என் மலர்

    லைஃப்ஸ்டைல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு.
    • ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கச் செய்து நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவும்.

    தினமும் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

    மன ஆரோக்கியம்

    உங்கள் உடல் உங்களை மகிழ்ச்சியாக உணர உதவும் ரசாயனங்களை வெளியிடுகிறது.

    ஆஸ்துமாவை விரட்டும்

    ஆஸ்துமாவை நெருங்கவிடாமல் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய்களை வலுப்படுத்த உதவுகிறது.

    ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும்

    ஓடும்போது தமனிகள் சுருங்கி விரிவடைவதால் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும் உதவும்.

    நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்

    நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்.

    உடல் எடை குறையும்

    ஓடும்போது ஒரு மணி நேரத்திற்கு 705 முதல் 865 கலோரிகள் எரிக்கப்படும். உடல் எடையும் குறையும்.

    உடல் வலிமை

    ஓடுவதன் மூலம் உடல் வலிமை கூடுவதோடு தசை நாண்கள் மற்றும் தசைநார்கள் வலுப்படும்.

    எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்

    ஓடும் சமயத்தில் உடல் அழுத்தப்படும்போது எலும்புகளை வலுப்படுத்த அத்தியாவசிய தாதுக்களை அனுப்பும். ஓடுவதன் காரணமாக எலும்புகளை அழுத்துவதால், காலப்போக்கில் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்.

    மூட்டுகளை வலிமைப்படுத்தும்

    ஓடுவதன் காரணமாக தசைநார்கள் மற்றும் தசைநாண் களின் வலிமையை அதிகரிப்பதன் மூலம் மூட்டு பகுதி வலிமை அடையும். அதனால் கணுக்கால், இடுப்பு மற்றும் முழங்கால்களில் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

    நீரிழிவு நோயை குறைக்கும்

    ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கச் செய்து நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவும்.

    எவ்வளவு நேரம் ஓடலாம்?

    தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் ஓடுவது நல்லது. அப்படி ஓட முடியாதவர்கள் 5 முதல் 10 நிமிடங்கள் ஓடுவது கூட உடல் உறுப்புகளுக்கு பலன் அளிக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிக நார்ச்சத்து இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது.
    • இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அதே வேளையில் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

    வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    வெண்டைக்காய் ஏ பிரிவு ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது

    இது டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிறந்தது. செரிமானம், நீரேற்றம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது.

    இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது.

    இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அதே வேளையில் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இது வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துகிறது.

    நீரழிவு நோயாளிகள் 8 வாரங்களுக்கு ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் 1000 மைக்ரோகிராம் வெண்டைக்காயை உட்கொள்வது சர்க்கரை குறைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வெண்டைக்காயை காய்கறி உணவாகச் சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், வெண்டைக்காய் தண்ணீரைக் குடிக்கலாம்.

    2அல்லது 3 வெண்டைக்காய்களை எடுத்து, அவற்றை நன்கு கழுவி, முனைகளை வெட்டி, சிறிய பிளவுகளை உருவாக்குங்கள்.

    அவற்றை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

    நார்ச்சத்து நிறைந்த இந்த பானம் செரிமானத்தை மெதுவாக்குகிறது. சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

    இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், அதிகப்படியான நார்ச்சத்து வீக்கம் அல்லது லேசான வயிற்று அசவுகரியத்தை ஏற்படுத்தக்கூடும்,

    வெண்டைக்காய் நீர் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் தீரும், அதே நேரத்தில் வலிமை இயற்கையாகவே அதிகரிக்கும்," என்று இருதயநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேகவைத்த முட்டைகள் கொழுப்புகள் சேர்க்கப்படாமல் ஊட்டச்சத்துக்களை தக்கவைக்கும் தன்மை கொண்டது.
    • ஆம்லெட் விரும்புபவர்கள் அதில் ஊட்டச்சத்துமிக்க காய்கறிகளை சேர்த்து உட்கொள்வதுதான் சிறந்தது.

    முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லெட் தயாரித்தோ ருசிக்கவே பலரும் விரும்புகிறார்கள். இதில் எதை சாப்பிடுவது சிறந்தது என்ற கேள்வியும் அவ்வப்போது எழுவதுண்டு. குறைந்த கலோரியுடன் உடல் எடையை சீராக நிர்வகிக்கும் உணவு பழக்கத்தை மேற்கொள்ள ஆர்வம் காட்டுபவர்களுக்கு வேகவைத்த முட்டை ஏற்றது.

    இது எளிதாக ஜீரணமாகும். செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கும் ஏற்றதாக அமையும். இதில் புரதம் அதிகம் உண்டு. எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் டி, மூளை செயல்பாட்டிற்கு அவசியமான வைட்டமின் பி12 ஆகிய ஊட்டச்சத்துக்களையும் வழங்கும். வேகவைத்த முட்டைகள் கொழுப்புகள் சேர்க்கப்படாமல் ஊட்டச்சத்துக்களை தக்கவைக்கும் தன்மை கொண்டது.

    ஆம்லெட் விரும்புபவர்கள் அதில் ஊட்டச்சத்துமிக்க காய்கறிகளை சேர்த்து உட்கொள்வதுதான் சிறந்தது. அதிலும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த பொருட்களை ஆம்லெட்டில் சேர்த்து உட்கொள்ள வேண்டும். அதேவேளையில் ஆம்லெட்டில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். கலோரி, கொழுப்பு உட்கொள்ளலை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் ஆம்லெட்டை தவிர்ப்பது நல்லது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அறிகுறிகள் தோன்றிய பிறகு ஆண்களை விட பெண்கள் தாமதமாகவே மருத்துவமனையை அணுகுகின்றனர்.
    • ஆண்களுக்கு நிகரான விகிதத்தில் மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில், ஆண்களை விட பெண்களே மோசமான இதய நோய்களால் அதிகம் பாதிக்கப்படும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியா, பிரேசில், சீனா, எகிப்து, அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளில் இருந்து பெறப்பட்ட 15 ஆய்வு முடிவுகளின் அறிக்கை, மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

    23 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையில், ஆண்களை விட பெண்களே மோசமான இதய நோயால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதயநோய் அறிகுறிகளை கண்டறிதல், சிகிச்சை ஆகியவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான வித்தியாசம் பிரமிக்க வைக்கும் அளவுக்கு பெரிதாக உள்ளது. அறிகுறிகள் தோன்றிய பிறகு ஆண்களை விட பெண்கள் தாமதமாகவே மருத்துவமனையை அணுகுகின்றனர். ஆண்களுக்கு நிகரான விகிதத்தில் மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

    இதுமட்டுமின்றி, இளம் வயது பெண்களிடம் மாரடைப்பு விகிதம் அதிகரித்து வருவதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டி உள்ளது. கடந்த 1995-2014-க்கு இடைப்பட்ட காலத்தில், 35 வயது முதல் 54 வயதுடைய பெண்களிடையே மாரடைப்பு விகிதம் 21 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே ஆண்களுக்கான விகிதம் 30 சதவீதத்தில் இருந்து 33 சதவீ மாக உயர்ந்துள்ளது.

    பெண்கள் ஆண்டுதோறும் உடல் பரிசோதனை செய்து, தங்கள் உடல்நலனை கவனத்தில் வைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவர்கள் 16 வாரங்கள் ஒரு உணவு முறையைப் பின்பற்றினர்.
    • இது வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

    குறைந்த கொழுப்பு சைவ உணவு (low-fat vegan diet) உடல் எடை குறைப்பதற்கு நண்பை பயக்கும் கருவியாக இருக்கும் என்று ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது.

