என் மலர்

    2025 - ஒரு பார்வை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டிட்வா என்ற பெயருக்கு அரபு மொழியில் 'தீவு' என்று அர்த்தம் சொல்லப்பட்டது.
    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.

    டிட்வா புயல் (Cyclone Detwah) கடந்த நவம்பர் மாதம் (2025) இலங்கை அருகே உருவாகி, தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்று, தமிழகம் உட்பட கடலோரப் பகுதிகளில் கனமழை மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஒரு சக்திவாய்ந்த புயல் ஆகும்.

    ஒவ்வொரு புயலும் உருவான பிறகு, அதனை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக பெயர் சூட்டப்படுவது வழக்கம். இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த பெயர் சூட்டப்பட்டது.

    டிட்வா என்ற பெயருக்கு அரபு மொழியில் 'தீவு' என்று அர்த்தம் சொல்லப்பட்டது. ஏமனுக்கு அருகில் உள்ள 'சோகோட்ரா' தீவின் ஒரு பகுதியின் பெயராகக் கூட இது இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. அரபு மொழியில் டிட்வா என்பதற்கு 'அழகான மலர்' என்றும் கூறப்படுகிறது.

    டிட்வா புயல் இலங்கை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களை ஏற்படுத்தியது.

     

    இலங்கையில் கடந்த நவம்பர் 16-ந்தேதி முதல் கோர தாண்டவமாடிய டிட்வா புயலுக்கு 638 பேர் பலியாகி விட்டனர். 190-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும், புயல், கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களில் சிக்கி 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,000-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

     

    டிட்வா பேரிடர் காரணமாக இலங்கைக்கு சுமார் 700 கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சாகர் பந்து திட்டத்தின்கீழ் இந்தியா மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டது.

     

    டிட்வா புயலால் பேரழிவை சந்தித்துள்ள இலங்கைக்கு ரூ.316 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். பொதுவாக வடகிழக்கு பருவமழை என்பது காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னம் போன்றவற்றால் பெய்து வருகிறது.

     

    இலங்கையில் 'டிட்வா புயல் நல்ல மழையை கொட்டிவிட்டு, அடுத்ததாக தமிழக கடலோரப்பகுதிகளில் 28-ந்தேதி பயணத்தை தொடங்கியது. ராமேசுவரம், ராமநாதபுரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், காவிரி டெல்டா பகுதிகளிலும் அதிகனமழை வரையும், தென்மாவட்டங்களில் கன முதல் மிககனமழையும் பெய்தது.

     'டிட்வா' புயல் டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்தியது. இதனால் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    நாகையில் வீடுகளில் புகுந்த மழை வெள்ளம் 

     

    சில மாவட்டங்களில் கனமழை, வேறு சில மாவட்டங்களில் அதிகனமழை என கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது.

    டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் நெற்பயிர் உள்ளிட்ட பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கின. தோட்டக்கலை பயிர்களும் கடும் சேதத்துக்கு உள்ளாகின.

     

    டிட்வா புயல் காரணமாக நவம்பர் இறுதியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் (சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை உட்பட) கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது

    'டிட்வா' புயல் காவிரி டெல்டா, தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழையை கொடுத்தாலும், வடமாவட்டங்கள், உள்மாவட்டங்களில் எதிர்பார்த்த மழை கிடைக்கவில்லை. இதனால் நவம்பர் மாதத்தில் இயல்பு அளவான 17.7 செ.மீ.-ல், 14.9 செ.மீ. மழைதான் பதிவாகி உள்ளது. இது இயல்பைவிட 16 சதவீதம் குறைவு ஆகும். இது நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில், 3-வது மோசமான மழைப்பதிவாக ஆகிவிட்டது.

    இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு 12.5 செ.மீ., 2024-ம் ஆண்டு 14 செ.மீ. பெய்தது இதற்கு முன்பு மோசமான மழைப்பொழிவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களை சேர்த்து பார்க்கும்போது, இயல்பான மழை அளவான 35.3 செ.மீ.-ஐ விட 8 சதவீதம் அதிகமாக அதாவது, 38.3 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.

    சென்னையிலும் நவம்பரில் மோசமான மழைப்பதிவு இருந்துள்ளது. கடந்த 25 ஆண்டு புள்ளி விவரங்களுடன் பார்க்கையில், இது 5-வது மோசமான மழைப்பொழிவாக பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இது தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுவதும் நடைபெறும் மோசமான செயல்.
    • வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் மரணிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.

    வரதட்சணை கொடுமை!

    காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறாது, அல்லது காட்சிகள் மாறினாலும் காலங்கள் மாறாது என்ற வாக்கியத்திற்கு ஏற்ப வரதட்சணை கொடுமை என்பது பல நூற்றாண்டு காலமாக தொடரும் கதை.

    ஆசை ஆசையாக வளர்க்கும் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் தருணத்தில் பிள்ளை வீட்டார் வாய்க்கு வந்தபடி கேட்டு பெறுவதே வரதட்சணை என்பார்கள். வசதிக்கு ஏற்ப நகை, பணம், வாகனம் என கொடுத்து அனுப்பினாலும் வாழ சென்ற வீட்டில் பெண்கள் நிம்மதியாக இருக்கிறார்களா? என்றால் இல்லை என்பதே பெரும்பாலானோரின் பதில்.

    கேட்ட வரதட்சணை கொடுக்கவில்லை என்றால் ராணி மாதிரி வாழவைப்பேன் என்று சொல்லி அழைத்துச் செல்லும் பெண்களை மோசமான வகையில் நடத்தும் செயல்களும் நடக்கத்தான் செய்கின்றன. இது தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுவதும் நடைபெறும் மோசமான செயல். இதனால் பாதிக்கப்படுவதே ஆயிரம் கனவுகளுடன் புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்கள், அவர்களின் பெற்றோர் என்பதே நிதர்சனமான உண்மை.

