என் மலர்

    ஆன்மிகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குச்சனூர் ஸ்ரீசனிபகவான் திருமஞ்சன அலங்கார சேவை.
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-31 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அஷ்டமி இரவு 11.13 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம் : பரணி காலை 8.26 மணி வரை பிறகு கார்த்திகை.

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோவிலில் திருமஞ்சன சேவை

    இன்று கோகுலாஷ்டமி. கார்த்திகை விரதம். குச்சனூர் ஸ்ரீசனிபகவான் திருமஞ்சன அலங்கார சேவை. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் தெப்போற்சவம். பெருவயல் ஸ்ரீமுருகப் பெருமான் திருவீதி உலா. வேலூர் மாவட்டம் ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் தங்க ரதக்காட்சி. திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜ் பெருமாள் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-செலவு

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-சிறப்பு

    கடகம்-மாற்றம்

    சிம்மம்-கடமை

    கன்னி-பரிசு

    துலாம்- கண்ணியம்

    விருச்சிகம்-பக்தி

    தனுசு- பணிவு

    மகரம்-ஓய்வு

    கும்பம்-உழைப்பு

    மீனம்-திடம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    நிதி நிலை உயர்ந்து நிம்மதி கூடும் நாள். தக்க சமயத்தில் நீங்கள் செய்த உதவியை நண்பர்கள் பாராட்டுவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    ரிஷபம்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். நீண்ட தூரப் பயணங்களால் பலன் உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.

    மிதுனம்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும்.

    கடகம்

    தள்ளிப்போன காரியங்கள் தானாக முடிவடையும் நாள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அலைபேசி வழித்தகவல் நெஞ்சம் மகிழ வைக்கும். வருமானம் திருப்தி தரும்.

    சிம்மம்

    முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். பிரியமான சிலரைத் தேடிச் சென்று சந்திப்பீர்கள்.

    கன்னி

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்ததை நினைத்தபடி செய்ய இயலாது. சேமிப்பில் சிறிது கரையலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    துலாம்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதிர்பார்ப்புகள் நடைபெறாமல் போகலாம். திடீர் மாற்றங்கள் பயணத்தில் ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். மருத்துவ செலவு உண்டு.

    விருச்சிகம்

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உண்டு. வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் உண்டு. பொருளாதார நிலை உயரும்.

    தனுசு

    புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். தொழிலில் கூடுதல் லாபம் வந்து சேரலாம்.

    மகரம்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நட்பால் நன்மை உண்டு. தொழில் வளர்ச்சிக்காக புதிய பங்குதாரர்களைச் சேர்க்க முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு.

    கும்பம்

    வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். வருமானம் திருப்தி தரும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம்.

    மீனம்

    உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். தடைகள் விலக தைரியமாக முடிவெடுப்பீர்கள். அயல்நாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீகிருஷ்ணபாதம் கூறிக்கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்கலாம்.
    • கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    எனவே கிருஷ்ணஜெயந்தி அன்று வீட்டை சுத்தப்படுத்தி அலங்கரித்து குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் வீட்டு வாசலில இருந்து பூஜை அறை வரையில் சின்னக்கண்ணன் நடந்து வருவது போல் அவனது பாதச்சுவடுகளை ஸ்ரீகிருஷ்ணபாதம் கூறிக்கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்கலாம்.

    இதனால் கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரக்கோலம் (ரங்கோலி), மலர் அலங்காரம், பூக்கோலமிடுவர். அதை நமது இல்லங்களிலும் செய்து கிருஷ்ணரை வரவேற்க வேண்டும். இதனால் கண்ணனே தன் திருப்பாதங்களை பதித்து நடந்து வந்து பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக் கொள்கிறார் என்பதாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று இரவு அன்ன தானம் வழங்கப்படுகிறது.
    • பெருமாள் கோவிலில் இருந்து பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சீர் கொண்டு வரப்படுவது சிறப்பு.

    ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது போல் பெரிய மாரியம்மன் கோவிலுக்கும் பல சிறப்புகள் உள்ளன. இந்த கோவில் 300 வருடம் பழமையானது.

