என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேஷ லக்னத்திற்கு 10,11-ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் உச்சம் பெறுவார்.
    • விருச்சிக லக்னத்திற்கு 3,4ம் அதிபதியான சனிபகவான் 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவார்.

    சாதாரண மனிதனை சாதனை மனிதனாக மாற்றும் சக்தி படைத்தவர் சனிபகவான். ஆணவம் அகம்பாவம் கொண்டவர்களை வீழ்த்துவதும் சனிபகவான். அதனால் தான் நமது முன்னோர்கள் சனியை போல் கொடுப்பவருமில்லை கெடுப்பவரும் இல்லை என்று சொல்லி வைத்தார்கள். எப்பொழுதும் எளிமையாக நிதானமாக நடந்து கொள்பவர்களை சனி பகவான் உயர்த்திக்கொண்டே செல்வார். அவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதை இருக்கும். ஒருவருக்கு நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோகம் உள்ளது என்றால் அவர் ஜாதகத்தில் சனி பகவான் நல்ல வளமான நிலையில் உள்ளார் என்று பொருள். அடிப்படை தேவைக்கு கூட கஷ்டப்படுபவர்கள் அடிமட்ட தொழில் செய்பவர்களுக்கு சனி பகவான் பலவீனமாக உள்ளார் என்று பொருள். ஒரு ஜாதகத்தில் சனி பகவான் ஏற்படக்கூடிய தாக்கம் நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கும். அது அவரவர்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்து அமையும்.

    இந்த ஜென்மத்தில் ஜாதகர் என்ன அனுபவிக்க பிறந்திருக்கிறாரோ அதை விதிப்படி நடத்துபவர் சனி பகவான். ஒருவர் எந்த மனத்தாங்களும் இன்றி நன்றாக இருக்கிறார் என்றால் அவருடைய சுய ஜாதகத்திலும் சனி கிரகத்தின் பங்களிப்பு சாதகமாக உள்ளது என்று பொருள். யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் சிறு சிறு மனவேதனை படக்கூடிய சம்பவங்கள் நடந்து தீரும். இத்தகைய சிறப்பு பெற்ற சனிபகவான் துலாம் ராசியில் 20 டிகிரியில் சுவாதி நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார். ஏழையாக இருந்த ஒருவன் பணக்காரனாக மாறும்போது தனது பழைய நிலையை மறந்து விடுவான் அதை மறக்காமல் நினைவில் நிறுத்தி வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே சனி பகவான் துலாம் ராசியில் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் உச்சம் ஆகிறார்.

    சனிபகவான் உச்சம் அடையும் சுவாதி நட்சத்திரத்தில் புதிய தொழில் தொடங்கலாம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் தொழில் உத்தியோகம் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுக்கலாம். இன்றைய நட்சத்திர நாளில் அரசு அரசாங்கம் சம்பந்தப்பட்ட எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. குழந்தை பாக்கியத்தில் குறை இருப்பவர்கள் திருமணமாகி பல வருடமாக குழந்தை இல்லாத தம்பதிகள் சுவாதி நட்சத்திர நாளில் பழகினால் கரு உண்டாகும்.

    திருமணம், புத்திர பாக்கிய தடை இருப்பவர்கள் இந்த நட்சத்திரநாளில் சிவபெருமானை வழிபட்டால் களத்திர தோஷம், புத்திர தோஷம் நீங்கும். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மறந்து யார் செயல்படுகிறார்களோ அவர்களை சனிபகவான் தண்டிக்க தவற மாட்டார். இத்தகைய சிறப்புமிக்க சனி பகவான் 12 லக்னத்திற்கும் உச்சம் பெறுவதால் உண்டாகும் பலன்களை பார்க்கலாம்.

    மேஷ லக்னத்திற்கு 10,11-ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். அவரே பாதகாதிபதி என்பதால் சிலருக்கு நண்பர்கள் தொழில் கூட்டாளிகளால் ஆதாயமும் இருக்கும் பாதகமும் இருக்கும். யாரை முழுமையாக நம்புகிறார்களோ அவர்களே இவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். இந்த அமைப்பு உள்ளவர்கள் பெரும்பான்மையாக இரண்டு திருமணத்தை சந்திக்கிறார்கள். இரண்டாவது திருமணம் நடந்த பிறகு தொழில் உத்தியோகத்தில் நிலையான நிரந்தரமான முன்னேற்றம் ஏற்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் மூலமாக வருமானம் மற்றும் சொத்துக்கள் சேர்க்கை உண்டு.

    ரிஷப லக்னத்திற்கு 9,10-ம் அதிபதியான சனி பகவான் ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனி பகவான் உச்சம் பெறுவார். பாக்யாதிபதி ஆறில் உச்சம் பெறுவதால் எளிதில் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து பேரப்பிள்ளைகளை பார்க்க முடியாது அல்லது தந்தை நோயாளியாக கடனாளியாக இருப்பார். தந்தையின் பாரத்தை ஜாதகர் சுமப்பார். அல்லது தந்தைக்கு வைத்தியம் செய்து ஜாதகர் கடனாளியாக மாறுவார். இவரே பாதகாதிபதியாக ஆறாம் இடத்தில் உச்சம் பெறுவதால் கடன் நோய் சார்ந்த பாதிப்புகள் ஜாதகருக்கு அதிகமாக இருக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

     

    அல்லது அதிகமாக கடன் பெற்று சொந்த தொழில் செய்து அதில் நஷ்டத்தை சந்திப்பார்கள். பொதுவாக ஆறில் உச்ச கிரகம் இருப்பது நல்லதல்ல. சனிபகவானுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம் என்றால் ஜாதகருக்கு நிச்சயமாக மீள முடியாத வழக்கும் உண்டாகும்.

    மிதுன லக்னத்திற்கு 8,9-ம் அதிபதியான சனி பகவான் ஐந்தில் உச்சம் பெறுவதால் பூர்வீகம், குலதெய்வம், அதிர்ஷ்டம், காதல் சார்ந்த விஷயங்களால் ஜாதகருக்கு வழக்கு வரலாம். குழந்தையின்மை, அபார்ஷன். அவப்பெயர், அவமானம். மன நிம்மதி இன்மை. முடிவெடுக்கும் திறன் இன்மை, உயில் சொத்து, பாலிசி பணம் ஏற்படும். பெரும் நஷ்டம், தற்கொலை எண்ணங்கள், வறுமை ஏற்படும். எவ்வளவு பாக்கிய பலன்கள் இருந்தாலும் அவை ஒரு மன சங்கடமும் இல்லாமல் அனுபவிக்க முடியாது. ஜாதகரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை உண்டு. தந்தை வழியில் துர்மரணம் நடந்திருக்கும். எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் அதிலிருந்து எளிமையாக மீண்டு வருவார்கள். சிலருக்கு மத நம்பிக்கை குறைவுபடும் அல்லது வேற்று மத வழிபாட்டில் ஆர்வம் செலுத்துவார்கள்.

    கடக லக்னத்திற்கு 7, 8-ம் அதிபதியான சனிபகவான் 4-ம்மிடமான சுகஸ்தானத்தில் உச்சம் பெறும்போது திருமணத்திற்கு பிறகு நல்ல பொருளாதாரம் கிடைக்கும். வாழ்க்கை துணை வசதியானவராக இருப்பார். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு பொருளாதார மேன்மை மிகுதியாக இருக்கும். தாயாரால் சொத்து வழக்கு வரலாம். தொழில் கூட்டாளி பிரச்சினை, நண்பர்களால் வம்பு, வழக்கு, திருமண வாழ்வில் பிரிவு, தீயவருடன் இணைந்திருக்கும் நிலை ஏற்படலாம். விபத்து நடக்கலாம். விவசாயிகள் கால்நடை வளர்ப்பவர்கள். பண்ணையாளர்கள் சுய ஜாதகம் அறிந்து தொழிலில் ஈடுபட வேண்டும். சில மாணவர்களுக்கு கல்வியில் தடை தாமதங்கள் வரலாம்.

    சிம்ம லக்னத்திற்கு 6,7-ம் அதிபதியான சனி பகவான் மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். வாழ்க்கைத் துணை கடனாளியாக அல்லது நோயாளியாக இருப்பார். ஜாமீன் சார்ந்த பிரச்சினைகளால் அவதி உண்டு. இளைய உடன்பிறந்த சகோதரன் தனது கடனை ஜாதகரின் மேல் திருப்பி விடுவார். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். தனிமையில் தவிப்பர். ஆறுதலாய் இருக்க முன் வருபவரையும் நோகடித்து விலக்குவர். அடிக்கடி வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம் செய்ய வேண்டிய நிலை இருக்கும். சொத்துக்களுக்கு முறையான ஆவணம் இருக்காது. முதல் திருமண பிரிவினையை தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

    கன்னியா லக்னத்திற்கு 5,6-ம் அதிபதியான சனிபகவான் தனம் வாக்கு குடும்பஸ்தானத்தில் உச்சம் பெறுவார். பிள்ளை பிறந்த பிறகு ஜாதகர் பூர்வீகத்தை விட்டு வெளியேறுவார். சரியாக உண்ண முடியாத, தூங்க முடியாத நோய் பாதிப்பு ஏற்படலாம். பெற்ற பிள்ளைகளுக்காக கடன்படுவார். பூர்விக சொத்தால் வம்பு, வழக்கு, கடன் நோய் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும். ஜாதகர் மருத்துவ குணம் நிறைந்தவர். இவர்களின் கை ராசி மருந்து சாப்பிட்டவர்களுக்கு நோய் எளிதில் குணமாகும் கைராசி மருத்துவர் என்று பெயரும் கிடைக்கும். முன்னோர்களின் பரம்பரை வியாதிகள் ஜாதகரே ஆட்டுவிக்கும்.

    துலாம் லக்னத்திற்கு 4,5-ம் அதிபதியான சனிபகவான் லக்னத்தில் உச்சம் பெறுவார். 12 லக்னங்களில் அதிக நன்மையை பெறுபவர்கள் துலாம் லக்னத்தினர் என்றால் அது மிகைப்படுத்தல் ஆகாது. பூர்வ புண்ணியம் மிகுந்தவர். வாழ்நாள் முழுவதும் புகழ் அந்தஸ்து உடன் வரும். குல தெய்வமே குழந்தையாக பிறக்கும். பிள்ளைகள் குல கவுரவத்தை காப்பாற்றுவார்கள். அறிவாளியாக புத்திக் கூர்மையுடன் இருப்பார்கள்.

    குல தெய்வ அருள் உண்டு. குல தெய்வ கோவில் நிர்வாகிகள் அல்லது கவுரவ பதவியில் இருப்பார்கள். அரசாங்க பதவி, அரச உத்தியோகம் உண்டு. சிறப்பான வீடு, வாகன யோகம் உள்ளவர்கள். பூர்வீகச் சொத்தை பல தலைமுறையினர் பயன்படுத்துவார்கள். சிலர் அதிர்ஷ்ட வசத்தால் தீடீர் பணக்காரர்களாக மாறுவார்கள்.

    விருச்சிக லக்னத்திற்கு 3,4ம் அதிபதியான சனிபகவான் 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். கல்வியில் மேன்மை இருக்காது. வெளியூர் வெளிநாட்டில் கல்வி கற்பார்கள். சொத்துக்களை உடன் பிறப்புக்காக விரயம் செய்வார்கள். முயற்சியில் தோல்வி, சகோதர இழப்பு, சகோதர சச்சரவு, தூக்கமின்மை ஏற்படும். செல்வ நிலையும் சீராக இருக்காது. சோம்பேறித்தனம், பயந்த குணம் போன்ற பலன்கள் ஏற்பட்டு ஜாதகர் எந்த முயற்சியும் செய்யாமல் மனோபலமும் குறைந்தவராக இருப்பார்கள். தகுந்த நிரந்தர, தொழில் உத்தியோகம் அமையாது. சிலர் உடன் பிறப்பிற்காக, குடும்பத்திற்காக மாடாக உழைத்தும் கெட்ட பெயர் எடுப்பார்கள். பிழைக்க தெரியாத ஏமாளிகள்.

    தனுசு லக்னத்திற்கு 2,3-ம் அதிபதியான சனி பகவான் லாப ஸ்தானத்தில் உச்சம் அடைவார் துலாம் லக்னத்திற்கு அடுத்த படியாக உச்ச சனியால் அதிக சுப பலன்களை அடைபவர்கள் தனுசு ராசியினர் என்றால் அது மிகைப்படுத்தல் ஆகாது. நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். வட்டித் தொழில், வாக்குத் தொழில், கமிஷன் தொழிலில் லாபம் பெறுவார்கள். மூத்த சகோதர ஆதாயமும் உண்டு. பாக்கியவான். நல்ல குணம் உள்ளவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர். ஆத்ம சக்தி உள்ளவர். லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

    அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பவர். வீடு, வாகனம் என சகல ஐஸ்வர்யங்களும் உண்டு. இரண்டு குடும்பம் உண்டு. இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு உயர்வு உண்டு.

    மகர லக்னத்திற்கு ராசி அதிபதி மட்டும் தன லாப அதிபதியான சனி பகவான் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குபவர்கள். தனது வாக்கு திறமையால் குடும்பத்தை காப்பாற்றுவதில் வல்லவன். பதவி, புகழ் அந்தஸ்து எளிதாக தேடி வரும். நிர்வாகத் திறமை உண்டு. அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள்.

    பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில் வல்லவர்கள். உற்றார் உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். தனது புத்தி சாதுர்யத்தால் பிறரை நல்வலிப்படுத்துவார்கள். பரம்பரையாக அரசு வேலை அல்லது அரசு பதவியில் இருப்பார்கள்.

    கும்ப லக்னத்திற்கு ராசி அதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் அடைவார். தந்தையின் தொழிலை செய்து பூர்வீகத்தில் பிழைப்பு நடத்துவார்கள். ஊரில் பெயர் சொன்னால் தெரியக்கூடிய வம்சத்தினராக இருப்பார்கள். நன்மக்கட்பேறு உண்டாகும். அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள். தொட்டது துலங்கும். குல தெய்வ கோவில் நிர்வாகிகள். வம்சா வழியாக பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். சுகமான இல்வாழ்க்கை உண்டு. அரசாங்க பணி உண்டு.

    அரசியலில் புகழ், பெயர், கவுரவம் உண்டு. முன்னோர்கள் கல்வி நிறுவனம் நடத்தியவர்கள் அல்லது ஜாதகர் கல்வி நிறுவனங்கள் நடத்துவார்.

    மீன லக்னத்திற்கு லாப அதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெறுவார். சொந்த மண்ணை விட்டு சென்று வெளியூர், வெளிநாட்டில் பிழைப்பு நடத்தி புகழ் பெறுவார்கள். அஷ்டமாதிபதி சுக்ரன் பலம் பெற்றால் விபரீத ராஜயோகம் உண்டாகும்.

    மூத்த சகோதரத்துக்கு கண்டம். மூத்த சகோதரத்துகளால் பொருள் இழப்பு ஏற்படும். லக்னாதிபதி குரு பலம் குறைந்தால் ஆயுள் பங்கம் ஏற்படும். வாழ்வு நாள் முழுவதும் ஏதாவது பிரச்சினையில் சிக்கி தவிப்பார். நோய்கள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை தாங்க முடியாத அளவில் இருக்கும். வம்பு, வழக்கு, விபத்து ஏற்படும். மறைமுக வருமானம் உண்டு. பொதுவாக சனிபகவான் வினைப்பதிவை மிகைப்படுத்தும் கிரகம் என்பதால் மிதமான பலத்துடன் இருப்பது நல்லது.

    செல்: 98652 20406

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும்.
    • மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.

    இன்று கல்லீரலுக்கென்றே சிறப்பு சிகிச்சை பிரிவுகள் நிறைய ஏற்படுத்தப்பட்டுள்ளன. காரணம் அந்த அளவிற்கு கல்லீரல் பாதிப்பு பரவலாகக் காணப்படுகின்றது.

    கல்லீரல் மனித உடலின் சக்தி மையம் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. உணவை செரிக்கும் முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. நச்சுகளை வெளியேற்றுகின்றது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகின்றது என 500-க்கும் மேற்பட்ட கல்லீரல் பணியினைச் சொல்லலாம்.

    கல்லீரல் சத்தமில்லாது உடல் பணியினைச் செய்கிறது.

    கல்லீரல் வயிற்றின் வலது பக்கத்தில் விலா எலும்புக்களுக்கு அடியில் அமைந்துள்ளது பெரிய உறுப்பு. இதனை பெரிய தொழிற்சாலை என்றே சொல்லலாம்.

    * பித்த நீரினை உற்பத்தி செய்கின்றது. ரத்தத்தில் நச்சுகளை நீக்குகின்றது. ரத்தம் உறைவதற்கான புரதங்களை உருவாக்குகின்றது. ஹார்மோன் அளவினை சீர்படுத்துகின்றது. ஊட்டசத்துகள், வைட்டமின்கள், தாதுக்கள், குளுகோசினை சேமிக்கின்றது.

     

    கமலி ஸ்ரீபால்

    இத்தகு கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் என்னாவது? பொதுவில் மது, வைரஸ் தொற்று ஏ. பி. சி, கொழுப்பு கல்லீரல் நோய், மருந்துகளின் பக்க விளைவுகள், மரபணு கோளாறுகள், தவறான உணவு பழக்கங்கள் இவை பாதிப்பிற்கு முக்கிய காரணம் ஆகின்றன.

    கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும். பிலிரூபின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும்.

