என் மலர்

    புதுச்சேரி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குளம் ஆழமான பகுதி என்பதால் 2 குழந்தைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மூழ்கி இறந்து போனார்கள்.
    • கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த கீழ் புத்துப்பட்டு சாவடி பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். டிரைவர். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஹர்ஷினி (வயது 11) கயல் (8) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர். காலாப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஹர்ஷினி 6-ம் வகுப்பும், கயல் 3-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    கீழ்புத்துப்பட்டு சாவடி பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் திருவிழா கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று ஜெயந்தி தனது 2 மகள்களையும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வரும்படியும், சாமிக்கு பூஜை செய்ய கூடையில் பூ வைத்து அனுப்பி உள்ளார்.

    தாய் கொடுத்து அனுப்பிய பூவுடன் சேர்த்து தாமரைப்பூவையும் சாமிக்கு கொண்டு செல்வதற்கு ஹர்ஷினி மற்றும் கயல் இருவரும் அதே பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் குளத்தில் தாமரை பூ பறிக்க சென்றுள்ளனர்.

    அந்தக்குளம் ஆழமான பகுதி என்பதால் 2 குழந்தைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மூழ்கி இறந்து போனார்கள்.

    பின்னர் குழந்தைகள் 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    சாமிக்கு பூப்பறிக்கச் சென்ற அக்காள்-தங்கை இருவரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசுவநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் ஹர்ஷினி மற்றும் கயல் ஆகியோரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட இருந்த நிலையில் இன்று அங்காளம்மன் கோவில் தேரோட்டம் இருப்பதால் மகள்களின் உடல்களை நாளை (திங்கட்கிழமை) பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.

    ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அங்காளம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் நடைபெற தங்களின் குழந்தைகள் உடல்களை நாளை அடக்கம் செய்ய பெற்றோர் முடிவு செய்தது சோகத்திலும் கிராம மக்களை வியக்க வைத்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜோசப் தனது நண்பருடன் சர்மிளாவை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
    • ஜோசப் மற்றும் அவரது நண்பரும் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

    புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சர்மிளா (27). இவர் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் இந்திரா நகரை சேர்ந்த டிரைவர் ஜோசப் (36) என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜோசப் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

    இந்நிலையில் ஜோசப்பின் பழக்க வழக்கம் சர்மிளாவுக்கு பிடிக்கவில்லை. எனவே அவர் அவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஜோசப் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அவர் வேலை செய்யும் ஜவுளி கடைக்கு சென்று தொந்தரவு செய்துள்ளார்.

    இதுகுறித்து சர்மிளா பெரிய கடை, ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார், ஜோசப்பை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு சர்மிளா வேலையை முடித்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே வந்த போது ஜோசப் தனது நண்பருடன் சர்மிளாவை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    ஆனால் அந்த பெண் அவரிடம் பேசாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜோசப் ஏற்கனவே ஒரு பாட்டிலில் வாங்கி தயாராக வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். உடல் முழுவதும் தீ பிடித்து எரிந்த அந்த பெண் வலி தாங்க முடியால் அலறியபடி ஓடினார். இதனை பார்த்து அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி ஓடினர். ஒரு சிலர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ஜோசப் மற்றும் அவரது நண்பரும் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    ஜோசப்புக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டதால் அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையம் அருகே நடந்த இந்த இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிடுகிறது.
    • கடந்த முறை 9 இடங்களில் போட்டியிட்ட பாஜக தற்போது 14 இடங்களில் போட்டி.

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுடன் புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற இருக்கிறது.

    ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ்- பாஜக இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதாக பாஜக-வின் தேர்தல் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.

    அதன்படி என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும் போட்டியிடும் எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2021-ல் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் போட்டியிட்டன. என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசாரை கண்டதுடன் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றனர்.
    • ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சந்தேகப்படும்படி மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதுடன் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றனர்.

    ஆனால் போலீசார் அந்த கும்பலை விரட்டி மடக்கி பிடித்தனர். இதில் 11 பேர் சிக்கினர். 2 பேர் தப்பியோடி விட்டனர்.

