என் மலர்

    பொது மருத்துவம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடலுக்குக் குளிர்ச்சி தரும் தானியங்களான சோளம், பார்லி போன்றவற்றை கோடை காலத்தில் சேர்க்கலாம்.
    • கோடை காலத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதுடன், நீரிழப்பைத் தடுக்கவும் தர்பூசணி உதவுகிறது.

    மார்ச் மாத மத்தியிலேயே கோடையின் தீவிரம் தெரியத் தொடங்கிவிட்டது. இனி நாட்கள் செல்லச் செல்ல, கோடையின் கடுமை அதிகரிக்கும். இந்நிலையில், கோடை காலத்தை உடல் ஆரோக்கியப் பிரச்சனைகள் இன்றி நலமாய் கழிக்க உதவும் சில குறிப்புகளை பார்க்கலாம்...

    * கோடையில் சூரிய ஒளியின் தாக்கத்தால் நம் சருமத்தில் புறஊதாக் கதிர்களால் பாதிப்பு ஏற்படலாம். ஆக்சிடேசன் எனும் வேதி மாற்றம் உங்களை களைப் படையச் செய்யும். அதிலிருந்து தப்பிக்க நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * உடலுக்குக் குளிர்ச்சி தரும் தானியங்களான சோளம், பார்லி போன்றவற்றை கோடை காலத்தில் சேர்க்கலாம். மேலும், சோம்பு, சீரகம், பழங்களில் திராட்சை, பேரீச்சை மற்றும் நீர்ச்சத்துள்ள பழங்கள் நல்லது.

    * கோடை காலத்தில் வரும் முக்கியமான பிரச்சனை, 'புட் பாய்சனிங்' எனப்படும் உணவு நஞ்சாதல். அதைத் தவிர்க்க, சீரகத்தை வறுத்துப் பொடி செய்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு ஸ்பூன் பொடியை மோரில் கலந்து குடித்து வர, புட் பாய்சன் அபாயம் நீங்கும். வயிற்றுப்போக்கு போன்றவற்றையும் சரிசெய்யும்.

    * கோடை காலத்தில் இரவில் பனங்கற்கண்டு கலந்து பாலை அருந்தி வர, உடல் சூடு தணியும். பகலில் கொத்தமல்லித் தழையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும். ரோஜா இதழ்களை தேனில் ஊறவைத்துச் சாப்பிடலாம்.

    * உடலில் சூட்டை அதிகரிக்கும் வேர்க்காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீட்ரூட் மற்றும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, காளான் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

    * கோடை காலத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதுடன், நீரிழப்பைத் தடுக்கவும் தர்பூசணி உதவுகிறது. தர்பூசணி உங்களை நீரேற்றமாகவும், குளிர்ச்சியாகவும் வைப்பதுடன், சூரிய வெப்பத்தால் சருமம் சேதமடையாமல் பாதுகாக்கிறது. முலாம் பழம், கோடைகால வெப்பத்தால் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களைத் தவிர்த்து உடலை நீரேற்றமாக வைக்க உதவும்.

    * கோடை நாட்களில் அதிக தாகம் ஏற்படும். அதற்கு, செம்பருத்தி பூவின் 5 இதழ்களை ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து குடிக்கலாம். நெல்லி வற்றலை பாக்கு போல வாயிலிட்டு மென்று வந்தாலும் தாகம் தணியும். உணவில் தேனை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.

    * வெயில் நேரத்தில் அவ்வப்போது முகம் கழுவிக் கொள்ளுங்கள். உடனே துணியால் துடைக்காமல் அப்படியே விட்டு விடுங்கள். சிறிது நேரத்தில் தானாகவே உலர்ந்து விடும். நல்ல புத்துணர்ச்சியும் கொடுக்கும்.

    * அதிக வெப்பம் காரணமாக சில நேரங்களில் கண்கள் எரியும். அப்போது ஒரு கைக்குட்டை அல்லது தூய துணியை நீரில் நனைத்து அவ்வப்போது கண்களில் ஒற்றிக்கொள்ளுங்கள்.

