என் மலர்

    மதுரை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனை முடிவில் புரளி என தெரியவந்தது.
    • வெடிகுண்டு புரளியால் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு விசாரணை சற்று தாமதமாக தொடங்கியது.

    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டில் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள 14 மாவட்டகளுக்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. எனவே வழக்கு தொடர்பாக வரும் பொதுமக்கள், பல்வேறு மாவட்ட வழக்கறிஞர்கள் மதுரை ஐகோர்ட்டிற்கு வந்து செல்வதுண்டு. இதனால் ஐகோர்ட்டு வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் இன்று காலை ஐகோர்ட்டு பணிகள் வழக்கம் போல் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது ஐகோர்ட்டு மின்னஞ்சலில் ஒரு மெயில் வந்திருந்தது. அதில் ஐகோர்ட்டு வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஐகோர்ட்டு அலுவலர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஐகோர்ட்டில் வந்திருந்த நீதிபதிகள், பொதுமக்கள், வக்கீல்கள், ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வளாகத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டு வளாகத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் ஐகோர்ட்டு வளாகம், நீதிபதி குடியிருப்பு, நீதிமன்ற அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனை முடிவில் புரளி என தெரியவந்தது. இதனால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். வெடிகுண்டு புரளியால் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு விசாரணை சற்று தாமதமாக தொடங்கியது.

    இதற்கிடையில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 76, 77, 85, 89 ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
    • லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி மேலக்கால் மெயின் ரோடு ராஜா கார்டன் பகுதியில் உள்ள குடிநீர் வால்வு, ஹெச்.எம்.எஸ்.காலனி மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் பணிகள், டி.பி.மெயின் ரோடு பகுதியில் குடிநீர் குழாய்கள் மற்றும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மற்றும் நாளை மறுநாள் (26, 27) ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    வைகை தென்கரை மற்றும் வடகரை பகுதிகளான வார்டு எண். 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70 மற்றும் 76, 77, 85, 89 ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

    எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும், மேலும் அத்தியாவசியமான வார்டுப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மதுரை மாநகராட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க.விற்கும், த.வெ.க.விற்கும் போட்டியென விஜய் அறியாமல், தெரியாமல் பேசுகிறார்.
    • விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் என சொல்கிறார்.

    த.வெ.க. தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பிரசாரம் குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

    * ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மக்களை சந்திக்கலாம். மக்களிடத்திலே அவர்கள் ஆதரவை கேட்கலாம்.

    * தி.மு.க.விற்கும், த.வெ.க.விற்கும் போட்டியென விஜய் அறியாமல், தெரியாமல் பேசுகிறார்.

    * விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் என சொல்கிறார். அது அவருடைய நம்பிக்கை.

    * விஜய் பரீட்சை எழுதட்டும், அவர் என்ன மதிப்பெண் எடுக்கிறார் என்று பார்த்துவிட்டு பிறகு அதைப்பற்றி விவாதிக்கலாம்.

    * விஜய் இப்போதுதான் படித்துக்கொண்டு இருக்கிறார். பரீட்சை எழுதி மதிப்பெண் பெறட்டும்.

    * ஆசிரியர்கள் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்வார்கள். ஆனால் மாணவர் பாஸ் ஆவாரா? இல்லையா? என்பது மதிப்பெண் வந்தால்தான் நமக்கு தெரியும்.

    * மாணவராக இருந்து விஜய் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தேசிய கட்சி, மாநிலக்கட்சி என அவரவர்களுக்கு உரிய பதில்களை சொல்கிறார்கள்.

    * அ.தி.மு.க. தான் தி.மு.க.வை வீழ்த்துகிற சக்தியும், ஆற்றலும், வலிமையும், அனுபவமும், கிளைக்கழகமும், தொண்டர்களும், மக்கள் செல்வாக்கும் கொண்ட கட்சி. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தி.மு.க.வை வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • வருகிற 21-ந் தேதி குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கொல்லத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு மதுரை புறப்படும்.

    மதுரை:

    திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து ராஜபாளையம், செங்கோட்டை வழியாக குருவாயூர் செல்லும் ரெயில் (வ.எண்.16327) நாளை (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் குருவாயூர்-மதுரை ரெயில் (வ.எண்.16327) வருகிற 21-ந் தேதி குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கொல்லத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு மதுரை புறப்படும்.

    திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16343) நாளை ஒரு நாள் மட்டும் மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, செங்கனச்சேரி மற்றும் கோட்டயம் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக ஆலப்புழை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரெயில் ஹரிபாடு, அம்பாலப்புழை, ஆலப்புழை, சேர்த்தலை மற்றும் எர்ணாகுளம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வைகை அணையிலிருந்து அமைச்சர் மூர்த்தி தண்ணீர் திறந்து வைத்தார்.
    • மதுரை, சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப் பரப்பாகிய 19 ஆயிரத்து 439 ஏக்கர் நிலங்களுக்கும் ஆக மொத்தம் சேர்த்து 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்களுக்கும் வினாடிக்கு 1,130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 8 ஆயிரத்து 493 மில்லியன் கன அடி தண்ணீரை இன்று முதல் வைகை அணையிலிருந்து திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டு உள்ளது.

    இதனால் மதுரை, சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

    தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, வைகை அணையில் இருந்து ஒரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து அமைச்சர் மூர்த்தி தண்ணீர் திறந்து வைத்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எடப்பாடியார் செல்லும் இடங்களில் எல்லாம் நம்மை காக்க வந்த தெய்வம் என்று மக்கள் வரவேற்பதை கண்டு எதிரிகளும், துரோகிகளும் வயிற்று எரிச்சல் ஆகின்றனர்.
    • பொறாமையால் எதிரிகளும், துரோகிகளும் வசை பாடி கொண்டிருப்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர். மறைவிற்கு பின்பு அம்மா தனது அயராது உழைப்பால் இந்தியாவில் மூன்றாம் பெரிய இயக்கமாக அ.தி.மு.க.வை உருவாக்கினார். குறிப்பாக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இரட்டை இலையை நிற்க வைத்து மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இந்த இயக்கத்தை வெல்ல எவருமில்லை என்ற வரலாற்றை நிரூபித்தார்.

    இருபெரும் தலைவர்கள் மறைவுக்கு பின் தொண்டர்கள் கண்ட பொக்கிஷமாக, இருபெரும் தலைவர்கள் வடிவமாக, 8 கோடி மக்களின் நம்பிக்கையாக, எடப்பாடியார் இந்த இயக்கத்திற்கு பொக்கிஷமாக கிடைத்தார். மேலும் அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மீட்டெடுத்து, தமிழ்நாட்டை ஒரு குடும்பத்தில் சிக்காமல் மீட்க எழுச்சி பயணத்தை நடத்தி வருகிறார்.

    ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியை ஒழித்து, மீண்டும் மக்களாட்சி மலர எளிய தொண்டராய், களப்போராளியாய் உரிமை போராட்டத்தை எடப்பாடியார் நடத்தி வருகிறார். சாமானிய மக்களுக்களின் உரிமை குரலாக, தன்மானத்தோடு களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார். இதுவரை 150 தொகுதிக்கு மேல் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு 65 லட்சம் மக்களை சந்தித்து புதிய சரித்திரம் படைத்துள்ளார்.

    எடப்பாடியார் செல்லும் இடங்களில் எல்லாம் நம்மை காக்க வந்த தெய்வம் என்று மக்கள் வரவேற்பதை கண்டு எதிரிகளும், துரோகிகளும் வயிற்று எரிச்சல் ஆகின்றனர். பொறாமையால் எதிரிகளும், துரோகிகளும் வசை பாடி கொண்டிருப்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்கள் வெள்ளம் போல் திரண்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிரிகள், துரோகிகள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் பிரச்சனை, தொண்டர்களிடம் பிரச்சனை, நிர்வாகிகளிடம் பிரச்சனை, தலைமை இடத்தில் பிரச்சனை என்று வாய்க்கு வந்ததை கூறி அவர்களே இன்றைக்கு தமிழகத்தில் பிரச்சனையாக இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

    இன்றைக்கு பொதுநலத்துடன், சேவை நோக்கத்துடன் எடப்பாடியார் திகழ்ந்து எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். இதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இருபெரும் தலைவர்களின் செல்வாக்கால் எதிரிகளிடம் சிம்ம சொப்பனமாக எடப்பாடியார் போராடிக் கொண்டிருக்கிறார். இதனால் இன்றைக்கு எதிரிகளுக்கு தூக்கம் தொலைந்து விட்டது.

    தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியாக தூங்க, வளமான எதிர்காலத்தை உருவாக்க எடப்பாடியார் உழைத்துக் கொண்டிருக்கிறார். இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் இருபெரும் தலைவர்களால் விலாசத்தை பெற்றவர்கள் கூலிப்படையாக செயல்பட்டு அ.தி.மு.க.வின் விலாசத்தை சிதைத்து விடலாம் என்று பல்வேறு முயற்சிகள் எடுத்து தோற்றுத்தான் போனார்கள்.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷத்தை இந்த செல்லாக் காசுகள் எடுத்து வைக்கும் சலசலப்பால் தொண்டர்கள் சொத்தான அ.தி.மு.க.விற்கு சேதாரத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள், அது ஒருபோதும் நடக்காது.

    ஒவ்வொரு தொண்டர்களும் மன உறுதியுடன் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. தாய் இல்லாத பிள்ளையாக நாம் இருந்தபோது தாயாக நமக்கு கிடைத்தவர் தான் எடப்பாடியார். அவர் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். தொண்டருக்கு தொண்டராக எடப்பாடியார் நமக்கு கிடைத்துள்ளார். இதுதான் ஜனநாயகத்தின் அற்புதம், ஜனநாயகத்தின் வளர்ச்சி. இதை சர்வாதிகாரர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த சர்வாதிகாரர்கள் எடுக்கும் முடிவுக்கு சில கருங்காலிகள் துணை போகிறார்கள்.

    அ.தி.மு.க.விற்கும், தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக எடப்பாடியார் உள்ளார். அவருக்கு பலவீனத்தை ஏற்படுத்த சலசலப்பை ஏற்படுத்தும் சில செல்லாக்காசுகளால் அ.தி.மு.க.வுக்கு எந்த பின்னடைவும் இல்லை. தொண்டர்கள் அனைவரும் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். சர்வாதிகாரிகளுக்கும் அவர்களுக்கு துணை போகும் கருங்காலிக்கும் தக்க பாடத்தை நாம் புகட்ட வேண்டும். தொண்டர்கள் நாம் எல்லோரும் மன உறுதியோடும், விசுவாசத்தோடும் எடப்பாடியாரிடம் இருக்க வேண்டும்.

    சிலர் பதவி சுகம், அதிகாரத்தை பெற பேசுகிறார்கள். அவர்கள் முகத்திரையை கிழித்து எறியவேண்டும். மீண்டும் 2026 ஆண்டில் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலர அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் நாம் அனைவரும் சூளுரை ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஜித்குமாரின் குடும்பத்தினர், நண்பர்கள், கோவில் ஊழியர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
    • பிழைகளை சரி செய்து மீண்டும் அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. நடவடிக்கையை எடுத்து வருகிறது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவரை நகை திருட்டு புகாா தொடர்பாக சிறப்பு படை பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் 2 மாதத்திற்கும் மேலாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். அஜித்குமாரின் குடும்பத்தினர், நண்பர்கள், கோவில் ஊழியர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி விசாரணை அறிக்கையை சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அறிக்கையில் பிழைகள் இருப்பதாக கூறி மாவட்ட நீதிமன்றம் அதனை திருப்பி அனுப்பியது. பிழைகளை சரி செய்து மீண்டும் அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. நடவடிக்கையை எடுத்து வருகிறது.

    இந்தநிலையில் அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா கொடுத்த நகை திருட்டு புகாரையும் சி.பி.ஐ. விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் நிகிதா புகார் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக அருண்குமார், கோவில் ஊழியர்கள், அஜித்குமார் தாக்குதல் தொடர்பாக வீடியோவை எடுத்த சத்தீஸ்வரன், நிகிதாவிடம் இருந்து கார் சாவி வாங்கிக்கொடுத்த கண்ணன், அஜித் நண்பர் வினோத்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இவர்களுக்கு முறையான சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரியார் பேருந்து நிலையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி 4 வருடமாகி விட்டது. அதனை திறக்க முடியவில்லை.
    • ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள். அது முடியாது.

