என் மலர்

    செய்திகள் (Tamil News)

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • அதிமுக விவசாயப்பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நடிகை கவுதமி அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    மேலும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளராக தடா பெரியசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுக விவசாயப்பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுகவில் மிகப்பெரிய பதவியாக கருதப்படுவது கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி. அதிமுகவில் நீண்ட காலம் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'கொள்கை பரப்பு துணைக் செயலாளர் பதவி நடிகை கவுதமிக்கு இபிஎஸ் வழங்கியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
    • கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட தீவிர இந்து அமைப்பினரால் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மத்திய பாஜக அரசின் முன்னெடுப்பில் ரூ.1,800 கோடி பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் உள்ளது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் சூழ இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் இப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்பிறகே 2020 இல் பாஜகவால் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    தற்போது இந்த தீர்ப்பை வழங்கிய அனுபவம் குறித்து தனது சொந்த ஊரான புனேவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரசூட் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சில வழக்குகளில் ஒரு முடிவுக்கு வரவே முடியாதபடி இருக்கும். அப்படித்தான் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி பிரச்சனை [குறித்த வழக்கு] மூன்று மாதங்களாக என் முன் இருந்தது.

    அப்போது தினமும் நான் கடவுளின் சிலைக்கு முன்னாள் அமர்ந்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லும்படி வேண்டினேன். என்னை நம்புங்கள், உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் நிச்சயம் அவர் ஒரு வழியை காண்பிப்பார் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் இந்த கருத்தை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காண கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். ஒரு சாமானியனுக்கு உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பணம் இல்லாமல் நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்திருந்தால் இந்த பிரச்சனை தீர்ந்திருக்கும். ED, CBI மற்றும் IT ஆகியவற்றின் தவறான பயன்பாடு நிறுத்தப்பட்ட வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்திருந்தால் நிறுத்தப்பட்டிருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருப்பூரில் அதிகபட்சமாக உடுமலை பகுதியில் 118 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
    • கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. திருப்பூர் மாநகர் பகுதியில் பெய்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்தனர்.

    இந்தநிலையில் சோளிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் தனது தாயார், மனைவி மற்றும் மகளுடன் அனுப்பர்பாளையம்புதூர்-15 வேலம்பாளையம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். கனமழை காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரில் அவருடைய கார் சிக்கிக்கொண்டது. இதனால் காருக்குள் இருந்த செந்தில்குமார் உள்பட 4 பேரும் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

    இது குறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் சுப்பையா தலைமையில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காருக்குள் இருந்த 4 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் மழைநீரில் தத்தளித்து கொண்டிருந்த காரையும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக அப்புறப்படுத்தினர்.

    திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக உடுமலை பகுதியில் 118 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இந்த மழை காரணமாக அமராவதி அணைக்கு வினாடிக்கு 748 கன அடி நீர் வரத்து உள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அணையில் இன்று காலை 85 அடி அளவுக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் எந்நேரமும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் அமராவதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே அமராவதி ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் எனவும், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் அங்கேரிபாளையம் அடுத்துள்ள மகாலட்சுமி நகர், கவிதா நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது.

    இதனால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் கடும் அவதி அடைந்ததாகவும் ஒவ்வொரு முறை மழை பொழிவின்போதும் வீடுகளில் மழை நீர் சூழ்வதால் கடும் அவதி ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இன்று காலை திருப்பூர்-அங்கேரி பாளையம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனைத்தொடர்ந்து விரைந்து வந்த அனுப்பர்பாளையம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், கழிவு நீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுவதால் உடனடியாக சாக்கடை கால்வாய் உயர்த்தி கட்டப்படும் என அறிவித்து அதற்கான பணிகள் துவங்கும் என அறிவித்தனர். எனினும் இது நிரந்தர தீர்வு இல்லை எனவும் தங்களுக்கு முழுமையான வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு - 72, குமார்நகர்- 84, திருப்பூர் தெற்கு - 9, கலெக்டர் அலுவலகம் - 92, அவிநாசி- 15, ஊத்துக்குளி-42, பல்லடம் 16, தாராபுரம் -11, மூலனூர்- 42, குண்டடம்- 33, உப்பாறு அணை - 8, காங்கயம்- 22, உடுமலை- 118, அமராவதி அணை- 54, திருமூர்த்தி அணை - 105, மடத்துக்குளம்-20 . மாவட்டம் முழுவதும் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காரில் கட்டிப்போட்டு, இருக்கையில் மிளகாய் பொடி தூவியதாகவும் அவர் தெரிவித்தார்.
    • தன்னை காரில் கட்டிப்போட்டு, இருக்கையில் மிளகாய் பொடி தூவியதாகவும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பையோலி பகுதியைச் சேர்ந்தவர் சுகைல் (வயது 25). இவர் தனியார் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் கோழிக்கோடு அரிக்குளம் பகுதியில் சுகைல் காரில் பணத்துடன் சென்றபோது, பர்தா அணிந்த 2 பேர் வழிமறித்து தாக்கியதோடு ரூ.25 லட்சத்தை பறித்துச் சென்றதாக போலீசாரிடம் புகார் கூறினார்.