    * வயிறு வலி, வீக்கம், வலது பக்க மேல் வயிற்றில் வலி, வீக்கம், கல்லீரல் வீக்கம் அல்லது திரவம் சேருவதால் ஏற்படும் பாதிப்பு.

    * அதிக சோர்வு, எப்போதும் பலவீனமாய் உணர்வது. எப்போதும் பலவீனமாக இருத்தல், கல்லீரல் ஆற்றல் உற்பத்தியை பாதிக்கின்றது.

    * அரிப்பு- விடாமல் உடலில் அரிப்பு, பித்த அமிலம் தோலில் சேருவதால் அரிப்பு ஏற்படுகின்றது.

    * அயர்ந்த சிறுநீர்- சிறுநீர் பழுப்பு நிறமாக இருக்கும். பிரிரூபின் சிறுநீரில் கலக்கின்ற காரணத்தினால் ஏற்படுகின்றது.

    * மன குழப்பம்- கவனக்குறைவு, மறதி இருக்கும், நச்சுகளின் பாதிப்பால் ஏற்படுகிறது.

    * பசியின்மை, எடை குறைதல்- ஊட்டச்சத்தினை உறிஞ்சுவதில் குறைபாடு.

    * எளிதில் சிராய்ப்பு ஏற்படும். ரத்தக்கசிவு, ரத்த போக்கு ஏற்படலாம், ரத்த உறைதல் குறைபாட்டால் ஏற்படுகின்றது.

    கல்லீரல் பிரச்சினை பிரிவுகள்

    * வைரஸ் தொற்றில் ஏ, பி, சி பிரிவுகள் உள்ளன. ஏ பிரிவு அசுத்தமான உணவு. நீரால் பரவுகின்றது. மஞ்சள் காமாலை, வயிற்றுப் பிரட்டல் ஆகியவை இருக்கும்.

    * வைரஸ் பி, சி பிரிவு ரத்தம், உடல் திரவங்கள் மூலம் பரவலாம். முதலில் அறிகுறிகள் கூட காட்டாமல் இருக்கலாம். ஆனால் இவை கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு வரைக் கூட ஏற்படுத்தலாம்.

    * கொழுப்பு கல்லீரல்- இது இரு பிரிவு படும். ஆல்கஹால் சார்ந்தது. அடுத்தது ஆல்கஹால் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு. இதற்கு நீரிழிவு நோய், உடல் பருமன், கொழுப்பு உணவு ஆகியவை காரணம் ஆகின்றன. வயிற்று வலி, சோர்வு ஆகிய வெளிப்பாடுகள் இருக்கும்.

    * சிரோசிஸ்- இது கல்லீரலில் வடுக்களை ஏற்படுத்துவது ஆகும். மது, வைரஸ், பிற நோய்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். வயிறு வீக்கம், கால் வீக்கம், குழம்பிய மனம் போன்றவை காணப்படும்.

    * கல்லீரல் புற்றுநோய்- இது கடுமையான ஆபத்தான நிலை. வைரஸ் பி, சி, சிரோசிஸ் இவை காரணமாக அமையலாம். எடை குறைந்து மெலிந்து இருப்பர், மஞ்சள் காமாலை, வயிற்று வலி பாதிப்பு இருக்கும்.

    * ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்கள்- உட லின் நோய் எதிர்ப்பு அமைப்பு கல்லீரலைத் தாக்குவதால் ஏற்படும் பாதிப்பாகும். எதனையும் ஆரம்ப காலத்தில் கண்ட றிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.

    * ரத்தப் பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு சோதனை, வைரஸ் சோதனை, பிலிரூபின் சோதனை ஆகியவை அவசியம்.

    * இமேஜிங்ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் கல்லீரல் அளவு, வீக்கம், பாதிப்பு இவற்றினை அறிய உதவும்.

    * பயாபசி-புற்றுநோய் பாதிப்பினை உறுதி செய்யும் பரிசோதனை முறையாகும்.

    வரும்முன் தடுப்போம் மூலமாக கல்லீரலை எப்படி பாதுகாக்கலாம்?

    * மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.

    * சத்தான உணவு- காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் போன்ற கொழுப்பு சத்து குறைந்த உணவுகள் ஆகியவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பினைத் தவிர்க்கும்.

    * சுத்தத்தினை கடை பிடித்தல். ரத்த பரிமாற்றம், தரமான ஊசிகள் போன்றவை அவசியம்.

    * உடற்பயிற்சி அவசியம். உடல் பருமன், சர்க்கரை கட்டுப்பாடு, இவற்றுக்கு உறுதுணையாய் இருக்கும்.

    * முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

    * வைரஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * பச்சை காய்கறிகள், கீரை வகைகள், புரோகலி, காலி பிளவர் மற்றும் மீன், பருப்பு வகைகள், முட்டை வெள்ளைக்கரு மற்றும் 2 முதல் 3 லிட்டர் நீர் அன்றாடம் குடித்தல் மற்றும் அதிக சர்க்கரை, துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றினை தவிர்த்தல் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.

    (செரிமானத்தில் கல்லீரல் பங்கு என்பது மிக முக்கியமானது. பித்த நீரை உருவாக்குகின்றது. கொழுப்பு செரிமானத்திற்கு இது முக்கியமானது.

    * ரத்தத்தில் நச்சுத் தன்மையினை நீக்குகின்றது.

    * வளர்சிதை மாற்றங்களுக்குப் பொறுப்பானது.

    * நஞ்சு, மருந்து, சுற்றுப்புற சூழலால் உடலில் சென்று தீங்கு விளைவிக்கும் பொருட்கள். இவைகளை ரத்தத்தில் இருந்து நீக்குகின்றது.

    * கல்லீரல் செல்கள் உடலுக்கு தேவையான பல புரதங்களை உற்பத்தி செய்கின்றன.

    * ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த உதவும். ஆஞ்சியோ டென்சினோஜன் என்ற ஹார்மோனை வெளியிடுகின்றது. மேலும் பல செயல்கள் பற்றி முன்பே அறிந்தோம்.

    கல்லீரல் ஆரோக்கியம் வாழ்வின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை தேவை ஆகும்.

    ஆரோக்கியமான கல்லீரல் உடலை காக்கும் அமைதியான தேவதை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பினைத் தவிர்க்கும்.
    • ஆரோக்கியமான கல்லீரல் உடலை காக்கும் அமைதியான தேவதை.

    இன்று கல்லீரலுக்கென்றே சிறப்பு சிகிச்சை பிரிவுகள் நிறைய ஏற்படுத்தப்பட்டுள்ளன. காரணம் அந்த அளவிற்கு கல்லீரல் பாதிப்பு பரவலாகக் காணப்படுகின்றது.

    கல்லீரல் மனித உடலின் சக்தி மையம் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. உணவை செரிக்கும் முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. நச்சுகளை வெளியேற்றுகின்றது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகின்றது என 500-க்கும் மேற்பட்ட கல்லீரல் பணியினைச் சொல்லலாம்.

    கல்லீரல் சத்தமில்லாது உடல் பணியினைச் செய்கிறது

    கல்லீரல் வயிற்றின் வலது பக்கத்தில் விலா எலும்புக்களுக்கு அடியில் அமைந்துள்ளது பெரிய உறுப்பு. இதனை பெரிய தொழிற்சாலை என்றே சொல்லலாம்.

    * பித்த நீரினை உற்பத்தி செய்கின்றது. ரத்தத்தில் நச்சுகளை நீக்குகின்றது. ரத்தம் உறைவதற்கான புரதங்களை உருவாக்குகின்றது. ஹார்மோன் அளவினை சீர்படுத்துகின்றது. ஊட்ட சத்துகள். வைட்டமின்கள், தாதுக்கள், குளுகோசினை சேமிக்கின்றது.

     

    இத்தகு கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் என்றாவது? பொதுவில் மது, வைரஸ் தொற்று ஏ.பி.சி, கொழுப்பு கல்லீரல் நோய், மருந்துகளின் பக்க விளைவுகள், மரபணு கோளாறுகள், தவறான உணவு பழக்கங்கள் இவை பாதிப்பிற்கு முக்கிய காரணம் ஆகின்றன.

    கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும். பிலிரூபின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும்.

    * வயிறு வலி, வீக்கம், வலது பக்க மேல் வயிற்றில் வலி, வீக்கம், கல்லீரல் வீக்கம் அல்லது திரவம் சேருவதால் ஏற்படும் பாதிப்பு.

    * அதிக சோர்வு, எப்போதும் பலவீனமாய் உணர்வது. எப்போதும் பலவீனமாக இருத்தல், கல்லீரல் ஆற்றல் உற்பத்தியை பாதிக்கின்றது.

    * அரிப்பு- விடாமல் உடலில் அரிப்பு, பித்த அமிலம் தோலில் சேருவதால் அரிப்பு ஏற்படுகின்றது.

    * அயர்ந்த சிறுநீர்- சிறுநீர் பழுப்பு நிறமாக இருக்கும். பிரிரூபின் சிறுநீரில் கலக்கின்ற காரணத்தினால் ஏற்படுகின்றது.

    * மன குழப்பம்- கவனக்குறைவு, மறதி இருக்கும், நச்சுகளின் பாதிப்பால் ஏற்படுகிறது.

    * பசியின்மை, எடை குறைதல்- ஊட்டச் சத்தினை உறிஞ்சுவதில் குறைபாடு.

    * எளிதில் சிராய்ப்பு ஏற்படும். ரத்த கசிவு, ரத்த போக்கு ஏற்படலாம், ரத்த உறைதல் குறைபாட்டால் ஏற்படுகின்றது.

    கல்லீரல் பிரச்சினை பிரிவுகள்

    * வைரஸ் தொற்றில் ஏ,பி,சி பிரிவுகள் உள்ளன. ஏ பிரிவு அசுத்தமான உணவு. நீரால் பரவுகின்றது. மஞ்சள் காமாலை, வயிற்றுப் பிரட்டல் ஆகியவை இருக்கும்.

    * வைரஸ் பி, சி பிரிவு ரத்தம், உடல் திரவங்கள் மூலம் பரவலாம். முதலில் அறிகுறிகள் கூட காட்டாமல் இருக்கலாம். ஆனால் இவை கல்லீரல் புற்று நோய் பாதிப்பு வரைக் கூட ஏற்படுத்தலாம்.

    * கொழுப்பு கல்லீரல்- இது இரு பிரிவு படும். ஆல்கஹால் சார்ந்தது. அடுத்தது ஆல்கஹால் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு. இதற்கு நீரிழிவு நோய், உடல் பருமன், கொழுப்பு உணவு ஆகியவை காரணம் ஆகின்றன. வயிற்று வலி, சோர்வு ஆகிய வெளிப்பாடுகள் இருக்கும்.

    கமலி ஸ்ரீபால்

     

    * சிரோசிஸ்- இது கல்லீரலில் வடுக்களை ஏற்படுத்துவது ஆகும். மது, வைரஸ், பிற நோய்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். வயிறு வீக்கம், கால் வீக்கம், குழம்பிய மனம் போன்றவை காணப்படும்.

    * கல்லீரல் புற்று நோய்- இது கடுமையான ஆபத்தான நிலை. வைரஸ் பி, சி, சிரோசிஸ் இவை காரணமாக அமையலாம். எடை குறைந்து மெலிந்து இருப்பர், மஞ்சள் காமாலை, வயிற்று வலி பாதிப்பு இருக்கும்.

    * ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்கள்- உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு கல்லீரலைத் தாக்குவதால் ஏற்படும் பாதிப்பாகும். எதனையும் ஆரம்ப காலத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.

    * ரத்தப் பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு சோதனை, வைரஸ் சோதனை, பிலிரூபின் சோதனை ஆகியவை அவசியம்.

    * இமேஜிங்ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் கல்லீரல் அளவு, வீக்கம், பாதிப்பு இவற்றினை அறிய உதவும்.

    * பயாபசி-புற்று நோய் பாதிப்பினை உறுதி செய்யும் பரிசோதனை முறையாகும்.

    வரும்முன் தடுப்போம் மூலமாக கல்லீரலை எப்படி பாதுகாக்கலாம்?

    * மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.

    * சத்தான உணவு- காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் போன்ற கொழுப்பு சத்து குறைந்த உணவுகள் ஆகியவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பினைத் தவிர்க்கும்.

    * சுத்தத்தினை கடை பிடித்தல். ரத்த பரிமாற்றம், தரமான ஊசிகள் போன்றவை அவசியம்.

    * உடற்பயிற்சி அவசியம். உடல் பருமன், சர்க்கரை கட்டுப்பாடு, இவற்றுக்கு உறுதுணையாய் இருக்கும்.

    * முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

    * வைரஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * பச்சை காய்கறிகள், கீரை வகைகள், புரோகலி, காலி பிளவர் மற்றும் மீன், பருப்பு வகைகள், முட்டை வெள்ளைக்கரு மற்றும் 2 முதல் 3 லிட்டர் நீர் அன்றாடம் குடித்தல் மற்றும் அதிக சர்க்கரை, துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றினை தவிர்த்தல் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.

    (செரிமானத்தில் கல்லீரல் பங்கு என்பது மிக முக்கியமானது. பித்த நீரை உருவாக்குகின்றது. கொழுப்பு செரிமானத்திற்கு இது முக்கியமானது.

    * ரத்தத்தில் நச்சுத் தன்மையினை நீக்குகின்றது.

    * வளர் சிதை மாற்றங்களுக்குப் பொறுப்பானது.

    * நஞ்சு, மருந்து, சுற்றுப்புற சூழலால் உடலில் சென்று தீங்கு விளைவிக்கும் பொருட்கள். இவைகளை ரத்தத்தில் இருந்து நீக்குகின்றது.

    * கல்லீரல் செல்கள் உடலுக்கு தேவையான பல புரதங்களை உற்பத்தி செய்கின்றன.

    * ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த உதவும். ஆஞ்சியோ டென்சினோஜன் என்ற ஹார்மோனை வெளியிடுகின்றது. மேலும் பல செயல்கள் பற்றி முன்பே அறிந்தோம்.

    கல்லீரல் ஆரோக்கியம் வாழ்வின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை தேவை ஆகும்.

    ஆரோக்கியமான கல்லீரல் உடலை காக்கும் அமைதியான தேவதை.

    தயிர் குளிர் காலத்தில் எடுத்துக் கொள்ளலாமா?

    சிலருக்கு அலர்ஜி இருக்கலாம். மற்றபடி தயிர் குளிர் காலத்திலும் எடுத்துக் கொள்ளலாம். சில்லென்று இல்லாமல் எப்போதும் சாதாரண இயற்கை நிலையில் எடுத்துக் கொள்வது நல்லது.

    * தயிர்-கால்சியம், புரதம், பி12, பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்து நிறைந்தது.

    * கால்சியம் பாஸ்பரஸ் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

    * நல்ல குடல் பாக்டீரியா கொண்டது. வைட்டமின் பி சத்து கொண்டது.

    கொலஸ்டிராலை குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும்.

    இருதய ஆரோக்கியதற்கு நல்லது.

    வயிற்று போக்கு உள்ளவர்களுக்கு தயிர் நல்லது.

    உடல் பருமன் குறையும்.

    குடல் புற்றுநோய் அபாயம் குறையும்.

    அதிகம் அடர்ந்த தயிராக இல்லாமல் கொழுப்பு சத்து குறைவான பாலில் தயாரிக்கும் தயிர் நல்லது.

     

    உப்பு-இது தாது உப்புகளில் ஒன்று. உப்பு சத்து உடலில் குறையும் போது தலைவலி, வயிற்று பிரட்டல், சோர்வு, தசை பிடிப்பு, குழப்பம், வலிப்பு, கோமா நிலை போன்றவை ஏற்படலாம்.

    உப்பு குறைபாடு செல்களை குறிப்பாக மூளை செல்களை பாதிப்படைய செய்யும்.

    பண்டை காலம் முதல் இன்றுவரை அநேகரும் நம்நாட்டில் உப்பளங்களில் இருந்து தயாரிக்கப்படும் கல் உப்பு, கடல் உப்பினை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.

    கடல் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இது உடலில் நீர் சத்து, ரத்த அழுத்தம் இவற்றினை சீர்செய்ய உதவுகிறது. மேலும் இது அதிக சுத்தகரிப்பு முறை, பதப்படுத்துதல் இவை இல்லாததால் பொட்டாசியம், இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்களும் உடையது. இந்த காரணங்களினால் இதை உயர்ந்ததாக குறிப்பிடுபவரும் உண்டு. ஆனால் இந்த மற்ற தாதுக்களின் பலனை பெற நாம் அதிகளவில் உப்பினை எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் இந்த தாதுக்களை மற்ற உணவு பொருட்களில் இருந்தும் பெற முடியும். சோடியம் உடலின் நீர் சத்து சம நிலைக்கு முக்கியமானது. இது குறையும் போது உடலில் நீர்சத்து குறைதல், ரத்த அழுத்தம் மாறுபடுதல் ஆகியவை ஏற்படலாம். உப்பு அதிகம் உட்கொள்வதும், குறைந்து உட்கொள்வதும் ரத்த அழுத்த பாதிப்பினை ஏற்படுத்தும்.

    குளோரைட் வயிற்றில் தேவையான அளவு ஆசிட் சுரக்க அவசியம் ஆகின்றது. சோடியம் குளோரைடில் உள்ள குளோரைட் சிறிது சத்துக்களை உறிஞ்சி உடலுக்கு அனுப்ப உதவுகின்றது. ஆக அளவான உப்பு செரிமானத்திற்கு உதவும். உப்பு கலந்த நீரில் குளிப்பது சரும வறட்சி, வீக்கத்தினை நீக்கும். கடல் உப்பில் மக்னீசியம் சத்து அதிகம் இருப்பதால் சரும பாதிப்புகளுக்கு நல்லது.

    அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே சிப்ஸ், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்கு தீனி போன்றவற்றினை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றது.

    * பொதுவில் உயர் ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, சிறுநீரக நோய் உள்ளவர்களை அவருக்கேற்ற அன்றாட உப்பின் அளவினை டாக்டர் பரிந்துரைப்பார்.

    'அதிக உப்பு அமைதியாய் கொல்லும்' என்பர்.

    அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு இன்று பரவலாக பழக்கத்தில் உள்ளது.

    * தைராய்டு ஹார்மோன் நோய் இயங்க உதவும்.

    * அயோடின் குறைபாட்டினைத் தவிர்க்க உதவும்.

    * எலும்பு, மூளை வளர்ச்சிக்கு உதவும். குறைந்த அயோடின் உணவு அறிவுறுத்தப்படுபவர்கள் அயோடின் கலந்த உப்பினை தவிர்ப்பது அவசியம்.

    வளர்ந்தவர்கள் 2,300 மி.கி.க்கு குறைந்த அளவு சோடியம் உணவில் சேர்க்கலாம். 1500 மி.கி. என்பது மிகச் சிறந்தது. இது ஒரு டீஸ்பூன் (5 கி) உப்பு அளவு எனலாம். ஆனால் நாம் உண்ணும் உணவில் மிக அதிக அளவு உப்பு உள்ளது. ரெடிமேட் உணவுகள், பாக்கெட் உணவுகளில் அதிக அளவு உப்பு இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே வீட்டில் சமைத்து அளவான உப்பு சேர்த்து உண்ண பழக வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவண்ணாமலையில் முருகன் அருணகிரி நாதருக்கு உபதேசம் செய்தார்.
    • முருகனிடம் நேரடி உபதேசம் பெற்றவர்கள் அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆவர்.

    வாழ்க்கை என்பது இன்றைய கால கட்டத்தில் ஒரு பெரிய சவாலாகவே இருக்கின்றது. எல்லோர் மனதிலும் எனக்கு மகிழ்ச்சியும் வேண்டாம். துக்கமும் வேண்டாம். பிரச்சினை இல்லாமல் ஒவ்வொரு நாளையும் கடந்தால் போதும் என்றுதான் இருக்கின்றது. ஆனால் அதனை கடப்பதற்கே ஆரோக்கியம், படிப்பு, உத்தியோகம், வருமானம் இவை அடிப்படை தேவை ஆகின்றன. இதில் குடும்பம், உறவுகள் இவர்களின் மீதுள்ள பாசமே நம்மை துரத்தி இயக்குகின்றது எனலாம். நூறு பிரச்சினைகளும், போராட்டங்களும் 24 மணி நேரமும் நம் உடலினையும், மனதினையும் ஆட்டிப் படைக்கின்றன. முயற்சி செய்தும் இலக்கை-அடிப்படை தேவையை அடைய முடியாத பொழுது அநேகர் நடமாடும் ஜீவன் அற்றவர்களாக இருக்கின்றோம். அந்நேரங்களில் மனிதனுக்கு ஒரு வடிகால் தேவைப்படுகின்றது. அந்த வடிகால்தான் இறைவன்.

    அவரை நீங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் எனலாம்

    குல தெய்வம் எனலாம். இஷ்ட தெய்வம் எனலாம்

    பிள்ளையார், முருகன், அம்மன் எனலாம்

    அல்லா எனலாம் இயேசு எனலாம்

    இன்னும் எத்தனையோ தெய்வங்களின் பெயரைச் சொல்லி வழிபடலாம்.

    பலர் தன் மீது நம்பிக்கை, தன்னம்பிக்கை என்ற உறுதியுடனும் இருக்கலாம்.

    இது ஒவ்வொரு தனி மனிதனின் விருப்பம் சுதந்திரம். அநேகர் அவரவர் பரம்பரை வழியில் பார்த்து வருவதால் அதனை தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.

    ஆக மனிதனுக்கு அவன் வாழ்க்கையினைக் கடக்க ஒரு துடுப்பு தேவையாக இருக்கின்றது. பிடிப்பு தேவையாக இருக்கின்றது. பொதுவாக நம் தமிழ்நாட்டில் முருக வழிபாடு என்பது காலம் காலமாய் இருக்கின்றது. சஷ்டி விரதமும், காவடி வழிபாடும் கோலாகலமாக காணப்படும் ஒன்று.

    'எங்களுக்கு பாதுகாப்பு கொடு, ஞானம் கொடு... என்று அவரவர் தேவைக்கேற்ப வேண்டுதல்களை வைத்து விரதம், மவுன விரதம், பாதயாத்திரை செய்து ஊர் குலுங்கும் விழாவாக நடத்துகின்றனர்.

    * முருகன் என்றாலே அழகுதான். ஓம் என்ற பிரணவத்தின் வடிவம்.

     

    * ஆறு பகைவர்களை அழித்தவர். (ஆணவம், கம்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்)

    * சரவணப் பொய்கையில் முருகன் ஆறு குழந்தைகளாய் பிறந்தார்.

    * தமிழ் குறிஞ்சி நிலக் கடவுள். எத்தனை பெயர்கள் இவருக்கு கார்த்திகேயா, கந்தா, சுப்ரமணியா, குமரா, குகா, சண்முகா, ஆறுமுகா....

    * பரம சிவன், பார்வதியின் புதல்வர், பிள்ளையாரின் இளைய சகோதரர்.

    * சிவபிரான் நெற்றிக் கண்ணில் உதித்தவர்.

    * கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர்.

    * ஆறு குழந்தைகளை பார்வதி தாயார் ஒரு சேர அணைக்க ஆறு முகங்கள் கொண்ட ஒருவரானார்.

    * என்றும் இளமையானவர்.

    * அவரது வேல் வெறும் ஆயுதம் மட்டுமல்ல. அறியாமை தடைகளை நீக்கும் சக்தி கொண்டவை. அன்னை சக்தியால் அதை பெற்றவர்.

    * மயில் வாகனம் கொண்டவர். மயில் காலில் பாம்பு. இவை ஆணவம், அழிவுப் பூர்வமான சிந்தனைகளை அழிக்கும் என குறிப்பிடுகின்றது.

    * குகர்- குகைகளிலும், குன்றுகளிலும் இருப்பவர்.

    * தந்தைக்கே உபதேசம் செய்த சாமிநாதன்.

    * போர் கடவுள். அசுரர்களை அழித்தவர்.

    * தமிழ் கடவுள்.

    * ஆறுபடை வீடுகளைக் கொண்டவர்.

    * தைப்பூச விழா மிகவும் சிறப்பு பெற்றது.

    * வட இந்தியாவில் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றவர்.

    * சிலோன், மலேசியா என ஏனைய நாடுகளிலும் இவர் கோவில்கள் உண்டு.

    * அறுபடை வீடுகள்

    * திருப்பரங்குன்றம்-தெய்வானை திருமணம் செய்த இடம்.

    * திருச்செந்தூர்-சூரபத்மனை அழித்து சூரசம்ஹாரம் செய்த இடம்.

    * பழநி-ஞானம் நிறைந்த இடம். சுவாமிமலை- ஓம் என்ற பிரணவத்தின் பொருளை தந்தைக்கு உபதேசித்த தலம்.

    திருத்தணி- அமைதி தரும் இடம்.

    * பழமுதிர் சோலை-அவ்வையார் ஆசி பெற்ற இடம்.

    கமலி ஸ்ரீபால்


     

    எத்தனை எததனையோ முருக பக்தர்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் பழநியில் நவபாஷாண முருக சிலையினை உருவாக்கி ஸ்தாபித்த போகர் சித்தரை மறக்க முடியுமா? கி.மு. 200களில் வாழ்ந்தவர். இன்றும் பழநியில் ஜீவ சமாதியாக இருப்பவர். சீன நாட்டிற்க்கும் சென்றவர். பழநி நவபாஷாண சிலையின் அபிஷேக தீர்த்தம் மக்களின் நோய்களை போக்க வல்லது. இறைவன் மார்பில் இரவில் சந்தனம் சாற்றி மறுநாள் அதனையும் பிரசாதமாக வழங்குவர். இதே போன்று அவர் மற்றொரு நவ பாஷாண முருகர் சிலையினை உருவாக்கி உள்ளார் என்றும் கூறப்படுகின்றது. சிறந்த ஆன்மீக, தியான முறைகளை அருளியவர்.

    அருணகிரி நாதரை அறியாத ஆன்மீக வழி மக்கள் குறைவு எனலாம். தன் வாழ்வினை எண்ணி வருந்தி கோவில் உச்சியில் இருந்து விழுந்து தற்கொலை செய்ய முயன்ற பொழுது அவரை தடுத்தாட் கொண்டவர் முருகபிரான். பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் முருகனைப் பாடியே முக்தி அடைந்தார். திருப்புகழினை பாடியவர். 15-ம் நூற்றாண்டினைச் சார்ந்தவர். ஆறு எழுத்து மந்திரமான 'சரவண பவ' அருணகிரிநாதரின் நாக்கில் முருகன் வேல் கொண்டு எழுதினார் என்றும் "ஓம்" என எழுதினார் என்றும் கூறப்படுகின்றன.

    இவருக்கு பல இடங்களில் முருகர் காட்சி அளித்துள்ளார். திருவண்ணாமலையில் முருகன் அருணகிரி நாதருக்கு உபதேசம் செய்தார்.

    திருச்செந்தூரில் நடன தரிசனம் தந்தார்.

    வயலூரில் மயில் மீது அமர்ந்து காட்சி தந்தார். மேலும் சுவாமிமலை, திருவிடைக்கழி என பல இடங்களில் முருகனை கண்ணார கண்டுகளித்தவர் அருணகிரிநாதர். முருகனிடம் நேரடி உபதேசம் பெற்றவர்கள் அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆவர்.

    மன்னர் ஒருவருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்ட போது அருணகிரி நாதர் கிளியாக மாறி தேவலோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வந்து மன்னரின் கண் பார்வையினை மீட்டார் எனவும் கூறப்படுகின்றது.

    இவரது திருப்புகழ் பாடல்களை ஒரு முறையாவது பொருள் அறிந்து படித்துதான் பார்க்கலாமே.

    அது போலவே 'கந்தர் சஷ்டி கவசத்தினை' அன்றாடம் சொல்ல சிறு வயது முதலே குழந்தைகளை பழக்கலாமே.

    இது போலத்தான் போகர் சித்தரும், மாபெரும் சித்தர் என்பதனை அறிந்தோம். ரசவாத ரகசியங்கள், மருத்துவ நுட்பங்கள், போகர்-1000 போன்ற நூல்களை படித்தால் பல அரிய விஷயங்களைக் கற்கலாம். மேரு மலையே சுற்றி வந்தவர். செவ்வாய் ஆதிக்கம் பெற்ற பழனிக்கு செல்லும் பக்தர்கள் முருகனை தரிசித்து, செவ்வாய் ஆதிக்கம் கொண்ட போகர் சமாதியிலும் வணங்கி வருவர்.

    பாம்பன் சுவாமிகள்

    பாம்பன் ஸ்ரீ மத் குமரகுரு சுவாமிகள் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான், ஞானி. 666 பாடல்களை சைவ சமயம், முருக வழிபாட்டில் பாடியுள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள இவரது ஜீவ சமாதி உலகப் பிரசித்தி பெற்றது.

    சண்முக கவசம், குமாரஸ்தவம், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் என்ற பாடல்களை இயற்றியவர். 1929ல் ஜீவசமாதி அடைந்தவர். 'வேலும், மயிலும் துணை'. இது இவரது மந்திரச் சொல். அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் தங்க வேலினை வருடம் ஒருமுறை மலை சுனைக்கு எடுத்துச் சென்று அபிஷேகம் செய்து மேலே காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜை செய்து கொண்டு வருவர். மேள தாளங்களுடன் மிகச் சிறப்பாக நடைபெறும் இந்த வேல் பூஜை.

    பாம்பன் சுவாமிகளுக்கு 1920-ல் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் எதுவும் செய்ய இயலவில்லை என்று வருந்திய நிலையில் அவரது பக்தர் 'சண்முக கவசத்தினை' தினமும் 11 முறை படித்தார். 11-ம் நாள் அவரது கனவில் இரு மயில்கள் வந்து நடனமாட, வேல் சுவாமிகளின் கால்களை சீர் செய்ய, முருக பிரான் சுவாமிகளின் அருகில் அமர்ந்திருப்பதனைக் கண்டார். பாம்பன் சுவாமிகளின் கால்களும் முழுமையாய் குணமடைந்து இருப்பதனைப் பார்தார். என்ன ஆச்சர்யம்! மறுநாள் மருத்துவமனை சென்ற பொழுது அவர் கனவில் கண்ட அனைத்தும் உண்மையிலேயே நடந்து இருந்தது. இன்றும் இதற்கான சாட்சியங்கள் உள்ளன.

    பாம்பன் சுவாமிகள் கடுந்தவம் புரிந்த காலத்தில் முருகன், அருணகிரி நாதர், அகத்திய சுவாமிகள் ஆகிேயார் ஒரு சேர காட்சி அளித்தனர். அவர் தவம் செய்த காலத்தில் அவரை நெருங்கிய துஷ்ட சக்திகளை அவரது 'தண்டம்' துரத்தியது. இன்றும் திருப்பரங்குன்றம் பாம்பன் சுவாமிகளின் ஆலயத்தில் அத்திரு தண்டம் பூஜிக்கப்படுகின்றது.

    தைப்பூசம்

    இந்த விழா உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்களால் கொண்டாடப்படும் விழா. கோலா கலமான விழா. ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் என்று கொண்டாடப்படும் விழா. இம்முறை2026-ல் நாளை (1-ந்தேதி) அன்று வருகின்றது. ஆனால் அதற்கான ஆரம்ப வேலைகள் தை மாதத்திற்கு முன்பே ஆரம்பித்து விடும். பலர் 48 நாள் விரதம் எடுப்பர். கடும் விரதம் எடுப்பவர்களும் உண்டு. பலர் 21 நாள், 7 நாள் என்றும் விரதம் இருப்பர். விரத கோட்பாடுகளை பக்தியுடன் கடைபிடிப்பர். சிலர் பால், பழம் மட்டுமே அருந்துவார்கள். காவடி எடுப்பது, பால் குடம் ஏந்தி செல்வது என பல வேண்டுதல்கள் இருக்கும். அலகு குத்துவார்கள். பூசம் நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்த தைப்பூசத்தில்தான் அகிலமே தோன்றி யது என்பவரும் உண்டு. பழநியில் இந்த விழா கூடுதல் சிறப்புடன் நிகழும்.

    வறுமை நீங்க, வேண்டுதல்களின் காணிக்கையாக, பில்லி சூனியம் போன்ற தீய சக்திகள் நீங்க இந்நாளில் சிறப்பு பூஜைகளும், விழாக்களும் நடக்கின்றன. சிவ, பார்வதி ஆனந்த நடனம் நிகழ்வது இந்நாளில் என்ற கருத்து உண்டு. குரு பகவான் வழிபாடும் நடைபெறும். வணங்கி வளம் பெறுவோம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவராக ஜாதகர் வாழ்வார்.
    • ஜாதகரின் எண்ணங்கள் விருப்பங்கள் ஆசைகள் லட்சியங்கள் கனவுகள் எளிதில் நிறைவேறும்.

    ஒருவர் நல்ல வசதி வாய்ப்புகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தால் அவருக்கு சுக்கிர கடாட்சம் உள்ளது என்று பொருள். ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவராக ஜாதகர் வாழ்வார். காதல், காமம், அன்பு, எதிர்பாலின ஈர்ப்பு, நல்ல குடும்ப உறவுகள், உறவுகளால் ஏற்படும் மகிழ்ச்சி, புற அழகியல் சார்ந்த விஷயங்கள், உலகியல் இன்பங்கள், சொகுசான வாழ்விற்கு தேவையான விஷயங்கள், ஆடம்பரமான வீடு, வாகனங்கள், அணிகலன்கள், போன்றவற்றிற்கு காரக கிரகம் சுக்கிரன். சுக்கிரன் பலமாக இருந்தால் அன்பான மனைவி, அழகான வீடு, ஆடம்பரமான கார், சொகுசான இன்பமயமான வாழ்க்கை அனைத்தும் ஒருவருக்கு தேடிவரும்.

    கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்து பெரிய உயரமும் தொட வைக்கும். சுக்ரன் பலம் குறைந்தால் வறுமை, தரித்திரம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். சம்பாத்தியம், ஆடம்பரம் என்ற எண்ணமே வராமல் போகும்.

    சுக்ரனின் நட்சத்திரமான பரணி, பூரம், பூராடத்தில் பிறந்தவர்கள் ரிஷபம், துலாம் ராசி அல்லது லக்னத்தில் பிறந்தவர்கள், ராசி அல்லது லக்னம் அல்லது ஏழாம் இடத்தில் சுக்கிரன் இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் சுக்கிர கடாட்சம் நிச்சயமாக கிடைக்கும். சுக்கிரன் மீன ராசியில் 27-வது டிகிரியில் உச்சமடைவார். அதே போல் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் இரு பாவகத்திற்கும் உள்ள பலன்களை நடத்தியே தீரும். இனி பனிரென்டு லக்னத்திற்கும் உச்ச சுக்ரனால் ஏற்படும் நன்மை தீமைகளை பார்க்கலாம்.