    "Physicians Committee for Responsible Medicine" என்ற அமைப்பு நடத்திய இந்த ஆய்வு முடிவு "Frontiers in Nutrition" இதழில் வெளியிடப்பட்டது. இதில் மெடிட்டரேனியன் உணவு (Mediterranean diet) மற்றும் குறைந்த கொழுப்பு சைவ உணவு (low-fat vegan diet) இடையே ஒப்பீடு செய்யப்பட்டது.

    மெடிட்டரேனியன் டயட்டில், அதிகளவிலான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் தானிய பொருட்கள் அடங்கியிருக்கும். இருப்பினும் மிதமான அளவிலான மீன், வெள்ளை இறைச்சி மற்றும் சில பால் பொருட்களும் இதில் அடங்கும்.

    இந்த ஆய்வில் 62 அதிக எடை கொண்ட வயது வந்தவர்கள் (adults) சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு பிரிவுக்கு  மெடிட்டரேனியன் உணவு (Mediterranean diet)  மற்றும் மற்றொரு பிரிவுக்கு குறைந்த கொழுப்பு சைவ உணவு (low-fat vegan diet) வழங்கப்பட்டது.

    Mediterranean diet

    அவர்கள் 16 வாரங்கள் ஒரு உணவு முறையைப் பின்பற்றினர். பின்னர் நான்கு வாரங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு, மீண்டும் 16 வாரங்கள் மற்றொரு உணவு முறையைப் பின்பற்றினர். 

    சோதனையின் முடிவில், குறைந்த கொழுப்பு சைவ உணவு முறையைப் பின்பற்றியவர்களுக்கு உணவு அமிலச் சுமை கணிசமாகக் குறைந்தது கண்டறியப்பட்டது. உணவு அமிலச் சுமை குறைந்ததால், சைவ உணவு முறையைப் பின்பற்றியவர்கள் சராசரியாக 13.2 பவுண்டுகள் (சுமார் 6 கிலோ) எடை இழந்தனர். மெடிட்டரேனியன் உணவு முறையை பின்பற்றியவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.

     விலங்குப் பொருட்கள் அதிக அமிலத்தை உற்பத்தி செய்யும் என்பது அறியப்படுகிறது. இது வீக்கம் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

    ஆய்வின்படி, இறைச்சி, முட்டை, பால் பொருட்கள் போன்ற அமிலத்தை உற்பத்தி செய்யும் உணவுகளை உட்கொள்வது உடலில் உணவு அமிலச் சுமையை அதிகரிக்கும். இது வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

    ஆனால் இவற்றுக்கு பதிலாக கீரைகள், பெர்ரி பழங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற தாவர அடிப்படையிலான சைவ உணவுகளை உட்கொள்வது எடை இழப்பை ஊக்குவிக்கும் மற்றும் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை உருவாக்கும் என்று ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் ஹனா காலியோவா தெரிவித்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாதாம் எண்ணெயை மட்டும் கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்யலாம்.
    • தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்களுக்கு கீழ் மசாஜ் செய்து வரலாம்.

    முகத்தை வைத்துத்தான் ஒருவரின் அகத்தை எடை போடுகிறார்கள். ஆனால் சிலருக்கு கண்களுக்கு கீழ் உருவாகும் கருவளையம், அவர்களின் முக அழகையே கெடுத்து விடுகிறது.

    தூக்கமின்மை, மனஅழுத்தம், ரத்த சோகை, அதிக நேரம் லேப்டாப் மற்றும் மொபைல் பயன்படுத்துவது ஆகியவை முதன்மை காரணங்களாக இருந்தாலும், மரபணு மாற்றம், வாழ்க்கை முறை போன்றவற்றாலும் கண்ணில் கருவளையம் ஏற்படுகிறது.

    இதைச் சரிசெய்யும் முறைகளை பார்ப்போம்...

    * சிறிதளவு தக்காளிச் சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து கருவளையத்தின் மீது தடவி, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.

