என் மலர்

    டெல்லி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆண்டுதோறும் 6,000 ரூபாயை 3 தவணையில் பெறுகிறார்கள்.
    • இதுவரை 19 தவணையாக ரூ.3.69 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகள் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் 6,000 ரூபாயை 3 தவணைகளில் பெறுகிறார்கள். இது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. சாகுபடி நிலங்களை வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் பிரதமர் மோடி 20வது கட்ட தவணையை இன்று விடுவிக்கிறார்.

    நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து ரூ.20,500 கோடி மதிப்புள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 20-வது தவணையை பிரதமர் மோடி விடுவிக்கிறார்.

    மத்திய அரசின் முதன்மை நேரடி பலன் பரிமாற்றத் திட்டம் 2019-ல் தொடங்கப்பட்டு 5 ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் 19 தவணைகளாக ரூ.3.69 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
    • 'பார்க்கிங்' படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகினறன.

    71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. 2023-ம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்று அளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான தேர்வில் பங்கேற்றன. இந்தத் தேர்வு பட்டியலில் 332 படங்கள் பரிசீலிக்கப்பட்டன.

    இந்நிலையில், 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.

    சிறந்த திரைப்படம் : '12த் பெயில்'

    சிறந்த நடிகர்: ஷாருக் கான் (ஜவான்), விக்ராந்த் மாசி(12த் பெயில்)

    35 ஆண்டாக சினிமாவில் கோலாச்சும் நடிகர் ஷாருக்கான் முதல் முறையாக சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சிறந்த நடிகை: ராணி முகர்ஜி (திருமதி சாட்டர்ஜி மற்றும் நார்வே)

    சிறந்த தமிழ் படம்: பார்க்கிங்

    சிறந்த குணச்சித்திர நடிகர்: எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்)

    சிறந்த திரைக்கதை: ராம்குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங்)

    சிறந்த மலையாள படம்: 'உள்ளொழுக்கு'

    சிறந்த குணச்சித்திர நடிகை: ஊர்வசி

    சிறந்த இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ்குமார் (வாத்தி)

    சிறந்த குறும்படம்: 'லிட்டில் விங்ஸ்' (தமிழ்)

    சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது: சரவண மருது சவுந்தரபாண்டின், மீனாட்சி சோமன் (லிட்டில் விங்ஸ்)

    ஆவணப் படப்பிரிவில் 'தி டைம்லெஸ் தமிழ்நாடு' தேர்வானது.

    சிறந்த இயக்குனர்: சுதீப்தோ சென் (தி கேரளா ஸ்டோரி)

    சிறந்த ஒளிப்பதிவு பிரிவுக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த ஒலி அமைப்பு: அனிமல்

    சிறந்த தயாரிப்பு: 2018 (மலையாளம்)

    சிறந்த தெலுங்கு திரைப்படம்: 'பஹவந்த் கேசரி'

    சிறந்த கன்னட திரைப்படம்: கண்டீலு

    தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி விரைவில் விருது வழங்குவார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆங்கிலத்தில் உருவான Timeless Tamilnadu என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 'லிட்டில் விங்ஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

    2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆங்கிலத்தில் உருவான Timeless Tamilnadu என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    'டைம்லெஸ் தமிழ்நாடு' என்ற ஆவணப்படம் சிறந்த கலை மற்றும் கலாச்சார படத்திற்கான விருது பெற்றுள்ளது.

    மேலும், ஒளிப்பதிவுப் பிரிவில், 'லிட்டில் விங்ஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர்கள் சரவணமருது சவுந்தர பாண்டியன் மற்றும் மீனாக்சி சோமனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறந்த மலையாள திரைப்படமாக உள்ளொழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    சிறந்த மலையாள திரைப்படமாக உள்ளொழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், அனிமல் திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருதுகள் வென்றுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 12th fail படத்தின் கதாநாயகன் விக்ராந்த் மாஸிக்கு தேசிய விருது அறிவிப்பு.
    • சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை 12th fail திரைப்படம் வென்றுள்ளது.

    2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்தியில் சிறந்த நடிகருக்கான விருதை 12th fail படத்தின் கதாநாயகன் விக்ராந்த் மாஸிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை 12th fail திரைப்படம் வென்றுள்ளது.

    இதன்மூலம், 12th fail திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
    • சிறந்த நடிகை விருதை வென்றார் ராணி முகர்ஜி அறிவிப்பு.

