என் மலர்

    அறிந்து கொள்ளுங்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இது திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல.
    • கணினியை பயன்படுத்த சொன்னபோது அதை யாரும் கட்டாயப்படுத்துவதாக கருதவில்லை.

    பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு வருகையால் அதிகளவில் ஆட்குறைப்பை செய்து வருகின்றன.

    தற்போது வேலையிழப்பு என்பதை தாண்டி வேலையில் உயர்ந்த நிலைக்கு செல்லவும் ஏஐ அறிவு அடிப்படை தகுதியாக மாறி வருகிறது.

    அந்த அக்சென்சர் (Accenture) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஜூலி ஸ்வீட் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதாவது, நிறுவனத்தில் ஊழியர்கள் பதவி உயர்வு பெற ஏஐ குறித்த அறிவு அவசியம் என்று அவர் கண்டிஷன் போட்டுள்ளார்.

    இது திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல, கடந்த மூன்று ஆண்டுகளாக ஊழியர்களை இந்தத் தொழில்நுட்பத்திற்கு பழக்கப்படுத்திய பிறகே பதவி உயர்வுக்கு ஏஐ அவசியம் என்ற நிலைப்பாட்டை எடுத்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஜூலி ஸ்வீட் இதுகுறித்து கூறுகையில், "பல ஆண்டுகளுக்கு முன்பு அலுவலகங்களில் கணினியை பயன்படுத்த சொன்னபோது அதை யாரும் கட்டாயப்படுத்துவதாக கருதவில்லை.

    அது வேலை செய்வதற்கான வழியாகப் பார்க்கப்பட்டது. அதேபோல் இன்று அக்சென்சரில் ஏஐ என்பது வேலை செய்வதற்கான வழியாகிவிட்டது." என்று குறிப்பிட்டார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐஐடி பாம்பேவில் கணினி அறிவியலில் பி.டெக் முடித்தவர்.
    • சாம்சங், மெட்டாவில் பணியாற்றியுள்ளார்.

    உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI இல் இந்திய ரோபாட்டிக்ஸ் நிபுணர் தேவேந்திர சிங் சாப்லோட் இணைந்துள்ளார். xAI என்பது சமூக வலைதளமான எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) உடைய ஏஐ பிரிவாகும். 

    எலான் மஸ்க்குடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, சூப்பர் இன்டலிஜென்ஸ்-ஐ உருவாக்கும் இலக்கோடு xAI குழுவில் இணைந்திருப்பதாக தேவேந்திர சிங் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது பதிவிற்கு மஸ்க் பதிலளித்து வரவேற்றுள்ளார்.

    யார் இந்த தேவேந்திர சிங் சாப்லோட்?

    தேவேந்திர சிங் இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி பாம்பேவில் கணினி அறிவியலில் பி.டெக் முடித்தவர். பின்னர், அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் மெஷின் லேர்னிங் துறையில் பிஎச்.டி பட்டம் பெற்றார்.

    தென்கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸில் தனது பணியைத் தொடங்கினார். அதன்பின், மெட்டா நிறுவனத்தில் AI ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றினார்.

    பிரான்ஸின் முன்னணி AI ஸ்டார்ட்அப் நிறுவனமான Mistral AI இல் மல்டிமோடல் ஆராய்ச்சி குழுவிற்குத் தலைமை தாங்கினார். 'மிஸ்ட்ரல் 7பி' போன்ற சக்திவாய்ந்த AI மாடல்களை உருவாக்குவ முக்கியப் பங்காற்றினார்.

    தற்போது xAI நிறுவனத்தில் தொழில்நுட்பப் பணியாளர் (Technical Staff Member) ஆகப் பொறுப்பேற்றுள்ளார்.

    தேவேந்திர சிங் தனது ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சிக்காக 2020-ம் ஆண்டு பேஸ்புக் பெல்லோஷிப் உள்ளிட்ட பல சர்வதேச அங்கீகாரங்களை பெற்றுள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர் முறை உள்ளது.
    • குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

    உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகச் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்படுத்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் முடிவெடுத்துள்ளார்.

    உச்சநீதிமன்ற வட்டாரத்தின்படி, வழக்கு ஒதுக்கீடு (Case Allocation) மற்றும் அமர்வுகளைத் தீர்மானிக்கும் பணிகளில் இருந்து மனிதக் குறுக்கீட்டை நீக்கிவிட்டு, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த அவர் முடிவெடுத்துள்ளார்.

    தற்போது நடைமுறையில் உள்ள 'மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்' (Master of the Roster) முறையின்படி, எந்த வழக்கை எந்த நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதியே முடிவு செய்வார்.

