என் மலர்

    அறிந்து கொள்ளுங்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த மாடலில் 8.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய ஐபேட் மினி மாடல் 3 மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மினி மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய ஐபேட் மினி மாடலில் ஏ17 ப்ரோ சிப்செட், ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் 8.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐபேட் மினி மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த டேப்லெட் மாடல் ஐபேட் ஓ.எஸ். 18 கொண்டிருக்கிறது. இத்துடன் 12MP பிரைமரி கேமரா, ட்ரூ டோன் ஃபிளாஷ், 12MP அல்ட்ரா வைடு செல்பி கேமரா, ரெட்டினா ஃபிளாஷ், டூயல் மைக்ரோபோன்கள், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

     


    டச் ஐடி சென்சார் கொண்டிருக்கும் புதிய ஐபேட் மினி மாடலில் கனெக்டிவிட்டிக்கு 5ஜி, ஜிகாபிட்-கிளாஸ் எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி 3 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 19.3 வாட் பேட்டரி வங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐபேட் மினி மாடல் ஸ்டார்லைட், ஸ்பேஸ் கிரே, புளூ மற்றும் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 128 ஜிபி விலை ரூ. 49 ஆயிரத்து 900 என்றும் 128 ஜிபி வைபை + செல்லுலார் மாடல் விலை ரூ. 64 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் 256 ஜிபி மெமரி மாடல் விலை 59 ஆயிரத்து 900 என்றும் வைபை + செல்லுலார் மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 512 ஜிபி வைபை 79 ஆயிரத்து 900 என்றும் வைபை + செல்லுலார் மாடல் விலை ரூ. 94 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேம்பட்ட ஐபேட் மினி மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை அக்டோபர் 23 ஆம் தேதி துவங்குகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குறிப்பிட்ட நிமிடங்களுக்கு சர்வதேச அழைப்புகளை பேச அனுமதிக்கிறது.
    • இவற்றின் வேலிடிட்டி ரீசார்ஜ் செய்ததில் இருந்து ஏழு நாட்கள் ஆகும்.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. சமீபத்தில் தனது ரீசார்ஜ் கட்டணங்கள் விலையை உயர்த்திய ஜியோ நிறுவனம் இடையில், புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக சர்வதேச (ISD) ரீசார்ஜ் பேக்குகளை அறிவித்துள்ளது.

    ஜியோ நிறுவனத்தின் புதிய ISD ரீசார்ஜ் சலுகைகளின் விலை ரூ. 39 முதல் துவங்கி அதிகபட்சம் ரூ. 99 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐஎஸ்டி மினிட் பேக் என அழைக்கப்படும் புதிய சலுகைகள் பயனர்களுக்கு எவ்வித கூடுதல் பலன்களும் இன்றி குறிப்பிட்ட நிமிடங்களுக்கு சர்வதேச அழைப்புகளை பேச அனுமதிக்கிறது.

     


    குறுகிய காலக்கட்டத்திற்கு சர்வதேச அழைப்புகளை மேற்கொள்வோருக்காக இந்த ரீசார்ஜ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ. 39 விலையில் கிடைக்கும் சலுகையில் 30 நிமிடங்கள் வரை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் உள்ள எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதே போன்று வங்கதேசத்திற்கு ரூ. 49 விலையில், 20 நிமிடங்கள் வரை பேசலாம்.

    சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங் காங் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ள 15 நிமிடங்களுக்கு ரூ. 49 செலுத்த வேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு பேச 15 நிமிடங்களுக்கு ரூ. 69 செலுத்த வேண்டும்.

    பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு அழைப்பு மேற்கொள்ள 10 நிமிடங்களுக்கு 79 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான் மற்றும் பூடானுக்கு 15 நிமிடங்கள் பேச ரூ. 89 ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரூ. 99 ரீசார்ஜ் செய்யும் போது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, துருக்கி, குவைத் மற்றும் பஹ்ரைனுக்கு பத்து நிமிடங்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

    இந்த பிரீபெயிட் ரீசார்ஜ்கள் ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இவற்றின் வேலிடிட்டி ரீசார்ஜ் செய்ததில் இருந்து ஏழு நாட்கள் ஆகும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் அசெம்பில் செய்யப்பட இருந்தன.
    • இந்த தேவையில் 15 சதவீதத்தை பூர்த்தி செய்யவே போராடுகிறது

    தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள டாடா உற்பத்தி ஆலையில், சில தினங்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அந்த ஆலையில் உற்பத்தி பணிகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் வைத்து தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் அசெம்பில் செய்யப்பட இருந்தன.

    இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் சம்பந்தப்பட்ட பாகங்களை சீனா அல்லது வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் ஆலையில் இருந்து ஏற்பாடு செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட ஆலையில் டாடா நிறுவனம் ஐபோனின் பேக் பேனல்கள் மற்றும் இதர பாகங்களை உற்பத்தி செய்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு வழங்க இருந்தது.

    ஹாங்காங்கை சேர்ந்த கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் நிறுவனம் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறும் போது, "அக்டோபர் இறுதியில் இருந்து நவம்பர் மாத தொடக்கம் வரையிலான காலக்கட்டம் இந்திய பண்டிகைக் காலம் என்பதால் ஐபோன் 14 மற்றும் 15 மாடல்களின் உள்ளூர் விற்பனை 1.5 மில்லியன் யூனிட்கள் என்று கணிக்கப்படுகிறது. எனினும், ஆப்பிள் இந்த தேவையில் 15 சதவீதத்தை பூர்த்தி செய்யவே போராடுகிறது," என தெரிவித்துள்ளது.

    உள்ளூர் விற்பனையைத் தவிர, இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் ஐபோன்களை ஏற்றுமதி செய்கிறது. மேலும் சில பகுதிகள் மொத்தமாக $250 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ளவை என கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து டாடா நிறுவனம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிளே ஸ்டேஷன் நெட்வொர்க் இன்று உலகளவில் முடங்கி போனது.
    • சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4, 5 மற்றும் அதற்கும் முன் வந்த மாடல்களில் இதனால் பாதிப்பு ஏற்பட்டது.

    பிளே ஸ்டேஷன் நெட்வொர்க் இன்று உலகளவில் முடங்கி போனது. சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4, 5 மற்றும் அதற்கும் முன் வந்த மாடல்களில் இதனால் பாதிப்பு ஏற்பட்டது. நெட்வொர்க் முடங்கிய காரணத்தால் உலகளவில் உள்ள மக்களால் பிளே ஸ்டேஷனில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.

    சோனியின் பிளே ஸ்டேஷன் நெட்வொர்க் முடங்கியதை அடுத்து, பலரும் அவர்களது இணைய பக்கத்தில் பதிவிட்டனர். இதற்கு பதிலளித்த சோனி நிறுவனம், "நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் நீங்கள் கேம், ஆப்ஸ் போன்றவற்றை பிளே ஸ்டேஷனில் இயக்குவதில் சிக்கல் ஏற்படலாம்."

    "எங்களது தொழில்நுட்ப குழு கூடிய விரைவில் இதை சரி செய்வதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன," என கூறியுள்ளது. இதனால் பிளே ஸ்டேஷன் உபயோகிக்கும் பயனாளிகள் அதிருப்தியில் உள்ளனர்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீடியோ எடிட் செய்வதை எளிமையாக மாற்றும்.
    • ஏஐ சார்ந்த பிரீசெட் அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    கூகுள் நிறுவனம் தனது கூகுள் போட்டோஸ் செயலியின் வீடியோ எடிட்டரில் புதிய சேவைகளை சேர்த்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. புதிய சேவைகள் வீடியோ எடிட் செய்வதை எளிமையாகவும், அதிக பயனுள்ளதாகவும் மாற்றும்.

    இதுவரை இல்லாத அளவுக்கு வீடியோ எடிட் செய்வதை எளிமையாக்கவே புதிய வசதிகள் வழங்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. புது அப்டேட் மூலம், கூகுள் போட்டோஸ் செயலியில் அப்டேட்டெட் ட்ரிம் டூல் (Updated Trim Tool), ஆட்டோ என்ஹன்ஸ் பட்டன் (Auto Enhance Button), ஸ்பீடு (Speed Tool) போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    இதுதவிர ஏஐ சார்ந்த பிரீசெட் அம்சங்கள் வழங்கப்படுகிறது. இவை எடிட்டிங்கில் லைட்டிங் அட்ஜஸ்ட் செய்வது, ஸ்பீடு கண்ட்ரோல், வீடியோக்களை மேம்படுத்தும் எஃபெக்ட்கள் வழங்குகின்றன. புதிய அம்சங்கள் அடங்கிய அப்டேட் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இந்த அம்சங்கள் அனைவருக்கும் வழங்கப்படும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று மதியம் 12.15 மணி முதல் ஜியோ சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.
    • 16 சதவீதம் பேருக்கு ஜியோஃபைபர் நெட்வொர்க் சரியாக இயங்கவில்லை.

    இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் முடங்கியுள்ளன. நாட்டின் சில பகுதிகளில் மட்டும் ஜியோ சேவைகள் இயங்குவதாக கூறப்படும் நிலையில், மும்பையில் ஜியோ சேவைகள் இயங்கவில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக டவுன் டிடெக்டர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஜியோ நெட்வொர்க் கோளாறு காரணமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் 12.15 மணி முதல் ஜியோ சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.

