என் மலர்

    அழகுக் குறிப்புகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நெயில் பாலிஷை எளிதாக அகற்றிவிடலாம்.
    • நெயில்பாலிஷ்கள் நகங்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன.

    கைகளை அழகாக காண்பிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது விரல்கள் தான். அதிலும் கை விரல்களில் உள்ள நகங்கள், நெயில்பாலிஷ்கள் கூடுதல் அழகு சேர்க்கின்றன.

    அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களது உடை மற்றும் மனநிலைகளுக்கு ஏற்ப நகங்களில் நெயில்பாலிஷை போடுவார்கள். ஆனால் சில நேரங்களில் நெயில் பாலிஷை அகற்ற பயன்படுத்தப்படும் ரிமூவர் இல்லாமல் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து நெயில் பாலிஷை அகற்றுவது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்...


    ஹேன்ட் சானிடைஷர்

    நகங்களில் உள்ள நெயில் பாலிஷை அகற்ற ஹேன்ட் சானிடைஷர் பயன்படுத்தலாம். சிறிய துண்டு பஞ்சில் ஹேன்ட் சானிடைஷரை ஊற்றி நகங்களை துடைத்தால் நெயில் பாலிஷ் எளிதில் நீங்கிவிடும்.


    வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு

    நெயில் பாலிஷை அகற்ற வினிகர் மற்றும் எலுமிச்சை உதவியாக இருக்கிறது. இதற்கு முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அதனுடன் நான்கு சொட்டு வினிகர் கலந்து கொள்ள வேண்டும். இதனை கை விரல் நகங்களில் தட வேண்டும். 5 நிமிடங்களுக்கு பின்னர் காட்டன் பஞ்சினால் துடைத்தால் நெயில் பாலிஷ் எளிதாக அழிந்துவிடும்.

    ஹைட்ரஜன் பெராக்சைடு

    நகங்களில் உள்ள கறைகளை அகற்ற ஹைட்ரஜன் பெராக்சைடு உதவுவது போல நெயில் பாலிஷையும் அகற்றுகிறது. இதற்கு சூடான நீரில் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்க்க வேண்டும். இந்த நீரில் 5-ல் இருந்து 10 நிமிடங்கள் நகங்கள் நனையும்படி வைக்க வேண்டும். அதன்பிறகு நகங்களில் உள்ள நெயில் பாலிஷை எளிதாக அகற்றிவிடலாம்.


    டூத் பேஸ்ட்

    முதலில் டூத் பேஸ்ட்டுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து பிரஸ்சின் உதவியுடன் நகங்களில் மென்மையாக தேய்க்க வேண்டும். இதை அப்படியே 5 நிமிடங்களுக்கு காய வைத்து கழுவினால் நெயில் பாலிஷ் நீங்கிவிடும்.


    பெர்ஃபியூம்

    நெய்ல் பாலிஷை அகற்ற பெர்ஃபியூம் உதவியாக இருக்கிறது. சிறிது பெர்ஃபியூமை காட்டனில் தெளித்து நகங்களை துடைக்கலாம். 3 முதல் 5 நிமிடங்களுக்கு இப்படி செய்வதால் நெயில் பாலிஷ் நீங்கிவிடும். ஒவ்வாமை இருந்தால் இதனை தவிர்த்துவிடலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிக ரசாயனங்கள் கலந்த ஷாம்புவை பயன்படுத்தினால் முடி உதிர்வு அதிகரிக்கக் கூடும்.
    • பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் இருந்தால் முடி உதிர்வு ஏற்படக் கூடும்.

    குளிக்கும் போது முடி உதிர்வது என்பது பலருக்கும் இருக்கும் பிரச்சனை. இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டே எளிதில் தீர்வு காண முடியும்.

    முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்காதவர்கள் கூட தலைமுடியையை தேய்த்து குளிக்கும் போது முடி உதிருவதை பார்த்திருப்பார்கள்.


    பலர் தலைமுடியை கட்டிக்கொண்டு குளிக்கச் செல்வார்கள். தண்ணீரில் முடியை நனைத்த பிறகு அவிழ்த்து விடுவார்கள். இதனால் கூந்தல் உதிரும் அபாயம் அதிகம் உண்டு. எனவே குளிப்பதற்கு முன் தலைமுடியை சீப்பு வைத்து சீவி சிக்குகளை அகற்றிவிட்டு தேய்த்து குளிக்கும் போது முடி உதிர்வை தவிர்க்க முடியும்.

    சிலர் அதிக விசையுள்ள ஷவர் அல்லது ஓடும் தண்ணீரான ஆறு குளங்களில் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இதுபோன்ற நேரங்களில் முடியின் வேர்கள் வலுவிழக்க நேரிடும். குறிப்பாக முடியின் மயிர்க்கால்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    தலைமுடியை சுத்தம் செய்யும் போது ஷாம்பு போட்டு சுத்தம் செய்வதுண்டு. குறிப்பாக ரசாயனங்கள் அடங்கிய ஷாம்புகளை அதிக அளவில் பயன்படுத்தும் போது முடி வறட்சி அடைந்து முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.

    மேலும் ஷாம்புவுடன் கண்டிஷனரை பயன்படுத்தாமல் இருந்தாலும் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். குறிப்பாக வறண்ட கூந்தலை உடையவர்கள் கண்டிஷனர் பயன்படுத்தாவிட்டால் முடி உடைதல், முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படும்.

