என் மலர்

    அழகுக் குறிப்புகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுவாக நெல்லிக்காய் முடி உதிர்தலை குறைக்க உதவும்.
    • ஷாம்பு போல நீரேற்ற பண்புகளை கொண்டு உச்சந்தலையை குளிர்விக்க உதவுகிறது.

    பெண்கள் கூந்தலை பராமரிக்க நெல்லிக்காய், கற்றாழை இரண்டையுமே பயன்படுத்துவார்கள். அதிலும் முடி உதிராமல் நீளமாக வளர வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கும். முடி வளர்ச்சிக்கு இந்த இரண்டில் எதனை பயன்படுத்துவது சிறந்தது? என்ற குழப்பமும் சிலரிடம் இருக்கும். அதற்கு சரியான தீர்வு எது என்று பார்ப்போமா?

    நெல்லிக்காய்

    இதில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடென்டுகள், இரும்பு மட்டுமின்றி உச்சந்தலை மற்றும் முடியின் மயிர்க்கால்களுக்கு பலம் சேர்க்கும் பொருட்களும் நிரம்பியுள்ளன. அடிப்படையில் நெல்லிக்காய் முடியின் வேர்க்கால்களுக்கு புரதம்போல் ஊட்டச்சத்து மதிப்புடன் செயல்பட்டு அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியது.

    பொதுவாக நெல்லிக்காய் முடி உதிர்தலை குறைக்க உதவும். உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். விரைவில் முடி நரைப்பதை குறைக்கும். நெல்லிக்காயை எண்ணெய்யாக தலைக்கு பயன்படுத்தலாம். நெல்லிக்காய் பொடியையும் தலையில் தேய்த்து வரலாம். நெல்லிக்காயை சாறாக பருகியும் வரலாம். இப்படி நெல்லிக்காயை ஏதாவதொரு வகையில் பயன்படுத்தி வந்தால் கடுமையாக முடி உதிர்வது தடுக்கப்படும். தலைமுடி மீண்டும் உயிர்ப்புடன் காட்சியளிக்க உதவும்.

    கற்றாழை

    இது மென்மையானது, குளிர்ச்சியானது. உச்சந்தலைக்கு பயன்படுத்த ஏதுவானது. கற்றாழையில் வைட்டமின்களும், நொதிகளும் நிறைந்துள்ளன. உச்சந்தலை ஈரப்பதமின்றி வறட்சியாக காட்சி அளிக்கிறதா? உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுகிறதா? கற்றாழை இதற்கு சிறந்த தேர்வாக அமையும். இது ஷாம்பு போல நீரேற்ற பண்புகளை கொண்டு உச்சந்தலையை குளிர்விக்க உதவுகிறது. தலைமுடி சரியாக வளர்வதற்கு ஏற்ற சூழலையும் அளிக்கிறது. கற்றாழையை செடியில் இருந்து வெட்டி எடுத்து, அதன் உள்பகுதி சதையை வெளியே எடுத்து நேரடியாக தலையில் தேய்க்கலாம். கடைகளில் கிடைக்கும் தரமான கற்றாழை ஜெல்லையும் உபயோகிக்கலாம்.

    எதனை பயன்படுத்தலாம்?

    நெல்லிக்காய், கற்றாழை இவை இரண்டுமே வெவ்வேறு வழிகளில் முடியின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன. நெல்லிக்காயை பொறுத்தவரை முடி உதிர்வை தடுக்கவும், முடியை வலுவாக்கவும், முடி அடர்த்திக்கும் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. கற்றாழை உச்சந்தலையை தூய்மையாக பராமரிக்கவும், குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவிடக்கூடியது. முடி வளர்வதற்கு சாதகமான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்கக்கூடியது.

    உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை இருந்தாலோ, முடி அடர்த்தி குறைந்து மெல்லியதாக இருந்தாலோ நெல்லிக்காய் சிறந்த தீர்வாக அமையும். உச்சந்தலை வறண்டு அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டால் கற்றாழை கைகொடுக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சரும பராமரிப்பில் சுத்தப்படுத்துதல், டோனிங் மற்றும் ஈரப்பதம் இவை மூன்றும் மிக முக்கியமானவை.
    • தலைமுடிக்கு மிதமான தன்மை கொண்ட ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும்.