    * கோடை காலத்தில் கண்களின் நலன் காக்க தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வரலாம். அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும். வெளியே செல்லும்போது சன்ஸ் கிரீன் போட்டுக்கொள்வதும் நல்லது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மிகுந்த மன அழுத்தம் கொண்டிருந்தாலும் இரவில் திடீரென விழிப்பு ஏற்படும்.
    • அமைதியான, வசதியான, குளிர்ச்சியான அறையில் தூங்கவும்.

    உடலின் சமநிலையை பேணவும், உடல்-மன நிம்மதியை அளிக்கவும் தூக்கம் மிகவும் அவசியமானது. சோர்வில் இருந்து மீட்டெடுத்து, புதிய ஆற்றலை உடலுக்கும், உள்ளத்துக்கும் வழங்கும் மகத்தான சக்தி தூக்கத்திற்கு இருக்கிறது. ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையால் பலர் தூக்கக் குறைபாடு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். எந்தவித வெளிப்புற சத்தமோ அல்லது அலாரமோ இல்லாமல் இரவில் திடீரெனவோ, அடிக்கடியோ விழித்துக்கொள்வதும், மீண்டும் தூங்க முடியாமல் அவதிப்படுவதும் தூக்கம் பாதிக்கப்பட்டுள்ளதற்கான அடையாளமாக கருதப்படுகிறது.

    ஆய்வு என்ன சொல்கிறது?

    அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் படி, 35.5 சத வீதம் பேர் வாரத்தில் குறைந்தது மூன்று இரவுகள் இவ்வகை தூக்க இடையூறுகளை அனுபவிக்கிறார்கள். 23 சதவீதம் பேர் இரவில் திடீரென விழித்துக்கொள்வதாக தெரிவிக்கிறார்கள்.

    நீங்கள் அடிக்கடி அதிகாலை 3 மணி அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினமும் விழித்துக்கொண்டு, மீண்டும் தூங்க முடியாமல் சிரமப்படுவதை வாடிக்கையாக கொண்டால் அதற்குரிய மருத்துவ காரணங்கள் குறித்து பார்ப்போம்...

    சர்க்காடியன் ரிதம் பாதிப்பு

    மனித உடலில் உள்ள சர்க்காடியன் ரிதம் எனப்படும் உட்புற உயிரியல் கடிகாரம் பாதிக்கப்படும்போது, தூக்கத்தில் அடிக்கடி விழிப்பு ஏற்படலாம். ஒளி மற்றும் இருள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளின் அடிப்படையில், இந்த உயிரியல் கடிகாரம் செயல்படுகிறது. இது பாதிப்புக்குள்ளாகும்போது, தூக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பு குறையலாம். அதன் காரணமாக தூங்குவதில் சிரமம், அடிக்கடி கண் விழித்துக்கொள்வது, வழக்கத்தை விட முன்பே கண் விழித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

    ஒழுங்கற்ற தூக்க நேரம், சுற்றுச்சூழலில் நிலவும் அதிக சத்தம், அறை வெப்பநிலை சீரற்ற நிலையில் இருத்தல், மன அழுத்தம், நோய் பாதிப்பு, தூக்க கோளாறுகள், சில மருந்துகள், மின்னணு சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை சர்க்காடியன் ரிதம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. இந்த உயிரியல் கடிகாரம் நீண்ட காலம் பாதிக்கப்பட்டால், தூக்கக்கோளாறால் நீண்ட நாட்கள் தவித்தல், சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    தூக்க இடையூறுக்கான மற்ற காரணங்கள்

