என் மலர்

    உலகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மியான்மரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது.

    நேப்பிடாவ்:

    மியான்மர் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

    தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி மியான்மரில் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது.

    இந்த நிலநடுக்க அதிர்வு கொல்கத்தாவிலும் உணரப்பட்டது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடனுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் நேரடி அல்லது மறைமுக உரிமையாளர்கள் அனைவரும் நூறு சதவீதம் அமெரிக்கக் குடிமக்களாக இருக்கவேண்டும்
    • நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் இனி அரசு உதவிபெறும் வணிகக் கடன்களைப் பெற முடியாது.

    அமெரிக்காவில் வரும் மார்ச் 1 முதல் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு (Green Card holders) வணிக கடன்கள் கிடையாது என அமெரிக்க சிறுதொழில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    டொனால்ட் டிரம்பின் "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு வணிகக் கடனுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் நேரடி அல்லது மறைமுக உரிமையாளர்கள் அனைவரும் நூறு சதவீதம் அமெரிக்கக் குடிமக்களாகவோ அல்லது அமெரிக்கத் தேசியவாதிகளாகவோ இருக்க வேண்டும்.

    நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் இனி அரசு உதவிபெறும் வணிகக் கடன்களைப் பெற முடியாது. இதற்கு முன்பு ஒரு நிறுவனத்தில் 5% வரை வெளிநாட்டினர் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் பங்கு வைத்திருக்க அனுமதிக்கப்பட்ட விதிவிலக்கு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளின் தரவுகளின்படி, 2024 நிதியாண்டில் கிரீன் கார்டு (Green Card) பெற்ற புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையில், இந்தியா உலகளவில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. ஜூன் 2025-ல் அமெரிக்க வர்த்தக சபையின் புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 40% சிறுதொழில் உரிமையாளர்கள்  வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது.
    • நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தை முன்னெடுக்க ஈரான் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

    ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்டால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு ஏற்றவகையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரான் நோக்கி நகரத்தொடங்கின. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதற்கிடையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் துருக்கி சென்றுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தை தணிக்க துருக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும், மத்தியஸ்தரராக செயல்படவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், அமெரிக்கா உடன் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஈரான் அதிபர் பெசாஸ்கியன் வலியுறுத்தியுள்ளார்.

    இதனால் துருக்கியில் அமெரிக்கா- ஈரான் இடையிலான பதற்றத்தை குறைக்க பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் ஈரானின் அணுசக்தி திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது. ஒருவேளை அணுசக்தி திட்டம் விகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டால், தடைகளை நீக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்துகிறது.

    இந்த பேச்சுவார்த்தையில் சவுதி அரேபியா, எகிப்து, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் இணைய தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்த பேச்சுவார்த்தை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்ற இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறுவத்துறை அமைச்சருமான இஷாக் தார் பாகிஸ்தான் பிரதிநிதியாக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்கா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை புறக்கணித்தன.
    • ஜனவரி முதல் மூன்று வாரங்களில் இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நாள் ஒன்றுக்கு 1.1 மில்லியன் பேரல்களாகக் குறைந்துள்ளது.

    ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கான எந்த அறிக்கையையும் இந்தியாவிடம் இருந்து தற்போதுவரை பெறவில்லை என தலைமை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யா, இந்தியாவுடனான தனது உறவுகளை அனைத்து சாத்தியமான வழிகளிலும் தொடர்ந்து வளர்க்க விரும்புவதாகவும் பெஸ்கோவ் கூறியதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

    ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதித்துள்ளது. அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்க இந்தியா முன்வந்துள்ளது என ட்ரம்ப் நேற்றுக்கூறிய நிலையில், "இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது குறித்து மாஸ்கோவிற்கு இதுவரை எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை" என்று பெஸ்கோவ் கூறியதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

    இந்தியா 88% கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. இந்த கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள்களாக மாற்றப்படுகிறது.

