என் மலர்

    பெண்கள் உலகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெந்தயம் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
    • ஓமம், சீரகம், சுக்கு வறுத்து பொடி செய்து தினமும் கொதிக்க வைத்து குடித்தால் அஜீரண கோளாறு இருக்காது.

    * கறிவேப்பிலையை பொடியாக அரைத்து ரசம், சாம்பார் இறக்கும் போது ஒரு டீஸ்பூன் போட்டால் வாசனையாக இருக்கும். கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் சாப்பிடலாம்.

    * வாரத்தில் ஒரு நாள் வேப்பிலை, சுண்டைக்காய், கண்ட திப்பிலி அரிசி திப்பிலி, தனியா, மிளகு ஆகியவற்றை சிறிதளவு வறுத்து பொடி செய்து சாப்பிட்டால் வாயு தொல்லை, பித்தம் குறையும்.

    * வெந்தயம் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். சாம்பார் கொதிக்கும்போது போட்டால் வாசனையாக இருக்கும். மோரில் ஒரு டிஸ்பூன் போட்டு குடித்தால் மலச்சிக்கல் வராது.

    * தனியா, கடலை பருப்பு, மிளகாய், பெருங்காயம் வறுத்து பொடி செய்து பொரியல், கூட்டு எல்லாவற்றிலும் உபயோகிக்கலாம். ருசியாக இருக்கும்.

    * ஓமம், சீரகம், சுக்கு வறுத்து பொடி செய்து தினமும் கொதிக்க வைத்து குடித்தால் அஜீரண கோளாறு இருக்காது.

    * முருங்கை இலைகளை கொதிக்க வைத்து அந்த நீரில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு குடிப்பது எலும்புக்கு பலம் சேர்க்கும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடலுக்குக் குளிர்ச்சி தரும் தானியங்களான சோளம், பார்லி போன்றவற்றை கோடை காலத்தில் சேர்க்கலாம்.
    • கோடை காலத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதுடன், நீரிழப்பைத் தடுக்கவும் தர்பூசணி உதவுகிறது.

    மார்ச் மாத மத்தியிலேயே கோடையின் தீவிரம் தெரியத் தொடங்கிவிட்டது. இனி நாட்கள் செல்லச் செல்ல, கோடையின் கடுமை அதிகரிக்கும். இந்நிலையில், கோடை காலத்தை உடல் ஆரோக்கியப் பிரச்சனைகள் இன்றி நலமாய் கழிக்க உதவும் சில குறிப்புகளை பார்க்கலாம்...

    * கோடையில் சூரிய ஒளியின் தாக்கத்தால் நம் சருமத்தில் புறஊதாக் கதிர்களால் பாதிப்பு ஏற்படலாம். ஆக்சிடேசன் எனும் வேதி மாற்றம் உங்களை களைப் படையச் செய்யும். அதிலிருந்து தப்பிக்க நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * உடலுக்குக் குளிர்ச்சி தரும் தானியங்களான சோளம், பார்லி போன்றவற்றை கோடை காலத்தில் சேர்க்கலாம். மேலும், சோம்பு, சீரகம், பழங்களில் திராட்சை, பேரீச்சை மற்றும் நீர்ச்சத்துள்ள பழங்கள் நல்லது.

    * கோடை காலத்தில் வரும் முக்கியமான பிரச்சனை, 'புட் பாய்சனிங்' எனப்படும் உணவு நஞ்சாதல். அதைத் தவிர்க்க, சீரகத்தை வறுத்துப் பொடி செய்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு ஸ்பூன் பொடியை மோரில் கலந்து குடித்து வர, புட் பாய்சன் அபாயம் நீங்கும். வயிற்றுப்போக்கு போன்றவற்றையும் சரிசெய்யும்.

    * கோடை காலத்தில் இரவில் பனங்கற்கண்டு கலந்து பாலை அருந்தி வர, உடல் சூடு தணியும். பகலில் கொத்தமல்லித் தழையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும். ரோஜா இதழ்களை தேனில் ஊறவைத்துச் சாப்பிடலாம்.

    * உடலில் சூட்டை அதிகரிக்கும் வேர்க்காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீட்ரூட் மற்றும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, காளான் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

    * கோடை காலத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதுடன், நீரிழப்பைத் தடுக்கவும் தர்பூசணி உதவுகிறது. தர்பூசணி உங்களை நீரேற்றமாகவும், குளிர்ச்சியாகவும் வைப்பதுடன், சூரிய வெப்பத்தால் சருமம் சேதமடையாமல் பாதுகாக்கிறது. முலாம் பழம், கோடைகால வெப்பத்தால் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களைத் தவிர்த்து உடலை நீரேற்றமாக வைக்க உதவும்.

