என் மலர்

    வழிபாடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி இஸ்கான் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
    • ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு பால், நெய், தேன் மற்றும் பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    திருவான்மியூர்:

    கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள பல கோவில்களில் இன்று மாலை கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து இன்று காலையில் இருந்தே இஸ்கான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

    கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி இஸ்கான் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆன்மிகம், இசை மற்றும் பக்தி நிகழ்ச்சிகள் களை கட்டியது. முன்னதாக நேற்று மாலையில் சந்தியா ஆரத்தி நடந்தது. இரவு 10.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு பால், நெய், தேன் மற்றும் பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு, மகா ஆரத்தி நடந்தது.

     

    பின்னர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மங்கள ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாகவதம் வகுப்பு, குரு பூஜை மற்றும் அழகாக அலங்கரிக்கப்பட்ட தெய்வங்களின் தரிசனம் நடைபெற்றது. இன்று நாள் முழுவதும் கீர்த்தனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கிருஷ்ணரின் அவதாரத்தைக் கொண்டாடும் இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.
    • வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.

    விஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் தான் கிருஷ்ண அவதாரம். அவரது 10 அவதாரங்களைப் பின்பற்றி மனிதன் உணர வேண்டிய உலக உண்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

    1. மச்ச அவதாரம் :

    தாயின் வயிற்றில் இருந்து ரத்தத்தோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். அதாவது மனிதர்களின் பிறப்பு நிகழும் முறை.

    2. கூர்ம அவதாரம்:

    மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.

    3. வராக அவதாரம்: ஆறாம் மாதம் குழந்தையாக தவழ்ந்து, முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.

    4. நரசிம்ம அவதாரம்: எட்டாம் மாதம் எழுந்து உட்கார்ந்து, கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மர்.

    5. வாமன அவதாரம்: ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.

    6. பரசுராம அவதாரம்: வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.

    7. ராம அவதாரம்: திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் இருந்து குடும்பக் கடமைகளை ஆற்றினார்.

    8. பலராம அவதாரம்: இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.

    9. கிருஷ்ண அவதாரம்: முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.

    10. கல்கி அவதாரம்: இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான இனிப்பு வகைகள், பலகாரங்கள் ஆகியவற்றை செய்து நைவேத்தியமாக படைக்க வேண்டும்.
    • அஷ்டமி நாளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்தியாவில் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தையே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி மகிழ்கிறோம். கோகு

    லாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி போன்ற பல பெயர்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

    கிருஷ்ணர் அவதரித்தது, துவாபர யுகத்தில் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் என சொல்லப்படுகிறது. இவர் தேவகிக்கும், வசுதேவருக்கும் எட்டாவது குழந்தையாக அவதரித்தார். இதனால் ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதத்திலேயே கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. அதாவது, ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் தொடங்கும் நாளான ஆகஸ்டு 16-ந்தேதி (சனிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

    ஆகஸ்டு 16-ந்தேதி அதிகாலை 1.41 மணி தொடங்கி, அன்று இரவு 11.13 மணி வரை அஷ்டமி திதி உள்ளது. கார்த்திகை நட்சத்திரத்துடன் இணைந்து இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா அமைந்துள்ளது.

    ஆகஸ்டு 14-ந் தேதி வியாழக்கிழமையே வீட்டை சுத்தம் செய்து, ஆகஸ்டு 15-ந் தேதி வெள்ளிக்கிழமையே வீட்டை அலங்கரித்து, பூஜைக்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான இனிப்பு வகைகள், பலகாரங்கள் ஆகியவற்றை செய்து நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

    கிருஷ்ணரின் சிலை அல்லது படத்தை அழகிய, வாசனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பிறகு குழந்தை கிருஷ்ணரை வீட்டிற்குள் அழைப்பதற்காக பச்சரிசி மாவினால் கிருஷ்ணரின் பாதங்களை, வீட்டு வாசல் தொடங்கி பூஜை அறையில் கண்ணன் சிலை அல்லது படம் வைத்திருக்கும் இடம் வரை வரைய வேண்டும். கிருஷ்ணருக்கு உரிய மந்திரங்கள், சுலோகங்கள் ஆகியவற்றை சொல்லி வழிபட வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குச்சனூர் ஸ்ரீசனிபகவான் திருமஞ்சன அலங்கார சேவை.
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-31 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அஷ்டமி இரவு 11.13 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம் : பரணி காலை 8.26 மணி வரை பிறகு கார்த்திகை.