    2021-ஆம் ஆண்டு வரை இந்தியா இறக்குமதி செய்த மொத்த கச்சா எண்ணெயில் ரஷ்யாவின் பங்கு வெறும் 0.2 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், பிப்ரவரி 2022-இல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை புறக்கணித்தன. இதனைத் தொடர்ந்து, தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதில், உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா முதலிடத்தைப் பிடித்தது. 

    இருப்பினும், 'கெப்லர்' நிறுவனத்தின் தரவுகளின்படி, ஜனவரி முதல் மூன்று வாரங்களில் இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நாள் ஒன்றுக்கு 1.1 மில்லியன் பேரல்களாகக் குறைந்துள்ளது. இது 2025-ன் பாதியில் 2 மில்லியன் பேரல்களாகவும், கடந்த டிசம்பரில் 1.21 மில்லியன் பேரல்களாகவும் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் டெல்லியிலிருந்து அமெரிக்கா சென்றுள்ளார்.
    • அங்கு அவர் அமெரிக்க வெளியுறவு மந்திரியை சந்திக்கிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய தாதுக்கள் விநியோகச் சங்கிலி தொடர்பான அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் டெல்லியிலிருந்து புறப்பட்டார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பால் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில்,வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ அழைப்பின் பேரில், முக்கிய தாதுக்கள் குறித்த மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மந்திரி ஜெய்சங்கர் பிப்ரவரி அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறார். இந்த மாநாட்டில் தூய்மையான எரிசக்தி மாற்றம் மற்றும் தாதுக்கள் விநியோகச் சங்கிலியில் உள்ள சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோவை ஜெய்சங்கர் இன்று சந்திக்க உள்ளார். இந்தப் பயணத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகளையும் அவர் சந்திக்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் மகாத்மா காந்தியின் வெண்கல சிலை திருடு போனது.
    • இந்தச் சிலையை 2021, நவம்பரில் முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசன் திறந்து வைத்தார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமுதாய கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு சுமார் 240 கிலோ எடையுள்ள மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை 2021-ம் ஆண்டு நவம்பரில் அப்போதைய பிரதமர் ஸ்காட் மாரிசன் திறந்து வைத்தார்.

    இந்நிலையில், இந்திய சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்டு இருந்த வெண்கல சிலையை மர்ம கும்பல் ஒன்று திருடிச் சென்றுள்ளது.

    கால்களைத் தவிர்த்து பிற உடல் பாகங்களுடன் காந்தியின் சிலையை திருடிச் சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் காந்தி சிலை திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போர் நிறுத்தம் குறித்து நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
    • ரஷ்யா உக்ரைன் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

    ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளிடையே அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்றும் போர் முடிவுக்கு வராத சூழல் தான் நிலவுகிறது. இதனிடையே போர் நிறுத்தம் குறித்து நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

    ரஷ்ய படையெடுப்பின் போது உக்ரைன் மிகக் குளிரான வெப்பநிலையை அனுபவித்து வரும் சூழலில் இந்த தாக்குதல்கள் நடந்தன. மேலும் இந்த தாக்குதல்களில் இரண்டாம் உலகப் போரின் சின்னமான சோவியத் சகாப்த நினைவுச்சின்னம் சேதமடைந்தது.

    உக்ரைன் மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்கள் அபுதாபியில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்காக நாளை சந்திக்க இருக்கும் நிலையில், ஒருநாள் முன்னதாகவும் இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.

    "குளிர்காலத்தின் மிகக் குளிரான நாட்களை பயன்படுத்தி மக்களை பயமுறுத்துவது ராஜ தந்திரத்திற்கு திரும்புவதை விட ரஷ்யாவிற்கு மிகவும் முக்கியமானது" என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் தாக்குதலை கண்டித்து கூறினார்.

    AFP பத்திரிகையாளர்கள் தலைநகர் முழுவதும் ஒரே இரவில் வெடி சத்தங்களை கேட்டனர். மேலும் வெப்பநிலை மைனஸ் 20 செல்சியஸை நோக்கிக் குறைந்திருந்த சூழ்நிலையில் வெப்பம் துண்டிக்கப்பட்டதைக் கண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விழித்தெழுந்தனர்.

