என் மலர்

    பொது மருத்துவம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தோள்பட்டையை சுற்றியுள்ள தசை நார்கள், சவ்வுகள் இவை கிழிவதினால் கடுமையான வலி ஏற்படுகிறது.
    • கீல்வாத நோய்களிலும் தோள் பட்டையில் வீக்கத்துடன் வலி உருவாகிறது.

    தோள்பட்டை வலி என்பது பல்வேறு காரணங்களால் வரலாம்.

    * ரோட்டேட்டர் சுற்றுப்பட்டை வலி: தோளின் சுழற்சியை உருவாக்கும் நான்கு முக்கிய தசைகள் சுப்ரா ஸாபின்டஸ், இன்ப்ரா ஸ்பின்டஸ், டெரெஸ் மைனர் மற்றும் சப் ஸ்கேபுலாரிஸ் ஆகும். இந்த தசைகள், டெல்டாய்டு தசையுடன் சேர்ந்து, தோள்பட்டை மூட்டை உறுதிப்படுத்துவதற்கும் பரந்த அளவிலான கை அசைவுகளை செயல்படுத்துவதற்கும் முக்கியமானவை ஆகும். தசைப்பிடிப்புகள் காயங்களினால் இவைகளின் இயக்கம் குறையும் பொழுது தோள்பட்டையின் உள்பகுதியில் மந்தமான வலியாகவோ அல்லது திடீரென கூர்மையான வலியாகவோ வெளிப்படும். இந்த வலியினால் தோள் பட்டையில் குறைந்த அளவிலான இயக்கம், முதுகுக்கு பின்னால் கை வைத்து எட்டுவது, தலைமுடியை சீவுவது ஆகியவை கடினமாகிறது.

    * கிழிவுகள்: தோள்பட்டையை சுற்றியுள்ள தசை நார்கள், சவ்வுகள் இவை கிழிவதினால் கடுமையான வலி ஏற்படுகிறது.

    * டென்டினைடிஸ்: தோள் பட்டையை சுற்றியுள்ள தசைநாண்களில் ஏற்படும் அழற்சி, வீக்கம் வலி மற்றும் விறைப்பை ஏற்படுத்தும்.

    * திடீரென ஏற்படும் விபத்துகள், காயங்களினால் தோள்பட்டை மூட்டைச் சுற்றியுள்ள எலும்புகள், தசைகள் மற்றும் தசைநாண்களில் ஏற்படும் பாதிப்புகள்.

    * பர்சைடிஸ்: தோள்பட்டை மூட்டை மெத்தை போன்று தாங்கி உயவுடன் சுழலச் செய்யும் திரவம் நிறைந்த பைகளில் ஏற்படும் வீக்கம்.

    * எலும்பு தேய்மானம்: தோள்பட்டை மூட்டில் உள்ள குருத்தெலும்புகளில் ஏற்படும் சிதைவு.

    * உறைந்த தோள்பட்டை (புரோஷன் ஷோல்டர்): இது மூட்டைச் சுற்றியுள்ள இணைப்பு திசுக்களில் இறுக்கம் மற்றும் விறைப்பை ஏற்படுத்துகிறது.

    * தசைச் சுளுக்குகள்: சமநிலையற்ற படுக்கையில் படுப்பது, அதிக பாரத்தை தூக்குவது இவற்றால் தோள்பட்டையைச் சுற்றியுள்ள தசைகளில் ஏற்படும் பிடிப்புகள் கடுமையான வலியை தரும்.

    * கீல்வாதம்: கீல்வாத நோய்களிலும் தோள் பட்டையில் வீக்கத்துடன் வலி உருவாகிறது.

    * கழுத்து எலும்பு, நரம்புகளில் ஏற்படும் வலி, மார்பு அல்லது வயிறு போன்ற பிற பகுதிகளிலிருந்து தோன்றும் வலிகளும் தோள்பட்டையில் வலியை ஏற்படுத்தும்.

    சித்த மருத்துவ தீர்வுகள்:

    1) அமுக்கரா சூரணம் 1 கிராம், சிவனார் அமிர்தம்-200 மி.கி., முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம்-200 மி.கி. இவைகளை மூன்று வேளை வெந்நீர் அல்லது பாலில் உணவுக்கு பின்பு சாப்பிட வேண்டும்.

    2) அஸ்வகந்தா லேகியம் 1-2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    3) வலியுள்ள இடத்தில் கற்பூராதி தைலம், வாதகேசரி தைலம் இவைகளை தேய்த்து வெந்நீரில் ஒற்றடம் இட வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், அட்ரினலின் திரவம் சுரப்பு போன்றவை அதிகமாகலாம்.
    • கடின, மிகக்கடின உடற்பயிற்சிகளை மெதுமெதுவாக ஆரம்பித்து, பயிற்சி செய்யும் நேரத்தை படிப்படியாக அதிகரிப்பது நல்லது.

    கடின மற்றும் மிகக்கடின உடற்பயிற்சிகளை திடீரென்று அதிக நேரம் செய்யும்போது ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்பட கண்டிப்பாக வாய்ப்புண்டு. ஆனால் இது மிகமிக அரிதாகத்தான் நடக்கும். இதய நோய், சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், அதிக உடல் எடை, சீரற்ற இதய துடிப்பு உள்ளவர்கள், இதயத் தசைகள் வலுவிழந்தவர்கள் மிகக் கடின உடற்பயிற்சிகளை திடீரென்று அதிக நேரம் செய்யும்போது மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

    தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், அட்ரினலின் திரவம் சுரப்பு போன்றவை அதிகமாகலாம். இதனால் இதயத்திலுள்ள ரத்தக் குழாய்களின் உள்சுவரில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புக் கலவையான காறை வெடித்து, ரத்தக்குழாய்களை முழுமையாக அடைத்து மாரடைப்பை உண்டு பண்ணலாம். அல்லது இதயத்தில் இயற்கையாக ஏற்படும் மின்னோட்டத்தில் தொந்தரவு ஏற்பட்டு திடீர் மாரடைப்பு வரலாம்.