    * கோடை நாட்களில் அதிக தாகம் ஏற்படும். அதற்கு, செம்பருத்தி பூவின் 5 இதழ்களை ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து குடிக்கலாம். நெல்லி வற்றலை பாக்கு போல வாயிலிட்டு மென்று வந்தாலும் தாகம் தணியும். உணவில் தேனை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.

    * வெயில் நேரத்தில் அவ்வப்போது முகம் கழுவிக் கொள்ளுங்கள். உடனே துணியால் துடைக்காமல் அப்படியே விட்டு விடுங்கள். சிறிது நேரத்தில் தானாகவே உலர்ந்து விடும். நல்ல புத்துணர்ச்சியும் கொடுக்கும்.

    * அதிக வெப்பம் காரணமாக சில நேரங்களில் கண்கள் எரியும். அப்போது ஒரு கைக்குட்டை அல்லது தூய துணியை நீரில் நனைத்து அவ்வப்போது கண்களில் ஒற்றிக்கொள்ளுங்கள்.

    * கோடை காலத்தில் கண்களின் நலன் காக்க தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வரலாம். அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும். வெளியே செல்லும்போது சன்ஸ் கிரீன் போட்டுக்கொள்வதும் நல்லது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மிகுந்த மன அழுத்தம் கொண்டிருந்தாலும் இரவில் திடீரென விழிப்பு ஏற்படும்.
    • அமைதியான, வசதியான, குளிர்ச்சியான அறையில் தூங்கவும்.

    உடலின் சமநிலையை பேணவும், உடல்-மன நிம்மதியை அளிக்கவும் தூக்கம் மிகவும் அவசியமானது. சோர்வில் இருந்து மீட்டெடுத்து, புதிய ஆற்றலை உடலுக்கும், உள்ளத்துக்கும் வழங்கும் மகத்தான சக்தி தூக்கத்திற்கு இருக்கிறது. ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையால் பலர் தூக்கக் குறைபாடு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். எந்தவித வெளிப்புற சத்தமோ அல்லது அலாரமோ இல்லாமல் இரவில் திடீரெனவோ, அடிக்கடியோ விழித்துக்கொள்வதும், மீண்டும் தூங்க முடியாமல் அவதிப்படுவதும் தூக்கம் பாதிக்கப்பட்டுள்ளதற்கான அடையாளமாக கருதப்படுகிறது.

    ஆய்வு என்ன சொல்கிறது?

    அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் படி, 35.5 சத வீதம் பேர் வாரத்தில் குறைந்தது மூன்று இரவுகள் இவ்வகை தூக்க இடையூறுகளை அனுபவிக்கிறார்கள். 23 சதவீதம் பேர் இரவில் திடீரென விழித்துக்கொள்வதாக தெரிவிக்கிறார்கள்.

    நீங்கள் அடிக்கடி அதிகாலை 3 மணி அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினமும் விழித்துக்கொண்டு, மீண்டும் தூங்க முடியாமல் சிரமப்படுவதை வாடிக்கையாக கொண்டால் அதற்குரிய மருத்துவ காரணங்கள் குறித்து பார்ப்போம்...

    சர்க்காடியன் ரிதம் பாதிப்பு

    மனித உடலில் உள்ள சர்க்காடியன் ரிதம் எனப்படும் உட்புற உயிரியல் கடிகாரம் பாதிக்கப்படும்போது, தூக்கத்தில் அடிக்கடி விழிப்பு ஏற்படலாம். ஒளி மற்றும் இருள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளின் அடிப்படையில், இந்த உயிரியல் கடிகாரம் செயல்படுகிறது. இது பாதிப்புக்குள்ளாகும்போது, தூக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பு குறையலாம். அதன் காரணமாக தூங்குவதில் சிரமம், அடிக்கடி கண் விழித்துக்கொள்வது, வழக்கத்தை விட முன்பே கண் விழித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

    ஒழுங்கற்ற தூக்க நேரம், சுற்றுச்சூழலில் நிலவும் அதிக சத்தம், அறை வெப்பநிலை சீரற்ற நிலையில் இருத்தல், மன அழுத்தம், நோய் பாதிப்பு, தூக்க கோளாறுகள், சில மருந்துகள், மின்னணு சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை சர்க்காடியன் ரிதம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. இந்த உயிரியல் கடிகாரம் நீண்ட காலம் பாதிக்கப்பட்டால், தூக்கக்கோளாறால் நீண்ட நாட்கள் தவித்தல், சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    தூக்க இடையூறுக்கான மற்ற காரணங்கள்

