என் மலர்

    டெல்லி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடப்பு ஆண்டுக்கான நமன் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
    • இந்த விழாவில் ஆண்டின் சிறந்த வீரர் விருது சுப்மன் கில்லுக்கு அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு பிசிசிஐ விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான நமன் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.

    இந்த விழாவில் ராகுல் டிராவிட்டுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார் ஐசிசி தலைவர் ஜெய்ஷா.

    மேலும், முன்னாள் வீரர் ரோஜர் பின்னி மற்றும் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவித்தனர். ஆண்டின் சிறந்த வீரர் விருது சுப்மன் கில்லுக்கு அளிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கன்ஷிராம் இந்திய அரசியலின் தன்மையை மாற்றியமைத்தவர்.
    • இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தினார் என்றார்.

    புதுடெல்லி:

    பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனரான கன்ஷி ராம் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, கன்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

    இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    கன்ஷி ராம் இந்திய அரசியலின் தன்மையை மாற்றியமைத்தவர். தனது இயக்கங்கள் மூலம் ஏழைகளிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவர்களின் வாக்கு, குரல் மற்றும் பிரதிநிதித்துவம் முக்கியம். இந்த நாடு அனைவருக்கும் சமமானது.

    நமது அரசியலமைப்பு ஒவ்வொரு இந்தியருக்கும் சமத்துவம், கண்ணியம் மற்றும் பங்கேற்பை உறுதியளிக்கிறது.

    சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு இந்த வாக்குறுதிகளை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்காக கன்ஷிராம் ஜி தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவ்வாறு செய்வதன் மூலம் அவர் இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தினார்.

    அவருக்கு மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்குவது நமது நாட்டிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும்.

    இது அவரை அதிகாரமளித்தல் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக தொடர்ந்து பார்க்கும் மில்லியன் கணக்கான மக்களின் விருப்பங்களை மதிக்கும் என தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலியாக உள்ள 6 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மகாராஷ்டிரம், குஜராத்தில் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவாவில் காலியாக உள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மகாராஷ்டிரம், குஜராத்தில் ஏப்ரல் 23-ம் தேதியும், கர்நாடகம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவாவில் ஏப்ரல் 9ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    கோவாவில் - போன்டா

    குஜராத்தில் - அம்ரேத்

    கர்நாடகத்தில் - பாகல்கோட், தாவநாகரி தெற்கு

    மகாராஷ்டிரத்தில் - ராஹூரி, பாராமதி

    நாகாலாந்தில் - கோரிடாங்க்

    திரிபுராவில் - தர்மாநகர்

    வாக்குப்பதிவு முடிந்து மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும், அதன் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி வாக்காளர்களுக்கு வாழ்த்துகள்.
    • 5 மாநிலங்களிலும் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிடுவது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

    டெல்லியில் இந்திய தேர்தல் தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

    அப்போது அவர் உரையாற்றியதாவது:-

    கடந்த சில மாதங்களாக 5 மாநிலங்களிலும் உயரதிகாரிகள், அரசியல் கட்சிகளை சந்தித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ததை அடுத்து இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி வாக்காளர்களுக்கு வாழ்த்துகள். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் களத்தில் உழைத்த, ஒத்துழைத்த ஊழியர்களுக்கு வாழ்த்துகள்.

    5 மாநிலங்களிலும் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில், தமிழகத்தில் உள்ள 5.67 கோடி வாக்காளர் உள்பட 5 மாநிலங்களிலும் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்.

    சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்.

    தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் பணியில் 8.5 லட்சம் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 25 லட்சம் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் 30 வினாடிகளில் இருந்து 3 முதல் 5 வினாடிகளாக குறையும்.
    • ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    இந்தியாவில் தினமும் 2.3 கோடி மக்கள் ரெயில்களை பயன்படுத்துகிறார்கள். இந்திய ரெயில்வே, 1986-ம் ஆண்டில் இருந்தே பயணிகள் முன்பதிவு அமைப்பு (பி.ஆர்.எஸ்.) எனப்படும் முன்பதிவு நடைமுறையையே பயன்படுத்தி வருகிறது.

    இது பல ஆண்டுகளாக சிக்கல்களை சந்தித்து வந்தது. தட்கல் முன்பதிவின் போது அடிக்கடி செயலி செயலிழப்பது, 30 வினாடி தாமதம் ஏற்படுவது மற்றும் தொழில்நுட்ப சிக்கல் என பல பிரச்சனைகள் இருந்தது.