    மேஷ லக்னத்திற்கு 2,7-ம் அதிபதியான சுக்ரன் 12-ம்மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் பொருளாதார வெற்றி, வீடு மனை வாகனம் போன்றவை கிடைக்கும். வாழ்க்கை துணை அழகு, காதல் உணர்வு, நல்ல புரிந்துணர்வு உள்ளவராக இருப்பார். திருமணத்திற்கு பிறகு அதிர்ஷ்டம் திருப்புமுனை உண்டாகும். சிலருக்கு காலதாமத திருமணம் நடைபெறும். சிலருக்கு திருமண வாழ்க்கையில் பிரிவினை அல்லது மனக்கசப்பு அதிகமாக இருக்கும். அல்லது தம்பதிகள் தொழில் உத்தியோக நிமித்தமாக ஆளுக்கு ஒரு ஊரில் பிரிந்து வாழ்வார்கள். வரவுக்கு மீறிய செலவுகளால் அவதி இருக்கும். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். வெளியூர் வெளிநாட்டு வாழ்க்கையில் ஆர்வம் மிகுதியாக இருக்கும்.

    ரிஷப லக்னத்திற்கு ராசி அதிபதி மற்றும் 6-ம் அதிபதியான சுக்கிரன் 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். ஜாதகரின் எண்ணங்கள் விருப்பங்கள் ஆசைகள் லட்சியங்கள் கனவுகள் எளிதில் நிறைவேறும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. தொட்டது துலங்கும். நிலையான நிரந்தரமான உத்தியோக அனுக்கிரகம் உண்டு. ஜாதகர் அதிர்ஷ்டப் பிறவி பொன்னும் பொருளும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் நிறைந்தவராக இருப்பார். எவ்வளவு கடன் சுமை இருந்தாலும் எளிதில் தீர்க்கக் கூடிய வல்லமை படைத்தவராக இருப்பார். பிறருக்கு கடன் கொடுப்பது ஜாமீன் போடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஜாதகரின் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் எதிரியை அதிகப்படுத்தும். தீய பழக்க வழக்கங்களால் நோய் ஏற்படும்.

    மிதுன லக்னத்திற்கு 5,12-ம் அதிபதியான சுக்ரன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் ஜாதகர் குல கவுரவம் நிரம்பியவர்கள். பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். பதவி, புகழ் அந்தஸ்து எளிதாக தேடி வரும். நன்மக்கட்பேறு உண்டாகும். அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள். அரசியல் அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். கவுரவ பதவிகள் தேடி வரும். முதல் தொழிலில் தோல்வியை சந்திப்பார்கள் இரண்டாவது தொழிலில் வெற்றியை எட்டிப் பிடிப்பார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் தனி முத்திரை பதிப்பார்கள். பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் நன்மை நடக்கும். அதற்கு இணையான சில தீமைகளும் உண்டாகும்.

    கடக லக்னத்திற்கு 4,11-ம் அதிபதியான சுக்கிரன் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பு. தாயும் தந்தையும் உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். பரம்பரையாக குலத்தொழில் செய்வார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பது போன்றவற்றில் ஆர்வம் மிகுதியாக உள்ளவர்கள். கற்றக்கல்வி பலன் தரும். சொத்துக்கள் மூலமாக வாடகை வருமானங்கள் ஜாதகருக்கு கிடைக்கும். பல தொழில் வல்லுநராக இருப்பார்கள். ஆசிரியர், ஜோதிடர், வங்கிப் பணிகளில் தனித்திறமையுடன் மிளிர்வார்கள். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்கக் பலர் விரும்புவார்கள். அரசியல் அரசாங்க ரீதியான நன்மைகள் ஜாதகரை தேடிவரும். நல்ல ஆரோக்கியமான தேக சுகம் உண்டு. நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கை துணை மூலமாக பொருளாதார மேன்மை உண்டாகும். அதே நேரத்தில் பாதகாதிபதியாகிய சுக்கிரன் அதிகவலு உடன் இருப்பதால் சுக்கிர தசை புத்தி காலங்களில் சொத்துக்களால் சொந்தங்களால் மன உளைச்சல் மிகுதியாக இருக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி


     

    சிம்ம லக்னத்திற்கு 3,10 அதிபதியான சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் உச்சமடைவார். ஒப்பந்த அடிப்படையான தொழில் மூலமாக வருமானம் ஈட்டுவார். யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் ஜாதகருக்கு வருமானம் வரும். புதிய தொழில் முயற்சியால் சுய வருமானத்தில் செல்வம் சேரும். சுய தொழில் ஆர்வம்மிகும். கவர்ச்சியான விளம்பரத்தால் தொழிலில் உச்சத்தை அடைவார்கள். உடன் பிறந்தவர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்வார்கள். தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரிடும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகமாக இருக்கும். பாகப்பிரிவினை சார்ந்த பிரச்சினைகள் ஜாதகருக்கு மன உளைச்சலைத் தரும். அண்டை அயலாருடன் ஒத்துப்போக முடியாது. முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும்.

    கன்னியா லக்னத்திற்கு 2,9-ம் அதிபதியான சுக்கிரன் சம சப்தம ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பாகும். திருமணத்திற்குப் பிறகு வாழ்வாதாரம் பல மடங்கு உயரும் பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழில் மூலம் ஜாதகருக்கு வருமானம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் வெளிநாட்டு வாழ்க்கையை விரும்புவார்கள். குலத்தொழில் விருத்தியடையும். தனது புத்தி சாதுர்ய பேச்சால் பிறரை நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். உற்றார் உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். பலவிதமான யுக்திகளால் பொருளை ஈட்ட வல்லவர். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வாழ்வாதாரம் பல மடங்கு பெருகும். தந்தையால் ஆதாயம் உண்டு. தந்தையின் குலத்தொழில் ஜாதகரை வந்து சேரும். கல்வி நிறுவனங்கள் நடத்தும் பாக்கியம் பெற்றவர்கள். புண்ணிய பலன்களை அதிகரிக்க அடிக்கடி ஆன்மீக யாத்திரை செய்வார்கள்.

    துலாம் லக்னத்திற்கு ராசி அதிபதி மட்டும் அஷ்டமாதிபதியான சுக்கிரன் ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் உச்சமடைவார்.

    லக்னாதிபதி ஆறாம் இடத்தில் உச்சமடைவதால் ஜாதகருக்கு கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகள் உபரியாகி கொண்டே இருக்கும். அடிக்கடி நோய்க்கு வைத்தியம் செய்து மன உளைச்சல் கூடும். சிலருக்கு நோயின் தன்மையை எளிதில் அறிய முடியாது. நிலையான தொழில் அமையும். வருமானத்திற்கு மீறி கடன் வாங்க கூடாது. உயில் சொத்து காப்பீட்டு பணம் லாட்டரி போன்ற அதிர்ஷ்ட பணம் பொருள் வரவு உண்டு. ஒரு நல்லது நடந்தாலும் ஒரு கெட்டது நடந்தாலும் அதற்கு ஜாதகரே காரணமாக இருப்பார். தசை ஆரம்பத்தில் சில யோகத்தைச் செய்தால் தசை முடியும் போது அவயோகம் உண்டு. துலாம் ராசிக்கு சுக்ர தசை வராமல் இருப்பது நல்லது.

    விருச்சிக லக்னத்திற்கு 7, 12-ம் அதிபதியான சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் உச்சம் பெறுவதால் ஜாதகருக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.இதற்கு குரு பார்வை இருந்தால் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடக்கும். குலதெய்வ அருள் கிடைக்கும். அழகு, ஆடம்பரத்திற்கு அதிகம் செலவு செய்வார்கள். பூர்வீகம் குலதெய்வம் அதிர்ஷ்டம் காதல் சார்ந்த விஷ யங்களில் ஜாதகருக்கு சாதகமான பலன்கள் நடக்கும். சிலருக்கு 2-வது குழந்தை பிறந்த பிறகு மண வாழ்க்கையில் மன கஷ்டம் வரும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் விரயங்கள் அதிகரிக்கும். 2-வது குழந்தை பிறந்ததற்கு பிறகு அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும்.

    தனுசு லக்னத்திற்கு 6,11-ம் அதிபதியான சுக்கிரன் சுகஸ்தானத்தில் உச்சமடைவதால் நன்மை தீமை கலந்த பலன்கள் கிடைக்கும். ஆறாம் அதிபதி உச்சம் பெறுவது சிறப்பித்துச் சொல்லக் கூடிய பலன் அல்ல. சித்தப்பா மற்றும் மூத்த சகோதரத்தால் கடன்படுவார்கள். தாய்மாமன் வாழ்நாள் முழுவதும் மதி மந்திரியாக இருப்பார். அதே நேரத்தில் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக லாபமும் உண்டு. பலர் அடிக்கடி ஒரு சொத்தை விற்று புது சொத்து வாங்கிக் கொண்டே இருப்பார்கள். சிலருக்கு சொத்துக்களை விற்று கடன் அடைக்க கூடிய சூழ்நிலைகள் இருக்கும். எவ்வளவு கடன் சுமை இருந்தாலும் அதை அடைக்கும் திறமையும் உண்டு. சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக கடன் தொகை தள்ளுபடியாகும். நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோக அமைப்பு அமையும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள்.

    மகர லக்கினத்திற்கு 5,10-ம் அதிபதியான சுக்கிரன் மூன்றாம் இடமான சகாய வெற்றி ஸ்தானத்தில் உச்சமடைவது மிகச் சிறப்பான அமைப்பாகும். தொட்டது துலங்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நல்ல பண்பான, பணிவான புத்திரர்கள் பிறப்பார்கள். குலதெய்வ கோவிலில் அதிக தானம், தர்மம் செய்பவர்கள். பல தொழில் திறமை நிறைந்த வல்லுநர்களாக இருப்பார்கள். கமிஷன் அடிப்படையான தொழிலில் நல்ல வருமானம் ஈட்டுவார்கள். இனக்கவர்ச்சியாலும், போகத்திற்காகவும் ஒன்றுக்கு மேற்பட்ட காதல் வரும். கவுரவ பதவி உள்ளவர்களுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். அரசியலில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதிப்பார்கள். சொந்த முயற்சியில் தொழில் செய்வார்கள். தொழிலுக்கு கிளை நிறுவனங்கள் உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் அமையும். பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில் வல்லவர்கள். பிற நாட்டு தொடர்பாலும் அரசு மூலமாகவும் செல்வம் சேரும். தர்ம காரியங்களின் மூலம் புகழ் பெறுவார்.

    அரச பதவி, அரசு உத்தியோகம் அந்தஸ்து உண்டு. கும்ப லக்னத்திற்கு 4, 9 அதிபதியான சுக்கிரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது சிறப்பித்து சொல்ல கூடிய சுப பலனாகும். நிறைவான சொத்து சுகத்தையும் நிறைந்த லாபத்தையும் உறவுகளின் அனுசரனையும், வழக்குகளில் வெற்றியையும் முன்னோர்களின் நல்லாசியையும் வழங்கும். நன்றாக படிப்பார்கள். கற்ற கல்வியால் பயன் உண்டு. பெயர் சொல்லக் கூடிய குடும்பம். அரசு உத்தியோகம், கவுரவ பதவி உண்டு. சிலர் குலத்தொழில் செய்பவர்கள். சமூதாய அங்கீகாரம் நிறைந்தவர்கள். குடும்பச் சொத்துக்கள் அதிகமாக இருக்கும். தான தர்மங்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். கடமையே கண்ணாக உள்ளவர்கள். தெய்வ காரியங்களிலும் ஈடுபாடு கொண்டவர்கள்.தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மீது பற்றும் பாசமும் உண்டு.

    மீன லக்கினத்திற்கு 3,8-ம் அதிபதியான சுக்ரன் ராசியில் உச்சம் அடைவார். அஷ்டமாதிபதி ராசியில் உச்சம் அடைவதால் விபரீத ராஜ யோகமாக சில அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு சாதகமாக இருக்கும் ஆனால் அந்த அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு ஒரு விபரீதம் ஏற்பட்ட பிறகு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் ஜாமீன் பிரச்சினை ஏற்படலாம். முறையற்ற பாகப்பிரிவினை சந்திக்க நேரிடும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் அவமானம் வம்பு வழக்கு சர்ஜரி போன்ற பாதிப்புகள் இருக்கும். தொழிலில் உடன் பிறந்தவர்களால் ஏமாற்றம் உண்டு. முயற்சி குறைவுபடும். திட்டமிடுதல் இருக்காது எந்த ராசி லக்னமாக இருந்தாலும் சுக்கிரன் உச்சம் பெறுவதால் சொகுசு வாழ்க்கையை அடையக்கூடிய பாக்கியம் உண்டாகும்.

    செல்: 98652 20406

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடலில் கொழுப்பு குறைந்து, தசைகள் சீர்படும்.
    • சர்க்கரை அளவு ரத்தத்தில் கட்டுப்படும்.

    இன்று நாம் அதிகமாகக் காணும் பல உடல் நலப் பிரச்சினைகளில் நரம்பியல் பிரச்சினைகளும் ஒன்று. மூளை, தண்டுவடம், நரம்புகளை பாதிக்கும் கோளாறுகள் நரம்பியல் பிரச்சினைகள் எனப்படும். தலைவலி, உணர்வின்மை, தசை பலவீனம், நினைவாற்றல் சிக்கல்கள், பேச்சில் பிரச்சினை, நடையில் பிரச்சினை, பார்வை பிரச்சினை, வலிப்பு, மயக்கம், ஒருங்கிணைப்பு குறைபாடுகள் சமநிலை இழப்பு, வலி உணர்வின்மை போன்ற அறிகுறிகள் நரம்பியல் பாதிப்பின் அறிகுறிகளே. பக்கவாதம், நடுக்கம், மனச்சோர்வு, பி12 குறைபாடு, மூளை காய்ச்சல் போன்ற வெளிப்பாடுகளும் இருக்கும். இவற்றிற்கு உடனடியாக மருத்துவரை அணுகுவது மிக அவசியம்.

    பொதுவான நரம்பியல் பிரச்சினைகள்

    * தலைவலி-ஒற்றை தலைவலி, டென்ஷன் தலைவலி

    * வலிப்பு- நினைவாற்றல் குறைபாடு, தசை பலவீனம், நரம்பு பலவீனம், மனச் சோர்வு, பதட்டம், மனநல பிரச்சினைகள் ஆகும்.

    * பொதுவான காரணங்கள் என்பது வைட்டமின் பி12 குறைபாடு, தொற்று நோய்கள், தண்டுவட காயங்கள், மரபணு, வாழ்க்கை முறை காரணங்கள் ஆகும்.

    இதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்

    சிகிச்சை- மருந்து, பிசியோதெரபி, அறுவை சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை பழக்கத்தில் உள்ளன.

    * தடுப்பு முறைகள்- ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, முறையான தூக்கம் ஆகியவை அறிவுறுத்தப்படுகின்றன.

    உடல் பலவீனத்தின் அறிகுறிகள்

    நடப்பது, பேசுவது, அன்றாட சாதாரண வேலைகளை செய்வதில் சிரமம் ஏற்படுவது.

    விழுங்குவதில் சிரமம், ஒருங்கிணைப்பில் சிரமம், சமநிலை தொந்தரவு, இரட்டை பார்வை, தசை இழுத்தல், தசை பிடிப்பு, தன்னிச்சையான நடுக்கம் ஆகியவை ஆகும்.

    தன்னிச்சையாக வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்வது பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆகவே மேற்கண்ட அறிகுறிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெறவும்.

    இரண்டு வாரம் சர்க்கரையினை எதிலும் சேர்க்காமல் உண்ணாமல் இருந்து பாருங்களேன். இதில் வெல்லம், பனை சர்க்கரை, தேன் என எதனையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

    முதலில் உங்கள் முகத்தில் தெளிவு ஏற்படும். உப்பலாக, சதை தொங்கிய, கூடுதல் வயது காட்டும் முகம் மாறி ஆரோக்கியமான தெளிவாய், இளமையாய் இருக்கும்.

    * உடலில் கொழுப்பு குறைந்து, தசைகள் சீர்படும்.

    * கண் பார்வை தெளிவாகும்.

    * சிறுநீரக ஆரோக்கியம் கூடும்.

    * சிறுநீரில் சர்க்கரை, புரதம் குறையும்.

    *வீக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.

    * சோர்வு இன்றி சக்தி இருக்கும்.

    * உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

    * வலி, வீக்கங்கள் குறையும்.

    * எடை குறையும்.

    * சர்க்கரை அளவு ரத்தத்தில் கட்டுப்படும்.

    எடையினை குறைக்க கூடுதலாக இம்முறைகளையும் கையாளலாம். இந்த எடைக்குறைப்பிற்காக ஒவ்வொருவரும் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அன்றாடம் சில குறிப்புகளை கடைபிடித்தாலே எளிதில் எடை குறையும்.

    * ஏற்கனவே சர்க்கரை உணவுகளை தவிர்ப்பதனை பார்த்தோம்.

    * காலை உணவு நல்ல புரதச் சத்து நிறைந்ததாக இருந்தால் மனம் நொறுக்கு தீனி தேடி அலையாது.

    கமலி ஸ்ரீபால்

     

    * முட்டை, காய்கறி, தயிர், புரத உணவு, மருத்துவரால் அங்கீகரிக்கப்பட்ட பவுடர் வகை உணவு. சீஸ், பன்னீர் எடுத்துக் கொள்ளுங்கள். உணவுக்கு முன்னால்- 15 நிடங்களுக்கு முன்பு நீர் அருந்துவது 13 சதவீதம் கலோரி சத்தினை தவிர்க்கும்.

