என் மலர்

    லைஃப்ஸ்டைல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், அட்ரினலின் திரவம் சுரப்பு போன்றவை அதிகமாகலாம்.
    • கடின, மிகக்கடின உடற்பயிற்சிகளை மெதுமெதுவாக ஆரம்பித்து, பயிற்சி செய்யும் நேரத்தை படிப்படியாக அதிகரிப்பது நல்லது.

    கடின மற்றும் மிகக்கடின உடற்பயிற்சிகளை திடீரென்று அதிக நேரம் செய்யும்போது ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்பட கண்டிப்பாக வாய்ப்புண்டு. ஆனால் இது மிகமிக அரிதாகத்தான் நடக்கும். இதய நோய், சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், அதிக உடல் எடை, சீரற்ற இதய துடிப்பு உள்ளவர்கள், இதயத் தசைகள் வலுவிழந்தவர்கள் மிகக் கடின உடற்பயிற்சிகளை திடீரென்று அதிக நேரம் செய்யும்போது மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

    தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், அட்ரினலின் திரவம் சுரப்பு போன்றவை அதிகமாகலாம். இதனால் இதயத்திலுள்ள ரத்தக் குழாய்களின் உள்சுவரில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புக் கலவையான காறை வெடித்து, ரத்தக்குழாய்களை முழுமையாக அடைத்து மாரடைப்பை உண்டு பண்ணலாம். அல்லது இதயத்தில் இயற்கையாக ஏற்படும் மின்னோட்டத்தில் தொந்தரவு ஏற்பட்டு திடீர் மாரடைப்பு வரலாம்.

    மிகக்கடின உடற்பயிற்சிகளை செய்யும்போது பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் போன்ற தாது உப்புகள் மற்றும் கனிமங்கள் சேர்ந்த எலெக்ட்ரோலைட் பொருட்கள் குறையவோ, கூடவோ வாய்ப்புண்டு. இதனால், இதயம் உடனே பாதிக்கப்பட்டு மாரடைப்பு வரலாம்.

    கடின, மிகக்கடின உடற்பயிற்சிகளை மெதுமெதுவாக ஆரம்பித்து, பயிற்சி செய்யும் நேரத்தை படிப்படியாக அதிகரிப்பது நல்லது. கடினமான உடற்பயிற்சி செய்வதற்கு முன், 'வார்ம் அப்' எனப்படும் உடலை தயார்படுத்தும் பயிற்சிகளை செய்வது நல்லது. அப்படி இல்லாமல் திடீரென்று கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டால் இதயத்துக்கு வேலைப்பளு அதிகமாகி மாரடைப்பு வரலாம்.

    பொதுவாக உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து, உடலில் எப்பொழுதும் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

    கடின உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று எதிர்பாராதவிதமாக, நெஞ்சு மிகவும் இறுக்கமாக கனமாக இருக்கிறமாதிரி தென்பட்டாலோ, மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டாலோ, அதிகமாக வியர்த்துக் கொட்டினாலோ, தோள்பட்டை, இடதுகை, கழுத்து, தாடை, முதுகுப் பகுதி முதலியவைகளில் வலி ஏற்பட்டாலோ, உடனே உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கோ அல்லது அருகிலுள்ள இதயநோய் சிகிச்சை நிபுணரிடமோ சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனித உடலில் லேசான நேர்மறை மின்னூட்டம் உள்ளது.
    • புல் தரை, மணல் ஆகியவற்றில் நடப்பது கூடுதல் பலன்களை அளிக்கிறது.

    நிலத்தில் காலணி இன்றி வெறுங்கால்களால் நடப்பதன் மூலம் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என உலகின் பல நாடுகளிலும் 'பேர்புட் வாக்கிங்' பழக்கத்தை பலரும் கடைப்பிடிக்க தொடங்கி உள்ளனர்.

    வெறுங்கால் நடை என்ற இந்த செயல்பாடு, இயற்கையான ஒரு மனிதனின் நடையை மீட்டெடுத்து, கால் வலியில் இருந்து நிவாரணம் பெற உதவுவதுடன், இடுப்பு, முழங்கால்கள் இலகுவாக இயங்க உதவுகிறது என்றும் கூறுகின்றனர்.

    இதன் பின்னணியில் ஒரு எளிய அறிவியல் உள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, மனித உடலில் லேசான நேர்மறை மின்னூட்டம் உள்ளது. நமது செல்கள் மின் தூண்டுதல்கள் மூலம் செயல்பாடுகளை நடத்துகின்றன. நரம்பு மண்டலம் உடல் முழுவதும் மற்றும் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்ப மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால் நாம் சிந்திக்கவும், நகரவும், உணரவும் முடியும். ஓய்வெடுக்கும் செல்கள் உட்புறமாக எதிர்மறையாக மின்னூட்டம் பெற்றிருந்தாலும், வெளிப்புற செல் சூழல் நேர்மறையாக மின்னூட்டம் பெற்றது.