    ஒவ்வொரு நாளும் இது ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த சூழலில் பழைய நடைமுறையை மாற்றியமைத்து, 5 மடங்கு வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் அடுத்த தலைமுறை அமைப்பு அறிமுகமாக உள்ளது.

    அதாவது தற்போதைய பயணிகள் முன்பதிவு அமைப்பு நிமிடத்திற்கு 8 ஆயிரம் டிக்கெட்டுகளை கையாளும் தன்மை கொண்டது. புதிய அமைப்பானது கிளவுட்-நேட்டிவ் மைக்ரோ சர்வீசஸ் கட்டமைப்பு மூலம் ஒரு நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

    இதன் மூலம், தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் 30 வினாடிகளில் இருந்து 3 முதல் 5 வினாடிகளாக குறையும். அதேபோல் இப்போது தட்கல் டிக்கெட் எடுக்கும்போது தொழில்நுட்ப சிக்கல் ஏற்படுகிறது. இதனால் உண்மையாகவே டிக்கெட் கிடைக்க வேண்டிய மக்களுக்கு அவை கிடைப்பதில்லை.

    இந்த தொழில்நுட்ப சிக்கலை கண்டறிந்து அதை சரிசெய்யும் தொழில்நுட்பமும் இந்த புதிய அமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளையும் தடுக்கும். அதிக தேவை உள்ள முன்பதிவுகளுக்கு ஆதார் ஓ.டி.பி. மற்றும் முக அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டு, இணைய அச்சுறுத்தல்கள் முறியடிக்கப்படும்.

    குபெர்னெட்ஸ் தொழில் நுட்பம் ஒருங்கிணைந்த கிளஸ்டர்கள் மூலம் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிக டிக்கெட்டுகள் கையாள முடியும். இது தற்போதைய 2 கோடி தினசரி பரிவர்த்தனைகளை விட 10 மடங்கு அதிகமாகும். பி.ஆர்.எஸ்., யு.டி.எஸ். மற்றும் இ-டெண்டரிங் ஆகியவற்றை "ரெயில்ஒன் சூப்பர் செயலி" என்ற ஒற்றை தளத்தில் இணைத்து, டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்தல், பணத்தை திரும்ப பெறுதல், பி.என்.ஆர். நிலை, இருக்கையின் தன்மை போன்ற அனைத்து சேவைகளுக்கும் ஒரே உள் நுழைவை இது வழங்கும்.

    ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். சரிபார்க்கப்படாத பயன்பாட்டாளர்கள் 2-ம் நாளில் இருந்து முன்பதிவு செய்ய வேண்டும். இதுவே மோசடியை ஓரளவுக்கு தடுக்கும்.

    இதில் தற்போதைய இருக்கையின் நிலை, நடைமேடை எண்கள், ரெயில் டிக்கெட் கட்டண விவரம் என எல்லாமே இருக்கும். அதேபோல காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகளின் உறுதிப்படுத்தும் வாய்ப்பும் கணிசமாக மேம்படும்.

    இந்த புதிய திட்டத்தின் மூலம் மோசடிகள் குறைக்கப்பட்டு ஆண்டுக்கு சுமார் ரூ.60 ஆயிரம் கோடி பாதுகாக்கப்படும். ரூ.500 கோடி மதிப்பிலான தட்கல் கருப்பு சந்தை தடுக்கப்படும். மேலும், பிரீமியம் ரெயில்களில் மாறும் விலை நிர்ணயம் செய்வதன் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது வழக்கமான சாப்ட்வேர் மேம்பாடு மட்டுமல்லாமல், 2047-ம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் அதிவேக ஹைப்பர்லூப் ரெயில்களின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1986-ம் ஆண்டில் இருந்த 2ஜி டிக்கெட்டிங்கில் இருந்து 2026-ம் ஆண்டுக்கான 6ஜி டிக்கெட்டிங்கிற்கு முன்னேற்றம் அடையவுள்ளது. இது பண்டிகை காலங்களில் ரெயில்களை பயன்படுத்தும் பல கோடி பேருக்கு வரபிரசாதமாக அமையும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2-வது முறையாக ஜனவரி 19-ந்தேதி விஜய் மீண்டும் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.
    • விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தும் இந்த தொடர் விசாரணை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி தமிழக வெற்றிக்கழக தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று பேசினார்.

    பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் விஜய் பஸ்சில் நின்றபடி பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் பலியானார்கள்.

    நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவத்துக்கு காரணம் பாதுகாப்பு குறைபாடுகள் என்று தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் சொல்லப்பட்டதால் போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

    அதன்பிறகு 2-வது முறையாக ஜனவரி 19-ந்தேதி விஜய் மீண்டும் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, 3-வது முறையாக டெல்லியில் சி.பி.ஐ. அலுவலகத்தில் மார்ச் 10-ந்தேதி விசார ணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விஜய் தரப்பில், டெல்லிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கேட்கப்பட்டது.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாகவும், டெல்லிக்கு பதிலாக தமிழகத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடத்துமாறும் விஜய் தரப்பில் கோரப்பட்டது.

    ஆனால், அதை ஏற்க மறுத்த சி.பி.ஐ. அதிகாரிகள் மார்ச் 15-ந்தேதி (இன்று) விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

    இதையடுத்து, சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராவதற்காக விஜய் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து நேற்று பிற்பகலில் காரில் புறப்பட்ட விஜய் சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து விஜய் நேற்று மாலை தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    விஜய்யுடன் கட்சி நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட 7 பேர் உடன் சென்றனர். நேற்று இரவு டெல்லி சென்ற விஜய், இரவில் அங்குள்ள தாஜ் மான்சிங் ஓட்டலில் தங்கினார்.


    இன்று காலையில் விஜய் ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு விஜய், சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகும் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து பேசியது ஏன்? பாதுகாப்பு ஏற்பாடுகளில் எங்கே குளறுபடி ஏற்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது.

    நெரிசல் சம்பவம் நடந்த போது என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களையும் கேட்டதாக தெரிகிறது. மேலும் விசாரணையின் போது ஏற்கனவே கேட்கப்பட்ட கூடுதல் ஆவணங்களையும் விஜய் தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து உள்ள நிலையில், விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தும் இந்த தொடர் விசாரணை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விசாரணை இன்று மாலை வரை நீடிக்கலாம் என்றும், தேவைப்பட்டால் நாளையும் தொடர வாய்ப்பு உள்ளதாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணையின் முடிவை பொறுத்து விஜய் எப்போது சென்னை திரும்புவார் என்பது தெரியவரும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரான் அரசாங்கம் அளித்த பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தது.
    • இந்திய கரையை அடையும் என்று தெரிவித்தார்.

    அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. அந்த வழியாக செல்ல முயலும் எந்த ஒரு கப்பலும் அழிக்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்தது.

    உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி பாதையாக வளைகுடா நாடுகளை இந்த பாதையே உலகத்துடன் இணைத்து வந்தது.

    எனவே எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியை இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன.

    ஈரான் அரசாங்கம் அளித்த பாதுகாப்பு உத்தரவாதத்தைத் தொடர்ந்து, ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய 2 கப்பல்கள் பதற்றம் நிலவும் ஜலசந்தியை கடந்து பாதுகாப்பான கடற்பகுதிக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

    துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், இந்த இரண்டு கப்பல்களும் மொத்தம் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றி வருகின்றன.

    'ஷிவாலிக்' கப்பல் மார்ச் 16-லும், 'நந்தா தேவி' கப்பல் மார்ச் 17-லும் இந்தியக் கரையை அடையும் என்று தெரிவித்தார்.

    இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு அச்சம் காரணமாக மத்திய அரசு வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தியது. சமயல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கு ஒரு முறையும், கிராம புறங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறையில் எல்பிஜி முன்பதிவு அனுமதிக்கப்படுகிறது.

    இந்த சூழலில் இந்த 2 எரிவாயு கப்பலின் வருகை இந்திய மக்களுக்கு நிவாரணமாக அமையும் என்று நம்பப்படுகிறது.

    இதற்கிடையே பாரசீக வளைகுடா பகுதியில் தற்போது 22 இந்தியக் கப்பல்களில் 611 இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடியுள்ளது.
    • அவ்வழியே செல்லமுயலும் கப்பல் அழிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

    புதுடெல்லி:

    அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. அந்த வழியாக செல்ல முயலும் எந்த ஒரு கப்பலும் அழிக்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்தது.

    உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி பாதையாக வளைகுடா நாடுகளை இந்த பாதையே உலகத்துடன் இணைத்து வந்தது. எனவே கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியை இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன. இந்திய கப்பல்களுக்கு மட்டும் இந்த வழியாக செல்ல ஈரான் அனுமதி அளித்தது.

