என் மலர்

    அழகுக் குறிப்புகள்

    பட்டுப்போன்ற கூந்தல் வேண்டுமா? முகப்பரு பிரச்சனையா? தயிர் இருக்க கவலை எதற்கு...
    X

    பட்டுப்போன்ற கூந்தல் வேண்டுமா? முகப்பரு பிரச்சனையா? தயிர் இருக்க கவலை எதற்கு...

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் தினமும் முகத்துக்கு தயிரை பயன்படுத்தலாம்.
    • தயிர், சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

    பெண்கள், முகத்துக்கும், கூந்தலுக்கும் தயிரைப் பயன்படுத்தி நன்மை பெறலாம். தயிர் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, மிக அழகு மற்றும் கூந்தல் நலத்துக்கும் பயன்படுத்தலாம். ஏனெனில், தயிரில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அதனால், சருமத்துக்கும், கூந்தலுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.

    ஆகவே, தயிரை கூந்தல் மற்றும் முகத்துக்கு எப்படி பயன்படுத்த வேண்டும், அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம் ...

    முகத்துக்கு தயிரை எப்படி பயன்படுத்துவது?

    ஒரு கிண்ணத்தில் ஒரு கப் தயிரில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் சிறிதளவு கடலை மாவு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதை முகத்தில் தடவி சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    தேன், வைட்டமின் பி6, போலேட் ஆகியவை நிறைந்தது. இவை அழகை இரட்டிப்பாக்குகின்றன. சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க தேன் உதவுகிறது. தேனைப் பயன்படுத்துவது சருமத்துக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.

    தயிரையும் தேனையும் ஒன்றாகப் பயன்படுத்துவதன் மூலம், முகம் இழந்த பளபளப்பை மீண்டும் பெறும். இதற்காக, தயிரில் சிறிது தேனை கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை சுத்தம் செய்தால், அது பளபளப்பாக மாறும்.

    தயிர் ஸ்கிரப்:

    தயிர் ஸ்கிரப், எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஸ்கிரப் தயாரிக்க தயிரில் அரிசி மாவு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து அதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    சருமத்துக்கு தயிரின் நன்மைகள்:

    எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் தினமும் முகத்துக்கு தயிரை பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், முகச் சருமப் பிரச்சனை உள்ளவர்களுக்கு தயிர் ரொம்பவே நல்லது. தயிர், சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

    தலைமுடிக்கு தயிரை எப்படி பயன்படுத்துவது?

    தலைக்கு குளிக்கும்போது ஷாம்பு போடுவதற்கு முன் தயிர் தடவ வேண்டும். இதனால் கூந்தலுக்கு புரதம் கிடைக்கும். குறிப்பாக வறண்ட முடி உள்ளவர்களுக்கு தயிர் ரொம்பவே நல்லது. தயிர் தலைமுடியை மென்மையாக மாற்ற உதவுகிறது.

    தலைமுடிக்கு தயிர் பயன்படுத்துவதன் நன்மைகள்:

    தலைமுடிக்கு விலை உயர்ந்த ஷாம்புகளை உபயோகிப்பதற்குப் பதிலாக தயிரை பயன்படுத்துவது நல்லது. இது தலைமுடியை மென்மையாக மாற்றும். உச்சந்தலையை சுத்தமாக வைக்க உதவும்.

    தயிரின் மிகப்பெரிய நன்மை, அது ஓர் இயற்கையான ஹேர் கண்டிஷனராக செயல்படுகிறது. இதில் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை உங்கள் தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும். மேலும் முடிக்கு ஊட்டமளித்து வலுப்படுத்தும்.

    Next Story
    ×