    கல்லூரி மாணவிகள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளவே அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் பலரும் அது குறித்த விழிப்புணர்வு பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். தோழிகளிடம் கேட்பது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றை பார்த்து, அவற்றை பின்பற்றி சில மோசமான விளைவுகளை சந்திக்கின்றனர். எனவே இந்த பிரச்சினையை தவிர்க்க, நீங்கள் பார்ப்பதற்கு அழகாக தோன்ற, உங்களுக்கு உதவும் சில எளிய குறிப்புகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

    * சரும பராமரிப்பு

    சரும பராமரிப்பில் சுத்தப்படுத்துதல், டோனிங் மற்றும் ஈரப்பதம் இவை மூன்றும் மிக முக்கியமானவை. உங்களது சரும வகைக்கு ஏற்ப கிளென்சரனை தேர்ந்தெடுத்து, ஒரு பருத்தி உருண்டையில் கிளென்சரனை தடவி இரவு தூங்கும் முன்பு உங்களது முகத்தில் தடவ வேண்டும். இது முகத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்றி விடும். அடுத்ததாக, சரும பொலிவை மேம்படுத்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இது சருமத்தை இளமையாக வைக்க உதவும்.

     

    * தலைமுடி பராமரிப்பு

    தலைமுடிக்கு மிதமான தன்மை கொண்ட ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு கண்டிப்பாக குளிக்க வேண்டும். முக்கியமாக உங்கள் தலைமுடிக்கு ஏற்ப கண்டிஷனரை பயன்படுத்த மறக்காதீர்கள். மேலும் வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக தலைக்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.

    * சூரிய ஒளி

    சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். சன் ஸ்கிரீன் புற ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து உங்களது சருமத்தை பாதுகாக்கும்.

    * முக அழகு

    வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சிறிதளவு பாலுடன், மஞ்சள் தூள், கடலை மாவு கலந்து அதை உங்களது முகத்தில் தடவி 'ஸ்கிராப்' செய்ய வேண்டும். இப்படி செய்தால் உங்களது முகம் பொலிவாக மாறும்.

    * உடல் பராமரிப்பு

    கல்லூரிக்கு சென்று வந்தவுடன் கண்டிப்பாக குளிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் இருக்கும் அழுக்கு, தூசி மற்றும் வியர்வை வெளியேற்றப்படும். உடலுக்கு நீங்கள் லேசான சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தலாம். தினமும் காலை மற்றும் இரவு தூங்கும் முன் என இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும் மற்றும் நாக்கையும் சுத்தம் செய்ய மறக்காதீர்கள். அப்போதுதான் பேசும்போது துர்நாற்றம் அடிக்காது. நகங்களை அவ்வப்போது வெட்டி விடுங்கள் மற்றும் நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    * சிம்பிள் மேக்கப்

    தினமும் கல்லூரிக்கு செல்லும்போது உங்களது சரும நிறத்திற்கு ஏற்ப சிம்பிளான மேக்கப் போட்டு செல்லுங்கள். அதாவது ஐஷாடோ, ஐ லைனர், மஸ்காரா, லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதுபோல இரவு தூங்கும் முன் மேக்கப்பை அகற்ற மறக்காதீர்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உங்கள் மரபணுவைப் பொறுத்து தான் முடி வளர்ச்சியும் இருக்கும்.
    • உங்கள் ஷாம்பூ தான் உங்கள் முடியின் மென்மையையும், முடி உதிர்வதையும் தடுக்கும் திறன் கொண்டது.

    ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் சரி.. இவர்களின் பொதுவான பிரச்சனை முடி கொட்டுதல் தான். சிலர் முடி அதிகமாக கொட்டுகிறது அதனால் மொட்டை அடிக்கப்போகிறேன் என்பார்கள். ஏன்? என்று கேட்டால் மொட்டை அடித்தால் முடி அடர்த்தியாக வளரும் என்றும், அதன்பிறகு முடி கொட்டுதல் இருக்காது என்றும் கூறுவார்கள்.

    உண்மையில் மொட்டை அடித்ததற்கு பிறகு முடி அடர்த்தியாக வளருமா? முடி கொட்டுவது இருக்காதா? இது உண்மையான கூற்று தானா எனபதைப் பற்றி தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

    மொட்டை அடிப்பதால் கொஞ்ச நாளைக்கு முடி இல்லாமல் இருப்போமே தவிர முடி வளர்ச்சியில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. ஏனெனில் இந்த செயலின் போது முடியிலோ அல்லது மயிர்க்கால்களிலோ எந்த மாற்றமும் இருக்காது. குறுகிய மயிர்க்கால்கள் அடர்த்தியாக தெரிவது போன்றதொரு பிம்பம் மட்டுமே காணப்படும். மொத்தத்தில் மொட்டை அடித்தால் முடி நன்றாக , வேகமாக வளர்வதாக உணர்ந்தால் அது ஒரு மாயை தான். மொட்டை அடிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் கூட, மொட்டை அடிப்பதற்கும் முடியின் வளர்ச்சி, வேகம் மற்றும் அடர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தான் கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் மரபணுவைப் பொறுத்து தான் முடி வளர்ச்சியும் இருக்கும்.