    மிகுந்த மன அழுத்தம் கொண்டிருந்தாலும் இரவில் திடீரென விழிப்பு ஏற்படும். அப்படிப்பட்ட தூக்க குறைபாடு பிரச்சனை நீடித்தால் கார்டிசால் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்து, தூக்கத்தை மேலும் பாதிக்கும். கவலை, பதற்றம் அதிகரித்தாலும் தூக்கத்தின் போது பயமுறுத்தும் கனவுகள் காணக்கூடும். அப்போது திடீரென விழிப்பு உண்டாகலாம். 'சிலீப் அப்னியா' எனப்படும் தூக்கத்தின்போது சுவாசம் அடிக்கடி தடைபடுவது அல்லது சுவாசம் குறைவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் குறட்டை, மூச்சுத்திணறல், பகலில் தூக்கம் கண்களை தழுவுதல், சோர்வு போன்ற அறிகுறிகள் வெளிப் படும்.

    தூக்கத்தை மேம்படுத்த சில ஆலோசனைகள்

    தினமும் இரவில் ஒரே நேரத்தில் தூங்கச் செல்லவும், காலையில் ஒரே நேரத்தில் விழிக்கவும்.

    தூங்குவதற்கு முன்பு குறைந்தது 30 நிமிடம் மின்னணு சாதனங்களை தவிர்க்கவும்.

    தூங்கும் முன்பு காபி, புகையிலை, மதுபானம் போன்றவற்றை தவிர்க்கவும்.

    தினமும் உடற்பயிற்சி செய்யவும்.

    அமைதியான, வசதியான, குளிர்ச்சியான அறையில் தூங்கவும்.

    தூங்குவதற்கு முன்பு ஜீரணிக்க கடினமான உணவுகளை தவிர்க்கவும்.

    இயற்கை சூரிய ஒளியை போதுமான அளவு பெறவும்.

    படுக்கையறையை தூக்கம் மற்றும் தாம்பத்தியத்துக்கு மட்டுமே பயன்படுத்தவும்.

    தியானம், சுவாச பாச பயிற்சி போன்ற தளர்வு முறைகளை பின்பற்றவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தின் தொடு வர்மம் கலை, ஒரு சில மாற்றம் கொண்டு சீனாவில் வேறு அறியப்படுகிறது.
    • மருத்துவர்கள் கருப்பு கவுனியின் பயன்பாட்டினை நன்கு அறிந்திருந்தார்கள்.

    பாரம்பரிய அரிசி ரகம் கருப்பு கவுனி அரிசி இன்று அரிதாகிவிட்டது. இது கருப்பாக இருப்பதற்கு காரணம், இதில் உள்ள அந்தோசினனின் என்னும் மூல வேதிப்பொருள் தான்.

    கருப்பு கவுனி அரிசி சமைத்த பின் ஊதா நிறத்தில் இருக்கும். பண்டைய தமிழ் மன்னர்கள் – சீன மன்னர்கள் இடையே இருந்த கப்பல் போக்குவரத்து மூலமாக நடைபெற்ற வியாபாரம் காரணமாக கருப்பு கவுனி தமிழகம் வந்தடைந்தது.

    சீன அரசர்கள் தங்களின் நாட்டிற்கு வருகை புரியும் பிற நாட்டின் அரசர்கள் மற்றும் கப்பல் மூலமாக வரும் வியாபாரிகளுக்கு கருப்பு கவுனியில் செய்யப்பட்ட விருந்து அளிக்கப்பட்டது.

    இதன் காரணம் இதில் உள்ள ஊட்ட சத்துக்கள். சீன அரசர்கள் இந்த வகை அரிசி கடவுள் தங்களுக்கு அளித்தாக கருதினார்கள். இதனால் பொதுமக்கள் இவ்வகை அரிசியை பயன்படுத்த தடை செய்யப்பட்டது.

    அரசரின் கட்டளை மீறி, பொதுமக்கள் யாரேனும் "கருப்பு கவுனி" அரிசியை பயன்படுத்தினால் தண்டனைக்கு உட்படுத்தபட்டனர்.