    மிகக்கடின உடற்பயிற்சிகளை செய்யும்போது பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் போன்ற தாது உப்புகள் மற்றும் கனிமங்கள் சேர்ந்த எலெக்ட்ரோலைட் பொருட்கள் குறையவோ, கூடவோ வாய்ப்புண்டு. இதனால், இதயம் உடனே பாதிக்கப்பட்டு மாரடைப்பு வரலாம்.

    கடின, மிகக்கடின உடற்பயிற்சிகளை மெதுமெதுவாக ஆரம்பித்து, பயிற்சி செய்யும் நேரத்தை படிப்படியாக அதிகரிப்பது நல்லது. கடினமான உடற்பயிற்சி செய்வதற்கு முன், 'வார்ம் அப்' எனப்படும் உடலை தயார்படுத்தும் பயிற்சிகளை செய்வது நல்லது. அப்படி இல்லாமல் திடீரென்று கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டால் இதயத்துக்கு வேலைப்பளு அதிகமாகி மாரடைப்பு வரலாம்.

    பொதுவாக உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து, உடலில் எப்பொழுதும் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

    கடின உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று எதிர்பாராதவிதமாக, நெஞ்சு மிகவும் இறுக்கமாக கனமாக இருக்கிறமாதிரி தென்பட்டாலோ, மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டாலோ, அதிகமாக வியர்த்துக் கொட்டினாலோ, தோள்பட்டை, இடதுகை, கழுத்து, தாடை, முதுகுப் பகுதி முதலியவைகளில் வலி ஏற்பட்டாலோ, உடனே உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கோ அல்லது அருகிலுள்ள இதயநோய் சிகிச்சை நிபுணரிடமோ சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனித உடலில் லேசான நேர்மறை மின்னூட்டம் உள்ளது.
    • புல் தரை, மணல் ஆகியவற்றில் நடப்பது கூடுதல் பலன்களை அளிக்கிறது.

    நிலத்தில் காலணி இன்றி வெறுங்கால்களால் நடப்பதன் மூலம் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என உலகின் பல நாடுகளிலும் 'பேர்புட் வாக்கிங்' பழக்கத்தை பலரும் கடைப்பிடிக்க தொடங்கி உள்ளனர்.

    வெறுங்கால் நடை என்ற இந்த செயல்பாடு, இயற்கையான ஒரு மனிதனின் நடையை மீட்டெடுத்து, கால் வலியில் இருந்து நிவாரணம் பெற உதவுவதுடன், இடுப்பு, முழங்கால்கள் இலகுவாக இயங்க உதவுகிறது என்றும் கூறுகின்றனர்.

    இதன் பின்னணியில் ஒரு எளிய அறிவியல் உள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, மனித உடலில் லேசான நேர்மறை மின்னூட்டம் உள்ளது. நமது செல்கள் மின் தூண்டுதல்கள் மூலம் செயல்பாடுகளை நடத்துகின்றன. நரம்பு மண்டலம் உடல் முழுவதும் மற்றும் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்ப மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால் நாம் சிந்திக்கவும், நகரவும், உணரவும் முடியும். ஓய்வெடுக்கும் செல்கள் உட்புறமாக எதிர்மறையாக மின்னூட்டம் பெற்றிருந்தாலும், வெளிப்புற செல் சூழல் நேர்மறையாக மின்னூட்டம் பெற்றது.



    பூமி ஒரு எதிர்மறை மின்னூட்டம் என்ற நெகடிவ் மின்னூட்டம் கொண்டுள்ளது. இந்தநிலையில், மனிதனின் கால்கள் நிலத்தில் பூமியுடன் தொடர்பை ஏற்படுத்தும் போது, பூமியை அழுத்துவதன் மூலம், உடலில் இருக்கும் அதிகப்படியான நேர்மறை மின்னூட்டம் சமநிலை அடைந்து உடலில் ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளை குணப்படுத்தும் விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

    நிலத்தில் வெறுங்கால்களால் நடப்பதன் மூலம், மன அழுத்தம் குறைகிறது. உடல் ஆற்றல் அதிகரிக்கிறது மற்றும் ரத்த அழுத்தம் குறைகிறது என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    புல் தரை, மணல் ஆகியவற்றில் நடப்பது கூடுதல் பலன்களை அளிக்கிறது. இது நம்மை பூமியுடன் மின்சாரம் மூலம் மீண்டும் இணைக்கும் ஒரு சிகிச்சை நுட்பம் என்றும் இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    அதேவேளையில் காலணிகள் இன்றி நிலத்தில் நடப்பது பல்வேறு கிருமிகள் உடலில் தொற்றி உடல் நலனை பாதிக்கும் என்றும் பல்வேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓட்ஸ் அல்லது முழு தானிய உணவுகளை உட்கொள்ளலாம்.
    • ரத்த ஓட்டத்தை சீராக முடுக்கிவிடுவதற்கு வழிவகை செய்யும்.

