என் மலர்

    சினிமா செய்திகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திரைப்படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 1,350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது.

    மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும். இதையடுத்து 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' (Dhurandhar: The Revenge) திரைப்படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் நிலையில், துரந்தர்: தி ரிவெஞ்ச் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. மேலும், இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் முன்கூட்டியே தொடங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், துரந்தர் 2 திரைப்படத்தின் ஆரம்பகட்ட முன்பதிவில் இந்தப் படம் ரூ. 28.19 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் துரந்தர் 2 திரைப்படம் முன்பதிவில் மட்டும் ரூ. 120 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. துரந்தர் 2 திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் நிலையில், துரந்தர் 2 படத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டிமான்டி காலனி 3 திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015-ம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-ஆம் பாகத்தை படக்குழு வெளியிட்டது. இந்தப் படமும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக மாறியது.

    உலகளவில் டிமான்டி காலனி 2 திரைப்படம் 80 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு மூன்றாம் பாகத்தையும் உருவாக்கி இருக்கிறது. இந்தப் பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்தப் படம் வருகிற மே மாத வாக்கில் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு நிலையில், டிமான்ட்டி காலனி 3 திரைப்படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி டிமான்டி காலனி 3 திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை உணர்த்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    மேலும், டிமான்டி காலனி 3 படத்தின் லைப்ரரியன் நாளை (மார்ச் 17) மாலை 5.01 மணிக்கு வருவதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தப் படம் ரிலீசுக்கு முன்பே ரூ.50 கோடி வசூலித்துள்ளதாகவும், படத்தின் ஆடியோ உரிமத்தை டி சீரிஸ் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், தொலைக்காட்சி மற்றும் ஓ.டி.டி. உரிமத்தை ஜீ தமிழ் மற்றும் ஜீ5 நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஸ்பெயின் நடிகர் ஜாவியர் பார்டம், "NO TO WAR AND FREE PALESTINE" என்று கூறினார்.

    திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன. 98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆஸ்கார் விருது விழாவை தொகுத்து வழங்கிய ஸ்பெயின் நடிகர் ஜாவியர் பார்டம், ""NO TO WAR AND FREE PALESTINE" என்று கூறினார். இவரது இந்த பேச்சுக்கு அரங்கம் அதிர கைத்தட்டல் கிடைத்தது. அப்போது அவுருடன் நின்றிருந்த நடிகை ப்ரியங்கா சோப்ரா புன்முறுவல் செய்து அவரது பேச்சை வரவேற்றார்.

    அக்டோபர் 7, 2024 இல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன கிளர்ச்சி அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் வரை கொல்லப்பட்டனர்.

    தொடர்ந்து இஸ்ரேல் பாலஸ்தீன நகரங்களான காசா, ராபா உள்ளிட்ட நகரங்கள் மீது கடந்த 3 வருடங்களாக தாக்குதல் நடத்தி வந்தது. இதில் 70,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

    கடந்த 2025 அக்டோபரில் அமெரிக்கா மத்தியஸ்தத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இருப்பினும் போர் நிறுத்தத்தை மீறி அவ்வப்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முன்னதாக அதிக கோல்டன் குளோப் விருதுகளை வென்று One Battle After Another சாதனை புடைத்திருந்தது

    திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன. 98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட One Battle After Another திரைப்படம் 6 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

    சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், துணை நடிகர் (ஷான் பென்), தழுவல் திரைக்கதை, படத்தொகுப்பு மற்றும் நடிகர்கள் தேர்வு ஆகிய 6 பிரிவுகளில் இப்படம் விருதுகளை குவித்துள்ளது.

    98 வது ஆஸ்கார் விருதுகள் விழாவில் அதிக ஆஸ்கார் விருதுகளை வென்ற படம் என்ற சாதனையை படம் படைத்துள்ளது.

    முன்னதாக வழங்கப்பட்ட கோல்டன் குளோப் விருந்துகளிலும் அதிக விருதுகளை வென்று One Battle After Another சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவர்கள் ஒவ்வொரு நிமிடங்களையும் சந்தோஷமாக எதிர்கொள்ளுங்கள்.
    • படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

    இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷால் ஜோடியாக 'புருஷன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்புக்கிடையே சென்னையில் நடந்த ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் தமன்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    விழாவில் அவர் மாணவ மாணவிகள் மத்தியில் பேசும்போது, "மாணவர்கள் ஒவ்வொரு நிமிடங்களையும் சந்தோஷமாக எதிர்கொள்ளுங்கள். அதற்கு ஒவ்வொருவரும் காதலியுங்கள். மறுபடியும், மறுபடியும் காதலை தொடங்குங்கள்". என்றார்.

