என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தண்டுவட எலும்புகள் தேய்வதால் வரும் வாதத்தை சித்த மருத்துவத்தில் தண்டக வாதம் என்றுகூறுவோம்.
    • ரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலம் இருக்கும் நபர்களுக்கு இந்த கீல்வாதம் என்று அழைக்கப்படும்.

    வாத நோய் என்பது இணைப்பு திசுக்களில் குறிப்பாக தசைகள், மூட்டுகள் தொடர்புடைய கட்டமைப்புகளில் ஏற்படும் வீக்கத்தைக் கொண்ட பல கோளாறுகளில் ஏதேனும் ஒன்று ஆகும். மிகவும் பொதுவான அறிகுறிகள் வலி வீக்கம் மற்றும் விறைப்பு.

    மூட்டுவலி

    மூட்டுவலிக்கு சந்துவலி, மேகசூலை, முடக்கு வாயு, ஆமவாதம் எனப் பல பெயர்கள் உண்டு. இது, கீல்களில் வளிக்குற்றம் கூடி நோயை உண்டாக்குவதால் கீல்வாயு என்றும், மூட்டுகளில் நோயை உண்டாக்குவதால் மூட்டு வலி என்றும், இந்நோய் பெரும்பான்மையும் மேகத்தின் தொடர்பு நோயாக வருவதால் மேகசூலை என்றும், பூட்டுகளை முடக்கி வைப்பதால் முடக்குவாயு என்றும், வயிற்றில் மந்தம் உண்டாகி ஐயத்தைப் பெருக்கி இந்நோய் உண்டாவதால் ஆமவாதம் எனவும் பெயர் பெற்றது.

    கீல்களில் வீங்குவது, குத்துவது, நோவது முதலியவற்றை உண்டாக்கி, மடக்கவும், நீட்டவும், அசைக்கவும் ஒட்டாமற் செய்து, படுக்கையில் இருத்தி, ஐயமும் கூட்டு சுரம் முதலிய துணை நோய்களையும் உண்டாக்கும் இயல் புடையதாம்.

    அழல் கீல் வாயு: (OSTEO ATHRITIS)

    அழல் குற்றத்தைத் தூண்டக் கூடிய உணவு, செய்கை முதலியவற்றால் பிறக்கும் நோயாம். இந்நோயில், மூட்டுகளில் உண்டாகும் வீக்கம் நாளுக்குநாள் பெருத்துக் கொண்டே வந்து, மிகுந்த தீக்குற்றத்தால் கீல்களினிடையே உள்ள பசை வறண்டு பசையற்றுக் கீல் அசையும் போதெல்லாம் நட்டையுடைதலும் "கலுக்" "கலுக்" கென்ற ஓர் ஒலி உண்டாவதுமாய் இருக்கும். சிலவேளைகளில், கீலுக்குக் கீல் கூடி ஒட்டிக்கொண்டு ஒரு கழிபோல மடக்க முடியாமலே நின்று விடுவதும் உண்டு.

    வளி அழல் கீல் வாயு: (RHEUMATOID ARTHRITIS)

    இது, பெரும்பான்மையும் வளிக்குற்றத்தையும் தீக்குற்றத்தையும் பெருக்கக்கூடியதான ஆட்டுக்கறி, மீன், முட்டை, உருளைக்கிழங்கு, சுறாமீன் முதலிய பண்டங்களை மிகுதியாப் புசித்தலாலும், கள், சாராயம் முதலியவைகளை அடிக்கடி அருந்துவதாலும் உண்ட உணவுக்குத் தகுந்த உழைப் பில்லாமையாலும் வரும் நோயாம்.

    இந்நோயில், முதலில் உண்ட உணவு செரியாமல் புளித்த ஏப்பம் உண்டாதல், வயிற்றுள் காற்றுக் கூடி அடிக்கடி காற்றுப் பரிதல், வெளிக்குப் போகாமை, உடல் பெருத்தல் என்னுங் குறிகளைக் காட்டி, மணிக்கட்டு கணுக்கால், விரல்கள், ஆகிய கீல்களில் சிவந்து எரிச்சலையும் வலியையும் உண்டாக்கும். இந்நோய் எளிதில் மருத்துவத்திற்கு அடங்காமலும், மருத்துவத்திற்கு அடங்கினும் மீண்டும் திரும்பிவருவதுமாயிருந்து, அக்கீல்கள் கரடு கட்டினதுபோல நீட்டவும் நன்றாய் மடக்கவும் முடியாத வண்ணம் நிலைத்துவிடச் செய்வதுமுண்டு, அன்றியும் இந்நோயால் தூக்கமின்மை, படுக்கையில் நிலையாக இல்லாமல் புரளல், சிறுசுரம் முதலிய குறிகளும் காணும்.

    தண்டக வாதம்: (LUMBAR SPONDYLOSIS)

    தண்டுவட எலும்புகள் தேய்வதால் வரும் வாதத்தை சித்த மருத்துவத்தில் தண்டக வாதம் என்றுகூறுவோம்.

    தண்டுவட எலும்புகள் ஒவ்வொன்றின் இடையே சதையாலான "டிஸ்க்" இருக்கும். இதன் இடையில் சைனோவியல் திரவம் என்ற எண்ணெய் போன்ற பொருள் நிரப்பப்பட்டிருக்கும். இவை ஒரு மெத்தை போல் இருந்து, தண்டுவட எலும்புகள் உராய்வில்லாமல் ஒழுங்காக செயல்படவும், உடல் அசைவிற்கும் உதவுகிறது.

    எலும்புகளுக்கு இடையே உள்ள "டிஸ்க்" நீர்த்துவம் குறைந்து, உலர்ந்து சுருங்கி இருந்தால் அது 'ஸ்பாண்டிலோசிஸ்' என்று அழைக்கப்படும். தண்டுவட எலும்புகளுக்கு இடையே உள்ள டிஸ்க் ஒருபுறமாக அல்லது இருபுறமாக வெளியேநீட்டி நிற்பது ஹெர்னியேட்டட்டிஸ்க்' (Herniated Disc) எனப்படும்.

    நந்தினி

    காரணங்கள்: அடிபட்ட காயங்கள் விபத்துக்கள் காரணமாகவும், தொழில் ரீதியாக அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும், சுமை தூக்குபவர்கள், டெய்லர், வயதானவர்களுக்கும் அதிகமாக தண்டுவட பாதிப்புகள் ஏற்படுகிறது.

    அறிகுறிகள்: முதுகு, இடுப்பு பகுதியில் வலிகள், கால்கள் மரத்துப் போதல், உட்கார்ந்து எழும்புவதில் சிரமம், நடைமாறுபடுவது போன்ற அறிகுறிகள் காணப்படும்.

    சகன வாதம்: (CERVICAL SPONDYLOSIS)

    சகன வாதம் என்பது கழுத்து வாதம் (cervical spondylosis) என்று அழைக்கப்படுகிறது. இது கழுத்து எலும்புகளில் ஏற்படும் சேதம் மற்றும் வீக்கம் காரணமாக ஏற்படுகிறது.

    அறிகுறிகள்:

    கழுத்து வலி, தோள் வலி, விரல்களில் உணர்வின்மை, கை மற்றும் விரல்களில் தட்டுதல், தலைச்சுற்றுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

    முடக்குவாதம்: (GOUT ARTHRITIS)

    ரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலம் இருக்கும் நபர்களுக்கு இந்த கீல்வாதம் என்று அழைக்கப்படும் முடக்குவாதம் ஏற்படுகிறது. இது கடுமையான மூட்டு வலி, வீக்கம், மற்றும் சிவத்தல் ஆகியவற்றின் தொடர்ச்சியான பாதிப்புகளின் மூலம் வகைப்படுத்தப்படுகிறது, இவை திடீரென மற்றும் ஒரே இரவில் கூட உருவாகலாம்.

    மூட்டுகளில் யூரிக் அமிலத் தேக்கம் காரணமாக ஊசி போன்ற படிகங்கள் உருவா கின்றன. இது திடீர் வலிக்கு வழிவகுக்கிறது.

    இது காலின் பெருவிரல் மூட்டை பொதுவாகப் பாதிக்கிறது. கீல்வாதத்துடன் தொடர்புடைய பொதுவான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:

    விறைப்புடன் சேர்ந்து மூட்டுகளில் கடுமையான மற்றும் திடீர் வலி (குறிப்பாக முழங்கால், கால்விரல்கள், முழங்கை, மற்றும் விரல்). வீக்கம் மற்றும் சிவத்தல், பாதிக்கப்பட்ட பகுதியில் சருமம் சூடாக இருத்தல் காய்ச்சல் மற்றும் குளிர்தல்.

    மருத்துவம்:

    முடக்குவாதம்: சரியான ரத்த ஓட்டத்தை மேம்படுத்த ஆமணக்கு எண்ணெய் உதவும். இது கீல்வாதத்துக்கு இயற்கையான எதிர்ப்பாக செயல்படுகிறது. வீக்கம், சிவத்தல் விறைப்பு போன்றவற்றை குறைக்க உதவும் அழற்சி பண்புகள் இதில் உள்ளது.

    விளக்கெண்ணையை லேசாக சூடு செய்து பாதிக்கப்பட்ட மூட்டுகளில் தடவி மென்மையாக மசாஜ் செய்யலாம். அல்லது சுத்தமான காட்டன் துணியை கொண்டு அந்த இடத்தில் ஒற்றி எடுத்தால் கூட போதுமானது. இது மூட்டுகளில் இருக்கும் சிவத்தல் மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்தும்.

    கொத்துமல்லி:

    கொத்துமல்லி மூலிகை பொதுவாக தினசரி பயன்படுத்தும் ஒன்று தான். இது இரைப்பை குடல் அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுடன் யூரிக் அமில அளவை குறைக்கிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் யூரிக் அமிலத்தை தேங்கவிடாமல் குறைக்கும் அதிசயங்களை செய்யும்.

    மஞ்சள்:

    மஞ்சளை ஒரு டீஸ்பூன் வெது வெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். தினமும் எடுத்து வருவது கீல்வாதத்துக்கு நல்ல பலன் கொடுக்கும்.

    இஞ்சி:

    இஞ்சி ஒரு அங்குல துண்டு எடுத்து 1 டீஸ்பூன் ஓமம், 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் பிறகு தண்ணீர் கஷாயத்தை வடிகட்டி அதில் பாதி அளவு மட்டும் எடுக்கவும். காலை வேளை பாதியும் மாலையில் பாதியும் எடுத்துவரவும்.

    வாழைப்பழம்:

    வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது மற்றும் யூரிக் அமில படிகங்களை திரவ வடிவமாக மாற்றுகிறது. இது உடலில் இருந்து சிறுநீர் வெளியேற்றுவதை எளிதாக்குகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி வலி மற்றும் வீக்கத்தை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    வெந்தயம்:

    வெந்தயத்தில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தி உள்ளது. கீல்வாதத்தின் அறிகுறிகளை குறைப்பதில் அற்புதமாக செயல்படும் பண்புகள் இதற்கு உண்டு. வழக்கமான நுகர்வில் இதை எடுப்பது உட்புற மற்றும் வெளிப்புற வீக்கத்தை குறைக்க செய்கிறது.

    அரை கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து குடிக்கவும். அதிகாலையில் இந்த தண்ணீரை குடித்து ஊறவைத்த விதைகளை மெல்லுங்கள்.

    தண்டக வாதம் மருத்துவம்:

    தண்டுவட பிரச்சினைகளுக்கு எண்ணெய் மசாஜ், வர்ம மசாஜ் மற்றும் யோகாமிகவும் சிறந்தது. வெந்நீரில் வாதமடக்கி, வாத நாராயணன், முடக்கற்றான், தழுதாழை நொச்சி, ஆமணக்கு, பழுத்த எருக்கம் இலை, முருங்கை இலை, இவைகளில் ஒன்றை எண்ணெய்யில் வதக்கி வலி உள்ள இடங்களில் ஒத்தடம் இட வேண்டும். கால்சியம், வைட்டமின் டி சத்து அதிகமுள்ள பிரண்டைத் தண்டு, முருங்கை கீரை, முடக்கற்றான், கருப்பு உளுந்து, முட்டையின் வெள்ளை கரு, பால், தயிர், பசலைக்கீரை, பாதாம், வாதுமை,வெந்தயம், இவைகளை உணவில்சேர்த்துக்கொள்ளவேண்டும்.

    பொதுவான மருத்துவம்:

    கஸ்தூரி மஞ்சள்:

    கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்.

    விளக்கெண்ணை:

    விளக்கெண்ணையை 5 மி.லி. அடுப்பில் வைத்து சூடேற்றி 30 மி.லி. ஆரஞ்சுப் பழச்சாற்றில் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.

    மூக்கிரட்டை வேர்:

    மூக்கிரட்டை வேரை கைப்பிடியளவு எடுத்து நன்கு கசக்கி அதனை, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.

    பல வேர்களின் பொடி:

    கடுகு ரோகிணி, ஆதண்டை வேர், சங்கன் வேர், புங்கன் வேர் ஆகியவற்றை இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். முடக்கற்றான் சாறு, வெங்காயச் சாறு, சிற்றாமணக்கு எண்ணெய் ஆகியவற்றுடன் பொடிகளை கலந்து எட்டு மணி நேரம் வெயிலில் காயவைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வீக்கம் குறையும்.

    கணப்பூண்டு இலை:

    கணப்பூண்டு இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.

    பூண்டு:

    பூண்டின் இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு நன்கு வதக்கி மூட்டில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.

    எருக்கு:

    எருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டி மூட்டு வீக்கங்களின் மீது வைத்து சிறிது நேரத்திற்கு கட்டி வைத்தால் வீக்கம் குறையும்.

    -வாத நோய் மருத்துவம் தொடரும்...

    செல்: 9500676684

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சோளம் வேக நேரம் எடுக்கும் என்பதால் அப்படியே சோறாக்க முடியாது.
    • மேற்கத்திய நாடுகளிலும், அமெரிக்கா நாடுகளிலும் கோதுமையுடன் சோளத்தைக் கலந்து பிரட், குக்கீஸ், பிஸ்கட் போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்.

    சோளம் மானாவரிப் பயிர். அதாவது பாசனம் இல்லாமல் மழையில் விளையும் பயிர். நிறைய தண்ணீர்த் தேவையில்லை. நன்செய் பயிர் அல்லாத புஞ்செய்ப் பயிர்கள் அனைத்தையும் சிறுதானியம் என்றே பலரும் புரிந்து கொள்கிறார்கள்.

    சோளம் புஞ்செய்ப் பயிர் என்றாலும் உண்மையில் பெருந்தானிய வகையைச் சேர்ந்ததே. அதாவது பருமனான தானியமே ஆகும். தண்ணீரை விட வெயிலை அதிகமாகக் குடித்து விளையும் பயிர்களின் தானியத்தை வேகவைக்கையில் கண்டிப்பாக நேரம் எடுக்கும். காரணம் அதன் கெட்டித் தன்மை.

    ஆனால் கெட்டித் தன்மை நமது உடலின் சதையை உறுதிப்படுத்தும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீரை அதிகமாகக் குடித்து வளரும் பயிர்களை உணவாக்கி உண்கிற பொழுது உடலுக்குள் நிறைய நீரை வெளியிடும் என்பதும் உண்மை.

    சோளம் வேக நேரம் எடுக்கும் என்பதால் அப்படியே சோறாக்க முடியாது. ஆகையால் தான் பெரும்பாலான புஞ்செய்த் தானியங்களை இடித்தோ மாவாக்கியோ தான் சமைப்பதை நம்மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். புஞ்செய் தானியங்களிலேயே அதிகப் பருமனானதும், இறுகலானதும் சோளமே ஆகும். சோளத்தைச் சோறாக்குவதென்றால் மிக எளிது. நம்ப முடிகிறதா.

    ஆம். நமக்குத் தேவையான சோளத்தை எடுத்து இரும்பு வாணலியில் போட்டு இரண்டு தேக்கரண்டி எண்ணை விட்டு அடுப்பில் குறைவான வெப்பத்தில் வைத்து மூன்று நான்கு நிமிடங்கள் மூடிபோட்டு வைத்தால் போதும். படபடவென்று வெடித்துப் பொறியாகி விடும். அந்த சோளப்பொறியை நீர் விட்டு வேகவைத்தால் ஐந்தே நிமிடங்களில் வெந்து விடும்.

    இந்த சோளப்பொறி சோற்றில் தேங்காய்ப்பூ தூவி, சர்க்கரையைச் சாறல் போலத் தெளித்துப் பரிமாறினால் குழந்தைகள் மிக விரும்பிச் சாப்பிடுவார்கள். இனிப்பில் விருப்பம் இல்லையென்றால் காய்ந்த மிளகாய் கடுகு, சீரகம் தாளிப்புப் போட்டும் உண்ணலாம்.

    நொறுவி போலவும் இருக்கும், முழு உணவாகவும் இருக்கும். பொதுவாகவே புஞ்செய்த் தானியங்களில் நார்ப்பண்பு அதிகம் இருக்கும். பசைத்தன்மை (குளுட்டோன்) குறைவாக இருக்கும். அதிலும் சோளத்தில் நார்ச்சத்து மிகவும் அதிகம்.

    இங்கே குறிப்பிட்டுள்ள சோளப்பொறி சோற்றிற்கு சோளத்தை இடிக்கவோ, மாவாக்கவோ இல்லை. எனவே முழுச்சோறாக இருப்பதால் நார்ச்சத்தும் முழுமையாக இருக்கும்.

     

    இந்த சோளப்பொறிச் சோற்றை உண்கிற பொழுது அடுத்தவேளை மல வெளியேற்றம் மிக இலகுவாக இருக்கும். மலம் வெளியேறி விட்டாலே வயிற்றில் கெட்ட வாயுத்தேக்கமோ, செரிமானச்சிக்கலோ ஏற்படாது.

    தற்கால உணவுக்கலாச்சாரத்தில் இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்ற மாவுப்பண்ட உணவுகளையே உண்பதால் இன்று மலச்சிக்கல் பிரச்சினை கிட்டத்தட்ட பாதிக்கும் மேலானோருக்கு இருக்கிறது.