    * கற்றாழை ஜெல்லை கருவளையத்தின் மீது தடவி, 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவலாம்.

    * உருளைக்கிழங்கு சாறை எடுத்து கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்.

    * வெள்ளரிக்காயை வெட்டி கண் மீது வைத்து 15-20 நிமிடங்கள் கழித்து அகற்றலாம்.

     * காபித் தூளுடன் பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்து, காலையில் கழுவலாம்.

    * பாதாம் எண்ணெயை மட்டும் கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்யலாம்.

    * கிரீன் டீ போட்டவுடன் அதன் பேக்குகளை குளிர்பதனப் பெட்டியில் வைத்து, ஆறிய பின் கண்களில் வைத்து 10-15 நிமிடங்கள் கழித்து அகற்றலாம்.

    * தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்களுக்கு கீழ் மசாஜ் செய்து வரலாம்.

    * ரோஸ் வாட்டரை பருத்தி துணி அல்லது பஞ்சில் நனைத்து கருவளையம் இருக்கும் பகுதியில் 15 நிமிடங்களுக்கு வைத்து எடுக்க வேண்டும். தினசரி இதனை தொடர்ந்து செய்து வர, கருவளையம் நீங்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூக்க-விழிப்பு சுழற்சிகள் சூரிய ஒளியை சார்ந்திருக்கின்றன.
    • மனித உடல் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படும் உயிரியல் கடிகாரத்தை அடிப்படையாக கொண்டது.

    இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் பணிபுரிகிறார்கள். இரவு பணி என்றால் ஆண்கள்தான் செய்வார்கள் என்ற நிலை மாறி இரவிலும் பெண்கள் வேலை செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஐ.டி. துறையை கடந்து பல இடங்களிலும் இரவு பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இரவு பணி பெண்களுக்கு சாதகமானதா? என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாக அமைந்திருக்கிறது. இரவு பணியை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்? என்னென்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து பார்ப்போம்.

    இரவு வேலை செய்தால் என்ன நடக்கும்?

    தூக்க-விழிப்பு சுழற்சிகள் சூரிய ஒளியை சார்ந்திருக்கின்றன. காலையில் சூரிய கதிர்களோ, அதன் வெளிச்சமோ உடலில் படும்போது கார்டிசோல் அளவுகள் உயர்ந்து, அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உடலை உற்சாகப்படுத்தும். மறுபுறம் இரவில் இருள் சூழ தொடங்கியதும் மெலடோனின் ஹார்மோன் தூக்கத்திற்கு உடலை தயார்படுத்தும். பெண்கள் இரவு நேர வேலைகளில் ஈடுபடுவது கார்டிசோலை தூண்டிவிடுவதோடு மெலடோனின் உற்பத்தியை சீர்குலைத்துவிடும்.

    இரவு நேர வேலை செய்பவர்களுக்கு கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகமாவதாகவும், மெலடோனின் அளவு குறைவதாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    அதிலும் பெண்கள் இரவு முழுவதும் வேலை செய்யும் வழக்கத்தை தொடரும்போது தூக்க-விழிப்பு சுழற்சியை தொந்தரவு செய்யும். உடலில் கார்டிசோல் அளவு அதிகரிப்பதற்கு வழிவகுத்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அத்துடன் ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். சுவாசக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

    சமீபத்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 'இரவு பணியில் ஈடுபடும் பெண்களுக்கு மிதமாகவோ அல்லது கடுமையாகவோ ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது' என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    தூக்க சுழற்சி சீர்குலையும்

    இரவு பணியில் ஈடுபடுவது ஆரம்பத்தில் சிரமமாக தோன்றும். நாளடைவில் அதற்கு உடல் பழக்கமாகிவிடும் என்று பலரும் கூறுவதுண்டு. இரவுப்பணியில் ஈடுபடுபவர்களின் கருத்தும் அதுவாகவே இருக்கும். பெண்களை பொறுத்தவரை இரவுப்பணியில் ஈடுபடுவது இயற்கையான தூக்க சுழற்சியை கடுமையாக சீர்குலைத்துவிடும். ஆரம்பத்தில் சமாளிக்கக்கூடிய விஷயமாக தோன்றலாம். ஹார்மோன் சமநிலையின்மைக்கும் வழிவகுத்துவிடும். வேறு சில உடல்நல பிரச்சினைகளையும் ஏற்படுத்திவிடும்.