    மிகுந்த மன அழுத்தம் கொண்டிருந்தாலும் இரவில் திடீரென விழிப்பு ஏற்படும். அப்படிப்பட்ட தூக்க குறைபாடு பிரச்சனை நீடித்தால் கார்டிசால் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்து, தூக்கத்தை மேலும் பாதிக்கும். கவலை, பதற்றம் அதிகரித்தாலும் தூக்கத்தின் போது பயமுறுத்தும் கனவுகள் காணக்கூடும். அப்போது திடீரென விழிப்பு உண்டாகலாம். 'சிலீப் அப்னியா' எனப்படும் தூக்கத்தின்போது சுவாசம் அடிக்கடி தடைபடுவது அல்லது சுவாசம் குறைவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் குறட்டை, மூச்சுத்திணறல், பகலில் தூக்கம் கண்களை தழுவுதல், சோர்வு போன்ற அறிகுறிகள் வெளிப் படும்.

    தூக்கத்தை மேம்படுத்த சில ஆலோசனைகள்

    தினமும் இரவில் ஒரே நேரத்தில் தூங்கச் செல்லவும், காலையில் ஒரே நேரத்தில் விழிக்கவும்.

    தூங்குவதற்கு முன்பு குறைந்தது 30 நிமிடம் மின்னணு சாதனங்களை தவிர்க்கவும்.

    தூங்கும் முன்பு காபி, புகையிலை, மதுபானம் போன்றவற்றை தவிர்க்கவும்.

    தினமும் உடற்பயிற்சி செய்யவும்.

    அமைதியான, வசதியான, குளிர்ச்சியான அறையில் தூங்கவும்.

    தூங்குவதற்கு முன்பு ஜீரணிக்க கடினமான உணவுகளை தவிர்க்கவும்.

    இயற்கை சூரிய ஒளியை போதுமான அளவு பெறவும்.

    படுக்கையறையை தூக்கம் மற்றும் தாம்பத்தியத்துக்கு மட்டுமே பயன்படுத்தவும்.

    தியானம், சுவாச பாச பயிற்சி போன்ற தளர்வு முறைகளை பின்பற்றவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தின் தொடு வர்மம் கலை, ஒரு சில மாற்றம் கொண்டு சீனாவில் வேறு அறியப்படுகிறது.
    • மருத்துவர்கள் கருப்பு கவுனியின் பயன்பாட்டினை நன்கு அறிந்திருந்தார்கள்.

    பாரம்பரிய அரிசி ரகம் கருப்பு கவுனி அரிசி இன்று அரிதாகிவிட்டது. இது கருப்பாக இருப்பதற்கு காரணம், இதில் உள்ள அந்தோசினனின் என்னும் மூல வேதிப்பொருள் தான்.

    கருப்பு கவுனி அரிசி சமைத்த பின் ஊதா நிறத்தில் இருக்கும். பண்டைய தமிழ் மன்னர்கள் – சீன மன்னர்கள் இடையே இருந்த கப்பல் போக்குவரத்து மூலமாக நடைபெற்ற வியாபாரம் காரணமாக கருப்பு கவுனி தமிழகம் வந்தடைந்தது.

    சீன அரசர்கள் தங்களின் நாட்டிற்கு வருகை புரியும் பிற நாட்டின் அரசர்கள் மற்றும் கப்பல் மூலமாக வரும் வியாபாரிகளுக்கு கருப்பு கவுனியில் செய்யப்பட்ட விருந்து அளிக்கப்பட்டது.

    இதன் காரணம் இதில் உள்ள ஊட்ட சத்துக்கள். சீன அரசர்கள் இந்த வகை அரிசி கடவுள் தங்களுக்கு அளித்தாக கருதினார்கள். இதனால் பொதுமக்கள் இவ்வகை அரிசியை பயன்படுத்த தடை செய்யப்பட்டது.

    அரசரின் கட்டளை மீறி, பொதுமக்கள் யாரேனும் "கருப்பு கவுனி" அரிசியை பயன்படுத்தினால் தண்டனைக்கு உட்படுத்தபட்டனர்.

    தமிழகத்தின் தொடு வர்மம் கலை, ஒரு சில மாற்றம் கொண்டு சீனாவில் வேறு அறியப்படுகிறது. இவ்வகை மருத்துவர்கள் கருப்பு கவுனியின் பயன்பாட்டினை நன்கு அறிந்திருந்தார்கள். இவர்களின், கூற்றுப்படி பிரபஞ்ச சக்தியை உள்ள வாங்கும் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கருப்புகவுணி அரிசிக்கு உள்ளதாக நம்பப்படுகிறது.