    தமிழகத்தின் தொடு வர்மம் கலை, ஒரு சில மாற்றம் கொண்டு சீனாவில் வேறு அறியப்படுகிறது. இவ்வகை மருத்துவர்கள் கருப்பு கவுனியின் பயன்பாட்டினை நன்கு அறிந்திருந்தார்கள். இவர்களின், கூற்றுப்படி பிரபஞ்ச சக்தியை உள்ள வாங்கும் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கருப்புகவுணி அரிசிக்கு உள்ளதாக நம்பப்படுகிறது.

    இதில் அதிகளவில் உள்ள நார்ச்சத்து உள்ளது.

    கருப்பு கவுனி அரிசியின் அந்தோசினனின் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், இருதய நோய்களைத் தடுப்பதற்கும், மூளை செயல்பட்டினை மேம்பட உதவுகிறது.

    சிவப்பு அரிசி உள்ளிட்ட மற்ற எந்த ஒரு அரிசியிலும் இல்லாத அளவு கருப்பு கவுனி அரிசி அந்தோசினனின் பாதிப்பினை தடுக்கிறது. மேலும், இதய பாதிப்பினை தடுக்கிறது.

    கருப்பு கவுனி அரிசி புற்றுநோய்க்கு எதிரானது என்பதை சீனாவில் எலிகள் மீது மேற்கொண்ட ஒரு ஆய்வில் நிரூபித்துள்ளனர்.

    கருப்பு கவுனி அரிசி நார்ச்சத்து மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ளதால் உடலின் தேவையற்ற கொழுப்புகளை குறைகிறது என்பதை ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

    உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதால் இதயத்தின் ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தவிர்க்கிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கண்ணாடி பாகம் மேசை மீது படாதவாறு வைக்க வேண்டும்.
    • மூக்குக் கண்ணாடியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    டிஜிட்டல் யுகத்தில் கண் கண்ணாடி, அவசியமான ஒன்றாகிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை... எல்லோரும் கண் கண்ணாடிகளை உபயோகித்து வரும் நிலையில், அதை பராமரிக்க சில யோசனைகள்...

    * மூக்குக் கண்ணாடிகளை உபயோகப்படுத்தாத நேரங்களில் அதன் உறையில் போட்டு வைத்திருக்க வேண்டும். அது முடியாவிடில் கண்ணாடி பாகம் மேசை மீது படாதவாறு வைக்க வேண்டும்.

    * மூக்குக் கண்ணாடியை கழற்றும் போது இரண்டு கைகளாலும் கண்ணாடியின் விளிம்பில் இணையும் இடத்தில் பிடித்து கழற்ற வேண்டும். ஒரு கையால் கழற்றும்போது மெல்லிய கண்ணாடி பிரேம்கள் வளைந்து போகவும், உடைந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன.

    * மூக்குக் கண்ணாடியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உபயோகப்படுத்தும் முன் ஒவ்வொரு முறையும் மென்மையான துணியால் நன்கு துடைக்க வேண்டும்.

    * மூக்குக் கண்ணாடிகளை அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இணைப்புகள் தளர்ந்துவிடாமல் முகத்தில் சரியாக பொருந்தும்படி செய்து உபயோகித்துக் கொள்ள வேண்டும்.

    * ஒருவரது மூக்குக் கண்ணாடியை மற்றவர் உபயோகப்படுத்தக் கூடாது. இதனால் அளவுகள் மாறி உரியவர் அணியும்போது பொருந்தாமல் அசவுகரியம் ஏற்படுத்தும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.
    • வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது.

    வல்லாரை உண்பதும் நன்று, நல்லாரை காண்பதும் நன்று என்ற முதுமொழிக்கு ஏற்ப சர்வ வல்லமை மிக்க கீரையாக வல்லாரைக் கீரை விளங்குகிறது. இந்தக் கீரையுடன் பால் கலந்து அரைத்து சாப்பிட வேண்டும். வல்லாரை விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.