    பலர் தலைக்கு குளிப்பதையே மிகவும் அலட்சியமாக இருப்பார்கள், தலைக்கு குளித்த பிறகு ஈரத்தை உறிஞ்சுவதற்கு டவலால் வேகமாக உதறுவது, தட்டுவது போன்றவற்றை செய்வார்கள். இப்படி கூந்தலை மிகவும் கடினமாக கையாளும் போது முடி பலவீனம் அடைந்து உதிர்கிறது.


    முடி உதிர்வுக்கான காரணங்கள்:

    * போதிய ஊட்டசத்து உங்கள் உணவில் இல்லையென்றால், முடி உதிர்வு ஏற்படக் கூடும். ஜின்க், செம்பு, புரதம் மற்றும் இரும்பு சத்து உங்கள் உணவில் நிச்சயம் இருக்க வேண்டும்.

    * வைட்டமின் டி குறைபாட்டால் முடி உதிர்வு ஏற்படும்.

    * உடலில் ஹார்மோன்கள் சரியாக சுரக்காமல் போனாலும் முடி உதிர்வு ஏற்படும்.

    * தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு முடி உதிர்வு ஏற்படக் கூடும்.


    * பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் இருந்தால் முடி உதிர்வு ஏற்படக் கூடும்.

    * கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தினால் முடி உதிர்வு ஏற்படும்.

    * இருதய நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகிய காரணங்களால் முடி உதிர்வு ஏற்படும்.

    * அதிக ரசாயனங்கள் கலந்த ஷாம்புவை பயன்படுத்தினால் முடி உதிர்வு அதிகரிக்கக் கூடும்.

    * புற்றுநோய், குடல் நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், தலைமுடி உதிர்வு ஏற்படக் கூடும்.

    * கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும், தலைமுடி உதிர்வு ஏற்படும்.

    * சரியான முறையில் தலைமுடியை பராமரிக்கவில்லை என்றாலும், முடி உதிர்வு ஏற்படும்.

    * வயதாவதால் முடி உதிர்வு ஏற்படும்.

    * உடல் எடை குறைவு காரணமாக முடி உதிர்வு ஏற்படும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடர்த்தியான கண் புருவங்கள், கண் இமைகள் முகத்தை அழகாக காட்டுகிறது.
    • கண் இமைக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த வீட்டு வைத்தியப் பொருள்.

    இன்று பலரும் நீண்ட அடர்த்தியான புருவங்கள், இமை போன்றவற்றை வைத்துக் கொள்ள விரும்புவர். நீண்ட அடர்த்தியான கண் புருவங்கள் மற்றும் கண் இமைகள் முகத்தை அழகாக காட்டுகிறது. இதனை இயற்கையாகவே வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி செய்யலாம். இதனால் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது.


    கற்றாழை

    கற்றாழை ஜெல்லில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்தானது கண் இமை வளர்ச்சியை தூண்ட உதவுகிறது. இதற்கு கற்றாழை ஜெல்லை எடுத்து அதனை இரவில் கண் இமைகளில் தடவ வேண்டும். பின்னர் காலையில் கழுவும் போது இமைகளை நீரேற்றமாக வைத்து ஊட்டச்சத்துகளை அதிகரிக்க உதவுகிறது.


    தேங்காய் எண்ணெய்:

    கண் இமைக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த வீட்டு வைத்தியப் பொருளாக அமைகிறது. மேலும் கண்களை அழகாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. இதன் ஊட்டமளிக்கும் பண்புகள் முடியின் புரதங்களை பாதுகாக்கிறது. இதற்கு தூங்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெயை மஸ்காராவை பயன்படுத்தி கண் இமைகளில் லேசாக தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் போது இமை முடி தடிமனாகவும், வலுவாகவும் வளர்வதை பார்க்கலாம்.


    வைட்டமின் ஈ:

    வைட்டமின் ஈ எண்ணெயைப் பயன்படுத்துவது இமைகளை வலுப்படுத்துவதுடன், அவை உடைவதைத் தடுக்க உதவுகிறது. இதற்கு சுத்தமான தூரிகை அல்லது விரலை பயன்படுத்தி சில துளிகள் வைட்டமின் ஈ எண்ணெயை கண்களில் தடவ வேண்டும். இது கண் இமை வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், கண் இமைகளை ஈரப்பதமாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது.


    ஆமணக்கு எண்ணெய்:

    முடி ஆரோக்கியத்திற்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் சிறந்த தேர்வாக அமைகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்க விரும்புபவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த விஷயமாகும். ஆமணக்கு எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இது வேர்களிலிருந்து கண் இமைகளுக்கு ஊட்டமளிக்கவும், வலுப்படுத்தவும் உதவுகிறது.

    மேலும் இது முழுமையான தோற்றத்தைத் தருகிறது. ஒரு சத்தான மஸ்காரா அல்லது பருத்தி துணியை எண்ணெயில் தோய்த்து, படுக்கைக்கு முன்னதாக கண் இமையில் தடவ வேண்டும். பிறகு இதை காலையில் கழுவி விடலாம். இப்போது தடிமனான, ஆரோக்கியமான கண் இமைகளைப் பெறலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சரும வறட்சி, தோல் சொரசொரப்பு, உதடுகளில் வெடிப்பு, பாதங்களில் வெடிப்பு ஏற்படும்.
    • பழ பேஷியல் செய்வதன் மூலம் சருமத்தை இன்னமும் பாதகாப்பாக வைத்திருக்க முடியும்.

