என் மலர்

    அமெரிக்கா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கும் கூட்டணியில் இணையுமாறு டிரம்ப் வலியுறுத்தினார்.
    • போர்க் கப்பல்களை அனுப்பும் திட்டம் இல்லை என ஜப்பான், ஆஸ்திரேலியா அறிவிப்பு.

    மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது. இதனால் அதன் வழியாக கச்சா எண்ணை கொண்டு செல்லும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன.

    இதற்கிடையே கச்சா எண்ணை தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களது போர்க்கப்பலை அங்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து உள்பட 7 நாடுகள் ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கும் கூட்டணியில் இணையுமாறு வலியுறுத்தினார். இந்த நாடுகள் தங்களது போர்க் கப்பல்களை அனுப்பும் என்று நம்பிக்கை தெரிவித்தார். சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இதை நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    போர்க்கப்பலை அனுப்புவதாக வெளியான தகவலை பிரான்ஸ் மறுத்து உள்ளது. இது குறித்து வெளியுறவுதுறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    எங்கள் விமானம் தாங்கி கப்பலும், அதைச் சார்ந்த தாக்குதல் படைக் குழுவும் கிழக்கு மத்தியத ரைக் கடலிலேயே தொடர்ந்து நிலைத்து இருக்கும். தற்போதைய சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எங்களின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தற்காப்பு சார்ந்ததே ஆகும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும் போது, 'மோதல் போக்கு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.

    டிரம்ப்பின் வேண்டு கோளை சீனா ஏற்றுக் கொண்டு செயல்படுமா என்பதை அவர் திட்ட வட்டமாகக் குறிப்பிடவில்லை. ஆனாலும் நிலையான மற்றும் தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

    மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினருடனான பேச்சுவார்த்தைகளை சீனா தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

    இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும் போது, "நாங்கள் முன்பே தெரிவித்தது போல, இந்த பகுதியில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எங்கள் நட்பு நாடுகளுடனும் கூட்டாளிகளுடனும் பல்வேறு வழிமுறைகள் குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம்" என்றார்.

    டிரம்ப்பின் வேண்டுகோளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, ஜப்பான் உடனடியாகத் தனது கடற்படைக் கப்பல் களை அனுப்பாது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும் போது, 'ஜப்பான் தனது நடவடிக்கைகளைத் தானே தீர்மானித்துக்கொள்கிறது; சுதந்திரமான முடிவுகளை எடுப்பதே எங்களின் அடிப்படை கொள்கையாகும்' என்றார்.

    தென் கொரியாவும் டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு இதுவரை எந்தப் பதிலையும் வெளியிட வில்லை. இந்த நிலையில் நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்தார். ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற நேட்டோ உதவா விட்டால் மிகவும் மோசமான எதிர்காலம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

    ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா எவ்வாறு உதவியதோ அதுபோல் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்திலும் ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும். ஐரோப்பிய நாடுகள் உதவுவதை நான் எதிர்பார்க்கிறேன்.

    எந்த பதிலும் இல்லை என்றால் அல்லது எதிர்மறையான பதிலாக இருந்தால் அது நேட்டோவின் எதிர் காலத்திற்கு மிகவும் மோசமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். உச்சி மாநாட்டுக்கு முன்பு இதை தெரிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம்.

    சீனா தனது எண்ணெய் தேவையில் சுமார் 90 சதவீதத்தை இந்த நீரிணை வழியாக பெறுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா மிக குறைந்த அளவே பெறுகிறது. இதே போல் அமெரிக்காவை விட பல ஐரோப்பிய நாடுகளும் வளைகுடாவில் இருந்து வரும் எண்ணையை அதிகமாக நம்பி உள்ளன. இந்த மோசமான விளைவுகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்" என்று டிரம்ப் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆஸ்கார் விருதை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்குவது இது இரண்டாவது முறையாகும்.

    திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன.

    98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு ஆஸ்கார் நிகழ்ச்சியை இந்தியாவை சேர்ந்த பான் உலக நட்சத்திர நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கி வருகிறார். ஹாலிவுட் பிரபலங்களான ராபர்ட் டவுனி ஜூனியர், வில் ஆர்னெட் ஆகியோருடன் இணைந்து பிரியங்கா மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்

    ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் வெள்ளை நிற உடையில் நடிகை பிரியங்கா சோப்ரா வந்தது அனைவரையும் கவர்ந்தது.

    ஆஸ்கார் விருதை பிரியங்கா தேர்வு தொகுத்து வழங்குவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டும் அவர் இந்த கௌரவத்தைப் பெற்றிருந்தார்.