    மேலும் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள், தன்னை காரில் கட்டிப்போட்டு, இருக்கையில் மிளகாய் பொடி தூவியதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து சுகைலை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    முதலில் ரூ.25 லட்சம் பறிபோனதாக கூறிய அவர், பின்னர் ரூ.75 லட்சம் என்று கூறினார். பெரிய தொகை கொண்டு செல்லும் போது அவர் ஏன் துணைக்கு யாரையும் அழைத்துச் செல்லாமல் தனியாக சென்றார் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சுகைல், திட்டமிட்டு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுகைல், அவனது கூட்டாளிகள் தாஹா மற்றும் யாசர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.37 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோழிக்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிதின்ராஜ் கூறுகையில், ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்ப, ஒரு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுகைல், சில காலமாகவே பணத்தை மோசடி செய்து வந்துள்ளார். தற்போது போலீசாரின் கவனத்தை திசைதிருப்பி முதலில் அவர் நாடகமாடினார். ஆனால் தீவிர விசாரணையில் அவரது குட்டு அம்பலத்திற்கு வந்துள்ளது என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி, கடனா நதி பகுதிகளில் சாரல் அடித்தது.
    • மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் மாலை நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் பிற்பகலில் ராதாபுரம் பகுதியில் திடீரென வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டது. தொடர்ந்து கனமழை பெய்ய தொடங்கியது. கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு சுமார் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக களக்காட்டில் 5 சென்டிமீட்டர் மழை கொட்டியது. மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டியிலும் சாரல் அடித்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் நேற்று பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 20 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 18 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 16 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை நேற்று பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. இன்றும் அதே நிலை நீடிக்கிறது. எனினும் மழை பொழிவு எதுவும் இல்லை. பாபநாசம் அணையில் தற்போது 93.45 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறில் 105.18 அடியும், மணிமுத்தாறில் 63.64 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி, கடனா நதி பகுதிகளில் சாரல் அடித்தது. அதிகபட்சமாக கருப்பாநதியி 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடனா அணை பகுதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்தது. சிவகிரியில் 6 மில்லிமீட்டரும், சங்கரன்கோ விலில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழுகிறது. மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக கயத்தாறு, மணியாச்சி, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் நீர் தேங்கியது.

    இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மணியாச்சியில் அதிகபட்சமாக 7.5 சென்டிமீட்டர் மழை கொட்டியது. கயத்தாறில் 37 மில்லிமீட்டரும், கடம்பூரில் 41 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டையபுரம், காடல்குடி பகுதிகளில் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. கீழ அரசடி பகுதியில் சுமார் 1 மணி நேரம் கொட்டிய மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்தது. விளாத்திகுளம் சுற்றுவட்டார கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாநகர், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினத்தில் வெயில் அடித்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாலஸ்தீனத்தில் நடப்பது போர் அல்ல, இனப்படுகொலை.
    • இஸ்ரேல் விரும்பும் ஆயுதங்களை தயாரிக்கும் பூமியாக இந்தியா மாறியுள்ளது.

    பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலின் தாக்குதலை பெயரளவில் கண்டித்தாலும் இந்த விவகாரத்தில் இந்தியா எந்த நாட்டிற்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலைமை வகிக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திருப்திப்படுத்தவே பாலஸ்தீனத்திற்கு பதிலாக இஸ்ரேல் நாட்டை இந்திய அரசு ஆதரித்து வருகிறது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

    கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற சி.எச்.கனராம் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை நேற்று தொடங்கி வைத்துப் பேசிய பினராயி விஜயன் இவ்வாறு தெரிவித்தார்.

    பொதுக்கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், "இஸ்ரேல் மற்றும் நம் நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்களும் உடன் பிறந்தவர்கள் போன்றவர்கள். இருவரில் ஒருவரின் பெயர் சியோனிஸ்டுகள் மற்றொருவரின் பெயர் சங் பரிவார். இந்த 2 பேருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

    இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த சொல்லி ஐநா சபையில் உள்ள பெரும்பாலான நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்கா போன்ற சில நாடுகள் மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன.

    இதில் மகத்தான வரலாற்றை கொண்ட நம் நாடு எங்கே இருக்கிறது? இப்பிரச்சனையில் ஐநா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நாம் நடுநிலைமை வகிக்கிறோம். நாம் பாலஸ்தீனத்தின் பக்கம் இல்லை. பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரும் குழுவில் நாம் இல்லை. அதன் பொருள் நாம் இஸ்ரேல் பக்கம் நிற்கிறோம்.

    இத்தாலி போன்ற பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்தாலும், இந்தியா இன்னும் அதை நிறுத்தவில்லை. இஸ்ரேலுடன் அதிக ஆயுத வியாபாரம் செய்யும் நாடு இந்தியா தான். இஸ்ரேல் விரும்பும் ஆயுதங்களை தயாரிக்கும் பூமியாக இந்தியா மாறியுள்ளது

    பாலஸ்தீனத்தில் நடப்பது போர் அல்ல, இனப்படுகொலை. 2 தரப்பினரிடமும் போதுமான ஆயுதங்கள் இருந்தால் தான் அதை போர் என்று அழைக்க முடியும். இஸ்ரேல் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்துகிறார்கள், இது ஒருதலைபட்சமான தாக்குதல்" என்று தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • யார் சார் நீங்க... என்று கேட்ட போலீசாரை அந்த ஜோடி தரக்குறைவாக பேசினர்.
    • நாளை காலையில உன் அட்ரஸ் எல்லாம் எடுத்து விடுவேன். ஒருத்தன் இருக்க மாட்டீங்க.

    சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி தரக்குறைவாக பேசி உள்ளனர். அவர்களை கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்ததற்கு, அந்த ஜோடி கடுமையாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    உதயநிதி ஸ்டாலினை இப்போவே கூப்பிடுவேன்... பார்க்கிறாயா? என துணை முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டினார். அத்துடன் நிற்காமல் போலீசாரை கைகாட்டி மிரட்டி, அநாகரீகமாகவும் அந்த நபர் பேசினார்.

    யார் சார் நீங்க... என்று கேட்ட போலீசாரை அந்த ஜோடி தரக்குறைவாக பேசினர்.

    கைது செய்வோம் என்று போலீசார் கூறியதற்கு, அதற்கு அந்த நபர், இவன் எல்லாம் அள்ளக்கை. அரெஸ்ட் பண்ண போறீயா... முடிந்தால் பண்ணுடா...

    போய் உன் ஆளை கூட்டிட்டு வா... இன்ஸ்பெக்டரை கூட்டிக்கொண்டு வா...

    நாளை காலையில உன் அட்ரஸ் எல்லாம் எடுத்து விடுவேன். ஒருத்தன் இருக்க மாட்டீங்க என்று கெட்ட வார்த்தைகளில் வசைபாடினார். மேலும் அந்த நபர், போலீசாரின் போனை பிடுங்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

    அதற்கு அந்த பெண் இவன் எல்லாம் ஒரு ஆளு இவனை போய்... என்று சொல்லும் வீடியோ வைரலாகி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த ஜோடி கணவன் மனைவி இல்லையென தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார்.
    • சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக பூபாலன் கூறியிருந்தார்

    நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர்.

    நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார்.