    நம்முடைய உணவுக்கலாச்சாரம் மட்டுமல்ல நம்முடைய உழைப்பு முறையும் உடலை வளைத்து நெளித்து தேவையற்றதாகவும் கைகளையும், கால்களையும் மட்டுமே அசைக்கும் படியாகவும் இருப்பதால் வயிற்றின், சிறு – பெருங்குடல்களின் பாகங்களில் உணவு எளிதில் கடந்து செல்ல வாய்ப்பு இல்லாதிருக்கிறது.

    எனவே தான்மலச்சிக்கல் இவ்வளவு பரவலாக இருக்கிறது. இந்நிலை உழைப்பைச் செலுத்த வேண்டிய வயதில் உள்ளோருக்கு மட்டுமல்ல இளம் வயதினருக்கும் அதுவே.

    பிறந்த குழந்தைக்கு நல்ல ஆரோக்கியத்தில் உள்ள தாய்கூட போதிய அளவிற்குப் பால் கொடுக்க முடியவில்லை. தாய்ப்பாலில் குழந்தையின் ஆதாரக் கட்டமைப்பை உருவாக்க வல்ல மகத்தான சத்துகள் நிறைந்துள்ளன.

    அதுபோக பெருங்குடலில் நிலை பெற்றிருக்க வேண்டிய நுண்ணுயிர்ப் பெருக்கத்திற்கும் தாய்ப்பாலே ஆதாரமாக இருக்க முடியும். உணவுப் பாதையில் செல்லும் உணவு வழுக்கிக் கொண்டு செல்லும் விதமான கொழுப்புப் படலத்தை உருவாக்க ஆதாரமாக இருப்பதும் தாய்ப்பாலே. ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் குழந்தை ஈன்ற தாய் போதிய அளவு பால் தரமுடியவில்லை. இன்றைய உணவு முறையினால் பல இளந்தாய்மார்களின் மார்பில் சுரக்கும் பால் அவள் பெற்றெடுத்த குழந்தையே குடிக்கும் தரமற்றதாக இருக்கிறது.

    தாயின் பால் குடிக்கும் தரத்தில் இருந்தாலும் வேலைக்குப் போகும் தாயினால் ஆறுமாதங்களுக்கு மேல் விடுப்பு எடுக்க முடியாது என்பதால் குழந்தைக்குப் பால் மறுக்கப்படுகிறது.

    சிலர் மாரினை அழுத்திப் பாலைப் பிழிந்து பாத்திரத்தில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து அதனை எடுத்து அவ்வப்போது கொடுக்கிறார்கள். குளிரூட்டப்பட்ட தாய்ப்பால் உரிய சக்தியைக் கொடுக்காதது மட்டுமல்ல, பாலில் சேரும் குளிர்ச்சி குழந்தையின் மார்பில் குளிர்ச்சியை ஏற்றும். எனவே பச்சிளங் குழந்தைக்கு எளிதில் சளிப் பிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

    தாய்ப்பால் கொடுக்க வாய்ப்பில்லாத பச்சிளம் குழந்தைகளுக்கு அளிக்கும் டப்பா பவுடர்பால் குழந்தைகளுக்கு வயிற்று உபிசத்தையும் மலச்சிக்கலையும் உருவாக்குகிறது.

     அதுபோலவே பருவ வயதில் உள்ள சிறாரும், சிறுமியரும் தின்பண்டங்களை விரும்பி உண்பர். இத்தகைய தின்பண்டங்கள் பெரும்பாலும் பிசுபிசுப்பான மாவுகளில் தயாரிக்கப்படுபவைகளாகவே உள்ளன. குறிப்பாக பேக்கரிஅயிட்டங்கள் நன்றாக சலிக்கப்பட்ட மென்மையான மாவுகளில் தயாரிக்கப்படுவதால் பசைத்தன்மையே மிகுதியாக உள்ளன. எனவே அனைத்து வயதினரும் மலச்சிக்கலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

    இந்தச்சூழலில் தான் நார்த்தன்மை மிகுந்த புஞ்செய்த் தானியங்கள் நமது உணவில் முதன்மையிடம் பிடிப்பது அவசியம் ஆகிறது. உடலசைவுகளுக்கும், மூட்டுகள் இணைப்பு அசைவுகளுக்கும், சதை வளர்ச்சிக்கும் பசைத்தன்மை உணவுகள் தேவைதான். ஆனால் இன்றைய உணவுக்கலாச்சாரம் பசைத்தன்மை மிக்கதாகவே இருப்பதால் நார்த் தன்மை உள்ள உணவுகளில் போதிய கவனம் செலுத்த வேண்டியதும் தேவையாக இருக்கிறது.

    உணவில் நார்த்தன்மையின் தேவையை நம்முடைய புஞ்செய்த் தானியங்களே ஈடுசெய்கின்றன. அந்த வகையில் இனிப்புச் சுவையும், பளபளப்பான நிறமும் கொண்டுள்ள சோளம் குழந்தைகளை ஈர்க்கும் தானியமாக இருக்கிறது. சோளத்தை ஊற வைத்து அரைத்துப் பாலெடுத்துக் காய்ச்சி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

    சோளம் மட்டுமல்ல ஊறவைத்து அரைத்தால் பால்விடும், கேழ்வரகு, கம்பு, சோளம், கோதுமை போன்றவற்றை சம அளவில் கலந்து ஊறவைத்து அரைத்துக் கெட்டிப் பாலாக எடுத்து வடிகட்டி தாம்பாளம் போன்ற அகன்ற பாத்திரத்தில் ஊற்றி வெயிலில் ஆற வைத்தால் எளிதில் உலர்ந்து விடும்.

    இதனைக் காற்றுப்புகா டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டு ஓரிரண்டு தேக்கரண்டி நீரில் கலக்கிக் கொதிக்க விட்டு குழந்தைகள் முதல் செரிமானத்திறன் குறைந்த வயதானவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கலாம். எளிதில் செரிமானம் ஆகும், நல்ல சத்துக்களும் கொடுக்கும். நார்ச்சத்து குறைக்கப்பட்டிருந்தாலும் பசைத் தன்மை குறைவாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது.

    சோளம் வெள்ளை நிறத்தில் மட்டுமில்லாமல் வெளிர் சிவப்பு, அடர் சிவப்பு, கறுப்பு என பல நிறங்களிலும் உலகம் முழுதும் விளைவதால் பாரம்பரிய உணவுகளுக்கு மட்டுமல்லாமல் நவீன உணவுகள் தயாரிக்கவும் ஏற்றதாக இருக்கிறது.

     

    போப்பு, 96293 45938

    மேற்கத்திய நாடுகளிலும், அமெரிக்கா நாடுகளிலும் கோதுமையுடன் சோளத்தைக் கலந்து பிரட், குக்கீஸ், பிஸ்கட் போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்.

    சோளம் இயற்கையாகவே பல்வேறு நிறங்களில் இருப்பதால் அதுவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் நிறமி சேர்க்காமல் மேற்படி பண்டங்கள் செய்ய ஏதுவாக இருக்கிறது. சோளம் சத்துக்கள் மிக்கதாக இருப்பதால் மேற்படிப் பண்டங்கள் விரும்பி உண்ணத்தக்கதாக இருக்கின்றன.

    தானியங்களை நேரடியாகச் சமைத்து உண்பதே சத்துக்களை முழுமையாகப் பெற ஏற்றது. என்றாலும், தின்பண்டங்களை வெறும் சக்கையாக உடலில் பயனற்றக் கொழுப்புகளைச் சேர்ப்பதை விட ஓரளவு சத்துள்ள பண்டங்களால் உடலுக்கு எதிர்விளைவுகள் குறைவுதானே.

    உடலுக்குச் சத்து, உடலில் தேங்கியுள்ள மிகுதியான நீரை அகற்றுவதில் முதன்மைப் பங்கு, மலச்சிக்கல் நீக்கம் எனப் பலவகைக ளிலும் துணை செய்கின்ற தானியங்களை நம்முடைய உணவில் வாரத்தில் இரண்டு மூன்று நாட்களேனும் சேர்த்துக் கொள்வது நம்முடைய உடலுக்கு நல்லது.

    போக தானிய விளைச்சலை ஊக்குவிப்பதன் மூலம் சிறுகுறு மானாவரி விவசாயிகளின் வாழ்வாதாரம் ஓரளவிற்கேனும் பாதுகாக்கப்படும்.

    தொடர்ந்து சுவைப்போம் நலந்தரும் உணவு வகைகளை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கர்ப்பப்பை புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு முதல் முக்கியமான பரிசோதனையே பெல்விக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தான்.
    • புற்றுநோய் பாதிப்பு இருக்கிற பெண்களுக்கு சில நேரங்களில் அடி வயிற்றில் வலி இருக்கலாம்.

    பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய் என்னென்ன அறிகுறிகளை உருவாக்கும்? இதனை வராமல் தடுப்பது எப்படி? ஒருவேளை வந்தால் இதனை ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பது எப்படி? கர்ப்பப்பை புற்றுநோயை முழுமையாக குணப்படுத்துவது எப்படி என்பது பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

    கர்ப்பப்பை புற்றுநோய் பாதித்தால் ஏற்படும் முக்கியமான அறிகுறிகள்:

    பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டால் முக்கியமாக மாதவிடாய் பிரச்சினைகள் வரும். அதாவது மாதவிடாய் சுழற்சி என்பது சீரான முறையில் இருக்காது. மாதவிடாய் வருவதில் பிரச்சினைகள் உருவாகும். அவ்வப்போது ரத்தப்போக்கு இருக்கும். வெள்ளைப்படுதல் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு உதிரம் கலந்த வெள்ளைப்படுதல் இருக்கலாம்.

    பல நேரங்களில் அதிகமாக ரத்தப்போக்கு ஏற்படலாம். இன்னும் சிலருக்கு மாதவிடாய் வரவே வராது. அப்படியே வந்தாலும் ரத்தம் உறைந்து காணப்படும். இந்த பாதிப்பு கொண்ட பெண்கள் அதிகமாக வேலையோ அல்லது உடற்பயிற்சியோ செய்தால் ரத்தப்போக்கு ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். இவைதான் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு முக்கியமான அறிகுறிகளாக கருதப்படுகிறது.

    இந்த பெண்களுக்கு உடல் பருமனாக இருக்கும்போது, அதன் கூடவே மார்பக வலி இருக்கலாம். வெள்ளைப்படுதல் இருக்கலாம். இடுப்பு வலி இருக்கலாம். இதுதவிர அடிவயிறு வலிகளும் ஏற்படலாம்.

    கர்ப்பப்பை புற்றுநோயை கண்டறிவதற்கான பரிசோதனைகள்:

    கர்ப்பப்பை புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு முதல் முக்கியமான பரிசோதனையே பெல்விக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தான். இந்த ஸ்கேன் பரிசோதனை மூலம் பார்க்கும்போது புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடிய பெண்களுக்கு கர்ப்பப்பையில் வீக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக கர்ப்பப்பையின் லைனிங் லேயர் தடிமன் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த தடிமன் ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட அளவு இருக்கும்.

    மாதவிலக்கு வந்தவுடன் அது 5 மில்லி மீட்டர் அளவு இருக்கும். இதுவே கருமுட்டைகள் வளர்ந்து வெளியாகும் நேரத்தில் 8 மி.மீ. முதல் 10 மி.மீ. வரை இருக்கும். ஆனால் மாதவிடாய் வருவதற்கு முன்பு அது அளவில் மிகவும் குறைந்து காணப்படும். ஆனால் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு, இந்த லைனிங் லேயரின் தடிமன் மிக அதிகமாக இருக்கும். அதாவது 17 மி.மீ. முதல் 35 மி.மீ வரை இருக்கலாம். இந்த லைனிங் லேயர் தடிமனாக இருக்கிற வர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும் நிலையை குறிக்கிறது.

    பெல்விக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலம் கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால், அதில் இருந்து ஒரு திசுவை பயாப்சி பரிசோதனைக்காக எடுக்கலாம். பயாப்சி பரிசோதனை செய்து பார்த்தாலே அவர்களுக்கு புற்றுநோய் எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.

    உடல் பருமனாக இருப்பவர்கள், மாதவிடாய் வராத பெண்கள், மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் இல்லாத பெண்கள், குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை லைனிங் லேயர் தடிமனாக இருக்க வாய்ப்பு உண்டு. மேலும் சிறுவயதில் பருவம் அடைவது, நீண்ட காலமாக மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் இல்லாத பெண்கள், அதிகமாக ரத்தப்போக்கு ஏற்படுகின்ற பெண்கள் ஆகிய அனைவருக்கும் பயாப்சி எடுத்து பார்ப்பது ஒரு முக்கியமான அடிப்படையான பரிசோதனை ஆகும்.

    இந்த பரிசோதனையின்போது புற்றுநோய் இருப்பதாக சந்தேகம் எழுந்தால் கர்ப்பப்பையில் ஹிஸ்ட்ராஸ்கோபி முறை மூலமாக ஒரு கேமரா செலுத்தி, அதனை சரியாக சுத்தம் செய்து, அதில் உள்ள ஒரு திசுவை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினால், அந்த திசுவில் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

     

    புற்றுநோய் பாதிப்பு இருக்கிற பெண்களுக்கு சில நேரங்களில் அடி வயிற்றில் வலி இருக்கலாம். உடல் பருமன் அதிகமாக இருக்கலாம். இவை அனைத்தும் இருப்பவர்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்தால், முறையாக பரிசோதனை செய்தால் கண்டிப்பாக அதனை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முடியும். அந்த விதத்தில் இந்த திசுவை பரிசோதனை செய்து பார்த்தால் என்ன புற்றுநோய் என்பதை தெரிந்து கொள்ள முடியும். புற்றுநோய் பாதிப்புக்கான தீவிரத்தன்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும் உறுதி செய்ய முடியும்.

    கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள்:

    புற்றுநோய் வராமல் தடுக்க முடியுமா என்று பலரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக எதற்கும் வருமுன் காப்பது நல்லது தானே? உடல் பருமன் அதிகமாக இருக்கும் இளம்பெண்கள் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, முறையாக உடல் ஆரோக்கியத்தை சீராக பார்ப்பது ஆகிய அனைத்தையும் கண்டிப்பாக பொறுப்போடு எடுத்து செய்ய வேண்டும்.

    உடல் எடை அவர்களின் உயரத்துக்கு ஏற்ப இருந்தால் இந்த மாதிரியான பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு கொழுப்பு அதிகமாகி, அதனுடைய பாதிப்பும் கர்ப்பப்பையை பழுதாக்குகிறது. இது தவிர ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருக்கும் போதும் பிரச்சினைகள் வரும்.

    சிறு வயதிலேயே பருவம் அடைந்த பெண்கள், உடல் பருமனாக இருந்து, மாத விடாய் சுழற்சி சீரான முறையில் இல்லாவிட்டால் கண்டிப்பாக எண்டோமெட்ரியல் தடிமன் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண் குழந்தைகளுக்கோ அல்லது பெண்களுக்கோ, விரைவில் பரிசோதனை செய்து, இதற்கான சீரான மருந்துகளை கொடுக்கும் போது, உடலுக்கு அபாயம் ஏற்படும் நிலையை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முடியும்.

    முறையான பெல்விக் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, எண்டோமெட்ரியல் பயாப்சி பரிசோதனை, தேவைப்பட்டால் ஹிஸ்ட்ரோஸ்கோபி கிரைடல் பயாப்சி பரிசோதனை ஆகியவற்றின் மூலமாக எண்டோ மெட்ரியல் தடிமன், கர்ப்பப்பை புற்றுநோயின் தன்மை என்ன நிலையில் இருக்கிறது என்பது தெரியும்.

    புற்றுநோயின் ஆரம்ப நிலையில் இதனை கண்டுபிடித்தால் அதை ஹைப்பர்பிளேசியா என்று சொல்வோம். இந்த ஹைப்பர்பிளேசியா நிலை என்பது புற்றுநோய்க்கு முந்தைய நிலையாகும். இந்த நிலையில் கர்ப்பப்பை இருந்தால் இதற்கு அடிப்படையான காரணம் என்ன என்று பார்க்க வேண்டும். உடல் பருமனாக இருந்தால் எடையை குறையுங்கள். உணவை கட்டுப்படுத்துங்கள், மட்டன் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சியை அதிகரியுங்கள். நிறைய காய்கறிகள், கீரைகள், பழங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

    மேலும் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்கள், இனப்பெருக்க ஹார்மோன் சம நிலையின்மை கொண்ட பெண்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ள உடல் பருமனாக இருக்கின்ற பெண்கள் ஆகிய அனைவரும் முறையாக பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் பயாப்சி எடுத்து பரிசோதித்து பிரச்சினை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    ரசாயனம் இல்லாத நாப்கினை பயன்படுத்த வேண்டும்:

    புற்றுநோய்க்கு முந்தைய நிலையில் இருக்கும்போது எளிமையான ஹார்மோன்கள் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் கொடுத்து ஈஸ்ட்ரோஜனின் தாக்கத்தை குறைத்து, இந்த நோயின் மாற்றங்கள் தீவிரமாவதற்கு முன்பே தடுத்து சரி செய்ய முடியும். ஒரு வேளை புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்து விட்டால் அதற்கான சிகிச்சை முறைகளை விரைவில் செய்ய வேண்டும். ஏனென்றால் புற்றுநோய்க்கான சிகிச்சையை எப்போதுமே வேகமாக செய்ய வேண்டும். அதன் நிலை என்ன என்பதை பொருத்து அறுவை சிகிச்சையா, ரேடியோதெரபியா, ஹீமோதெரபியா என்பதை நிர்ணயிக்கலாம்.

    ஆனால் வருமுன் காப்பது என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு முக்கியமானது உங்களுடைய வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். முறையான பரிசோதனை, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, தேவையில்லாத ஹார்மோன்களை எடுப்பதை குறைப்பது, ரசாயனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது ஆகியவற்றை வேண்டும். மாதவிடாயின் போது ரசாயனம் இல்லாத நாப்கினை பயன்படுத்த வேண்டும்.