    பிரியங்கா சோப்ரா நடித்த The Bluff என்ற ஹாலிவுட் திரைப்படம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதற்கிடையே ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் 'வாரணாசி' திரைப்படத்தில் பிரியங்கா நடித்து வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • பெலாரஸ் வீராங்கனை சபலென்கா இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ரிபாகினா முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆடிய சபலென்கா அடுத்த இரு செட்களை 6-3, 7-6 (8-6) என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாராயண் சுமார் 18 ஆண்டு காலம் பணியாற்றி உள்ளார்.
    • புதிய தலைமை செயல் அதிகாரி தேர்வு செய்யப்படும் வரை அவர் பதவியில் தொடருவார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது அடோப் நிறுவனம்.

    இந்நிலையில், முன்னணி மென்பொருள் நிறுவனமான அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) நீண்ட காலம் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாந்தனு நாராயண் தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

    இந்த தகவலை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய தலைமை செயல் அதிகாரி தேர்வு செய்யப்படும் வரை அவர் பதவியில் தொடருவார். அதன்பின் வாரியத் தலைவராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாராயண் சுமார் 18 ஆண்டு காலம் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • ஜெர்மனியின் ஸ்வரேவ் அரையிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2, 6-4 என எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னர், அல்காரஸ் அல்லது மெத்வதேவ் உடன் மோதவுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகம் முழுவதும் பயங்கரவாத செயல்களை திட்டமிட்டு செய்பவர்.
    • விமானம் நொறுங்கியதில் அமெரிக்க வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

    ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி மற்றும் ஈரான் ராணுவ பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிகாரிகளின் இருப்பிடத்தை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் 92.47 கோடி ரூபாய்) பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

    உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி, துணை தலைமை அதிகாரி அலி அஸ்கர் ஹுஜாசி, மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லாரிஜானி ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்ட அமெரிக்கா, உலகம் முழுவதும் பயங்கரவாத செயல்களை திட்டமிட்டு செயல்படுத்துவதாக கூறி இந்த வெகுமதியை அறிவித்துள்ளது.


    முன்னதாக கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் தெஹ்ரான் நகரில் அமெரிக்க - இஸ்ரேல் குறிவைத்து நடத்திய தாக்குதலில் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். இவர் தற்போதைய தலைவர் மொஜ்தபாவின் தந்தை ஆவார்.

    மறுபுறம், ஈரானுக்கு எதிரான நடவடிக்கையின்போது அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று ஈராக்கின் மேற்குப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 வீரர்களில் 4 பேர் உயிரிழந்ததாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது

    தங்களது தாக்குதலால் தான் அந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    இருப்பினும், எதிரிகளின் தாக்குதலால் இந்த விபத்து நடக்கவில்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஈரான் மீது வரும் நாட்களில் மிகவும் கடுமையான ராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தும் என்று அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.     

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய கிழக்கு ஆசியாவில் போர் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • இதனால் பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    நியூயார்க்:

    ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் மத்திய கிழக்கில் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.

    அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான், பாரசீக வளைகுடாவில் உள்ள குறுகலான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. அரபு நாடுகளில் இருந்து இவ்வழியாகத்தான் எண்ணெய் கப்பல்கள் பிற நாடுகளுக்கு பயணித்து வருகின்றன.

    உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடக்கும் இக்கடல் பாதையில் பயணிக்கும் கப்பல்கள்மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்கி வருகிறது. சமீபத்தில் இந்தியா வந்து கொண்டிருந்த தாய்லாந்து கப்பல் உள்பட 3 வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வளைகுடா நாடுகளில் விரிவடைந்து வரும் மோதல் பொதுமக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் ஒட்டுமொத்த உலகத்தின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. அனைத்துத் தரப்பினரும் பதற்றத்தை தணித்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும். என வலியுறுத்தி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பிரிட்டிஷ் வீரர் கேமரூன் நூரி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3, 6-4 என எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பிரிட்டிஷ் வீரர் ஜேக் டிராபரை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் லேனர் டைனை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் சின்னர் ஸ்வரேவுடனும், கார்லோஸ் மெத்வதேவுடனும் மோதுகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

    இதில் இகா ஸ்வியாடெக்கை 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்விடோலினா வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றது.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லர்-இத்தாலியின் ஆண்ட்ரியா வவசூரி ஜோடி உடன் மோதியது.

    இதில் அதிரடியாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 7-6 (7-2) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பெலாரசின் அரினா சபலென்கா, கனடாவின் விக்டோரியா எம்போகா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய சபலென்கா 7-6 (7-6), 6-4 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் ஆர்தர் பில்சை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் 4வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டிஷின் ஜேக் டிராபர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 6-4 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட டிராபர் அடுத்த இரு செட்களை

    6-4, 7-6 (7-5) என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் ஜேக் டிராபர், மெத்வதேவை எதிர்கொள்கிறார்.

    ×