என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாக்லேட் என்ற பெயரில் வருபவற்றில் இருபது கிராம் சர்க்கரையில் நூறுகிராம் சர்க்கரைக்குரிய அடர் இனிப்புத் திணிக்கப்பட்டிருக்கும்.
    • குடல்வால் என்பது சிறுகுடலும், பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் தனியாக நம்முடைய ஆட்காட்டி விரல் அளவிற்கு நீண்டிருக்கும் ஓரமைப்பு.

    மக்காச்சாளம் பொரித்தல் பற்றிப் போன வாரம் பார்த்தோம். நம்முடைய தானியங்களையும் பொரித்து உண்பது காலங்காலமாக உள்ளதுதான். அரிசிப்பொரி நம்முடைய கோவில் திருவிழாக்களில் தவிர்க்க முடியாத பண்டம். இந்திய இந்துக்கள் சடங்குளில் கடவுளுக்குப் படைக்கப்படுவது பொரி. அரிசியை நேரடியாக வாணலியில் மட்பாண்டத்தில் இட்டுப் பொறித்தால் கட்டெறும்பு அளவிற்குப் பொறிந்து வரும். அது மெள்ளுவதற்குச் சற்றே கடினமாக இருக்கும். நாவில் ஒட்டும் விதமாகப் பசைத் தன்மையோடு இருக்கும். ஆனால் பரவலாக அறியப்பட்ட அரிசிப் பொரி வாயிலிட்டு மெள்ளுவதற்கு முன்பே கரைந்து ஓடிவிடும். அரிசியை உப்பிட்டு குறிப்பிட்ட பதத்தில் ஊற விட்டுக் காயவைத்து பின்னர் நிதானமாகச் சூடேறும் வகையில் மணலில் இட்டு வறுப்பார்கள். இப்பொழுது அரிசி, தன்னைப் போலப் பத்து மடங்கிற்கு உப்பி வரும். எச்சில் ஈரம் பட்டதும் அப்படியே கரைந்து இறங்கும்.

    ஒவ்வொரு வேளையும் உடலின் பராமரிப்புக்கும், உழைப்பின் சக்திக்கு ஊக்கமளிக்கும் சத்தான உணவு உண்பது அனைத்து நாடுகளிலும் உள்ளதுதான். அதுபோலவே இடைத் தீனி என்பதும் உலகெங்கும் இருப்பது தான். இதனைச் சிறுதீனியென்றும் கூறுவர். அதாவது அதிக சத்துக்கள் தருவதில்லை என்றாலும் ஆயாசத்தை, மனச் சோர்வை போக்கும் விதமாக குறைவான சத்துக்களையும், நாவினை வருடிச் செல்லும் தன்மையுடன் மூளைக்குத் தூண்டல் தருவதாகவும் இருக்கும்.

    இடைத்தீனி என்பது தவறான பழக்கம் என்பது போன்ற கருத்து நம்மிடையே நிலவுகிறது. அதாவது உடலுழைப்பு அதிகம் இல்லாதவர்கள், ஒவ்வொரு வேளை உணவையும் நாலாவிதமான சத்துக்களுடன் பொருக்க உண்டு விட்டு திணறுகிறவர்கள், உடலில் ஏற்கனவே பலவிதமான நோய்களை உருவாக்கி வைத்திருப்பவர்கள் இத்தகைய இடைத்தீனிகளைத் தவிர்த்தே ஆக வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. சிலருக்கு இடைத்தீனி, இடைப்பானம் இல்லாமல் ஒருவேளையும் ஓடாது. மனமே நிலைகுத்தி ஸ்தம்பித்து விடும். சிலருக்கு நேர நேரத்திற்கு காபி, டீ குடிக்காவிட்டால் தலைவலி, கைகால் நடுக்கம் போன்றவை ஏற்பட்டு விடும்.

     

    இப்படியான பழக்கத்திற்கு ஆட்பட்டோர் அதிலிருந்து மீண்டு வருவதே சரி. குறிப்பிட்ட நேரத்தில் அணில் போல எலி போல எதையாவது கொறித்தாக வேண்டும் என்ற பழக்கத்திற்கு அடிமைப்பட்டு உடலைப் பெருக்க வைத்து அதனைத் தூக்கிச் சுமப்பதே மகத்தான வேலையாகக் கருதுவோர் அப்பழக்கத்தைக் கஷ்ட்டப்பட்டு, அது தம் ஆரோக்கியத்திற்கு எதிரானது என்ற கருத்தைக் கவனத்தில் கொண்டு இஷ்டப்பட்டு அதிலிருந்து மீண்டே ஆகவேண்டும். அணில், எலி போன்ற சிற்றுயிர்களின் பற்கள் எதையாவது கொறிக்கவில்லை என்றால் அதன் கூர்மை மழுங்கி விடும் அதற்காகக் கொறிப்பதற்கு கொட்டைகள், மணிலாக் கொட்டை, உமியுடன் கூடிய தானியங்கள் போன்றவை கிடைக்கா விட்டால் நம் வீட்டுக் கதவையும் கூட எலிகள் கடித்துக் கொறித்து விடும். கதவைக் கொறிக்க முடியாத அளவிற்கு உறுதி மிக்க பலகையைக் கொண்டு பொருத்தி இருந்தால் நமது குளியலறைச் சோப்பையாவது கடித்து பழிதீர்த்துக் கொள்ளும். நம் கதைக்கு வருவோம்.

    சதாசர்வ காலமும் எதையாவது கொறித்துக் கொண்டே இருப்பவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து மீளவில்லை என்றால் உடலே அவர்களைப் படுக்க வைத்துத் தன்னை மீட்டுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர். திடீர் மூச்சிரைப்பு, உடல் வியர்த்தல், மயக்க நிலைக்குப் போதல், உடல் மிக வேகமாக இளைத்தல், நிற்காமல் வயிற்றுப் போக்குப் போதல் போன்ற ஏதேனும் ஒரு உபாதை ஏற்பட்டு இனம் புரியாத பயத்திற்கு ஆளாகி மருத்துவமனைக்குப் போகநேரிடும். அப்படிப் போனால் அட்மிசன் போடனும், அப்சர்வ் பண்ணனும், ஐசியுவில் வைக்கணும், ஏதொண்ணும் சொல்ல டைம் வேணும் என்று மருத்துவர்கள் கூறி விடுவார்கள். அதற்குப் பின்னர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். தொடர் பிரச்சனைகள் குறித்து இங்கே நாம் சொல்ல வேண்டியதே இல்லை.

    மற்றபடி உடலைக் கட்டுக்குள் வைத்திருப் போர், தமது இயல்பான இயக்கத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாதவர்கள் தேவைப்படுகிற பொழுது சிறுதீனி எடுத்துக் கொள்ளுவதில் தவறேதும் இல்லை.

    இன்று அலுவலகத்தில் உழைக்கும் பெண்கள், தொடர்ந்து நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் வேலைசெய்யும் பெண்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும்படியான ஆண்களும் கூட இடைத்தீனியாக சாக்லேட் பார், க்ரீம் பிஸ்கட் போன்றவற்றை எடுத்துக் கொறிக்கிறார்கள். இந்த பண்டங்கள் அனைத்தும் செறிவூட்டப்பட்டவை. சத்துக்களால் அல்ல, சுவையாலும், நிறத்தாலும் செறிவூட்டப்பட்டவை. ஒரு சாக்லேட் பாரில் ஐந்து மடங்கு இனிப்பு செறிவூட்டப்பட்டுள்ளது. அதாவது இயல்பாக முப்பது கிராம் அளவுள்ள ஒரு பண்டத்தை எடுத்துக் கொண்டால் அதில் இருபது கிராம் இனிப்பு இருப்பது சரியான அளவாக இருக்கும். மீதி பத்து கிராமிற்குள் மாவு, டால்டா, பால், நிறமூட்டி, சுவையூட்டி போன்ற பல பொருட்கள் கலந்து இருக்கலாம்.

    ஆனால் இங்கே சாக்லேட் என்ற பெயரில் வருபவற்றில் இருபது கிராம் சர்க்கரையில் நூறுகிராம் சர்க்கரைக்குரிய அடர் இனிப்புத் திணிக்கப்பட்டிருக்கும். அதுவும் சர்க்கரை அல்ல. இரசாயன அதாவது சாக்ரீன் எனும் பெட்ரோலியத்தின் உபக் கூறுகள். இந்த மிகை இனிப்பை நமது உடலுள்ளுறுப்புகளால் கையாள முடியாது. குறிப்பாக கல்லீரலும், மண்ணீரலும், சிறுநீரகமும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகும். அதில் உள்ள நிறமி நுரையீரலிலைப் பாதிக்கும். டால்டா அதாவது தாவரக் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பதாக சாக்லேட் பாரின் மேலட்டையில் குறிக்கப்பட்டிருக்கும். உண்மையில் அது டால்டா அல்ல. மெழுகே ஆகும். இந்த மெழுகு ரத்தத்தில் கலக்கிற பொழுது ரத்தவோட்டம் மந்தப்படும். எனவே அயர்ச்சியும், மந்தமும், அதீத வியர்வை சுரப்பும் உடலில் ஏற்படும்.

     

    போப்பு, 96293 45938

    இம்மெழுகும் பெட்ரோலியத்தின் உபக்கூறே ஆகும். இவற்றை நம்முடலின் உள்ளுறுப்புகளால் அவ்வளவு எளிதில் அடையாளம் காண முடியாது. எனவே அவற்றை வெளியேற்ற பெருமுயற்சி மேற்கொள்ளும். ஆனால் முழுமையாக வெளியேற்றி முடிக்கும் முன்னர் அடுத்த சாக்லேட் பாரை நாம் உண்ணத் தொடங்கினால் பழைய கழிவுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு புதிதாக வந்த சாக்லேட்டை செரித்து தேவையில்லாத நச்சுக்கழிவுப் பொருட்களை வெளியேற்ற வேண்டிய கடமை உடலுறுப்புகள் மீது ஏற்றப்படும்.

    சாக்லேட் பார்களைத் தொடர்ந்து எடுக்கும் நபர்களுக்கு மலச்சிக்கல் அடிவயிற்றுக் கொழுப்புத் திரட்சி போன்ற ஒரே மாதிரியான கூறுகளை நாம் அவதானிக்க முடியும். இளவயதில் உருவாகும் மலச்சிக்கல் மிகவிரைவிலேயே குதம் வெளித்தள்ளப்படும் மூலச் சிக்கல், ஆசன வாய் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

    பசியெடுக்கும்போது நீ, நீயா இருக்க மாட்ட. இந்தாப் பிடி என்று கொடுக்கப்படும் சாக்லேட் பத்துத் தின்றால் போதும் அதைத் தின்றவன் உருப்படியா இருக்கமாட்டான். அவனது செரிமான மண்டலம், பெருங்குடல், ஆசனவாய் அத்தனையும் பிசுபிசுப்பேறி, நச்சுத் தன்மைப் படர ஆரம்பித்து விடும். சிலருக்குக் குடல்வால் பிரச்சனை ஏற்படும். உயிர்போகும் வலி தோன்றி விடும்.

    குடல்வால் என்பது சிறுகுடலும், பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் தனியாக நம்முடைய ஆட்காட்டி விரல் அளவிற்கு நீண்டிருக்கும் ஓரமைப்பு. இது மிகுதியான கழிவுப் பொருட்களை உள்ளீர்த்து வைத்து அவற்றை ரசாயன மாற்றத்திற்கு உள்ளாக்கி வேறுவடிவத்திற்கு மாற்றி வெளியேற்றும் பழம்பொருட்கடையாகும். அதில் வழியேற்படுமானால் உடனடியாக உண்பதை நிறுத்தி விட வேண்டும். செரிமான மண்டலத்திற்குக் கொடுக்கப்படும் வேலை நிறுத்தப்பட்டால் அப்பெண்டிஸ் எனும் குடல்வால் தன்னுள்ளே தேக்கி வைத்த இரசாயனக் கழிவை நீர்க்கச் செய்து பீய்ச்சி அடித்து வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தி விடும். ஆனால் அடிவயிற்றுப் பகுதியில் வலிக்கிறது என்று மருத்துவரைப் பார்த்தால் குடல்வால் வீங்கி இருக்கிறதென்று அதனை அகற்ற வேண்டும் என்பார்.

     

    வலிக்குப் பயந்து நீக்கி விட்டால் பின்னர் அந்த வலி தோன்றாமல் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தத்தில் செரிமானத் திறன் குன்றி விடும். குடல்வால் நீக்கத்திற்கு உள்ளானவர்கள் ஒன்று சாப்பிட முடியாமல் மெலிந்து போவார்கள். அல்லது கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு, உடல் உப்பி பெரும் மந்தத்தன்மைக்கு உள்ளாவார்கள்.

    மேற்சொன்ன அரிசிப் பொரியை உண்பவர்களுக்கு சாக்லேட் பார் தொடர்ந்து உண்ணும்போது ஏற்படும் குடல்வால் பிரச்சனை, மலச் சிக்கல் பிரச்சனை ஏற்படாதது மட்டுமல்ல செரிமானமும் எளிதாக இருக்கும்.

    தொடர்ந்து ஆபத்தில்லாத சிறுதீனி சுவைப்போம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிக உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உடல் பகுதிக்குள் உள்ள உறுப்புகளில் அழுத்தம் அதிகமாகும்.
    • மலச்சிக்கல், இருமல், சளி ஆகியவை இருந்தால் அதை சரி செய்ய வேண்டும்.

    பெண்களை பாதிக்கின்ற கர்ப்பப்பை குடலிறக்கம் பற்றி பார்த்து வருகிறோம். இது வயதான பெண்களை மட்டுமல்ல, வயது குறைந்த பெண்களையும் பாதிக்கும். ஆனால் வயதானவர்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இடுப்புத்தள தசை தளர்வு அடைவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

    இந்த இடுப்புத்தள தசை தளர்வுகளால் என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்று பார்த்தால், சில பெண்களுக்கு பாலியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுதொடர்பாக சிகிச்சைக்கு வரும் பெண்கள், 'டாக்டர் எங்களுக்கு கணவன், மனைவி உறவில் திருப்தி இல்லை. பாலியல் உறவின்போது எனது கணவர் திருப்தி இல்லை என்கிறார்' என்று சொல்வார்கள். இந்த பிரச்சனைகளுடன் சிகிச்சைக்கு வருகின்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

     

    முதல் பிரசவத்துக்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்:

    குறிப்பாக பல பெண்களுக்கு முதல் பிரசவத்தின்போது சிசேரியன் இல்லாமல் இயல்பாக குழந்தை பிறக்கும் நிலையில் அவர்களது யோனி குழாய் விரிவாகி தளர்வு அடைகிறது. யோனி குழாய் தளர்வு அடைவதற்கு பிரசவம் என்பது காரணம் இல்லை. அதற்கு முக்கியமான காரணமே இடுப்பின் அடிப்பகுதியான இடுப்புத்தள தசை தளர்வு அடைவது தான். இது பிரசவம் ஆன பெண்கள் பலரும் எதிர்நோக்கும் சில பிரச்சனைகள் ஆகும்.

    இது தவிர பல நேரங்களில் அவர்களுக்கு மோஷன் கட்டுப்படுத்தும் தன்மை இருக்காது. அதாவது அவர்களுக்கு மோஷன் போனாலும் அதை அறியும் உணர்வு இருக்காது. இந்த பிரச்ச னையானது மலக்குடல் இறக்கம் அடைந்திருப்பதால் வரலாம். அந்த வகையில் இடுப்புத்தள தசையானது, சிறுநீர் கசிவு பிரச்சனை, மோஷன் கட்டுப்பாடு பிரச்சனை, பாலியல் உறவு பிரச்சனை ஆகியவற்றில் முக்கியமான பங்கை வகிக்கிறது.

    பெண்களுக்கு வயதானால் இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது இளம் வயது பெண்களுக்கும் வருகிறது. குறிப்பாக திருமணமாகாத பெண்களில் கூட 2 சதவீதம் பேருக்கு இந்த இடுப்புத்தள தளர்வு பிரச்சனை ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். இளம்பெண்களுக்கும் இது ஏற்படுவது தான் ரொம்ப ஆச்சரியமான விஷயம்.

    இதுதொடர்பாக நடந்த ஒரு ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த விஷயம், பிறக்கும்போதே சில பெண்களுக்கு இடுப்புத்தள தசை பகுதிகளில் தளர்வு ஏற்படுவதற்கான தன்மைகள் காணப்படும். அதாவது இந்த பகுதியில் உள்ள தசைநார்கள், தசைகள் ஆகியவற்றின் தளர்வு, இணைப்பு திசுக்களின் தளர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும். இதை எக்லர்ஸ் டன்லாஸ் சின்ட்ரோம் என்று சொல்கிறோம்.

    இந்த சின்ட்ரோமில் பொதுவாகவே எல்லாவிதமான உறுப்புக்களை இணைக்கின்ற திசுக்கள் அனைத்தும் தளர்வாகி, அவர்களுக்கு இயற்கையாகவே இந்த மாதிரியான பாதிப்புகள் வருவதற்கான தன்மைகள் இருக்கும். இது பிறக்கும்போதே அவர்களின் இணைப்பு திசுக்களில் ஏற்படுகின்ற தளர்வாகும். இந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் பெண்கள் கிட்டத்தட்ட 0.2 முதல் 0.6 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிறக்கும்போதே, அதாவது பிறந்து சிறு வயதிலேயே இந்த மாதிரியான தளர்வுகள் ஏற்படும். அவர்களுக்கு 16, 17 வயதாகும்போது கர்ப்பப்பை இறங்கிவிடும்.

    கர்ப்பப்பை அடியிறக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

    எனது அனுபவத்தில் இளம் வயதில் கர்ப்பப்பை குடலிறக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் 6 பேரை பார்த்து இருக்கிறேன். அவர்கள் சிகிச்சைக்கு வரும்போது கர்ப்பப்பை கீழே இறங்கி இருப்பதுபோல் தெரிகிறது என்று சொல்வார்கள். அதாவது கர்ப்பப்பை அடி இறக்கமாகி இருக்கிறது என்பார்கள். இது இயற்கையாகவே அவர்களுடைய உடல் ரீதியான தளர்வுகளால் வரலாம். ஆனால் இவை தவிர மேலும் சில விஷயங்களாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.

    என்னென்ன காரணங்களால் இவை வரலாம் என்று பார்த்தால், அதிக உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உடல் பகுதிக்குள் உள்ள உறுப்புகளில் அழுத்தம் அதிகமாகும். உடல் பருமன் அதிகரிப்பதால் ஏற்படும் இந்த அழுத்தம் காரணமாக பொதுவாக அவர்களுக்கு இடுப்புத்தள தசை இறக்கம் ஏற்படலாம்.

    மேலும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு அவர்களது வயிற்றில் இருக்கின்ற கொழுப்பினாலும் உடலின் உள்புறம் அழுத்தம் அதிகமாகி அதனால் இடுப்புத்தள தசை தளர்வாகலாம். எந்த ஒரு உடலுக்கும் தாங்குகின்ற சக்தி என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இருக்கும். அதையும் தாண்டினால் தான் இந்த பிரச்சனை ஏற்படும்.

    இதுதவிர சில பெண்களுக்கு நீண்ட காலமாக மலச்சிக்கல் இருக்கலாம். இந்த மலச்சிக்கல் காரணமாக தினமும் மோஷன் போவதற்காக, அளவுக்கு மீறி அழுத்தம் கொடுக்கும்போது, தசைகள் தளர்வு அடைந்து அதன் காரணமாக இடுப்புத்தள தசையும் தளர்வாகலாம். அதாவது தசைகளுக்கு அழுத்தம் கொடுக்க கொடுக்க அந்த தசை பகுதியே தளர்வாகிவிடும்.

    இருமல், ஆஸ்துமா, மூச்சிரைப்பு ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பு:

    இன்னும் சில பெண்களுக்கு கடுமையான இருமல், ஆஸ்துமா, மூச்சிரைப்பு ஆகியவற்றால் உடல் உள் உறுப்புகளில் அழுத்தம் அதிகமாகும். இவை எல்லாமே இடுப்புத்தள தசை தளர்வு அடைவதற்கு முக்கியமான காரணங்களாக கருதப்படுகிறது. இளம்பெண்களில் ஒன்று முதல் 2 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சனைகள் வரும்.

    திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன நிலையில் இந்த பெண்கள் குழந்தையின்மை சிகிச்சைக்கு வருவார்கள். ஆனால் அவர்கள் முதல் பிரச்சனையாக குழந்தையின்மை பற்றி சொல்ல மாட்டார்கள். டாக்டர் எனக்கு முதல் பிரச்சனை சிறுநீர் கட்டுப்பாட்டில் இல்லை. பாலியல் உறவில் ஈடுபடும்போது கூட சிறுநீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுவே ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்பார்கள்.

    சிரிக்கும் போதும் சிறுநீர் வருகிறது. ஜீன்ஸ் உடை அணிந்திருக்கும் நேரங்களில் கழிப்பறை செல்வதற்கு முன்பு சிறுநீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சொல்வார்கள். இந்த மாதிரியான பிரச்சனைகள் இடுப்புத்தள தசை தளர்வுகளால் தான் ஏற்படுகிறது. இளம் வயது பெண்களுக்கு இந்த மாதிரி வந்தால் அவர்க ளுக்கு சிறுநீர் கசிவு அறிகுறிகள் இருக்கும். அப்போது அவர்களை பரிசோதித்து பார்த்தால் சிலருக்கு கர்ப்பப்பையின் இறக்கம் அதிகமாகி கர்ப்பவாய் வெளிப்பக்கமாக தெரியும்.

    சில பெண்களுக்கு கர்ப்பவாயின் நீளம் அதிகரித்து காணப்படும். வழக்கமாக இது 3 செ.மீ நீளம் இருக்க வேண்டும். ஆனால் இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு 8 செ.மீ. முதல் 9 செ.மீ. ஆக அதிகரித்து வெளிப்பக்கம் கூட தெரியும். பல நேரங்களில் கர்ப்பப்பையே லேசாக இறங்கி இருக்கும். இதனோடு சேர்ந்து இவர்களுக்கு இடுப்புத்தள தசை தளர்வு காரணமாக சிறுநீர்ப்பையும் இறங்கி விடும். பல நேரங்களில் மலக்குடலும் இறக்கமாக இருக்கும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    பருமனாக இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும்:

    இது போன்ற பாதிப்பு கொண்ட பெண்களுக்கு நல்ல சிகிச்சை முறைகள் இருக்கிறது. இவர்களுக்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை முறை நல்ல பலனை அளிக்கும். லேப்ராஸ்கோபி மூலமாக சஸ்பென்ஷன் அறுவை சிகிச்சை எனப்படும் எளிமையான சிகிச்சை முறையில் கீழே இறங்கியுள்ள கர்ப்பப்பை மேலே தூக்கி நிறுத்தப்படுகிறது.

    மீண்டும் அது கீழே இறங்காமல் இருக்க அதனை தாங்கி பிடிக்கும் திசுகளுக்கு வலுவை கொடுப்பதற்கு, சில சப்போர்ட் அமைப்பும் ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இந்த பெண்களுக்கு இந்த கருப்பை அடியிறக்கம் சரியாகிறது. சிறுநீர் கட்டுப்பாடின்மை பாதிப்பும் குறைவாகிறது. பிறக்கும் போதே வரும் பிரச்சனைகளால் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு இந்த சிகிச்சையை அளிக்கலாம்.

    இளம் வயது பெண்களுக்கு இந்த கருப்பை இறக்கம் ஏற்படும் நிலையில், உடல் பருமனாக இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். மலச்சிக்கல், இருமல், சளி ஆகியவை இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். பல நேரங்களில் இந்த கருப்பை இறக்கம் இருந்தால் லேப்ராஸ்கோபி மூலமாக சிகிச்சை அளிக்கும்போது பிற்காலத்தில் குழந்தையின்மை மற்றும் பாலியல் பிரச்சனைகள் வருவதையும் தடுக்க முடியும்.

    உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு நான் சொல்கிற முக்கியமான விஷயம், இடுப்புத்தள தசையை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் பருமனை குறைக்க வேண்டும். இந்த பயிற்சிகளை முறையாக செய்தால் கண்டிப்பாக உடல் பருமன் குறையும் போது இடுப்புத்தள தசை தளர்வும் குறைவாகும். இருமும் போதும், தும்மும் போதும், சிரிக்கும்போதும் ஏற்படும் சிறுநீர் கசிவு குறைவாகும். அவர்களுடைய கருப்பை இறக்கம் அடைவதும் தடுக்கப்படும்.

    இதற்கான உடற்பயிற்சிகளை பிசியோதெரபி நிபுணர்களிடம் கேட்டு முறைப்படி செய்யும்போது இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஏனென்றால் இப்போது நீங்கள் தடுக்கவில்லை என்றால், பிற்காலத்தில் கர்ப்பப்பை முழுவதும் இறங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் சிறுநீர்ப்பை முழுவதும் இறங்கலாம். இதனால் சிறுநீர் கட்டுப்பாடு, சிறுநீர் கசிவு அதிகமாகி உங்களுடைய வாழ்க்கைத்தரம் மோசமாகி வாழ்நாள் முழுவதும் பிரச்சனைகள் ஏற்படும்.

    இளம் வயது பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டால் இதற்கான சிகிச்சை என்பது மிகவும் எளிமையான முறையாகும். இதற்கு பயிற்சி மட்டும் அல்ல, சில நவீன சிகிச்சை முறைகளும் இருக்கிறது.

    கருப்பை குடலிறக்கத்துக்கு முக்கிய காரணமான இடுப்புத்தள தசை தளர்வு ஏற்படுவதை தடுப்பதற்கு, இளம் வயது பெண்கள் என்னென்ன செய்ய வேண்டும்? பிரசவத்தின் போது எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தர்மம், கர்மம், காமம், மோட்சம் ஆகிய கோட்பாடுகளே மனித வாழ்க்கையை இயக்குகிறது.
    • ஆடிப்பெருக்கு நன்னாளில் செய்யக்கூடிய எந்த செயலும் பன்மடங்கு பெருக கூடிய சக்தி படைத்த நன்னாளாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406ஒரு உயிரை உயிர்பிக்க செய்வது சூரிய ஒளி என்றால் உயிரை தாங்கும் உடல் சந்திரன். ஜோதிட ரீதியாக லக்னம் உயிர் என்றால் ராசி உடலாகும். ஜாதகத்தில் ஜாதகர் உயிர், ஆன்மா என்றால் உடல், மனம் சந்திரனாகும்.

    ஒருவரின் தசா புத்திக்கு ஏற்பவே அவரின் மனநிலை இருக்கும். தசாநாதன் புக்திநாதன் அந்தரநாதன் என சூட்சும முறையில் சனி பகவான் மனிதர்களை இயக்குவார். அதாவது நாள் கிரகமான சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணிக்கிறாரோ அந்த நட்சத்திரம் ஜாதகருக்கு எந்த பாவகத்தை இயக்குகிறதோ அது தொடர்பான பலன்களை கோச்சார சந்திரன் மூலம் சனி பகவான் வழங்குவார். மனித உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் மனிதர்கள் இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய வினைக்கு ஏற்ப உடல் அமைப்பு இருக்கும். அதாவது அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற் போன்று உடல் வடிவம் உண்டாகும்.

    மனித உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றலானது கோட்சார சந்திரனின் சுழற்சிக்கு ஏற்ப தசா புத்திக்கு ஏற்ப சில நேரங்களில் வலிமையாகவும், சில நேரங்களில் வலுவற்றும் இயங்கும். அதாவது கோட்ச்சார சந்திரன் மூலம் ஜாதகரின் மனநிலையில் மாற்றம் செய்து அவரவரின் வினைப் பயன்களை அனுபவிக்க செய்வார். அந்த வினைகளில் இருந்து மீள உயிர் காந்த ஆற்றலை அதிகரிக்க வேண்டும். அதாவது தியானம் மற்றும் யோகா பயிற்சி, உடற்பயிற்சி, சீரான உணவு, நேர்மறை எண்ணங்கள், நல்ல வாழ்க்கை முறை போன்றவற்றின் மூலம் உயிர் காந்த ஆற்றலை அதிகரிக்க முடியும். இவற்றிற்கும் மேலாக வாழும் காலத்தில் மனிதராய் பிறந்தவர்கள் புண்ணிய பலன்களை அதிகரித்துக் கொள்ள சாஸ்திரத்தில் கூறப்பட்ட உபாயங்களில் ஒன்று புனித நீராடலாகும்.

    தர்மம், கர்மம், காமம், மோட்சம் ஆகிய கோட்பாடுகளே மனித வாழ்க்கையை இயக்குகிறது. அவை ஒவ்வொன்றும் வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களை உணர்த்துகிறது. மனிதபிறவி எடுக்கும் அனைவரும் மோட்சத்தை அடைய முயற்சிக்க வேண்டும் என்பதே இந்து மதத்தின் தார்ப்பரியம். தர்மம் என்பது ஒழுக்கமான நேர்மையான வாழ்க்கை, கர்மம் என்பது அன்றாட வாழ்க்கையின் செயல்களினால் உண்டாகும் விளைவுகள், காமம் என்பது நிறைவேற்றத் துடிக்கும் ஆசைகள், மோட்சம் என்பது பிறவா நிலையில் இருந்து விடுபடுவதாகும்.

    ஆன்மாவை இறைவனுடன் இணைப்பதாகும். தர்மத்தின் வழியில் சென்றால் புதிய கர்மம் உருவாகாது. ஆசையில் இருந்து விடுபட்டு மோட்சத்தை அடைய முடியும் என்பதை உணர்த்துவதே ஜோதிடம் 12 ராசிக் கட்டங்களைக் கொண்ட ராசி மண்டலம் தர்மம், கர்மம், காமம், மோட்சம் ஆகிய நான்கு தத்துவங்களையும் தன்னில் அடக்கி உள்ளது. இதில் கடகம், விருச்சகம், மீனம் ஆகிய 3 ராசிகளும் மோட்ச தத்துவத்தை செயல்படுத்தும்.

    மோட்ச தத்துவத்தை குறிக்கும் இந்த மூன்று ராசிகளும் நீர் ராசிகள் ஆகும். நீருக்கு காராக கிரகம் சந்திரன். புனித நீருக்கு காராககிரகம் குருபகவான். மனிதர்களின் பாவங்களை களையும் சக்தி படைத்தவர் குரு பகவான். நீரினால் சுத்தம் செய்ய முடியாத பொருட்களே கிடையாது. நீருக்கு எந்தவிதமான தோஷமும் கிடையாது. புனிதமான நீருக்கு அதிபதியான குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்கு காரக கிரகமான சந்திரனின் வீட்டிற்கு சென்று உச்சம் அடைவதன் மூலம் தன்னை புனிதப்படுத்திக் கொள்கிறார்.

    அதனால்தான் அவரால் மனிதர்களின் பாவங்களை நீக்க முடிகிறது. மனிதர்களின் பாவங்களைகளையும் குரு பகவானே தன்னை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனிதப்ப டுத்திக் கொள்கிறார். சாமானி யர்களாக பிறந்த மனிதர்கள் தங்களைப் புனிதபடுத்திக் கொள்ள சாஸ்திரங்களில் சில குறிப்பிட்ட நாட்கள் கூறப்பட்டுள்ளது.

    புனித நீராடல்

    ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆண்டில் சில குறிப்பிட்ட நாட்கள் புனிதமான நாட்களாக கருதப்படுகிறது. அந்த நாட்களில் நீர் நிலைகளில் சென்று நீராடுவதால் பாவங்கள் குறைந்து மனிதன் மோட்சத்தை நோக்கிச் செல்ல முடியும் என்று நம்பப்படுகிறது. மேலும் இது புண்ணிய செயலாகவும் கருதப்படுகிறது. ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் புனிதமான நாட்களில் நீராடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகப் பிரசித்தி பெற்ற பல ஆலயங்கள் நீர் நிலைகளுக்கு அருகிலேயே உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இதன் பொருள் என்னவென்றால் நீர்நிலைகளில் நீராடிய பிறகு இறைவனை தரிசித்தால் பாவங்கள் முழுமையாக விலகும் என்பதாகும்.

    உதாரணமாக திருச்செந்தூர், ராமேஸ்வரம், கொடுமுடி, பவானி. காசி, கயா போன்ற பல்வேறு புனித தலங்கள் நீர் நிலையுடன் சம்பந்தப்பட்டுள்ளது. இது போன்ற ஆன்மீக தலங்களுக்கு சென்று புனித நீராடி இறைவனை தரிசித்து வருபவர்கள் காரிய சித்தி அடைகிறார்கள் என்பதும் குறிப்பி டத்தக்கது. புனிதமான நாட்களில் புண்ணிய நதிகளான காவிரி, பவானி, கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகளில் நீராடுவது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. புனித நீராடுவதால் உடல், உள்ளம், ஆன்மா அனைத்தும் தூய்மை அடைகிறது. ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் எத்தகைய தோஷம் இருந்தாலும் அதை தீர்க்கும் வலிமை புனித நீராடலுக்கு உண்டு.

    ஆடிப்பெருக்கு

    நிகழும் விசுவாவசு ஆண்டில் ஆடி18-ம் நாள் ஞாயிற்று கிழமை (3.8.2025) அனுஷம் நட்சத்திரத்தில் வளர்பிறை தசமி திதியில் வர உள்ளது. அன்று கோச்சார சந்திரன் மோட்சம் தத்துவத்தை குறிக்கும் நீர் ராசியான விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஆடிப்பெருக்கு என்பது தமிழ்நாட்டில் தமிழக மக்களால் கொண்டாடப்படும். ஒரு தமிழர் பண்டி கையாகும். இது புனித நதிகளுக்கு நன்றி சொல்ல எடுக்கப்படும் ஒரு திரு விழாவாகும்.

    ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆறுகளில் புதிய புனித நீர் பெருக்கெடுத்து ஓடும்.விவசாயத்திற்கு ஆதரவான பூமியையும், நிலத்தையும் செழிக்க வைக்கும் நீர் நிலைகளுக்கும் நன்றி செலுத்தும் ஒரு புனிதமான புண்ணிய நாளாகும்.

    சக்தி மிகுந்த தெய்வங்களை சாந்தப்படுத்தவும், இயற்கை சீற்றங்களில் இருந்து விடுபட்டு பாதுகாப்பை பெறவும் நீர் நிலைகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடி, தங்கள் பாவங்கள் நீங்கப் பெறவும், மகிழ்ச்சியும், ஆயுளும், செல்வங்களும் பெருகவும் பிரார்த்தனை செய்கிறார்கள். ஜனன கால ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள் ஆடிப்பெருக்கில் புனித நீராடினால் சந்திர தோஷம் நீங்கும்.

     

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    செல்வ வளம் வழங்கும் ஆடிப்பெருக்கு

    ஆடிப்பெருக்கு நன்னாளில் செய்யக்கூடிய எந்த செயலும் பன்மடங்கு பெருக கூடிய சக்தி படைத்த நன்னாளாகும். எந்தக் கிழமை எந்த நட்சத்திரம் எந்த திதியில் வந்தாலும் புதிய செயல்களை அன்று துவங்கலாம்.

    அன்று வங்கி கணக்கு துவங்குதல், தங்கம் வாங்கி வைத்தல், புதிய ஆடைகள் எடுத்தல், புதிய தொழில் துவங்குதல் போன்றவைகள் வளர்ச்சியை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்தி ரப்படி குரு மற்றும் சந்திரனுக்கு சம்பந்தம் இருந்தால்

    அது குரு சந்திர யோகம் ஆகும்.குரு சந்திர யோகம் உள்ளவர்கள்

    விதியை மதியால் வெள்ளும் சூட்சமதாரிகள். கவுரவமான பதவி, அந்தஸ்து, ராஜயோக வாழ்க்கை உண்டு. பொன், பொருள், பூமி லாபங்கள், வாகன வசதி உண்டு.

    உழைப்பால் உயர்ந்து அந்தஸ்தும் செல்வாக்கும் பெறுவார்கள்.

    சந்திரனுக்கு 6,8 ல் குரு இருந்தால் அது சகடயோகம் ஆகும்.இதனால் வாழ்வில் ஏற்றத் தாழ்வுள்ள பலன்களே உண்டாகும். வாழ்க்கை வண்டிச் சக்கரம் போல சாண் ஏறினால் முழம் சறுக்கும். ஏற்ற இறக்கம் மிகுதியாக இருக்கும். அதிர்ஷ்டம் அவ்வப்போது வந்தாலும் வெகு சீக்கிரம் மறைந்து விடும். இனம்புரியாத மனக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் என்பதால் நிலையான முன்னேற்ற வாழ்க்கை இருக்காது. இத்தகைய அமைப்பு உள்ளவர்கள் ஆடிப்பெருக்கு நன்னாளில் புனித நீராடினால் குரு சந்திர யோகம் உண்டாகி செல்வ செழிப்பு மிகுதியாகும்.

    புனித நதிகளில் நீராடும் முறை

    நதிகளில் நீராடுவதற்கு என்று ஒரு குறிப்பிட்ட முறைகள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒருவரின் பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை அதிகரிக்கும். நீர் நிலைகளில் இயற்கை உபாதைகளை நீக்கும் இடமாக பயன்படுத்தக் கூடாது. நீராடும்போது உடுத்திய துணிகளை நீர்நிலைகளில் போடக்கூடாது. சோப்பு ஷாம்பு எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. காலணிகளை தவிர்ப்பது நல்லது. அழுக்குத் துணிகளை புனித நீர்களில் துவைக்க கூடாது.அதற்கென்று பிரத்தியேகமாக உள்ள இடங்களை பயன்படுத்த வேண்டும். நீர்நிலைகளை அசுத்தம் செய்தால் புண்ணிய பலம் குறையும். தீர்த்தமாடுவதற்கு முன் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி மூன்று முறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து தலைக்கு தெளிக்க வேண்டும். நதியின் ஓட்டத்திற்கு எதிர்திசையில் சூரியனுக்கு எதிர் திசையில் நின்று சூரிய நமஸ்காரம் செய்த பிறகு நீராட வேண்டும். உடுத்திய ஆடைக்கு மேல் நீருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இடுப்பில் மற்றொரு ஆடையை சுற்றிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மூன்று முறை மூழ்கி எழுந்திருக்க வேண்டும்.

     

    ஆடிப்பெருக்கும் சுமங்கலி பூஜையும்

    ஆடிப்பெருக்கு நன்னாளில் துவங்கக்கூடிய அனைத்து செயல்களும் பெருகும் தன்மை கொண்டது. சுமங்கலி பெண்களின் மாங்கல்ய பலத்தை அதிகரிக்கவும், திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கவும் செய்யப்படும் ஒரு பூஜை ஆகும். நதிக்கரையில் உள்ள கன்னி தெய்வங்களை கன்னிப்பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். கன்னி தெய்வங்களை சுமங்கலிப் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிந்து வழிபாட்டால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். அன்று சப்த கன்னிகளை வழிபாட்டால் திருமண தடை அகலும். நதிக்கரைக்கு செல்ல முடியாத பெண்கள் மஞ்சள் பூசி குளித்து வீட்டு பூஜையறையில் விளக்கேற்றி வாசனை மலர்கள் சாற்றி தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு, சர்க்கரைப் பொங்கல் படைத்து அம்பாளை வழிபட விசேஷமான பலன்கள் கிடைக்கும்.

    இயன்றவர்கள் அன்னதானம் செய்யலாம். சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பழம், கொடுக்க வேண்டும். இதனால்

    ஜாதகத்திலுள்ள செவ்வாய், களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் நீங்கும். மாங்கல்ய பாக்கியம் பெருகும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் உண்டாகும். கடன்கள் தீரும். ஆரோக்கியம் மேம்படும். புனித நன்னாளாம் ஆடிப்பெருக்கு அன்று புனித நதிகளில் நீராடி வாழ்க்கையில் விரும்பிய அனைத்து நல்ல நிகழ்வுகளையும் பெருக்கிக் கொள்ள நல்வாழ்த்துகள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திங்கட்கிழமைகளில் அதிக மாரடைப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
    • உடலின் 99 சதவீதம் கால்சியம் பற்களில்தான் இருக்கின்றது.