    முடி கொட்டாமல் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் வைட்டமின் ஏ,சி,டி,ஈ மற்றும் இரும்புச்சத்து, துத்தநாகம் முதலானவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

    முக்கியமாக தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும். அதிலும் வாரத்தில் ஒருமுறையாவது எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் சல்பேட் இல்லாததாக இருக்க வேண்டும். உங்கள் ஷாம்பூ தான் உங்கள் முடியின் மென்மையையும், முடி உதிர்வதையும் தடுக்கும் திறன் கொண்டது. அதனால் ஷாம்பூ தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

    முடியை பராமரிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாலும், முடி அதிகமாக கொட்டுகிறது, அடர்த்தியாக இல்லை மொட்டை அடித்தால் மீண்டும் வளரும் போது நன்றாக வளரும், அடர்த்தியாக இருக்கும் என தவறாக நினைத்துக்கொண்டு மொட்டை அடித்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகி சரியான காரணங்களை தெரிந்துகொண்டு முறையான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் முதலிடத்தில் இருப்பது அன்றும் சரி, இன்றும் சரி மரச்செக்கு தேங்காய் எண்ணெய்தான்.
    • தலையில் மேலோட்டமாக எண்ணெய் தேய்ப்பதால் எந்தவித உபயோகமும் இல்லை.

    தினமும் தலைமுடியில் அதிக அளவில் எண்ணெய் தேய்த்தாலும் பிரச்சனைகள் ஏற்படும். அதிக எண்ணெய் மயிர்க்கால்களை அடைத்துவிடும். இதனால் தலைமுடி நன்றாக வளர்வதில் தடை ஏற்படும். அதிக எண்ணெய் தலையில் இருக்கும்போது தூசியும், அழுக்கும் அதிகமாக தலையில் சேரும். இதனால் தலையில் அரிப்பு, சொரிதல் போன்றவை ஏற்படும். சிலசமயம் அதிக எண்ணெய் தலைமுடியில் பொடுகை அதிகமாக்கி விட்டுவிடும்.

    தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் முதலிடத்தில் இருப்பது அன்றும் சரி, இன்றும் சரி மரச்செக்கு தேங்காய் எண்ணெய்தான். சிறிதளவே எண்ணெய் எடுத்துக்கொண்டு நன்றாக தலை முழுவதும் படும்படி தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும். மணிக்கணக்கில் தலையில் எண்ணெய்யை ஊற விடாமல் தலைமுடியை எண்ணெய் பிசுக்கு நன்கு போகுமாறு கழுவி விடவும்.

    தலையில் மேலோட்டமாக எண்ணெய் தேய்ப்பதால் எந்தவித உபயோகமும் இல்லை. தலைமுடியின் அடியில் படும்படி நன்கு தேய்க்க வேண்டும். அதன்பின் குளிக்க வேண்டும்.

    அந்த காலத்தில் கிராமப்புறங்களில் தலையில் எண்ணெயை ஊற்றி நன்றாக தேய்த்து மசாஜ் செய்து கொஞ்ச நேரம் ஊற வைத்து பின் ஆற்றிலோ, குளத்திலோ அல்லது கிணற்றிலோ நன்கு குளித்துவிட்டு வந்து அன்றைக்கு தயாரிக்கப்பட்டிருக்கும் 'சிறப்பு சாப்பாடு' சாப்பிட்டு முடித்தால், அதனால் உண்டாகும் மயக்கத்தில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தால் அது ஒரு சந்தோஷமான மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் எண்ணெய் தேய்ப்பது நல்லது.
    • தலைமுடி அடர்த்தியாகவும் கருகருவென்றும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய் மிகமிக உதவியாய் இருக்கும்.