    கோடைக்காலத்தில் வெயில் வாட்டி வதைத்து பல சரும பிரச்சனைகளை உண்டாக்கும். வெயில் காலத்தில் குறிப்பாக, சருமம் வறட்சி அடைவது வழக்கம்.

    ஆனால், மழைக்காலங்களில் வேறுவிதமான சரும பிரச்சினைகளும் ஏற்படும். குறிப்பாக, சரும வறட்சி உள்பட தோல் சொரசொரப்பு, உதடுகளில் வெடிப்பு, பாதங்களில் வெடிப்பு ஏற்படும்.

    இதனை சமாளிக்க சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்..

    தினமும் குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் முகம், உடல் முழுக்க தடவி, வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இது வெயில் காலத்திற்கும், மழை காலத்திற்கும் ஏற்ற டிப்ஸ். இது, சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். 

    சரும பாதுகாப்புக்கு அவ்வபோது முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீக்குவது அவசியம். அவ்வாறு ஃபேஷியல் செய்வதன் மூலம், இறந்த செல்களை நீக்கலாம். கெமிக்கல் பேஷியலை செய்வதற்கு பதிலாக பழ பேஷியல் செய்வதன் மூலம் சருமத்தை இன்னமும் பாதகாப்பாக வைத்திருக்க முடியும். 

    அந்த வகையில், சரும பொலிவுக்கு பப்பாளி பழம் எப்போதும் சிறந்தது. பப்பாளி பழத்தை மைய அரைத்து முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தடவி காய்ந்ததும் சிறுது நேரம் கழித்து கழவி விடவும். இது தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் நல்ல மாற்றத்தை காணலாம். 

    உதடு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய் சிறந்தது. பாத வெடிப்புக்கு மாய்சுரைசர் பயன்படுத்துவது நல்ல பலனை தரும். மழைக்காலத்தில் சேற்று புண் அதிகம் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், கடுக்காய் பொடியை தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர விரைவில் குணமாகும்.           

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போஹேமியன் ஃபேஷன் என்பது மேற்கத்திய மற்றும் இந்திய பாணிகளுக்கு இடையிலான இணக்கமான இணைப்பாகும்.
    • பொஹேமியன் நகைகள் பொதுவாக இறகுகள், மணிகள், கற்கள் மற்றும் தோல் போன்ற இயற்கைப் பொருட்களையும், சிக்கலான வடிவமைப்புகளையும் துடிப்பான வண்ணங்களையும் கொண்டுள்ளது.

    "போஹோ" என்ற வார்த்தை உண்மையில் சுதந்திரமான அழகியல் என்பதை குறிக்கிறது. "போஹோ" என்பது போஹேமியன் என்பதன் சுருக்கமாகும், அவர்கள் ஐரோப்பாவிலிருந்து வந்த பயணிகள் அல்லது அகதிகளாக இருந்தனர். இது உண்மையில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அழகியலை பிரதிபலிக்கும் வாழ்க்கை முறை ,பயணம் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களிலிருந்து உத்வேகம் பெறுகிறது. போஹேமியன் பாணி 1700 களில் தோன்றியது, ஆனால் ஃபேஷனில் அதன் செல்வாக்கு 19 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது.

    போஹோ நகைகள் என்பது போஹேமியன் கலாச்சாரத்திலிருந்து உருவான ஒரு பாணியாகும். இது சுதந்திரமான, பழங்குடி இனமாக விவரிக்கப்படுகிறது.

     

    போஹோ நகைகள் தனித்துவமானது, ஏனெனில் ஒவ்வொரு துண்டுகளும் கையால் செய்யப்பட்டவை. பிரத்யேக போஹேமியன் நகைகள் பிரகாசமான வண்ணங்கள், துணிகள், தோல், பிரம்பு மற்றும் பிற இயற்கையான மூலப்பொருட்களின் கூறுகளைக் கொண்டுள்ளன. சரியான போஹோ தோற்றத்தை கொடுக்க விளிம்புகள் மற்றும் குஞ்சங்களும் உள்ளன. சில கலைஞர்கள் தங்கள் படைப்புகளை எதிர்பாராத அலங்காரத்துடன் இணைத்து அதை இன்னும் தனித்து நிற்கச் செய்கிறார்கள். பொஹோ நகைகள் தங்க மஞ்சள், பிரகாசமான இளஞ்சிவப்பு, ஜேட், டர்க்கைஸ், செவ்வந்தி, குங்குமப்பூ மற்றும் மெஜந்தா போன்ற வண்ணங்களில் விளையாடுவதை காணலாம். வெற்று நிறங்களுக்குப் பதிலாக கலப்பு வண்ணங்களும் உள்ளன.

    போஹேமியன் பாணி உலகளாவிய பிரபலத்தை அடைந்துள்ளது, இது ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறைக்கு தனித்துவமான மற்றும் தனிப்பட்ட அணுகுமுறையை விரும்பும் நபர்களை ஈர்க்கிறது. இது சுதந்திரம் மற்றும் சுய வெளிப்பாட்டின் உணர்வை ஊக்குவிக்கிறது, பெரும்பாலும் வழக்கத்திற்கு மாறாக வாழ விரும்புபவர்களையும், சில சமயங்களில் நாடோடியாக வாழ்வதையும், காலனிகள் அல்லது கம்யூன்களில் வசிப்பவர்களையும் இந்த நகைகள் ஈர்க்கிறது, சமூகத்தின் வலுவான உணர்வை வளர்க்கிறது. பெண்களின் போஹோ ஸ்டைல் நகைகள் என்று வரும்போது, மிகவும் தனித்துவமானது, சிறந்தது என்று சொல்லலாம். ஒரு ஜோடி வண்ணமயமான இறகு காதணிகளை அணியும்போது, நீங்கள் சுதந்திர பறவையாக உணர்வீர்கள்.

    போஹேமியன் ஃபேஷன் என்பது மேற்கத்திய மற்றும் இந்திய பாணிகளுக்கு இடையிலான இணக்கமான இணைப்பாகும். இந்திய அழகியல் போஹோ பாணிக்கு நன்றாக உதவுகிறது. இயற்கை துணிகள், பிரகாசமான வண்ணங்கள் ஆகியவற்றின் வசதியையும் எளிமையையும் வெளிப்படுத்தும் ஒரு எளிய வழி போஹேமியன் பாணி. போஹேமியர்கள் சமூக கட்டமைப்புகள் மற்றும் மரபுகள் மீதான அலட்சியத்தின் அடிப்படையில் வண்ணமயமான எதிர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றனர்.

    தற்போது, இந்தியாவில் உள்ள போஹேமியன் பாணியில் பேன்ட் அல்லது கட்-ஆஃப் ஷார்ட்ஸ் முதல் ஜீன்ஸ், மேக்சி டிரஸ்கள், டூனிக்ஸ், ஜிப்சி ஸ்கர்ட்ஸ், வால்மினஸ் பெட்டிகோட்ஸ், பட்டன் டவுன் காலர் குர்தா போன்ற அனைத்து வகையான பொருட்களும் அடங்கும். போஹேமியன் சிக் ஃபேஷன் ஹெட்பேண்ட் போன்ற ஆபரணங்களிலும். ஆடம்பரமான பெல்ட்கள், சங்கு மற்றும் வண்ண மர வளையல்கள், பிரேஸ்லெட் நகைகள், ரத்தினக் கற்கள், மணிகள் மற்றும் துப்பாக்கி உலோகத் துண்டுகள், கணுக்கால்கள், மிக்ஸ் அண்ட் மேட்ச் நெக்லஸ்கள், தொங்கும் காதணிகள் காலணிகளைப் பொறுத்தவரை, இது கோலாபுரி சப்பல்கள், மொஜ்ரிகள் மற்றும் பாரம்பரிய வடிவங்களைக் கொண்ட செருப்புகளுடன் உயிரோட்டமாகத் தெரிகிறது. பொஹேமியன் நகைகள் பொதுவாக இறகுகள், மணிகள், கற்கள் மற்றும் தோல் போன்ற இயற்கைப் பொருட்களையும், சிக்கலான வடிவமைப்புகளையும் துடிப்பான வண்ணங்களையும் கொண்டுள்ளது.

     

    இந்த பாணி கடந்த காலத்தில் மக்களின் ஃபேஷன் உணர்வை பாதித்தது. இது இன்றைய தலைமுறையை மிகவும் ஆட்கொண்டுள்ளது.

    போஹேமியன் நகைகள் நிதானமான, கவலையற்ற பாணியுடன் தொடர்புடையது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் போஹேமியன் ஃபேஷன் உணர்வைத் தழுவும் நபர்களிடையே பிரபலமாக உள்ளது. கழுத்தணிகள், காதணிகள், வளையல்கள், மோதிரங்கள் மற்றும் கணுக்கால்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் இதைக் காணலாம். தனித்துவமான மற்றும் தனிப்பட்ட தோற்றத்தை உருவாக்க பல்வேறு துண்டுகளை கலந்து அடுக்குவதற்கு இந்த பாணி அனுமதிக்கிறது. போஹேமியன், அல்லது போஹோ, பாணியானது அதன் சுதந்திரமான மற்றும் வழக்கத்திற்கு மாறான அழகியல், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் காலங்களிலிருந்து தாக்கங்களை பெறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பரிசு என்பது உங்கள் அன்பு மற்றும் பாசத்தின் காட்சி சின்னம்!
    • ஒருவரின் பெயர் மற்றும் குடும்ப பெயர் பொறிக்கப்பட்ட நகைகளும் தனித்துவமானவை.

    நமக்கு நெருக்கமானவர்களிடம் நம் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த நாம் பயன்படுத்தும் மொழி பரிசு வழங்குவது.

    ஒரு பரிசை சிந்தனையுடன் தேர்ந்தெடுத்து அதை வாங்க முயற்சி செய்வது, பரிசைப் பெறுபவருக்கு உங்கள் அன்பைக் காட்டுகிறது. ஒரு நல்ல பரிசு மறக்க முடியாததாகவும் பெறுபவரின் ஆர்வத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்க வேண்டும்.

    நகைகள் விலைமதிப்பற்றவை மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் என்பதால், இது உலகளவில் மிகவும் பிரபலமான பரிசு யோசனைகளில் ஒன்றாகும். ஆண்களும் பெண்களும் அழகான நகைகளை பரிசாகப் பெற விரும்புகிறார்கள். இது ஒரு சிறந்த நினைவுச்சின்னமாகும்.

    உங்கள் அன்புக்குரியவர்களுக்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஒவ்வொரு விதமான ஸ்டைலுக்கும் அழகான நகைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்!

    பரிசு என்பது உங்கள் அன்பு மற்றும் பாசத்தின் காட்சி சின்னம்! அதை தனித்துவமாகவும், மறக்கமுடியாததாகவும், காலமற்றதாகவும் மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது.. ஒரு அழகான நகையின் காலத்தால் அழியாத கவர்ச்சியை எதுவும் வெல்ல முடியாது! ஒரு நகை பல ஆண்டுகளாக அணிந்து, தலைமுறைகளுக்கு அனுப்பப்படும். உங்கள் அன்புக்குரியவர்களுக்கான பரிசைத் தேர்ந்தெடுப்பதற்கான உங்கள் முயற்சியை நகைகள் பிரதிபலிக்கின்றன.