    பூமி ஒரு எதிர்மறை மின்னூட்டம் என்ற நெகடிவ் மின்னூட்டம் கொண்டுள்ளது. இந்தநிலையில், மனிதனின் கால்கள் நிலத்தில் பூமியுடன் தொடர்பை ஏற்படுத்தும் போது, பூமியை அழுத்துவதன் மூலம், உடலில் இருக்கும் அதிகப்படியான நேர்மறை மின்னூட்டம் சமநிலை அடைந்து உடலில் ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளை குணப்படுத்தும் விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

    நிலத்தில் வெறுங்கால்களால் நடப்பதன் மூலம், மன அழுத்தம் குறைகிறது. உடல் ஆற்றல் அதிகரிக்கிறது மற்றும் ரத்த அழுத்தம் குறைகிறது என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    புல் தரை, மணல் ஆகியவற்றில் நடப்பது கூடுதல் பலன்களை அளிக்கிறது. இது நம்மை பூமியுடன் மின்சாரம் மூலம் மீண்டும் இணைக்கும் ஒரு சிகிச்சை நுட்பம் என்றும் இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    அதேவேளையில் காலணிகள் இன்றி நிலத்தில் நடப்பது பல்வேறு கிருமிகள் உடலில் தொற்றி உடல் நலனை பாதிக்கும் என்றும் பல்வேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்சார்கள், மென்பொருள்கள் மற்றும் நெட்வொர்க் இணைப்புகளை கொண்டு செயல்படுகின்றன.
    • வீட்டில் இருக்கும்போது, குரல் வழி கட்டளைகள் மூலமாகவும் இதை இயக்கலாம்.

    இப்போது எல்லாமே டிஜிட்டல் மயம்தான். 'ஓகே கூகுள்', 'ஹே சிரி'... என குரல் வழி கட்டுப்பாட்டில் உலகமே இயங்க பழகிவிட்டது.

    ஸ்மார்ட்போன் மட்டுமல்ல, இப்போது வீட்டு உபயோக சாதனங்கள் கூட நவீனமாக அப்டேட் ஆகிவிட்டன. ஒருகாலத்தில் நாம் வாங்கும் பிரிட்ஜ், ஏ.சி.யில் மின்சார பயன்பாட்டை குறைக்கும் நட்சத்திர தர சான்று இருக்கிறதா..? என்று தேடியவர்கள், இப்போது நாம் வாங்கும் வீட்டு உபயோக சாதனங்களில் ஐ.ஓ.டி. தொழில்நுட்பம் இருக்கிறதா..? என அலசி ஆராய பழகிவிட்டனர். ஆம்..! நீங்களும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. போன்ற மின்சாதன பொருட்களை வாங்குவதாக இருந்தால், அதில் ஐ.ஓ.டி. தொழில்நுட்பம் இருக்கிறதா என்பதை ஒன்றுக்கு, இருமுறை பரிசோதித்து கொள்ளுங்கள். ஏனெனில் அடுத்த 10 வருடங்களுக்கு, ஐ.ஓ.டி. தொழில்நுட்பம்தான் மின்சாதன பொருட்களை ஆட்சி செய்ய இருக்கின்றன.

    * ஐ.ஓ.டி. தொழில்நுட்பம்

    'இன்டர்நெட் ஆப் திங்க்ஸ்' என்பதன் சுருக்கம்தான் ஐ.ஓ.டி. எளிமையாக சொல்வதென்றால், இணையதளத்துடன் இணையக்கூடிய எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள். இவை சென்சார்கள், மென்பொருள்கள் மற்றும் நெட்வொர்க் இணைப்புகளை கொண்டு செயல்படுகின்றன. வழக்கமான பிரிட்ஜுக்கும், ஐ.ஓ.டி. பிரிட்ஜுக்கும் என்ன வித்தியாசம் என்றால், ஐ.ஓ.டி. பிரிட்ஜில் பொருத்தப்பட்ட சென்சார்கள் பிரிட்ஜை எந்நேரமும் கண்காணித்தபடியே இருக்கும். பிரிட்ஜ் பற்றிய தகவல்களை சேகரிக்கும், உங்களுக்கு ஸ்மார்ட்போன் ஆப் மூலமாக பகிர்ந்து கொள்ளும். ஆப் மூலமாகவே உங்களிடமிருந்து கட்டளைகளை பெற்று, பிரிட்ஜின் குளிர்ச்சியை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்யும். நீங்கள் 500, ஆயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தும்கூட இணையதளம் வாயிலாக இந்த கட்டுப்பாட்டு பணிகளை செய்யலாம். அதேபோல வீட்டில் இருக்கும்போது, குரல் வழி கட்டளைகள் மூலமாகவும் இதை இயக்கலாம்.

    * ஐ.ஓ.டி. மின்சாதனங்கள்

    நிறம் மாறும் விளக்குகள், சுவிட்ச் பிளக்குகள், ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டி.வி., மைக்ரோவேவ் ஓவன், வாக்குவம் கிளீனர், சி.சி.டி.வி. கேமரா... இப்படி வீட்டு உபயோக பொருட்கள் பலவற்றிலும் ஐ.ஓ.டி.தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கிறது. அதனால் நீங்கள் மின்சாதன பொருட்களை வாங்குவதற்கு முன்பாக, ஐ.ஓ.டி.யின் இருப்பை அறிந்து கொண்டு வாங்குங்கள். இல்லையென்றால், மற்றவர்கள் குரல் வழியாக கட்டுப்படுத்தும் மின்சாதனப்பொருட்களை நீங்கள் பட்டன்கள் வாயிலாகவே கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓட்ஸ் அல்லது முழு தானிய உணவுகளை உட்கொள்ளலாம்.
    • ரத்த ஓட்டத்தை சீராக முடுக்கிவிடுவதற்கு வழிவகை செய்யும்.