    காலையில் எழுந்ததும் ஒருசில பழக்கவழக்கங்களை பின்பற்றுவது உடலை மட்டுமல்ல மனதையும் உற்சாகமாக செயல்பட வைக்கும். அத்தகைய பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

    1. உலர் திராட்சை நீர் பருகுதல்

    ஊற வைத்த உலர் திராட்சையில் இயற்கை சர்க்கரை, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இரவில் 5 முதல் 7 உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை பருகிவிட்டு உலர் திராட்சையை சாப்பிடவும்.

    * உடலின் ஆற்றலை அதிகரிக்க செய்யும்.

    * செரிமானத்தை மேம்படுத்தும்.

    * இரும்புச்சத்து உறிஞ்சுதலை துரிதப்படுத்தும்.

    * உடலில் இயற்கையாக உள்ள ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும்.

    2. அலைபேசியை தவிர்த்தல்

    காலையில் எழுந்த உடனேயே அலைபேசியை பார்க்கும் ஆவல்தான் பலருக்கும் ஏற்படும். அப்படி அலைபேசியை பார்ப்பது மனதை திசை திருப்பும், நாளடைவில் மன அழுத்தத்தை தூண்டுவதற்கு காரணமாகிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் எழுந்ததும் 30 நிமிடங்கள் அறவே அலைபேசியை தவிர்த்துவிட வேண்டும். அந்த வழக்கத்தை கடைப்பிடிப்பது ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருக்கும். அதற்கு மாற்றாக சிறிது நேரம் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருக்கலாம், ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியே விட்டு சுவாசிக்கலாம்.



    3. வெதுவெதுப்பான நீர் அருந்துதல்

    காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை நீரை பருக விரும்பாதவர்கள் அதற்கு மாற்றாக வெதுவெதுப்பான நீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

    இது செரிமான அமைப்பின் செயல்பாட்டை தூண்டிவிடும். உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவிடும்.

    4. சமச்சீரான காலை உணவு

    காலையில் வழக்கமாக உண்ணும் உணவுடன் புரதச்சத்து இடம் பெறும் உணவுப்பொருளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டை சிறந்த தேர்வாக அமையும். ஓட்ஸ் அல்லது முழு தானிய உணவுகளை உட்கொள்ளலாம். வாழைப்பழம் அல்லது பெர்ரி வகை பழங்களையும் சாப்பிடலாம். காலையில் வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்து விட வேண்டும். அவை செரிமானத்தை மெதுவாக்கி மந்தமான உணர்வை தரும்.

    5. 5 நிமிட மன பயிற்சி

    காலையில் 5 நிமிடங்கள் மனதிற்கு தனியாக பயிற்சி அளிக்க வேண்டியதும் அவசியமானது. அது தியானமாகவோ, ஆழ்ந்த சுவாசமாகவோ, இசை கேட்பதாகவோ இருக்கலாம். இதற்காக 5 நிமிடங்கள் செலவிட்டாலே போதும். தேவையற்ற பதற்றத்தை குறைத்து மனதை நிலைநிறுத்த உதவிடும். இல்லாவிட்டால் எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் மனதை சிறிது நேரம் அமைதியாக வைத்திருந்தாலே போதும். அன்றைய நாளின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும்.

    6. உடற்பயிற்சி-யோகாசனம்

    * காலையில் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் 5 நிமிடங்கள் உடலுக்கு அசைவு கொடுக்கும் எளிய உடற்பயிற்சிகளை செய்தாலே போதுமானது. ரத்த ஓட்டத்தை சீராக முடுக்கிவிடுவதற்கு வழிவகை செய்யும்.

    * எளிய யோகாசன பயிற்சிகளையும் செய்யலாம். அல்லது சூரிய நமஸ்காரம் மேற்கொள்ளலாம். இவை மனதுக்கு இதமளிக்கும். முதுகெலும்புக்கும் பலம் சேர்க்கும்.

    7. 3 விஷயங்களுக்கு முன்னுரிமை

    அன்றைய நாளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளில் முதல் 3 விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். அதனை சுற்றியே சிந்தனையும், செயல்பாடும் அமையும். அது அன்றைய நாளை வேறு விஷயங்களுக்கு கவனத்தை திசை திருப்பாமல் பார்த்துக்கொள்ளவும் உதவிடும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முந்திரி பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன.
    • முந்திரி பழம் கோடை காலங்களில் சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

    முந்திரி பழம் கோடை காலங்களில் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனை கொல்லாம் பழம் என்றும் அழைப்பார்கள். முந்திரி பழம் இனிப்பு மற்றும் சற்று துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இது ஒரு மென்மையான பழம்.

    இந்த பழத்தில் கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் பி, இரும்பு, கார்போஹைட்ரேட், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.

    முந்திரி பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால் நீரின் அளவு அதிகமாக இருக்கும். இதை உட்கொள்வது ரத்த சக்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. முந்திரி பழம் நோய்கள் வராமல் தடுக்கவும், காயங்களை ஆற்றவும், ரத்த சோகையை போக்கவும் உதவுகிறது.

