என் மலர்

    அமெரிக்கா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது முட்டாள்தனம்.
    • பிணைக்கைதிகளை மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது.

    ஐ.நா. ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். மேலும், பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்திய நேரப்படி இன்று இரவு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேச அழைக்கப்பட்டார். அப்போது, அரங்கத்தில் இருந்த பிரதிநிதிகள் எழுந்து வெளியேறினர். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர்.

    என்றாலும், நேதன்யாகு வெறிச்சோடிய ஐ.நா. சபை பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது முட்டாள்தனம். பிணைக்கைதிகளை மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது. ஹமாஸை அழிக்கும் வரை காசாவில் போர் தொடரும். காசாவில் பஞ்சத்திற்கு ஹமாஸ் உணவை திருடுவதே காரணம்.

    உலகின் பெரும்பகுதியினர் அக்டோபர் 7ஆம் தேதியை நினைவு கொள்வதில்லை. ஆனால் நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதைவிட, தீமையை ஏற்றுக் கொள்கின்றனர். பொது வெளியில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் பல தலைவர்கள், ரகசியமாக (மூடிய அறைக்குள்) நன்றி தெரிவிக்கின்றனர்.

    பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் சில நாடுகளின் முடிவு, அப்பாவி யூத மக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும். எங்களுடைய தொண்டையில் ஒரு பயங்கரவாத அரசை திணிக்க அனுமதிக்கமாட்டோம்.

    இவ்வாறு நேதன்யாகு தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.
    • நியூ யார்க்கில் நடக்கும் 80வது ஐநா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார்.

    பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தை இஸ்ரேல் அரசு தொடங்கியுள்ளது

    இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.

    இதற்கிடையே பாலஸ்தீனம் என்று ஒரு நாடு கிடையாது என்ற இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தொடர்ந்து கூறி வருகிறார்.

    இந்நிலையில் மேற்கு கரையை இஸ்ரேல் இணைத்துக்கொள்ளுமா? என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிலளித்துள்ளார்.

    வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன். இஸ்ரேல் இந்த நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கமுடியாது. இதுவரை நடந்ததுபோதும். இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.

    நியூ யார்க்கில் நடக்கும் 80வது ஐநா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் டிரம்ப் -இன் கருத்து வந்துள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசரித்துள்ளார்.
    • 2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.

    80வது ஐ.நா. பொதுச்சபை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூடியது. கடந்த 21ஆம் தேதி தொடங்கிய கூட்டம்  29 சாம் தேதி வரை நடைபெறுகிறது.

    இதற்கிடையே காசா பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்வர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் ஒருவர் ஆவார்.

    இந்த சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசிர்த்துள்ளார்.

    இதன்போது இருநாட்டு உறவுகள்,வருங்கால திட்டங்கள் குருத்து பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. சந்திப்புக்கு முன் அவர்கள் இருவரையும் டிரம்ப் ஒரு மணி நேரம் காக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. 

    2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.

    50 சதவீத வரி உள்ளிட்ட நடவ்டிக்கைகளால் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் டிரம்ப் அண்மை காலங்களாக பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்புக்கு பின், இருவரையும் சிறந்த மனிதர்கள் என டிரம்ப் விவரித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வங்கதேசம்- இந்தியா இடையிலான உறவில் விரிசல் உள்ளது.
    • கடந்த வருடம் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை.

    வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியில் இருந்து விலகி இந்தியாவுக்கு தப்பி வந்தார். அதன்பிறகு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு பொதுத் தேர்தலை நடத்த ஆயத்தமாகி வருகிறது.

    ஐ.நா. பொதுச்சபையில் கலந்து கொள்வதற்கான அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள முகமது யூனுஸ் கூறியதாவது:-

    வங்கதேசம்- இந்தியா இடையிலான உறவில் விரிசல் உள்ளது. ஏனென்றால், ஷேக் ஹசீனாவை பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்ற முக்கிய காரணமாக அமைந்த கடந்த வருடம் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை.

    இந்திய மீடியாக்கள் போலி தகவல்களை பரப்பின. இது பதட்டத்தை மேலும் மோசமடைய வழிவகுத்தது. இந்தியாவில் இருந்து ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வந்தன. அந்த வீடியோக்களில் மாணவர்களின் போராட்டத்தை இஸ்லாமிய இயக்கம் எனக் கூறின.

    பிரச்சனையை உருவாக்கிய ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது இந்தியா- வங்கதேசம் இடையே பிரச்சனையை ஏற்படுத்தியது.

    இவ்வாறு முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளது.
    • அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.

    ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.

    ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமெரிக்காவில் இன்று டிரம்பை சந்தித்து பேசவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் போது, டிரம்ப் மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பிலும் ஷெரீப் கலந்து கொண்டார்.

    முன்னதாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி, ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் இந்தாண்டு 2 முறை அமெரிக்காவிற்கு சென்று அரசின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்

    இதற்கிடையில், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதற்காக டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு வழங்கவேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் டிக் டாக் செயலியை நிர்வகித்து வருகிறது.
    • டிக் டாக் செயலியின் பெரும்பாலான கட்டுப்பாட்டை அமெரிக்கா கையகப்படுத்த முடிவு

    டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.

    சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் இச்செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிக்கு ஜோ பைடன் அரசு தடை விதித்தது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி 19 முதல் அமலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஆனால் டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட கெடுவை தற்போது வரை அதிபர் டிரம்ப் தொடர்ந்து நீட்டிப்பு செய்து வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் டிக் டாக் செயலி மீண்டும் செயல்படும் ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். டிக் டாக் செயலியின் பெரும்பாலான கட்டுப்பாட்டை அமெரிக்கா கையகப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    17 கோடி அமெரிக்க பயனர்களைக் கொண்ட டிக்டாக், கடந்த ஆண்டு தேர்தலில் வெற்றிபெற உதவியதாக டிரம்ப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜார்ஜியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை புதினின் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றும் வாய்ப்பை மேற்குலகம் ஏற்கனவே தவறவிட்டுவிட்டது.
    • ஆயிரக்காணக்கான உக்ரைன் குழந்தைகளை ரஷியா கடத்திச் சென்றுள்ளது.

    80வது ஐநா பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடந்து வருகிறது.

    நேற்றைய கூட்டத்தில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "புதினை இப்போது தடுத்து நிறுத்தவில்லை என்றால், உக்ரைனின் எல்லைகளுக்கு அப்பால் ஐரோப்பாவுக்கும் போரை விரிவுபடுத்துவார்.

    ரஷிய டிரோன்கள் மற்றும் ஜெட் விமானங்கள் நேட்டோ வான்வெளியில் அத்துமீறி நுழைகின்றன.

    ரஷியாவை இப்போதே தடுத்துநிறுத்த ஐ. நா கட்டாயம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

    நேச நாடுகள் ஒன்றிணைந்து உக்ரைனுக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே ரஷியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து பிற நாடுகளைக் காப்பாற்ற முடியும்.

    ஜார்ஜியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை புதினின் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றும் வாய்ப்பை மேற்குலகம் ஏற்கனவே தவறவிட்டுவிட்டது. அதேபோல ஐரோப்பிய நாடுகள் மோல்டோவாவையும் ரஷியாவிடம் இழந்துவிடக் கூடாது.

    ஆயிரக்காணக்கான உக்ரைன் குழந்தைகளை ரஷியா கடத்திச் சென்றுள்ளது. அவர்களில் சிலரை மட்டுமே மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம்.

    அவர்கள் அனைவரையும் மீட்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்? அவர்களை நாம் மீட்பதற்குள் தங்கள் குழந்தைப் பருவத்தை அவர்கள் கடந்துவிடுவர் போலத் தெரிகிறது.

    தற்போது உலகின் ராணுவத் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் மனித வரலாற்றிலேயே மிக அழிவுகரமான ஆயுதப் போட்டியில் வாழ்கிறோம். "யார் பிழைக்கிறார்கள் என்பதை ஆயுதங்களே தீர்மானிக்கின்றன.

    டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்ற ஆயுதங்கள், பாரம்பரியப் போர்களை விட அதிக ஆபத்தை உருவாக்குகின்றன.

    ராணுவ ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்துவது குறித்து சர்வதேச விதிகள் தேவை.

    சர்வதேச அமைப்புகள் உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்குவதில் மிகவும் பலவீனமாக செயல்படுகின்றன. நேட்டோவில் இருப்பது மட்டுமே பாதுகாப்பைக் கொடுக்காது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமெரிக்கக் கனவுடன் வாழும் இந்தியர்கள் மத்தியில் இது பொது விவாதமாக மாறியுள்ளது.
    • நெட்டிசன்கள் பலரும் இந்தப் பதிவைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

    H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.

    இந்நிலையில், H-1B விசா வைத்திருக்கும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு Green Card வைத்திருக்கும் நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா என்ற இந்திய பெண்ணின் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

    பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பெண், தனது போஸ்டில் விசா தொடர்பான மன அழுத்தத்தையும், எதிர்கால அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கேள்வி சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    அமெரிக்கக் கனவுடன் வாழும் இந்தியர்கள் மத்தியில் இது பொது விவாதமாக மாறியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்தப் பதிவைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

    விசா கட்டண உயர்வு போன்ற சமீபத்திய சம்பவங்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவே இது என பலர் கருத்து தெரிவித்தனர்.

    அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்பும் பலர், விசா மற்றும் கிரீன் கார்டு தொடர்பான பிரச்சனைகளால் பாதிப்பு அடைகிறார்கள் என்பதையும் இப்பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக பணக்காரர்களில் முதல் இடத்தில உள்ளவர் எலான் மஸ்க்.
    • எலான் மஸ்க்கிற்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையே வார்த்தை மோதல் நடைபெற்றது.

    உலக பணக்காரர்களில் முதல் இடத்தில உள்ளவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களையும் மற்றும் எக்ஸ் வலைத்தளத்தையும் நடத்தி வருகிறார்.