    பரிசளிப்பதற்காக மோதிரங்கள், வளையல்கள், சங்கிலிகள் மற்றும் நெக்லஸ்களின் பல வடிவமைப்புகளைக் கொண்ட நகைகளை தேர்வு செய்யலாம். ராசி பதக்கங்கள் மற்றும் ரத்தினப் பதக்கங்கள் போன்ற சிலவையும் தனித்துவமானவை. ஒருவரின் பெயர் மற்றும் குடும்ப பெயர் பொறிக்கப்பட்ட நகைகளும் தனித்துவமானவை.

    இதை தவிர ஸ்டேட்மெண்ட் நகைகள் போன்ற நவீன ஆபரணங்கள் பலவும் தற்போது அதிகம் உள்ளன. குழந்தை பிறப்பு, பிறந்தநாள் மற்றும் திருமண நாள் மட்டுமல்லாமல் அனைத்து சமூக விழாக்களுக்கும் உறவுகளுக்கு நகை பரிசளிப்பது உங்களுக்கு அவர்களுடனான நெருக்கத்தையும் அன்பையும் காட்டுகிறது. பாலினம், உலோக நிறம், தயாரிப்பு வகை போன்றவற்றின் அடிப்படையில் முடிவுகளை வடிகட்டலாம். நீங்கள் பரிசளிக்கும் நபரின் பாணி மற்றும் விருப்பங்களுடன் பொருந்தக்கூடிய பரிசை ஆராய்ந்து தேர்வு செய்யலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது.
    • ஆண்மை குறைபாட்டை சரி செய்து உடலுக்கு வலிமையை கொடுக்கிறது.

    உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்போது உள் உறுப்புகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று மரபு மருத்துவம் முதல் நவீன மருத்துவம் வரை கூறுகின்றன. இதனை நன்கு அறிந்துதான் எண்ணெய் குளியல் என்ற வழக்கத்தை நம் முன்னோர் உருவாக்கி வைத்தனர்.

    பொதுவாக, வாரம் இருமுறை உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் ஏற்படும் பலன்கள் குறித்து பாரம்பரிய மருத்துவம் கூறும் பலன்களை காணலாம்.


    உடலில் நல்லெண்ணெயை தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. செரிமானத்தை சரி செய்கிறது. இனப்பெருக்க உறுப்புகளின் அதீத சூட்டை தணித்து ஆண்மை குறைபாட்டை சரி செய்து உடலுக்கு வலிமையை கொடுக்கிறது.

    தலையில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக முடி உதிர்தல், இளநரை, வழுக்கை ஆகிய பாதிப்பு ஏற்படுகிறது. எண்ணெய் குளியல் இந்த பிரச்சினைகளை சரிசெய்கிறது.

    கவலை, மன உளைச்சல், துக்கம், பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றம், விரக்தி போன்ற உணர்வுகள் உடலில் பித்த அமில நிலையை அதிகரிக்கிறது.

    எண்ணெய் உடலின் சூட்டை சமநிலைக்கு கொண்டு வருவதால் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணர்ச்சிகள், கொதிப்பு நிலை குறைகிறது.

    உமிழ் நீர், எச்சில், நிணநீர், கணைய நீர் (இன்சுலின்), சளி, கோழை, சிறுநீர், விந்து, மாத விடாய், வெள்ளைப்படுதல், வியர்வை ஆகியவற்றை சரியான அளவில் வைத்து உடலை பராமரிக்கிறது.


    வாரம் ஒரு முறை அல்லது இரு முறை நல்லெண்ணெய் தேய்த்து அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிக்குள் குளிக்க வேண்டும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

    ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய்க் குளியல் எடுப்பது நல்லது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒல்லியாக இருந்தால் கொஞ்சம் தளர்வான ஆடைகளை தேர்ந்தெடுக்கவும்.
    • தரமான ஆடைகள் நீண்ட காலம் உழைக்கும் என்பதால், விலைக்கு முக்கியத்துவம் தராமல், தரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

    டீன்-ஏஜ் காலம் என்பது தனிப்பட்ட முறையில் உடல் வளர்ச்சி மற்றும் மனமாற்றம் நிறைந்த காலகட்டம். தனித்துவமான பேஷன் ஸ்டைலை கண்டறிந்து வெளிப்படுத்த இளைஞர்கள் விரும்புகிறார்கள். இந்தப் பதிவில் டீன் ஏஜ் வயதினருக்கான சில பேஷன் டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.

    * தனித்துவமான ஸ்டைல்:

    டிரெண்டுகளை பின்பற்றுவது நல்லதுதான். ஆனால் உங்களுக்குப் பிடித்தமான, உங்களுக்கு நன்றாக பொருந்தக்கூடிய ஸ்டைலை கண்டறிவது முக்கியம். பல்வேறு ஸ்டைல்களை முயற்சி செய்து உங்களுக்கு எது பிடித்துள்ளது, எது நன்றாக இருக்கிறது என்பதை முயற்சித்து பார்த்து சரியாக தேர்ந்தெடுங்கள்.