    பிடிபட்டவர்களிடம் சோதனை செய்தபோது அவர்களிடம் ஒரு நாட்டு வெடிகுண்டு, 3 கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தனர். அந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் முத்தியால்பேட்டையை சேர்ந்த எலி கார்த்தி என்ற கார்த்திகேயன் (வயது 36), வினோபா நகரை சேர்ந்த ஜூட் அந்துவன் (36), முத்தியால்பேட்டையை சேர்ந்த எழிலன் (29), லாஸ்பேட்டையை சேர்ந்த தமிழ்மணி (24), சரண் (21), தீனா (22), பார்த்தசாரதி (23), அருண்மணி (25), கவுதம் (22), ஜீவா காலனியை சேர்ந்த மதன்ராஜ் (28), மற்றும் வானூரை சேர்ந்த அருண்குமார் (26) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து பணம், நகைகளை பறிக்க திட்டமிட்டு பதுங்கி இருந்தது தெரியவந்தது.

    மேலும் தப்பிச்சென்றவர்கள் கொட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரேம், கிருபா என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    தொடர்ந்து வெடிகுண்டு தயாரித்தல், வழிப்பறி, ஆயுதச் சட்டம் உள்பட 5 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கைதான எலி கார்த்தி என்ற கார்த்திகேயன் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது கொலை, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • மன்சுக் மாண்டவியா தலைமையில் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் தனியார் ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இன்று மாலை மத்திய மந்திரியும் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா தலைமையில் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்யின் த.வெ.க. கட்சியை சேர்க்க முயற்சி நடக்கிறதா? என்ற கேள்விக்கு அதுபற்றி தனக்கு தெரியாது என அவர் பதிலளித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுமக்கள் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்பி செயல்பட வேண்டும்.
    • உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்பாமல் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரும் எண்ணெய் நிறுவனங்களுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர்கள் வழங்கலில் எந்தவித தடையும் ஏற்படாது. அனைத்து நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு உறுதி அளித்துள்ளன.

    புதுச்சேரியில் எரிபொருள், சிலிண்டர் பற்றாக்குறை உள்ளது என சில சமூக ஊடகங்கள் மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்த தகவல்கள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை.

    பொதுமக்கள் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்பி செயல்பட வேண்டும். உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்பாமல் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

    எரிபொருள் மற்றும் சிலிண்டர் விநியோக நிலையை தொடர்ந்து கண்காணிக்க மாநில, மாவட்ட மற்றும் பிராந்திய மட்டங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் எண்ணெய் நிறுவனங்களுடனும் விநியோக முகவர்களுடனும் ஒருங்கிணைந்து, புதுச்சேரி முழுவதும் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கியாஸ், பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் போதுமான அளவில் கையிருப்பு உள்ளது.

    பொதுமக்கள் வழக்கமான முறையில் எரிபொருளை பெறலாம். கியாஸ் சிலிண்டர்கள் வீட்டு உபயோக நுகர்வோருக்கே வழங்கிட வேண்டும் என மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக அல்லது தொழில் நோக்கங்களுக்காக பயன்படுத்தினால் அத்தியாவசிய பொருட்கள் தடுப்பு சட்டம் உட்பட கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்கள் அவசர கொள்முதல் செய்யாமல் அமைதியாக இருக்கவும், தேவையான அளவில் மட்டுமே வாங்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர். புதுச்சேரி அரசு அத்தியாவசிய பொருட்களின் தடையற்ற இருப்பை உறுதி செய்ய முழுமையாக உறுதிபூண்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுச்சேரி மாநில மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை.
    • கவர்னர் மாளிகையில் அந்த நபர் அத்துமீறி நுழைந்த காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் மாளிகையில் காவல்துறை பணியாளர்கள் கண்காணிப்பில் இருந்தும், காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தும் மர்மமான முறையில் ஒருவர் நுழைந்து அங்கே ஒரு அறையில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரை கவர்னர் மகன் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்கும் கவர்னர் அலுவலகத்தில் ஒரு மனிதர் எப்படி உள்ளே நுழைய முடிந்தது?

    காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? அவர்கள் சரியான பாதுகாப்பு கொடுத்தார்களா? அவரின் குடும்பத்தினருக்கு சரியான பாதுகாப்பு கொடுத்தார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. கவர்னருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை, புதுச்சேரி மாநிலத்தில் உருவாகி இருப்பதால் சாதாரண மக்களுடைய நிலை என்ன?

    சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் வீட்டிற்கு பக்கத்திலே பேக்கரியில் அத்துமீறி நுழைந்து அங்கு பணிபுரிந்தவர்களை எல்லாம் தாக்கிய சம்பவம் வீடியோவில் வெளியானது. நில அபகரிப்பு, வீடு அபகரிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது, கஞ்சா தாராளமாக கிடைப்பது, ரெஸ்டோபார்களில் குடித்துவிட்டு வந்து தெருவிலே கும்மாளம் போடுவது எல்லாம் புதுச்சேரியில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.

    புதுச்சேரி மாநில மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. கவர்னர் மாளிகையில் அந்த நபர் அத்துமீறி நுழைந்த காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும். கவர்னர் பாதுகாப்பை இந்த ஆட்சியில் கேள்விக்குறியாக்கியுள்ளனர். சட்டம் ஒழுங்கு புதுச்சேரி மாநிலத்தில் கெட்டுப்போய் உள்ளது.

    உள்துறை அமைச்சர் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள், சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது, நாங்கள் உரிய பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று எல்லாம் பேசுகிறார்.

    ஆனால் இன்று அவையெல்லாம் உண்மைக்கு புறம்பானவை என்று நிரூபணம் ஆகியுள்ளது. இதற்கு ஆட்சியாளர்கள் தான் காரணம். இதற்கு முழு பொறுப்பையும் முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர், அமைச்சர்கள் ஏற்க வேண்டும்.

    கவர்னருக்கே பாதுகாப்பு தர முடியாத அரசு குறிப்பாக உள்துறை அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அங்கே பணிபுரிகின்ற காவல் துறை பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கவர்னர் மாளிகை சில மாதம் முன்பு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
    • அதிக போதையில் கவர்னர் மாளிகையின் கேட் ஏறி குதித்து நள்ளிரவில் உள்ளே புகுந்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாரதி பூங்கா அருகே செயின்ட் மார்ட்டின் வீதியில் கவர்னர் மாளிகை உள்ளது.

    பிரெஞ்சு ஆட்சியில் கட்டப்பட்ட 250 ஆண்டு பழமையான இந்த மாளிகை சேதமடைந்தது. இதனால் கவர்னர் மாளிகை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளது. இதனால் குருசுகுப்பம் பழைய சாராய ஆலை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கலாச்சார மைய கட்டிடத்துக்கு கவர்னர் மாளிகை சில மாதம் முன்பு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

    கவர்னர் கைலாஷ்நாதன் குடும்பத்துடன் இங்கு தங்கியுள்ளார். ஆனால் அலுவலக பணிகளை பழைய கட்டிடத்தில் மேற்கொள்கிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கவர்னர் இல்லத்தில் புகுந்து, விருந்தினர் அறையில் ஒரு வாலிபர் படுத்து தூங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது கவர்னர் மாளிகை பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

    இந்த வாலிபரை கவர்னர் மாளிகை போலீசார் பிடித்தனர். போலீஸ் டி.ஜி.பி. உட்பட உயர் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை முத்தியால்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹரிதிக் ஜா என்பதும் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருவதும் தெரியவந்தது. இவர் தன்னுடன் படிக்கும் மாணவருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார்.

    கடற்கரையை ஒட்டியுள்ள ஓட்டலில் மது குடித்துள்ளார். அதிக போதையில் கவர்னர் மாளிகையின் கேட் ஏறி குதித்து நள்ளிரவில் உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அங்கிருந்த விருந்தினர் அறையில் படுத்து தூங்கியது தெரியவந்தது.

    மாணவர் ஹரிதிக் ஜா மீது அத்து மீறி நுழைதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் கூறிய தகவல் உண்மையா? என்பது குறித்தும் பெங்களூருவில் உள்ள கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். அவருடன் இருந்த மற்றொரு மாணவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் படகு குழாமில் உற்சாகமாக படகு சவாரி செய்ய ஆர்வம் கொள்வார்கள்.

    சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் நோணாங்குப்பம், ஊசுட்டேரி படகு குழாமில் உற்சாகமாக படகு சவாரி செய்ய ஆர்வம் கொள்வார்கள்.