    அப்படிப்பட்ட வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், இந்தாண்டு பலரின் மனதில் பாதிக்கப்பட்டது ரிதன்யாவின் மரணம் தான். அது என்ன ரிதன்யாவின் மரணத்தை சொல்றோம் என நினைக்க வேண்டாம். நினைத்ததை பெற விரும்பும் பிள்ளை வீட்டார், திருமணம் ஆகி சில மாதங்கள் வரை பெண்ணை சந்தோஷமாக வைத்திருப்பார்கள். ஆனால் ரிதன்யாவோ திருமணம் ஆன 77 நாட்களில் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தான் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரிதன்யா எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.



    கோவிலுக்கு செல்வதாக திருமணத்தின் போது தனக்கு கொடுத்த காரை எடுத்துக்கொண்டு சென்ற ரிதன்யா பாதி வழியிலேயே காரிலேயே தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் திருமணமான 77 நாட்களுக்குள், வரதட்சணை கேட்டு கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் துன்புறுத்தியதாக ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்அப் வாய்ஸ் மேசேஜ் மூலம் அனுப்பியுள்ளார். இது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

     

    இவ்வழக்கு தொடர்பாக கணவர், மாமனார் கைதான நிலையில், மாமியாரை போலீசார் கைது செய்வதற்கு தாமதம் செய்தனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், மாமியாரை போலீசார் கைது செய்தனர். ஆனால் தற்போது மூவரும் நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளனர்.

    இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், ரிதன்யாவின் தந்தை, அரசியல் தலைவர்களைச் சந்தித்து முறையிட்டார்.

    எது, எப்படியோ வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் மரணிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. அடுத்து ரிதன்யா போல் மற்றொரு பெண் வரதட்சணை கொடுமையால் மரணிக்கும் முன்பு நீதிமன்றங்கள் இதற்கு சரியான கடிவாளம் போட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவா மாநில முன்னாள் முதல்வரான ரவி நாயக் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி மரணமடைந்தார்.
    • காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகேந்திர மக்வானா மரணமடைந்தார்.

    இந்தியாவில் 2025ம் ஆண்டில் மரணமடைந்த முக்கிய அரசியல் தலைவர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

    * மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கிரிஜா வியாஸ் கடந்த மே மாதம் 10ம் தேதி அன்று மரணமடைந்தார்.

    * கோவா மாநில முன்னாள் முதல்வரான ரவி நாயக் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி மரணமடைந்தார்.

    * அதே நாளில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகேந்திர மக்வானா மரணமடைந்தார்.

    * பாஜக மூத்த தலைவரும், குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான ரவி விஜய் ரூபானி மரணமடைந்தார்.

    *மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மக்களவை சபாநாயகருமான சிவராஜ் பாட்டீல் டிசம்பர் 12 (இன்று) மரணமடைந்தார்.

    இந்த ஆண்டில் மரணமடைந்த இந்த 5 முக்கிய தலைவர்கள் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்..

    கிரிஜா வியாஸ்:

    கிரிஜா வியாஸ் இந்திய அரசியலில், குறிப்பாகப் பெண்கள் அதிகாரம் மற்றும் சமூக மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றியவர். அவர் அரசியல்வாதி மட்டுமல்ல, ஒரு புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளரும் கூட.

    1946ம் ஆண்டில் ராஜஸ்தானில் பிறந்த இவர் 1991 முதல் 1993 வரை பி.வி.நரசிம்ம ராவ் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைத் துணை அமைச்சராக இருந்தார்.

     

    ஜூன் 2013 முதல் மே 2014 வரை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சராக பதவி வகித்தார்.

    முன்னதாக, 2005 முதல் 2011 வரை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இரண்டு முறை இந்தப் பொறுப்பை வகித்துள்ளார். பெண்கள் உரிமைகளுக்கான கொள்கை சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் முக்கியப் பங்காற்றினார்.

    கிரிஜா வியாஸ் அவர்கள் மே 1, 2025 அன்று, தனது ஜெய்ப்பூர் இல்லத்தில் பூஜையின் போது ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்து, சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

    ரவி நாயக்

    கோவா மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமானவர் ரவி எஸ். நாயக். 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி முதல் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வரை அவர் கோவா மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

    அவர் பதவியில் இருந்த காலத்தில், மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தினார். ரவி நாயக் அவர்கள் முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் பலமுறை கோவாவின் துணை முதலமைச்சராகப் (Deputy Chief Minister) பணியாற்றியுள்ளார். கோவா சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் (Speaker) இருந்துள்ளார். 

    கோவாவின் போண்டா சட்டமன்றத் தொகுதியில் இருந்து பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அவர் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்தாலும், அரசியல் சூழல் காரணமாகக் கட்சி மாறுதல்களையும் சந்தித்துள்ளார்.

    முன்னாள் முதலமைச்சர் ரவி எஸ். நாயக் அவர்கள் அக்டோபர் 29, 2025 அன்று தனது 79வது வயதில் காலமானார்.

    யோகேந்திர மக்வானா

    குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யோகேந்திர மக்வானா, நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அமைச்சரவைகளில் பல்வேறு முக்கிய மத்திய அமைச்சகங்களில் பணியாற்றி உள்ளார்.

    1980கள் மற்றும் 1990களின் முற்பகுதியில் இவர் நிதித் துறை, உள்துறை, வேளாண்மைத் துறை, சுகாதாரத் துறைகளில் மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளார். 

    குஜராத் மாநிலத்தில் இருந்து பலமுறை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நீண்ட காலம் மத்திய அரசில் பணியாற்றி, முக்கியக் கொள்கை முடிவுகளில் பங்களித்துள்ளார்.சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் உரிமை மற்றும் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.

    மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகேந்திர மக்வானா அவர்கள் அக்டோபர் 29, 2025 அன்று, தனது 92வது வயதில் காலமானார்.