    இதில் அதிகளவில் உள்ள நார்ச்சத்து உள்ளது.

    கருப்பு கவுனி அரிசியின் அந்தோசினனின் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், இருதய நோய்களைத் தடுப்பதற்கும், மூளை செயல்பட்டினை மேம்பட உதவுகிறது.

    சிவப்பு அரிசி உள்ளிட்ட மற்ற எந்த ஒரு அரிசியிலும் இல்லாத அளவு கருப்பு கவுனி அரிசி அந்தோசினனின் பாதிப்பினை தடுக்கிறது. மேலும், இதய பாதிப்பினை தடுக்கிறது.

    கருப்பு கவுனி அரிசி புற்றுநோய்க்கு எதிரானது என்பதை சீனாவில் எலிகள் மீது மேற்கொண்ட ஒரு ஆய்வில் நிரூபித்துள்ளனர்.

    கருப்பு கவுனி அரிசி நார்ச்சத்து மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ளதால் உடலின் தேவையற்ற கொழுப்புகளை குறைகிறது என்பதை ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

    உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதால் இதயத்தின் ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தவிர்க்கிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இடியாப்பத்தில் பிரியாணி செய்பவர்கள்கூட உண்டு.
    • உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

    தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளில் இடியாப்பம் மிகவும் முக்கியமானது. இது ஆவியில் வேகவைக்கப்படுவதால் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் செரிமானம் செய்யக்கூடிய உணவாகும். பெரும்பாலும் தேங்காய்ப்பால் அல்லது குருமாவுடன் சேர்த்து உண்ணப்படும் இந்த இடியாப்பம் உடலுக்கு உகந்தது.

    சங்க காலத்திலேயே இடியாப்பம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. `சூடாமணி நிகண்'டில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது. `இடி' என்றால் நெல்லில் இருந்து தயாராகும் மாவு, அதில் செய்யப்படும் அப்பம் என்பது இதன் பொருள். முதலாம் நூற்றாண்டிலேயே இடியாப்பம் இந்தியாவில் இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

    தமிழில் `நூல்புட்டு', கன்னடத்தில் `நூபுட்', மலேஷியாவில் `புட்டுமாயம்'... என அழைக்கப்படும் இடியாப்பம் இலங்கை வரை பிரபலமான ஓர் உணவு. கடலோரப் பகுதிகளிலும், நகரத் தெருக்களிலும் தெரு வியாபாரிகள் கூவிக்கூவி விற்ற அரிய உணவு. `பெரும்பானாற்றுப்படை', `சிலப்பதிகாரம்', `மதுரைக்காஞ்சி' போன்ற தமிழ் இலக்கியங்களில் எல்லாம் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

    சுத்தமான அரிசி மாவில் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைத்து, இடியாப்ப அச்சில் பிழிந்து எடுத்து அவித்தால் இடியாப்பம்! தேங்காய்ப் பால், பால், மீன் குழம்பு, பாயா இவற்றுடன் சாப்பிட அபாரச் சுவை! கேரளாவில் கொண்டைக்கடலையை கிரேவியாக்கி, அதனுடன் சேர்த்துச் சாப்பிடும் பழக்கம் உண்டு.

    இது, எளிய, ஆரோக்கியமான காலை உணவு. இடியாப்பத்தை உதிர்த்து, உப்புமாவாக்கலாம். நம் ஊரில் `சேவை' என்று சொல்வார்கள். இதைக்கொண்டு எலுமிச்சை, தக்காளி, புளி என விதவிதமாக `சேவை' செய்து ருசிக்கலாம். இடியாப்பத்தில் பிரியாணி செய்பவர்கள்கூட உண்டு.

     

    தினை, வரகரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு என சிறுதானியங்களில் செய்து ருசி பார்க்கும் அளவுக்கு இடியாப்பத்தின் மகத்துவம் இன்றைக்கு அனைவரும் உணர்ந்த ஒன்றாகிவிட்டது. ஒரு இடியாப்பத்தில் சராசரியாக 45 கலோரிகள், 0.27 கிராம் கொழுப்பு, 9.68 கிராம் கார்போஹைட்ரேட், 0.72 கிராம் புரோட்டீன் ஆகியவை உள்ளன. ஆயுர்வேத மருத்துவமுறையில், இது வாதத்தையும் பித்தத்தையும் சமநிலையில் வைத்திருக்கும் என்கிறார்கள்.