    கிட்டத்தட்ட 65 சதவீதம் பேருக்கு சிக்னல் கிடைக்கவில்லை என்று பிரச்சினையும், 19 சதவீதம் பேருக்கு மொபைல் இண்டர்நெட் பயன்படுத்த முடியாத சூழலும் உருவாகி இருக்கிறது. மேலும் 16 சதவீதம் பேருக்கு ஜியோஃபைபர் நெட்வொர்க் சரியாக இயங்கவில்லை.

    நெட்வொர்க் கோளாறு தவிர்த்து மைஜியோ செயலி கூட இயங்கவில்லை என்று சிலர் குற்றம்சாட்டினர். நெட்வொர்க் கோளாறு தொடர்பாக ஜியோ சார்பில் இதுவரை எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐபோன் 16 பிளஸ் மாடலை வாங்க அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
    • இந்த ஆண்டு சுமார் 48 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் தனது முற்றிலும் புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. அறிமுகத்தோடு புதிய ஐபோன் மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவுகளின் படி ஐபோன் 16 பிளஸ் மாடலை வாங்க அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

    ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலை வாங்குவதற்கான முன்பதிவுகள் குறைவாகவே இருந்துள்ளன. ஆப்பிள் நிறுவனம் ப்ரோ சீரிஸ் விற்பனை அதிகளவில் இருக்கும் என்ற கணிப்பில் அதிவேக டெலிவரி மற்றும் அதிக யூனிட்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

     


    இது குறித்து ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஐபோன 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல்கள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, அதிக யூனிட்கள் முன்பதிவாகி உள்ளன. முன்பதிவு துவங்கிய முதல் ஒருவார காலத்தில் ஐபோன் 16 வாங்க 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

    பிளஸ் மாடல்களை வாங்க கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 48 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 16 சதவீதம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 12.7 சதவீதம் குறைவு ஆகும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆண்ட்ராய்டு ஓ.எஸ். 12, 12 எல், 13 மற்றும் 14 ஆகியவற்றை பயன்படுத்துபவர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
    • கட்டமைப்பில் உள்ள குறைபாடு காரணமாக ஆண்ட்ராய்டு இந்த தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பு என எச்சரிக்கை.

    ஆண்ட்ராய்டு ஓ.எஸ். 12, 12 எல், 13 மற்றும் 14 ஆகியவற்றை பயன்படுத்துபவர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரகால பதில் குழு (Indian Computer Emergency Response Team) உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பயனாளர்களின் முக்கியமான தகவல்களை பெறுவதற்கு இந்த தாக்குதலை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. கட்டமைப்பு, சிஸ்டம், கூகுள் ப்ளே சிஸ்டம் அப்டேட்ஸ் ஆகியவற்றில் உள்ள குறைபாடு காரணமாக இந்த தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஒரிஜினல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் பொருத்தமான அப்டேட்ஸ்களை புதுப்பிக்க கேட்டுக்கொண்டுள்ளது.

    கிடைக்கும் பாதுகாப்பு அப்டேட்ஸ்களை இன்ஸ்டால் செய்ய அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது. உங்களுக்கு இந்த பாதுகாப்பு அப்டேட்ஸ் கிடைக்கவில்லை என்றால், பயனர்கள் நம்பிக்கையில்லா செயலிகள், தெரியாத இணையதளம், சந்தேகத்திற்குரிய லிங்க்ஸ் ஆகிவற்றைய தவிர்க்க ஆலோசனை வழங்கியுள்ளது. அப்டேட்ஸ் செய்துவிட்டால் பயனர்கள் அவர்களுடைய சாதனங்களை கடுமையான பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக அளவில் முன்னணி வலைதளங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் டிரெக்கிங் வலைதளமே டவுன்-டிடெக்டர்.
    • அமெரிக்க நேரப்படி காலை 11.01 மணியளவில் இந்த முடக்கம் ஆனது ஏற்பட்டது.

    சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் எக்ஸ் [ட்விட்டர்] தளம் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சற்று நேரத்திற்கு முடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது. இதனை டவுன்-டிடெக்டர் என்ற இணையதளம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. உலக அளவில் முன்னணி வலைதளங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் டிரெக்கிங் வலைதளமே டவுன்-டிடெக்டர்.