    விஜய் ரூபானி

    பாஜக மூத்த தலைவரும், குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆனவர் விஜய் ரூபானி. ஆகஸ்ட் 2016 முதல் செப்டம்பர் 2021 வரை குஜராத் முதலமைச்சராக இருந்தார். குஜராத் பாஜகவின் மாநிலத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.2014 முதல் 2016 வரை குஜராத் மாநில அரசில் போக்குவரத்து மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 

    2006 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். அவர் ராஜ்கோட் மாநகராட்சியின் மேயராகவும் (Mayor) நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

    முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி அவர்கள் ஜூன் 27, 2025 அன்று, தனது 68வது வயதில் அகமதாபாத் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    சிவராஜ் பாட்டீல்

    முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான சிவராஜ் விஷ்வநாத் பாட்டீல், தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் ஆவார்.தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

    1991 முதல் 1996 வரை மக்களவை சபாநாயகர். 2004 முதல் 2008 வரை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார்.


    மும்பையில் நவம்பர் 26, 2008 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, அவர் தார்மீகப் பொறுப்பேற்றுத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவைகளில் இவர், பாதுகாப்பு, மக்களவை சபாநாயகர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறைகளில் மத்திய அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

    2010 முதல் 2015 வரை பஞ்சாப் மாநில ஆளுநராகவும் மற்றும் சண்டிகரின் நிர்வாகியாகவும் பணியாற்றினார். சிவராஜ் பாட்டீல் தனது 90-வது வயதில் டிசம்பர் 12, 2025 (இன்று ) அன்று காலமானார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    • இந்தப் பணிகள் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்படும்.

    புதுடெல்லி:

    காய்கறி வாங்க மார்க்கெட் சென்று கொண்டிருந்தாள் சுமதி. அப்போது எதிரில் வந்த தோழி ரமாவைப் பார்த்தாள். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது, யார் இந்த சார் என கேள்விப்பட்டிருக்கேன். இது என்னடி வேற SIR -புதிதாக இருக்கிறதே என ரமாவிடம் ஆச்சரியமாகக் கேட்டாள் சுமதி.

    அதுவா ஒண்ணுமில்ல. தேர்தலுக்கான முதல் கட்ட பணி தான் இது. இதனால் வாக்காளர் பட்டியலில் இருக்கும் நிறைய போலி வாக்காளர்களை நீக்க முடியும் எனறாள் ரமா.

    ஆனா பல அரசியல் கட்சிகள் இதுக்கு ஏன் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்களே ஏன்? என்றாள் சுமதி.

    இவ்வளவு நாள் தங்களது வாக்கு வங்கியை மெயிண்டெய்ன் பண்ணினவங்களுக்கு இந்த நடவடிக்கையினால அது

    குறைஞ்சுடுமோ என்ற பயம்தான் காரணம் என்றாள் ரமா.

    ஓ அதுதான் காரணமா? SIR அப்படின்னா என்ன, அதுபத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் என்றாள் சுமதி.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி ரமா சொன்னதன் சுருக்கம் இதுதான்:

    வாக்காளர் பட்டியலில் பல இடங்களில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமை, ஒரு குடும்பம் இடம் பெயர்ந்தும் பழைய முகவரி நீங்காமை, ஒரே நபருக்கு இரட்டை பதிவுகள் இருப்பது போன்ற பொதுவான பிழைகள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்தன.

    இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சாதாரண பட்டியல் புதுப்பிப்பால் சரிசெய்ய முடியாத பல பிரச்சனைகள் இருப்பதால், இந்த ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறை பெரும் அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பொருத்தமாக உள்ளனவா, இடம் மாற்றியவர்கள் மாற்றமடைந்து உள்ளனரா, இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளனவா, ஒரே நபரின் பெயர் பல இடங்களில் இடம் பெறுகிறதா போன்ற தவறுகளை சரிசெய்வதே இந்தப் பணிகளின் முக்கிய நோக்கமாகும்.


    அடுத்த ஆண்டு பல மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தல்களை முன்னிட்டு, துல்லியமான வாக்காளர் பட்டியல் உருவாக்கப்படுவது மிகவும் அவசியமான சூழ்நிலையாக மாறியுள்ளது.

    முதலில் பீகாரில் தொடங்கப்பட்ட இந்தப் பணிகள் அதன்பின் தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

    வரைவுப் பட்டியல் டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட உள்ளது. அதன்பின் ஜனவரி 15 வரை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் சமர்ப்பிக்க முடியும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்படும்.


    சிறப்பு தீவிர திருத்த பணிகள் பணிச்சுமையை அதிகரித்துள்ளது எனக்கூறி பல ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டது பேசுபொருளானது என கூறினாள் ரமா.

    ஓகே நானும் SIR விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துட்டேன், நன்றி என கூறியபடி மார்க்கெட் சென்றாள் சுமதி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உட்டா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

    2025-ஆம் ஆண்டு உலக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படுகொலைகளால் நிரம்பி உள்ளது.

    சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவிய இந்தக் கொலைகள் குறித்த செய்திகள், உலகில் அரசியல் வன்முறையின் ஒரு புதிய, ஆபத்தான சகாப்தத்தை உணர்த்துகின்றன. அவ்வாறாக இந்தாண்டு நடந்த 5 அரசியல் படுகொலைகளை இங்கு காண்போம். 

    அமெரிக்கா: 

    குறிப்பாக உலக வல்லரசான அமெரிக்காவில் நிகழ்ந்த இரு முக்கிய கொலைகள், நாட்டில் உச்சக்கட்டத்தை அடைந்த சித்தாந்தப் பிளவை அம்பலப்படுத்தின.

    சார்லி கிர்க் கொலை: செப்டம்பர் மாதம், டிரம்ப் உடைய தீவிர ஆதரவாளரான பிரபல பழமைவாத அரசியல் ஆர்வலரும் 'டேர்னிங் பாயின்ட் USA' அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.


    31 வயதே ஆன இவரது மரணம், வலதுசாரி மற்றும் இடதுசாரி சித்தாந்தங்களுக்கிடையில் வளர்ந்து வரும் வெறுப்பைக் குறிக்கும் ஒரு அரசியல் நிகழ்வாக மாறியது.

