என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேராசிரியர் கோபாலி வீட்டில் தயாரிக்கும் ஊறுகாய் சிவாஜிராவுக்கு மிக மிக பிடித்துப் போனது.
    • சென்னையில் உள்ள பல்வேறு ஸ்டூடியோக்களுக்கு சிவாஜிராவ் மற்றும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    சிவாஜிராவ் மீது பேராசிரியர் கோபாலி காட்டிய பாசமும், அக்கறையும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போனது. 1974-ம் ஆண்டின் முற்பகுதியில் சிவாஜிராவின் நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. அவரது லட்சியம் எல்லாம் விரைவில் நடிகனாகி விடவேண்டும் என்ற இலக்கை நோக்கியே இருந்தது.

    அதற்கு பேராசிரியர் கோபாலி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்து இருந்தார். ஒரு கட்டத்தில் பேராசிரியர் கோபாலி தனது வீட்டில் இருந்து எடுத்து வரும் சாப்பாட்டை சிவாஜிராவை அழைத்து பகிர்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். சிவாஜிராவும் வெட்கப்படாமல் வாங்கி வயிறுநிறைய சாப்பிடுவார்.

    சில சமயங்களில் பேராசிரியர் கோபாலிக்கு எதுவும் இருக்காது. அவர் சாப்பாட்டில் பெரும்பகுதியை சிவாஜிராவ் சாப்பிட்டு முடித்து இருப்பார். பிறகு மனம் கேட்காமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு உட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு சென்று தோசை வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பார். இப்படி பல நாட்கள் நடந்துள்ளது.

    நாளடைவில் பேராசிரியர் கோபாலியின் வீட்டுக்கு சிவாஜிராவ் செல்ல தொடங்கினார். பேராசிரியரின் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு விளையாடி விட்டு வருவார். சில நாட்கள் பேராசிரியர் வீட்டிலேயே சாப்பிடவும் செய்வார்.

    பேராசிரியர் கோபாலி வீட்டில் தயாரிக்கும் ஊறுகாய் சிவாஜிராவுக்கு மிக மிக பிடித்துப் போனது. எனவே அந்த ஊறுகாயை சாப்பிட வேண்டும் என்பதற்காகவே அவர் பேராசிரியர் கோபாலி வீட்டுக்கு செல்வது உண்டு. அப்போது எல்லாம் உணவுடன் வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை பேராசிரியர் கோபாலி சொல்லிக் கொண்டே இருப்பார்.

    அவரது தொடர்ச்சியான அறிவுரைகள் காரணமாக சிவாஜிராவிடம் தன்னம்பிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. கூச்சத்தை மூட்டைக்கட்டி வைத்து விட்டு தைரியமாக பேசவும், செயல்படவும் தொடங்கினார். இதனால் திரைப்படக் கல்லூரி மாணவர்களில் சிவாஜிராவ் தனித்துவமாக தெரியத் தொடங்கினார்.

    அந்தக் காலக்கட்டத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்காக நிறைய திரைப்படங்களை காட்டுவார்கள். அவற்றை எல்லாம் பார்க்கும் சிவாஜிராவ் மேற்கொண்டு தனியாகவும் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்து வந்தார். முதலில் அமைந்தகரை லட்சுமி தியேட்டரில் மட்டுமே படம் பார்த்து வந்த அவர் பிறகு சென்னையில் உள்ள மற்ற தியேட்டர்களுக்கும் செல்ல தொடங்கினார்.

    குறிப்பாக தி.நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டருக்கு அடிக்கடி சென்று படம் பார்த்தார். தமிழ் புரிகிறதோ? இல்லையோ? தமிழில் வெளியாகும் படங்கள் அனைத்தையும் முதல் நாளே பார்த்து விடும் பழக்கத்தை உருவாக்கி இருந்தார். அப்படித்தான் அவர் நிறைய சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து இருந்தார்.

    திரைப்படக் கல்லூரியில் அளிக்கப்பட்ட பல்வேறு பயிற்சிகளில் ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று பிரபல நடிகர்கள், நடிகைகள் நடிப்பதை நேரில் காட்டுவதும் ஒன்றாகும். அந்த வகையில் சென்னையில் உள்ள பல்வேறு ஸ்டூடியோக்களுக்கு சிவாஜிராவ் மற்றும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கு நடிகர்-நடிகைகள், துணை நடிகர்-நடிகைகள் எப்படி நடிக்கிறார்கள்? என்பதை சிவாஜிராவ் உன்னிப்பாக கவனித்து மனதுக்குள் பதிய வைத்துக் கொண்டார். 2-ம் ஆண்டு படித்தபோது நடிப்பது மட்டுமின்றி பின்னணி பேசுவது, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது, சண்டைக் காட்சிகளில் நடிப்பது, பாடல் காட்சிகளில் நடிப்பது, வசனம் பேசுவது என்று நிறைய பயிற்சிகள் கொடுத்தனர்.

    ஒவ்வொரு பயிற்சியையும் சிவாஜிராவ் ஆர்வமுடன் செய்தார். டான்ஸ் ஆடுவது மட்டும்தான் அவருக்கு சற்று அலர்ஜியாக இருந்தது. எனவே டான்ஸ் கிளாசுக்கு மட்டும் வராமல் தப்பிச் சென்று விடுவார்.

    என்றாலும் நடிப்பு பயிற்சியில் மட்டும் அவர் குறைவைத்ததே இல்லை. கன்னட வகுப்பில் படித்தாலும் அவருக்கு சென்னையில் இருந்ததாலோ என்னவோ தமிழ் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. எனவே தமிழ் மொழி வகுப்பில் சொல்லிக் கொடுப்பதையும் ஆர்வமுடன் கேட்டு தெரிந்துக் கொள்வார்.

    ஒரு கட்டத்தில் தமிழ் மாணவர்களுடன் போட்டி போடும் வகையில் சிவாஜிராவின் செயல்பாடுகள் அமைந்தன. தமிழ் வகுப்பில் புதிதாக ஏதாவது செய்து விட்டால் அதை கன்னட வகுப்பிலும் செய்ய வேண்டும் என்று நினைப்பார். கன்னட வகுப்பில் அந்த மாதிரி பயிற்சி கிடைக்காவிட்டால் தமிழ் வகுப்பில் என்ன சொல்லி கொடுத்தார்கள்? என்று தெரிந்துக் கொள்வார்.

    தமிழ் வகுப்பில் படித்து வந்த நடராஜ், சதீஷ் இருவரிடமும் மிகுந்த நட்புடன் இருந்தார். அவர்கள் இருவரிடமும் தமிழ் பாடப்பிரிவில் என்னென்ன நடிப்பு பயிற்சி சொல்லிக் கொடுத்தார்கள். எப்படி சொல்லிக் கொடுத்தார்கள் என்பதையெல்லாம் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வார். தமிழ் மொழி பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் தாங்களாகவே நாடகங்கள் எழுதி நடித்து வந்தனர்.

    ஆனால் கன்னட மொழி மாணவர்கள் அத்தகைய பயிற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை. நாடகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிவாஜிராவ் தமிழ்ப் பிரிவு மாணவர்கள் என்ன நாடகம் நடத்துகிறார்கள் என்பதை கேட்டு தெரிந்துக் கொள்வார். அந்த நாடகத்தில் என்னென்ன கேரக்டர்கள் வருகிறது என்பதையெல்லாம் கேட்பார்.

    அதில் ஏதாவது ஒரு கேரக்டர் அவருக்கு பிடித்து விட்டால் அந்த கேரக்டரை எழுதி தரச்சொல்லி வாங்கி படித்துப் பார்த்து அதை நடித்து ஒத்திகைப் பார்ப்பார். இப்படி சிவாஜிராவ் ஒவ்வொரு நாளும் தனது நடிப்பு திறமையை பட்டைத் தீட்டிக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு மற்றொரு பயிற்சி தொடங்கப்பட்டது. அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் புகழ் பெற்ற நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், படத்தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்து வந்து அவர்களது அனுபவங்களை நீண்ட உரையாடல் போல பேச வைப்பார்கள்.

    அவர்களது அனுபவம் புதிதாக நடிப்பு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் கை கொடுக்கும் என்று நினைத்தனர். அந்த வகையில் நிறைய நடிகர்-நடிகைகள் திரைப்படக் கல்லூரிக்கு வந்து வகுப்பு நடத்தினார்கள்.

    அவர்கள் பேச்சை சிவாஜிராவ் உன்னிப்பாக கவனித்து தனது மனதுக்குள் பதிய வைத்துக் கொண்டார். டைரக்டர்களிடம் மிகுந்த பணிவு காட்டி பழகினார். அந்தக் கால கட்டத்தில் திரைப்படக் கல்லூரியில் எழுதப்படாத ஒரு விதி இருந்தது. அதாவது கல்லூரியில் படிக்கும் 2 ஆண்டுகளிலும் டைரக்டர்களிடம் சென்று படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்கக் கூடாது என்பதுதான் அந்த விதியாகும்.

    ஆனால் சிவாஜிராவ் அதையெல்லாம் கண்டு கொண்டதே இல்லை. சினிமா தயாரிக்கப்படும் இடங்களுக்கு எல்லாம் சென்று சினிமா தொடர்புடையவர்களை பார்த்து பேச தொடங்கினார். ஆனால் ஒருவர் கூட அவரை கண்டு கொண்டதே கிடையாது. என்றாலும் மனம் தளராமல் சிவாஜிராவ் முயற்சி செய்து கொண்டே இருந்தார்.

    ஒரு சமயம் ஸ்ரீதர் வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அவரது அறிவுரைகள் சிவாஜிராவை வியக்க வைத்தது. அதுபோல நடிகை பானுமதி ஒரு தடவை வந்து நீண்ட நேரம் வகுப்பு நடத்தினார். நடிப்பிலும், டைரக்ஷனிலும் எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அதுபோல நடிகை சவுகார்ஜானகி திரைப்படக் கல்லூரிக்கு வந்து விதவிதமாக எப்படி நடிக்கலாம் என்று சொல்லிக் கொடுத்தார்.

    இவையெல்லாம் சிவாஜிராவுக்குள் தன்னம்பிக்கையை மேலும் மேலும் அதிகரிக்க செய்தது. ஒரு நடிகனாகவே மாறி விட்டது போன்று சிவாஜிராவ் உணரத் தொடங்கினார். அருண் ஓட்டல் அறைகளிலும், திரைப்படக் கல்லூரி அறைகளிலும் அவர் எப்போதும் வித்தியாசமாக ஸ்டைலை உருவாக்கி நடித்து காட்டிக் கொண்டே இருந்தார்.

    அதிலும் எங்காவது கண்ணாடியை பார்த்து விட்டால் ஒருதடவை அதன் முன்பு நின்று ஸ்டைல் காட்டாமல் போக மாட்டார். சாலையோர ஜவுளி கடை கண்ணாடி முன்பு நின்று கூட அவர் ஒரு தடவை ஸ்டைலாக நடித்து பார்த்தார் என்றால் அவரது மனதுக்குள் எந்த அளவுக்கு நடிப்பு மீது வெறி இருந்து இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

    இந்த நிலையில் திரைப்படக் கல்லூரியின் 2-ம் ஆண்டு வகுப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது. இன்னும் 3 மாதங்களில் திரைப்படக் கல்லூரி வாழ்க்கை முடிந்து விடும் என்று தெரிய வந்ததும் சிவாஜிராவ் மனதுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

    திரைப்படக் கல்லூரி படிப்பு முடிந்ததும் தனக்கு சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்று அவர் மனதுக்குள் கேள்விக்குறிகள் கடல் அலைபோல வந்து கொண்டே இருந்தன. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் பெங்களூருக்கு திரும்பி போய் விட வேண்டியது இருக்குமோ என்று நினைத்த போது அவரது மனது கடும் பீதிக்குள்ளானது.

    கல்லூரி படிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்க... நெருங்க... சிவாஜிராவ் மனதுக்குள் பரபரப்பு மேலும் அதிகரித்தது. கல்லூரி முதல்வர் ராஜாராம் மற்றும் பேராசிரியர்கள் சிவாஜிராவிடம் எதிர்கால வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி வந்தனர்.

    இந்த நிலையில் திரைப்படக் கல்லூரியின் கடைசி மாதத்தில் சிவாஜிராவின் வாழ்க்கைைய மாற்றப்போகும் ஒரு முக்கிய சம்பவம் நடந்தது. அன்று சிவாஜிராவிடம் பேராசிரியர் கோபாலி கூறுகையில், "டேய் நாளைக்கு டைரக்டர் பாலச்சந்தர் வரப்போகிறார். நிறைய விஷயங்கள் சொல்வார். கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்" என்றார். டைரக்டர் பாலச்சந்தர் வருகிறார் என்றதும் சிவாஜிராவ் முகம் ஆயிரம் சூரியன்கள் கொண்ட பிரகாசம்போல மாறியது. பாலச்சந்தர் கவனத்தை தன் பக்கம் எப்படி திரும்ப செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

    சிவாஜிராவ் என்ன பேசினார்? எப்படி டைரக்டர் பாலச்சந்தர் மனதில் இடம் பிடித்தார் என்பதை திங்கட்கிழமை (29-ந்தேதி) பார்க்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலாவதாக நாம் போடும் முதலுக்கு மோசம் வராமல் இருக்குமா என்பதை உறுதி செய்யவேண்டும்.
    • முதலீட்டின் கால அளவைத் தீர்மானிக்க வேண்டும்.

    மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வம் என்னும் சிம்மாசனத்தில் அமர பல படிகளைத் தாண்டி வருகிறோம். பர்சனல் பைனான்சில், முதலீடுகளை கடன் சார்ந்தவை, பங்கு சார்ந்தவை என இரண்டாகப் பிரிக்கலாம் என்று பார்த்தோம். கடன் சார்ந்த முதலீடுகளில் போஸ்ட் ஆ பீஸ் திட்டங்கள், பேங்க் சேமிப்புத் திட்டங்கள் ஆகியவை பற்றியும் பார்த்தோம். அடுத்து வருவது பாண்ட்ஸ் எனப்படும் பத்திரங்கள். பங்குச் சந்தை வருவதற்கு முன்பே பத்திரங்கள் பிரபலம் அடைந்திருந்தன.

    பத்திரங்கள் என்றால் என்ன? கடன் வாங்குபவர்கள், கடன் தருவோரின் பணத்தை என்றைக்கு எவ்வளவு வட்டியுடன் திருப்பித் தரமுடியும் என்று எழுத்துப்பூர்வமாக தரும் உத்தரவாதமே பத்திரங்கள் எனப்படும். பேங்க் எப்.டி. ரசீது கூட ஒரு பத்திரம்தான்.

    எனக்கு நஷ்டமே வரக்கூடாது என்று உறுதியாக எண்ணுபவர்கள், நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள இயலாத சீனியர் சிட்டிசன்கள், குறிப்பிட்ட இடைவெளியில் வருமானம் வந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற தேவை உள்ளவர்கள் ஆகியோருக்கு பத்திரங்கள் கைகொடுக்கும்.

    பத்திரங்களில் அரசுப் பத்திரங்கள், கம்பெனிகள் வெளியிடும் பத்திரங்கள் என்ற இரு வகை உண்டு. ரிஸ்க் குறைந்தால், வருமானமும் குறையும் என்னும் சூத்திரத்தின்படி கம்பெனிகள் வெளியிடும் பத்திரங்களை விட அரசுப் பத்திரங்களில் ரிஸ்க்கும் குறைவு; வருமானமும் குறைவு.

    அரசுப் பத்திரங்கள்

    "அரைக் காசென்றாலும் அரண்மனைக் காசு" என்பார்கள். அதிலுள்ள நம்பகத்தன்மை அப்படி. மத்திய, மாநில அரசுகள் மற்றும் என்.ஹெச்.ஏ.ஐ., ஹட்கோ என்.டி.பி.சி. போன்ற அரசு நிறுவனங்கள், நாட்டின் உள்கட்டமைப்பு செலவுகளுக்காகவும், வளர்ச்சித் தேவைகளுக்காகவும் பத்திரங்கள் வெளியிடுகின்றன. இவற்றின் முதலீட்டுக் காலம் ஐந்து முதல் நாற்பது வருடங்கள் வரை. முன்பெல்லாம் பெரிய கம்பெனிகளுக்கும், வங்கிகளுக்கும் மட்டுமே இவற்றில் முதலீடு செய்யும் பாக்கியம் கிட்டும். தற்போது சிறு முதலீட்டாளர்களும், கோஆப்பரேடிவ் பேங்குகளும் கூட இவற்றில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    தற்போது 8.05 சதவீதம் வட்டி தரும் ஆர்பிஐ ப்ளோட்டிங் ரேட் ஏழு வருட சேவிங்ஸ் பத்திரங்கள் நடப்பில் இருக்கின்றன. குறைந்த பட்ச முதலீடு ரூ. 1000/. உச்ச வரம்பு கிடையாது. இவற்றின் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றம் அடையும் வாய்ப்பு உண்டு. ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 தேதிகளில் வட்டி வழங்கப்படும். எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எப்.சி. போன்ற வங்கிகள் மூலமும், போஸ்ட் ஆ பீஸ் மூலமும் இந்தப் பத்திரங்களை வாங்க முடியும். அல்லது நேரடியாக ஆர்.பி.ஐ. ரீடெய்ல் டைரக்ட் போர்டல் மூலமும் வாங்கலாம்.