    கோவிலின் மூலவராக பெரிய மாரியம்மன் உள்ளார். கோவிலில் அரசமர விநாயகர், முருகர், துர்க்கை அம்மன், நவக்கிரகம் போன்ற சாமி சிலைகள் உள்ளன. கோவிலில் பெரிய பாம்பு புற்று ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் ஆடி மாதம் முழுவதும் வரும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று இரவு அன்ன தானம் வழங்கப்படுகிறது.

    ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் கோவிலில் இருந்து பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சீர் கொண்டு வரப்படுவது சிறப்பு. ஆடி 18 அன்று கன்னிமாருக்கு காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோவிலின் முக்கிய வழிபாடாக புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியம் வேண்டி அம்மனுக்கு எண்ணை வைத்து வழிபட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பல வருடங்களாக இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் ஆடி மாதம் கோவிலில் பாம்பு புற்றில் நாக பஞ்சமி விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதம் முழுவதும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆடி மாதம் பெண்கள் அதிக அளவில் வந்து அம்மனை வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்ற பரிகாரங்கள் செய்வார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துர்க்கை பூஜை வழிபாட்டு குழுவினர் திருவிளக்கு பூஜைகளும் நடத்தி வருகின்றார்கள்.
    • பத்ரகாளி அம்மன் கோவிலில் உள் வளாகத்தில் ஆஞ்சநேயர் இருப்பது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களது வேண்டுதல்களும் விரைவில் நிறைவேறியும் வருகின்றது.

    இதில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆடி வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் துர்க்கை பூஜை வழிபாட்டு குழுவினர் திருவிளக்கு பூஜைகளும் நடத்தி வருகின்றார்கள். அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ராகு, கேது, சனி தோஷம் விலகும்.

    சிறப்பு தலமாகவும் விளங்குகிறது. பத்ரகாளி அம்மன் கோவிலில் உள் வளாகத்தில் ஆஞ்சநேயர் இருப்பது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்லும் போது சனியால் ஏற்படும் இன்னல்கள் தணிந்து, நன்மைகள் நடைபெறுவது இந்த கோவில் சிறப்பு அம்சமாகும்.

    மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், மாங்கல்ய பேறு, நோய் தீர்க்கும் அம்மனாகவும் அந்தியூர் பத்ரகாளியம்மன் விளங்கி வருகிறார். இதனால் பண்டிகை காலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது தொன்று தொட்டு வழக்கமாக நடந்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இருவரையும் எப்போதும் ஒதுக்குகிறார்கள்" என்றும் மிகுந்த வேதனையுடன் திருமாலிடம் முறையிட்டன.
    • மனக்கவலையைப் போக்க நினைத்த எம்பெருமான் அவைகளிடம் ஒரு வாக்குறுதியை அளித்தார்.

    ஒரு முறை திதிகளான அஷ்டமியும், நவமியும் திருமாலை தரிசிக்க வைகுண்டம் சென்றன. பெருமாளின் தரிசனத்தைப் பெற்ற அவை தங்களின் மனவருத்தத்தை அவரிடம் கூறத் தொடங்கின. "மக்கள் எந்த ஒரு விசேஷத்தையும் அஷ்டமி, நவமி ஆகிய இரு நாள்களில் செய்வதில்லை என்றும், எங்கள் இருவரையும் எப்போதும் ஒதுக்குகிறார்கள்" என்றும் மிகுந்த வேதனையுடன் திருமாலிடம் முறையிட்டன.

    அவைகளின் மனக்கவலையைப் போக்க நினைத்த எம்பெருமான் அவைகளிடம் ஒரு வாக்குறுதியை அளித்தார். அஷ்டமி, நவமியை மக்கள் கொண்டாடும் வகையில் அந்த இரு நாள்களில், தான் அவதாரம் எடுப்பதாகக் கூறினார். தனது வாக்குறுதியை நிறைவேற்றவே அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும், நவமி திதியில் ராமனாகவும் அவதரித்தார். அந்த இரு தினங்களையே நாம் கோகுலாஷ்டமியாகவும், ராமநவமியாகவும் கொண்டாடி வருகிறோம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாக்கு கொடுத்தபடி சிறையில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கம்சனிடம் ஒப்படைத்தார், வசு தேவர்.
    • இறுதியில் தன் தாய் மாமனான கம்சனை கொன்று சிறையில் இருந்த தன் தாய் - தந்தையரை மீட்டார்.

    காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் முக்கியமான பத்து அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணர் அவதரித்த நாளையே 'கிருஷ்ண ஜெயந்தி' என்று கொண்டாடுகிறோம். இந்த பண்டிகை இந்தியா முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

    கம்சன் என்ற மன்னன் மதுரா நகரை ஆண்டு வந்தான். இவன் மக்களை கொடுமைப்படுத்தி, பல பாவங்களை செய்தான். கம்சன், தன் சகோதரியான தேவகியை வசுதேவருக்கு திருமணம் செய்து கொடுத்தான். ஒரு நாள் கம்சன், இருவரையும் தனது தேரில் அழைத்து செல்லும் போது, ஒரு அசரீரி கேட்டது. ''கம்சா... உன் சகோதரியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும்'' என்று ஒலித்தது.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கம்சன், தன் சகோதரி என்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அப்போது வசுதேவர், ''எங்களுக்கு பிறக்கும் குழந்தையால் தானே உங்கள் உயிருக்கு ஆபத்து. எங்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தையையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்'' என்று உறுதி அளித்தார். இதையடுத்து இருவரையும் சிறையில் அடைத்தான் கம்சன்.

    வாக்கு கொடுத்தபடி சிறையில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கம்சனிடம் ஒப்படைத்தார், வசு தேவர். இவ்வாறு பிறந்த ஏழு குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டன. இந்த நிலையில் 8-வது முறையாக தேவகி கர்ப்பமானாள். இந்த குழந்தையையும் கம்சன் கொன்று விடுவான் என்று பயந்த வசுதேவர், விஷ்ணுவிடம் குழந்தையை காக்கும்படி மன்றாடி வேண்டினார். அன்று இரவு வசுதேவனின் கனவில் தோன்றிய விஷ்ணு, ''உனக்கு பிறக்க போகும் ஆண் குழந்தையை, அதே நாளில் பிறக்கும் எனது தீவிர பக்தனான நந்தகோபனின் குழந்தைக்கு பதிலாக மாற்றி வைத்து, அந்த பெண் குழந்தையை எடுத்து வா'' என்று கூறினார்.

    சிறையில் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் அஷ்டமி திதியில் நள்ளிரவில் எட்டாவது குழந்தையாக அவதரித்தார் கிருஷ்ணர். கிருஷ்ணரின் மகிமையால் சிறையின் கதவுகள் திறந்தன. காவலாளிகள் மயக்கம் அடைந்தனர். வசுதேவர் குழந்தையை எடுத்து கொண்டு வெளியேறினார். மழை பெய்து யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது வசுதேவருக்கு ஆற்றை கடக்க யமுனை பாதை அமைத்து கொடுத்தது. வசுதேவர் குழந்தையை தன் தலை மேல் வைத்து ஆற்றை கடந்தார். அப்போது ஐந்து தலை நாகம் குழந்தைக்கு குடையாக வந்தது.

    வசுதேவர் கோகுலத்தை அடைந்ததும் நந்தகோபனின் வீட்டுக் கதவுகள் திறந்து இருந்தன. மெதுவாக தனது குழந்தையை அங்கு வைத்துவிட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து கொண்டு சிறைச்சாலையை வந்தடைந்தார், வசுதேவர். சிறைச்சாலையில் நுழைந்ததும் சிறை காவலாளிகள் மயக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டனர். பின்பு வசுதேவருக்கு குழந்தை பிறந்திருப்பதை கம்சனிடம் தெரிவித்தனர்.

    உடனே விரைந்து வந்த கம்சன், ''என்னை கொல்லப் போவது ஒரு பெண் குழந்தையா'' என்று சிரித்தபடி, அந்த பெண் குழந்தையை கையில் எடுத்து கல்லில் தூக்கி எறிந்தான். ஆனால் அந்த குழந்தை, ''உன்னை கொல்ல பிறந்த குழந்தை கோகுலத்தில் வளர்ந்து வருகிறது. காலம் வரும்போது உன்னை கொல்வான்'' என்று கூறி மாயமாக மறைந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கம்சன், தனது பணியாட்களை அனுப்பி கோகுலத்தில் கிருஷ்ணர் இருப்பதை உறுதி செய்தான். பிறகு அந்த குழந்தையை கொல்ல பூதகி என்ற அரக்கியை அனுப்பினான். அந்த அரக்கி தன் மார்பில் விஷத்தை தடவி, கிருஷ்ணருக்கு பால் கொடுப்பது போல் கொல்ல நினைத்தாள். ஆனால் கிருஷ்ணர் அந்த அரக்கியின் மூச்சுக் காற்றை நிறுத்தி கொன்றார்.

