என் மலர்

    உலகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கும் கூட்டணியில் இணையுமாறு டிரம்ப் வலியுறுத்தினார்.
    • போர்க் கப்பல்களை அனுப்பும் திட்டம் இல்லை என ஜப்பான், ஆஸ்திரேலியா அறிவிப்பு.

    மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது. இதனால் அதன் வழியாக கச்சா எண்ணை கொண்டு செல்லும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன.

    இதற்கிடையே கச்சா எண்ணை தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களது போர்க்கப்பலை அங்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து உள்பட 7 நாடுகள் ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கும் கூட்டணியில் இணையுமாறு வலியுறுத்தினார். இந்த நாடுகள் தங்களது போர்க் கப்பல்களை அனுப்பும் என்று நம்பிக்கை தெரிவித்தார். சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இதை நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    போர்க்கப்பலை அனுப்புவதாக வெளியான தகவலை பிரான்ஸ் மறுத்து உள்ளது. இது குறித்து வெளியுறவுதுறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    எங்கள் விமானம் தாங்கி கப்பலும், அதைச் சார்ந்த தாக்குதல் படைக் குழுவும் கிழக்கு மத்தியத ரைக் கடலிலேயே தொடர்ந்து நிலைத்து இருக்கும். தற்போதைய சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எங்களின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தற்காப்பு சார்ந்ததே ஆகும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும் போது, 'மோதல் போக்கு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.

    டிரம்ப்பின் வேண்டு கோளை சீனா ஏற்றுக் கொண்டு செயல்படுமா என்பதை அவர் திட்ட வட்டமாகக் குறிப்பிடவில்லை. ஆனாலும் நிலையான மற்றும் தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

    மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினருடனான பேச்சுவார்த்தைகளை சீனா தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

    இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும் போது, "நாங்கள் முன்பே தெரிவித்தது போல, இந்த பகுதியில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எங்கள் நட்பு நாடுகளுடனும் கூட்டாளிகளுடனும் பல்வேறு வழிமுறைகள் குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம்" என்றார்.

    டிரம்ப்பின் வேண்டுகோளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, ஜப்பான் உடனடியாகத் தனது கடற்படைக் கப்பல் களை அனுப்பாது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும் போது, 'ஜப்பான் தனது நடவடிக்கைகளைத் தானே தீர்மானித்துக்கொள்கிறது; சுதந்திரமான முடிவுகளை எடுப்பதே எங்களின் அடிப்படை கொள்கையாகும்' என்றார்.

    தென் கொரியாவும் டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு இதுவரை எந்தப் பதிலையும் வெளியிட வில்லை. இந்த நிலையில் நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்தார். ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற நேட்டோ உதவா விட்டால் மிகவும் மோசமான எதிர்காலம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

    ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா எவ்வாறு உதவியதோ அதுபோல் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்திலும் ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும். ஐரோப்பிய நாடுகள் உதவுவதை நான் எதிர்பார்க்கிறேன்.

    எந்த பதிலும் இல்லை என்றால் அல்லது எதிர்மறையான பதிலாக இருந்தால் அது நேட்டோவின் எதிர் காலத்திற்கு மிகவும் மோசமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். உச்சி மாநாட்டுக்கு முன்பு இதை தெரிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம்.

    சீனா தனது எண்ணெய் தேவையில் சுமார் 90 சதவீதத்தை இந்த நீரிணை வழியாக பெறுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா மிக குறைந்த அளவே பெறுகிறது. இதே போல் அமெரிக்காவை விட பல ஐரோப்பிய நாடுகளும் வளைகுடாவில் இருந்து வரும் எண்ணையை அதிகமாக நம்பி உள்ளன. இந்த மோசமான விளைவுகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்" என்று டிரம்ப் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துபாய் விமான நிலையத்துக்கு அருகே எண்ணெய் கிடங்கை குறிவைத்து ஈரான் டிரோன் தாக்குதல்
    • மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.

    ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் உள்ளிட்ட இடங்களிலும், இஸ்ரேல் மீதும் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.

    இந்த நிலையில் துபாய் விமான நிலையத்துக்கு அருகே எண்ணெய் கிடங்கை குறிவைத்து ஈரான் இன்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் எண்ணெய் கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

    இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. சம்பவ இடத்திற்கு அவசர கால மீட்பு குழுக்கள் விரைந்தன. தற்போது நிலைமை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து எமிரெட்ஸ் விமான நிறுவனம் துபாயில் இருந்து புறப்படும் மற்றும் துபாயில் இருந்து வந்து சேரும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்து உள்ளது.

    துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சில விமானங்கள் அல்மக்தூ சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். துபாய் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் இருந்து சென்ற சில விமானங்கள் மீண்டும் திரும்பி வந்தன.