    அண்மையில் உத்தரப் பிரதேச குண்டர் சட்டத்திற்கு எதிராக இர்பான் சோலங்கி என்பவர் தாக்கல் செய்த மனுவை சூர்யா காந்த் அமர்வு விசாரித்தது.

    விசாரணையின் போது, இதேபோன்ற ஒரு மனு ஏற்கனவே 2022-ல் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது பின்னர் தெரியவந்தது.

    தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கு, மீண்டும் ஒரு புதிய அமர்வின் முன் எப்படி பட்டியலிடப்பட்டது குறித்து நடந்த உள் விசாரணையில் உச்ச நீதிமன்றப் பதிவகத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

    எனவே இனி வழக்குகள் மற்றும் அமர்வுகளை ஒதுக்கீடு செய்யும் பணியை இனி AI மென்பொருள் கவனிக்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல், சீரான முறையில் வழக்குகளைப் பட்டியலிடும் என்று நம்பப்படுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கூகுள் மேப்ஸ் நேவிகேஷன் அனுபவத்திற்கான மிகப்பெரிய மேம்படுத்தல்.

    கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நேற்று (வியாழக்கிழமை) ஜெமினி ஏஐ மாடலை கூகுள் மேப்ஸ்-இன் "ஆஸ்க் மேப்ஸ்" என்ற அம்சத்துடன் ஒருங்கிணைப்பதாக அறிவித்தார். கூகுள் நிறுவனம் அதன் புதிய "இம்மர்சிவ் நேவிகேஷனையும்" அறிவித்துள்ளது. இது "ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கூகுள் மேப்ஸ் நேவிகேஷன் அனுபவத்திற்கான மிகப்பெரிய மேம்படுத்தல்" என்று அந்நிறுவனம் விவரித்து இருக்கிறது.

    ஏஐ மூலம் இயங்கும் "Ask Maps" அம்சம் கூகுள் மேப்ஸை ஒரு தனிப்பட்ட உதவியாளராக (பெர்சனல் அசிஸ்டண்ட்) மாற்றுகிறது. ஜெமினி மாடல்களை பயன்படுத்துவதன் மூலம், பயனர்கள் சிக்கலான அல்லது மிகைப்படுத்தப்பட்ட கேள்விகளுக்கான பதில்களைப் பெறலாம். மேலும் நிஜ உலக நிலைமைகளுக்கு ஏற்ப தனிப்பட்ட பரிந்துரைகளையும் பெறலாம்.

    எடுத்துக்காட்டாக, பயனர்கள் "வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லாத மிக அருகில் உள்ள பொது குளியலறை எங்கே?" அல்லது "எனது தொலைபேசி இறந்து கொண்டிருக்கிறது, காபிக்காக நீண்ட வரிசையில் காத்திருக்காமல் அதை எங்கே சார்ஜ் செய்வது?" போன்ற கேள்விகளைக் கேட்டு உடனடியாக உகந்த பதிலை பெறலாம்.

    "நீங்கள் "ஆஸ்க் மேப்ஸ்" பொத்தானைத் தட்டி, கேள்விகளை முன்வைத்தால் உரையாடல் நடையில் பதிலளித்து, உங்களுக்கான ஆப்ஷனை காட்சிப்படுத்தும்" என்று கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    "ஆஸ்க் மேப்ஸ் தனித்துவமான உதவியாக இருக்கும், மேப்ஸ்-ஐ க்ளிக் செய்தால்- நீங்கள் செல்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் காண்பித்து தெரிந்து கொள்ள செய்யும். மேலும், உங்களுக்கான பதில்களை பெர்சனலைஸ் செய்து திட்டங்களை செயல்பாடாக மாற்றுவதை எளிதாக்குகிறது."

    இந்த அம்சம் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வெளிவருகிறது. முதற்கட்டமாக ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் இந்த அப்டேட் விரைவில் டெஸ்க்டாப் தளத்திற்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த தாக்குதல் மனித குலத்திற்கே எச்சரிக்கை மணியாக இருக்கும்.
    • இயந்திரங்கள் மனிதர்களுக்கு எதிராகத் திரும்பி, உலகம் அழியும் சூழல் நிஜமாகிவிடும் என சீனா எச்சரித்துள்ளது.

    ஈரான் உடனான போரில் அமெரிக்க ராணுவம் பல்வேறு செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளது.

    அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை (CENTCOM) தலைவர் பிராட் கூப்பர், தரவுகளை விரைவாக ஆய்வு செய்ய ஏஐ கருவிகள் உதவுவதாக தெரிவித்துள்ளார்.