    உங்கள் குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால், குறிப்பாக உங்கள் தாயாருக்கு மார்பக புற்றுநோயோ அல்லது கர்ப்பப்பை புற்றுநோயோ இருந்தால், உங்களின் 25 வயதிலேயே ஒரு அடிப்படையான மெமோகிராம் எடுத்து கர்ப்பப்பை சீராக இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது மிக மிக முக்கியம். தேவைப்பட்டால் பயாப்சி பரிசோதனை செய்து ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஏனென்றால் கர்ப்பப்பை புற்றுநோய் என்பது தடுக்கக்கூடியதுதான். பரிசோதனையின் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் இதனை முழுமையாக சரி செய்ய முடியும். அதன் மூலம் கர்ப்பப்பை புற்றுநோயில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சனியின் ஆதிக்கம் பெற்ற இவர்கள் அடிப்படை கல்வி சுமாராக படிப்பார்கள்.
    • உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள்.

    உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசியில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். பத்ரா என்ற நட்சத்திர கூட்டத்தின் பிற்பகுதி உத்திரட்டாதி. இதன் சமஸ்கிருத பெயர் உத்திர பத்ரா பாதம் என்பதாகும். இதன் வடிவம் வானில் பார்ப்பதற்கு முரசு போல் காட்சியளிக்கும். எனவே இதன் தமிழ் பெயர் முரசு.

    உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொது பலன்கள்

    உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். எந்த செயலையும் அவசரமாகவோ, பரபரப்பாகவோ செய்ய மாட்டார்கள். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பார்கள். வாழ்நாள் முழுவதும் பிறருக்காகவே வாழ்வார்கள். உறவுகளால் கெட்ட பெயர் அவமானம் உண்டு. அதே நேரத்தில் எவ்வளவு தாழ்ந்த நிலைக்கு போனாலும் உழைத்து முன்னேறிவிடுவார்கள். இவர்களுக்கு வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை வரப்பிரசாதமாக அமையும். இவர்கள் சுகத்தையும், துக்கத்தையும் சரிசமமாக பாவிப்பார்கள். பார்வைக்குக் கடின மனமும், பிடிவாதமும் உடையவராகத் தோன்றினாலும், சகிப்புத்தன்மை நிறைந்தவர்கள்.

    எதையும் நன்கு ஆராயும் மனதை உடையவர்கள். எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் தனது முழு ஆதிக்கத்தை செலுத்துவார்கள். சாமர்த்திய சாலிகளான இவர்கள் எல்லா காரியங்களிலும் வெற்றி காண்பார்கள். இவர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றி கொள்வார்கள். தெய்வ நம்பிக்கை இவர்களிடம் அதிகம் உண்டு. மற்றவர்களை துல்லியமாக எடை போடுவதில் திறமை சாலிகள்.

    எடுத்துச் கொண்ட காரியங்களை எவ்வளவு எதிர்ப்புகளும் தடைகளும் வந்தாலும், அவைகளைப பற்றிக் கவலைப்படாமல் செய்து முடிப்பார்கள்.

    இவர்கள் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும், தங்கள் உழைப்பினால் பெரும் செல்வத்தைச் சேர்க்கிறார்கள். சிலர் அரசு உத்தியோகத்தில் இருப்பார்கள். உயர் அதிகாரிகளை தன் வசப்படுத்தி பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற அனைத்து தேவைகளை நிறைவு செய்யும் தந்திரசாலிகள். ஒரு இடத்தில் லட்சம் பேர் வேலை பார்த்தால் கூட இவர்களின் தனித்திறமை மிளிரும். நல்ல வளர்ச்சியை அடைவார்கள். தங்களைப் பற்றி பலர் வியப்போடு பேசக்கூடிய சூழ்நிலையை அமைத்து மிக சுலபமாக பிரபலமாகி விடுவார்கள்.

    கல்வி

    சனியின் ஆதிக்கம் பெற்ற இவர்கள் அடிப்படை கல்வி சுமாராக படிப்பார்கள். குரு தசா ஆரம்பித்த பிறகு படிப்பில் கவனம் கூடும். இவர்கள் வக்கீல், நீதிபதி, புரோக்கர், புரோகிதர், குரு குல கல்வி, மத போதகர், வங்கி பணி, ஆச்சாரியர்கள் போன்ற கல்வி கற்கலாம். உயிரியல் கல்வி குழந்தைகள் தொடர்பான கல்வி மைக்ரோபயாலஜி, பொருளாதார நிபுணர், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட படிப்புகள், கெமிக்கல் தொடர்பான கல்வி பயோகெமிஸ்ட்ரி எலக்ட்ரிக்கல் என்ஜினியர், ஆர்க்யாலஜி, வரலாறு, புவியியல் சார்ந்த கல்விகள் அனைத்தும் மெக்கானிக் சார்ந்த கல்விகள், பிட்டர் ஐடிஐ, மூலிகை செடி ஆய்வு, பாரம்பரியத்தைப் பற்றி படிப்பது பாதுகாப்பு, எரிபொருள் சார்ந்த படிப்புகள் சிறப்பாக இருக்கும்.

    தொழில்

    அடி தட்டில் இருந்து உழைத்து உயர்ந்தவர்களாக இருப்பார்கள். உழைப்பின் அவசியத்தை உணர்ந்தவர்கள். தேவைப்படும் இடத்தில் உழைப்பையும், புத்தி சாதுர்யத்தையும் இணைந்து பயன்படுத்துபவர்கள். எப்படியும் உயர்ந்த பதவி, தொழிலை அடைய வேண்டும் என்று கடுமையாக உழைப்பார்கள். கற்பனைச் சக்தியும், கூர்மையான அறிவும் உண்டு. ஆன்மிகம், மதப்பிரசங்கம், அரசியல், ஆடிட்டிங், விவசாயம், கட்டிடங்கள் கட்டுதல், ஆராய்ச்சி தொழில், பொறியியல் துறை, சுரங்கத் தொழில், விவசாயம், மின்னியல் துறை, மாந்திரீகம், ஜோதிடம், பூமித்தொழில், தாதுப் பொருட்கள் சம்பந்தமான தொழில், உலோகங்கள் மற்றும் கருவிகள் சம்பந்தமான தொழில் பலன் தரும். மர வியாபாரம், ஆன்மீகத்துறை, வங்கித் தொழில் சட்டம், மற்றும் நீதித்துறை, அறநிலையத்துறை, நிதித்துறை, கல்வித்துறை, ஆயுத சாலை, போர்பயிற்சி சமூக சேவை தர்ம ஸ்தாபனங்கள் நடத்தலாம்.

    ஐ.ஆனந்தி

    தனம்

    குருவின் வீட்டில் உள்ள சனியின் நட்சத்திரம் உத்திரட்டாதி என்பதால் தாராள தன வரவு இருக்கும் சேமிப்பு என்பது இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் சம்பாதிப்பார்கள். உழைப்பினால் பெரும் செல்வத்தைச் சம்பாதிக்கும் யோகம் நிரம்பியவர்கள். பணம் சேர்ப்பதில் கைதேர்ந்தவர்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் தன் முயற்சியால் வெகு விரைவில் பெருந் திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்துவார்கள். எப்போதும் உயர்வான சிந்தனைகள் நிறைந்தவர்கள். இவர்கள் முதலீடு போட்டுச் செய்யும் சுயதொழில் செய்யாத வரை எந்த பாதிப்பும் இருக்காது. முதலீடு அதிகம் உள்ள தொழில் நினைத்துப் பார்க்க முடியாத அசுர வளர்ச்சியும் எதிர்பாராத நேரத்தில் மீள முடியாத வீழ்ச்சியும் உண்டாக்கும்

    குடும்ப வாழ்க்கை

    யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிட மாட்டார்கள். தொழிலில் கூட்டாளிகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு நிரந்தர நட்பும் கிடையாது, விரோதியும் கிடையாது. இவர்களுக்கு எப்பொழுது எப்படி கோபம் வரும் என்று யாராலும் கூற முடியாது. பிடிவாத குணம் இவர்களிடம் அதிகம் உண்டு. குடும்பம் உறவுகளின் அன்பு உண்டு.

    குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். 27 வயதிற்கு மேல் திருமணம் நடக்கும். சிலருக்கு திருமண ஆசையிலிருந்து விடுபட்ட பின் திருமணம் நடக்கும். பலர் திருமணம் நடந்தும் இல்லற சன்னியாசியாகவே வாழ்கிறார்கள் வெகு விரைவில் குடும்ப பந்தத்திலிருந்து விடுபடுவார்கள்.

    தசா பலன்கள்

    சனி தசா: இது ஜென்ம தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 19 ஆண்டுகள். பிறந்த கால நட்சத்திர பரிமாணத்திற்கு ஏற்ப பிறப்பு கால தசா மாறுபடும். தந்தையின் ஆதரவு குறையும். சிலர் குடும்பத்தை பிரிந்து வாழ்வார்கள். செயல்திறன் குறைவுபடும். ஞாபகமறதி இருக்கும். திறமையை வெளிக்காட்ட போதிய சந்தர்ப்பம் அமையாது. கண் பாதிப்பு இருக்கும். ஆஸ்த்துமா, மூச்சு விடுதல் பிரச்சனை அடிக்கடி உண்டு.

    புதன் தசா : இது இரண்டாவதாக வரக் கூடிய தன தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 17 ஆண்டுகள். சிலர் பள்ளி கல்லூரி படிப்பை முடிக்கும் காலம். இந்த தசாவில் பலருக்கு திருமணம், குழந்தை, தொழில் வேலை என முக்கிய நிகழ்வுகள் நடக்கும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு வாழ்வில் எவ்வளவு சோதனைகள் நேர்ந்தாலும் வேதனை அடையமாட்டார்கள். சுய ஜாதகத்தில் சனியும் புதனும் பலம் பெற்றால் சளைக்காமல் உழைக்கும் உழைப்பாளிகள். நுண்ணிய அறிவு படைத்த சாமர்த்திய சாலிகளாக இருப்பார்கள்.

    கேது தசா: இது மூன்றாவதாக வரக்கூடிய விபத்து தாரையும் தசாவாகும் இதன் தசா ஆண்டுகள் 7 வருடம். இது சற்று சோதனையான காலமாக இருக்கும். மன விரக்தி, தாழ்வு மனப்பான்மை அதிகமாகும். என்ன வாழ்க்கை என்று அடிக்கடி புலம்புவார்கள். முன்னேற்றத்திற்கு கடுமையாக போராட நேரும். வரவுக்கு மீறி செலவு செய்வார். கடன் பெற்றும் வீண் செலவு செய்ய தயங்க மாட்டார்.

    சுக்ர தசா: இது நான்காவதாக வரக்கூடிய சேஷம தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 20 ஆண்டுகள். இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டு பெறக்கூடிய தசையாகும். வாழ்வின் கடைசி வரை வாழ தேவையான அனைத்து சொத்து சுகங்களையும் வழங்கக்கூடிய காலமாகும். சிலர் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து பேரன் பேத்திகள் என வாழ்க்கையில் பேரின்பத்துடன் வாழ்வார்கள். கடுமையாக உழைத்து வாழ்வில் உன்னத நிலையை அடைவார்கள். மத்திம வயதில் இருந்தே எல்லா சுகங்களையும் அனுபவிப்பார்கள்.

    சூரிய தசா : இது ஐந்தாவதாக வரக்கூடிய பிரத்யக் தாரையும் தசாவாகும். சமூக சேவையில் மிகவும் நாட்டம் இருக்கும். இதன் தசா வருடம் 6 ஆண்டுகள். சிலர் தன் ஆண் வாரிசுகளிடம் விலகியே நிற்கிறார்கள். நெருங்கிய ரத்த உறவுகளின் கர்மாவில் கலந்து கொள்ள முடிவதில்லை. அப்படி கலந்து கொண்டாலும் மன வருத்தமே மிஞ்சும்.

    சந்திர தசா : இது ஆறாவதாக வரக்கூடிய சாதக தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 10 ஆண்டுகள். ஆன்மீக வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் நிலையான இடத்தைப் பிடித்து விடுவார்கள். வயோதிக காலத்திலும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

    உத்திரட்டாதி நட்சத்திரத்தின் சிறப்பு அம்சங்கள்

    குருவின் வீட்டில் உள்ள சனியின் நட்சத்திரம் உத்திரட்டாதி என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தர்ம கர்மாதிபதி யோகம் உண்டு. உத்திரட்டாதியில் நீச்சம் அடையும் கிரகம் புதன். இதன் வசிப்பிடம் வீடு. இதன் அதிதேவதை காமதேனு.

    இந்த நட்சத்திர, நாளில் கிரக ஆரம்பம் செய்ய, கிரகப்பிரவேசம் செய்ய, வீடு வாங்க உகந்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் கால புருஷ லக்னமான மேசத்திற்கு பன்னிரண்டாம் வீட்டில் அமைந்துள்ளது.

    பன்னிரண்டாம் வீடு அயன சயன ஸ்தானம் என்பதால் கட்டில், படுக்கை, மெத்தை, தலையணை போன்ற பொருட்கள் வாங்க உகந்த நட்சத்திரம் ஆகும். குருவினுடைய வீட்டில் அமைந்த சனியின் நட்சத்திரத்தை என்பதால் இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை காமதேனு என்பதாலும் இந்த நட்சத்திர நாளில் விரதம் இருந்து காமதேனுவே வழிபட உத்தியோகம் இல்லாதவர்களுக்கு நல்ல உத்தியோகம் அமையும். இதில் நீச்சமடையும் கிரகம் புதன் என்பதால் கல்வி சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. தஸ்தாவேஜ். பத்திரங்கள், ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை, தவிர்க்க வேண்டும். இளம் பெண்களை வசியம் செய்ய உத்திரட்டாதி உகந்த நட்சத்திரம்.

    நட்சத்திர பட்சி: கோட்டான்

    யோகம்: ஐந்திரம்

    நவரத்தினம்: நீலம்

    உடல் உறுப்பு: மூட்டு

    திசை : வடக்கு

    பஞ்சபூதம் : ஆகாயம்

    அதிதேவதை: காமதேனு

    நட்சத்திர மிருகம்: பால் பசு

    நட்சத்திர வடிவம்: வீடு

    சம்பத்து தாரை : ரேவதி, ஆயில்யம்,

    கேட்டை சேம தாரை : பரணி, பூரம், பூராடம்

    சாதக தாரை: ரோகிணி, அஸ்தம், திருவோணம்

    பரம மிக்ர தாரை: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

    பொதுவான பரிகாரங்கள்

    இந்த நட்சத்திர நாளில் விரதம் இருந்து மதுரையில் உள்ள கள்ளழகரை வழிபட நலிந்த வியாபாரம் விருத்தி அடையும் தடைபட்ட கல்வியை தொடரும் வாய்ப்புகள் உருவாகும்.

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் காமதேனுவை வழிபட வாழ்க்கை வளமாகும்.

    செல்: 98652 20406

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மீராக்கண்ணுவை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    • குலசேகரப்பட்டினம் பகுதியை ஆட்சி செய்து வந்த குறுநில மன்னன் கனவில் முருகப்பெருமான் தோன்றினார்.

    திருச்செந்தூர் முருகப்பெருமான் இந்துக்களுக்கு மாத்திரம் சொந்தமானவன் அல்லன். அவன் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவன். அவனுக்குச் சாதி, மத பேதமில்லை. இதற்குச் சான்றாக எம்பெருமான் இசுலாமியர் ஒருவருக்கு அருளிய நிகழ்ச்சி விளங்குகிறது.

    திருச்செந்தூர் அருகே உடன்குடி பக்கமுள்ள காலன் குடியிருப்பு பகுதியில் மீராக்கண்ணு புலவர் என்னும் இஸ்லாமியப் பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். பனை ஓலையில் பாய் தயாரித்து அதை வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்று அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தார்.

    அதில் போதிய வருமானம் கிடைக்காததால் பலரிடம் கடன் வாங்கத் தொடங்கினார். ஆனால் வாங்கிய கடனை திருப்பித்தர இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் கடன் தொல்லை அதிகமானது. கடன் கொடுத்தவர்கள், அதிக வட்டியுடன் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டனர்.

    ஆனால், மீராக்கண்ணு புலவர் வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பக் கொடுக்க இயலவில்லை. எனவே கடன் கொடுத்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கில் மீராக்கண்ணுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டது. மீராக்கண்ணுவை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    மீராக்கண்ணு புலவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், திருச்செந்தூர் முருகன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். வறுமையில் வாடிக் கொண்டிருந்த அவர் சிறைத்தண்டனையில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாத அவர் திருச்செந்தூர் முருகப்பெருமானை சரண் அடைந்தார். முருகன் மீது பாடல் ஒன்றை இயற்றி பாடினார்.


    முருகனே! முதல்வா! முக்கண் மூர்த்தி

    தன் மைந்தா வேலா

    உருகிய உள்ளமோடு ஒருதரம் முருகா

    என்றால்

    முருகிநின் றுரைத்தும் போகூழ்

    முரணழிந் தாகூ ழாகி

    மருவிடும் என்ற வாய்மை மறைந்ததோ

    என்பால் ஐயா!

    இந்தப் பாடலைக் கேட்டதும் முருகன் உருகிப் போனார். தனது அடியார் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அருள் பாலிக்கும் முருகப்பெருமான், மீராக்கண்ணு புலவருக்கும் உதவ முன்வந்தார்.

    அன்று இரவு காலன்குடியிருப்பு கிராமத்துக்கு உட்பட்டிருந்த குலசேகரப்பட்டினம் பகுதியை ஆட்சி செய்து வந்த குறுநில மன்னன் கனவில் முருகப்பெருமான் தோன்றினார். 'கடன் தொல்லையில் சிக்கி தவிக்கும் எனது பக்தரான மீராக்கண்ணு புலவருக்கு தேவையான பணத்தை எனது கோவில் உண்டியலில் இருந்து எடுத்துச் செலுத்திவிடு. அவரை சிறைத்தண்டனையில் இருந்து காத்திடு' என்று உத்தரவிட்டு மறைந்தார்.

    கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்த குறுநில மன்னன், நீதிமன்றத்தின் கைது உத்தரவை நிறுத்திவைத்தான். மீராக்கண்ணு புலவர், சம்பந்தப்பட்டவர்களுக்கு தரவேண்டிய கடன் தொகையையும் கேட்டறிந்தான்.