    இந்நிலையில், பாரசீக வளைகுடாவிற்கு அருகில் பல இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கிருந்து இந்தியாவை நோக்கி வரும் வணிகக் கப்பல்களுக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க அவை தயார் நிலையில் உள்ளன என தகவல் வெளியானது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லடாக்கில் நடந்த வன்முறைக்கு இவரே காரணம் என்று குற்றம்சாட்டியது.
    • வாங்சுக்கின் கைது சட்டவிரோதமானது என்று அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    சுற்றுச்சூழல் ஆர்வலரும் லடாக் மாநில அதஸ்துக்காக தொடர்ந்து போராடி வருபவருமான விஞ்ஞானி சோனம் வான்சுக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

    லடாக்கில் அரசுக்கு எதிராக இளைஞர்களை தூண்டிவிட்டு வன்முறையை ஊக்குவித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    லடாக்கில் நடந்த போராட்டங்களில் 4 பேர் உயிரிழந்ததற்கும் 90 பேர் காயமடைந்ததற்கும் இவரே காரணம் என அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    பாகிஸ்தானுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் லடாக் காவல்துறை அவர் மீது குற்றம்சாட்டியது.

    வாங்சுக்கின் கைது சட்டவிரோதமானது என்று அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, சோனம் வாங்சுக் மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லடாக்கில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மீட்டெடுக்கவும் வளர்ப்பதற்கும் மத்திய அரசு விரும்புகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்மூலம் 6 மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு சோனம் வாங்சுக் விடுதலை செய்யப்பட உள்ளார்.

    யார் இந்த வாங்சுக்?

    2009-ல் வெளியான '3 இடியட்ஸ்' (தமிழில் 'நண்பன்') திரைப்படத்தில் அமீர் கான் (தமிழில் விஜய்) நடித்த கொசக்சி பசபுகழ் என்ற கதாபாத்திரம், சோனம் வாங்சுக்கின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டதாகும்.

    படத்தில் மாணவர்களுக்கு செயல்முறை ரீதியாக கற்பிக்கும் பள்ளி  லடாக்கில் சோனம் வாங்சுக்-ஆல் நடத்தப்படுகிறது. லடாக்கில் சிறந்த கல்வியாளராக அறியப்பட்ட வாங்சுக், லடாக்கின் உரிமைகளுக்காக போராடும் தார்மீகக் குரலாக உருவெடுத்தார்.

    லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, பழங்குடியின மக்களின் நிலம் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க 6-வது அட்டவணை அந்தஸ்து, லடாக்கிற்கு பாராளுமன்ற தொகுதிகள் ஆகியவை வாங்சுக் மற்றும் லடாக் மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் மத்திய அரசு இவற்றை வழங்க திட்டவட்டமாக மறுத்து வருகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர் முறை உள்ளது.
    • குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

    உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகச் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்படுத்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் முடிவெடுத்துள்ளார்.

    உச்சநீதிமன்ற வட்டாரத்தின்படி, வழக்கு ஒதுக்கீடு (Case Allocation) மற்றும் அமர்வுகளைத் தீர்மானிக்கும் பணிகளில் இருந்து மனிதக் குறுக்கீட்டை நீக்கிவிட்டு, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த அவர் முடிவெடுத்துள்ளார்.

    தற்போது நடைமுறையில் உள்ள 'மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்' (Master of the Roster) முறையின்படி, எந்த வழக்கை எந்த நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதியே முடிவு செய்வார்.

    அண்மையில் உத்தரப் பிரதேச குண்டர் சட்டத்திற்கு எதிராக இர்பான் சோலங்கி என்பவர் தாக்கல் செய்த மனுவை சூர்யா காந்த் அமர்வு விசாரித்தது.

    விசாரணையின் போது, இதேபோன்ற ஒரு மனு ஏற்கனவே 2022-ல் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது பின்னர் தெரியவந்தது.

    தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கு, மீண்டும் ஒரு புதிய அமர்வின் முன் எப்படி பட்டியலிடப்பட்டது குறித்து நடந்த உள் விசாரணையில் உச்ச நீதிமன்றப் பதிவகத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

    எனவே இனி வழக்குகள் மற்றும் அமர்வுகளை ஒதுக்கீடு செய்யும் பணியை இனி AI மென்பொருள் கவனிக்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல், சீரான முறையில் வழக்குகளைப் பட்டியலிடும் என்று நம்பப்படுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவர்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லும் நிலையை உருவாக்கும்
    • முதலாளிகளின் மனநிலை பெண்களின் வேலைவாய்ப்பிற்கு எதிராக மாறும்.