    காலையில் எழுந்ததும் ஒருசில பழக்கவழக்கங்களை பின்பற்றுவது உடலை மட்டுமல்ல மனதையும் உற்சாகமாக செயல்பட வைக்கும். அத்தகைய பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

    1. உலர் திராட்சை நீர் பருகுதல்

    ஊற வைத்த உலர் திராட்சையில் இயற்கை சர்க்கரை, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இரவில் 5 முதல் 7 உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை பருகிவிட்டு உலர் திராட்சையை சாப்பிடவும்.

    * உடலின் ஆற்றலை அதிகரிக்க செய்யும்.

    * செரிமானத்தை மேம்படுத்தும்.

    * இரும்புச்சத்து உறிஞ்சுதலை துரிதப்படுத்தும்.

    * உடலில் இயற்கையாக உள்ள ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும்.

    2. அலைபேசியை தவிர்த்தல்

    காலையில் எழுந்த உடனேயே அலைபேசியை பார்க்கும் ஆவல்தான் பலருக்கும் ஏற்படும். அப்படி அலைபேசியை பார்ப்பது மனதை திசை திருப்பும், நாளடைவில் மன அழுத்தத்தை தூண்டுவதற்கு காரணமாகிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் எழுந்ததும் 30 நிமிடங்கள் அறவே அலைபேசியை தவிர்த்துவிட வேண்டும். அந்த வழக்கத்தை கடைப்பிடிப்பது ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருக்கும். அதற்கு மாற்றாக சிறிது நேரம் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருக்கலாம், ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியே விட்டு சுவாசிக்கலாம்.



    3. வெதுவெதுப்பான நீர் அருந்துதல்

    காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை நீரை பருக விரும்பாதவர்கள் அதற்கு மாற்றாக வெதுவெதுப்பான நீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

    இது செரிமான அமைப்பின் செயல்பாட்டை தூண்டிவிடும். உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவிடும்.

    4. சமச்சீரான காலை உணவு

    காலையில் வழக்கமாக உண்ணும் உணவுடன் புரதச்சத்து இடம் பெறும் உணவுப்பொருளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டை சிறந்த தேர்வாக அமையும். ஓட்ஸ் அல்லது முழு தானிய உணவுகளை உட்கொள்ளலாம். வாழைப்பழம் அல்லது பெர்ரி வகை பழங்களையும் சாப்பிடலாம். காலையில் வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்து விட வேண்டும். அவை செரிமானத்தை மெதுவாக்கி மந்தமான உணர்வை தரும்.

    5. 5 நிமிட மன பயிற்சி

    காலையில் 5 நிமிடங்கள் மனதிற்கு தனியாக பயிற்சி அளிக்க வேண்டியதும் அவசியமானது. அது தியானமாகவோ, ஆழ்ந்த சுவாசமாகவோ, இசை கேட்பதாகவோ இருக்கலாம். இதற்காக 5 நிமிடங்கள் செலவிட்டாலே போதும். தேவையற்ற பதற்றத்தை குறைத்து மனதை நிலைநிறுத்த உதவிடும். இல்லாவிட்டால் எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் மனதை சிறிது நேரம் அமைதியாக வைத்திருந்தாலே போதும். அன்றைய நாளின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும்.

    6. உடற்பயிற்சி-யோகாசனம்

    * காலையில் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் 5 நிமிடங்கள் உடலுக்கு அசைவு கொடுக்கும் எளிய உடற்பயிற்சிகளை செய்தாலே போதுமானது. ரத்த ஓட்டத்தை சீராக முடுக்கிவிடுவதற்கு வழிவகை செய்யும்.

    * எளிய யோகாசன பயிற்சிகளையும் செய்யலாம். அல்லது சூரிய நமஸ்காரம் மேற்கொள்ளலாம். இவை மனதுக்கு இதமளிக்கும். முதுகெலும்புக்கும் பலம் சேர்க்கும்.

    7. 3 விஷயங்களுக்கு முன்னுரிமை

    அன்றைய நாளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளில் முதல் 3 விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். அதனை சுற்றியே சிந்தனையும், செயல்பாடும் அமையும். அது அன்றைய நாளை வேறு விஷயங்களுக்கு கவனத்தை திசை திருப்பாமல் பார்த்துக்கொள்ளவும் உதவிடும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாதம் உதிரி உதிரியாக இருக்க ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும்.
    • சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, பசும்பாலுடன் அரை கப் தேங்காய் பாலும் ஊற்றி கிளறினால் சுவை நன்றாக இருக்கும்.

    வெண்டைக்காய் பொரியல் வழ வழன்னு இல்லாமல், மொறு மொறுன்னு இருக்க, வதக்கும் போது சிறிது தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள். சாப்பிட ருசியாக இருக்கும்.

    வாழைத்தண்டு, வாழைப் பூவை நறுக்கியதும், அரிசி களைந்த நீரில் போட்டு விட்டு பிறகு மோர் கலந்த நீரில் அலசி பின்பு பொரியல் செய்தால், நிறம் மாறாமலும் துவர்ப்பு குறைவாகவும், சுவை அதிகமாகவும் இருக்கும்.

    புது அரிசியில் சாதம் வடிக்கும் போது, குழைவாக ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும். சாதம் உதிரி உதிரியாக இருக்க ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும்.