    இந்தநிலையில் மகளிர் தினத்தையொட்டி அங்கு இலவசமாக படகு சவாரி செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவின்படி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்று சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் இயங்கும் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு மற்றும் ஊசுட்டேரி படகு குழாம்களுக்கு வருகை தரும் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக படகு சவாரி செய்ய லாம்.

    அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, இச்சலுகையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
    • இந்த வழக்கில் தொடர்புடைய ராமலிங்கம், கல்யாண சுந்தரம், துரை பஞ்சாட்சரம் ஆகியோர் உயிரிழந்ததால் அவர்கள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சென்டாக் மூலம் மருத்துவம், என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவபூஷணம் (வயது61) என்பவர் தனது மகன், மகளுக்கு புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ். சீட் பெற 2004-05-ம் கல்வியாண்டில் விண்ணப்பித்தார். இதற்காக அவர் குடியிருப்பு, சாதி சான்றிதழ்களை போலியாக தயாரித்து சமர்ப்பித்தார்.

    இதனை கண்டறிந்த அப்போதைய சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ஓய்.எல்.என். ரெட்டி உருளையன் பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சிவபூஷணம், அவரது மகன், மகள் மற்றும் உடந்தையாக இருந்த சிவ பூஷணத்தின் நண்பர்களான காரைக்காலை சேர்ந்த ராமலிங்கம் கல்யாண சுந்தரம், துரைபஞ்சாட்சரம் ஆகிய 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி யஸ்வந்த்ராவ் இங்கர்சல் முன்னிலையில் நடந்து வந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய ராமலிங்கம், கல்யாண சுந்தரம், துரை பஞ்சாட்சரம் ஆகியோர் உயிரிழந்ததால் அவர்கள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டனர்.

    வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிவபூஷணம் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    மேலும் இந்த வழக்கில் இருந்து சிவபூஷணத்தின் மகன், மகள் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் தி.மு.க.வும், புதுச்சேரியில் காங்கிரசும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்.
    • கூட்டணி என்பதன் அர்த்தம் தியாகம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கட்சி தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி காங்கிரசாருடன் ஆலோசனை நடத்தினார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரசில் மாநிலத்தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் முன்னாள் எம்.எல்.எ. அனந்தராமன், மூத்த துறை தலைவர் தேவதாஸ் ஆகியோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம்.

    தமிழகத்தில் தி.மு.க.வும், புதுச்சேரியில் காங்கிரசும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தைக்குழு தி.மு.க.வுடன் பேசி யாருக்கு எத்தனை தொகுதிகள் என முடிவு எடுப்பார்கள். தமிழக பார்முலாதான் புதுச்சேரியில் பின்பற்றப்படும்.

    கூட்டணி என்பதன் அர்த்தம் தியாகம். இது கூட்டணியிலுள்ள அனைத்துக்கட்சிக்கும் பொருந்தும். தியாகம் இல்லாவிட்டால் கூட்டணி இல்லை. கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் கூடுதல் தொகுதிகள் கேட்பார்கள். அதனை பேசி தீர்வு காண்போம். கூட்டணி பேச்சுவார்த்தையில் தமிழக வழிமுறையையே புதுச்சேரியில் கையாள்வோம்.

    புதுச்சேரி, தமிழகமும் வெவ்வேறு மாநிலங்கள், பேச்சுவார்த்தை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் புதுச்சேரியில் நடைபெறும். தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார்.

    இவ்வாறு கிரீஷ் சோடங்கர் கூறினார்.

    தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, 2 ராஜ்யசபா சீட், 41 தொகுதிகள் என கேட்ட காங்கிரசுக்கு 28 தொகுதி, ஒரு ராஜ்யசபா மட்டுமே தி.மு.க. அளித்துள்ளது. ஆட்சியில் பங்கு இல்லை என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை சுட்டி காட்டியயே காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரீஷ் சோடங்கர் கூறியுள்ளார். இதன் மூலம் புதுச்சேரியில் ஆட்சியில் தி.மு.க.வுக்கு பங்கு இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்.

