என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 200 தொகுதிகளில் வெல்வது இலக்கு என்பதை எண்ணி பணியாற்ற வேண்டும்.
    • தேர்தல் முடியும் வரை எந்த உட்கட்சி பிரச்சனையும் இருக்கக்கூடாது.

    திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் பணியில் திமுக தான் நம்பர் 1 ஆக இருந்து வருகிறது.

    அரசியல் களத்தில் நமது கை ஓங்கி இருக்கிறது. நலத் திட்டங்களால் மக்களிடையே பெருகும் ஆதரவு.

    200 தொகுதிகளில் வெல்வது இலக்கு என்பதை எண்ணி பணியாற்ற வேண்டும்.

    தேர்தல் முடியும் வரை எந்த உட்கட்சி பிரச்சனையும் இருக்கக்கூடாது.

    யாராவது தேவையின்றி கட்சிக்குள் குழப்பமோ பிரச்சனையோ உண்டாக்கினால் அவர் எந்த பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை பாயும்.

    வேட்பாளர் தேர்வு, யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.

    தேர்தலில் அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே அமைச்சர் பதவி வழங்கப்படும்.

    தான் மட்டுமின்றி பிறரையும் வெல்ல வைத்து கட்சியின் வெற்றிக்கு உழைப்பவர்களுக்கு உண்டான பரிசு தேர்தலுக்குபின் தேடி வரும்.

    தனிப்பட்ட நிர்வாகிகளை விட கட்சியின் நலன் தான் எனக்கு முக்கியம்.

    உறுதியாக வெற்றி பெறும் ஆற்றல் உள்ளவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படும். தான் மட்டுமின்றி பிறரையும் வெல்ல வைத்து கட்சியின் வெற்றிக்கு உழைப்பவர்களுக்கு உண்டான பரிசு தேர்தலுக்குபின் தேடி வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • என்டிஏ வெற்றிப் பெற்றால் விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி?
    • திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.23ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாக உள்ளன. இதனையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீட்டு பேச்சில் கவனம் செலுத்தி வருகின்றன.

    திமுக தரப்பில் கூட்டணி இறுதியானது. அதிமுக தரப்பிலும் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியானலும், விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் தவெக தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தவெக, என்டிஏ கூட்டணிக்கு சென்றால் பாதிப்பு அவர்களுக்குதான் என திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தவெக, என்டிஏ கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

    "பாஜகவுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் திமுக தோற்றது. விஜய்க்கும் இதே நிலைதான்" என தெரிவித்துள்ளார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்!
    • அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்!

    வீடுதோறும் சென்றடைந்துள்ள #DravidianModel-இன் சாதனைகள்!

    இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள்!

    அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்!

    இதுதான் தி.மு.க.

    ஏப்ரல் 23 அன்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும் - நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம்! திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.1.26 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.

    நேற்று மாலை 4 மணிக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து அரசு அலுவலகங்களில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

    மேலும் எம்.எல்.ஏ., எம்.பி. அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் இருந்த தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டன.

    மேலும் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையும் உடனடியாக தொடங்கியது. தேர்தல் நடத்தை விதிமுறைப்படி உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும். மேலும் வாக்காளர்களுக்கு வழங்கும் நோக்கில் எடுத்துச் செல்லப்படும் பரிசுப்பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள்.

    தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில்அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகளாக இருக்கும் கலெக்டர்கள் நேரடியாக களமிறங்கினர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை உடனடியாக வாகன சோதனையில் ஈடுபட உத்தரவு பிறப்பித்தனர்.

    இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் உதவியுடன் சோதனையை தொடங்கினர்.

    நகரின் முக்கிய சந்திப்புகளில் நின்று அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை மறித்து பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரும், துணை ராணுவ படையினரும் துப்பாக்கி ஏந்தியபடி நின்று பாதுகாப்பு அளித்தனர்.

    இரவு விடிய விடிய சோதனை நடந்தது. பல இடங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லப்பட்ட பணமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவை கருவூலகங்களில் ஒப்படைக்கப்பட்டன.

