என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வானது ஜூன் 15ம் நாள் நடைபெற இருக்கிறது.
    • மாற்றுத் தேதிகள் wwv.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

    சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வானது ஜூன் 15ம் நாள் நடைபெற இருப்பதால், அதே நாளில் நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மாற்றுத் தேதிகள் wwv.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் அனுமதி அளித்தது.
    • பரந்தூர் மக்களை விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று சந்தித்துள்ளனர்.

    பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழு, சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் சந்தித்துள்ளனர்.

    பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் அனுமதி அளித்தது.

    பரந்தூர் மக்களை விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று சந்தித்துள்ளனர்.

    பரந்தூர் மக்களின் சந்திப்பு முடிந்த பிறகு, ஜாக்டோ- ஜியோ ஒரு பிரிவினரும் சந்திக்க உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திட்டமிட்டபடி இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
    • குடியிருப்புவாசிகள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    தெற்கு டெல்லியின் கல்காஜி விரிவாக்கத்தில் உள்ள பூமிஹீன் முகாமில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் மூன்று நாட்களுக்குள் தாமாக முன்வந்து காலி செய்ய வேண்டும் என்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) அறிவித்திருந்தது.

    கடந்த ஜூன் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்களுக்குள் குடியிருப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என்றும், தவறினால் குடியிருப்புகளுக்குள் உள்ள பொருட்களுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும், திட்டமிட்டபடி இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

    இதனால், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, குடியிருப்புவாசிகள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், டெல்லி மதராசி குடியிருப்பு இடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், "189 குடும்பங்களுக்கு நரேலாவில் வீடுகள் ஒதுக்கப்பட்டாலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை" என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெற்றி வாய்ப்பை ஆய்வு செய்யும் “உடன்பிறப்பே வா’’ தொடங்கியது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

    இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு நிலவரம் எப்படி உள்ளது என்பதையும் அவர்களிடம் கேட்டறிந்து வருகிறார்.

    இந்த நிலையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.

    இதற்காக உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந்தேதி முதல் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தொடங்க உள்ளது.

    இதற்கிடையே மதுரையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.

    ஸ்டாலின் பேசுகையில்," ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்னவென்றால், ''உடன்பிறப்பே வா'' என்ற தலைப்பில் தி.மு.க. நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் நான் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரிவாக, தனித்தனியாக பேசுவோம்.

    தி.மு.க. உடன் பிறப்புகளுடனான உறவு என்பது அரசியல் கட்சி என்ற அளவிலும், நிர்வாகிகள், தொண்டர்கள் என்ற அளவிலும் இருக்கும் தொடர்புகளை போன்றதல்ல.

    தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் தி.மு.க.வின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காத்து நிற்கக் கூடியவர்கள்.

    அப்படிப்பட்ட உடன் பிறப்புகளை கலைஞர் வழியில், அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து எளிமையாக உரையாட உள்ளேன்" என்றார்.

    இந்நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை ஆய்வு செய்வதற்காக தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக சந்தித்து பேசும் ''உடன்பிறப்பே வா'' நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

    இன்று காலையில் சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய 3 தொகுதிகளை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவழைத்து உரையாடினார்.

    இந்த ஆலோசனையில் 3 தொகுதிகளையும் சேர்ந்த ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், பேரூர் செயலாளர் மற்றும் தொகுதியின் பொறுப்பாளர், மண்டல பொறுப்பாளர், அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஒரு தொகுதிக்கு அதிகபட்சமாக 7 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.

    அவர்கள் ஒவ்வொருவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக அழைத்து, தொகுதியில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு நிலவரம் ஆகியவை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிதம்பரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகள் அ.தி.மு.க. வசம் சென்றன. எனவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தி.மு.க. தலைமை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.

    அதன் தொடர்ச்சியாக கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதிகளில் இருந்தே தனது ''உடன்பிறப்பே வா'' என்னும் தொகுதி வாரியான கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ளார்.

    அதன்படி சிதம்பரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்திய போது, ''வருகிற தேர்தலில் இந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தேர்தல் பணியாற்ற வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ம.க.வை தொய்வின்றி நடத்த எனக்கு ஆதரவு உள்ளது.
    • என் உத்தரவுபடி செயல் தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் எனக்கு மகிழ்ச்சி.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, 2026 தேர்தல் வரை நான்தான் தலைவராக இருப்பேன். அதன் பிறகு எல்லாம் அன்புமணிதான் என கூறினார்.