    ரவா தோசை செய்யும் போது, ஒரு கரண்டி கடலை மாவு சேர்த்து கரைத்து தோசை வார்த்தால், ஓட்டல் தோசை போல் பொன்னிறத்தில் மொறு மொறு என்று இருக்கும். எள்ளு, மிளகாய்ப் பொடியில் நல்லெண்ணெய் ஊற்றி அதை சாப்பிட்டால் சுவையோ சுவை தான்.

    சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, பசும்பாலுடன் அரை கப் தேங்காய் பாலும் ஊற்றி கிளறினால் சுவை நன்றாக இருக்கும்.

    இட்லி, தோசைக்கு மிளகாய்ப் பொடி அரைக்கும் போது சிவப்பு மிளகாய், கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காயக் கட்டி இவற்றை வறுத்ததும், ஒரு கப் கொத்தமல்லி விதை மற்றும் சுத்தமான கருப்பு எள் 100 கிராம் இரண்டையும் வறுத்து, உப்பு சேர்த்து பின் அம்மியில் அரைத்து வைத்துக் கொண்டால்.... ஒரு மாதம் வரை வாசனையும் சுவையும் நன்றாக இருக்கும்.

    கோதுமை மாவு அரைக்கும் போது அதனுடன் வெள்ளை கொண்டைக் கடலை மற்றும் சோயா பீன்ஸ் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் மிருதுவாகவும் ருசியாகவும், சத்து மிகுந்தும் இருக்கும்.

    ரசம் மணக்க வேண்டுமா? புளிக் கரைசலுடன் பழுத்த தக்காளியை மிக்சியில் அரைத்து சேர்த்து ரசம் வைத்து, கீழே இறக்கி இளம் கொத்துமல்லித் தழையை தூவி விடுங்கள். வீடே கமகமனு இருக்கும்.

    சமைத்த சாதம் மீந்து விட்டதா? அதில் உப்பு போட்டு, ஒரு டம்ளர் பால் ஒரு ஸ்பூன் தயிர் ஊற்றிப் பிசைந்து `ஹாட் பேக்' கில் எடுத்து வைத்து விடுங்கள். மறுநாள் காலை சூப்பர் தயிர் சாதம் ரெடியாக இருக்கும். எலுமிச்சை அல்லது மாங்காய் ஊறுகாய் கொண்டு சாப்பிட்டால், அமிர்தமாக இருக்கும்!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முந்திரி பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன.
    • முந்திரி பழம் கோடை காலங்களில் சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

    முந்திரி பழம் கோடை காலங்களில் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனை கொல்லாம் பழம் என்றும் அழைப்பார்கள். முந்திரி பழம் இனிப்பு மற்றும் சற்று துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இது ஒரு மென்மையான பழம்.

    இந்த பழத்தில் கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் பி, இரும்பு, கார்போஹைட்ரேட், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.

    முந்திரி பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால் நீரின் அளவு அதிகமாக இருக்கும். இதை உட்கொள்வது ரத்த சக்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. முந்திரி பழம் நோய்கள் வராமல் தடுக்கவும், காயங்களை ஆற்றவும், ரத்த சோகையை போக்கவும் உதவுகிறது.

    இதனை கோடை காலங்களில் சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    வைட்டமின் சி முந்திரி பழத்தில் அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அளவை கட்டுப்படுத்துகிறது. எலும்பு வளர்ச்சிக்கும் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கவும் முந்திரி பழம் பயன்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தினமும் குறைந்த பட்சம் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
    • தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் பருமன் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    ஞாபக மறதி அல்லது நினைவாற்றல் இழப்பு என்பது ஆங்கிலத்தில் 'அம்னீசியா' என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்பட முக்கிய காரணங்கள்:-

    1) ஸ்ட்ரோக் (பக்கவாதம்): இதில் மூளைக்கு ரத்த ஓட்டம் குறைவதால் நினைவாற்றலுக்கு பொறுப்பான பகுதிகளில் சேதம் உண்டாகி ஞாபக மறதி ஏற்படுகிறது, 2) மூளைக்கு அதிர்ச்சியை உண்டாக்கும் மூளை காயங்கள் அல்லது விபத்துக்கள், 3) மூளையில் ஏற்படும் நோய் தொற்று, 4) நீரிழிவு நோய், 5) சில மருந்துகளின் பக்க விளைவுகள், 6) நீண்ட காலமாக மது அருந்தும் பழக்கம், 7) வளர்ச்சிதை மாற்றம் நோய்க்குறி, 8) தைராய்டு சுரப்பி குறைபாடு, 9) மன அழுத்தம்

    சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அதிகமாகும் போது மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தை குறைத்து நரம்பணுக்களில் சேதத்தை உண்டாக்கி நினைவாற்றலை குறைக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடலில் இன்சுலின் குறைவாக சுரப்பதால் மூளையில் உள்ள நரம்பு செல்களில் உள்ள இன்சுலின் ஏற்பிகள் (ரிசெப்டர்) தூண்டப்படுவது குறைந்து ஞாபக மறதி ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு இன்சுலின் எதிர்மறை நிலையால் மூளையில் அமிலாய்டு புரதங்களின் பிளேக்குகள் அதிகமாகி ஞாபக மறதி ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு பெரும்பாலும் சமீபத்திய நிகழ்வுகள் அல்லது தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள சிரமம் ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் நினைவாற்றலை மேம்படுத்த மருத்துவரை கலந்தாலோசித்து அதற்குரிய மருந்துகளை உட்கொண்டால் பலன் கிடைக்கும்.