    சுந்தரி ஜகதீசன்


     

    சீரோ கூப்பன் பத்திரங்களில் வட்டி விகிதம் குறிப்பிடப்படாது. முகமதிப்பு மட்டுமே குறிப்பிடப்படும். உதாரணமாக ஆயிரம் ரூபாய் முகமதிப்புள்ள பத்திரங்கள் ரூ.800/க்கு விற்கப்படலாம். இவற்றுக்கு அவ்வப்போது வட்டி வழங்கப்படாது. முதிர்வு காலத்தில் முகமதிப்பான ஆயிரம் ரூபாய் தரப்படும்.

    ஆகவே அவ்வப்போது வட்டி தேவைப்படுவோருக்கு இது உதவாது.

    டேக்ஸ் ப்ரீ பத்திரங்களின் வட்டிக்கு வரி கிடையாது. இன்றைய தேதியில் 6 சதவீதம் வட்டி (வரி இல்லாதது) கிடைப்பது வங்கி வட்டி விகிதத்தை விடக் கவர்ச்சியானது அல்லவா? ஆனால் 2016க்குப் பின் இவை புதிதாக வெளியிடப்படவில்லை. அதற்கு முந்தைய பத்திரங்கள் சந்தையில் சற்று அதிக விலைக்குக் கிடைக்கின்றன.

    மத்திய அரசுப் பத்திரங்களின் முதிர்வுகாலம் நீண்டது; இடையில் அவசரத் தேவைக்காக க்ளோஸ் செய்ய முடியாது; தேவையென்றால் சந்தையில்தான் விற்கமுடியும் என்ற நெகடிவ் பாயின்ட்டாககுறைபாடு இருந்தாலும், அரசு பத்திரங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இவற்றில் முதலீடு செய்யலாம்.

    மாநில அரசுப் பத்திரங்கள்:

    தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஒரு என்.பி.எப்.சி. நிறுவனம். இது வெளியிடும் பாண்டுகளில் பத்திரங்கள் பிக்சட் டிபாசிட் வகையைச் சார்ந்தவை. மாநில அரசின் ஆதரவுடன் இந்தப் பத்திரங்கள் வெளியிடப்படுவதால் ஓரளவு உத்தரவாதம் உள்ளது என்று நம்பலாம். இவற்றில் முதலீட்டுக் காலம் 1 வருடம் முதல் 5 வருடங்கள் வரை. வட்டி விகிதம் 8.10 சதவீதம் முதல் 9.31 சதவீதம் வரை.

    வட்டியை குறிப்பிட்ட இடைவெளிகளில் வாங்கிக் கொள்ளலாம்; அல்லது முதல் + வட்டி என்று முதிர்வுகாலத்தில் மொத்தமாகவும் வாங்கிக் கொள்ளலாம். மினிமம் முதலீடு 50000 ரூபாய். பொர்ம்ரூ. ஒரு லட்சம். 15 ஜி அல்லது ஹெச் படிவம் கொடுத்தாசமர்ப்பித்தால் மூலவரிப்பிடித்தம் (Tax Deducteடிat Source) இருக்காது.

    முதல் போட்டு மூன்று மாதங்களுக்கு அப்புறம் ப்ரீமச்சூர் க்ளோஷர் அனுமதி பண்ணுவாங்க. ஆனால் பெனால்டி அதிகம். 2-3 பர்சன்ட். இந்த பாண்டுகளை மூன்று மாதங்களுக்குப் பிறகு அவசரத் தேவைக்கு க்ளோஸ் செய்யலாம். ஆனால் 2 சதவீதம் - 3 சதவீதம் அளவு பெனால்ட்டி இருக்கும். கடன் தேவை என்றாலும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்கிக்கலாம். என்.ஆர்.ஐ.கள் கூட இதில் முதலீடு செய்ய முடியும். ஆனால் முதிர்வுத் தொகையை வேற்று நாடுகளுக்கு அனுப்ப முடியாது. வங்கியின் விதிமுறைகளை சரியாகக் கடைப்பிடிக்கும் இந்த முதலீடு, ஓரளவு பாதுகாப்புடன் நல்ல வருமானமும் தரும் என்பதால் பரிசீலிக்கத்தகுந்த ஒன்று.

    பெருநகர கார்ப்பரேஷன்கள் கூட குடிநீர் வழங்கல், தெருப் பராமரிப்பு, துப்புரவுப் பணிகள் போன்ற பணிகளுக்காக பத்திரங்கள் வெளியிடுகின்றன. சென்னை, பெங்களூரு, அஹமதாபாத், இந்தூர் போன்ற நகர முனிசிபாலிட்டிகள் இது போன்ற பத்திரங்களை வழங்கியுள்ளன. திருப்பூர், திருச்சி, கோவை போன்ற நகரங்களும் பத்திரங்கள் வெளியிட அனுமதி வேண்டிக் காத்திருக்கின்றன.

    கார்ப்பரேட் பாண்டுகள்:

    உற்பத்தி நிறுவனங்கள், பொருளாதார நிறுவனங்கள், என்.பி.எப்.சி. போன்ற எந்த நிறுவனமானாலும், ரூ. 100 கோடிக்கு மேல் நிகரமதிப்பு இருந்தால் சந்தையில் பத்திரங்களை விற்று, முதல் திரட்டலாம். பத்திரங்கள் வெளியிடும் முன்பு இக்ரா, கேர், க்ரிசில் போன்ற ரேட்டிங் நிறுவனங்களிடம் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, ஒரு தரநிர்ணய சான்றிதழைப் பெற வேண்டும். அந்த நிறுவனங்கள் கம்பெனியின் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து, கம்பெனியின் பிசினஸ் ரிஸ்க், பொருளாதார ரிஸ்க், மேலாண்மைத்தரம், பணத்தை திருப்பித் தரும் வலிமை இவற்றைப் பொறுத்து ஏஏஏ முதல் டிவரை தரச்சான்றிதழ் அளிக்கின்றன.

    ஏஏஏ நிறுவனங்களில் குறைந்த வட்டியும், டிநிறுவனங்களில் அதிக வட்டியும் கிடைக்கும். Aக்குக் குறைந்த கம்பெனிகளில் முதலீடு செய்வது ரிஸ்க்தான். வட்டி வருமானம் ஆண்டுக்கு ரூ. ஐயாயிரத்தை தாண்டுமெனில், 15 ஜி/ஹெச் படிவங்கள் சமர்ப்பித்து மூலவரிப்பிடித்தத்தை தவிர்க்கலாம். அவசரமாகப் பணம் தேவைப்பட்டால், சந்தையில் இவற்றை விற்க இயலும்.

    சில கம்பெனிகள் அவசரம் என்றால் முதிர்வு காலத்துக்கு முன்பு பணத்தைப் பெற அனுமதித்தாலும், பெனால்ட்டி விதிக்கும். ஆகவே நிறுவனப் பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்புவோர், தங்களால் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய இயலுமா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

    கம்பெனி பாண்டுகளில் முதலீடு செய்யும்போது பார்க்கவேண்டிய விஷயங்கள்:

    முதலாவதாக நாம் போடும் முதலுக்கு மோசம் வராமல் இருக்குமா என்பதை உறுதி செய்யவேண்டும். நிறுவனத்துக்கு ரேட்டிங் நிறுவனங்கள் கொடுத்த ரேட்டிங், ஒற்றை Aக்குக் கீழே இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பல்ல. முதலீடு செய்த பிறகும் அவ்வப்போது ரேட்டிங்கை செக் செய்வதுடன், சந்தையில் நிறுவனம் குறித்து ஏதாவது எதிர்மறைத் தகவல்கள் வருகிறதா என்றும் கவனிக்க வேண்டும். நிறுவனம் நஷ்டத்தை நோக்கிச் செல்வதாகத் தெரிந்தால் நம் முதலீட்டை வெளியே எடுத்துவிடுவது நல்லது.

    இரண்டாவதாக, நிறுவனம் தரும் வட்டி விகிதம் சந்தையின் போக்குக்கு ஒத்து வருகிறதா என்று பார்க்க வேண்டும். மற்ற நிறுவனங்கள் 8 சதவீதம் வட்டி தரும்போது ஒரு நிறுவனம் மட்டும் 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறினால், அது நமக்காக விரிக்கப்பட்ட வலை என்று புரிந்துகொள்ள வேண்டும்.

    பொதுவாக சீனியர் சிடிசன்களுக்கு 0.25 சதவீதம் பர்சென்ட், ஆன்லைனில் முதலீடு செய்தால் ஒரு 0.24 சதவீதம், ஒரு முறை செய்த முதலீட்டை அதே நிறுவனத்திலேயே புதுப்பித்தால் அதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு 0.10 சதவீதம் என்று கிட்டத்தட்ட பேங்க் வட்டியை விட 2 -3 பர்சென்ட் அதிக வருமானம் கிடைக்கும். வங்கிகள் முழுகினால் நம் டெபாசிட்டுக்கு ரூ. ஐந்து லட்சம் வரையிலான காப்பீடு உண்டு. அதுபோன்ற காப்பீடு இந்தப் பத்திரங்களுக்கு இல்லை. ஆகவே பேங்கை விட ரிஸ்க்கும் அதிகம்; வருமானமும் அதிகம்.

    மூன்றாவதாக, ஒரு வருடம் / மூன்று வருடம் / ஐந்து வருடம்/ பத்து வருடம் என்று தரப்படும் கால அளவுகளில் எதைத் தேர்வு செய்யலாம் என்று தீர ஆலோசிக்கவேண்டும். ஏனெனில், இந்த பத்திரங்களில் செய்த முதலீட்டை முதிர்ச்சிக்கு முன்பாக எடுத்தால் பெனால்டி அதிகம். ஆகவே நம்மால் எவ்வளவு வருடங்கள் அந்தப் பணத்தை அவசரத் தேவைக்குத் தொடாமல் இருக்கமுடியும் என்பதை முதலில் தெரிந்துகொண்டு, பின்னர்தான் முதலீட்டின் கால அளவைத் தீர்மானிக்க வேண்டும்.

    டாட்டா ஸ்டீல், டாட்டா ஹௌசிங் கேபிடல், ஹெச்.டி.எப்.சி., எல் அண்ட் டி பைனான்ஸ் போன்ற ஆரோக்கியமான நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களில், நம் மொத்த முதலீட்டில் பத்து சதவிகித அளவு முதலீடு செய்தால் பாதுகாப்புக்குப் பாதுகாப்பு; வருமானத்திற்கு வருமானம்.

    உங்களிடம் ஏற்கெனவே அரசு / நிறுவனப்பத்திரங்கள் உள்ளனவா? அவற்றில் கிடைக்கும் வட்டி விகிதங்கள் என்னென்ன?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரபாவதி கல்லூரிக்கு செல்லும்போது சிவாஜிராவ் பணிபுரியும் பஸ்சில் மட்டுமே ஏறுவார்.
    • சிவாஜிராவிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் அவரது நண்பர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

    சிவாஜிராவுக்கு இளம்வயதில் கிடைத்த தோழி பிரபாவதி. இவர் கல்லூரியில் படித்து வந்ததையும் இவர்தான் சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்புக்கான பயிற்சி வகுப்புகள் 1973-ம் ஆண்டு தொடங்க இருப்பதையும் சிவாஜிராவிடம் தெரிவித்தார் என்பதையும் ஏற்கனவே நாம் பார்த்து இருக்கிறோம்.

    தோழி பிரபாவதியுடன் சிவாஜிராவ் கொண்டிருந்த நட்பு மிக மிக ஆத்மார்த்தமானது. வெளியில் யாருக்குமே தெரியாதது. சிவாஜிராவுடன் பஸ்சில் எப்போதும் டிரைவராக பயணித்த ராஜ்பகதூருக்கு கூட அவர்களது நட்பின் ஆழம் தெரியாமலேயே இருந்தது.

    பிரபாவதி கல்லூரிக்கு செல்லும்போது சிவாஜிராவ் பணிபுரியும் பஸ்சில் மட்டுமே ஏறுவார். சிவாஜிராவ் செய்யும் ஸ்டைல்களை பார்த்துக் கொண்டே இருப்பார். சிவாஜிராவ் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் வேகத்தை கண்டு ரசிப்பார். பஸ்சை நிறுத்தவும், பஸ்சை புறப்பட செய்யவும் சிவாஜிராவ் கொடுக்கும் விசில்களை கூட அவர் ரசித்தது உண்டு.

    அது மட்டுமல்ல பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்று விட்டு புறப்படும்போது சிவாஜிராவ் ஸ்டைலாக ஓடி வந்து ஏறும் காட்சிகளையும் பார்த்துக் கொண்டே இருப்பார். சில சமயங்களில் சிவாஜிராவ் ஸ்டைலாக புகை பிடிப்பதையும் பிரபாவதி கண்கொட்டாமல் பார்த்தது உண்டு. கல்லூரி மாணவியான பிரபாவதி மீது சிவாஜிராவ் இனம்புரியாத பாசத்துடன் பழகி வந்தார். சென்னையில் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்த பிறகு அடிக்கடி பிரபாவதியை நினைத்துப் பார்த்துக் கொள்வார். பெங்களூருக்கு திரும்பி வரும்போதெல்லாம் பிரபாவதியை மீண்டும் பார்த்து விடமாட்டோமா? என்று நினைப்பார். ஆனால் சூழ்நிலைகள் காரணமாக அவரால் பார்க்க முடியாமல் போனது.

    இந்த நிலையில்தான் முதல் ஆண்டு வகுப்பு முடிந்து நீண்டநாள் விடுமுறையுடன் பெங்களூருக்கு சிவாஜிராவ் வந்து இருந்தார். எனவே இந்த தடவை எப்படியாவது பிரபாவதியை பார்த்து விடவேண்டும் என்று அவர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். நண்பரை ஏற்றி பின்னால் வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் பிரபாவதியை தேடி சென்றார். பிரபாவதி வீட்டு முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்றார். ஆனால் பிரபாவதி குடும்பத்தினர் அந்த வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டனர் என்ற தகவல் மட்டுமே அவருக்கு தெரிய வந்தது. பிரபாவதி எங்கே போனார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை.

    இதனால் சிவாஜிராவ் மிகவும் வேதனைப்பட்டார். தன்னை வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திய தேவதையாக பிரபாவதியை நினைத்தார். அவரை பார்க்க முடியாமல் போனதை நீண்ட நாட்களுக்கு சிவாஜிராவால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. நாட்கள் செல்ல... செல்லதான் பிரபாவதியின் நினைவுகள் சிவாஜிராவ் மனதில் இருந்து குறைந்தன.

    1974-ம் ஆண்டு சிவாஜிராவ் மீண்டும் பெங்களூரில் இருந்து சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் 2-ம் ஆண்டு வகுப்பை தொடங்கினார். இனி பணம் விஷயத்தில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்ற திட்டத்துடன் அவர் படிப்பை தொடங்க ஆரம்பித்தார். அவரிடம் முன்பை விட தன் நடிப்பு மீதான தன்னம்பிக்கை அதிகரித்து இருந்தது.

    அவரது சிந்தனையெல்லாம் நாம் கருப்பாக இருக்கிறோமே எனவே நமக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது. எனவே வில்லன் வேடங்களை கேட்டு வாங்க வேண்டும் என்றே இருந்தது. அதை பிரதிபலிக்கும் வகையில் அவர் அடிக்கடி தன் நண்பர்களிடம் பேசும் போதெல்லாம் நான் வில்லனாக நடித்து புகழ் பெறுவேன் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

    அதற்காகவே அவர் அருண் ஓட்டல் அறையிலும், கல்லூரி வளாகத்தில் இருந்த அறையிலும் கண்ணாடிகளில் தன்னைப் பார்க்கும் போதெல்லாம் விதவிதமாக ஸ்டைல் செய்து பார்த்துக் கொள்வார். வில்லனாக இருப்பவர்கள் எப்படி ஸ்டைலாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒத்திகை பார்த்தார். இது அவருக்கு நடிப்பில் இருந்த தீராத ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.

    ஆனால் அவரிடம் இருந்த ஒரே பலவீனம் நாம் கருப்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் மட்டும்தான். அவரது அந்த எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்து வீசி விட்டு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் திரைப்படக் கல்லூரிக்கு நடிப்பு பயிற்சி சொல்லி கொடுக்க ஆசிரியராக கோபாலி வந்தார். இவர்தான் திரைப்படக் கல்லூரியில் சிவாஜிராவின் வாழ்க்கையை அப்படியே மாற்றி அமைத்தார்.

    திரைப்படக் கல்லூரியில் இவர் துணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்து இருந்தார். நடிப்பு தொடர்பாக அதிக அனுபவம் இவருக்கு இருந்தது. நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் நடிப்பு கலை பற்றிய பயிற்சியை இவர் பெற்று இருந்தார். இதனால் நடிப்பின் நுணுக்கங்கள் இவருக்குள் நிறைந்து இருந்தது.