    அதே சமயத்தில் முருகப்பெருமான் புலவர் மீராக்fகண்ணு கனவில் தோன்றி, 'நாளை உமது கடனை வட்டியும் முதலுமாக யாமே அடைப்போம்' 'கோவிலில் சுவாமி தரிசனம் செய்து முடித்து வந்ததும் தங்கள் பணம் உங்கள் கைக்கு வந்துசேரும்' என்று கூறி மறைந்தார்.

    பொழுது புலர்ந்ததும் புலவர் மீராக்கண்ணு, திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். அவர்களுக்கு முன்னதாகவே அங்கு வந்து மன்னர் காத்திருந்தார்.

    தொடர்ந்து, உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. உண்டியலில் எண்ணப்பட்ட பணமும், மீராக்கண்ணு புலவரின் கடன் தொகையும் சரிசமமாக இருந்ததைக் கண்ட மன்னன் மேலும் வியந்தான். முருகப்பெருமானின் ஆணைப்படி, அந்த தொகையைக் கொண்டு மீராக்கண்ணுபுலவரின் கடன் முழுவதையும் கொடுக்கச் செய்தான்.

    முருகன் கனவில் கூறியபடியே எல்லாம் சிறப்பாக நிகழ்ந்தன. இதில் குறிப்பிடப்பட வேண்டிய ஆச்சர்யமான விஷயம், புலவர் வணிகருக்குச் செலுத்த வேண்டிய தொகையை மீறி அதில் ஒரு பைசாவும் மீதம் இல்லை என்பதுதான். திருச்செந்தூர் ஆண்டவன் செந்திலாண்டவனின் கருணையை எண்ணி ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருமே கசிந்துருகினர்.

    எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தன்னை நம்புகிறவர்களை திருச்செந்தூர் முருகன் கைவிடமாட்டான் என்பதற்கு இந்த உண்மைச் சம்பவமே சாட்சி. தன்னை முழு மனதுடன் நம்பும் எவரையும் கை தூக்கி விடும் தெய்வமாகக் கந்தப்பெருமான் இருக்கின்றான் என்பதற்கு, மீராக்கண்ணு புலவர் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றார்.

    பாம்பன் சுவாமிக்கு அருளிய முருகன்!


    பாம்பன் சுவாமி என்னும் பெயர் பெற்ற ஸ்ரீகுமர குருதாச சுவாமிகள் ஆறுமுகப் பெருமானிடம் அசையாத பக்தி கொண்டவர். 'சண்முக கவசம்' என்னும் நூலினைப் பாடி ஆறுமுகப் பெருமானை வழிபட்டவர். 27.12.1923 வியாழக்கிழமையன்று காலை சென்னை தம்பு செட்டித் தெருவில் நடந்து சென்ற போது ஒரு குதிரை வண்டியின் சக்கரம் ஏறியதால் சுவாமிகளின் கணுக்கால் எலும்பு முறிந்தது.

    மருத்துவமனைக்கு சுவாமிகளைக் கொண்டு சென்றனர். அடிகளைச் சோதித்த மருத்துவர்கள் சுவாமிகளுக்கு வயதாகி விட்டதால் முறிந்த எலும்பு பொருந்தாது என்றனர். துறவியாக இருந்து புளி, காரம் சேர்க்காமல் சாப்பிடவே தாலும் உடைந்த எலும்பு பொருந்தாது என்றனர்.

    சுவாமிகளோ தாம் இயற்றிய சண்முக கவசத்தைப் பாராயணம் செய்யுமாறு சுற்றிலுமுள்ள பக்தர்களிடம் கூறினார். அவ்வாறே அன்பர்கள் பாராயணம் செய்தனர். அந்த பாடல் பாடப்படும் போதெல்லாம் மயிலொன்று தன் சிறகால் அவரது காலை வருடுவதை உணர்ந்தார்.

    சுவாமிகளின் அடியார்கள் மருத்துவமனையிேலயே நாள் தோறும் சண்முக கவசத்தைத் தொடர்ந்து பாராயணம் செய்து வேண்டினர்.

    உரிய நாளில் மருத்துவர்கள் கால் கட்டைப் பிரித்தனர். வியப்பில் மூழ்கினர். எலும்புகள் நன்றாகக் கூடி இருந்தன. சுவாமிகள் எழுந்து நன்றாக நடந்தார். சீடர்களின் நம்பிக்கையைச் செந்திலாண்டவன் காப்பாற்றி விட்டான்.

    அதுபோல பாம்பன் சுவாமிகள் பாடிய 'பஞ்சாமிர்த வண்ணம்' என்னும் நூல் சுவையுடையது. அதைப் பாடக் கேட்டால் பஞ்சாமிர்தம் உண்பது போன்ற சுவையை உணரலாம். இந்த பாடல் மூலம் திருச்செந்தூரில் முருகன் நிகழ்த்திய அற்புதம் ஒன்று நடந்தது.

    திருச்செந்தூர் கோவிலில் "கவுண்டர் மண்டபம்" என்று ஒன்று உண்டு. அங்கு நாள் தோறும் அனந்த சுப்பையர், வி.என்.சுப்பிரமணிய அய்யர், முத்தம்மை என்ற மூதாட்டி மூவரும் பஞ்சாமிர்த வண்ண நூலைப் பாராயணம் செய்வது வழக்கம். "பஞ்சாமிர்த வண்ணமும்" பாம்பன் சுவாமிகள் இயற்றியதே. இவர்கள் பாராயணம் செய்வதை ஓர் இளைஞன் தூண் மறைவில் இருந்து கேட்பான். இதைக் கவனித்த முத்தம்மை, "மறைந்து இருந்து கேட்பானேன், அருகில் வரலாமே" என்று சொல்லிக் கொண்டே திரும்பிப் பார்த்தாள் முத்தம்மை. இளைஞனைக் காணவில்லை.

    மறுநாள் அதிகாலை 3 மணி இருக்கும். முத்தம்மை வீட்டுக் கதவை யாரோ தட்டினர். முத்தம்மை கதவைத் திறந்தாள். மண்டபத்தில் கண்ட அதே இளைஞன் நின்று கொண்டிருந்தான்.

    "நான் யாரென்று தெரியவில்லை என்றாயே, எனக்கு இந்த ஊர்தான். வா, என் இருப்பிடத்தைக் காட்டுகிறேன்" என்றான். அப்போதுதான் இந்த இளைஞனுடன் ஓர் மங்கையும் நிற்பதைக் கண்டாள் முத்தம்மை.

    இளைஞனும் பெண்ணும் முன்னே நடந்தனர். முத்தம்மை பின் தொடர்ந்தாள். கல்யாண மண்டபத்தை அடைந்ததும் குமரன், ஏ, கிழவி, இதுதான் என் இருப்பிடம், 'பஞ்சாமிர்த வண்ணத்தை' இசையோடு பாடும் இடத்தில் எல்லாம் நான் இருப்பேன். அதனால்தான் அன்று ஆலயத்தை விட்டுக் கவுண்டர் மண்டபத்திற்கு வந்து இருந்தேன்" என்று கூறி மறைந்தான் வள்ளி மணாளன்.

    முத்தம்மை அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. திருச்செந்தூர் முருகன் தன்னை வெளிப்படுத்தி காட்சிக் கொடுத்ததை நினைத்துப் பூரித்தார்.

    அவ்வையிடம் "அருந்தமிழ்ப் பாடல்" கேட்க "சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்று திருவிளையாடல் புரிந்தவன் அல்லவா? அத்தகைய முருகன் திருச்செந்தூரில் முத்தம்மையிடம் நிகழ்த்திய அற்புதமும் சிறப்பாக இன்றும் பேசப்படுகிறது.

    இதே போன்று இன்னொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சின்ன வயதில் எனக்கு நிறைவேறாமல் போன ஆசைகள் ஏராளம்.
    • பிள்ளை வளர்ப்பில் இது நான் கற்றுக் கொண்ட பாடம்.

    கல்யாணம் பண்ணிப்பார் வீட்டை கட்டிப்பார் என்று சொல்வதை கேட்டிருக்கிறேன். ஆனால் அந்த பழமொழியை கல்யாணம் பண்ணிப்பார் பிள்ளையை பெற்றுப்பார் என்று சொன்னால் என்ன என்று நான் வேடிக்கையாக சொல்வதுண்டு. குழந்தை வளர்ப்பு சுகமான அனுபவத்துடன் திக்.. திக்.. மன நிலையையும் தரக்கூடியது. என் மகள் நைனிகாவை வளர்ப்பதில் இது நான் பெற்ற அனுபவம்.

    இப்போது எனக்கு இருக்கும் ஒரே பிடிமானம் என் நைனிகா தான். அவள் மீது ஆசை, கனவு எல்லாம் இருக்கிறது. ஆனால் நைனிகா இப்படித்தான் வர வேண்டும் என்று நான் விரும்பவில்லை. எனவே என் கருத்துக்கள் எதையும் அவள் மீது திணித்ததும் கிடையாது. இப்போது தான் 9-ம் வகுப்பு படிக்கிறாள். ஆனால் அவளது வயதை விட அதிகமான புத்தி கூர்மையுடன் பல நேரங்களில் அவளை பார்த்திருக்கிறேன். அப்போது மனதுக்கு மிகுந்த சந்தோசமாக இருக்கும்.

    எல்லா பிள்ளைகளையும் போல் தான் அவளும்... என்ன கேட்டாலும், என்ன சொன்னாலும் 'ஓ.கே,' சொன்னால் 'நல்ல அம்மா' என்பாள். நோ சொன்னால் 'பேட்' அம்மா என்பாள். எல்லாவற்றுக்கும் ஓ.கே. சொல்லி விட முடியாது. சில விஷயங்களை செய்யக் கூடாது என்றால் அதில் கண்டிப்பாகவே இருப்பேன். இதை, இதை செய்யக்கூடாது என்றால் அதற்கு காரணம் என்ன என்பதையும் அவர்கள் புரியும் வகையில் சொல்லித்தர வேண்டியது ஒரு பொறுப்புள்ள அம்மாவின் கடமை தானே! இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.


    நானும் இப்படித்தான் அம்மாவின் கட்டுப்பாட்டில் வளர்ந்தவள். அன்று அம்மா சொல்லி புரியாத பல விஷயங்களை என் அனுபவத்தில் புரிந்து கொண்டேன். இப்போது நான் சொல்லிக் கொடுக்கும் விஷயங்களை உள்வாங்கி கொள்கிறாள். ஆனால் எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கிறாள் என்பது வளர வளரத்தான் தெரியும். ஆனால் அவள் வயதில் நான் எப்படி இருந்தேனோ அதை விட நைனிகா ஸ்மார்ட்டாக இருப்பது எனக்கு பெருமை.

    நீ படித்து அப்படி வர வேண்டும்... இப்படி ஆக வேண்டும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஒரே ஒரு விஷயத்தை அடிக்கடி நினைவு படுத்துவேன். அதாவது நல்ல மனிதனாக வாழ பழகு என்பது தான் அது. இன்றைய கால கட்டத்தில் படிப்பு ரொம்ப முக்கியம். அவளது ஆர்வத்தை பொறுத்தே அவளை ஊக்கப்படுத்தி வருகிறேன்.

    சின்ன வயதில் எனக்கு நிறைவேறாமல் போன ஆசைகள் ஏராளம். அந்த ஒரு சூழ்நிலை என் மகளுக்கு வர கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அவள் எதை கேட்டாலும் அது தேவைதானா என்பதை பொறுத்து வாங்கி கொடுப்பேன். தேவையில்லாதது என்றால் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன். உடனே அவளுக்கு கோபம் வரும். சண்டை போடுவாள். அடுத்த சிறிது நேரத்தில் கட்டிப்பிடித்து கொண்டு கொஞ்சுவாள். இதெல்லாம் அடிக்கடி நடக்கும்.

    இந்த காலத்து பசங்களை புரிந்து கொள்வது கடினம். இப்படித்தான் இருக்க வேண்டும் என்றால் கேட்க மாட்டார்கள். அதற்கு அவர்கள் வேறு விளக்கம் சொல்வார்கள். ஏனெனில் நாம் வாழும் உலகம் இணைய தள உலகம். எனவே அவர்களுக்கு புரியும் வகையில் சொல்லி கொடுக்க முதலில் நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

    காலத்துக்கு ஏற்ப பிள்ளைகள் மாறி விட்டார்கள் என்பதை விட நாமும் அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் பிள்ளைகளை நாம் மாற்ற முடியும். சில விஷயங்களுக்கு நாம் கட்டுப்பாடு விதிக்கலாம். ஏன் கட்டுப்பாடு விதிக்கிறோம் என்பதை அவர்கள் உணர வைக்க வேண்டும்.


    கரடு, முரடாக எதையும் புரிந்து கொள்ள முடியாத வயது.

    ஆனால் எடுத்து சொன்னால் புரிந்து கொள்கிறாள். இதை விட வேறு என்ன வேண்டும்?

    ஏழு நாளும் ஏழு விதமாக பார்க்கிறேன். எப்போது இருவரும் முட்டிக் கொள்வோம்? எப்போது கட்டிப்பிடிப்போம்? என்பது தெரியாது. ஒரு பெரிய நடிகையின் மகள் என்பதால் நடிப்பு நன்றாக வரும் என்று நினைத்தால் உங்கள் கணிப்பு தவறு.

    நைனிகாவை பொறுத்தவரை படிப்பு, நடிப்பு, இரண்டுமே சுமார் தான் என்பேன். ஆனால் எங்கு சென்றாலும் கடினமாக உழைக்க வேண்டும். செய்யும் வேலையில் பணிவும், நேரம் தவறாமையும் ரொம்ப அவசியம் என்று சொல்லி கொடுப்பேன். கோபத்தில் அம்மா திட்டலாம். அல்லது ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி சொன்னால் அம்மா திட்டுவாங்க என்று நீ நினைக்கலாம்.

    அதற்காக அம்மா விடம் சொல்லாமல் இருக்காதே. அது தான் உனக்கு சிக்கலை உருவாக்கும். கோபத்தில் திட்டினாலும் பிறகு நாம் இருவரும் சேர்ந்து முடிவெடுக்கலாம் என்பேன். பொதுவாகவே இதை செய்தால் என்னவாகும் என்பதை நாம் சொன்னால் புரிந்து கொள்கிறார்கள். நாம் ஒரு விஷயத்தை பற்றி சொன்னால் அவர்கள் எரிச்சல் அடையலாம்.

    அதை எப்படி சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை யோசித்து மாற்றி சொல்ல நாம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதை பண்ணாதே.. அதை பண்ணாதே என்று எப்போதும் கடுகடுப்பாக சொன்னால் அவர்களுக்கு கோபம் தான் வரும். இன்றைய தலைமுறைகளை நிதானமாக கை யாள வேண்டும். நேர்மறை யாக கருத்துக் களை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.

    அன்று செல்போன் இல்லை. இன்று செல்போனிலேயே மூழ்கி விடுகிறார்கள். அதற்காக நாம் கோபப்பட்டால் அவர்கள் சிந்தனை வேறு விதமாக போகும்.

    என்னடா செல்லம் முழுநேரமும் செல்போனையே நோண்டாதே. பொழுது போக்குக்கு கொஞ்சம் நேரம் டி.வி.பாரு அல்லது வேறு எதையாவது செய் என்று பக்குவமாக அவர்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டும். நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள்.

    வெளியே சுற்றக்கூடாது.. பிரண்ட்ஸ் வீட்டுக்கு போக கூடாது என்று கட்டுப்பாடு போட்டால் அதை மீறப் பார்ப்பார்கள். அதற்கு பதில் வெளியே செல்லும் போது கவனமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    பிரண்ட்ஸ் வீட்டுக்கு போ. குறித்த நேரத்தில் வீட்டுக்கு வந்து விடு என்று எச்சரிக்கை உணர்வோடு சொன்னால் கவனமாக இருப்பார்கள், ஜாலியாகவும் இருப்பார்கள்.

    பிள்ளைகள் கவனமாக, பாதுகாப்பாக வளர்ந்தால் போதாதா? வேறு என்ன வேண்டும்?

    பிள்ளை வளர்ப்பில் இது நான் கற்றுக் கொண்ட பாடம். இதை விட எவ்வளவோ அனுபவங்கள் உங்களுக்கு இருக்கும். நமது அனுபவமே அடுத்த தலைமுறையின் வாழ்க்கை பாடமாக மாறுகிறது.

    அதை நல்ல ஆசிரியராக இருந்து கற்றுக் கொடுக்கும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. இன்னும் முக்கியமான விஷயத்தோடு அடுத்த வாரம் சந்திக்கிறேன். அது வரை காத்திருங்கள்..

    (தொடரும்)

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வைட்டமின்கள், தாது உப்புகள் குறைபாடு இருப்பதனை சுட்டிக்காட்டும் அறிகுறிகளாக இருக்கலாம்.
    • புரத குறைபாடும் நகங்களில் மாறுதல்களை ஏற்படுத்தலாம்.

    நாம் உணவில், ஊட்டச்சத்தில் குறைபாடு ஏற்படாது இருக்க எத்தனை கவனம் செலுத்த வேண்டி உள்ளது. அப்படி செய்தாலும் ஏதாவது பற்றாகுறை இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

    * சோர்வு *வெளிச் சருமம் * எப்போதும் களைப்புடன் இருத்தல் *சின்ன விஷயங்களுக்கு எரிச்சல் படுதல் *எளிதில் உடையும் நகம் * முடி கொட்டுதல் * காயங்கள் ஆறுவதற்கு கூடுதல் நாட்கள் எடுத்துக் கொள்ளுதல்.

    இவைகள் வைட்டமின்கள், தாது உப்புகள் குறைபாடு இருப்பதனை சுட்டிக்காட்டும் அறிகுறிகளாக இருக்கலாம்.

    சத்து இல்லாத உணவினை உட்கொள்ளும் போது பசியின்மை, உணவில் ஆர்வம் இன்மை, எப்போதும் களைப்பாய் இருக்கின்றது என்ற உணர்வு, சக்தியின்மை, பலவீனம், அடிக்கடி நோய் வாய் படுதல், நோயில் இருந்து மீண்டுவர நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுதல், கவனச் சிதறல், எப்போதும் குளிர்வது போல் இருத்தல் என சத்து இல்லாத உணவு உண்ணும் போது ஏற்படலாம்.