    இதற்கு மாணவர்கள் உற்சாகமாக கரகோஷம் எழுப்பிய நிலையில், "காதல் என்றதும், தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். உங்கள் படிப்பை, வேலையை, உங்களுடன் இருக்கும் உறவுகளை காதலியுங்கள். படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்", என்று சிரித்தபடி விளக்கம் அளித்தார்.

    மேலும், "எனக்கும் படிக்க ஆசை இருக்கிறது. வாய்ப்பு இருந்தால் உங் களில் ஒருவராக நானும் படிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தால் ஏரோநாட்டிக்கல் படிக்க சீட் தாருங்களேன்", என பல்கலைக்க ழக நிர்வாகத்திடம் கேட்க, அவர்களும், 'நிச்சயமாக' என்று பதிலளித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிறந்த நடிகர் விருது மைக்கேல் பி. ஜோர்டனுக்கு வழங்கப்பட்டது

    திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன. 98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Sinners திரைப்படம் 4 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

    சிறந்த நடிகர் விருது மைக்கேல் பி. ஜோர்டனுக்கும் சிறந்த அசல் திரைக்கதை விருது இயக்குநர் ரயான் கூக்ளருக்கும் வழங்கப்பட்டது.

    சிறந்த அசல் பாடல் பிரிவில் லுட்விக் கோரன்சன் தனது இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார். சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கர் விருதை ஆட்டம் டுரால்ட் அர்காபாவ் வென்றார். இதன்மூலம் சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தைகள் பெற்றுக்கொள்வது எளிது.
    • ஆனால் அவர்களை பாதுகாத்து வளர்த்திட வேண்டும்.

    முன்னணி நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கி வருகிறார். வரலட்சுமி தற்போது 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து, இயக்கி, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

    இதற்கிடையில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது பற்றி வரலட்சுமி பேசியுள்ள கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

    "காசு இல்லாமல் எதற்கு குழந்தை பெற்றுக் கொள்கிறீர்கள்? நிதி ஆதாரத்தை திட்டமிட்டு விட்டு அதன் பின் குழந்தை பற்றி திட்டமிடுங்கள். குழந்தைகள் பெற்றுக்கொள்வது எளிது. ஆனால் அவர்களை பாதுகாத்து வளர்த்திட வேண்டும். இன்றைக்கு பொருளாதார நிலைமை கணிக்க முடியவில்லை. குழந்தை பெற்றுக் கொண்டு கஷ்டப்படுகிறோம் என்று நொந்துகொள்கிறார்கள். அந்த குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கிறார்கள். நான் குழந்தைகளுக்கு எதிரானவள் அல்ல. அதற்காக யோசிக்காமல் செய்யும் விஷயங்களுக்கு ஆதரவும் தரமாட்டேன்.

    திருமணத்துக்கு பிறகு நிதி ஆதாரத்தை திட்டமிட்டு, காசு இருந்தால் பின் னர் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள். அந்த குழந்தைகளுக்காக யாரிட மும் போய் உதவி கோராதீர்கள். என்னிடம் பணியாற்றுவோர் மற்றும் நெருங்கி பழகுபவர்களிடம் நான் சொல்வது இதைத்தான்". என்று வரலட் 3 சுமி தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    FRANKENSTEIN திரைப்படம் 3 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

    திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன. 98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், FRANKENSTEIN திரைப்படம் 3 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியுள்ளது. தயாரிப்பு வடிவமைப்பு, ஒப்பனை - சிகை அலங்காரம் மற்றும் ஆடை வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் FRANKENSTEIN திரைப்படம் ஆஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றது.

    திரைப்பட வரலாற்றில் சில படங்கள் காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கின்றன. அந்த வரிசையில் முக்கியமான இடத்தை Frankenstein திரைப்படம் பிடித்துள்ளது. விஞ்ஞானத்தின் எல்லைகளை மீறி மனிதன் உயிரற்ற உடல் பகுதிகளை ஒன்றிணைத்து உயிரை உருவாக்க முயற்சிக்கும் ஆபத்தான ஆசையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிராட் பிட் நடிப்பில் வெளியான F1 படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுது.

    திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன.

    98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், சிறந்த ஒலி அமைப்புக்கான ஆஸ்கார் விருதை F1 திரைப்படம் வென்றது.