    இதனை கோடை காலங்களில் சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    வைட்டமின் சி முந்திரி பழத்தில் அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அளவை கட்டுப்படுத்துகிறது. எலும்பு வளர்ச்சிக்கும் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கவும் முந்திரி பழம் பயன்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தினமும் குறைந்த பட்சம் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
    • தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் பருமன் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    ஞாபக மறதி அல்லது நினைவாற்றல் இழப்பு என்பது ஆங்கிலத்தில் 'அம்னீசியா' என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்பட முக்கிய காரணங்கள்:-

    1) ஸ்ட்ரோக் (பக்கவாதம்): இதில் மூளைக்கு ரத்த ஓட்டம் குறைவதால் நினைவாற்றலுக்கு பொறுப்பான பகுதிகளில் சேதம் உண்டாகி ஞாபக மறதி ஏற்படுகிறது, 2) மூளைக்கு அதிர்ச்சியை உண்டாக்கும் மூளை காயங்கள் அல்லது விபத்துக்கள், 3) மூளையில் ஏற்படும் நோய் தொற்று, 4) நீரிழிவு நோய், 5) சில மருந்துகளின் பக்க விளைவுகள், 6) நீண்ட காலமாக மது அருந்தும் பழக்கம், 7) வளர்ச்சிதை மாற்றம் நோய்க்குறி, 8) தைராய்டு சுரப்பி குறைபாடு, 9) மன அழுத்தம்

    சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அதிகமாகும் போது மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தை குறைத்து நரம்பணுக்களில் சேதத்தை உண்டாக்கி நினைவாற்றலை குறைக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடலில் இன்சுலின் குறைவாக சுரப்பதால் மூளையில் உள்ள நரம்பு செல்களில் உள்ள இன்சுலின் ஏற்பிகள் (ரிசெப்டர்) தூண்டப்படுவது குறைந்து ஞாபக மறதி ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு இன்சுலின் எதிர்மறை நிலையால் மூளையில் அமிலாய்டு புரதங்களின் பிளேக்குகள் அதிகமாகி ஞாபக மறதி ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு பெரும்பாலும் சமீபத்திய நிகழ்வுகள் அல்லது தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள சிரமம் ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் நினைவாற்றலை மேம்படுத்த மருத்துவரை கலந்தாலோசித்து அதற்குரிய மருந்துகளை உட்கொண்டால் பலன் கிடைக்கும்.

    சர்க்கரை நோயாளிகள் ஞாபக மறதி பிரச்சினை வராமல் தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:-

    காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவு முறை பழக்கத்தை பின்பற்றவும். குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், வால்நட் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் பருமன் வராமல் பார்த்துக் கொள்ளவும். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருங்கள். மது பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். தினமும் குறைந்த பட்சம் 6 மணி நேரமாவது தூங்குங்கள். மன அழுத்தத்தை குறைத்து கொள்ளுங்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடல் தினமும் சரியாக இயங்க கொழுப்புச் சத்து கண்டிப்பாக தேவை.
    • இதயத்துக்கு ரத்தம் போகவில்லை என்றாலோ, அல்லது குறைவாக சென்றாலோ, முதலில் நெஞ்சுவலி, அப்புறம் மாரடைப்பு ஏற்படலாம்.

    உடல் தினமும் சரியாக இயங்க கொழுப்புச் சத்து கண்டிப்பாக தேவை. இது போதுமான அளவில் இருந்தால் உடலில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. உடல், தான் இயங்குவதற்கு உபயோகித்தது போக மீதி கொழுப்புப் பொருட்கள் உடலில் மற்றும் ரத்தக் குழாய்களில் மெதுமெதுவாக படிய ஆரம்பிக்கிறது. இந்த அதிகப்படியான கொழுப்பு ரத்தக்குழாய்களிலுள்ள மற்ற சில பொருட்களுடன் சேர்ந்து கொழுப்புகளின் கலவையாக கடினமான 'காறை'யாக மாறி ரத்தக் குழாய்களின் உள்சுவர்களில் படிந்துவிடுகிறது.

    நிறைய வகைகளில் கொழுப்புப் பொருட்கள் உடலில் இருந்தாலும் முக்கியமான இரண்டு கொழுப்புகளைப் பற்றித்தான் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். 1) 'எல் டி எல்' என்று சொல்லக்கூடிய கெட்ட கொழுப்பு வகை, 2) 'ஹெச் டி எல்' என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பு வகை ஆகும். 'எல் டி எல்' என்ற கெட்ட கொழுப்பானது ரத்தக்குழாய்களின் உள்பகுதியில் படிய ஆரம்பித்து ரத்த ஓட்டம் சீராக போவதைத் தடுத்து, இதய நோயை உண்டாக்குகிறது. 'ஹெச் டி எல்' என்ற நல்ல கொழுப்பானது ரத்தத்திலிருந்து கெட்ட கொழுப்பை அப்புறப்படுத்தி, கல்லீரலுக்கு அனுப்பி விடுகிறது. இதன் மூலம் கொழுப்பு ரத்தக் குழாய்களின் உள்பகுதியில் படிவது தடுக்கப்படுகிறது.

    கெட்ட கொழுப்புகளின் கலவையான காறை, இதயத்துக்கு ரத்த சப்ளை செய்யும் ரத்தக் குழாய்களிலும் படிந்து, அதை அடைத்து, எதிர்பாராதவிதமாக ஒருநாள் திடீரென்று, இதயத்துக்கு சுத்தமாக ரத்தம் போகவிடாமல் செய்துவிடுகிறது. இதயத்துக்கு ரத்தம் போகவில்லை என்றாலோ, அல்லது குறைவாக சென்றாலோ, முதலில் நெஞ்சுவலி, அப்புறம் மாரடைப்பு ஏற்படலாம்.

    நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில், கெட்ட கொழுப்பு எவ்வளவு இருக்கிறது, நல்ல கொழுப்பு எவ்வளவு இருக்கிறது என்றெல்லாம் பார்த்து, பார்த்து நாம் சாப்பிடுவதில்லை. தினமும் உடலுழைப்பு, ஆரோக்கியமான உணவு, போதுமான உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள், நல்ல சிந்தனை இவைகளெல்லாம் இருந்தால், அதிக கொழுப்பு உடலில் சேர வாய்ப்பில்லாமற் போய்விடுகிறது. இவைகளெல்லாம் இல்லாதபோது ரத்தத்தில் கொழுப்பு அதிகமாகி, கடைசியில் மாரடைப்பில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.