    கண்கள்- கண்களைச் சுற்றி கருவளையம், கண் கீழ் சிறு பை போல் தசை தொங்குவது. இவை அலர்ஜி, உணவு, நீர் வற்றிய உடல் காரணமாக இருக்கலாம்.

    இரவு கண் பார்வை மங்குதல், வைட்டமின் 'ஏ' குறைபாடாக இருக்கலாம். கண்கார்வை குறைபாடு- வைட்டமின் டி குறைபாடு வெளிர் கண்கள், இரும்பு சத்து குறைபாடு ஆகியவை இருக்க வாய்ப்புகள் உண்டு.


    ஈறுகளில் ரத்த கசிவு வைட்டமின் சி போலிக் ஆசிட் குறைபாடு.

    * வாய் புண்கள்- பி3, பி12, பாலிக் ஆசிட், கால்ஷியம் குறைபாடு,

    * வாய் ஓரங்களில் வெடிப்பு- பி2 குறைபாடு

    * தேய்ந்த பல் எனாமல்- வைட்டமின் ஏ, டி. கே. கால்ஷியம் குறைபாடு.

    * நாக்கில் வலி, புண்- பி2, பி3, போலின் ஆசிட் குறைபாடு.

    * வாசனை அல்லது ருசி சரியின்மை- சிங்க் குறைபாடு என இவைகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    சருமம்- வறண்ட சொர சொரப்பான சருமம்- வைட்டமின் ஏ, ஈ குறைபாடு.

    மூக்கில் காரணமின்றி ரத்தம் வடிதல்- வைட்டமின் 'சி' குறைபாடு மற்றும் சரும குறைபாடுகள் பி2, பி3, பி4, பயோடின் சிங்க் குறைபாடுகளாலும் ஏற்படலாம்.

    மனச்சோர்வு- மறதி போன்றவை பி, பி5, பயோடின் இவைகளால் ஏற்படலாம். படபடப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.

    கமலி ஸ்ரீபால்

    நகம்- ஸ்பூன் போல் வளைந்த நகம் பி2, இரும்பு சத்து குறைபாடாக இருக்கலாம். உடையும் நகங்கள் கால்ஷியம், மக்னீசம், அயோடின் குறைபாடாக இருக்கலாம். புரத குறைபாடும் நகங்களில் மாறுதல்களை ஏற்படுத்தலாம்.

    ஆக ஒவ்வொரு அறிகுறியின் வெளிப்பாட்டிற்கும் ஏதேனும் ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். அதனை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சத்துணவு, மாத்திரைகள் என எடுத்துக் கொள்ளும் போது ஆரம்ப நிலையிலேயே நல்ல முன்னேற்றம் பெற முடியும்.

    இது போலத்தான் தாது உப்புகள் குறைபாடும் பாதிப்புகளாக வெளிப்படும்.

    * சரும பாதிப்பு, * முடிகொட்டுதல், * பரு * காயங்கள் ஆறுவதில் தாமதம் இவை சிங்க் குறைபாட்டின் காரணமாக இருக்கலாம்.

    * சதை துடிப்பு, * சதை பலமின்றி * முறையற்ற இருதய துடிப்பு * மலச்சிக்கல் இவை பொட்டாசியம் குறைபாட்டின் காரணமாக இருக்கலாம்.

    * தசை பிடிப்பு, படபடப்பு, மலச்சிக்கல், முறையான தூக்கமின்மை இவற்றிக்கு மங்கனீஸ் குறைபாடு காரணமாக இருக்கலாம்.

    * இளநரை * அடிக்கடி நோய்வாய் * சோர்வு * பலவீனம் * மறதி இவற்றிக்கு 'காப்பர்' காரணமாக இருக்கலாம்.

    * மெலிந்த முடி * நோய் எதிர்ப்பு சக்தி குறைவு * கர்ப்ப பிரச்சினைகள் * தசைபலவீனம் இவற்றிக்கு 'செலினியம்' குறைபாடு காரணமாக இருக்கலாம்.

    * எலும்பு உறுதியின்மை * வெளிறிய சருமம் * உடையும் நகம் * மூச்சு வாங்குதல் * முடி கொட்டுதல் இவற்றிற்கு இரும்பு சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம்.

    * எலும்பு வலி * பல் சொத்தை * சதை பிடிப்பு *உறுதியற்ற நகங்களுக்கு கால்ஷியம் குறைபாடு காரணமாக இருக்கலாம்.

    * வீங்கிய தைராய்டு * சில்லென்ற கை, கால் * முறையற்ற மாத விலக்கு * கவனச்சிதறல் இவற்றிக்கு அயோடின் குறைபாடு காரணம் ஆகும்.

    இப்படி சிறு அளவில் தேவைப்படும் தாது உப்புகள் கூட பெரிய அளவு பாதிப்பினை ஏற்படுத்தலாம். இந்த அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்வது நம் உடலுக்கு நல்ல கவனத்தினைக் கொடுக்க உதவும்.

    சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கா?

    * சரியாக குறிப்பிட்ட நேரத்தில் மருந்து, ஊசி எடுத்துக் கொண்டு சாப்பிடுங்கள். அதிகமாக சாப்பிடாதீர்கள். நொறுக்கு தீனி வேண்டாம்.

    * உடற்பயிற்சி முடித்த உடனே சாப்பிட வேண்டாம்.

    * இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவ அறிவுரைபடி உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகம் குறையும் அளவு கவனமின்றி சாப்பிடாமல் இருக்கக் கூடாது.

    * 2 அல்லது 2½ லிட்டர் அளவு நீர் பருகுவது அவசியம். * பொரித்த, சர்க்கரை உணவுகள் வேண்டாமே. * ஒவ்வொரு உணவிலும் காய்கறி சாலட் அவசியம்.

    * 20 அல்லது 25 கிராம் அளவு பச்சை வெங்காயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    * ஒரு மணி நேர உடற்பயிற்சி அவசியம். பயிற்சியாளர் ஆலோசனை பெற்று செய்யுங்கள்.

    * நார் சத்து மிகுந்த உணவே சிறந்தது.

    சின்ன பிரச்சினை சின்ன தீர்வு:

    * அடிக்கடி தலைவலி என்கிறீர்களா- தர்பூசணி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கடும் வெயிலில் இது மிக அவசியம்.

    * செரிமாணம் சரிவர இல்லையா- பப்பாளி பழம் எடுக்கலாமே.

    * நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா- ஆரஞ்சு பழம் ஒன்று அன்றாடம் சேர்த்துக் கொள்ளுங்கள். நெல்லிக்காய், எலுமிச்சை கூட மிக நல்ல பலனைத் தரும்.

    * உதடு வெடிப்பு இருக்கின்றதா? - தேங்காய், தேங்காய் பால் எடுத்துக் கொள்ளலாம்.

    * ஹார்மோன் பிரச்சினையால் முகப்பரு ஏற்படுகின்றதா- பூசணி விதை ஒரு டீஸ்பூன் அளவு அன்றாடம் எடுக்கலாம்.

    * வெய்யிலில் உடல் கருக்கின்றதா- அன்றாடம் அல்லது அடிக்கடி தக்காளி ஜூஸ் குடியுங்கள்.

    * கண் சுற்றி கரு வளையமா- வெள்ளரிக்காய் சாப்பிடுங்க.

    * தலையில் பொடுகு தொந்தரவா- சியா விதைகளை சாப்பிடுங்கள்.

    * முடி பலமிழந்து இருக்கின்றதா- 10 பாதாம் தினமும் ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    * உடல் செயல் திறனைக் கூட்ட- தினமும் ஒரு கிளாஸ் சீரக தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.

    * நல்ல மனநிலை வேண்டுமா- ஒரு வாழைப்பழம் போதும்.

    * முடி கொட்டுதா- 4 அல்லது 5 வால்நட் சாப்பிடுங்க.

    * சதை பிடிப்பு இருந்தால்- உணவில் பசலை கீரை அவசியம்.

    * சோர்வாக இருந்தால்- ஒரு கப் வேக வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடலாம்.

    இது சிகிச்சை அல்ல. சில உணவுகளின் முக்கியத்தினைக் கூறுவது மட்டுமே. இயற்கை முறை, ஆயுர்வேத முறைகளில் உணவுக்கு கொடுக்கப்படும் குறிப்புகள் இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

    இதே போல் மேலும் சில குறிப்புகளையும் அறிவோம்.

    * தலைவலி- வாழைப்பழம் நல்லது. இதில் உள்ள மக்னீசியம் தசைகளின் இறுக்கத்தினை நீக்குகின்றது.

    * மலச்சிக்கல்- ஆப்பிள் உண்ணலாம்- நார் சத்து கொண்டது.

    * வயிற்றுப் போக்கு- வாழைப் பழம் எடுத்துக் கொள்ள பொட்டாசியம் குறைபாடு தவிர்க்கப்படும்.

    * சாதார தொண்டை கரகரப்பு- சுத்தமான தேனை வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.

    * நோய் எதிர்ப்பு சக்தி கூட- ஆரஞ்சு பழம்

    * சோர்வு, சக்தியின்மை- ஓட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். * ஜீரணக் குறைவு- இஞ்சி சேர்க்க எளிதில் தீர்வு கிடைக்கும்.

    * ரத்த சோகை- இரும்பு சத்து சிறைந்த பசலைக் கீரை உணவில் சேர்க்கலாம்.

    * மூட்டு வலி- சிறிதளவு அன்னாசி பழம் தினம் எடுத்துக் கொள்ளலாம்.

    * கிருமிகளுடன் போராட- பூண்டு உணவில் சேர்க்க வேண்டும்.

    தசை பிடிப்பு-இளநீர் குடிக்க தாது உப்புகள் சீராகும்.

    இவை அனைத்தோடும் கூட உழைப்பற்ற வாழ்க்கை முறை என்பது மிகப்பெரிய ஆபத்து என்பதனை உணர வேண்டும். உடற்பயிற்சி இன்மை, பல நேரம் அமர்ந்தே இருப்பது போன்றவை உடல் பருமன், நீரிழிவு பிரிவு2, மூட்டு வலி, உடலின் செயல்பாட்டுத்திறன் குறைவு, இருதய பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் என எல்லா பாதிப்புகளையும் கொண்டு வந்து விடும். உடற்பயிற்சி ஒரு மணி நேரம் செய்து விட்டு 10 மணி நேரம் நகராது இருப்பது என்பதும் மேற்கூறிய பாதிப்புகளைத் தரும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது என்பது அவசியம். அதிக நேரம் உட்கார்ந்தபடி இருப்பது படுத்தபடி இருப்பது எண்ணற்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    * தலைவலி * குழப்பம் * முதுகுவலி *இறுகிய தோள் *மூச்சு முறையற்று இருத்தல் * தசை வலுவின்மை * இருதய பாதிப்பு அதிகம் ஏற்படுதல் * எடை கூடுதல் * இடுப்பு இறுக்கம் * மூட்டு வலி * ரத்த ஓட்டம் சீரற்று இருத்தல்.

    இது போன்ற சில குணங்களை விட்டு விட வேண்டும்.

    * பிறர் பற்றி புறங் கூறுதல் * தன் மீதே சந்தேகம் * தீய பழக்கங்கள் * தோல்வி பயம் * அழிவுப் பூர்வமான பேச்சு * உறவுகளை முறிக்கும் கடுமையான பேச்சு * அனைவரும் ஓடி ஓடி உழைப்பது * பிறர் முன் தன்னைத் தானே இறக்கிக் கொள்ளுதல் போன்ற பழக்கங்களை இப்போதே விட்டு விடுதல்.

    அதே போன்று எது நடந்தாலும் அதனை உங்களை நோக்கி குறி வைப்பதாகவே நினைப்பது தவறு.

    அதிக மன உளைச்சல் கூடாது. பழைய துன்ப நினைவுகளில் மூழ்கி மூழ்கி எழ வேண்டாமே. எனக்கெதற்கு என தரமற்ற உணவு எடுக்க வேண்டாம். உங்களுக்குரிய கவனிப்பு அவசியம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகிழ்ச்சி என்பது மனம் சார்ந்த உணர்வு நிலை; அது எதிர்மறை நிகழ்வுகளால் தோன்றாது.
    • அடுத்தவருக்கு மனமுவந்து ஒன்றைத் தருகிறபோது ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது;

    மகிழ்ச்சி என்பது தனித்துக் காண்பதா? அல்லது மக்களோடு மக்களாய்க் கூடி இன்புறுவதா? என்பதை அறிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்.

    "நிறை செல்வம்! நீள் ஆயுள்! சஞ்சலமின்றி மகிழும் மனது!" இவை மூன்றும் அமைந்து விட்டால் போதும்!, வாழ்க்கையை நாள்தோறும் நாம் கொண்டாடி அனுபவிக்கலாம்!.

    மகிழ்ச்சி என்பது நிறைவின் வெளிப்பாடு. முதலில் மனம் நிறைவதிலிருந்தே மகிழ்ச்சி புறப்பாடு காண்கிறது. வீடு, வாகனம், வசதிகள், குடும்பம், தொழில், கல்வி, வங்கிச் சேமிப்பு மற்றும் பணம் கையிருப்பு போன்ற மற்ற நிறைவுகளை விடச் சிந்தையின் நிறைவே சிறந்த செல்வம் ஆகிறது.

    சிந்தை நிறைந்து விட்டால், 'இன்பமே எந்நாளும் துன்பமில்லை!' என்கிற வாழ்க்கை வசமாகிப் போகும்.

    மகிழ்ச்சி என்பது மனம் சார்ந்த உணர்வு நிலை; அது எதிர்மறை நிகழ்வுகளால் தோன்றாது; நேரான சிந்தை, நிறைவான செயல்முறை, நேர்முறையாகப் பெறுகின்ற வெற்றிநிலை இவற்றால் மட்டுமே அப்பழுக்கற்ற மகிழ்ச்சி சாத்தியமாகிறது.

    ஒவ்வொரு தனிமனிதனும் கவலை இல்லாத மனிதனாகத் திகழ வேண்டுமானால் அவன் மனத்தளவில் மகிழ்ச்சியானவனாக இருக்க வேண்டும். எதையுமே நேர்முறையாக எடுத்துக்கொண்டால், மனத்தளவில் துன்பம் அனுகாமல் மகிழ்ச்சியோடு இருக்க முடியும். ஆயினும், துன்பப்படுவது தனிமையில் சாத்தியம் என்றாலும் மகிழ்ச்சிப்படுவதற்குத் தனிமை எந்தவகையிலும் உதவி புரியாது.

    சுந்தர ஆவுடையப்பன்

    அதனால்தான் கவியரசர் கண்ணதாசன், 'தனிமையிலே இனிமை காண முடியுமா?' எனப் பாடலில் அடுக்கிய வினாக்களைத் தொடுக்கிறார். உண்மையில் மகிழ்ச்சி என்பது தனிமனித மன உணர்வு என்றாலும், அது, ஒருவருக்கும் மேற்பட்டோர் கூடிக் கொண்டாடும் போதுதான், கொண்டாடும் மகிழ்ச்சியாகப் பெருகிப் பல்குகிறது.

    'உவப்பு' என்கிற சொல்லுக்குப் பெருகிடும் மகிழ்ச்சி என்று பொருள்; ஒரே மாதிரி சிந்தனை அலைவரிசை உடைய புத்திசாலிகள் கூடிப் பேசி மகிழ்வதைத், திருவள்ளுவர், 'உவப்பத் தலைக்கூடுதல்' என்று சிலாகித்துக் கூறுகிறார்.

    அடுத்தவருக்கு மனமுவந்து ஒன்றைத் தருகிறபோது ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது; அதைப் பெறுகிறவர் பெறும்போது வெளிப்படுத்தும் மகிழ்ச்சியைக் காணும்போது தருபவரின் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிறது. இதனை வள்ளுவர் 'ஈத்துவக்கும் இன்பம்' என்று இரட்டித்து ஒலிக்கிறார்.

    இன்பமோ! துன்பமோ! அது தனிமனிதர் சார்ந்த மனவுணர்வு என்றாலும், பலரோடு பகிர்ந்து கொள்ளப்படும்போது அது அதிகரிக்கவோ குறையவோ செய்கிறது. இன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் அது பன்மடங்கு பெருகுகிறது; துன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் அது பன்மடங்கு குறைகிறது. மகிழ்ச்சியைப் பொறுத்த வரை அது அடுத்தவரோடு பகிர்வதாலேயே பெருகிப் பரவுகிறது.

    சிரித்துக் கைதட்டி மகிழும் செயலைப் பலரோடு செய்யவேண்டும்; அழுது புலம்பிக் கண்ணீர் வடிக்கும் செயலைத் தனிமையில் செய்ய வேண்டும். இது மாறிவிடக் கூடாது. தனிமையில் சிரித்துக் கைதட்டி மகிழ்ந்து கொண்டிருந்தால், பார்ப்பவர்கள் நம்மை ஒரு மாதிரி பார்ப்பார்கள். அதேபோல ஊரறிய அழுது புலம்பிக் கொண்டிருந்தால், காண்பவர்களின் ஏளனத்திற்கு நாம் ஆளாக நேரிடும்.

    துன்பம் என்பது தனியுணர்வு என்றால், மகிழ்ச்சி என்பது பொது உணர்வு ஆகும். உலகமெங்கும், நகரங்கள் தொடங்கிக், கிராமங்கள் வரை, மக்கள் திருநாட்களைத் திருவிழாக்களாகக் கூடிக் கொண்டாடுவதற்குக் காரணம், அதன்மூலம் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

    பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற திருநாட்களை மக்கள் கூடிக் கொண்டாடுவதன் மூலம், அவர்களிடையே பரஸ்பரம் நல்லுணர்வு பெருகுகிறது; நல்லெண்ணம் வளர்கிறது; நன்மகிழ்ச்சியும் நலவாழ்வும் அவர்கள் மத்தியில் பரவிப் பெருகுகிறது; அடுத்து, வாழும் நாளெல்லாம் வளமான நாளாக அமைந்து அவர்களின் ஆயுள் நீட்டிப்பிற்கும் நல்வழி பிறக்கிறது. ஆன்மீகம் சார்ந்த நிலையில் ஊர்கள் தோறும் திருவிழாக்கள் வருவதும், திருவிழாக்களில் ஊர்கூடித் தேர் இழுப்பதும் மகிழ்ச்சிப் பரவலாக்கம் சார்ந்த நோக்கம் கருதியதே ஆகும்.

