின் பெயரில் தனி யூடியூப் சேனல் ஆரம்பித்து அவர்கள் தகவல் தொடர்பு சாதனங்களுடன் தங்களது குழந்தைகளின் வாழ்வாதாரத்தை இணைத்து விடுகிறார்கள். மொபைல் எண் ஜோதிடம் என்பது பிறவி எண் அல்லது விதி எண்ணுடன் மொபைல் எண்களின் கூட்டுத்தொகையை பொருத்தி அதிர்ஷ்டத்தை அடையும் முறையாகும். பத்து இலக்க எண்களையும் கூட்டி ஒற்றை எண்ணாக மாற்ற வேண்டும்,

    உதாரணமாக கூட்டு எண் ஒன்று எனில் தலைமை பண்பு அரசியல் அரசாங்க வெற்றி உண்டு. ஐந்து எனில் நல்ல நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வியாபார வளர்ச்சி தொழில் விருத்தி ஆகியவை உண்டாகும். இதுபோல் ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு.

    சரியான மொபைல் எண் அமைந்தவர்களின் வாழ்க்கையில் மன நிம்மதி நல்ல பொருளாதார வளர்ச்சி நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோக வாய்ப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்தி தரும். அவரவரின் பிறந்த தேதிக்கு ஏற்றவாறு எண்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல முடியும்.

    இனி வரும் வாரங்களில் நவகிரகங்களின் எண்களில் பெயர்கள் அமைந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றிய கட்டுரையை நீங்கள் படிக்க முடியும்.பிறந்த நேரம் சரியாக இல்லாவிட்டால் எண் கணிதப் படி பெயர் மொபைல் எண்களை மாற்றி அமைக்கும் போது நல்லது நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும்.

    செல்: 98652 20406

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு ஆண்டில் 96 தர்ப்பணங்கள் கொடுக்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
    • மாலையில் குல தெய்வத்தை வழிபட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபடுவது மிகச் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) வருவது மாசி மாத அமாவாசை. மாதந்தோறும் அமாவாசை திதி வந்தாலும் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை திதி கூடுதல் சிறப்பு பெறுகிறது.

    தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை ஆகியன மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதே போல் மாசி மாத அமாவாசையும் தனிச் சிறப்பு வாய்ந்தது. ஒரு வருடத்தில் 12 அமாவாசைகள் வருகிறது. மேலும், அமாவாசை திதியின் அதிபதி நம் முன்னோர்கள்தான். இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு சிறப்பு தூபம் காட்டி தியானம் மற்றும் அன்னதானம் செய்வது குடும்பத்திற்கு நல்லது.

    ஒரு ஆண்டில் 96 தர்ப்பணங்கள் கொடுக்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதன்படி மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, கிரகண காலங்கள், திதி, புரட்டாசி மகாளய பட்சத்தின் 15 நாட்கள் என 96 தர்ப்பணங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

    அதில் மாசியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பான பலன்களை தரும் என்றும் சொல்லப்படுகிறது.

    இந்த நாளில் அதிகாலையில் எழுந்து, நீராடி, முன்னோர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். ஆறு, குளம், கடலில் புனித நீராடுவது மிகவும் புண்ணியமானதாகும். முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மாலையில் குல தெய்வத்தை வழிபட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    மாலையில் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி, குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் நமது முன்னோர்களின் மனதை குளிர்வித்து அவர்களின் ஆசியை பெறுவதுடன் குலதெய்வத்தின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும்.

    அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதன் மூலம் நாம் செய்த பாவம் மட்டுமின்றி, பல தலைமுறைகளாக நமது முன்னோர்கள் செய்த பாவங்களும் தீர்ந்து, அவர்களின் ஆன்மா நற்கதி அடையும். முன்னோர் வழிபட்டை மேற்கொள்வதால் குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். பிரச்சினைகள், திருமண தடை போன்ற தடைகள், தோஷங்கள் நீங்கும். குலம் செழிக்கும். குழந்தை பேறு உண்டாகும். மாசி அமாவாசையில் நதிகளின் கரையில் தெய்வங்களும் வசிக்கின்றனர். 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நீராடுவது அனைத்து பாவங்களையும் போக்கும் என்கின்றனர் ஆன்மீகபெரியவர்கள். மாசி அமாவாசைக்கு நம் முன்னோர்களை வழிபாடு செய்தால் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பப்படுகிறது.

    இந்த ஆண்டு மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால் அன்று தர்ப்பணம் கொடுப்பது பித்ருக்களுக்கு அளவற்ற மன மகிழ்ச்சியை தருவதோடு தானதர்மம், உணவு, தண்ணீர் ஆகியவற்றை தானம் செய்தால் பல ஆயிரம் ஆண்டுகள் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்த பலன் கிடைக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகா சிவராத்திரி தோன்றியதும், லிங்க வழிபாடு தோன்றியதும் திருவண்ணாமலை தலத்தில் தான்.
    • திருவண்ணாமலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் தவம் செய்திருக்கிறார்கள்.