    40 லிருந்து 50 வயது வரை உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை, 'ரத்தக் கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை' செய்ய வேண்டும். 50 லிருந்து 60 வயது வரை உள்ளவர்கள், ஆண்டுக்கு இருமுறை ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். 60 வயதைத் தாண்டியவர்கள், ஆண்டுக்கு 4 முறை ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். உங்கள் இதய சிகிச்சை நிபுணரிடம் 6 மாதத்துக்கு ஒருமுறை சென்று, ஆலோசனைகளை கண்டிப்பாக பெற வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாய்வு வலி மேல் வயிற்றில் நெஞ்சுக்குக் கீழே உருவாகி நெஞ்சுப் பகுதிக்கு பரவும்.
    • மாரடைப்பினால் ஏற்படும் நெஞ்சுவலியானது தொடர்ந்து இருக்கும்.

    வாய்வு பிடிப்பு, மாரடைப்பு இரண்டுமே நெஞ்சு வலியை உண்டாக்கும். அநேக மக்களுக்கு எல்லா நெஞ்சு வலியும் இதயம் சம்பந்தப்பட்டதாகத் தான் இருக்குமோ என்ற பயமும், கவலையும் தான் அதிகமாக இருக்கின்றது. ஆனால் எல்லா நெஞ்சு வலிகளும் இதயம் சம்பந்தப்பட்டது இல்லை என்று நினைத்து ஒதுக்கிவிடவும் முடியாது.

    வாய்வு உண்டாக்கும் நெஞ்சுவலியின் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

    அடிக்கடி ஏப்பம் வரும், வயிற்றைப் புரட்டும், வயிறு உப்புசமாக ஊதிப்போய் இருக்கும். ஆசனவாய் வழியாகவும் காற்று வெளியேறிக் கொண்டே இருக்கும். நெஞ்சுவலி விட்டுவிட்டு குத்துகிற மாதிரி பிடிப்பு மாதிரி இருக்கும். வாய்வு வலி மேல் வயிற்றில் நெஞ்சுக்குக் கீழே உருவாகி நெஞ்சுப் பகுதிக்கு பரவும்.

    இனி மாரடைப்பை உண்டாக்கும் நெஞ்சு வலியின் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். சிலருக்கு மார்பு பகுதி திடீரென கனமாகி மிகமிகக் கடுமையான நெஞ்சுவலி வரலாம். திடீரென வரும் மாரடைப்பு மிகுந்த சக்தியுடன் வருவதால் சில நிமிடங்களில் முதலுதவி சிகிச்சை செய்தால் தான் உயிர் பிழைக்க வைக்க நேரிடும்.

    மாரடைப்பினால் ஏற்படும் நெஞ்சுவலியானது தொடர்ந்து இருக்கும். வலி மிக மிக கடுமையானதாக இருக்கும். நெஞ்சைக் கசக்கி பிழிகிற மாதிரி இருக்கும். நெஞ்சுப்பகுதியிலிருந்து இடது கை விரல்கள், இடது பக்க தாடை, தோள்பட்டை, கழுத்து, முதுகுப் பகுதி முதலிய இடங்களுக்கு வலி பரவும். மூச்சு விடுவதில் சிரமம், அதிகமாக வியர்வை, வாந்தி, மயக்கம் வருவது போன்ற உணர்வு இருக்கும். சிலருக்கு மேற்சொன்ன அறிகுறிகள் எல்லாமே இருக்கும். சிலருக்கு இவைகளில் ஒருசில அறிகுறிகள் மட்டும் ஏற்படலாம்.

    கடின உடற்பயிற்சி செய்யும்போது, கடின உடல் உழைப்பு செய்யும்போது அதிக மன அழுத்தம், மன உளைச்சலில் இருக்கும்போது மாரடைப்பு வலி வரக்கூடும்.

    நீங்கள் இருக்கும் இடத்தை உட்கார்ந்திருக்கும் நிலையை சற்று மாற்றினால் வாய்வு உடலிலிருந்து வெளியாகி உங்களுக்கு பிரச்சினை தீர வாய்ப்புண்டு. வெந்நீர், சீரக நீர் குடித்தால் கூட வாய்வு வெளியேறி வலி குறைய வாய்ப்புண்டு. இதற்குப்பிறகும் வலி போகவில்லை என்றால் அது இதயம் சம்பந்தப்பட்ட வலிதான் என்று முடிவு செய்யலாம்.

    மாரடைப்பினால் நெஞ்சுவலியா, வாய்வுக் கோளாறினால் நெஞ்சுவலியா என்பதைக் கண்டுபிடிக்க இரண்டுக்கும் உண்டான அறிகுறிகளை மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏனோ தானோ என்று மெத்தனமாக இருக்கக்கூடாது.

    மாரடைப்பு மட்டுமல்லாது பலவிதமான இதய நோய்களும், நுரையீரல் நோய்களும், ஆஸ்துமா, காசநோய், கொரோனா நோய், கணைய நோய், நெஞ்சுப் பகுதியிலுள்ள உணவுக்குழாய் சுருங்கிப் போதல், விலாஎலும்பு விரிசல் போன்றவைகளினால் கூட நெஞ்சுவலி ஏற்படலாம். உங்கள் குடும்ப டாக்டரின் ஆலோசனையுடன் இதய சிகிச்சை நிபுணரை உடனே சந்தித்து அவசர முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சப்ரோபைட்டுகள் என்ற பூஞ்சை காளான் இலைகள், வேர்கள் மற்றும் இறந்த மரம் போன்ற இறந்த கரிமப் பொருட்களில் வளரும்.
    • வெள்ளை பட்டன், சிப்பி காளான்கள் போன்ற பல நல்ல உணவை சுவைக்கும் மற்றும் மருத்துவ வகை காளான்கள் அடங்கும்.

