என் மலர்

    லைஃப்ஸ்டைல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சில உணவுகளான சர்க்கரை, கார்போஹைட்ரேட், உப்பு அல்லது காரமான மசாலாப் பொருட்கள் கூட இதயத் துடிப்பை அதிகரிக்கலாம்.
    • இதயத் துடிப்பு வழக்கத்தை விட வேகமாக இருப்பது ஒரு அடிப்படை மருத்துவ பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.

    மன அழுத்தம், பதட்டம், கவலை, காபின், உடற்பயிற்சி, அதிகப்படியான வெப்பம், தைராய்டு சுரப்புக் கோளாறுகள், சில மருந்துகள் மற்றும் உணவுகள் போன்றவை இதயம் வேகமாகத் துடிப்பதற்கான பொதுவான காரணங்களாகும்.

    பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த இதயத் துடிப்பு பாதிப்பில்லாதது. இருப்பினும், இதயத் துடிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்தால் அல்லது மார்பு வலி, மயக்கம் போன்ற பிற அறிகுறிகளுடன் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம். மன அழுத்தம், பயம் அல்லது மன உளைச்சல் ஏற்படும் போது உடலில் அட்ரினலின் என்னும் ஹார்மோன் வெளியிடப்பட்டு இதயத் துடிப்பை அதிகரிக்கும்.

    காபின், நிகோடின் மற்றும் ஆல்கஹால் போன்ற பொருட்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கலாம். சில உணவுகளான சர்க்கரை, கார்போஹைட்ரேட், உப்பு அல்லது காரமான மசாலாப் பொருட்கள் கூட இதயத் துடிப்பை அதிகரிக்கலாம்.

    உடற்பயிற்சி, அதிக வெப்பநிலை அல்லது ஈரப்பதம் ஆகியவை உடலின் இதயத் துடிப்பை அதிகரிக்க வழிவகுக்கும், ஏனெனில் உடல் குளிர்ச்சியடையவும், தசை செல்களுக்கு அதிக ஆக்சிஜனை வழங்கவும் இந்த மாற்றம் ஏற்படுகிறது. தைராய்டு சுரப்பி அதிகமாக செயல்பட்டால் (ஹைப்பர் தைராய்டிசம்), இதயம் வேகமாகத் துடிக்கும்.

    ஒழுங்கற்ற இதயத் துடிப்பு: இது இதயத்தின் தாளத்தில் ஏற்படும் ஒரு நிலை, இதில் இதயம் சீரற்ற அல்லது எதிர்பாராத விதமாக வேகமாகத் துடிக்கலாம்.

    இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்போது மார்பு வலி, தலைச்சுற்றல், மயக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதயத் துடிப்பு வழக்கத்தை விட வேகமாக இருப்பது ஒரு அடிப்படை மருத்துவ பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எலிகளில் இருந்து இந்த வகை புழு தொற்றுகள், நேரடியாக மனிதர்களுக்கு பரவுவது இல்லை.
    • சிலருக்கு கல்லீரல் செயலிழப்பு வரை ஏற்படும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

    வீடுகளில் பொதுவாக கொசுத் தொல்லையும், எலித் தொல்லையும் இருக்கும். கொசுவால் மலேரியா காய்ச்சல் வரும். டெங்கு காய்ச்சல் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

    இப்போது எலியால் கல்லீரல் காலியாகிவிடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. வீடுகளில் காணப்படும் கருப்பு எலிகளில் 4-ல் ஒரு எலிக்கு சி.ஹெப்பாடிகா என்ற புழு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு விலங்கு மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 55 எலிகளை பிடித்து ஆராய்ச்சி செய்துள்ளார்கள். அதில் 38 சதவீத எலிகளில் இந்த தொற்று இருக்கிறது. அதாவது 10 எலிகளில் 4 எலிகள் இந்த பாராசைட்டை சுமக்கின்றன.

    சென்னையில் உள்ள மக்கள் தொகை பெருக்கமும், மக்களோடு வாழும் இந்த எலிகளின் வாசமும் மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும்கூட மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

    எலிகளில் இருந்து இந்த வகை புழு தொற்றுகள், நேரடியாக மனிதர்களுக்கு பரவுவது இல்லை. இந்த புழுவின் முட்டைகள் எலியின் கல்லீரலில் உருவாகிறது. ஆனால் அதன் மலத்தின் வழியே வெளியேறாது.