    இந்த நிலையில் இன்று அவர் தைலாபுரம் தோட்டத்தில் திடீரென நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறும்போது, என் மூச்சு உள்ளவரை நான்தான் தலைவராக இருப்பேன் என கூறினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-

    அன்புமணியின் செயல்பாடுகளால் அவருக்கு தலைவர் பதவி வழங்க மாட்டேன். குடும்பத்தினர் அரசியலுக்கு வரக்கூடாது என கூறியதை காப்பாற்ற முடியவில்லை. பா.ம.க.வை தொய்வின்றி நடத்த எனக்கு ஆதரவு உள்ளது.

    கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறியதால்தான் அன்புமணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பெற்றோரை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும். தாய்-தந்தையை மதிக்க வேண்டும். ஆனால், அன்புமணி மைக்கை தூக்கி வீசுவதும், தாயை பாட்டிலால் தாக்குவதும் போன்ற செயலில் ஈடுபட்டார்.

    என் உத்தரவுபடி செயல் தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் எனக்கு மகிழ்ச்சி. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என கூறினால், அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார்.

    2026 வரை நான் தலைவராக இருப்பேன் என நான் கூறியிருந்தேன். அந்த முடிவை மாற்றி கொள்கிறேன்.

    அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் ஏறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை 2018-ல் தாக்கல் செய்தனர்.
    • துரை தயாநிதியின் சிகிச்சை குறித்தான முழுமையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதி கூறினார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பரபரப்பு புகார் எழுந்தது.

    இதில் தொடர்புடைய ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் 2012-ல் கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை 2018-ல் தாக்கல் செய்தனர். இந்த முறைகேடு தொடர்பாக சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவு தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

    பின்னர் துரை தயாநிதிக்கு சொந்தமான மதுரை, சென்னையில் உள்ள 25 நிலங்கள், கட்டிடங்கள், வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளைத் தற்காலிகமாக முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று மதுரை மாவட்ட சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.

    இந்த வழக்கில் இருந்து மன ரீதியான உடல்நல பிரச்சனை காரணமாக தன்னை விடுவிக்க கோரி துரை தயாநிதி தரப்பில் சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துரை தயாநிதியை நேரில் ஆஜர்படுத்தி அவரது மனநிலை குறித்து உறுதி செய்ய வேண்டுமென நீதிபதியிடம் முறையிட்டனர்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துரை தயாநிதியின் சிகிச்சை குறித்தான முழுமையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எதிர்பார்ப்பு என்பது எல்லா தேர்தலிலும் உள்ளது.
    • அ.தி.மு.க. இன்னும் வடிவம் பெறவில்லை என்பது கசப்பான உண்மை.

    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை மத்திய பா.ஜ.க. அரசு கையாண்டு வருகிறது.

    இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள் என்ற காரணத்தினால் அவர்கள் நலம் என்ற பெயரில் இந்துக்களை அணி திரட்டுகிறார் கள்.

    அந்த வகையில் சிறுபான்மையினருக்கு எதிராக ஆட்சி அதிகாரத்தையும் முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். சட்டத்தின் பெயரால் ஜனநாயகத்தின் பெயரால் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றனர்.

    முத்தலாக், வக்பு, திருத்தச் சட்டம் மதச்சார்பின்மைக்கு, அரசமைப்புக்கு எதிரானது. அரசு அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் திருச்சியில் வி.சி.க. சார்பில் நாளை மதசார்பின்மை காப்போம் பேரணி நடைபெறுகிறது.

    இந்தியாவில் பிற மாநிலங்களில் ஆர்.எஸ். எஸ்., பா.ஜ.க., சங்பரிவார் அமைப்புகள் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை பரப்பி இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக் கும் எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து வருகின்றனர்.

    குடியுரிமை திருத்த சட்டம் அது நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துவது தான் விடுதலை சிறுத்தை ஏற்றுக்கொண்ட பேரணி நோக்கமாகும்.

    மதவாதத்திற்கு இடம் தராத ஒரு பக்குவப்படுத்தப்பட்ட மண்ணாக தமிழ் மண் தமிழ்நாடு விளங்குகிறது. ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஒரு இலக்காக வேண்டி மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவதற்காக முருகவேல் யாத்திரை முருக பக்தர்கள் மாநாடு இதுபோன்ற செயல்படுத்துகின்றனர்.

    அகமதாபாத்தில் ஏற்பட்டுள்ள விமான விபத்தில் எப்படி ஆறுதல் சொல்வது என தெரியவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கூடுதலாக இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

    தலைமை தாங்கி இருக்கும் கட்சியுடன் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது அந்த நேரத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை அடிப்படையில் உள்ளது.