    * மெதுவாய் மென்று உண்பது. டி.வி., போன் இல்லாமல் உண்பது நல்லது.

    * நன்கு நடப்பது. நார் சத்து கொண்ட காய்கறி, பீன்ஸ் உணவுகளை எடுத்துக் கொள்வது.

    * குளிர்பானங்களை தவிர்ப்பது.

    * நல்ல உறக்கம்.

    * முழு தானிய உணவு, கொலை பட்டினி இல்லாமல் இருப்பது.

    * பொறுமையாய் இவைகளை தொடர்ந்து கடைபிடிப்பது போன்றவை கை மேல் பலன் தரும்.

    கண்களையும் கவனிப்போம்

    இன்றைக்கு அநேக இளைஞர்கள் சோர்வடைந்த கண், பொங்கிய கண், சிவந்த கண், கண் சோர்வு என பலவித கண் பாதிப்புகளோடு தான் வாழ்கின்றனர். டிஜிட்டல் கண் சோர்வு என இதனை குறிப்பிடுகின்றனர். கைபேசி, கணினி, லேப்டாப், தொலைக்காட்சி போன்ற டிஜிட்டல் சாதனங்கள் இன்று வாழ்க்கையின் ஒரு பகுதி ஆகிவிட்டது. வேலை, கல்வி, தகவல் என அனைத்திற்கும் திரைகளை அதிகமாக பயன்படுத்துகின்றோம். டிஜிட்டல் கண் சோர்வில் தற்கால பாதிப்புகளாக எரிச்சல், உலர்வு, நீர் வருதல், கண் பார்வை மங்குதல், தலைவலி, கண்ணை சுற்றி வலி, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி என்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மொபைல் போன் அதிகமாய் பயன்படுத்துபவர்கள் இதில் அதிகமாய் பாதிக்கப்படுகின்றனர். திரையினை பார்க்கும் போது நாம் கண் இமைப்பதனை இயல்பாகவே குறைத்து விடுகின்றோம். இதனால் கண்கள் வறண்டு விடுகின்றது. மேலும் திரையின் ஒளி, எழுத்தின் அளவு, தவறாக உட்காரும் நிலை ஆகியவை கண் சோர்வினை அதிகரிக்கின்றன.

    கண் சோர்வினைத் தவிர்க்க 20-20-20 விதியைப் பின் பற்றுங்கள். அதாவது 20 நிமிடங்களுக்கொரு முறை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்கவும். திரையில் அதிக பிரகாசம் வேண்டாம். எழுத்தின் அளவு உங்களுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இவைகளின் மூலம் கண் சோர்வினைத் தவிர்க்க முடியும். நாம் உலகத்தினை அறிந்து கொள்ளும் முக்கியமான வழிகளில் ஒன்று பார்வைத்திறனே. இன்றைய வாழ்க்கை முறை, அதிக திரை நேரம், தூக்கக் குறைவு போன்ற காரணங்களால் கண் பிரச்சினை அதிகரித்து வருகின்றது. பல சமயங்களில் சிறிய பிரச்சினைகளை நாம் அலட்சியப்படுத்துவதால் பின்னர் பெரிய பிரச்சினைகளாக மாறுகின்றன.

    * பார்வை குறைபாடு. அருகில் அல்லது தூரத்தில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரியாத நிலை போன்றவை சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் ஏற்படலாம்.

    * கண் தொற்றுகள் தூசு, அழுக்கு, கைகளை கண்ணில் அடிக்கடி வைப்பது போன்ற காரணங்களால் கண் சிவத்தல், நீர் வருதல், வலி போன்றவை ஏற்படும்.

    * வயதுடன் வரும் கண் மாற்றங்கள், கண்ணழிவு (கட்டராக்ட்) போன்றவை தோன்றலாம்.

    * கண் ஆரோக்கியத்திற்கு 7 முதல் 8 மணி நேர தூக்கம் மிக அவசியம்.

    * பச்சை காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் போன்ற வைட்டமின் 'ஏ' சத்து நிறைந்த உணவு அவசியம்.

    * திரை நேரத்தினை கட்டுப்படுத்த வேண்டும்.

    * இடைவெளி எடுத்து கண்களுக்கு ஓய்வு தர வேண்டும்.

    * தூசு, வெய்யிலில் இருந்து கண்களை பாதுகாக்க தரமான கண் கண்ணாடிகளை பயன்படுத்தலாம்.

    * கண்களை கைகளால் தேய்க்கக் கூடாது.

    * சிறு அறிகுறியாயினும் மருத்துவர் ஆலோசனை பெறுவது பல பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தீர்க்கும்.

    * கண் அழுத்த நோய் (கிரைகோமா) என்பது கண்களில் அழுத்தம் அதிகரிப்பதால் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. ஆரம்ப நிலையில் அறிகுறிகள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் கவனிக்காமல் இருந்தால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

    * மூப்பு சார்ந்த நடு பார்வை பாதிக்கப்படுவதால் நேராக பார்க்கும் திறன் குறையலாம். படிப்பதும், முகங்களை அடையாளம் காண்பதும் சிரமமாக இருக்கலாம்.

    * கண் வறண்டு விடுவதால் எரிச்சல், சிவத்தல் ஏற்படலாம். எனவே முதியோர் ஆண்டுக்கொரு முறையாவது கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வைட்டமின் ஏ.சி.ஈ. மற்றும் ஓமேகா 3 இருக்கும். உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * கண்களில் வலி, பார்வை குறைவு, கருப்பு புள்ளி தோன்றுதல் போன்றவை இருந்தால் உடனடியாக கண் மருத்து வரை அணுக வேண்டும்.

    காலையில் ஒரு மணி நேரத்தினை எப்படி ஆரம் பிக்கலாம் தெரியுமா?

    * 5 நிமிடம் உங்கள் படுக்கையை உதறி, பெட்ஷீட் மாற்றி சரி செய்யுங்கள்.

    * 5 நிமிடம் உடலை நீட்டி, மடக்கி சில யோகா பயிற்சிகள் செய்யலாம்.

    * 5 நிமிடம் அன்றைய வேலைகளை எழுதலாம்.

    * 15 நிமிடம் ஷவர் குளியல், உடலை நன்கு துடைத்து மான்ட்ரையர் தடவி தயாராகுதல் வேண்டும்.

    * 25 நிமிடங்கள் சத்தான காலை உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

    மேலும் நேரம் கிடைத்தால் 10 நிமிடம் துரித உடற்பயிற்சி.

    * 20 நிமிடம் நடைபயிற்சி.

    * 20 நிமிடம் நல்ல புத்தகம் படிக்கலாம். ஆக நேரம் பொன்னானது. முறையாய் பயன்படுத்துவோம்.

     

    மனதினை சமநிலைப்படுத்துங்கள்!

    உங்கள் மனதினை சமநிலை படுத்திக் கொள்ள:

    * அதிகம் பேச வேண்டாம். அப்படி பேசினால் பொய் சொல்ல வேண்டி இருக்கும்.

    * ரொம்பவும் யோசித்தால் மன அழுத்தம் ஏற்படும்.

    * ஒருவருக்கு அதிக வேலையினை விழுந்து விழுந்து கொடுத்தால் தலையில் மிளகாய் அரைப்பார்கள்.

    * ரொம்பவும் அளவுக்கு மீறி கடும் வேலை செய்தால் சோர்வு, மன உளைச்சல் ஏற்படும்.

    * அதிக அன்பு ஒருவர் மீது செலுத்தினால் காட்டாற்றில் வெள்ளம் போல் அடித்து செல்லப்படும்.

    * ரொம்பவும் 'ஜோக்' அடித்து விளையாட்டுத்தனமாக அடுத்தவரை மகிழ்விப்பதிலேயே இருந்தால் நம் பேச்சை யாரும் சீரியசாக கவனம் கொடுத்து எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

    * அதிகம் தூங்கினால் வெட்டியாக காலம் கழியும்.

    * ஒருவரை மிகவும் நம்பினால் அவரால் துரோகம், கைவிடப்படும் வாய்ப்பு அதிகம்.

    * அதிக ஒப்பனை இயற்கை அழகினைக் கெடுக்கும்.

    * அதிக அழுத்தம் கொடுத்தால் எந்த செயலும் முறையாய் நிறைவேறாது.

    * அதிகம் செலவழித்தால் வருங்காலமே இல்லை. இதுதான் வாழ்க்கை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் மகள் பிறந்ததில் இருந்தே முதலீடு செய்யலாம்.
    • இந்த திட்டம் மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும்

    பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் நலனுக்காக சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு 2015ம் ஆண்டு தொடங்கியது.

    கடந்த பத்தாண்டுகளாக இந்த திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் இன்னும் பலருக்கும் இந்த திட்டம் குறித்த பொது விவரங்கள் தெரியவில்லை. அதன் காரணமாகவே இந்த திட்டத்தில் இன்னும் எண்ணற்றோர் இணையாமல் உள்ளனர்.

    பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பெற்றோர்கள் பணத்தை சேமிப்பது அவசியமாகும்.

    செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் மகள் பிறந்ததில் இருந்தே முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் பெயரில் கணக்கு தொடங்கலாம்.

    செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ்,18 ஆண்டுகளுக்குப் பிறகு, பாதித் தொகையைத் திரும்பப் பெறலாம். 21 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கில் ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.250 முதலீடு செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதனுடன் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்தக் கணக்கில் ரூ.1.5 லட்சத்துக்கான வரிச் சலுகையும் கிடைக்கும்.

    செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், ஒருவர் தனது குழந்தை பிறந்த உடனேயே SSY திட்டத்தில் ஒரு கணக்கைத் திறந்து, மாதா மாதம் ரூ.10,000 முதலீடு செய்து வந்தால் தோராயமான 8% வட்டி வருமானத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 60 லட்சம் கிடைக்கும்

    எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ கடைசியில் கிடைக்கும் தொகை மாறக்கூடும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சந்ததி இல்லாத பிதாமகன் பீஷ்மருக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்வது என்பது குருவுக்குச் செய்யும் தர்ப்பணம் ஆகும்.
    • பீஷ்ம தர்ப்பணத்தை மறக்காமல் செய்தால் மகா புண்ணியத்தை பெறலாம்.

    பஞ்சபூதத்தில் நீரின் தன்மையை கொண்டது அஷ்டமி. தை மாத அமாவாசைக்கு பின்னர் 8-ம் நாளில் வரும் அஷ்டமி மிகவும் விசேஷமானது. இதனை பீஷ்மருக்கு உகந்தது என்கின்றனர்.

    மகாபாரத்தில் கங்கை மைந்தன் பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இல்லை. அவர் தன் தந்தைக்காக செய்த தியாகத்தின் பலனாக பெறர்க்கரிய பேறு பெற்றார். அதாவது அவரே விரும்பாமல் அவரது உடலில் இருந்து உயிர் பிரியாது.

    யாரும் பெறா வரத்தை பெற்ற பீஷ்மர் இறுதியில் விதியின் சூழ்ச்சியால் கவுரவர்கள் பக்கம் போரிட நேர்ந்தது. அவரின் கர்ம வினைப்படி அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை அனுபவிக்க வைத்தது விதி. இதன் பலனாக போரில் அம்புகளினால் வீழ்த்தப்பட்டார்.

    போரில் யுத்தகளத்தில் அர்ஜூனன் தொடுத்த அம்புகளால் துளைக்கப்பட்ட நிலையில் பீஷ்மர் அம்பு படுக்கை மீது கிடந்தார். அவர் தன் தந்தையிடம் இருந்து தான் விரும்பியபடி இறக்கும் வரத்தை பெற்றிருந்தார். தான் பெற்ற வரத்தினால் மோட்ச காலமான உத்தராயண காலத்தில் உயிர் துறக்க விரும்பி அம்பு படுக்கையில் காத்திருந்தார். அவரை சுற்றி கவுரவர்களும், பாண்டவர்களும் வணங்கி நின்றனர்.

    முள் படுக்கையில் அவருடைய உடல் வேதனையில் துடித்தது. அப்போது அங்கு வந்த வியாசரிடம் "நான் செய்த பாவம் என்ன? எதற்காக என் உடல் இவ்வளவு வேதனையில் இருக்கிறது? நான் விரும்பிய நேரத்தில் மரணிக்கலாம் என்ற என் தந்தையின் வரத்தின் படி நான் நினைத்தபோது என்னால் மரணிக்க முடியாதபடி இந்த வேதனை என்னை அச்சுறுத்துகிறதே" என்று பீஷ்மர் கேட்டார்.

    அதற்கு வியாசர் "பீஷ்மா ஒருவர் தன் மனதாலும், உடலாலும் ஒருவருக்கு செய்வது மட்டுமே தீமை , அநீதி இல்லை. நம் முன்பாக ஒரு கெட்ட செயல் நடக்கும் போது அதனை தடுக்காமல் இருப்பதும் கூட பாவம் தான். அதற்கான தண்டனையையும் அந்த நபர் அனுபவித்தே ஆக வேண்டும். நீ அனுபவிக்கும் வேதனை அப்படிப்பட்ட ஒரு தண்டனைக்குரியதுதான்" என்றார்.

    அப்போதுதான் பீஷ்மருக்கு புரிந்தது, துரியோதன சபையில் பாஞ்சாலிக்கு அநீதி நிகழ்ந்த போது அதனை கண்டும் காணாமல் இருந்ததன் விளைவு இது என்று. உடனே வியாசரிடம் இதற்கு என்ன பிராயச்சித்தம் என்று கேட்டார்.

    "யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ, அப்போதே அந்த பாவம் அகன்று விடும் என்கிறது வேதம். நீ எப்போது வருந்தினாயோ அப்போதே அந்த பாவம் அகன்று விட்டது. ஆனாலும் துரியோதனன் அவையில் பாஞ்சாலி காப்பாற்றும் படி கதறியபோது கேட்கும் திறன் இருந்தும் அதைக் கேளாமல் இருந்த உன் செவிகள், கூர்மையான பார்வை இருந்தும் பாராதது போல் இருந்த உன் கண்கள், நீ சொன்னால் அனைவரும் கேட்பார்கள் என்ற நிலையிலும் தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் அளப்பரிய வீரம் இருந்தும் உபயோகமின்றி இருந்த உன் வலுவான தோள்கள், வாள் எடுத்து எச்சரிக்காத உன் கைகள், இருக்கையில் இருந்து எழாமல் இருந்த உன் கால்கள், நல்லது எது கெட்டது எது என்று சிந்திக்க தவறிய உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என்பது விதி. அதைத்தான் இப்போது அனுபவிக்கிறாய்" என்றார் வியாசர்.

    பின்னர் "உன்னுடைய வேதனையை சுட்டெரிக்க சூரியனின் அனுகிரகம் தேவை என்று கூறிய வியாசர் தன்னிடம் இருந்த எருக்க இலைகளை கொண்டு பீஷ்மரை அலங்கரித்தார். இதனால் அவரது வேதனை குறைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதி அடைந்த பீஷ்மர், தியான நிலையிலே முக்தி அடைந்தார்.

    அவர் மரணித்த தினம் ரதசப்தமி என்றும், அதற்கு அடுத்த நாளான அஷ்டமி திதி 'பீஷ்மாஷ்டமி' என்று அழைக்கப்படுகிறது. "பீஷ்மர் இறுதிவரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர். இதனால் அவருக்கு பித்ரு கடன் செய்வது யார்? "என்று தருமர் வருந்தினார்.

    அப்போது வியாசர் "ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரிக்கும், தூய்மை விலகாத துறவிக்கும், பித்ருக்கடன் அவசியமே இல்லை. அந்த வகையில் பீஷ்மர் சொல் தவறாத நேர்மையாளர், தூய்மையானவர். வரும் காலத்தில் பீஷ்மருக்காக இந்த தேசமே பித்ரு கடன் செய்யும். அதற்கான புண்ணியத்தை அனைவரும் அடைவர்" என்றார் .

    அதனால் ரத சப்தமிக்கு மறுநாள் பீஷ்மருக்கு எல்லா மக்களும் தர்ப்பணம் செய்கிறார்கள். அதுவே பீஷ்மாஷ்டமி. பிதாமகன் என்று போற்றப்படும் பீஷ்மர் இறந்த திதி நாளே பீஷ்டாஷ்டமி. எனவே சந்ததி இல்லாத பிதாமகன் பீஷ்மருக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்வது என்பது குருவுக்குச் செய்யும் தர்ப்பணம் ஆகும்.

    இது நம் பித்ருக்கள் அனைவருக்கும் செய்யப்படுகிற தர்ப்பணம். பீஷ்ம தர்ப்பணத்தை மறக்காமல் செய்தால் மகா புண்ணியத்தை பெறலாம். இதன் மூலம் ஒட்டுமொத்த குருமார்களின் ஆசியையும் பித்ருக்களின் ஆசியையும் பெறலாம்.

    இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். காலையில் நீராடி விட்டு, பித்தளை அல்லது செம்பு குவளையில் பால் கலந்த நீரை இடது கையில் எடுத்து கொள்ளவும். வலது கையில் அட்சதை, புஷ்பம், சந்தனம், குங்குமம் முதலியவற்றை வைத்து கொள்ளவும்.

    கீழே தாம்பாளம் வைத்து மூன்று முறை "பீஷ்மாய நமக" என பீஷ்மர் நாமம் உச்சரித்தபடி இடக்கையில் உள்ள நீரை வலக்கையில் இருந்து தம்பாளத்தில் விடவும். அவ்வளவு தான். பீஷ்மாஷ்டமி அன்று புனித நீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும், மற்றும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாக கிடைக்கும் என்கின்றனர் பெரியவர்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குரு நின்ற வீட்டை விட பார்த்த வீட்டை அதிக சக்தி உடையதாக மாற்றுவார்.
    • குரு பகவான் கடக ராசியில் ஐந்தாவது டிகிரியில் பூச நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார்.