    நாம் தமிழரில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என்னுடைய இஷ்டப்படித்தான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக பூபாலன் கூறியிருந்தார்

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 2 மாவட்ட பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்தியர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
    • சிஆர்பிஎப் பள்ளி அருகே நடந்த குண்டுவெடிப்புக்குப் பாகிஸ்தானில் இயங்கும் காலிஸ்தான் அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.

    இந்தியாவில் கடந்த 1 வாரத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவை போலியானது என்றாலும் விமான சேவைகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்தியர்களுக்கு மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் யாரும் பயணிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். பன்னுன் மீதான கொலை முயற்சி வழக்கில் தற்போது அமெரிக்காவில் தேடப்பட்ட இந்திய உளவுத்துறை முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    தொடர்ந்து டெல்லியில் நேற்றைய தினம் சிஆர்பிஎப் பள்ளி அருகே நடந்த குண்டுவெடிப்புக்குப் பாகிஸ்தானில் இயங்கும் காலிஸ்தான் அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. இந்த அனைத்து சம்பவங்களும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவையாக இருக்கும் சூழலில் இந்த எச்சரிக்கையை பன்முன் விடுத்துள்ளார்.

    சீக்கிய இனப்படுகொலையின் 40 வது ஆண்டு விழா விரைவில் வர உள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை பன்னுன் விடுத்துள்ளதாக யூகிக்க முடிகிறது. கடந்த வருடமும் பன்னுன் இதுபோன்று மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தேசத்துரோகம் மற்றும் பிரிவினைவாதத்தின் அடிப்படையில் ஜூலை 2020 முதல் உள்துறை அமைச்சகத்தால் பன்னுன் பயங்கரவாதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநாட்டு பணிகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு திடலில் தங்கி இருந்து பார்வையிட்டு வருகிறார்.
    • ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு- பகலாக மாநாட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாடு வருகிற 27-ந் தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்ற இடத்தில் நடைபெறுகிறது.

    இதையொட்டி 85 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாடு நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டு நடைபெற சில தினங்களே இருப்பதால் மேடை அமைப்பு பணிகள், உணவு கூடங்கள், வாகனம் நிறுத்தும் இடங்கள், குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி கள் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை அடைந்து உள்ளது.

    மாநாடு நடைபெறும் பகுதியில் திடீரென மழை பெய்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மணல் பரப்பில் ஜல்லி கற்கள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு நிலப்பரப்பின் உயரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு பணிகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு திடலில் தங்கி இருந்து பார்வையிட்டு வருகிறார்.

    மாநாட்டு திடலுக்கு விஜய் வந்ததும் தொண்டர்களை நோக்கி சிறிது தூரம் நடந்து சென்று உற்சாகப்படுத்துகிறார்.

    இதையொட்டி 800 மீட்டர் நீளத்துக்கு மாநாட்டு மேடையுடன் சிறப்பு பிரமாண்ட நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதால் ஏற்கனவே 4 வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    தொண்டர்களின் எண்ணிக்கை அதிகமாவதை தொடர்ந்து கூடுதலாக மாநாடு திடல் அருகே ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு என மொத்தம் 225 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    வாகனம் நிறுத்தும் இடங்கள் அனைத்திலும் மின் விளக்கு, குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    மாநாடு வளாகத்தை சுற்றிலும் 20 ஆயிரம் மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாநாடு பந்தலை சுற்றிலும் ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட உள்ளன.

    சுமார் 1000 பேர் அமரும் வகையில் மாநாடு மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. மாநாடு பந்தலில் சுமார் 75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட இருக்கிறது.

    மாநாடு பாதுகாப்பில் போலீசாருடன் இணைந்து துபாயில் இருந்து வந்துள்ள சிறப்பு தனியார் பாதுகாப்பு படையினர் ஈடுபட இருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்பு காரணங்களுக்காக மாநாடு திடல் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது.

    திடலுக்கு வரும் பணியாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என யார் வந்தாலும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாநாட்டுக்கு விஜய் வருவதற்காக சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டு அவரது பாதுகாப்புக்கு என்று சிறப்பு தனிக்குழுவை துபாய் பாதுகாப்பு படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

    மாநாடு பணிகள் பற்றி கட்சி தலைவர் விஜய், மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு மாநாடு பணியை வேகப்படுத்தி வருகிறார்.

    ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு- பகலாக மாநாட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் 2 நாட்களில் மாநாடு பந்தல் பணிகள் உள்பட அனைத்து பணிகளும் நிறைவு பெற இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆவதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு.
    • சர்வீஸ் மையத்திற்கு சென்றால் சரியாக ரிப்பேர் பார்த்து தரும் சேவையில் அதிருப்தி.

    ஓலா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அடிக்கடி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிப்பேர் ஆகிறது. சர்வீஸ் சென்டர் சென்றால் சரியான பதில் கிடைப்பதில்லை என்ற வாடிக்கையாளர்களின் குமுறல் செய்தியாக வெளிவந்த வண்ணம் உள்ளது. சர்வீஸ் சென்டர் முன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ வைத்து எரிப்பு, ஷோ ரூம்-க்கே தீ வைப்பு போன்ற சம்பவங்கள் விரக்தியான வாடிக்கையாளர்களால் நடந்துள்ளன. பெங்களூரு பெண் ஒருவர் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வேஸ்ட் என பெரிய போர்டு தொங்கவிட்டு சென்றார்.

    இந்த நிலையில் சர்வீஸ் சென்டர்களில் ஓலா நிறுவனம் பவுன்சர்களை நிறுத்தியுள்ளதாகவும் பல வாடிக்கையாளர்கள் தங்களது ஆதங்களை வெளிப்படுத்தியுள்ளனர். சில வாடிக்கையாளர்கள் Stand-up காமெடியன் குணால் கம்ராவை டேக் செய்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    அந்த எக்ஸ் தள பதிவுகளை சுட்டிக்காட்டி குணால் கம்ரா ரீ-ட்வீட் ஓலா நிறுவனம் மீது குற்றச்சாட்டை கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது.

    ஆர்.ஜே. காஷ்யப் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் "ஓலா தற்போது ஒவ்வொரு சர்வீஸ் சென்டருக்கும் 5 முதல் 6 பவுன்சர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஓலா சர்வீஸ் சென்டருக்கு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள பவுன்சர்கள் பெண் வாடிக்கையாளர்கள் உள்பட அனைத்து ஓலா வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்க்க முடியாது. ஆகவே, இதுபோன்ற சர்வீஸைதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதை ரீ-ட்வீட் செய்த குணால் கம்ரா, "தயவு செய்து செய்தியாளர்கள் இதுகுறித்து சரிபார்க்கலாம். இது உண்மையாக இருந்தால் உண்மையிலான தனித்துவமானது. விற்பனை குழு விற்பனைக்கான. விற்பனைக்குப் பிறகு பவுன்சர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பாருங்கள் குணால் கம்ரான் அமோல் சவுத்ரி என்பவர் 20-10-2004 அன்று ஓலா சர்வீஸ்க்காக அப்பாயின்ட்மென்ட் பெற்றிருந்தேன். ஸ்கூட்டரை ரிப்பேர் பார்ப்பதற்கு யாரும் எடுத்துச் செல்லவில்லை. பவுன்சர்கள் மையத்தில் உள்ளனர். அவர்கள் ஆயுதங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு பதில் அனித்தனர் என்றார்.

    இந்த பதிவை ரீ-ட்வீட் செய்த குணால் கம்ரா "ஓலா நிறுவன உரிமையாளர் பவிஷ் அகர்வாலை டேக் செய்து, இதுபோன்ற புதுமையான இந்தியா தயாரிப்பை விற்றுவிட்டீர்கள். ஊழியர்களை பாதுகாக்க பவுன்சர்சளை அமர்த்த வேண்டியிருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

    குணால் கம்ரா முதன்முறையாக ஓலாவை விமர்சிக்கவில்லை. இதற்கு முன்னதாக வாடிக்கையாளர்களின் புகார் குறித்து வெளிப்படைதன்மை இல்லை, தற்போதைய வாடிக்கையாளர்களின் புகார்களை நிவர்த்தி செய்வதற்கான காலக்கெடு இல்லை என விமர்சித்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
    • மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் நேற்று தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.

    இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று 9-வது மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ×