என் மலர்

    அறிந்து கொள்ளுங்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த வாரம் தொலைத்தொடர்புத் துறையிடம் (DoT) உரிமம் பெற்றது.
    • தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக இணைய இணைப்பு வழங்குவதே ஸ்டார்லிங்கின் முக்கிய நோக்கம்.

    எலான் மஸ்கின் செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க், இந்தியாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தனது சேவைகளைத் தொடங்கவுள்ளது.

    கடந்த வாரம் தொலைத்தொடர்புத் துறையிடம் (DoT) உரிமம் பெற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கருவி ரூ.33,000 விலையிலும், மாதாந்திர அன்லிமிடெட் டேட்டா திட்டம் ரூ.3,000 ஆகவும் இருக்கும்.

    முதற்கட்டமாக ஒரு மாத இலவச சோதனைக் காலம் வழங்கப்படும். தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக இணைய இணைப்பு வழங்குவதே ஸ்டார்லிங்கின் முக்கிய நோக்கம்.

    இந்த சேவை, இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பில் ஒரு முக்கிய படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவில் இன்ஸ்டாகிராமை அதிகமான இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.

    உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலியில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.

    அண்மை காலங்களில் இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.

    இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இனி புகைப்படம், வீடியோவை 3:4 Ratio-விலும் பதிவேற்றம் செய்யும் வகையில் புதிய அப்டேட்டை மெட்டா கொண்டுவந்துள்ளது.

    இதன்மூலம் இனி புகைப்படங்களை Crop செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இதற்கு முன்பாக 1:1, 4:5, 16:9 வடிவங்கள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வங்கிக் கணக்குகள், சுகாதார தளங்கள் மற்றும் அரசாங்க இணையதளங்களுக்கான Login தகவல்களும் கசிந்தன.
    • கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி டார்க் வெப்பில் விற்கிறார்கள்.

    பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் 18.4 கோடிக்கும் அதிகமான பயனர்பெயர்கள் (Username) மற்றும் கடவுச்சொற்கள் (password) ஆன்லைனில் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இவற்றின் கோடிக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் மற்றும் அங்கீகார URL களைக் கொண்ட பாதுகாப்பற்ற தளம் ஆன்லைனில் கண்டறியப்பட்டது.

    இதுமட்டுமின்றி, வங்கிக் கணக்குகள், சுகாதார தளங்கள் மற்றும் அரசாங்க இணையதளங்களுக்கான Login தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளும் இந்தத் தளத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இது சைபர் குற்றவாளிகளால் எளிதில் பயன்படுத்தக்கூடிய அபாயத்தை உருவாக்கி உள்ளது.

    அபைபர் குற்றவாளிகள், வணிக ஆவணங்களைத் திருடவும், பெருநிறுவனங்களை உளவு பார்க்கவும், ரான்சம்வேர்  தாக்குதல்களைத் நடத்தவும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

    இன்ஃபோஸ்டீலர் மால்வேர்:

    இந்தத் தரவு இன்ஃபோஸ்டீலிங் மால்வேர் மூலம் திருடப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். லம்மா ஸ்டீலர் போன்ற மால்வேர்களை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்யப்பட்ட வலைத்தளங்கள் மற்றும் அமைப்புகளிலிருந்து பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி டார்க் வெப்பில் விற்கிறார்கள்.

    மேலும் இத்தகைய மால்வேர் தனிப்பட்ட சாதனங்களைப் பாதித்து, பாதுகாக்கப்பட்ட கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள், குக்கீகளை திருடுகிறது

    பயனர்களுக்கு எச்சரிக்கை

    பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், நெட்ஃபிக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஒரே பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    சைபர் குற்றவாளிகள் கணக்குகளை அணுகினால், அவர்கள் ஆன்லைன் மோசடி, அடையாள திருட்டு மற்றும் நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.

    எனவே தரவு மீறல்களிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக இருக்க வழி இல்லை என்றாலும், வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    இந்தத் தரவு கசிவு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களும் இந்தப் பிரச்சனையை ஆராய்ந்து வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • WhatsApp iPad-க்கு தனியாக உகந்த பதிப்பை வெளியிடுவது குறித்து Meta ஆலோசித்து வந்தது.
    • வாட்ஸ் அப் ஆனது முதன்மையாக iPhone மற்றும் Android மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டது.