    எந்த சூழ்நிலையில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று சொல்லும் வகையில் இவரது பயிற்சிகள் இருந்தன. 1974-ம் ஆண்டு திரைப்படக் கல்லூரியில் படித்த 36 பேருக்கும் இவரது பயிற்சி வகுப்புகள் மிகவும் கை கொடுத்தன.

    குறிப்பாக சிவாஜிராவுக்கு பேராசிரியர் கோபாலியின் வகுப்புகள் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தன. இதனால் பேராசிரியர் கோபாலியை சிவாஜிராவ் மிகவும் மரியாதையுடன் பார்த்தார். பேராசிரியர் கோபாலிக்கும் சிவாஜிராவை மிகவும் பிடித்துப் போனது. அதற்கு காரணம் சிவாஜிராவிடம் இருந்த நடிப்பு ஆர்வம்தான்.

    ஒரு தடவை பேராசிரியர் கோபாலி நடிப்பு பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஒரு தேர்வு நடத்தினார். 36 மாணவர்களிடம் உள்ள திறமைகளை முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் அவர் அந்த தேர்வை வடிவமைத்து இருந்தார். அதன்படி 36 மாணவர்களும் விமானத்தில் செல்கிறீர்கள். திடீரென அந்த விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து விடுகிறது. அதிர்ஷ்டவசமாக 36 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்புகிறார்கள். இதை நீங்கள் எப்படி நடித்து காட்டுவீர்கள் என்று தேர்வை வைத்தார்.

    இந்த கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவரும் மேடைக்கு அழைக்கப்பட்டு நடித்து காட்டும்படி சொல்லப்பட்டனர். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்கள். விமானத்தில் பயணம் செய்வதை நடித்து காட்ட பல மாணவர்களும் திணறினார்கள்.

    சிவாஜிராவ் முறை வந்தது. அவரை விமானத்துக்குள் இருக்கும் பயணி போல நடித்துக் காட்டும்படி பேராசிரியர் கோபாலி உத்தரவிட்டார். அடுத்த நிமிடமே சிவாஜிராவ் விமான பயணியை கற்பனையாக மனதுக்குள் நினைத்துக் கொண்டு அதை அப்படியே நடித்துக் காண்பித்தார். அவரது நடிப்பு பேராசிரியர் கோபாலிக்கு மிகவும் பிடித்துப் போனது.

    அடுத்து விமானத்தை ஓட்டுபவராக நடித்து காட்டச் சொன்னார். சிவாஜிராவ் அதையும் நடித்துக் காட்டினார். அடுத்து விமானம் விபத்துக்குள்ளாகி உயிர் தப்பும் காட்சிகளையும் நடித்து காட்டச் சொன்னார்கள். சிவாஜிராவ் அதையும் துடிப்போடு நடித்து காட்டினார். அவரது யதார்த்தமான நடிப்பில் பேராசிரியர் கோபாலி மனதை பறிகொடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.

    அன்று முதல் சிவாஜிராவை பேராசிரியர் கோபாலிக்கும் பிடித்துப் போனது. மற்ற மாணவர்களை விட சிவாஜிராவிடம் கோபாலி அதிக அக்கறை எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். குறிப்பாக சிவாஜிராவின் நடிப்பு திறமையை மேம்படுத்தும் வகையில் அறிவுரைகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்.

    பேராசிரியர் கோபாலியை பொறுத்தவரை அவர் மாணவர்களை நடத்திய விதம் வித்தியாசமானது. தன்னை மெத்த படித்தவர் என்ற ரகத்தில் அவர் நடந்துக் கொண்டதே இல்லை. மாணவர்களிடம் நண்பனைப் போலவே பழகினார். மாணவர்களுக்கு அனைத்து விதமான சுதந்திரத்தையும் அவர் கொடுத்து இருந்தார். ஒரு போதும் தனக்கு இருந்த அதிகாரத்தை மாணவர்கள் மீது திணித்ததே இல்லை.

    இன்னும் சொல்லப்போனால் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடக்கூட அவர் தயங்கியது இல்லை. இது சிவாஜிராவுக்கு மிக மிக பிடித்துப் போனது. பெங்களூரில் கிடைக்காத புதுமையான ஒரு பாசம் சென்னை திரைப்படக் கல்லூரியில் தனக்கு கிடைத்து இருப்பதாக உணர்ந்தார். எனவே அவர் பேராசிரியர் கோபாலியிடம் மனம் விட்டு பேசத் தொடங்கினார்.

    இதனால் சிவாஜிராவை ஒவ்வொரு விஷயத்திலும் பேராசிரியர் கோபாலி திருத்தத் தொடங்கினார். முதலில் அவர் சிவாஜிராவின் உடல் அமைப்பை சுட்டிக்காட்டினார். மெல்லிய கால்கள் அதே சமயத்தில் திடகாத்திரமான உடல் அமைப்பை மேலும் மெருகு ஏற்ற வேண்டும் என்றார். குறிப்பாக அந்த இளம் வயதில் சிவாஜிராவிடம் காணப்பட்ட தொப்பையை பார்த்து கண்டித்தார்.

    குறிப்பிட்ட காலத்துக்குள் தொப்பை இல்லாமல் வாட்டசாட்டமான இளைஞராக மாற வேண்டும் என்று ஒரு தந்தையை போல சொல்லிக் கொடுத்தார். அதை ஏற்றுக் கொண்டு சிவாஜிராவ் பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தார். பேராசிரியர் கோபாலி நிர்ணயித்த நாளுக்கு முன்பே அவர் தொப்பையை முழுமையாக குறைத்து விட்டார். சிவாஜிராவின் உருவ அமைப்பே மாறி இருந்தது.

    சிவாஜிராவிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் அவரது நண்பர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. இதைத் தொடர்ந்து பேராசிரியர் கோபாலி சிவாஜிராவின் பழக்க வழக்கங்களையும் மாற்றினார். மற்றவர்களிடம் பேசும்போது வேகமாக பேசாமல் பொறுமையாக, நிதானமாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.

    அந்தக் காலக்கட்டத்தில் சிவாஜிராவிடம் ஒரு பெரிய தாழ்வுமனப்பான்மை இருந்து கொண்டு இருந்தது. நாம் கறுப்பாக இருக்கிறோம். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவார்களா? என்ற சந்தேகமும், தாழ்வுமனப்பான்மையும் சிவாஜிராவை வாட்டி வதைத்துக் கொண்டே இருந்தது. அதற்கும் பேராசிரியர் கோபாலி முற்றுப்புள்ளி வைத்தார்.

    "கறுப்பாக இருந்தால் கதாநாயகனாக நடிக்க முடியாது என்று சொன்னது யார்? கறுப்புதான் அழகு? கறுப்பு நிறம் என்பது புறக்கணிக்க வேண்டிய விஷயம் அல்ல. நீ தினமும் கண்ணாடி பார்க்கும்போது நம்முடைய கறுப்புதான் அழகு என்று சொல்லிப்பார். அந்த அழகான கறுப்பு நிறத்தில் இருக்கும் மகிமை உனக்கு தெரிய வரும்" என்று தொடங்கி நீண்ட அறிவுரையை சிவாஜிராவிடம் பேராசிரியர் கோபாலி சொன்னார். அவர் சொன்ன இந்த அறிவுரை சிவாஜிராவ் மனதில் ஆழமாக பதிந்தது.

    அடுத்து சிவாஜிராவுக்கு பேராசிரியர் கோபாலி சொன்ன ஒரு அறிவுரை மிகப்பெரிய மாற்றத்துக்கு வழிவகுத்தது. அதுபற்றி நாளை காணலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரெயில் நிலையத்திற்கு இரவு நேரத்தில் வந்து சேர்ந்தாள் ஒரு பெண்மணி.
    • திருவண்ணாமலை குறித்து இன்னொரு சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

    திருவண்ணாமலையைத் தேடி வந்தவர். அங்கு தங்கி அங்கேயே தவம் செய்து வாழ்ந்தவர். அங்கேயே தம் உடலை உகுத்து இறைவனுடன் கலந்தார்.

    திருவண்ணாமலை என்னும் புனிதத் திருத்தலத்தின் மகிமையை ஸ்ரீரமணர் முழுமையாக உணர்ந்திருந்தார். திருவண்ணாமலையிலேயே அவர் தங்க அதுதான் காரணம். அந்தத் தலத்தின் அற்புதங்கள் பற்றிப் பல அன்பர்களிடம் அவர் சொன்னதுண்டு.

    ஸ்ரீரமணரின் அடியவர்களில் ஒருவர் தேவராஜ முதலியார். திருவண்ணாமலையின் மகிமை குறித்து ஸ்ரீரமணர் தம்மிடம் தெரிவித்த செய்தியொன்றை தேவராஜ முதலியார் பதிவு செய்திருக்கிறார். அந்தச் செய்தி இதுதான்:

    திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு இரவு நேரத்தில் வந்து சேர்ந்தாள் ஒரு பெண்மணி. திருவண்ணாமலை ஆலயத்தில் அண்ணாமலையானை தரிசிக்க வேண்டும் என்பதே அவள் வருகையின் நோக்கம். அவள் ஒரு சிவ பக்தை.

    கையில் கொஞ்சம் பணம் வைத்திருந்தாள். நகை நட்டுக்கள் வேறு அவள் உடலை அலங்கரித்தன.

    ஏதேனும் ஒரு நல்ல உணவு விடுதிக்குப் போய் அன்றிரவு அறை எடுத்துத் தங்க வேண்டும். பிறகு மறுநாள் காலை ஆலயத்திற்குச் சென்று அண்ணாமலையானைக் கண்ணார தரிசிக்க வேண்டும். இதுவே அவள் திட்டம். அவளுடைய நெடுங்காலக் கனவு இது.

    உணவு விடுதிக்குச் செல்வதற்குக் குதிரை வண்டி ஏதேனும் கிடைக்குமா என அவள் கண்கள் தேடிக் கொண்டிருந்தபோது, ஒரு ஜட்கா அவள் அருகில் வந்து நின்றது. எங்கே போக வேண்டும் எனக் கேட்டார் அந்தக் குதிரை வண்டி ஓட்டுநர்.

    அவள் பக்கத்தில் உள்ள ஏதேனும் ஒரு நல்ல உணவு விடுதியில் தன்னைக் கொண்டு விடுமாறு சொல்லி எவ்வளவு கட்டணம் என்பதையும் கேட்டுக் கொண்டு ஜட்காவில் ஏறினாள்.

    சிறிதுதூரம் சென்றதும் ஜட்கா யாருமில்லாத ஓர் ஒதுக்குப் புறமான இடத்தில் திடீரென நின்றது. ஜட்காவிலிருந்து குதித்துக் கீழே இறங்கினான் ஜட்காவை ஓட்டியவன்.

    அவள் முன் வந்துநின்ற அவன் அவளிடமுள்ள பணம், நகை போன்றவற்றைக் கொடுத்துவிடுமாறு கத்தியைக் காட்டி மிரட்டத் தொடங்கினான்.

    எங்கும் இருள். சுற்றிலும் யாருமில்லை. இப்போது என்ன செய்து எப்படித் தப்பிப்பது?

    அவள் கடும் பீதி அடைந்தாள். `அண்ணாமலையானே, என்னைக் கைவிட்டு விடாதே! உன்னை தரிசிக்கத் தானே ஓடோடி வந்தேன்? நடுவழியில் இப்படியொரு திருடன் வந்து என்னை மிரட்டுகிறானே? இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா? இந்தப் புனித பூமியில் இப்படி நடக்கலாமா?` என அச்சத்தில் கண்ணீர் விட்டுக் கதறி அழத் தொடங்கினாள்.

    மறுகணம் நடந்தது அந்த அற்புதம். அவள் குரலைக் கேட்டுத்தானோ என்னவோ டக் டக் என யாரோ நடந்துவரும் ஒலி கேட்டது. எங்கிருந்தோ இரு காவலர்கள் அங்கு வந்துசேர்ந்தார்கள்.

    அவர்கள் வண்டி ஓட்டியவனை அதட்டினார்கள். நாங்களும் வண்டியில் வருகிறோம், எங்களையும் சேர்த்து உணவு விடுதிக்கு அழைத்துச் செல் என உத்தரவிட்டார்கள்.

    காவலர்களைப் பார்த்ததும் அவளிடம் திருட நினைத்த வண்டியோட்டி பயந்துவிட்டான். மறுபேச்சுப் பேசாமல் தான் வண்டியில் ஏறி அவளையும் அந்தக் காவலர்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டான். அவர்களை உணவு விடுதியில் இறக்கி விட்டான். எதுவும் பேசாமல் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டான். அந்தக் காவலர்கள் இருவருக்கும் சமயத்தில் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி கூறினாள் அந்தப் பெண்மணி. அவள் படபடப்பு அப்போதுதான் கொஞ்சம் தணிந்திருந்தது.

    தன்னைச் சரியான தருணத்தில் வந்து காப்பாற்றிய அவர்களின் பெயர்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டாள். அவர்கள் அவளை ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுறுத்தி விட்டு இருளில் நடந்து மறைந்தார்கள்...

    திருப்பூர் கிருஷ்ணன்


     

    உணவு விடுதியில் அறை எடுத்துத் தங்கிய அவள், தகுந்த நேரத்தில் தன்னைக் காப்பாற்ற ஆள் அனுப்பிய அண்ணாமலையானை மனதில் வணங்கியவாறு, அந்த இரு காவலர்களை நெகிழ்ச்சியோடு நினைத்த படியே உறங்கினாள். மறுநாள் காலை எழுந்ததும் அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றிற்று. அந்தக் காவலர்களின் பெயர்களைத்தான் அவள் குறித்து வைத்திருக்கிறாளே? திருவண்ணாமலை காவல் நிலையத்திற்குப் போய் அவர்களுக்கு ஒரு சிறிய அன்பளிப்புத் தொகையைக் கொடுத்துவிட்டு அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தால் என்ன?

    இந்த எண்ணத்தோடு அவர்களைத் தேடிச் சென்றாள் அவள். அவள் அணிந்திருந்த தங்க நகைகளையெல்லாம் காப்பாற்றியவர்கள் அவர்களல்லவா?

    ஆனால் காவல் நிலையத்தில் விசாரித்தபோது அவள் தெரிந்துகொண்ட விவரம் அவளைத் திகைப்பில் ஆழ்த்தியது. அப்படிப்பட்ட பெயர்களிலோ அவள் சொன்ன ஜாடையிலோ அங்கே எந்தக் காவலரும் பணியாற்றவில்லை!

    இது என்ன வியப்பு! அப்படியானால் நேற்றிரவு தக்க தருணத்தில் வந்து தன்னைக் காப்பாற்றியவர்கள் யார்?

    அண்ணாமலை கோபுரத்தை நோக்கி அவள் கைகள் தானாய்க் குவிந்தன. திருவண்ணாமலைக்கு பக்தியோடு வருவோரின் பாதுகாப்பை அண்ணாமலையான் பார்த்துக் கொள்வான் என்பதைப் புரிந்துகொண்டாள் அவள்.

    இந்த சம்பவம் உண்மையாக நடந்ததுதான் என்றும் கற்பனைக் கலப்பில்லாதது என்றும் இந்த நிகழ்ச்சி பற்றி ஸ்ரீரமணரே தம்மிடம் விவரித்துச் சொன்னதாகவும் தேவராஜ முதலியார் பதிவு செய்துள்ளார்.

    திருவண்ணாமலை குறித்து இன்னொரு சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது. சுந்தரேச ஐயர் தொடர்பான சம்பவம் அது.

    ஸ்ரீரமணரின் தத்துவங்களில் சரணடைந்து வாழ்ந்த ஒரு தீவிர ரமண பக்தர் சுந்தரேச ஐயர். அடிக்கடி ஸ்ரீரமணரைப் போய்ப் பார்ப்பதும் திருவண்ணாமலை ஆலயத்திற்குச் சென்று இறைவனை தரிசிப்பதும் அவரின் வழக்கம்.

    அவரது உறவினர் ஒருவருக்கு திடீரென்று காலில் அடிபட்டுக் கால் ஊனப்பட்டுவிட்டது. எவ்வளவோ சிகிச்சை செய்து பார்த்தும் பூரண குணம் கிட்டவில்லை.

    கையில் ஒரு கம்பு வைத்து ஊன்றிக் கொண்டுதான் அவரால் நடக்க முடியும். கம்பில்லாமல் ஓர் அடி கூட எடுத்துவைக்க இயலாது என்கிற நிலைமை.

    இப்படியாகி விட்டதே, இனி வாழ்நாள் முழுதும் தான் இப்படித்தான் வாழ வேண்டுமா என்று அவர் பெரிதும் மனம் புழுங்கினார். ஊன்று கோல் இல்லாமல் முன்போல் தன்னால் எப்போது இயல்பாக நடக்க முடியும் எனக் கவலையில் ஆழ்ந்தார்.