    இறந்து போன எலிகளை சாப்பிடும் பூனைகள், நாய்கள் அல்லது பாம்புகள் வழியாக அந்த முட்டை மண்ணில் கலக்கிறது. பிறகு மண்ணில் இருந்து மனிதர்களுக்கு தொற்றுகிறது. அவ்வாறு மனித உடலில் தொற்றிக் கொள்ளும் இந்த புழுவின் முட்டைகள் மனிதர்களின் கல்லீரலில் சென்று குடியேறி விடுகிறது. இதனால் கல்லீரல் அழற்சி, கல்லீரல் பெரிதாகுவது, காய்ச்சல், சோர்வு வரை ஏற்படும். சிலருக்கு கல்லீரல் செயலிழப்பு வரை ஏற்படும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

    இந்த மாதிரி தொற்று உலக அளவில் 175 பேருக்கு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அதில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர்.

    இந்த நோயை கண்டறிவதும் சவாலானது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள. ஏனெனில் கல்லீரலில் இருந்து 'பயாப்சி' எடுத்துதான் இதை உறுதிப்படுத்த முடியும். மற்ற எலிகள் மூலம் பரவும் வேறு தொற்றுக்களோடும் இந்த தொற்றை குழப்ப வாய்ப்பு இருப்பதால் கண்டுபிடிப்பதிலும், உறுதிப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் தேவை என்கிறார்கள்.

    ஆரம்ப நிலைகளில் எந்தவிதமான அறிகுறிகளும் தெரியாமல் இருக்கலாம். தொற்று ஏற்பட்ட சில வாரங்களுக்கு பிறகோ, சில மாதங்களுக்கு பிறகோ கூட அறிகுறிகள் தோன்றலாம். அது உடலில் இருக்கும் முட்டைகளின் எண்ணிக்கையை பொறுத்தது.

    பொதுவான அறிகுறியாக காய்ச்சல், வயிற்று வலி, கல்லீரல் பருமன் போன்றவை ஏற்படலாம். கண்டுபிடிக்காமல் விட்டால் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு மரணத்துக்கும் வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தைகளின் சிறிய முயற்சிகளை கூட பாராட்டுங்கள்.
    • குழந்தைகளை வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்காதீர்கள்.

    குழந்தைகள் சில சமயங்களில் பெற்றோரின் பேச்சை கேட்காமல் இருப்பதுண்டு. அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி கொடுக்காதபோதோ, அவர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்கும்போதோ கடும் கோபம் கொள்வார்கள். அந்த சமயத்தில் எந்த வேலை சொன்னாலும் செய்ய மாட்டார்கள். பெற்றோரின் பேச்சுக்கு செவிமடுக்காமல் எதிர்த்து பேசவும் செய்வார்கள். பிடிவாதமும் பிடிப்பார்கள். அவர்களை திட்டாமல் அன்பாக அரவணைக்க ஒருசில விஷயங்களை செய்தாலே போதுமானது. உங்கள் சொல் பேச்சை கேட்டு நடக்க தொடங்கிவிடுவார்கள். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்...

    உணர்ச்சி ரீதியாக இணையுங்கள்

    குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன்பு உணர்ச்சி ரீதியாக அவர்களுடன் இணையுங்கள். அவர்களின் தோளில் மென்மையாக தொடுவது, கன்னத்தை பிடித்து கிள்ளுவது, அவர்களின் பெயரை மெதுவாக உச்சரிப்பது, கட்டிப்பிடிப்பது என அன்பை பொழியுங்கள். அவை அவர்களின் உணர்வுகளை ஆசுவாசப்படுத்தும். கோபம், பிடிவாதத்தை தளர்த்தச் செய்யும்.

    கண்கள் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்

    குழந்தைகள் இறுக்கமான மன நிலையிலோ, கடும் அதிருப்தியுடனோ இருந்தால் அவர்களை உடனே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். அந்த சமயத்தில் அவர்களை உரத்த குரலில் அழைப்பது, ஏதேனும் வேலை செய்யுமாறு கட்டளையிடுவது போன்ற செயல்கள் அவர்களிடத்தில் எரிச்சலை அதிகப்படுத்தும்.