    உடலில் ஏற்படும் கட்டிகள், புண்கள் ஆகியவற்றை சரி செய்து விடும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு. வல்லாரை கீரையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகு பதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

    யானைக்கால் நோய் உள்ளவர்கள் வல்லாரைக் கீரையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை கீரையை அரைத்து, அதை சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், வாயு வீக்கம், தசை சிதைவு போன்றவை குணமாகி விடும். இந்தக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

    வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது. நரம்பு மண்டலங்களை பலப்படுத்துவதன் மூலம் நமது செயல்பாடுகள் மிகவும் சீராக அமைவதற்கு இது மிகுந்த உதவியாக அமைகிறது.

    மன அழுத்தத்தை தடுத்து நிறுத்துகிறது. வல்லாரைக் கீரை நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் உடலில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் சக்தியும் வல்லாரைக்கு உண்டு. வல்லாரைக் கீரையை வலியை போக்கக் கூடிய ஒரு மேற்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்த முடியும். வல்லாரை கீரையை நீர் விடாமல் நன்றாக பசை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பசையை வீக்கம் உள்ள இடத்தில் ஒரு பற்று போல் போட்டு வந்தால் வீக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

    மூளை நன்கு செயல்பட தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை என்றும் அழைக்கின்றனர். ரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல் நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. இந்த கீரையை கொண்டு பல் துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். வல்லாரை கீரையுடன் நல்ல நீர் சேர்த்து அரைத்து வல்லாரை ஜூஸாக்கி தினமும் 25 மில்லி அல்லது 30 மில்லி குடித்து வர மாரடைப்பு நம்மை நெருங்காது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வறுத்த கோழி இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கும்.
    • சர்க்கரை பானங்கள், நொறுக்குத்தீனிகளுடன் சேர்த்து வறுத்த கோழி இறைச்சி சாப்பிடவும் கூடாது.

    கோழி இறைச்சியை எண்ணெய்யில் பொரித்து தயார் செய்யப்படும் 'பிரைடு சிக்கனை' பலரும் ருசிப்பதுண்டு. அதனை அடிக்கடி சாப்பிடுபவர்களும் உண்டு. அடிக்கடியோ, தினமுமோ 'பிரைடு சிக்கன்' சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

    * இந்த வறுத்த கோழி இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கும். தினமுமோ, அடிக்கடியோ சாப்பிடும்போது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்துவிடும்.

    * கலோரிகளும் அதிகம் இருக்கும். தொடர்ந்து சாப்பிடும்போது கலோரிகள் வேகமாக சேர்ந்து உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

    * 'பிரைடு சிக்கனை தொடர்ச்சியாக சாப்பிடும் நிலை நீடித்தால் காலப் போக்கில் உடல் பருமன், அதிக கொழுப்பு, இதய நோய் அபாயம் அதிகரிக்கலாம்.

    * சர்க்கரை பானங்கள், நொறுக்குத்தீனிகளுடன் சேர்த்து வறுத்த கோழி இறைச்சி சாப்பிடவும் கூடாது.

    எப்படி சாப்பிடலாம்?

    கோழி இறைச்சியை வேகவைத்தோ, நெருப்பில் சுட்டு 'கிரில் சிக்கனாகவோ உட்கொள்ளலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கீரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகம் கிடைக்கின்றன.
    • ஆரோக்கியமான வாழ்வை தரக்கூடிய இந்த நாட்டுக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து கொள்வது நலம் பயக்கும்.

    தெருக்களில் எளிதாக கிடைக்கும் மணத்தக்காளி கீரை ஒரு மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் 'காட்டுக்கீரை' என்று அழைக்கப்படும் இது, செரிமான மண்டலத்தைச் சீரமைப்பதில் முதன்மை வகிக்கிறது. இந்த கீரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ,சி, இ மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகம் கிடைக்கின்றன.