    நீங்கள் வெட்கப்படும் போது கன்னம் மட்டுமல்ல வயிறும் சிவக்கின்றது.

    * உடலில் 1 சதவீதம் தண்ணீர் குறைந்தாலே தண்ணி தாகம் ஏற்படும். 5 சதவீதத்துக்கு மேல் உடலில் நீர் குறைந்தால் மயக்கம் ஏற்படும். 10 சதவீதம் நீர் வற்றினால் உயிர் இழப்பே ஏற்படும்.

    * சுமார் 700 என்சைம்களாவது உடலில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன.

    * கண் வெண் விழிபடலத்துக்கு மட்டும் ரத்த ஓட்டம் இல்லை. இதற்குத் தேவையான ஆக்சிஜனை இது காற்றில் இருந்து பெறுகின்றது.

    * பிறந்த குழந்தையால் சுமார் 6 மாதம் வரை மூச்சு விட்டுக் கொண்டு விழுங்குவதனை சுமார் 6 மாதம் வரை செய்ய முடியும்.

    * மண்டைக்கு மட்டும் 29 வித்தியாசமான எலும்புகள் உள்ளன.

    * 2 மற்றும் 3 பகுதி மக்கள் தலையினை வலது பக்கம் சற்று சாய்ப்பார்கள்.

    * சுமார் 7 சதவீதம் மக்கள் இடது கை பழக்கம் உடையவர்கள்.

    * உடலின் 99 சதவீதம் கால்சியம் பற்களில்தான் இருக்கின்றது.

    * 100 முதல் 200 வைரஸ் கிருமிகள் சளி பிடிக்க காரணம் ஆகின்றன.

    * நாக்குதான் உடலின் வலுவான தசை.

    * ஒரு வளர்ந்த மனிதன் மூச்சை உறிஞ்சி உள்ளிழுத்து 23 ஆயிரம் முறை வெளி விடுகிறான். இது ஒருநாள் கணக்கு.

    * கண்ணை திறந்து கொண்டு தும்ம முடியாது.

    * திங்கட்கிழமைகளில் அதிக மாரடைப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    * மனித மூளையின் ஞாபகத்திறன் 4 டெராபைட்ஸ்-ஹார்ட் டிசைன்ஸ் என்கின்றனர்.

    * நரம்புகளின் உணர்வு, செய்திகள் 274 கி.மீ. / ஒரு மணி என்று ஆய்வு கூறுகின்றது.

    * மனித கருவின் 3 மாதத்திலேயே விரல் பதிவுகள் ஏற்படுகின்றன.

    * 90 சதவீத மக்கள் தங்கள் கனவினை மறுநாள் மறந்து விடுகின்றார்கள்.

    * தலை மூலமாகவே உடலின் 40 சதவீத உஷ்ணம் வெளியேறுகின்றது.

    * நமது சருமம் நம் வாழ்நாளில் 1000 முறை புதுப்பிக்கப்படுகின்றது.

    * நம் உடலின் ரத்த குழாய்களை நீட்டினால் 1,00,000 கி.மீ. ஆகும்.

    * மனிதர்கள் மட்டுமே முதுகின் மேல் படுத்து தூங்குகின்றனர்.

    * சுமார் 7 நிமிடத்தில் நல்ல தூக்கம் வருவது ஆரோக்கியத்தின் அறிகுறி.

    கைரேகை: விரல்களில் உள்ள கோடுகள்- தெய்வ ரகசியம்.

    * வயிற்றில் கரு 4 மாதம் இருக்கும் போதே இந்த கோடுகள் உருவாகின்றன. இந்த அடையாளம் பதிக்கப்படுகின்றது.

    * இவை நமது உடலின் டி.என்.ஏ. கட்டளைப்படி உருவாகின்றது. இவை அக்குழந்தையின் பெற்றோர்கள், மூதாதையர் ரேகைளை ஒத்திருப்பதில்லை.

    * ஏதோ கண்ணுக்குத் தெரியாத (ரேடியோ) காந்த அலைகள் சக்தியால் உருவாக்கப்படுகின்றதோ? என்று தோன்றும். மனித சக்தியினை தாண்டிய செயலாகத் தெரியும்.

    * ஒவ்வொரு தனி மனிதனின் வரிகளும் உலகில் உள்ள ஒருவருடனும் ஒத்து இருக்காது.

    * இதனை வித்தியாசமான தனித்தன்மை வாய்ந்த கலைஞன் தனித்தனியான ஒற்றை உருவத்தினை உருவாக்கும் வல்லமை பெற்றுள்ளான்.

    * மிகச் சிறந்த நுட்பம் கொண்ட கம்ப்யூட்டரால் கூட இவ்வாறு உருவாக்க முடியாது. எனவே இது மனித சக்திக்கு அப்பாற்பட்டது.

    * இது இறைவனின் மொழி.

    * விபத்தில் கை விரல்கள் பாதிக்கப்பட்டாலோ, அல்லது தீ விபத்தில் பாதிக்கப்பட்டாலோ காயம் ஆறி விரல் பழைய நிலை அடையும் போது அதே வரிகள் ஒரு புள்ளி மாற்றம் இல்லாமல் அப்படியேத் தோன்றும்.

    * எனவே இது வெறும் சருமத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல. நம் ஆன்மாவோடு சம்பந்தப்பட்டது.

    * உலகின் வேறு எந்த பகுதிக்கும் இப்படி மறு உருவாக்கம் தர இயலாது.

    * விஞ்ஞானம் இன்று வரை இதற்கு விளக்கம் முழுமையாய் அளிக்க முடியவில்லை.

    இதன் சங்கு, சக்கர சுற்றுகள், வளைவுகள் இவைப் பிரத்யேக மொழி. படைத்தவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

    * பிரபஞ்ச விதி, நாம் செய்த கர்ம வினைகளை கூறும் மொழி.

    * எந்த முறையாலும் ஏ.ஐ. உள்பட இந்த வரிகளைப் போல் உருவாக்க முடிவதில்லை என்கின்றனர்.

    * இது நமது விதியின் தெய்வீக ஸ்கிரிப்ட் என்கின்றனர்.

    * மேலே ஒருவன் நம்மை கவனிக்கின்றான், உருவாக்குகின்றான், நடத்துகின்றான்.

    * இதனை 'பிரம்மா' என்று குறிப்பிடுகின்றனர். மனிதன் ரத்தம், சதையால் ஆன பொம்மை அல்ல. பரந்து விரிந்தவன். ஆத்ம பலம் கொண்டவன். எழுந்து இயங்குங்கள். நீங்கள் சாதாரணமானவர் அல்ல.

    இக்கட்டுரையினை நான் படித்து பகிர்ந்து கொள்கிறேன். நம்பித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவே.


    கமலி ஸ்ரீபால்

    நீங்கள் ' ஏமாந்த சோணகிரி' இல்லை என மற்றவர்கள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமா?

    * மற்றவர்களின் எதிரில் இருப்பவரின் கண்களைப் பார்த்து பேசுங்கள். இது உங்களின் மனத் தெளிவினை, சுய கட்டுப்பாட்டினை, தன்னம்பிக்கையினை வெளிப்படுத்தும். எதிரில் இருப்பவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கண்ணைப் பார்த்து பேசுங்கள். இது மரியாதைக் குறைவு அவருக்கு ஏற்படுத்தாது. மாறாக உங்கள் சுய மரியாதையினைக் கூட்டும். உங்கள் மன வலுவினைக் காட்டும்.

    * எதற்கும் உடனடி யாக, நொடிப் பொழுதில் ரியாக்ஷன் வேண்டாம். உடனடியாக ஓடுவது, எதிர்ப்பது, தாவி கொடுப்பது போன்றவை ஒருவரது பதட்டத்தினையே காண்பிக்கும். எதற்கும் சில நொடிகள் அவகாசம் கொடுங்கள். மனம் அமைதி பெறும். தெளிவு பெறும். வார்த்தைகள் கட்டுப்பாட்டில் இருக்கும். உணர்ச்சி பூர்வ செயல்கள் வராது. உணர்வு பூர்வ செயல்களே இருக்கும்.

    * நமது பலம் அடுத்தவருக்கு தெரிகின்றதோ இல்லையோ நமது பலவீனம் பிறருக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் 'ஏமாந்த சோணகிரி" ஆக்கி விடுவர். பயம், பாதுகாப்பு உணர்வின்மை, அதிகம் யோசித்தல், சுய சந்தேகம், சுய நம்பிக்கை இன்மை பிறர் முன்னே நம்மை தாழ்த்தி விடும். யாரும் இரக்கம் கொள்ள மாட்டார்கள். மாறாக உங்களை நன்கு பயன்படுத்தி தலையில் மிளகாய் அரைத்து விடுவர்.

    * எப்போதும் அமைதியாய் இருக்க வேண்டும். வாழ்க்கையில் புயலே வீசினாலும் அமைதி அவசியப்படுகின்றது. பேசுவது எளிது, முடியுமா? எனலாம். முடியத்தான் வேண்டும். உங்கள் அமைதி மற்றவரை கதி கலங்கச் செய்து விடும். குழப்பத்தில், அமைதி நம்மை தவறு செய்ய விடாது தடுக்கும். எதனையும் நம்மால் கையாள முடியும்.

    * சுத்தமாக, நேர்த்தியாக உடை உடுத்துங்கள். நாம் பேசுவதற்கு முன்னால் நம் உடை பேசும். பேச்சு எடுபடும். நாம் சித்தர் அல்ல. ஒரு அழுக்கு துணி சுத்தி இருந்தாலும் உடலில் கண்களில் இருந்து சித்தர்கள் ஒளி வீசுவார்கள். நறுமணம் ஊரை கூட்டும். சாதாரண மனிதனுக்கோ அன்றாடம் குளித்தாலே அடுத்த வேளை வியர்வை நாற்றம் நாறும். ஆக சுத்தமான குளியல், நேர்த்தியான ஆடை இவை நம்மைப் பற்றி அதிகம் பேசும். உங்கள் பேச்சை மக்கள் காது கொடுத்து கேட்பார்கள்.

    ஒலி பெருக்கி போல் சத்தம் போட்டு பேசாதீர்கள். வேகமாக பேசாதீர்கள். நிதானமாய், மெதுவாய் பேசும் பொழுதே அடுத்தவர் உங்கள் பேச்சை கூர்ந்து கவனிப்பார். சிங்கம் போல் கர்ஜிப்பது வீரம். அது சாதாரண பேச்சில் இடம் பெறாது. சத்தமான பேச்சு அடுத்தவருக்கு தலைவலி ஏற்படுத்தும். அமைதியான பேச்சு அதிக முக்கியத்துவம் பெறும்.

    வளைந்து, நெளிந்து, மடங்கி, கூன் போட்டு மனித வடிவே இல்லாத தோற்றத்தில் நிற்காதீர்கள், நடக்காதீர்கள், இவை உங்களுக்கு 'பவர்' இல்லாதது போல் காட்டும். நிமிர்ந்த நன்னடை அமைதியான ஆனால் 'பவர்' நிறைந்தவராகக் காட்டும்.

    இவங்க என்ன நினைப்பாங்க, அவங்க என்ன நினைப்பாங்க என்று ரொம்ப யோசிக்காதீங்க. அளவு கடந்த யோசனை எதனையும் செய்ய விடாது. நீங்கள் நன்கு ஆராய்ந்து மனதிற்கு சரி என்று பட்டதை தைரியமாய் செய்யுங்கள்.

    நம்மை மீறிய சில செயல்கள் இருக்கும். புயல், மழை இவை ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கூட நிகழலாம். நம்மால் அனைத்தையும் மாற்ற முடியாது. நிகழ்வுகளை ஏற்று கடந்து செல்லத்தான் வேண்டும். அதை எதிர்ப்பது என்பது தெரிந்தே சுவரில் முட்டிக் கொள்வது போல்தான்.

    வாழ்க்கையை வாழுங்கள். உங்கள் தனித்தன்மை இருக்கட்டும்.

    புன்னகையுங்கள். கண்களும் புன்னகைக்கட்டும். அது மனதார இருக்கும். அடுத்தவர்களுக்கு அச்சம் இன்றி இருக்கும். உறுதியாக இருங்கள். இலக்கை அடைய வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியோடு இருங்கள். மனம் இரும்பு போல் உறுதியாக இருக்க வேண்டும்.

    எதற்கெடுத்தாலும் பிறரின் அனுமதி தேவையில்லை. இப்படியொரு பழக்கம் இருந்தால் நீங்களாகவே அடிமை ஆகி விடுவீர்கள்.

    சண்டை போடத்தெரிய வேண்டும். விருப்பமில்லாததற்கு, முடியாத செயலுக்கு 'நோ' என்பதனை உறுதியாக சொல்ல வேண்டும். மறுப்பதற்கு அடிதடி, குத்து சண்டை தேவையில்லை. அமைதியே மிகப்பெரிய ஆயுதம். ஆயினும் தேவைப்படும் பொழுது கையுறை, ஷூ அணிந்து எதிர்ப்பினைக் காட்டி சாதிக்கவும் தெரிய வேண்டும்.

    இப்படியெல்லாம் இருந்தால் எல்லோரும் உங்களை "ஏமாந்த சோணகிரி" என்று சொல்ல மாட்டார்கள். கெட்டிக்காரன் என்பார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அன்றாட வாழ்வியலில் நமக்கு ஏற்படும் சிறுசிறு இடர்ப்பாடுகளையும் கூடச் சமாளிப்பதற்கு இந்தச் சகிப்புத் தன்மை சிறந்த பலன் அளிக்கும்.
    • சகித்துக்கொள்ளுதல், அமைதியாக இருத்தல், அகிம்சையைக் கையாளுதல் என்பவை காரிய வெற்றிக்குக் கைகொடுக்கும்.

    பொறுமையும் சகிப்புத் தன்மையுமே சாதனைகளுக்கான வழிகள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடைய அன்பு வாசகர்களே! வணக்கம்!.

    நமக்கு வருகின்ற துன்பங்களையும் தடைகளையும் எதிர்த்துப் போராடி வெற்றி காண்பதே வாழ்க்கை. என்றாலும் அத்துன்பங்களையும் வலிகளையும் எதிர்த்துப் போராடுவதற்கான கருவியாக எதனைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தப் போகிறோம் என்பதில்தான் நமது நிலைத்த வெற்றி அடங்கியிருக்கிறது. தனிமனித வாழ்க்கைக்கும் பொதுநிலை வாழ்க்கைக்குமான பொதுவானதொரு போராட்டக்கருவியை மகாத்மா காந்தியடிகள் இருபதாம் நூற்றாண்டில் கடைப்பிடித்தார்.

    மகாத்மாவின் வருகைக்கு முன்பாக, எந்த அடக்குமுறைக்கும் எதிராக ஆயுதங்களை ஏந்துதலே போராட்ட அனுகுமுறைகளாக இருந்தன. தடிகளை எடுத்தால் தடிகள்!. அரிவாள் கத்தி, வாள், வேல்களை எடுத்தால் அதே இரும்புக் கருவிகள்!, துப்பாக்கிகளை எடுத்தால் துப்பாக்கிகள்!, பீரங்கிகளை எடுத்தால் பீரங்கிகள்!, அணுகுண்டுகள் தயாரித்தால் அணுகுண்டுகள்!, வான்வழி, கடல்வழி, தரைவழி என்று எவ்வழியில் தாக்கினாலும் எதிர்த்து அவ்வழித் தாக்குதல் என்று போர்முறைகளில், நாம் எடுக்க வேண்டிய போர்க்கருவிகளை, நம்முடைய எதிரிகள் எடுக்கின்ற ஆயுதங்களே தீர்மானித்தன. ஆனால் மகாத்மா காந்தியடிகள் அகிம்சை என்னும் அழிவிலா ஆயுதத்தை உருவாக்கிப் பயன்படுத்தி நம்மையும் கையாளச் சொன்னார். எத்தனை கொடிய ஆயுதத்தையும் அகிம்சை என்னும் ஆயுதம் அடிபணிய வைத்துவிடும்.

    அகிம்சை என்பது, வருகின்ற இம்சைகளை, துன்பங்களைச், சகிப்புத் தன்மையோடு பொறுத்துக்கொள்வது; நமக்கு வருகின்ற இம்சைக்கு இம்சை பண்ணாமல் சகித்துக்கொள்வது. வலிபொறுத்தலே வாழ்க்கை என்னும் தவ வாழ்வின் தத்துவத்தை, அன்றாட வாழ்வியலில் பொருத்திப் பார்க்கின்ற உன்னதமான வழிமுறை இது. ஆன்மீக வியலையும் சமூகவியலையும் சங்கமிக்கச் செய்து உருவாக்கப்பட்ட அற்புதக் கருவி. பெரும்பெரும் சமூக அடக்குமுறைகளை எதிர்த்து மட்டுமல்லாமல், அன்றாட வாழ்வியலில் நமக்கு ஏற்படும் சிறுசிறு இடர்ப்பாடுகளையும் கூடச் சமாளிப்பதற்கு இந்தச் சகிப்புத் தன்மை சிறந்த பலன் அளிக்கும்.

    சமூகத்தில் மக்கள் திரளை 'மனிதர்கள்' என்று ஒரே பொருண்மையில் அழைத்தாலும் அவர்கள் அனைவரும் பலராகவே இருக்கின்றார்கள்; அதுமட்டுமல்லாது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகவே இருக்கின்றனர். அதே போல விலங்குகள், பறவைகள், புல்பூண்டு செடிகொடிகள் என அனைத்தும் மனிதரோடு கலந்துவாழும் 'உயிரினங்கள்' என்று அழைக்கப்பட்டாலும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை யானவை; வாழ்கின்ற முறையிலும் வெவ்வேறு பட்ட முறைகளைக் கொண்டவை. ஆயினும் சூழலியல் சார்ந்த ஒருவித சமத்தன்மை காரணமாகவே இப்பிரஞ்ச வாழ்வியல் பெரும் மாறுபாடுகளுக்கு உள்ளாகாமல் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

    மனிதர்கள் ஓரினம் என்றாலும் அவர்களுக்குள் எத்தனை பேதங்கள்?. குட்டை நெட்டை, குண்டு ஒல்லி என உடலியல் அமைப்புகள், உடலியல் நிறங்கள், குடிமுறை பேதங்கள், பேசும் மொழிகள், வணங்கிடும் தெய்வங்கள், சார்ந்திடும் ஜாதிகள் மதங்கள், கடல்சார் மலைசார் மணல்சார் வயல்சார் நிலவியல் திணைசார் வாழ்விடங்கள், வாழ்விட நகர கிராம வேறுபாடுகள், உண்ணும் உணவுமுறை வேறுபாடுகள், பழக்க வழக்கங்கள், உடுத்தும் உடை வேறுபாடுகள், சார்ந்திருக்கும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், பார்க்கின்ற தொழில் சிறப்புகள், சிறப்பின்மைகள் என இப்படி வேற்றுமைகளால் நிரம்பி வழிவதே மனித வாழ்வியலின் அமைப்புமுறை. இவ்வாழ்வியலில் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போதல் ஒன்றே அன்புசார் வாழ்க்கைக்கு அடிப்படையாக அமையும்.

     

    சுந்தர ஆவுடையப்பன்

    மனிதர்களிலும் ஆண் பெண் என்று இருபெரும்பிரிவுகள் இருக்கின்றனர்; உடலியல் அமைப்பு முறைகளிலும் மனவியல் அமைப்பு முறைகளிலும் எந்தவகையிலும் ஒத்துப்போகாத விசித்திரங்கள் இவர்களுக்குள் உண்டு. ஆயினும் இந்த ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதே குடும்பம் என்பது உருவாக்கப்பட்டு, உலகின் படைப்பியக்கமும், மனிதகுலத்தின் வாழையடி வாழையென வளர்முறைத் தொடர்ச்சியும் இக்குடும்பத்தின் வழியேதான் நிகழும் என்பது நியதியாக்கப்பட்டிருப்பது இன்னும் பெரும் விந்தை. இந்த இடத்தில்தான் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போதல், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையோடு நடந்து கொள்ளுதல் போன்றவை அவசியமானவையாக வலியுறுத்தப்படுகின்றன.

