என் மலர்

    டெல்லி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
    • பாகிஸ்தான் தனது போர் விமானங்களை இந்திய எல்லை அருகே குவித்து வருகிறது.

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.

    அந்த பயங்ரகவாதிகளுக்கு வேட்டையாடும் பணியை இந்திய பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி வருகிறார்கள். காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவி செய்தவர்களும் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள்.

    எனவே இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் அரபிக் கடலில் இந்திய போர் கப்பல்கள் அக்ரான் என்ற பெயரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. மேலும் ராஜஸ்தான், பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினரின் பயிற்சி அதிகரித்துள்ளது. ராணுவ வாகனங்களும் அதிகமாக செல்ல தொடங்கி உள்ளன.

    பாகிஸ்தான் தனது போர் விமானங்களை இந்திய எல்லை அருகே குவித்து வருகிறது. இந்தியா தாக்குதல் நடத்தினால் எப்படி சமாளிப்பது என்று ஆலோசித்து வருகிறது.

    இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலையிலான ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், முப்படைத் தளபதிகள், முப்படைத் தலைமை தளபதி அனில் சவுகான்  ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேசத்தின் பாதுகாப்பில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது.
    • உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்வி ரவீந்திரன் தலைமையிலான பெகாசஸ் தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை வெளியிட வலியுறுத்தினர்.

    இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகளின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் உளவு பார்க்க பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தியது தொடர்பான புகார் மனுக்களை நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் உச்சநீதிமன்ற அமர்வு இன்று விசாரித்தது.

    விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக தேசவிரோதிகளின் செல்போன்களை பெகாசஸ் மூலம் கண்காணிப்பதில் என்ன தவறு உள்ளது? அதில் எந்த தவறுமே இல்லை.

    தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது. அது யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி. தனிநபர்களுக்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டால் அப்போது இந்த புகாரை பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையில் விசாரணையின்போது, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ஷ்யாம் திவான், தினேஷ் திவேதி ஆகியோர், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்வி ரவீந்திரன் தலைமையிலான பெகாசஸ் தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை வெளியிட வலியுறுத்தினர்.

    ஆனால் இதை மறுத்த நீதிபதிகள், தேசப்பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் அறிக்கையில் இடம் பெற்றிருந்தால் அதை பொதுவெளியில் விவாதிக்க முடியாது என்று கோரிக்கையை நிராகரித்தனர்.

    மேலும் யார் யார் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை உச்சநீதிமன்றம் அமைத்த பெகாசஸ் தொழில்நுட்பக் குழுவிடம் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், தனிநபர் உரிமைகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் விசாரணையின்போது கண்டறியப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்த அமலாக்கத் துறை தெரிவித்தது.
    • 2ஜி வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் உண்மை வெளிவந்துவிட்டது.

    இந்தியாவில் 2010 இல் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசியல் களத்திலும் இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போட்டியின் ஏற்பாட்டுக் குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து 13 ஆண்டுகள் விசாரணை நடத்திய வந்தது

    இந்நிலையில் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் பண முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் விசாரணையின்போது கண்டறியப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்த அமலாக்கத் துறை வழக்கை முடித்து வைக்கும்படி டெல்லி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

    இந்த அறிக்கையை ஏற்று நீதிபதி சஞ்சீவ் அகா்வால் நேற்று இந்த வழக்கை முடித்து வைத்தார். மேலும் சுரேஷ் கல்மாடி விடுதலை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 

    இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "காங்கிரசை இழிவுபடுத்த 2ஜி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போன்ற ஊழல்களைப் பிரதமர் மோடியும், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஜோடித்தனா்.

    2ஜி வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் உண்மை வெளிவந்துவிட்டது.2ஜி வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் உண்மை வெளிவந்துவிட்டது.

    தற்போது காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டு வழக்கை முடித்து வைக்குமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

    இந்த விவகாரத்தில் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தியதற்கு மோடியும், கேஜ்ரிவாலும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
    • 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்வதாக அறிவித்தது.

    ஜம்மு காஷ்மீரில் குட்டி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பா உடைய கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 

    இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பின் X கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கப்பட்டது.  அமைச்சர் கவாஜா ஆசிப், "இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்; நாங்கள் தயாராக உள்ளோம்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    நேற்றைய தினம் இந்தியா, அதன் ராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்வதாக அறிவித்தது.

    இதில் பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் உடைய சேனல் மற்றும் பிரபல செய்தி நிறுவனங்களின் சேனல்களும் அடங்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை இந்திய உளவுப்படை கண்காணித்த படி உள்ளது.
    • பாகிஸ்தான் மீது சில பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    காஷ்மீரில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். இதில் 27 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கம்தான் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உளவுத் துறையின் தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதல் நடந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.

    இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறது. எந்த நேரத்திலும் இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடும் பதற்றம் நிலவி வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று இரவு பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

    இதற்கிடையே எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை இந்திய உளவுப்படை கண்காணித்த படி உள்ளது. பயங்கரவாதிகள் காஷ்மீரில் இருக்கும் தங்களது சிலிப்பர் செல் ஆதரவாளர்களுடன் பேசி வருவதையும் உளவுத் துறையினர் இடைமறித்து கேட்டு தகவல்களை சேகரித்து வருகிறார்கள். இதனால் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் காஷ்மீர் பாதுகாப்பு நடவடிக்கை, பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாகிஸ்தான் மீது சில பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்கள் குறைவான மதிப்புடைய நோட்டுகளுக்கு திண்டாட வேண்டியுள்ளது.
    • அனைத்து ஏ.டி.எம்.களிலும் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் இந்த முறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    வங்கி ஏ.டி.எம்.களில் 500 ரூபாய் நோட்டுகள்தான் பெரும்பாலும் வைக்கப்படுகின்றன. இதனால் மக்கள் குறைவான மதிப்புடைய நோட்டுகளுக்கு திண்டாட வேண்டியுள்ளது.

    எனவே இந்த குறையை போக்குவதற்காக வங்கி ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். ஆபரேட்டர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

    இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அடிக்கடி பயன்படுத்தும் குறைந்த மதிப்பு கொண்ட பணத்தாள்கள் மக்களுக்கு அதிகமாக கிடைக்கும் வகையில் ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை வழக்கமான அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும். இதை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.

    அந்தவகையில் 75 சதவீத ஏ.டி.எம்.களில் வருகிற செப்டம்பர் 30-ந்தேதிக்குள் குறைந்தபட்சம் ஒரு அறையிலாவது மேற்படி நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு கூறியுள்ள ரிசர்வ் வங்கி, அனைத்து ஏ.டி.எம்.களிலும் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் இந்த முறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சில காங்கிரஸ் தலைவர்கள் மீடியாக்களில் பேசி வருகின்றனர்.
    • அவர்களுடைய கருத்து அவர்களுடையதானது. காங்கிரஸ் கட்சியின் பார்வையை பிரதிபலிக்காது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர்களின் கருத்துகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளதாக பாஜக-வினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சைபுதீன் சோஸ், பஹல்காம் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை என பாகிஸ்தானை கூறினால், இதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே எனத் தெரிவித்திருந்தார். கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, "நாங்கள் போருக்கு ஆதரவாக இல்லை. போரை விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் தலைவர்களின் கருத்துகளில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி நிற்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர், செய்தி தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    மேலும், "காங்கிரஸ் காரிய கமிட்டி கடந்த 24ஆம் தேதி கூடியது. அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சில காங்கிரஸ் தலைவர்கள் மீடியாக்களில் பேசி வருகின்றனர். அவர்களுடைய கருத்து அவர்களுடையதானது. காங்கிரஸ் கட்சியின் பார்வையை பிரதிபலிக்காது.

    இந்த மிக முக்கியமான நேரத்தில், காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானம், கார்கே மற்றும் ராகுல் காந்தி வெளிப்படுத்திய கருத்துகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளின் கருத்துக்கள் மட்டுமே காங்கிரசின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டு நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதல் இந்திய குடியரசு மீதான நேரடி தாக்குதல். இந்த தாக்குதல் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் வெளிப்படையான குறைபாடு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவை 18 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • ராணாவை மேலும் 12 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக இன்று இந்தியா கொண்டு வரப்பட்டார்.

    டெல்லி வந்தடைந்ததும் என்.ஐ.ஏ. முறையாக ராணாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.

    தஹாவூர் ராணாவை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் டெல்லி பாட்டியாலா கோர்ட் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 20 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். என்.ஐ.ஏ. மனுவை விசாரித்த சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிபதி சந்தர் ஜித் சிங், ராணாவை காவலில் எடுக்க உத்தரவிட்டார்.

    பின்னர், மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவை 18 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    இந்நிலையில், ராணாவை மேலும் 12 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ராணாவுக்கான என்ஐஏ காவல் இன்றுடன் நிறைவடைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ராணாவுக்கு கூடுதலாக 12 நாட்கள் என்ஐஏ காவலை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவர்களின் அனைத்து அறிக்கைகளும் பாகிஸ்தானில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு ஒரு ஊடக பிரசாரம் நடந்து வருகிறது.
    • நாடு பொதுவான தொனியில் பேச வேண்டிய நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு முன்னால் நாட்டை இழிவுபடுத்துகிறார்கள்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இரு நாடுகளில் படைகளை உஷார்படுத்தி வருகின்றன.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், பஹல்காம் தாக்குதலுக்கு பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை குறைபாடுதான் காரணம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, பாகிஸ்தானுக்கு எதிராக போருக்கு நாங்கள் ஆதரவாக இல்லை. நாங்கள் போரை விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

    சித்தராமையா பேசிய வீடியோவை பாகிஸ்தானின் முக்கிய செய்தி நிறுவனம ஒளிப்பரப்பியது. போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல் என்றும் செய்தி வெளியிட்டது.

    இந்த நிலையில் பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-

    ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரால் தங்கள் கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லையா?. அவர்கள் விரும்பியதை பேச அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் அனைத்து அறிக்கைகளும் பாகிஸ்தானில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு ஒரு ஊடக பிரசாரம் நடந்து வருகிறது.