    அதற்கு இடம் கொடுக்காமல் அவர்கள் இருக்கும் இடத்திற்கே நீங்கள் சென்று அவர்களின் மன நிலையை கவனியுங்கள். கண்கள் மூலம் நேருக்கு நேர் தொடர்பு கொள்ளுங்கள். அப்படி கண்களை பார்த்து பேசுவது அவர்களின் ஆக்ரோஷத்தை தணிக்கும். அதன் பிறகு அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட தொடங்கும்.

    கட்டளை இடாதீர்கள்

    குழந்தைகள் கடுமையான கட்டளைக்கு எளிதில் இணங்கமாட்டார்கள். ஆனால் அன்புக்கு கட்டுப்படுவார்கள். அதிகார தொனியிலோ, உரத்த குரலிலோ பேசுவதற்கு பதிலாக அன்பாக பேசி அவர்களின் விருப்பம் என்ன என்பதை முதலில் ஆராயுங்கள். முதலில் அவர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு அதன் பிறகு உங்கள் விருப்பப்படி செயல்பட முயற்சியுங்கள்.

    அமைதியான குரலில் பேசுங்கள்

    குழந்தைகள் விஷயத்தில் எப்போதும் மென்மையான அணுகுமுறையையே கையாள வேண்டும். கட்டளையிடுவது, சத்தமாக பேசுவது என குரல் தொனியில் ஆக்ரோஷம் வெளிப்படக்கூடாது. மெதுவாக, தெளிவாக, அன்பாக பேசுங்கள். அதிக சத்தத்தை விட அமைதியான குரல் எளிதில் அவர்களை உங்கள் வசப்படுத்திவிடும். நீங்கள் சொல்வதற்கு செவி சாய்க்க தொடங்கிவிடுவார்கள்.

     

    குழந்தைகளின் செயல்பாடுகளை பாராட்டுங்கள்

    குழந்தைகளின் சிறிய முயற்சிகளை கூட பாராட்டுங்கள். சின்ன சின்ன விஷயங்களை ஊக்கப்படுத்துங்கள். அடுத்த முறை இன்னும் சிறப்பாக செயல்பட ஆர்வம் காட்டுவார்கள்.

    மென்மையாக அணுகுங்கள்

    குழந்தைகளின் செயல்பாடுகள் அவர்களின் வயதுக்கு தக்கபடியே அமையும். அவர்களிடம் நடத்தையில் குறைபாடுகள் இருக்கலாம். அதனை கண்டிப்புடன் சுட்டிக்காட்டுவதோ, கடுமையாக திட்டுவதோ கூடாது. அதனை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கி புரியவைக்க வேண்டும். மென்மையாக அணுகுவதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளை படிப்படியாக மாற்றிவிட முடியும்.

    கால அவகாசம் கொடுங்கள்

    குழந்தைகள் எதையும் உடனடியாக செய்யமாட்டார்கள். நீங்கள் சொன்னதை செயல்படுத்த அவர்களுக்கு கால அவகாசம் கொடுங்கள். அதனை சிறப்பாக செய்து முடிக்க ஆலோசனையும் வழங்குங்கள். அப்படி அறிவுறுத்தலை வழங்கிய பிறகு அமைதியாக இருங்கள்.

    உங்களின் பொறுமை நிச்சயம் மாயாஜாலம் நிகழ்த்தும். அடிக்கடி தலையீடு செய்வதை தவிர்த்தால் போதும். நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுவார்கள்.

    பழக்கப்படுத்துங்கள்

    குழந்தைகளை வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்காதீர்கள். அவர்களாகவே ஆர்வமாக வேலை செய்ய ஊக்குவியுங்கள். அவர்கள் பயன்படுத்தும் அறையை சுத்தம் செய்ய வைக்க வேண்டும் என்றால், கட்டளையிடாதீர்கள்.