    தொடர்ந்து இன்று காலையிலும் பறக்கும் படை அதிகாரிகள் தங்கள் சோதனையை தீவிரப்படுத்தினர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, நாகர்கோவில் என பல இடங்களில் இன்று தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.1.26 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க 2,016 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று மாலை முதல் சோதனையை தொடங்கி உள்ளனர்.

    வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருந்தால் கொண்டு செல்லலாம். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று பறக்கும் படை அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளோம்.

    தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.1.26 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் எடுத்துச் செல்வோர் அதற் கான ரசீதுகளை வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனாலும் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம் அருகே இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வந்த பங்கஜ் என்பவர் பெரும் தொகையை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. சோதனையில் அவரிடம் ரூ.35 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.

    பறக்கும் படை அதிகாரிகள் அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்களை கேட்டபோது, பங்கஜிடம் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளின்படி அந்த 35 லட்சம் ரூபாயையும் அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 35 லட்சமும் பாதுகாப்பாக திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் திருப்பூர் குமரன் சாலையில் இன்று காலை பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக ரூ.6 லட்சம் பணம் இருந்தது.அதனை பொள்ளாச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கொண்டு வந்தார். அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    கோவை உக்கடம் பகுதியில் இன்று பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். ஒரு காரில் 25 சில்வர் தட்டுகள் இருந்தன. அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால் வாக்காளர்களுக்கு பரிசாக கொடுக்கும் நோக்கில் அவை கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என்ற நோக்கில் அவை பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவலூரில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து பெருந்துறையை நோக்கி தக்காளி பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு வேனை இன்று காலை தடுத்துநிறுத்தி சோதனை செய்தனர்.

    வேனில் இருந்த கர்நாடக மாநிலம் பசுவநாபுரத்தை சேர்ந்த மகாதேவ்(38) என்பவரிடம் ரூ.53,200 பணம் இருந்தது. பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

    பெரம்பலூர் வேப்பந்தட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, சேலத்தில் இருந்து சுவாமிமலை நோக்கி சென்று கொண்டிருந்த விவேகானந்தர் என்பவர் ஓட்டி வந்த காரை தணிக்கை செய்தபோது எந்தவித ஆவணங்களும் இன்றி அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை தோட்டக்கலை அலுவலர் கோகுல பிரியா தலைமையிலான பறக்கும் படையினர் பாளை தியாக ராஜ நகர் பகுதியில் வாகன சோதனை செய்தபோது அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து பாலாஜி என்பவர் காரில் வந்தார். அவரை சோதனை செய்தபோது அவரிடம் ரூ.1.40 லட்சம் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பணம் பாளை தாசில்தார் இசக்கி பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அரியலூர் மாவட்டம் இருங்கலா குறிச்சி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் தனது காரில் ஆத்தூர் நோக்கி சென்றார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அவரது காரை நிறுத்தி பறிக்கும் படையினர் சோதனை நடத்தினார்கள்.

    வேல்முருகன் கொண்டு வந்த பையில் ரூ.12 லட்சம் இருப்பது தெரிய வந்தது. அந்த பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ராஜேஷ் இன்று காலை ஆரணி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக லோடு ஆட்டோவில் வந்தார். அப்போது அவரிடம் ரூ. 75 ஆயிரத்து 500 இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் வளையாத்துரை சேர்ந்த புகழ் இன்று காலை தனது மோட்டார்சைக்கிளில் ஆரணி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்பங்தாங்கள் கூட்ரோடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் புகழை நிறுத்தி சோதனை செய்தனர். அவரது பையில் ரூ.1 லட்சம் இருந்தது. ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜூஜூ வாடி சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். அருகில் உள்ள கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்தல் விதிமுறைக்குட்பட்டு எந்தவித பொருட்களையும் எடுத்து வர அனுமதிக்கப்படுவதில்லை.

    இரு மாநிலங்களுக்கும் இடையே இயக்கப்படும் கார் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களையும் நிறுத்தி சோதனை நடத்திய பின்னரே போலீசார் அனுமதித்து வருகின்றனர்.