    இதை இளஞ்சூடாக சாப்பிடுவது நல்லது. இதில் நமக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து அனைத்தும் உள்ளன. எனவே, உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். எண்ணெய் சேர்க்காத, ஆவியில் வேகவைத்துச் செய்யப்படுவது என்பதால், வயிற்றுக்கு எந்தப் பிரச்சனையையும் ஏற்படுத்தாது. நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, நோயின் தன்மைக்கேற்ப இடியாப்பம் செய்து, மற்றவற்றுடன் கலந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்க ஏற்ற உணவு.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கண்ணாடி பாகம் மேசை மீது படாதவாறு வைக்க வேண்டும்.
    • மூக்குக் கண்ணாடியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    டிஜிட்டல் யுகத்தில் கண் கண்ணாடி, அவசியமான ஒன்றாகிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை... எல்லோரும் கண் கண்ணாடிகளை உபயோகித்து வரும் நிலையில், அதை பராமரிக்க சில யோசனைகள்...

    * மூக்குக் கண்ணாடிகளை உபயோகப்படுத்தாத நேரங்களில் அதன் உறையில் போட்டு வைத்திருக்க வேண்டும். அது முடியாவிடில் கண்ணாடி பாகம் மேசை மீது படாதவாறு வைக்க வேண்டும்.

    * மூக்குக் கண்ணாடியை கழற்றும் போது இரண்டு கைகளாலும் கண்ணாடியின் விளிம்பில் இணையும் இடத்தில் பிடித்து கழற்ற வேண்டும். ஒரு கையால் கழற்றும்போது மெல்லிய கண்ணாடி பிரேம்கள் வளைந்து போகவும், உடைந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன.

    * மூக்குக் கண்ணாடியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உபயோகப்படுத்தும் முன் ஒவ்வொரு முறையும் மென்மையான துணியால் நன்கு துடைக்க வேண்டும்.

    * மூக்குக் கண்ணாடிகளை அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இணைப்புகள் தளர்ந்துவிடாமல் முகத்தில் சரியாக பொருந்தும்படி செய்து உபயோகித்துக் கொள்ள வேண்டும்.

    * ஒருவரது மூக்குக் கண்ணாடியை மற்றவர் உபயோகப்படுத்தக் கூடாது. இதனால் அளவுகள் மாறி உரியவர் அணியும்போது பொருந்தாமல் அசவுகரியம் ஏற்படுத்தும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மண் பானைகளில் சமைக்கும் போது இந்தச் சுவை இன்னும் அதிகமாகும்.
    • விறகு அடுப்பில் சமைத்த உணவுகள் நீண்ட நேரம் கெடாமலும், சூடாகவும் இருக்கும்.

    ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போர் காரணமாக கியாஸ் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஓட்டல்களுக்கு விநியோகிக்கப்படும் வணிக சிலிண்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் முக்கிய உணவு விடுதிகளில் இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே கியாஸ் சிலிண்டர்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும் இதே நிலை நீடித்தால் ஓட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    மேலும், கியாஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதால் பல ஓட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி வருகிறது. கியால் சிலிண்டர் தட்டுப்பாட்டால் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகள் வைரலாகி வருகிறது. அதன்படி, உலகின் பல பகுதிகளிலும் இயற்கை கழிவுகளில் இருந்து எரிவாயுவை இலவசமாக உற்பத்தி செய்து கொள்ள உதவும் 'ஹோம் பயோ கியாஸ்' அமைப்பை உருவாக்கி வருகின்றனர். இந்த ஹோம் பயோ கியாஸ் என்பது வீடுகளில் மீதமாகும் இயற்கை மற்றும் உணவுக் கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயுவை உருவாக்குவது ஆகும்.

    காய்கறி தோல் உள்பட சமையலறை கழிவுகள் அனைத்தையும் சிறிய துண்டுகளாக வெட்டி, தண்ணீர் கலந்து போட்டால் 7 முதல் 10 நாட்களில் மக்கி மீத்தேன் வாயு வெளியாகும். இந்த வாயுவை குழாய் மூலம் அடுப்புக்கு இணைத்து, எரிவாயுவாக்கி சமைக்கலாம்.

    இதனிடையே, விறகு அடுப்பில் சமைப்பது மற்றும் அதன் நன்மைகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது குறித்து பார்ப்போம்...

    விறகு அடுப்பில் சமைத்து உண்பது, தற்கால நவீன அடுப்புகளை விட அதிக சுவையையும் ஆரோக்கியத்தையும் தரக்கூடியது.