    சிவ பெருமான் பஞ்சபூதங்களின் வடிவில் காட்சி தரும் பஞ்சபூத தலங்களில் ஈசன் அக்னி வடிவமாக காட்சி தரும் தலம் திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் என போற்றப்படுவதும், தமிழகத்தில் உள்ள முக்தி தலங்களில் முதன்மை தலமாக போற்றப்படுவதும் திருவண்ணாமலை தான்.

    திருவண்ணாமலை தலத்தில் தான், சிவ பெருமான், பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு ஜோதி வடிவமாக காட்சி தந்ததாக சொல்லப்படுகிறது. இதை போற்றும் விதமாகவே திருக்கார்த்திகை தீப திருநாளில், சிவமே மலையாக காட்சி தரும் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    ஜோதி வடிவமாக காட்சிதந்த சிவ பெருமான், லிங்கோத்பவராக காட்சி தந்ததும் இங்கு தான் என சொல்லப்படுகிறது. அதனால் மகா சிவராத்திரி தோன்றியதும், லிங்க வழிபாடு தோன்றியதும் திருவண்ணாமலை தலத்தில் தான்.

    அருணன் என்றால் சூரியன் - நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். மலையே சிவனாக காட்சி தரும் திருவண்ணாமலை, கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி மாறி வந்துள்ளது.

    "அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டடியில் ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்கும், சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்." என்கின்றது அருணாசல புராணம். ஒரு சாதாரண நாளில் திருவண்ணாமலை கிரிவலம் சென்றாலே நமது முன்வினைகள் நீங்கிவிடும். பொருள் வேண்டுபவர்கள் பவுர்ணமியிலும், அருள் வேண்டுபவர்கள் அமாவாசையிலும் திருவண்ணாமலையை கிரிவலம் வரவேண்டும்.

    அதுபோல் சிவ பெருமானின் அருளை பெற விரும்புபவர்களும், பாவங்கள் நீங்கி வளமான வாழ்வு பெற விரும்புபவர்களும் மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் செல்வது சிறப்பாகும்.

    திருவண்ணாமலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் தவம் செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் அமாவாசை அன்று அண்ணாமலை யாரை கிரிவலம் வந்து சிவனின் அருள் பெற்று, பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலை அடைந்துள்ளார்கள். இதனால், சக்தி அதிர்வலைகள் அதிகமான இந்த மலையைச் சுற்றி வருவதால் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் ஆசிகளை பக்தர்கள் பெறுகின்றனர் என்பது ஐதீகம். மற்றும் திருவண்ணாமலையை கிரிவலம் சுற்றி வரும்போது சக்தி மிக்க மூலிகைச் செடிகொடிகளின் காற்றை சுவாசிப்பதால் உடலும் உள்ளமும் நலம் பெறுகிறது.

    பொதுவாக ஞாயிறு கிரிவலம் சிறந்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் சூரிய பகவான் பூவுலகிற்கு ஏதேனும் ஒரு வடிவில் வந்து திருவண்ணாமலையைக் கிரிவலம் செய்வதாகக் ஐதீகம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிவராத்திரி என்பதால் கிரிவலம் செல்பவர்கள் சிவலோகமாம் திருக்கயிலாயத்தில் தேவர்களாய் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்களாம். குடும்பப் பிரச்சினை காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர் ஞாயிறு கிரிவலம் செய்தால் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ வழி பிறக்கும் என்கின்றனர்.

    சிவராத்திரி இரவு கண் விழித்து சிவனைத் தொழுவார்கள். உறங்காமல் இருப்பது என்றால் ஆன்மா விழித்திருப்பது என்று பொருள். அன்றிரவு முழுவதும் மலையை வலம் வந்தால் கண் விழித்த பலனும் உண்டு. இறைவனை இடைவிடாது தொடர்ந்து தொழுத பலனும் உண்டு. சிவராத்திரி அன்று கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கக் கோவில்களிலும் அந்தந்த ஜாமங்களில் அபிஷேகம் நடப்பதை கிரிவலம் செய்யும்போதே தரிசிக்கலாம்.

    திருவண்ணாமலை கிரிவலத்தை முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் மலையின் காவல் தெய்வமான பூத நாராயணரை வணங்கி, மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கி தொடங்க வேண்டும். அடுத்து இடையூறு இல்லாமல் கிரிவலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு கிரிவலத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    கிரிவலத்தை முடித்தப் பின்னர், கோவிலில் மூலவரின் உள்பிரகாரத்தில் இருக்கும் துர்வாசமகரிஷியை வணங்கவேண்டும். அவரிடம் முறைப்படி கிரிவலம் முடித்துவிட்டு வந்துள்ளதாக மானசீகமாகத் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே அண்ணாமலையாரையும், உண்ணா முலையம்மாளையும் தரிசிக்க வேண்டும். இப்படிச் செய்தால் ஈசன் அருளுடன் துர்வாசரின் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த கிரிவலப்பயணம் முழுவதும் எவரிடமும் பேசாமலும், விடாமல் ஓம் சிவ சிவ ஓம் என ஜபித்தவாறும் சென்றால் நமது எண்ணிக்கை நிச்சயமாக ஒரு லட்சத்தைத் தொட்டுவிடுகிறது. இப்படி ஜபித்துவரும்போது நாம் இந்த மந்திரத்தை எண்ண வேண்டிய அவசியமில்லை.