    * உடலுக்கு ஏற்ற உடைகள்:

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உடல் அமைப்பு உண்டு. அதற்கு ஏற்ற ஆடைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் தோற்றத்தை சிறப்பாக மேம்படுத்தலாம். ஒல்லியாக இருந்தால் கொஞ்சம் தளர்வான ஆடைகளை தேர்ந்தெடுக்கவும். நடுத்தர உடல்வாகு கொண்டவர்கள் உடலுடன் ஒட்டி இருக்கும் வகையில் உடை அணிவது நல்லது. இதுவே குண்டாக இருந்தால், அதிக தளர்வாக இல்லாமல் உங்களை ஒல்லியாக காட்டும்படியான உடைகளை தேர்வு செய்யவும்.

    * தரமான ஆடை:

    ஆடை விஷயத்தில் எப்போதும் மலிவை நோக்கி செல்லக்கூடாது. உயர்தர ஆடைகள் உங்களை மற்றவர்கள் மத்தியில் சிறப்பாக காண்பிக்க உதவும். சில நேரங்களில் உயர்தர ஆடைகளை வாங்குவது அதிக மலிவான ஆடைகளை வாங்குவதை விட சிறந்தது. தரமான ஆடைகள் நீண்ட காலம் உழைக்கும் என்பதால், விலைக்கு முக்கியத்துவம் தராமல், தரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

    * கூடுதல் உபகரணங்கள்:

    ஆக்சஸரிஸ் எனப்படும் கூடுதல் அழகு உபகரணங்கள் உங்கள் ஸ்டைலுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை சேர்க்க சிறந்த வழியாகும். நெக்லஸ்கள், காதணிகள், வளையல்கள், தொப்பிகள், கூலிங் கண்ணாடிகள் மற்றும் பைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவை உங்களது தோற்றத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு பீல்-ஆஃப் மாஸ்க் நன்மை பயக்கும்.
    • தேவையற்ற முடிகளை அகற்றாது.

    சருமத்தில் தூசி மற்றும் காற்று மாசுபாடு, பாக்டீரியாக்கள் போன்றவை படிந்தால், முகப்பரு, அரிப்பு மற்றும் தோல் சிவத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தோலை பராமரிக்க சந்தையில் ஏகப்பட்ட கிரீம்கள் கிடைக்கின்றன.

    அப்படி, அனைவராலும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று பீல்-ஆஃப் மாஸ்க் (peel-off mask) என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. ஏனென்றால், இது எக்கச்சக்க நன்மைகளை கொண்டுள்ளது. அதனால் தான், பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இதை உபயோகிக்கின்றனர்.

    குறிப்பாக, சருமத்தில் காணப்படும் வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் மற்றும் இறந்த செல்களை அகற்ற Peel Off மாஸ்க் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் ஜெல் அல்லது நீர் சார்ந்த பீல்-ஆஃப் மாஸ்க்குகளை பயன்படுத்துங்கள். அது உங்கள் சருமத்தில் செய்யும் அதிசயங்களையும் காணலாம்.

    எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு பீல்-ஆஃப் மாஸ்க்குகள் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அவை துளைகளை அடைப்பதன் மூலம் உங்கள் தோலில் இருந்து அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. மேலும் ஃபேஸ் வாஷ் அல்லது டோனர்களை விட தோலை நீக்கும் முகமூடிகள் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கும்.


    கவனிக்க வேண்டியவை:

    * Peel Off மாஸ்க் உண்மையில் சரும சேதத்திற்கு வழிவகுக்கும். எனவே, இந்த வகை மாஸ்கினை வாரம் 1 அல்லது 2 முறை (தேவை இருப்பின்) பயன்படுத்தினால் போதுமானது.

    * Peel Off மாஸ்க் பயன்படுத்திய பின்னர் முகத்தை கழுவ வேண்டுமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இதற்கான பதில் வேண்டாம் என்பது தான். எனினும் எரிச்சல், அரிப்பு இருப்பது போல் உணர்பவர்கள் முகத்தை கழுவலாம்.

    * Peel Off மாஸ்க்-கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை (பெண்களின் மீசை) அகற்றுமா என்ற சந்தேகம் இருப்பின், கவலை வேண்டாம். இந்த பேக், தேவையற்ற முடிகளை அகற்றாது. வெண்புள்ளிகளை மட்டுமே அகற்றும்.

    * Peel Off மாஸ்க் பயன்படுத்திய பின் சருமம் பொலிவாக இருப்பது போல் தோன்றுவது உண்மை தான். சருமத்தின் இறந்த செல்களை இந்த மாஸ்க் அகற்றுவதால் இப்படி தோன்றுகிறது, எனினும் இந்த பொலிவு நிரந்தரமான ஒன்று அல்ல.

    * Peel Off மாஸ்க் பயன்படுத்துகையில் வலி உண்டாவது உண்மை தான். அதேப்போன்று இந்த மாஸ்க் ஆனது, சருமத்துளைகள் சேதம் மற்றும் சிவத்தலுக்கு வழிவகுக்கும் என்பதால், நிபுணர்கள் அதிகம் இந்த மாஸ்கினை பரிந்துரைப்பதில்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தோல் பராமரிப்பு விஷயத்தில் முன்னெச்சரிக்கை தேவை.
    • தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

    இப்போது அழகாக இருப்பது ஆண் பெண் இருபாலரும் பின்பற்றும் டிரெண்ட் ஆகிவிட்டது. எனவே ஆண்களும் தங்கள் சருமத்தின் அழகில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. ஆண்களுக்கான சில அழகு குறிப்புகள் இங்கே...