    இது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதோடு, கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சத்துக்கள் நிறைந்த இந்த கீரையைச் சிறுபருப்பு அல்லது பயத்தம்பருப்புடன் சேர்த்து மசியலாக சமைத்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியையும் வலுவையும் தரும். தாதுக்கள் பற்றாக்குறையை நீக்கி ஆரோக்கியமான வாழ்வை தரக்கூடிய இந்த நாட்டுக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து கொள்வது நலம் பயக்கும்.

    மணத்தக்காளி கீரையின் தனித்துவம், அது பெண்களின் கருப்பையை வலுப்படுத்துகிறது என்று சித்த மருத்துவம் கூறுகிறது. 100 கிராம் மணத்தக்காளி கீரையில், நீர்ச்சத்து 82 சதவீதம், புரதம் 5.9 கிராம், கொழுப்பு, ரிபோப்ளாவின் 59 மி.கி. நியாசின் 0.9 மி.கி. நிறைந்துள்ளன. நாட்டுக்கீரைகள் மிகப்பெரிய அளவில் மனிதனுக்கு ஏற்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறையை போக்கி நோய்களையும் வரவிடாமல் தடுக்கின்றன.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெப்பத்தால் உடலில் உருவாகும் சோர்வை நீக்கி உடலின் வெப்ப நிலையை சமநிலை செய்கிறது.
    • கோடையில் குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கம் ஏற்படும்.

    மற்ற மரங்களைவிட ஏராளமான பயன்களை கொண்டதாக பனை மரங்கள் விளங்குகின்றன. ஒரு பனை இருந்தால் அதைச்சுற்றி பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கை தொடங்கும் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    ஏனெனில், பனை மரத்தை நம்பி பல்வேறு சிறு உயிரினங்கள் மற்றும் பறவைகள் வாழ்கின்றன. இது ஒரு புறமிருக்க, கோடை காலத்தில் பனை தரும் நுங்கு அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும்.

    ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்த நுங்கு விற்பனைக்கு வரும். கோடை வெயிலை தாங்கி மனித உடல் குளிர்ச்சி பெற நுங்கு துணை புரிகிறது. நுங்கில் உடலுக்கு ஊட்டம் தரும் வைட்டமின் பி, நோய் எதிர்ப்பு சக்தி தரும் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை, வெப்பத்தால் உடலில் உருவாகும் சோர்வை நீக்கி உடலின் வெப்ப நிலையை சமநிலை செய்கிறது.

    கோடையில் குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கம் ஏற்படும். இதனை தடுப்பதில் நுங்கு முதலிடம் வகிக்கிறது. மேலும், உடல் வெப்பத்தால் குடலில் ஏற்படும் வறட்சியை தணித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலை போக்குகிறது.

    வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் தோல் நோய்கள், கொப்புளங்களை தடுக்க நுங்கு அவ்வப்போது உண்ணலாம். நுங்கில் உள்ள அந்த்யூசைன் என்ற ரசாயனம் மார்பக புற்று நோயை தடுக்க உதவும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனநிலையை மாற்றும்.
    • நல்ல தூக்கத்தை தரும். உடல் வலியை போக்கும்.

    * காபி, டீ பருகுவதற்கு முன் தண்ணீர் குடித்தல்

    -உடலின் நீர்ச்சத்து மற்றும் ஆற்றலை மீட்டெடுக்கிறது.

    * இன்று இரவே நாளைய திட்டத்தை அமைத்தல்

    -மறுநாள் காலையில் மன அழுத்தத்தை குறைக்கிறது.

    * தேவையற்ற சிந்தனைகளை கட்டுப்படுத்துதல்

    -மனக்குழப்பம் ஏற்படாமல் தடுக்கும்.

    * காலையில் எழுந்ததும் படுக்கையை ஒழுங்குபடுத்துதல்

    -ஒழுக்கத்தையும், புத்துணர்ச்சியான தொடக்கத்தையும் குறிக்கிறது.

    * மெதுவாக உணவருந்துதல்

    -குடல் ஆரோக்கியத்தை காக்கும். அதிகமாக சாப்பிடுவதை தடுக்கும்.