    கூடுதல் சுவை மற்றும் மணம்: விறகு எரியும் போது வெளியாகும் லேசான புகைக்கரி, உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையையும் வாசனையையும் (Smoky flavor) சேர்க்கிறது. குறிப்பாக மண் பானைகளில் சமைக்கும் போது இந்தச் சுவை இன்னும் அதிகமாகும்.

    சத்துக்கள் பாதுகாப்பு: விறகு அடுப்பில் வெப்பம் சீராகவும் மெதுவாகவும் பரவுவதால், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சிதையாமல் பாதுகாக்கப்படுகின்றன. குறிப்பாக அதிக வெப்பத்தில் அழியக்கூடிய வைட்டமின் C போன்ற சத்துக்கள் இதில் நன்றாகத் தக்கவைக்கப்படுகின்றன.

    உடல் ஆரோக்கியம்: விறகு அடுப்பு சமையல் மெதுவாக (Slow cooking) நடப்பதால், உணவு எளிதில் செரிமானமாகும் தன்மையைப் பெறுகிறது. இது வயிற்று உபாதைகளைக் குறைக்க உதவுகிறது.

    பொருளாதாரச் சிக்கனம்: எரிவாயு (Gas) அல்லது மின்சார அடுப்புகளை விட விறகு அடுப்பு செலவு குறைவானது. கிராமப்புறங்களில் எளிதாகக் கிடைக்கும் சுள்ளிகள் மற்றும் விறகுகளைக் கொண்டு சமைக்கலாம்.

    சுற்றுச்சூழல் நட்பு: விறகு ஒரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாகும். முறையாக உலர்த்தப்பட்ட விறகுகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

    நீண்ட நேரம் சூடாக இருத்தல்: விறகு அடுப்பில் சமைத்த உணவுகள் நீண்ட நேரம் கெடாமலும், சூடாகவும் இருக்கும். மேலும், அடுப்பு அணைந்த பிறகும் அதில் இருக்கும் தணல் உணவைச் சூடாக வைத்திருக்க உதவும்.

    விறகு அடுப்பில் சமைப்பதால் ஏற்படும் தீமைகள்:

    விறகு அடுப்பில் அடிக்கடி சமைப்பதால் ஆஸ்துமா வர வாய்ப்பு உள்ளது. மேலும், விறகு அடுப்பில் வரும் புகையை நீண்ட காலம் சுவாசித்தால் சுவாச கோளாறுகள், நுரையீரல் பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.
    • வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது.

    வல்லாரை உண்பதும் நன்று, நல்லாரை காண்பதும் நன்று என்ற முதுமொழிக்கு ஏற்ப சர்வ வல்லமை மிக்க கீரையாக வல்லாரைக் கீரை விளங்குகிறது. இந்தக் கீரையுடன் பால் கலந்து அரைத்து சாப்பிட வேண்டும். வல்லாரை விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.

    உடலில் ஏற்படும் கட்டிகள், புண்கள் ஆகியவற்றை சரி செய்து விடும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு. வல்லாரை கீரையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகு பதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

    யானைக்கால் நோய் உள்ளவர்கள் வல்லாரைக் கீரையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை கீரையை அரைத்து, அதை சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், வாயு வீக்கம், தசை சிதைவு போன்றவை குணமாகி விடும். இந்தக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

    வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது. நரம்பு மண்டலங்களை பலப்படுத்துவதன் மூலம் நமது செயல்பாடுகள் மிகவும் சீராக அமைவதற்கு இது மிகுந்த உதவியாக அமைகிறது.

    மன அழுத்தத்தை தடுத்து நிறுத்துகிறது. வல்லாரைக் கீரை நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் உடலில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் சக்தியும் வல்லாரைக்கு உண்டு. வல்லாரைக் கீரையை வலியை போக்கக் கூடிய ஒரு மேற்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்த முடியும். வல்லாரை கீரையை நீர் விடாமல் நன்றாக பசை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பசையை வீக்கம் உள்ள இடத்தில் ஒரு பற்று போல் போட்டு வந்தால் வீக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

    மூளை நன்கு செயல்பட தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை என்றும் அழைக்கின்றனர். ரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல் நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. இந்த கீரையை கொண்டு பல் துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். வல்லாரை கீரையுடன் நல்ல நீர் சேர்த்து அரைத்து வல்லாரை ஜூஸாக்கி தினமும் 25 மில்லி அல்லது 30 மில்லி குடித்து வர மாரடைப்பு நம்மை நெருங்காது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பழங்களை வெட்டியதும் அதன் மீது சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.
    • உணவை சமைத்து முடித்ததும் வெப்பமாக இருக்கும் இடத்தில் சேமித்துவைக்கக்கூடாது.

