என் மலர்

    பொது மருத்துவம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும்.
    • மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.

    இன்று கல்லீரலுக்கென்றே சிறப்பு சிகிச்சை பிரிவுகள் நிறைய ஏற்படுத்தப்பட்டுள்ளன. காரணம் அந்த அளவிற்கு கல்லீரல் பாதிப்பு பரவலாகக் காணப்படுகின்றது.

    கல்லீரல் மனித உடலின் சக்தி மையம் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. உணவை செரிக்கும் முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. நச்சுகளை வெளியேற்றுகின்றது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகின்றது என 500-க்கும் மேற்பட்ட கல்லீரல் பணியினைச் சொல்லலாம்.

    கல்லீரல் சத்தமில்லாது உடல் பணியினைச் செய்கிறது.

    கல்லீரல் வயிற்றின் வலது பக்கத்தில் விலா எலும்புக்களுக்கு அடியில் அமைந்துள்ளது பெரிய உறுப்பு. இதனை பெரிய தொழிற்சாலை என்றே சொல்லலாம்.

    * பித்த நீரினை உற்பத்தி செய்கின்றது. ரத்தத்தில் நச்சுகளை நீக்குகின்றது. ரத்தம் உறைவதற்கான புரதங்களை உருவாக்குகின்றது. ஹார்மோன் அளவினை சீர்படுத்துகின்றது. ஊட்டசத்துகள், வைட்டமின்கள், தாதுக்கள், குளுகோசினை சேமிக்கின்றது.

     

    கமலி ஸ்ரீபால்

    இத்தகு கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் என்னாவது? பொதுவில் மது, வைரஸ் தொற்று ஏ. பி. சி, கொழுப்பு கல்லீரல் நோய், மருந்துகளின் பக்க விளைவுகள், மரபணு கோளாறுகள், தவறான உணவு பழக்கங்கள் இவை பாதிப்பிற்கு முக்கிய காரணம் ஆகின்றன.

    கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும். பிலிரூபின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும்.

    * வயிறு வலி, வீக்கம், வலது பக்க மேல் வயிற்றில் வலி, வீக்கம், கல்லீரல் வீக்கம் அல்லது திரவம் சேருவதால் ஏற்படும் பாதிப்பு.

    * அதிக சோர்வு, எப்போதும் பலவீனமாய் உணர்வது. எப்போதும் பலவீனமாக இருத்தல், கல்லீரல் ஆற்றல் உற்பத்தியை பாதிக்கின்றது.

    * அரிப்பு- விடாமல் உடலில் அரிப்பு, பித்த அமிலம் தோலில் சேருவதால் அரிப்பு ஏற்படுகின்றது.

    * அயர்ந்த சிறுநீர்- சிறுநீர் பழுப்பு நிறமாக இருக்கும். பிரிரூபின் சிறுநீரில் கலக்கின்ற காரணத்தினால் ஏற்படுகின்றது.

    * மன குழப்பம்- கவனக்குறைவு, மறதி இருக்கும், நச்சுகளின் பாதிப்பால் ஏற்படுகிறது.

    * பசியின்மை, எடை குறைதல்- ஊட்டச்சத்தினை உறிஞ்சுவதில் குறைபாடு.

    * எளிதில் சிராய்ப்பு ஏற்படும். ரத்தக்கசிவு, ரத்த போக்கு ஏற்படலாம், ரத்த உறைதல் குறைபாட்டால் ஏற்படுகின்றது.

    கல்லீரல் பிரச்சினை பிரிவுகள்

    * வைரஸ் தொற்றில் ஏ, பி, சி பிரிவுகள் உள்ளன. ஏ பிரிவு அசுத்தமான உணவு. நீரால் பரவுகின்றது. மஞ்சள் காமாலை, வயிற்றுப் பிரட்டல் ஆகியவை இருக்கும்.

    * வைரஸ் பி, சி பிரிவு ரத்தம், உடல் திரவங்கள் மூலம் பரவலாம். முதலில் அறிகுறிகள் கூட காட்டாமல் இருக்கலாம். ஆனால் இவை கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு வரைக் கூட ஏற்படுத்தலாம்.

    * கொழுப்பு கல்லீரல்- இது இரு பிரிவு படும். ஆல்கஹால் சார்ந்தது. அடுத்தது ஆல்கஹால் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு. இதற்கு நீரிழிவு நோய், உடல் பருமன், கொழுப்பு உணவு ஆகியவை காரணம் ஆகின்றன. வயிற்று வலி, சோர்வு ஆகிய வெளிப்பாடுகள் இருக்கும்.

    * சிரோசிஸ்- இது கல்லீரலில் வடுக்களை ஏற்படுத்துவது ஆகும். மது, வைரஸ், பிற நோய்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். வயிறு வீக்கம், கால் வீக்கம், குழம்பிய மனம் போன்றவை காணப்படும்.

    * கல்லீரல் புற்றுநோய்- இது கடுமையான ஆபத்தான நிலை. வைரஸ் பி, சி, சிரோசிஸ் இவை காரணமாக அமையலாம். எடை குறைந்து மெலிந்து இருப்பர், மஞ்சள் காமாலை, வயிற்று வலி பாதிப்பு இருக்கும்.

    * ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்கள்- உட லின் நோய் எதிர்ப்பு அமைப்பு கல்லீரலைத் தாக்குவதால் ஏற்படும் பாதிப்பாகும். எதனையும் ஆரம்ப காலத்தில் கண்ட றிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.