    சென்னையில் பறக்கும் படையினருடன் இணைந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் உள்ள 12 துணை கமிஷனர்கள் தலைமையில் இந்த வாகன சோதனை நடைபெற்றது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று காய்கறி ஏற்றி சென்ற லாரி, வேன், மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் பறக்கும் படை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் சென்னையில் பல இடங்களில் கார்கள் மற்றும் மினி லாரிகளை மடக்கி சோதனையில் ஈடுபட்டனர். பார்சல் கொண்டு சென்றவர்களிடம் என்ன பார்சல் என்று பரிசோதனை செய்தே அனுப்பினார்கள்.

    மேலும் மோட்டார் சைக்கிள்களையும் வழி மறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிள்களில் உள்ள பெட்டி, இருக்கைகளுக்கு அடியில் பொருள் வைக்கும் இடம் ஆகியவற்றையும் திறந்து பார்த்தனர்.

    சென்னை மாநகர பகுதிகள், தாம்பரம், ஆவடி மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பறக்கும் படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இனிவரும் நாட்களில் சோதனை தீவிரம் அடைய உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். உரிய ஆவணம் கொடுத்து பணத்தை பெற்று செல்லலாம்.

    அதிக அளவில் பணம் எடுத்து சென்றால் வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பார்கள். இதே போல் வியாபாரிகள் நகை, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கி செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவைகள் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிளஸ்-2 மாணவி கொலை சம்பவம் குறித்து அறிவியல் பூர்வமான விசாரணையை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது.
    • மாணவி கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரபாண்டியனை விசாரணை அதிகாரியாக நியமிக்கிறோம்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆ.குமாரபுரத்தை சேர்ந்த வக்கீல் மாரீஸ்வரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் பிளஸ்-2 மாணவி கடந்த 10-ந்தேதி மாயமான நிலையில், 11-ந்தேதி உடலில் படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். மாணவி கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், விசாரணையை முறையாக நடத்தவும் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும், மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், இந்த கொலை வழக்கின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதியை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு பிளஸ்-2 மாணவி கொலை சம்பவம் குறித்து அறிவியல் பூர்வமான விசாரணையை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ் குமார், ஜோதிராமன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி வாதிடுகையில், குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றார்.

    இதற்கிடையே மாணவியின் பெற்றோர் சார்பில் ஆஜரான வக்கீல், மாணவி இறப்பு விவகாரத்தில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். அப்போது நீதிபதிகள் இந்த விவகாரத்தை பொருத்த அளவில் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் சம்பந்தமில்லாத நபர்களை கைது செய்து விடுவார்கள் என்றனர்.

    பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அவர்களுடைய வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவாக போலீசார் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மாணவி கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரபாண்டியனை விசாரணை அதிகாரியாக நியமிக்கிறோம். இந்த விசாரணை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் தொடர்ந்து மாணவி கொலை வழக்கை இந்த கோர்ட்டு தீவிரமாக கண்காணிக்கும் என்று உத்தரவிட்டு, ஏப்ரல் 2-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்கள் ஓய்வில் இருந்தேன்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    கூட்டத்தில் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மு.பெ.சாமிநாதன் மற்றும் எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்கள் ஓய்வில் இருந்தேன். இப்போது குணம் அடைந்து விட்டேன். இதனால் கட்சிப் பணியையும் தொடங்கிவிட்டேன். வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 28 மாதங்கள் கழித்து தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் எனக்கூறி மகளிர் உரிமைத்தொகை கொடுத்துள்ளார்.
    • விளாத்திகுளம் சம்பவத்தில் மெத்தனமாக இருப்பது ஏன்?.

    கோவை:

    கோவையில் அ.தி.மு.க. சார்பில் நடந்த மகளிர் தின நிகழ்ச்சியில் நடிகை கவுதமி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறுதிவரை பெண்களுக்காகவே வாழ்ந்தார்.

    ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறார். இதற்கு சாட்சி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராடிய பின்னர் 28 மாதங்கள் கழித்து தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் எனக்கூறி மகளிர் உரிமைத்தொகை கொடுத்துள்ளார்.

    ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். மு.க.ஸ்டாலின் தனது ஆட்சி முடியும் தருவாயில் கொடுத்துள்ளார். அவர்களுக்கு வாக்குரிமை வந்துவிட்டது என்பதற்காகத் தான் இப்போது கொடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விளாத்திகுளம் வன்கொடுமை, கொலை சம்பவத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் எதுவும் சொல்ல முடியும் என்று கனிமொழி எம்.பி., கூறியிருப்பது மனிதத் தன்மையற்றது.

    பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஒரு ஆறுதல் கூட சொல்ல முடியாத நீங்கள் எப்படி உங்களைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும். கரூர் சம்பவத்தில் இரவோடு இரவாக அறிக்கை தந்தவர்கள், விளாத்திகுளம் சம்பவத்தில் மெத்தனமாக இருப்பது ஏன்?.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிகப்பெரிய பெருமை என்னவென்றால், போதைப்பொருள் பரவலால் இந்தத் தலைமுறையையும், அடுத்த இரண்டு தலைமுறைகளையும் நாசமாக்கி அழித்ததுதான்.

    வரும் சட்டசபை தேர்தலில் எத்தனை முனை போட்டி இருந்தாலும், அது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க இடையிலான நேரடிப் போட்டியாகவே இருக்கும். மற்றவர்கள் இடையில் வந்த 'தொல்லைகள்' போன்றவர்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விளம்பரம் தேடுவதிலேயே தான் இந்த ஆட்சியினர் குறிக்கோளாக உள்ளனர்.
    • போனமுறை எத்தனையோ பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர்

    கோவை:

    கோவையில் அ.தி.மு.க. சார்பில் நடந்த மகளிர் தினவிழாவில் நடிகை விந்தியா பேசியதாவது:-

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஞாபகம் இருக்கிற அளவுக்கு இந்த 5 ஆண்டுகளில் நாங்கள் சாதனை செய்துள்ளோம் என மைக்கிலேயே மேகி கிண்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    அப்படி என்ன சாதனைகள் செய்து விட்டார் என்று யோசித்து பார்த்தேன். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகளில் எந்த அரசும் 5 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி கடன் வாங்கியது இல்லை. ஆனால் 5 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி கடன் வாங்கியது தான் தி.மு.க அரசின் சாதனை.

    காமராஜர் காலத்தில் இருந்து எடப்பாடியார் காலம் வரையிலான ஆட்சியில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று படித்தனர். ஆனால் இந்த 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மாணவர்கள் போதையில் சுற்றி கொண்டு குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுதான் இந்த தி.மு.க அரசின் சாதனை.

    இதுபோன்ற சாதனைகள் செய்துள்ள பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கே உண்டு. இதற்கு மேல் தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க. இருக்கும். ஆனால் தமிழ்நாடு இருக்காது.

    தி.மு.க. பல்லு முளைக்காத குழந்தை முதல் பல்லு போன மூதாட்டி வரை யாருக்கும் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக முதலமைச்சர் கூறுகிறார். வெல்லும் பெண்கள் என்ற பெயரில் வெட்கமே இல்லாமல் இந்த ஆட்சியினர் விளம்பரம் தேடுகின்றனர். விளம்பரம் தேடுவதிலேயே தான் இந்த ஆட்சியினர் குறிக்கோளாக உள்ளனர்.

    இன்று தி.மு.க ஆட்சியில் இருப்பதற்கு காரணம் பெண்கள் தான். ஆனால் அந்த பெண்களுக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.

    போனமுறை எத்தனையோ பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர். இப்பவும் கட்டு, கட்டாக, பொய்களை தூக்கி கொண்டு வருவார்கள். யாரும் அவர்களை நம்பாதீர்கள். தி.மு.க.வினர் உண்மையான விஷயங்களை எப்போதும் சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு அது தெரியாது. நேருக்கு நேர் நின்று சண்டை போடுவதற்கு தி.மு.க.வுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தெரியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரான்-அமெரிக்கா போர் சூழலால் சுற்றியுள்ள நாடுகளிலும் பாதிப்பு எதிரொலிக்கிறது.
    • ஒட்டுமொத்த பின்னலாடை உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது.