    நம்மிடம் உள்ள குணங்கள் அல்லது நாம் எதிர்பார்க்கும் குணங்கள் அடுத்தவரிடமும் கட்டாயம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதே பெரும் தோல்வியில்தான் முடியும். கட்டிய கணவனிடம் மனைவியும், கட்டிய மனைவியிடம் கணவனும்கூட இப்படி எதிர்பார்க்க முடியாது; ஏன்! தாம் பெற்ற பிள்ளைகளிடம்கூடத் தாம் எதிர்பார்க்கும் குணாதிசயங்களைப் பெற்றோர்கள் கண்டறிய முடியாது என்பது நிதர்சன உண்மை. தனிப்பட்ட குடும்ப வாழ்விலேயே இத்தனை ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்போது, பணிபுரிகிற அலுவலகங்கள், பழகுகிற பொதுவிடங்கள் இப்படி அனைத்திலும் நாம் எதிர்பார்த்தவை நடக்கவா போகின்றன. இந்த இடத்தில்தான் பொறுத்துப் போதல், சகித்துக்கொள்ளுதல், அமைதியாக இருத்தல், அகிம்சையைக் கையாளுதல் என்பவை காரிய வெற்றிக்குக் கைகொடுக்கும்.

    வீண் மனப் பதற்றங்கள், மன அழுத்தங்கள், பரபரப்புகள், மன வருத்தங்கள் இவை எதுவுமின்றி நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்க்கையை வெற்றியின் பாதையில் நடத்திச் செல்லமுடியும். பட்டப்படிப்பு முடித்துப் போட்டித் தேர்வில் தேர்வாகி, ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியின் நேர்முக உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்தார் ஓர் இளம்பெண். வேலைக்குச் சேர்ந்த பத்தே நாளில் தனது வேலையை ராஜினாமாச் செய்துவிடலாம் என்கிற முடிவிற்கு அவர் வந்து விட்டார்; ஏனெனில் அவருடைய மேலதிகாரிக்கும் அந்தப்பெண்ணுக்கும் ஒத்துப் போகவே இல்லை. படக்கென்று ராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்துவிடாமல், அதற்குமுன் ஒரு மனநல மருத்துவரிடம் ஆலோசனை செய்து அவருடைய அறிவுரையையும் கேட்டு முடிவெடுப்போம் என்று மருத்துவரிடம் சென்றார் இளம்பெண்.

    மனநல மருத்துவர் அந்த இளம்பெண்ணிடம் "என்னென்ன காரணத்திற்காக உங்கள் 'பாஸ்' உங்களுக்குப் பிடிக்கவில்லை" என்று பட்டியல் கேட்டார். "அவர் சிடுமூஞ்சியாக இருக்கிறார்; என்னைப் பார்த்த உடனேயே சிடுசிடுவென எரிந்து விழுகிறார். ஒருநாள் காலையில் அலுவலகம் சென்றவுடன் அவர் அழைக்காமலே அவர் அறைக்குள் சென்று, 'குட் மார்னிங் சார்!' என்றேன். இப்படியெல்லாம் நான் அழைக்காமல் வந்து குட் மார்னிங் சொல்லி எனக்கு 'ஐஸ்' வைக்கக் கூடாது, என்று பொரிந்து தள்ளி விட்டார்.

    மறுநாள் அவர் கூப்பிட்டனுப்பியவுடன் அறைக்குள் சென்றேன்; குட்மார்னிங் சொல்லவில்லை; உடனே, 'ஒரு மேலதிகாரியைப் பார்த்தவுடன் குட்மார்னிங் சொல்ல வேண்டும் என்கிற மரியாதை கூடத் தெரியாதா?' என்று அதற்கும் கோபப்படுகிறார்; இவரோடு காலம் தள்ள முடியாது. வேலையை ராஜினாமாச் செய்துவிட்டு நான் வேறு வேலை தேடிக்கொள்கிறேன்" என்றார் அந்த இளம்பெண்.

    "அம்மா! வேலைக்குச் சேர்ந்த பத்தாவது நாளே வேலையை விடப்போகிறேன் என்று சொல்வது பொருந்தாத செயல். குறைந்தது ஒரு மூன்று மாத காலமாவது அந்த வேலையில் இருந்து பார்த்துவிட்டு அப்புறமாக ஒரு முடிவுக்கு வரலாம். வாழ்க்கையில் நாம் சந்திக்கிற மனிதர்கள் எல்லாரும் நாம் நினைப்பது போலவே இருக்க மாட்டார்கள். அவர்கள் மேலதிகாரியாக இருக்கின்ற பட்சத்தில் நாம்தான் கொஞ்சம் சகித்துப் போகக் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாருமே எல்லா நேரத்திலும் சிடுமூஞ்சியாகவோ கோபக்காரராகவோ இருப்பதில்லை; அவர்களுக்குள்ளும் நல்ல மனித குணங்கள் ஒளிந்து கொண்டிருக்கும். சிடுமூஞ்சித்தனத்தைச் சகித்துக் கொண்டு, நல்லமனித குணம் வெளிப்படும்போது பாராட்ட வேண்டும்.

    அலுவலகத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் அவரது செயல்பாடுகளை அவ்வப்போது பாராட்டுங்கள்; அவர் உடை உடுத்திவரும் பாங்கு, அவர் பிரச்சனைகளைப் பேசி அனுகும் முறை, அவரது நடை உடை பாவனை இவற்றை அவ்வப்போது சிறப்பாகச் சொல்லுங்கள்; பாராட்டிற்கு மயங்காத மனிதர்களே கிடையாது. ஒரு மூன்றுமாதங்கள் கழித்து மீண்டும் இங்கு வாருங்கள்!; அப்போது முடிவெடுத்துக் கொள்ளலாம்! வேலையில் இருப்பதா? அல்லது வேலையை விட்டுவிடுவதா? என்பதை!" என்று ஆலோசனை வழங்கி அனுப்பினார் மனநல மருத்துவர்.

    வேலைக்குத் திரும்பிய இளம்பெண், சரியாக மூன்று மாதம் கழித்து, மனநல மருத்துவரைப் பார்க்கச் சென்றார். " என்னம்மா! இளம்பெண்ணே! வேலையை விட்டுவிடப் போகிறாயா?" என்று கேட்டார் மருத்துவர். "நான் பதில் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும் டாக்டர்! முதலில் நீங்கள் கையை நீட்டுங்கள்! இதை வாங்கிக் கொள்ளுங்கள்!" என்று ஓர் அழைப்பிதழை மன நல மருத்தவர் கையில் தந்தார் அந்த இளம்பெண். " ஆமாங்க டாக்டர் எனக்கும் என்னோட மேலதிகாரிக்கும் அடுத்த வாரம் கல்யாணம்!. அதோட அழைப்பிதழ்தான் இது. என்னோட வெறுப்பு நூறுசதவீத விருப்பா மாறுனதுக்கும், எங்களுக்குள்ள கொஞ்சம் கொஞ்சமாகக் காதல் மலர்ந்ததற்கும் முழுக்க முழுக்க நீங்கதான் காரணம்.

    அவசியம் வந்திருந்து எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க டாக்டர் " என்றார் இளம்பெண். ஆம்! சகிப்புத் தன்மையே சாதனைகளுக்கு வழிவகுக்கும்.

    'பெயக்கண்டும் நஞ்சுண்டு அமையும் 'சகிப்புத் தன்மையை உச்சபட்ச நாகரிகமாக வள்ளுவப் பெருந்தகை வலியுறுத்துவார். சக மனிதத்தோடு வேற்றுமை கொள்ளாமல், வேற்றுமையில் ஒற்றுமை காணும் குணமே சமூகவியலின் சரித்திரச் சிறப்புமிக்க சகிப்புத் தன்மை. நமது நம்பிக்கை வேறு; நமது எதிர்பார்ப்பு வேறு; ஆனாலும் கையிலுள்ள விரல்கள் அளவால் செயலால் மாறுபட்டவைபோலத் தோன்றினாலும் ஒரு பொருளை எடுக்கும்போது ஒருங்கிணைந்து செயல்படுவதுபோல நமது மனவியலில் ஒருங்கிணைந்த தன்மை உருவாக வேண்டும்.

    சகிப்புத் தன்மை என்றால் வேறு வழியில்லாமலோ அல்லது அச்சத்தின் அடிப்படையிலோ பொறுத்துக்கொண்டு போவது அல்ல; நேர்மைக்கும் நியாயத்திற்கும் மாறுபட்ட விஷயங்களைப் பொறுத்துக் கொண்டுதான் போகவேண்டும் என்பது தேவையற்றது. இடையூறுகளைத் தாங்கிக்கொண்டு, சிறுசிறு இடைஞ்சல்களுக்கெல்லாம் மனம் தளர்ந்துபோகாமல், சகித்துக்கொண்டு, வெற்றி இலக்கு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முயன்றுகொண்டே இருப்பது.

    இங்கே சகிப்புத் தன்மை என்பது சகிக்கச் சகிக்க உடலும் மனமும் வலிமைபெறும் வல்லமையைப் பெறுகின்றன.

    நோய் எதிர்ப்புசக்தி பெருகியுள்ள உடம்பில் நோய் அனுகுவதில்லை என்பதுபோலச், சகிப்புத் தன்மை பெருகியுள்ள மனத்தை எந்தத் துன்பமும் வலிமைகுன்றச் செய்துவிடுவதில்லை. அமைதி, சகிப்புத்தன்மை, அகிம்சை, பொறுமை இவை அனைத்தும் உடம்பை, மனத்தைப் புடம்போடும் பக்குவத்தைச் செய்கின்றன. அந்த அளவில் அளவுகடந்த வலிமையை நமது வலிபொறுக்கும் ஆற்றல் நமக்கு அளித்துவிடுகிறது.

    தொடர்புக்கு - 9443190098

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து வழிமுறைகளையும் ஆயுர்வேதம் வழங்கியுள்ளது.
    • உடல் நிலையும் மன நிலையும் சம நிலையில் இருக்க வேண்டும்.

    ஆயுர்வேத மருத்துவ சாஸ்திரத்தை சாஸ்வத நித்யம், அனாதி என்று கூறுவார்கள். சாஸ்வத நித்யம் என்றால் எப்போதும் நிலைத்துயிருக்கும், அனாதி என்றால் முடிவே இல்லாதது என்று பொருள்.

    ஆயுர்வேதம் என்ற சொல்லை இரண்டாக பகுத்து ஆயுர் + வேதம் என்று பார்க்க வேண்டும். ஆயுர் என்றால் வாழ்க்கை, வேதம் என்றால் அறிவியல். ஆக ஆயுர்வேதம் என்றால் 'வாழ்க்கை அறிவியல்' என்று பொருள். ஒரு மனிதன் தான் பிறந்ததிலிருந்து இறுதி நாட்கள் வரை எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு ஆரோக்கியத்தை பேண வேண்டும் என அனைத்து வழிமுறைகளையும் ஆயுர்வேதம் வழங்கியுள்ளது. முறை தவறி வாழ்ந்தால் என்ன இடர்பாடு ஏற்படும், அதற்கு என்ன தீர்வு, என்பதை குறித்தும் பல வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது.

    ஆயுர்வேதத்தின் நோக்கம் என்னவென்றால் மனித இனத்தை அறநெறியில் அர்த்தமுள்ளதாக வாழ வைத்து, மீண்டும் பிறவாநிலையை அடையச் செய்வது ஆகும். இதன் காரணமாகவே ஆயுர்வேதம் ஒரு முழுமையான மருத்துவ முறை என்கிறோம். இந்த ஒப்பற்ற மருத்துவ முறைதான் ஆரோக்கியம் என்ற வார்த்தைக்கு வரையறை வழங்குகிறது

    ரோகம் என்றால் நோய். ஆரோகம் என்றால் நோயற்ற தன்மை. அது தான் ஆரோக்கியம் ஆனது.

    'ஆ' ரோக்கியம் என்பதன் வரையறை என்ன என்று பார்த்தால், உடல் இயக்கங்கள் சம நிலையிலிருக்க வேண்டும், சீரண சக்தி சீராகயிருக்கவேண்டும், உடல் கட்டமைப்பு சம நிலையிலிருக்க வேண்டும், மலசலங்கள் முறையாக வெளியேற வேண்டும், மகிழ்ச்சியான மனநிலை வேண்டும். ஐம்புலன்கள் சீராக செயல் பட வேண்டும்.

    ஆக உடல் நிலையும் மன நிலையும் சம நிலையில் இருக்க வேண்டும். இதில் ஒன்றில் ஏற்ற தாழ்வு ஏற்பட்டாலும் ஆரோக்கியத்தில் 'ஆ' தவறி ரோகம் என்ற நோய் நிலையே ஏற்படும். ஆரோக்கியத்தை எவ்வாறு பேணிக்காப்பது, ஆரோக்கியம் இல்லை என்றால் எவ்வாறு ஏற்படுத்திக் கொள்ளுவது, அதற்கு ஆயுர்வேதம் ஒரு திட்ட முறைகளை வழங்குகிறது. அந்த திட்ட முறைகளை பின்பற்றினால் நிச்சயம் உள்ளங்கை நெல்லிக்கனி போல ஆரோக்கியதிற்கு வழி தெளிவாக தெரியவரும்.

    ஆரோக்கிய திட்டத்தில் முதல் திட்டம் அனைவருக்கும் பொதுவானது.

     

    ரா. பாலமுருகன்

    1. தினச்சர்யம்- தினம் என்றால் பகல் பொழுது. சர்யம் என்றால் நடைமுறை என்று பொருள். அதாவது ஆரோக்கியத்தை மேம்படுத்த பகல் பொழுதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்.

    2.ராத்ரிச்சர்யம்- ராத்ரி என்றால் இரவு பொழுது. அதாவது இரவு பொழுதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்.

    3.ஆஹார சர்யம்- பின்பற்றவேண்டிய உணவு முறைகள்.

    4.விஹார சர்யம்- பின்பற்றவேண்டிய நடைமுறைகள்.

    5.ருது சர்யம்- கால சூழ்நிலைக்குஏற்ப பின்பற்றவேண்டிய நடைமுறைகள்.

    மேற்கண்ட ஐந்து நடைமுறைகளும் அனைவரும் பின்பற்ற வேண்டியது,

    இரண்டாவது திட்டம் கர்ப்பிணிகளுக்கும், பிரசவித்த பெண்களுக்கும், சிசு மற்றும் குழந்தைக்குண்டான பின்பற்றவேண்டிய நடைமுறைகள்.

    இதில் அனைவருக்கும் உண்டான முதல் திட்டம்மான தினசர்யம் பற்றி பாப்போம்.

    ஆரோக்கியத்தை மேம்படுத்த பகல் பொழுதை எப்படி ஆரம்பிப்பது, என்னென்ன நாம் பின்பற்றவேண்டும்?

    காலையில் நாம் முதலில் செய்ய வேண்டியது உஷப் பானம்... அப்படி என்றால் காலையில் தண்ணீர் பருகுதல், நன்றாக உறங்கி விடியற்காலையில் துயில் எழுந்தபின்பு மலம் கழிப்பதற்கு முன்பு நீண்ட கால நோய்கள் இல்லாதவர்கள் சுமார் 750 ml பச்ச தண்ணீரை பருக வேண்டும். இதன் மூலம் உடலை சுத்தப்படுத்தி கொண்டு ஆயுளை பெருக்கிக்கொள்ள முடியும்.

    தினச்சர்யத்தில் அடுத்தபடியாக மலம் கழித்தல், எல்லா நோய்களுக்கும் மூல காரணம் மலம் தான் என்கிறது வேதம். இன்றைய காலகட்டத்தில் மலத்தை கழிப்பது என்பது இயல்பான விஷயமாக இல்லை. இது வயது வித்தியாசமின்றி குழந்தை முதல் முதியவர்வரை அனைவருக்கும் பொருந்தும். மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்ச்சி உண்டான பிறகுதான் மலம் கழிக்கவேண்டும்.

    பொதுவாக காலையில் துயில் எழுந்தவுடன் மலம் கழித்தல் என்பது சாலச்சிறந்தது. பலர் நேரமின்மை காரணமாக பின்பு பலவந்தமாக மலத்தை வெளியேற்ற முயற்சிக்கின்றனர். மலத்தை வெளியேற்றாமலும் இருக்க கூடாது பலவந்தமாக வெளியேற்றவும் கூடாது. அவ்வாறு பலவந்தமாக வெளியேற்றினால் தலைவலி, மூலம், உடம்பு வலி, ஹெர்னியா, வயிற்று பொருமல் போன்ற உபத்திரவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலர் தனக்கு மலச்சிக்கல் இருப்பது தெரியாமலே வாழ்கின்றனர்.

    அவர்களிடத்தில் சோதித்தால் மலசிக்கல் இல்லை என்றே பதில் வரும். இரவில் வாழைப்பழம் சாப்பிடாமல் காலையில் டீ, காபி, தண்ணீர் குடிக்காமல் இரவில் மலம் இளகச் செய்யக்கூடிய மருந்துகளை எடுக்காமல் காலை துயில் எழுந்தவுடன் மலத்தை கழிக்க வேண்டும். அதுவே மலச்சிக்கல் இல்லாத மலம் கழித்தல் என்று கருதலாம். மேற்கண்டவற்றை உபயோப்படுத்தி மலத்தை கழித்தால் அதுவும் மலச்சிக்கலே.

    மலசிக்களுக்குண்டான காரணம்:

    1.போதுமான தண்ணீர் பருகாமல் இருத்தல்.

    2.எளிதில் ஜீரணமாகாத உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளுதல்.

    3.நார் சத்து இல்லாத மற்றும் வறண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுதல்.

    4.தூக்கமின்மை, பயம் மன உளைச்சல்.

    5.அஜீரணம் இருக்கும் போது உணவு உண்ணுதல்.

     

    6.இரவு நேரத்தில் ஜீரணமாகாத உணவு / அசைவ உணவை அதிகம் எடுத்தல்.

    7.உணவு அளவுக்கு குறைவாக எடுப்பதினால்...

    8.உடற்பயிற்சியில்லாமல் ஒரே இடத்தில் இருத்தல்...

    போன்ற காரணங்களால் மலசிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதுனுடைய அறிகுறி:

    1.சுகமாக மலம் கழிக்க முடியாமல் போவது.

    2.அடிக்கடி மலம் கழித்தல், திருப்தில்லாமல் போவது...

    3.மலத்தை முக்கி கழித்தல், வலியுடன் மலம் கழித்தல்...

    4.மன உளைச்சல், அதிக கோபம்...

    சிகிச்சை:

    மேற்கண்ட மலச்சிக்கல் காரணங்களை தவிர்த்தல் வேண்டும், நார்ச்சத்து கீரை உணவுகளை, நீர்ச்சத்துவுள்ள உணவுகளை, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்...போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும், உடல் பயிற்சி மேற்கொள்ளவேண்டும். காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுவதன் மூலமாகவும் மலத்தை எளிதில் கழிக்கமுடியும்.

    திரிபலா பொடியை அல்லது கடுக்காய் பொடியை இரவு நேரத்தில் சாப்பிடலாம். அதாவது, இரவு உணவு சாப்பிட்ட பின்பு 1 மணி நேரம் கழித்து 1 தேக்கரண்டி திரிபலா சூரணத்தை 75 ml தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்கவைத்து ஆற வைத்து இளம் சூட்டுடன் பருக வேண்டும். இதன் மூலம் மலச்சிக்கல் தீர்த்து மலம் இளக வழி வகைச் செய்யும்.

    கல் குடல் வாகு, அதாவது வறண்ட குடல் உடையவர்கள். எப்போதும் மலச்சிக்கல், வயிற்று வலி, பொருமல், சிலநேரம் நன்கு ஜீரணம், சில நேரம் ஜீரணமின்மை போன்ற அறிகுறிகளை கொண்டவர்கள் கல் குடல் வாகு கொண்டவர்கள். இவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் உணவில் விளக்கெண்ணெய் சிறிது அளவு சேர்த்துக்கொள்ளலாம். அல்லது இரவில் உறங்கும் முன் 1 தேக்கரண்டி விளக்கெண்ணெயை 75 ml சுடுதண்ணீரில் கலந்து கொடுக்க மலம் எளிதாக கழிக்க முடியும்.

