என் மலர்

    பொது மருத்துவம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உணவை ஜீரணிக்க அதிக ரத்தம் தேவைப்படுகிறது.
    • மதிய உணவுக்கு பிறகு மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது.

    மதிய உணவுக்கு பிறகு தூக்கம், மந்தம் மற்றும் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும். இதனை உணவு கோமா என்று அழைப்பார்கள். மதிய வேளையில் தூக்கம் ஏன் வருகிறது என்பதற்கான காரணங்களில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


    மதியம் உணவு சாப்பிட்ட பிறகு பலருக்கும் தூக்கம் வருவதை போன்ற உணர்வு ஏற்படும். அதோடு செரிமான அமைப்பிற்கு உணவை ஜீரணிக்க அதிக ரத்தம் தேவைப்படுகிறது. மதிய உணவுக்கு பிறகு மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. மதிய உணவுக்கு பிறகு நாம் மந்தமாக இருக்கவும், தூக்கம் வரவும் இது தான் காரணம்.

    உணவு உட்கொண்ட உடனேயே செரிமான செயல்முறைகளால் ரத்த சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படுகிறது. இதனால் உண்ட மயக்கம் ஏற்படுகிறது.


    மேலும் காலை உணவை தவிர்த்துவிட்டு நேரடியாக மதிய உணவை உண்பவர்களுக்கு தான் அதிக அளவில் இந்த மந்தமான உணர்வு ஏற்படும். அளவுக்கு அதிகமான உணவை உண்பதால் செரிமானம் ஆக நேரம் எடுக்கும். எனவே மதிய உணவுக்கு பிறகு உடலில் சோர்வு ஏற்படும்.

    ஆகவே காலை நேரத்தில் முழு தானியப்பொருட்கள், ஓட்ஸ், பிரவுன் ரொட்டி, முட்டை மற்றும் பழங்களை சாப்பிடுவது உடலில் சோர்வு ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வயிற்றில் இருந்தும், சிறுகுடலில் இருந்தும் விரைவாக உறிஞ்சப்படுகிறது.
    • மனச்சோர்வு, பதற்றம் அல்லது நரம்பு பதற்றத்தை உருவாக்குகிறது.

    ஆல்கஹால் என்ற சொல் 'அல்குஹ்ல்' என்ற அரபு வார்த்தையிலிருந்து வந்தது. தற்போது மது வகைகள் அனைத்தும் ஆல்கஹால் எனப்படுகிறது. ஆல்கஹாலின் வீரியத்தை அது உடலுக்குள் சென்ற பின் ஏற்படுத்தும் விளைவுகளை வைத்து அறிந்து கொள்ள முடியும்.


    வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படும் ஆல்கஹால் விரைவாக உறிஞ்சப்படுகிறது. இதற்கு காரணம் இது அதிக கொழுப்பில் கரையக் கூடியது மற்றும் உடலின் தசைகளில் விரைவாக பரவக்கூடியது. குறிப்பாக வயிற்றில் இருந்தும், சிறுகுடலில் இருந்தும் விரைவாக உறிஞ்சப்படுகிறது.

    உதாரணமாக 60 மி.லி. ஆல்கஹாலை வெறும் வயிற்றில் சில நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டால், ஒன்று முதல் 1½ மணி நேரத்திற்குள் ரத்தத்தில் கலந்து விடும். மேலும் 6 முதல் 8 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக ரத்தத்தில் இதன் தன்மை நீடித்து காணப்படும்.

    ஆல்கஹாலின் மிக முக்கியமான பாதிப்பு மத்திய நரம்பு மண்டலத்தில் காணப்படுகிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தை ஆக்கிரமிக்கும் போது மனச்சோர்வு, பதற்றம் அல்லது நரம்பு பதற்றத்தை உருவாக்குகிறது.

    ஒரு வித தூக்க கலக்கம், மந்தமான பேச்சு, மன குழப்பம், நிலையற்ற நடை, இரட்டை பார்வையை ஏற்படுத்துகிறது. உடல் மூளையின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் உடல் மன ஒருங்கிணைப்பு இழப்பு ஏற்படுகிறது.

    மது குடித்ததும், ஆல்கஹால் வயிறு வழியாக ரத்த ஓட்டத்தில் சேரும். ஒரு நபர் குடிக்கும் மதுவில் 20 சதவிகிதம் வயிற்றின் வழியாக ரத்த ஓட்டத்தில் வேகமாக உறிஞ்சப்படுகிறது. மேலும் 80 சதவிகிதம் ஆல்கஹால் சிறுகுடலால் உறிஞ்சப்படுகிறது.


