என் மலர்

    உலகம் (World)

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாடு முழுவதும் இந்த வகையில் 10 லட்சம் கையொப்பங்களை வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் அவர் உள்ளார்.
    • முதல் அதிஷ்டசாலியாக ஜான் டிரெஹர் என்பவருக்கு 1 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    உலக பணக்காரருக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளருமானஎலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளார். அமெரிக்காவில் வரும் நவமபர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசு வேட்பாளராக டிரம்ப்பும் களம் காண்கின்றனர்.

    இதில் டிரம்பை ஜெயிக்க வைக்க எலான் மஸ்க் படாதபாடு படுகிறார். டிரம்பின் பிரச்சாரத்துக்கு 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியதோடு மட்டும் நில்லாமல் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அனைவரையும் வாயடைக்கச் செய்யும் மேற்கூறிய அறிவிப்பை மஸ்க் தற்போது வெளியிட்டுள்ளார்.

     

    டிரம்புக்கு குறைந்த வாக்கு வங்கி இருக்கும் மாகாணங்களில் வாக்காளர்களை ஒருங்கிணைத்து, பதிவு செய்வது, அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய அரசியல் நடவடிக்கை அமைப்பு [பிஏசி] என்ற ஒன்றை ஆன்லைன் மூலம் செயல்படுத்தி வருகிறார் எலான் மஸ்க் . இதன்படி துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை உள்ளிட்ட அமெரிக்க அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள சில சட்டங்களுக்கு ஆதரவு திரட்டி படிவங்களில் கையொப்பம் வாங்கும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

     

    நாடு முழுவதும் இந்த வகையில் 10 லட்சம் கையொப்பங்களை வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் அவர் உள்ளார். முக்கியமாக பென்சில்வேனியாவில் இந்த திட்டம் தீவிரத்துடன் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த படிவத்தில் கையெழுத்திடும் நபர்களில் தேர்தல் நடக்கும் நவம்பர் 5 வரை தினமும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு 1 மில்லியன் டாலர்கள் [சுமார் 8 கோடி ரூபாய்] பரிசாக வழங்கப்படும் என்று மஸ்க் அறிவித்துள்ளார்.

    அதன்படி முதல் அதிஷ்டசாலியாக பென்சில்வேனியாவை சேர்ந்த ஜான் டிரெஹர் என்பவருக்கு 1 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த திட்டத்துக்கு ஜனநாயகவாதிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது உங்கள் நிலம் கியைாது, நீங்கள் என்னுடைய மன்னர் கிடையாது.
    • மீண்டும் எங்கள் நிலைத்தை கொடுங்கள். எங்களிடம் இருந்து கொல்லையடித்து சென்றதை எங்களிடமே கொடுங்கள்.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர் இன்று காலை ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு சென்றார். அப்போது ஆஸ்திரேயலியாவின் பூர்வீக சமூகத்தைச் சேர்ந்த பெண் எம்.பி.யான லிடியா தோர்ப், மன்னர் சார்லஸ்க்கு எதிராக குரல் எழுப்பினார். அதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    "இது உங்கள் நிலம் கியைாது, நீங்கள் என்னுடைய மன்னர் கிடையாது. மீண்டும் எங்கள் நிலைத்தை கொடுங்கள். எங்களிடம் இருந்து கொல்லையடித்து சென்றதை எங்களிடமே கொடுங்கள் என முழக்கமிட்டார். அத்துடன் ஐரோப்பிய குடியேறிகளால் பூர்விக ஆஸ்திரேலியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்" என லிடியா தோர்ப் கூறினார்.

    ஆஸ்திரேலியா 100 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் காலனியாக இருந்தது, அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடி ஆஸ்திரேலியர்கள் கொல்லப்பட்டனர். பழங்குடியின சமூகங்கள் முழுமையாக இடம்பெயர்ந்தன.

    நாடு 1901-ல் சுதந்திரம் பெற்றது. ஆனால் ஒரு முழுமையான குடியரசாக மாறவில்லை. நாட்டின் தற்போதைய தலைவர் மன்னர் சார்லஸ் ஆவார்.

    1999-ம் ஆண்டு ராணியை நீக்குவது தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது. மேலும், ராணிக்கு பதிலாக மாற்று நபரை மக்களால் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பாளர்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், குறைவான ஆஸ்திரேலியர்கள்தான் வாக்களித்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உணவகத்தில் பிரென்ச் பிரைஸ் பொரித்து வாக்கு அறுவடையில் ஈடுபட்டுள்ளார்.
    • கமலா ஹாரிசை விட தான் 15 நிமிடம் அதிகமாக மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் உழைத்துள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார்.

    அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர்.

    இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறனர். அந்த வகையில் இந்தியாவில் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் கையாளும் பார்முலாவை டிரம்ப் கையில் எடுத்துள்ளார். அதாவது, அமெரிக்க மக்களின் விருப்பத்துக்குரிய மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பிரென்ச் பிரைஸ் பொரித்து வாக்கு அறுவடையில் ஈடுபட்டுள்ளார்.

     

    பென்சில்வேனியாவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கிளை ஒன்றில் நேற்றைய தினம் அவர் செஃப் உடை அணிந்து பிரென்ச் பிரைஸ் பொரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. கமலா ஹாரிசை விட தான் 15 நிமிடம் அதிகமாக மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் உழைத்துள்ளேன் என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

    கமலா ஹாரிஸ் தனது இளமைக்கால நடுதர வாழ்க்கை குறித்தும் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பணியாற்றியது குறித்தும் பிரகாரங்களில் சிலாகித்து வருவதால் அதை கிண்டலடிக்கும் வகையில் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இதன்மூலமே தங்களின் ஆயுத தேவைகளை ஹிஸ்புல்லா பூர்த்தி செய்கிறது.
    • அல் குவார்த் வழக்கும் பொருளாதார சேவைகளை பல லெபனானிய மக்களும் பயன்படுத்துகின்றனர்.

    நேதன்யாகு வீடு  

    பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் தற்போது லெபனான் மீதும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீதும் தாக்குதலை தொடர்கிறது. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதன் எதிரொலியாக வடக்கு இஸ்ரேலில் செசாரியா பகுதியில் உள்ள பிரதமர் நேதன்யாகு வீட்டை குறிவைத்து ஹிஸ்புல்லா டிரோன் தாக்குதல் நடத்தியது.

    சூளுரை 

    இதில் உயர் தப்பிய நேதன்யாகு ஹிஸ்புல்லாவை அழித்திழிக்க சூளுரை செய்துள்ளார். அதன்படி லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் பிற பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கு பணபலம் கொடுக்கும் அல் குவார்த் அல் - ஹசன் என்ற பொருளாதார பிரிவு உள்ளிட்ட முக்கிய இலக்குகளை தாக்க உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. எனவே அந்த இலக்குகளுக்கு அருகில் உள்ளவர்கள் அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

    அல் குவார்த் அல் - ஹசன்

    அல் குவார்த் அல் - ஹசன் மூலமே ஹிஸ்புல்லாவுக்கு ஈரானிடம் இருந்தும், மக்கள் நன்கொடையாகவும் வரும் பணம் பரிவர்த்தனை செய்யபடுகிறது. இதன்மூலமே தங்களின் ஆயுத தேவைகளை ஹிஸ்புல்லா பூர்த்தி செய்கிறது. குறிப்பாக இந்த அல் குவார்த் வழக்கும் பொருளாதார சேவைகளை பல லெபனானிய மக்களும் பயன்படுத்தி வருவதால் இதன் மீதான தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

     

    தலைமையகம் 

    இதற்கிடையே லெபனானின் பெய்ரூட் நகரின் தெற்கு பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் உளவுப்பிரிவு தலைமையகத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது நடத்திய தாக்குதலில், அதன் முக்கிய அதிகாரிகள் எல்ஹாக் அப்பாஸ் சலாமே, ராச்சா அப்பாஸ் இச்சா மற்றும் அகமது அலி ஹசின் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர்.

     

     100 ராக்கெட்

    மேலும் நிலத்திற்கு அடியில் செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலை ஒன்றும் சேதமடைந்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு, பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு 100 ராக்கெட்டுகளை ஏவியுள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் தாக்குதலால் வடக்கு இஸ்ரேல் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியிருப்பதை தென்கொரிய உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது.
    • இந்த வீடியோவை உக்ரைன் உளவுப் பிரிவு உறுதி செய்துள்ளது.

    தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு அச்சறுத்தலாக விளங்கும் அணு ஆயுத நாடு வட கொரியா. தற்போது ரஷியாவுடன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நெருக்கம் காட்டி வருவது நிலைமையை இன்னும் மோசமாகியுள்ளது.

    வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதால் பொருளாதார பாதிப்பை சந்தித்து இருக்கும் வடகொரியாவுக்கு எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் ரஷியா , சீனா ஆகிய நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. இதற்கிடையே சமீபத்தில் தென் கொரியாவை எதிரி நாடாக அதிகாரபூர்வமாக அறிவித்த வட கொரியா அமெரிக்காவுக்கு அணுஆயுத மிரட்டல் விடுத்திருந்தது.