    இன்றையகாலத்தில் மலம் கழிக்கும் போது மனதை அதில் செலுத்துவது கிடையாது. மாறாக மொபைல் போனுடன் கழிவறைக்கு செல்கின்றனர். மொபைலில் மனதை செலுத்தினால் மலம் முழுமையாக கழிவுறாது. இதனால் பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஆயுர்வேதத்தில் மலமிளக்கியாக பல வகை மருந்துகள் பல தரத்தில் கூறப்பட்டுள்ள.

    சூரண மலமிளக்கி, கஷாய மலமிளக்கி, மாத்திரை மலமிளக்கி / குடிகை, எண்ணெய், நெய், டானிக் போன்ற வடிவில் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதனை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒவ்வொரு வீட்டிலும் வயதானவர்கள் இருப்பார்கள்.
    • ஓய்வுக்காலத்துக்காக சேர்க்கும் நிதியை அரசின் திட்டங்களில் முதலீடு செய்வதே நல்லது.

    மாலைமலர் வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள். விக்ரமாதித்ய மஹாராஜாவின் சிம்மாசனத்தில் அமரத் தயங்கிய போஜராஜன் கதை தெரியுமல்லவா? ஒரு கிராமத்தில் போஜராஜன் கண்டெடுத்த அந்த சிம்மாசனத்தில் 32 படிகள். அவை ஒவ்வொன்றையும் தங்கச் சிலைகளாக மாற்றப்பட்ட அப்சரஸ்கள் தாங்கி நின்றன. ஓரொரு சிலையும் விக்ரமாதித்தனின் பெருமைகளில் ஒன்றைக் கூறி "அந்த நற்குணம் உனக்கு இருந்தால், இந்தப் படியில் ஏறலாம்" என்றது.

    அந்த 32 கல்யாண குணங்களும் இருப்பவன்தான் அதன் உச்சியில் அமர லாயக்கு என்பது அதன் அர்த்தம். விக்ரமாதித்தனின் புகழ் கேட்டு, தான் அந்த சிம்மாசனத்தில் அமர லாயக்கற்றவன் என்று முடிவு கட்டி போஜராஜன் பின் வாங்கிய போது, அந்த சிலைகள் அவனை வணங்கி "நீ அதற்கு முழுமையாகத் தகுதியானவன்" என்று கூறி வழி விட்டன.

    அதேபோல் செல்வநிலை என்ற சிம்மாசனத்தின் மீது அமர ஆசைப்படும் நமக்கும் அதற்கு உண்டான தகுதிகள் நம்மிடம் உள்ளனவா என்று சுயபரிசோதனை செய்வதற்கும், அந்தத் தகுதிகளை வளர்த்துக் கொள்வதற்குமான முன்னுரைகளே இந்தக் கட்டுரைகள். அந்த வகையில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயம் –'முதலில் எனக்கு' –என்ற கோட்பாடு. அதிலும் நீங்கள் 50 வயதைத் தாண்டியவர் என்றால், கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டிய கோட்பாடு இது. ஏனெனில் நம்மில் பலர் குடும்பத்தினரின் ஆசைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்வதிலேயே காலம் கழிக்கிறோமே தவிர நமது ஓய்வுக்காலம் குறித்து யோசிப்பதில்லை.

    கால மாற்றம் 'முதலில் எனக்கு'

    நமது கிராமங்களில் சிலரை "தன்னப் போணி' என்று திட்டுவதைக் கேட்டிருக்கலாம். தன்னப் போணி என்றால் சுயநலமாக இருப்பவன்; தன் நலத்தை மட்டுமே பேணுபவன் என்று அர்த்தம். இதுவரை நமக்குக் கூறப்பட்டதெல்லாம், "சுயநலமாக இருக்காதே. தன்னைச் சார்ந்தவர்களுக்குத் தேவையானவற்றுக்கு செலவழித்து, அவர்களை வாழவைப்பதே நல்ல மனிதனுக்கு அழகு"" என்பது போன்ற நல்லுரைகள்தான். இதற்கு முக்கிய காரணம் நம் நாடு கூட்டுக்குடும்பங்கள் நிறைந்த விவசாய நாடாக இருந்ததுதான்.

    அப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் வயதானவர்கள் இருப்பார்கள். அவர்களை பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள். இன்றைய நிலை வேறு. தொழிற்சாலைகள் வந்தபின், பிள்ளைகள் வேறு ஊர், வேறு நாடு என்று சென்றுவிட, கூட்டுக் குடும்பங்கள் உடைந்துவிட்டன. நம்மில் பலர் கடைசி வரை தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

    ஒரு சிலர்தான் இந்தக் கால மாற்றத்தை உணர்ந்து, "எனக்கும் வயதாகும். வேலை செய்யமுடியாத காலம் வரும். அப்போது பிள்ளைகள் மீது சார்ந்து வாழ முடியாமல் போகலாம். அதற்காக என் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை தனியாகச் சேர்த்து வைக்கிறேன்" என்று பணத்தை சேமிக்கிறார்கள். அப்படி நாமும் விரும்பினால் "என்னுடைய முதல் செலவு ஓய்வுக்காலத்துக்கான சேமிப்பு" என்ற கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.

    எவ்வளவு சேமிப்பது? எங்கு சேமிப்பது?

    பணி ஓய்வு என்பது அனைவர் வாழ்விலும் வரக்கூடிய ஒரு முக்கியமான நிகழ்வு. சிறிது திட்டமிட்டு இறங்கினால், ஓய்வுக் காலத்தை நிம்மதியாகக் கழிக்கலாம். இதில் பலருக்கும் ஏற்படக்கூடிய கேள்வி "எனக்காக, என் ஓய்வு காலத்துக்காக எவ்வளவு சேமிப்பது?" என்பதுதான். பொதுவாக நம் வருடாந்திர செலவைப் போல் 25-30 மடங்குப் பணம் சேமிப்பாக இருந்தால் ஓய்வுக்காலத்தை பதற்றமின்றிக் கழிக்க இயலும்.

    சுந்தரி ஜகதீசன்


     

    அடுத்த கேள்வி – எங்கு சேமிப்பது என்பதே அல்லவா? ஓய்வுக்காலத்துக்கான பணம் என்னும் பட்சத்தில் அதில் நாம் எந்த ரிஸ்க்கும் எடுக்கமுடியாது. அது பங்குச் சந்தை வருமானம் போல் மேலும், கீழுமாக ஏறி, இறங்காமல், நிலையாக வளர்வதாக இருக்க வேண்டும். மேலும் அதனைப் பாதுகாப்பவர்களும் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும். நம் நலனின் உச்சபட்ச பாதுகாப்பாளர் அரசாங்கம்தானே? அதனால் ஓய்வுக்காலத்துக்காக சேர்க்கும் நிதியை அரசின் திட்டங்களில் முதலீடு செய்வதே நல்லது.

    அரசின் எந்தத் திட்டங்கள் ஏற்றவை?

    பணி ஓய்வுக்குத் திட்டமிடல் எவ்வளவு சீக்கிரம் துவங்குகிறதோ, அவ்வளவு நல்லது என்று உணர்ந்து, அரசாங்கமே ப்ராவிடென்ட் ஃபண்ட், வாலன்டரி ப்ராவிடென்ட் ஃபண்ட், பப்ளிக் ப்ராவிடென்ட் ஃபண்ட் என்று மூன்று திட்டங்களை முன்வைத்துள்ளது. அவற்றையே நம் ஓய்வுக்கால நிதித் தொகுப்பை உருவாக்க நாம் உபயோகிக்கலாம்.

    ப்ராவிடென்ட் ஃபண்ட் திட்டத்தில் ஊழியரின் சம்பளத்தில் (பேசிக் சம்பளம் + சில சலுகைகள்) 12% அளவு ப்ராவிடெண்ட் ஃபண்டாகப் பிடித்தம் செய்யப்படுகிறது. (இதற்கு ஈடாக அவர் வேலை செய்யும் நிறுவனமும் 12% தந்தாலும் அதில் 8.33% பென்ஷன் அக்கவுன்ட்டுக்கு சென்று விடுவதால், 3.67% மட்டுமே ப்ராவிடென்ட் ஃபண்டுக்கு செல்கிறது). இதற்கு இந்த வருடம் வழங்கப்படும் வட்டி விகிதம் 8.25%. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு வருடமும் 8% முதல் 13% வரை மாற்றத்துக்கு உள்ளாகலாம். இதில் இருந்து பணத்தை வெளியே எடுப்பது அத்தனை சுலபமல்ல என்பதால் நம் பணம் சீராக வளர்கிறது.

    ப்ராவிடென்ட் ஃபண்டின் முக்கியத்துவம் உணர்ந்து அதிகம் செலுத்த விரும்புவோர், தங்கள் சம்பளத்தில் (பேசிக் + டிஏ) 100% வரை வாலன்டரி ப்ராவிடென்ட் ஃபண்டாக செலுத்தலாம். இதில் நிறுவனத்தின் பங்கு இருக்காது. நாம் வாலன்டரி ப்ராவிடென்ட் ஃபண்டைத் துவங்குவதாக, தொகையைக் குறிப்பிட்டு நம் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தால் இந்த அக்கவுன்ட் நமக்குத் துவங்கப்படும். ஒரு முறை இதனை நாம் தேர்ந்தெடுத்து முதலீட்டைத் துவங்கிவிட்டால், குறைந்தது 5 வருடங்களாவது தொடர்ந்து முதலீடு செய்யவேண்டும். இதற்கும் ப்ராவிடென்ட் ஃபண்டுக்கு தரப்படும் அதே அளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

    பப்ளிக் ப்ராவிடென்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்.) என்ற அஞ்சலகத் திட்டம் நமக்குத் தெரிந்த ஒன்று. தாம் வேலை செய்யும் நிறுவனத்தில் ப்ராவிடென்ட் வசதி இல்லாதவர்கள், சுய தொழில் செய்பவர்கள் மட்டுமின்றி, யார் வேண்டுமானாலும் இதில் வருடத்திற்கு குறைந்த பட்சம் ரூ.500/ முதல் அதிக பட்சம் ரூ. 1.50 லட்சம் வரை சேமிக்கலாம். வங்கிகளிலும், போஸ்ட் ஆஃபீசிலும் இதனைத் துவங்கும் வசதி உள்ளது. ஒரு முறை துவங்கிவிட்டால் 15 வருடம் தொடரவேண்டும். 15 வருட முடிவில் நீட்டிக்க விரும்பினால் ஐந்து, ஐந்து வருடங்களுக்கு நீட்டிக்கலாம். தற்போது இதற்கு 7.1% வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது. இது ஒவ்வொரு வருடமும் பரிசீலனை செய்யப்பட்டு மாற்றத்துக்கு உள்ளாகலாம்.

    மூன்றிலும் கிடைக்கும் வரிவிலக்குகள்

    இந்த மூன்று திட்டங்களிலும் பங்கு பெறுவது நமக்கு இன்னொரு நன்மையையும் வழங்குகிறது. இவை அனைத்துமே 80 சி செக் ஷனின் கீழ் வரிவிலக்கு பெறுகின்றன. நாம் ஓய்வுகாலத்துக்காக செய்யும் ப்ராவிடென்ட் ஃபண்ட் சேமிப்புகள், 20% 30% என்று நமது வருமான வரம்புக்கேற்றபடி தரும் வரிச்சலுகையை வேறு முதலீடுகளில் ஈடுபடுத்தி 8%, 10% என்று வருமானம் பெறலாம்.

    இவற்றில் இருந்து வரக்கூடிய வட்டிக்கும் வரி விலக்கு உண்டு. இவை முதிர்வு அடைந்து வெளிவரும்போதும் வரிப் பிடித்தம் ஏதும் செய்யப்படுவதில்லை. இப்படி மூன்று கட்டங்களிலுமே Exempt, Exempt, Exempt என்பதாக வரி விலக்கு கிடைப்பது நமது பணம் தடையின்றி வளர பேருதவியாக இருக்கிறது. (வாலன்டரி ப்ராவிடென்ட் ஃபண்டில் மட்டும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சேரக்கூடிய வட்டித் தொகை வருமான வரியின் கீழ் வரும்).

    மாதத்தின் முதல் செலவு சேமிப்பு

    ப்ராவிடென்ட் ஃபண்ட் சேமிப்பும், வாலன்டரி ப்ராவிடென்ட் ஃபண்ட் சேமிப்பும் நம் சம்பளத்திலேயே பிடித்தம் செய்யப்பட்டு, மீதி இருக்கும் பணமே நம் கைக்கு வரும். பப்ளிக் ப்ராவிடென்ட் ஃபண்டில் ஐந்தாம் தேதிக்குள்ளாக அக்கவுன்ட்டில் செலுத்தப்படும் பணத்துக்கே அந்த மாதம் வட்டி தரப்படும் என்பதால், முதல் இரண்டு, மூன்று தேதிக்குள்ளாகவே பணத்தைப் பிடித்தம் செய்து இந்த அக்கவுன்ட்டுக்கு அனுப்பும்படி வங்கியில் நாம் ஒரு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்-ஷன் கொடுத்து விடவேண்டும். மாதத்தின் முதல் செலவே நமக்கான சேமிப்பு என்றாகிவிடுவதால் என்பதால் "இந்த மாதம் செலவு அதிகமாகிவிட்டது; சேமிக்க இயலவில்லை" என்பது போன்ற சால்ஜாப்புகளுக்கு இடமிருக்காது.

    இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எக்காரணம் கொண்டும் ஓய்வுக் காலத்துக்காக சேர்த்த பணத்தை வேறு செலவுகளுக்காக எடுக்கக்கூடாது என்ற கோட்பாட்டை கடைப்பிடிக்கவும் இந்த மூன்று பிராவிடென்ட் ஃபண்டுகளுமே நமக்கு உதவும். ஏனெனில், இவற்றில் கடன் வாங்கவும், பணத்தை வெளியே எடுக்கவும் அனுமதி இருந்தாலும் அது அவ்வளவு எளிதல்ல. ஆயினும் சிலர் இவற்றிலிருந்து பணத்தை எடுத்து, திரும்பக் கட்டுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அது நம் நிதித் தொகுப்பின் வளர்ச்சியை பாதிக்கும்.

    நமது ஓய்வுக்காலத்துக்கான நிதியைச் சேர்க்க இந்த மூன்று திட்டங்களும் முக்கியம். இவற்றில் நம்மால் இயன்ற அளவு சேமிப்பது ஓய்வுக் காலத்தை எதிர்கொள்ள உதவும்.

    உங்கள் ஓய்வுக்கால நிதிக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டீர்களா? முக்கியமாக, அந்த நிதியில் இருந்து எக்காரணம் கொண்டும் பணத்தை வெளியே எடுக்காமல் இருக்கிறீர்களா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீபாவளி, தை மாதம் பொங்கல் விழா என இன்னும் எத்தனையோ பண்டிகைகள்.
    • பெண்களின் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை உணர்ச்சியை வெளிப்படுத்த உதவும் பண்டிகை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி.

    நாம் பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடி வருகிறோம். பண்டிகைகள் இல்லாத மாதங்களே இல்லை.

    ஆடி மாதம் அம்மன் பண்டிகைகள், புரட்டாசியில் நவராத்திரிப் பண்டிகை, ஐப்பசியில் தீபாவளி, தை மாதம் பொங்கல் விழா என இன்னும் எத்தனையோ பண்டிகைகள்.

    ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதக் காரணம் உண்டு. பொருளில்லாமல் வெற்று ஆரவாரமாக நம் பண்டிகைகள் எதுவும் அமைவதில்லை என்பதை நாம் உணரவேண்டும். ஆடி மாதப் பண்டிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப் படுபவை. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    கூழ் வார்க்கும் திருவிழாக்கள் ஏழைகளின் நலனை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. அது ஏழைகளின் பசியைப் போக்குகிறது.

    பொதுவாகவே நம் எல்லாப் பண்டிகைகளிலும் பிரசாதங்கள் உண்டு. ஏழைகளின் பசியாற்றுவதே ஆன்மிகத்தின் முக்கிய நோக்கம்.

    பெண்களின் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை உணர்ச்சியை வெளிப்படுத்த உதவும் பண்டிகை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி.

    வீட்டுக்கு வரும் பெண்களுக்குப் பாட்டுப் பாட சந்தர்ப்பம் கொடுப்பது இந்தப் பண்டிகை மட்டும்தான்.

    உடலில் சத்துக் குறைபாடு ஏற்படாமல் இருக்க கொண்டைக்கடலை, வேர்க்கடலை உள்ளிட்ட சுண்டல்களை வழங்கி அனைவரையும் சாப்பிடச் செய்து ஆரோக்கியத்தை வளர்க்க உதவுவதும் நவராத்திரிப் பண்டிகை தான். சரஸ்வதி பூஜையன்று புத்தகங்களையே கடவுளாக எண்ணிக் கும்பிடுகிறோம். `எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு` என்ற திருக்குறள் கருத்தை உணர்த்த வந்த பண்டிகை தானே அது?

    மனிதர்கள் மனதளவில் உயர்வதற்குப் புத்தகங்களே துணை செய்கின்றன என்ற அரிய உண்மையை உணர்த்தும் பண்டிகை அது.

    பொங்கல் உழவர் திருநாள். தொழுதுண்டு பின் செல்பவர்கள் உழுதுண்டு வாழ்வோரைப் போற்றும் நாள் அது.

    திருப்பூர் கிருஷ்ணன்


     

    உழுதொழிலுக்கு உதவும் மாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் நாள்தான் மாட்டுப் பொங்கல். விலங்குகளை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் பண்டிகை அது.

    ஆண்டுக்கு ஒரு முறையேனும் உறவையும் நட்பையும் பேணும் வகையில் காணும் பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

    இப்படி நம் பண்டிகை ஒவ்வொன்றின் பின்னணியிலும் பல அர்த்தங்கள் உள்ளன. அவற்றை அனுசரிப்பதால் நம் வாழ்வில் மங்கலமும் இனிமையும் கூடுகின்றன.

    இயந்திரத்தனமான வாழ்க்கையால் ஏற்படும் சலிப்பைப் போக்கிப் பண்டிகைகள் நம் மனத்தை உற்சாகமாக்குகின்றன.

    நாம் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகை, கண்ணன் கதை ஒன்றை மையமாகக் கொண்டது. தீய சக்திகளின் மொத்த வடிவமாக விளங்கிய நரகாசுரனைக் கண்ணன் வதைத்த நாளையே நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

    ராமனும் கண்ணனும் ராமாயணம், மகாபாரதம் என்ற நமது இதிகாசங்களின் நாயகர்கள். நாம் வழிபடும் இருபெரும் தெய்வங்கள்.

    இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்த இரு தெய்வங்களும் நம் சுதந்திரத் தியாகிகள் பலருக்குத் தூண்டுகோலாக இருந்திருக்கிறார்கள் என்பதை நம் வரலாறு சொல்கிறது.

    அறத்தின் திருவுருவாக விளங்கிய ராமனால் கவரப்பட்டவர் தேசத் தந்தை மகாத்மா காந்தி. மகாத்மா கண்ணனின் கீதையால் கவரப் பட்டிருக்கிறார். கீதைக்கு அவர் உரை விளக்கம் எழுதியுள்ளார்.

    கண்ணனால் கவரப்பட்ட தியாகிகள் பலர் உண்டு. வினோபாஜி, அரவிந்தர், பால கங்காதர திலகர், மகாகவி பாரதியார் உள்ளிட்ட பல தேச பக்தர்கள் கண்ணக் கடவுளின் பக்தர்களாகவும் இருந்தார்கள். கண்ணன் அருளிய பகவத் கீதையில் மனம் தோய்ந்தார்கள்.

    வினோபா, அரவிந்தர், திலகர், பாரதியார் என கிருஷ்ண பக்தர்கள் எல்லோருமே கீதைக்கு உரைவிளக்கம் எழுதியிருக்கிறார்கள்.