    தலையில் எண்ணெய் தேய்க்காமல் இருப்பதை விட தினமும் எண்ணெய் தேய்ப்பதினால் உடலுக்கு நிறைய நன்மைகள் இருக்கின்றன. காய்ந்து போன, கரடுமுரடான, சரிவர பராமரிக்காமல் பாதிக்கப்பட்ட, அடைபட்ட மயிர்க்கால்களின் நுண்துளைகள் எரிச்சலூட்டும் தலைப்பொடுகு உள்ள தலைமுடி மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் தீர வாரத்துக்கு இருமுறை தலையில் எண்ணெய் தேய்ப்பது நல்ல பலன்களைத் தரும்.

    ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் எண்ணெய் தேய்ப்பது என்பது உலர்ந்த காய்ந்துபோன தலைமுடிக்கு மிகவும் நல்லது. தலையில் ஏற்படும் சில சரும நோய்களுக்கு தினமும் மருந்து கலந்த எண்ணெய் தேய்ப்பது நல்லது என்று சருமநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் பரிந்துரை செய்வதுண்டு.

    தலையிலுள்ள மயிர்க்கால்கள் பாதிக்கப்படாமல் இருக்க எண்ணெய் மிகவும் உதவியாய் இருக்கும். தலையில் எண்ணெய் தினமும் தேய்ப்பதால் தலைமுடிக்கு மட்டுமல்ல, உங்கள் உடம்பையே புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். உங்கள் தலைமுடி அடர்த்தியாகவும் கருகருவென்றும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய் மிகமிக உதவியாய் இருக்கும்.

    தலைக்கும் தலையிலுள்ள மயிர்க்கால்களுக்கும் தேவைப்படும் சத்துப்பொருட்களுக்கும் வைட்டமின்களுக்கும், மயிர்க்கால்கள் உறுதியாக இருக்கவும் தலைமுடி நன்கு வளரவும் எண்ணெய் மிகவும் உதவுகிறது. தலைமுடியில் இருக்கும் சுருள்முடிகளை நேராக்க எண்ணெய் உதவுகிறது. தலையில் பொடுகு வராமல் தடுக்க, இளநரை வராமலிருக்க, மன அழுத்தத்தைப் போக்க, பேன் தொந்தரவு இல்லாமலிருக்க, தலைமுடி கொட்டுவதைத் தடுக்க எண்ணெய் மிகவும் உதவுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சருமத்திற்கு மாயாஜால அழகை கொடுக்கும் பழம், ஆரஞ்சு.
    • சரும அரிப்பு, வியர்வை உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகாமல் காக்கும்.

    இயற்கையான முறையிலேயே சருமத்திற்கு பளபளப்பை கூட்டுவதற்கு பழங்கள் உதவி செய்யும். அத்தகைய பழங்கள் பற்றி பார்ப்போம்.

    தர்பூசணி

    சருமத்திற்கு ஈரப்பதத்தையும், புத்துணர்ச்சியையும் தரும் பழங்களில் தர்பூசணி முக்கியமானது. குறிப்பாக எண்ணெய் பசையுள்ள சருமம், முகப்பரு சருமம் கொண்டவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். சருமம் பளபளப்புடன் மின்னத் தொடங்கிவிடும்.

    ஆரஞ்சு

    சருமத்திற்கு மாயாஜால அழகை கொடுக்கும் பழம், ஆரஞ்சு. அதிலிருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சூரிய கதிர்களிடம் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். சரும அரிப்பு, வியர்வை உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகாமலும் காக்கும்.

    அவகேடோ

    இந்த பழத்தில் வைட்டமின்கள் இ, ஏ, சி, கே, பி6, நியாசின், பாந்தோதெனிக் அமிலம், போலட், நார்ச்சத்து உள்ளிட்ட அத்தியாவசியமான சேர்மங்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் உள்புற வளர்ச்சிக்கு வித்திட்டு சரும அழகை மெருகேற்ற வழிவகை செய்யக்கூடியவை.

    எலுமிச்சை

    எலுமிச்சை சருமத்திற்கு பளபளப்பு சேர்க்குமா? என்ற எண்ணம் எழலாம். ஆனால் இயற்கையாகவே வைட்டமின் சி நிறைந்துள்ள அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சருமத்தை பாதுகாக்கவும் உதவிடும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்படக்கூடியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மூன்று ஸ்பூன் அளவிற்கு கடுக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
    • முடி உதிர்வதையும் தடுக்க இந்த கடுக்காய் உதவுகிறது.

