என் மலர்

    டெல்லி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 9 விமான நிலையங்கள் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது.
    • சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 125 நாட்களில் 6 முதல் 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

    டெல்லியில் நடைபெற்று வரும் தனியார் டி.வி.யின் உலக மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    இந்தியா அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவில் சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு கவலைகளில் மூழ்கியுள்ள உலகிற்கு இந்தியா நம்பிக்கை அளிக்கிறது.

    நாங்கள் 3-வது முறையாக ஆட்சிய அமைத்து 125 நாட்கள் முடிவடைந்துள்ளது. 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

    15 புதிய வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 9 விமான நிலையங்கள் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது. 5 லட்சம் வீடுகளின் கூரை மேல் சோலார் அமைக்கப்பட்டுள்ளது. 90 கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 125 நாட்களில் 6 முதல் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. நம்முடைய அந்நிய செலாவணி 700 பில்லியனுக்கு மேல் உயர்ந்துள்ளது.

    'விக்சித் பாரத்' பற்றிய விவாதங்கள் இப்போது பொது விழிப்புணர்வின் ஒரு பகுதியாக உள்ளது. இது 'ஜனசக்தி' 'ராஷ்டிர சக்தி'க்கு மிகப்பெரிய உதாரணம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் நேற்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது
    • பாஜகவுக்கு பணி செய்வதற்கான திறமையோ எண்ணமோ கிடையாது.

    தலைநகர் டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் நேற்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. வெடிவிபத்தைத் தொடர்ந்து தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் மத்திய பா.ஜ.க. அரசால் டெல்லியின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி முதல்வர் அதிஷி விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிஆர்பிஎப் பள்ளி அருகில் நடந்த இந்த வெடிவிபத்து டெல்லியின் பாதுகாப்பு அமைப்பு சிதைந்துவருவதைக் காட்டுகிறது.

    டெல்லியின் சட்ட ஒழுங்கு மத்திய பா.ஜ.க. அரசின் கீழ் வருகிறது. ஆனால், பா.ஜ.க. அதை கவனிப்பதை விட்டுவிட்டு, டெல்லி அரசை முடக்குவதையே முழு நேர வேலையாக செய்து வருகிறது. மும்பையில் 1990 களில் இருந்த நிழல் உலகைப் போல் தற்போது டெல்லி உள்ளது.

    நகரத்தில் வெட்டவெளிச்சமாகத் துப்பாக்கிச்சூடும் வழிப்பறிகளும் நடக்கின்றன . பாஜகவுக்கு பணி செய்வதற்கான திறமையோ எண்ணமோ கிடையாது. டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்துவிட்டால் சட்ட ஒழுங்கை சீர்குலைத்ததை போல, பள்ளிகள், மருத்துவமனை என அனைத்து கட்டமைப்பையும் சிதைத்து விடுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

    இந்நிலையில் இந்த விமர்சனத்தால் கொந்தளித்த பாஜக அதிஷியை பொம்மை முதல்வர் என்று விமர்சித்துள்ளது. மேலும் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது முதலமைச்சர் குடியிருப்பில் அதிக செலவு செய்து பொருட்களை வாங்கியாக ஒரு லிஸ்டை வெளியிட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள், மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் செயல்படுத்துவதை காண்காணிக்க குழு.
    • கண்காணிக்கும் குழுவின் தலைவராக சிவராஜ் சிங் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பிரதமர் மோடி அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் செயல்படுத்துவதை காண்காணிக்க விவசாயம், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் காண்காணிப்பு குழுவை அமைத்துள்ளார் பிரதமர் மோடி.

    பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், கட்டமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் செயல்படுவதை இந்த குழு கண்காணிக்கும்.

    இந்த குழுவின் முதல் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் கடந்த 18-ந்தேதி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் அனைத்து துறைகளின் செயலாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

    அனைத்து திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்கும் அதிகாரத்தை சிவராஜ் சிங் சவுகானிடம் பிரதமர் மோடி வழங்கியுள்ளார். 2014-ல் பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து தற்போது வரையிலான திட்டங்கள் குறித்து சிவராஜ் சிங் தலைமையிலான குழு காண்காணிக்கும்.

    திட்டங்களில் ஏதாவது குறைபாடு இருந்தாலோ அல்லது மந்திரிகளிடையிலான ஆதரவு தேவைப்பட்டாலோ பிரதமர் அலுவலகம் எதிர்பார்ப்பதை சம்பந்தபட்ட துறைகளின் செயலாளர்களிடம் சவுகான் எடுத்துரைப்பார்.