    மனித உடல் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படும் உயிரியல் கடிகாரத்தை அடிப்படையாக கொண்டது. பூமியின் இரவு, பகல் சுழற்சிக்கு ஏற்ப உடலும் தூக்க சுழற்சியை சீராக பராமரிக்கும். கார்டிசோல், மெலடோனின் ஆகிய இரண்டும் முக்கியமான தூக்க ஹார்மோன்களாகும். இதில் விழிப்பு நிலைக்கு தூண்டி, தூக்கத்தில் இருந்து எழுப்பும் பணியை கார்டிசோல் ஹார்மோன் செய்யும். இருள் சூழ தொடங்கியதும் உறக்க நிலைக்கு அழைத்து செல்லும் பணியை மெலடோனின் ஹார்மோன் மேற்கொள்ளும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூரிக்கு மாவு பிசையும்போது ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு சேர்த்துப் பிசைந்தால் நல்ல நிறத்துடன் பூரி சுருங்காமல் வரும்.
    • தேங்காய் சாதம் செய்யும் போது அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப்பொடி கலந்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * வெந்தயக் குழம்பு தயார் செய்யும்போது ஒரு டீ ஸ்பூன் எள்ளுப் பொடியை தூவினால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * மீந்து போன வாழை சிப்ஸ், உருளை சிப்ஸை வீணாக்காமல் மிக்சியால் கரகரப்பாக பொடித்து பொரியலுக்குத் தூவலாம். மாறுபட்ட சுவையும், மணமும் கிடைக்கும்.

    * பாயசம் நீர்த்து போயிருந்தால் அதில் வாழைப் பழத்தைப் பிசைந்துப் போட்டு கொஞ்சம் தேனும் கலந்தால் போதும். சுவையான கெட்டிப் பாயசம் ரெடி.

    * வித்தியாசமான முறையில் ரவா கேசரி செய்ய வேண்டுமானால், ரவையை நெய் விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊற வைத்து பிறகு சர்க்கரைப்பாகு செய்து கேசரி கிளறினால் மாறுபட்ட சுவையில் ருசிக்கலாம்.

    * பூரிக்கு மாவு பிசையும்போது ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு சேர்த்துப் பிசைந்தால் நல்ல நிறத்துடன் பூரி சுருங்காமல் வரும்.

    * தேங்காய் சாதம் செய்யும் போது அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப்பொடி கலந்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * பாகற்காய் வறுவல் செய்யும் போது முதலில் பாகற்காயை எண்ணெய்யில் நன்றாக வறுத்து பின்னர் உப்பு, காரம் போட்டால் மொறுமொறுப்பு குறையாமலிருக்கும்.

    * சூடான எண்ணெய்யில் சிறிதளவு மைதா மாவு சேர்த்த பிறகு எதை பொரித்தாலும் வாணலியில் ஒட்டாது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேரீச்சம் பழங்கள் சாப்பிட்டால் அதிலிருக்கும் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு பேரீச்சம் பழம் ஏற்புடையதல்ல.

    தினமும் 2 அல்லது 3 பேரீச்சம் பழங்கள் சாப்பிட்டால் அதிலிருக்கும் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். 3 பேரீச்சம் பழங்களுக்கு மேல் சாப்பிட்டால் என்னவாகும் என்கிறீர்களா? அப்படி அதிகம் சாப்பிடுவது பக்கவிளைவுகளை உண்டாக்கும்.