    பல மணிநேரம் அல்லது நாட்கள் எடுக்கக்கூடிய தரவு ஆய்வுகளை, ஏஐ மூலம் சில நொடிகளில் முடிக்க முடிகிறது. இது எதிரியை விட வேகமாக முடிவுகளை எடுக்க உதவுகிறது. ஆனால் இலக்குகளைத் தாக்குவது குறித்த இறுதி முடிவை எப்போதும் மனிதர்களே (ராணுவ வீரர்கள்) எடுப்பார்கள் என்று கூப்பர் தெரிவித்தார்.

    பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 1,300 பேர் ஈரானில் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதில் தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 175 சிறுமிகள் கொல்லப்பட்டனர். பள்ளியை தாக்கியது அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை என்பதற்கான வீடியோ மற்றும் சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.

    பழைய உளவு தகவல்களால் தவறுதலாக ராணுவ தளத்திற்கு பதிலாக அருகில் உள்ள பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அமெரிக்க ராணுவம் உள் விசாரணை நடத்தி வருகிறது. இந்த பழைய உளவு தகவலை ஏஐ தான் வழங்கியதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை ஏஐ வழங்கிய தவறான தகவலால் இந்த தாக்குதல் நடந்திருந்தால் இது மனித குலத்திற்கே முக்கிய எச்சரிக்கை மணியாக இருக்கும்.

    இதற்கிடையே டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க ராணுவத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த முயன்று வருகிறது.

    தனது ஏஐ மாடல்களை தானியங்கி ஆயுதங்களாகவோ அல்லது உளவு வேலைகளுக்கோ பயன்படுத்தக் கூடாது என்று ஆந்த்ரோபிக் நிறுவனம் பிடிவாதம் காட்டியது. இதையடுத்து, அந்த நிறுவனத்தை Supply Chain Risk என டிரம்ப் நிர்வாகம் பட்டியலிட்டது. அந்த ஒப்பந்தத்தை ஓபன் ஏஐ கைப்பற்றியது.

    இதற்கிடையே ராணுவத்தில் கட்டுப்பாடற்ற முறையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்துச் சீனா எச்சரித்துள்ளது.

    சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் பின் கூறுகையில், மற்ற நாடுகளின் இறையாண்மையை மீற AI-ஐப் பயன்படுத்துவது, மரணத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை அல்காரிதம்களிடம் கொடுப்பது தார்மீக ரீதியான சிதைவாகும்.

    இந்த நிலை தொடர்ந்தால், 'டெர்மினேட்டர்' திரைப்படத்தில் வருவது போல இயந்திரங்கள் மனிதர்களுக்கு எதிராகத் திரும்பி, உலகம் அழியும் சூழல் நிஜமாகிவிடும்" என்று எச்சரித்தார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரான் அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தொடங்குவதற்கு முன்பே இது தொடங்கியது.
    • F-22 ஸ்டெல்த் போர் விமானங்கள், F-35 விமானங்கள் மற்றும் THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் அம்பலமாகின.

    ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலால், ஈரான் இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே இந்த போரில் மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ நடமாட்டம் அனைத்தயும் சீனாவை சேர்ந்த MizarVision என்ற ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனம் கண்காணித்து அந்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவது தெரியவந்துள்ளது.

    அமெரிக்க ராணுவ ரகசியம் என்று கருதப்படும் இவை மிகவும் எளிமையாக சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கிறது.

    ஆராய்ச்சியாளர் ஷானகா அன்செல்ம் பெரேரா மேற்கொண்ட ஆய்வின்படி, பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தொடங்குவதற்கு முன்பே ஜோர்டான், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தளங்களில் எங்கு, எந்தெந்த ஆயுதங்கள் உள்ளன என்பதை இந்த நிறுவனம் செயற்கைக்கோள் படங்களுடன் வரைபடம் போல வெளியிட்டது.

    அமெரிக்காவின் F-22 ஸ்டெல்த் போர் விமானங்கள், F-35 விமானங்கள் மற்றும் THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றின் இருப்பிடம் குறித்த தகவல்கள் இதில் அடங்கும்.

    சீனாவின் Jilin-1 செயற்கைக்கோள் கூட்டமைப்பு மற்றும் Maxar, Airbus போன்ற மேற்கத்திய செயற்கைக்கோள் தரவுகளை ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ந்து இந்த உளவு வேலையை அந்நிறுவனம் செய்து வருகிறது.

    சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இந்த செயற்கைகோள் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் ஈரானுக்குப் போர் வியூகங்களை வகுக்கப் மறைமுகமாக உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

    வழக்கமாக ராணுவ ரகசியமாக வைக்கப்படும் இத்தகைய தகவல்களை ஒரு தனியார் நிறுவனம் பொதுவெளியில் வெளியிடுவது அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பென்டகனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    உக்ரைன் போரின் போது மேற்கத்திய நாடுகள் இதேபோன்ற வணிகரீதியான செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்தியது போல, இப்போது சீனா தனது ஏஐ ஸ்டார்ட்அப்கள் மூலம் அதே உத்தியை பயன்படுத்துகிறது.

    இனி வரும் போர்கள் ஒரு ஏவுகணைத் தாக்குதலுடன் தொடங்காது. மாறாக, விண்வெளியில் இருந்து ஒவ்வொரு இலக்கையும் அடையாளம் காணும் ஒரு ஏஐ மாடலுடன் தான் தொடங்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செயலியை அணுகுவதில் 71% சிக்கல்.
    • #InstagramDown என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

    மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் உலகின் முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றாக உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை முதல் இன்ஸ்டாகிராம் உலகளவில் பெரிய அளவிலான தொழில்நுட்பக் கோளாறுகளால் முடங்கியுள்ளது.

    காலை முதல் இன்ஸ்டாகிராம் செயலியில் ஏற்பட்ட கோளாறால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    பயனர்கள் தங்களது 'டைரக்ட் மெசேஜ்' பக்கத்தை அணுக முடியவில்லை. நோட்டிபிகேஷன் வந்தாலும், மெசேஜ் பக்கம் காலியாக தெரிவதாகப் புகார் அளித்துள்ளனர்.

    தேடல் வசதி வேலை செய்யவில்லை என்றும், காண்டாக்ட் லிஸ்ட்டில் உள்ளவர்கள் மறைந்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

    இணையதள சிக்கல்களை கண்காணிக்கும் 'டவுன் டிடெக்டர்' தளத்தின்படி, இதுபோல சுமார் 10,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலான புகார்கள் அமெரிக்காவிலிருந்தும், குறிப்பிடத்தக்க புகார்கள் இந்தியாவில் இருந்தும் பதிவாகி உள்ளன. 

    71% புகார்கள் செயலியை அணுகுவதிலும், 19% புகார்கள் சர்வர் இணைப்பு தொடர்பாகவும், 5% புகார்கள் Feed தொடர்பாகவும் பதிவாகியுள்ளன.

    பலர் எக்ஸ் தளத்தில் #InstagramDown என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போனின் ரிசீவரை எடுத்தவுடன் ஏஐ சிஸ்டம் தயாராகிவிடும்.
    • "Hey Kiri" என்ற வார்த்தையைக் கூறினால், அது வேலை செய்யத் தொடங்கும்.

    பெங்களூரைச் சேர்ந்த பங்கஜ் என்ற இளைஞர், தனது தாத்தாவின் பழைய டெலிபோனை ஒரு நவீன ஏஐ உதவியாளராக மாற்றியிருக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இன்றைய நவீன ஸ்மார்ட் ஸ்பீக்கர்களுடன் பேசுவது சலிப்பை ஏற்படுத்தியதால், 1970-களின் பழைய ரோட்டரி டயல் வகை டெலிபோனை பங்கஜ் மாற்றியமைத்துள்ளார்.

    இந்த முழு அமைப்பையும் உருவாக்க அவருக்கு வெறும் ரூ.2,307 மட்டுமே செலவாகியுள்ளது.

    போனின் ரிசீவரை எடுத்தவுடன் ஏஐ சிஸ்டம் தயாராகிவிடும். "Hey Kiri" என்ற வார்த்தையைக் கூறினால், அது வேலை செய்யத் தொடங்கும்.

    இதன் மூலம் டாக்ஸி புக் செய்வது, மீட்டிங்குகளை திட்டமிடுவது, உணவுகளை ஆர்டர் செய்வது, மின்னஞ்சல்களைச் சுருக்கமாகக் கேட்பது மற்றும் வீட்டின் விளக்குகளைக் கட்டுப்படுத்துவது போன்ற பல வேலைகளைச் செய்ய முடியும்.

    பங்கஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்த வீடியோவை பகிர்ந்த நிலையில் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

    வெளியே பார்ப்பதற்கு 1970-களின் விண்டேஜ் போன் போல இருந்தாலும், உள்ளே அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்துடன் இது செயல்படுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆந்த்ரோபிக் நிறுவனத்தை பென்டகன் தனது 'சப்ளை செயின் ரிஸ்க்' பட்டியலில் சேர்த்து அதன் செயல்பாடுகளை பகுதியளவு முடக்கியுள்ளது.
    • டிரம்ப் குறித்து தான் முன்வைத்த விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    ராணுவ உளவு வேலைகளுக்கு ஏஐ உடைய முழு அணுகலையும் வழங்க முடியாது என கூறி ஆந்ரோபிக் நிறுவனம் அண்மையில் அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகனுடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. அதன்பின் அந்த ஒப்பந்தத்தை ஓபன் ஏஐ நிறுவனம் கைப்பற்றியது.