    அன்றாட நிர்வாகம் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் ஆகிய இரண்டிலும் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதால், அரசாங்க திட்டங்களைச் செயல்படுத்துவதில் கால தாமதம் குறித்து கவலைப்படுவதாகவும், தனது அச்சங்களை அடிக்கடி தனது செயலர்கள் மற்றம் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளுடன் தனிப்பட்ட கூட்டங்களில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாகத்தான் சிவராஜ் சிங் தலைமையில் கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேச முன்னாள் முதல்வராவார். மூன்று முறை இவர் மத்திய பிரதேச மாநில முதல்வராக இருந்துள்ளார். 2024-ல் பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு செய்யப்பட்டபோது, இவரது பெயரும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 1960-களில் கட்டப்பட்டது.
    • உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் 220 கோடிக்கு அதிகமான டோஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தில் பணியாற்றி வரும் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநில டாக்டர்களின் அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இரு மாநிலங்களின் புதிய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தொடர்பாக பேசினார். அப்போது, இந்த மருத்துவக்கல்லூரிகளின் தரத்தை குறைக்கமாட்டோம் என உறுதிபட தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 1960-களில் கட்டப்பட்டது. ஆனால் 1980-களில்தான் அரு ஒரு பிராண்டாக உருவெடுத்தது. அந்தவகையில் எந்தொரு நிறுவனமும் முழு அளவில் வளர்ச்சியடையவும், இயங்கவும் 20 ஆண்டுகள் எடுக்கும்.

    அதேநேரம் எய்ம்ஸ் தரத்தை குறைக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அந்த பிராண்ட் பெயரை பாதுகாப்போம். மேலும் ஆசிரியர் தேர்வில் எந்தவித சமரசமும் செய்யமாட்டோம்.

    பீகாரின் தர்பங்காவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான பூமி பூஜை விரைவில் நடைபெறும். ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி ஊழியர் தேர்வுடன் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    மருத்துவக்கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான கொள்கை மாற்றங்கள் நடந்துள்ளது.

    ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை மையங்கள் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திராக மாற்றப்பட்டு உள்ளன. தற்போது 1.73 லட்சம் மந்திர்கள் உள்ளன. டிஜிட்டல் முறையில் அவற்றின் தர மதிப்பீடு நடைபெறுகிறது.

    பிரதம மந்திரி தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் இலவசமாக டயாலிசிஸ் செய்யப்படுகிறது.

    உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் 220 கோடிக்கு அதிகமான டோஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    387 ஆக இருந்த நாட்டின் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 786 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 156 மாவட்ட மருத்துவமனைகள் மருத்துவக்கல்லூரிகளாக மாற்றப்பட்டு உள்ளன.

    இதைப்போல எம்.பி.பி.எஸ் மற்றும் முதுகலை மருத்துவப்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையை 75 ஆயிரத்துக்கு மேல் உயர்த்தவும் திட்டம் உள்ளது.

    இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு.
    • 6 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு டாக்டரும் கொல்லப்பட்டார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தில் நேற்றிரவு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் ஒரு மருத்துவர் மற்றும் ஆறு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    அப்பாவி பொதுமக்களை கொலை செய்வது, பொதுமக்கள் இடையே வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை பரப்புவது போன்ற செயல்கள் மனித குலத்திற்கு எதிரானது. இந்த செயலுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து நிற்கிறது. உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடை வேண்டுகிறேன்.

    இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் எனும் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமானம் நடைபெற்று வருகிறது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்டர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

    ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 674 ரன்கள் குவித்தது.
    • 3ம் நாள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெடுக்கு 264 ரன்கள் எடுத்தது.

    புதுடெல்லி:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    குரூப் டி பிரிவில் டெல்லியில் நடந்து வரும் லீக் ஆட்டத்தில் தமிழகம், டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 674 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சாய் சுதர்சன் 213 ரன், வாஷிங்டன் சுந்தர் 152 ரன், பிரதோஷ் ரஞ்சன் பால் 117 ரன் எடுத்தனர். ஜெகதீசன் அரைசதம் அடித்து 65 ரன்னில் அவுட் ஆனார்.

    தொடர்ந்து ஆடிய டெல்லி அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அந்த அணியின் யாஷ் துல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். பிரணவ் ராஜவன்ஷி 40 ரன்னும், சங்க்வான் 36 ரன்னும், தியாகி 35 ர்ன்னும் எடுத்தனர்.

    இறுதியில் மூன்றாம் நாள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது, யாஷ் துல் 103 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் லீக் ஆட்டத்தில் பெங்காலை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி பெற்றது.
    • 2வது போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி பெங்களூரு அணியை வீழ்த்தியது.

    புதுடெல்லி:

    11-வது புரோ கபடி லீக் போட்டி சமீபத்தில் தொடங்கியது. தொடக்க ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ், தபாங் டெல்லி, தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

    இந்நிலையில் , இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.

    இறுதியில் இந்த ஆட்டத்தில் 39-34 என்ற புள்ளிக்கணக்கில் பெங்காலை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி பெற்றது.

    மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 36-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உள்பட 12 விமானங்களக்கு வெடிகுண்டு மிரட்டல்.
    • நேற்று மட்டும் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    நாடு முழுவதும் விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உள்பட 12 விமானங்களக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, டெல்லி- பிராங்பேர்ட், சிங்கப்பூர்- மும்பை, பாலி- டெல்லி, சிங்கப்பூர்- புனே உள்ளிட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், இண்டிகோ நிறுவனத்தின் புனே- ஜோத்பூர், கோவா- அகமதாபாத், கோழிக்கோடு- சவுதி உள்ளிட்ட விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் சுமார் ரூ.80 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

    நேற்று மட்டும் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடுக்கு வரியை நீக்குவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.
    • ஆடம்பர பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    புதுடெல்லி:

    மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு மற்றும் டேர்ம் இன்சூரன்ஸ் ஆகியவற்றில் ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க மாநில நிதி அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது.

    மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடுக்கு வரியை நீக்குவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. இந்த வருவாயை ஈடு செய்ய ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் விலையுள்ள கடிகாரங்கள் மற்றும் ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் விலையுள்ள காலணிகள் போன்ற ஆடம்பர பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குண்டுவெடிப்புக்கான காரணத்தை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
    • அருகாமையில் உள்ள கடைகளின் பெயர் பலகையும் சேதமடைந்துள்ளது.

    டெல்லி ரோகினியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது, ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    வெடிவிபத்தைத் தொடர்ந்து தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

     

    இன்று காலை சரியாக 7.47 மணிக்கு சிஆர்பிஎப் பள்ளி அருகே பிரஷாந்த் விகாரில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மூத்த காவல் துறை அதிகாரி அமித் கோயல் வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்தில் நடத்திய சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

    இந்த வெடிவிபத்து காரணமாக அருகில் நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடிகள் சேதமடைந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அருகாமையில் உள்ள கடைகளின் பெயர் பலகையும் சேதமடைந்துள்ளது. 



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 13-ம் தேதி அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகர் சென்றடைந்தார் ஜனாதிபதி முர்மு.
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சுற்றுப்பயணத்தின் நிறைவு பகுதியாக மலாவி நாட்டிற்கு சென்றார்.

    புதுடெல்லி:

    ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய 3 நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இந்தப் பயணத்தின் முதல் பகுதியாக கடந்த 13-ம் தேதி அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகர் சென்றடைந்த ஜனாதிபதி முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் மற்றும் அவருடைய மந்திரி சபை உறுப்பினர்கள் வரவேற்றனர். அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி என்னும் பெருமையை முர்மு பெற்றார்.

    இதையடுத்து, தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது பகுதியாக மொரிடேனியா நாட்டிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்றார். அவரை அந்நாட்டின் ஜனாதிபதி முகமது ஆல்ட் கசோனி வரவேற்றார். தலைநகர் நாக்சாட்டில் இந்திய சமூகத்தினருடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திரவுபதி முர்மு கலந்துகொண்டார்.

    தொடர்ந்து, தனது சுற்றுப்பயணத்தின் நிறைவு பகுதியாக மலாவி நாட்டிற்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை, அந்நாட்டின் துணை ஜனாதிபதி மைக்கேல் யூசி நேரில் சென்று வரவேற்றார். அதன்பின் மலாவி ஜனாதிபதி லாசரஸ் சக்வேராவை சந்தித்து திரவுபதி முர்மு பேச்சுவார்த்தை நடத்தினார். மலாவி நாட்டிற்கு மனிதாபிமான உதவியாக 1,000 மெட்ரிக் டன் அரிசி, சுகாதார ஒத்துழைப்பின் அடையாளமாக புற்றுநோய் சிகிச்சை இயந்திரம் ஆகியவற்றை திரவுபதி முர்மு வழங்கினார்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை டெல்லி திரும்பினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 674 ரன்கள் குவித்தது.
    • சாய் சுதர்சன் 213 ரன்னும், வாஷிங்டன் 156 ரன்னும் எடுத்தனர்.

    புதுடெல்லி:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது.

    குரூப் டி பிரிவில் டெல்லியில் நடந்து வரும் லீக் ஆட்டத்தில் தமிழகம், டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன், ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். ஜெகதீசன் அரைசதம் அடித்து 65 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து இறங்கிய வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சனுடன் இணைந்து நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் டெல்லி வீரர்கள் திணறினர்.

    நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். முதல் நாள் முடிவில் தமிழகம் 1 விக்கெட்டுக்கு 379 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 202 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 96 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 158.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 674 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சாய் சுதர்சன் 213 ரன், வாஷிங்டன் சுந்தர் 152 ரன், பிரதோஷ் ரஞ்சன் பால் 117 ரன் எடுத்தனர்.

    இதையடுத்து டெல்லி அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. இரண்டாம் நாள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது.

    ×