    பெண்களுக்கான மாதவிடாய் விடுமுறையை சட்டரீதியாகக் கட்டாயமாக்குவது, அவர்களின் வேலைவாய்ப்புகளை பாதிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    இதன்போது பேசிய தலைமை நீதிபதி சூர்யா காந்த், "மாதவிடாய் விடுமுறையை சட்டமாக கட்டாயமாக்கினால், நிறுவனங்களின் உரிமையாளர்கள் பெண்களை வேலைக்கு எடுக்கத் தயங்குவார்கள்.

    இது பெண்களின் தொழில் வாழ்க்கையை பாதித்து, அவர்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லும் நிலையை உருவாக்கும்.

    இத்தகைய சட்டம், பெண்கள் தங்களை ஆண்களை விடக் குறைந்தவர்கள் என்று நினைக்கும் ஒரு மனநிலையை உருவாக்கும்.

    சில தனியார் நிறுவனங்கள் தானாக முன்வந்து இந்த விடுமுறையை அளிப்பது வேறு, ஆனால் அதை ஒரு சட்டமாகக் கட்டாயமாக்கும்போது முதலாளிகளின் மனநிலை பெண்களின் வேலைவாய்ப்பிற்கு எதிராக மாறும்" என்று தெரிவித்தார்.

    இதே வழக்கில் கடந்த ஜனவரி மாதம், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "மாதவிடாய் சுகாதாரம் என்பது பெண்களின் வாழும் உரிமை, கல்வி மற்றும் ஆரோக்கியத்தின் ஒரு பகுதி" என்று கூறியிருந்தது.

    மேலும், இலவச சானிட்டரி நாப்கின்கள் மற்றும் கழிப்பறை வசதிகளை உறுதி செய்ய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இருப்பினும், விடுமுறையை சட்டரீதியாகக் கட்டாயமாக்குவது நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும் என்று தலைமை நீதிபதி தற்போது சுட்டிக்காட்டியுள்ளார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரத்த தானத்தைத் தடுப்பது பாரபட்சமானது.
    • பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    இரத்த தானம் செய்வதிலிருந்து திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு இருக்கும் தடையை நீக்க உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு இன்று இந்த மனுவை விசாரித்தது.

    மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெயினா கோத்தாரி, "பாலியல் அடையாளம் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் இரத்த தானத்தைத் தடுப்பது பாரபட்சமானது.

    இரத்தம் தானமாகப் பெறப்பட்ட பிறகு அது எச்.ஐ.வி உள்ளிட்ட நோய்களுக்காகப் பரிசோதிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது இந்தத் தடை தேவையற்றது.

    கோவிட்-19 பெருந்தொற்றின் போது, திருநங்கைகள் தங்கள் குடும்பத்தினருக்கே இரத்தம் கொடுக்க முடியாமல் இந்த விதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்" என்று வாதிட்டார்.

    இதற்கிடையே கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, மருத்துவ நிபுணர்கள் இந்த விவகாரத்தை மீண்டும் ஆய்வு செய்தனர்.

    இந்தத் தடையைத் தளர்த்தினால், அது மற்றவர்களுக்கு (இரத்தம் பெறுபவர்களுக்கு) பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதை சுட்டிக்காட்டிய மத்திய அரசு, இந்த தடையை தளர்ந்த உச்சநீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்தது.

    திருநங்கைகள், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்கள் ஆகியோர் எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, சி தொற்று ஏற்படும் அதி அபாயப் பிரிவினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என மத்திய அரசு கூறியுள்ளது.

    மத்திய அரசின் நிபுணர் குழு அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்தத் தடை தொடர அனுமதித்துள்ளது.

    "தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வசதியில்லாத லட்சக்கணக்கான ஏழை மக்கள் அரசு இரத்த வங்கிகளையே நம்பியுள்ளனர்.

    அவர்களுக்குத் தொற்று ஏற்பட 1 சதவீத வாய்ப்பு இருந்தால் கூட, நாம் ஏன் அவர்களை ஆபத்தில் தள்ள வேண்டும்?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இந்த வழக்கைப் "ஆடம்பர வழக்கு" என்று குறிப்பிட்ட நீதிமன்றம், ரத்தம் பெறுபவர்களுக்குச் சுத்தமான இரத்தம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. 

    ×