    அசாத்தியமான மன வலிமை உள்ளவர்களால் மட்டுமே இப்படி 14 கி.மீ.தூரமும் மவுனமாக வர முடியும். அப்படி ஒரே ஒரு முறை கிரிவலம் மவுனமாக ஓம் சிவ சிவ ஓம் ஜபித்தவாறு வந்துவிட்டாலே மறுநாளே நமது கடுமையான பிரச்சினை ஒன்று தீரும் அல்லது அதற்கான சூழ்நிலை உருவாகிவிடும் என்கின்றனர் பக்தர்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து ராசிக்காரர்களுக்கும் பாதிப்பு இருக்கும்.
    • பிரதோஷ நாளில் சிவாலயத்தை வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது.

    சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. சனிக்கிழமையுடன் திரயோதசி திதி இணைந்து வரும் நாள் சனி மகா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) சனி மகா பிரதோஷம் ஆகும்.

    தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டது ஏகாதசி தினம் ஆகும். மறுநாளான துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருக்கும் சிவ பெருமான், 3-ம் நாளான திரியோதசி திதியில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா கால வேளையில் மயக்க நிலையில் இருந்து விழித்து, சந்தியா நிருத்த தாண்டவம் ஆண்டினார்.

    பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் சிவபெருமானின் 5 விதமான தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை குறிப்பதாகும். சிவ பெருமான், பார்வதி தேவியுடன் ஆனந்த தாண்டம் ஆடி, உலக உயிர்கள் அனைத்திற்கும் அருள் புரிந்த காலமே பிரதோஷ காலமாகும்.

    பிரதோஷ வேளையான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மிகவும் சக்தி வாய்ந்தது என்கின்றன சாஸ்திர நூல்கள். சனிபிரதோஷ நாளில் செய்யும் வழிபாடு ஆயிரமாயிரம் மடங்கு புண்ணிய பலன்களைக் கொடுக்கும், நம் தீவினைகளை நீக்கும். பொதுவாகவே சனிக்கிழமைகள் சனிபகவானுக்கு உரியன. இந்த நாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்து நவகிரகத்தில் சனிபகவானையும் வழிபட்டுவந்தால் சனியின் தொல்லைகள் தீரும்.

    சனிபகவான் நேர் பாதையில் சஞ்சாரம் செய்யும்போது, ஏழரைச் சனி, அஷ்டம சனி, கண்டக சனி, அர்த்தாஷ்டம சனி நடப்பவர்களையுமே அதிக அளவில் பாதிப்பார். ஆனால் வக்ர காலத்தில் இந்தப் பலன்கள் மாறுபடும். அனைத்து ராசிக்காரர்களுக்கும் பாதிப்பு இருக்கும்.

    எல்லா சனிக்கிழமைகளிலும் சிவாலயம் செல்ல முடியாதவர்கள் குறைந்த பட்சம் சனி பிரதோஷ நாளிலாவது சென்று வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டால் ஓர் ஆண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

    காரியத்தடை, சுபகாரியங்கள் தள்ளிப்போவது, குழந்தைப்பேறு தாமதமாவது, வேலை கிடைப்பதில் சிக்கல் என வக்ர சனியால் துன்புறும் அன்பர்கள் நாளை (சனிக்கிழமை) சனி மகாபிரதோஷ நாளில் வழிபாடு செய்வது அவசியம். குறிப்பாகத் தொந்தரவுகளை அனுபவித்துவரும் ராசிக்காரர்கள் இந்த மகாபிரதோஷ வழிபாட்டைச் செய்வது நல்லது.

    பிரதோஷ நாளில் சிவாலயத்தை வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது. சனிக்கிழமை மாலை 4.30 முதல் 6 வரையுள்ள காலம் சூரியன் மற்றும் சுக்கிர ஓரையில் அமையும். இந்த நேரம் வெற்றி தரும் முகூர்த்தத்தைக் குறிக்கின்ற ஒரு நேரமாக உள்ளது.

    சிவபெருமானைக் குறிப்பிடுகின்ற சூரிய ஓரையில் தொடங்கி, அம்பாளைக் குறிக்கின்ற சுக்கிர வேளையில் நிறைவுபெறும் பிரதோஷ பூஜையில் மகாலட்சுமியின் ஆசிகள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதால், சனி மகா பிரதோஷம் மிகவும் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

    நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலத்தில் சிவ பெருமானை தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க உருகி வழிபட்டால் சகல விதமான நன்மைகளும் வந்து சேரும்.

    பிரதோஷ காலத்தில் சிவாய நம எனும் பஞ்சாட்சர மந்திரம் உச்சரிப்பது நாம் செய்த பாவங்கள் மட்டுமல்ல 7 தலைமுறையினர் செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    ×