என் மலர்

    ஆட்டோமொபைல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த டாடா காரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
    • ஆறு ஏர்பேக்குகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரீமியம் ஹேட்ச்பேக் காரான டாடா அல்ட்ரோஸின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை மே 21 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

    டாடா அல்ட்ரோஸ் ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும். இது ஒரு கிராஸ்ஓவர் ஹேட்ச்பேக் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட காரின் வடிவமைப்பு, குறிப்பாக பாரம்பரிய அல்ட்ரோஸ் கார்களுடன் ஒப்பிடும்போது வித்தியாசமாக இருக்கும். மேலும், சில சிறப்பு அம்சங்கள் சுவாரஸ்யம் ஏற்படுத்துகிறது. சமீபத்தில், இந்த டாடா காரின் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

    இந்த காரின் முன்பக்க தோற்றம் மிகவும் நேர்த்தியானது. டாடா நெக்ஸான் மற்றும் ஹாரியர் போன்ற தோற்றமுடைய இந்த கார், வெளியிடப்பட்டால் அந்த கார்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த காரின் கிரில் மற்றும் பம்பர் இதற்கு ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தை அளிக்கிறது.

    மேலும், டாடா அல்ட்ரோஸின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.   

    பட்ஜெட் விலையில் வரும் டாடாவின் இந்த புதிய அல்ட்ரோஸ் காரில் ஆறு ஏர்பேக்குகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜின்களைப் பொறுத்தவரை, பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றில் அதிக மாற்றம் இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மேம்பட்ட ADAS அமைப்பு இந்த காரின் சிறப்பு அம்சமாகும். மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் கார்களுக்கு நேரடி போட்டியாக டாடா அல்ட்ரோஸ் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிளில் 349சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
    • 2025 ஹண்டர் 350க்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

    ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய அப்டேட்களுடன் HUNTER 350 2025 மாடல் பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

    இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ. 1,49,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Rio White, Tokyo Black. London Red என 3 புதிய நிறங்களில் இந்த பைக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இந்த புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிளில் 349சிசி, ஏர்/ஆயில்-கூல்டு, ஜே-சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் தான் கிளாசிக் 350 மற்றும் மீடியோர் 350 போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    2025 ஹண்டர் 350க்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் டெலிவரி தொடங்கும் என ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகளவு மேம்படுத்தப்பட்டுள்ளது.
    • புதிய மாடலிலும் 649சிசி, பேரலெல் ட்வின், லிக்விட்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கவாசகி இந்தியா நிறுவனம் மேம்பட்ட நின்ஜா 650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 2025 கவாசகி நின்ஜா 650 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 7 லட்சத்து 27 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகளவு மேம்படுத்தப்பட்டு உள்ளதால், முந்தைய மாடலை விட இதன் விலை ரூ. 11,000 அதிகரித்துள்ளது.

    2025 நிஞ்ஜா 650 பைக் பச்சை நிறத்தில் வெள்ளை, மஞ்சள் மற்றும் கருப்பு நிற கோடுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    புதிய மாடலிலும் 649சிசி, பேரலெல் ட்வின் லிக்விட்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 67 ஹெச்பி பவர், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெட்ரோல் மற்றும் டீசலை விலையை விட சிஎன்ஜி விலை குறைவாகும்.
    • சிஎன்ஜி கார் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் முன்னணியில் உள்ளது

    இந்தியாவில் 2024-25ம் நிதியாண்டில் டீசல் கார்களைக் காட்டிலும் சிஎன்ஜி கார்களையே மக்கள் அதிகம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த நிதியாண்டில் 7,87,724 சிஎன்ஜி கார்களும், 7,36,508 டீசல் கார்களும் விற்பனையாகியுள்ளன.

    கடந்த நிதியாண்டில் பயணிகள் கார் விற்பனையில் 15 சதவீதமாக இருந்த சிஎன்ஜி கார் விற்பனை இப்போது 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    பெட்ரோல் மற்றும் டீசலை விலையை விட சிஎன்ஜி விலை குறைவாக உள்ளதால் பலரும் சிஎன்ஜி கார்களை விரும்புகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

    மொத்த சிஎன்ஜி கார் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாடல்களை பொறுத்து, ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.62 ஆயிரம்வரை உயருகிறது.
    • பல நிறுவனங்களும் இந்த மாதம் தங்கள் கார்களின் விலையை மாற்ற உள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் பல்வேறு மாடல் கார்களின் விலை வருகிற 8-ந்தேதி முதல் உயருகிறது. மாடல்களை பொறுத்து, ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.62 ஆயிரம்வரை உயருகிறது.