    * ரத்தப் பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு சோதனை, வைரஸ் சோதனை, பிலிரூபின் சோதனை ஆகியவை அவசியம்.

    * இமேஜிங்ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் கல்லீரல் அளவு, வீக்கம், பாதிப்பு இவற்றினை அறிய உதவும்.

    * பயாபசி-புற்றுநோய் பாதிப்பினை உறுதி செய்யும் பரிசோதனை முறையாகும்.

    வரும்முன் தடுப்போம் மூலமாக கல்லீரலை எப்படி பாதுகாக்கலாம்?

    * மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.

    * சத்தான உணவு- காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் போன்ற கொழுப்பு சத்து குறைந்த உணவுகள் ஆகியவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பினைத் தவிர்க்கும்.

    * சுத்தத்தினை கடை பிடித்தல். ரத்த பரிமாற்றம், தரமான ஊசிகள் போன்றவை அவசியம்.

    * உடற்பயிற்சி அவசியம். உடல் பருமன், சர்க்கரை கட்டுப்பாடு, இவற்றுக்கு உறுதுணையாய் இருக்கும்.

    * முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

    * வைரஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * பச்சை காய்கறிகள், கீரை வகைகள், புரோகலி, காலி பிளவர் மற்றும் மீன், பருப்பு வகைகள், முட்டை வெள்ளைக்கரு மற்றும் 2 முதல் 3 லிட்டர் நீர் அன்றாடம் குடித்தல் மற்றும் அதிக சர்க்கரை, துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றினை தவிர்த்தல் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.

    (செரிமானத்தில் கல்லீரல் பங்கு என்பது மிக முக்கியமானது. பித்த நீரை உருவாக்குகின்றது. கொழுப்பு செரிமானத்திற்கு இது முக்கியமானது.

    * ரத்தத்தில் நச்சுத் தன்மையினை நீக்குகின்றது.

    * வளர்சிதை மாற்றங்களுக்குப் பொறுப்பானது.

    * நஞ்சு, மருந்து, சுற்றுப்புற சூழலால் உடலில் சென்று தீங்கு விளைவிக்கும் பொருட்கள். இவைகளை ரத்தத்தில் இருந்து நீக்குகின்றது.

    * கல்லீரல் செல்கள் உடலுக்கு தேவையான பல புரதங்களை உற்பத்தி செய்கின்றன.

    * ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த உதவும். ஆஞ்சியோ டென்சினோஜன் என்ற ஹார்மோனை வெளியிடுகின்றது. மேலும் பல செயல்கள் பற்றி முன்பே அறிந்தோம்.

    கல்லீரல் ஆரோக்கியம் வாழ்வின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை தேவை ஆகும்.

    ஆரோக்கியமான கல்லீரல் உடலை காக்கும் அமைதியான தேவதை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உப்பு குறைபாடு செல்களை குறிப்பாக மூளை செல்களை பாதிப்படைய செய்யும்.
    • அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும்.

    உப்பு - இது தாது உப்புகளில் ஒன்று. உப்பு சத்து உடலில் குறையும்போது தலைவலி, வயிற்று பிரட்டல், சோர்வு, தசை பிடிப்பு, குழப்பம், வலிப்பு, கோமா நிலை போன்றவை ஏற்படலாம்.

    உப்பு குறைபாடு செல்களை குறிப்பாக மூளை செல்களை பாதிப்படைய செய்யும்.

    பண்டை காலம் முதல் இன்றுவரை அநேகரும் நம்நாட்டில் உப்பளங்களில் இருந்து தயாரிக்கப்படும் கல் உப்பு, கடல் உப்பினை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.

    கடல் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இது உடலில் நீர் சத்து, ரத்த அழுத்தம் இவற்றினை சீர்செய்ய உதவுகிறது. மேலும் இது அதிக சுத்தகரிப்பு முறை, பதப்படுத்துதல் இவை இல்லாததால் பொட்டாசியம், இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்களும் உடையது. இந்த காரணங்களினால் இதை உயர்ந்ததாக குறிப்பிடுபவரும் உண்டு. ஆனால் இந்த மற்ற தாதுக்களின் பலனை பெற நாம் அதிகளவில் உப்பினை எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் இந்த தாதுக்களை மற்ற உணவு பொருட்களில் இருந்தும் பெற முடியும். சோடியம் உடலின் நீர் சத்து சம நிலைக்கு முக்கியமானது. இது குறையும் போது உடலில் நீர்சத்து குறைதல், ரத்த அழுத்தம் மாறுபடுதல் ஆகியவை ஏற்படலாம். உப்பு அதிகம் உட்கொள்வதும், குறைந்து உட்கொள்வதும் ரத்த அழுத்த பாதிப்பினை ஏற்படுத்தும்.

    குளோரைட் வயிற்றில் தேவையான அளவு ஆசிட் சுரக்க அவசியம் ஆகின்றது. சோடியம் குளோரைடில் உள்ள குளோரைட் சிறிது சத்துக்களை உறிஞ்சி உடலுக்கு அனுப்ப உதவுகின்றது. ஆக அளவான உப்பு செரிமானத்திற்கு உதவும். உப்பு கலந்த நீரில் குளிப்பது சரும வறட்சி, வீக்கத்தினை நீக்கும். கடல் உப்பில் மக்னீசியம் சத்து அதிகம் இருப்பதால் சரும பாதிப்புகளுக்கு நல்லது.

    அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே சிப்ஸ், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்கு தீனி போன்றவற்றினை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றது.

    * பொதுவில் உயர் ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, சிறுநீரக நோய் உள்ளவர்களை அவருக்கேற்ற அன்றாட உப்பின் அளவினை டாக்டர் பரிந்துரைப்பார்.

    'அதிக உப்பு அமைதியாய் கொல்லும்' என்பர்.

    அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு இன்று பரவலாக பழக்கத்தில் உள்ளது.

    * தைராய்டு ஹார்மோன் நோய் இயங்க உதவும்.

    * அயோடின் குறைபாட்டினைத் தவிர்க்க உதவும்.

    * எலும்பு, மூளை வளர்ச்சிக்கு உதவும்.

    * குறைந்த அயோடின் உணவு அறிவுறுத்தப்படுபவர்கள் அயோடின் கலந்த உப்பினை தவிர்ப்பது அவசியம்.

    வளர்ந்தவர்கள் 2,300 மி.கி.க்கு குறைந்த அளவு சோடியம் உணவில் சேர்க்கலாம். 1500 மி.கி. என்பது மிகச் சிறந்தது. இது ஒரு டீஸ்பூன் (5 கி) உப்பு அளவு எனலாம். ஆனால் நாம் உண்ணும் உணவில் மிக அதிக அளவு உப்பு உள்ளது.

    ரெடிமேட் உணவுகள், பாக்கெட் உணவுகளில் அதிக அளவு உப்பு இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே வீட்டில் சமைத்து அளவான உப்பு சேர்த்து உண்ண பழக வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட பாய் மூன்று ஆண்டுகள் வரை தனது இயற்கை தன்மையை இழக்காது.
    • கால மாற்றத்திற்கேற்ப பாய்களும் பயன்படுத்துவதற்கேற்ப உருமாற்றமடைந்து கொண்டிருக்கின்றன.

    நம் முன்னோர்கள் பாயில் படுத்து உறங்கும் வழக்கத்தை பின்பற்றி வந்தனர். ஆனால் இந்த நவீன காலத்தில் பலரும் பஞ்சு மெத்தையில் உறங்குவதை விரும்புகின்றனர். பாயின் மகிமையை உணர்ந்து அதில் உறங்கும் வழக்கத்தை பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். பாய் உடலில் உருவாகும் அதிகமான சூட்டை உள்வாங்கி, உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது.

    கட்டிலின் மெத்தையை விட தரையில் பாய் விரித்து உறங்குவது உடல் உஷ்ணத்தை போக்கும். வாதத்தை கட்டுப்படுத்தும். நினைவுத்திறனை மெருகேற்றும். உடலுக்கு சீரான ஓய்வையும், நிம்மதியான உறக்கத்தையும் அளிக்கும். மன அமைதியை மேம்படுத்தும். பாயில் தூங்குவது மார்பக தசைகள் தளர்ந்து விரிவடைய வழிவகை செய்யும்.

    நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட பாய் மூன்று ஆண்டுகள் வரை தனது இயற்கை தன்மையை இழக்காது. கால மாற்றத்திற்கேற்ப பாய்களும் பயன்படுத்துவதற்கேற்ப உருமாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. பஞ்சு மெத்தைகள் அறிமுகமாவதற்கு முன்பு, நமது முன்னோர்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு இயற்கையான பாய்களையே நம்பியிருந்தனர்.

    'பாய் இல்லா சீர்வரிசை கிடையாது' என்ற முதுமொழி, தமிழர்களின் வாழ்வில் பாயின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தயிர்-கால்சியம், புரதம், பி12, பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்து நிறைந்தது.
    • வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு தயிர் நல்லது.

    தயிர் குளிர் காலத்தில் எடுத்துக் கொள்ளலாம். சில்லென்று இல்லாமல் எப்போதும் சாதாரண இயற்கை நிலையில் எடுத்துக் கொள்வது நல்லது. தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

    * தயிர்-கால்சியம், புரதம், பி12, பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்து நிறைந்தது.

    * தயிர் கால்சியம் பாஸ்பரஸ் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

    * தயிரில் ஆரோக்கியமான புரோபயாடிக் (நல்ல குடல் பாக்டீரியாக்கள்) ஏராளமாக உள்ளன. வைட்டமின் பி சத்து கொண்டது.

    * தயிர் கொலஸ்ட்ராலை குறைக்கும். உயர்ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும்.

    * இருதய ஆரோக்கியதற்கு நல்லது.

    * வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு தயிர் நல்லது.

    * உடல் பருமன் குறையும்.

    * குடல் புற்றுநோய் அபாயம் குறையும்.

    * அதிகம் அடர்ந்த தயிராக இல்லாமல் கொழுப்பு சத்து குறைவான பாலில் தயாரிக்கும் தயிர் நல்லது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நார்ச்சத்தை சர்க்கரை மூலக்கூறுகளாக உடைக்க முடியாது.
    • செரிமான அமைப்பின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் துணை புரியும்.