    மெலிசா ஹார்ட்மேன் படுகொலை: மினசோட்டா மாநிலத்தின் ஹவுஸ் சபாநாயகர் எமரிடா மெலிசா ஹார்ட்மேன், ஜூன் மாதம் தனது கணவருடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.


    ஜனநாயக கட்சி வட்டாரங்களில் செல்வாக்கு மிக்க நபராக இருந்த இவரது மரணம், உள்ளூர் அரசியலை உலுக்கியதுடன், அரசியல் தலைவர்களின் பாதுகாப்புக் குறித்து தேசிய அளவில் விவாதத்தை எழுப்பியது.

    கொலம்பியா:

    கொலம்பியா நாட்டில், 2026 அதிபர் தேர்தல் வேட்பாளரும் செனட்டருமான மிகைல் உரைபே டர்பே-இன் மரணம் வளர்ந்து வரும் வன்முறை அரசியலின் மற்றொரு சான்று.


    ஜூன் மாதம் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சுடப்பட்ட மிகைல், ஆகஸ்ட் மாதத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு, கொலம்பியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் களத்தையே அடியோடு மாற்றி அமைத்தது.

    ஈரான்:

    ஜனவரி மாதம், ஈரானின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அலி ரஸினி மற்றும் முகமது மோகிசே ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.


    அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து வந்த இவர்களின் படுகொலை அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    உக்ரைன்:

    உக்ரைனிய பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபிய், ஆகஸ்ட் மாதம் லிவிவ் நகரில் கூரியர் வேடமிட்ட ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏற்கனவே ரஷியாவுடன் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இந்த அரசியல் கொலை மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.


    2025-இல் நிகழ்ந்த இந்த ஆறு படுகொலைகளும் சில நாடுகளின் சம்பவங்கள் என்ற எல்லைகளைத் தாண்டி, சித்தாந்தங்களுக்கிடையே வளர்த்து வரும் வெறுப்பு மற்றும் மோதலை எடுத்துக் காட்டுகிறது.

    இவை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு தீவிர எச்சரிக்கை மணியை ஒலிப்பதாக அமைந்துள்ளது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீரஜ் சோப்ரா டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோரை திருமணம் செய்து கொண்டார்.
    • ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானின் 2-வது திருமணம் நவம்பர் மாதம் நடந்தது.

    2025-ம் ஆண்டில், உலகம் முழுவதும் பல விளையாட்டு வீரர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதில், பல திருமணங்கள் தனிப்பட்டவை அல்லது பொது அறிவுக்கு வராதவை. ஆனால் பிரபலமான மற்றும் ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், 23 விளையாட்டு வீரர்கள் (அல்லது வீராங்கனைகள்) திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை திருமணங்களில் இருவரும் விளையாட்டு வீரர்களாக இருந்தால் இருவரையும் தனித்தனியாக குறிக்கும்.

    அமெரிக்க கால்பந்து (NFL) வீரர்கள்: ஜோஷ் ஆலன் (பஃபலோ பில்ஸ் குவார்ட்டர்பேக்): நடிகை ஹெய்லி ஸ்டெயின்ஃபெல்ட்டை மே 31, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.


    ஜாலென் ஹர்ட்ஸ் (பிலடெல்பியா ஈகிள்ஸ் குவார்ட்டர்பேக்): பிரயோனா "பிரை" பர்ரோஸை (மார்ச்/ஏப்ரல் 2025) திருமணம் செய்து கொண்டார்.


    டிராவிஸ் ஹன்டர் (NFL வீரர்): லீனா லெனீயை மே 24, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.


    ஐயன் தாமஸ் (லாஸ் வேகாஸ் ரெய்டர்ஸ் வீரர்): அசாரியா அல்காரினை மே 25, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.


    லியோனார்ட் வில்லியம்ஸ் (சீஹாக்ஸ் டிபென்சிவ் எண்ட்): ஹெய்லி லூயிஸ் வில்லியம்ஸை 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.


    கால்பந்து (சாக்கர்) வீரர்கள்:பெதானி இங்கிலாந்து (இங்கிலாந்து & டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஸ்ட்ரைக்கர்): ஸ்டெஃப் வில்லியம்ஸை (முன்னாள் வேல்ஸ் மிட்பீல்டர்) ஜூன் 7, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.

    எல்லி கார்பென்டர் (ஆஸ்திரேலியா & லியோன் வீரர்): டேனியல் வான் டி டாங்கை (நெதர்லாந்து & லியோன் வீரர்) ஜூன் 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.

    கத்ரினா கோரி (ஆஸ்திரேலியா வீரர்): கிளாரா மார்க்ஸ்டெட் (ஸ்வீடன் வீரர்) ஜூன் 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.

    அல்பா ரெடோண்டோ (ஸ்பெயின் & ரியல் மாட்ரிட் ஃபார்வர்ட்): கிறிஸ்டினா மோன்லியோனை 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.

    இந்திய விளையாட்டு வீரர்கள்:

    நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல், ஒலிம்பிக் பதக்க வென்றவர்): டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோரை ஜனவரி 19, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார். இது இமாச்சல பிரதேசத்தில் தனிப்பட்ட விழாவாக நடைபெற்றது.


    ஹிமானி மோர் (டென்னிஸ் வீராங்கனை): நீரஜ் சோப்ராவை திருமணம் செய்து கொண்டார்.

    லலித் யாதவ், இந்திய கிரிக்கெட் வீரர் (ஐபிஎல்-இல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்), பிப்ரவரி 9, 2025-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.


    பிற விளையாட்டுகள்:

    ஹாரி சார்லஸ் (ஈக்வெஸ்ட்ரியன்/குதிரை ஓட்டம்): ஈவ் ஜாப்ஸை ஜூலை 26, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.

    டியா பிளான்கோ (சர்ஃபிங் வீராங்கனை): ப்ரோடி ஜென்னரை ஜூலை 12, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.