    ரஷ்யா 71 ஏவுகணைகள் மற்றும் 450 தாக்குதல் டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக உக்ரேன் விமானப்படை தெரிவித்துள்ளது. உக்ரைன் 38 ஏவுகணைகளையும் 412 டிரோன்களையும் இடைமறித்து அழித்ததாக கூறியுள்ளது. இந்த தாக்குதல்களில் தலைநகரில் 5 பேர் காயமடைந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இன்றி தவிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷியாவில் நேற்று முன்தினம் இரவு வானில் ஒரே நேரத்தில் 4 நிலவுகள் தோன்றின.
    • இதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.

    மாஸ்கோ:

    ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் இரவு வானில் ஒரே நேரத்தில் 4 நிலவுகள் தோன்றுவது போன்ற காட்சி தென்பட்டது. இதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    விண்வெளியில் ஒரே ஒரு நிலவு மட்டுமே இருக்கும் நிலையில், 4 நிலவுகள் தெரிந்தது ஒரு மாயத்தோற்றம் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். இத்தகைய நிகழ்வு பாரசெலீன் அல்லது மூன் டாக் என அழைக்கப்படுகிறது.

    இது ஒரு வானியல் நிகழ்வு அல்ல, மாறாக வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளியியல் மாற்றமாகும். பூமியின் வளிமண்டலத்தில் மிக உயரத்தில் உள்ள மேகங்களில் அறுகோண வடிவத்திலான சிறிய பனிப் படிகங்கள் இருக்கும். நிலவொளி இந்த பனிப் படிகங்கள் வழியாக ஊடுருவிச் செல்லும்போது, அந்தப் படிகங்கள் ஒரு சிறிய 'பிரிசம்' போல செயல்பட்டு ஒளியை வளைக்கின்றன. இவ்வாறு வளையும் ஒளியினால், உண்மையான நிலவிற்கு இருபுறமும் பிரகாசமான ஒளிப்புள்ளிகள் தோன்றுகின்றன. இது பார்ப்பதற்கு வானில் பல நிலவுகள் இருப்பது போன்ற மாயையை உருவாக்குகிறது என வானிலை அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இத்தகைய நிகழ்வுகள் ரஷ்யா போன்ற கடும் குளிர் நிலவும் பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்கம் விலை தொடர்ந்து விலை ஏறி வருகிறது.
    • ஒரு சிம் கார்டில் 0.001 கிராம் அளவுக்கு தான் தங்கம் இருக்கும்

    தங்கம் விலை தொடர்ந்து எகிறி வந்து, கடந்த 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக பதிவானது.

    அதன் தொடர்ச்சியாக மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என சொல்லப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக சரிந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2560 உயர்ந்து ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், சீனாவில் பழைய சிம் கார்டுகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது எப்படி என்று ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    சீனாவில் பழைய பொருட்களில் இருந்து உலோகங்களை பிரித்தெடுக்கும் கியாவோ என்ற நபர், தூக்கி வீசப்பட்ட பழைய சிம் கார்டுகள் உட்பட பல மின்னணு கழிவுகளில் இருந்து ரூ.26 லட்சம் மதிப்பிலான 191 கிராம் தங்கத்தை பிரித்தெடுத்துள்ளதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உலகையே மிரள செய்திருக்கிறது. ஒரு சிம் கார்டில் 0.001 கிராம் அளவுக்கு தான் தங்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரானில் பொருளாதார நெருக்கடியால் போராட்டம் வெடித்தது.
    • போராட்டக்காரர்களை ஒடுக்கும் ஈரான் நடவடிக்கைக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்டால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு ஏற்றவகையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரான் நோக்கி நகரத்தொடங்கின. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதற்கிடையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் துருக்கி சென்றுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தை தணிக்க துருக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும், மத்தியஸ்தரராக செயல்படவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், அமெரிக்கா உடன் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஈரான் அதிபர் பெசாஸ்கியன் வலியுறுத்தியுள்ளார்.