    தனக்குரிய சொந்த நாட்டையே தம்பி பரதனிடம் விட்டுச் சென்ற ராமன் பலரைக் கவரவில்லை. ஆனால் தனக்குச் சொந்தமில்லாவிட்டாலும் தருமபுத்திரரின் நாட்டை அவருக்கு வாங்கிக் கொடுத்த கண்ணன், நம் தேசம் நமக்கென்ற உரிமைக்காகப் பாடுபட்ட நமது தியாகிகளைக் கவர்ந்ததில் வியப்பெதுவும் இல்லை.

    கண்ணனது கதையே பல வகைகளிலும் உருவகமாகப் பல உண்மைகளை உணர்த்துவது தான். நாம் கதை சொல்லும் கருத்தை விட்டு விட்டுக் கதையை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். மகாத்மா காந்தியிடம் கண்ணனைப் பாத்திரமாகக் கொண்ட மகாபாரதம் பற்றிக் கருத்துக் கேட்டாள் ஒரு வெளிதேசப் பெண்மணி. ஐந்து பேரை ஒரு பெண் மணந்து வாழ்ந்ததைக் கொண்டாடுவது எப்படிச் சரியாகும் என்பதே அவள் கேட்ட கேள்விகளின் சாரம்.

    மகாத்மா காந்தி ஒரு மெல்லிய புன்முறுவலுடன் அழகாகப் பதில் சொன்னார்: `எங்கள் கதைகள், கொண்டாட்டங்கள், பண்டிகைகள் எதையுமே மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது. அவற்றில் ஆழ்ந்த பொருள் உண்டு. அந்தப் பொருளைக் கண்டறிந்து அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    பாஞ்சாலி என்பவள் ஆன்மா. பஞ்ச பாண்டவர்கள் ஐம்புலன்கள். இந்த ஆன்மா இவ்வாழ்வில் ஐம்புலன்களை மணந்து வாழ்கிறது. ஐம்புலன்களும் வாழ்க்கை என்ற சூதாட்டத்தில் நூற்றுக்கணக்கான தீய சக்திகளிடம் தங்களை இழக்கின்றன. ஆனால் ஆன்மா உரிய நேரத்தில் விழித்துக் கொள்கிறது. தன்னையும் இழக்க அதற்கு விருப்பமில்லை.

    அந்தப் பாஞ்சாலியாகிய ஆன்மா கண்ணக் கடவுளை மனப்பூர்வமாக அழைத்ததும், கண்ணன் நூற்றுக்கணக்கான தீய சக்திகளிடமிருந்து ஆன்மாவின் மானத்தைக் காத்து அதைக் காப்பாற்றுகிறான். இதுவே மகாபாரதக் கதை சொல்லும் தத்துவம்! கதையை வெறும் கதையாகப் பார்க்காமல் அதுசொல்லும் உட்பொருளை உணர்ந்து கொள்வது முக்கியம். ஒரு மாத்திரையில் வெளிப்பூச்சு சர்க்கரையாக இருக்கலாம். தேனில் குழைத்து ஒரு கசப்பு மருந்தை நாம் சாப்பிடலாம்.

    ஆனால் சர்க்கரையோ தேனோ முக்கியமல்ல. மருந்துதான் முக்கியம். அதுபோல் இந்து மதக் கதைகளின் உட்பொருளான மருந்தை நாம் உணர்ந்து பின்பற்ற வேண்டும்.` கண்ணன் கதையில் வரும் எல்லா நிகழ்ச்சிகளும் இப்படிப்பட்ட பல தத்துவங்களை உணர்த்துவதுதான். நரகாசுரனைக் கண்ணன் வதம் செய்தான் என்றால் என்ன பொருள்? அதர்மத்தின் மொத்த உருவம்தான் நரகாசுரன். கண்ணன் அவனை வதம் செய்த மன்னன்.

    நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தான். எனவே நாமும் கண்ணன் வழியில் நம்மை எதிர்ப்படும் நரகாசுரன்களை வதம் செய்ய வேண்டும். இதுவே தீபாவளிப் பண்டிகை தெரிவிக்கும் தத்துவம்.

    நாம் வதம் செய்ய வேண்டிய நரகாசுரன்கள் யார் யார்? காமம், குரோதம், பேராசை, அடுத்தவர்களைக் கெடுக்கும் குணம், உழைக்காதிருக்கும் சோம்பல் குணம், பொறாமை, புறம் பேசுதல் இவை போன்ற எண்ணற்ற எதிர்மறைப் பண்புகள் நம் ஆழ்மனத்தில் நரகாசுரன்களாய்ப் பதுங்கியிருக்கின்றன. அவை நம் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன. அறிவே நம் கண்ணன். அறிவால் தீய குணங்களாகிய நரகாசுரன்களை அழித்து நம் வாழ்வில் நாம் முன்னேற வேண்டும்.

    `உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து` என்கிறது உலகப் பொது மறையான வள்ளுவம். அறிவு என்னும் அங்குசத்தின் மூலம் ஐம்புலன்களாகிய யானையை அடக்கி ஆள வேண்டும் என்கிறது அது. இன்று நம் நாட்டில் தனிமனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம் இரண்டும் கெட்டுக் கிடக்கின்றன என்பது எல்லோரும் அறிந்த சங்கதி. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை.

    தெய்வங்கள் அசுரர்களை வதம் செய்ததைப் பற்றித் தானே நம் ஆன்மிகம் நெடுகப் பேசுகிறது? ராமாயணத்தில் ராவண வதம், மகாபாரதத்தில் துரியோதன வதம், கந்த சஷ்டியில் சூரசம்ஹாரம், தீபாவளியில் நரகாசுர வதம், நவராத்திரியின் விஜயதசமியில் தேவி செய்யும் அசுரவதம் என எத்தனை அரக்கர்களை நம் தெய்வங்கள் வதம் செய்கின்றனர்? உண்மையில் மது ஓர் அசுரன். அதை வதம் செய்ய வேண்டும். மது அருந்துபவர்கள் இல்லாததால் மதுக் கடைகளை மூட வேண்டிய சூழலை நாம் ஏன் உருவாக்கக் கூடாது?

    அருட்செல்வர் நா. மகாலிங்கம், `குறைந்த பட்சம் கடைகளில் மது அருந்தக் கூடாது, வாங்கி மட்டுமே செல்லலாம் என்று சட்டம் கொண்டு வந்தாலே மது என்கிற அசுரன் பலவீனம் அடைந்து விடுவான்` என்ற பொருள்படக் கருத்துத் தெரிவித்தார். இளைஞர்கள் மதுவாகிய அசுரனின் பிடியிலிருந்து முற்றிலுமாக விடுபடுவோம் என மனப்பூர்வமாகச் சபதமேற்க வேண்டும். சமூக வாழ்வில் முன்னெப்போதும் இல்லாத அளவு இந்தியாவெங்கும் லஞ்சம் என்கிற அசுரன் தலைவிரித்து ஆடுவதைப் பார்க்கிறோம். லஞ்சம் வாங்குவது தவறு என்று உணர்ந்தவர்கள் கூட லஞ்சம் கொடுப்பதும் தவறுதான் என்பதை ஏனோ உணர்வதில்லை.

    நமது இந்தியா லஞ்சம் என்கிற அசுரனின் பிடியிலிருந்து முழுமையாக விடுபடும் நாளே உண்மையான ஆன்மிக நன்னாள்.

    சமூக வாழ்வில் பெரும் தூய்மையைக் கடைப்பிடித்த கக்கன், ராஜாஜி, காமராஜ், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற உத்தமர்கள் மீண்டும் தோன்ற வேண்டும் என நாம் கடவுளைப் பிரார்த்திப்போம்.

    பெண்களை மையப்படுத்திப் பாலியல் வன்முறை நாடெங்கும் அடுத்தடுத்து நடைபெற்று வரும் சூழலில், பாஞ்சாலியின் மானத்தைக் காத்த கண்ணனை வணங்கி அந்தக் கண்ணக் கடவுள் வழியில் நாமும் பெண்களின் மானத்தைக் காக்க உறுதி பூணுவோம்.

    `கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக!` என்று பாடினார் வடலூர் ராமலிங்க வள்ளலார். கதைகளில் உள்ள கற்பனைகளை விடுத்து அவை சொல்லும் தத்துவத்தைக் கண்டறிந்து அதைப் பின்பற்ற வேண்டும் என்பதுதானே வடலூர் வள்ளல் பெருமானின் கருத்து? வள்ளலார் வழியைப் பின்பற்றி வாழ்வில் உயர்வோம்.

    தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நமது உடலுக்குள் உள்ள உறுப்புகளை பிரிக்கும் தசைகள் 3 இடங்களில் இருக்கிறது.
    • நமது மேல் வயிற்றில் உள்ள பகுதியிலோ அல்லது அடிவயிற்றின் வால்வு பகுதியிலோ தளர்வாகும்போது குடலிறக்கம் வரும்.

    பெண்களை பாதிக்கின்ற ஒருவகை பிரச்சினை ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம் ஆகும். பெண்கள் பலரும் தங்களுக்கு குடலிறக்கத்துக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே டாக்டர்களை பார்த்து விடுவார்கள். தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை டாக்டர்களிடம் எடுத்து சொல்வார்கள். டாக்டர், எனக்கு தொப்புளில் லேசாக வீக்கம் போல காணப்படுகிறது. சில நேரங்களில் இருமும்போது வீங்கிய இடத்தில் வலி ஏற்படுகிறது என்பார்கள்.

    ஆனால் குடலிறக்கத்தில் ஒரே ஒரு நிலையை மட்டும் மருத்துவர்களிடம் சொல்ல பெண்கள் தயக்கம் அடைவார்கள். அதுபற்றி மருத்துவர்களிடம் எடுத்து சொல்ல கூச்சப்படுவார்கள். அதுதான் கருப்பை குடலிறக்கம். இந்த குடலிறக்கமானது பெல்விக் புளோர் (இடுப்புத்தள தசை) என்று அழைக்கப்படும், இடுப்புக்கு கீழே உள்ள அடிப்பகுதியில் ஏற்படுகிறது.

    உறுப்புகளை தாங்கி பிடிப்பதில் இடுப்புத்தள தசையின் பங்கு:

    நமது உடலுக்குள் உள்ள உறுப்புகளை பிரிக்கும் தசைகள் 3 இடங்களில் இருக்கிறது. அதை ஆங்கிலத்தில் டயாப்ரம் என்றும் தமிழில் உதரவிதானம் என்றும் அழைப்பார்கள். இது நமது உடலில் ஒரு பகுதியை இன்னொரு பகுதியில் இருந்து பிரிக்கும் முக்கிய தசை ஆகும்.

    ஒரு டயாப்ரம் சுவாச பகுதி மற்றும் வயிற்று பகுதியை பிரிக்கிறது. நமது மூளையில் ஒரு டயாப்ரம் இருக்கிறது. அதேபோல் இடுப்புக்கு கீழே உள்ள பகுதியில் ஒரு டயாப்ரம் இருக்கிறது. இந்த டயாப்ரம் இருக்கும் பகுதியையே 'இடுப்புத்தள தசை' என்று சொல்கிறோம். இந்த 'இடுப்புத்தள தசை' மிகவும் முக்கியமான ஒன்று. நமது இடுப்பு பகுதியில் உள்ள உறுப்புகளை தாங்கி பிடிப்பதில் இந்த 'இடுப்புத்தள தசை' முக்கியமான பங்கை வகிக்கிறது.

    ஆனால் சில பெண்களுக்கு இந்த 'இடுப்புத்தள தசை' தளர்வாகும். இடுப்புக்கு அடிப்பகுதியில் உள்ள இந்த 'இடுப்புத்தள தசை' தளர்வாகும் போது உட்புறத்தில் கருப்பை மற்றும் அதனுடன் தொடர்புடைய உறுப்புகள் குடலிறக்கம் அடையும். அதாவது சில உறுப்புகள் கீழே இறங்கிவிடும். இதுதான் கருப்பை குடலிறக்கம். இந்த கருப்பை குடலிறக்கத்தை பற்றி வெளியே சொல்வதற்குதான் பலரும் தயங்குவார்கள். ஏனென்றால் இதன் மூலம் ஏற்படுகின்ற அறிகுறிகள் என்பது பெண்களால் வெளியில் சொல்ல முடியாத வகையில் இருக்கும்.

    பெல்விக் புளோர் என்பது இடுப்பின் அடிப்பகுதியை பிரிக்கின்ற முக்கியமான ஒரு டயாப்ரம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த பகுதியில் முக்கியமான உறுப்புகள் என்ன இருக்கிறது என்று பார்த்தால், இடுப்பு தளத்துடன் இணைந்த தசைகள், அதன் தொடர்புடைய சவ்வுகள் இருக்கிறது. மேலும் அந்த பகுதியை இறுக்கமாக வைத்துக்கொள்வதற்காக சில தசைநார்களும் இருக்கிறது.

    முக்கியமான தசைகளால் உருவாக்கப்பட்ட இடுப்புத்தள தசை:

    இந்த 'இடுப்புத்தள தசை' எந்த வகையில் முக்கியமானது என்றால், இந்த பகுதியில் தான் ஒரு பெண்ணின் பெரினியம் இருக்கிறது. இந்த பெரினியம் என்பது பெண்களின் யோனி திறக்கும் பகுதிக்கும், ஆசனவாய்க்கும் இடையே உள்ள பகுதியை குறிக்கும். இது 'இடுப்புத்தள தசை'யின் அடிப்பகுதியாகும். சிறுநீர் வெளிவருகிற பாதை, பிரசவம் ஆகிற பாதை, மலம் வெளியேறும் பாதை ஆகிய 3 பாதைகளின் வெளித்துவாரமும் மேல் பகுதியான பெரினியம் பகுதியில் இருந்து தான் பிரிக்கப்படுகிறது.

    இந்த பகுதியில் உள்ள 'இடுப்புத்தள தசை' என்பது முக்கியமான தசைகளால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இடுப்புத்தள தசை முக்கியமாக உடல் உறுப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியது. சிறுநீரானது, சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்க்குழாய் வழியாக வெளிவரும். சிறுநீர்ப்பையில் இருந்து வெளிவருகின்ற சிறுநீர்க்குழாய் வெளிப்பக்கம் திறக்கும் இடத்தின் மேலே உள்ள பகுதியை இடுப்புத்தள தசை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இதன் வழியாகத்தான் சிறுநீர் வந்து வெளியே போகும்.

    அதேபோல் பெண்ணுறுப்பான கர்ப்பப்பை, கர்ப்பவாய் ஆகியவை யோனிப்பகுதியில் திறக்கிறது. இந்த யோனிப்பகுதி திறந்து வெளிவருகிற பகுதியும் இந்த இடுப்புத்தள தசையின் பிடியில் தான் உள்ளது. இந்த யோனிப்பகுதி என்பது ஒரு குழாய். அந்த குழாய் கர்ப்பப்பையின் உள்ளே இருந்து வரும். அந்த குழாயில் திறப்பு ஏற்பட்டு, அந்த குழாய் தான் சினைப்பையில் வெளிப்பக்கம் வந்து திறக்கிறது.

    அதேபோல் குடல் பகுதியை எடுத்துக்கொண்டால், நாம் சாப்பிட்ட பிறகு செரிமானமான உணவு குடல் பகுதிக்கு சென்று கழிவாக மாறுகிறது. அந்த கழிவானது வெளிப்பகுதியில் ஆசனக்குழாய் வழியாக வந்து மலவாய் வழியாக வெளியே வரும். இந்த வெளிப்பகுதியில் இருந்து இடுப்பின் அடிப்பகுதியை இடுப்புத்தள தசை என்னும் இந்த கட்டமைப்பு தான் பிரிக்கிறது.

    இந்த இடுப்புத்தள தசை தளர்வாகும் போதுதான் கருப்பை குடலிறக்கம் ஏற்படுகிறது. அதாவது உள்ளே உள்ள உறுப்புகள் அதனுடைய தடுப்பு சுவருக்கு கீழே வெளிவருகிறது. இடுப்புத்தள தசை தளர்வு காரணமாகத்தான் இந்த உறுப்புகள் கீழே இறங்குகிறது.

    வித்தியாசமான அறிகுறிகளுடன் கூடிய குடலிறக்கம்:

    நமது மேல் வயிற்றில் உள்ள பகுதியிலோ அல்லது அடிவயிற்றின் வால்வு பகுதியிலோ தளர்வாகும் போது குடலிறக்கம் வரும். அது வழக்கமான தொப்புளை சுற்றியுள்ள குடலிறக்கமாக இருக்கலாம். அப்படி இருந்தால் தொப்புளுக்கு அருகில் வீக்கம் ஏற்படும். சில நேரங்களில் இன்சிஷனல் குடலிறக்கம் ஏற்படும். இந்த குடலிறக்க மானது ஏற்கனவே சிசேரியனுக்காக அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கீறல் வடுவானது தளர்வடையும் நிலையில், அதன் மூலம் ஏற்படலாம்.

    இதேபோல் தான் இந்த இடுப்புத்தள தசை தளர்வானால் இந்த உறுப்புகள் அடியிறக்கம் அடையும். இது ரொம்பவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் நாம் சிறுநீர் கழிக்க செல்லும் முன்பு அதனை கட்டுப்படுத்துகிறோம். உணவுக்கழிவு செல்வதை கட்டுப்படுத்துகின்ற மெக்கானிசமும் நமது உடலில் இருக்கிறது.

    அதே மாதிரி பெண்களுடைய பெண்ணுறுப்பான சினைப்பை, யோனிப்பகுதி ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான சுருங்கி விரிகின்ற தன்மை எல்லாமே இந்த இடுப்புத்தள தசையின் வலிமை, திறன் ஆகியவை சார்ந்த ஒரு விஷய மாகும். இந்த இறுக்கம் தளர்வா கும் போது, இந்த பகுதியில் உள்ள உறுப்புகள் இறக்கம் அடையும். இதைத்தான் சைலன்ட் குடலிறக்கம் என்று சொல்கிறோம். இதைப்பற்றி யாரும் சொல்லவே மாட்டார்கள். ஏனென்றால் இதன் அறிகுறிகள் ரொம்ப வித்தியாசமாக இருக்கும்.

    சைலன்ட் குடலிறக்கம் ஏற்பட்டால் என்ன அறிகுறிகள் வரலாம் என்று பார்த்தால், சில பெண்கள் இருமும் போதும், தும்மும் போதும் கொஞ்சம் சிறுநீர் கசிகிறது என்பார்கள். இதுமாதிரி சிறுநீர்க்குழாய் தளர்வாகும்போது சிறுநீரை கட்டுப்படுத்துகின்ற தன்மை குறைவாகும்.

    இன்னும் சிலர் டாக்டர் எனக்கு சில நேரம் வாயு வெளியேறுவது கூட அந்த மாதிரியான உறுப்புகள் வழியாக போகிறது என்பார்கள். அதாவது யோனி வழியாக வெளியேறுகிறது என்பதைத்தான் அவர்கள் அப்படி சொல்வார்கள். சில நேரங்களில் உணவுக்கழிவு வெளியேறுவதை கட்டுப்படுத்தும் மெக்கானிசம் கூட இல்லாமல் இருக்கும். இவை அனைத்தையுமே பாதுகாப்பாக வைத்திருப்பது இடுப்புத்தள தசைதான்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    இளம் வயது பெண்களுக்கும் கருப்பை குடலிறக்கம்:

    இந்த இடுப்புத்தள தசை தளர்வாவதால் வயிற்றின் உட்பகுதியில் குடலிறக்கம் ஏற்படலாம். இந்த குடலிறக்கத்தின் போது கர்ப்பப்பை கீழே இறங்கிவிடும், சிறு நீர்க்குழாய் இறங்கிவிடும். மேலும் இதெல்லாம் வயதானவர்களுக்கு வரும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது தவறு. இந்த வகையான கர்ப்பப்பை குடலிறக்கம் இளம் வயதினருக்கும் வருகிறது. 40 வயதுக்கு கீழே உள்ள பெண்ணுக்கு வாரத்தில் ஒருவருக்கு இந்த பிரச்சினை வருவதை நான் கண்கூடாக பார்த்து வருகிறேன். இது ரொம்பவும் ஆச்சரியமான விஷயம்.