    * சிறிய தொகையை சேமித்தல்

    -திட்டமிட்டு செலவிட தூண்டும்.

    * தினமும் 10 நிமிடம் நடைப்பயிற்சி செய்தல்

    -மனநிலையை மாற்றும். செரிமானம் மற்றும் மனத் தெளிவை மேம்படுத்தும்.

    * கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுதல்

    -உண்மையான தன்னம்பிக்கையை உருவாக்குகிறது.

    * அதிகாலையில் சூரிய ஒளியில் நேரம் செலவிடுதல்

    - ஹார்மோன்கள் மற்றும் தூக்கச் சுழற்சியை சமநிலைப் படுத்துகிறது.

    * தினமும் 5 பக்கங்கள் வாசித்தல்

    - அறிவும் சேர்ந்து வளரும்.

    * உணவருந்தும்போது கைப்பேசியை தவிர்த்தல்

    -ஜீரணத்தையும், விழிப்புணர்வையும் மேம்படுத்தும்.

    * தினமும் பயன்படுத்தும் இடத்தை ஒழுங்குபடுத்துதல்

    -அமைதியான சூழல் நிலவும். மனமும் அமைதியாகும்.

    * கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்பு சிறிது இடைவேளை எடுத்தல்

    -உறவுகளையும், மன ஆற்றலையும் காக்கும்.

    * உறங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்தல்

    -நல்ல தூக்கத்தை தரும். உடல் வலியை போக்கும்.

    * செய்த உதவிக்கு நன்றி தெரிவித்தல்

    - மனம் திருப்தி அடையும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
    • இளநீர் குடிப்பதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

    உலகில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் விரும்பி குடிக்கும் பானமாக இளநீர் உள்ளது. இளநீரை விரும்பாதவர்கள் அரிது தான். ஏனெனில் இதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் கோடை காலங்களில் இளநீர் வியாபாரம் இந்தியாவில் அமோகமாகவே நடக்கும். உடலுக்கு பல வழிகளில் நன்மை தரக்கூடிய இளநீரை இரவு அருந்தலாமா என்ற கேள்வி சிலருக்கு எழும். அதற்கான தீர்வு குறித்து பார்க்கலாம்.

    கோடை காலங்களில் ஏற்படும் தாகத்தை தணிக்க இளநீர் சிறந்த தேர்வாக அமையும். அதே போல் இரவு நேரங்களில் இளநீர் குடிப்பதும் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்புடையதாக இருக்கும். குறிப்பாக பருவகால நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும். இளநீரில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி வைட்டமின்கள், தாதுக்களும் அடங்கியுள்ளதால், கூந்தல் மற்றும் சருமத்திற்கும் வலுசேர்க்கும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இரவு தூங்கும் முன்பு இளநீர் குடிக்கலாம். இவற்றிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கும். நீரிழப்பை தடுக்கும்.

    இளநீர் வருடம் முழுவதும் ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் கிடைக்கும் ஒரு பானம். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதனால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

    இளநீர் குடிப்பதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இது உடலில் இருக்கும் தொற்றுக்கிருமிகளை வெளியேற்ற உதவும். சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும் இளநீர் துணை புரியும். இளநீரை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் சரியான நேரத்தில் குடிப்பதால், அதன் ஆரோக்கிய நன்மைகள் இரட்டிப்பாகும். உணவுக்கு முன்பும், பின்பும், தூங்குவதற்கு முன்பும், உடற்பயிற்சிக்கு பின்பும் இளநீர் குடிப்பது உடலுக்கு நல்லது. இதனால் செரிமானம் மேம்பட்டு, உடல் நீரேற்றமாக இருக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கும். இதய துடிப்பை குறைத்து, மனதை அமைதிப்படுத்தும்.