    ஆனால், பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்கா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும் ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதால் பதற்ற நிலை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமெரிக்காவின் விவசாய பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
    • இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க விவசாயிகளுக்காக மீண்டும் ஒரு சிறப்புமிக்க ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் கொடுத்துள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை செயலாளர் புரூக் ரோலின்ஸ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வழியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சந்தைக்கு அதிகப்படியான அமெரிக்க விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும். இதன் மூலம் அமெரிக்காவின் கிராமப்புற பொருளாதாரம் பெரும் வளர்ச்சியடையும்.

    2024 ஆம் ஆண்டில், இந்தியாவுடனான அமெரிக்காவின் விவசாய வர்த்தக பற்றாக்குறை 1.3 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள்தொகை அமெரிக்க விவசாய பொருட்களுக்கு ஒரு முக்கியமான சந்தையாகும், மேலும் இன்றைய ஒப்பந்தம் இந்தப் பற்றாக்குறை சரி செய்யப்படும்" என்று தெரிவித்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமெரிக்கா சென்ற மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். அதன் பின் இஸ்ரேல் சென்றார்.
    • உங்கள் அழகிய தீவிலிருந்து நீங்கள் திரும்பியதும் கூறுங்கள், உங்களுடன் சிறிது நேரம் பேச விரும்புகிறேன்.

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காக தனி தீவு ஒன்றையே எப்ஸ்டீன் வைத்திருந்தார். 

    கடந்த 2019 இல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

    நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    கடந்த வாரம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 35 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

    மேலும் உலக பணக்காரர் பில் கேட்ஸ், ரஷிய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோய்க்கு ஆளாகி அதற்கான மருந்துகளை ரகசியமாக எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

    எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோரின் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

    அதேநேரம் எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் இடம்பெற்றுள்ளது.

    2017 ஜூன் 25, 26 தேதிகளில் அமெரிக்கா சென்ற மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். அதன்பின் அதே வருடம் ஜூலை 4 - 6 வரை பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

    எப்ஸ்டீன் கோப்புகளில், ஜூலை 9, 2017 தேதியிட்ட மின்னஞ்சல் ஒன்றில், "இந்திய பிரதமர் மோடி ஆலோசனை பெற்றார், இஸ்ரேலில் அமெரிக்க அதிபரின் நலனுக்காகத் தேவையான எல்லாவற்றையும் (danced and sanged) செய்தார். அது நல்ல பலனளித்தது" என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே, தொழிலதிபர் அனில் அம்பானி 2017 மார்ச் 16 அன்று எப்ஸ்டீனுக்கு அனுப்பிய செய்தியில், அதிபர் டிரம்ப்புடனான பிரதமர் மோடியின் சந்திப்புக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

     மேலும், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, 2014 டிசம்பரில், எப்ஸ்டீனுக்கு, "உங்கள் அழகிய தீவிலிருந்து நீங்கள் திரும்பியதும் கூறுங்கள், உங்களுடன் சிறிது நேரம் பேச விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

    பிரதமர் மோடி குறித்து கேப்புகளில் உள்ள விவரங்களுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை, பிரதமர் மோடி, 2017 இல் இஸ்ரேலுக்கு பயணம் செய்தார் என்பது மட்டும் தான் உண்மை, மற்ற அனைத்தும் எப்ஸ்டீனின் கற்பனையே என்று தெரிவித்துள்ளது. 

    இதற்கிடையே காங்கிரஸ், "குழந்தைகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பிரதமர் மோடிக்கு இருக்கும் ஆழமான மற்றும் நீண்டகாலத் தொடர்பு தெளிவாகியுள்ளது. இது நாட்டுக்கே அவமானகரமானது.

    பிரதமர் நரேந்திர மோடி எப்ஸ்டீனிடம் இருந்து என்ன மாதிரியான ஆலோசனைகளைப் பெற்றார்?, மோடியின் இஸ்ரேல் பயணத்தின் மூலம் டிரம்ப்புக்கு என்ன நன்மை கிடைத்தது?

    அது பலனளித்தது! என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டிருந்ததன் பொருள் என்ன? ஆகிய மூன்று கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். இது தேசத்தின் கண்ணியம் தொடர்பான விஷயம்" என தெரிவித்துள்ளது.  

    ×