    மனித உடலால், நார்ச்சத்தை ஜீரணிக்க முடியாது. ஏனெனில் உணவு நார்ச்சத்து என்பது தாவர அடிப்படையிலான உணவுகளில் காணப்படும் சிக்கலான கார்போஹைட்ரேட் வகையை சேர்ந்ததாகும். பெரும்பாலான கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரை மூலக்கூறுகளாக உடைக்கப்பட்டு விடும். ஆனால் நார்ச்சத்தை சர்க்கரை மூலக்கூறுகளாக உடைக்க முடியாது. அதேவேளையில் குடலில் வாழும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நார்ச்சத்தை நொதித்து தங்களுக்கான உணவாக மாற்றிக்கொள்ளும். அப்படி நார்ச்சத்து நொதிக்கப்படும்போது செரிமானத்துக்கும் உதவி செய்யும். ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும்.

    இந்த நார்ச்சத்திலும் இரண்டு வகை உண்டு. ஒன்று கரையக்கூடிய நார்ச்சத்து. மற்றொன்று கரையாத நார்ச்சத்து. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து தண்ணீரில் கரைந்து ஜெல் போன்ற பொருளை உருவாக்கும். அந்த ஜெல் உடலில் கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் அளவை குறைக்க உதவும். கரையாத நார்ச்சத்தானது தண்ணீரில் கரையாது. இருப்பினும் செரிமான அமைப்பின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் துணை புரியும்.

    நார்ச்சத்தை உடலால் ஜீரணிக்க முடியாது என்பதற்காக அதனை குறைவாக உட்கொள்வது நல்லதல்ல. உடலில் நார்ச்சத்து அளவு குறையும்போது குடலில் வாழும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். அதனால் குடல் ஆரோக்கியம் கெடும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கேரட்டை விட சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
    • கேரட்டில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து குடலில் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்த உதவும்.

    கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு இவை இரண்டும் சுவையான, ஆரோக்கியமான காய்கறிகளாக உலகம் முழுவதும் அறியப்படுகின்றன. இயற்கையான இனிப்புச்சுவை கொண்ட இந்த இரண்டு வேர் காய்கறிகளும் எளிதாக சமைப்பதற்கும், ருசிப்பதற்கும் ஏற்றவை. கண் பார்வையை மேம்படுத்தும், இதயத்தை பாதுகாக்கும் 'ஆரோக்கிய சக்தி மையங்களாக' இவை கருதப்படுகின்றன. இருப்பினும் கண்களுக்கும், இதயத்துக்கும் இவை வழங்கும் நன்மைகள் வேறுபடுகின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோமா?

    கண் ஆரோக்கியம் காக்கும்

    கேரட், கண் ஆரோக்கியம் காக்கும் பிரபலமான காய்கறியாக அறியப்படுகிறது. இதில் இருக்கும் அதிக அளவிலான பீட்டா-கரோட்டின் வைட்டமின் ஏ உற்பத்திக்கு உதவிடும். கண் பார்வை திறனுக்கு வைட்டமின் ஏ முக்கியமானது. சர்க்கரை வள்ளிக்கிழங்கிலும் பீட்டா-கரோட்டின் அதிக அளவில் உள்ளது. அதன் ஆரஞ்சு நிறமே அதற்கு சான்றாக அமைந்திருக்கிறது.

    கேரட்டை விட சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இரவு நேர பார்வையிழப்பு தன்மை ஏற்படுவதை தடுப்பதிலும், ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறப்புற்று விளங்குகிறது. குறிப்பாக உணவில் வைட்டமின் ஏ குறைவாக எடுத்துக்கொள்ளும் நபர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உட்கொள்வது சிறந்தது.

    கண் செல்களை பாதுகாக்கும்

    கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டிலும் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், ஆக்சிஜனேற்ற அழுத்தம் காரணமாக ஏற்படும் கண் செல்களின் சேதத்தை தடுக்க உதவுகின்றன. கேரட்டில் லூட்டின், ஜியாசாந்தின் போன்ற சேர்மங்கள் உள்ளன. குறிப்பாக ஊதா நிற சர்க்கரைவள்ளிக்கிழங்கு வகைகளில், ஆந்தோசியானின் அதிகம் உள்ளன. அவை நீண்ட கால கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    ரத்த அழுத்தத்தை காக்கும்

    சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக அளவில் உள்ளடங்கி இருக்கும் பொட்டாசியம், உடலில் அதிகமாக சேரும் சோடியத்தை சமநிலைப்படுத்தக்கூடியது. அதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவிடும். கேரட்டிலும் பொட்டாசியம் உள்ளது. ஆனால் இதய ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு முன்னிலை வகிக்கிறது.

    கொழுப்பை கட்டுப்படுத்தும்

    கேரட்டில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து குடலில் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்த உதவும். செரிமான மண்டலத்தில் சேமித்துவைத்து, ஆரோக்கியமான கொழுப்பை தொடர்ந்து பயன்படுத்த வழிவகை செய்யும்.

    அழற்சியை குறைக்கும்

    இதய நோய்கள் ஏற்படுவதற்கு அழற்சி முக்கிய காரணிகளில் ஒன்றாக விளங்குகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள சேர்மங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. கேரட்டில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகளும் அழற்சியால் ஏற்படும் சேதங்களை தடுக்க துணைபுரிகின்றன.

    ரத்த நாளங்களை பாதுகாக்கும்

    கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு இரண்டும் ரத்த நாளங்களுக்கு சேதம் ஏற்படாமல் காக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளன. குறிப்பாக சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரத்த நாளங்களை நெகிழ்வாக வைத்திருக்க உதவும். கேரட் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை குறைக்க வித்திடும்.