    பொதுவாக ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு டம்ளர் இளநீர் குடிப்பது போதுமானது. இருப்பினும், சர்க்கரை நோய் அல்லது குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி இளநீரை குடிப்பது நல்லது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முருங்கையின் பலன் பற்றி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
    • வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக நரம்புகள் செயலிழந்து நரம்புத்தளர்ச்சி ஏற்படும்.

    முருங்கை என்றதும் அதன் காய்களும் கீரைகளும் மட்டுமே நமக்கு தெரியும். அதில் மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்லக்கேட்டு விதம்விதமாய் சமைத்து உண்டு ருசித்து ரசித்திருப்போம். ஆனால், முருங்கைப்பூவில் இருக்கும் சத்துகள் மட்டுமல்ல, அதில் இருக்கும் ரகசியங்கள் நம்மில் பலரும் தெரியாத ஒன்று.

    முருங்கையின் பலன் பற்றி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் பலன் பற்றி அறிந்ததாலேயே சித்தர்கள் முருங்கையை 'பிரம்ம விருட்சம்' என்று அழைக்கிறார்கள். வீடுகள் மற்றும் தோட்டங்களில் முருங்கை மரங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் நம்மில் எத்தனைபேர் முருங்கைப்பூவை சமைத்துச் சாப்பிட்டிருப்போம்..? காரணம் அந்தப் பூக்களின் மருத்துவகுணம் பற்றி தெரியாதது மட்டுமல்ல... முருங்கைப்பூவை விட முருங்கைக்காயையே நாம் அதிகம் சமையலுக்கு பயன்படுத்திப் பழகியிருக்கிறோம்.

    இன்றைய அவசர யுகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு, பகலாக ஓய்வின்றி உழைப்பது, கம்ப்யூட்டரே கதி என்று மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது போன்றவற்றால் மனஅழுத்தம், மன உளைச்சல் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக நரம்புகள் செயலிழந்து நரம்புத்தளர்ச்சி ஏற்படும். அந்த நேரங்களில் முருங்கைப்பூவை கசாயம் வைத்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும்.

    மேலும், பலருக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் இருப்பதில்லை. இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து குடித்து வந்தால் தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும். முருங்கைப்பூவை காய வைத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து அதே ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும் என்கிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளையும் சுத்தமாக வைத்திருக்கவும்.
    • செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.

    குடற்புழுக்கள் பெரும்பாலும் அசுத்தமான நீர் அல்லது உணவு உட்கொள்வது, சுகாதாரமற்ற கழிப்பறை வசதிகள் மற்றும் கைகளை சரியாக கழுவாததால் ஏற்படுகின்றன. மண், அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் புழுக்களின் முட்டைகள் உடலுக்குள் நுழைந்து குடலில் வாழத்தொடங்குகின்றன. இந்த புழுக்கள் இரைப்பை புழுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

    வயிற்றில் புழுக்கள் இருந்தால் வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், பசியின்மை, எடையிழப்பு, ஆசனவாயில் அரிப்பு, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தோன்றும்.

    குடற்புழுக்கள் வராமல் தடுக்க அடிக்கடி கைகளை நன்றாக கழுவ வேண்டும். நகங்களை நன்றாக வெட்ட வேண்டும். சாப்பிடும் முன்பும், கழிவறைக்கு சென்று வந்த பிறகும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். பல் துலக்கும் முன்பும், பின்பும் பிரஸை கழுவ வேண்டும். டவல்கள் மற்றும் படுக்கை விரிப்புகளை சூடான நீரில் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளையும் சுத்தமாக வைத்திருக்கவும். சமையலறை மற்றும் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கவும்.

    பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். செல்லப்பிராணிகளின் கழிவுகள் அருகே குழந்தைகளை விளையாட விடக்கூடாது. நோய்த்தொற்றுகள் அதிகம் வாய்ப்புள்ள சுகாதாரமற்ற இடங்களில் இருந்து பழங்கள், காய்கறிகள் வாங்கக் கூடாது. அசுத்தமான இடங்களில் வெறுங்காலுடன் நடக்கக் கூடாது

    ×