    இதை அறிந்த கம்சன் கோபம் கொண்டு, ஷகாட்சுரா என்ற அரக்கனை அனுப்பினான். அந்த அரக்கன் வண்டியின் சக்கரமாக மாறி, கிருஷ்ணரை சக்கரத்தால் நசுக்கி கொல்ல நினைத்தான். ஆனால் சக்கரத்தை எட்டி உதைத்து அவனை கொன்றார், கிருஷ்ணர். இவ்வாறு பல அரக்கர்களை அனுப்பி கிருஷ்ணரை கொல்ல நினைத்த கம்சனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் அனுப்பிய அனைத்து அரக்கர்களையும் குழந்தை பருவத்திலேயே கொன்றார் கிருஷ்ணர். கோகுலத்தில் கிருஷ்ணர் கோபியர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டார். வெண்ணெய் திருடனாக பல குறும்புத்தனங்கள் செய்து கோகுலத்தின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். இறுதியில் தன் தாய் மாமனான கம்சனை கொன்று சிறையில் இருந்த தன் தாய் - தந்தையரை மீட்டார்.

    கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

    கிருஷ்ண ஜெயந்தி அன்று, வாசலில் இருந்து வீட்டுக்குள் வரை குழந்தையின் பாத சுவடுகளை வரைவார்கள். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அன்றைய தினம் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடங்கள் அணிவித்து மகிழ்வார்கள்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டை சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலம் இடுவார்கள். வீட்டில் மாவிலையால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்து, பல வகையான பலகாரங்கள் தயார் செய்து கிருஷ்ணரை வழிபாடு செய்வார்கள். அனைத்து வைணவ கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதில் கலந்துகொண்டு வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணர் வரலாற்றையும், பெருமையையும் காதால் கேட்டாலே போதும் பல புண்ணியங்கள் வந்துசேரும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிருஷ்ணரை வழிபடுவதால், மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும்.
    • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    கிருஷ்ணரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபடுவதால், வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, கல்வி, ஞானம் மற்றும் செல்வ வளம் பெருகும் என்று நம்பப்படுகிறது. மேலும், கர்ம வினைகள் நீங்கி, துன்பங்கள் விலகி, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

    மகிழ்ச்சியும், அமைதியும்:

    கிருஷ்ணரை வழிபடுவதால், மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். தீய எண்ணங்கள் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் பெருகும்.

    கல்வி மற்றும் ஞானம்:

    கிருஷ்ணர், அறிவின் வடிவமாக கருதப்படுகிறார். அவரை வழிபடுவதன் மூலம், கல்வி மற்றும் ஞானம் மேம்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    செல்வ வளம்:

    கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம், செல்வ வளம் பெருகும். வீட்டில் உள்ளவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

    கர்ம வினைகள் நீங்கும்:

    கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம், முந்தைய கர்ம வினைகளால் ஏற்பட்ட துன்பங்கள் நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

    குடும்பத்தில் சுபிட்சம்:

    கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம், குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

    துன்பங்கள் நீங்கும்:

    கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம், தீராத நோய்கள் நீங்கும் மற்றும் துன்பங்கள் விலகும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபடுவதால், மேற்கூறிய பலன்களைப் பெறலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர்.
    • தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும்.

    கோவிலில் பிரகாரத்தை சுற்றி வருவதால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். தெய்வ சிந்தனையுடனும் வலம் வர வேண்டும். ஓடுவது, வேகமாக நடப்பது, சப்தம் எழுப்புவது, தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும்.

    விநாயகரை ஒரு முறையும், சூரிய பகவானை இரண்டு முறையும், சிவபெருமானை மூன்று முறையும், விஷ்ணுவை நான்கு முறையும், லட்சுமி தாயார் அல்லது அம்பிகையை ஐந்து முறையும், அரசமரத்தை ஏழு முறையும் சுற்றி வந்து வணங்க வேண்டும்.

    தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர். காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது மட்டும் இதைச் செய்ய வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-30 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சப்தமி நள்ளிரவு 1.40 மணி வரை. பிறகு அஷ்டமி.

    நட்சத்திரம் : அசுவினி காலை 10.04 மணி வரை. பிறகு பரணி.

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகனுக்கு பால் அபிஷேகம்

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருவிழா. கோவை கந்தே கவுண்டர்சாவடி மாகாளியம்மன் தேரோட்டம். பெருவயல் ஸ்ரீமுருகப்பெருமான் திருவீதி உலா. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தாமதம்

    ரிஷபம்-ஆதாயம்

    மிதுனம்-சிந்தனை

    கடகம்-உழைப்பு

    சிம்மம்-உதவி

    கன்னி-ஆசை

    துலாம்- பயணம்

    விருச்சிகம்-சாதனை

    தனுசு- விவேகம்

    மகரம்-விருத்தி

    கும்பம்-களிப்பு

    மீனம்-கவனம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    புகழ் கூடும் நாள். புதிய மனிதர்களின் சந்திப்பால் நன்மை அடைவீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.

    ரிஷபம்

    நாடாளும் நபர்களின் நட்பால் நலம் சேரும் நாள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தலைமைப் பொறுப்புகள் தானே வரலாம். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.

    மிதுனம்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறலாம்.

    கடகம்

    வளர்ச்சி கூடும் நாள். பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உதாசீனப்படுத்தியவர்களே உங்கள் உதவி கேட்டு வரலாம். பழைய பிரச்சனைகள் படிப்படியாக மாறும்.

    சிம்மம்

    விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணையும் நாள். நண்பர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். ஆதாயம் தரும் காரியம் ஒன்றில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.

    கன்னி

    மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும் நாள். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் உருவாகும். எடுத்த காரியங்களை நிறைவேற்ற இயலாது.

    துலாம்

    எதிரிகள் உதிரியாகும் நாள். குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல், வாங்கல்களில் ஆதாயம் உண்டு. கவுரவப் பதவிகள் வரலாம். உத்தியோக மாற்றம் உறுதியாகும்.

    விருச்சிகம்

    நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். விழாக்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம்.

    தனுசு

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீட்டில் சுபகாரியம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

    மகரம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும். தொழில் ரீதியான பிரச்சினைகளுக்கு முடிவெடுக்க முடியாமல் திணற நேரிடும். விரயங்கள் உண்டு.

    கும்பம்

    முன்னேற்றம் ஏற்படும் நாள். தகுந்த நபர்களின் ஆலோசனைகள் தக்க விதத்தில் கைகொடுக்கும். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    மீனம்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வரவும், செலவும் சமமாகும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் வழிகாட்டுவர்.

    ரிஷபம்

    கேட்ட உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும்.

    மிதுனம்

    இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைபட்ட வருமானம் தானாக வந்து சேரலாம்.

    கடகம்

    வருமான உயர்விற்கு வழிபிறக்கும் நாள். அரைகுறையாக நின்ற பணியை தொடருவீர்கள். அரசு வேலைக்காக எடுத்த முயற்சி அனுகூலம் தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    சிம்மம்

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களுக்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    கன்னி

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

    துலாம்

    இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வருமோ, வராதோ என்று நினைத்த பணவரவொன்று இன்று கைக்கு கிடைக்கலாம்.

    விருச்சிகம்

    எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். பாக்கிகள் வசூலாகி பண வரவைப் பெருக்கும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர்.

    தனுசு

    திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். தொழில் பங்குதாரர்களால் பிரச்சனை ஏற்படும். மறதி அதிகரிக்கும். தன்னம்பிக்கையைத் தளரவிட வேண்டாம்.

    மகரம்

    அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். நினைத்தது நிறைவேறும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர் தொழிகளின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரலாம்.

    கும்பம்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத் தொழிலைத் தனித் தொழிலாக மாற்றலாமா என்று சிந்திப்பீர்கள். பஞ்சாயத்துகளில் நல்ல முடிவு கிடைக்கும். பயணம் பலன் தரும்.

    மீனம்

    கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ×