என் மலர்

    ஆஸ்திரேலியா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலியா பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் அமர்ந்தார் தேவா.
    • ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி என்றார்.

    சிட்னி:

    தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர்.

    தனித்துவ குரல் வளத்தால் கவர்ந்தவருமான இசையமைப்பாளர் தேவாவின் இசை பயணத்தை ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம் பாராட்டி கவுரவித்துள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை தரப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமரவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, மதிப்பிற்குரிய செங்கோலும் வழங்கப்பட்டது.

    இதனால் தேவா நெகிழ்ந்து போனார். இதுதொடர்பாக தேவா கூறியதாவது:

    ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை பெருமை அளிக்கிறது.

    எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கவுரவத்தை வழங்கியதற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    இந்தத் தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாசாரத்தைப் பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.

    எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான் என் பலம்.

    இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எவ்வாறு பாம்பை வெளியே விரட்ட வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறார்.
    • சிறுமியின் இந்த தைரியத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் தனது வீட்டுக்குள் நுழைந்த பாம்பை சிறுமி லாவகமாக அங்கிருந்து விரட்டினாள். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு சிறுமி தனது வீட்டின் மூலையில் பாம்பு இருந்ததைக் கண்டாள்.

    இதனை தனது தந்தையிடம் அவள் கூற, அவர் எவ்வாறு பாம்பை வெளியே விரட்ட வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறார். அவர் சொல்வது போல துடைப்பானைக் கொண்டு அந்த பாம்பை சிறுமி வெளியில் விரட்டுகிறாள். அப்போது துளியும் பயமில்லாமல் அந்த சிறுமி பாம்பை விரட்டிய காட்சிகள் காண்போரை வியக்க வைத்துள்ளது. சிறுமியின் இந்த தைரியத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியர்கள் அதிகளவில் குடியேறுவதாகக் கூறி பல்வேறு நகரங்களில் பேரணி நடத்தினர்.
    • இந்தியர்களுக்கு எதிரான பேரணிக்கு ஆஸ்திரேலிய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

    இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் பார் ஆஸ்திரேலியா அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியர்கள் குடியேற்றத்துக்கு எதிராக அந்த அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் கான்பெரா, சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மார்ச் பார் ஆஸ்திரேலியா அமைப்பினர் பேரணி நடத்தினர். இதில் தேசியக் கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    கான்பெராவில் நடந்த பேரணியில் பங்கேற்றோர் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதேபோல், சிட்னியில் நடந்த பேரணியில் பங்கேற்றோர் குடியேற்றத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் குடியேற்றத்துக்கு எதிராக பேரணிகள் நடந்தன. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பில் குவிக்கப்பட்டனர்.

    இந்தியர்களுக்கு எதிரான இந்தப் பேரணிக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு, இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் மக்களுக்கு இடமில்லை என்றும், இது வெறுப்புணர்வை பரப்புவதாகவும் குற்றம்சாட்டியது.

    ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2.72 கோடியாகும். இதில் 10 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலியாவில் உள்ள யூதர்களின் வழிபாட்டு தலங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இதனால் ஈரான் உடனான தூதரக உறவு துண்டிக்கப்பட்டு, இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல் சமீப காலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிட்னி மற்றும் மெல்போர்னில் உள்ள யூதர்களின் வழிபாட்டு தலங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

    இதுகுறித்து ஈரான் புலனாய்வுத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் ஈரானிய புரட்சிகர காவல்படை அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியது உறுதியானது. இந்த அமைப்பை ஆஸ்திரேலியா ஏற்கனவே பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இஸ்ரேல்-காசா போருக்கு பிறகு இந்த தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தி இருப்பது தெரிய வந்தது.

    இதனால் ஈரானுடனான உறவை துண்டிப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. எனவே நாட்டில் உள்ள ஈரான் தூதர் உடனடியாக வெளியேறுமாறு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்தார்.

    அதேபோல், ஈரானில் உள்ள ஆஸ்திரேலிய தூதர்களும் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஒரு நாட்டின் தூதரை ஆஸ்திரேலியா வெளியேற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.