    இந்நிலையில் பென்டகனுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபன் ஏஐ நிறுவனத்தின் ரோபோடிக்ஸ் பிரிவு தலைவரான கைட்லின் கலினோவ்ஸ்கி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இவர் கடந்த 2024 நவம்பரில்தான் மெட்டா நிறுவனத்திலிருந்து விலகி ஓபன் ஏஐ இல் இணைந்தார்.

    பென்டகனின் ரகசிய நெட்வொர்க்குகளில் ஓபன் ஏஐ-இன் ஏஐ மாடல்களைப் பயன்படுத்துவதற்கான நிறுவனத்தின் முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை என கைட்லின் தெரிவித்துள்ளார்.

    சட்ட மேற்பார்வையின்றி அமெரிக்க குடிமக்களை ஏஐ மூலம் உளவு பார்ப்பது மற்றும் மனிதக் கட்டுப்பாடு இல்லாத தானியங்கி ஆயுதங்களில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து இன்னும் ஆழமான விவாதங்கள் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து ஓபன் ஏஐ தரப்பு கூறுகையில், "தேசிய பாதுகாப்பிற்காக ஏஐ தொழில்நுட்பத்தை பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதற்காகவே பாதுகாப்புத் துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    உள்நாட்டு உளவு வேலைகளுக்கோ அல்லது தானியங்கி ஆயுதங்கள் தயாரிப்பதற்கோ எங்களது தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது.

    இது தொடர்பாக அரசு மற்றும் பொது அமைப்புகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஆந்த்ரோபிக் நிறுவனம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதால் டிரம்ப் ஆத்திரமடைந்தார்.

    எனவே ஆந்த்ரோபிக் நிறுவனத்தை பென்டகன் தனது 'சப்ளை செயின் ரிஸ்க்' பட்டியலில் சேர்த்து அதன் செயல்பாடுகளை பகுதியளவு முடக்கியுள்ளது.

    இந்தப் பட்டியலிலிருந்து விலக்கு அளிக்க வேண்டி, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சிஇஓ டாரியோ அமோடி, கடந்த காலங்களில் அதிபர் டிரம்ப் குறித்து தான் முன்வைத்த விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    முன்னதாக மனிதத் தலையீடு இல்லாத ஆயுதங்கள் மற்றும் மக்கள் மீதான கண்காணிப்பு போன்றவற்றுக்குத் தங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தார்மீக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சரியல்ல என்று ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடியும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
    • கம்ப்யூட்டர் புரோகிராமிங் 75% பணிகள் ஏஐ உதவியுடன் செய்யப்படுகின்றன.

    செயற்கை நுண்ணறிவு எழுச்சியால் உலகம் முழுவதிலும் தொழில்நுட்ப நிறுவனங்களில் லே ஆப் எனப்படும் பணிநீக்கங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.

    மனித வேலைகளை மனிதர்களை விட ஏஐ வேகமாக செய்வதாலும் மனிதர்கள் ஏஐ க்கு தகவமைத்துகொள்ளாதபட்சத்திலும் வரும் காலங்களில் வேலையிழப்புகள் அதிகம் இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில் முன்னணி ஏஐ நிறுவனங்களில் ஒன்றான அந்திரோபிக் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

    அந்நிறுவனத்தின் Claude ஏஐ உட்பட ஏஐ கருவிகளை உண்மையில் எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    இதன் மூலம் ஏஐ எந்த வேலைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்ற தரவுகளை சேகரித்ததன் மூலம் எந்த வேலைகளுக்கு ஏஐ ஆல் ஆபத்து இருக்காது என தெரியவந்துள்ளது. 

    இதில் சுமார் 22 வேலைகள் ஏஐ ஆல் பாதிக்கப்படாது என்று ஆந்திரோபிக் பட்டியலிட்டுள்ளது.  

    அதன்படி விவசாயம், மீன்பிடித்தல், வனத்துறை, கட்டுமானப் பணிகள், அகழ்வாராய்ச்சி, இயந்திரங்களை நிறுவுதல், பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல், உணவு தயாரித்தல், பரிமாறுதல், கட்டிட பராமரிப்பு, துப்புரவு வேலைகள், போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ் ஆகியவற்றில் ஏஐ தலையீடு இருக்காது. 