    திருவண்ணாமலையில் வாழும் பகவான் ரமணர் பற்றி அவர் கேள்விப் பட்டிருந்தார். உறவினர் சுந்தரேச ஐயர் அடிக்கடி ஸ்ரீரமணரின் பெருமைகள் பற்றி அவரிடம் சொல்வதுண்டு. அதனால் அவருக்கு பகவான் ஸ்ரீரமணரிடம் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது.

    திருவண்ணாமலையை வலம் வரலாம், பகவான் ரமணரைச் சரணடைந்து வாழலாம், காலப்போக்கில் கம்பில்லாமலே இயல்பாக நடக்கக் கூடிய நிலையை ஸ்ரீரமணர் கட்டாயம் அருள்வார் என அவர் மனதில் திடமான உறுதி ஏற்படுத்திக் கொண்டார்.

    தம் இருப்பிடத்தையே திருவண்ணாமலைக்கு மாற்றிக் கொண்டார் அவர். திருவண்ணாமலையிலேயே தொடர்ந்து வசிக்கலானார்.

    நாள்தோறும் கம்பை ஊன்றிக் கொண்டு கால் வலிக்க வலிக்க கிரிவலம் வந்தார். மகரிஷி ரமணரின் பாதாரவிந்தங்களை பக்தியோடு நாள்தோறும் நமஸ்கரித்தார். கம்பில்லாமல் நடக்க வேண்டும் கடவுளே என ஓயாமல் பிரார்த்தனை செய்தவாறிருந்தார்.

    இப்படியாகச் சிறிது காலம் சென்றது. ஆனால் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. நாட்கள் சென்றனவே தவிர, ஊன்றுகோலை எடுத்துவிட்டு இயல்பாக நடப்பதென்பது அவரால் இயலாததாகவே இருந்தது.

    நடக்க முடியும் என்று தான் நினைத்தது நடக்காததால், மெல்ல மெல்ல அவருக்குத் தம் திருவண்ணாமலை வாழ்வில் சலிப்பு ஏற்பட்டது. ஆனால் ஸ்ரீரமணரோ அவர் திருவண்ணாமலையில் வசிப்பதையும் நாள்தோறும் கிரிவலம் வருவதையும் ஊக்குவித்துக் கொண்டிருந்தார்.

    `இவ்வளவு நாள் ஆகிவிட்டது, இனி மேலும் திருவண்ணாமலையில் இருந்து என்ன பயன்?` என எண்ணத் தொடங்கினார் அவர். ஒருநாள் மனம் வெறுத்துப் போய் விரக்தியுடன் திருவண்ணாமலையை விட்டுப் புறப்பட்டார்.

    தளர்ந்த உடலோடும் தளர்ந்த மனத்தோடும் கம்பை ஊன்றிக் கொண்டு, ரமணாஸ்ரமத்திலிருந்து விடைபெற்று, மெல்ல திருவண்ணாமலையை விட்டு விலகிச் செல்லலானார். அப்போதுதான் அந்த விந்தையான சம்பவம் நடந்தது. அவர் முன்பின் பார்த்திராத, அவருக்கு அறிமுகமே இல்லாத யாரோ ஒருவர் திடீரென அங்கே வந்தார். சற்று நில் என அவரை கம்பீரமாக அதட்டினார். கட்டளைக்குக் கட்டுப்பட்டாற்போல் நின்றார் அவர். அவர் கம்பை ஊன்றிக் கொண்டு நடக்க முடியாமல் நடப்பதையே சற்றுநேரம் உற்றுப் பார்த்தார் வந்த புதியவர். பின் `அடேய்! இனி உனக்குக் கம்பு தேவையில்லை!` எனக் கூறி, கம்பை அவர் கையிலிருந்து சடாரென்று பிடுங்கி இரண்டாய் முறித்து வீசிவிட்டு விறுவிறுவென்று நடந்து போய்விட்டார். அவர் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

    இருந்த கம்பும் போயிற்றா, இனி என்ன செய்வது என்று எண்ணியவாறே கம்பில்லாமல் நடக்கத் தொடங்கினார் அந்த அன்பர். என்ன ஆச்சரியம்! கம்பில்லாமலேயே அவரால் முன்புபோல் இயல்பாக நடக்க முடிந்தது!

    அதை உணர்ந்ததும் அவர் மனத்தில் வியப்பும் பரவசமும் எழுந்தன. `அண்ணாமலை யாரைப் பிரார்த்தித்தால் ஆழ்மனம் வலிமை பெறுகிறது, நடக்காது என்று நாம் நினைத்ததையெல்லாம் வலிமை பெற்ற ஆழ்மனம் நடக்கச் செய்துவிடுகிறது!` என்னும் சூட்சுமத்தைப் புரிந்துகொண்ட அந்த அன்பரின் விழிகளில் கரகரவெனக் கண்ணீர் பெருகியது. அண்ணாமலை ஆலயத்தை நோக்கியும் ரமணாஸ்ரமம் இருந்த திசைநோக்கியும் அவரது இரு கரங்களும் குவிந்தன. திருவண்ணாமலை மேலும் ஸ்ரீரமணர்மேலும் வைக்கும் திடமான நம்பிக்கை அற்புதங்களை நிகழ்த்தக் கூடியது என்பதை அவர் மனம் உணர்ந்துகொண்டது.

    தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் பெரும்பாலும் 47-ம் நம்பர் பஸ்சில் வாசலில் தொங்கியபடிதான் பயணம் செய்தனர்.
    • திரைப்படக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் முடியும் நேரத்தில் நாடகங்கள் நடத்த ஆரம்பித்தனர்.

    ஒரு பாட்டில் வெனிகர் குடித்தால் ஒரு பாட்டில் பிராந்தி கிடைக்கும் என்று சொன்னதும் சிவாஜிராவால் ஆசையை அடக்க முடியவில்லை. தன் முன் சதீஷ் கொண்டு வந்து வைத்த வெனிகர் பாட்டிலை எடுத்தார். ஒரே மூச்சில் மடக்... மடக்... என்று குடித்து முடித்து விட்டார்.

    இதைக் கண்ட அவரது நண்பர்களுக்கு கடும் அதிர்ச்சியாகி விட்டது. சிவாஜி ராவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயப்பட்டனர். ஆனால் சிவாஜிராவ் ஸ்டைலாக தனது கையை வானத்தை நோக்கி உயர்த்தி காட்டினார். "கடவுள் என் பக்கம் இருக்கும் வரை எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது" என்றார். அவர் குரலில் ஒருவித உறுதி தெரிந்தது.

    அதே ஸ்டைலில் இருக்கையில் இருந்து வேக, வேகமாக எழுந்த சிவாஜி ராவ் குளியல் அறைக்குள் சென்று வாந்தி எடுத்தார். தான் குடித்த ஒரு பாட்டில் வெனிகரையும் வாந்தி எடுத்து வெளியில் கொண்டு வந்து விட்டார். சில நிமிடங்களில் மிக சகஜமாக மாறி நண்பர்கள் அருகில் வந்தார். சதீசை பார்த்தபடி, "டேய் போய் ஒரு பெரிய பாட்டில் பிராந்தி வாங்கிட்டு வாடா...?" என்றார்.

    வேறு வழி தெரியாத சதீஷ் ஒரு பாட்டில் பிராந்தி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். அந்த முழுப் பாட்டில் பிராந்தியையும் சிவாஜி ராவ் ஒரே ஆளாக குடித்து முடித்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகு சிவாஜி ராவிடம் நண்பர்கள் சவால் விடவோ, பந்தயம் கட்டவோ பயப்பட்டனர்.

    அந்த சமயத்தில் பருவ மழை காரணமாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவி இருந்தது. அசோக் அந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடுமையாக அவதிப்பட்டார்.

    ஒரு வாரம் திரைப்படக் கல்லூரிக்கு வராமல் அறையிலேயே தங்கி ஓய்வெடுத்தார்.

    தனியாக இருந்ததால் அவருக்கு மிகவும் போர் அடித்தது. எனவே காய்ச்சல் சற்று குறைந்ததும் அவர் கல்லூரிக்கு புறப்பட்டார். அவரை ஓய்வெடுக்கும்படி சிவாஜி ராவ் எவ்வளவோ வலியுறுத்திக் கூறினார். ஆனால் அசோக் கேட்கவில்லை. நானும் உங்களுடன் பஸ்சில் வந்து விடுகிறேன் என்று சொல்லியபடி கல்லூரிக்குப் புறப்பட்டு விட்டார்.

    அமைந்தகரையில் இருந்து ஜெமினி பாலத்துக்கு அந்த காலத்தில் சென்னை அரசு போக்குவரத்து கழகம் 47-ம் எண் கொண்ட பஸ் சேவையை நடத்தி வந்தது. இந்த வழித் தடத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால் அதிக பஸ்களை விட்டு இருந்தனர். என்றாலும் சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் பெரும்பாலும் 47-ம் நம்பர் பஸ்சில் வாசலில் தொங்கியபடிதான் பயணம் செய்தனர்.

    அத்தகைய கூட்டத்தை மனதில் வைத்துதான் அசோக்கிடம் கல்லூரிக்கு வரவேண்டாம் என்று சிவாஜி ராவ் கூறியிருந்தார். ஆனால் அசோக் கேட்காததால் அவரை சிவாஜி ராவ் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்திருந்தார். வழக்கம் போல 47-ம் நம்பர் பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    சிவாஜிராவ், அசோக் மற்றும் நண்பர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடியே வந்தனர். உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்து விடலாம் என்று பல தடவை அவர்கள் முயற்சி செய்தபோதும் இடம் கிடைக்கவில்லை. இதனால் அசோக் மிகவும் தளர்ச்சி அடைந்தார்.

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தை பஸ் தாண்டிக் கொண்டிருந்தபோது அசோக்குக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. பஸ் படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த அவர் மயங்கி விழப்போவதை அதிர்ஷ்டவசமாக சிவாஜி ராவ் கவனித்து விட்டார். அடுத்த வினாடியே அசோக்கை அரவணைத்துப் பிடித்துக் கொண்டார்.

    உள்ளே ஏறுங்கள்... உள்ளே ஏறுங்கள்... என்று சிவாஜிராவ் அலறினார். இதனால் பயணிகள் பரபரப்பானார்கள். நிலைமையை புரிந்துக்கொண்ட கண்டக்டரும் உதவி செய்தார். ஒரு இருக்கையில் இருந்த பயணிகள் எழுந்து இடம் கொடுத்தனர்.

    அசோக்கை பஸ்சுக்குள் அழைத்து வந்த சிவாஜிராவ் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் மடி மீது அசோக்கை தலைசாய்த்து படுக்க வைத்துக் கொண்டார். ஜெமினி பாலம் வரை அவர்கள் நிம்மதியாக வந்தனர். இதனால் பஸ்சில் இருந்து இறங்கியதும் தெம்பாக கல்லூரிக்கு சென்றனர்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் பஸ்சுக்குள் சென்று உட்கார வேண்டும் என்று நினைத்து விட்டால் யாராவது ஒருவர் மயங்கி விழுவது போல் நடித்து காரியத்தை சாதித்துக் கொண்டனர். அடிக்கடி அவர்கள் இப்படி நாடகம் நடத்தி மற்ற பயணிகளை ஏமாற்றி பயணம் செய்தது உண்டு.

    திரைப்படக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் முடியும் நேரத்தில் நாடகங்கள் நடத்த ஆரம்பித்தனர். அதில் சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் கலந்து கொண்டு நடித்தனர். அதுபோல சென்னையில் உள்ள கர்நாடகா என்ஜினீயர்கள் சங்கம் நடத்திய கன்னட நாடகங்களிலும் சிவாஜி ராவ், அசோக், சதீஷ், ரவீந்திரநாத் நால்வரும் நடித்தார்கள்.

    நாடகங்களின் ஒத்திகைகள் பெரும்பாலும் திரைப்படக் கல்லூரி வளாகத்திலேயே நடத்தப்பட்டது. திரைப்படக் கல்லூரியில் கன்னட பிரிவு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியை உஷா இந்த நாடக ஒத்திகைகளை முன்னின்று நடத்தினார். ஏற்கனவே பெங்களூரில் ஏராளமான நாடகங்களில் சிவாஜி ராவ் நடித்திருந்ததால் திரைப்படக் கல்லூரியில் நடந்த நாடக ஒத்திகை அவருக்கு சர்வ சாதாரணமாக இருந்தது.

    ஒரு நாடகத்தில் சிவாஜிராவ் சி.பி.ஐ. அதிகாரியாகவும், மற்றொரு நாடகத்தில் வெட்டியானாகவும் நடித்தார். அவரது நாடக நடிப்புத் திறமையைப் பார்த்து ஆசிரியை உஷா மிகவும் ஆச்சரியப்பட்டார். இவ்வளவு திறமை உள்ள உங்களுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று மனம் திறந்து பாராட்டினார்.

    நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிவாஜி ராவ் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாடகத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதில் அசோக் முதல் மாணவனாக தேர்வானார். என்றாலும் கன்னட பிரிவு மாணவர்களுக்கு ஒரு மனக்குறை இருந்து கொண்டே இருந்தது. அதாவது திரைப்படக் கல்லூரியில் தெலுங்கு மொழி மாணவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போல கன்னட மொழி மாணவர்களுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை என்று நினைத்தனர்.

    திரைப்படக் கல்லூரியில் படித்த 36 மாணவர்களில் தெலுங்கு மாணவர்கள் 20 பேர் இருந்தனர். இதன் காரணமாக பயிற்சி தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் தெலுங்கு மொழியில் அதிகம் மேற்கொள்ளப் பட்டது. பயிற்சிக்கான நாடகம் நடத்தப்பட்டா லும் தெலுங்கு மொழி நாடகம்தான் அதிகம் நடத்தப்பட்டது. அதுபோல நடிப்பை கற்றுக் கொள்வதற்கான திரைப்படங்கள் காண் பிக்கப்பட்ட விஷயத்திலும் தெலுங்கு படங்களே அதிகம் இருந்தன.

    இதற்கு கன்னட வகுப்பில் சிவாஜி ராவுடன் படித்த மாணவர் அசோக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரால் திரைப்படக் கல்லூரியில் சர்ச்சை உருவாகியது. இதையடுத்து கல்லூரி முதல்வர் ராஜாராம் அவரை அழைத்து விசாரணை நடத்தினார். மொழி ரீதியாக பிரச்சினை ஏற்படுத்தியதாக கூறி அசோக்கை ஒரு வாரம் சஸ்பெண்டு செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார்.

    இந்த நடவடிக்கை சிவாஜி ராவுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. இது தொடர்பாக அவருக்கும் தெலுங்கு மொழி பாடப் பிரிவில் படிக்கும் மாணவர் அனந்தராமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறுவயதிலேயே யாராவது தன் கண் பார்த்து கோபத்துடன் பேசினால் அது சிவாஜி ராவுக்கு பிடிக்கவே பிடிக்காது.

    தன்னை முறைத்து பார்ப்பவர்களை துவம்சம் செய்து விடுவார். குறிப்பாக தனது கழுத்தில் அணிந்திருந்த சைக்கிள் செயினை கழற்றி அடிப்பதை சிவாஜி ராவ் வழக்கத்தில் வைத்திருந்தார். சென்னைக்கு மாணவராக வந்து பக்குவப்பட்டு கொண்டிருந்த நிலையில் தெலுங்கு மாணவருடனான மோதல் அவருக்கு மீண்டும் அந்த பழைய குணத்தை எட்டிப் பார்க்க வைத்தது.

    தெலுங்கு மாணவர் அனந்தராமனை அடி பின்னி எடுத்து விட்டார். திரைப்படக் கல்லூரி முழுவதும் இது பரபரப்பாக பேசப்பட்டது. என்றாலும் அதிர்ஷ்டவசமாக சிவாஜி ராவ் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டது. இதனால் சிவாஜி ராவ் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

    எப்படியோ திரைப்படக் கல்லூரி வாழ்க்கையில் முதலாம் ஆண்டு படிப்பு நிறைவு பெற்றது. எல்லா மாணவர்களும் விடுமுறைக்காக தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்று இருந்தனர். சிவாஜி ராவும் பெங்களூருக்கு திரும்பினார்.

    அங்கு அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை தயார் செய்யும் வகையில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்யத் தொடங்கினார். அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கண்டக்டர் வேலை பார்த்து சம்பாதித்தார். அந்த பணத்தை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குருவி சேர்ப்பது போல சேமித்தார்.

    அப்படி ஒரு நாள் அவர் பஸ்சில் கண்டக்டர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கல்லூரி நண்பர் சதீஷ் அதே பஸ்சில் பயணம் செய்ய நேரிட்டது. அவருக்கு சிவாஜி ராவை கண்டக்டர் கோலத்தில் பார்த்ததும் மிகவும் ஆச்சரியமாகி விட்டது. ஆங்கிலவார்த்தை கலக்காமல் சிவாஜி ராவ் ஒவ்வொரு பஸ் நிறுத்தத்தின் பெயரையும் அழகான கன்னடத்தில் உச்சரித்தது அவரை கவர்ந்தது.