    அண்மையில் எலான் மஸ்க்கிற்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையே நடந்த வார்த்தை மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இந்நிலையில், எலான் மஸ்க்கின் தந்தை எரால் மஸ்க் (79) மீது ஐந்து குழந்தைகள் மற்றும் வளர்ப்பு குழந்தைகள் சிலருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அவை முட்டாள்தனமானவை, ஆதாரமற்றமவை,போலி என்று எரால் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் சுதந்திர உலகின் பெரும் பகுதி அழிகிறது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நேற்று(செப்டம்பர் 23 ) தொடங்கியது. வரும் 29 ஆம் தேதி வரை கூட்டம் நடைபெற உள்ளது.   

    நேற்றைய கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 1 மணி நேரம் உரையாற்றினார்.

    தனது உரையில், 'காலநிலை மாற்றம்' என்பது உலகில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய மோசடி.

    கார்பன் தடம் (carbon footprints) என்பது தீய எண்ணம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஏமாற்று வேலை" என்று குற்றம் சாட்டினார்.

    மேலும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பசுமை எரிசக்தி கொள்கைகள் ஐரோப்பாவை அழித்து வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

    "சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்கிறது.

    அவர்களை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் சுதந்திர உலகின் பெரும் பகுதி அழிகிறது.

    திறந்த எல்லைகள் கொண்ட கொள்கைகள் ஐரோப்பாவை அழிவின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது. அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை இழந்து வருகின்றனர்" என்று டிரம்ப் தெரிவித்தார்.

    தொடர்ந்து ஐநா அமைப்பு குறித்து விமரிசத்த டிரம்ப், "ஐ.நா.வின் நோக்கம் என்ன?. ஐநா, வெறும் கடுமையான வார்த்தைகளை கொண்ட கடிதங்களை மட்டுமே எழுதுகிறது. வெறுமையான வார்த்தைகள் போரைத் தீர்க்காது" என்று சாடினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 23 மாதங்களாக, இஸ்ரேல் ஒவ்வொரு மணிநேரமும் ஒரு குழந்தையைக் கொன்றுள்ளது.
    • இரண்டு, மூன்று வயது குழந்தைகள் மயக்க மருந்து இல்லாமல் தங்கள் உறுப்புகளை இழக்கின்றனர்.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொதுச் சபையில் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆவேசமாக உரையாற்றினார்.

    அவர் பேசியதாவது, "நம்மில் ஒவ்வொருவரின் கண் முன்னேயும், காசாவில் 700 நாட்களுக்கும் மேலாக இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 23 மாதங்களாக, இஸ்ரேல் ஒவ்வொரு மணிநேரமும் ஒரு குழந்தையைக் கொன்றுள்ளது. இவை வெறும் எண்கள் அல்ல; ஒவ்வொன்றும் ஒரு அப்பாவியான உயிர்.

    காசாவில் உள்ள மனிதாபிமான பேரழிவு நவீன வரலாற்றில் மிகப்பெரியது. இரண்டு, மூன்று வயது குழந்தைகள் மயக்க மருந்து இல்லாமல் குண்டுவெடிப்புகளால் தங்கள் உறுப்புகளை இழக்கின்றனர்.

    குழந்தைகள் பசி மற்றும் மருந்து பற்றாக்குறையால் இறக்கும் உலகில் அமைதி இருக்க முடியுமா?. கடந்த நூற்றாண்டில் கூட மனிதகுலம் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டதில்லை.

    இது மனிதகுலத்தின் மிக மோசமான நிலை. காசாவில் நடப்பது போர் இல்லை. இது ஒரு படையெடுப்பு, ஒரு இனப்படுகொலை, ஒரு மிகப்பெரிய படுகொலை கொள்கை" என்று தெரிவித்தார்.

    பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்த எர்டோகன் மற்ற நாடுகளும் தாமதமின்றி செயல்பட வலியுறுத்தினார்.

    காசாவில் உடனடியாக போர்நிறுத்தம், தடையற்ற மனிதாபிமான அணுகல் மற்றும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றை எர்டோகன் கோரினார்.

    மேலும் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை காசா மற்றும் மேற்குக் கரைக்கு அப்பால் சிரியா, ஈரான், யேமன், லெபனான் மற்றும் கத்தாருக்கு விரிவுபடுத்தி, பரந்த பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக எர்டோகன் குற்றம்சாட்டினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது.
    • சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் சுதந்திர உலகின் பெரும் பகுதி அழிகிறது

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலகில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது.

    தொடர்ந்து மோதலைத் தூண்டுவது போல, இந்த அமைப்பில் சிலர் ஒருதலைப்பட்சமாக பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க முற்படுகிறார்கள்.

    பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அட்டூழியங்களுக்கு கிடைக்கும் வெகுமதியாகும். இது அக்டோபர் 7 உட்பட இந்த பயங்கரமான அட்டூழியங்களுக்கான வெகுமதியாக இருக்கும்.

    அமைதியை விரும்புபவர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய குரல் கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அண்மையில் அறிவித்த நிலையில் டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார். 

    தொடர்ந்து சட்டவிரோத குடியேற்றம் குறித்து பேசிய டிரம்ப்,சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்கிறது.

    அவர்களை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் சுதந்திர உலகின் பெரும் பகுதி அழிகிறது" என்று தெரிவித்தார். 

    ×