    அந்தக்காலத்தில் ஒரு ராஜா நிறைவான ஆட்சி நடத்தி வந்ததால் அவரது ஆயுட்காலம் நீண்டுகொண்டே போனது. சொன்னால் நம்ப மாட்டீர்கள்!, அந்த ராஜா, அந்த நாட்டை ஏழாயிரம் ஆண்டுகளாகச் செவ்வனே ஆண்டு வந்தார். ஒரு நாள் காலை, மகாராணி, ராஜாவுக்கு எண்ணெய்க் குளியல் செய்விக்கும் பொருட்டு, ராஜாவின் தலையை அவிழ்த்து, நல்லெண்ணெய் தடவிக் கொண்டிருந்தபோது, அவரது தலைமுடியில் ஒன்று நரைத்திருப்பதைப் பார்த்து அழத் தொடங்கி விட்டார்.

    'எட்டிப் பார்க்கும் நரைமுடி, எமனின் அழைப்பு!; எது வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்!' என்று எந்தக் கவலையுமில்லாமல் ராஜா இருந்தார். "அதெப்படி சும்மா இருக்க முடியும்? உங்களது ஆயுள் நீட்டிப்பிற்காக நான் கடவுளை நோக்கித் தவம் இருக்கப் போகிறேன்!" என்று மகாராணி தவமிருக்கக் கிளம்பி விட்டார். " நீ மட்டும் ஏன் எனக்காகத் தனியே செல்கிறாய்? நானும் வருகிறேன் உன்னோடு தவமிருக்க!" என்று ராஜாவும் ராணியுடன் கிளம்பி விட்டார்.

    ஆயுள் நீட்டிப்பிற்காக ராஜாவும் ராணியும் தவமிருக்கச் செல்லும் செய்தி, நாட்டுமக்களிடம் பரவியது. அவர்கள் எல்லாரும் திரண்டு, அரண்மனைமுன் நின்றுவிட்டார்கள். "எங்களின் நலத்திற்காகத்தானே, ராஜாவும் ராணியும் தவமிருக்கப் போகப் போகிறீர்கள்?. எங்களை ஆளும் ராஜாவின் நீளாயுளுக்காக, மக்களாகிய நாங்கள் அனைவரும் சென்று கடவுளிடம் மன்றாடப் போகிறோம்!. எங்களுக்கு வழிவிடுங்கள்! நீங்கள் போக வேண்டாம்!" என்று கூறிவிட்டு மக்கள் எல்லாரும் அங்குள்ள மலையுச்சிக்குச் சென்று சூரியனை நோக்கித் தவமிருக்கத் தொடங்கி விட்டார்கள்.

    மூன்றாண்டு தவத்திற்குப் பின், சூரியக்கடவுள், அந்த நாட்டு மக்களின்முன் வந்து நின்றார். 'எங்கள் ராஜா இன்னும் ஆயிரம் ஆண்டுகள் மகிழ்ச்சியோடு வாழவேண்டும்!' என்ற வரத்தை மக்கள் கேட்டார்கள். மக்கள் கேட்ட வரத்தைத் தந்துவிட்டு சூரியக்கடவுள் மறைந்தார். மக்களும் மகிழ்ச்சியோடு, அரண்மனைமுன் கூடி, ராஜா இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆயுளோடு இருப்பதற்கு வரம் பெற்றுவந்த செய்தியைத் தெரிவித்தார்கள்.

    ராஜா மக்களிடம் பேசினார், " இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது!; இந்த நாட்டுமக்களாகிய நீங்கள் இல்லாமல், ராணி இல்லாமல், அமைச்சர், படை வீரர்கள் இல்லாமல் நான்மட்டும் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து என்ன பயன்? மகிழ்ச்சியோடு இருக்க முடியுமா? மகிழ்ச்சி என்பது எல்லாரும் கூடி வாழ்வதும், கூடிப் பெறுவதும்தானே?. நீங்கள் எவருமில்லாமல், நான்மட்டும் தனித்து ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது எப்படி வரமாகும்?; அது சாபமாக அல்லவா முடியும்?. நான் இப்போதே தனியாக மலையுச்சிக்குச் செல்லப் போகிறேன்!. நம் எல்லாருக்காகவும் சூரியனை நோக்கித் தவமிருக்கப் போகிறேன்!" என்று கூறிவிட்டு ராஜா கிளம்பி விட்டார்.

    ஓராண்டு கடுமையான தவம்; சூரியக்கடவுள் வந்தார்,' நான் உட்பட எனது நாட்டிலுள்ள அனைவரும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்!' என்று வரம் கேட்டார் ராஜா. எப்போதும் வரம் என்பது, சுயநல நோக்கம் இல்லாது, பொதுநலம் சார்ந்ததாக இருக்குமானால் உடனே வழங்கப்படும். வரம் பெற்ற மகிழ்ச்சியை, ராஜா தனது நாட்டு மக்களோடு அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்குக் கொண்டாடுவது எனத் தீர்மானம் போட்டு ஆட்சியை ஆளத் தொடங்கினார்.

    உலகில் எந்த மகிழ்வையும் தனித்து அனுபவித்துவிட முடியாது; அனுபவித்தாலும் அது உண்மையான மகிழ்ச்சியாக இருக்காது. கூடியிருக்கிற குடும்பத்தில் ஒரு உறுப்பினராகப் பிறக்கிற மனிதன், பிறகு தனித்த குடும்பமாக மலரும்போது, இன்னொருவரோடு துணை அமைத்துக் கொள்கிறான். இருவரில் தொடங்குகிற இல்லற வாழ்வு, பிள்ளை குட்டிகள், உறவு நட்பு எனப் பல்கிப் பெருகுவதெல்லாம் , வாழ்வின் மகிழ்வுப் பெருக்கத்திற்காகவே தான்.

    பகிர்வதில் பெருகுகிறது மகிழ்ச்சி. 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என வாழும் பொதுநல நோக்கே மனிதத்தை உயர்த்தும் மகிழ்வின் நோக்காகத் திகழுகிறது. மகிழ்வதற்கு இதுதான் காரணம் என்பதெல்லாம் கிடையாது; மகிழ்ச்சி, காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டது. கரகாட்டக்காரன் படத்தில் வரும் செந்தில் கவுண்டமணி வாழைப்பழ நகைச்சுவைக்குக் காரண காரியம் கிடையவே கிடையாது.

    திடீரென ஒருவரைப் பார்த்ததும், 'என்ன இன்று மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது?' என்று கேட்போம். அவருக்குக் காரணம் தெரிந்தால் சொல்வார்; இல்லையென்றால் பதிலுக்கு ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவார். மனமும் உடலும் நலமாக இருந்தால், செய்கிற செயல்களும் நமக்கு விருப்பமானவையாக இருந்தால், மகிழ்ச்சிக்கென்று தனிக்காரணம் தேவைப்படுவதில்லை.

    சிலருக்குச் சமைப்பதில் மகிழ்ச்சி; சிலருக்குச் சாப்பிடுவதில் மகிழ்ச்சி; சாப்பிடுபவரின் நுட்பம் தெரிந்தவர் சமையலராக இருந்தால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. மேடையில் ஒருவர் எவ்வளவுதான் முயன்று ஒரு நகைச்சுவையைச் சிறப்பாகச் சொல்ல முயற்சித்தாலும், எதிரே அமர்ந்திருந்து கேட்பவர்கள், அதே கவனத்துடன், பேச்சாளரின் அலைவரிசையோடு ஒத்துப்போகவில்லையென்றால், நகைச்சுவை சோகச்சுவையாகிப் போகும்.

    மகிழ்ச்சி, உணர்ந்தோருடன் ஒத்துப் போகும் ஒத்திசைவைப் பொறுத்தது. மகிழ்ச்சி என்பது நிகழ்பொழுதில், அந்தத் தருணத்தை அனுபவிப்பது. பலருக்குக் கடந்த காலங்களை அசைபோடுவதும், அந்தக்காலப் பாடல்களில் கரைந்து மகிழ்வதும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் அந்த மகிழ்ச்சி சொக்கத் தங்க மகிழ்ச்சியாக இருக்காது, செம்பு என்னும் சோகம் கலந்த சுகமான சோகமகிழ்ச்சியாக மட்டுமே அமைந்திருக்கும்.

    'உவப்பே உயர்வு!' என்பது மிக உயரிய தத்துவம். மகிழ்ச்சியோடு ஈடுபடுகிற செயல்கள் மட்டுமே வெற்றிகரமான முடிவுகளை எட்டிப்பிடிக்க உதவிடும். மகிழ்ச்சியான மனநிலை, எத்தனை சிக்கலான பிரச்சினைகளுக்கும் எளிதான தீர்வுகாண உதவிடும்; மனம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால், உடல் ஆரோக்கியத்திற்குக் கேட்கவா வேண்டும்?. நிறைவின் பொங்கி வழிதலே மகிழ்ச்சி; அதனை அடுத்தவரோடு பகிர்ந்து கொள்வதும், பெருகச் செய்வதும் தவறாமல் நாம் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி.

    எதையுமே தனித்து அனுபவித்துவிட நினைப்பது சுயநலம். பொதுநலக் கோட்டையில் மகிழ்ச்சியின் கொடி பட்டொளிவீசிப் பறக்கட்டும்.

    தொடர்புக்கு 9443190098

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புகழ் பெற்ற அருவிகள் இங்கு மக்கள் அனைவரையும் வருக வருக என்று அழைக்கின்றன.
    • சிவபிரான் வருவார் என்று காத்திருந்த குமரியம்மன் அவர் வராததால் எல்லையற்ற கோபம் கொண்டாள்.

    இந்தியாவின் அற்புதமான ஒரு நகராகத் திகழ்வது கன்னியாகுமரி நகர். இந்து மா கடல் தெற்கிலும் வங்காள விரிகுடா கிழக்கிலும் அரபிக்கடல் மேற்கிலும் இருக்க இந்த முப்பெரும் கடலின் சங்கம இடத்தில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது.

    இங்குள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவை நமது பாரம்பரியத்தை விளக்கிக் கொண்டிருக்கின்றன.

    அருகில் சுசீந்திரம், திருக்குற்றாலம், தென்காசி, திருநெல்வேலி, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கும் சென்று புத்துணர்ச்சி பெறலாம். இவற்றை இங்கு பார்ப்போம்.

    திருக்குற்றாலம்

    குற்றால அழகினையும், சிறப்பினையும் பற்றி குற்றாலத்தை அடுத்துள்ள மேலகரத்தில் 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த திரிகூட ராசப்பக் கவிராயர் தான் இயற்றிய குற்றாலக் குறவஞ்சியில் அற்புதமாகக் கூறியுள்ளார்.

    எடுத்துக்காட்டிற்கு ஒரு பாடல்:

    வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்;

    மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்;

    கானவர்கள் விழி எறிந்து, வானவரை அழைப்பார்;

    கவன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்;

    தேன் அருவித் திரை எழும்பி, வானின் வழி ஒழுகும்;

    செங்கதிரோன் பரிக் காலும் தேர்க் காலும் வழுகும்;

    கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்

    குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே!

    குற்றாலக் குறவஞ்சி பாடல் எண் 67


    தென்காசியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள குற்றாலத்தின் எழிலையும் அருவிகளின் வனப்பையும், இயற்கைச் சூழலையும் மலையின் புனிதத்தையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஒன்பது புகழ் பெற்ற அருவிகள் இங்கு மக்கள் அனைவரையும் வருக வருக என்று அழைக்கின்றன. பேரருவி, ஐந்தருவி, புலி அருவி ஆகியவற்றில் ஜனக்கூட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். குற்றால மலையின் மீது ஏறி செண்பகா தேவி மற்றும் தேனருவியை நெருங்கினால் அங்கு விழும் நீர்வீழ்ச்சிகளையும் கண்டு ஆனந்திக்கலாம்.

    புராண வரலாற்றின் படி சிவ-பார்வதி திருமணத்தின் போது தேவர்கள் அனைவரும் ஒருமிக்க கைலாசத்தில் கூடவே, வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. உடனே சிவபிரான அகத்திய முனிவரை நோக்கி தென்திசை ஏகி பூமியை சமனப்படுத்துமாறு பணிக்க அகத்தியர் பொதிய மலை வந்தார். பூமியும் சமனமாயிற்று.

    அகத்தியர் பொதிய மலையிலிருந்து தமிழ் மொழியைப் பரப்பும் அரிய செயலில் ஈடுபட்டார்.

    சிவபிரான் கோவில் கொண்டுள்ள இடம் குற்றாலம். அருவியில் குளித்து புத்துணர்ச்சி பெற்று ஆன்மீக எழுச்சி பெற குற்றால நாதரை தரிசிக்கலாம்.

    இங்குள்ள காற்றில் ஆக்ஸிஜனின் அளவு அபரிமிதமாக இருப்பதால் சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் இங்கு வந்து தங்கி அதை உடனே போக்கிக் கொள்வது வழக்கம். அற்புதமான அரிய வகை மூலிகைகளில் பட்டுத் தவழ்ந்து வரும் தென்றல் இதமாக உடல் மீது படுவதாலும் மூலிகைக் காற்றை சுவாசிப்பதாலும் அனைத்து விதமான நோய்களும் போய்விடும் என்பது நிபுணர்களின் அறிவுரை!


    தென்காசி

    இறைவர் : காசி விஸ்வநாதர்

    இறைவி : உலகம்மை நாயகி

    பொங்கி வரும் குற்றால நீர்வீழ்ச்சியிலிருந்து உருவாகி ஒடும் சிற்றாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். திருக்குற்றாலத்திற்கு ஆறு கிலோமீட்டர் முன்னதாகவே இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது.

    இங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் எழுந்தது குறித்து சுவையான ஒரு வரலாறு உண்டு.

    பிற்காலப் பாண்டிய மன்னர்களில் பெரிதும் போற்றப்பட்டு நல்லாட்சி செய்தவன் பராக்கிரம பாண்டியன். கி.பி. 1422ம் ஆண்டு வாக்கில் இவன் தென்காசியைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.

    அவன் வடக்கில் காசி சென்று விஸ்வநாதரைத் தரிசிக்க விழைந்த போது அவன் கனவில் சிவபிரான் தோன்றி எனக்கு தென்காசியில் ஒரு கோவில் கட்டுக என்று அருள் பாலித்துக் கூறினார்.

    உடனே 15 ஏக்கர் பரப்பளவில் சுமார் 17 ஆண்டுகளில் மிகப் பெரும் கோவிலை அமைத்தான் பராக்கிரம பாண்டியன்.

    திருச்செந்தூர் (அறுபடை வீடுகளில் இரண்டாவது)

    சூரபன்மனை வதம் செய்ய முருகன் தன் பரிவார தேவதைகளுடன் வந்து முகாமிட்ட தலம் திருச்செந்தூர். சூரனை அடியோடு அழித்து அவனைச் சேவற் கொடியாக மாற்றிக் கொண்ட தலம் இது என்பதால் இதற்கு ஜயந்தி நகரம் என்ற பெயர் உண்டு.

    சூரனை வதம் செய்ததும் தன் பரிவார தேவதைகளுக்கு முருகன் தன் பன்னிரு கைகளினாலேயே விபூதி பிரஸாதம் வழங்கினார். முருகனின் பன்னிரு கைகளின் ஸ்தானத்தை இன்று பன்னீர் இலை பெற்று, திருச்செந்தூர் இலை பிரஸாதம் என்று பக்தர்களின் கைகளுக்கு வந்து சேர்கிறது.

    இது அலைவாய்த் தலம் என்பதால் இங்கு வழிபடும் போது நமது மனதில் எழுகின்ற எண்ணங்கள் ஓய்ந்து மன அமைதி கூடும்; இறையருள் சித்திக்கும். கடற்கரை ஓரம் அமைந்துள்ள திருச்செந்தூர் தல தரிசனம் வெற்றியைத் தரும்; வளமான வாழ்க்கையைத் தரும்! லட்சக்கணக்கில் பக்தர்கள் இங்கு கூடுவது இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் ஒன்றாகும்.

    ச.நாகராஜன்


    திருநெல்வேலி

    தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் தன்பொருனை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இது அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்தத் தலமானது சில காலம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகவும் திகழ்ந்த தலமாகும்.

    இறைவன்: நெல்லையப்பர் வேணுவன நாதர் உள்ளிட்ட பல பெயர்கள் இறைவி: காந்திமதியம்ம, வடிவுடையம்மை

    இந்த நகரின் பழம்பெருமை சொல்லி முடியாது. இறைவன் திருவிளையாடல் நடத்தியதால் திருநெல்வேலி என்ற பெயர்க் காரணம் ஏற்பட்டது என்பது பற்றியு புராண வரலாறு உண்டு.

    கன்யாகுமரி

    பாரதத்தின் தென் கோடியில் உள்ள இந்தத் தலம் நாகர்கோவிலிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடம் இது. இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.

    முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிய பிரம்மா அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் வரக் கூடாது என்று அந்த அசுரன் வேண்ட, அந்த வரத்தை அருளினார் பிரம்மா. மிக்க வலிமை உடைய அசுரன் கன்னிப் பெண்ணால் தனக்கு அழிவு ஏற்படவே முடியாது என்ற எண்ணத்தால் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான். தேவர்கள் திருமாலை அணுக அவர் பாணாசுரனின் வரம் பற்றி விளக்கி சிவனை அணுகுமாறு கூறினார்.

    சிவபிரானை அணுகிய தேவர்கள் தங்களின் குறையை முறையிட்டனர். சிவபிரான் இந்த அசுரனை அழிக்கத் தகுதி வாய்ந்தவள் தேவியே என்று கூற, தேவர்கள் தேவியை நோக்கித் தவம் புரிந்து வேண்டினர். அவர்களுக்கு அருள் புரிய எண்ணிய தேவி கன்னியாகுமரி தலத்தில் ஒரு பெண்ணாக அவதரித்தாள்.

    கன்னியாக இருந்த தேவி சிவபிரானை மணக்க எண்ணிக் கடும் தவம் புரிந்தாள். அப்போது அருகில் சுசீந்திரத்தில் தாணுமாலயனாக இருந்த சிவபிரான் தேவியை மணக்க எண்ணினார். மணம் முடிந்தால் தங்கள் துயர் தீராதே என்று இதனால் தேவர்கள் பயந்தனர்.