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோவிலில் திருமஞ்சன சேவை

    இன்று கோகுலாஷ்டமி. கார்த்திகை விரதம். குச்சனூர் ஸ்ரீசனிபகவான் திருமஞ்சன அலங்கார சேவை. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் தெப்போற்சவம். பெருவயல் ஸ்ரீமுருகப் பெருமான் திருவீதி உலா. வேலூர் மாவட்டம் ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் தங்க ரதக்காட்சி. திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜ் பெருமாள் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-செலவு

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-சிறப்பு

    கடகம்-மாற்றம்

    சிம்மம்-கடமை

    கன்னி-பரிசு

    துலாம்- கண்ணியம்

    விருச்சிகம்-பக்தி

    தனுசு- பணிவு

    மகரம்-ஓய்வு

    கும்பம்-உழைப்பு

    மீனம்-திடம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    நிதி நிலை உயர்ந்து நிம்மதி கூடும் நாள். தக்க சமயத்தில் நீங்கள் செய்த உதவியை நண்பர்கள் பாராட்டுவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    ரிஷபம்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். நீண்ட தூரப் பயணங்களால் பலன் உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.

    மிதுனம்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும்.

    கடகம்

    தள்ளிப்போன காரியங்கள் தானாக முடிவடையும் நாள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அலைபேசி வழித்தகவல் நெஞ்சம் மகிழ வைக்கும். வருமானம் திருப்தி தரும்.

    சிம்மம்

    முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். பிரியமான சிலரைத் தேடிச் சென்று சந்திப்பீர்கள்.

    கன்னி

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்ததை நினைத்தபடி செய்ய இயலாது. சேமிப்பில் சிறிது கரையலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    துலாம்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதிர்பார்ப்புகள் நடைபெறாமல் போகலாம். திடீர் மாற்றங்கள் பயணத்தில் ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். மருத்துவ செலவு உண்டு.

    விருச்சிகம்

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உண்டு. வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் உண்டு. பொருளாதார நிலை உயரும்.

    தனுசு

    புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். தொழிலில் கூடுதல் லாபம் வந்து சேரலாம்.

    மகரம்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நட்பால் நன்மை உண்டு. தொழில் வளர்ச்சிக்காக புதிய பங்குதாரர்களைச் சேர்க்க முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு.

    கும்பம்

    வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். வருமானம் திருப்தி தரும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம்.

    மீனம்

    உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். தடைகள் விலக தைரியமாக முடிவெடுப்பீர்கள். அயல்நாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீகிருஷ்ணபாதம் கூறிக்கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்கலாம்.
    • கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    எனவே கிருஷ்ணஜெயந்தி அன்று வீட்டை சுத்தப்படுத்தி அலங்கரித்து குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் வீட்டு வாசலில இருந்து பூஜை அறை வரையில் சின்னக்கண்ணன் நடந்து வருவது போல் அவனது பாதச்சுவடுகளை ஸ்ரீகிருஷ்ணபாதம் கூறிக்கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்கலாம்.

    இதனால் கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரக்கோலம் (ரங்கோலி), மலர் அலங்காரம், பூக்கோலமிடுவர். அதை நமது இல்லங்களிலும் செய்து கிருஷ்ணரை வரவேற்க வேண்டும். இதனால் கண்ணனே தன் திருப்பாதங்களை பதித்து நடந்து வந்து பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக் கொள்கிறார் என்பதாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று இரவு அன்ன தானம் வழங்கப்படுகிறது.
    • பெருமாள் கோவிலில் இருந்து பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சீர் கொண்டு வரப்படுவது சிறப்பு.

    ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது போல் பெரிய மாரியம்மன் கோவிலுக்கும் பல சிறப்புகள் உள்ளன. இந்த கோவில் 300 வருடம் பழமையானது.

    கோவிலின் மூலவராக பெரிய மாரியம்மன் உள்ளார். கோவிலில் அரசமர விநாயகர், முருகர், துர்க்கை அம்மன், நவக்கிரகம் போன்ற சாமி சிலைகள் உள்ளன. கோவிலில் பெரிய பாம்பு புற்று ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் ஆடி மாதம் முழுவதும் வரும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று இரவு அன்ன தானம் வழங்கப்படுகிறது.

    ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் கோவிலில் இருந்து பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சீர் கொண்டு வரப்படுவது சிறப்பு. ஆடி 18 அன்று கன்னிமாருக்கு காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோவிலின் முக்கிய வழிபாடாக புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியம் வேண்டி அம்மனுக்கு எண்ணை வைத்து வழிபட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பல வருடங்களாக இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் ஆடி மாதம் கோவிலில் பாம்பு புற்றில் நாக பஞ்சமி விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதம் முழுவதும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆடி மாதம் பெண்கள் அதிக அளவில் வந்து அம்மனை வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்ற பரிகாரங்கள் செய்வார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துர்க்கை பூஜை வழிபாட்டு குழுவினர் திருவிளக்கு பூஜைகளும் நடத்தி வருகின்றார்கள்.
    • பத்ரகாளி அம்மன் கோவிலில் உள் வளாகத்தில் ஆஞ்சநேயர் இருப்பது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களது வேண்டுதல்களும் விரைவில் நிறைவேறியும் வருகின்றது.

    இதில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆடி வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் துர்க்கை பூஜை வழிபாட்டு குழுவினர் திருவிளக்கு பூஜைகளும் நடத்தி வருகின்றார்கள். அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ராகு, கேது, சனி தோஷம் விலகும்.

    சிறப்பு தலமாகவும் விளங்குகிறது. பத்ரகாளி அம்மன் கோவிலில் உள் வளாகத்தில் ஆஞ்சநேயர் இருப்பது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்லும் போது சனியால் ஏற்படும் இன்னல்கள் தணிந்து, நன்மைகள் நடைபெறுவது இந்த கோவில் சிறப்பு அம்சமாகும்.

    மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், மாங்கல்ய பேறு, நோய் தீர்க்கும் அம்மனாகவும் அந்தியூர் பத்ரகாளியம்மன் விளங்கி வருகிறார். இதனால் பண்டிகை காலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது தொன்று தொட்டு வழக்கமாக நடந்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இருவரையும் எப்போதும் ஒதுக்குகிறார்கள்" என்றும் மிகுந்த வேதனையுடன் திருமாலிடம் முறையிட்டன.
    • மனக்கவலையைப் போக்க நினைத்த எம்பெருமான் அவைகளிடம் ஒரு வாக்குறுதியை அளித்தார்.

    ஒரு முறை திதிகளான அஷ்டமியும், நவமியும் திருமாலை தரிசிக்க வைகுண்டம் சென்றன. பெருமாளின் தரிசனத்தைப் பெற்ற அவை தங்களின் மனவருத்தத்தை அவரிடம் கூறத் தொடங்கின. "மக்கள் எந்த ஒரு விசேஷத்தையும் அஷ்டமி, நவமி ஆகிய இரு நாள்களில் செய்வதில்லை என்றும், எங்கள் இருவரையும் எப்போதும் ஒதுக்குகிறார்கள்" என்றும் மிகுந்த வேதனையுடன் திருமாலிடம் முறையிட்டன.

    அவைகளின் மனக்கவலையைப் போக்க நினைத்த எம்பெருமான் அவைகளிடம் ஒரு வாக்குறுதியை அளித்தார். அஷ்டமி, நவமியை மக்கள் கொண்டாடும் வகையில் அந்த இரு நாள்களில், தான் அவதாரம் எடுப்பதாகக் கூறினார். தனது வாக்குறுதியை நிறைவேற்றவே அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும், நவமி திதியில் ராமனாகவும் அவதரித்தார். அந்த இரு தினங்களையே நாம் கோகுலாஷ்டமியாகவும், ராமநவமியாகவும் கொண்டாடி வருகிறோம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாக்கு கொடுத்தபடி சிறையில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கம்சனிடம் ஒப்படைத்தார், வசு தேவர்.
    • இறுதியில் தன் தாய் மாமனான கம்சனை கொன்று சிறையில் இருந்த தன் தாய் - தந்தையரை மீட்டார்.

    காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் முக்கியமான பத்து அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணர் அவதரித்த நாளையே 'கிருஷ்ண ஜெயந்தி' என்று கொண்டாடுகிறோம். இந்த பண்டிகை இந்தியா முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

    கம்சன் என்ற மன்னன் மதுரா நகரை ஆண்டு வந்தான். இவன் மக்களை கொடுமைப்படுத்தி, பல பாவங்களை செய்தான். கம்சன், தன் சகோதரியான தேவகியை வசுதேவருக்கு திருமணம் செய்து கொடுத்தான். ஒரு நாள் கம்சன், இருவரையும் தனது தேரில் அழைத்து செல்லும் போது, ஒரு அசரீரி கேட்டது. ''கம்சா... உன் சகோதரியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும்'' என்று ஒலித்தது.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கம்சன், தன் சகோதரி என்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அப்போது வசுதேவர், ''எங்களுக்கு பிறக்கும் குழந்தையால் தானே உங்கள் உயிருக்கு ஆபத்து. எங்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தையையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்'' என்று உறுதி அளித்தார். இதையடுத்து இருவரையும் சிறையில் அடைத்தான் கம்சன்.

    வாக்கு கொடுத்தபடி சிறையில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கம்சனிடம் ஒப்படைத்தார், வசு தேவர். இவ்வாறு பிறந்த ஏழு குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டன. இந்த நிலையில் 8-வது முறையாக தேவகி கர்ப்பமானாள். இந்த குழந்தையையும் கம்சன் கொன்று விடுவான் என்று பயந்த வசுதேவர், விஷ்ணுவிடம் குழந்தையை காக்கும்படி மன்றாடி வேண்டினார். அன்று இரவு வசுதேவனின் கனவில் தோன்றிய விஷ்ணு, ''உனக்கு பிறக்க போகும் ஆண் குழந்தையை, அதே நாளில் பிறக்கும் எனது தீவிர பக்தனான நந்தகோபனின் குழந்தைக்கு பதிலாக மாற்றி வைத்து, அந்த பெண் குழந்தையை எடுத்து வா'' என்று கூறினார்.

    சிறையில் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் அஷ்டமி திதியில் நள்ளிரவில் எட்டாவது குழந்தையாக அவதரித்தார் கிருஷ்ணர். கிருஷ்ணரின் மகிமையால் சிறையின் கதவுகள் திறந்தன. காவலாளிகள் மயக்கம் அடைந்தனர். வசுதேவர் குழந்தையை எடுத்து கொண்டு வெளியேறினார். மழை பெய்து யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது வசுதேவருக்கு ஆற்றை கடக்க யமுனை பாதை அமைத்து கொடுத்தது. வசுதேவர் குழந்தையை தன் தலை மேல் வைத்து ஆற்றை கடந்தார். அப்போது ஐந்து தலை நாகம் குழந்தைக்கு குடையாக வந்தது.

    வசுதேவர் கோகுலத்தை அடைந்ததும் நந்தகோபனின் வீட்டுக் கதவுகள் திறந்து இருந்தன. மெதுவாக தனது குழந்தையை அங்கு வைத்துவிட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து கொண்டு சிறைச்சாலையை வந்தடைந்தார், வசுதேவர். சிறைச்சாலையில் நுழைந்ததும் சிறை காவலாளிகள் மயக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டனர். பின்பு வசுதேவருக்கு குழந்தை பிறந்திருப்பதை கம்சனிடம் தெரிவித்தனர்.

    உடனே விரைந்து வந்த கம்சன், ''என்னை கொல்லப் போவது ஒரு பெண் குழந்தையா'' என்று சிரித்தபடி, அந்த பெண் குழந்தையை கையில் எடுத்து கல்லில் தூக்கி எறிந்தான். ஆனால் அந்த குழந்தை, ''உன்னை கொல்ல பிறந்த குழந்தை கோகுலத்தில் வளர்ந்து வருகிறது. காலம் வரும்போது உன்னை கொல்வான்'' என்று கூறி மாயமாக மறைந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கம்சன், தனது பணியாட்களை அனுப்பி கோகுலத்தில் கிருஷ்ணர் இருப்பதை உறுதி செய்தான். பிறகு அந்த குழந்தையை கொல்ல பூதகி என்ற அரக்கியை அனுப்பினான். அந்த அரக்கி தன் மார்பில் விஷத்தை தடவி, கிருஷ்ணருக்கு பால் கொடுப்பது போல் கொல்ல நினைத்தாள். ஆனால் கிருஷ்ணர் அந்த அரக்கியின் மூச்சுக் காற்றை நிறுத்தி கொன்றார்.

    இதை அறிந்த கம்சன் கோபம் கொண்டு, ஷகாட்சுரா என்ற அரக்கனை அனுப்பினான். அந்த அரக்கன் வண்டியின் சக்கரமாக மாறி, கிருஷ்ணரை சக்கரத்தால் நசுக்கி கொல்ல நினைத்தான். ஆனால் சக்கரத்தை எட்டி உதைத்து அவனை கொன்றார், கிருஷ்ணர். இவ்வாறு பல அரக்கர்களை அனுப்பி கிருஷ்ணரை கொல்ல நினைத்த கம்சனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் அனுப்பிய அனைத்து அரக்கர்களையும் குழந்தை பருவத்திலேயே கொன்றார் கிருஷ்ணர். கோகுலத்தில் கிருஷ்ணர் கோபியர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டார். வெண்ணெய் திருடனாக பல குறும்புத்தனங்கள் செய்து கோகுலத்தின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். இறுதியில் தன் தாய் மாமனான கம்சனை கொன்று சிறையில் இருந்த தன் தாய் - தந்தையரை மீட்டார்.

    கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

    கிருஷ்ண ஜெயந்தி அன்று, வாசலில் இருந்து வீட்டுக்குள் வரை குழந்தையின் பாத சுவடுகளை வரைவார்கள். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அன்றைய தினம் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடங்கள் அணிவித்து மகிழ்வார்கள்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டை சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலம் இடுவார்கள். வீட்டில் மாவிலையால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்து, பல வகையான பலகாரங்கள் தயார் செய்து கிருஷ்ணரை வழிபாடு செய்வார்கள். அனைத்து வைணவ கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதில் கலந்துகொண்டு வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணர் வரலாற்றையும், பெருமையையும் காதால் கேட்டாலே போதும் பல புண்ணியங்கள் வந்துசேரும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிருஷ்ணரை வழிபடுவதால், மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும்.
    • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    கிருஷ்ணரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபடுவதால், வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, கல்வி, ஞானம் மற்றும் செல்வ வளம் பெருகும் என்று நம்பப்படுகிறது. மேலும், கர்ம வினைகள் நீங்கி, துன்பங்கள் விலகி, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

    மகிழ்ச்சியும், அமைதியும்:

    கிருஷ்ணரை வழிபடுவதால், மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். தீய எண்ணங்கள் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் பெருகும்.

    கல்வி மற்றும் ஞானம்:

    கிருஷ்ணர், அறிவின் வடிவமாக கருதப்படுகிறார். அவரை வழிபடுவதன் மூலம், கல்வி மற்றும் ஞானம் மேம்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    செல்வ வளம்:

    கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம், செல்வ வளம் பெருகும். வீட்டில் உள்ளவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

    கர்ம வினைகள் நீங்கும்:

    கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம், முந்தைய கர்ம வினைகளால் ஏற்பட்ட துன்பங்கள் நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

    குடும்பத்தில் சுபிட்சம்:

    கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம், குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

    துன்பங்கள் நீங்கும்:

    கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம், தீராத நோய்கள் நீங்கும் மற்றும் துன்பங்கள் விலகும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபடுவதால், மேற்கூறிய பலன்களைப் பெறலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர்.
    • தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும்.

    கோவிலில் பிரகாரத்தை சுற்றி வருவதால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். தெய்வ சிந்தனையுடனும் வலம் வர வேண்டும். ஓடுவது, வேகமாக நடப்பது, சப்தம் எழுப்புவது, தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும்.

    விநாயகரை ஒரு முறையும், சூரிய பகவானை இரண்டு முறையும், சிவபெருமானை மூன்று முறையும், விஷ்ணுவை நான்கு முறையும், லட்சுமி தாயார் அல்லது அம்பிகையை ஐந்து முறையும், அரசமரத்தை ஏழு முறையும் சுற்றி வந்து வணங்க வேண்டும்.

    தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர். காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது மட்டும் இதைச் செய்ய வேண்டும்.

    ×