    நவகிரகங்களில் முழு சுப கிரகமாக கருதப்படுபவர் குருபகவான். தனது பார்வை பலத்தால் ஒரு ஜாதகத்தில் உள்ள தோஷங்களையும் சாபங்களையும் நிவர்த்தி செய்யக்கூடிய வல்லமை பெற்றவர்.

    சுய ஜாதக ரீதியாக ஒருவருக்கு இல்லாத யோகங்களையும் கோட்ச்சார காலங்களில் வழங்கும் தன்மை பெற்றவர். ஒரு ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் பலமிழந்து இருந்தாலும் குரு நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு அனைத்து விதமான நல்ல பலன்களும் கூடிவிடும். குருவிற்கு மூன்று விதமான பார்வைகள் உண்டு. அவர் தான் நின்ற வீட்டிலிருந்து 5, 7, 9ம் இடங்களை பார்ப்பார். குரு நின்ற வீட்டை விட பார்த்த வீட்டை அதிக சக்தி உடையதாக மாற்றுவார்.

    குரு தனது ஐந்தாம் பார்வையால் குழந்தை, காதல், அதிர்ஷ்டம், பணம், பொருள், பூர்வீகத்தில் வாழும் அமைப்பு குலதெய்வ அனுகிரகம் போன்றவற்றை வழங்குவார். ஏழாம் பார்வையால் திருமணம், சமுதாய அங்கீகாரம் , நல்ல நட்பு ஆகியவற்றை ஏற்படுத்துவார். தனது ஒன்பதாம் பார்வையால் பேரன்,பேத்தி, வெளிநாட்டு வாழ்க்கை, தெய்வ கடாட்சம் போன்ற பாக்கிய பலன்களை நல்குவார். இத்தகைய சிறப்பு மிக்க குரு பகவான் கடக ராசியில் ஐந்தாவது டிகிரியில் பூச நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார். உச்சம் பெற்ற கிரகம் அனைவருக்கும் நல்ல பலனை வழங்குவது இல்லை. ஒரு கிரகம் தான் பெற்ற ஆதிபத்திய ரீதியாகவும் தான் நின்ற வீட்டு ரீதியாகவும் பலன் தரும் அந்த வகையில் உச்சம் பெற்ற குரு பகவான் எந்த லக்னத்திற்கு நன்மையையும் எந்த லக்னத்திற்கு தீமையையும் வழங்குவார் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

    மேஷ லக்னத்திற்கு 9,12-ம் அதிபதியான குருபகவான் 4-ம் மிடமான சுக ஸ்தானத்தில் உச்சம் பெறுவது அதிக சுபத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். தாயும் தந்தையும் உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் உள்ளவர்கள். தாய் தந்தை வழி சொத்து மிகைப்படுத்தலாக கிடைக்கும். சுய உழைப்பிலும் சிறப்பான வீடு மனை வாகன யோகம் உண்டு. வெளியூர் வெளிநாட்டு வாழ்க்கையை விரும்புவார்கள். கற்ற கல்வியால் பயன் உண்டு. அரசியலில் தனித்தன்மை தனித் திறமையுடன் மிளிர்வார்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் புகழ், அந்தஸ்துடன் கோடீஸ்வரராக வாழ்வார்கள்.

    ரிஷப லக்கனத்திற்கு 8,11-ம் அதிபதியான குரு பகவான் உப ஜெய ஸ்தானமான 3ல் உச்சம் பெறுவார். 3,11-ம் இடங்கள் உப ஜெய ஸ்தான மாகும். 8,11ம்மிடங்கள் பண பர ஸ்தானமாகும்.ஒரு உப ஜெய ஸ்தான அதிபதி, மற்றொரு உப ஜெய ஸ்தானத்தில் உச்ச மடைவதால் ஜாதகருக்கு நல்ல வளர்ச்சியையும், வெற்றி மேல் வெற்றியையும் தரும். சீரான முன்னேற்றம் உண்டு. திட்டமிட்டு வெற்றிக் கனியை சுவைப்பவர்கள். பல வழிகளில் வருமானம் உண்டு. ஜாதகரின் எழுத்து உலகப் பிரசித்தி பெறும். தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் ஊடகங்களில் பெயர், புகழ் பரவும். நகைச்சுவை உணர்வு, இசை ஆர்வம் உண்டு. பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டு. சகோதர ஒற்றுமை, கூட்டுத் தொழில் உண்டு. மூத்த சகோதரம், சித்தப்பாவால் ஆதாயம் உண்டு.

    மிதுன லக்னத்திற்கு 7, 10-ம் அதிபதியான குரு பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் அடைவது மிகச் சிறப்பான அமைப்பாகும். வாழ்க்கைத் துணை கவுரவ பதவியில் சுய கவுரவம் உள்ளவராக சமுதாய அந்தஸ்து நிரம்பியவராக இருப்பார். திருமணத்திற்குப் பிறகு பொருளாதார வளர்ச்சியும் புகழும் கிடைக்கும். நல்ல கல்வி அறிவு உண்டு. சொத்து சுகம் என சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்த திருமண வாழ்க்கை உண்டு. கூட்டுத் தொழிலில் வெற்றி உண்டு. புதிய தொழில் நண்பர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள். தொழில், நட்பு மூலம் சம்பந்திகள் அமைவார்கள். மிதுன லக்னத்திற்கு குரு பகவான் பாதகாதிபதி என்பதால் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் கலகலப்பு குறையாது.

    கடக லக்னத்திற்கு 6, 9-ம் அதிபதியான குரு பகவான் லக்னத்தில் உச்சம் அடைவார். ஆறாம் அதிபதியாக குருபகவான் உச்சம் அடைவது சிறப்பித்துச் சொல்லக்கூடிய பலன் அல்ல. அதே நேரத்தில் அவர் பாக்யாதிபதியாக லக்னத்தில் உச்சம் அடைவது ஜாதகருக்கு நன்மை தீமை இரண்டையும் இணைந்து வழங்கும். இவர்களுக்கு தீராத தீர்க்க முடியாத பிறவி கடனும் பொருள் கடனும் உண்டு. ஜாதகரின் தந்தை நோயாளியாகவோ கடனாளியாகவோ இருப்பார். அல்லது ஜாதகருக்கு தந்தையின் கடனை சுமக்க வேண்டிய நிலையில் உண்டாகும். தந்தைக்கு அறுவை சிகிச்சை அல்லது வைத்தியம் செய்து ஜாதகருக்கு கடன் உருவாகும். தந்தையால் வராக்கடன் வரலாம். குல கவுரவத்திற்காக தந்தை ஏற்படுத்திய கடனை அடைத்து அவதிப்படுகிறார்கள். இந்த அமைப்பு உடையவர்கள் கடனுக்கு பயந்து நோயை வரவழைத்துக் கொள்வார்கள்.

    சிம்ம லக்னத்திற்கு குரு பகவான் 5, 8 எனும் பணபர ஸ்தானத்திற்கு அதிபதியாகும். லக்னத்திற்கு 12-ம் மிடமான அயன, சயன விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் பூர்வீக சொத்து, தந்தை, தந்தை வழி முன்னோர்களால் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் கிடைக்கும். ஆனால் ஜாதகர் அதை பயன்படுத்த முடியாமல் வெளியூர் வெளிநாடு வெளி மாநிலத்தில் வசிக்கக்கூடிய சூழ்நிலைகள் இருக்கும். பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களால் ஜாதகருக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன் உண்டாகும். பங்குச் சந்தையில் அதிகமான இழப்புகளை சந்திப்பார்கள். காலதாமதமான புத்திர பிரார்த்தம் உண்டாகும். தொழில் சார்ந்த நஷ்ட கடன், கஷ்டமான தொழில் செய்யும் சூழல், திடீர் விரயம் உண்டாகும். வெகு சிலருக்கு விபரீத ராஜயோகத்தையும் இந்த அமைப்பு ஏற்படுத்தும்.

    கன்னியா லக்னத்திற்கு 4,7-ம் அதிபதியான குரு பகவான் 11-ம் மிடமான லாப ஸ்தானத்தில் உச்சம் அடைவது மிகச் சிறப்பான அமைப்பாகும். வாழ்நாள் எண்ணங்கள் லட்சியங்கள் கனவுகள் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். தன்னை சார்ந்தவர்களுக்கு தொழில் தொடர்பான ஆலோசனை வழங்கி வழி நடத்துபவர்கள். இந்த அமைப்பினருக்கு சொத்து வாங்குதல் விற்றல் இரண்டும் சுலபமாக நடைபெறும். நண்பர்களுடன் இணைந்து கூட்டாக ரியல் எஸ்டேட் தொழில் நடத்துவார்கள். இவர்கள் சுய தேவைக்கு வாங்கும் சொத்தை மனைவி அல்லது குடும்ப நபர்களின் பெயரில் இணைந்து வாங்குவார்கள். திருமணத்திற்கு பிறகு அடிக்கடி சொத்தை வாங்குவது விற்பது சுலபமாக நடந்து கொண்டே இருக்கும். வாழ்நாள் முழுவதும் வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும்.

    துலாம் லக்னத்திற்கு 3,6-ம் அதிபதியான குருபகவான் 10ம் மிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் ஒப்பந்தம் அடிப்படையான தொழில்,கமிஷன் அடிப்படையான தொழில்கள் இவர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் இவர்களுக்கு பல மடங்கு வருமானத்தை கொடுக்கும். ஜாமீன் கடன் இ.எம்.ஐ சார்ந்த பிரச்சினைகள் ஜாதகரின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் இந்த அமைப்பு உள்ளவர்கள் கடன் வாங்கி சுயதொழில் செய்வார்கள்.தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி இடம் பெயவார்கள். இந்த அமைப்பு உள்ளவர்கள் சுயதொழில் செய்வதை தவிர்ப்பது நல்லது. வெகு சிலருக்கு அரசு வேலை, அரசாங்க பதவி போன்றவைகளும் கிடைக்கும்.உச்சம் பெற்ற குரு பகவான் துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் சகோதரர்களுக்கு அதிக நற்பணி வழங்குவார்.

    விருச்சிக லக்னத்திற்கு 2,5-ம் அதிபதியான குரு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் அடைவார். ஆனால் விருச்சிக லக்னத்திற்கு இது பாதகஸ்தானம் என்பதால் பாக்கியத்தை பாதகம் கலந்து வழங்குவார். அல்லது ஜாதகருக்கு பாக்கியமே பாதகமாகும். தந்தையால் ஜாதகருக்கு பெரிய நற்பலன் ஏற்படாது. அல்லது ஜாதகரும் தந்தையும் பிரிந்து வாழ நேரிடும். பூர்வீகம், குலதெய்வம், குழந்தை, அதிர்ஷ்டம், காதல் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு முன்னுக்கு பின் முரணான பலனை வழங்கும். ஜாதகருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் அனைத்தும் ஜாதகரை விட ஜாதகரின் குடும்பத்திற்கே பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில் ஜாதகர் பொதுக் காரியங்களில் அதிகமாக ஈடுபட்டால் புண்ணிய பலன்கள் பல மடங்கு அதிகரிக்கும். இந்த அமைப்பு இருப்பவர்கள் சுயநலத்தை விட பொதுநலத்துடன் இருப்பது சிறப்பாகும்.

    தனுசு லக்னத்திற்கு ராசி அதிபதி மற்றும் சுகஸ்தான அதிபதியான குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் உச்சம் அடைவார். ஜாதகர் உயர்ந்த குலத்தில் பிறந்த அதிர்ஷ்டசாலி. சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட பணம் பொருள் உயில் சொத்து போன்றவைகள் கிடைக்கும். குருவிற்கு வீடு கொடுத்த சந்திரன் தனுசு லக்னத்திற்கு ஒரே ஆதிபத்தியம் பெற்ற அஷ்டமாதிபதி என்பதால் நன்மையும் தீமையும் கலந்த பலன்களே ஜாதகருக்கு உண்டாகும். தொழில் உத்தியோக நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வார்கள். கடன், வம்பு, வழக்கு,நோய் தாக்கம், உத்தியோகத்தில் இடையூறு, போட்டித் தேர்வுகள் போன்றவற்றில் ஏமாற்றங்கள் உருவாகலாம். விரயத்தை தவிர்க்க முடியாத நிலை நீடிக்கும். நல்ல மதிப்பு வாய்ந்த சொத்துக்கள் ஜாதகரிடம் இருக்கும்.

    மகர லக்னத்திற்கு 3,12-ம் அதிபதியான குரு பகவான் சம சப்தம ஸ்தானத்தில் உச்சமடைவார். அதாவது ராசிக்கு உச்ச குரு பகவானின் பார்வை கிடைக்கும். ஜாதகருக்கு பதிவு திருமணம் நடக்கும். திருமணத்திற்கு பிறகு வெற்றி வாய்ப்புகள் பொருளாதார முன்னேற்றம் தேடி வரும். முயற்சி, வெற்றி, திட்டமிடுதலுக்கு பின் வாழ்க்கை துணையின் பங்களிப்பு இருக்கும். சமுதாய மதிப்பு, மரியாதை நிறைந்த நல்ல வாழ்க்கைத் துணை அமையும். மனைவிவழி ஆதாயமும் உண்டு. இன்பம், துன்பம் என அனைத்து சூழ்நிலைகளிலும் மனைவியின் ஆதரவும், அரவணைப்பும் உண்டு. அதிக நண்பர்கள் உண்டு. நண்பர்களின் ஆதரவும், ஆதாயமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் உண்டாகும்

    கும்ப லக்னத்திற்கு 2,11-ம் அதிபதியான குரு பகவான் லக்னத்திற்கு ஆறில் உச்சம் அடைவார். தன லாப கிரகம் ஆறாம் இடத்தில் உச்சம் பெறுவதால் கவுரவ பதவி அரசாங்க உத்தியோகம் அல்லது அரசாங்க உத்தியோகத்திற்கு இணையான வேலை கிடைக்கும். ஆனால் ஜாதகர் பணக்கார போர்வையில் வாழும் கடனாளியாக இருப்பார். தொழில் உத்தியோக ரீதியான மன உளைச்சல் உள்ளவர். வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய குடும்ப நோய் தாக்கம் இருக்கும். வருமானத்தை தக்க வைக்க முடியாத வகையில் இழப்புகள் இருக்கும். நேரத்திற்கு சாப்பிட முடியாமல் கடுமையாக உழைக்க நேரும். ஜாதகரால் பெரிய நற்பயனையும் அடைய முடியாது.

    மீன லக்னத்திற்கு ராசி அதிபதி மற்றும் பத்தாம் அதிபதியான குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் இடத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். வாழ்வின் இறுதிகாலம் வரை சுகமாகவும் அமைதியாகவும் வாழ்க்கை இருக்கும். சுயதொழில் ஆர்வம் அதிகமாக இருக்கும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் நல்ல பொருள் வரவை பெற்றுத்தரும். சிறிய உழைப்பில் பெரிய வருமானம் கிடைக்கும். அரசியல் அரசாங்க பதவி அரசு உத்தியோகத்தை ஏற்படுத்தி தரும் நல்ல கிரக அமைப்பாகும். பெற்ற பிள்ளைகளால் மனநிறைவு இருக்கும். கர்மம் செய்ய புத்திரன் உண்டு. சிலர் முக்தியை போதிக்கும் ஆன்மீக இயக்கம், சங்கங்களில் சேர்ந்து பயனடைவார்கள். குலதெய்வ அனுக்கிரகம் முன்னோர்களின் நல்லாசி நிரம்பியவர்கள். குருபகவான் இயற்கை சுப கிரகம் என்பதால் ஒரு ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றால் ஏதாவது ஒரு நற்பலன் கண்டிப்பாக ஜாதகருக்கு உண்டாகும். 2026ல் குரு பகவான் உச்சம் அடையும் காலங்களில் பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலியாக திகழ்வார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
    • தை அமாவாசை நீத்தார் வழிபாட்டின் பலன்கள் மிக மிக அதிகம்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் தினம் மிகவும் முக்கியமானது. அதிலும் ஆடி, புரட்டாசி, தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது. ஆடி அமாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோ கத்திற்கு கிளம்புவதாக ஐதீகம். மகாளய அமாவாசை என்று அழைக்கப்படும் புரட்டாசி அமாவாசை பித்ருக்கள் பூலோகம் வந்தடைந்து, மகாளய பட்ச காலத்தில் தங்கி இருந்து அருள் புரிவார்கள். தை அமாவாசை அன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம்.

    புண்ணிய காலமாகிய உத்திராயணத்தின் முதல் மாதமாக இருப்பது தையின் சிறப்புகளில் ஒன்று. தை மாதம் சிறப்புடையது என்றால் தையில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்புடையது. தையில் வரும் பூச நட்சத்திரம் சிறப்புடையது.

    மேலும் தையில் வரும் சப்தமி (ரத சப்தமி) அஷ்டமி (பீஷ்மாஷ்டமி) திதியும் சிறப்புடையது. அந்த வகையில் தையில் வரும் அமாவாசை மிக மிகச் சிறப்புடையது. தட்சணாயன காலத்தில் முதல் மாதமான ஆடி மாத அமாவாசை எத்தனை சிறப்புடையதோ, அதே போன்று உத்தராயன காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும் சிறப்புடையது.