    இதே போல ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலைய வளாகத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தியது. டிரோன், ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் வீடுகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மரணம் அடைந்துவிட்டார் என சர்வதேச அளவில் வதந்தி பரவியது.
    • இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தான் உயிருடன் இருக்கும் வீடியோ ஒன்றை இஸ்ரேல் பிரதமர் வெளியிட்டார்.

    டெஹ்ரான்:

    ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.

    இதற்கிடையே, ஈரானின் தாக்குதலில் பெஞ்சமின் நேதன்யாகு கொல்லப்பட்டு விட்டார். தற்போது வெளியாகும் வீடியோக்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் என்றும் கூறி வந்தனர். இது சர்வதேச அளவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நேதன்யாகு ஒரு உணவகத்தில் நின்று காபி அருந்தியபடி நகைச்சுவையாக பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    புதிய வீடியோவில் தனது இரு கைகளையும் கேமராவுக்கு மிக அருகில் உயர்த்தி விரல்களைக் காட்டிய நேதன்யாகு, எனது விரல்களை எண்ண விரும்புகிறீர்களா? இதோ பாருங்கள், அனைத்தும் சரியாக உள்ளன. மக்கள் வெளியே சென்று தூய காற்றைச் சுவாசியுங்கள்; ஆனால், பாதுகாப்பான இடத்திற்கு அருகிலேயே இருங்கள்.

    உங்கள் மன உறுதி வியக்கத்தக்கது; அது எனக்கும், அரசாங்கத்துக்கும் அளிக்கிறது. ஈரானை நாங்கள் மிகக் கடுமையாகத் தாக்கி வருகிறோம். இன்றும் கூட. உங்கள் அனைவருக்கும் ஒன்று சொல்கிறேன், நீங்களும் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள் என பேசியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹார்முஸ் ஜலசந்தியை நாங்கள் மூடவில்லை. உண்மையில் அந்த ஜலசந்தி திறந்தே இருக்கிறது.
    • எங்கள் எதிரிகளுக்கு சொந்தமான கப்பல்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது.

    அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ந்தேதி போரை தொடங்கின. இதில் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.

    மேலும் உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பாதையாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் பாரசீக வளைகுடாவில் ஏராளமான கப்பல்கள் தங்களது பயணத்தை தொடர முடியாமல் தவித்து வருகின்றன.

    இதையடுத்து கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை தடுக்கக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்து வருகிறது.

    இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும் என்றும் பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பதற்காக அனுப்ப வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க எதிரி நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி கிடையாது என்று ஈரான் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி கூறியதாவது:-

    ஹார்முஸ் ஜலசந்தியை நாங்கள் மூடவில்லை. உண்மையில் அந்த ஜலசந்தி திறந்தே இருக்கிறது. இது எங்கள் எதிரிகளுக்கு சொந்தமான கப்பல்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு மட்டுமே இந்த முக்கிய கடல் பாதை மூடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக கடந்து செல்லலாம்.

    பாதுகாப்பு கவலைகள் காரணமாக பல கப்பல்கள் இந்த பாதையைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

    இவ்வாறு அராக்சி தெரிவித்தார்.

    அதேபோல் ஈரான் புரட்சிகர காவல்படை கடற்படையின் தளபதி அலிரேசா டாங்சிரி கூறும்போது, ஹார்முஸ் ஜலசந்தி ராணுவ ரீதியாக தடுக்கப்படவில்லை. அது வெறும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

    ஈரானின் கடற்படையை அழிப்பது அல்லது எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்குவது பற்றிய அமெரிக்காவின் கூற்றுகள் தவறானவை ஆகும் என்றார்.

    நேற்று இந்தியாவை நோக்கி வந்த 2 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் இன்று 16-வது நாளாக நீடிக்கிறது. ஈரான் மீது தொடர்ந்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. அதேபோல் இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசியது. இதில் டெல்அவிவ் நகரை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேதன்யாகு ஒரு குற்றவாளி. குழந்தைகளை கொன்ற கொலையாளி
    • நேதன்யாகு நடத்த வேண்டிய சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டதும் சந்தேகத்தை அதிகரித்தது

    ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதம் எழுந்துள்ளது.

    நேதன்யாகு கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது போன்ற ஒரு வீடியோ வெளியிடப்பட்டது.

    ஆனால், அந்த வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்று சமூக வலைதள வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    அந்த வீடியோவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், நெதன்யாகு கைகளைக் காண்பித்து பேசும்போது, அவரது கையில் ஐந்து விரல்களுக்குப் பதிலாக ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

    பொதுவாக ஏஐ மூலம் உருவாக்கப்படும் மனித உருவங்களில் இத்தகைய தொழில்நுட்பக் குறைபாடுகள் ஏற்படுவது வழக்கம்.