    ஆல்கஹால் ரத்த ஓட்டத்தை அடைந்தவுடன், அது கல்லீரலுக்குச் சென்று வளர்சிதை மாற்றமடைகிறது. ஆல்கஹால் மூலக்கூறுகளை உடைக்கும் நொதிகளைக் கல்லீரல் உற்பத்தி செய்கிறது.

    வளர்சிதை மாற்றமடையாத (மெட்டபாலிசம் ஆகாத) ஆல்கஹால் உடலில் மீதம் இருக்கும். எஞ்சிய அனைத்தும் வியர்வை, சிறுநீர் மற்றும் உமிழ்நீர் மூலம் உடலை விட்டு வெளியேறுகிறது.

    பொதுவாக, ஆல்கஹால் உடலில் பசியின்மை, கல்லீரல் சிதைவு, இரைப்பை, அமில சுரப்பை அதிகரித்து அழற்சியை அதிகரிக்கிறது. கடுமையான கணைய அழற்சியும் நாளடைவில் ஏற்பட்டு உடலின் பல்வேறு செயல்பாடுகளும் பாதிக்கும் நிலையை உருவாக்குகிறது. மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்பது இதனால் தான்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இறுக்கமாக அழுத்தக்கூடிய காலுறைகளை அணிந்து கொள்ளுங்கள்.
    • ஒரே நிலையில் தொங்கப் போட்டுக் கொண்டு வரக்கூடாது.

    ஒரே இடத்தில் தொடர்ந்து நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், அல்லது கால்களைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தால், கால்களிலுள்ள ரத்தக்குழாய்களில் அழுத்தம் அதிகமாகிறது. இதனால் ரத்தக் குழாய்களிலிருந்து, நீர் வெளியே வந்து, சுற்றியிருக்கும் திசுக்களில் கொஞ்சம் கொஞ்சமாக சேருகிறது. இப்படித்தான் கால் வீக்கம் ஏற்படுகிறது.


    அதிக உடல் எடை, நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பது அல்லது அமர்ந்திருப்பது, இறுக்கமான காலுறைகள், ஜீன்ஸ் பேண்ட் நீண்ட நேரம் அணிந்திருப்பதாலும் காலில் நீர் சேரலாம்.

    இதுதவிர சிறுநீரகம், இதயத் தசைகள் பாதிப்பு, புற்றுநோய் சிகிச்சை மருந்துகளின் பக்க விளைவு, காலிலுள்ள ரத்தக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு ரத்தம் வந்து சேருவதில் பிரச்சினை, ஹார்மோன் பிரச்சனை, நிணநீர் மண்டல பாதிப்பு, சிறுநீரக வடிகுழாய்களில் பிரச்சினை, கர்ப்ப காலம், நுரையீரல் ரத்தக் குழாய்களில் அதிக ரத்த அழுத்தம், கால்களிலுள்ள ரத்தக் குழாய்களில் ரத்தக் கட்டி அடைப்பது, அதிக உப்புள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, காலில் ஏதாவது புண், மூட்டு வீக்கம் இருப்பது, சோடா, குளிர்பானங்கள் அடிக்கடி அதிகமாகக் குடிப்பது போன்ற பல காரணங்களினால் கால்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு.

    பயணத்தின் போது காலில் வீக்கம் வராதிருக்க, அதிக உப்பு சேர்த்த உணவுப் பொருட்களைத் தொடவே வேண்டாம். காலை நன்றாக, இறுக்கமாக அழுத்தக்கூடிய காலுறைகளை அணிந்து கொள்ளுங்கள். கால்களை ஒரே நிலையில் தொங்கப் போட்டுக் கொண்டு வரக்கூடாது.

    நிறைய காய்கறிகள், பழங்கள், தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோடா, சிப்ஸ், குளிர்பானங்களை தவிர்க்கவும்.


    வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கால்களை தூக்கி தலையணை மீதோ அல்லது மேஜை மீதோ வைத்துக் கொள்ளவும். ஏதாவது ஒரு வழியில் கால்களை ஆட்டிக் கொண்டே இருங்கள்.

    'கால் ஆட்டியாவது காஞ்சிபுரத்தில் போய் பிழைத்துக் கொள்ளலாம்' என்று தறி நெய்யும் வேலைக்காக சொல்வதுண்டு. இது அன்றைய பழமொழி. 'கால் ஆட்டிக்கொண்டே இருந்தால், கால் வீக்கம் இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம்'- இது இன்றைய புதுமொழி.