    சர்க்கரை நோயாளிகள் ஞாபக மறதி பிரச்சினை வராமல் தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:-

    காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவு முறை பழக்கத்தை பின்பற்றவும். குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், வால்நட் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் பருமன் வராமல் பார்த்துக் கொள்ளவும். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருங்கள். மது பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். தினமும் குறைந்த பட்சம் 6 மணி நேரமாவது தூங்குங்கள். மன அழுத்தத்தை குறைத்து கொள்ளுங்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடல் தினமும் சரியாக இயங்க கொழுப்புச் சத்து கண்டிப்பாக தேவை.
    • இதயத்துக்கு ரத்தம் போகவில்லை என்றாலோ, அல்லது குறைவாக சென்றாலோ, முதலில் நெஞ்சுவலி, அப்புறம் மாரடைப்பு ஏற்படலாம்.

    உடல் தினமும் சரியாக இயங்க கொழுப்புச் சத்து கண்டிப்பாக தேவை. இது போதுமான அளவில் இருந்தால் உடலில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. உடல், தான் இயங்குவதற்கு உபயோகித்தது போக மீதி கொழுப்புப் பொருட்கள் உடலில் மற்றும் ரத்தக் குழாய்களில் மெதுமெதுவாக படிய ஆரம்பிக்கிறது. இந்த அதிகப்படியான கொழுப்பு ரத்தக்குழாய்களிலுள்ள மற்ற சில பொருட்களுடன் சேர்ந்து கொழுப்புகளின் கலவையாக கடினமான 'காறை'யாக மாறி ரத்தக் குழாய்களின் உள்சுவர்களில் படிந்துவிடுகிறது.

    நிறைய வகைகளில் கொழுப்புப் பொருட்கள் உடலில் இருந்தாலும் முக்கியமான இரண்டு கொழுப்புகளைப் பற்றித்தான் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். 1) 'எல் டி எல்' என்று சொல்லக்கூடிய கெட்ட கொழுப்பு வகை, 2) 'ஹெச் டி எல்' என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பு வகை ஆகும். 'எல் டி எல்' என்ற கெட்ட கொழுப்பானது ரத்தக்குழாய்களின் உள்பகுதியில் படிய ஆரம்பித்து ரத்த ஓட்டம் சீராக போவதைத் தடுத்து, இதய நோயை உண்டாக்குகிறது. 'ஹெச் டி எல்' என்ற நல்ல கொழுப்பானது ரத்தத்திலிருந்து கெட்ட கொழுப்பை அப்புறப்படுத்தி, கல்லீரலுக்கு அனுப்பி விடுகிறது. இதன் மூலம் கொழுப்பு ரத்தக் குழாய்களின் உள்பகுதியில் படிவது தடுக்கப்படுகிறது.

    கெட்ட கொழுப்புகளின் கலவையான காறை, இதயத்துக்கு ரத்த சப்ளை செய்யும் ரத்தக் குழாய்களிலும் படிந்து, அதை அடைத்து, எதிர்பாராதவிதமாக ஒருநாள் திடீரென்று, இதயத்துக்கு சுத்தமாக ரத்தம் போகவிடாமல் செய்துவிடுகிறது. இதயத்துக்கு ரத்தம் போகவில்லை என்றாலோ, அல்லது குறைவாக சென்றாலோ, முதலில் நெஞ்சுவலி, அப்புறம் மாரடைப்பு ஏற்படலாம்.

    நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில், கெட்ட கொழுப்பு எவ்வளவு இருக்கிறது, நல்ல கொழுப்பு எவ்வளவு இருக்கிறது என்றெல்லாம் பார்த்து, பார்த்து நாம் சாப்பிடுவதில்லை. தினமும் உடலுழைப்பு, ஆரோக்கியமான உணவு, போதுமான உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள், நல்ல சிந்தனை இவைகளெல்லாம் இருந்தால், அதிக கொழுப்பு உடலில் சேர வாய்ப்பில்லாமற் போய்விடுகிறது. இவைகளெல்லாம் இல்லாதபோது ரத்தத்தில் கொழுப்பு அதிகமாகி, கடைசியில் மாரடைப்பில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.

    40 லிருந்து 50 வயது வரை உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை, 'ரத்தக் கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை' செய்ய வேண்டும். 50 லிருந்து 60 வயது வரை உள்ளவர்கள், ஆண்டுக்கு இருமுறை ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். 60 வயதைத் தாண்டியவர்கள், ஆண்டுக்கு 4 முறை ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். உங்கள் இதய சிகிச்சை நிபுணரிடம் 6 மாதத்துக்கு ஒருமுறை சென்று, ஆலோசனைகளை கண்டிப்பாக பெற வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெதுவெதுப்பான குளியல், தியானம் போன்றவற்றைச் செய்யலாம்.
    • தூங்குவதற்கு முன் கனமான மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்கவும்.

    இன்றைக்கு பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை தூக்கமின்மை தான். தூக்கம் வராமல் சிலர், பாதி தூக்கத்தில் எழும் சிலர், எவ்வளவு தூங்கினாலும் தூக்கம் போதவில்லை என சிலர். இப்படி பெரும்பாலானவர்களின் ஏக்கமே நல்ல, ஆழ்ந்த தூக்கம் கிடைக்காதா? என்பது தான்.

    நிம்மதியாக தூங்குவதற்கு என்ன தான் செய்வது என்று கவலையாக உள்ளதா? இனி அந்த கவலை வேண்டாம். இந்த 5 பழங்களை சாப்பிட்டாலே போதும். நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

    ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் 5 பழங்கள்...