    முகத்தில் இருக்கக்கூடிய இயற்கையான பொலிவு நீங்குவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சுற்றுச்சூழல், சூரிய ஒளிகதிர்கள் மற்றும் சரியான உறக்கமின்மையாலும் அதிகப்படியான நீரை பருகாமல் இருப்பது என பல்வேறு காரணங்களால் நம்முடைய முகத்தில் ஒருவித கருமை தோன்றி முகப் பொலிவையும் இழக்க நேரிடும். இதனால் வயதான தோற்றத்தில் இருப்பதுபோல் நமக்கே தோன்றிவிடும்.

    இழந்த சரும பொலிவை பெற எளிமையான ஃபேஸ் பேக் ஒன்று உள்ளது. அதைப்பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

    இந்த ஃபேஸ் பேக்கிற்கு மிகவும் முக்கியமானது கடுக்காய் தான். கடுக்காய் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். ஃபேஸ் பேக்காக கூடவா போடலாம் என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆமாம் கடுக்காய் ஃபேஸ் பேக் மூலம் இழந்த பொலிவை நம்மால் திரும்பப் பெற முடியும். முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களை நீக்கி இளமையான தோற்றத்தையும் தரும். கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையத்தையும் ஒரு சிலருக்கு வாயை சுற்றி இருக்கக்கூடிய கருமையும் நீக்குவதற்கு கடுக்காய் பொடி பெரிதும் உதவி புரிகிறது.

    கடுக்காய் ஃபேஸ் பேக் செய்முறை:



    ஒரு மிக்ஸிங் பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு கடுக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு விட்டமின் இ கேப்சூல் ஆயிலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அரை ஸ்பூன் அளவிற்கு தேனையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு இதை ஃபேஸ் பேக் போடுவதற்கு ஏற்றவாறு தேவையான அளவு பன்னீரையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது. இந்த பேஸ் பேக்கை அப்படியே நம்முடைய முகத்திலும் கழுத்திலும் கீழே இருந்து மேல் தடவுவது போல் தடவ வேண்டும். எந்தெந்த இடத்தில் கருமைகள் இருக்கிறதோ அந்த இடத்தில் மட்டும் இரண்டு முறை தடவ வேண்டும். அதாவது சற்று கனமாக தடவ வேண்டும். இப்படி தடவி விட்டு 20 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு சிறிது தண்ணீரை கைகளில் நனைத்துக்கொண்டு நன்றாக உலர்ந்த இந்த ஃபேஸ் பேக்கை மசாஜ் செய்வது போல் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் சுருக்கங்களும் நீங்கி இளமையான பொலிவான முகத்தை பெற முடியும்.

    நீங்கள் கடுக்காய் ஃபேஸ் பேக் போடும் போதே கடுக்காய் ஹேர் பேக் போட்டுக்கொள்ளலாம். நேரம் மிச்சமாவதோடு கூடுதல் பொலிவைப்பெறலாம்.

    கடுக்காய் ஹேர் பேக் செய்முறை:

    1 டீஸ்பூன் கடுக்காய் பவுடர் ,2 டீஸ்பூன் ஆம்லா பவுடர், 1 டீஸ்பூன் கருவேப்பிலை பவுடர் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல நன்கு கலக்கி கொள்ளவும். பின்பு இந்த பேஸ்டை இரவு முழுவதும் அப்படியே ஊறவிட்டு அடுத்த நாள் காலையில் தலையின் ஒவ்வொரு அடுக்கிலும் தடவி விடவும். 1 மணி நேரம் இந்த ஹேர் பேக்கை தலையில் ஊற வைத்து பின்பு சிறிதளவு ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலச வேண்டும். இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே உங்கள் முடியில் உள்ள பொடுகு, பேன்கள் என அனைத்தும் நீங்கும். மேலும் முடி உதிர்வதையும் தடுக்க இந்த கடுக்காய் உதவுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சருமத்தில் வளரும் முடிகளை அகற்றவும் கோதுமை மாவை பயன்படுத்தலாம்.
    • முகத்தில் முடி வளரும் பகுதிகளில் தடவி, 20-25 நிமிடங்கள் காய வைக்க வேண்டும்.

    உணவுப்பொருளான கோதுமை, பெண்களின் சரும அழகை பராமரிக்கவும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவி புரியும் கோதுமை, சருமத்துக்கு நல்ல பொலிவையும் வழங்கும்.