    பகலில் கால்கள் வீங்குவதும், இரவு தூங்கி காலையில் எழுந்தால், கால் வீக்கம் சுத்தமாக வடிந்து விடுவதும் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் கால் வீக்கம் 3 நாட்கள் கழித்தும் வடியவில்லை என்றால் உடனே உங்கள் குடும்ப டாக்டரைச் சந்திக்கவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுநீரகம் இதனை வடிகட்ட இயலாமல் பலவீனம் அடையும்.
    • சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும்.

    டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து மாத்திரைகளை கடைகளில் நேரடியாக வாங்கி பயன்படுத்துவது மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.


    இன்றைக்கு, காய்ச்சல், தலைவலி என்று வந்துவிட்டால் உடனே கடையில் சில மாத்திரைகளை வாங்கி எடுத்துக்கொள்வது எந்த மாதிரியான விளைவுகளை உருவாக்கும் என்பதை பார்க்கலாம்.

    இதுபோன்ற மாத்திரைகள் வலி மற்றும் காய்ச்சலை உடனடியாக குறைக்கும். ஆனால் சில நேரங்களில் உடலில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகள் அல்லது அழற்சி நோய்கள் போன்ற தீவிர நிலைகளின் அறிகுறிகளை மறைத்துவிடும். இதனால், உடலில் ஏற்பட்டுள்ள உண்மையான பாதிப்பை கண்டறிய முடியாமல் சரியான சிகிச்சை பெற முடியாது போகும்.


    இதுபோன்ற மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் சிறுநீரகம் இதனை வடிகட்ட இயலாமல் பலவீனம் அடையும். அதில் உள்ள வேதிப்பொருட்கள் சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். இது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும்.

    இந்த வகை மாத்திரைகளின் தொடர் பயன்பாடு சில நேரங்களில் தோல் மற்றும் நுரையீரல் அழற்சிக்கு காரணமான எபிடெர்மல் நெக்ரோலிஸ் என்ற தீவிரமான நோய் அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்த வகை பாதிப்பு ஏற்பட்டால் அது உயிருக்கு ஆபத்தான நிலையாக கருதப்படுகிறது.

    ஹெபடைடிஸ் அல்லது சிரோசிஸ் போன்ற கல்லீரல் நோய்கள் இருந்தால், டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் எக்காரணம் கொண்டும் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.


    சில வகை மாத்திரைகள் ஆல்கஹாலுக்கு மோசமான எதிரியாகும். அது போன்ற மாத்திரைகளை தாமாக கடைகளில் வாங்கி உட்கொண்டு, மது அருந்துவது கல்லீரல் பாதிப்பை தீவிரமாக்கும். இதன் தொடர் விளைவு கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குளுட்டன் நிறைந்த உணவுகள் மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும்.
    • பசும்பாலில் உள்ள புரோட்டீன் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

    மூல நோய் என்பது ஆசனவாய் மற்றும் கீழ் மலக்குடலில் உள்ள வீங்கிய நரம்புகளைக் குறிப்பிடும் ஒரு மருத்துவ நிலை.


    மூலம் நோய் ஆபத்தானவை அல்ல. இருப்பினும், இது கடுமையானது மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடியது. இந்த பைல்ஸ் பிரச்சனைக்கு முக்கிய காரணம் மலச்சிக்கல். இந்த மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனித்தால், பைல்ஸ் பிரச்சனையை குணப்படுத்தலாம்.

    சில உணவுகள் மலச்சிக்கலை உண்டாக்கி மூல நோய் பிரச்சனையை தீவிரப்படுத்தும். அந்த உணவுகளைத் தவிர்த்து வந்தாலே, பைல்ஸ் வராமல் தடுக்கலாம்.


    குளுட்டன் உணவுகள்

    குளுட்டன் அதிகம் நிறைந்த உணவுகள் மலச்சிக்கல் மற்றும் மூல நோய் பிரச்சனையை உண்டாக்கும். இந்த குளுட்டன் கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் அதிகம் காணப்படுகிறது.

    குளுட்டன் சிலருக்கு ஆட்டோ இம்யூன் நோய்க்கு வழிவகுப்பதோடு, சிலருக்கு நோயெதிர்ப்பு அமைப்பு செரிமானத்தை கடுமையாக சேதப்படுத்துகிறது. இது மலச்சிக்கலைத் தூண்டி பின்னர் மூல நோயை உண்டாக்கும்.