    சுற்றுச்சூழலில் உள்ள தூசி, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, நாள்பட்ட மன அழுத்தம் ஆகியவை நமது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நமது சருமத்தையும் பாதிக்கிறது.

    பெண்கள் தங்கள் சரும அழகில் அதிக அக்கறை காட்டுவார்கள். ஆனால், ஆண்கள் அப்படி இல்லை. எப்பொழுதும் ஏதாவதொரு வேலையில் பிசியாக இருக்கும் இவர்கள் தங்கள் அழகில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

    ஆனால் சிலர் இப்போதெல்லாம் ஆண்களும் தங்கள் அழகு மற்றும் உடற்தகுதியில் கவனம் செலுத்துகிறார்கள்.

    ஒரு வேளை, தாங்கள் அழகாகத் தெரிந்தால் மற்றவர்களை கவர முடியும் என்ற எண்ணத்தினாலோ அல்லது தங்கள் தன்னம்பிக்கையின் காரணமாகவோ, முகத்தில் பொலிவு மற்றும் நல்ல உடலமைப்புக்காக ஏங்குகிறார்கள்.

    சில சமயங்களில், பெண்களை விட ஆண்கள் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள் மற்றும் அழகு நிலையங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள்.

    ஆனால் ஆண்கள் தங்கள் தோல் பராமரிப்பு விஷயத்தில் சில சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏனெனில் ஆண்கள் தான் அதிகமாக வெளியே செல்வார்கள்.

    அவர்களின் தோல் ஏற்கனவே கடினமாக இருக்கும். அப்படி இருக்கும் போது முகம், தாடி மீசையில் தூசி போன்றவற்றால் தோல் எரிச்சல் ஏற்படலாம். இதை தவிர்க்க தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும்.


    ஆண்களுக்கான சில அழகுக் குறிப்புகள்:

    நீரேற்றமாக இருங்கள்:

    சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க உடலில் எப்போதும் நீர்ச்சத்து இருக்க வேண்டும். உடல் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அர்த்தம். நீரிழப்பைத் தடுக்க நாள் முழுவதும் போதுமான நீர் உட்கொள்ளல் அவசியம்.

    எண்ணெய் பசை சருமத்தை போக்க சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று. சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கும்.


    சன்ஸ்கிரீன்:

    வெளியில் செல்லும் போது உங்கள் சருமத்தில் சன் ஸ்க்ரீன் லோஷனைப் பயன்படுத்துவது அவசியம். இந்த சன் ஸ்கிரீன் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் சருமத்திற்கு நல்லது.

    இது தீங்கு விளைவிக்கும் மாசுக்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், சூரிய ஒளியால் சருமம் கருமையாவதையும் தடுக்கிறது. வெளியில் செல்லும்போது தூசி மற்றும் அழுக்குத் துகள்கள் காற்றில் வந்து தோலில் படர்ந்து சருமத் துளைகளை அடைத்துவிடும்.

    அவை சருமத்தில் பருக்கள், வெடிப்புகள் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் சன் ஸ்க்ரீன் தடவினால் இந்தப் பிரச்னைகள் வராது. ஆனால் சருமத்திற்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.


    சமச்சீர் உணவு:

    சருமத்தில் ஏற்படும் மாசுபாட்டின் விளைவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி அழகுசாதனப் பொருட்கள் அல்ல. எந்தவொரு பிரச்சனையையும் சமாளிக்க மிக முக்கியமான விதி சமச்சீரான உணவை உண்ண வேண்டும்.

    உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்கும் உணவைத் தேர்ந்தெடுக்கவும். இது உடலை உள்ளேயும் வெளியேயும் ஆரோக்கியமாக வைக்கிறது.

    புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவற்றை சாப்பிட்டால் சருமம் பளபளக்கும்.

    சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளைத் தடுக்க, காரமான உணவுகள், புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கங்களைத் தவிர்க்கவும்.


    இப்போது அழகாக இருப்பது ஆண் பெண் இருபாலரும் பின்பற்றும் டிரெண்ட். எனவே ஆண்களும் தங்கள் சருமத்தின் அழகில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. ஆண்களுக்கான சந்தையில் பல பிராண்டுகளின் தயாரிப்புகள் உள்ளன.

    ஆண்களுக்கான கரி முகமூடிகள் மற்றும் திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் தோல் கண்டிஷனர்கள் இதில் அடங்கும். இவற்றை காலையில் தடவினால், நாள் முழுவதும் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    யோகா, தியானம், ஜிம் போன்ற தினசரி பயிற்சிகள் உங்களை உடல் ரீதியாக மட்டுமின்றி மனதளவிலும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் முடி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
    • உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

    இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். குறிப்பாக, போதிய ஊட்டச்சத்து இல்லாமை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் முடி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

    இதில் முடி உதிர்வு, வறண்ட முடி, பொடுகு பிரச்சனை, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு முடி பிரச்சனைகள் எழுகின்றன. அந்த வகையில் மீன் எண்ணெய் முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் பங்களிக்கிறது.

    மீன் எண்ணெய் என்பது கானாங்கெளுத்தி, மத்தி, சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களின் திசுக்களில் இருந்து பெறப்படுகிறது. இதில் நல்ல அளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது.

    குறிப்பாக டோகோசாஹெக்ஸெனோயிக் (டிஹெச்ஏ), ஈகோசாபென்டேனோயிக் (இபிஏ) போன்றவை உள்ளது. இந்த ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அவசியமானதாகக் கருதப்படுகிறது.