    பொதுவாக திதிகள் 15 இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது. மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் தோஷம் அடையும். ஆனால் அமாவாசை அன்று எந்த கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களைத் தொடங்கினால் அது வெற்றி பெறும்.

     

    அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்துச் செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம். தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படைத்து விட்டு, சாப்பிடுவது, பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் அடங்கும். ஒருவர் இறந்தால் அவரை நினைத்து ஒவ்வொரு ஆண்டும், அவர் இறந்த அதே திதியில் நாம் வீட்டில் அல்லது கோவிலுக்கு சென்று செய்யும் வழிபாடு சிரார்த்தம் எனப்படும். இதில் பிண்டம் வைத்து வழிபடுவது சிறந்தது. குறிப்பாக அவர் இறந்த நாளின்போது வரும் திதியில் செய்வது சிரார்த்தம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.

    அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கான நாள் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. மறைந்த நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் ஒன்று சேர்ந்து தங்களின் சந்ததிகளை பார்க்க பூமிக்கு வருவதாக ஐதீகம். அப்படி பூமிக்கும் வரும் முன்னோர்கள் தங்களின் குடும்பத்தினர் அளிக்கும் தர்ப்பணம், தானம் ஆகியவற்றை ஏற்று தங்களின் பசி மற்றும் தாகத்தை தீர்த்துக் கொள்வார்கள். இதனால் அமைதி அடையும் முன்னோர்களின் ஆத்மாக்கள், தங்களின் சந்ததிகளை மனதார வாழ்த்தும் என நம்பப்படுகிறது. இதனாலேயே அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபட்டு, பித்ரு கடன் நிறைவேற்ற வேண்டும் என சொல்லப்படுகிறது. அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் போன்ற பித்ருகர்ம காரியங்கள் செய்யாதவர்களுக்கு பித்ருதோஷம், பித்ருசாபம் ஏற்படும். இவற்றில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ற நாளாக குறிப்பிட்ட சில அமாவாசைகள் சொல்லப்படுகிறது.

    அப்படி மிக முக்கியமான அமாவாசைகளில் ஒன்று தான் தை அமாவாசை. உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

    தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதன்பின் வீட்டிற்கு வந்து, முன்னோர்களின் படத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சூட்ட வேண்டும். படத்திற்கு முன்பாக முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களுக்குப் பிடித்த உணவுகளை படைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும்.

    தை அமாவாசைக்கு முன்தினம் கோதுமை தவிடு, அகத்திக்கீரை ஆகியவற்றை ஊறவைத்து, அதை அமாவாசை அன்று பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, வீட்டில் வழிபாடு செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்தி வைப்பது நல்லது.

    தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும்போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது.

    அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. கிழக்கு திசை பார்த்தபடி அமர்ந்துதான் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய தினம் வீட்டின் வாசலில் கோலமிடுதல் கூடாது.

    தை அமாவாசை நீத்தார் வழிபாட்டின் பலன்கள் மிக மிக அதிகம். நீத்தார் வழிபாட்டை அமாவாசை அன்று முறையாக நிறைவேற்றினால் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கும், சுப காரியத் தடைகள் விலகும், சந்தான விருத்தி ஏற்படும், தொழில் அபிவிருத்தி அடையும், சொத்து சுகங்கள் அதிகரிக்கும், வாகன யோகம் ஏற்படும்.

    நோய் நொடிகள் அகலும். அமானுஷ்யமான சக்திகள் அண்டாது. கெட்ட சக்திகள் விலகும். ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கி நன்மை ஏற்படும். இதுவரை செய்யாமல் இருந்ததால் ஏற்பட்ட கிரக சாபங்கள் நீங்கி, அவை வரங்களாக மாறி வற்றாத நற்பலன்களை அள்ளி அள்ளி வழங்கும்.

    பூமியில் பிறந்தவர்கள் பாவ புண்ணியத்தில் இருந்து தப்பமுடியாது. பாவங்களில் மகா பாவமாக கூறப்படுவது பித்ரு கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். உயிருடன் இருக்கும் பெரியவர்களை மதிக்காமல், பலர் உள்ளனர். அந்த உயிர்கள் படும் துன்பம், பாவங்கள் ரூபத்தில் கவனிக்க தவறியவர்களையே வந்து சேரும்.

    நாம் எங்கு சென்றாலும் உடன் வருவது பாவ புண்ணியங்கள் மட்டுமே. பித்ரு பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய ஏற்படுத்தப்பட்டது நம் முன்னோர்களுக்கு மறக்காமல் காரியம் நிறைவேற்ற வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுவாக ஒரு கிரகத்தின் பலம் என்பது ஆட்சி, உச்சம், நட்பு மூலத்திரிகோணம் என்ற ரீதியில் எடுத்துக் கொள்ளலாம்.
    • ஒரு கிரகம் தன் சொந்த வீட்டிலோ நட்பு வீட்டிலோ உச்சமடைவது சாதாரண விஷயமாகும்.

    ஒருவரின் குண நலன்களை பிரதிபலிப்பதில் ஒரு ஜாதகத்தில் செவ்வாயின் பங்கு அளப்பரியது செவ்வாய் வலுப்பெற்றவர்கள் பிடிவாதம், அகங்காரம், துணிச்சல், கர்வம், அவசர புத்தி, கலகம், அதீத காம உணர்வு நிறைந்தவராக இருப்பார்கள். அதே நேரத்தில் செவ்வாய் வலுப்பெற்று இருந்தால் மட்டுமே ஒருவருக்கு தைரியம், வீரியம், சொத்துக்கள் சேருதல், உடன் பிறந்த சகோதரர்களின் அன்பு, விவசாயம் கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் ஆதாயம் போன்ற சுப பலன்கள் நடக்கும்.செவ்வாய் பலம் குறைந்தால் பிரஷர், மாதவிடாய் கோளாறு, சொத்துக்கள் இல்லாத நிலை, ஏமாற்றம் போன்ற அசுபங்கள் அதிகமாக இருக்கும். எந்த கிரகமாக இருந்தாலும் அதன் மூலம் நன்மையும் தீமையும் உண்டு.

    இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் ஒரு ஆதிபத்திய ரீதியாக நன்மை செய்தால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஜாதகருக்கு ஏதாவது ஒரு பின்விளைவுகளை தரலாம். பலம் பெற்ற ஒரு கிரகத்தின் காரகத்துவத்தை ஜாதகர் எளிமையாக அடைய முடியும். பலம் இல்லாத கிரகத்தின் ஆதிபத்திய ரீதியான பலனை ஜாதகர் போராடி அடைவார்கள். அல்லது வாழ்நாள் லட்சியமாக கனவாகவே இருக்கும்.

    பொதுவாக ஒரு கிரகத்தின் பலம் என்பது ஆட்சி, உச்சம், நட்பு மூலத்திரிகோணம் என்ற ரீதியில் எடுத்துக் கொள்ளலாம்.அத்துடன் ஒரு ஜாதகத்தில் செவ்வாயின் நட்சத்திரத்தில் ஏதாவது கிரகம் இருந்தாலும் அந்த தசா புத்தியில் ஜாதகருக்கு செவ்வாயால் ஏற்படக்கூடிய அனைத்து நன்மை தீமைகளும் நடக்கும். செவ்வாய் மகர ராசியில் 28 வது பாகையில் அவிட்டம் நட்சத்திரத்தில் உச்சமடைகிறார்.

    ஒரு கிரகம் தன் சொந்த வீட்டிலோ நட்பு வீட்டிலோ உச்சமடைவது சாதாரண விஷயமாகும். தனது பகை வீட்டில் தனது சொந்த நட்சத்திரத்தில் ஒரு கிரகம் உச்சம் அடைவது செவ்வாயில் தைரியத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் அமைப்பாகும். மேலும் தற்போது கோட்ச்சாரத்தில் 16.1.2026 முதல் 23.2.2026 வரை மகரத்தில் உச்சம் பெறப் போகிறார். கடந்த வாரங்களில் சூரியன், சந்திரன் உச்சம் பெற்றால் என்ன பலன் தரும் என்ற கட்டுரையை பார்த்தோம் தற்போது செவ்வாய் உச்சம் பெற்றால் யாருக்கு நன்மை தரும் என்பதை இந்த வாரம் நாம் பார்க்கலாம்.

    மேஷ லக்னத்திற்கு ராசி அதிபதி மட்டும் அஷ்டமாதிபதியான செவ்வாய் 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறும்போது ஜாதகருக்கு செவ்வாய் திசை புத்தி காலகட்டங்களில் விபரீத ராஜயோகமான பலன்கள் நடக்கும்.

    ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் தேடி வரும். தொழில் ரீதியான சிந்தனை ஜாதகருக்கு மிகுதியாக இருக்கும், அரசியல் அரசாங்கம் அரசு சார்ந்த துறைகளில் ஆதாயம் மிகுதியாக இருக்கும் அவரே அஷ்டமாதிபதி என்பதால் ஒரு நல்லது நடந்தாலும் ஒரு அவச்சொல், அவமானம் ஒரு வம்பு, வழக்கு, அறுவை சிகிச்சை, வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நோய், அல்லது கடன் இருந்தே தீரும்.

    ரிஷப லக்னத்திற்கு 7, 12-ம் அதிபதியான செவ்வாய் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். ஜாதகருக்கு தந்தையின் வழியில் அதிக சொத்து கிடைக்கும். திருமணத்திற்கு பிறகு சொத்து சேர்க்கை உண்டாகும்.பூர்வ ஜென்மத்து வாழ்க்கை துணை இந்த ஜென்மத்திற்கும் வாழ்க்கை துணையாக வருவார். தம்பதிகள் ஓர் உயிர் ஈர் உடலாக வாழ்வார்கள். கூட்டுத் தொழில் ஆர்வம் அதிகமாக இருக்கும். பரம்பரை கூட்டுத் தொழிலில் ஜாதகர் பங்குதாரராக இருப்பார். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண உறவு ஏற்படும். செவ்வாய் தசை, புத்தி நடப்பில் இருந்தால் வெளியூர் வெளிநாட்டில் வாழ்வார்கள் அல்லது அதிக வைத்தியம் செய்வார்கள்.

    மிதுன லக்னத்திற்கு செவ்வாய் 6, 11-ம் அதிபதி என்பதால் உச்சம் பெறுவது சிறப்பல்ல. ஆறாமிடம் எனும் கடன், நோய் எதிரி ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெறும் போது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகமாகும். அதிர்ஷ்ட உயில் சொத்து, பணம், நகைகள், இன்சூரன்ஸ் காப்பீட்டு பணம் போன்றவைகள் கிடைக்கும். எதிரியை வெல்லக்கூடிய வலிமை உண்டாகும். அவரே லாப ஸ்தான அதிபதியாக இருப்பதால் செவ்வாய் சுப வலுப் பெற்றால் மிகப் பெரிய லாபம் கிடைத்து எவ்வளவு அதிகமான கடன் இருந்தாலும் விரைவில் தீர்ந்து விடும். செவ்வாயால் கடன், நோய் உருவாகினாலும் கடன், நோய் நிவர்த்தியாகும்.

    கடக லக்னத்திற்கு செவ்வாய் 5, 10-ம் அதிபதி. செவ்வாய் இந்த லக்னத்திற்கு ஏக யோகாதிபதி என்பதால் ஜாதகருக்கு மிடுக்கான தோற்றம், ஆளுமைத் திறன் கூடும். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். நண்பர்கள், தொழில் கூட்டாளி வாடிக்கையாளர்கள், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு.காதல் திருமணம் நடக்கும். உரிய வயதில் திருமணம் குழந்தை பேரு போன்ற நல்ல சம்பவங்கள் நடக்கும். கவுரவ பதவி உண்டு. ஜாதகருக்கு குலதெய்வமே குழந்தையாக பிறக்கும். குலதெய்வ இஷ்ட தெய்வம் வழிபாட்டில் ஜாதகருக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை வாழ்க்கைத் துணை மூலமாக அனுபவிப்பார்கள். சிம்ம லக்னத்திற்கு 4,9-ம் அதிபதியான செவ்வாய் 6-ல் உச்சம் பெறுவதால் நிலையான நிரந்தரமான உத்தியோகம் உண்டு. தாய், தந்தை வழி உறவுகளின் அன்பு, அனுசரனை இருக்கும். தாய் வழி, தந்தை வழி பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். தீர்த்த யாத்திரை செல்லுதல், தானதர்மம் செய்தல் போன்ற பாக்கிய பலன்கள் நடக்கும். அரச உத்தியோகம், அரச பதவி போன்ற பாக்கிய பலன்கள் நடக்கும். விவசாயம், கால்நடை வளர்த்தல், பண்ணை தொழில், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் ஆர்வம் மிகுதியாக இருக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

     

    கன்னி லக்னத்திற்கு 3, 8-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 5-ல் உச்சம் பெறுவதால் பூர்வீகம், குலதெய்வம், குழந்தை, அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு மன உளைச்சல் இருக்கும். பாகப்பிரிவினையில் உடன் பிறந்தவர்களால் மனவருத்தம் ஏற்படும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் ஜாதகருக்கு செவ்வாய் தசை புத்தி காலங்களில் வரலாம். சிலருக்கு விபரீத ராஜ யோகமாக ஒரு விபரீதம் ஏற்பட்டு அதன் பிறகு அதிர்ஷ்ட சொத்து, உயில் பணம், காப்பீட்டு பணம் போன்ற வைகள் கிடைக்கலாம். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு, உடன் பிறந்தவர்களுடன் சொத்துத் தகராறு, ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை, விபத்து, கண்டம், சர்ஜரி வம்பு, வழக்கு ஏற்படலாம்.

    துலாம் லக்னத்திற்கு 2-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 4-ல் உச்சம் பெறுவது மிக அதிர்ஷ்டமான யோகமான அமைப்பாகும். இளம் வயதில் காதல் திருமணம் நடக்கும். அல்லது உறவுகளில் வரன் வரும். சொத்துக்களால், கூட்டுத் தொழிலால், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும். வாழ்க்கைத் துணை மூலமாக உபரி வருமானம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் மூலமாக ஜாதகரின் எண்ணங்கள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அளவுக்கு அதிகமாக நேசிப்பார்கள்.சில ஆண்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக சென்று விடுவார்கள்.

    விருச்சிக லக்னத்திற்கு 1,6-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 3-ல் உச்சம் பெறுவதால் ஜாதகரின் முயற்சி எளிதில் வெற்றி பெறும். உடன்பிறந்தவர்களின் அன்பும் அனுசரணையும் இருக்கும். ஒரு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதற்கு ஜாதரே காரணமாக இருப்பார். இடப்பெயர்ச்சி நடக்கும். மனதில் வெறுமை தேவையில்லாத கற்பனை பய உணர்வு நிரம்பும். ஞாபக சக்தி குறையும். கடன் தொல்லை அதிகரிக்கும். தேவையற்ற வழக்குகள் மற்றும் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட சொத்து, நகை, பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும்.

    தனுசு லக்னத்திற்கு 5,12- அதிபதியான செவ்வாய் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் அடைவார். வாக்கு வன்மை பெறும். குடும்ப உறுப்பினர்கள் இவர்களின் கருத்திற்கு மதிப்பு கொடுப்பார்கள். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் தொழிலில் வல்லவர்களாக வலம் வருவார்கள். பேங்கிங், ஆடிட்டிங், டீச்சிங், ஐடி, போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இது வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாகும். பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் இருந்தாலும் சில விரயங்களும் இருக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாட்டில் சென்று குடியேறக்கூடிய அமைப்பு இருக்கும்.கண், பல் போன்றவற்றிற்கு சிகிச்சை செய்வீர்கள்.

    மகர லக்னத்திற்கு 3,12-ம் அதிபதியான செவ்வாய் ராசியில் தனது சொந்த நட்சத்திரத்தில் உச்சம் அடைவதால் முன் கோபத்தால் சொந்த செலவில் தனக்கு தானே சூன்யம் வைத்துக் கொள்வார்கள். அடிக்கடி உத்தியோக மாற்றம் செய்வது, கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.சிறு சிறு நோய் தாக்கம் இருக்கும். கடனால் கவலை, எதிரிகளால், உயர் அதிகாரிகளால் மன சஞ்சலம் இருக்கும். ஜாமீன் சார்ந்த பிரச்சினை இருக்கும். சமாளிக்க முடியாத வீண் விரயங்கள் இழப்புகள் நஷ்டங்கள் வரலாம். வெளியூர் வெளிநாட்டு வாழ்க்கை இவர்களுக்கு வரமாக இருக்கும்.

    கும்ப லக்னத்திற்கு 3,10-ம் அதிபதியான செவ்வாய் விரய ஸ்தானத்தில் ராசிக்கு பன்னிரண்டாம் இடமான விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது தொழில், உத்தியோக ரீதியான உயர்வை நிச்சயம் தரும். தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி வாழ்வியல் மாற்றம் தரும் நல்ல இடப் பெயர்ச்சி நடக்கும். ஞாபகசக்தி கூடும். உயில் எழுதுதல், உயிலில் மாற்றம் செய்தல், கடனை புதுப்பித்தல் போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதாயம், ஆதரவு புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் வந்து மனதை மகிழ்விக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாக ஆதாயம் கிடைக்கும்

    மீன லக்னத்திற்கு 2,9-ம் அதிபதியான செவ்வாய் 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது உயர்வான யோகமாகும். குழந்தை பேறு, குல தெய்வ அனுகிரகம், பங்குச் சந்தை ஆதாயம், பிள்ளைகளுக்கு நல்ல உத்தியோகம், சுப விசேஷங்கள் நடக்கும். பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாகும். மூத்த சகோதரம், சித்தப்பா, இளைய மனைவி போன்ற உறவுகளால் ஆதாயம் உண்டு. வங்கி, ஆசிரியப்பணி, ஜோதிடம், நிதி நிர்வாகம், அரசியல், ஆன்மீகம் போன்ற பணிகளில் தனித் திறமையுடன் மிளிர்வார்கள்.