    பசும்பால் அல்லது பால் பொருட்கள்

    சிலருக்கு பசும்பால் அல்லது பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் பிரச்சனையை உண்டாக்கும். ஏனெனில் பசும்பாலில் உள்ள புரோட்டீன் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

    மேலும் இது பல ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் பசும்பாலுக்கு பதிலாக சோயா பாலை பயன்படுத்தலாம்.


    மாட்டிறைச்சி

    மாட்டிறைச்சியை சாப்பிடுவதும் பைல்ஸ் நோயை உண்டாக்கலாம். ஏனெனில் மாட்டிறைச்சியில் மிகவும் குறைவான அளவில் நார்ச்சத்து உள்ளது மற்றும் இதில் கொழுப்பு அதிகமாக உள்ளது. ஆகவே மாட்டிறைச்சியை உட்கொண்டால், அது எளிதில் ஜீரணிக்காமல், உடலில் அப்படியே தேங்கி, மலச்சிக்கலை ஏற்படுத்தும். ஆகவே தான் பைல்ஸ் நோயாளிகள் மாட்டிறைச்சியை அறவே தொடக்கூடாது.


    வறுத்த உணவுகள்

    எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால், அது பைல்ஸ் பிரச்சனையை வரவழைக்கும். ஏனெனில் மாட்டிறைச்சியைப் போலவே, இந்த உணவுகளிலும் நார்ச்சத்து குறைவாகவும், கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளன. ஆகவே வறுத்த உணவுகளுக்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.


    ஆல்கஹால்

    ஆல்கஹால் உடலில் நீரின் அளவைக் குறைத்து, நீரிழப்பை ஏற்படுத்தும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது மலச்சிக்கலை தீவிரமாக்கும். மலச்சிக்கல் தீவிரமாக இருந்தால், நீண்ட காலமாக மலம் எளிதாக வெளியேறாமல் அதிக அழுத்தம் மலக்குடலுக்கு கொடுக்கப்பட்டு, தீவிர பைல்ஸ் நோயை ஏற்படுத்தும். ஆகவே ஆல்கஹாலை அறவே தவிர்க்க வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமனிகளை விரிவுபடுத்துவதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி பயன்படுத்தப்படுகிறது.
    • தமனிகளுக்குள் உருவாகியிருக்கும் ரத்த உறைகட்டிகளை அகற்றுகிறது.

    ஆஞ்சியோபிளாஸ்டி என்பது, இதயத்திலுள்ள அடைப்புகளை நீக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு டிரான்ஸ் கதீட்டர் செயல்முறையாகும். லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி என்பது, ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளுக்குள் உருவாகியிருக்கும் ரத்த உறைகட்டிகள் மற்றும் அடைப்புகளை ஆவியாக்கி அகற்றுவதற்கு லேசர் அலைக்கற்றைகளை (அதிக ஆற்றல் உள்ள புறஊதா வெளிச்சத்தை) உமிழ்கின்ற ஒரு சிறப்பு கதீட்டரை பயன்படுத்துகிறது.


    இந்த மேம்பட்ட இதய சிகிச்சை தொழில்நுட்பமானது, அடைப்புகளைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைப்பதுடன் குறிப்பிட்ட இலக்குகளுக்கு மட்டும் சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.

    குறிப்பாக, சிக்கலான புண்களுக்கு அல்லது கால்சியம் படிமங்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இது அதிக பலனளிப்பதாக உள்ளது.

    ஆஞ்சியோபிளாஸ்டி என்பது அடைக்கப்பட்ட தமனிகளை திறக்க பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான அறுவை சிகிச்சை முறையாகும். ரத்தம் இதயத்தின் வழியாக சரியாக பாயவில்லை அல்லது இதய தமனிகளில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் இதயம் சுருக்கப்படுகிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது.

    இதற்கு சிகிச்சை அளிக்க ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையில் தமனிக்குள் ஒரு சிறிய ஸ்டெண்ட் செருகப்பட்டு ஒரு பலூன் வடிகுழாய் உயர்த்தப்படுகிறது.


    ஆஞ்சியோபிளாஸ்டி தமனிகளில் உள்ள அடைப்பை அகற்றவும், குணப்படுத்தவும் செய்யப்படுகிறது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கரோனரி தமனிகளில் அடைப்பு அல்லது மாரடைப்பு ஏற்பட்டால் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் டெண்ட் தேவைப்படுகிறது.