    உலக அளவில் 2019-ம் ஆண்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. வளர்ந்த நாடான சுவீடனில் செய்த ஆய்விலேயே கிட்டத்தட்ட 40 வயதுக்கு கீழே உள்ள பெண்களில் 2 முதல் 10 சதவீதம் பேருக்கு கர்ப்பப்பை குடலிறக்கம் ஏற்படுகிறது. பிரசவம் ஆகும்போது தசைகள் தளர்வாவதால் தான், இது மாதிரியான குடலிறக்கம் வரும் என்று நிறைய பெண்கள் நினைப்பதுண்டு. டாக்டர் எனக்கு முதல் பிரசவத்துக்கு பிறகு யோனி ரொம்பவும் தளர்வாகிவிட்டது. சிறுநீரை கட்டுப்படுத்தும் தன்மை குறைந்து விட்டது என்கிற அறிகுறிகளுடன் பிரசவம் ஆன பெண்கள் சிகிச்சைக்கு வருவார்கள்.

    ஆனால் இளம் வயது பெண்களுக்கு கூட இது வரும் என்பதுதான் முக்கியமான விஷயம். என்னிடம் சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக ஒரு பெண் வந்தார். குழந்தையின்மை சிகிச்சை பெறுவதற்காகத்தான் அவர் வந்தார். ஆனால் அவர் சொன்ன முதல் பிரச்சினையே, டாக்டர் எனக்கு சிறுநீர் வருவது கட்டுப்பாட்டில் இல்லை. இருமும் போதும், தும்மும் போதும் சிறுநீர் வெளியேறுகிறது என்றார். அந்த பெண்ணுக்கு 23 வயது தான் ஆகிறது. எனவே இடுப்புத்தள தசையின் தளர்வு எந்த வயதிலும் ஏற்படலாம்.

    இந்த தளர்வு பலவிதமான சிறுநீர் கசிவு தொடர்பான பிரச்சினைகளை உருவாக்கும். சிறுநீர் அவசரமாக வருகிறது என்று நினைப்பதற்குள் அவர்களை அறியாமல் கட்டுப்படுத்த முடியாமல் சில சொட்டுகள் வெளியேறிவிடும். இதெல்லாம் வயதானவர்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது. ஆனால் இளம் வயது பெண்களுக்கும் இந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    அடுத்த கட்டமாக இந்த இடுப்புத்தள தசை தளர்வுகளால் என்ன பிரச்சினைகள் வருகிறது என்று பார்த்தால், சில பெண்களுக்கு பாலியல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவர்களுக்கு என்னென்ன வகையில் பாலியல் பிரச்சினைகள் வருகிறது என்பதை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூர்வ புண்ணிய ஸ்தானத்தை வளப்படுத்த குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் வழிபாடு அவசியம்.
    • ஒருவரின் வாழ்க்கையை பொறாமையால் கெடுப்பது.

    ஒரு ஜாதகத்தின் பிரதானமான பலன்களை எடுத்துரைப்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் பாக்கியஸ்தானமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது குலதெய்வ அனுக்கிரகம், தெய்வ அனுகூலம் ஆகியவற்றை கூறும் இடமாகும். பாக்கிய ஸ்தானம் என்பது பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகளை பற்றி கூறும் ஸ்தானமாகும். ஒரு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்தை பலப்படுத்துவது அமாவாசை மட்டும் பவுர்ணமி வழிபாடாகும்.

    அதாவது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை வளப்படுத்த குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் வழிபாடு அவசியம். பாக்கிய ஸ்தானத்தை வலிமைப்படுத்த முன்னோர்களின் நல்லாசிகள் அவசியம். அறிவியல் வளர்ந்து விட்ட இந்த நவ நாகரிக உலகத்தில் பித்ரு தோஷம் என்ற ஒன்று உண்டா? குலதெய்வ வழிபாடு உண்மையா? என்று பலரும் சிந்திக்க துவங்கியுள்ளார்கள்.

    இன்று பல யூடியூப் வீடியோக்களில் போடப்படும் கமெண்ட்களில் இந்த விமர்சனம் அதிகமாக வருகிறது. இறந்தவர்களை பிழைக்க வைக்க முடியாதவை தவிர உலகில் கண்டுபிடிக்காத விஷயங்களே கிடையாது. பல விந்தைகளையும் வினோதத்தையும் கண்டுபிடித்த மனிதன் ஏன் இறந்தவனை பிழைக்க வைக்க முடியவில்லை. இந்த ஒரு கேள்வியே மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இந்த உலகத்தில் உள்ளது என்பதை நிரூபிக்கிறது. அந்த சக்தியை உணர முடியும் ஆனால் காண முடியாது. நம்பாதவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

    ஆனால் நமது புலன்களால் உணரக்கூடிய அந்த சக்திகளை வழிபாடு செய்தால் மட்டுமே மனித குலத்தின் பாவச்சுமைகள் குறையும்.

    அதே நேரத்தில் ஒரு மனிதன் பூமியில் பிறப்பதற்கு காரணம் தோஷங்களும் சாபங்களுமாகும். தோஷங்களும் சாபங்களும் இல்லாமல் ஒரு மனிதன் பிறக்க முடியாது. மனிதன் மட்டுமல்ல ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள மனிதன் வரை அனைவரின் பிறப்பிற்கும் ஒரு தோஷமே காரணமாக இருக்க முடியும். முன்வினை தோஷத்தை களையவே இப்பிறவி உருவாகியுள்ளது.

    இப்பிறவியில் செய்யும் நல்ல தீய செயல்களுக்கு ஏற்ப கர்மாக்களின் பாதிப்பு குறையும். ஒரு ஜாதகத்தில் உள்ள எத்தகைய தோஷமாக இருந்தாலும் அது எல்லா காலத்திலும் வேலை செய்யாது குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே வேலை செய்யும். அதனால் எந்த காலத்தில் எந்த தோஷம் பாதிக்கும் என்பதை அறிந்து செயல்பட்டால் அந்த பாதிப்புகளில் இருந்து மீளக்கூடிய வழிபாடுகளை கடைபிடிக்க முடியும். ஒரு ஜாதகத்தில் உள்ள எந்த தோஷமாக இருந்தாலும் லக்னம் லக்னாதிபதியுடன் சம்பந்தப்படாத எந்த தோஷமும் ஜாதகரை தாக்காது பாதிக்காது. கிரக தோஷங்களை வெளிப்படுத்தக்கூடிய தசா புத்தி வராத காலங்களிலும் பாதிப்பு வராது.

    ஐ.ஆனந்தி


     

    ஒருவர் கொடும் பாவியாக கண்ணுக்கு எதிரே பல கொடூர செயல்களை செய்பவராக இருப்பார். அணு அளவு கஷ்டம் கூட அவரை தாக்காது. தீய பலன்கள் நடக்காது. ஒருவர் மிக நல்லவராக இருப்பார். தான தர்மங்கள் செய்து புண்ணிய பலன்கள் தேடி கொண்டிருப்பார். ஆனால் அவர் அனுபவிக்காத கஷ்டங்களே இருக்காது. ஒருவர் புண்ணிய காரியங்கள் பல செய்து தீய பலன்களை அனுபவிக்கிறார் என்றால் வெகுவிரைவில் கடவுள் அவருக்கு ஒரு திருப்புமுனையான சந்தர்ப்பங்களையும் நல்ல வளமான பலன்களையும் வாழ்க்கையில் வழங்கப்போகிறார் என்று பொருள்.

    தீமைகள் மற்றும் தவறு செய்பவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவில்லை எனில் வினைகளை அனுபவிக்கக்கூடிய காலம் வரவில்லை என்று தான் பொருள். தவறு செய்த யாரும் தப்பிக்க முடியாது. தண்டனைக்காலம் தள்ளி போகிறது.

    அதேபோல் நிகழ்காலத்தில் ஒருவர் தான் செய்யும் தான தர்மங்களாலும் குறிப்பிட்ட வழிபாட்டு முறைகளாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்ள முடியும். காலச் சக்கரத்தின் பிடியில் சிக்கிச் சுழலும் ஒவ்வொரு மனிதனும், அந்த வாழ்க்கையின் பிடியில் இருந்து வெற்றி பெற வேண்டும் என்றே நினைப்பார்கள். அத்தகைய வழிபாட்டு முறையே ஆடி அமாவாசை வழிபாடாகும்.

    பித்ரு தோஷம் ஏன் உருவாகுகிறது

    ஒரு குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் பித்ருக்கள் ஆவார்கள். நாம் ஒரு குறிப்பிட்ட குடும்ப முன்னோர்களின் மரபணுவால் பிறப்பெடுத்த காரணத்தினால் பித்ருக்களுக்கு கடன்பட்டுள்ளோம். அவர்களுக்குரிய சடங்கு, வழிபாட்டு முறைகள் மூலம் முன்னோர்களைத் திருப்தியடையச் செய்ய வேண்டும். பித்ருக்கள் வழிபாடானது பித்ரு லோகத்தில் முன்னோர்கள் இன்பமாக வாழ்வதற்கு உதவுகிறது.

    வழிபாடு செய்யாத பட்சத்தில் முன்னோர்கள் சாபத்தினால் குடும்ப விருத்தி தடைப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு முறையான திதி தர்ப்பணம் செய்யாதவர்கள், வாழும் காலத்தில் பெற்றோர்களின் சாபத்தை வாங்குவது போன்றவைகள் ஏற்படுகிறது. இதனால் 7 தலைமுறைகள் பாதிக்கப்படும். பித்ருக்கடன்கள் பல்வேறு வழியாக வருவதால் பரிகாரங்களும் பல்வேறு விதமாக இருக்கின்றன. அவரவர் ஜாதகம் பார்த்து உரிய பரிகாரம் பூஜை, யாகம் செய்ய வேண்டும். ஒருவருக்கு பித்ருக்கள் சாபம் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை திதி மற்றும் முன்னோர் வழிபாட்டை மனதால் ஒன்றாமல் கடமைக்காகச் செய்வது, அல்லது முன்னோர் வழிபாடே செய்யாமல் இருப்பது.

    என் பாட்டன் எதுவும் சேர்த்து வைக்க வில்லை என இறந்தவர்களை பழித்துப் பேசுவது...

    வாழும் காலத்தில் வயதான பெற்றோருக்குத் தேவையான உதவிகளைச் செய்யாமல் அவர்களை உதாசீனம் செய்வது...

    ஒருவர் தன் உயிரைத் தானே முடித்துக் கொள்ளும் வகையில் அவரது ஆன்மாவைத் துன்புறுத்துதல் இறந்தவர்களின் உடலை முறையாக அடக்கம் செய்யாத குற்றம்...

    இறந்தவரின் உடலுக்குரிய மரியாதையைச் செய்யத்தவறுவது...

    இறந்தவரின் உடலை வைத்துக் கொண்டு அவரின் தீய குணங்களை விமர்சிப்பது ...

    இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் முன்பு பங்காளிகள் சண்டையிடுவது...

    இறந்த ரத்த பந்த உறவுகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாமல் இருப்பது அல்லது இறுதிச் சடங்கிற்கு உதவாமல் இருப்பது அல்லது உரிய காரியங்களை செய்யத் தவறுவது... ( மொட்டையடித்தல் போன்றவை)

    ஒரு குடும்பத்தில் இறப்பு நிகழ்ந்தால் அந்த இறப்பு நடந்த இடத்தை சுற்றி சுமார் 100 அடி தூரம் உள்ளவர்களுக்கு தீட்டு ஏற்படும். இதை உணராமல் துக்கம் நடந்த வீட்டின் அருகில் உள்ளவர்கள் சமைப்பது, சாப்பிடுவது, வீட்டில் பூஜை செய்வது, இல்லற இன்பத்தில் ஈடுபடுவது போன்றவைகள் பிரேத சாபத்தை அதிகரிக்கும்.

    மேலும் காரணமே இல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை பொறாமையால் கெடுப்பது. நன்றாக வாழந்து கொண்டு இருக்கும் தம்பதிகளைப் பிரிப்பது, ஒரு குடும்பத்தை கெடுப்பது, உழைத்த கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுவது, அடுத்தவர் சொத்தை அபகரிப்பது, திருடுவது கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தவறுவது போன்ற காரணங்களால் பித்ரு தோஷங்கள் உருவாகும்.

    பித்ருக்கள் தோஷம் வெளிப்படும் காலம் ஜனன கால சூரியன், சந்திரன், சனி பகவானை கோட்ச்சார ராகு, கேது சந்திக்கும் காலத்திலும் ஜனன கால ராகு மற்றும் கேதுவை கோட்ச்சார சூரியன், சந்திரன், சனி சம்பந்தம் பெறும் காலங்களில்பித்ரு தோஷம் மிகுதியாக வெளிப்படும். மேலும் ஏழரைச் சனி, அஷ்டம சனி கண்டகச் சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களிலும், கீழ்கண்ட தசா புத்திகளிலும் பாதிப்பு வெளிப்படும்.

    சூரிய தசை ராகு புத்தி,

    ராகு தசை சூரிய புத்தி,

    சனி திசை ராகு புத்தி,

    ராகு தசை சனி புத்தி,

    சனி தசை கேது புத்தி,

    கேது தசை சனி புத்தி,

    கேது தசை ராகு புத்தி,

    சந்திர தசை ராகு புத்தி,

    ராகு தசை சந்திர புத்தி,

    சந்திர தசை கேது புக்தி,

    கேது திசை சந்திர புத்தி,

    பித்ருக்கள் தோஷம் நீக்கும் ஆடி அமாவாசை வழிபாடு

    தமிழ் மாதங்களை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். தை முதல் ஆனி வரையான 6 மாதங்களை உத்ராயணம் எனவும் ஆடி முதல் மார்கழி வரையான 6 மாதங்களை தஷ்ணாயண காலமாகவும், பிரிக்கப்பட்டுள்ளது.

    தஷ்ணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், வழிபாடுகள் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது.

    இவ்வளவு புண்ணிய பலன் தரும் ஆடி அமாவாசை விசுவாவசு ஆண்டு ஆடி மாதம் 8ம் நாள் (24.7.2025) வியாழக்கிழமை வருகிறது.

    அமாவாசையன்று சூரிய உதயத்திற்கு முன்பாக கடற்கரை, மகாநதிகள், ஆறு, குளம், கிணற்றிலோ பித்ருக்களுக்கு சிரார்த்தம், தர்ப்பணம் தர வேண்டும். பித்ருக்களுக்கு பூஜை செய்து அந்தணர்களுக்கு தானம் தரும் பொருட்களில் பூசணிக்காய், வாழைக்காய் போன்ற காய்கறிகள் இருக்க வேண்டும். அதற்கு பிறகு வீட்டில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவித்து முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்த பிறகு சாப்பிட வேண்டும். அன்று ஏழைகளுக்கு அன்னதானம்.

    ஆடைகள் தானம் வழங்கலாம். நீர் நிலைக்கு சென்று பித்ருதர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், பெண்கள் ஆதரவற்ற முதியோருக்கு உணவு தானம் வழங்கி வீட்டில் அல்லது சிவன் கோவிலிலோ ஆத்மார்த்த வழிபாடு செய்தாலே பலன் கிடைக்கும். பித்ரு தோஷம் இல்லாமல் மனித குலம் பிறப்பெடுக்க முடியாது. எனவே மனிதர்களாய் பிறந்த அனைவரும் தனது மரபணுவான முன்னோர்களுக்கு நன்றி கடன் செலுத்தக்கூடிய நாளான ஆடி அமாவாசையில் முன்னோர்களை வழிபட்டு இன்பமாக வாழ வாழ்த்துகிறேன்.

    செல்: 98652 20406

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பக்தர்களும் கோவிலைச் சேர்ந்தவர்களும் எருமைக்குத் தீனி கொடுத்து வந்தனர்.
    • மறுநாள் காலை ஆலயத்துக்கு வந்த பக்தர்கள், எருமையைக் காணாது கவலையுற்றனர்.

    எருமை ஒன்று திருச்செந்தூர் கோவிலை வலம் வந்துகொண்டே இருந்தது. அர்த்த ஜாம வழிபாட்டிற்குப் பிறகு கோவில் வாசலில் படுத்துக்கொண்டது. இப்படி மூன்று நாள் இந்த எருமை தன் முருக பக்தியை வெளிப்படுத்தியது.

    வெளியூரில் இருந்து சொந்தக்காரன் அந்த எருமை மாட்டை தேடி வந்தான். முற்பிறப்பின் ஞான முதிர்ச்சி இது!' என்று பக்தர்கள் பேசிக்கொண்டது அவன் காதில் விழுந்தது. இதனால் அவன் தன் எருமைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வந்த வழியே திரும்பிப் போய்விட்டான்.

    பக்தர்களும் கோவிலைச் சேர்ந்தவர்களும் எருமைக்குத் தீனி கொடுத்து வந்தனர். அது கண்ட தெய்வ நம்பிக்கை இல்லாத ஒருவன் கடும் கோபம் கொண்டான். அவன் எருமைக்குத் தீனி கொடுப்பதும், இதைப் போற்றுவதும் மடத்தனமாக உள்ளது என்று கேலி செய்தான். அதோடு அவன் நிற்கவில்லை.

    தன்னைப் போன்ற சிலரைக் கலந்து ஆலோசித்தான். ஒருநாள், நள்ளிரவுக்குப் பின் இவனும் இவனுடைய நண்பர்களும் ஆலய வாசலில் படுத்திருந்த எருமையை இழுத்துக்கொண்டு போய்ப் படகில் ஏற்றி, அந்தப் படகைச் செலுத்திக்கொண்டே போய் நடுக் கடலில் அந்த எருமையைத் தள்ளி விட்டார்கள்.

    மறுநாள் காலை ஆலயத்துக்கு வந்த பக்தர்கள், எருமையைக் காணாது கவலையுற்றனர். 'அந்த எருமையை பார்த்தீர்களா? என்று பலரையும் விசாரித்தனர். அப்போது கடவுள் மீது நம்பிக்கை இல்லாத அந்த நபர் கேலியும், கிண்டலும் செய்தார். உங்கள் முருகனால் இதை கண்டிக்க முடியாதா என்று கேலி செய்தார்.

    அப்போது அந்த எருமை தன் கண் கட்டு, வாய்க் கட்டுகளுடன் கடலலைகளில் முங்கிக் கொண்டே கரையை நோக்கி வந்துகொண்டிருந்தது. 'வா வா' என்று அன்பர்கள் ஆர்ப்பாரித்தனர். எருமை கரையேறி வந்து கோவில் வாசலை அடைந்தது.

    கட்டுகளை அவிழ்த்தார்கள். தீனி வைத்தார்கள். பழையபடி எருமை ஆலயத்தை வலம் வரத்தொடங்கியது. அன்பர்கள், 'முருகா! முருகா!' என்று கோஷமிட்டனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் இந்த அற்புதத்தால் மனம் மாறினான். மனம் திருந்தி முருக பக்தனாகி விட்டான். அந்த எருமை அடியேனுக்குக் குரு!' என்று சொல்லிக் கொண்டே கோவிலை வலம் வந்தான்.

    ஆதித்த நாடாருக்கு கிடைத்த அருள்

    திருச்செந்தூர் அருகே காயாமொழி என்ற சிறிய கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தை தலைமையிடமாக கொண்டு ஆதித்த நாடார் வம்சத்தினர் குறுநில மன்னராக ஆட்சி செய்து வந்தனர். ஆதித்த நாடார் வம்சத்தினருக்கு குல தெய்வம் திருச்செந்தூர் முருகன் ஆவார். திருச்செந்தூர் முருகன் மீது ஆதித்த நாடார் மிகுந்த பக்தியும், பற்றும் வைத்திருந்தார்.

    திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக ஊர் நடுவில் உள்ள சிவகொழுந்தீசுவரர் கோவில் முன் மண்டபம் ஒன்றை அவர் காயாமொழி கிராம மக்கள் உதவியுடன் நிறுவினார். இன்று அந்த மண்டபத்தில் துணிக்கடைகள் நிறைந்துள்ளன. மண்டபத்தின் நடுவே நீர்மோர்ப்பந்தல் ஒன்றையும் நிறுவி பக்தர்கள் தாகம் தணிக்க செய்தார்.