    சதீசை கண்டதும் சிவாஜி ராவும் மகிழ்ச்சி அடைந்தார். இன்று என்னோடுதான் நீ சாப்பிட வேண்டும் என்று உரிமையோடு அழைத்து சென்று ஓட்டலில் சாப்பிட வைத்தார். இப்படி விடுமுறைைய கழித்த சிவாஜி ராவுக்கு தன் மனம் கவர்ந்த பஸ் தோழியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அவரால் அந்த தோழியை பார்க்க முடிந்ததா? என்பதை நாளை பார்க்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று சொல்வார்கள்.
    • கிரகணம் தொடர்பாக கர்ப்பிணிகள் எல்லோருமே சில கேள்விகளை கேட்கிறார்கள்.

    பெண்கள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் சிறந்த தருணம் என்பது கர்ப்ப காலம் மற்றும் பிரசவ நேரம் ஆகியவை ஆகும். இந்த காலகட்டம் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு, வயதில் மூத்த பெண்கள் பலரும் பல்வேறு அறிவுரைகளை கூறுவார்கள். அவற்றில் எது நல்லது, எது கெட்டது என்பதை ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    கர்ப்பிணி பெண்களுக்கு உணவு விஷயத்தில் ஏற்படுகிற சந்தேகங்கள்:

    மேலும் கர்ப்ப காலத்தின்போது என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும், என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்கிற சந்தேகங்களும் நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கிறது.

    வயதில் மூத்த பெண்கள் பலரும் அறிவியல் அடிப்படை இல்லாமல் தங்களின் அனுபவத்தில் ஏற்பட்ட ஏராளமான விஷயங்களை கர்ப்பிணி பெண்களிடம் சொல்வதால்தான், கர்ப்ப காலத்தின்போது கர்ப்பிணி பெண்கள் பல விஷயங்களையும் தவறாக புரிந்து கொள்கிறார்கள். இது அவர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக அமைகிறது. இதைப்பற்றி இன்னும் சில சுவையான விஷயங்களை பார்க்கலாம். ஏனென்றால் இதெல்லாம் கர்ப்பிணிகள் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய முக்கியமான விஷயங்கள் ஆகும்.

    பொதுவாகவே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மனதில் பலவிதமான குழப்பங்கள் இருக்கும். வயிற்றில் இருக்கும் குழந்தையை தான் கவனிப்பதற்கு கடைபிடிக்கும் விஷயங்கள் சரியா? தவறா? கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர என்ன செய்ய வேண்டும்? அதை எப்படி பாதுகாப்பாக பார்க்க வேண்டும்? அதற்காக என்ன சாப்பிட வேண்டும் என்று பலவிதமான சந்தேகங்களும், எதிர்பார்ப்புகளும் இருக்கும்.

    பல நேரங்களில் இதுபோன்ற விஷயங்களால் கர்ப்பிணி பெண்களின் மனதில் பெரிய அளவிலான அழுத்தங்களும் ஏற்படும். மேலும் கர்ப்ப காலத்தின்போது அவ்வப்போது எதிர்கொள்ளும் அல்லது உணரும் விஷயங்களால் ஒவ்வொரு நாளுமே கர்ப்பிணிகளுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

    ஆனால் இதை யாரிடம் போய் கேட்பது என்று தான் அவர்களுக்கு தெரியாது. ஏனென்றால் எல்லாம் அறிந்தவர்கள் என்று நிறைய பேர் சொல்வதையெல்லாம் அவர்கள் சரி என்று நினைப்பார்கள். ஆனால் சில நேரங்களில் அதில் அறிவியல் அடிப்படை என்பது இருக்காது. இதனால் அவர்கள் சொல்வது சில நேரங்களில் தவறாக அமையும். இந்த வகையில் கர்ப்ப காலத்தை பற்றி பலவிதமான தவறான தகவல்கள் இன்றைக்கு உலா வந்து கொண்டுதான் இருக்கிறது.

    கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாமா?

    இதில் உணவு விஷயத்தில் கர்ப்பிணிகள் நிறைய பேருக்கு பலவிதமான சந்தேகங்கள் ஏற்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உணவு விஷயத்தில் முதலில் என்னிடம் கேட்பது, 'டாக்டர்... கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிடலாமா? பப்பாளி சாப்பிடக்கூடாது என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நான் அது தெரியாமல் பப்பாளி சாப்பிட்டு விட்டேன், எனக்கு கருச்சிதைவு ஏற்படுமா?' என்று கேட்பார்கள்.

    அவர்களுக்கு நான் சொல்லும் பதில், கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாம். அதில் எந்த தவறும் இல்லை. பப்பாளி பழத்தில் உள்ள போலிக் அமிலம் குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கர்ப்ப காலத்தில் நன்மை பயக்கும்.

    ஆனால் அதில் ஒரே ஒரு விஷயம், பப்பாளி காயாக இருக்கும்போது கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது. அதேபோல் பாதி பழுத்த பப்பாளியையும் அவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் பப்பாளி காயாக இருக்கும்போது அதில் உள்ள லேடெக்ஸ் எனப்படும் பொருள் பல நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு வயிற்று வலியை உண்டாக்கலாம்.

    அது மென்மையான தசைகளை சுருங்கச் செய்யக்கூடிய தன்மை கொண்டது. இதனால் கர்ப்பப்பையில் எரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால் வயிற்றுவலி ஏற்படலாம். மேலும் கருப்பையை சுருங்க வைத்து சில நேரங்களில் கருச்சிதைவையும் ஏற்படுத்தலாம். இதுவே நன்றாக பழுத்த பப்பாளியில் இந்த பொருள் எதுவுமே இருப்பதில்லை. எனவே பப்பாளி பழமாக இருக்கும்போது கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.

    இதேபோல் சிலர் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று சொல்வார்கள். ஆனால் அன்னாசிப்பழம் எந்த வகையிலும் கருச்சிதைவை உருவாக்குவதில்லை. இதெல்லாம் தவறான கருத்துக்கள். ஆனால் கர்ப்பிணிகள் அன்னாசிப்பழத்தை மிதமான அளவிலேயே சாப்பிட வேண்டும்.

    பல நேரங்களில் 'பேரிச்சம்பழம் சாப்பிட்டால் குழந்தை கருப்பாக இருக்கும் என்று சொல்கிறார்களே டாக்டர்' என்பார்கள். அதுவும் தவறுதான். பேரிச்சம்பழத்தில் இரும்பு சத்து இருக்கிறது, புரோட்டீன் இருக்கிறது, நிறைய நுண் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தேவை. இதெல்லாம் அவர்கள் உட்கொள்கின்ற உணவுப் பழக்க வழக்க முறைகளில் தவறான கருத்துக்களாக சொல்லப்படுகின்றன. எனவே கர்ப்பிணி பெண்கள் இதில் தெளிவு பெற வேண்டும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    கர்ப்பிணிகளுக்கு வாந்தி அதிகம் ஏற்பட்டால் பெண் குழந்தை பிறக்குமா?

    மேலும் பெண்கள் கர்ப்பகாலத்தில் எதிர்நோக்குகின்ற பலவிதமான பிரச்சினைகளுக்கும் ஏதாவது அறிவியல் அடிப்படை இருக்கிறதா என்பதை பார்க்கலாம். பொதுவாக கர்ப்பிணி பெண்கள் பலரும் வாந்தி எடுப்பது வழக்கம். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது அதிகாலையில், அதிக அளவில் வாந்தி எடுத்தால் அது பெண் குழந்தை என்று பலரும் கர்ப்பிணிகளிடம் சொல்கிறார்கள்.

    கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் தான் நிறைய வாந்தி வரும். அதிகமாக வாந்தி எடுத்துக்கொண்டே இருந்தால் அது பெண் குழந்தைகள் தான் என்று பலரும் சொல்லி விடுவார்கள். இது சரியா தவறா என்று பார்த்தால், இதுபற்றி கடந்த 2014-ம் ஆண்டு ஒரு ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வில் கருவில் பெண் குழந்தையை சுமக்கின்ற பெண்களுக்கு, சற்று அதிகமாக வாந்தி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்தார்கள்.

    அதற்காக ஆண் குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு வாந்தி வராது என்பது அர்த்தமல்ல. பொதுவாக பெண் குழந்தையை சுமந்தால் அதிகமாக வாந்தி வருகிறது என்பதை இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 2 ஆயிரம் கர்ப்பிணி பெண்களிடம் ஆராய்ச்சி செய்து இதை கண்டுபிடித்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

    மேலும் கிரகணம் தொடர்பாக கர்ப்பிணிகள் எல்லோருமே சில கேள்விகளை கேட்கிறார்கள். 'டாக்டர்... சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் பலரும் பரிசோதனைக்கு வருவதில்லை. சூரிய கிரகணத்தின்போது பிரசவத்துக்கு கூட கர்ப்பிணிகள் பெரும்பாலும் வெளியே வருவதில்லையே ஏன்?' என்பார்கள்.

    கர்ப்பமாக இருப்பதற்கும், சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணத்திற்கும் ஏதாவது அறிவியல் ரீதியான அடிப்படை இருக்கிறதா என்பதை பார்த்தால், இன்றும் பலவிதமான விஞ்ஞான முறைகளில் ஆய்வு செய்த வரைக்கும், சூரிய கிரகணத்தினாலோ அல்லது சந்திர கிரகணத்தினாலோ எந்த விதமான பாதிப்பும் கர்ப்பத்துக்கு ஏற்பட்டது இல்லை, கர்ப்பிணிகளுக்கும் ஏற்பட்டது கிடையாது.

    கிரகணத்தின்போது கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவது, அதனால் கர்ப்பம் பாதிக்கப்படுவது என்பது தவறான கண்ணோட்டம் தான். இதற்கு எந்த விதமான விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லை. இதை நினைத்து யாரும் பயப்பட வேண்டியதில்லை.

    என்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு கர்ப்பிணி பெண், 'டாக்டர்... கிரகணத்தை கவனிக்காமல் நான் சிகிச்சைக்கு வந்து விட்டேன். எனது குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ?' என்று கேட்டார். கிரகணம் பற்றிய அவர்களின் பய உணர்வு தான் பிரச்சினைகளை உருவாக்கும். சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் கர்ப்பத்துக்கு கண்டிப்பாக எந்தவித பாதிப்பையும் உருவாக்காது.

     

    கர்ப்பிணி பெண்கள் 'ஹேர் டை' பயன்படுத்தலாமா?

    தற்காலத்தில் பெண்கள் கேட்கிற ஒரு முக்கியமான விஷயம், 'டாக்டர்... நான் கர்ப்பமாக இருக்கும்போது 'ஹேர் டை' பயன்படுத்தலாமா?' என்பார்கள். குறிப்பாக வயது அதிகமாக இருக்கும் பெண்கள் கர்ப்பமான பிறகு எங்களிடம் பரிசோதனைக்கு வருவார்கள். அவர்கள் கர்ப்ப காலத்தின்போது 'ஹேர் டை' போடுவதில்லை, ஆனால் ஹேர் டை போடலாமா என்று கேட்கிறார்கள்.

    அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள், அந்த கர்ப்பிணிகளிடம், 'நீ ஹேர் டை போடக்கூடாது, ஹேர் டை போட்டால் குழந்தைக்கு பிரச்சினை வரும், குழந்தை வயிற்றிலே இறந்துவிடும் அல்லது குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கும்' என்று பயமுறுத்துகிறார்கள். இது சரியா, தவறா என்று பார்த்தால், பல ஹேர் டைகளில் இருக்கிற சில ரசாயனங்கள் சில நேரங்களில் கர்ப்பிணி பெண்களின் உடலில் சேரலாம். அவை ரத்தத்தில் கலந்தால் சில நேரங்களில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    அந்த வகையில் ஒரு பெண் கர்ப்பம் அடைந்தவுடன் முதல் 3 மாதங்களுக்கு 'ஹேர் டை' பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதன்பிறகு அவர்கள் 'ஹேர் டை' போடுவதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவது குறைவாகிறது. எனவே கர்ப்ப காலத்தில் 'ஹேர் டை' பயன்படுத்துவது என்பது தவறு என்கிற கருத்து கிடையாது. கர்ப்பிணிகள் 3 மாதங்களுக்கு பிறகு கண்டிப்பாக 'ஹேர் டை' போடலாம்.

    கர்ப்பிணிகளுக்கு இதுபோல இன்னும் பல விஷயங்களில் ஏராளமான சந்தேகங்கள் இருக்கிறது. அதாவது, உடற்பயிற்சி செய்யலாமா? 2 மடங்கு சாப்பிட வேண்டுமா? அடிக்கடி வரும் வயிற்றுவலி, எப்படி படுத்து தூங்க வேண்டும்? தாம்பத்திய உறவு கொள்ளலாமா? காபி குடிக்கலாமா என்பது போன்ற சந்தேகங்கள் ஏற்படுகிறது. அந்த சந்தேகங்களுக்கான விளக்கங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்செந்தூர் - திருநெல்வேலி வழியில், திருச்செந்தூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திரு நகரி என்ற ஊர் உள்ளது.
    • திருச்செந்தூரிலோ சுவாமிகளைக் காணாமல் பக்தர்களும் மக்களும் தவித்தனர்.

    திருச்செந்தூர் முருகன் ஆலயத்தை சீரமைத்து புதுப்பித்து கட்டியதில் தேசிக சுவாமிகள், மவுன சுவாமிகள், காசி சுவாமிகள், ஆறுமுக சுவாமிகள், வள்ளி நாயக சுவாமிகள் ஆகிய 5 பேரும் முக்கிய பங்கு வகித்தனர் என்பதை கடந்த வாரம் பார்த்தோம்.

    இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் மற்றும் அதன் அருகிலேயே அமைந்து உள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம். முதலில் திருச்செந்தூர் ஆலய ராஜகோபுரத்தை கட்டிய தேசிக மூர்த்தி சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்து இருக்கும் பகுதியை பார்க்கலாம்.

    திருச்செந்தூர் - திருநெல்வேலி வழியில், திருச்செந்தூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திரு நகரி என்ற ஊர் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் உள்ள ஆழ்வார்தோப்பு கிராமத்தில் வீற்றிருக்கும் காந்தீஸ்வரம் கோவிலின் நந்தவனம் பகுதியில் தேசிக மூர்த்தி சுவாமிகளின் ஜீவ சமாதி திருக்கோவில் அமைந்திருக்கிறது.

    தேசிக மூர்த்தி சுவாமிகள் திருச்செந்தூர் ராஜகோபுரத்தை கட்டி முடித்ததும் அவர் தலைமையில் கும்பாபிஷேகம் நடக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் முருகப்பெருமானின் விருப்பம் வேறுவிதமாக இருந்தது. சுவாமிகளின் கனவில் முருகப் பெருமான் தோன்றி, "தேசிக மூர்த்தியாரே தாங்கள் இங்கிருந்து கும்பாபிஷேகத்தைக் காண வேண்டாம். எங்கிருந்து வந்தீரோ, அந்த இடத்துக்குச் சென்று மனக்கண்களால் கும்பாபிஷேகத்தைக் கண்டு மகிழும்" என்றார்.

    அதை ஏற்று தேசிகமூர்த்தி சுவாமிகள் முன்பு தங்கியிருந்த ஆழ்வார்தோப்பு காந்தீஸ்வரம் சிவாலயம் அருகில் உள்ள மடத்திலேயே தங்கினார். அங்கிருந்தபடி மனக்கண்களால் கும்பாபிஷேக வைபவத்தை தரிசித்து மகிழ்ந்தார்.

    திருச்செந்தூரிலோ சுவாமிகளைக் காணாமல் பக்தர்களும் மக்களும் தவித்தனர். அதேநேரம் அவர்களின் கண்களுக்கு, ராஜகோபுரத்தில் சுவாமிகள் காட்சி தந்து மறைவது போல் தெரிந்தது. எல்லோரும் சிலிர்த்துப்போனார்கள். இன்றைக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில் வள்ளியம்மை சந்நிதித் தூண் ஒன்றில் சிற்பவடிவில் சுவாமிகளின் திருவுருவைக் காணலாம். சுவாமிகளை ஞானதேசிக மூர்த்தி சுவாமிகள் என்று பக்தர்களும் மக்களும் போற்றுகிறார்கள்.

    பிற்காலத்தில் சுவாமிகள் சமாதி அடைந்ததும் காந்தீஸ்வரத்திலேயே அவருக்கு ஜீவ சமாதி அமைக்கப்பட்டது. திருச்செந்தூர்- திருநெல்வேலி மார்க்கத்தில் உள்ள ஆழ்வார் திருநகரிக்கு வரும் பக்தர்கள், அங்கே சங்கு மண்டப நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம். அங்கிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் ஆற்றுப்பாலம் உள்ளது. அதன் வழியே பயணித்து ஆற்றுக்கு எதிர்க்கரையில் இருக்கும் காந்தீஸ்வரத்தை அடையலாம்.

    இங்கே சுவாமிகள் தங்கியிருந்த மடம், ஈஸ்வரன் திருக்கோவில் ஆகியவற்றையும் தரிசிக்கலாம். அருகிலேயே சுவாமிகளின் சமாதிக் கோவிலும் அமைந்து உள்ளது. இன்றைக்கும் பக்தர்கள் விரும்பிய வரங்களைத் தரும் அருள் அலைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது சுவாமிகளின் சமாதித் திருக்கோவில்.