    மேலும், சருமத்தில் வளரும் முடிகளை அகற்றவும் கோதுமை மாவை பயன்படுத்தலாம். கோதுமை மாவை விழுதாக தயாரித்து சருமத்தில் தடவும்போது, அது சரும முடிகளை தளர்த்தும். இப்படி அடிக்கடி கோதுமை மாவை பயன்படுத்தும் போது, காலப்போக்கில் முடியின் வேர்கள் பலவீனமடைந்து, அதன் வளர்ச்சி குறைந்து, சருமத்தில் முடி வளர்வது நின்றுவிடும்.

    அதேபோல, முகத்தில் வளரும் முடிகளைப் போக்க கோதுமை மாவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்...

    கோதுமை மாவு பேஸ் பேக்

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு- 2 டேபிள் ஸ்பூன்

    தயிர் அல்லது பால்- 1 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் 1 சிட்டிகை

    தண்ணீர்- தேவையான அளவு

    பயன்படுத்தும் முறை:

    ஒரு கிண்ணத்தில், கோதுமை மாவு, பால் அல்லது தயிர் மற்றும் மஞ்சள் தூளை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிது நீரை ஊற்றி சற்று கெட்டியான விழுது போல் கலந்துகொள்ள வேண்டும். அதை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் காய வைக்க வேண்டும்.

    பின்னர் கைகளை நீரில் நனைத்து, மென்மையாக 'ஸ்கிரப்' செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது சருமத்தில் உள்ள முடிகள் மென்மையாக அகற்றப்படுவதை உணரலாம்.

    அதன் பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, துடைக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த சிறந்த பலன் கிடைக்கும்.

    கோதுமை-தேன் பேக்

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு -2 டேபிள் ஸ்பூன்

    தேன்- 1 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர்- தேவையான அளவு

    பயன்படுத்தும் முறை:

    ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, தேன் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி சற்று கெட்டியான விழுது போல் கலந்துகொள்ள வேண்டும்.

    பின் அதை முகத்தில் முடி வளரும் பகுதிகளில் தடவி, 20-25 நிமிடங்கள் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும், கீழிருந்து மேலாக அகற்றவும். அதன் பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

    கோதுமை மாவு-கடலை மாவு ஸ்கிரப்

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன்

    கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்

    தயிர் அல்லது பால் - 1 டேபிள் ஸ்பூன்

    பயன்படுத்தும் முறை:

    ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, கடலை மாவு மற்றும் தயிர் அல்லது பால் சேர்த்து விழுது போல தயாரித்துக் கொள்ள வேண்டும். அதை முகத்தில் தடவி ஓரளவு காய வைக்க வேண்டும்.

    பின்பு கைகளை நீரில் நனைத்து, மென்மையாக முகத்தை 'ஸ்கிரப்' செய்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த 'ஸ்கிரப்', முகத்தில் வளரும் முடிகளை நீக்குவது மட்டுமின்றி, சருமத்துக்கு நல்ல பொலிவையும் தருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிலர் தங்கள் உதடுகள் ஆடம்பரமாக இருக்க விலையுயர்ந்த உதட்டு சாயங்களை தேர்ந்தெடுப்பது உண்டு.
    • லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு உதடுகளை ஈரப்பதமாக்க இயற்கையான லிப் பாம் பயன்படுத்துங்கள்.

    நம் முகத்தை அழகாக்க மேக்கப் என்பது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி நம் உதட்டை அழகாக்க லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டு சாயங்களும் அவசியம். லிப்ஸ்டிக்கை நீங்கள் சரியாக தேர்ந்தெடுத்து 'அப்ளே' செய்தாலே முகமானது அழகாக மாறி விடும். ஆனால் நம்மில் நிறைய பேர் தங்கள் உதடுக்கு ஏற்ற உதட்டு சாயங்களை தேர்ந்தெடுப்பதில்லை. அதுமட்டுமின்றி, உதட்டு சாயம் பூசுவதிலும் பல்வேறு தவறுகளையும் செய்கிறார்கள். அதில் சிலவற்றை தெரிந்து கொள்வதுடன், அதை திருத்தி கொள்ள முயல்வோம்.

    லிப்ஸ்டிக்

    சிலர் தங்கள் உதடுகள் ஆடம்பரமாக இருக்க விலையுயர்ந்த உதட்டு சாயங்களை தேர்ந்தெடுப்பது உண்டு. ஆனால் விலையுயர்ந்த உதட்டு சாயங்களை விட தரமான உதட்டு சாயம்தான் உங்களுக்கு அவசியம். சில வகை உதட்டு சாயங்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் உங்கள் உதட்டை கருப்பாக மாற்றவும், விரிசலை உண்டாக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே உதட்டின் நிறத்தை மாற்றாத அதே நேரத்தில் மென்மையான உதட்டை பராமரிக்கக்கூடிய உதட்டு சாயங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    ஈரப்பதம்

    உங்கள் உதடுகளை நீங்கள் பராமரிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான முதல் விஷயம் உதடுகளை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உதடுகளில் உள்ள கருமையை போக்க முடியும். எனவே முதலில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு உதடுகளை ஈரப்பதமாக்க இயற்கையான லிப் பாம் பயன்படுத்துங்கள். இதற்கு தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை லிப் பாமைக் கூட பயன்படுத்தலாம். இதனால் உங்கள் உதடுகள் வறண்டு போகாமல் பிளவுகள் இல்லாமல் இருக்கும்.

    லிப்ஸ்டிக்கின் தரம்

    ரசாயனம் சார்ந்த உதட்டு சாயங்களை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக இயற்கையான உதட்டு சாயங்களை தேர்ந்தெடுங்கள். ஏனெனில் ரசாயனம் நிறைந்த உதட்டு சாயங்கள் அழற்சியை உண்டாக்கலாம். அவை உதடுகளை சீக்கிரமே கருப்பாக்கி விடும்.

    தேன் லிப் பேக்

    உதட்டு சாயங்களை பூசுவதனால் சிலருக்கு உதடுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை தேன் மூலமாகவே குணமாக்கலாம். தேனை உதட்டில் வாரத்திற்கு இரண்டு முறை தடவுவதினால், உதடுகளில் உள்ள விரிசலை குணப்படுத்த முடியும். தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதடுகளில் உள்ள வீக்கம் போன்றவற்றை போக்குகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும்.
    • முதலில் முகத்தை காய்ச்சாத பசும்பால் வைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள பார்லருக்கு செல்கிறார்கள். அங்கு ஆயிரம், இரண்டாயிரம் என செலவு செய்து முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்கிறார்கள். அதுவும் மாத மாதம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    கவலையை விடுங்க.. இனி பெண்கள் பார்லருக்கு போக வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பெண்கள் தங்கள் முகத்தை பொலிவாக மாற்றலாம். அதுவும் கோதுமை மாவு இருந்தாலே போதும். கோதுமை மாவு உபயோகித்து சப்பாத்தி, பூரிதான் போட முடியும் என்பதில்லை. கோதுமை மாவு உபயோகித்து முகம், கழுத்து மற்றும் கைகளை பளபளப்பாகவும் பிரகாசமாகவும் ஜொலிக்க வைக்க முடியும்.

    கோதுமை மாவு ஃபேஸ் பேக் எப்படி போடலாம் என்று தெரிந்து கொள்ளலாம் .



    கோதுமை மாவு ஃபேஸ் பேக் போடும் முறை:

    ஒரு கிண்ணத்தில் மூன்று ஸ்பூன் கோதுமை மாவு, அரை ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். இவற்றுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும்.

    முதலில் முகத்தை காய்ச்சாத பசும்பால் வைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு சிறிதளவு பசும்பாலை முகத்தில் தடவி ஒரு காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுக்கவும்.

    பின்பு கண் பகுதியை தவிர்த்து விட்டு கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து முகத்தில் கீழிருந்து மேலாக கோதுமை மாவு பேஸ்ட்டை அப்ளை செய்யவும்.

    சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்யவேண்டும். இது இறந்த சரும செல்களை வெளியேற்றவும் ரத்த ஓட்டத்தை தூண்டவும் உதவும். ஃபேஸ் பேக் காயும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் முகத்தோடு ஒட்டிப் போகும் அளவு காய்ந்துவிடக் கூடாது. பத்து நிமிடம் ஃபேஸ் பேக் காயும் வரை பொறுத்திருந்து, லேசாக ஈரப்பதம் இருக்கும்போது முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

    வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி மென்மையாக பேஸ்பேக்கை ஒத்தி எடுக்கவும். பின்பு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவினால் முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மென்மையான தாடிதான் எப்போதும் அழகு.
    • தாடியை சீவுவதற்கென தனி சீப்பு வைத்துக்கொள்ளுங்கள்

    இப்போதெல்லாம் 'கிளீன் ஷேவ்' செய்த ஆண்களை விட, தாடி வைத்திருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கிறது. இதனால் ஆண்கள் பலர் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் கஷ்டப்பட்டு வளர்க்கும் தாடியை, பராமரிக்க முடியாமல் பலர் திண்டாடுகின்றனர். அவர்களுக்காக தாடியை பராமரிக்கும் சில வழிமுறைகளை இங்கு தருகிறோம்..!