    1560களில் திருச்செந்தூர் முருகன் ஆலய தேர் பழுதுபட்டது. அந்த தேரை சரி செய்வதற்காக முருகப்பெருமான் ஆதித்த நாடார் கனவில் தோன்றி உத்தரவு பிறப்பித்தார். தேரில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கிக் கொடுக்குமாறு கூறினார். அந்த ஆண்டு ஆதித்த நாடார் வாழ்ந்த காயாமொழியைச் சுற்றிலும் உள்ள அறுவடை செய்த வயல்களில் மீண்டும் துளிர்விட்டு என்றும் இல்லாத அளவுக்கு எள் விளைந்தது. இது திருச்செந்தூர் முருகனின் திருவருளே என்று காயாமொழி மக்கள் வியந்தனர். அந்த எள்ளை விற்று அவர்கள் புதிய தேரினை செய்து கொடுத்தனர். திருச்செந்தூர் முருகனை ஆவணி மற்றும் மாசித்திருவிழாக்களில் பத்தாம் நாள் அந்த பெரிய தேரில் எழுந்தருளச் செய்தனர்.

    இதைக்கண்டு மகிழ்ந்த திருச்செந்தூர் முருகன் ஆதித்த நாடார் கனவில் மீண்டும் தோன்றி "உன்னையும் உன் சந்ததியினரையும் என் வலது கண்போல் பார்த்துக்கொள்வேன். உன் சந்ததியினர் செல்வம் ஒரு போதும் வற்றாது" என்று அருளினார். வலது கண் என்பது சூரியனை குறிக்கும். சூரியனுக்கு ஆதித்தன் என்றும் ஒரு பெயர் உண்டு.

    இன்றும் திருச்செந்தூர் தேர் வடம் பிடிக்கும் உரிமை ஆதித்த நாடார் வழிவந்தோரிடமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சுந்தரிக்கு அருளிய முருகன்!

    திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்பவர்கள் தேரடியை கடந்து மண்டபம் வழியாக தூண்டு கை விநாயகர் கோவில் வழியே நடந்து செல்வதே முறையாகும். தூண்டு கை விநாயகர் ஆலயம் சென்றதும் பக்தர்கள் தேங்காய் வாங்கி தலையை சுற்றி உடைத்து விட்டு செல்வார்கள். அதற்கு முன்பு அந்த சிறிய விநாயகர் ஆலயத்துக்குள் சென்று வழிபட வேண்டும்.

     

    அந்த விநாயகர் ஆலயத்துக்குள் அர்த்த மண்டபத்தில் அற்புத சிற்பம் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த சிற்பத்தில் வேல்தாங்கிய முருகன் மற்றும் நடுவில் கூடையோடு கூடிய ஒரு பெண் இருப்பதை காணலாம். சிற்பத்தின் கீழ் பகுதியில் ஒரு பாம்பு செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் பின்னணியில் ஒரு கதை உள்ளது.

    முன்னொரு காலத்தில் திருச்செந்தூர் கோவிலில் பணிபுரிந்த சிவாச்சாரியார்கள் அந்த ஊருக்கு வடக்கே 5 கி.மீ தொலைவில் உள்ள சண்முகபுரம் என்னும் ஊரில் குடியிருந்தனர். திருச்செந்தூர் கோவிலில் ஏராளமான பணிப்பெண்கள் பணிபுரிந்து வந்தனர்.

    அவர்கள் சண்முகபுரம் சென்று சிவாச்சாரியார்களிடம் முருகன் கோவில் பூசைக்குரிய பொருள்களை வாங்கி வருவது வழக்கம். ஒரு நாள் பணிப்பெண்களில் ஒருவரான சுந்தரி என்ற பெண் சண்முகபுரம் சென்று பூஜைப் பொருள்களை பெற்றுக்கொண்டு திருச்செந்தூரை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தாள்.

    வரும் வழியில் அவளைப் பாம்பு கடித்தது. அவள் அங்கேயே மயங்கி விழுந்து விட்டாள். முருகப்பெருமான் நினைவிலே உயிர் பிரிந்தது.

    இதற்கிடையே திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் பூஜைப் பொருள்கள் வந்து சேராததால் வருந்தினார். தூண்டு கை விநாயகர் கோவில் அருகே சென்று தேடினார். அப்போது அவர் முன் மயில் ஒன்று பறந்து வந்தது. தன்னை பின் தொடர்ந்து வருமாறு வழி காட்டியது. சண்முகபுரம் செல்லும் வழியில் ஓரிடத்தில் மயில் நின்றது.

    அர்ச்சகர் அங்கே பணிப்பெண் சுந்தரி மயங்கி கிடப்பதைக் கண்டார். அவளை பாம்பு கடித்து இருப்பதை உணர்ந்தார். அப்போது திருச்செந்தூர் முருகன் அவரது கனவில் தோன்றி தாமே அவளுக்கு இவ்வாறு மோட்சம் அளித்ததாக கூறினார். அந்த இடத்தில் வழிபடுபவர்களுக்கு முக்தி அருள்வதாகவும் தெரிவித்தார்.

    அந்த இடம் இன்றும் "மயில்கல்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருச்செந்தூர் ஆலயத்துக்கு காவடி கட்டி நடைபயணமாக வரும் பக்தர்கள் இன்றும் அந்த இடத்தில் வழிபாடு நடத்தி விட்டே காவடி எடுத்து செல்வார்கள்.

    மயிலை அனுப்பி அர்ச்சகருக்கு பணிப்பெண் சுந்தரி விழுந்து கிடந்த இடத்தை தூண்டிக் காட்டியதால் தான் அந்த இடத்து விநாயகர் ஆலயத்துக்குள் இந்த சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த தடவை நீங்கள் திருச்செந்தூர் ஆலயத்துக்கு செல்லும் போது தூண்டு கை ஆலயத்து விநாயகரை வழிபட்டுவிட்டு சிவாச்சாரியாரிடம் சுந்தரி சிலை பற்றி கேட்டால் அவர் அதை உங்களுக்கு காண்பிப்பார்.

    இதே போன்று திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுயநலமாய் இருப்பது என்பது எதனை நீங்கள் மறைத்தாலும் எம்.ஆர்.ஐ. போல் தெளிவாகக் காட்டி விடும்.
    • பிறரை நம் லாபத்திற்காக வஞ்சகமாக உபயோகிக்காதீர்கள். மகா மட்டமான குணம் இது.

    மரியாதை: 'பிறருக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். பிறர் நமக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இது அனைவருக்கும் அறிவுறுத்தப்படுவது ஆகும்.

    * மனைவியை அடிமைபோல் நடத்தும் கணவன், உதவியாளர்களை ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதவர் போல் நடத்தும் மக்கள், பிள்ளைகளை குத்தி காட்டி பேசும் பெற்றோர்கள்- இவர்கள் எல்லாம் மரியாதை கொடுப்பதும் இல்லை. மரியாதை பெறுவதும் இல்லை.

    * பிறர் உங்களை மதிக்கவில்லையென்றால் நீங்கள் அமைதியாய் நகர்ந்து விடலாம். இதுவே உங்கள் பண்பினைக் காட்டும். மரியாதையினைக் கூட்டும்.

    * மரியாதை வேண்டும் என அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் சிலருக்கு மட்டுமே கிடைக்கின்றது. காரணம் என்ன?

    * முதலில் ஒவ்வொருவரும் தன்னைத்தானே மதிக்க வேண்டும். மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

    * ஆடை விஷயத்தில் பலர் ஏனோ தானோ என நேர்த்தியின்றி உடுத்துகின்றனர். சிலர் நாகரீகம் என்ற பெயரில் பலருக்கு பிடிக்காத மாதிரி உடுத்துகின்றனர். சுத்தமான, இஸ்திரி செய்யப்பட்ட, கவுரவமான உடை நிறைய மரியாதையினை வாங்கித் தரும்.

    * சோம்பேறித்தனமும், மெத்தனமும் மரியாதை வாங்கித் தராது. சுறுசுறுப்புக்கு நிறைய மரியாதை கிடைக்கும்.

    * பொறுப்பின்றி இருந்தால் ஒருவருக்கு மரியாதை கிடைக்காதது மட்டுமல்ல வேறு மட்டமான பட்டப் பெயர்களும் கிடைக்கும்.

    * சுயநலமாய் இருப்பது என்பது எதனை நீங்கள் மறைத்தாலும் எம்.ஆர்.ஐ. போல் தெளிவாகக் காட்டி விடும்.

    * எல்லாவற்றிற்கும் 'ஆமாம் சாமி' போட்டால் பூச்சி போல் நம்மை நசுக்கி விடுவார்கள்.

    * தன்னைத் தானே மட்டம் தட்டி பேசுவது தற்கொலைக்கு சமம்.

    * நீங்கள் செய்யாத எந்த தவறுக்கும் மன்னிப்பு கேட்காதீர்கள். நீங்கள் பழி தாங்கும் பிறவி அல்ல.

    * கெட்ட வார்த்தைகள், வம்பு இவை வேண்டவே வேண்டாம்.

    * எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களை நார் நாராய் பிய்த்து போட்டுக் கொள்ளாதீர்கள். யாரும் சிறுவார்த்தையோ, நன்றியோ தெரிவிக்கப் போவதில்லை. மாறாக பழி சுமத்துவர்.

    * பிறரை நம் லாபத்திற்காக வஞ்சகமாக உபயோகிக்காதீர்கள். மகா மட்டமான குணம் இது.

    * வாய் ஓயாது பேசாதீர்கள். எதிரில் உள்ளவர் தலைவலியில் ஓடி விடுவார்.

    * நான் தான், நான் வைத்தது தான் சட்டம், எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மூர்க்கத்தனங்கள் புதை குழியில் நம்மை தள்ளி விட்டு விடும்.

    * பொய்யும், ஏமாற்றுதலும் இந்த காலத்தில் வெளிச்சம் போட்டு காட்டி விடும்.

    * எதிலும் வரையறை, எல்லை கோடுகள் வேண்டும். இல்லையெனில் உங்களது வாழ்க்கை கோணல், மாணல் ஆகி விடும்.

    ஆக இவை அனைத்திலும் கவனம் செலுத்தினால் மரியாதை நம்மை தேடி வரும்.

    இத்தோடு கூடவே, கையோடு இதனையும் செய்யலாமே.

    * அம்மாகிட்ட அன்போடும், ஆசையோடும் பேச வேண்டும்.

    * அப்பாகிட்ட மரியாதையோடு பேச வேண்டும்.

    * மனைவியிடம் உண்மையாக பேச வேண்டும்.

    * உடன் பிறந்தவர்களிடம் பாசத்தோடு பேச வேண்டும்.

    * உறவினர்களிடம் பச்சாதாபம் வேண்டும்.

    * நண்பர்களுடன் மகிழ்ச்சியான பேச்சுவார்த்தை வேண்டும்.

    * அதிகாரிகளிடம் அமைதியாக, பண்போடு பேச வேண்டும்.

    * உதவியாளர்களிடம் தன்மையாய் பேச வேண்டும்.

    செய்கின்றோமா? இல்லையெனில் இப்போதே செய்யத் தொடங்குவோம்.

    இன்னும் கொஞ்சம் கூட...

    * சொன்ன நேரம் மாறாமல் இருப்போமே

    * முயற்சியினை தினம் கொஞ்சம் கூட்டலாமே.

    * கனிவாக இருப்போமே.

    * வளர வேண்டும் என்று உறுதி எடுப்போம்.

    * ஆரம்பித்த வேலையினை சரியாக முடிப்போம். படிப்போம், கற்போம்.

    * சக்தியினை இறக்குவோம்.

    * ஆக்கப்பூர்வமாகவே இருப்போம்.

    * நமது தோற்றம், உணவு, உடை இவற்றில் அதிக கவனம் கொடுப்போம்.

    * நம் பலவீனம், பாதுகாப்பு இல்லை என அஞ்சுவது இவற்றினை எந்த அந்தஸ்தும் சரி செய்யாது.

    * நம்மை விரும்புவதனை விட நமக்கு மரியாதை கொடுப்பது நல்லது.

    * நான்கு வயதில் ஏற்பட்ட குழந்தை சண்டையை மனதில் வைத்து 52 வருடங்கள் சென்று ஒருவர் மற்றவர் முகத்தில் கடுமையாய் தாக்கினார் என படித்தேன். இந்த நிலை மாற நாம் ஒவ்வொருவரும் சில ஒழுக்கங்களை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்.

     

    மகிழ்ச்சி

    * நம்முடைய வாழ்க்கையினை நாம் அமைத்துக் கொள்ளும் விதமே உன்னத வாழ்க்கையினை நாம் வாழ காரணம் ஆகின்றது. சுற்றுப்புற சூழ்நிலைகள் உங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுக்கக் கூடாது. சுற்றுப்புற சூழ்நிலை உங்கள் கட்டுப்பாட்டில் வரவேண்டும். உங்கள் இலக்குகளை அடைய அவை உதவ வேண்டும்.

    * மகிழ்ச்சி, அமைதி, சந்தோஷம் இவை அனைத்துமே வாழ்வின் வெற்றியின் முடிவு அல்ல. இது வாழ்வின் பயணம். தொடர் பயணம். அன்றாடம் வளர்க்க வேண்டிய ஒன்று.

    * பத்திரமாய், பாதுகாப்பாக வாழ்வது சரிதான். இருப்பினும் வாழ்வில் சில துணிவுகள் வேண்டும். இல்லையெனில் வாழ்வு சப்பென இருக்கும்.

    * தன்னம்பிக்கையே வாழ்வின் சாவி. தன்னம்பிக்கை இருந்தால் உங்கள் முன்னேற்றத்தினை யாரும் தடுக்கவே முடியாது.

    * இந்த உலகியல் வாழ்க்கை முடிவுக்கு வரும்போது ஒருவரின் வெற்றிகளும், சாதனைகளும் கூட மறந்து விடும். ஆனால் நீங்கள் காட்டிய அன்பு பரவி நிற்கும்.

    * உங்கள் வாழ்வின் எழுத்தாளர் நீங்கள் தானே. சோகமாக எழுத வேண்டாமே.

    * நீங்கள் எதனையும் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது கண்ணாடி போன்றது. பிரதிபலிக்கும். ஆக நாம் ஏன் நம் வாழ்வகையினை மகிழ்ச்சியாக ஆக்கிக் கொள்ளக் கூடாது?

    * வாழ்வில் எந்த நேரம் வேண்டுமானாலும் யார் வேண்டுமென்றாலும் நம்மை பிரிந்து செல்லலாம். எனவே யார் மீதும் அதிகம் சாய வேண்டாம்.

    * ரொம்ப கவலைப்படாதீங்க. கவலைப்படுவதால் ஒன்ணும் ஆகப் போவது இல்லை.

    * எது உன்னை மன வலிமை, உடல் வலிமை இழக்கச் செய்கின்றதோ? அது உங்களுக்கு ஒத்துக் கொள்ளாத ஒன்றே.

    * படியுங்கள், படியுங்கள், அன்றாடம் ஒரு நல்ல புத்தகத்தினை படியுங்கள்.

    * கனிவுடன் இருப்போமே.

    * பிரச்சினையில் மூழ்காமல் தீர்வுகளை கண்டுபிடிப்போமே.

    * நன்றி உணர்வோடு இருப்போமே. இப்படியெல்லாம் இருந்தால் மகிழ்ச்சிக்கு என்ன குறைவு இருக்கும்!

     

    தெரிந்து கொள்வோம்...

    ஒவ்வொரு உணவிலும் வானவில் 7 நிறத்தில் கொண்ட உணவுகள் இருந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை என்று கூறுகின்றோம். 7 வண்ணம் என்பது இயலவில்லை என்றாலும் சிகப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு இந்த நான்கு நிறங்களையாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள்.

    சிகப்பு கலர் பழங்கள் இருதயத்தினை உறுதியாய் வைக்கும். இதில் உள்ள லைகோபேன் இந்த சிகப்பு நிறத்தினைக் கொடுக்கின்றது. இது உடலின் பல நோய்களில் இருந்து காக்கின்றது.

    ஆரஞ்சு நிற பழங்களும் காய்கறிகளும் அடர்ந்த பீட்டா கரோட்டீன் என்ற பொருள் கொண்டது மற்றும் வைட்டமின் சி சத்தும் உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் குறிப்பாக கண்களையும் காக்கின்றது.

    மஞ்சள் நிற உணவு புண்களை ஆற்றும். உடலை பழுது பார்க்கும்.பற்களை பாதுகாக்கும்.

    பச்சை நிற உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும்.

    நீல ஊதா நிற உணவுகள் மூளை ஆரோக்கியத்திற்கு உகந்தது. இப்படி எல்லா நிறங்களுக்கும் கூடுதலாக பயன்கள் எழுதலாம். ஆகவே உணவு 'வானவில்லாக' இருக்கட்டும்.

    (கொஞ்சம் நேரம் ஒதுக்கி மனித சமுதாய முன்னேற்றத்தினை பார்ப்போம். கல்லை தேய்த்து நெருப்பு உருவாக்கி உணவு உண்ட காலத்தினையும் இன்று கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கும் காலம் வரை மகா அசுர வளர்ச்சியினை நினைத்து பார்க்கின்றோமோ. இன்று உங்களை முக்கால் நிர்வாண ஆடையுடன் 2 கல்லை தேய்த்து நெருப்பினை உருவாக்கச் சொன்னால் தாங்குவீர்களா?

    எல்லாமே அசுர முன்னேற்றம்தான்.

     

    கமலி ஸ்ரீபால்

    அசுர வளர்ச்சி என்றால் என்ன?

    ஒரு குழந்தை பிறந்தவுடன் 15 முதல் 20 வயது வரை போல் வளர்ந்து நொடியில் நின்றால் என்னவோ அதுதான் அசுர வளர்ச்சி.

    இதையெல்லாம் ஒவ்வொரு மனிதனும், படித்து தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

    இன்று மனிதன் கூர்மையான அறிவும், இருந்த இடத்தில் இருந்த உலகையே அச்சுறுத்தி கட்டுப்படுத்தும் ஆயுதங்களும் உருவாக்கி உள்ளான்.

    இதனை நாம் சர்வ சாதாரண நிகழ்வு போல் பார்க்கின்றோம். ஊர் வம்பு, புரளி ஈர்க்கும் அளவு இந்த முன்னேற்றங்கள் (அவை ஆக்கப் பூர்வமோ, அழிவு பூர்வமோ) நம் கவனத்தில் நிற்பதில்லை.

    ஆகவேத்தான் நம்மை நாமே, நாம் மட்டுமே பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * சிலர் ஏனோ நம்மை கோபப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். தப்பி தவறி கூட நம் நிதானத்தினை நாம் இழந்து விடக்கூடாது. இல்லையெனில் அவன் எப்போது அழிவான், அவனுக்கு எப்போது கஷ்டம் வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். கவனமாய் இருப்போம்.

    * பிறரின் ஆதரவு இல்லாமல் நம்மை நாமே உருவாக்கிக் கொண்டு செயல்பட முடிந்தால் எத்தனை பெரிய சுதந்திரம். ஆனந்தம் தெரியுமா?

    * மற்றவர் இப்படி நினைப்பாரோ, அப்படி நினைப்பாரோ என்ற கவலையே இருக்காது.

    * தனித்தன்மையே ஒரு சாதனை தான்.

    * நிலையான குறிக்கோள்களை நிர்ணயிக்க முடியும். அடைய முடியும்.

    * சமுதாயத்தில் கொள்கை பிடிப்புள்ள மனிதனாகத் தெரிவீர்கள்.

    * நம் மனதில் உணர்ந்த உண்மைகளை எதிர்த்து போராட மாட்டோம்.

    * நம்முடைய காந்த சக்தி பெருகும்.

    * தனி ஒளியாய் பிரகாசிப்பீர்கள்.

    * உடல் ஆரோக்கியமே வளமான சொத்து, உண்மையான சொத்து என்று தெரியும்.

    * நம்மை முன்னேற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் இருக்கும். பிறரிடம் குறை கண்டுபிடிக்க நேரமே இருக்காது.

    * வாழ்க்கையில் முன்னேற 'லிப்ட்' வேண்டும் என்ற சோம்பேறித்தனம் இருக்காது.

    பிறப்பும், இறப்பும் தனிமை தான்

    * ஆழ்மன, உள்மன மகிழ்ச்சிதான் வெற்றி.

    'இதுதான் அசுர வளர்ச்சி'

    ×