    2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    இதில், இந்தியில் சிறந்த நடிகர் விருது - ஷாருக்கான் (ஜவான்) மற்றும் விக்ராந்த் மாஸி (12 பெயில்)க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த நடிகை விருதை வென்றார் ராணி முகர்ஜி (படம்: சாட்டர்ஜி vs நார்வே) அறிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவை வெளியானால் தேர்தல் ஆணையம் ஒளிந்துகொள்ள இடம் இருக்காது.
    • ஓய்வு பெற்றாலும் அவர்களை விட்டுவிட மாட்டோம் என்று ராகுல் எச்சரித்தார்.

    பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக தங்களிடம் 100 சதவீதம் தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

    பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைச் செய்கிறது என்றும் இது தொடர்பாக 'அணு குண்டு' போன்ற ஆதாரங்கள் இருப்பதாகவும், அவை வெளியானால் தேர்தல் ஆணையம் ஒளிந்துகொள்ள இடம் இருக்காது என்றும் தெரிவித்தார். 

    கடந்த ஆண்டு நடந்த மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் முறைகேடுகள் நடந்ததாக சந்தேகம் எழுந்ததாகவும், இந்த சந்தேகம் மகாராஷ்டிராவில் மேலும் வலுவடைந்ததாகவும் அவர் கூறினார்.

    மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

    தேர்தல் ஆணையத்தில் உள்ள அதிகாரிகள், உயர் பதவியில் இருந்து கீழ் நிலை வரை, இந்த முறைகேடுகளில் ஈடுபடுவர்கள் நாட்டுக்கு எதிராக செயல்படுகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வு பெற்றாலும் அவர்களை விட்டுவிட மாட்டோம் என்று ராகுல் எச்சரித்தார்.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், காங்கிரஸ் மற்றும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து உடனடியாக ஒரு சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
    • இதனால், அவை நடவடிக்கைகள் பாதித்தன.

    கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டு வந்தனர் .

    இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு பாரளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின.

    அப்போது பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதித்தன.

    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மதியம் 2 மணிவரையும், மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துணை ஜனாதிபதி பதவியை ஜெகதீர் தன்கர் ராஜினாமா செய்த நிலையில் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • துணை ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவோர் ஆக. 7-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21-ந்தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இது டெல்லி அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.

    துணை ஜனாதிபதியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு பதவி ஏற்ற ஜெகதீப் தன்கருக்கு அந்த பதவி காலம் 2027 ஆகஸ்டு 10-ந்தேதி வரை இருந்தது. ஆனால் அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பே உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    உயிரிழப்பு, ராஜினாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் துணை ஜனாதிபதி பதவி இடம் காலியாக நேரிட்டால் கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டப்பிரிவு 68 (2)-ல் குறிப்பிட்டுள்ளது. இந்த விதியின்படி அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதன்படி துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் தொடங்கியது.

    இதன் தொடர்ச்சியாக தற்போது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இடம் பிடித்துள்ள எம்.பி.க்களை உள்ளடக்கிய வாக்காளர் பட்டியலை இறுதி செய்ததாக தேர்தல் ஆணையம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் தேதி இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. அதன்படி அன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

    வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஆகஸ்டு 21-ந்தேதி கடைசி நாளாகும். துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மனு செய்தவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை 22-ந்தேதி நடைபெறும். 25-ந்தேதி வரை மனுக்களை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து போட்டி இருக்கும்பட்சத்தில் துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 9-ந்தேதி நடைபெறும். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அறையில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

    ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்படும். சில மணி நேரத்துக்குள் முடிவு வெளியாகும். அன்றே அதாவது செப்டம்பர் 9-ந்தேதி நாட்டின் புதிய துணை ஜனாதிபதி யார்? என்பது தெரிந்து விடும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால் துணை ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சி சார்பில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவர் களம் இறக்கப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    துணை ஜனாதிபதி தேர்தல் 2025-க்கான இறுதி செய்யப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை கொண்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அதன்பிறகு வாக்காளர் பட்டியலை உறுப்பினர்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் என்பது அரசமைப்புச் சட்டத்தின்பிரிவு 66(1)-ன் கீழ் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்படி ஒற்றை மாற்று வாக்குமூலம் ரகசிய வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும. அதன்படி வேட்பாளரின் பெயருக்கு எதிரே தனது விருப்பத் தேர்வை வாக்காளர் குறிக்க வேண்டும்.

    விதிகளின்படி துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் இந்திய குடிமகனாகவும், 35 வயதை பூர்த்தி செய்தவராகவும், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதி உடையவராகவும் இருக்க வேண்டும். 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் ஒரு எம்.பி. இடம் காலியாக உள்ளது. அதுபோல 245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது.

    அதன்படி தற்போது இரு அவைகளையும் சேர்த்து எம்.பி.க்களின் எண்ணிக்கை 782 ஆக உள்ளது. தற்போது இந்த உறுப்பினர்கள் அனை வரும் வாக்களிக்கும் நிலையில் துணை ஜனாதிபதியாக வெற்றி பெறும் வேட்பாளர் குறைந்தபட்சம் 391 வாக்குகளை பெற வேண்டும்.

    மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்.டி.ஏ), 542 உறுப்பினர்களில் 293 பேரின் ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில் தற்போதுள்ள 240 உறுப்பினர்களில் 129 பேரின் ஆதரவு உள்ளது. நியமன எம்.பி.க்களின் ஆதரவும் என்.டி.ஏ.வுக்கு கிடைத்தால் மொத்தம் 422 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்ப டும் துணை ஜனாதிபதி 5 ஆண்டுகள் பதவி வகிப்பார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்தாலும் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வரை அவர் அந்த பதவியில் தொடரவும் அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
    • இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்த ஆண்டு நடக்கவுள்ள இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. துணை ஜனாதிபதி தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று துணை ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர்.

    இதற்காக அந்த உறுப்பினர்களுக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரிப்பது அவசியமாகும். அந்தவகையில் தற்போதைய தரவுகளுடன் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயார் செய்து இறுதி செய்துள்ளது.

    துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்- டிரம்ப்
    • இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், இந்தியப் பொருளாதாரம் இறந்து விட்டது என்று டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். டிரம்ப் தனது எக்ஸ் பதிவில், "ரஷியாவுடனான இந்திய உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே அதிகம். நாங்கள் அவர்களுடன் பெரிய அளவில் வணிகம் வைத்துக் கொண்டதில்லை. ரஷியாவுடனும் அமெரிக்கா வணிக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்ற டிரம்பின் கருத்து குறித்து பேசிய ராகுல் காந்தி, "டிரம்ப் சொல்வது சரிதான், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் இது தெரியும். இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஜனாதிபதி டிரம்ப் ஒரு உண்மையை கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது உலகம் முழுவதுக்கும் தெரியும். பிரதமர் மோடி அதானி என்ற ஒரு நபருக்காக மட்டுமே பணியாற்றுகிறார். அதானிக்கு உதவ பாஜக இந்திய பொருளாதாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

    எங்களிடம் ஒரு சிறந்த வெளியுறவுக் கொள்கை உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகிறார். ஒருபுறம், அமெரிக்கா உங்களை துஷ்பிரயோகம் செய்கிறது. மறுபுறம், சீனா உங்கள் பின்னால் உள்ளது. நீங்கள் உங்கள் குழுவை உலகிற்கு அனுப்பியபோது, எந்த நாடும் பாகிஸ்தானைக் கண்டிக்கவில்லை.

    பிரதமர் மோடி தனது உரையில் டிரம்ப், சீனாவின் பெயரை கூட சொல்லவில்லை. இந்த பஹல்காம் தாக்குதலை நடத்திய பாகிஸ்தானின் ராணுவத் தலைவர், ஜனாதிபதி டிரம்ப் அவருடன் மதிய உணவு அருந்துகிறார். நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்" என்று கூறினார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக அனுராக் தாகூர் கூறுகையில் "உலகில் யாராவது ஒருவர் இந்தியாவுக்கு எதிராக கருத்தை வெளியிடும்போதெல்லாம், ராகுல் காந்தி அதை பிடித்துக் கொள்கிறுார். இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை உருவாக்குவது காந்தியின் மனநிலையாகிவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

    பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா "'செத்துப்போன பொருளாதாரம்' என்ற பழிச்சொல்லை எதிரொலிப்பதன் மூலம் ராகுல் காந்தி புதிய கீழ்த்தரமான நிலையை சந்தித்துள்ளார்.. இது இந்திய மக்களின் விருப்பங்கள், சாதனைகள் மற்றும் நல்வாழ்வுக்கு அவமானகரமான அவமானம்.

    ஆனால் நேர்மையாகச் சொல்லப் போனால், இங்கே உண்மையிலேயே 'இறந்து போன' ஒரே விஷயம் ராகுல் காந்தியின் சொந்த அரசியல், நம்பகத்தன்மை மற்றும் மரபு.

    இவ்வாறு மாள்வியா தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லண்டன் செல்லும் ஏர் இந்தியா போயிங் 787-9 விமானம் ரத்தானது.
    • பயணிகளை விரைவில் லண்டனுக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

    டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா போயிங் 787-9 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்படுவதற்கு முன் ரத்து செய்யப்பட்டது.

    இன்று ஜூலை 31, டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிச் செல்லவிருந்த ஏர் இந்தியா Boeing 787-9 ரக விமானம் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது ரத்து செய்யப்பட்டது என ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்தச் சம்பவத்தால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். பயணிகளை விரைவில் லண்டனுக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    ×