     

    சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்தால், அதன் மேல் லிங்கம் வைத்து கோவில் கட்டுவது வழக்கம். ஆனால் இங்கே மூலஸ்தானத்தில் கல்லினால் ஆன திருவாசியுடன் கூடிய வேல் போன்ற அமைப்பில் உள்ளது. இது வேறெங்கும் காண்பதற்கரிய அமைப்பாக உள்ளதால், இங்கு வந்து வழிபடுவதால் விசேஷ பலன்கள் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள்.

    சுவாமிகளின் சமாதித் திருக்கோவிலில் மார்கழி மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது. இங்கு வந்து இந்த சுவாமிகளை வணங்கினால் நினைத்த காரியம் கைகூடும், புதிய வீடு கட்டும் வாய்ப்பு கிடைக்கும், வீடு கட்டுவதில் இருக்கும் தடைகள் நீங்கும். திருமணம் முதலான சுபகாரியங்கள் தடையின்றி இனிதே நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    காந்தை முனிவர், கருவூரார் என சித்தர்கள் பலரின் அருள் அலைகள் நிரம்பி இருக்கும் தலம் ஆதலால், இங்கு வந்து வழிபடுவோருக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தேசிகமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதியை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் எளிதில் வந்து செல்ல வசதிகள் உள்ளன. திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் வாகனங்களில் வருபவர்கள் ஆழ்வார்திருநகரில் உள்ள தாமிரபரணி ஆற்று பாலத்தை கடந்து இடது புறம் திரும்பினால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே தேசிகமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதியை அடைந்து விடலாம். இதேபோல் பஸ்களில் வருபவர்கள் ஆழ்வார் திருநகரி பஸ்நிறுத்தத்தில் இறங்கியும் எளிதாக தாமிரபரணி ஆற்றின்வழியாக நடந்து கோவிலை அடையலாம். தற்போது காந்தீஸ்வரம் கோவில் நந்தவனத்தில் யானைகள் பராமரிப்பு மையமும் செயல்படுகிறது. கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இங்குள்ள யானை களையும் வெளியில் நின்றபடி பார்த்து ரசிக்கலாம்.

    வேல் மூலம் நிதி திரட்டினார்

    திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் கட்டிய தேசிகமூர்த்தி சுவாமிகள் சுமார் 4 அடி உயரம் உள்ள செம்பினால் ஆன ஒரு வேலில் திருச்செந்தூர் கோவில் திருப்பணி செய்து முடிக்க யாசகம் பெறுவதை கையாண்டார். கோவில் திருப்பணிக்கு ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற நிதியை தருமாறு முருகப்பெருமானே கேட்பதாக வாசகங்களை அந்த வேலில் பொறித்தார். அதை வீரபாகு என்பவரிடம் கொடுத்து திருப்பணிக்குப் பொருள் யாசகம் பெற்று வரும்படி அனுப்பி வைத்தார்.

    வீரபாகுவும் அந்த வேலாயுதத்துடன் சென்று பக்தகோடிகளிடம் திருப்பணிக்குப் பொருள் பெற்று வந்தார். திருப்பணியும் விரைவில் நிறைவேறியது. மிகப்பழமை வாய்ந்த அந்த வேலாயுதம், இன்றைக்கும் திருச்செந்தூர் கீழரத வீதியில் உள்ள திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை திருஆதீன மடத்தில் பாதுகாக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ செந்திலாண்ட வரைத் தரிசிக்க திருச்செந்தூர் செல்லும் அன்பர்கள், அப்படியே மடத்துக்கும் சென்று அற்புதமான அந்த வேலாயுதத்தையும் தரிசித்து வரலாம்.

    அடுத்த வாரம் திருச்செந்தூர் ஆலயத்தை சீரமைத்த 4 சுவாமிகள் பற்றியும் திருச்செந்தூர் முருகன் புகழ் பாடிய நொண்டி நாடகம் பற்றியும் பார்க்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தன்வந்திரி ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
    • ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல்.

    உலகளவில் "தேசிய ஆயுர்வேத தினம்" செப்டம்பர் 23-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இது ஆயுர்வேதத்தின் பழமையான மருத்துவ முறைகளை உலகளவில் மேம்படுத்தவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடைபிடிக்கப்படுகிறது.

    2016 ஆம் ஆண்டு முதல், தன்வந்திரி ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும் மத்திய அரசு 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ந்தேதி ''தேசிய ஆயுர்வேத தினம்" கடைபிடிக்கப்படுகிறது என்று அறிவித்தது.

    ஆயுர்வேத நாளை கொண்டாட பல்வேறு கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் இலவச சுகாதார முகாம்களை ஏற்பாடு செய்து இலவசமாக மருந்துகளை வழங்குகின்றன. ஆயுர்வேத நாளன்று ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கு பங்களித்தவர்களை அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருது' வழங்கி கவுரவிக்கிறது. தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருதுகள், ஒரு பாராட்டு சான்றிதழ் (தன்வந்திரி சிலை) மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    நோக்கம்:

    ஆயுர்வேதத்தின் பழமையான மருத்துவ முறைகளைப் பரப்புதல்.

    ஆயுர்வேதத்தை உலகமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்.

    ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல்.

    காரணம்:

    ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் தன்வந்திரி முனிவரின் பிறந்த நாளான தன்வந்திரி ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

    முக்கியத்துவம்:

    உடல், மனம் மற்றும் ஆவி ஆகியவற்றின் சமநிலையை மேம்படுத்துவதன் மூலம் முழுமையான ஆரோக்கியத்தை ஆயுர்வேதம் வழங்குகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புரதம், நார்சத்து இரும்பு சத்து, பொட்டாசியம் வைட்டமின் ஏ, சி சத்து நிறைந்தது.
    • பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தினைக் குறைக்கின்றது.

    வெள்ளை பூசணி பெயரை கேட்டவுடனேயே அமாவாசைக்கு திருஷ்டி சுத்தி நடுரோட்டில் உடைப்பதும், பூசணிக்காயில் முகம் வரைந்து வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுவதும் தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். மார்கழி மாதத்தில் இதன் பூவை வாசலில் கோலத்தின் மீது வைப்பர். கல்யாண வீடுகளில் 'காசி அல்வா' எனப்படும் இந்த வெள்ளை பூசணி அல்வா மிகவும் பிரபலம் பெற்றது. தரையில் படர்ந்து எந்த பெரு முயற்சிகளும் இல்லாமல் நாம் எதிர்பாராமலே காய்க்கும். இதற்கும் மவுசு சற்று குறைவுதான். ஆகவேதான் மக்கள் அலட்சியப்படுத்தும் இந்த சத்துமிக்க காய்கறிகளின் முக்கியத்து வத்தினைப் பற்றி இங்கு எழுதப்படுகின்றது.

    * வெண் பூசணி செரிமானத்தினை கூட்டும். மலச்சிக்கலை நீக்கும்.

    * நார் சத்து மிகுந்த காய். ஆகவே எடை குறைப்பிற்கு உகந்தது.

    * வைட்டமின் 'டி' சத்து உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுகின்றது.

    * வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிக்க உதவுகின்றது.

    * மன அழுத்தம் நீங்க உதவுகின்றது.

    * புண்களை ஆற்றும் சக்தி கொண்டது.

    * பொட்டாசியம், சி சத்து, நார்ச்சத்து இருதய ஆரோக்கியத்தினைக் கூட்டுகின்றது.

    * உடலில் நீரிழப்பு தடுக்கப்படுகின்றது.

    * தொடர்ந்து தினமும் 100 மி.லி. அளவு வெள்ளை பூசணி ஜூஸ் குடித்தால் உடலில் நச்சுகள் நீங்கும்.

    * உடற்பயிற்சி செய்வோர் பயிற்சி முடிந்த பிறகு வெள்ளை பூசணி ஜூஸ் அருந்தலாம்.

    * இதன் விதைகள் இதயம், எலும்பினைக் காக்கின்றது.

    * நல்ல தூக்கம் இருக்கும்.

    * சர்க்கரை அளவு கட்டுப்படும்.

    * பூசணி விதை வீக்கங்களை குறைக்க வல்லது. * சத்து நிறைந்தது.

     

    * சில வகை புற்று நோய்களின் பாதிப்பினை தவிர்க்க வல்லது.

    * சிறு நீரக பை, ப்ராக்ட் ரேட் இவற்றினை பாதுகாக்கும்.

    * நிறைந்த மக்னீசியம் சத்து கொண்டது.

    அவரைக்காய்

    அநேக வீடுகளில் கொத்து கொத்தாய் சர்வ சாதாரணமாய் காய்த்து கிடக்கும் காய்கறி. பலருக்கு காசு செலவு கூட இல்லை. பறித்து உடனே செய்யலாம். இதுதான் ஆரோக்கியம். இதுதான் மகிழ்ச்சி. புரதம், நார்சத்து இரும்பு சத்து, பொட்டாசியம் வைட்டமின் ஏ, சி சத்து நிறைந்தது. அடிக்கடி அவரைக்காயினை உணவில் சேர்த்துக் கொண்டால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

    * புரதச் சத்திற்கும் உதவும். இன்று அநேகரது பிரச்சினையே புரதம் தேவையான அளவு இல்லாததுதான்.

    * நார்சத்து கொலஸ்டிரால் அளவினை கட்டுப்படுத்தும். சீரண சக்தியினைக் கூட்டும்.

    * வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இது எடை குறைப்பிற்கும் உதவும்.

    * இரும்பு சத்து ரத்த சோகையினை தவிர்க்கின்றது.

    * பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தினைக் குறைக்கின்றது.

    கமலி ஸ்ரீபால்

     

    * வைட்டமின் ஏ,சி உடல் ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டுகின்றது.

    * சிங்க் செல் பாதுகாப்பிற்கு உதவுகின்றது.

    * இதிலுள்ள குறைந்த உப்பு, நார்சத்து, பொட்டாசியம் போன்றவை இருதய பாதுகாப்பிற்கு உதவுகின்றன.

    * தாது சத்துகள் நிறைந்தது. வலுவான எலும்புகள் உருவாகின்றன.

    * நோய் எதிர்ப்பு சக்தி கூடுகின்றது.

    * சர்க்கரை அளவு கட்டுப்படுகின்றது.

    கவனம்

    G6PD குறைபாடு உள்ளவர்கள் அவரைக்காயினை தவிர்க்க வேண்டும்.

    * அறுவை சிகிச்சை என்றால் 2 வாரம் முன்பே அவரைக்காய் எடுக்க வேண்டாம்.

    * பிஞ்சு அவரை, அவரை விதை இவையெல்லாம் இயற்கை (எ) இறைவனின் அருளே.

    இன்றைக்கே அவரைக்காய் சாப்பிட ஆரம்பிக்கலாமே.

    இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகின்றது. இருதய பாதிப்பு அபாயம் குறைகின்றது. எலும்புகள் வலுவாய் இருக்கும். சர்க்கரை அளவு கட்டுப்பட உதவும். சக்தி, மனநிலை சீராவது, நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

    பூசணிக்காயை விதவிதமாய் சமைக்கத் தெரியும். தினம் ஒரு டீஸ்பூன் பூசணி விதை அநேக நன்மைகளைத் தரும்.

    ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க மருத்துவ ஆலோசனைப் பெற்று பழக்கத்தில் கொண்டு வரலாமே.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடும்பத்தை ஒழுக்கமும் நன்னடத்தையும் உள்ள குடும்பமாக உருவாக்க வேண்டிய பெரும்பொறுப்பு, குடும்பத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதருக்கும் உண்டு.
    • பிரதிபலன் கருதாமல் செய்கிற உதவியே ஆகச் சிறந்த உதவி.

    உபத்திரவங்கள் வந்து சேர்ந்தாலும் உதவுவதற்கு எப்போதும் தயாராக இருக்கின்ற அன்பின் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    ஒவ்வொரு மனிதனின் உயிர் வாழ்க்கையும் சக மனிதனோடு ஒத்துப் போவதையும், சக மனிதனுக்கு உதவிசெய்து வாழ்வதைப் பொறுத்துமே அமைவு பெறுகிறது. தமிழில் 'உதவி' என்பதற்கும் 'நன்றி' என்பதற்கும் 'நன்மை செய்தல்' என்று ஒரே பொருள்தான். திருவள்ளுவர் தமது திருக்குறளில் இவ்விரண்டு சொற்களையும் ஒரே பொருண்மையில் பயன்படுத்தியுள்ளார்.

    "தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

    முந்தி யிருப்பச் செயல்"

    "மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

    என்நோற்றான்கொல் எனும் சொல்"

    ஆகிய குறள்களில் மகன் தந்தைக்கும், தந்தை மகனுக்கும் செய்ய வேண்டிய உதவிகளைக் குறித்து வள்ளுவர் சுட்டிக்காட்டுகிறார். ஒரு குடும்பத்து உறவுகளுக்குள்ளேயே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் பெற்றோருக்கும் நன்மைகள் செய்துகொள்வது சமூகக் கடமையாகும்.

    கல்வி கேள்விகளில், ஒழுக்க நடத்தைகளில் தாம் பெற்றெடுத்த பிள்ளைகள், மற்ற எல்லாரையும்விட முந்தியிருக்கும்படி செய்வது ஒவ்வொரு பெற்றோரின் சமூகக் கடமையாகும். அதேபோல, இப்படிப்பட்ட நல்ல பிள்ளைகளை உருவாக்க இவர்களது பெற்றோர்கள் என்ன தவம் இயற்றினார்களோ என்று பார்ப்பவர்கள் வியக்கும்படிப், பிள்ளைகள் சாதனைகளில் சாதித்துக் காட்ட வேண்டும். இந்தச் சமூகத்தை நல்ல சமூகமாகக் கட்டமைக்க வேண்டிய பொறுப்பு, சமூகத்தின் அங்கமாகத் திகழுகிற ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்டு.

    அதேபோலக், குடும்பத்தை ஒழுக்கமும் நன்னடத்தையும் உள்ள குடும்பமாக உருவாக்க வேண்டிய பெரும்பொறுப்பு, குடும்பத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதருக்கும் உண்டு. அந்த வகையில் தனிமனிதர் தொடங்கி, சமூக மனிதர் வரை ஒருவருக்கொருவர் நன்மை செய்து கொள்வதும், உதவி செய்துகொள்வதும் அவசியமான சமுதாயக் கடமையாகும்.

    'இந்தச் சமூகமும் மனிதர்களும் எனக்கு என்ன உதவிகள் செய்தார்கள்? நான் எதற்காக அவர்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும்?' என்று சிலர் கேட்கக்கூடும்; அவர்களது கேள்வியிலும் சில நியாயங்கள் இருக்கவும் கூடும். ஆனாலும் பிரதிபலன் கருதாமல் செய்கிற உதவியே ஆகச் சிறந்த உதவி. நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள் சூழ்ந்துள்ள இந்த உலகத்தில் நாம் இயல்பாகப் பெறக்கூடிய உதவிகள் எண்ணற்றவை.

    நாம் இயற்கையிடமிருந்து பெறும் உதவிகளுக்குச், செய்நன்றியறிதலாய் வேறு எவற்றைத் திருப்பிச் செய்ய இருக்கிறோம்?. இயற்கைச் சூழலை அதன் இயல்புகெடாமல் பாதுகாத்தாலே போதும்; வேறு எதையும் நம் சக்திக்குமீறிச் செய்ய வேண்டாம். அதேபோல 'வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபாகிய' இந்த மானுட சுழற்சிப் போக்கிலே, எத்தனையோ ஆயிரமாயிரம் உதவிகளை நமது முன்னோர்கள், தங்களது அறிவின் துணைகொண்ட கண்டுபிடிப்புகளின் வாயிலாக நமக்கு வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நாமும் நம் பங்கிற்கு, இந்தச் சமூகத்திற்கு, எதிர்காலச் சந்ததிக்கு யாதானும் உதவிகளைச் செய்துவிட்டுச் செல்ல வேண்டாமா?.

    உதவிகளில் சிறந்த உதவி, செய்யாமல் செய்த உதவி என்கிறார் திருவள்ளுவர்.

    "செய்யாமற் செய்த உதவிக்கு வானகமும்

    வையமும் ஆற்றல் அரிது"

    சுந்தர ஆவுடையப்பன்


     

    அடுத்தவர் எந்த உதவியும் செய்யாமல், அவர்களுக்கு நாம் செய்கிற நன்மைக்கு ஈடாக இந்த மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் தந்தால்கூட ஈடாகாது என்கிறது திருக்குறள். அதே போலப், பிரதிபலன் கருதாமல் அடுத்தவர்க்கு யார் உதவுகிறார்களோ அந்த நன்மை கடலைவிடப் பெரியது என்று மற்றொரு குறள் இயம்புகிறது. அடுத்தவர்க்கு உதவும் குணத்தை மனிதன் இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

    என்ன பிரதிபலன் கருதி சூரியன் அன்றாடம் உதிக்கிறது? எதை அனுபவிப்பதற்காகக் காற்று வீசிக்கொண்டிருக்கிறது? எந்தப் பலனை எதிர்பார்த்து மழை பெய்து பயிர் விளைந்து கொண்டிருக்கிறது?. இவையெல்லாம் இயற்கை; இவற்றிற்கு யோசிக்கும் மனமில்லை; ஆனால் மனமுள்ள மனிதன், தனக்கு அடுத்தவர் உதவினாலும் அதற்குப் பிரதியாக உபத்திரவத்தையே பரிசாக வழங்குகிறானே அது ஏன்? என்று அனுபவசாலியான சிலர் கேட்கலாம். ஏன் இப்படி நமக்கு நன்மை செய்பவர்க்கும் இடையூறு செய்யும் மனோபாவம்?. சிலபேருக்கு அது பிறவிக்குணமாகவும் அமைந்து விடுகிறது.