    சமீப காலங்களில் காளான்கள் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாக மாறிவிட்டது. காளான் என்பது காய்கறி குடும்ப பயிர் அல்ல. உண்ணக்கூடிய காய்கறிகள் தரும் தாவரங்கள் குளோரோபில் என்ற பச்சையம் மூலம் சூரிய ஒளியில் இருந்து ஆற்றலை பெற்று அதனை மாவுச்சத்து என்ற கார்போஹைட்ரேட் ஆக மாற்றி விளைகிறது. ஆனால் காளான்களில் குளோரோபில் இல்லை. அவை ஒளிச்சேர்க்கை செய்ய முடியாது. அப்படி இருக்கும் போது இவை எப்படி வளர்கின்றன?

    இந்த காளான்கள் தாங்கள் வளர மற்ற தாவரங்களில் இருந்து தங்களுக்கு தேவையான சத்தான கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக்கொள்கின்றன. இதனால் தான் இந்த காளான்களை பூஞ்சை குடும்ப தாவரமாக அடையாளப்படுத்தி உள்ளனர்.

    இந்த பூஞ்சை வகை காளான்கள் 3 வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

    சப்ரோபைட்டுகள் என்ற பூஞ்சை காளான் இலைகள், வேர்கள் மற்றும் இறந்த மரம் போன்ற இறந்த கரிமப் பொருட்களில் வளரும். அவை அதிலிருந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் தாதுக்களை உறிஞ்சி வளருகின்றன. இந்த பிரிவில் வெள்ளை பட்டன், சிப்பி காளான்கள் போன்ற பல நல்ல உணவை சுவைக்கும் மற்றும் மருத்துவ வகை காளான்கள் அடங்கும்.

    இரண்டாவதாக, ஒட்டுண்ணிகள் என்ற பூஞ்சை காளான் உயிருள்ள மரங்கள் மற்றும் தாவரங்களில் வளர்ந்து, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி செழிப்பாக வளரும். இவற்றை காளான் கொலையாளிகள் என்கின்றனர். இதற்கு காரணம், ஒரு மரம் விழுந்து விட்டால் அதன் மேல் தோன்றும் இந்த காளான்கள் அந்த மரத்தின் மிச்சம் மீதி சத்துக்களை உறிஞ்சி இல்லாமல் செய்து விடும்.

    மூன்றாவதாக, மைக்கோரைசா வகை காளான்கள். இவை உயிருள்ள மரங்களின் வேர்களில் வளர்ந்து ஒரு கூட்டு வாழ்வை ஏற்படுத்தி, மரத்தில் இருந்து ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்கின்றன.

    நிலத்தில் மற்றும் தாவரங்களில் சத்துக்களை உறிஞ்சி வாழும் காளான்களில் இயற்கையாகவே பல விதமான சத்துக்கள் நிறைந்துள்ளதால் சத்தான உணவாக கருதப்படுகிறது. ஆனால், அனைத்து காளான்களும் உண்ணத்தகுந்தவை அல்ல.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாகப் பேச வேண்டும்.
    • புடலங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, பசலைக்கீரை, முருங்கைக்கீரை இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஆண்களுக்கு தாம்பத்திய குறைபாடு, ஆர்வமின்மை ஏற்படுவது போன்று பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வமும் இல்லாத நிலை காணப்படும். 'பிரிஜிடிட்டி' என்று மருத்துவ ரீதியாக இது அழைக்கப்படுகிறது. மூளைக்கும், பெண்ணுறுப்பிற்கும் இடையிலான தொடர்பு தடைபடுவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

    மாதவிடாய்க்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்தால், பாலியல் ஆசையும், இனப்பெருக்க உறுப்புகளில் ரத்த ஓட்டமும், வழுவழுப்பான திரவம் சுரப்பதும் குறைகிறது. பிரசவத்திற்குப் பிறகும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் உடலின் ஹார்மோன் அளவுகள் மாறுவதால் தாம்பத்ய விருப்பம் பாதிக்கும்.

    புற்றுநோய், நீரிழிவு நோய், சிறுநீரக செயலிழப்பு, மல்டிபிள் ஸ்களீரோசிஸ், இதய நோய், மனச்சோர்வு மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் ஆகிய நோய் பாதிப்புகள் மற்றும் சில மருந்துகள் பாலியல் ஆசையைக் குறைத்து, உச்சக்கட்டத்தை அடைவதை கடினமாக்கும். யோனி தசைகள் நீட்சி குறைவாக இருப்பது (டிஸ்பெரூனியா) வலிமிகுந்த தாம்பத்தியத்திற்கு வழிவகுக்கும். நீண்டகால மன அழுத்தம், மனப்பதற்றம், மனச்சோர்வு, கவலைகள் இவை பாலியல் விருப்பமின்மையை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் பிரச்சனைகள் தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கலாம்.

    வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாகப் பேச வேண்டும். மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். இது தாம்பத்ய உறவில் கவனம் செலுத்தவும் அதை அனுபவிக்கவும் உதவும். சைக்கிளிங், நீச்சல், நடைப்பயிற்சி, விளையாட்டு பயிற்சிகள், ஹெகல் பயிற்சிகள் இனப்பெருக்க உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

    தாம்பத்தியத்தின்போது யோனி வறட்சி அல்லது வலி ஏற்பட்டால், இதற்கான மாய்ஸ்சுரைசர் அல்லது தேங்காய் எண்ணெய், சோற்றுக் கற்றாழை ஜெல் இவைகளை பயன்படுத்தலாம்.

    முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், அவகோடா, அடர் சாக்லெட், மாம்பழம், பலாப்பழம், மாதுளம்பழம், பேரீச்சம்பழம், அத்திப்பழம், செவ்வாழைப்பழம், எள்ளுருண்டை, வெந்தயக்களி, முட்டை, கோழிக்கறி, கடல் உணவுகள், பால்பொருட்கள், முருங்கைக்காய், புடலங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, பசலைக்கீரை, முருங்கைக்கீரை இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    சித்த மருத்துவ சிகிச்சைகள்

    * சதாவரி லேகியம் காலை, இரவு இரு வேளை ஐந்து கிராம் வீதம் சாப்பிட வேண்டும்.

    * குமரி லேகியம் காலை, இரவு ஐந்து கிராம் வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

    * மலச்சிக்கல் இருந்தால் கடுக்காய் பொடியை இரவு நேரத்தில் 1 கிராம் வீதம் வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாம்பழங்களில் இருக்கும் வைட்டமின் சி பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
    • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் வல்லமையையும் கொண்டிருக்கின்றன.

    தற்போது மாம்பழ சீசன். விதவிதமான மாம்பழங்களை ருசிக்க பலரும் ஆர்வம் காட்டுவார்கள். அது இனிப்பு கலந்த பழம் என்று நிராகரிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் மாம்பழங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் தொடங்கி செரிமானத்தை மேம்படுத்துவது வரை ஏராளமான நன்மைகளை கொண்டவை. இந்த சமயத்தில் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 8 எதிர்பாராத ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.

    1. சத்துக்கள் அதிகம்

    மாம்பழம் வெறும் இனிப்பு பழம் மட்டுமல்ல, சத்தானவை. ஒரு மாம்பழத்தில் (சுமார் 200 கிராம்) தோராயமாக 150 கலோரிகள், சுமார் 3 கிராம் நார்ச்சத்து மற்றும் தினசரி வைட்டமின் சி தேவையில் 75 சதவீதமும், வைட்டமின் ஏ தேவையில் 20 சதவீதமும் கொண்டிருக்கிறது. அத்துடன் பி6, தாமிரம், வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றையும் வழங்குகிறது. மாம்பழத்தில் கொழுப்பு மற்றும் சோடியமும் குறைவாக உள்ளது. மேலும் இயற்கை சர்க்கரைகள் நார்ச்சத்துடன் கலந்திருக்கின்றன. அதனால் செயற்கை இனிப்பு வகைகளை விட இது சிறந்த தேர்வாக அமைகிறது.

    2. சருமத்தை பிரகாசமாக்கும்

    மாம்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை கொலாஜனை உருவாக்கவும், மந்தமான சருமத்திற்கு பொலிவூட்டவும், நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. தினமும் மாம்பழத்தை சாப்பிடுவது சருமத்திற்கு பளபளப்பு சேர்ப்பதோடு இயற்கையாகவே சரும அழகை பிரகாசிக்க செய்யும்.

    3. செரிமானத்திற்கு உதவும்

    மாம்பழங்களில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சுமூகமாக நடைபெற உதவும். அதிலிருக்கும் அமிலேஸ் போன்ற இயற்கை நொதிகள் உணவை உடைப்பதை எளிதாக்கும். வயிறு உப்புசமாகவோ, மந்தமாகவோ இருப்பதாக உணர்ந்தால் மாம்பழங்கள் சாப்பிடலாம்.

    4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

    மாம்பழங்களில் இருக்கும் வைட்டமின் சி பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் வல்லமையையும் கொண்டிருக்கின்றன.



    5. கண் ஆரோக்கியத்தை காக்கும்

    கண்கள் வறண்டு போனாலோ, சோர்வடைந்தாலோ மாம்பழம் சாப்பிடுவது பலனளிக்கும். ஏனெனில் மாம்பழத்தில் வைட்டமின் ஏ, லுட்டீன், ஜியாசாந்தைன் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை கண் வறட்சி, சோர்வு மற்றும் வயது தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.

    6. பசியை சமநிலைப்படுத்தும்

    நன்கு பழுத்த மாம்பழத்தில் நார்ச்சத்துடன் கலந்திருக்கும் இயற்கையான இனிப்பு, நிறைவாக சாப்பிட்ட உணர்வை தரும். பசியை சமநிலைப்படுத்தி அதிகம் சாப்பிடாமல் தடுக்கும். உடல் ஆற்றலை பலப்படுத்தும்.

    7. முடியின் வலிமையை அதிகரிக்கும்

    மாம்பழத்தில் இருக்கும் போலேட், வைட்டமின்கள் ஏ, சி போன்றவை உச்சந்தலை மற்றும் முடிக்கு வலிமை சேர்க்கும் ஊட்டச்சத்துக்களாகும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். பருவ காலம் முழுவதும் முடிகள் வலுவாக இருக்க உதவும்.