    'அறையை சுத்தம் செய்' என்று சொல்வதற்கு பதிலாக 'தரையில் கிடக்கும் பொம்மையை அலமாரியில் வை. புத்தகங்களை ஒழுங்குபடுத்து. அறையில் சிதறி கிடக்கும் பொருட்களை அந்தந்த இடத்தில் வை' என அன்பாக கூறுங்கள். அதைத்தொடர்ந்து 'நீங்கள் பயன்படுத்தும் அறையை நீங்களேதான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்' என்று கூறி அவர்களுடன் சேர்ந்து அறையை சுத்தப்படுத்துவதற்கு உதவுங்கள். நாளடைவில் அவர்களாகவே சுத்தம் செய்வதற்கு பழகிவிடுவார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவப்பு கொய்யாவை விட வெள்ளை கொய்யா சற்று இனிப்புச் சுவை கொண்டது.
    • வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யா அதிக நீர் உள்ளடக்கம் கொண்டிருக்கும்.

    அனைத்து பருவகாலங்களிலும் ருசிக்கப்படும் பழங்களில் ஒன்றாக விளங்கும் கொய்யா, 100-க்கும் மேற்பட்ட ரகங்களை கொண்டது. ஆனாலும் வெள்ளை நிறம், சிவப்பு நிறம் மட்டுமே பலருக்கும் பரீட்சயமானவை. பரவலாக கிடைக்கக்கூடியவை, விரும்பி சாப்பிடக்கூடியவை. இவை இரண்டும் சத்தானவை என்றாலும், சுவை, ஊட்டச்சத்து மதிப்பு, ஆரோக்கிய நன்மைகளில் வேறுபடுகின்றன.

    வெள்ளை கொய்யா

    சிவப்பு கொய்யாவை விட வெள்ளை கொய்யா சற்று இனிப்புச் சுவை கொண்டது. அதிக சர்க்கரை, ஸ்டார்ச், வைட்டமின் சி நிறைந்திருக்கும். சிவப்பு கொய்யாவை விட விதைகளும் அதிகமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிறந்த தேர்வாக வெள்ளை கொய்யா குறிப்பிடப்படுகிறது.

    நன்மைகள்:

    * ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    * செரிமானத்தை துரிதப்படுத்தும்.

    * உடல் எடை இழப்பை ஊக்குவிக்கும்.

    * சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

    * ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும்.

    * மாதவிடாய் வலியை கட்டுப்படுத்தும்.

    * புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது.

    சிவப்பு கொய்யா

    வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யா அதிக நீர் உள்ளடக்கம் கொண்டிருக்கும். ஆனால் சர்க்கரை, ஸ்டார்ச் மற்றும் வைட்டமின் சி குறைவாக இருக்கும். கரோட்டினாய்டுகள், குறிப்பாக சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டான லைகோபீன் போன்றவை சிவப்பு நிறத்துக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

    நன்மைகள்:

    * இதில் இருக்கும் அதிக லைகோபீன் இதயத்தைப் பாதுகாக்க உதவிடும்.

    * சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    * வைட்டமின் ஏ, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.

    * நார்ச்சத்தும் நிறைந்தது. செரிமானம் மற்றும் உடல் எடையை நிர்வகிக்க துணைபுரியும்.

    * இதில் சர்க்கரை குறைவாக இருக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

    எது சிறந்தது?

    இரண்டு கொய்யா ரகங்களும் ஆரோக்கியமானவை என்றாலும் அதிக ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் ஏ, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து காரணமாக சிவப்பு கொய்யா முதலிடத்தை பெறுகிறது. குறிப்பாக இதய ஆரோக்கியம் காக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

    அதேவேளையில் வெள்ளை கொய்யா ஊட்டச்சத்து மதிப்பில் குறைந்ததில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதற்கும் சிறந்த தேர்வாக அமையும். அவரவர் உடல் நலனுக்கு எது ஏற்புடையது என்பதை முடிவு செய்து, ருசிக்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரத்ததானம் செய்ய ரத்த வகையைத் தெரிந்திருக்க வேண்டும்.
    • விபத்தால் ரத்தம் இழப்பவர்களுக்கும் ரத்தம் செலுத்த வேண்டி வரும்.

    நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தமாகும். இந்த ரத்தம் ஒவ்வொரு உறுப்புக்கும் சீராகச் சென்றடையாவிட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

    அவசர கால சிகிச்சைகளில் விபத்துகள் அல்லது அறுவை சிகிச்சையின்போது ரத்தம் தேவைப்படும்போது, ரத்த வகை தெரியாதவர்களுக்கு O எதிர்மறை (O-) வகை இரத்தம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது உலகளாவிய இரத்த வகையாகக் கருதப்படுகிறது. சரியான இரத்த வகையைத் தெரிந்துகொள்வது மிக முக்கியமானது.