    இதனையடுத்து இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே ஈரானில் உள்ள ஆஸ்திரேலியர்கள் எந்நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் ஈரான் பயணத்தை தவிர்க்குமாறும், ஏற்கனவே அங்கு வசிக்கும் ஆஸ்திரேலியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 277 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • அந்த அணியின் பிரீட்ஸ்கே 88 ரன்னும், ஸ்டப்ஸ் 74 ரன்னும் அடித்தனர்.

    மெக்காய்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.

    இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவரில் 277 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் பிரீட்ஸ்கே 88 ரன்னும், ஸ்டப்ஸ் 74 ரன்னும் அடித்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஜம்பா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 37.4 ஓவரில் 193 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 84 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா, ஒருநாள் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி 5 விக்கெட்டும், பர்கர், செனுரன் முத்துசாமி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள தென் ஆப்பிரிக்காவின் மேத்யூ பிரீட்ஸ்கே அந்தப் போட்டிகள் அனைத்திலும் 50+ ரன்கள் அடித்துள்ளார்.

    தனது முதல் போட்டியில் 150 ரன்கள் அடித்து அசத்தியவர், அடுத்த 3 போட்டிகளிலும் முறையே 83, 57 மற்றும் 88 ரன்கள் அடித்துள்ளார்.

    இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் 4 ஒருநாள் போட்டிகளிலும் 50+ ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை பிரீட்ஸ்கே படைத்துள்ளார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    இதற்குமுன் இந்தியாவின் நவ்ஜோத் சித்து தனது முதல் ஐந்து ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டிவால்ட் பிரெவிஸ் 3 போட்டிகளில் 14 சிக்சர்களை விளாசியுள்ளார்.
    • இந்த தொடரில் டிவால்ட் பிரெவிஸ் 14 சிக்ஸ், 13 பவுண்டரி உள்பட 180 ரன் குவித்தார்.

    மெல்போர்ன்:

    தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.

    இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 172 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய டிவால்ட் பிரெவிஸ் 26 பந்தில் 6 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 53 ரன்களை விளாசினார்.

    அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கிளென் மேக்ஸ்வெல் பொறுப்புடன் ஆடி 36 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ரன்களை விளாசினார்.

    இந்நிலையில், இந்த தொடரில் தென் ஆப்பிரிக்காவின் டிவால்ட் பிரெவிஸ் ஆட்டம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

    இந்தப் போட்டியில் 6 சிக்சர்களை விளாசியதன் மூலமாக விராட் கோலியின் சாதனையை டிவால்ட் பிரெவிஸ் முறியடித்தார்.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பெருமையை டிவால்ட் பிரெவிஸ் பெற்றுள்ளார்.

    விராட் கோலி 10 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 12 சிக்சர்களை விளாசியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை டிவால்ட் பிரெவிஸ் வெறும் 3 போட்டிகளில் 14 சிக்சர்களை விளாசி முறியடித்துள்ளார்.

    மேலும், இந்த டி20 தொடரில் 3 போட்டிகளில் ஆடிய டிவால்ட் பிரெவிஸ் 14 சிக்சர், 13 பவுண்டரி உள்பட 180 ரன்களை குவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிலநடுக்கம் காரணமாக குயின்ஸ்லாந்தில் ரெயில் சேவையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது.
    • மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரை பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நூநாவுக்கு மேற்கே 60 கிமீ தொலைவிலும், பிரிஸ்பேனுக்கு வடக்கே 250 கிமீ தொலைவிலும் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 4.9-ஆக பதிவானது.

    சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் இருந்து பிரிஸ்பேன் மற்றும் சன்ஷைன் கடற்கரையிலிருந்து கோல்ட் கடற்கரை வரை உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக குயின்ஸ்லாந்தில் ரெயில் சேவையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. முர்கன் உள்பட சில பகுதிகளில், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூதரகத்தில் இருந்த பலர் தேசபக்தி பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர்.
    • அடையாளம் தெரியாத நபர்கள் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கிராஃபிட்டிகளை வரைந்தது குறிப்பிடத்தக்கது.

    உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, சில காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கு வந்து நிகழ்வை சீர்குலைக்க முயன்றனர். இதனால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

    தூதரகத்தில் இருந்த பலர் தேசபக்தி பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தவர்களில் சிலர் காலிஸ்தான் கொடிகளை அசைத்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதனால் இரு குழுக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், போலீசார் தலையிட்டு எந்த மோதலும் இல்லாமல் நிலைமையை தணித்தனர். பின்னர் தூதரக அலுவலகத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

    சமீபத்தில், ஆஸ்திரேலியாவின் போரோனியாவில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் அடையாளம் தெரியாத நபர்கள் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கிராஃபிட்டிகளை வரைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காசாவில் ஒரு ஹோலோகாஸ்ட் (இனப்படுகொலை) நடக்கிறது. குழந்தைகள் பசியால் இறக்கின்றனர்.
    • 193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.

    பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் அறிவித்தார்.

    செப்டம்பர் மாதம் நடைபெறும் 80 வது கூட்டத்தொடரில் ஐ.நா. பொதுச் சபையில் நடைமுறைகளின்படி அங்கீகரிப்போம் என்று அவர் கூறினார்.

    அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'காசாவில் ஒரு ஹோலோகாஸ்ட் (இனப்படுகொலை) நடக்கிறது. குழந்தைகள் பசியால் இறக்கின்றனர்.

    மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து காசா மக்களின் பசி மற்றும் துன்பத்தைப் போக்க இரு நாடுகள் தீர்வுதான் சிறந்த வழி" என்று கூறினார்.

    ஆஸ்திரேலியாவின் இந்த முடிவை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார்.

    193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.

    ஜி20 நாடுகளைப் பொறுத்தவரை அர்ஜென்டினா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

    அமெரிக்காவும் சில மேற்கத்திய நாடுகளும் மட்டுமே அங்கீகரிக்கவில்லை. சமீபத்தில், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் செப்டம்பரில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகக் கூறியுள்ளன. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலியா 20 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
    • அந்த அணியின் டிம் டேவிட் 52 பந்தில் 83 ரன் குவித்தார்.

    டார்வின்:

    ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி டார்வினில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. டிம் டேவிட் 52 பந்தில் 83 ரன் குவித்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் மபாகா 4 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து இறங்கிய தென் ஆப்பிரிக்காவில் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். தென் ஆப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் அணியின் வெற்றிக்காகப் போராடினார். வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன் தேவைப்பட்ட நிலையில் ரிக்கல்டன் இருந்ததால் அந்த அணிக்கு வெற்றி மேல் நம்பிக்கை இருந்தது.

    கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் எதுவும் அடிக்கவில்லை. 2-வது பந்தை ரிக்கல்டன் தூக்கி அடித்தார். சிக்சர் செல்லும் என நினைத்த நிலையில், பவுண்டரி லைனில் பீல்டிங் செய்த மேக்ஸ்வெல் அதனை அந்தரத்தில் பாய்ந்து பிடித்தார். தரையில் கால் படும் முன் பந்தை பவுண்டரி எல்லைக்கு உள்ளே தூக்கி வீசிய அவர், தரை இறங்கியதும் பவுண்டரிக்கு வெளியே இருந்து தாவி அற்புதமாக கேட்ச் பிடித்தார். இது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 178 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 161 ரன்களை மட்டுமே எடுத்தது.

    டார்வின்:

    தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி டார்வினில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டிம் டேவிட் 52 பந்தில் 83 ரன் குவித்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் மபாகா 4 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 179 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    தொடக்க ஆட்டக்காரரான ரிக்கெல்டன் தனி ஆளாகப் போராடினார். அரை சதம் கடந்து 71 ரன்னில் அவுட்டானார். ஸ்டப்ஸ் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஜோஷ் ஹேசில்வுட், பென் துவார்ஷியூஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது டிம் டேவிட்டுக்கு வழங்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜிஸால் இந்த எரிஸ் ராக்கெட் ஏவப்பட்டது.
    • ராக்கெட் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

    ஆஸ்திரேலியா முதன்முறையாக விண்ணில் செலுத்த முயன்ற ராக்கெட் முயற்சி தோல்வியில் முடிந்தது. வானில் பறந்த ராக்கெட் 14 விநாடிகளிலேயே தரையில் விழுந்த விபத்துக்குள்ளானது.

    கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜிஸால் ஏவப்பட்ட இந்த எரிஸ் ராக்கெட் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்த முயன்ற முதல் ராக்கெட் ஆகும். இது சிறிய செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்டது.

    ராக்கெட் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

    ×