    ஓர் ஆப்பிரிக்க நாட்டு நாட்டுப்புறக் கதை. மலைகளால் சூழ்ந்த ஒரு பெரிய காடு. அந்தக் காட்டில் திடீரென்று தீப்பிடித்துக் கொள்கிறது. காட்டுத் தீயில் அகப்பட்டு ஏகப்பட்ட விலங்குகள் வெந்து சாம்பலாயின. விலங்குகள், பறவைகள் பாதுகாப்பாக ஒளிவதற்கு ஒரு மரமுமில்லை; ஒரு புதருமில்லை. எல்லாம் மளமளவென்று தீப்பிடித்துச் சாம்பலாகிக் கொண்டிருந்தன. இந்தக் களேபரத்தில் ஒரு நல்லபாம்பும் சிக்கி கொண்டது. காட்டின் நிலப்பரப்பில் ஊர்ந்துகொண்டிருந்தால் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்த பாம்பு, நிலத்தில் தெரிந்த ஒரு துவாரத்திற்குள் நுழைந்து விட்டது; அது பெரிய ஆழமான ஓட்டை என்பதால் பத்திரமாக அடியாழம்வரை சென்றுவிட்டது.

    அந்த நேரத்தில், காட்டின்மீது ஒரு கடும்மழை பெய்தது; நெருப்பு அணைந்து, காட்டின் வெப்பம் தணிந்தது. ஓட்டை வழியே பூமிக்குள் சென்றிருந்த நல்ல பாம்பு இப்போது, தரையின் மேலடுக்குக்கு வந்தது; ஆனால், வனப்பகுதியின் சமவெளிப் பகுதிக்கு வருவதற்கான ஓட்டை அடைபட்டிருந்தது. எப்படி வெளியே வருவது?. தீவிபத்தில் தப்பித்திருந்த சில விலங்குகள், பாம்பு சிக்கியிருந்த தரைக்கு மேல்பகுதியில் செல்வதும் திரும்புவதுமாக இருந்தன. அப்போது அந்த வழியில் வேடன் ஒருவனும் வந்தான். தரைக்குள்ளிருந்த பாம்பு, " நான் நல்லபாம்பு!, பூமியின் ஓட்டைக்குள் சிக்கிக் கொண்டுள்ளேன்! யாராவது ஓட்டைத் துவாரம் பார்த்து என்னை வெளியே எடுத்துக் காப்பாற்றி விடுங்கள்!" என்று மன்றாடியது.

    " நீ இப்படித்தான் சொல்வாய்!. உன்னைக் காப்பாற்றி வெளியேற்றினால், உடனே உதவி செய்த எங்களையே கடித்து வைத்துவிடுவாய்!. பெயர்தான் நல்ல பாம்பு; ஆனால் பாம்பின் குணம் கடித்து வைப்பதுதானே!" என்று கூறி எந்த விலங்கும் பாம்பைக் காப்பாற்றுவதாய் இல்லை. பார்த்துக்கொண்டிருந்த வேடன், " அவையெல்லாம் விலங்குகள்!; நான் ஆறறிவு உள்ள மனிதன்; நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்; ஆனால் கடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துகொடு!" என்று பாம்பிடம் பேசினான்.

    "கட்டாயம் கடிக்க மாட்டேன்!; காப்பாற்று!" என்றது நல்லபாம்பு. பூமிக்குக் கீழே பாம்பு சிக்கியிருக்கும் அடுக்குக்கு அருகிலிருக்கும் ஒரு துவாரத்தின் வழியே விரலைவிட்டுப் பாம்பைப் பிடித்து இழுத்து, பூமிக்கு வெளியே கொண்டுவந்து விட்டான் வேடன். வெளியே வந்ததுதான் தாமதம், அடுத்த நொடியே வேடனைக் கொத்துவதற்கு நல்லபாம்பு ஒரு சீறு சீறியது. சுதாரித்து விலகிக்கொண்ட வேடன்," பார்த்தாயா! சொன்ன சொல்லைத் தவறுவதற்கு முயற்சிக்கிறாயே!, உதவி செய்ததற்கு உபத்திரவம் கொடுப்பதுதான் நீதியா?.

    எங்காவது நன்மை செய்தவர்களுக்குத் தீமையை யாராவது பரிசளிப்பார்களா?" என்று பாம்பிடம் கேட்டான். " அதெல்லாம் எனக்குத் தெரியாது . சீறுவதும் கொத்துவதும்தான் என்னுடைய குணம்!. அதைத்தான் நான் இப்போது செய்தேன்!" என்றது நல்ல பாம்பு. " சரி வா!. நகரத்திலிருக்கும் நீதிமான் அவர்களிடம் சென்று வழக்கை வைப்போம்! அவர் தீர்ப்பு வழங்கட்டும்!". என்று நீதிமானிடம் அழைத்தான் வேடன்; சரியெனப் பாம்பும் அவனுடன் கிளம்பியது.

    நகரத்திற்குச் செல்லுகிற வழியில் இருவரும் ஒரு குதிரையைச் சந்தித்தார்கள்; நடந்ததை விவரித்து, இது குறித்து உன்னுடைய தீர்ப்பு என்ன? என்று குதிரையிடம் கேட்டனர். "என்னைப் பொறுத்த வரை, என்மீது ஏறிச் சவாரி செய்பவருக்குத் தொந்தரவில்லாமல் சொகுசாகத்தான் சுமந்து செல்வேன்!; ஆனால் அதற்குப் பரிசாக நாலைந்து சவுக்கடி கொடுத்து இன்னும் விரைவாகப் போகச்சொல்லித் துன்புறுத்தவே செய்வார்கள்!" என்றது குதிரை. நல்ல பாம்பு வேடனைப் பார்த்துச் சிரித்தது.

    அடுத்து, செல்லும் வழியில் ஒரு கழுதையை இருவரும் பார்த்தார்கள்; இருவருக்கும் இடையேயுள்ள வழக்கைப்பற்றிக் கழுதையிடம் சொல்லி, அதனுடைய தீர்ப்பு என்ன? என்று கேட்டார்கள். "எவ்வளவு பொதி சுமந்தாலும் சாட்டைக்கம்பு அடியைத் தவிர வேறு எதனையும் நான் பரிசாகப் பெற்றதில்லை" என்று சோகமாக சொன்னது கழுதை.

    அடுத்து ஒரு பசுமாட்டை வழியில் பார்த்த வேடனும் நல்ல பாம்பும், உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் தருபவர்கள் பற்றி உன்னுடைய அபிப்பிராயம் என்ன? என்று கேட்டார்கள். " அதை ஏன் கேட்கிறீர்கள்; நாங்கள் எங்கள் எஜமானர்களுக்கு மாடாய் உழைக்கிறோம்; ஆனாலும் கடைசியில் எங்களை அடிமாடாய்த்தானே விற்றுவிடுகிறது இந்த உலகம்!" என்று புலம்பித் தள்ளிவிட்டது பசுமாடு.

    "குதிரை, கழுதை, பசுமாடு ஆகியவை கூறிய நடைமுறைத் தீர்ப்புகளைக் கேட்டோம்.

    எல்லாமே எனக்குச் சாதகமானவை. இனிமேலுமா நகரத்திற்குச் சென்று நீதிமானைப் பார்க்க வேண்டும்?" கேட்டது நல்ல பாம்பு. "இதோ நகரம் வரப்போகிறது. அவரும் என்ன தீர்ப்புச் சொல்கிறார் என்று பார்ப்போம்" என்று விடாமல் பாம்பை அழைத்துக்கொண்டு நடந்தான் வேடன்.

    வழக்கை விசாரித்த நீதிமான், சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்த்தபின் தீர்ப்புச் சொல்கிறேன் என்றார். மூவரும் தீப்பிடித்த வனப்பகுதிக்குள் சென்றனர். சம்பவம் எப்படி நடந்தது என்பதை நிகழ்த்திக் காட்டச் சொன்னார் நீதிமான்.

    பாம்பு சிக்கியிருந்த பொந்துக்குள் சிரமப்பட்டு உள்ளே நுழைந்தது; என்னைக் காப்பாற்றுங்கள்! என்று கத்தியது. காப்பாற்றினால் கடிக்க மாட்டேன் எனச் சத்தியம் பண்ணச் சொல்லி வேட்டுவன் கேட்டான். சரி என்றது பாம்பு. காப்பாற்ற பொந்துக்குள் வேடன் கையை விட்டான். இப்போது அவனது கையை நீதிமான் பிடித்து இழுத்துத் தடுத்துவிட்டார். உதவி பெறுகிறவர் அந்த உதவியின் மதிப்பைத் தெரிந்தவராக இருந்தால் தான் நன்றியோடு இருப்பார்; இல்லையென்றால் உபத்திரவங்களையே செய்வார்.

    இன்று முழுவதும் பாம்பு பொந்துக்குள்ளேயே கிடக்கட்டும்; பசியில் வாடட்டும்; பிறகு காப்பாற்று; நிச்சயம் அதன்பின் உன்னிடம் அன்போடு நடந்து கொள்ளும்!" என்றார் நீதிமான். ஆம் திருவள்ளுவர் குறிப்பிடுவதைப்போல,

    "உதவி வரைத்தன்று உதவி உதவி

    செயப்பட்டார் சால்பின் வரைத்து"

    உதவியைப் பெறுகிறவரின் சான்றாண்மைக் குணத்தைப் பொறுத்தே, சிறிய உதவிகூடப் பெரும் உபகாரமாய் மாறும். தகுதியில்லாதவர்க்குச் செய்யும் உதவி, திரும்பவும் நமக்கு உபத்திரவமாகவே வந்து சேரும்.

    தொடர்புக்கு 94431 90098

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவாஜி ராவின் இந்த குணத்தை பார்த்து அவரது அறை நண்பர்கள் அடிக்கடி ஆச்சரியப்பட்டது உண்டு.
    • அமைந்தகரையில் இருந்து ஜெமினி பாலம் செல்ல 2 வழித்தடங்கள் உள்ளன

    அமைந்தகரை அருண் ஓட்டலில் 3-வது மாடியில் நண்பர்களுடன் தங்கி இருந்த சிவாஜி ராவ் கல்லூரிக்கு புறப்படும் ஸ்டைலே தனியாக இருக்கும். அதிகாலையிலேயே எழுந்து சிகரெட்டை புகைத்தப்படியே வராண்டாவில் வலம் வருவார். மற்ற நண்பர்கள் கண் விழிப்பதற்குள் இரண்டு, மூன்று சிகரெட்டுகளை ஊதித்தள்ளி விடுவார்.

    நண்பர்கள் எழுந்து கல்லூரிக்கு தயாராக வேண்டும் என்று குளியல் அறைக்கு செல்ல நினைத்தால் அவ்வளவு எளிதில் முடியாது. ஏனெனில் அதற்குள் குளியல் அறையை பூட்டிக்கொண்டு உள்ளே சிவாஜி ராவ் தம் அடித்துக் கொண்டு இருப்பார். அது மட்டு மல்ல குளியல் அறைக்குள் இருக்கும் கண்ணாடி முன்பு நின்றுக் கொண்டு விதவிதமாக நடித்தும் பார்ப்பார்.

    இது அவரது அறை நண்பர்களுக்கு மிகப்பெரிய இடையூறாக இருந்தது. ஒரு கட்டத்தில் சண்டைப் போட்டு நாங்கள் எல்லோரும் குளித்த பிறகுதான் நீ குளிக்க வேண்டும் என்று சிவாஜிராவுக்கு நண்பர்கள் உத்தரவிட்டனர். என்றாலும் சிவாஜிராவ் யாருக்காகவும் தனது சுதந்திரமான செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை.

    இதனால் அறையில் அவருக்கும், ரவீந்திர நாத்துக்கும் இடையே அடிக்கடி முட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இருவரும் ஜென்ம விரோதிகள் போல சண்டைப் போடுவார்கள். அப்போது சதீசும், அசோக்கும் இடையில் புகுந்து சண்டையை தீர்த்து வைப்பார்கள்.

    ஆனால் அடுத்த சில நிமிடங்களில் எதுவுமே நடக்காதது மாதிரி சிவாஜி ராவும், ரவீந்திரநாத்தும் கொஞ்சி குலாவியபடி பேசிக் கொள்வார்கள். சிவாஜி ராவின் இந்த குணத்தை பார்த்து அவரது அறை நண்பர்கள் அடிக்கடி ஆச்சரியப்பட்டது உண்டு.

    அமைந்தகரையில் இருந்து திரைப்படக் கல்லூரி அமைந்து இருந்த ஜெமினி பாலம் வரை ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. சிவாஜிராவும் அவரது நண்பர்கள் வேணுகோபால், சதீஷ், அசோக் மற்றும் சிலர் தினமும் ஒரே பஸ்சில்தான் பயணம் செய்வார்கள்.

    அமைந்தகரையில் இருந்து ஜெமினி பாலம் செல்ல 2 வழித்தடங்கள் உள்ளன. மேத்தா நகர் வழியாக ஒரு வழித்தடம் உள்ளது. அமைந்தகரை சேத்துப்பட்டு வழியாக மற்றொரு வழித் தடம் உள்ளது. இதில் 1973-ல் அமைந்தகரையில் இருந்து மேத்தா நகர் வழியாக ஜெமினி பாலம் செல்ல 25 காசுகள் கட்டணம் கொடுக்க வேண்டும்.

    அமைந்தகரை சேத்துப்பட்டு வழியாக செல்லும் பஸ்களுக்கு 30 காசுகள் கட்டணம். சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் தினமும் அந்த 5 பைசாவை மிச்சப்படுத்துவதற்காக மேத்தா நகர் வழியாக செல்லும் பஸ்சில்தான் ஏறுவார்கள்.

    அந்த பஸ் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே வரும்போது பெரும்பாலான நாட்கள் ரெயில்வே கேட்டில் நிற்க வேண்டியது ஆகி விடும். 1973-ல் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை. எனவே அந்த சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் ரெயில்வே கேட் திறக்கும்வரை அங்கேயே நீண்ட வரிசையில் காத்து கொண்டு இருக்கும்.

    அப்படி சிவாஜி ராவ் வரும் பஸ்களும் ரெயில்வே கேட்டில் சிக்கி விடுவது உண்டு. ஒரு தடவை நுங்கம்பாக்கம் ரெயில்வே கேட் மூடப்பட்டு விட்டால் மீண்டும் திறப்பதற்கு சுமார் 30 நிமிடங்களாவது ஆகிவிடும். இதனால் சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் பல நாட்கள் திரைப்படக் கல்லூரி வகுப்புக்கு தாமதமாக சென்று ஆசிரியர்களிடம் திட்டு வாங்கி இருக்கிறார்கள்.

    ரெயில்வே கேட் மூடப்படும் நாட்களில் சிவாஜிராவும் நண்பர்களும் பஸ்சில் அடிக்கும் லூட்டிகள் பயங்கரமாக இருக்கும். அந்த சமயங்களில் சிவாஜி ராவை வெறுப்பு ஏற்ற வேண்டும் என்பதற்காகவே சில சமயங்களில் "ஏய் கருப்பா?" என்று நண்பர்கள் அழைப்பார்கள். அப்போது எல்லாம் சிவாஜி ராவுக்கு கடும் கோபம் வந்து விடும்.

    ஒரு தடவை சிவாஜி ராவை பார்த்து பஸ்சில் வைத்து சதீஷ் "டேய் நீ ஏன்டா இவ்வளவு கருப்பாய் இருக்கிறாய்? உனக்கு எப்படி கதாநாயகன் வாய்ப்பு கிடைக்கும்?" என்று கிண்டல் செய்தார். இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. "டேய் கேலி செய்யாதே? எனக்கு கோபம் வந்தால் சும்மா இருக்க மாட்டேன்? என் கையில் கிடைப்பதை தூக்கி அடித்து விடுவேன்" என்று எச்சரித்தார்.

    என்றாலும் சதீஷ் தொடர்ந்து சிவாஜி ராவை பார்த்து கருப்பா.... கருப்பா... என்றே சொல்லி வெறுப்பு ஏற்றினார். பஸ்சில் பல பயணிகள் முன்னிலையில் சதீஷ் செய்த கிண்டல் சிவாஜி ராவுக்குள் குமுறலை ஏற்படுத்தியது. "டேய் விளையாடாதே? என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது" என்று முறைத்தார்.