    மேலும், முடிதிருத்துதல், முதியோர் பராமரிப்பு போன்ற தனிநபர் பராமரிப்பு மற்றும் சேவை, தொழிற்சாலை இயந்திரங்களை இயக்குவது உள்ளிட்ட உற்பத்தித் துறை வேலைகள், செவிலியர் உள்ளிட்ட சுகாதாரத் துறை பணிகள், வணிக மற்றும் நிதிச் செயல்பாடுகள் ஆகியவற்றை ஏஐ-ஆல் செய்ய முடியாது.

    அதேபோல், ஆய்வுப் பணிகள், தீயணைப்பு, காவல், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு சேவைகள், சமூக சேவை, விற்பனை மற்றும் அது சார்ந்த பணிகள், கற்பித்தல், கலை, பொழுதுபோக்கு, ஊடகங்கள் ஆகியவற்றில் நேரடி மனித திறன் சார்ந்த பணிகள் பாதிக்கப்படாது.

    இந்த வேலைகள் பெரும்பாலும் உடல் உழைப்பு, மனிதர்களுடனான நேரடித் தொடர்பு மற்றும் இயந்திரங்களால் செய்ய முடியாத நுணுக்கமான வேலைகளை அடிப்படையாகக் கொண்டவை.

    சிக்கலான நேரங்களில் மனிதர்கள் எடுக்கும் முடிவுகளை இயந்திரங்களால் எடுக்க முடிவதில்லை, எனவே நிபுணத்துவம் வாய்ந்த சிறப்புத் தேர்ச்சி தேவைப்படும் வேலைகளுக்கு ஏஐ ஒத்துவராது.

    ஆபத்தில் உள்ள துறைகள்:

    கம்ப்யூட்டர் புரோகிராமிங் 75% பணிகள் ஏஐ உதவியுடன் செய்யப்படுகின்றன. கேள்விகளுக்குப் பதிலளிக்கும் கஸ்டமர் சர்வீஸ் சேவைகள், தானியங்கி மென்பொருட்கள், சாட்பாட்ஸ் மூலம் செய்யப்படுகின்றன.

    டேட்டா என்ட்ரி எனப்படும் தரவு உள்ளீடு வேலைகள் ஏஐ ஆல் 67% மேற்கொள்ளப்படுகின்றன. கணினி துறையில் 94% வேலைகளை ஏஐ ஆல் செய்ய முடியும்.

    சுருக்கமாகச் சொன்னால், கம்ப்யூட்டர் திரைக்கு வெளியே நடக்கும் வேலைகள் இப்போதைக்கு ஏஐ ஆல் பறிக்கப்பட வாய்ப்பில்லை என்கிறது ஆந்த்ரோபிக்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமெரிக்காவின் போர் அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டது.
    • ஆந்திரோபிக் நிறுவனத்துடன் இருந்த ஒப்பந்தத்தை பென்டகன் ரத்து செய்தது.

    நவீன கால போர்கள் வீரர்களின் எண்ணிக்கையை விட, தரவுகளின் வேகத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன.

    தாக்குதல் நடத்த முதலில் இலக்குகளை தீர்மானிக்க வேண்டும். இலக்குகளை தீர்மானிக்க, தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

    தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தின் சாட்டிலைட் புகைப்படங்கள், உளவு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த தரவுகளில் அடங்கும்.

    ராட்சதனின் வருகை:

    ஏஐ என்ற ராட்சத தொழில்நுட்பம் வரும் வரை இந்த தரவுகளை ஆய்வு செய்வது ராணுவ நிபுணர்களால் செய்யப்பட்டு வந்தது.

    நிபுணர்கள் என்றாலும் அவர்களும் மனிதர்களே, தரவுகளை ஆய்வு செய்து முடிவெடுக்க மனிதர்களுக்கு நேரம் எடுக்கும். எனவே இலக்கை நிர்ணயித்து தாக்குதல் நடத்துவதும் மிக நீண்ட செயல்முறையாக இருந்து வந்தது.

    ஆனால் ஏஐ ஆயிரக்கணக்கான தரவுகளை நிமிடங்களில் முழுமையாக ஆய்வு செய்து துல்லியமான முடிவுகளை வழங்குகிறது. இது எளிதில் இலக்கை தீர்மானிக்க உதவுகிறது.

    போரில் வெற்றி என்பது யார் பலசாலி என்பதை விட யார் வேகமாக செயல்படுகின்றனர் என்பதை பொறுத்தே உள்ளது.