    டாப் கன் மேவ்ரிக் படத்தை இயக்கிய ஜோசஃப் கொசின்ஸ்கி இயக்கத்தில் பிராட் பிட் நடிப்பில் வெளியான F1 படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுது. இப்படம் உலகளவில் 3626 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கடந்தாண்டு வெளியான அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது

    திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன.

    98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு ஆஸ்கார் நிகழ்ச்சியை இந்தியாவை சேர்ந்த பான் உலக நட்சத்திர நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கி வருகிறார். ஹாலிவுட் பிரபலங்களான ராபர்ட் டவுனி ஜூனியர், வில் ஆர்னெட் ஆகியோருடன் இணைந்து பிரியங்கா மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்

    இந்நிலையில், சிறந்த Visual Effects பிரிவில் Avatar: Fire And Ash திரைப்படம். ஆஸ்கார் விருதை வென்றது

    ஜேம்ஸ் காம்ரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு பெரும் வெற்றியை பெற்று கிளாசிக் ஆனது. தொடர்ந்து கடந்த 2022 இல் அவதார் 2 ஆம் பாகமான தி வே ஆப் வாட்டர் வெளியாகி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து கடந்தாண்டு வெளியான அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் பாகமும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆஸ்கார் விருதை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்குவது இது இரண்டாவது முறையாகும்.

    திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன.

    98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு ஆஸ்கார் நிகழ்ச்சியை இந்தியாவை சேர்ந்த பான் உலக நட்சத்திர நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கி வருகிறார். ஹாலிவுட் பிரபலங்களான ராபர்ட் டவுனி ஜூனியர், வில் ஆர்னெட் ஆகியோருடன் இணைந்து பிரியங்கா மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்

    ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் வெள்ளை நிற உடையில் நடிகை பிரியங்கா சோப்ரா வந்தது அனைவரையும் கவர்ந்தது.

    ஆஸ்கார் விருதை பிரியங்கா தேர்வு தொகுத்து வழங்குவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டும் அவர் இந்த கௌரவத்தைப் பெற்றிருந்தார்.

    பிரியங்கா சோப்ரா நடித்த The Bluff என்ற ஹாலிவுட் திரைப்படம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதற்கிடையே ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் 'வாரணாசி' திரைப்படத்தில் பிரியங்கா நடித்து வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    யூகி சேதுவின் வேடமும்,பேசும் வசனங்களும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

    காதலை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் வௌவல்ஸ் (Vowels). ஆங்கிலத்தில் உள்ள A,E,I,O,U என்கிற வௌவல்ஸ் எழுத்துகளின் பின்னணியில் ஐந்து கதைகளாக படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.

    முதல் கதை கற்பனை காட்சியை நிஜமாக்க நினைக்கும் காதலால் நடக்கும் கொலை.

    2வது கதை ஆபத்தான பயணத்தை விரும்பும் ஒருவரால் மற்றவர்களுக்கு நேரும் பாதிப்பு.

    3வது கதை காதல் பிரிவால் தற்கொலைக்கு தயாராகும் மனங்களை மாற்றும் உணர்வுப்பூர்வமான காதல்.

    4வது கதை உண்மை அன்பை தேடி வரும் காதல் மருத்துவம் தொடர்புடையது.

    5வது கதை உதடுகள் சொல்லும் காதல் பொய், உள்ளத்தில் இருக்கும் காதலே மெய் என்பதை சொல்லும் கதை.

    நடிகர்கள்

    யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா உள்ளிட்ட ஐந்து கதைகளில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

    யூகி சேதுவின் வேடமும்,பேசும் வசனங்களும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

    இயக்கம்

    5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் 5 குறும்படங்களை ஒன்றாக்கி ஒரு முழு நீளத் திரைப்படமாக கொடுத்திருப்பது தான் 'வெளவல்ஸ்'. தொடக்கம் மற்றும் முடிவு என்று குறிப்பிட்ட நேரத்திற்குள் தாங்கள் சொல்ல வேண்டிய விசயங்களை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள். 5வது கதையில் குழப்பம் ஏற்படுகிறது.

    இசை

    ஐந்து கதைகளுக்கு ஒரே இசையமைப்பாளர்.சரவண சுப்பிரமணியம் இசையமைத்திருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    ஐந்து இயக்குநர்களுக்கு இரண்டு ஒளிப்பதிவாளர்கள். கீர்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி ஆகியோர் கதைக்கு மெனக்கெட்டிருக்கிறார்கள்.

    ரேட்டிங்-2/5

    ×