     

    இந்நிலையில் மேற்கு நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் எதிராக மறைமுகமாக கடந்த 2 வருடங்களாக நடத்துவரும் உக்ரைன் போரில் வட கொரியா பங்கேற்றுள்ளதாக தகவல்கள் மட்டுமின்றி அதற்கான ஆதாரங்களும் கிடைத்து வருகின்றன. அதாவது, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு உதவும் விதமாக தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியிருப்பதை தென்கொரிய உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது.

    இது குறித்து வட கொரியாவும் ரஷியாவும் எதுவும் பேசாத நிலையில் டஜன் கணக்கான வட கொரிய வீரர்கள் ரஷிய ராணுவ தலத்தில் பயிற்சி எடுத்து சோர்ந்து ஓய்வு எடுப்பது, ரஷிய ராணுவ உபகரணங்களை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை உக்ரைன் உளவுப் பிரிவும் கண்டறிந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

    எனவே உக்ரைன் ரஷியா போர் அடுத்த மேலும் தீவிரமடையும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா மீது 100 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது உக்ரைன். மேலும் ரஷியாவின் 2 ஆயுத தயாரிப்பு மையங்களும் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்போவதாக கனடா தெரிவித்தது.
    • இதனால் கனடாவுக்கான இந்திய தூதரை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்தது.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது.

    இதுதொடர்பாக, இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்போவதாக கனடா தெரிவித்தது. இதனால் கனடாவுக்கான இந்திய தூதரை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் இந்தியாவில் கனடா அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.

    இதற்கிடையே, நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டுள்ளார்.

    இந்நிலையில், இந்திய தூதரான சஞ்சய் வர்மா கனடா செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    நிஜ்ஜார் கொலை தொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகள் உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டதல்ல. கனடா உளவுத்துறை தெரிவித்த தகவலின் படியே அந்தக் குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார். இதை அவரே சமீபத்தில் ஒப்புக்கொண்டார். அவரின் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்தியா, கனடா இடையிலான உறவை அவர் தகர்த்துள்ளார். நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ்.
    • 16-வது பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு ரஷியாவில் நடைபெற உள்ளது

    பிரேசிலியா:

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.

    கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.

    ரஷியாவின் காசான் பகுதியில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியானது. அங்கு உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்நிலையில், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    காயம் காரணமாக பிரேசில் அதிபர் பங்கேற்க மாட்டார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநாட்டில் பங்கேற்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெற்றது.
    • இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது

    அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் உயிர்பலி அதிகரித்த வண்ணம் உள்ளன. தற்போது மிசிசிபி மாகாணம் ஹொல்மெஸ் நகரில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி வெற்றி விழாவில் ஏற்பட்ட மோதல் துப்பாக்கிசூட்டில் முடிந்துள்ளது.

    இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரான் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்தி ரகசியங்களை திருடியது.
    • ஈரான் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறது

    பாலஸ்தீனம் மீது கடந்த 1 வருடமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள்  உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது. ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தலைநகர் பெய்ரூட்டில் வைத்து கொல்லப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை சரமாரியாக ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் துடித்து வருகிறது. ஆனால் ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. இதற்கிடையே ஈரான் மீது சைபர் தாக்குதல் ஒன்றையும் இஸ்ரேல் நடத்தியது. இதில் தங்கள் அரசின் ரகசிய ஆவணகள் திருடப்பட்டகாக ஈரான் குற்றம்சாட்டியது.

    இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இஸ்ரேலின் முயற்சிகள் குறித்த அமெரிக்க உளவுத்துறையில் 2 ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன. அமெரிக்காவின் நேஷனல் ஜியோஸ்பாஷியல் இன்டலிஜென்ஸ் ஏஜென்சியில் [NGA] இருந்த இந்த ஆவணங்களானது டெலிகிராமில் கசிந்துள்ளது.

     

    இந்த ஆவணங்களில் ஈரான் தாக்குதலுக்கு இஸ்ரேலிய படைகள் பிரத்யேக பயிற்சி எடுத்துவரும் மற்றும் தாக்குதளுக்கு ஒத்திகை பார்க்கும் சாட்டிலைட் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

     

    முதல் ஆவணத்தில் இஸ்ரேல் விமானப் படை ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த எப்படியெல்லாம் தயாராகி வருகிறது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு வானத்தில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை தயார்ப்படுத்தி வருவது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இதற்கு முன்பு 4 முறை ஏவப்பட்ட நிலையில், இந்த முறை மிகப்பெரிய முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியது.
    • 5 மைல் தொலைவில் இருந்து துல்லியமாக அந்த நிகழ்வு படம்பிடிக்கப்பட்டுள்ளது

    எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் மற்றும் பொதுவான விண்வெளி ஃபிளைட்களுக்கான புதிய தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    அதன்படி, புதிய அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் சிறந்த ஏவுதல் மற்றும் வெற்றிகரமாக திரும்புதலை நோக்கமாக கொண்ட ஸ்பேஸ்எக்ஸ் சமீபத்தில் தனது 5வது விமான சோதனையை நிகழ்த்தியது. இதில், ஸ்டார்ஷிப்பின் சூப்பர் ஹெவி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய முதல் நிலை பூஸ்டர் விண்ணில் ஏவப்பட்டது.