    இதில் ஆர்வம் ஆதாயமும். அதிகமாகும். முன்னோர்கள் வழிச் சொத்து முறையாக கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு, தீர்த்த யாத்திரை செல்லுதல் முன்னோர்களுக்கு பித்ரு சாந்தி செய்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும்.

    ஒரு ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றால் மட்டுமே உரிய வயதில் திருமணம் நடக்கும். பெண்களுக்கு ஆண்மை, தைரியம், நிறைந்த குடும்பத்தை கட்டுக் கோப்பாக வழிநடத்தும் கணவர் கிடைப்பார். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவராக இருப்பார்கள். செவ்வாய் பலம் குறைந்தால் உடன் பிறந்தவர்கள் கலகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும். பெண்களுக்கு கணவரின் அன்பும், அனுசரனையும் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

    செல்: 98652 20406

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சந்திரன் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு திடகாத்திரமான மனநிலை உண்டு.
    • ரிஷப லக்கனத்திற்கு 3-ம் அதிபதியான சந்திரன் ராசியில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும்.

    சந்திரன் ரிஷப ராசியின் மூன்றாவது பாகையான கிருத்திகை நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார். கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான். ஒரு ஜாதகத்தில் சூரியன் ஆன்மாவையும் ஆன்ம பலத்தையும் குறிப்பவர். ஒரு ஜாதகத்தில் சந்திரன் உடலையும் மனதையும் குறிப்பவர்.

    உடலையும் மனதையும் பற்றி கூறும் சந்திரன் ஆன்மாவை பற்றி கூறும் சூரியனின் நட்சத்திரத்தில் உச்சம் அடைந்தால் மனமும் ஆன்மாவும் புனிதம் அடையும். உடலாலும் உள்ளத்தாலும் ஒருவர் உயரும் போது லவுகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அடைய முடியும். சந்திரன் உச்சம் பெற்றவர்கள் ஆன்ம பலம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒரு ஜாதகத்தில் மனோகாரகன் எனப்படும் சந்திரன் சுப வலிமை பெற வேண்டும். சந்திரன் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு திடகாத்திரமான மனநிலை உண்டு. மதிநுட்பத்துடன் செயல்படுவார்கள். நல்ல தோற்ற பொலிவு உள்ளவர்கள். எந்த சூழ்நிலையிலும் அஞ்ச மாட்டார்கள். தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் தாய்மை உணர்வுடன் வழிநடத்துவார்கள்.

    எளிதில் நோய்கள் அண்டாது. சந்திரன் காலபுருஷ நான்காம் அதிபதி என்பதால் சந்திரன் பலம் பெற்றால் ஸ்திர சொத்துக்கள் இருக்கும். இனி 12 லக்னங்களுக்கும் உச்ச சந்திரன் என்ன பலனை வழங்குவார் என்று பார்க்கலாம்.

    மேஷ லக்னத்திற்கு 4-ம் அதிபதியான சந்திரன் 2ம்மிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். தாயின் அன்பும் ஆசீர்வாதமும் நிரம்பப் பெற்றவர்கள்.

    தாயின் மூலமாக திரண்ட சொத்துக்கள் நகைகள் பணங்கள் கிடைக்கக்கூடிய அமைப்பு உண்டு. பலர் வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் உள்ளவராக இருப்பார்கள். கற்ற கல்வியின் மூலம் பயன் உண்டு. படித்ததை உடனே புரிந்து கொள்ளும் தன்மை இருக்கும். தான் கற்றதை பிறருக்கு உபதேசிக்கும் வல்லமை நிரம்பியவர்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பது பண்ணை தொழில் போன்றவற்றில் ஜாதகருக்கு ஆர்வம் மிகுதியாக உண்டாகும். பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழிலில் வல்லவராக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களின் அனுசரணை இருக்கும். இடத்திற்கு தகுந்தார் போல் தனது பேச்சை மாற்றுவார்கள்.

    ரிஷப லக்கனத்திற்கு 3-ம் அதிபதியான சந்திரன் ராசியில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். ஜாதகர் பிறந்தவுடன் குடும்பத்திற்கு மாற்றம் தரக்கூடிய நல்ல இடப்பெயர்ச்சி நடக்கும். புகழ், கீர்த்தி, வெற்றி, சுய வருமானம், நேர்மை, திறமை, விருத்தி, மங்காத புகழ் உடையவர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

    ஜாதகருக்கு உடன்பிறந்த இளைய சகோதர சகோதரிகள் இருப்பார்கள். உடன்பிறந்தவர்களின் நலனில் அதிக அக்கறை உள்ளவர்களாக இருப்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஜாதகருக்கு வருமானம் உண்டாகும். அடிக்கடி தொழில் வேலை உத்தியோகத்தை குடியிருப்பை மாற்றிக் கொண்டே இருப்பார். விடா முயற்சி, தன்நம்பிக்கை, துணிச்சல் மிகுந்தவர்கள். ஆன்மீக ஈடுபாடு உண்டு. அதிகார வர்க்கத்தின் தொடர்புடையவர்கள். வேலை ஆட்கள் யோகம் நிறைந்தவர்கள். பயணம் செய்வதில் விருப்பம் மிகுந்தவர்.


    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி



     

    மிதுன லக்னத்திற்கு தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதியான சந்திரன் தன் வீட்டிற்குப் பின் வீடான 12ம் இடத்தில் உச்சம் பெற்றால் ஜாதகருக்கு மறைமுக வருமானம் அதிகமாக இருக்கும். ஜாதகர் கற்பனையில் கனவுகளில் வாழ்வார்கள். குடும்ப வாழ்க்கை ரகசியம் மர்மம் நிறைந்ததாக இருக்கும். சிலர் உண்ண உறங்க நேரமில்லாமல் கடுமையாக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். சிலர் எதை பற்றியும் கவலைப்படாமல் நேரத்திற்கு சாப்பிட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டே இருப்பார்கள். கஞ்சத்தனம் அதிகமாக இருக்கும்.

    ஆதாயம் இல்லாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். உலகில் அனுபவிக்க வேண்டிய இன்பங்களை அனுபவிக்காமல் பணத்தையும் சொத்து சுகத்தையும் கட்டிக் காத்துக் கொண்டு இருப்பார்கள். தானும் அனுபவிக்க மாட்டார்கள் தன்னை சார்ந்தவர்களையும் அனுபவிக்க விடமாட்டார்கள்.

    கடக லக்னத்திற்கு ராசி அதிபதியான சந்திரன் 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் தன ஸ்தான அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் நின்றால் மிகப்பெரிய பொருளாதார அமைப்பு நிறைந்தவராக இருப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் உள்ளவர்கள். குடும்ப தேவைகளை உடனுக்குடன் நிறைவு செய்வார்கள். சிலருக்கு இரண்டாவது குடும்பம் அமைந்த பிறகு பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். கடக லக்னத்திற்கு 11ம்மிடம் பாதகஸ்தானம் என்பதால் எவ்வளவு பொருளாதாரம் இருந்தாலும் அது ஜாதகரை சார்ந்தவர்களுக்கு தான் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். நல்ல நட்புகள் உண்டு பேச்சில் பெருமிதம் இருக்கும். வாக்கு சம்பந்தமான தொழிலை அதிகம் விரும்புவார்கள்.

    வாக்கு வன்மை உண்டு. கொடுத்த வாக்கை எந்த சூழ்நிலையிலும் தவற விட மாட்டார்கள். தாய் பாசம் பற்றி அடிக்கடி பேசுவார்கள்.

    சிம்ம லக்னத்திற்கு விரயாதிபதியான சந்திரன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவது சிறப்பு அல்ல. சிம்ம லக்னத்திற்கு சந்திரன் உச்சம் பெறுவது சுமாரான பலன்களை தரும். எந்த தொழில் செய்தாலும் நஷ்டம். தொழிலுக்காக பிரயாணம் செய்ய நேரும் அல்லது அலைச்சல் மிகுந்த தொழில் செய்வார். உத்தியோகமே சிறந்தது என்றாலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இருக்காது. தொழில் தொடர்பான மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். அதிக முதலீடு உள்ள தொழில்களை தவிர்ப்பதால் வீண் விரயங்களை கட்டுப்படுத்த முடியும். இடது கண் பாதங்களில் பாதிப்பு இருக்கும். எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் இரவில் நிம்மதியாக உறங்குவார்கள். சிலர் கடைசி காலத்தில் படுத்த படுக்கையாக இருப்பார்கள். அயல்நாட்டு வாழ்க்கையை விரும்புவார்கள். சிலர் அந்திம காலத்தில் வெளியூர் வெளிநாடு வெளி மாநிலத்தில் பிள்ளைகளுடன் கழிப்பார்கள்.

    கன்னி லக்னத்திற்கு லாப அதிபதியான சந்திரன் 9-ம் மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச்சிறந்த அமைப்பாகும். ஜாதகர் அந்தஸ்து, கவுரவம், உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் ஜாதகருக்கு வருமானம் வந்து கொண்டே இருக்கும். செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடனே வசிப்பார்கள். பல தொழில் வல்லுநராக இருப்பார். பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை அதிகமாக இருக்கும். ஆயிரம் பேருக்கு மத்தியில் ஜாதகர் தனித் திறனுடன் மிளிர்வார்கள். எந்த சூழ்நிலையிலும் பிறரிடம் கையேந்தி வாழ மாட்டார்கள். இரண்டு குடும்ப வாழ்க்கை உண்டு. கூட்டுக் குடும்பத்தில் வசிப்பார். மூதாதையர்களின் சொத்து ஜாதகருக்கு அதிகமாக இருக்கும். ஜாதகரின் எண்ணங்களும் விருப்பங்களும் உடனுக்குடன் நிறைவேறும்.

    துலாம் லக்னத்திற்கு தொழில் ஸ்தான அதிபதியான சந்திரன் 8ம் இடத்தில் உச்சம் பெறுவது நல்லது. முதலீடு உயர்ந்து கொண்டே இருக்கும். முதலீட்டை விட அதிக வருமானம் வந்து கொண்டே இருக்கும். குல கவுரவம் நிரம்பிய வாழ்க்கை துணை அமையும். இளம் வயதில் திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணை மூலமாக வருமானம் உண்டு. பேச்சில் கனிவு கவுரவம் இருக்கும். அறநெறி தவறாமல் வாழ்வார்கள். உயர் கல்வி வாய்ப்பு உண்டு. அறக்கட்டளை தர்ம ஸ்தாபனங்கள் நடத்தும் பாக்கியம் பெற்றவர்கள். தந்தைக்கு இருதார யோகம் உண்டு. ஜாதகர் தாய் வழி பாட்டி வீட்டில் வளர்ந்தவராக இருப்பார். தந்தையை விட தாத்தாவின் மேல் பிரியம் அதிகமாக இருக்கும். தாய்வழி தந்தை வழி சொத்து உண்டு. வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும் ஜாதகர் பிறந்த பிறகு தாய், தந்தைக்கு பொருளாதார மேன்மை உண்டாகும்.

    விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதி பதியாகி ராசிக்கு ஏழாம் இடத்தில் பெறுவது சற்று சுமாரான பலனை தரும். பரம்பரை கூட்டுத் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் சம்பந்தம் இல்லாத நபர்களால் நிம்மதி குறைகிறது. ஏழில் சந்திரன் உச்சம் பெற்ற விருச்சிக லக்னத்தினர் திருமணம் ஏன் நடந்தது என்று வருந்தும் வகையில் திருமண வாழ்க்கை இருக்கிறது. பாதகாதிபதி ஏழில் உச்சம் பெறுவதால் கூட்டுத் தொழில் வஞ்சிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் குறைவுபடும். ஜாதகரின் சந்திர தசை காலங்களில் விருச்சிக லக்னத்தவரின் தாய், தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் என அனைத்தும் பாதிப்படைகிறது. பொதுவாக விருச்சிக லக்னம் கால புருஷ எட்டாமிடம் என்பதால் எளிதில் எந்தப் பிரச்சினையும் எளிதில் வெளியில் தெரிவிக்காத பிரச்சினை நன்றாக தீவீரமடைந்த பின்பே வெளியில் தெரியும். கடுமையான பாதகம் உருவாகும்.

    தனுசு லக்னத்திற்கு அஷ்டமாதிபதியான சந்திரன் மற்றொரு மறைவு ஸ்தானமான ஆறாம் இடத்தில் உச்சம் பெறுவது சிறப்பு அல்ல. கெட்டவன் கெடுவது நல்லது. கெட்டவன் உச்சம் பெறுவது ஜாதகருக்கு உச்சகட்ட கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகளை அதிகம் அதிகப்படுத்தும். உத்தி யோகம் சிறப்பாக இருக்காது அல்லது அடிக்கடி உத்தியோகத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். சிலர் நடக்காததை நடந்ததாக நினைத்து கற்பனை பயத்தை வளர்த்துக் கொள்வார்கள். சந்திரனுக்கு ராகு கேது சம்பந்தம் இருந்தால் புத்தி தடுமாற்றம் மிகையாக இருக்கும். சிலர் அடிப்படை தேவைக்கு கூட போராட வேண்டிய நிலை இருக்கும். மிகச் சுருக்கமாக சந்திர தசை காலங்களில் ஜாதகரின் உடலில் உயிரை மட்டும் விட்டு வைத்து மனிதனை நிர்கதியாக்குகிறது. பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவில் சென்று குடியேறுவார்கள்.

    மகர லக்னத்திற்கு சந்திரன் களத்திர ஸ்தான அதிபதியாகும். அவர் 5ம் மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால்

    ஜாதகருக்கு மிகச்சிறப்பான வாழ்வியல் மாற்றத்தை ஏற்படும். பூர்வீகம், குலதெய்வம், குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு நன்மை தரும்.ஜாதகர் திறமையான அணுகு முறையுடன் கூடிய சாமார்த்தியசாலியாக திகழ்வார்கள். பேச்சில் நிதானமும், பொறுமையும் இருக்கும். ஜாதகர் உயர்ந்த குலத்தில் பிறந்தவராக இருப்பார். தன்னைத் தானே உணரும் வலிமை படைத்தவராக இருப்பார்கள். காதல் திருமணம் நடக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். குழந்தை பிறந்த பிறகு வாழ்வாதாரம் பல மடங்கு உயரும். கூட்டு தொழில் பல மடங்கு நன்மை தரும். குடும்ப உறவுகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார்கள். நிச்சயமாக சொத்து வாகன வசதிகள் இருக்கும். இயல் இசை நாடகப் பிரியர்கள்.

    கும்ப லக்னத்திற்கு 6ம் அதிபதியான சந்திரன் 4-ம்மிடத்தில் உச்சம் பெறுவது சிறப்பான பலன் அல்ல. கடன், நோய், வம்பு, வழக்கு எதிரியை உருவாக்கி தரக்கூடிய கிரகமான சந்திரன் நான்காம் இடத்தில் உச்சம் பெறுவதால் ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் இருக்கும். கல்வியில் தடை உண்டாகும். அல்லது அதிகமாக கல்லி கடன் பெற்று உயர் கல்வி படிப்பார்கள். நான்காம் அதிபதிக்கு ஆறாம் அதிபதி சம்பந்தம் இருந்தால் ஜாதகருக்கு முதல் சொத்து விரயமாகும் அல்லது சொத்தை விற்று கடன் தீர்ப்பார்கள். சொத்தின் மதிப்பை விட கடனின் மதிப்பு அதிகமாக இருக்கும். 6ம் இடத்திற்கு லாப ஸ்தானம் நான்காம் இடம் என்பதால் இது போன்ற அமைப்பு இருப்பவர்கள் சொத்து வாங்கும் முன்பு தாயிடம் அல்லது தாய் மாமாவிடம் யாசகம் பெற்று சொத்து வாங்க வேண்டும்.

    மீன லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான சந்திரன் 3-ம் இடமான வெற்றி ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிக உயர்வான அமைப்பாகும். ஆன்மீக நாட்டம் தியாக சிந்தனை மிகுந்தவராக இருப்பார். பிறருக்கு உபதேசம் செய்து கொண்டே இருப்பார்கள். புனித யாத்திரை செய்யும் பாக்கியம் உள்ளவர்கள். முதலீடு இல்லாத கமிஷன் தொழில்கள் பல மடங்கு வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொடுக்கும். வயது கூட கூட ஜாதகருக்கு வருமானம் கூடிக் கொண்டே இருக்கும். குல கவுரவம் நிரம்பியவர்கள். முதல் குழந்தை பிறந்த பிறகு பூர்வீகத்தை விட்டு வெளியேறி முன்னேறுவார்கள் ஆதாயம் இல்லாத விஷயங்களில் ஈடுபட மாட்டார்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி இடம் மாறுவார்கள். சாதாரண மனிதனாக இருந்தால் கூட சாதனை மனிதனாக மாறுவார்கள். பொதுவாக ஒரு ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருப்பதால் ஜாதகரின் சிந்தனை ஓட்டம் நல்ல விதமாக இருக்கும். உச்ச சந்திரனால் இன்னல் களை அனுபவிப்பவர்கள் பவுர்ணமி அன்று பால் சாதம் தானம் வழங்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.

    செல்: 98652 20406

    ×