    * காய்கறிகளை வெறுமனே வதக்காமல் கொஞ்சம் நீர், சிறிது சோம்பு தூள் சேர்த்து வதக்கவும். இதனால் காய்கறியின் நிறம் பிரகாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * மூன்று மடங்கு அரிசி, போதுமான அளவு தண்ணீர், சிறிது பால் சேர்த்து சாதம் வேக வைக்கவும். அப்படி செய்தால் சாதம் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * குழம்பில் சுவையை அதிகரிக்க செய்ய இறுதியில் சிறிது நெய், மசாலா வதக்கி சேர்க்கவும். வழக்கத்தை விட வாசனை இரு மடங்கு அதிகரிக்கும்.

    * பருப்பு வகைகளை வேக வைக்கும் முன்பு சிறிது இஞ்சி, உப்பு சேர்த்து ஊற வைக்கவும். அப்படி செய்தால் பருப்பு வேகவைக்கும் நேரம் குறையும். பருப்பு மென்மையாகவும் இருக்கும்.

    * குழம்பு நிறம் பிரகாசமாக மாற தக்காளி சேர்க்கும் முன்பு நெல்லிக்காய் சாறு சேர்க்கலாம். குழம்பு நிறம் மாறுவதுடன் சுவை இனிமையாகும்.

    * பழங்களை வெட்டியதும் அதன் மீது சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து விடவும். பழங்கள் பழுப்பு நிறத்துக்கு மாறாமல் இருக்கும்.

    * உணவை சமைத்து முடித்ததும் வெப்பமாக இருக்கும் இடத்தில் சேமித்துவைக்கக்கூடாது. மிதமான வெப்பமான இடத்திலோ, சற்று குளிர்ந்த இடத்திலோ மூடி வைக்கவும். வாசனை, சுவை குறையாது.

    * வறுத்த உணவு வகைகளில் எண்ணெய் குறைவாக இருக்க காய்கறிகளை தண்ணீரில் வதக்கி சேர்க்கவும். சுவை குறையாது, கொழுப்பு குறையும்.

    * கொத்தமல்லி, கறிவேப்பிலையை இறுதியில் சேர்க்கும் போது எண்ணெய்யில் கொஞ்சம் வதக்கி சேர்க்க வாசனை அதிகமாக இருக்கும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வறுத்த கோழி இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கும்.
    • சர்க்கரை பானங்கள், நொறுக்குத்தீனிகளுடன் சேர்த்து வறுத்த கோழி இறைச்சி சாப்பிடவும் கூடாது.

    கோழி இறைச்சியை எண்ணெய்யில் பொரித்து தயார் செய்யப்படும் 'பிரைடு சிக்கனை' பலரும் ருசிப்பதுண்டு. அதனை அடிக்கடி சாப்பிடுபவர்களும் உண்டு. அடிக்கடியோ, தினமுமோ 'பிரைடு சிக்கன்' சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

    * இந்த வறுத்த கோழி இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கும். தினமுமோ, அடிக்கடியோ சாப்பிடும்போது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்துவிடும்.

    * கலோரிகளும் அதிகம் இருக்கும். தொடர்ந்து சாப்பிடும்போது கலோரிகள் வேகமாக சேர்ந்து உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

    * 'பிரைடு சிக்கனை தொடர்ச்சியாக சாப்பிடும் நிலை நீடித்தால் காலப் போக்கில் உடல் பருமன், அதிக கொழுப்பு, இதய நோய் அபாயம் அதிகரிக்கலாம்.

    * சர்க்கரை பானங்கள், நொறுக்குத்தீனிகளுடன் சேர்த்து வறுத்த கோழி இறைச்சி சாப்பிடவும் கூடாது.

    எப்படி சாப்பிடலாம்?

    கோழி இறைச்சியை வேகவைத்தோ, நெருப்பில் சுட்டு 'கிரில் சிக்கனாகவோ உட்கொள்ளலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கீரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகம் கிடைக்கின்றன.
    • ஆரோக்கியமான வாழ்வை தரக்கூடிய இந்த நாட்டுக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து கொள்வது நலம் பயக்கும்.

    தெருக்களில் எளிதாக கிடைக்கும் மணத்தக்காளி கீரை ஒரு மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் 'காட்டுக்கீரை' என்று அழைக்கப்படும் இது, செரிமான மண்டலத்தைச் சீரமைப்பதில் முதன்மை வகிக்கிறது. இந்த கீரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ,சி, இ மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகம் கிடைக்கின்றன.