    மீன் எண்ணெயில் உள்ள நன்மைகள்:

    சருமம் மற்றும் முடி இரண்டின் ஆரோக்கியத்திற்கும் மீன் எண்ணெய் உதவுகிறது. சருமத்திற்கு மீன் எண்ணெயை பயன்படுத்துவது சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் முகப்பருவைச் சமாளிக்க உதவுகிறது.

    ஆய்வு ஒன்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற சப்ளிமென்ட்ஸைப் பயன்படுத்துவது முடி அடர்த்தியில் பங்களிக்கிறது.

    ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தைக் குணமாக்கவும், குறைக்கவும் உதவுகிறது. மேலும் இவை முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது.

    இந்த அமிலங்கள் ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிப்பதற்கு பங்களிக்கிறது. இவை முடிக்கு நன்கு ஊட்டமளிப்பதுடன் பொடுகு அல்லது அதிகப்படியான வறட்சி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கிறது.

    ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த அதிகரித்த ரத்த ஓட்டம் முடியின் மயிர்க்கால்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனை வழங்குகிறது. இவை ஆரோக்கியமான மற்றும் வலுவான முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

    இது போன்று மீன் எண்ணெய்களை பயன்படுத்துவது முடியின் அமைப்பை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமுடியில் கலர்கலரான டைகளை அடித்துக் கொள்வது சகஜமாகிவிட்டது.
    • பெண்களை விட ஆண்களே அதிகமாக ஹேர் டை உபயோகிக்கிறார்கள்.

    நாகரிகம் என்ற பெயரில் 16 வயதிலிருந்தே ஆணும்-பெண்ணும் தங்கள் தலைமுடியில் கலர்கலரான டைகளை அடித்துக் கொள்வது என்பது உலகம் முழுவதும் சகஜமாகிவிட்டது.

    நம் நாட்டில் பெண்களை விட ஆண்களே அதிகமாக ஹேர் டை உபயோகிக்கிறார்கள். அதிலும் நரைத்த வெள்ளை முடியை கறுப்பாக ஆக்குவதற்கு தான் இதை பயன்படுத்துகிறார்கள்.

    பெரும்பாலான ஹேர் டைகளில் `பேராபினைலின் டை அமைன்' (பி.பி.டி) என்கிற ரசாயனப் பொருள் உள்ளது. இது சருமத்தில் எரிச்சல், அலர்ஜி போன்ற பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.


    இந்த ரசாயனப் பொருள் தோலில் படும் இடம் எரிச்சலடைந்து சிவந்து வீக்கமடைந்து தடித்துப் போவதுண்டு.

    ஹேர் டை உபயோகிக்க ஆரம்பிப்பதற்கு முன் சிறிதளவு ஹேர் டை கலவையை உங்கள் காதுக்கு பின்புறமோ அல்லது உங்கள் முழங்கையின் பின் பக்கமோ லேசாகத் தடவி கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள்.

    பின்னர் தடவிய இடத்தில் தோலில் நிறமாற்றம், அரிப்பு, எரிச்சல் ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள். ஒன்றும் ஏற்படவில்லை என்று தெரிந்த பின்பு ஹேர் டையை தலைமுடியில் உபயோகிக்க ஆரம்பியுங்கள்.

    தலைமுடிக்குத் தானே டை அடிக்கிறோம். அலர்ஜி ஏற்பட்டாலும் தலையில் இருக்கும் தோலோடு போய்விடும் என்று நினைக்காதீர்கள்.


    சிலருக்கு இந்த பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கழுத்து, முன்னந்தலை, நெற்றி, காதுகள், கண் இமைகள் உச்சந்தலை ஆகிய இடங்களுக்கெல்லாம் பரவ ஆரம்பித்துவிடும்.

    சில ஹேர்டை உபயோகித்த அடுத்த ஒரு நிமிட நேரத்திற்குள்ளேயே பாதிப்பைக் காட்டிவிடும். சிலருக்கு மூச்சுத்திணறல், வாந்தி ஏற்படலாம்.

    ஹேர் டை அடித்துவிட்டு அதிக நேரம் தலையை காயவிடாதீர்கள். தலைமுடியை பலமுறை நன்றாக அலசி கழுவி உலர்த்துங்கள். பாதிப்பு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம். சுய மருத்துவம் கூடாது.

    எப்பொழுது நீங்கள் தாத்தா அல்லது பாட்டி ஆகிவிட்டீர்களோ அப்பொழுது நீங்கள் ஹேர் டை அடிப்பதை நிறுத்திவிட வேண்டும்-இது அனுபவம் சொல்வது.

    எப்பொழுது உங்கள் உடலுக்கு, தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கிறதோ அப்பொழுது நீங்கள் ஹேர் டை அடிப்பதை நிறுத்திவிட வேண்டும்-இது மருத்துவம் சொல்வது.

    எப்பொழுது உங்கள் வயதுக்கும், தோற்றத்துக்கும் ஒத்துவரவில்லையோ அப்பொழுது நீங்கள் ஹேர் டை அடிப்பதை நிறுத்திவிட வேண்டும்-இது சமுதாயம் சொல்வது.


    தோற்றத்தைப் பார்த்தால் 60 வயதுக்கு மேல் தோன்றுகிறது. ஆனால் இன்னமும் ஹேர் டை அடிப்பதை நிறுத்தவில்லையே என்று பிறர் சொல்லக்கூடாது. உங்கள் வயதோடும் உங்கள் உடல் அமைப்போடும் ஹேர் டை ஒத்துப் போகவேண்டும். அவ்வளவுதான்.

    ×