    சர்வதேச அளவிலான பேரிடர் மற்றும் போர்கள் நடக்கும் போது திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பது வழக்கம். தற்போது ஈரான்-அமெரிக்கா போர் சூழலால் சுற்றியுள்ள நாடுகளிலும் பாதிப்பு எதிரொலிக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் இறக்குமதி ஏற்றுமதி வர்த்தகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஏற்றுமதியாளர்கள் மட்டுமல்ல உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னலாடை தொழில் துறையில், ஜாப் ஒர்க் நிறுவனங்கள் முக்கிய பங்களிக்கின்றன. சாயம், கெமிக்கல், விறகு, நிலக்கரி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சாயமிடும் கட்டணம், நடைமுறை கட்டணத்தில் இருந்து ரூ. 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    பேக்கிங் மற்றும் பிராசசிங் பிரிவுகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உயர்ந்துள்ளது. தையல் நூல் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்ல, ரப்பர் மற்றும் பாலியஸ்டர் நூல் இறக்குமதி பாதிக்கப்பட்டு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக எலாஸ்டிக் உற்பத்தி கட்டணமும் உயர்த்த தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.

    இப்படியாக ஜாப் ஓர்க் மற்றும் எலாஸ்டிக் என பல்வேறு பிரிவுகளிலும் உற்பத்தி கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒட்டுமொத்த பின்னலாடை உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது.

    பொங்கல் பண்டிகைக்கு பின் ரம்ஜான் பண்டிகைக்கான ஆர்டர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தன. அவற்றை உற்பத்தி செய்து அனுப்பி வைத்து ள்ளனர். அடுத்தகட்டமாக 2ம் கட்ட கோடை கால ஆர்டர் மீதான உற்பத்திக்கு முழு வீச்சில் திருப்பூர் தயாராகி வந்தது.

    ஆடை விலையை உயர்த்த திட்டம்

    இந்நிலையில் போர் சூழல் காரணமாக பெட்ரோலிய பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் மூலப்பொருட்கள் விலை திடீரென உயர்ந்துள்ளது. இதனால் ஜாப் ஒர்க் பிரிவுகளும் தற்காலிகமாக உற்பத்தி கட்டணத்தை உயர்த்தி உள்ளன. இது உற்பத்தியாளருக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. அவர்களும் உற்பத்தி கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வர்த்தக நலன் கருதி பாதிப்பை சமாளிக்கும் அளவுக்கு 5 சதவீதம் வரை உற்பத்தி கட்டணத்தை உயர்த்தலாம் என உத்தேசித்துள்ளனர். இது தொடர்பாக உற்பத்தியாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக அரசியல் களத்தில் ஒரு மாபெரும் புயலாக உருவெடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
    • தம்பி.. உங்கள் தாத்தா காலத்து கற்பனைத் கதைகளை சினிமா திரைக்கதைக்கு வேண்டுமானால் பயன்படுத்தலாம்.

    தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "கல்லாப் பெட்டி" கனவுகளும்...

    கற்பனைப் போர் வீரர்களும்!

    தமிழக அரசியல் களத்தில் ஒரு மாபெரும் புயலாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    சில ஊடகங்கள் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கிற்காக, கற்பனைக் கதைகளை எழுதி "உண்மைக்குப் புறம்பான" செய்திகளைப் பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    முன்னர் இதேபோல் பவன் கல்யாண் அவர்களை நம்மோடு தொடர்பு செய்து வதந்திகள் கிளப்பப்பட்டன. "அவர் பேசிவிட்டார் கைகோர்த்துவிட்டார்" என்று "வாடகை வியாபாரி" ஒருவர் பரப்பிய பொய்செய்தியை வைத்து ஊடகங்கள் ஒப்பாரி வைத்தன. ஆனால், பவன் கல்யான் அவர்களே ஒரு நேர்காணலில், "நான் இவர்களுடன் பேசி இருபது ஆண்டுகள் ஆகிறது" என்ற உண்மையை உடைத்தபோது, வதந்தி பரப்பியவர்களின் முகத்திரை கிழிந்தது.

    மீண்டும் அதே 'பழைய ஸ்கிரிப்ட்டை' அரங்கேற்ற நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது. தன்மானத்தை விற்று, சில "கல்லாப் பெட்டி" முதலாளிகளின் லாபத்திற்காகச் செய்திகளைச் சமைக்கும் சில எழுதுகோல்களுக்கு ஒன்று புரியவில்லை..