    நிபந்தனை அரசியலை கூட்டணிக்குள் செய்யக்கூடாது. எதிர்பார்ப்பு என்பது எல்லா தேர்தலிலும் உள்ளது. கூட்டணியில் நலம் முதன்மையானது.

    தி.மு.க.வுக்கு எப்படி கூட்டணி பொறுப்புள்ளதோ அதே போல கூட்டணி கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது.

    கூட்டணி ஆட்சி என்பதை நெடுங்காலத்திற்கு முன்பு நிலைப்பாடாகக் கொண்டிருக்கிறோம், கோரிக்கையாக வெளிப்படுத்தி இருக்கும். இன்றைக்கும் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான காலம் இது இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விடமிருந்து கூடுதல் சீட் கேட்போம்.

    அ.தி.மு.க.வால் வெளியில் உள்ளவர்களையே இணைக்கவில்லை. அமைச்சர் அமித்ஷா கூட்டணிக்காக இரண்டாவது முறை வந்து விட்டார்.

    கூட்டணி தயாராக இல்லை. அ.தி.மு.க. இன்னும் வடிவம் பெறவில்லை என்பது கசப்பான உண்மை.

    நிரந்தரமாக டாஸ்மாக் மூட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இந்த தேர்தலிலாவது திராவிட முன்னேற்றக் கழகம் நிரந்தரமாக டாஸ்மாக் கடைகளை குறித்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.

    எங்கெல்லாம் அரசு இருக்கிறதோ அங்கு ஊழல் உள்ளது. ஊழல் என்பதை சொல்லி ஆட்சியில் இருந்து அகற்றப்படுவது என்பது சொற்பமான நிகழ்வுகள் தான்.

    அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். ஆனால் இதுவரை எந்த ஆதாரமும் வெளியிடவில்லை.

    ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் முன் வைக்கட்டும் மக்களிடத்தில் எடுத்து வைக்கட்டும், விசாரணைக்கு கொண்டு செல்லட்டும். ஊழல் மிகப்பெரிய பிரச்சனை தான். ஆனால் ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் கொடூரமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தலைமை நிலையச்செயலாளர் பாலசிங்கம், முதன்மைச் செயலாளர் பாவரசு, மண்டல பொறுப்பாளர் பெரம்பலூர் இரா.கிட்டு மற்றும் பலர் உள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொழில் அதிபர் வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
    • சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரிலேயே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் லேக்வியூ 3-வது தெருவில் முத்து என்ற தொழில் அதிபர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    4 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழில் அதிபர் முத்துவின் வீட்டுக்கு காலை 7 மணி அளவில் சென்ற வீட்டில் உள்ள ஆவணங்களை பார்த்து சோதனை நடத்தினார்கள்.

    சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரிலேயே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    தொழில் அதிபர் முத்துவின் பின்னணி மற்றும் தொழில்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. ஆட்சி கொடுமையில் இருந்து மக்களை காப்பாற்றுவது பா.ம.க.வின் கடமையாகும்.
    • பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

    சென்னை:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி இடையேயான அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது.

    டாக்டர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, 2026 தேர்தல் வரை நான்தான் தலைவர். அதன் பிறகு அன்புமணி எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.

    ராமதாசின் இந்த அறிவிப்பு அன்புமணியை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து அவசர அவசரமாக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு அனுப்பினார். அன்புமணியின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலாளர்கள் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று திரண்டனர்.

    மொத்தம் 108 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றதாக தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் டாக்டர் ராமதாசின் பிடிவாதத்தால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி அன்புமணி கருத்துக்கள் கேட்டார். இந்த திடீர் ஆலோசனையால் அடுத்தகட்டமாக அன்புமணி என்ன முடிவு எடுப்பார் என்ற பரபரப்பு கட்சி தொண்டர்கள் இடையே நிலவுகிறது.

    இதற்கிடையே டாக்டர் ராமதாஸ் இன்று பேட்டியளித்தபோது என் மூச்சு இருக்கும் நானே பா.ம.க. தலைவர் என்று அதிரடியாக அறிவித்தார். இதுபற்றியும் அன்புமணி இன்று ஆலோசனை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து பா.ம.க. தலைமை நிலையம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சி கொடுமையில் இருந்து மக்களை காப்பாற்றுவது பா.ம.க.வின் கடமையாகும். சமூக நீதி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. சமூக நீதி கடமைகளை திராவிட மாடல் அரசு குழிதோண்டி புதைக்கிறது.

    5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை, தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக மக்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. உழவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படவில்லை.

    மது, கஞ்சா போதைப் பொருட்களின் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. அவை கட்டுப்படுத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.

    கல்வி, தொழில் வளர்ச்சியிலும் தமிழகம் பின்தங்கி உள்ளது. மொத்தத்தில் ஆட்சியாளர்களால் தமிழ்நாடு ஏமாற்றப்பட்டு உள்ளது.