    ஏனெனில் பேரீச்சம்பழங்கள் கலோரிகள் நிறைந்தவை. ஒரு பேரீச்சம் பழத்திலேயே 20 முதல் 30 கலோரிகள் இருக்கும். அதனை அதிகமாக உட்கொள்வது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதிக நார்ச்சத்து காரணமாக வயிறு வீக்கம், வாயுத்தொல்லை போன்ற செரிமான கோளாறுகளும் உண்டாகும்.

    பேரீச்சம் பழம் அதிக கிளைசெமிக் குறியீடுகளை (சுமார் 55) கொண்டிருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்துவிடும். அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஏற்புடையதல்ல.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுவாக நெல்லிக்காய் முடி உதிர்தலை குறைக்க உதவும்.
    • ஷாம்பு போல நீரேற்ற பண்புகளை கொண்டு உச்சந்தலையை குளிர்விக்க உதவுகிறது.

    பெண்கள் கூந்தலை பராமரிக்க நெல்லிக்காய், கற்றாழை இரண்டையுமே பயன்படுத்துவார்கள். அதிலும் முடி உதிராமல் நீளமாக வளர வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கும். முடி வளர்ச்சிக்கு இந்த இரண்டில் எதனை பயன்படுத்துவது சிறந்தது? என்ற குழப்பமும் சிலரிடம் இருக்கும். அதற்கு சரியான தீர்வு எது என்று பார்ப்போமா?

    நெல்லிக்காய்

    இதில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடென்டுகள், இரும்பு மட்டுமின்றி உச்சந்தலை மற்றும் முடியின் மயிர்க்கால்களுக்கு பலம் சேர்க்கும் பொருட்களும் நிரம்பியுள்ளன. அடிப்படையில் நெல்லிக்காய் முடியின் வேர்க்கால்களுக்கு புரதம்போல் ஊட்டச்சத்து மதிப்புடன் செயல்பட்டு அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியது.

    பொதுவாக நெல்லிக்காய் முடி உதிர்தலை குறைக்க உதவும். உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். விரைவில் முடி நரைப்பதை குறைக்கும். நெல்லிக்காயை எண்ணெய்யாக தலைக்கு பயன்படுத்தலாம். நெல்லிக்காய் பொடியையும் தலையில் தேய்த்து வரலாம். நெல்லிக்காயை சாறாக பருகியும் வரலாம். இப்படி நெல்லிக்காயை ஏதாவதொரு வகையில் பயன்படுத்தி வந்தால் கடுமையாக முடி உதிர்வது தடுக்கப்படும். தலைமுடி மீண்டும் உயிர்ப்புடன் காட்சியளிக்க உதவும்.

    கற்றாழை

    இது மென்மையானது, குளிர்ச்சியானது. உச்சந்தலைக்கு பயன்படுத்த ஏதுவானது. கற்றாழையில் வைட்டமின்களும், நொதிகளும் நிறைந்துள்ளன. உச்சந்தலை ஈரப்பதமின்றி வறட்சியாக காட்சி அளிக்கிறதா? உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுகிறதா? கற்றாழை இதற்கு சிறந்த தேர்வாக அமையும். இது ஷாம்பு போல நீரேற்ற பண்புகளை கொண்டு உச்சந்தலையை குளிர்விக்க உதவுகிறது. தலைமுடி சரியாக வளர்வதற்கு ஏற்ற சூழலையும் அளிக்கிறது. கற்றாழையை செடியில் இருந்து வெட்டி எடுத்து, அதன் உள்பகுதி சதையை வெளியே எடுத்து நேரடியாக தலையில் தேய்க்கலாம். கடைகளில் கிடைக்கும் தரமான கற்றாழை ஜெல்லையும் உபயோகிக்கலாம்.

    எதனை பயன்படுத்தலாம்?