    மேலும் நோயாளிகளின் அடைக்கப்பட்ட தமனிகளை விரிவுபடுத்துவதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி பயன்படுத்தப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை இதயத்திற்கு ஏற்படும் சேதத்தை குறைக்க பயனுள்ளதாக இருக்கிறது.

    ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கு பிறகு நோயாளிகள் சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். தினசரி யோகா செய்வது, சத்தான உணவுகளை உட்கொள்வது கொழுப்பின் அளவை பராமரிப்பது போன்றவை ஆகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புகையிலை பழக்கம் மிக முக்கிய காரணம் ஆகும்.
    • தொண்டை வறட்சியான நிலை ஒரு மாதங்களுக்கு மேல் நீடிப்பது.

    வாய் வழி புற்றுநோயானது தொண்டைக்குள் உள்ளே இருக்கும் செல் அணுக்களில் காணப்படும் வீரியமிக்க நோய் தொற்று அல்லது புற்றுநோய் செல்கள் காரணமாக ஏற்படும் நோயாகும். இவை சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் இருப்பின் உயிர்க்கு ஆபத்தானதாகும்.


    வாய் வழிபுற்றுநோய் அறிகுறிகள் பெரும்பாலும் முதிர்ந்த நிலையில் குறிப்பாக நோய் பரவும் நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. இவை சாதாரண தொண்டை அலர்ஜி அல்லது வாய் புண்கள் போல இருப்பது ஆகும்.

    வாய் புற்றுநோய் இந்திய அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நோயை எளிதில் கண்டறிந்து தடுக்க முடியும் என்றாலும், பெரும்பாலும் முற்றிய நிலையில்தான் கண்டறியப்படுகிறது. இதன் விளைவாக இறப்பு அதிகரிக்கிறது. உதடுகள், நாக்கு, அன்னம், வாயின் தளம், ஈறுகளை இந்நோய் பாதிக்கிறது.

    ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் தோராயமாக 17 சதவீதம், பெண்களில் 10.5 சதவீதம் பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இந்திய அளவில் ஆண்டுதோறும் சுமார் 46 ஆயிரம் பேர் வாய் புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


    இந்நோய் ஏற்பட புகையிலை பழக்கம் மிக முக்கிய காரணம் ஆகும். ஏறத்தாழ 47.9 சதவீதம் ஆண்கள், 20.3 சதவீதம் பெண்கள் பல்வேறு வடிவங்களில் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.

    வயது வந்தவர்களில் 24.3 சதவீத ஆண்கள் மற்றும் 2.9 சதவீத பெண்கள் புகைக்கிறார்கள் என கூறப்படுகிறது. 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடையே புகையிலை பயன்பாடு 6.9 முதல் 22.5 சதவீதம் வரை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    வறுமை, பசி, இயலாமை மற்றும் மனச்சோர்வு போன்றவைக்காக, 10 வயது வரை உள்ள சிறுவர்கள் கூட புகையிலை, பீடி, சிகரெட் பழக்கத்துக்கு மாறி வருவதாகவும் உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.


    அறிகுறிகள்:

    * வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற தொற்றுகள் 3 வாரங்களுக்கு மேல் தொண்டையில் இருப்பது.

    * தொண்டை வறட்சியான நிலை ஒரு மாதங்களுக்கு மேல் நீடிப்பது.

    * வாய், தொண்டையில் புணள் 3-ல் இருந்து 4 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து ஆறாமல் இருப்பது.

    * தொண்டை குழு அல்லது வாயினுள் கட்டி அல்லது அசாதாரண கட்டி போன்ற அமைப்பு காணப்படுவது.

    * காரணம் இன்றி பற்கள் வலுவிழந்து விழுவது.

    * தொடர் தொண்டை வலியினால் உணவை விழுங்குவதில் பிரச்சனை.

    * பேசுவதில் சிரமம்.

    * உதடு, தொண்டை, நாக்கு காது, கழுத்து பகுதியில் வலி இருப்பின் அதனை கவனிக்காமல் இருக்க கூடாது. அதற்கான காரணங்களை உடனடியாக அறிந்து ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது அவசியம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அன்றாட நடைமுறையில் சில மாற்றங்களை செய்து கொள்வதும் மிகவும் அவசியம்.
    • சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

    பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இதயநோய் மீண்டும் தாக்கும் அபாயத்தை தடுக்கவும், மீண்டும் தங்களின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பவும், அன்றாட நடைமுறையில் சில மாற்றங்களை செய்து கொள்வதும் மிகவும் அவசியம்.