    எனவே ஏஐ மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும் இந்த வேகம், போர் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

    அந்த வகையில் மனிதர்கள் முடிவெடுக்கும் முறையிலிருந்து, இயந்திரங்களே மின்னல் வேகத்தில் முடிவெடுத்துத் தாக்கும் புதிய முறைக்கு அமெரிக்கா மாறியுள்ளது.

    கடந்த ஜனவரி அமெரிக்காவின் போர் அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டது.

    ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஏஐ-ஐ முழுமையாகப் புகுத்துவது, நவீன ஏஐ மாடல்களைப் பயன்படுத்தி எதிரிகளின் நகர்வுகளைக் கணிப்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றன.

    இந்த ஏஐ பலத்தை  பயன்படுத்தி ஏற்கனவே 2 நாடுகளின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது  நவீன போர் முறையில் ஏஐ உடைய முக்கியத்துவத்தை உணர்த்தி உள்ளது.

    ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்

    கடந்த ஜனவரி 3 ஆம் தேதி இரவு, "ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்" என்ற பெயரில் வெனிசுலா நாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக நுழைந்தது.

    அந்நாட்டு தலைநகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகைக்கு உள்ளேயே நேரடியாக புகுந்து அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்காவுக்கு நாடுகடத்திச் சென்றது.

    இந்த தாக்குதலுக்கு முன் பல ஆயிரம் மணிநேர ஆடியோ பதிவுகளை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பகுப்பாய்வு செய்து, மதுரோவின் பாதுகாப்பில் இருந்த ஓட்டைகளை கண்டறிந்த அமெரிக்க ராணுவம், அதன் மூலம் தாக்குதலை திட்டமிட்டது பின்னர் தெரியவந்தது.

    ஆபரேஷன் எபிக் ஃபியூரி:

    இதேபோல் கடந்த வாரம் சனிக்கிழமை, பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.

    இந்தத் தாக்குதல் வெறும் ஏவுகணைத் தாக்குதல் மட்டுமல்ல, இது உலகின் முதல் ஏஐ-ஆல் வழிநடத்தப்பட்ட போர்முறை என்று அழைக்கப்படுகிறது.

    அண்மையில் ராணுவத்துக்கு தங்களின் முழு ஏஐ அணுகலையும் வழங்க முடியாது என மறுத்ததால் ஆந்திரோபிக் நிறுவனத்துடன் இருந்த ஒப்பந்தத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ரத்து செய்தது.

    இந்நிலையில் ஆந்திராபிக் நிறுவனத்தின் கிளாட் ஏஐ உதவியுடனே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

    வழக்கமாக ராணுவ அதிகாரிகள் பல வாரங்கள் செய்ய வேண்டிய வேலையை கிளாட் ஏஐ வெறும் சில மணிநேரங்களில் செய்து முடித்தது.

    செயற்கைக்கோள் படங்கள், உளவுத் தகவல்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் என பல கோடி தகவல்களை ஏஐ சில நிமிடங்களில் அலசி ஆராய்ந்தது.

    காமேனி எங்கே இருக்கிறார், அவரது பாதுகாப்பு வளையம் எப்படி இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, எங்கே தாக்கினால் வெற்றி கிடைக்கும் என்பதை ராணுவ அதிகாரிகளுக்கு ஏஐ பரிந்துரைத்தது.

    தாக்குதலை தொடங்குவதற்கு முன்பே, பல்வேறு வழிகளில் தாக்குதல் நடத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை கணினி மூலம் ஒத்திகை பார்த்து ஏஐ சொல்லியுள்ளது.

    கொலைச் சங்கிலி

    ராணுவத்தில் கொலைச் சங்கிலி, அதாவது 'Kill chain' என்ற ஒரு வார்த்தை பிரயோகம் உண்டு. ஓர் இலக்கைக் கண்டுபிடித்து அதைத் தாக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமே Kill chain என்று அழைக்கப்படும்.

    மனிதர்கள் தரவுகளை கையாண்ட வரை இதற்கு பல நாட்கள் அல்லது வாரங்கள் ஆகும்.

    மெஷின் லேர்னிங் அல்காரிதம்கள் மூலம் கிளாட் போன்ற ஏஐ கருவிகளால் தரவுகள் ப்ராசஸ் செய்யப்படுவதால், இந்த முடிவெடுக்கும் நேரம் வெறும் நிமிடங்களாகக் குறைந்துவிட்டது.

    இதனால் எதிரிகள் தப்பிச் செல்லும் முன்பே அமெரிக்கப் படைகளால் மின்னல் வேகத்தில் முடிவெடுத்து தாக்க முடிகிறது.