    நெல்லிக்காய், கற்றாழை இவை இரண்டுமே வெவ்வேறு வழிகளில் முடியின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன. நெல்லிக்காயை பொறுத்தவரை முடி உதிர்வை தடுக்கவும், முடியை வலுவாக்கவும், முடி அடர்த்திக்கும் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. கற்றாழை உச்சந்தலையை தூய்மையாக பராமரிக்கவும், குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவிடக்கூடியது. முடி வளர்வதற்கு சாதகமான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்கக்கூடியது.

    உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை இருந்தாலோ, முடி அடர்த்தி குறைந்து மெல்லியதாக இருந்தாலோ நெல்லிக்காய் சிறந்த தீர்வாக அமையும். உச்சந்தலை வறண்டு அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டால் கற்றாழை கைகொடுக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடலில் குளிர்ச்சித்தன்மையை உண்டாக்கி வெப்பநிலையை சீராக்க வழிவகை செய்யும்.
    • காய்ச்சல் கடுமையாகவோ அல்லது தொடர்ந்து நீடித்தாலோ மருத்துவரின் ஆலோசனை பெற்று பருக வேண்டும்.

    காய்ச்சலின்போது இளநீர் குடிப்பது நல்லது என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில் காய்ச்சல் மற்றும் வியர்வை காரணமாக உடலில் ஏற்பட்ட நீரிழப்பையும், எலக்ட்ரோலைட்டுகளையும் சமநிலைப்படுத்த இளநீர் உதவும்.

    மேலும் உடலில் குளிர்ச்சித்தன்மையை உண்டாக்கி வெப்பநிலையை சீராக்கவும் வழிவகை செய்யும்.

    காய்ச்சல் கடுமையாகவோ அல்லது தொடர்ந்து நீடித்தாலோ மருத்துவரின் ஆலோசனை பெற்று பருக வேண்டும். இளநீரை அதிகமாக உட்கொள்ளவும் கூடாது. அதில் சோடியம் அதிகமாக இருப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹார்மோன் பெருமளவு நீரிழிவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
    • கார்டிசோல் சுரப்பி அதிகரிக்கும்போது ஒரு நபரின் முகம், கழுத்து, வயிறு பகுதிகளில் கொழுப்பு அதிகரித்து காணப்படும்.

    மனித உடலின் இயக்கத்திற்கு ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் இருக்கும் பல்வேறு சுரப்பிகள் வெவ்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.

    இதில் அட்ரீனல் சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் கார்டிசோல் என்ற ஹார்மோன் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

    பாம்பு, கரடி போன்றவை விரட்டும்போது மனிதர்கள் ஓடி, ஆபத்து காலத்தில் உயிர் தப்பிக்க இந்த கார்டிசோல் ஹார்மோன் தூண்டுகிறது. ஒருவருக்கு மன அழுத்தம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் கார்டிசோல் ஹார்மோன் அதிகப்படியாக சுரக்கிறது. அது போன்ற நிலையில் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து சர்க்கரை அளவு உயர்ந்து விடும். இதனால் ரத்த அழுத்த பாதிப்பும், டைப்-2 வகை சர்க்கரை நோயும் உருவாகிவிடும். இந்த ஹார்மோன் பெருமளவு நீரிழிவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    கார்டிசோல் சுரப்பி அதிகரிக்கும்போது ஒரு நபரின் முகம், கழுத்து, வயிறு பகுதிகளில் கொழுப்பு அதிகரித்து காணப்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிலருக்கு கழுத்து பகுதியில் `எருமை திமில்' போன்ற கொழுப்பு திரட்சி நிலை காணப்படும். பொதுவாக, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை தவிர்ப்பது, இன்ப துன்பங்களை சமமாக கருதும் மனநிலை, தியானம் போன்றவற்றால் இந்த கார்டிசோல் ஹார்மோனின் அதிகப்படியான சுரப்பை கட்டுப்படுத்தலாம்.

    ×