    தம்பி.. உங்கள் தாத்தா காலத்து கற்பனைத் கதைகளை சினிமா திரைக்கதைக்கு வேண்டுமானால் பயன்படுத்தலாம், அரசியலுக்கு இனி எடுபடாது. பொய்ச் செய்திகளைப் பரப்பித் தொண்டர்களைக் குழப்பலாம் என்று கணக்கு போட்டால், அது உங்கள் கணக்கைத் தான் முடித்து வைக்கும்.

    போட்டிக்கு என்று சில "Virtual Warriors" உங்களை குறித்து இதே போல சில செய்திகளை சிறப்பாக பரப்பினால்??? நீங்கள் தாங்க மாட்டீர்கள். தமிழக வெற்றிக் கழகத்தை குறித்து போலி செய்திகளை பரப்பும் போலி ஊடகங்கள் தானாகவே "ஜோசியம்" பார்ப்பதை நிறுத்துங்கள். சட்டம் ஒழுங்கு சீரழிவை திசைத்திருப்ப இப்படி பொய் செய்தி பரப்புவது முற்றிலும் தவறு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தகுந்த விழிப்புணர்வு அளிக்கப்படும்.
    • தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தல் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தகுந்த விழிப்புணர்வு அளிக்கப்படும்.

    * 2,106 பறக்கும் படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

    * வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்ட 7 நாளில் 5 நாள் தான் மனுத்தாக்கல் செய்ய முடியும். மற்ற 2 நாள் விடுமுறை நாட்கள்.

    * உரிய ஆவணம் இருந்தால் பணம் பறிமுதல் செய்யப்படாது. பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாது.

    * நகை வாங்க கொண்டு செல்லப்படும் பணம் உங்களுடையது தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

    * தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவர் ரிஷிகேஷ்-க்கு Appendix அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
    • பள்ளிக்கல்வித்துறை சிறப்பு அனுமதி பெற்று இன்று ஆங்கிலம் மொழிப்பாடத் தேர்வு எழுதுகிறார்.

    சென்னை ஈக்காட்டுத்தாங்கல் தனியார் பள்ளியில் 108 ஆம்புலன்ஸில் வந்து மாணவர் ஒருவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    சென்னை ஈக்காட்டுத்தாங்கல் உள்ள இசிஐ பள்ளியில் 10 வகுப்பு படித்து வரும் மாணவர்( ரிஷிகேஷ்), அசோக் நகரில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வந்தார்.

    கடந்த 11-ஆம் தேதி தமிழ் தேர்விற்கு சென்றிருந்த மாணவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு, பெரும் அவதி அடைந்துள்ளார். அந்த தேர்வு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மாணவர் உடனடியாக கிண்டியில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    அங்க பரிசோதித்த மருத்துவர்கள் மாணவனுக்கு குடல்வால் அழற்சி( அப்பன்டிக்ஸ்) பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 12-ம் தேதி மாணவருக்கு அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு தற்போதும் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் ஆங்கில தேர்வு இன்று நடை பெற்றது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மாணவர் மருத்துவ கண்காணிப்பிலேயே இருந்து வருவதால் அவர் இன்று தேர்வு எழுதுவது சிக்கலாக மாறியது.

    மருத்துவமனையில் இருந்து தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுதிவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவது என பெற்றோர் முடிவு செய்தனர்.

    அதன்படி கிண்டியில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் இருந்து இன்று காலை ஆம்புலன்சில் புறப்பட்டு தேர்வு மையத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப் பட்டது.

    காலை 9.30 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து தேர்வு மையத்திற்கு ஆம்புலன்ஸில் புறப்பட்டார். 10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் தேர்வு மையத்தை வந்து சேர்ந்தது. அங்கு அவருக்கு தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.. மாணவருக்கு உதவுவதற்காக அரசு தேர்வுகள் துறை சார்பில் சொல்வதை எழுதுவோர் நியமிக்கப்பட்டனர். ஆசிரியரின் கேள்விகளுக்கு மாணவர் சொல்லிய பதிலை விடையாக ஆசிரியர் எழுதினார்.

    மூன்று மணி நேரம் தேர்வு நடைபெற்று முடிந்தது. அதன் பின்னர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாணவர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று தேர்வு எழுதியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    ×