    அரசின் இந்த அவலங்களை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பா.ம.க. ஜூலை 25-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதி வரை 100 நாட்கள் நடைபயணம் நடத்த திட்டமிட்டுள்ளது. பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

    இந்த பயணம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்க உள்ளது. இந்த பயணம் அரசியல் கட்சிக்கானது அல்ல. தமிழக மக்களின் நலனுக்கானது. எனவே அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்சி மாநகர் மாவட்ட தொண்டர் அணி சார்பில் புத்தூர் நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
    • கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் செல்வாக்கு தொடர்பான சர்வே நடத்தப்பட்டது.

    தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது. நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.

    தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு பிற அரசியல் கட்சிகளை மிரள வைத்தது. சமீபத்தில் அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், ஐ.ஆர்.எஸ். அதிகாரி போன்ற பிரபலங்கள் கட்சியில் இணைந்தது அக்கட்சியினருக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் வருகிற 22-ந் தேதி விஜய் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட தமிழகம் முழுவதும் தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். திருச்சியிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.



    இந்த நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட தொண்டர் அணி சார்பில் புத்தூர் நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அதில் ஜூன் 22-ந்தேதி பிறந்தநாள் காணும் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி மக்களின் மனம் கவர்ந்த வேட்பாளரே வாழ்க பல்லாண்டு என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

    இதனால் விஜய் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுகிறாரா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. ஆனால் நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டால் விஜய்யை வெற்றி பெற வைப்போம் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் செல்வாக்கு தொடர்பான சர்வே நடத்தப்பட்டது. இதில் திருச்சி கிழக்கு, கடலூர், சிதம்பரம், கன்னியாகுமரி உள்ளிட்ட சில தொகுதிகள் அக்கட்சிக்கு பெரும் சாதகமாக இருப்பது தெரிய வந்தது.

    குறிப்பாக சென்னை, வடதமிழகம், கொங்கு மண்டலத்திலும் செல்வாக்கு அதிகம் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவித்தன. ஆகவே விஜய் திருச்சியை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே திருச்சியை போன்று கடலூர், மதுரை போன்ற மாவட்டங்களிலும் விஜய் போட்டியிட வலியுறுத்தி அக்கட்சியினர்கள் சுவரொட்டி ஒட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என இதுவரை உறுதியாகவில்லை என கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூரின் பங்களிப்பு 68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
    • சமீபத்தில் கையெழுத்தான இங்கிலாந்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வெகு விரைவில் கையெழுத்தாகவுள்ளது.

    நல்லூர்:

    இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூரின் பங்களிப்பு 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் தொழில் துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி கூறியதாவது:-

    கடந்த 2024-25ம் நிதியாண்டு கணக்கின் அடிப்படையில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.40000 கோடி இலக்கினை எட்டியுள்ளது. இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகிறது. கடந்த ஆண்டில் இது 54 சதவீதமாக இருந்தது.

    ஏற்றுமதிக்கான பல்வேறு சலுகைகள் குறைக்கப்பட்ட சூழ்நிலை, பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி, அபரிதமான வரி மற்றும் மின்கட்டண உயர்வு , ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக வளர்ந்த பொருளாதார நாடுகளின் மந்த நிலை , செங்கடல் பிரச்சனை, தாறுமாறாக உயர்ந்த கப்பல் போக்குவரத்து கட்டணம், கன்டெய்னர் பற்றாக்குறை போன்ற பல்வேறு சவால்களை சந்தித்த சூழ்நிலையிலும் இந்த வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம் என்றால் அது உண்மையிலேயே வரலாற்று சாதனைதான்.

    சமீபத்தில் கையெழுத்தான இங்கிலாந்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வெகு விரைவில் கையெழுத்தாகவுள்ளது. அமெரிக்காவுடனான இருதரப்பு ஒப்பந்தம், இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடம் கையெழுத்தாகவுள்ளது.

    ஐரோப்பாவுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் போன்ற சாதகமான வாய்ப்புகளால் வரும் காலங்களில் பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சி மிக பிரமாண்டமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    போர்க்கால அடிப்படையில் தொழில்துறை தொடர்ந்து வைக்கும் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும், அவ்வாறு உதவும்பட்சத்தில் இன்றைய வளர்ச்சி அடுத்த 5 வருடங்களில் இரட்டிப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வடக்கு கர்நாடகா -தெலுங்கானா ஆந்திரா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    15-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    16-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    17-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    18-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    19-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை மற்றும் 15-ந்தேதிகளில்: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    ×