    பென் கிரிஃபின் (கோல்ஃப், PGA டூர் வீரர்): டானா மயெராஃபை டிசம்பர் 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.

    லோகன் பால் (பாக்ஸிங்/ரெஸ்லிங் வீரர்): நினா அக்டாலை ஆகஸ்ட் 15, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.

    ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானின் 2-வது திருமணம் நவம்பர் 2025-இல் இன்ஸ்டாகிராம் தான் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். முதல் திருமணத்திற்கு 10 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்றது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திரை பிரபலங்களின் விவாகரத்து இந்தாண்டு இணையத்தில் பேசுபொருளனது
    • ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்தனர்.

    இந்த 2025 ஆம் ஆண்டில் திரையுலக பிரபலங்களின் திருமணங்கள் மட்டுமல்ல, சில ஜோடிகள் தங்கள் வாழ்க்கைத் துணையை பிரிந்து சென்றதும் சமூக ஊடகங்களில் மற்றும் செய்தித்தாள்களில் கவனம் பெற்றது. இவைகள் ரசிகர்களிடம் பேசுபொருளாகின.

    அவ்வகையில் இந்தாண்டு விவாகரத்து பெற்ற திரை பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்

    1. ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி

    தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித்தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.

    இதனிடையே ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.

    இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்தார். இதையடுத்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகிய இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

    2. மீரா வாசுதேவன்

    பிரபல மலையாள நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுது.

    மோகன்லாலின் தன்மந்த்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக மீரா உயர்ந்தார். தமிழில் உன்னை சரணடைந்தேன், அடங்க மறு, ஜெர்ரி, அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

    இவர் 2005இல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2010 இல் அவரை விவாகரத்து செய்தார்.

    தொடர்ந்து மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அவருடன் அரிஹரா என்ற மகனை பெற்றார். ஆனால் அந்த உறவும் நீடிக்காமல் அவரை விவாகரத்து செய்த மீரா, 2024 ஏப்ரலில் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இந்தாண்டு தனது மூன்றாவது கணவர் விபினையும் மீரா வாசுதேவன் விவாகரத்து செய்தார் .

    3. ஜெசிகா ஆல்பா

    பிரபல ஹாலிவுட் நடிகையான ஜெசிகா ஆல்பா இந்தாண்டு தனது கணவர் கேஷ் வாரனை விவாகரத்து செய்தார். 17 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதியின் விவாகரத்து பெரும் பேசுபொருளானது. 

     

     4. ஜெனிபர் லோபஸ் - பென் அப்லெக்

    பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபசும், பிரபல நடிகரான பென் அப்லெக்கும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக அவர்கள் வலம் வந்தனர்

    ஜெனிபர் லோபசுக்கு பென் அப்லெக் 4-வது கணவர் ஆவார். இதற்கு முன்பு லோபஸ் நடிகர் ஓஜானி நோவா, நடனக் கலைஞர் கிறிஸ் ஜட் பாடகர் மார்க் ஆண்டனி ஆகியோரை மணந்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும்.
    • தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது.

    சர்வதேச அளவில் உண்மையான பொருட்களை அங்கீகரித்து சந்தைப்படுத்த புவிசார் குறியீடு முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் 1999-ம் ஆண்டு இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவில் பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு புவிசார் குறியீடு (GI) வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது வரை, 658 பொருட்கள், இலட்சினைக்களுக்கு GI வழங்கப்பட்டுள்ளது.

    புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளின் பூர்வீகத்தையும், அதன் சிறப்புத் தன்மையையும் உலகறியச் செய்து, அதைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான அங்கீகாரமாகும்.

    புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும். புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவுப் பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும். அப்பொருள்களுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் . புவிசார் குறியீடு பெரும் பொருட்களுக்கான உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள், அத்தொழிலை பாரம்பரியமாக செய்து வருபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கான பொருளாதார தேவையும் இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

     

    பண்ருட்டி பலாப்பழம் - கும்பகோண வெற்றிலை

    தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் ஒரு சிறப்பான உற்பத்தி, கைவினை அல்லது விவசாயப் பொருட்கள் இருக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகும் மொத்தம் 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இருந்தது. சமீபத்தில், தமிழ்நாட்டின் மொத்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 74-ஐ எட்டியுள்ளது.

    இந்த ஆண்டில் புவிசார் குறியீடு பெற்ற சில முக்கிய பொருட்கள்: பண்ருட்டி பலாப்பழம், கும்பகோண வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, செட்டிகுளம் சின்ன வெங்காயம், ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வற்றல் மிளகாய், உறையூர் பருத்தி சேலைகள், தூயமல்லி அரிசி போன்ற பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது.