    செர்ரி:

    புளிப்பு செர்ரி சாறு குடிப்பது அல்லது புளிப்பு செர்ரிகளை சாப்பிடுவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனை அதிக அளவில் கொண்டிருப்பதால் ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவுகிறது.

    கிவி:

    கிவி படுக்கைக்கு முன் சாப்பிட சிறந்த பழம். இது ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது மற்றும் செரோடோனின் என்ற ஹார்மோனைக் கொண்டுள்ளது. இது தூக்கம்-விழிப்பு சுழற்சியை நிர்வகிக்க உதவுகிறது. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு கிவி பழங்களை சாப்பிடுவது, உடல் ஓய்வெடுக்கவும், எளிதாக தூங்கவும் உதவும்.



    அன்னாசி:

    அன்னாசிப்பழத்தில் உள்ள மெலடோனின் தூக்க-விழிப்பு சுழற்சிகளை ஒழுங்குபடுத்துகிறது. இது தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தை குறைத்து, ஆழ்ந்த தூக்கத்தை மேம்படுத்துகிறது.

    வாழைப்பழம்:

    வாழைப்பழம் ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவக்கூடிய ஒரு உணவு என்று சொல்லலாம். இதில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் ட்ரிப்டோபன் என்ற அமிலம் உள்ளது, இவை தூக்கத்தை தூண்டக்கூடியவை. ட்ரிப்டோபன் மூளைக்கு சென்று மெலடோனின் என்ற ஹார்மோனை சுரக்க வைக்கிறது, இது தூக்கத்தை தூண்டுகிறது.

    ஆப்பிள்:

    ஆப்பிள் பழத்தில் மெலடோனின் என்ற ஒரு ஹார்மோன் மெக்னீசியம் என்ற ஒரு தாதுவும் உள்ளதால் நரம்பு மற்றும் தசைகளை தளரச் செய்து தூக்கத்தை மேம்படுத்துகிறது.

    படுக்கைக்கு முன் ஆப்பிள் பழம் சாப்பிடுவது தூக்கத்தை மேம்படுத்துவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

    ஆப்பிள் பழம் சாப்பிடுவதன் மூலம் ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம், ஆனால் அது ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான பலனைத் தராது. சிலருக்கு ஆப்பிள் பழம் தூக்கத்தை தூண்டலாம், மற்றவர்களுக்கு அது உதவாது.

    பழம் சாப்பிட்டும் தூக்கம் வரவில்லையே என்னதான் செய்வது என்று எரிச்சலடையக் கூடாது. பழம் சாப்பிட்ட உடனே தூங்கிவிட வேண்டும் என்ற மனநிலை தவறானது. ஏனென்றால் தூக்கத்தை மேம்படுத்தும் மற்ற வழிகளையும் பின்பற்ற வேண்டும். முதலில் இரவில் தூங்குவதற்கு முன் மனதை அமைதிப்படுத்துங்கள். வெதுவெதுப்பான குளியல், தியானம் போன்றவற்றைச் செய்யலாம்.



    படுக்கையறை சூடாக இல்லாமல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். தூங்க செல்லும் முன் காஃபின் மற்றும் மது முதலானவற்றை அருந்த வேண்டாம். தூங்குவதற்கு முன் கனமான மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்கவும். லேசான உணவுகளை உண்ண வேண்டும். இவற்றை பின்பற்றினாலே நிம்மதியான தூக்கத்தோடு உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

    என்ன செய்தாலும் ஆழ்ந்த தூக்கம் வரவில்லை, உடல் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மூன்று ஸ்பூன் அளவிற்கு கடுக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
    • முடி உதிர்வதையும் தடுக்க இந்த கடுக்காய் உதவுகிறது.

    முகத்தில் இருக்கக்கூடிய இயற்கையான பொலிவு நீங்குவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சுற்றுச்சூழல், சூரிய ஒளிகதிர்கள் மற்றும் சரியான உறக்கமின்மையாலும் அதிகப்படியான நீரை பருகாமல் இருப்பது என பல்வேறு காரணங்களால் நம்முடைய முகத்தில் ஒருவித கருமை தோன்றி முகப் பொலிவையும் இழக்க நேரிடும். இதனால் வயதான தோற்றத்தில் இருப்பதுபோல் நமக்கே தோன்றிவிடும்.

    இழந்த சரும பொலிவை பெற எளிமையான ஃபேஸ் பேக் ஒன்று உள்ளது. அதைப்பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

    இந்த ஃபேஸ் பேக்கிற்கு மிகவும் முக்கியமானது கடுக்காய் தான். கடுக்காய் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். ஃபேஸ் பேக்காக கூடவா போடலாம் என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆமாம் கடுக்காய் ஃபேஸ் பேக் மூலம் இழந்த பொலிவை நம்மால் திரும்பப் பெற முடியும். முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களை நீக்கி இளமையான தோற்றத்தையும் தரும். கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையத்தையும் ஒரு சிலருக்கு வாயை சுற்றி இருக்கக்கூடிய கருமையும் நீக்குவதற்கு கடுக்காய் பொடி பெரிதும் உதவி புரிகிறது.