    மதுரை:

    மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள சொக்கநாதபுரம் காளியம்மன் கோவிலுக்கு ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

    திறப்பு விழாவிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    நான் அமைச்சராக இருக்கும்போது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்தேன். தி.மு.க. அமைச்சர்கள் டிபன் பாக்ஸ்களை கொடுத்து வருகிறார்கள். பத்திரபதிவுத்துறை அமைச்சரின் தொகுதிக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் திட்டங்களை எதுவும் கொண்டு வரவில்லை. ஆனாலும் எங்களது ஆட்சியிலே கொண்டு வந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

    புதிதாக மண்டல தலைவர் யாராக இருந்தாலும் மக்கள் பணத்தை சூறையாடாமல் இருந்தால் சரி. முன்னால் இருந்தவர்கள் ரூ.250 கோடியை சுவாகா செய்து விட்டார்கள்.

    பொற்கைப் பாண்டியன் வாழ்ந்த மதுரையில் மன்னராட்சி நடக்கிறது. ஒரு திருடனும் வரமாட்டான். குற்றம் செய்தவர்களே மாமன்றத்தை நடத்துவது சரியா?.

    எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி அ.தி.மு.க. விஜயினால் படம் தான் காட்ட முடியும். புயல் மையம் கொண்டுள்ளது என சொல்வார்களே அதே போல எடப்பாடி பழனிசாமி சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் மையம் கொண்டுள்ளனர்.

    பெரியார் பேருந்து நிலையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி 4 வருடமாகி விட்டது. அதனை திறக்க முடியவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள். அது முடியாது.

    கலைஞர் ஆட்சி அமைப்போம் என்று யாரும் சொல்வதில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சி தான் வேண்டும் என அ.தி.மு.க. பற்றிதான் பேசுகிறார்களே தவிர தி.மு.க. பற்றி பேசுவதில்லை. எடப்பாடியார் பொதுச்செயலாளராக இருக்கும் வரை தி.மு.க.வு க்கு வெற்றி எளிது என உதயநிதிக்கு எழுதிக் கொடுத்தவர்கள் தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்தது முதல்வர்தான்.
    • நான் நம்புவது உயர்ந்த கொள்கையை தான்.

    மதுரை:

    இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, பரமக்குடி செல்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். பின்னர் அவரிடம் நிருபர்கள் எழுப் பிய கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே: இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதியாக ராதாகிருஷ்ணன் பதவியேற்பு குறித்து?

    ப: சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு பற்றி சொல்ல எதுவும் இல்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கோட்பாடு என்னவோ அப்படித்தான் பா.ஜ.க. இயங்கும். ஆர்.எஸ்.எஸ்.ல் பயிற்சி எடுத்தவர்கள் அந்த சித்தாந்தப்படி தான் இயங்குவார்கள். நீட் தேர்வை வேண்டாம் என்று சொல்லிவிட போகிறார்களா? அவர்கள் வைத்திருக்கும் கொள்கையை கடைப்பிடிப்பார்கள். தெரியாத வடமாநிலத்தவரை தவிர இவர் தெரிந்தவராக இருக்கிறார். இதை தவிர இதில் பேச எதுவும் இல்லை.

    மரபுப்படி அந்த இடத்திற்கு வருவதற்காக அவருக்கு வாழ்த்துகள். பா.ஜ.க.வின் கொள்கைகளுடன் ஒத்துபோய் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது தி.மு.க. தான். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்தது முதல்வர்தான். அதற்கு பிரதிநிதியாக போய் உலக நாடுகளில் பேசியது கனிமொழிதான். குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசியவர்கள். மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து பேசுகிறார்கள். இவர்களிடம் உறுதித்தன்மை என்ன இருக்கிறது.