    ஒருவருக்குப் பொருந்தாத இரத்த வகையைச் செலுத்தினால், அது கடுமையான நோய் எதிர்ப்பு எதிர்வினைகளை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தாக முடியும்.

    ரத்த வகை Rh ஆன்டிஜென் அல்லது Rh-ஐ அடிப்படையாகக் கொண்டது. இது நேர்மறை (+) அல்லது எதிர்மறை (-) என வகைப்படுத்தப்படுகிறது. 

    இரண்டு அமைப்புகளின் கலவையால் எட்டு [A+, A, B+, B, AB+, AB, O+, O] அடிப்படை இரத்த வகைகள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் ரத்த வகையைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    ரத்த தானம் செய்ய ரத்த வகையைத் தெரிந்திருக்க வேண்டும். ரத்தசோகை, ஹீமோபீலியா போன்ற நோய்கள், அசாதாரணப் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சைகளின்போதும், விபத்தால் ரத்தம் இழப்பவர்களுக்கும் ரத்தம் செலுத்த வேண்டி வரும்.

    ஒருவருக்கு எந்த ரத்த வகை உள்ளதோ, அதே ரத்தம்தான் அவருக்குச் சேரும். அதற்கு ரத்தம் தேவைப்படுபவர், தானம் செய்கிறவர் என இருவரின் ரத்த வகையும் தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு உரிமம் எடுக்கும்போதும் பள்ளி, கல்லூரிகளில் அனுமதிக்கப்படும்போதும் ரத்த வகையைக் குறிப்பிட வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பழம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
    • ஓட்ஸ் சாப்பிட்டால், ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.

    பாதாம்: பாதாமில் இருக்கும் கலவைகள் எல்.டி.எல். எனப்படும் தீயக் கொழுப்பை அகற்ற உதவுகிறது. மற்றும் இதயம், ரத்த நாளங்களில் சேதம் ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது. எனவே, அதிகாலையில் பாதாம் சாப்பிடுவதை பழக்கமாக கொள்ளுங்கள்.

    நல்ல கொழுப்புகள்: நல்ல கொழுப்பு உணவுகளான, ஆலிவ் ஆயில், வெண்ணெய் பழம், ஆளிவிதைகள், மீன், நட்ஸ் போன்றவை தீய கொழுப்பை அகற்ற உதவுகிறது. குறிப்பாக எல்.டி.எல் கொழுப்பை குறைக்க உதவுகிறது.

    மீன்: கடல் உணவு எனப்படும் "சீ புட்ஸ்", கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் சிறந்த உணவாகும். குறிப்பாக மீன்களில் இருக்கும் ஒமேகா 3 சத்து இதற்கு உதவுகிறது.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள், இயற்கையான முறைகளில் மிக எளிதாக தீயக் கொழுப்புகளை அகற்ற உதவுவது நார்ச்சத்து உணவுகள் தான். பழங்கள், காய்கறிகள், தானிய உணவுகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. தினமும் ஏதேனும் ஓர் காய்கறி அல்லது பழம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

    ஓட்ஸ்: அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்களுக்கு சிறந்த உணவு இந்த ஓட்ஸ். தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிட்டால், ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரோபோ சங்கர் தன் உடல்நிலையை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
    • மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் இந்நோய்க்கு முழுமையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

    சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையை உருவாக்கி வைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். இதனை தொடர்ந்து நடிப்பில் தீவிரம் கவனம் செலுத்தி வந்த ரோபோ சங்கர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46.

    ரோபோ சங்கரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரோபோ சங்கர் தன் உடல்நிலையை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் கல்லீரல் செயலிழந்ததால் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோபோ சங்கரின் உயிரிழப்பு, கல்லீரல் நோய்களின் தீவிரத்தையும், சரியான சிகிச்சையின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. அதுகுறித்து பார்ப்போம்...

    கல்லீரல், கல்லீரல் நோய்களின் தீவிரம், சரியான சிகிச்சையும் முக்கியத்துவமும்

    கல்லீரல் கொழுப்பு நோய் இரண்டு வகைகளாக உள்ளது:

    ஆல்கஹால் சார்ந்த கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்.