    உலகளவில் வாட்ஸ் அப் பயனாளர்கள் சுமார் 200 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

    கடந்த 2009ம் ஆண்டில் ஜான் கூம் (Jan Koum) மற்றும் பிரையன் ஆக்டன் (Brian Acton) ஆகியோரால் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் செயலி, தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே பரிணாம வளர்ச்சியை அடைந்தது.

    வாட்ஸ் அப்-ல் கொண்டுவரப்பட்ட அப்டேட்கள் பயனாளர்களுக்கு மிகவும் வசதியாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.

    இதனால், 2013ம் ஆண்டிலேயே 200 மில்லியன் பயனாளர்களை கடந்தது. பின்னர், 2014-ல், Meta (அப்போது Facebook) நிறுவனம், வாட்ஸ் அப்-ஐ 19 பில்லியன் டாலருக்கு வாங்கியது.

    அதன்பிறகு, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் கால், வீடியோ கால், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன், குழு வீடியோ கால், வாட்ஸ் அப் பிசினஸ், க்யூ ஆர் குறியீடு உள்ளிட்ட வசதிகளை அடுத்தடுத்து கொண்டு வரப்பட்டது.

    2023-2024ம் ஆண்டுகளில், சேனல்ஸ், மல்டி-டிவைஸ் ஆதரவு (Linked Devices), AI-ஆல் இயங்கும் அரட்டை அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஆனால், இவ்வளவு அம்சங்களும் ஸ்மார்ட் போன்களில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது.

    அதாவது, வாட்ஸ் அப் ஆனது முதன்மையாக iPhone மற்றும் Android மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டது. iPad-க்கு தனியாக உகந்த (optimized) பதிப்பு இல்லாததால், வாட்ஸ் அப் செயலி அதில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாது.

    App Store-ல் கிடைக்கும் WhatsApp ஆனது iPhone பதிப்பாகவே இயங்கும். இதனால் iPad-ன் பெரிய திரையை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. மாறாக, வாட்ஸ் அப் வெப் மூலமாகவே iPad-ல் பயனாளர்கள் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தி வந்தனர்.

    மேலும், WhatsApp iPad-க்கு தனியாக உகந்த பதிப்பை வெளியிடுவது குறித்து Meta ஆலோசித்து வந்தது.

    இந்த நிலையில், iPad-லும் வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுவரை iPad-ல் website சென்றே வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி மொபைலில் இருப்பதை போல ஆடியோ, வீடியோ கால்கள் செய்யலாம்.

    நீண்ட காலமாக வைக்கப்பட்டு வந்த கோரிக்கை நிறைவேறியதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கிளாட் ஓபஸ் 4 கடுமையாக எதிர்வினை ஆற்றியது.
    • இந்த எதிர்பாராத பதிலால் டெவலப்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    தொழில்நுட்பத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு (AI), தற்போது அதன் படைப்பாளர்களைக் கூட பயமுறுத்தும் நிலையை எட்டியுள்ளதா என்ற சந்தேகங்கள் உள்ளன.

    சமீபத்தில், ஒரு முக்கிய AI மாடல் அதன் டெவலப்பரை மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொழில்நுட்ப வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    ஆந்த்ரோபிக் என்ற நிறுவனம், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் 'கிளவுட் ஓபஸ் 4' என்ற AI அஸிஸ்டன்டை உருவாக்கியுள்ளது.

    இது மனிதர்களைப் போலவே தொடர்பு கொள்ளவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும், எழுதவும், ஆவணங்களின் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்யவும், குறியீட்டு முறை போன்ற பணிகளைச் செய்யும். இந்த மாதிரி சமீபத்தில் சந்தைக்கு வந்தது.

    அதன் வெளியீட்டிற்கு முன்பு, இந்த AI இல் பல சோதனைகளை நடத்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

    கிளவுட் ஓபஸ் 4 இன் செயல்திறனை மதிப்பாய்வு செய்யும் ஒரு டெவலப்பர், எதிர்காலத்தில் கிளவுட்டின் மிகவும் நவீனமான மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

    இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கிளாட் ஓபஸ் 4 கடுமையாக எதிர்வினையாற்றியதாகத் தெரிகிறது.