    ஆனால் தேவரிஷியான நாரதர் இதுவும் சிவபிரானின் அருள் விளையாடலே என்பதை உணர்ந்தார். சிவபிரானின் முன், அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். மணம் முடிக்கும் இடத்திற்கு மாப்பிள்ளையான சிவபிரான் சூரியோதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே வந்து விட வேண்டும் என்றும் அப்படி வரவில்லை எனில் மணம் நடக்காது என்றும் அவர் கூற அதை அப்படியே சிவபிரான் ஏற்றார்.

    மண நாளன்று தாணுமாலயன் கன்னியாகுமரி இருந்த இடத்தை நோக்கி வரும் போது நாரதர் சேவல் வடிவில் இருந்து கூவினார்.

    சிவபிரான் விடிந்து விட்டது என்பதால் தன் இருப்பிடம் திரும்பினார். தன்னை மணக்க சிவபிரான் வருவார் என்று காத்திருந்த குமரியம்மன் அவர் வராததால் எல்லையற்ற கோபம் கொண்டாள்.

    திருமணத்திற்கென வைக்கப்பட்டிருந்த பண்டங்களையும் வண்ண மலர்களையும் கடற்கரைப் பரப்பில் வீசினாள்.

    இதுவே கன்னியாகுமரி கடற்கரை வண்ணமயமாக இன்றும் காட்சி அளிப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாணாசுரன் கன்னியாகுமரியின் அழகில் மயங்கித் தன்னை மணக்குமாறு கோரினான். தேவி மறுத்தாள். ஆனால் தேவியை மணக்க எண்ணிய அசுரன் அவள் அருகில் வந்த போது தேவியானவள் வானுயரும் வடிவம் எடுத்து அசுரனைக் காலில் போட்டு வதம் செய்தாள்.

    தேவர்கள் பூ மழை பொழிந்து தேவியின் உக்கிரத்தைத் தணித்தனர். தேவி சாந்தம் அடைந்து சிவபிரானை நோக்கிக் கடும் தவம் செய்ய ஆரம்பித்தாள். குமரி அம்மன் என்றும் பகவதி அம்மன் என்றும் துர்க்கை என்றும் பல்வேறு பெயர்கள் தேவிக்கு உண்டு.

    தன் யோக சக்தி அனைத்தையும் அம்மன் தனது மூக்குத்தியில் இறக்கி வைத்திருப்பதால் அந்த மூக்குத்தி ஜொலிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது. தூரத்தில் வரும் கப்பல்கள் மூக்குத்தி ஒளியால் வழி காட்டப்பட்டு வந்தன. சில மாலுமிகளோ மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்கம் என்று எண்ணி விபத்துக்குள்ளாயினர். ஆகவே கோவிலின் முன்புற வாயில் மூடப்பட்டு, வடக்குப் புறமாக வாயில் வைக்கப்பட்டது.

    கிழக்கு நோக்கி கொண்டு பகவதி அம்மன் உள் மண்டப கர்பக்ருஹத்தில் எழுந்தருளியுள்ளாள். ஒரு கரத்திலே இலுப்பைப் பூ மாலையை தரித்து மற்றொரு கரத்தைத் தொடை மீது அமர்த்தி தவக்கோலத்தில் அம்மன் காட்சி அளிக்கிறாள்.

    இங்கிருந்து சூரியோதயத்தைக் கண்டு மகிழ்வது சிறப்பாகும்.

    கன்னியாகுமரி ஹிந்து மதத்தின் எழுச்சிக்கு வழி கோலிய அற்புதத் தலமாகும். இங்கு தான் ஸ்வாமி விவேகானந்தர் தனது பாரத யாத்திரையின் போது வந்து 1892 டிசம்பரில் அருகிலிருந்த பாறைக்கு நீந்திச் சென்று மூன்று நாட்கள் தவம் புரிந்தார். அலைகடலின் மீது தோன்றிய ராமகிருஷ்ணர் அவரை வா என்று அழைக்கவே அவர் அமெரிக்கா செல்ல இறுதி முடிவு எடுத்தார்; அங்கு சென்றார். உலகையே வென்றார். அவர் தவம் புரிந்த இந்தப் பாறையில் விவேகானந்தர் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்ல படகு வசதிகளும் உண்டு. இந்தப் பாறையின் முக்கிய சிறப்பு அம்சம் இங்கு தேவியின் ஸ்ரீ பாதம் அமைந்திருப்பது தான். தேவி தவம் புரிந்த பாறை இது என்பதால் இது ஸ்ரீபாதப்பாறை என்று அழைக்கப்படுகிறது. தேவியின் பாதச் சுவடு உள்ள இடம் தரிசனம் செய்யக் கூடியபடி அழகுற பாதுகாக்கப்பட்டிருக்கிறது;

    இங்கு தான் உலகப் பொதுமறையான திருக்குறளை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவரின் சிலையும் உள்ளது.

    இப்படி தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு பயணம் மேற்கொள்பவர்கள் குற்றாலம், தென்காசி, திருச்செந்தூர், திருநெல்வேலி, சுசீந்திரம், கன்னியாகுமரி ஆகிய புகழ்பெற்ற இடங்களுக்குச் செல்ல நல்லதொரு பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். புத்துணர்ச்சியோடு தெய்வ அருளையும் பெறலாம்.

    தொடர் முடிகிறது.

    ஸ்ரீநகர், ஜெய்பூர், கோவா, கோவளம், மைசூர், விசாகப்பட்டினம், வழியாக ஒரிஸா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், பீஹார், ஹிமாசல் ப்ரதேசத்தில் உள்ள பல இடங்களுக்கும் சென்று கைலைமலை நாதனை தரிசித்து, தேவி கன்னியாகுமரியையும் தரிசித்ததோடு இந்தப் பயணத் தொடர் முடிவடைகிறது. ஊக்கமூட்டிய வாசகர்கள், மாலைமலர் நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுவாக மனிதர்களுக்கு வரும் நோய்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றோம்.
    • பிற பொதுப் போக்குவரத்து ஊர்திகள் ஆகியவற்றில் நோய்தாக்கிய ஒருவரிடமிருந்து கிருமிகள் படிகின்றன.

    உடலும் மனமும் நலமாக உள்ளனவா? என்பதை நாம் அவ்வப்போது ஆய்ந்தறிய வேண்டும். உடலுக்குள் உள்ள இரத்த அழுத்தம், இரத்தச் சர்க்கரை, ஹீமோகுளோபின், இரத்தக் கொழுப்பு, வைட்டமின் பி12 மற்றும் டி, தாது உப்புகள், மூளைக்குள் உள்ள வேதியியல் பொருட்கள் ஆகியவைகள் எவ்வளவு இருக்க வேண்டும், குறைந்தால் ஏற்படும் குறைகள் யாவை? பொதுவாக மனிதர்களுக்கு வரும் நோய்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றோம்.

    பரவா நோய்கள்: வாழ்வியல் முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்கள் (எ.கா நீரிழிவு நோய், மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய், வலிப்பு நோய்).

    பரவும் நோய்கள்: ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்றக்கூடிய தொற்றுநோய்கள் ஆறு முக்கிய வழிகள் மூலம் பரவுகின்றன. நேரடித் தொடர்பு, தொடுபொருட்களின் மூலம், காற்றுவழி, வாய்வழி, மற்றும் வெக்டார் மூலம், ரத்தம் மற்றும் உடலுறவு மூலம்.

    நேரடித்தொடர்பு: பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிப் பழகும்போது, நோயுற்ற ஒருவரிடமிருந்து நலமிக்க மற்றவருக்கும் நோய்கள் பரவுகின்றன.

    தொடுபொருட்களின் மூலம்: நாம் அன்றாடம் தொடக்கூடிய கைப்பிடிகள், கதவுகள், மின்பொருத்திகள், ஆடை, காகிதங்கள், எழுதுபொருட்கள், அலைபேசி, தொலைபேசி, கணினி, கணினி சார்ந்த பொருட்கள், நாற்காலி, மின்தூக்கி, பேருந்து, மற்றும் பிற பொதுப் போக்குவரத்து ஊர்திகள் ஆகியவற்றில் நோய்தாக்கிய ஒருவரிடமிருந்து கிருமிகள் படிகின்றன. இவற்றை நலமிக்க ஒருவர் தொடும்போது, அவருக்கு அந்நோய்த்தொற்று ஏற்படுகிறது.

    காற்றுமூலம்: நுண்ணுயிரிகளான பாக்டீரியா, பூஞ்சை அல்லது வைரஸ்கள் போன்றவை காற்றில் கலந்து மூச்சு மூலம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுகின்றன. எடுத்துக்காட்டுக்கு அம்மை, சளி, இருமல், மூளைக்காய்ச்சல் மற்றும் கோவிட்-19 ஆகிய அனைத்தும் இந்த வழியில் பரவக்கூடியவை.

    மரு.அ.வேணி

    வாய்வழி (உணவு நீர்) மூலம்: பெரும்பாலான நோய்கள் நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர் ஆகியவற்றில் கலந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. எடுத்துக்காட்டுக்கு போலியோ, வயிற்றுப்போக்கு.

    வெக்டார்மூலம்: இந்த நோய்கள் கொசுக்கள், உண்ணிகள் போன்ற பறக்கக் கூடிய அல்லது ஊர்ந்து செல்லக்கூடிய உயிரினங்கள் மூலம் மற்றவர்க்குப் பரவுகிறது.

    ரத்தம் மற்றும் உடலுறவின் மூலம்: சில வைரஸ், பாக்டீரியாக்கள் இம்முறையில் பரவுகின்றன. எடுத்துக்காட்டுக்கு எச்.ஐவி, ஹெபடைடிஸ்

    மேற்கூறிய அனைத்தும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் தன்மையுடைய நோய்கள். ஆனால் பரவா நோய்கள் அனைத்தும் நம் வாழ்வியல் முறை மாற்றங்களினால் ஏற்படுகின்றன. இவை வராமல் தடுக்க, நம் உடலின் நலம் எவ்வாறு உள்ளது? என்பதை ஆய்வு செய்து பார்த்துக்கொள்ள வேண்டியது நன்று. உடல் ஆய்வு என்பதை இரு வகையில் செய்யலாம். உங்களை நீங்களே தன்னாய்வு செய்து கொள்வது, முழு உடல் ஆய்வு மருத்துவமனைகளில் செய்து கொள்வது.

    தன்னாய்வு செய்து கொள்வது:

    உங்களை நீங்களே ஆய்ந்து கொள்வதை மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, கட்டாயம் செய்து கொள்வது நல்லது. உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களைத் தாண்டிச் சில கடினமானவற்றைச் அவ்வப்போது செய்ய முயல வேண்டும். இது தொடர்பான சிலவற்றை நான் இங்குக் குறிப்பிடுகிறேன்.

    மாதம் ஒரு முறை 10-15 கிலோமீட்டா் சைக்கிள் ஓட்டலாம்.

    6-10 கிலோமீட்டர் தொலைவு ஓட முயலலாம்.

    மலையில் உள்ள கோயில்களுக்குப் படிகளில் ஏறிச் சென்று வரலாம்.

    108 முறை சூரிய வணக்கம் (நமஸ்காரம்) என்ற யோகக் கலையைச் செய்ய முடிகிறதா? என ஆய்ந்து பார்க்கலாம்.

    500 முறை கயிறு தாண்டுதல் பயிற்சி மேற்கொள்ளலாம்.

    100 முறை தோப்புக்கரணம் போடலாம்.

    ஒரு மணிநேரம் அமைதியாக அமர்ந்து உங்கள் எண்ணங்களைக் கவனிக்கலாம்.

    நீங்கள் நாளும் மூன்று கிலோமீட்டர் நடைப்பயிற்சி மேற்கொள்பவராக இருந்தால், 10-கும் மேற்பட்ட கிலோமீட்டர் நடக்க முயன்றிடலாம்.

    இவற்றை நம்மால் செய்ய முடிந்தால் நம் உடல் நலமாய் இருக்கிறது என்று நம்மை நாமே பாராட்டிக் கொள்ளலாம். இப்படி நாம் செய்து பழகாத சில பயிற்சிகளை அவ்வப்போது செய்தால் நம் மூளையும், உடலும் அதன் திறனை அதிகரிக்க வாய்ப்பாக இருக்கும்.

    முழு உடல் ஆய்வு செய்து கொள்வது:

    தற்போது பல நிறுவனங்கள், தம்மிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக, இந்த முழு உடல் ஆய்வு செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்றன. மருத்துவமனைகளில் செய்யப்படும் முழு உடல் ஆய்வில், உடல் உறுப்புகளின் நலம் எவ்வாறு உள்ளது? என்று அறியப்படுகிறது.

    குறிப்பாக இரத்தத்தில் உள்ள அணுக்கள், சிறுநீரகத்தின் செயல்பாடு, கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்பாடு, இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு, இரத்தம் உறைதலின் தன்மை, இரத்தத்தில் உள்ள தாது உப்புகளின் அளவு, தைராய்டு சுரப்பியின் செயல்பாடு ஆகியவற்றை இரத்தம் மற்றும் சிறுநீர் ஆய்வு மூலம் கண்டறியப்படுகிறது. மேலும் இதயம் மற்றும் நுரையீரல் ஆய்வு, நெஞ்சுப்பகுதி எக்ஸ்-ரே, ரத்தக் குழாய்களை ஆய்வது, வயிற்றுப் பகுதி ஆய்வு ஆகியவற்றை உள்ளடக்கியது.

    சிலருக்குக் குறிப்பிட்ட இடர்பாடு இருப்பின், அவற்றிற்கு ஏற்றாற்போல் கண், மூளை, நரம்பு, பற்கள், காது மூக்கு தொண்டை ஆகிய பகுதிகள் ஆய்வு செய்து (CT or MRI Scan / TCD / Scopy) அறியப்படுப்படுகின்றன.

    சிலர், ஆண்டு தவறாமல் முழு உடல் ஆய்வு செய்து கொள்வார்கள். ஆனால் ஒரு சிலரோ, அதில் எவையேனும் சிக்கல்களைக் கண்டுபிடித்துவிட்டால், என்ன செய்வது? என்று அஞ்சி ஆய்வு செய்துகொள்ளவே மாட்டார்கள். 40 வயதைக் கடந்து விட்டால் நம் உடல் உறுப்புகளில் எவையேனும் மாற்றங்கள் இருக்கின்றனவா? இல்லையா? என்று ஆய்ந்து பார்ப்பதில் என்ன அச்சம் வேண்டியுள்ளது? சிக்கல்களைத் தொடக்க நிலைகளிலேயே கண்டறிந்து, சில வாழ்வியல் முறை மாற்றங்களை முதற் கட்டத்திலேயே செய்துவிட்டால், பின்னர்ப் பல்வேறு நோய்களுக்கு ஆளாகித் துன்புறும் நிலை ஏற்படாது அல்லவா? சிந்தித்துப் பாருங்களேன். எனவே தன் ஆய்வு மற்றும் முழு உடல் ஆய்வு தேவை என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

    செல்: 75980-01010, 80564-01010.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கைரேகை சாஸ்திரத்தை நுணுக்கமாக ஆராய்ந்து உலகுக்குச் சொன்ன மேதை சீரோ.
    • இவ்வாறு பெண்களுக்கு இருந்தால் மூன்றுக்கு ஒரு பங்கு சுப பலனும் மூன்றுக்கு இரண்டு பங்கு பாவ பலனும் உண்டாகும்.

    "உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்பார்கள்". இது கைரேகை சாஸ்திரத்தை பொறுத்தவரையில் சத்தியமான ஒன்று. கைரேகை சாஸ்திரம் என்பது ஒருவரின் கையில் உள்ள ரேகைகளை வைத்து அவரது குணாதிசயங்கள், கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய விவரங்களைச் சொல்வதாகும்.

    19ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் கைரேகை சாஸ்திரத்தை நுணுக்கமாக ஆராய்ந்து உலகுக்குச் சொன்ன மேதை சீரோ. இவர் இந்தியாவுக்கு வந்து, கைரேகை சாஸ்திர நிபுணர்களோடு் கலந்துரையாடி, ஆராய்ச்சி செய்து இந்த சாஸ்திரத்தை எளிய முறையில் எல்லோரும் அறியச் செய்தார். இவரைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் பல்வேறு அறிஞர்கள் இந்த சாஸ்திரத்தைப் பயின்று, அந்தந்த நாட்டு மக்களின் கலாசாரத்தை அனுசரித்து பலன்கள் சொல்லி வருகிறார்கள்.

    எனினும் இது, சுமார் 5000 வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் முனிவர் பெருமக்களால் அறியப்பட்டு, உலகுக்கு அருளப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். வால்மீகி மகரிஷி எழுதிய 'ஆண்களுக்கான ரேகை சாஸ்திரம்' என்ற நூலில் கைரேகை சாஸ்திரம் தொடர்பான விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மகாபாரத காலத்தில், பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் இந்த சாஸ்திரத்தைப் பரப்பினார். இந்தியாவில் இருந்து இந்த சாஸ்திரம் திபெத், எகிப்து, பெர்ஸியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகமானது.

    ''மனிதனின் கைகளில் உள்ள ரேகைகள் வெறும் கோடுகள் அல்ல; அது அவன் வாழ்க்கை வழிமுறை பற்றி இறைவனால் எழுதப்பட்ட வாசகங்கள்'' என்று கூறியுள்ளார் கிரேக்க நாட்டு அறிஞர் அரிஸ்டாடில்.

    ஜோதிடர் அ.ச.இராமராஜன்


    கி.மு. 350ல் உலகையே வென்ற மாமன்னன் அலெக்சாண்டர் இந்த சாஸ்திர அறிவு பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ராணுவ வீரர்களைத் தேர்ந்தெடுக்கும்போது தக்க அறிஞர்களைக் கொண்டு வீரர்களின் கைரேகைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தே முடிவெடுப்பது அலெக்சாண்டரின் வழக்கம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நமது உள்ளங்கையில் உள்ள ரேகைகள்தான் நமது தோற்றம், குணாதிசயங்கள், செயல்திறன், அறிவுத்திறன், ஆற்றல் திறன், வாழ்க்கை முறை ஆகியவற்றை விளக்க வல்லவை ஆகும்.