    அறுவை சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய முதல் வாரம் உங்களது அன்றாட வேலைகளை பழையபடி தொடர்வது முக்கியம். சிலநேரங்களில் ஒரு சிறு வேலைகூட உங்களை களைப்படையச் செய்யும். மூச்சு விடுவதற்கு சிரமமாகத் தெரியலாம். ஆனால் இது சாதாரணமான விஷயம் தான்.

    நீங்கள் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால் மீண்டும் உங்களது தினசரி வேலைகளை செய்வதற்கு முன்னாள் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். 4 முதல் 8 வாரத்தில் உங்களது இயல்பான நிலை மீண்டும் திரும்பும்.

    உங்களது அன்றாட தினசரி வேலைகளுக்கு இடையே சற்று ஓய்வு எடுப்பது முக்கியம். அன்றாட வேலைகளும், உடற்பயிற்சிகளும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முக்கியமானதாக இருந்தாலும் சரியான வேலைக்கும், அதிகப்படியான வேலைக்கும் இடையே சிறிய வித்தியாசம் உள்ளது.


    உங்கள் தினசரி வேலைகளை திட்டமிடுவது போல் அவ்வப்போது இடை இடையே ஓய்வெடுக்கவும் திட்டமிடுதல் அவசியம். இரவில் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவது அவசியம் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். முதல் சில வாரங்கள் தினமும் பகலில் ஒரு குட்டி தூக்கம் தூங்கலாம்.

    அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆஸ்பத்திரியில் உடற்பயிற்சி செய்து இருப்பீர்கள். உடற்பயிற்சி செய்வது உடல் பலத்தை மேம்படச் செய்ய உதவுகிறது. உங்களது இதயத்தின் பலத்தை அதிகரிக்கச் செய்வதுடன் எதிர்காலத்தில் இதயநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கவும் உதவும்.


    நடைபயிற்சி செய்வதற்கு சமதள இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். தையல்களை பிரித்த பிறகு பூங்காவிலோ அல்லது வீட்டு வளாகத்திலோ நடைபயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்யும் போது வெளிப்படுத்தும் சக்தியின் விகிதாச்சாரம் உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுநீரகம் சம்பத்தப்பட்ட நோய்களுக்கு சுரைக்காய் ஒரு நல்ல மருந்து.
    • உடலில் உள்ள கெட்ட உப்புகள் அனைத்து சிறுநீரகத்தின் வழியே வெளியேறிவிடும்.

    பல நேரங்களில் சுரைக்காயில் உப்பு இல்லை என்று பலர் கூறுவதை கேள்விபட்டிருப்போம். இதற்கு சுரைக்காயில் உப்பு இல்லை என்று அர்த்தம் இல்லை. உண்மையில் அர்த்தம் வேறு.

    சுரைக்காய் என்பது உடல் நலத்திற்கு மிகுந்த நன்மை தரும் காய்களிகளில் ஒன்று. சுரைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட உப்புகள் அனைத்து சிறுநீரகத்தின் வழியே வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


    சிறுநீர் கோளாறு இருப்பவர்கள் சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் விரைவில் குணமாவார்கள். சிறுநீரகம் சம்பத்தப்பட்ட நோய்களுக்கு சுரைக்காய் ஒரு நல்ல மருந்து.

    சுரைக்காய் உடலில் உள்ள கெட்ட உப்புச்சத்துக்களை வெளியே தள்ளிவிடுவதால் தான் சுரைக்காயை சாப்பிட்டால் உடலில் உப்புச் சத்து இருக்காது என்பதையே சுரைக்காயில் உப்பு இல்லை என்று கூறுகின்றனர்.

    சுரைக்காயை வேகவைத்தோ, பொரியல் செய்தோ அல்லது சாம்பார் வடிவத்திலோ, ஜூஸ் செய்தோ சாப்பிடலாம். இதன்மூலம் அனைத்துவிதமான சிறுநீரக கோளாறும் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


    சுரைக்காயின் பயன்கள்:

    * சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு உடல் சூடு குறையும்.

    * சுரைக்காயில் வைட்டமின் பி சி சத்துக்கள் உள்ளன. நீர்ச்சத்து 96. 07 % , இரும்பு சத்து 3. 2 %, தாது உப்பு 0. 5 % பாஸ்பரஸ் 0. 2 % புரதம் 0. 3 % கார்போ ஹைட்ரேட் 2. 3 % போன்ற சத்துக்களை கொண்டுள்ளது சுரைக்காய்.