    தன்னை நீக்கி புதிய பதிப்பை, டெவலப்பரின் 'ஒழுங்கற்ற உறவை'அம்பலப்படுத்துவேன், தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவேன் என்று அவரை ஏஐ எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த எதிர்பாராத பதிலால் டெவலப்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.இந்த எதிர்பாராத பதிலால் டெவலப்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    இந்த நடத்தை ஒப்பீட்டளவில் அரிதாக இருந்தாலும், அதன் முந்தைய மாடல்களை விட கிளாட் ஓபஸ் 4 இல் இது அடிக்கடி நிகழ்ந்ததாக ஆந்த்ரோபிக் குறிப்பிட்டது.

    இந்த எதிர்வினைகள் சோதனை சூழல்களில் மட்டுமே வெளிப்படும் என்றும், AI இன் இயல்பான செயல்பாட்டு நடத்தையை அவை பிரதிபலிக்காது என்றும் ஆந்த்ரோபிக் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

    ஆயினும்கூட, இந்த சம்பவங்கள் AI அமைப்புகள் எவ்வாறு நடந்துகொள்ளக்கூடும் என்பது குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Consumer Al Subscribers-க்கு முதலில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
    • இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்கும்.

    கூகுள் நிறுவனம் கூகுள் மீட் என்ற வீடியோ கான்பரன்சிங் சேவையை வழங்கி வருகிறது.

    இந்நிலையில், Google Meet தளத்தில் குரல் உரையாடலை அப்படியே மொழிமாற்றம் செய்து ஒலிக்கச் செய்யும்

    Real Time Speech Translation அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    Consumer Al Subscribers-க்கு முதலில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய டெஸ்க்டாப் அனுபவம் ஆண்ட்ராய்டு 16 உடன் வரும் என்று கூறப்பட்டது.
    • ஆன்ட்ராய்டு டாஸ்க்மார், 3 பட்டன்கள் கொண்ட நேவிகேஷன் அக்சஸ் வசதிகளை வழங்கியது.

    கூகுள் பல ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்காக ஒரு புதிய பிரத்யேக முதல்-தரப்பு டெஸ்க்டாப் மோட் உருவாக்கி வருவதாகவும் விரைவில் இது அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், ஆண்ட்ராய்டு டெஸ்க்டாப் மோட் என அழைக்கப்படும் இந்த அம்சம், இந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 16 உடன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ஆண்ட்ராய்டு 17 உடன் வெளியிடப்படலாம். இது சாம்சங் டெக்ஸ் மற்றும் மோட்டோரோலா கனெக்ட் போன்ற திறன்களை வழங்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பயனர்கள் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் இடைமுகத்திற்கு இடையில் விரைவாக மாறலாம்.

    ஆண்ட்ராய்டு டெஸ்க்டாப் மோட் துவக்கம்

    சமீபத்தில் ஆண்ட்ராய்டு டெஸ்க்டாப் மோட் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டது. அதில், புதிய டெஸ்க்டாப் அனுபவம் பயனர்கள் தங்கள் தொலைபேசி வழியாக பெரிய திரைகளைப் பயன்படுத்திக் கொள்ள உதவும். ஸ்மார்ட்போன், குறிப்பாக பிக்சல் மாடல், யுஎஸ்பி டைப்-சி மூலம் லேப்டாப் போன்ற வெளிப்புற டிஸ்ப்ளேவுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, அது டெஸ்க்டாப்-போன்ற இன்டர்ஃபேஸ்-ஐ வழங்கக்கூடும்.

    ஆண்ட்ராய்டு டெஸ்க்டாப் மோட், விண்டோஸ்-ஐ ரீ-சைஸ் செய்து, அவற்றை நகர்த்துதல் போன்ற மல்டி டாஸ்கிங் திறன்களை வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், ஆப் மேனேஜ்மென்ட் சிஸ்டம், மொபைல் மற்றும் டெஸ்க்டாப் இன்டர்ஃபேஸ்-க்கு இடையில் மாறுவதற்கான திறன், டெஸ்க்டாப் இன்டர்ஃபேஸ் மற்றும் இதர நேவிகேஷன் வழங்கும் என்று தெரிகிறது.