    8. உற்சாகமாக வைத்திருக்கும்

    மாம்பழங்களில் உள்ளடங்கி இருக்கும் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நீர்ச்சத்துக்கள் உடலுக்கு தேவையான இயற்கையான சக்தியை கொடுக்கும். அதனால் உற்சாகத்துடன் அன்றைய நாளை இயங்க வைக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு குழந்தை பிறந்த பின்னர் இரண்டாவது முறை மகப்பேறு அடையாத நிலையை இரண்டாம்பட்ச குழந்தையின்மை என்று கூறப்படுகிறது.
    • உடல் பருமன் இருந்தால் அதைக் குறைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    குழந்தையின்மை என்பது, திருமணமான தம்பதியர் தொடர்ந்து ஒரு வருடம் தாம்பத்தியத்தில் இருந்தும் மகப்பேறு அடையாத நிலையாகும். இதை முதன்மை குழந்தைப் பேறின்மை என்றும், ஒரு குழந்தை பிறந்த பின்னர் இரண்டாவது முறை மகப்பேறு அடையாத நிலையை இரண்டாம்பட்ச குழந்தையின்மை என்றும் கூறப்படுகிறது.

    காரணம்

    உலகம் முழுவதும் குழந்தையில்லா தம்பதிகளின் விகிதம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், நாகரிக வாழ்வியல் முறைகள், தவறான உணவுப்பழக்கம், குறைந்த பட்ச உடற்பயிற்சி கூட இல்லாதிருத்தல், மன அழுத்தம், மனக்கவலைகள். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலிருப்பது, பொருளாதார நெருக்கடிகள், கொஞ்ச நாட்கள் இளமையை நன்கு அனுபவித்துவிட்டு அதன் பின்னர் குழந்தையைப் பற்றி யோசிக்கலாம் என்று கருத்தரித்தலை தள்ளிப்போடுதல், மருத்துவர் ஆலோசனையின்றி கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது, ஆண், பெண் இனப்பெருக்க மண்டல பிரச்சனைகள் உள்பட குழந்தையின்மைக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.

    ஆண்களுக்கான உடலியல் பிரச்சனை

    அசூஸ்பெர்மியா (விந்தணுக்கள் இல்லாத நிலை), ஏஸ்பெர்மியா (விந்து நீரே வெளியாகாமல் இருப்பது), ஒலிகோஸ்பெர்மியா (விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவு), அஸ்தினோஸ்பெர்மியா (விந்தணுக்களின் இயக்க குறைபாடு), டெரடோஸ்பெர்மியா (விந்தணுக்களின் அமைப்பில் ஏற்படும் குறைபாடு), ஹைபோஸ்பெர்மியா (விந்தணுக்களின் அளவு குறைபாடுகள்), நெக்ரோசூஸ்பெர்மியா (விந்து நீரில் உயிருள்ள விந்தணுக்கள் இல்லாத நிலை), தாம்பத்திய குறைபாடுகள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு.

    பெண்களுக்கான உடலியல் பிரச்சனை

    சினைப்பை நீர்க்கட்டிகள், கருப்பை தசை கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ், அடினோமயோமா, சினைப்பாதை அடைப்புகள், புரோஜஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன், புரோலாக்டின், ஆன்டி முல்லரின் ஹார்மோன் போன்றவைகளின் சீரற்ற செயல்பாடுகள்.

    சித்த மருத்துவம்

    சித்த மருத்துவத்தில் குழந்தைப் பேறின்மை நீங்கி கருத்தரிக்க உதவும் சித்த மருத்துவக் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. இதை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்துவது நல்லது.

    பெண்களுக்கு

    * மாதவிடாய் காலங்களில் அரசமரத் தளிர் இலைகளை அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கரு உண்டாகும். இதை உடல் ரீதியான காரணம் இல்லாமல் மகப்பேறு தாமதமடையும் ஏராளமான பெண்களுக்கு அனுபவ ரீதியாக பலன் தந்துள்ளது.

    * மாதவிடாய் ஒழுங்காக வருவதற்கு அசோகப்பட்டை, முள்முருக்கு பூ, கருஞ்சீரகம், மரமஞ்சள், சதகுப்பை, சோற்றுக் கற்றாழை போன்ற மூலிகை மருந்துகள் நற்பலனைத் தரும்.

    * விஸ்ணுகிரந்தி செடியை பொடி செய்து மாதவிலக்கு வந்த முதல் மூன்று நாட்கள் வெந்நீரில் சாப்பிட்டு வர மகப்பேறு உண்டாகும்.

    * புத்திரச் சீவி விதையை பொடி செய்து காலை, இரவு இருவேளை தேனில் கலந்து சாப்பிட்டால் குழந்தைப்பேறு உண்டாகும்.

    ஆண்களுக்கு

    * முருங்கை விதை, வாதுமை விதைகள், நெருஞ்சில் விதை, நீர்முள்ளி விதை, ஆலம் விதை, பூனைக்காலி விதை, முள்ளங்கி விதை போன்றவை விந்தணுக்களை அதிகரிக்கும்.

    * விறைப்புத்தன்மை குறைபாடுகள் சீராக, நிலப்பனைக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, அமுக்கரா கிழங்கு, பூமிசர்க்கரைக் கிழங்கு, சாதிக்காய், சாதிபத்திரி, மதனகாமப்பூ, கசகசா, வாலுழுவை போன்ற மூலிகைகள் நல்ல பலனைத் தரும்.

    * உடல் பருமன் இருந்தால் அதைக் குறைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆண், பெண் இருவரும் தினமும் ஹெகல் பயிற்சி செய்து வர நல்ல பலன் கிடைக்கும். அதிக கலோரி ஆற்றலைத் தரும் இனிப்பு வகைகள், பேக்கரி உணவுகள், நொறுக்குத் தீனிகள் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    * மன அழுத்தம், மன உளைச்சல், மனக்கவலை இன்றி ஒருமித்த உணர்வுடன், பிரார்த்தனைகளுடன் கணவன்-மனைவி சேரும்போது, இல்லத்தில் துள்ளி விளையாட பிள்ளைச் செல்வம் பிறக்கும்.

    ×