    புதுச்சேரியில் 6 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்கட்சி அந்தஸ்தில் உள்ள தி.மு.க. கடந்த தேர்தலில் 13 தொகுதியில் போட்டியிட்டது. கால் நூற்றாண்டுகளாக புதுச்சேரியில் தி.மு.க. தலைமையிலோ, தி.மு.க. பங்கேற்ற ஆட்சியோ இல்லை.

    இதனால் இந்த முறை தனது தலைமையில் கூட்டணி ஆட்சி என புதுச்சேரி தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு முட்டுகட்டை போடும் வகையிலேயே கிரீஷ் சோடங்கர் கூறியுள்ளார். எனவே, கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுமா என்பது கேள்வி குறியாகி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்ற தி.மு.க. புதுவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளது.
    • தமிழகத்தை விட தொகுதி பங்கீட்டில் புதுவையில் இடியாப்ப சிக்கல் நிலவுகிறது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி முடிவாகியுள்ளது.

    தமிழகத்தில் காங்கிரஸ் கேட்ட கூடுதலான தொகுதிகள், ஆட்சியில் பங்கு, 2 ராஜ்யசபா சீட் ஆகியவை கிடைக்கவில்லை. 28 தொகுதிகளை காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கியுள்ளது.

    அடுத்தகட்டமாக புதுவைக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. புதுவையில் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்ற மோதல் காங்கிரஸ், தி.மு.க. இடையில் உள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்ற தி.மு.க. புதுவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளது. அதோடு, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 14 தொகுதிகளில் பணியாற்றி கூடுதலான வாக்குகளையும் காங்கிரசுக்கு பெற்று தந்தது.

    இதனால் கூட்டணிக்கு தலைமை தாங்குவதோடு, அதிக தொகுதிகளையும் பெற தி.மு.க. ஆர்வம் காட்டி வருகிறது. அதேநேரத்தில் இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும் என்பதில் புதுவை காங்கிரசார் உறுதியாக உள்ளனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியும், 29 தொகுதிகளில் காங்கிரசுக்கு கிடைத்த கூடுதல் வாக்குகளும் புதுவை காங்கிரசாருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் அவர்கள் பழைய பார்முலா படி காங்கிரசுக்கு 20: தி.மு.க.வுக்கு 10 என்ற நிலையை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் காங்கிரஸ் தலைமையை விட, தி.மு.க. தலைமையை எதிர்பார்க்கின்றனர்.

    இதனால் தமிழகத்தை விட தொகுதி பங்கீட்டில் புதுவையில் இடியாப்ப சிக்கல் நிலவுகிறது. இந்த நிலையில் புதுவை காங்கிரசாருடன் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், கூடுதல் பொறுப்பாளர் அஞ்சலி நிமல்கர் ஆகியோர் இன்று காலை ஆலோசனை நடத்தினர்.

    புதுவை காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் பெத்தபெருமாள், கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், பாலன், கார்த்திகேயன், சீனியர் துணை தலைவர் தேவதாஸ், பொதுசெயலாளர் ரத்னா ரமேஷ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன், மகிளா காங்கிரஸ் தலைவி நிஷா, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் ஜெயபால், மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்சவர்தன் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது நிர்வாகிகள் தரப்பில், கடந்த தேர்தல் நெருக்கத்தில் காங்கிரசிலிருந்து பலர் வெளியேறினர். இதனால் கட்சியில் நெருக்கடி ஏற்பட்டது. காங்கிரஸ் தொகுதிகளைக்கூட திமுகவுக்கு விட்டுக்கொடுத்தோம். ஆனால் தற்போது ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். இதனால் வெற்றி சாதகமாக உள்ளது.

    இதனால் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் பெற்றதை போல 21 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை விட்டுத் தரக்கூடாது என வலியுறுத்தினர்.

    இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்ட மேலிட பொறுப்பாளர் கட்சி தலைமைக்கு தகவல் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியுள்ளார்.

    ஏற்கனவே கிரீஷ் சோடங்கர் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக தி.மு.க. தலைமை கூறியுள்ளது. இதனால் புதுவை தி.மு.க. நேரடியாக மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தாது என கூறப்படுகிறது.

    இதனால் புதுவை தொகுதி பங்கீடையும் தி.மு.க.வின் தலைமையே பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிகிறது.

    ×