    தோல்வி மனப்பான்மை, மனச்சோர்வு, செயலின்மை, சோம்பேறித்தனம் இவை நீங்கி, புதிய உற்சாகம், செயல்படும் திறன், தன்னம்பிக்கை, வெற்றிக்காக உழைக்கும் ஊக்கம் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொண்டு, 'தன் கையே தனக்குதவி' என திட சித்தத்துடன் முன்னேறவும், ஓரளவு நமது எதிர்காலத்தை நாமே ஊகித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ளவும் கைரேகை ஜோதிடம் நமக்கு உதவுகிறது.

    இந்த கைரேகையை எப்படி பார்த்து கணிப்பது என்பது பற்றி விரிவாக காண்போம்.

    ஆண்கள் என்றால் வலது கையில் பார்க்க வேண்டும். பெண்கள் என்றால் இடது கையில் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். இது பொதுவாகச் சொல்லக் கூடியது தான். எனினும் அனுபவ ரீதியாகப் பார்க்கும் போது இரண்டு கையிலும் உள்ள ரேகையை பார்த்தால் தான் துல்லியமாக நாம் கணக்கிட்டுச் சொல்ல முடியும்.

    ஆண்களுக்கு இடக்கை ரேகையைப் பார்த்து நாற்பது வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், வலக்கை ரேகையைப் பார்த்து நாற்பது வயதிற்கு பிறகு நடக்கப்போகிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக்கை ரேகையைப் பார்த்து நாற்பது வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், இடக்கை ரேகையைப் பார்த்து நாற்பது வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும்.


    ஓர் ஆடவரின் இடக்கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலவீனமாக இருக்க, அவரது வலக்கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால், அவர் நாற்பது வயது வரை பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து, பின்னர் வாழ்நாளில் படிப்படியாக அவர் வெற்றியை ஈட்டுவார் என்கிறது கை ரேகை சாஸ்திரம். அதுவே, இரண்டு கைகளில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால் அந்த நபர் வாழ்நாள் முழுவதும் நல்ல சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவார். எனினும் இவ்வாறு அமைவது என்பது அதிசயம்.

    ஆண்களுக்கு வலக்கை ரேகை சிறப்பாக இருக்க, இடக்கை ரேகை அம்சங்கள் பலவீனமாக இருந்தால் இவர்களுக்கு மூன்றுக்கு இரண்டு பங்கு சுப பலனும் மூன்றுக்கு ஒரு பங்கு பாவ பலனும் உண்டாகும் என அறிய வேண்டும். இவ்வாறு பெண்களுக்கு இருந்தால் மூன்றுக்கு ஒரு பங்கு சுப பலனும் மூன்றுக்கு இரண்டு பங்கு பாவ பலனும் உண்டாகும். அதாவது ஆண்களுக்கு வலக்கை ரேகையும், பெண்களுக்கு இடக்கை ரேகையும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்ல வேண்டும்.

    கைரேகை சாஸ்திரமும் ரேகைகளும்: ஆண்களுக்கு வலக்கை ரேகையையும், பெண்களுக்கு இடக்கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் ஆய்வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும்.

    பொதுவாக கைகளில் காணப்படும் முக்கியமான ரேகைகள்:

    1. ஆயுள் ரேகை

    2. புத்தி ரேகை

    3. இதய ரேகை

    4.சுக்கிரனின் வட்டப்பாதை (இது அனைவர் கையிலும் இருக்காது)

    5. சூரிய ரேகை

    6. புதன் ரேகை

    7. விதி ரேகை

    கைரேகை மேடுகள்:

    மேடுகளின் படி விரல்களையும்

    குருவிரல் (ஆட்காட்டி விரல்),

    சனி விரல் (நடு விரல்),

    சூரிய விரல்(மோதிர விரல்),

    புதன் விரல் (சுட்டு விரல்)

    என்கிறார்கள்.

    ஆனால் கட்டை விரலை சுக்கிரவிரல் என்று கூறவில்லை.

    ஒவ்வொரு ரேகைகள் குறித்தும் விரிவான தகவல்களை இனிவரும் தொடர்களில் பார்க்கலாம்... 

    செல்:  9965799409


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெலுங்கானாவில் நடந்த தொடர் தற்கொலைகள் இந்த ஆப்களின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின.
    • ஆப் கடன் வலையில் சிக்குவது 21 வயது முதல் 40 வயது வரை உள்ள தினக்கூலிகள், விவசாயக்கூலிகள், மாணவர்கள், மற்றும் சிறுவணிகர்கள்.

    மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வத்தை நோக்கிய நம் பயணத்தில் தடைக்கல்லாக மறிக்கும் கடனை படிக்கல்லாக மாற்றும் சூட்சுமம் என்ன என்று பார்த்து வருகிறோம். நல்ல கடன்கள் எவை, கெட்ட கடன்கள் எவை, அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்று கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில் கட்டாயம் தவிர்க்கவேண்டிய மிக மோசமான கடன்கள் குறித்தும், பழக்கங்கள் குறித்தும் பார்க்கலாம்.

    அளவுக்கு மீறி பொருட்களைக் கடனில் வாங்கிக் குவிப்பவர்கள் ஒரு சிலரே. கல்வி, பிசினஸ், வீடு வாங்குதல் போன்ற பெரும் செலவுகளை சமாளிக்க முடியாமல் கடன் வாங்குபவர்கள்தான் அதிகம். அவர்களுக்குக் கடன் தர வங்கிகள், என்.பி.எப்.சி.க்கள் போன்ற நிதி நிறுவனங்கள் தயாராக உள்ளன. சரியான ஆவணங்கள், நியாயமான வட்டி விகிதம், மென்மையான அணுகுமுறை போன்றவற்றை இந்த நிறுவனங்களில் காணலாம். நம்மில் பெரும்பாலானோர் இந்த நல்ல கடன்களைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறியுள்ளோம்.

    ஆனால் இதுவரை மென்மையான போக்கைக் கடைப்பிடித்த வங்கி போன்ற நிதி நிறுவனங்களும் இப்போது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. ஏனெனில், சமீப காலங்களில் பொது மக்களின் சிறுகடன்கள் ஒழுங்காகத் திருப்பிக் கட்டப்படாததால் நிதி நிறுவனங்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. ஆகவே இந்த நிறுவனங்கள் போன், கடிதம், இமெயில் போன்ற பலவழிகளிலும் முயன்று பார்த்துவிட்டு, நீண்ட காலமாகக் கட்டப்படாத கடன்களை வசூலிக்கும் பொறுப்பை ஏஜன்டுகளிடம் தந்துவிடுகின்றன.

    இந்த வசூல் ஏஜன்டுகள் விதிமுறைகளை மீறி, கடனாளிகளின் வீடு, பணியிடம் போன்றவற்றுக்குச் சென்று அவர்களை வதைக்கின்றனர். கடன் தொல்லையில் தான் தவிப்பதை வெளியில் சொல்லும் தைரியம் இன்னும் பலபேருக்கு வரவில்லை. கடனை திரும்பிக் கட்ட வழி இல்லாமல், ரெக்கவரி ஏஜன்டுகளின் தொல்லை பொறுக்க இயலாமல் தற்கொலைக்கு முயல்பவர்கள் அநேகம். வேறு சிலரின் நிலைமை இன்னும் மோசம். அவர்கள் மாதச் செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலையில்தான் உள்ளனர். வங்கிகளிலும், என்.பி.எப்.சி.க்களிலும் இந்தக் கடன் கிடைக்காது என்பதால் தவிக்கும் இவர்களை கண் சிமிட்டி இழுப்பவை பிரபல பிளே ஸ்டோர்களில் கூட ஒளிந்திருக்கும் விபரீத ஆப்கள்.

    முகம் தெரியாத நிறுவனங்கள் தரும் ஆப்களை டவுன்லோட் செய்வதன் மூலம் சிறு கடன்களைப் பெற்று, அவற்றைத் திருப்பித் தர இயலாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகித் தவிக்கும் மக்கள் ஏராளம். தெலுங்கானாவில் நடந்த தொடர் தற்கொலைகள் இந்த ஆப்களின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின.

    கிரெடிட் கார்டுகளில் வட்டி விகிதம் 36 சதவீதம். இதுவே மிக அதிகம். ஆனால் கடன் ஆப்களில் வட்டி விகிதம் அதை விடப் பல மடங்கு அதிகம். வங்கிக் கடனைத் திருப்பிக் கட்ட குறைந்த பட்சம் ஒரு வருட காலம் அவகாசம் தருவார்கள். ஆனால் இந்த ஆப் கடன்களுக்கான காலம் ஏழு நாட்கள் முதல் ஒரு மாதம் வரை மட்டுமே. வங்கிகளில் பிராசஸிங் சார்ஜஸ் 1 சதவீதம்-3 சதவீதம் என்றால், இந்த ஆப்களில் அது 15 சதவீதம் முதல் 20 சதவீதம், அவற்றுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வேறு விதிக்கப்படும்.

    சுந்தரி ஜகதீசன்

    ஆனால் இது எதையும் புரிந்து கொள்ளாமல், அவசர காலத்தில் உடனடியாக கடன் கிடைப்பது ஒன்றையே கவனத்தில் கொண்டு, மக்கள் இவற்றில் கடன் பெறுகின்றனர். ஒருமுறை இந்த வலையில் விழுந்துவிட்டால் கரையேறுவது சிரமம். உதாரணமாக தினக்கூலியில் வாழ்க்கை நடத்தி வந்த ஒரு பெயின்டருக்கு ஒரு முறை மருத்துவச் செலவுக்காக மூவாயிரம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது. முறையாக மாதச் சம்பளம் இல்லாததால் வங்கிக் கடன் கிடைக்கவில்லை. மிகுந்த தவிப்பில் இருந்த அவருக்கு ஒரு என்.பி.எப்.சி. நிறுவனம் நடத்தும் போன் ஆப், வெறும் ஒரு போட்டோ ஐ.டி., ஆதார் நம்பர் மற்றும் ஒரு செல்பி புகைப்படம் –இவற்றைப் பெற்றுக் கொண்டு, இரண்டே மணி நேரத்தில் கடன் தந்தது.

    கடன் கிடைத்த களிப்பில் அவர் கவனிக்காத விஷயம் –ரூ.3000 கடனை ஒரே வாரத்தில் ரூ.4300 ஆக அவர் திருப்பித் தரவேண்டும் என்பது. அந்த ஏழே நாள் கடனுக்காக பிராசஸிங் சார்ஜஸ், வட்டி, ஜி.எஸ்.டி என்று அவர் அதிகமாக தரவேண்டிய தொகை ரூ.1300. இவற்றை பொருட்படுத்தாமல் அவர் கடனை அடைப்பதும், மீண்டும் பெறுவதுமாக இருந்தார். ஒருமுறை அவருக்கு வருமானம் குறைந்ததால், அவரால் குறித்த காலத்தில் அந்தக் கடனை அடைக்கமுடியவில்லை. அவருக்கு ஒரு நாளைக்கு ஒரு சதவிகிதம் என்ற ரீதியில் விதிக்கப்பட்ட பெனால்ட்டி மட்டுமே ரூ.5600 ஆக வளர்ந்து நின்றது. பிறகு ஆரம்பித்தது நரகவேதனை.

    கடன் நிறுவனமான ஃபோன் ஆப், அவரது போனில் உள்ள அவரது உறவினர் மற்றும் நட்பு வட்டாரங்களைத் தொடர்பு கொண்டு அவரின் நல்ல பெயரை நாசப்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் மூலம் பொய்யான போலீஸ் அறிக்கைகள் மற்றும் சட்ட நோட்டீஸ்கள் அவருக்கு அனுப்பப்பட்டன. மானத்துக்கு அஞ்சி தற்கொலையின் விளிம்பு வரை சென்ற அவர், மிகப் பெரும் போராட்டத்தின் பிறகே அந்தக் கடன் வலையில் இருந்து தப்ப முடிந்தது. இந்தப் புதிய ரக டிஜிட்டல் கந்து வட்டி முதலைகளால் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உயிருடன் விழுங்கப்படுகின்றனர். பல எளிய மக்களுக்கு டிஜிட்டல் அறிவோ, ஆங்கில அறிவோ இருப்பதற்கில்லை; ஆனால் மிக ஆபத்தான கடன்கள் போன் ஆப் வடிவில் எளிதாகக் கிடைக்கின்றன.

    இந்த ஆப் கடன் வலையில் சிக்குவது 21 வயது முதல் 40 வயது வரை உள்ள தினக்கூலிகள், விவசாயக்கூலிகள், மாணவர்கள், மற்றும் சிறுவணிகர்கள். அவர்களில் பலர் இதில் உள்ள ஆபத்து புரியாமல் நான்கைந்து ஆப்களை டவுன்லோடு பண்ணி வைத்துக் கொண்டு, அத்தனையிலும் கடன் பெற்று வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். இந்த ஆப்களில் பல, இந்தியாவில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டவை அல்ல; வெளிநாடுகளில், முக்கியமாக சீனாவில் இருந்து இங்குள்ள என்.பி.எப்.சி.களின் துணையுடன் இயங்குபவை. இவற்றைக் கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது.

    "கடன் வாங்குவதைக் குறைக்கவேண்டும் என்பது புரிகிறது; ஆனால் சிறிதும், பெரிதுமாக ஏற்கெனவே உள்ள கடன்களில் இருந்து எப்படி மீள்வது?" என்று கேட்கிறீர்களா? இதற்கு சில வழிகள் உண்டு. முதலில் உங்கள் கடன்களை சிறியதில் இருந்து பெரியது வரை பட்டியலிடுங்கள். கையில் கிடைக்கும் உபரித் தொகைகள் எவ்வளவு சிறியதானாலும் அவற்றை சிறு கடன்களை அடைக்க உபயோகப்படுத்துங்கள். இதன் மூலம் கடன்களின் எண்ணிக்கை குறைந்து ஒரு சில பெரிய கடன்கள் மட்டுமே மீதம் இருக்கும். கடன்களின் எண்ணிக்கை குறையக் குறைய உங்கள் உற்சாகம் அதிகரித்து மனம் கடன் கட்டுவதிலேயே குவிந்து நின்று உங்களை மீட்கும்.

    அல்லது உங்கள் கடன்களை வட்டி விகிதவாரியாகப் பட்டியலிடுங்கள். அதிக வட்டி வசூலிக்கும் கடனைக் குறி வைத்து சீக்கிரம் அடைக்கமுடிந்தால் உங்கள் வட்டிச்செலவு குறையும். அந்தப் பணத்தையும் சேர்த்து அடுத்தடுத்த கடன்களை வேகமாக அடைக்கமுடியும்.

    அல்லது நகைக் கடன், அடமானக் கடன் போன்று வட்டிவிகிதம் குறைவாக இருக்கும் ஒரு கடனில் பெரிய தொகையை எடுத்து அதிக வட்டி விகிதம் விதிக்கும் கடன்களை அடைப்பதன் மூலம் கடன்கள் எண்ணிக்கையையும், வட்டிச்செலவையும் குறைக்கலாம். சிலர் கிரெடிட் கார்ட், ஆப் கடன் போன்று 40 சதவீதம் வட்டி விகிதம் உள்ள கடன்கள் இருக்கும்போது, அவற்றை அடைக்காமல் 7 சதவீதம் தரும் வங்கி எப்.டி., 10 சதவீதம் தரும் மியூச்சுவல் பண்ட் ஆகியவற்றில் சேமித்துக் கொண்டு இருப்பார்கள். இவர்கள் சேமிப்பை சற்று நிறுத்தி வைத்து, அந்தத் தொகையையும் கடன்களின் எண்ணிக்கையைக் குறைக்க உபயோகிப்பது நல்லது.

    கடன் கொடுத்த நிறுவனத்திற்கும், கடனாளிகளுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு, கடனை அடைப்பதற்கு உதவும் கடன் ஆலோசனை மையங்கள் தற்போது நம் நாட்டிலும், பெரிய நகரங்களில் செயல்படத் துவங்கியுள்ளன. கடனாளியின் சார்பாக கடன் நிறுவனங்களை அணுகி, கட்ட வேண்டிய தொகையைக் குறைப்பதற்கு ஆலோசகர்கள் வழி வகுக்கிறார்கள். இதனால் கடன் வாங்கியவர், கொடுத்தவர் என இரு பாலாருமே பயன் அடைகிறார்கள். ஆனால் இவற்றைத் தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த கவனம் தேவை.

    இந்தக் கடன் வலைகளில் இனி விழக்கூடாது என்றால் கீழ்க்காணும் முறைகளைப் பின்பற்றலாம். வெள்ளம் போல் இன்று வரும் வருமானம், காலம் முழுவதும் தொடரும் என்று எண்ணிக் கொண்டு கடன்களை வாங்கிக் குவிக்கக்கூடாது. ஒரு சமயத்தில் ஓரிரண்டு கடன்கள் மட்டுமே இருக்கலாம். ஒரு கடன் முடிந்தபின் அடுத்த கடனை வாங்கலாம்.

    நம் வருமானத்தில் கடன் இ.எம்.ஐ. 30 சதவீதத்துக்கும் மிகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வருமானத்தில் இத்தனை பர்சென்ட் செலவு, இத்தனை பர்சென்ட் சேமிப்பு என்று முடிவு செய்து, அதனைப் பின்பற்றினால், வருமானம் கூடக்கூட செலவும், சேமிப்பும் சீராக அதிகரிக்கும்; அதன் மூலம் லைப்ஸ்டைலும் உயரும். எளிதில் கிடைக்கிறதே என்பதற்காகக் கடனை வாங்கி அதனை அநாவசிய செலவுகளில் ஊதித் தள்ளும் ஒரு சாரார் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. –அநாவசியமாகக் கடன் வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாடும், சரியாகக் கடனைக் கட்டும் ஒழுக்கமும் நம்மிடம் இல்லையெனில் செல்வந்தர் ஆவது பற்றி நாம் கனவு கூடக் காணமுடியாது என்பதே அது.

    உங்களிடம் எத்தனை கடன்கள் உள்ளன என்று பட்டியலிடுங்கள். அவற்றில் எதை முதலில் அடைக்கலாம் என்று திட்டமிட்டு செயல்படுங்கள்.

    ஆல் த பெஸ்ட்!

    ×