    ஆல்கஹால் சார்ந்த கொழுப்பு கல்லீரல் நோய்:

    அதிகப்படியான மது அருந்துவதால் ஏற்படுகிறது. மது, உடலுக்கு தேவையற்ற நச்சாக செயல்படுவதால், கல்லீரல் அதை வெளியேற்ற முயல்கிறது. இதனால் கல்லீரல் செல்கள் சேதமடைந்து, கொழுப்பு படிந்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மேலும் மோசமடைந்தால், ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ் உருவாகலாம்.

    ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்:

    மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் இந்நோய்க்கு முழுமையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், உடல் பருமன், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்கை, இரண்டாம் வகை சர்க்கரை நோய், உயர் கொலஸ்ட்ரால், முறையற்ற உணவு முறை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

    தொடக்கத்தில் இந்நோய் அறிகுறிகளைக் காட்டாவிட்டாலும், முற்றிய நிலையில் சோர்வு, பலவீனம், வயிற்று வலி, மஞ்சள் காமாலை, வயிற்றில் நீர் கோர்த்தல் போன்றவை தோன்றலாம். இதற்கு மருத்துவரின் ஆலோசனையுடன் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

    கல்லீரல் வீக்கம்:

    கல்லீரல் வீக்கம் பெரும்பாலும் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. ஹெபடைடிஸ் ஏ மற்றும் இ வைரஸ்கள், பாதிக்கப்பட்டவரின் ரத்தம் மூலமாகவோ, ஒரே சவரக்கத்தியை பலர் பயன்படுத்துவதாலோ பரவலாம். மேலும், அதிக மது அருந்துதல் மற்றும் மருத்துவர் பரிந்துரை இல்லாத மருந்துகளை உட்கொள்வதும் இந்நோயை உருவாக்கலாம். கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி போன்றவை இந்நோயை குணப்படுத்துவதாக நம்புவது தவறு, ஏனெனில் இவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

    கல்லீரல் சிரோசிஸ்:

    கல்லீரல் சிரோசிஸ் என்பது கல்லீரல் திசுக்கள் வடு திசுக்களாக மாறி, நிரந்தரமாக சேதமடையும் நிலை. இதை குணப்படுத்த எந்த நாட்டு மருந்தும் இல்லை. இந்நிலையில் கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டு, புற்றுநோய் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நிலைகளுக்கு வழிவகுக்கும். உடனடி மருத்துவ சிகிச்சை மட்டுமே இதற்கு தீர்வு.

    கல்லீரல் செயலிழப்பு:

    கல்லீரல் செயலிழப்பு என்பது நோயின் இறுதி மற்றும் மிக ஆபத்தான நிலை. இதற்கு நாட்டு மருந்துகளோ, ஆங்கில மருந்துகளோ தீர்வாகாது. ஒரே தீர்வு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே. இந்நிலையில் நாட்டு மருந்துகளை நம்புவது உடலில் நச்சுக்களை அதிகரித்து, ரத்தப்போக்கு, சிறுநீரக செயலிழப்பு போன்ற அவசர நிலைகளை உருவாக்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடல் பருமன், அதிக வயிறு மற்றும் கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு எதிர்ப்பு பயிற்சி உதவுகிறது.
    • இதய உந்துதலை மேம்படுத்துகிறது.

    கரோனரி இதய நோய், செரிப்ரோவாஸ்குலர் நோய், புற தமனி நோய், வாத இதய நோய், பிறவி இதய நோய், ஆழமான நரம்பு ரத்த உறைவு மற்றும் நுரையீரல் தக்கையடைப்பு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களை கட்டுப்படுத்த மற்றும் நிர்வகிக்க உடல் தகுதியுடன் இருப்பது முக்கியம்.

    உடற்பயிற்சி இதய தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. பி.எம்.ஐ.யை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதிக கொழுப்பு, உயர் ரத்த சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக தமனி சேதமாவதின் அபாயத்தை குறைக்கிறது.

    மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கிறது. வெவ்வேறு வகையான உடற்பயிற்சிகள் இருதய நோய்களில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

    விறுவிறுப்பான நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ் விளையாடுதல் மற்றும் கயிறு குதித்தல் போன்ற ஏரோபிக் பயிற்சிகள் சுழற்சியை மேம்படுத்துகின்றன. இதன் விளைவாக ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு குறைகிறது. இது இதய உந்துதலை மேம்படுத்துகிறது. நீரிழிவு கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

    உடல் பருமன், அதிக வயிறு மற்றும் கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு எதிர்ப்பு பயிற்சி உதவுகிறது. எதிர்ப்பு பயிற்சி கெட்டகொழுப்பை குறைக்கிறது. நல்ல கொழுப்பை மேம்படுத்துகிறது. கை எடைகள், டம்ப்பெல்ஸ் அல்லது பார்பெல்ஸ், வெயிட் மெசின்கள், புஷ்-அப்கள், குந்துகைகள் மற்றும் சின்-அப்கள் போன்ற இலவச எடைகளுடன் வேலை செய்வது எதிர்ப்பு பயிற்சிக்கான சிறந்த தேர்வாகும்.

    நீட்சி, நெகிழ்வு மற்றும் சமநிலை நீட்டித்தல் போன்ற நெகிழ்வு தன்மை உடற்பயிற்சிகள் இருதய நோய் நிலைகளுக்கு நேரடியாக பங்களிக்காது. ஆனால் இது நெகிழ்வானதாகவும், மூட்டு வலி, தசைப்பிடிப்பு மற்றும் பிற தசை பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணையம் உடலில் அமிலம், புரதம், கொழுப்பு ஆகியவற்றை உடைக்கவும், சிறுகுடலில் செரிமானத்தை மேம்படுத்தவும் செய்கிறது.
    • புற்றுநோய், இன்சுலின் உற்பத்தி குறைந்து ரத்த சர்க்கரை சமநிலை இழந்தாலும் கணையம் பாதிக்கப்படுகிறது.

    கணையம் என்பது மனித உடலில், வயிற்றுக்கு பின்னால் உள்ள ஒரு முக்கிய உறுப்பாகும்.

    இது உணவு செரிமானம் மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான சுரப்பி மற்றும் உட்சுரப்பி என்று 2 விதமாக செயல்படும். செரிமான சுரப்பியாக செயல்படும் நிலையில், என்சைம்கள் என்ற நொதிகளை உற்பத்தி செய்து உணவை செரிக்க உதவுகிறது. உடலில் அமிலம், புரதம், கொழுப்பு ஆகியவற்றை உடைக்கவும், சிறுகுடலில் செரிமானத்தை மேம்படுத்தவும் செய்கிறது.

    உட்சுரப்பி நிலையில் செயல்படும்போது, ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த இன்சுலின் மற்றும் குளூகோகான் என்ற ஹார்மோன்களை சுரக்கிறது. கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள், கணையத்தின் லாங்கர்ஹான்ஸ் என்ற பகுதியில் இருக்கும் சிறப்பு நாளமில்லா செல்கள், ஹார்மோன்களை சுரந்து உடலில் சர்க்கரையின் சமநிலையை பேண உதவும் வகையில் இன்சுலினை வெளியிடுகின்றன.

    அதிகமாக மது குடிப்பது, பித்தக்கற்கள், கணைய சாற்றுநீர் வெளியேறும் பாதை தடைபடுவது, அழற்சி ஏற்படுவது போன்றவற்றால் கணையம் வலுவிழக்கிறது. புற்றுநோய், இன்சுலின் உற்பத்தி குறைந்து ரத்த சர்க்கரை சமநிலை இழந்தாலும் கணையம் பாதிக்கப்படுகிறது. அதிக கொழுப்பு, கணையச் செல்களுக்கு நேரடி காயம், தொற்று போன்றவையும் கணைய செயல் இழப்புக்கு காரணமாக வாய்ப்பு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆண்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதயம் சற்று வேகமாக துடிக்கும்.
    • தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு முதலில் உருவாகும் உறுப்பு இதயம்தான்.

    உடலில் எந்த உறுப்பு செயல் இழந்தாலும் மருத்துவ உதவியுடன் மனிதன் உயிர் வாழ வாய்ப்பு உண்டு. மூளை செயல் இழந்தால்கூட (மூளைச்சாவு அடைதல்) உயிர் வாழ முடியும். ஆனால் இதயம் இயங்குவது நின்றுபோனால் மரணம்தான். இதனால்தான் எந்த உறுப்புக்கும் இல்லாத முக்கியத்துவத்தை இதயம் பெறுகிறது.