    சாப்பிட எது எளிது?

    கேரட்டை பச்சையாகவே சாப்பிடலாம். எங்கும் எடுத்து சென்று எப்போதும் சாப்பிடலாம் என்பதால், தினசரி உணவில் கேரட்டை சேர்ப்பது மிகவும் எளிது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை அப்படியே சாப்பிடுவது நல்லதல்ல. அதிக ஸ்டார்ச் உள்ளடக்கம் காரணமாக வாயு, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் வேகவைத்து சாப்பிடுவதே நல்லது.

    எது சிறந்தது?

    கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டுமே கண், இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. எனினும் கேரட்டில் கண் ஆரோக்கியத்திற்கு நேரடியாக பயனளிக்கும் ஊட்டச்சத்துகள் அதிகம் காணப்படுகிறது. இதயத்தை பாதுகாக்கும் தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிகம் உள்ளன.

    கண் ஆரோக்கியத்திற்கு கேரட் சிறந்த தேர்வாக இருந்தாலும், இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு முன்னணியில் இருக்கிறது. எனவே இரண்டையும் சமநிலையாக உணவில் சேர்த்துக்கொள்வதே முழுமையான ஆரோக்கியத்தை பேணுவதற்கு சிறந்த வழியாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயற்கையாகவே நன்மை பயக்கும் சேர்மங்கள், நிறமிகளை கொண்டது.
    • காட்டு அரிசி என அழைக்கப்பட்டாலும் உண்மையாக இது அரிசி அல்ல.

    அரிசி... இந்தியர்களின் உணவுப்பொருள் மட்டுமல்ல. உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் விருப்ப உணவாக அமைந்திருக்கிறது. அரிசியில் பல வகைகள், நிறங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் வெள்ளை, பழுப்பு, சிவப்பு, கருப்பு உள்ளிட்ட நிற அரிசிகள் முக்கியமானவை. நிறத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அரிசியின் சர்க்கரை சத்து அளவு குறியீடு, நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்து மதிப்புகள் வெவ்வேறானவை. அவை பற்றிய தொகுப்பு இது.

    வெள்ளை அரிசி

    தவிடு மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட தானியம். மென்மையான தன்மை கொண்டது, நீண்ட ஆயுட்காலம் உடையது, விரைவில் சமைக்கக்கூடியது. முழு தானியங்களுடன் ஒப்பிடும்போது இவற்றில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவே இருக்கிறது.

    சிவப்பு அரிசி

    இயற்கையாகவே நன்மை பயக்கும் சேர்மங்கள், நிறமிகளை கொண்டது. தவிடு அடுக்கையும் நீக்காமல் தக்கவைத்துக்கொள்ளும் முழு தானியம் இது. நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களும் மிகுந்தது. மண் வாசனை கொண்டது.

    பாஸ்மதி அரிசி

    இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அதிகம் விளைவிக்கப்படும் நீண்ட தானிய நறுமண அரிசியாகும். சமைக்கும்போது பஞ்சு போன்று மென்மையாகும். ஒன்றோடொன்று ஒட்டாது. இதில் பழுப்பு பாஸ்மதி அரிசியானது வெள்ளை பாஸ்மதியை விட அதிக நார்ச்சத்து கொண்ட முழு தானியமாகும்.

    கருப்பு அரிசி

    அதிக அளவு அந்தோசயினின்கள் கொண்டது. இது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். வெள்ளை அரிசியை விட அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து உடையது. எளிதில் மெல்லக்கூடியது.

    பழுப்பு அரிசி

    வெளிப்புற உமி மட்டுமே அகற்றப்பட்ட முழு தானியம் இது. நார்ச்சத்து, பி வகை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. வெள்ளை அரிசியை விட குறைந்த சர்க்கரை சத்து அளவு குறியீடு கொண்டது.

    காட்டு அரிசி

    காட்டு அரிசி என அழைக்கப்பட்டாலும் உண்மையாக இது அரிசி அல்ல. நீர்வாழ் புல் வகையை சேர்ந்தது. புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டது. காய்கறிகள் அல்லது தானிய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

    நீரிழிவு நோய்க்கு எந்த அரிசி சிறந்தது?

    நீரிழிவு நோயாளிகளுக்கு பழுப்பு, கருப்பு, சிவப்பு மற்றும் முழு தானிய பாஸ்மதி அரிசி வகைகள் ஏற்றவை. ஏனெனில் குறைந்த சர்க்கரை சத்து அளவு குறியீட்டையும், அதிக நார்ச்சத்தையும் கொண்டுள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவி புரியும். இந்த அரிசியை அளவாக எடுத்துக்கொண்டு காய்கறிகள் போன்ற அதிக நார்ச்சத்துமிக்க உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது பலன் அளிக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உங்கள் உடம்பு மட்டும்தான் நீங்கள் வாழும் வரைக்கும் நிலையான உங்களுக்குரிய விலாசம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
    • உங்களைத் தவிர வெளி ஆட்கள் வேறு யாரும் உங்கள் உடம்புக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது.

    வாழ்வில் கடைசி வரை உங்களுடன் கூட வரும் உண்மையான துணை யார் என்று நினைக்கிறீர்கள்?

    அம்மா?

    அப்பா?

    மனைவி?

    கணவன்?

    மகன்?

    மகள்?

    நண்பர்கள்?