    அப்போது ஜெமினி பாலம் பஸ் ஸ்டாப் வந்து இருந்தது. நண்பர்கள் அனைவரும் இறங்கினர்கள். அப்போதும் சதீஷ் சிவாஜி ராவை பார்த்து, "கருப்பா வேகமா வாடா?" என்றார். அடுத்த நிமிடம் சிவாஜி ராவ் பாய்ந்து சென்று சதீசை சட்டையை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினார்.

    "நீ என்ன பெரிய மன்மதனா? எப்போது பார்த்தாலும் என்னை கருப்பா என்கிறாய்? உன் மனதில் என்னடா நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று எச்சரித்தார். சிவாஜி ராவுக்கு வந்த கோபத்தை பார்த்து சதீஷ் ஒரு நிமிடம் மிரண்டு போய் விட்டார். அதன் பிறகு அவர் சிவாஜி ராவிடம் நிறம் பற்றி கிண்டல் செய்து பேசியதே இல்லை.

    சிவாஜி ராவ் கோபப்பட்டாலும் சிறிது நேரத்தில் அதை மறந்து நண்பர்களுடன் கலகலப்பாக பேச ஆரம்பித்து விடுவார். இதனால் கல்லூரியிலும், அருண் ஓட்டலிலும் எப்போதும் நண்பர்கள் அவருடன் இருந்தனர். அந்த நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை போக்குவதுதான் அவரது இரவு நேர பழக்கமாக இருந்தது.

    சிவாஜி ராவிடம் இருந்த சிகரெட் புகை பிடிக்கும் பழக்கம் தவிர மற்ற அனைத்து பழக்கங்களையும் அவரது நண்பர்கள் ரசித்தனர். குறிப்பாக சினிமா மீது சிவாஜி ராவுக்கு இருந்த வெறியை நினைத்து பிரமிப்பார்கள். எப்போதும் சினிமா நினைப்பிலேயே இருந்த சிவாஜி ராவ் அடிக்கடி அமைந்தகரை லட்சுமி டாக்கீசுக்கு படம் பார்க்க சென்று விடுவார்.

    தமிழில் புதுப்படம் ரிலீஸ் ஆகி இருந்தால் சிவாஜிராவ் தவற விட மாட்டார். அன்று முதல் ஆளாக லட்சுமி டாக்கீசில் ஆஜராகி விடுவார். நண்பர்கள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி லட்சுமி டாக்கீசுக்கு சென்று படம் பார்ப்பது அவருக்கு ஒரு பழக்கமாக மாறிப் போனது.

    அமைந்தகரை லட்சுமி டாக்கீஸ் தியேட்டரில் புதுப்படங்கள் ரீலிஸ் ஆகாத நாட்களில் இடையிடையே பழைய படங்களையும் போடுவார்கள். அந்த படங்களையும் சிவாஜிராவ் விட்டு வைப்பது இல்லை. முதல் காட்சிக்கு முதல் ஆளாக போய் நிற்பார்.

    தங்கை, தங்கசுரங்கம், என் தம்பி, திருடன், ராஜா, எங்கள் தங்க ராஜா உள்பட சிவாஜி கணேசன் படங்களில் பெரும்பாலானவற்றை சிவாஜிராவ் லட்சுமி தியேட்டரில்தான் கண்டுகளித்தார். அதுபோல எம்.ஜி.ஆர். நடித்த படங்களையும் அவர் விடாமல் பார்த்தார். எம்.ஜி.ஆர்.- சிவாஜி என்ற இரண்டு இமயங்களும் தமிழ் திரையுலகை ஆக்கிரமித்து இருந்ததை அவர் படம் பார்த்து விட்டு நண்பர்களுடன் ஆர்வமாக விவாதிப்பார்.

    குறிப்பாக சிவாஜிகணேசனின் நடிப்பை புகழ்ந்து பேசிக் கொண்டே இருப்பார். ஏற்கனவே பணக்கஷ்டத்தில் இருந்த சிவாஜி ராவுக்கு அடிக்கடி படம் பார்ப்பதால் கூடுதல் செலவு ஆனது. என்றாலும் சிவாஜிராவ் சாப்பாட்டை தியாகம் செய்து விட்டு கூட லட்சுமி தியேட்டருக்கு சென்று படம் பார்த்தது உண்டு.

    சில சமயங்களில் சிவாஜி ராவிடம் போதுமான அளவுக்கு கையில் காசு இருக்காது. அதே சமயத்தில் லட்சுமி தியேட்டரில் புதிய படம் வெளியாகி இருக்கும். என்றாலும் படம் பார்க்க வேண்டும் என்ற வெறியுடன் சிவாஜிராவ் லட்சுமி தியேட்டருக்கு சென்று சாதாரண வகுப்பில் டிக்கெட் எடுத்து படம் பார்ப்பது உண்டு.

    ஒரு தடவை லட்சுமி தியேட்டரில் அவர் தரையில் உட்கார்ந்து சிவாஜி படத்தை பார்த்து விட்டு வந்தார். அந்த அளவுக்கு சிவாஜி நடிப்பில் அவர் மனதை பறிக் கொடுத்து இருந்தார்.

    லட்சுமி தியேட்டரில் மட்டுமின்றி திரைப்படக் கல்லூரியிலும் சிவாஜி ராவுக்கும், அவரது நண்பர்களுக்கும் அடிக்கடி படங்கள் போட்டு காட்டப்படுவது உண்டு. பெரும்பாலும் திரைப்படக் கல்லூரியில் காட்டப்படும் படங்கள் ஆங்கிலப் படங்களாக இருக்கும். ஆலிவுட் நடிகர்கள் சார்லஸ் லாப்டன், கிளார்க் கேபிள், கிரிகிரிபெக், ஆண்டனிகுயின், மார்லன்பிராண்டோ ஆகியோரது படங்களை அடிக்கடி காண்பித்து பயிற்சி கொடுப்பார்கள்.

    அந்த நடிகர்களின் உடல் மொழி, முகப்பாவனைகள் அனைத்தையும் சிவாஜி ராவ் மனதுக்குள் உள்வாங்கிக் கொண்டார். அதுபோலவே எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ராமாராவ், ராஜ்குமார், திலீப்குமார், ராஜ்கபூர், சத்யன், நாகேஸ்வரராவ் ஆகியோரது படங்களையும் பார்த்து அவர்களிடம் இருந்த தனித்துவத்தை புரிந்து உணர்ந்துக் கொண்டார்.

    சினிமா படங்களை பார்க்க... பார்க்க... அவருக்குள் நடிப்பின் மீதான வெறி விஸ்வரூபமாக மாறியது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மற்ற தியேட்டர்களுக்கும் சென்று படங்கள் பார்த்தார். இதன் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் மொழிகளின் படங்களும், நடிகர்களின் நடிப்பும் அவரது மனதுக்குள் ஆழமாக பதிந்தன.

    இந்த நிலையில்தான் அமைந்தகரையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்ற சிவாஜி ராவை போலீசார் சுற்றி வளைத்து அடி பின்னி எடுத்து விட்டனர்.

    அந்த பயங்கர சம்பவம் பற்றி திங்கட்கிழமை (22-ந்தேதி) பார்க்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காதல் ரேகையின் வகைகள்.
    • இருதய ரேகையுடன் தொடர்புடைய காதல் ரேகைகள்

    கைரேகை மூலம் ஒருவரின் எதிர்காலத்தை கணிக்க முயற்சிக்கும்போது காதல் ரேகை மிக முக்கியமான ஒன்றாகும். கையில் இருக்கும் திருமணக் கோடு, நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்பதைக் கணிப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் காதல் அல்லது திருமணம் குறித்த உங்கள் அணுகுமுறையை அடி கோடிட்டு காட்டவும் உதவும். காதல் விஷயத்தில் நீங்கள் எப்படிப்பட்ட நபராக இருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளவும் இது உதவுகிறது.

    ஆண்களுக்கு வலது கட்டை விரலுக்கு கீழே சின்னதாக செங்குத்தான ஒரு கோடு செல்லும் அதான் காதல் ரேகை.

    ஒருவருடைய கையில் விதிரேகை நன்றாக அமைந்து, அந்த விதி ரேகையை சந்திர மேட்டிலிருந்து வரும் ரேகை ஒன்று தொட்டு நின்று, திருமண ரேகை நன்கு அமையுமானால் அந்த நபர் கண்டிப்பாக காதல் திருமணம் செய்வார்.

    காதல் ரேகை அமைப்புக்கேற்ற பலன்களை அறியலாம். படத்தில் 1,2,3..என 8 வரை குறிப்பிட்டுள்ள ரேகைகளுக்கான பலன்கள் எப்படி என்பதை பார்ப்போம்...

    1.நீங்கள் காதல் விவகாரங்களில் சற்று அதிக கூச்ச சுபாவம் கொண்டு இருக்கலாம். நீங்கள் மட்டும் காதல் விவகாரங்களில் துணிச்சலுடன் செயல்பட்டால் உங்களுக்கு அதில் வெற்றி உண்டு.

    2.காதல் விவாகரங்களில் நீங்கள் சிக்கினீர்கள் என்றால், அது முற்பகுதியில் உங்களுக்கு சந்தோஷத்தை தரும். ஆனால் பிற்பகுதியில் பலவிதமான அனுபவங்களை தரலாம். ஒரு வேலை உங்கள் சுக்கிர மேடு வலுவாக இருந்தால் பல திருப்பு முனைகளை சந்தித்து இறுதியில் உங்களது காதல் வெற்றி பெறும். காதல் ரேகையும் இல்லை, சுக்கிர மேடும் பலமாக அமையவில்லை எனில் காதலில் கூடுமானவரையில் நீங்கள் ஈடுபடுவதை தவிர்த்து, பெற்றோர்கள் பார்க்கும் திருமணத்திற்கு உடன் பட்டு செல்வது நல்லது.

    3.பல தடைகளை கடந்து நீங்கள் காதல் செய்வீர்கள், அப்படி செய்தாலும் கூட உங்களின் காதல் வெற்றி அடையும் என்று உறுதி அளிக்க முடியாது. நீங்கள் பேசாமல் வீட்டில் பார்க்கும் பெண்ணை அல்லது மணமகனை திருமணம் செய்து கொள்வது உங்களுக்கு மிக நல்லது. மீறி காதல் விவகாரங்களில் ஈடுபட்டால் நீங்கள் அதிக ஏமாற்றத்தை சந்திக்க இடம் உண்டு.

    4.நல்ல வசதியான நபரை தேடிப் பிடித்து காதல் செய்வீர்கள். பொய்யை கூட உண்மை போலவே சொல்லக்கூடியவர்கள் நீங்கள். அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் காதலிப்பவர் நம்பும் படியாக சொல்வதில் வல்லவர்கள். எனினும் காதலில் உண்மையுடன் தான் இருப்பீர்கள் அல்லது நடந்து கொள்வீர்கள் என்று சொல்வதற்கு இல்லை.

    5.நீங்கள் காதல் செய்யும் நபர் எதிர்காலத்தில் பலராலும் அறியப்படும் நபராக இருப்பார். மேலும் நீங்கள் அதிக ரொமேன்டிக்காக செயல் படத் தெரிந்தவர்கள். காதல் விவகாரங்களில் பட்டையை கிளப்புவீர்கள்.

    6.நீங்கள் காதல் செய்வதை கூடிய வரையில் தவிர்த்து வீட்டில் பார்க்கும் பெண்ணை அல்லது வாழ்க்கை துணையை திருமணம் செய்து கொள்வது உங்களுக்கு நல்லது. காரணம், நீங்கள் காதல் விவகாரங்களில் இறங்கினால் கண்டிப்பாக அந்தக் காதல் உங்களுக்கு சந்தோஷத்தை தர வாய்ப்பில்லை.

    7.நீங்கள் காதலிக்கும் நபர் அதிக நேர்மையான நபராக இருக்க வாய்ப்பில்லை. இதனால் வாழ்க்கையில் சில தொல்லைகளை நீங்கள் சந்திக்க இடம் உண்டு. நீங்கள் பெரும்பாலும் காதல் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.

    அ.ச.இராமராஜன்


     

    8.உங்களுக்கே உங்கள் காதல் மீது நம்பிக்கை இல்லாமல் போகலாம். மேலும் நீங்கள் செய்யும் காதல் சமயத்தில் ஒரு தலை காதலாகக் கூட இருக்கலாம். அதனால் சில ஏமாற்றங்களை நீங்கள் சந்திக்க இடம் உண்டு. நீங்களும் கூட காதல் விவகாரங்களில் தலை இடாமல் வீட்டில் பார்க்கும் வாழ்க்கை துணையை திருமணம் செய்து கொள்ளுதல் நலம்.

    திருமண ரேகை இரண்டு துண்டுகளாக காணப்பட்டு, அதில் ஒரு துண்டு இருதய ரேகையும், புத்தி ரேகையும் கடந்து நின்றால், அப்படிப்பட்ட நபர் காதலில் தோல்வியை சந்திப்பர். அந்த ரேகை ஆயுள் ரேகையும் கடந்து சென்றால் அப்படிப்பட்ட நபர் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்வார்.

    காதல் ரேகையின் வகைகள் மற்றும் பலன்கள்:

    நீளமான காதல் ரேகை:

    நீண்ட, நேராக செல்லும் காதல் ரேகை ஒருவரின் ஆழ்ந்த உணர்ச்சிகளையும், காதல் மீதான ஈடுபாட்டையும் குறிக்கிறது. இது ஒரு நிலையான மற்றும் தீவிரமான காதல் வாழ்க்கையை குறிக்கும் என்று கருதப்படுகிறது.

    குறுகிய காதல் ரேகை:

    குறுகிய காதல் ரேகை கொண்டவர்கள் உணர்ச்சி ரீதியாக வெளிப்படையாக இல்லாமல் இருக்கலாம் அல்லது காதல் விஷயங்களில் அவ்வளவு ஆர்வம் காட்டாமல் இருக்கலாம், குறுகிய காதல் ரேகைகள் உள்ளவர்கள் ஒரு உறவில் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிவார்கள், மேலும் தங்கள் சொந்த விருப்பங்களையும் தேவைகளையும் முதலில்வைக்கபயப்படுவதிலை. ஒரு குறுகிய ரேகை, காதல் மற்றும் உறவுகள் என்று வரும்போது ஒருவர் சற்று தனிமையாக இருப்பதையும் குறிக்கலாம்.

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிளைகள் கொண்ட காதல் ரேகை:

    காதல் ரேகையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிளைகள் பிரிந்திருந்தால், இது ஒருவரின் காதல் வாழ்க்கையில் பல உறவுகள் அல்லது குழப்பங்கள் இருப்பதைக் குறிக்கலாம்,

    காதல் ரேகை மற்றும் சூரிய ரேகை சந்திப்பு:

    காதல் ரேகை சூரிய ரேகையை சந்திக்கும் போது, இது ஒருவரின் காதல் வாழ்க்கையில் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நபராக இருப்பதைக் குறிக்கலாம் என்று கருதப்படுகிறது,

    காதல் ரேகையின் ஆரம்பம் மற்றும் முடிவு:

    காதல் ரேகையின் ஆரம்பம் மற்றும் முடிவு எந்த மேட்டிலிருந்து தொடங்குகிறது மற்றும் எந்த மேட்டை அடைகிறது என்பதை வைத்து, ஒருவரின் காதல் வாழ்க்கையின் ஆரம்பம் மற்றும் முடிவு பற்றியும் அறியலாம்,

    இருதய ரேகையுடன் தொடர்புடைய காதல் ரேகைகள்

    ஒருவருக்கு காதல் ரேகை, இருதய ரேகையை நோக்கி வளைந்திருந்தால், அவர் தனிமரமாகவே இருப்பார். அவருக்கு திருமண வாழ்க்கை அமைந்தாலும், தனியாகவே வாழ வேண்டியிருக்கும். ஒருவேளை அந்த வளைவு சற்று மங்கலாக இருந்தால், அந்த நபர் திருமண வயதை அடையும் போது நாள்பட்ட நோய் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும். தொடக்கத்தில் கோடு V வடிவமாக இருந்தால், அவர் எந்த காதலிலும் நிரந்தரமாக இருக்கமாட்டார் என்று அர்த்தம். சூரிய ரேகையை வெறும் கோடு தொட்டால், செல்வந்தருடன் திருமணம் நடக்கும் வாய்ப்பு உண்டு. காதல் கோட்டில் கரும்புள்ளி இருந்தால், துணை இறக்கலாம்.

    காதல் ரேகையின் மீது பல்வேறு கோடுகள்

    காதல் ரேகைக்கு மீது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகள் இருந்தால், அந்த நபருக்கு பல்வேறு காதல் ஏற்படக்கூடும் என்பதை குறிக்கிறது. அதில் சில காதல்கள் வலுவாக இருக்கும் என்று கைரேகை பலன்கள் கூறுகின்றன. கோடுகள் எதுவும் வலுவாக இல்லாவிட்டால், அந்த நபருக்கு உறுதியான காதல் எதுவும் அமையாது என்று அர்த்தம். இதுபோன்ற கைரேகை கொண்ட நபருக்கு திருமண பந்தமும் நிலைக்காது என்று கைரேகை பலன்கள் கூறுகின்றன.

    ×