    கடுக்காய் ஃபேஸ் பேக் செய்முறை:



    ஒரு மிக்ஸிங் பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு கடுக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு விட்டமின் இ கேப்சூல் ஆயிலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அரை ஸ்பூன் அளவிற்கு தேனையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு இதை ஃபேஸ் பேக் போடுவதற்கு ஏற்றவாறு தேவையான அளவு பன்னீரையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது. இந்த பேஸ் பேக்கை அப்படியே நம்முடைய முகத்திலும் கழுத்திலும் கீழே இருந்து மேல் தடவுவது போல் தடவ வேண்டும். எந்தெந்த இடத்தில் கருமைகள் இருக்கிறதோ அந்த இடத்தில் மட்டும் இரண்டு முறை தடவ வேண்டும். அதாவது சற்று கனமாக தடவ வேண்டும். இப்படி தடவி விட்டு 20 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு சிறிது தண்ணீரை கைகளில் நனைத்துக்கொண்டு நன்றாக உலர்ந்த இந்த ஃபேஸ் பேக்கை மசாஜ் செய்வது போல் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் சுருக்கங்களும் நீங்கி இளமையான பொலிவான முகத்தை பெற முடியும்.

    நீங்கள் கடுக்காய் ஃபேஸ் பேக் போடும் போதே கடுக்காய் ஹேர் பேக் போட்டுக்கொள்ளலாம். நேரம் மிச்சமாவதோடு கூடுதல் பொலிவைப்பெறலாம்.

    கடுக்காய் ஹேர் பேக் செய்முறை:

    1 டீஸ்பூன் கடுக்காய் பவுடர் ,2 டீஸ்பூன் ஆம்லா பவுடர், 1 டீஸ்பூன் கருவேப்பிலை பவுடர் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல நன்கு கலக்கி கொள்ளவும். பின்பு இந்த பேஸ்டை இரவு முழுவதும் அப்படியே ஊறவிட்டு அடுத்த நாள் காலையில் தலையின் ஒவ்வொரு அடுக்கிலும் தடவி விடவும். 1 மணி நேரம் இந்த ஹேர் பேக்கை தலையில் ஊற வைத்து பின்பு சிறிதளவு ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலச வேண்டும். இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே உங்கள் முடியில் உள்ள பொடுகு, பேன்கள் என அனைத்தும் நீங்கும். மேலும் முடி உதிர்வதையும் தடுக்க இந்த கடுக்காய் உதவுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சருமத்தில் வளரும் முடிகளை அகற்றவும் கோதுமை மாவை பயன்படுத்தலாம்.
    • முகத்தில் முடி வளரும் பகுதிகளில் தடவி, 20-25 நிமிடங்கள் காய வைக்க வேண்டும்.

    உணவுப்பொருளான கோதுமை, பெண்களின் சரும அழகை பராமரிக்கவும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவி புரியும் கோதுமை, சருமத்துக்கு நல்ல பொலிவையும் வழங்கும்.

    மேலும், சருமத்தில் வளரும் முடிகளை அகற்றவும் கோதுமை மாவை பயன்படுத்தலாம். கோதுமை மாவை விழுதாக தயாரித்து சருமத்தில் தடவும்போது, அது சரும முடிகளை தளர்த்தும். இப்படி அடிக்கடி கோதுமை மாவை பயன்படுத்தும் போது, காலப்போக்கில் முடியின் வேர்கள் பலவீனமடைந்து, அதன் வளர்ச்சி குறைந்து, சருமத்தில் முடி வளர்வது நின்றுவிடும்.

    அதேபோல, முகத்தில் வளரும் முடிகளைப் போக்க கோதுமை மாவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்...

    கோதுமை மாவு பேஸ் பேக்

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு- 2 டேபிள் ஸ்பூன்

    தயிர் அல்லது பால்- 1 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் 1 சிட்டிகை

    தண்ணீர்- தேவையான அளவு

    பயன்படுத்தும் முறை:

    ஒரு கிண்ணத்தில், கோதுமை மாவு, பால் அல்லது தயிர் மற்றும் மஞ்சள் தூளை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிது நீரை ஊற்றி சற்று கெட்டியான விழுது போல் கலந்துகொள்ள வேண்டும். அதை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் காய வைக்க வேண்டும்.

    பின்னர் கைகளை நீரில் நனைத்து, மென்மையாக 'ஸ்கிரப்' செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது சருமத்தில் உள்ள முடிகள் மென்மையாக அகற்றப்படுவதை உணரலாம்.

    அதன் பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, துடைக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த சிறந்த பலன் கிடைக்கும்.

    கோதுமை-தேன் பேக்

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு -2 டேபிள் ஸ்பூன்

    தேன்- 1 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர்- தேவையான அளவு

    பயன்படுத்தும் முறை:

    ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, தேன் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி சற்று கெட்டியான விழுது போல் கலந்துகொள்ள வேண்டும்.

    பின் அதை முகத்தில் முடி வளரும் பகுதிகளில் தடவி, 20-25 நிமிடங்கள் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும், கீழிருந்து மேலாக அகற்றவும். அதன் பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

    கோதுமை மாவு-கடலை மாவு ஸ்கிரப்

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன்

    கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்

    தயிர் அல்லது பால் - 1 டேபிள் ஸ்பூன்

    பயன்படுத்தும் முறை:

    ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, கடலை மாவு மற்றும் தயிர் அல்லது பால் சேர்த்து விழுது போல தயாரித்துக் கொள்ள வேண்டும். அதை முகத்தில் தடவி ஓரளவு காய வைக்க வேண்டும்.