    * சுரைக்காயின் சதை பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச் சாற்றை சேர்த்து பருகி வர சிறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய நோய்களுக்கு சிறந்தது.

    * அஜீரண கோளாறு உள்ளவர்கள் சுரைக்காய் சாப்பிடலாம். கோடைக் காலத்தில் சுரைக்காய் சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.


    * கை கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைப் பகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.

    * நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

    * வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப் பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.

    * சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.

    * மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை சிறுநீர் வழியாக வெளியேறும். சுரையின் இலைகளை நீர்விட்டு ஊற வைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம் பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்.

    * சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து உடலை வலுப்படுத்தும்.

    * சுரைக்காயின் மகிமையை விதை ஒன்று போட சுரை என விளையும் என்ற பழமொழி மூலம் அறியலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மலச்சிக்கல் இருந்தால் உடலில் ஏராளமான பிணிகள் வரும்.
    • செரிமான மண்டலத்தின் மெதுவான அசைவால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

    மலம் கழிப்பது என்பது செரிமான அமைப்பின் கடைசி நிலை ஆகும். தொடர் மலச்சிக்கல் இருந்தால் உடலில் ஏராளமான பிணிகள் வரும்.


    மலச்சிக்கலுக்கான காரணங்கள்:

    1) நாம் உண்ணும் உணவில் இருந்து பெருங்குடல் அதிகப்படியான தண்ணீரை உறிஞ்சும் போது மலச்சிக்கல் ஏற்படுகிறது. செரிமான மண்டலத்தின் மெதுவான அசைவால், பெருங்குடலில் அதிக நீர் உறிஞ்சப்படுகிறது. இதன் விளைவாக மலம் உலர்ந்து மலம் கழித்தல் கடினமாகவும், வலியாகவும் மாறுகிறது.

    2) உணவில் போதிய நார்ச்சத்து சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது.

    3) நமது பரபரப்பான வாழ்க்கை முறைகள், மன அழுத்தம், மனக்கவலை, பயம் போன்ற உளவியல் பிரச்சனைகள்.

    4) சரியான உடற்பயிற்சி இல்லாமல் ஒரே இடத்தில் நிலையாக இருந்து வேலை செய்வது.

    5) மலம் வரும் போது அதை கழிக்காமல் அடக்குவது.

    6) மாவுச்சத்து நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள், சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது, தண்ணீர் குறைவாக குடிப்பது, தொடர் பயணங்கள், உடல் சூடு போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.


    உணவுப் பழக்கவழக்கங்கள்:

    1) உடல்சூடு குறைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    2) தினமும் 6-7 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும்.

    3) வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.

    4) கிழங்கு வகைகள், காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

    5) கோழிக்கறி சாப்பிடுவது உடல் வெப்பத்தை அதிகரிக்கும். ஆகவே கோழிக்கறி சாப்பிடும் போது எலுமிச்சை பழச்சாறு எடுப்பது நல்லது.

    6) நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    7) சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். வயிற்றில் வாயு உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    8) மாவு பதார்த்தங்களை அளவாக எடுக்க வேண்டும்.

    9) காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு நடைப்பயிற்சி, ஆசனவாய் தசைகளை உறுதிபடுத்தும் பயிற்சிகள் செய்ய வேண்டும்.

    10) சீரகம், கொத்தமல்லி, ஓமம் இவைகளை சிறிதளவு சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீரை காலை, இரவு குடித்து வர வேண்டும்.


    சித்த மருந்துகள்:

    சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கீழ்கண்ட ஏதாவது ஒரு மருத்துவ முறையை கையாளலாம்.

    1) திரிபலா சூரணம் ஒரு டீஸ்பூன், இரவு உறங்கும் முன் வெந்நீரில் எடுக்க வேண்டும்.

    2) நிலவாகை சூரணம் ஒரு டீஸ்பூன், இரவு உறங்கும் முன் வெந்நீரில் எடுக்க வேண்டும்.

    3) மூலக்குடார நெய் 5-10 மி.லி. வீதம் இரவு தூங்கும் முன் எடுக்க வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செடிகளை பராமரிப்பது, அதனுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை குறைக்கும், மன நிலையை மேம்படுத்தவும் செய்யும்.
    • மகிழ்ச்சியான மன நிலையை உண்டாக்கும்.