    புவிசார் குறியீடு - மாவட்டம்

    ஈத்தாமொழி நெட்டைத் தேங்காய் - கன்னியாகுமாரி

    நீலகிரி டீ - நீலகிரி

    விருப்பாச்சி வாழை - திண்டுக்கல்

    சிறுமலை மலை வாழைப்பழம் - திண்டுக்கல்

    ஈரோடு மஞ்சள் -ஈரோடு

    மதுரை மல்லி - மதுரை

    கொடைக்கானல் மலை பூண்டு - திண்டுக்கல்

    கன்னியாகுமரி கிராம்பு - கன்னியாகுமரி

    ராமநாதபுரம் குண்டு மிளகாய் - ராமநாதபுரம்

    வேலூர் முள் கத்திரிக்காய் - வேலூர்

    ஆத்தூர் வெற்றிலை - தூத்துக்குடி

    கம்பம் பன்னீர் திராட்சை - தேனி

    சோழவந்தான் வெற்றிலை - மதுரை

    மட்டி வாழைப்பழம் - கன்னியாகுமரி

    மதுரை மரிக்கொழுந்து - மதுரை

    கும்பகோணம் வெற்றிலை - தஞ்சாவூர்

    பண்ருட்டி பலாப்பழம் - பண்ருட்டி

    பண்ரூட்டி முந்திரி - பண்ருட்டி

    புளியங்குடி எலுமிச்சை - தென்காசி

    சம்பா மிளங்காய் வந்தல் - விருதுநகர்

    சிட்டிகுளம் சின்ன வெங்காயம் - பெரம்பலூர்

    சித்திரை கார் அரிசி - ராமநாதபுரம்

    ஸ்ரீவில்லுபுத்தூர் பால்கோவா - விருதுநகர்

    கோவில்பட்டி கடலை மிட்டாய் - தூத்துக்குடி

    பழனி பஞ்சாமிர்தம் - திண்டுக்கல்

    மணப்பாறை முறுக்கு - திருச்சி

    ஊட்டி வர்க்கி - நீலகிரி

    உடன்குடி பனங்கருப்பட்டி - தூத்துக்குடி

    சேலம் ஜவ்வரிசி - சேலம்

    மார்த்தாண்டம் தேன் - கன்னியாகுமரி

    சேலம் சுங்குடி - சேலம்

    காஞ்சிபுரம் பட்டு - காஞ்சிபுரம்

    பவானி ஜமக்காளம் - ஈரோடு

    மதுரை சுங்குடி - மதுரை

    தஞ்சாவூர் ஓவியம் - தஞ்சாவூர்

    தஞ்சாவூர் கலைத்தட்டு - தஞ்சாவூர்

    சுவாமிமலை வெண்கலக் சின்னங்கள் - தஞ்சாவூர்

    நாகர்கோவில் கோவில் நகைகள் - கன்னியாகுமரி

    ஆரணி பட்டு - திருவண்ணாமலை

    கோவை கோரா பருத்தி - கோயம்புத்தூர்

    சேலம் பட்டு - சேலம்

    தஞ்சை தலையாட்டி பொம்மை - தஞ்சாவூர்

    தோடா பூந்தையல் - நீலகிரி

    பத்தமடைப் பாய் - திருநெல்வேலி

    நாச்சியார்கோவில் குத்துவிளக்கு - தஞ்சாவூர்

    செட்டிநாடு கொட்டான் - சிவகங்கை

    தஞ்சாவூர் வீணை - தஞ்சாவூர்

    கண்டாங்கி சேலை - சிவகங்கை

    தஞ்சாவூர் நெட்டி சேலை - தஞ்சாவூர்

    மாமல்லபுரம் கல் சிற்பங்கள் - செங்கல்பட்டு

    அரும்பாவூர் மரச்சிற்பம் - பெரம்பலூர்

    திருபுவனம் பட்டுப் புடவை - தஞ்சாவூர்

    தஞ்சாவூர் கலைத்தட்டு லோகோ - தஞ்சாவூர்

    சுவாமிமலை வெண்கலச் சின்னம் லோகோ - தஞ்சாவூர்

    நாகர்கோவில் கோவில் நகை லோகோ - கன்னியாகுமரி

    கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் - அரியலூர்

    கள்ளக்குறிச்சி மரச் சிற்பம் - கள்ளக்குறிச்சி

    நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் - தஞ்சாவூர்

    திண்டுக்கல் பூட்டு - திண்டுக்கல்

    மைலாடி கல் சிற்பம் - கன்னியாகுமரி

    மானாமதுரை மண்பாண்டம் - சிவகங்கை

    தைக்கால் பிரம்பு கைவினைப் பொருட்கள் - மயிலாடுதுறை

    ஜடேரி நாமக்கட்டி - திருவண்ணாமலை

    நெகமம் காட்டன் சேலை - கோயம்புத்தூர்

    செடிபுட்டா சேலை - திருநெல்வேலி

    விளாச்சேரி களிமண் பொம்மை - மதுரை

    தோவாளை மாணிக்க மாலை - கன்னியாகுமரி

    கோயம்புத்தூர் வெட் கிரைண்டர் - கோயம்புத்தூர்

    கிழக்கிந்திய தோல் பொருட்கள் - திருச்சி

    உறையூர் பருத்தி சேலை - திருச்சி

    கவிந்தபாடி நாட்டு சர்க்கரை - ஈரோடு

    நாமக்கல் மாக்கல் பாத்திரங்கள் - நாமக்கல்

    பாரம்பரிய தூயமல்லி அரிசி - தஞ்சாவூர்

    அம்பாசமுத்திரம் சொப்பு சாமான் - திருநெல்வேலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார்.
    • குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஆணவக் கொலை!

    சாதியின் பெயரால் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்று பலரால் வலியுறுத்தப்படுகிறது. அது எப்போ வலியுறுத்தப்படுகிறது என்று கேட்டால் ஒரு ஆணவக் கொலை நடைபெற்ற பின்னர்.. அதன்பின் தனிச்சட்டம் குறித்த எந்த வலியுறுத்தலும் இல்லை.

    இது இன்றைக்கோ, நேற்றைக்கோ கிடையாது. பல ஆண்டுகளாக தொடரும் அவலம். ஆணவக் கொலையால் ஒரு உயிர் பறிக்கப்பட்ட பிறகே பலரும் இதுகுறித்து பேசுகிறார்கள்... ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களின் நிலை பரிதாபத்துக்குரியது.

    தமிழ்நாட்டில் 2017 முதல் 2025 வரை சுமார் 65 ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளதாக தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 7 ஆணவக் கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் ஆணவ கொலை என்றதும் தர்மபுரி இளவரசன், சேலம் கோகுல்ராஜ், உடுமலை சங்கர் என பல பேரை சொல்லும் இந்த பட்டியலில் தற்போது கவின் கொலை வழக்கும் நினைவு கூறப்படுகிறது. அது குறித்து பார்ப்போம்..

     

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார்.

    இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி கவின் தனது உடல்நிலை சரியில்லாத தாத்தாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக திருநெல்வேலி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அந்த மருத்துவமனையில்தான் கவின் காதலித்த பெண் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு வந்த அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித், கவினிடம் பேசுவதாகக் கூறி அவரைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு, சுர்ஜித் அரிவாளால் கவினைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். கொலை நடந்த உடனேயே சுர்ஜித் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

    கவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தக் கொலையில் அப்பெண்ணின் பெற்றோருக்கும் தொடர்பு இருப்பதாக கவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அப்பெண்ணின் பெற்றோர் இருவரும் காவல் துறையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.