    இவர்கள் யாரும் இல்லை. உங்கள் உண்மையான வாழ்க்கைத் துணை, உங்கள் உடம்புதான். உங்கள் உடம்பு செயல்படுவதை நிறுத்திவிட்டால் உங்களுடன் யாரும் இருக்கப் போவதில்லை.

    பிறப்பிலிருந்து இறப்பு வரை உங்களுடன் இருக்கப் போவது உங்கள் உடம்பே. உங்கள் உடம்புக்காக நீங்கள் எவ்வளவு பொறுப்புணர்வுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் உடம்பு உங்களைப் பார்த்துக்கொள்ளும்.

    நீங்கள் என்ன உண்கிறீர்கள், என்ன உடற்பயிற்சி செய்கிறீர்கள், எந்த அளவுக்கு உடலுக்கு ஓய்வு தருகிறீர்கள், மன அழுத்தத்தை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதையெல்லாம் பொறுத்துத்தான் உங்கள் உடம்பு உங்களைப் பாதுகாக்கும்.

    உங்கள் உடம்பு மட்டும்தான் நீங்கள் வாழும் வரைக்கும் நிலையான உங்களுக்குரிய விலாசம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.

    உங்களைத் தவிர வெளி ஆட்கள் வேறு யாரும் உங்கள் உடம்புக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அந்த உடம்பில், மூச்சுப் பயிற்சி-நுரையீரல்களுக்கு தியானப் பயிற்சி-மனதுக்கு யோகாசனப் பயிற்சி- முழு உடம்புக்கு நடைபயிற்சி-இதயத்துக்கு சிறந்த உணவு- செரிமான உறுப்புகளுக்கு நல்ல எண்ணங்கள்- ஆன்மாவுக்கு நற்செயல்கள்- உலகுக்கு இதை உணர்ந்து வாழும்போது வாழ்க்கை வளமாகும், இனிமையாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் கொள்வார்கள்.
    • மன நலம் பாதிப்புக்குள்ளாகும்போது உணர்ச்சிகள் அதிகமாக வெளிப்படும்.

    மன நல பிரச்சனை எந்த நேரத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். அது எப்படி உண்டாகும்? என்னென்ன அறிகுறிகளை வெளிப்படுத்தும்? அதனை எப்படி கையாள வேண்டும்? என்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து செயல்பட்டால் மன நலனை பேணி பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் மன நோயாக மாறி மன நலனில் மட்டுமல்ல உடல் நலனிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன நோய்க்கு வித்திடும் ஆரம்ப அறிகுறிகள் குறித்து பார்ப்போம்.

    கவனம் செலுத்துவதில் சிரமம்

    எந்த விஷயத்திலும் கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். மோசமான செயல்திறன் கொண்டிருப்பார்கள். தொடர்ந்து கவனச்சிதறலுடன் செயல்படுவார்கள். அல்லது அவர்களுக்கு வழங்கப்படும் வேலையில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள்.

    உடல் ரீதியான மாற்றம்

    மன நலம் பாதிப்புக்குள்ளாகும்போது பலருக்கும் பசியின்மை உண்டாகும். சாப்பாடு மீது விரக்தி ஏற்படும். சிலரோ வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். மன நலன் பாதிப்புக்குள்ளாகி வாந்தி எடுக்கவும் செய்வார்கள்.

    மனநிலை மாற்றம்

    சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் கொள்வார்கள். இயல்பாக பேசினால் கூட கோபத்தை கொப்பளித்துவிடுவார்கள். கோபம் அவர்களிடத்தில் தொடர்ந்து குடிகொண்டிருக்கும். எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைவார்கள். தனிமையை நாடுவார்கள். எந்த செயலிலும் ஆர்வத்தோடு ஈடுபடமாட்டார்கள். இதற்கு முன்பு விரும்பி செய்த விஷயங்களை கூட தவிர்ப்பார்கள்.

    மதுப்பழக்கம்

    எந்தவொரு பிரச்சனையையும் மன ரீதியாக எதிர்கொள்ள தைரியமில்லாமலோ, மனதுக்குள்ளேயோ விவாதித்து அதுபற்றி பிறரிடம் பேசத் தயங்குவதோ மன நல பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும். அதில் இருந்து மீள மது, போதை பழக்கத்தை நாடுவது நாளடைவில் அதற்கு அடிமைப்படுத்திவிடும்.

    அதிக உணர்ச்சி நிலை

    மன நலம் பாதிப்புக்குள்ளாகும்போது உணர்ச்சிகள் அதிகமாக வெளிப்படும். அதிகப்படியான பயம் எட்டிப் பார்க்கும். கவலைகள் ஆக்கிரமித்து பயத்தை அதிகப்படுத்தும். மனத்தெளிவு இல்லாமல் குழப்பம் குடிகொள்ளும். பதற்றமும் பற்றிக்கொள்ளும்.

    உடல் வலி

    மன நோயின் ஆரம்ப அறிகுறிகள் சிலருக்கு உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். நாள்பட்ட தலைவலி, வயிற்றுப்போக்கு, தசை வலி, கை, கால் வலி என உடல் ரீதியான வலிகளை எதிர் கொள்வார்கள்.

     

    நடத்தை

    பிளேடு கொண்டு கைகளை கீறுதல், கத்தியைக்கொண்டு வெட்டுதல் போன்ற காயத்தை ஏற்படுத்தும் பொறுப்பற்ற நடத்தை, தற்கொலை பற்றிய சிந்தனை தலைதூக்குதல் போன்ற செயல்பாடுகள் மன நோயின் அறிகுறியாக கருதப்படும்.