    நாடு பொதுவான தொனியில் பேச வேண்டிய நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு முன்னால் நாட்டை இழிவுபடுத்துகிறார்கள். நீங்கள் (ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே) என்ன செய்கிறீர்கள்?. சித்தராமையாவிடம் ஏதேனும் கேள்விகள் கேட்கப்பட்டதா? யாரிடமாவது பொது மன்னிப்பு கேட்கச் சொல்லப்பட்டதா?. இந்த அணுகுமுறையை நாங்கள் கண்டிக்கிறோம்.

    இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மிரட்டலை கண்டு கொள்ளாத இந்திய ராணுவம் தொடர்ந்து தனது படைப்பலத்தை தயார் செய்து வருகிறது.
    • பாராளுமன்ற பாதுகாப்பு நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை ஈவுஇரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.

    அந்த தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியை இந்திய பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி வருகிறார்கள். காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதி களுக்கு உதவி செய்தவர்க ளும் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள்.

    பகல்காம் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று பிரதமர் மோடி 2 தடவை அறிவித்து உள்ளார். எனவே இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகு திக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் அரபிக் கடலில் இந்திய போர் கப்பல்கள் அக்ரான் என்ற பெயரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. மேலும் ராஜஸ்தான், பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினரின் பயிற்சி அதிகரித்துள்ளது. ராணுவ வாகனங்களும் அதிகமாக செல்ல தொடங்கி உள்ளன.

    இந்தியாவின் பதிலடி திட்டத்துக்கு உலகின் பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பயந்துபோய் இருக்கும் பாகிஸ்தான் தனது போர் விமானங்களை இந்திய எல்லை அருகே குவித்து வருகிறது. இந்தியா தாக்குதல் நடத்தினால் எப்படி சமாளிப்பது என்று ஆலோசித்து வருகிறது.

    எங்களிடம் 130 அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்று பூச்சாண்டி காட்டியபடி இருக்கிறது. பாகிஸ்தானின் இந்த மிரட்டலை கண்டு கொள்ளாத இந்திய ராணுவம் தொடர்ந்து தனது படைப்பலத்தை தயார் செய்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மோடியை மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடங்கள் அவர்களது பேச்சு நீடித்தது.

    அப்போது தேசிய பாது காப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் இருந்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் மோடியும், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கும் பல்வேறு விசயங்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பி ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களது சந்திப்பு முக்கிய மானதாக கருதப்படுகிறது.

    பகல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக அவர்கள் இருவரும் நீண்ட நேரம் விவாதித்ததாக தெரிகிறது. பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக அவர்கள் இன்று முக்கிய முடிவுகள் எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இன்று பிற்பகல் பாராளு மன்ற பாதுகாப்பு நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பகல்காம் தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    இந்த கூட்டம் முடிந்த பிறகு அந்த நிலைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும். அதன் பேரில் பல நடவடிக்கைகள் தொடங்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயங்கரவாதிகளை(Terrorists) போராளிகள் (Militants) என்று குறிப்பிட்டதற்காக பிபிசி இடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
    • ஒட்டுமொத்தமாக 63.08 மில்லியன் (6.3 கோடிக்கும்) மேலான பாலோயர்கள் உள்ளனர்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

    உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பல யூடியூப் சேனல்களை இந்திய அரசு இப்போது தடை செய்துள்ளது.

    இதனுடன் பயங்கரவாதிகளை(Terrorists) போராளிகள் (Militants) என்று குறிப்பிட்டதற்காக பிபிசி இடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் சேனல்கள் மீதான தடை குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவிற்கு எதிராக எரிச்சலூட்டும், வகுப்புவாத கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் தடுக்கப்பட்டுள்ளன.

    பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட 16 யூடியூப் சேனல்களில் (முன்னலா கிரிக்கெட் வீரர்) சோயிப் அக்தரின் சேனல் மற்றும் அங்குள்ள பல முக்கிய ஊடக நிறுவனங்களின் யூடியூப் சேனல்களும் அடங்கும். டான் நியூஸ், சாமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார் டிவி, தி பாகிஸ்தான் ரெஃபரன்ஸ், ஜியோ நியூஸ், சாமா ஸ்போர்ட்ஸ் மற்றும் உசைர் கிரிக்கெட் ஆகியவை முடக்கப்பட்டன என்று தெரிவித்தார் 

    முடக்கப்பட்ட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களில் ஒட்டுமொத்தமாக 63.08 மில்லியன் (6.3 கோடிக்கும்) மேலான பாலோயர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது பெங்களூரு.

    புதுடெல்லி:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 46-வது லீக் ஆட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. குருணால் பாண்ட்யா 73 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள ஆர்சிபி அணி தொடர்ந்து 6 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.

    2வது இடத்தை குஜராத்தும், 3வது இடத்தை மும்பையும், 4வது இடத்தை டெல்லியும், பஞ்சாப் கிங்ஸ் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.

    ×