    இதற்கு முன்பு 4 முறை ஏவப்பட்ட நிலையில், இந்த முறை மிகப்பெரிய முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியது. அதன்படி, 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட ராக்கெட், ஏவுகணை கோபுரத்தில் இருந்து புறப்பட்ட அதே இடத்தில் வந்து லேண்ட் ஆனது. ஸ்டார்ஷிப் ஆனது "சாப்ஸ்டிக்" என்ற அதன் கைகளால் பூஸ்டரை லாவகமாக பிடித்தது.  விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் மீண்டும் ஏவுதளத்தில் லேண்ட் ஆனது   சாதனையாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் 17 ஆயிரம் டாலர் [சுமார் 14.29 லட்சம் ருபாய்] மதிப்புள்ள லென்ஸ் மூலம் ஏவுதளத்திற்கு 5 மைல் தொலைவில் இருந்து துல்லியமாக அந்த நிகழ்வு படம்பிடிக்கப்பட்ட வீடியோவை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். அந்த மொத்த நிகழ்வதையும் கச்சிதமாக படம்பிடித்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • என்னையும் எனது மனைவியையும் படுகொலை செய்ய ஈரானின் பினாமி ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி ஒரு பெரிய தவறு.
    • வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா பகுதியில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது இஸ்ரேல் நடத்தியுள்ளது.

    இஸ்ரேலின் கடற்கரை நகரமான செசாரியாவில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இல்லம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்றைய தினம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதி செய்த பின்னர் இந்த தாக்குதலானது நடந்துள்ளது. டிரோன்களை இஸ்ரேல் பாதுகாப்பு படை அழித்ததால் சேதம்  தவிர்க்கப்பட்டது.

    இந்த கொலை முயற்சி குறித்து நேதன்யாகு பேசியதாவது, என்னையும் எனது மனைவியையும் படுகொலை செய்ய ஈரானின் பினாமி ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி ஒரு பெரிய தவறு. இது என்னையும், இஸ்ரேல் அரசையும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக எதிரிகளுக்கு எதிரான நமது நியாயமான போரைத் தொடர்வதிலிருந்து தடுக்காது என்று எச்சரித்திருந்தார்.

    இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாலஸ்தீனத்தின் காசா நகரின் மீதும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா பகுதியில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது நேற்று இஸ்ரேல் நடத்தியுள்ளது.

    இதில் மருத்துவர்கள் உட்பட குறைந்தது 73 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கடந்த 2 வாரத்தில் மட்டும் 400 பேர் வரை இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக காசா சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

     

    தொடர்ந்து லெபனானில் பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அங்குள்ள மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. ஹிஸ்புல்லா ஆயுத்தத் தளங்களையே குறிவைத்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கியூபாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் அன்டோனியோ குட்டரெஸ்.
    • இந்த நிலையம் சேதமடைந்ததால் நாடு முழுதும் மின்சாரம் தடைபட்டது.

    ஹவானா:

    தீவு நாடான கியூபாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டு வருகிறது.

    பொருளாதார சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் செயல்பட்டு வந்த மின் உற்பத்தி நிலையங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியதை அடுத்து, அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமான அன்டோனியோ குட்டோரஸ், தன் உற்பத்தியை நிறுத்தியது. இதனால் நாடு முழுதும் மின்சாரம் தடைபட்டது.

    சமீபத்தில் வீசிய மில்டன் சூறாவளி காரணத்தால் குட்டோரஸ் மின் உற்பத்தி நிலையம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மின்சாரம் தடைபட்டதால், போக்குவரத்து சேவை அடியோடு பாதிக்கப்பட்டது.

    கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை செயலிழந்தன. முக்கிய சாலைகள் வெறிச்சோடின. இணையதள சேவையும் பாதிக்கப்பட்டதால், கியூபா மக்கள் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்தனர்.

    பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. இரவில் செயல்படும் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட கலாசார மையங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

    தலைநகர் ஹவானாவில் அனைத்து வர்த்தகங்களும் நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டன. உணவு, எரிபொருள், தண்ணீர் மற்றும் மருந்து பற்றாக்குறையால் கியூபா நாட்டு மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மின் தடை அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலாக்கி உள்ளது.

    ×