    தாடி வளர்க்கப் போவதாக முடிவெடுத்து விட்டால், ஒரு வாரத்திற்கு தினமும் கிளீன் ஷேவ் செய்யுங்கள். பின்னர் தாடி வளர்த்தால், அழகாகவும், மென்மையாகவும் தாடி வளரும்.

    தாடியை வளர்க்க எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ, அதே அளவுக்கு அதனை டிரிம் செய்யும்போதும் கவனம் செலுத்த வேண்டும். சற்று கவனம் சிதறினாலும் உங்களின் தாடி அஷ்ட கோணல் ஆகி விடும்.

    மென்மையான தாடிதான் எப்போதும் அழகு. எனவே வாரத்திற்கு இரு முறை தாடிக்கு ஷாம்பு போடுங்கள். தாடிக்கென சில பிரத்யேக ஷாம்புகள் கடைகளில் விற்பனையாகிறது. அவற்றை தாடிக்கு பயன்படுத்தலாம்.

    ஷாம்பு போட்டு தாடியை கழுவியதும் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இது தாடியை மேலும் மென்மையாக்கும்.

    தாடியை ஷாம்பு போட்டு கழுவும்போது, கவனமாக இருங்கள். நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவினால் மட்டுமே, ஷாம்பில் இருக்கும் வேதிப்பொருட்கள் தாடியில் தங்காமல் இருக்கும்.

    தாடியை சீவுவதற்கென தனி சீப்பு வைத்துக்கொள்ளுங்கள். தலையில் பொடுகு இருக்கும் நபர்கள், தலைக்கு பயன்படுத்தும் சீப்பை தாடிக்கு பயன்படுத்த வேண்டாம்.

    தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெய்யை தாடிக்கும் தடவலாம். இதனால் தாடியில் இருக்கும் முடியின் வேர்கள் வலுவடையும். மேலும் தாடி பழுப்பு நிறத்தில் மாறுவதும் தவிர்க்கப்படும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரும்பாலான ஆண்கள் சரியான அளவில் பொருந்தும் பேன்ட்களை அணிவதில்லை.
    • எந்தவொரு உடை அலங்காரத்தையும், காலணிகள்தான் முழுமையாக நிறைவு செய்கின்றன.

    அலுவலக மீட்டிங்கிற்கு தயாராகும் போது கவனிக்கவேண்டிய சில விஷயங்கள்:-

    * மென்மையான சட்டை

    அலுவலகத்தில் நடக்க இருக்கும் மீட்டிங்கிற்கு, மென்மையான நிற சட்டைகளை அணிந்து செல்வதுதான் நல்லது. கடுமையான நிறங்களை தவிர்க்கலாம்.

    * பொருத்தமற்ற பேன்ட்கள்

    பெரும்பாலான ஆண்கள் சரியான அளவில் பொருந்தும் பேன்ட்களை அணிவதில்லை. பேன்ட் மிகவும் இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ இருந்தால், அது முழுமையான தோற்றத்தை கெடுத்துவிடும். ஆண்களுக்கான பார்மல் பேன்ட்கள் இடுப்பு மற்றும் நீளத்திற்கு சரியாக பொருந்த வேண்டும்.

    * காலணி

    எந்தவொரு உடை அலங்காரத்தையும், காலணிகள்தான் முழுமையாக நிறைவு செய்கின்றன. அதனால் அலுவலக உடையை நிறைவு செய்ய, முறையான காலணிகளைத் தேர்ந்தெடுக்கவும். அலுவலக சந்திப்பு, கலந்துரையாடல் போன்றவற்றுக்கு பார்மல் காலணிகளை மட்டும் பயன்படுத்தலாம்.

    * தேர்வு

    அலுவலக சந்திப்பிற்கு சின்னசின்ன விஷயங்களும் ரொம்ப முக்கியம். குறிப்பாக பெல்ட், நேர்த்தியான கைக்கடிகாரம் மற்றும் பிரீமியம் கப்லிங்க்ஸ் போன்றவற்றை சரியாக தேர்ந்தெடுத்து அணியுங்கள்.

    ×