     

    எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு மாநில காவல்துறையிடமிருந்து சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

    சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் அவரது உறவினர் ஜெயபாலன் ஆகியோரும் இந்தக் கொலையில் உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்டனர். சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    வழக்கு விரைவாக விசாரிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனிடையே, கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. தற்போதைய நிலை இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீசாரால் நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகளின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், ஆணவக் கொலைகளுக்கு எதிரான கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    அந்த கோரிக்கை அடுத்த ஆண்டாவது நிறைவேறுமா? என்பது பல ஆயிரம் கேள்விகளை உண்டாக்கியுள்ளது. காலம் தான் பதில் சொல்லும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
    • ஏப்ரல் 22-ம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ஸ்ரீநகர்:

    அது ஒரு பரபரப்பான ரெயில் நிலையம். ரெயில் எப்போது புறப்படும் என அதில் உட்கார்ந்திருக்கும் பயணிகளும், சீக்கிரம் ரெயிலைப் பிடிக்க வேண்டுமே என ஓடி வரும் பயணிகளுமாக அந்த ரெயில் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

    எஸ் 4 கோச்சில் அமர்ந்திருந்த கேசவனை வழியனுப்ப வந்திருந்தார் சுதர்சன். வண்டி புறப்பட 20 நிமிடங்கள் இருந்ததால் இருவரும் அங்கிருந்த கேண்டீனில் டீ குடிக்கச் சென்றனர். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த அவர்கள் நாட்டு நடப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பத்திரிகை விற்கும் கடையில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் என்ற செய்தியைக் கண்டு வருத்தப்பட்டனர்.

    யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பிரச்சனை தீரமாட்டேங்குதே என அங்கலாய்த்தார் கேசவன்.

    அப்போது, மத்திய அரசு ஜம்மு காஷ்மீரில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அப்பகுதி மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது. ஆனாலும் கடந்த ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகையே அதிர்ச்ச்யில் ஆழ்த்தியது என வேதனையுடன் தெரிவித்தார் சுதர்சன்.

    அவர் கூறியதன் சாராம்சம் இதுதான்:

    ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

    ஏப்ரல் 22-ம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 பேரும் ஆண்களே ஆவர்.

    இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது.


    இந்தக் கொடிய தாக்குதலுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மந்திரிகள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இரு வாரங்களுக்குப் பிறகு மே 7 அன்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்மூலம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது என தெரிவித்தார்.


    இதைக் கேட்ட கேசவன், யார் ஆட்சியில் இருந்தாலும் குடிமக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார் கேசவன்.

    அப்போது ரெயில் புறப்படுவதற்கான சிக்னல் விழுந்ததால் கேசவன் தனது சீட்டில் சென்று அமர்ந்தார். ரெயில் புறப்பட்டுச் சென்றதும் கேசவனை வழியனுப்பிய சந்தோஷத்தில் வீட்டுக்கு திரும்பினார் சுதர்சன்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த ஆகஸ்டில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டார்
    • எங்களுக்கும் தூக்கம் வேணும்ல என சாம் ஆல்ட்மேனே கோரிக்கை விடுத்தார்.

    'நாட்டு மக்களுக்கு ஓர் முக்கியச்செய்தி' எனக்கூறி முக்கிய அறிவிப்புகளை மேளம் அடித்து பொதுமக்களிடம் தெரிவிப்பர் அரண்மனை ஊழியர்கள். அதுபோல கடந்த ஆகஸ்டில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிடுகிறார். அவர் தினம் ஒரு பதிவிடுவார். நீங்கள் எதை சொல்கிறீர்கள்? என கேட்பீர்கள்.

    நான் சொல்வது 2025ஐயே திரும்பி பார்க்க வைத்த ஒரு பதிவை. அதாவது 3 வாழைப்பழங்களின் இமோஜை பகிர்கிறார். இதற்கு என்ன அர்த்தம், கூகுள் ஏதாவது புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப்போகிறதா என காரசார விவாதம் நடைபெறுகிறது. ஏனெனில் அப்போது மற்றொரு நிறுவனத்தின் தொழில்நுட்பம் டிரெண்டிங்கில் இருந்தது.

    "கருவாடு ஒருநாள் சந்தைக்கு வந்துதான் ஆகவேண்டும்" என்னும் நம் பழமொழிக்கு ஏற்ப அடுத்த மாதம் முழுவதும் இணையத்தை ஆட்டிப் படைத்தது கூகுளின் 'நானோ பனானா'. அதாவது இந்த நானோ பனானாவில் நமது புகைப்படத்தை பதிவிட்டு, என்ன ப்ராம்ட் வேண்டுமோ அதை உள்ளிட்டால், நாம் கேட்டதுபோல நம் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு, 3டி லுக்கில் கிடைக்கும்.

    இதனால் ட்விட்டர், இன்ஸ்டா, ஃபேஸ்புக் என எந்தப் பக்கம் திரும்பினாலும் NANO BANANA-ன் ஆதிக்கம்தான். சமூக ஊடகங்கள் முழுவதும் ஒரே ஏஐ இமேஜ்கள். 'என்னடா என்னைத் தவிர எல்லாரும் அப்டேட்டா இருக்கீங்க' என்ற அளவு நாம் அதனை பார்த்து வியந்திருப்போம்.


    நடிகை சோனாக்ஷி சின்ஹா

    பெண்கள் புடவை அணிந்துகொண்டு தலையில் பூ வைத்திருக்குமாறும், ஆண்கள் கையில் ரோஜாப்பூ வைத்திருக்குமாறும் மாறி மாறி புகைப்படங்களை பதிவிட்டு வந்திருப்பர். இதில் பல பெண்களும் இதற்கு முன்பு புடவை கட்டிக்கூட இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் புடவை கட்டியிருப்பது போலவும், மாடலிங் ஃபோட்டோஷுட் எடுத்திருந்தது போலவும் புகைப்படங்கள். 'போதும்டா சாமி என்னை விட்ருங்க' என்ற அளவிற்கு இணையம் முழுவதும் இந்த டிரெண்ட். 