    குஜராத் கலவரத்தை தி.மு.க. கட்சி தலைவர்கள் ஆதரித்து பேசினார்கள். ஆனால் அதே கட்சியால் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து போராடினார்கள். அப்போது கூட்டணியில் இருந்ததால் ஆதரித்தீர்கள், இப்போது கூட்டணியில் இல்லாததால் எதிர்த்தீர்கள். உங்களுக்கு ஒரு நிலைப்பாடு இல்லை. எல்லா வழியிலும் நட்போடு இருப்பது நீங்கள் தான்.

    இல.கணேசன் ஐயாவின் மறைவிற்கு மோடி செய்ய வேண்டிய மரியாதையை முதல்வர் செய்ததற்கு காரணம் என்ன.? மூப்பனார் ஐயாவின் மறைவிற்கு வந்த நிர்மலா சீதாராமன் இதற்கு வர முடியவில்லை. எல்.முருகன் மற்றும் ஆளுநர் ரவியை கூட அனுப்பி இருக்கலாம். இவர்கள் நெருக்கமாக இருப்பதற்கு இதை விட வேறு சான்று என்ன உள்ளது.

    கே: சனிக்கிழமைகளை மட்டும் தேர்ந்தெடுத்து விஜய் பிரசாரம் மேற்கொள்வது குறித்து?

    ப: அது அவர் கட்சியின் முடிவு. அதில் கருத்து சொல்ல முடியாது.

    கே: திருச்சியில் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து உங்கள் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்து?

    ப: படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு இந்த கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த திட்டம் என்ன செய்து விட்டது. இதுபோன்ற கொடுமைகள் எல்லாம் செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி. எங்கள் ஊரில் இதேபோல் இத்திட்டத்தில் மனுக்களை பெற்று அதை ஆற்றில் வீசினார்கள்.

    கே: அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் விஜயுடன் கூட்டணி சேர்ந்தால் என்ன?

    ப: கூட்டத்தை வைத்து கட்சியை ஆரம்பிக்கவில்லை. நான் நம்புவது உயர்ந்த கொள்கையை தான். ஊழல் லஞ்சமா, உண்மை நேர்மையா, பிள்ளைகள் வாழ்வதற்கு வீட்டை கட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்கள், நான் பிள்ளைகள் வாழ நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.

    ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரசுடன் கூட்டணி வைத்து என்ன செய்யப் போகிறீர்கள். அவர்கள் 60 சதவீதம் கொள்ளை அடித்தால் இவர்கள் 40 சதவீதம் கொள்ளை அடிப்பார்கள் இதுதான் நடக்கப்போகிறது.

    கே: ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து?

    ப: 17 ஆண்டுகளுக்கு முன்பாகவே குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அப்போது நமக்கு தெரியவில்லை. அதைப் போராடி தான் தடுப்போம், தரையில் எடுத்து முடித்துவிட்டு தற்போது கடலுக்குள் செல்கிறார்கள்.

    இன்று நான் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் மக்கள்தான் ஒரு காலத்தில் நான் தங்குவதற்கு விடுதி கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். அதிகாரங்களை எதிர்த்து போரிட்டு சண்டை போட்டதால் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது, இதற்கெல்லாம் பயப்படக்கூடாது.

    கே: விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பது குறித்து?

    ப: எங்கள் தாத்தாவின் பெயரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டாம். எங்களுடைய வரலாறு உள்ள பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை வைத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

    கே: திருச்சியில் நடைபெற உள்ள மாநாடு குறித்து?

    ப: அது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடாக அமையும்.

    கே: ஆடு, மாடுகள் மாநாடுகளை தொடர்ந்து அடுத்தகட்ட மாநாடு என்ன?

    ப: ஆடு, மாடு மாநாடுகளை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெற உள்ளது. நாங்கள் மனிதர்களுக்கு மட்டுமான அரசியலாக இல்லாமல், எல்லா உயிர்களுக்குமான அரசியலாக பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்துக் கட்சிகளும் காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறக் கூடாது.
    • மக்கள் அதிகாரத்தில் கைவைத்து, திட்டத்தில் கை வைத்து, மக்களுக்கு சேர வேண்டியதை அம்பானி, அதானியிடம் கொடுப்பார்கள்.