    திடீரென எக்ஸ் தளம் வேலை செய்யாமல் முடங்கிப்போக என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதற்கிடையே எக்ஸ் தளத்தில் என்ன பிரச்சனை என்ற குழப்பம் பலரிடையே ஏற்பட்டது. இதுகுறித்து எக்ஸ் நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அமெரிக்க நேரப்படி காலை 11.01 மணியளவில் இந்த முடக்கம் ஆனது ஏற்பட்டது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய நார்டு பட்ஸ் 3 மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படுகிறது.
    • இது பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது முற்றிலும் புதிய இயர்பட்ஸ்- நார்டு பட்ஸ் 3 மாடல் இந்த மாதம் 17 ஆம் தேதி அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த இயர்பட்ஸ் விவரங்கள் டீசர்களாக வெளியிடப்பட்டு வந்தன. தற்போது இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய நார்டு பட்ஸ் 3 மாடலில் 32db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, பேஸ்வேஸ் 2.0 தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த இயர்பட்ஸ் வாட்டர் டிராப் வடிவ ஸ்டெம் கொண்டிருக்கும் என்றும் இவை மிக குறைந்த எடை மற்றும் மென்மையான வளைவுகளை கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

     


    முன்னதாக நார்ட் பட்ஸ் 3 ப்ரோ மாடல் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இது பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் ஓவல் வடிவ கேஸ், அதன் முன்புறம் ஒன்பிளஸ் லோகோ மற்றும் எல்இடி லைட் இடம்பெற்று இருக்கிறது.

    புதிய நார்ட் பட்ஸ் 3 மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ப்ளூடூத் 5.4, டைனமிக் டிரைவர்கள், பேஸ் வேவ் 2.0, நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் இருவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ.2,048 கோடி ரூபாய் பரிவர்த்தனை முடிவடைந்துள்ளது
    • book now, sell anytime அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக திகழும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதித்துள்ளது.

    சொமேட்டோவின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் Ltd நிறுவனம் பிரபல ஆன்லைன் பணப்பரிவார்த்தை செயலியான பே.டி.எம். இல் உள்ள சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டிக்கெட் முன்பதிவு பிசினஸ் கட்டமைப்பை ரூ.2,048 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த பரிவர்த்தனை முடிவடைந்து வரும் செப்டெம்பர் 30 முதல் சொமேட்டோ செயலியின் மூலம் டிக்கெட் புக்கிங் சேவைகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சொமேட்டோ செயலியில் அறிமுகமாகும் book now, sell anytime அம்சத்தின் மூலம் சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

    சொமேட்டோ இந்த கட்டமைப்பை வாங்கியிருந்தாலும், பயனர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அடுத்த 12 மாதங்களுக்கு பே.டி.எம். செயலியிலும் டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்று ஒன் 97 கம்யூனிகேஷன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் ஆப்பிளின் நேரடி பணியாளர்களின் எண்ணிக்கை மார்ச் 2025-க்குள் 2,00,000-ஐ எட்டும்.
    • எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒவ்வொரு நேரடி வேலையும் மூன்று மறைமுக வேலைகளை உருவாக்குகிறது.

    2025-ம் நிதியாண்டின் இறுதிக்குள் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 6 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இருக்கிறது. ஐபோன் தயாரிப்பாளரின் அதிகரித்து வரும் செயல்பாடுகள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன என்று அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆப்பிள் நிறுவனம் பகிர்ந்துள்ள மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் ஆப்பிளின் நேரடி பணியாளர்களின் எண்ணிக்கை மார்ச் 2025-க்குள் 2,00,000-ஐ எட்டும். இந்த பணிகளில் 70 சதவீதம் பெண்களே உள்ளனர்.

    நிறுவனத்தின் மூன்று பெரிய ஒப்பந்த உற்பத்தியாளர்களான ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகியவை ஏற்கனவே 80,872 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளன.

    கூடுதலாக டாடா குரூப் (Tata Group), சால்காம்ப் (Salcomp), மதர்ஸ்சன் (Motherson), பாக்ஸ்லிங்க் (Foxlink), சன்வோடா (Sunwoda), ஏடிஎல் (ATL) மற்றும் ஜபில் (Jabil) போன்ற சப்ளையர்கள் கூட்டாக 84,000 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளனர்.

    2020-ம் ஆண்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, ஆப்பிள் மற்றும் அதன் கூட்டாளர்கள் சுமார் 1,65,000 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளனர் என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

    PLI திட்டம், ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகளில் 2,00,000 வேலைகளை இலக்காகக் கொண்டது. இந்த இலக்கை நான்கே ஆண்டுகளில் எட்டியுள்ளது. இது இந்தியாவில் வேலை உருவாக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்கை பிரதிபலிக்கிறது.

    எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒவ்வொரு நேரடி வேலையும் மூன்று மறைமுக வேலைகளை உருவாக்குகிறது என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இது ஆப்பிளின் விரிவாக்கம் 2025 நிதியாண்டு இறுதிக்குள் 5,00,000 முதல் 6,00,000 மொத்த வேலைகளை உருவாக்கக்கூடும் என்று கூறுகிறது.

    ×