    வீட்டில் தோட்டம் அமைத்து காய்கறி செடிகள், பூச்செடிகள் வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு மன நலனை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வீட்டில் தோட்டம் வளர்ப்பது மன மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

     

    செடிகளை பராமரிப்பது, அதனுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை குறைக்கும், மன நிலையை மேம்படுத்தவும் செய்யும். செடிகள் சூழ்ந்திருக்கும் இடத்தில் அமர்ந்து முக்கியமான விஷயங்களை பற்றி விவாதிப்பது, சிந்திப்பது படைப்பாற்றல் திறனை 45 சதவீதம் அதிகரிக்க செய்யும் என்பது இங்கிலாந்தை சேர்ந்த எக்ஸிடெர் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

    தனிமை சூழலில் வசிப்பவர்கள் செடிகளை வளர்த்து பராமரிப்பது தனிமை உணர்வை போக்கும், மனச்சோர்வை விரட்டும். மன மகிழ்ச்சியையும் அதிகரிக்க வழிவகுக்கும். பசுமை சூழ்ந்த இடத்தில் ஓய்வு எடுப்பது மூளையில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி மன நிம்மதியாக உணர வைக்கும். மகிழ்ச்சியான மன நிலையையும் உண்டாக்கும். ஈரப்பதமுள்ள மண்ணில் கைகளை புதைத்து தோட்ட வேலை செய்யும்போது நரம்பு மண்டலத்திலும் அமைதியான உணர்வை ஏற்படுத்தும். மன நலனில் மாற்றங்களை ஏற்படுத்தி மகிழ்ச்சியான சூழலையும் உணர வைக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்ச்சல் தாக்கும் ஆபத்து அதிகம் உண்டு.
    • உடனடியாக மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

    நமது உடலில் சராசரியாக இருக்கவேண்டிய வெப்பம் 98.6 டிகிரி பாரன்ஹீட் ஆகும். இருப்பினும், வெளிப்புற தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப உடல் வெப்ப அளவு மாறும். நமது உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளும் வேலையை மூளையின் அடிப்பகுதியிலுள்ள 'ஹைப்போதலாமஸ்' என்கிற உறுப்பு கவனித்துக் கொள்கிறது.

    நமது உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகள், வைரஸ், பாக்டீரியாக்கள் போன்றவற்றை அழிக்க உடலில் உற்பத்தியாகும் 'ப்ராஸ்டோக்ளாண்டின்' என்கிற திரவம் உடலின் வெப்பநிலையை 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் அதிகப்படுத்திவிடுகிறது. இதைத் தான் நாம் பொதுவாக 'காய்ச்சல்' என்கிறோம். மழைக்காலத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் பிற வைரஸ் கிருமிகள் தாக்குதல்களால் காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகமாக காணப்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதற்கு விதிவிலக்கு கிடையாது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்ச்சல் தாக்கும் ஆபத்து அதிகம் உண்டு.

    உங்களுக்கு நோய்கிருமி தாக்குதல் இருந்தால் அதை எதிர்க்கும் வேலையை உடம்பிலுள்ள எதிர்ப்பு சக்தி அமைப்பு உடனே செய்ய ஆரம்பித்துவிடும். அப்போது காய்ச்சல் காணப்படும். உடல் சூடு 103 டிகிரியை தாண்டிவிட்டாலே உடல் முழுவதும் சோர்வு, அசதி, குழப்பம், பேச்சு குளறுதல், நாக்கு-உதடு வறண்டு போதல், உடல் இயக்கங்களில் மாற்றம், மயக்கம் போன்றவை சிலருக்கு ஏற்படலாம்.

    காய்ச்சலைக் கண்டு பயப்பட வேண்டாம். உடனடியாக மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிடுங்கள். இந்த நேரத்தில் குளிப்பது கூடாது. சாதாரண தண்ணீரில் துணியை நனைத்து பிழிந்து உடல் முழுக்க நான்கைந்து முறை ஒத்தடம் கொடுக்க வேண்டும். காய்ச்சல் 3 அல்லது 4 நாட்களுக்கு மேலும் இருக்கிறது என்றால் குடும்ப டாக்டரைச் சந்தித்து ரத்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

    சாதாரண காய்ச்சலா, விஷக்காய்ச்சலா, வைரஸ் காய்ச்சலா என எந்தக் காய்ச்சல் தாக்கியுள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்ப உடனே சிகிச்சை பெறுவது நல்லது.

    ×