    ஒரு கட்டத்தில் குதிச்சர கைப்புள்ள என்பதுபோல, பொங்கியெழுந்தனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். நாங்களும் எவ்வளவுதான் தாங்குவது என, ஆண்கள் கையில் ரோஜாப்பூ வைத்திருப்பது போல பதிவிட்ட ஃபோட்டோக்களை குறிப்பிட்டு, 'பெரிய நேரு பரம்பரை, சட்டையில் ரோசாப்பூ குத்தாம வெளிய வரவேமாட்டாரு' என்னும் கவுண்டமணி, செந்தில் காமெடி டயலாக்கும், நாம் சொன்னவாறு எடிட்டிங்கில் வரவில்லை என்றால், "படிக்க தெரிஞ்சா படி, தப்பு தப்பா படிச்சி அடிவாங்கி சாகாத சொல்லிட்டேன்" என ஏஐ-ஐ திட்டுமாறு மானஸ்தன் பட சரத்குமார், வடிவேலு பட காமெடியும், "பாஸ் பொங்கலுக்கு வெள்ளையடிச்ச மாதிரி பளபளனு இருக்கீங்க" என தலைநகரம் படத்தின் வடிவேலு காமெடி என மறுபக்கம் இணையத்தை தெறிக்கவிட்டனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். 



    இதற்கெல்லாம் காரணம் ஒரே ஒருவன்தான். அவன் வேற யாரும் இல்லை நானோ பனானாவிற்கு முன்பு டிரெண்டான கிப்லி ஆர்ட். சாட்ஜிபிடியிடம் நம் புகைப்படத்தை கொடுத்தால் அனிமேஷன் வடிவில் கிடைக்கும். இதனை உலகம் முழுவதும் பயன்படுத்த தூக்கம் இல்லாமல் தவித்தது ஜாட்ஜிபிடி. ஆம் அனைவரும் தங்களுக்கு அனிமேஷன் புகைப்படம் வேண்டும் என முயற்சிக்க இணையதளமே முடங்கியது. எங்களுக்கும் தூக்கம் வேணும்ல என சாம் ஆல்ட்மேனே கோரிக்கை விடுத்தார். அந்தளவிற்கு இரவு, பகல் என பாராமல் புகைப்படத்தை பதிவேற்றி, எடிட் செய்து வந்தனர் பயனர்கள். ஒருவழியாக இப்போது பெருமூச்சு விட்டு இந்த டிரெண்ட்கள் நார்மலாகி விட்டன. 

    ஆமா, சம்மந்தமே இல்லாமா இப்போ ஏ இத சொல்லிக்கிட்டு இருக்க என பலரும் கேட்கலாம். அது ஒன்றும் இல்லை. புத்தாண்டு வரவிருக்கிறது இல்லையா. அந்த ஒளிமயமான எதிர்காலத்தை பார்ப்பதற்கு முன் 2025-ஐ ஒரு ரீவைண்ட் பார்ப்போம். அதற்காகத்தான்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பரிசுத் தொகையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.3 கோடி வழங்கப்படும்.
    • அழிவை நோக்கிய உலகின் அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் அவரது தொலைநோக்குப் பார்வைக்காக வழங்கப்பட்டது.

    டைனமைட் வெடிபொருளை கண்டுபிடித்த ஸ்வீடன் நாட்டு ஆய்வாளர் ஆல்ஃபிரட் நோபல் தனது கண்டுபிடிப்பு மனிதர்களை கொல்ல பயன்படுத்துவது குறித்து வருத்தமடைந்து தான் ஈட்டிய பெரும் செல்வத்தை கொண்டு 1895-இல் நிறுவியதே நோபல் பரிசு. 1896 இல் அவரது மறைவுக்கு பின் அவரின் உயிலின்படி 1901 தொடங்கி வருடந்தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது உலகின் உயரிய அங்கீகாரமாகக் உருவெடுத்துள்ள நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசுத் தொகையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.3 கோடி வழங்கப்படும். 

    அந்த வகையில் இந்த ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. 

    அந்த வகையில், இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது. 

    மனித உடலில் உள்ள புறநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

    இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது. 

    குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    வேதியியலுக்கான நோபல் பரிசு, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவை சேர்ந்த, சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி ஆகிய ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது.

    உலோக-கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சி கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

    இலக்கியத்திற்கான நோபல் பரிசு, 71 வயதான ஹங்கேரி எழுத்தாளர் 'லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை' ( László Krasznahorkai) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அழிவை நோக்கிய உலகின் அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்தது.

    László Krasznahorkai

    2024 இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங் அவர்களுக்கு வழங்கப்ட்டது குறிப்பிடத்தக்கது.

    பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, ஜோயல் மோய்கிர் (நெதர்லாந்து வம்சாவளி அமெரிக்க- இஸ்ரேல் பொருளாதார வரலாற்றாசிரியர், பிலிப் அகியோன் (பிரான்ஸ் பொருளாதார நிபுணர்), பீட்டர் ஹோவிட் (கனடா பொருளாதார நிபுணர்) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.   

    தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான முன் தேவைகள் என்ன என்பது தொடர்பாக ஆய்வுவாக்கவும், காலாவதியான செயல்முறைகளுக்கு மாற்றாக புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும் அவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது.

    இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ -வுக்கு வழங்கப்பட்டது. வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.

    வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை வழங்குவதாக நோபல் கமிட்டி தெரிவித்தது.

    முன்னதாக  இந்த வருடம் 8 போர்களை நிறுத்தியதற்காக தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி வந்தபோதும் அவருக்கு வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது. 

    ×