    மாற்றங்கள்

    அன்றாட நடவடிக்கைகளில் கடுமையான மாற்றங்கள் ஏற்படுதல், காரணமே இல்லாமல் சண்டையிடுதல், வாக்குவாதம் செய்தல், அச்சுறுத்துதல், மற்றவர்களுக்கோ அல்லது தனக்கோ தீங்கு விளைவித்தல் போன்ற செயல்பாடுகளையும் கொண்டிருப்பார்கள்.

    நீங்கள் எவ்வாறு உதவ முடியும்?

    உங்கள் அன்புக்குரியவர்கள் மன நல பிரச்சனைக்கு ஆளாகி இருந்து, இது போன்ற அறிகுறிகளுடன் செயல்பட்டால் அவர்களை நிதானத்துடன் கையாள வேண்டும். அன்பாக, பாசமாக வழி நடத்த வேண்டும். அவர்களின் செயல்பாடுகள் அதிருப்தி அளித்தாலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

    இணைந்து பணியாற்றுங்கள்

    குடும்பத்தினர், நண்பர்கள், உடன் வேலை செய்யும் சக ஊழியர்களுடனான தகவல் தொடர்பை எளிதாக்குங்கள்.

    நண்பர்கள், குடும்பத்தினரின் கருத்துக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களின் கருத்துகளில் நிறை, குறை இருந்தால் அவர்கள் மனம் நோகாதபடி சுட்டிக்காட்டுங்கள்.

    உங்கள் நலம் விரும்பிகளுடன் இணைந்து பணியாற்றுங்கள். இலக்குகளை நிர்ணயித்து திட்டமிடுங்கள். மனதுக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்காமல் செயல்படுங்கள்.

    தவிர்க்கும் வழிமுறைகள்

    எதிர்மறை எண்ணங்களுக்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது. உங்கள் கவலைகளை நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தொடர்ந்து மன அழுத்தம் இருந்தாலோ, மன நலன் பாதிப்புக்குள்ளாகி நிம்மதியை இழந்தாலோ மன நல நிபுணரிடம் கவுன்சலிங் பெற வேண்டும்.

    உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்கள் கூறும் கருத்துகளை நன்கு கவனியுங்கள். அவர்களிடம் பேசவோ, உங்களின் நிலை பற்றி அறிய கேள்வி கேட்கவோ தயங்காதீர்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் போது, கையின் ஏதாவது ஒரு விரல் மட்டும் அசைகிறதா?
    • அடிக்கடி துடித்தால், ஒருவர் மனஅழுத்தத்தில் இருக்க வாய்ப்புள்ளது.

    ஒருவர் தனக்கு மனஅழுத்தம் இருக்கிறது என்று எப்படித் தெரிந்துகொள்வது? அதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம். அவை பற்றி...

    திடீர் அழுகை

    சந்தோஷமான மனநிலையில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, திடீரென்று கண்களில் இருந்து கண்ணீர் வருகிறதா? அதுவும் எந்த காரணமும் இல்லாமல் திடீரென்று அழுகை வருகிறதா? அப்படியானால் அவர் மனஅழுத்தத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

    கை நடுக்கம்

    எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் போது, கையின் ஏதாவது ஒரு விரல் மட்டும் அசைகிறதா? அப்படியானால் அது மனஅழுத்தத்தின் அறிகுறி என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். ஒருவருக்கு இப்படி அடிக்கடி விரல் தானாக அசைந்தாலோ அல்லது துடித்தாலோ, உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    கண் இமை துடித்தல்

    கண் இமை திடீரென்று துடிக்கிறதா? அப்படி அடிக்கடி துடித்தால், ஒருவர் மனஅழுத்தத்தில் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே கண் இமைகள் வழக்கத்துக்கு மாறாக துடித்தால், தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து சோதித்துப் பார்க்க வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புகைப்பழக்கத்தை தவிர்ப்பது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். ஆயுளையும் அதிகரிக்க செய்யும்.
    • உறவுகளுக்குள் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது. அவற்றை எவ்வாறு கையாளுகிறோம் என்பதே முக்கியமானது.

    மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. ஆனால் அதனை சாத்தியமாக்குவது பலருக்கும் கடினமாக இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் 85 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மகிழ்ச்சியாகவும், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு வித்திடும் தினசரி பழக்கவழக்கங்களை பட்டியலிட்டுள்ளது.

    1939-ம் ஆண்டு முதல் 1944-ம் ஆண்டு வரை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த 268 மாணவர்களின் 80 ஆண்டுகளுக்கு மேலான வாழ்வியல் முறையை ஆய்வு செய்து இந்த பழக்கவழக்கங்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை குறித்து பார்ப்போம்.

    1. புகைப்பழக்கத்தை தவிர்த்தல்

    புகைப்பிடிக்கும் பழக்கத்தை பின்தொடர்வது புற்றுநோய், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு உள்பட உயிருக்கு அச்சுறுத்தும் ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே புகைப்பழக்கத்தை தவிர்ப்பது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். ஆயுளையும் அதிகரிக்க செய்யும்.