    பின்பு கைகளை நீரில் நனைத்து, மென்மையாக முகத்தை 'ஸ்கிரப்' செய்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த 'ஸ்கிரப்', முகத்தில் வளரும் முடிகளை நீக்குவது மட்டுமின்றி, சருமத்துக்கு நல்ல பொலிவையும் தருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தம்பதிகள் அதிக வேலைப்பளுவால் பாதிக்கப்பட்டு பொறுப்புகளை சுமக்கும்போது, பரஸ்பர காதல் காலாவதி ஆகிறது.
    • தம்பதியர் தமக்குள் எழும் பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள முயல வேண்டுமே தவிர, வெளியில் உள்ள வேறு யாராலும் அது முடியாது.

    தம்பதியர் பலரிடம், திருமண தொடக்கத்தில் இருக்கும் நெருக்கமும், ஈர்ப்பும் நாளடைவில் குறைந்துவிடுகின்றன. 'ரொமான்ஸ்' என்பதே இல்லாமல் போய்விடுகிறது. இந்நிலைக்கு காரணம் என்ன? பின்வரும் விஷயங்கள்தான்...

    பேச்சுவார்த்தை இல்லாமை

    தம்பதியர் இடையே போதிய பேச்சுவார்த்தை, தொடர்பு இல்லாமை, நெருக்கத்தை குறைக்கிறது. தம்பதிகள் இருவரும் தங்களுக்குள் வெளிப்படையாகப் பேச வேண்டும். அப்போதுதான் திருமண உறவு பலப்படும். தகவல்தொடர்பு முறிவு, தவறான புரிதலுக்கும், ஏமாற்றத்துக்கும் வித்திடும்.

    மன அழுத்தம், அவசரம்

    வருடங்கள் செல்லச் செல்ல, திருமண உறவில் ரொமான்ஸ் குறைந்து விடும். இதற்கு முக்கிய காரணம், துணையில் ஒருவர் அல்லது இருவரின் வேலைப்பளு அல்லது மனஅழுத்தமாக இருக்கலாம். மன அழுத்தமும், வேலைப்பளுவும் மண உறவை பாதிக்கும் காரணிகளாக மாறிவருகின்றன. தம்பதிகள் அதிக வேலைப்பளுவால் பாதிக்கப்பட்டு பொறுப்புகளை சுமக்கும்போது, பரஸ்பர காதல் காலாவதி ஆகிறது.

    அலுப்பூட்டும் 'வழக்கம்'

    திருமணம் முடிந்து காலம் செல்லச் செல்ல, திருமணத்தில் புதிதாக எதுவும் நடக்காது. அனைத்து நாட்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான செயல்களை செய்வது அவர்களுக்கு சலிப்பையும், ஆர்வமின்மையையும் ஏற்படுத்தும். திருமணத்திலிருந்து காதல் மறைந்து போவதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.

    கவனிக்கப்படாதது

    திருமண உறவில் ஒருவர் துணையிடமிருந்து புறக்கணிப்பை எதிர்கொள்வதும், அவரது முயற்சிகள் கவனிக்கப்படாமல் போவதும் அவருக்கு விரக்தியையும் சோர்வையும் ஏற்படுத்தும். ரொமான்ஸ் காணாமல் போவதற்கு இதுவும் பிரதானம். வாழ்க்கைத்துணை மேற்கொள்ளும் முயற்சிகளை அங்கீகரிப்பதும், மனந்திறந்து பாராட்டுவதும் மிகவும் முக்கியம்.

    எதிர்மறை நடத்தை

    எதிர்மறை நடத்தை ஒரு திருமண உறவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிர்மறையான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் காதல் காணாமல் போகும். ஒருவருக்கொருவர் நேர்மறையான அணுகுமுறையும் ஆதரவும் இருந்தால் மட்டுமே ஒரு திருமண வாழ்க்கையில் அன்பும், காதலும் நிறைந்திருக்கும்.

    உடல்ரீதியான நெருக்கமின்மை

    திருமணத்தில் தாம்பத்திய உறவு மட்டுமல்ல, சின்னச் சின்ன தொடுதலும், உடல் நெருக்கமும் முக்கியம். காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க இதுபோன்ற அன்பின் வெளிப்பாடுகள் அவசியம். துணைவர்கள் ஒருவரையொருவர் தொடுவதையும், கட்டிப்பிடிப்பதையும், முத்தமிடுவதையும் நிறுத்தினால், அந்த உறவில் இருந்து அன்னியோன்னியம் ஆவியாகிப்போகும்.

    விரக்தி, வெறுப்பு

    திருமண உறவிலேயே மிகவும் மோசமான நிலை, தம்பதிகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் விரக்தியாகவும், வெறுப்பாகவும் உணருவது. கடந்த கால அனுபவங்களில் உண்டான வெறுப்புகளையும் கோபத்தையும் மனதில் சுமப்பது, ஒரு திருமண உறவை நஞ்சாக்கி விடும்.

    தம்பதியர் தமக்குள் எழும் பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள முயல வேண்டுமே தவிர, வெளியில் உள்ள வேறு யாராலும் அது முடியாது. காரணம், ஒவ்வொரு தம்பதியரின் தேவைகள், விருப்பங்கள், பிரச்சனைகள் வேறுபட்டவை. மனப்பூர்வமான செயல்பாட்டின் மூலம், தம்பதிகள் தங்கள் வாழ்வை அன்புப் பூஞ்சோலை ஆக்கிக்கொள்ள முடியும்.

    ×