    வீடியோவில் அவரது முக பாவனைகள் மற்றும் உடல் அசைவுகள் இயற்கையாக இல்லை என்றும், அது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட Deepfake வீடியோ என்றும் பலர் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

    முன்னதாக ஈரானின் Fars மற்றும் Tasnim செய்தி நிறுவனங்கள், நேதன்யாகுவின் அலுவலகத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது பலத்த காயமடைந்திருக்கலாம் என்று செய்திகளை வெளியிட்டன.

    கடந்த சில நாட்களாக நேதன்யாகு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது மற்றும் புதிய வீடியோக்கள் எதுவும் வெளியாகாதது இந்த வதந்திகளுக்கு வலு சேர்த்தது.

    இஸ்ரேலுக்கு வருகை தந்த அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் நேதன்யாகு நடத்த வேண்டிய சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டதும், அவர் இறந்துவிட்டார் என்ற சந்தேகத்தை அதிகரித்தது.

    இந்நிலையில் இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கூறும்போது, பிரதமர் நேதன்யாகு கொல்லப்பட்டதாக கூறப்படும் செய்திகள் போலியானவை. அவர் நலமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஈரான் புரட்சிகர காவல்படை கூறும்போது, இஸ்ரேல் பிரதமர்  நேதன்யாகு ஒரு குற்றவாளி. குழந்தைகளை கொன்ற கொலையாளியான அவர் இன்னும் உயிருடன் இருந்தால் அவரை கொல்லும் பணி தொடரும் என்று தெரிவித்தது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் இந்த மாற்று பாதை வழியாகவே பயணிக்கின்றன.
    • ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கப்படும்.

    அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. அந்த வழியாக செல்ல முயலும் எந்த ஒரு கப்பலும் அழிக்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்தது.

    உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி பாதையாக வளைகுடா நாடுகளை இந்த பாதையே உலகத்துடன் இணைத்து வந்தது.

    எனவே எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த சூழலில் இரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

    செங்கடலில் அமைந்துள்ள மற்றொரு வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஜலசந்தியான பாப் எல் மாண்டேப் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஹவுதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், பெரும்பாலான வணிகக் கப்பல்கள் மாற்றுப் பாதையான பாப் எல்-மாண்டேப் வழியாகப் பயணிக்கின்றன. இதனால் இந்த வழித்தடத்தில் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்த அதிகரித்த கப்பல் போக்குவரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக ஹவுதி தலைவர் அப்துல் மாலிக் அல் ஹவுதி தெரிவித்துள்ளார்.

    ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய கடல் வழித்தடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாங்கள் தூண்டப்படுகிறோம். தூண்டப்படுவோம்.
    • போரில் இருந்து விலகி இருப்பதுதான் எங்களின் முதன்மையான முன்னுரிமை.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு (மேற்கு ஆசியா) நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    மத்திய கிழக்கு பிராந்திய போர் விரிவடைந்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. துருக்கி அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு நட்பு நாடாகும். இந்த சண்டையில் துருக்கி விலகியே இருக்கிறது. என்றாலும் இரு நாடுகளுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர ராஜதந்திர முயற்சி மேற்கொள்ளப்படுமா? என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹகன் ஃபிடனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு ஹகன் ஃபிடன் பதில் அளிக்கும் வகையில் கூறியிருப்பதாவது:-

    ராஜதந்திர ரீதியிலான முயற்சிக்கு உகந்த சூழ்நிலை தற்போது இல்லை. துரோகம் இழைக்கப்பட்டதாக ஈரான் உணர்கிறது. ஏனென்றால், அணுசக்தி திட்டம் தொடர்பாக 2-வது முறையாக பேசிக் கொண்டிருக்கும்போதே, அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இருந்த போதிலும், எந்தவொரு விவேகமான மறைமுக ராஜதந்திர நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக நான் கருதுகிறேன்.

    நாங்கள் தூண்டப்படுகிறோம். தூண்டப் படுவோம் என்று எனக்குத் தெரியும். இருப்பினும் துருக்கியின் டாப் முன்னுரிமை இந்த போரில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதுதான்.

    இவ்வாறு ஹகன் ஃபிடன் தெரிவித்துள்ளார்.

    துருக்கி அமைச்சரவையில் ஹகன் ஃபிடன் சக்திவாய்ந்த நபராக உள்ளார். அவர் அதிபர் எர்டோகனுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர்.

    துருக்கியின் புலனாய்வு துறை தலைவராக இருந்து ஹகன் ஃபிடன், 2023-ம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

    ஈரான் துருக்கி நோக்கி மூன்று ஏவுகணைகளை வீசியது. இதை துருக்கியில் உள்ள நேட்டோ வான்பாதுகாப்பு சிஸ்டம் வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழித்தடம் வழியாகவே நடைபெறுகிறது.
    • போர்க்கப்பல்களை அனுப்பி அமெரிக்காவிற்கு உதவ வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

    அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, சர்வதேச  சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதிக்காதது இதற்கு முக்கிய காரணமாகும்.

    உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த சிறிய கடல் வழித்தடம் வழியாகவே நடைபெறுகிறது.

    இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படவில்லை என்றும் ஆனால் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடற்படைத் தளபதி அலிரேசா தங்சிரி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "இந்த ஜலசந்தி சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு திறந்தே உள்ளது. ஆனால், எதிரிகளான அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு சொந்தமான கப்பல்களுக்கு மட்டுமே இது மூடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், அந்தப் பாதையை பாதுகாப்பாக வைத்திருக்க  தங்களது போர்க்கப்பல்களை அனுப்பி அமெரிக்காவிற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    முன்னதாக 92,700 மெட்ரிக் டன் LPG எரிவாயுவுடன் ஷிவாலிக், நந்தா தேவி ஆகிய 2 இந்திய கப்பல்கள் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து இந்தியா நோக்கி வந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மலையிலிருந்து இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்தது.
    • காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேபாளில் நேற்று மாலை நடந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த 7 பக்தர்கள் உயிரிழந்தனர்.

    நேபாளில் புகழ்பெற்ற இந்து வழிபாட்டுத் தலமான மனகாமனா கோவில் அருகே உள்ள காந்தர் என்ற மலைப்பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.

    மலையிலிருந்து இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்த மின்சார வாகனம் சுமார் 150 முதல் 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செங்குத்தான மலைப்பாதையில் இறங்கும்போது மின்சார வாகனத்தின் பிரேக் சரியாக செயல்படாததே விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நேபாளில் இதே போன்ற ஒரு விபத்தில் 27 இந்தியப் பக்தர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஊழியர்களுடன் இயங்கி கொண்டிருந்தபோது தொழிற்சாலை மீது ஏவுகணைகள் பாய்ந்தன.
    • போர் இன்று 16வது நாளை எட்டியுள்ளது.

    ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய ராணுவ நடவடிக்கை இன்று 16வது நாளை எட்டியுள்ளது.

    இந்நிலையில் நேற்று ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள தொழிற்சாலை மீது நடந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

    வெப்பமூட்டும் மற்றும் குளிரூட்டும் உபகரணங்களைத் தயாரிக்கும் அந்த தொழிற்சாலை நேற்று ஊழியர்களுடன் இயங்கி கொண்டிருந்தபோது தொழிற்சாலை மீது ஏவுகணைகள் பாய்ந்தன.

    ஈரானின் 'பார்ஸ்' செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இதில் 15 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    இஸ்பஹான் தாக்குதலுக்கு முன்னதாக, ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவு மீதும் அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இதில் அங்குள்ள ராணுவ கட்டமைப்புகள் அழிக்கபட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.345, டீசல் விலை லிட்டருக்கு ரூ.355.
    • வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாள். 50% ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்.

    ஈரான் போரினால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    ஏற்கனவே அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு மற்றும் பொருளாதார நெருக்கடியால் தத்தளிக்கும் பாகிஸ்தானில் இதன் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.345 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.355 ஆகவும் உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

    அதன்படி, அரசு நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் 5% முதல் 30% வரை குறைக்கப்படும்.

    கூட்டாட்சி மற்றும் மாகாண அமைச்சர்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தங்களது ஊதியம் மற்றும் இதர படிகளை முழுமையாக விட்டுக்கொடுக்க வேண்டும்.

    நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் 25% குறைக்கப்படும்.

    அரசு வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 60% அரசு வாகனங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும்.

    வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாள். 50% ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்.

    ஜூன் 2026 வரை புதிய வாகனங்கள், ஏசி மற்றும் தளபாடங்கள் வாங்குவதற்கு முழுத் தடை.

    மின்சாரம் மற்றும் எரிபொருள் சேமிப்பிற்காகப் பள்ளிகள் இரண்டு வாரங்களுக்கு மூடல் .

    அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும்.

    இந்தச் சிக்கன நடவடிக்கைகள் மூலம் சேமிக்கப்படும் நிதி அனைத்தும் பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்" என என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாராயண் சுமார் 18 ஆண்டு காலம் பணியாற்றி உள்ளார்.
    • புதிய தலைமை செயல் அதிகாரி தேர்வு செய்யப்படும் வரை அவர் பதவியில் தொடருவார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது அடோப் நிறுவனம்.

    இந்நிலையில், முன்னணி மென்பொருள் நிறுவனமான அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) நீண்ட காலம் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாந்தனு நாராயண் தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

    இந்த தகவலை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய தலைமை செயல் அதிகாரி தேர்வு செய்யப்படும் வரை அவர் பதவியில் தொடருவார். அதன்பின் வாரியத் தலைவராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாராயண் சுமார் 18 ஆண்டு காலம் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×