    2. மதுப்பழக்கத்தை அறவே தவிர்த்தல்

    மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்துதல் அல்லது அறவே தவிர்த்தல் உடல் நலத்தையும், மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். நல்ல தூக்கத்திற்கு வித்திடும். உடலுக்கு அதிக ஆற்றலையும், வலுவான நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். சிக்கலான பிரச்சனையாக இருந்தாலும் தீர்க்கமாக, தெளிவாக முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும்.

    3. உடல் எடையை பராமரித்தல்

    சத்தான உணவுகளை உண்பது, முறையான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை பராமரிப்பது நோய்களை தடுக்க உதவிடும். வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும்.

    4. தினசரி உடற்பயிற்சி செய்தல்

    தினமும் குறைந்தது 30 நிமிடம் வேகமான நடைப்பயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சி மேற்கொள்வது மனநிலையை மேம்படுத்தி மகிழ்ச்சியை அதிகரிக்கும். ஏனெனில் உடற்பயிற்சி மூலம் `என்டார்பின்கள்' எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன.

    5. சிக்கல்களை சமாளித்தல்

    உறவுகளுக்குள் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது. அவற்றை எவ்வாறு கையாளுகிறோம் என்பதே முக்கியமானது. அமைதியாகவும், புத்திசாலித்தனமாகவும் சமாளிக்கும் திறனை கொண்டிருப்பது உறவுகளை வலுப்படுத்தும். மன அமைதியையும் உண்டாக்கும்.

    6. கற்றுக்கொள்ளுதல்

    தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், தொடர்ந்து கற்றுக்கொள்ளும் பழக்கமும் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

    7. அன்பை வெளிக்காட்டுதல்

    நீண்டகால நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் வாழ்க்கை துணை வெளிக்காட்டும் அன்பு உள்ளிட்டவை மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் மிக முக்கியமானவை என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொழுப்பு அதிகரித்தால், கழுத்தை சுற்றி வலி உண்டாகும்.
    • கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது,​ கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது குளிர்ச்சியை உணரலாம்.

    உடலுக்கு கொழுப்பு அவசியம். ஆனால் அதன் அளவு அதிகரிப்பது ஆபத்தானது. குறிப்பாக எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு 100-க்குள் இருக்க வேண்டும். அதனை தாண்டும்போது மாரடைப்பு, பக்கவாதம் உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

    இந்த கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போது சில உடல் உறுப்புகளே அறிகுறிகளை வெளிப்படுத்தி நம்மை எச்சரிக்கும். அதனை கவனத்தில் கொண்டு உடனடியாக சிகிச்சை பெற்றாலே கொழுப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்திவிடலாம். கொழுப்பு அதிகரிப்பதை எந்தெந்த உறுப்புகள் எந்த மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன என்று பார்ப்போமா?

    கால் வலி அல்லது தசை பிடிப்பு

    உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது கால்களில் வலி மற்றும் தசை பிடிப்பு ஏற்பட தொடங்கும். இதன் காரணமாக அந்த பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும். அதன் தாக்கமாக நடக்கும்போதோ அல்லது ஓய்வெடுக்கும்போதோ கால்களில் வலி அல்லது தசை பிடிப்பு ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் வெளிப்பட்டால் அது கொழுப்பு அதிகரிப்பின் வெளிப்பாடா என்பதை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனையோ, ஆலோசனையோ மெற்கொள்வது அவசியமானது.

    மார்பு வலி அல்லது அழுத்தம்

    மார்பு வலியையோ அல்லது அழுத்தத்தையோ உணர்வதும் கொழுப்பு அதிகரிப்பின் வெளிப்பாடாக இருக்கலாம். இதய தமனிகளில் கொழுப்பு குவிவது மார்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். மார்பில் இறுக்கமோ, எரிச்சலோ உண்டாகக்கூடும். அத்தகைய அறிகுறிகள் மாரடைப்பு அல்லது கரோனரி தமனி நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    கழுத்து, தாடை அல்லது தோள்பட்டையில் வலி

    கொழுப்பு அதிகரித்தால், கழுத்தை சுற்றி வலி உண்டாகும். ஏனெனில் கொழுப்பு அதிகரிக்கும் போது, முழு உடலின் ரத்த ஓட்டமும் தடைபட தொடங்கும். இதன் காரணமாக கழுத்தைச் சுற்றி மட்டுமின்றி தாடை மற்றும் தோள்பட்டைகளில் அசாதாரண வலியை உணரலாம்.

    வேறு சில அறிகுறிகள்

    கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது குளிர்ச்சியை உணரலாம்.

    உடலில் கொழுப்பு அதிகரித்திருப்பதன் காரணமாக, கால்களின் நிறம் மாறக்கூடும். சில சமயங்களில் நீல நிறத்தில் காட்சியளிக்கக்கூடும்.

    தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வு அல்லது தலைச்சுற்றல் ஆகியவை கொழுப்பு அதிகரித்திருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

    படிக்கட்டுகளில் ஏறும் போது மூச்சுத் திணறல் ஏற்படுதல் அல்லது சோர்வாக உணருதல் அதிகரித்த கொழுப்பின் வெளிப்பாடாக இருக்கலாம்.

    கண்களைச் சுற்றி மஞ்சள் அல்லது மஞ்சள் வளையம் தோன்றக்கூடும்.

    உடலில் இதுபோன்ற மாற்றங்களை கண்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதனால் நிலைமை மோசமாகாமல் தடுக்க முடியும்.

    ×