    மூலப்பொருட்கள் விலை உயர்வு, நிறுவன செலவுகள் ஆகியவையே விலை உயர்வுக்கு காரணம் என்று மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கிராண்ட் விட்டாராரூ. 62,000 வரை விலை உயரும். அதைத் தொடர்ந்து ஈகோ ரூ. 22,500, வேகன் ஆர், எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் ஃபிராங்க்ஸ் ஆகியவை முறையே ரூ. 14,000, ரூ. 12,500, ரூ. 12,500 மற்றும் ரூ. 2,500 வரை விலை உயர்வு பெறும். மாருதியை தவிர, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, கியா, நிசான் மற்றும் ரெனால்ட் போன்ற நிறுவனங்களும் இந்த மாதம் தங்கள் கார்களின் விலையை மாற்ற உள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 663 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • 350 கிலோவாட் டி.சி. அதிவேக சார்ஜர் மூலம் 18 நிமிடங்களில், 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.

    கியா நிறுவனம், 2025-ம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட கியா இ.வி. 6 பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்திருந்த நிலையில் அதற்கான விலை அறிவிப்பும் வந்திருக்கிறது. அதன்படி, ஷோரூம் விலையாக ரூ.65.9 லட்சம் ரூபாயில் இது கிடைக்கும்.

    * இ.வி. 6 பேஸ்லிப்ட்

    இதில் முந்தைய மாடலில் இருந்த 77.5 கிலோவாட் ஹவர் பேட்டரிக்கு பதிலாக 84 கிலோவாட் ஹவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 663 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இருக்கும் டூயல் மோட்டார்கள் அதிகபட்சமாக 320 எச்.பி. பவரையும், 605 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 350 கிலோவாட் டி.சி. அதிவேக சார்ஜர் மூலம் 18 நிமிடங்களில், 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.

    * மாற்றங்கள்

    ஆங்குலர் எல்.இ.டி. வடிவ டி.ஆர்.எல்.கள், பம்பர், சக்கரங்கள், டெயில் லைட்டுகள் ஆகியவை அப்டேட் செய்யப்பட்டுள்ளன. 12.3 அங்குல இரு டிஸ்பிளே திரைகள், 3 ஸ்போக் டூயல் டோன் ஸ்டியரிங் வீல், 12 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, முன்-பின் பார்க்கிங் சென்சார்கள், லெவல் டூ அடாஸ், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் என பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • யூலர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.525 கோடி முதலீடு செய்துள்ளது.
    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் கால் பதிக்கவுள்ளது.

    யூலர் (EULER) மோட்டார்ஸ் உடன் இணைந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் கால் பதிக்கவுள்ளது.

    இதற்காக யூலர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.525 கோடி முதலீடு செய்துள்ளது.

    இதன்மூலம் யூலர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது 32.5 சதவீத உரிமையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    எதிர்காலத்தில் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை மொத்த வாகன விற்பனையில் 35 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீண்ட தூர பயணத்திற்கான கார்பன்-ஃபைபர் பிரேம் உடன் வருகிறது.
    • கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் பெரிய அளவுகளில் 630Wh ஷிமானோ பேட்டரி இடம்பெற்றுள்ளது

    பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான போர்ஷே தனது ஐந்தாவது தலைமுறை மின்சார சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.

     இந்த கிராஸ் (Cross) இ-பைக் சைக்கிள் மொத்தம் நான்கு வகைகளில் வருகிறது.

    ஆரம்ப நிலை மாடலான, கிராஸ் ( £4,994), கிராஸ் பெர்பார்மன்ஸ் (£7,471), கிராஸ் பெர்பார்மன்ஸ் EXC மற்றும் பிரீமியம் மாடலான ஸ்போர்ட் ( £8309) விலையுடன் முறையே அறிமுகமாகியுள்ளன.

    4 கிராஸ் மாடல்களும் மிகவும் ஒத்தவையாகவே உள்ளன. அனைத்தும் ஒரே மாதிரியான ஷிமானோ (SHIMANO) EP801 மோட்டாரைக் கொண்டுள்ளன. 62lb அடி முறுக்குவிசை, நீண்ட தூர பயணத்திற்கான கார்பன்-ஃபைபர் பிரேம், 12-ஸ்பீட் கியர்ஷிஃப்ட், சைக்கிளின் முன்னாள் மற்றும் பின்னால் சூப்பர்-ப்ரைட் விளக்குகள் மற்றும் இலகுரக கார்பன் வீல் செட்கள் இடம்பெற்றுள்ளன.

    கிராஸ் அடிப்படை மாடலில் டிரெயில் டிஸ்க் பிரேக்குகள், ஒரு சிறிய 504Wh பேட்டரி மற்றும் ஒரு டெலஸ்கோபிக் சீட் போஸ்ட் ஆகியவை உள்ளன. கிராஸ் பெர்பார்மென்ஸ் மாடலில் நான்கு-பிஸ்டன் மகுரா டிஸ்க் பிரேக்குகள், கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் பெரிய அளவுகளில் 630Wh ஷிமானோ பேட்டரி இடம்பெற்றுள்ளது

    பிரீமியம் மாடலான ஸ்போர்ட் வேரியண்டில் கிராஸ் பெர்பார்மென்ஸ் அம்சங்களுடன் சேர்ந்து, 21.6 கிலோகிராமே எடை கொண்ட அல்ட்ரா-லைட் கார்பன் பிரேம் இடம்பெற்றுள்ளது.