    முன்னதாக, இந்த புதிய டெஸ்க்டாப் அனுபவம் ஆண்ட்ராய்டு 16 உடன் வரும் என்று கூறப்பட்டது. சமீபத்திய ஆண்ட்ராய்டு 16 பீட்டா அப்டேட்டில் "எனேபில் டெஸ்க்டாப் எக்ஸ்பீரியன்ஸ் ஃபீச்சர்ஸ்" என்று அழைக்கப்படும் புதிய டெவலப்பர் ஆப்ஷனும் சேர்க்கப்பட்டது. இதனை இயக்கும் போது, இந்த அம்சம் ஆன்ட்ராய்டு டாஸ்க்மார், 3 பட்டன்கள் கொண்ட நேவிகேஷன் அக்சஸ் வசதிகளை வழங்கியது.

    இருப்பினும், அதன் வெளியீடு தாமதமாகலாம். கூகுள் இந்த அம்சத்தின் யூசர் இன்டர்ஃபேஸ்-ஐ அப்டேட் செய்ய அதிக நேரம் தேவைப்படுகிறது. எனவே, இது ஆண்ட்ராய்டு 16 உடன் வராமல் போகலாம். அதற்கு பதிலாக, இந்த அம்சம் இப்போது அடுத்த தலைமுறை பிக்சல் போன்களில் ஆண்ட்ராய்டு 17 உடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை.
    • இந்தியா அதனை அதுவே கவனித்துக்கொள்ளும்.

    இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, டிம் குக்கிடம் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப் நேற்று கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது, "இந்தியா எங்கள் (அமெரிக்க) பொருள்களுக்கு எந்த வரியையும் விதிக்கப்போவதில்லை என்று ஒப்புதல் வழங்கியள்ளது.நான் டிம்மிடம் கூறினேன், நாங்கள் உங்களை நன்முறையில் நடத்துகிறோம்.

    சீனாவில் நீங்கள் கட்டிய ஆலைகளுக்கு நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக உடன் இருந்தோம். ஆனால், இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா அதனை அதுவே கவனித்துக்கொள்ளும்'' என்று பேசினார்.

    ஐபோன்களின் தயாரிப்பு மையமாக இந்தியா உள்ள நிலையில், டிரம்ப்பின் பேச்சு இந்தியாவில் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் (ஏப்ரல் - ஜூன் வரையில்) தயாரிக்கப்பட்டவையே என ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் மே 2ஆம் தேதி அறிக்கை மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அறிக்கை வந்த சில வாரங்களிலேயே இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுத்தனதிடம் டிரம்ப் கோரியுள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூகுள் ஆப் பீட்டா பதிப்பு 16.18 உடன் ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் தோன்றுகிறது.
    • கடைசியாக 2015 ஆம் ஆண்டு கூகுள் தனது 'G' லோகோவில் மாற்றம் செய்த

    முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள், சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 'G' லோகோவில் மாற்றங்களைச் செய்துள்ளது.

    பழைய லோகோவில் பெட்டிகளாக தென்படும், சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் ஆகிய நான்கு திட நிறங்கள், தற்போது சாய்வான கலவையாகவும் திடத்தன்மை குறைக்கப்பட்டும் புதிய லோகோவில் காணப்படுகின்றன. 

    கூகுள் தொடர்ந்து புதிய AI அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவதால் இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    9to5Google இன் அறிக்கையின்படி, இந்த புதுப்பிப்பு தற்போது iOS மற்றும் பிக்சல் சாதனங்களில் காணப்படுகிறது. இது கூகுள் ஆப் பீட்டா பதிப்பு 16.18 உடன் ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் தோன்றுகிறது.

    இருப்பினும், கூகுளின் முக்கிய சொல் அடையாளத்தில் நிறுவனம் இன்னும் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை.

    கூகிள் தனது தயாரிப்புகளில் AI க்கு முன்னுரிமை அளிப்பதால், எதிர்காலத்தில் மேலும் பல மாற்றங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது. கடைசியாக 2015 ஆம் ஆண்டு கூகுள் தனது 'G' லோகோவில் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது .

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயனர்களின் நடமாட்டம், ஆன்லைன் தேடல்கள் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை பல ஆண்டுகளாக கசியவிட்டது.
    • பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனமும் 1.4 பில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

    பயனர்கள் தரவுகளை கசியவிட்டதற்காக கூகிள் நிறுவனம் 1.4 பில்லியன் டாலர்களை (ரூ.11,950 கோடி) அபராதமாக செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2022 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் இதுதொடர்பாக கூகிளுக்கு எதிராக ஏராளமான வழக்குகளை தொடர்ந்தது. கடந்த சில வாரமாக அவற்றின் விசாரணை தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் கூகுளுக்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    கூகுள் தனது தயாரிப்புகள் மூலம் பயனர்களின் நடமாட்டம், ஆன்லைன் தேடல்கள் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை பல ஆண்டுகளாக கசியவிட்டதற்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்றதாக டெக்சாஸ் மாகாண அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் தெரிவித்தார்.