    160 சிறுமிகள் புதைக்கப்பட்ட இடம் 

    160 சிறுமிகள்:

    அதேநேரம் உயிரைப் பறிக்கும் முடிவுகளை எடுக்கும்போது, மனிதர்களுக்குப் பதில் இயந்திரங்களை அதிகம் நம்புவது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    ஏஐ தவறான ஒரு இடத்தைக் குறிவைத்தால், அப்பாவி மக்கள் கொல்லப்பட வாய்ப்புள்ளது.

    அமெரிக்க தாக்குதலில் தெற்கு ஈரானில் உள்ள மினாப் நகரில் உள்ள ஒரு பெண்கள் தொடக்கப்பள்ளி கடந்த சனிக்கிழமை தாக்கப்பட்டதும் இதில் 160 சிறுமிகள் கொல்லப்பட்டதும் இதற்கு உதாரணமாகும்.

    இனிவரும் காலங்களில் போர்கள் ஆயுதங்களால் மட்டுமின்றி, ஏஐ தொழில்நுட்பத்தாலும், அல்காரிதம் எனப்படும் கணினி சூத்திரங்களாலும் தான் தீர்மானிக்கப்படும் என்பதை இந்த போர் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாங்கள் அனைத்தையும் பார்க்கிறோம். வரவேற்பு அறை முதல் நிர்வாண உடல்கள் வரை.
    • பயனர்களின் தவறுகளை சட்டபூர்வமாக திருட ஒரு தந்திரமான வழி.

    பேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் ஆகிய முன்னணி சமூக வலைதளங்களை இயக்கி வரும் நிறுவனம் மெட்டா. இதன் தலைமை செயல் அதிகாரியாக பேஸ்புக்-ஐ உருவாக்கிய மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளார்.

    பயனர்களின் தரவுகளை உளவு பார்க்கும், திருடும் குற்றச்சாட்டுகளுக்கு மெட்டாவின் பேஸ்புக் பல முறை உள்ளாகி நீதிமன்ற விசாரணையையும் எதிர் கொண்டது.

    மெட்டா சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி மெட்டா ஏஐ மற்றும் பிற தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் இயங்கி வருகிறது.

    அந்த வகையில் மெட்டா நிறுவனத்தின் Ray Ban ஸ்மார்ட் கிளாஸ் சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் ஒன்றாக உள்ளது.

    எசிலார் லுக்சோட்டிகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இந்தக் கண்ணாடிகள், 2025ல் மட்டும் 70 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

    இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட இந்த Ray-Ban ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்தும் பயனர்களின் அந்தரங்கக் காட்சிகள் கண்காணிக்கப்படுவதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    கென்யாவின் நைரோபியில் உள்ள Sama என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊழியர்கள், மெட்டா கண்ணாடிகள் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஆய்வு செய்து வகைப்படுத்தும் வேலைகளை செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

    கண்ணாடியை அணிந்துகொண்டு இருக்கும் பயனர்கள் உடைகளைக் களைவது, கழிவறைக்குச் செல்வது மற்றும் உடலுறவு கொள்வது போன்ற மிக அந்தரங்கமான காட்சிகள் இந்தக் கண்ணாடிகள் மூலம் படமாக்கப்பட்டு, அந்த ஊழியர்களுக்கு அனுப்பப்படுவதாக ஸ்வீடன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    சில வீடியோக்களில் பயனர்களின் வங்கி அட்டைகள் தெளிவாகத் தெரிவதாகவும், இவை கசிந்தால் மிகப்பெரிய பணமோசடி ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சமும் எழுந்துள்ளது.

    "நாங்கள் அனைத்தையும் பார்க்கிறோம். வரவேற்பு அறை முதல் நிர்வாண உடல்கள் வரை. சிலர் இந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டே உடலுறவு கொள்கிறார்கள்" என்று அந்த கென்ய நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கூறியதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் அந்த ஊழியர்கள் பிறரின் அந்தரங்கங்களை கண்காணிக்கும் வேலையை விரும்பவில்லை என்றாலும் வேறு வழியின்றி அதில் ஈடுபட்டுள்ளதாக கூறுவதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    ஏஐ-ஐ மேம்படுத்த பயனர்களின் உரையாடல்கள் மற்றும் தரவுகள் தானியங்கி முறையிலோ அல்லது மனிதர்கள் மூலமாகவோ ஆய்வு செய்யப்படலாம் என்று மெட்டா நிறுவனம் தனது தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிட்டுள்ளது.

    இது பயனர்களின் தவறுகளை சட்டபூர்வமாக திருட ஒரு தந்திரமான வழி என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.    

    ×