    இந்த பிரீமியம் ஸ்போர்ட் வேரியண்டில் உள்ள அதிக முறுக்கு-எதிர்ப்பு கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் 120 மில்லிமீட்டர் டிராவலுடன் கூடிய சூப்பர் ஃபேன்ஸி சஸ்பென்ஷன் ஃபோர்க் உள்ளது. பயணிக்கும்போது கை மற்றும் கால் வலியை குறைக்கும் வடிவமைப்புடன் ஸ்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • AX7, மற்றும் AX7 L என்ற 2 வேரியண்ட் கார்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
    • AX7 வேரியண்ட் கார்களின் விலை ரூ.45 ஆயிரம் குறைந்துள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.

    மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 மாடலில் AX7, மற்றும் AX7 L என்ற 2 வேரியண்ட் கார்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. AX7 வேரியண்ட் கார்களின் விலை ரூ.45 ஆயிரமும் AX7 L வேரியண்ட் கார்களின் விலை ரூ.75 ஆயிரமும் குறைந்துள்ளது.

    ரூ.21.64 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் 6 இருக்கைகள் கொண்ட AX7 காரின் விலை ரூ.45,000 குறைக்கப்பட்டு ரூ.21.19 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

    ரூ.21.44 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் 7 இருக்கைகள் கொண்ட AX7 காரின் விலை ரூ.45,000 குறைக்கப்பட்டு ரூ.20.99 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

    ரூ.24.14 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் 6 இருக்கைகள் கொண்ட AX7 L காரின் விலை ரூ.75,000 குறைக்கப்பட்டு ரூ.23.39 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

    ரூ.23.94 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் 7 இருக்கைகள் கொண்ட AX7 L காரின் விலை ரூ.75,000 குறைக்கப்பட்டு ரூ.23.19 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக் 803 சிசி ஏர்/ஆயில் கூல்டு எல்-ட்வின் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
    • இந்த பைக்கின் எஞ்சின் 8,250 rpm இல் 73 hp ஆற்றலை வெளிப்படுத்தும்.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது

    இந்த பைக்கின் விலை ரூ. 9.97 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டுகாட்டி அறிமுகப்படுத்திய பைக்குகளில் இது மிகவும் விலை குறைவான பைக் என்று சொல்லப்படுகிறது.

    ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக்கின் விலை இதற்கு முன்பு வெளியான ஸ்க்ராம்ப்ளர் ஐகான் மாடலை விட ரூ.94,000 குறைவாகும்.

    டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக் 803 சிசி ஏர்/ஆயில் கூல்டு எல்-ட்வின் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.

    இந்த எஞ்சின் 8,250 rpm இல் 73 hp ஆற்றலையும், 7,000 rpm இல் சுழலும் போது 65 Nm டார்க் விசையையும் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக டுகாட்டி நிறுவனம் தனது டெசெர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த பைக் ரூ.21.78 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாருதி சுசுகி 4 சதவீதம் வரை விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
    • தற்போது டாடா மோட்டார்ஸ் 2 சதவீதம் வரை விலையை உயர்த்த உள்ளதாக அறிவிப்பு.

    இந்தியாவில் கார் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் மாருதி சுசுகி சில தினங்களுக்கு முன் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து வாகனங்கள் விலைகளை 4 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்தது. மாடல்களுக்கு ஏற்ப அதை விலை உயர்வு இருக்கும் எனத் தெரிவித்திருந்து. உற்பத்தி செலவு மற்றும் செயல்பாட்டு செலவினம் காரணமாக விலை உயர்த்தப்படுவதாக அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் வாகனங்கள் விலையை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

    கடந்த ஜனவரியில் 3 சதவீதம் வரை கார்களின் விலையை உயர்த்தியிருந்தது. இந்த நிலையில் அடுத்த 3 மாதங்களில் மேலும் கணிசமாக உயர்த்த உள்ளது. 2 சதவீதம் விலை விலை உயர்வு இருக்கும். இது பயணிகள் முதல் வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த பிப்ரவரி 1-ந்தேதி முதல் பல்வேறு மாடல்களுக்கு 32500 ரூபாய் வலை உயர்த்தப்படும் எனத் தெரிவிந்தது.
    • இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 4 சதவீதம் உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்ளில் ஒன்று மாருதி சுசுகி. இந்த நிறுவனம் பல்வேறு நோக்கத்திற்காக வாகனங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது.

    தற்போது உற்பத்தி செலவு மற்றும் செயல்பாட்டு செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கான 4 சதவீதம் வரை வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த விலை ஏற்றம் அமலுக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மாடல்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடும்.

    கடந்த ஜனவரி மாதம், பிப்ரவரி 1-ஆம் தேதியில் இருந்து பல்வேறு மாடல்களுக்கு 32,500 ரூபாய் வரை விலை உயர்த்தப்படும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில்தான் தற்போது அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    பங்குச் சந்தையில் மாருதி சுசுகியின் ஒரு பங்கு 11578.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று பங்கின் விலை 0.61 சதவீதம் உயர்ந்தது.

    ×