    இது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதோடு, கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சத்துக்கள் நிறைந்த இந்த கீரையைச் சிறுபருப்பு அல்லது பயத்தம்பருப்புடன் சேர்த்து மசியலாக சமைத்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியையும் வலுவையும் தரும். தாதுக்கள் பற்றாக்குறையை நீக்கி ஆரோக்கியமான வாழ்வை தரக்கூடிய இந்த நாட்டுக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து கொள்வது நலம் பயக்கும்.

    மணத்தக்காளி கீரையின் தனித்துவம், அது பெண்களின் கருப்பையை வலுப்படுத்துகிறது என்று சித்த மருத்துவம் கூறுகிறது. 100 கிராம் மணத்தக்காளி கீரையில், நீர்ச்சத்து 82 சதவீதம், புரதம் 5.9 கிராம், கொழுப்பு, ரிபோப்ளாவின் 59 மி.கி. நியாசின் 0.9 மி.கி. நிறைந்துள்ளன. நாட்டுக்கீரைகள் மிகப்பெரிய அளவில் மனிதனுக்கு ஏற்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறையை போக்கி நோய்களையும் வரவிடாமல் தடுக்கின்றன.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேங்காய்ப்பால் என்பது இயற்கையிலேயே எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது.
    • பசும்பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு தேங்காய்ப்பால் என்பது சிறந்த மாற்றாக இருக்கும்.

    நம் பாரம்பரிய உணவுகளில் புளியோதரை, லெமன்சாதம், தயிர்சாதம் போலவே தேங்காய் சாதமும் முக்கிய இடம் பிடிக்கிறது. உணவுக்கு சுவை மட்டுமின்றி, உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் வகையில் தேங்காய் சாதம் செய்து அசத்த முடியும். இதனால் சத்துக்கள் முழுவதுமாக நமக்கு கிடைக்கும்.

    குழம்பு மற்றும் பொரியல் வைக்கும் பொழுது காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு கிடைக்கும். ஆனால் நாம் தயிர் சாதம், லெமன் சாதம் போன்ற சாத வகைகள் செய்து கொடுக்கும் பொழுது அதில் சுவை மட்டுமே அதிகமாக இருக்குமே தவிர குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் குறைவாகவே கிடைக்கும்.

    ஆனால் குழந்தைகள் அதைக் கேட்டு அடம்பிடிக்கும் பொழுது, அதனை எப்படி ஆரோக்கியமாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்பதை தான் நாம் பார்க்க வேண்டும். அப்படி ஒரு ஹெல்தியான ரெசிபி தான் இந்த தேங்காய் பால் சாதம்.

    தேங்காய்ப்பால் என்பது இயற்கையிலேயே எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது. அதனுடன் ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்களை சேர்ந்து கொடுக்கும்பொழுது ஆரோக்கியமான மதிய உணவு அல்லது காலை உணவாக இந்த தேங்காய் பால் சாதம் இருக்கும்.

    தேங்காய் பால் சாதத்தில் வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளன. குறிப்பாக சொல்லப் போனால் வைட்டமின் சி, போலேட், இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனிஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

    தேங்காய் பாலில் எம்.சி.டி. எனப்படும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. இந்த கொழுப்பானது உடனடியாக கரைந்து உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்க வல்லது. குறிப்பாக மூளை வளர்ச்சிக்கு இந்த கொழுப்பு மிகவும் அவசியமாகும்.

    பசும்பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு தேங்காய்ப்பால் என்பது சிறந்த மாற்றாக இருக்கும். பசும்பாலில் உள்ள சத்துக்களை போலவே இதிலும் சத்துக்கள் அதிகம் என்பதால் பசும்பாலுக்கு பதிலாக இதனை குழந்தைகள் எடுத்துக் கொள்ளலாம்.

    இதில் இயற்கையிலேயே நிறைந்திருக்கும் லாரிக் அமிலம் எனப்படும் அமிலம் நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டதாகும். எனவே உடலில் ஏற்படும் காயங்களை இயற்கையாகவே ஆற்றும் தன்மை தேங்காய் பாலுக்கு உண்டு.

    மேலும் இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகமாக உள்ளதால், எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றது.

    இயற்கையிலேயே காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸி டென்ட்களான வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் செலினியம் நிறைந்துள்ளன. இவை உடலில் செல்கள் சிதை உடையாமல் பாதுகாக்கின்றன.

    தேங்காய் பாலில் நீர் சத்துக்கள் அதிகம் என்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்கின்றது.

    ×