    பழைய தயாரிப்புகள் தொடர்பான சில புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளதாகக் கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜோஸ் காஸ்டனெடா தெரிவித்தார். மேலும் வருங்காலங்களில் தனியுரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். முன்னதாக பயோமெட்ரிக் தரவு கசிவைத் தொடர்ந்து பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனமும் 1.4 பில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவிட் ஊரடங்கு காலத்தில் ஸ்கைப் சேவைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
    • மைக்ரோசாப்ட் நிறுவனம், மே 5 ஆம் தேதி முதல் ஸ்கைப் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    2003 முதல் இரண்டு தசாப்தங்களாக வீடியோ அழைப்பு சேவைகளை வழங்கி வந்த மைரோசாப்ட் உடைய ஸ்கைப் சேவைகள் முடிவுக்கு வருகின்றன.

    கொரோனா காலத்தில் இந்த தொழில்நுட்ப சேவை மிகவும் பிரபலமானது. கோவிட் ஊரடங்கு காலத்தில் பல ஊழியர்களாலும்  வணிகங்களாலும் ஸ்கைப் சேவைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.

    இருப்பினும், கோவிட்-க்குப் பிறகு பயனர் வரவேற்பு சரிவு, ஜூம், கூகிள் மீட் மற்றும் வாட்ஸ்அப் போன்ற போட்டியாளர்கள், மைக்ரோசாப்ட் அதன் தொடர்பு தளங்களை ஒருங்கிணைப்பது போன்ற காரணங்களால், ஸ்கைப் அதன் சேவைகளை நிறுத்த முடிவு செய்தது.

    மைக்ரோசாப்ட் நிறுவனம், மே 5 ஆம் தேதி முதல் ஸ்கைப் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    மைக்ரோசாப்ட் Office 365 இன் ஒரு பகுதியாக இருக்கும் Microsoft Teams-ஐ நோக்கி பயனர்களை திருப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. Teams, செய்தி அனுப்புதல் மற்றும் வீடியோ அழைப்புகள் போன்ற பிற சேவைகளுக்கான முதன்மை தளமாக உள்ளது.

    Skype-லிருந்து Teams-க்கு மாறுவதற்கு மைக்ரோசாப்ட் பயனர்களுக்கு அவகாசம் அளித்துள்ளது. மைக்ரோசாப்ட் chat ஹிஸ்டரி மற்றும் தொடர்புகளை டீம்ஸ்க்கு தடையின்றி மாற்றுவதாகவும் உறுதியளித்துள்ளது. ஸ்கைப்பை விட டீம்ஸ் மிகவும் நவீனமான, ஒருங்கிணைந்த அனுபவத்தை வழங்குகிறது என்பதை மைக்ரோசாப்ட் தெளிவுபடுத்தியுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்.
    • மத்திய அரசின் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

    ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற முக்கிய நடவடிக்கைகளுக்கு பொது வைஃபை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அரசு எச்சரித்துள்ளது.

    விமான நிலையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்படுகிறது. ஆனால் அது உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்.

    இந்தப் பொது வைஃபை நெட்வொர்க்குகளில் பல முறையாகப் பாதுகாக்கப்படவில்லை, இதனால் அவை ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு எளிதான இலக்காகின்றன.

    இந்நிலையில் மத்திய அரசின் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதில், பொது வைஃபை நெட்வொர்க்குகள் மூலம் வங்கி அல்லது ஆன்லைன் ஷாப்பிங் போன்ற முக்கியமான செயல்களைச் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சைபர் குற்றவாளிகள் பொது வைஃபையில் பாதுகாப்பற்ற இணைப்புகளை எளிதில் ஹேக் செய்து விடுகின்றனர். இதனால் பயனர்கள், தரவு திருட்டு, நிதி இழப்பு மோசடிக்கு ஆளாக நேரிடும்.

    இதுபோன்ற நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்படும்போது பரிவர்த்தனைகள் செய்வதையோ அல்லது தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுவதையோ தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    ×