    மதுரை:

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

    தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    தியாகி இமானுவேல் சேகரன் இந்த சமூகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தமிழ் சமூகம் ஒற்றுமையாக வேறுபாடு இன்றி வாழ வேண்டும் என்பதற்கு மிகப்பெரிய தியாகத்தை செய்திருக்கிறார். நாட்டுப்பற்று உள்ள ராணுவ வீரராக இருந்திருக்கிறார். அவருக்கு புகழஞ்சலி செலுத்துவதில் காங்கிரஸ் பேரியக்கம் பெருமை அடைகிறது.

    சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்பதால் நாட்டுக்கு என்ன பெருமை இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சார்ந்தவர் பதவி ஏற்பதில் பெருமைப்பட எதுவும் இல்லை. முன்னாள் துணை ஜனாதிபதி தன்கரை வெளியில் கொண்டு வர வேண்டும்.

    தேசம் முன்னேறுவதற்கு நேரு முதல் சோனியா காந்தி வரை கொண்டு வந்த திட்டங்கள் பின்னடைவை நோக்கி செல்கிறது. ராகுல் காந்தி பீகாரில் வாக்குத் திருட்டை பற்றி பேசியதை போல், குடியரசு துணைத்தலைவர் தேர்தலிலும் இங்கு எதுவும் வாக்கு திருட்டு நடந்திருக்கிறதா என பிரதமர் தான் சொல்ல வேண்டும்.

    அனைத்துக் கட்சிகளும் காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறக் கூடாது. விஜய்க்கு இருக்கும் அளவுகோல் தான் இ.பி.எஸ்.க்கும் இருக்கும் அது தான் எங்களின் வேண்டுகோள்.

    உறவாடி கெடுப்பது பா.ஜ.க.வின் மாடல். ஆமை புகுவதைப் போல பாஜக புகு மாநிலம் சிதைந்து போகும். அதன் பின்பு அதில் மக்கள் அதிகாரத்தில் கைவைத்து, திட்டத்தில் கை வைத்து, மக்களுக்கு சேர வேண்டியதை அம்பானி, அதானியிடம் கொடுப்பார்கள்.

    மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை இ.பி.எஸ். தான் ஆட்சியில் இருந்த போது வைக்காமல் அமைதியாக இருந்தார். அப்போதே அதை செய்திருக்கலாம். அரசியலுக்காக தானே பேசுகிறார். உண்மையிலேயே பற்று இருந்திருந்தால் தேர்தல் வரும் போது ஏன் பேச வேண்டும் முன்பே ஏன் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை விமான நிலையத்தில் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
    • கூட்டணி குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலையில் தான் அ.ம.மு.க. உள்ளது.

    மதுரை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * மதுரை விமான நிலையத்தில் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

    * எடப்பாடி பானிசாமி அரசியல் செய்வதை சுட்டிக்காட்டினேனே தவிர, தேவர் பெயரை விமான நிலையத்திற்கு சூட்ட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    * எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த விளக்கத்தை தவறாக புரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    * கூட்டணி குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலையில் தான் அ.ம.மு.க. உள்ளது என்றார்.

    இதனிடையே, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கும் வரை தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு என உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு,

    எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது உண்மைதான். அ.தி.மு.க.வின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். எடப்பாடி பழனிசாமியால் தான் தி.மு.க. கூட்டணி தொடர்ந்து சுலபமாக வெற்றி பெற்றது என்றார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. வலிமையாக இருப்பதாக அண்ணாமலை எங்கேயும் கூறவில்லை. அவரது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது.
    • ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தற்போதைய சூழலில் நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை

    * அ.தி.மு.க.வை உடைக்க வேண்டிய அவசியம் பா.ஜ.க.விற்கு கிடையாது.

    * அ.தி.மு.க.வில் தற்போதைய சூழலில் எந்த பிளவும் இல்லை.

    * தி.மு.க. வலிமையாக இருப்பதாக அண்ணாமலை எங்கேயும் கூறவில்லை. அவரது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது.

    * ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

    * உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தது சாதாரணமானது.

    * அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பு பற்றிய தகவல் முழுமையாக எனக்கு தெரியாது.

    * அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

    * 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு பின் யார் ICU-வில் இருக்கிறார்கள் என்பது தெரியும் என்றார். 

    ×