    • மார்பின் இடது பக்கத்தில் கையளவு அமைந்துள்ள இதயம், தசைகளான 4 அறைகளை கொண்டது. மூன்றடுக்கு தசைச் சுவர்களுடன்கூடிய இதயம் 'பெரிகார்டியம்' என்ற பையினுள் அமைந்துள்ளது. இதயத்தின் எடை ஆண்களுக்கு 300 முதல் 350 கிராம் வரையிலும், பெண்களுக்கு 250 முதல் 300 கிராம் வரையிலும் இருக்கும்.

    • உடலின் பல்வேறு பாகங்களில் இருந்தும் இதயத்துக்கு வரும் ரத்தம் நுரையீரல் உதவியுடன் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் இதயத்துக்கு வந்து அங்கிருந்து உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    • இதயத்தில் உள்ள நான்கு அறைகளும் சுருங்கி விரிவதன் மூலம் உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கும் பணி இடைவிடாமல் நடைபெறுகிறது.

    • அந்த வகையில் ஒரு நிமிடத்துக்கு 5 லிட்டர் ரத்தம் இதயத்தில் இருந்து உடல் முழுவதற்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ரத்த ஓட்டத்தின் மூலம் உடல் உறுப்புகளுக்கு தேவையான பிராணவாயு மற்றும் ஊட்டசத்துகள் கிடைக்கின்றன.

    • இதயம் சுருங்கி விரியும்போது 'லப்-டப்' என்ற ஓசையுடன் எழும் சத்தம்தான் இதயத்துடிப்பு எனப்படுகிறது.

    • ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம் 7,200 லிட்டர் அளவு ரத்தத்தை 'பம்ப்' செய்கிறது.

    • 66 வயது வரை நிரம்பிய ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏறக்குறைய 250 கோடி தடவை இதயம் துடிக்கும்.

    • ஆண்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதயம் சற்று வேகமாக துடிக்கும்.

    • தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு முதலில் உருவாகும் உறுப்பு இதயம்தான். அப்போது துடிக்கத் தொடங்கும் இதயம், கடைசியில் மூச்சு நின்று உயிர் உடலை விட்டு பிரியும் வரை தொடர்ந்து துடித்துக் கொண்டே இருக்கிறது.

    • அந்த வகையில் நம் உடலில் ஓய்வின்றி உழைக்கும் ஒரே உறுப்பு இதயம்தான். அது ஓய்வெடுக்கத் தொடங்கினால். வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்று அர்த்தம்.

    • பிறவியிலேயே ஏற்படும் கோளாறுகள், இதய தசைகள் மற்றும் வால்வுகளின் ஏற்படும் நோய்கள், மேலும் இதயத்துடன் நேரடி இணைப்பை கொண்ட ரத்தக்குழாய்களில் உண்டாகும் நோய்கள் காரணமாக இதயநோய் ஏற்படுகிறது. ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக இதயத்துக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதைத்தான் மாரடைப்பு என்கிறோம். தக்க சமயத்தில் இதை கண்டறிந்து, அடைப்பை நீக்கி சரி செய்தால் பிழைத்துக் கொள்ளலாம்.

    • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இதய தினமாக கொண்டாடப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
    • இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.

    சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:

    நச்சுக்களை அகற்றுபவை:

    நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவு வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.

    எலும்புகளை வலுவாக்குபவை:

    இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப்பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.

    கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:

    அசைவ உணவு அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு கார்போ ஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டில் இருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும். சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.

    ஆரோக்கியமான மேனி:

    பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.
    • ரத்தத்தில் கலந்துள்ள நச்சு பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது.

    மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். இது சுத்தமான சுவையான பானம் ஆகும். இளநீரில் செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன.

    அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தை தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச்சத்து குறையும் நிலையில் அதை சரி செய்யும்.

    ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களை குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

    இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்பு தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை நரம்பு மூலம் செலுத்தலாம். ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்று பொருளாக இளநீர் பயன்படுத்த ப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சு பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது.

    இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரை சத்துடன் தாது பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத்தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும்.

    ×