என் மலர்

    மதுரை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முக்கிய குற்றவாளியான பிரபாகரன் வீட்டுக்கு போலீசார் சோதனை செய்ய சென்றனர்.
    • ஆர்.பி.உதயகுமார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட வே.சத்திரப்பட்டியில் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு பால்பாண்டி என்பவர் இரவு பணியில் இருந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் அதே பகுதியில் உள்ள கண்மாய் கரையில் மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபாகரன் வீட்டுக்கு போலீசார் சோதனை செய்ய சென்றனர்.

    அப்போது வீட்டில் அவர் இல்லாததால் அவரது தந்தையை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனை அறிந்த பிரபாகரன் ஆத்திரம் அடைந்தார்.

    தான் வீட்டில் இல்லாதபோது போலீசார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தனது தந்தையை மிரட்டி அழைத்து சென்றதாக கூறி பிரபாகரன் தனது கூட்டாளியுடன் நேற்று இரவு மது போதையில் வே.சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் பால்பாண்டியை மிரட்டியுள்ளார். பின்னர் அந்த போலீஸ்காரர் தனி அறைக்கு தப்பிச்சென்று உட்புறமாக பூட்டிக் கொண்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து போலீஸ் நிலையத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழித்தும், உடைத்தும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பினார்.

    சம்பவம் குறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயக்குமார் காவல் நிலையத்திற்கு செல்ல முயன்றபோது போலீசார் அவரை முத்துலிங்காபுரத்தில் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆர்.பி.உதயகுமார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீசார் முன்னாள் அமைச்சர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்தனர்.

    சம்பவம் குறித்து அறிந்து தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாட்டு மீன்களான ஜிலேபி,கட்லா,கெளுத்தி, குறவை, விரா மீன்கள் சிறிய, நடுத்தர மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை பிடித்தனர்.
    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிலோ கணக்கில் மீன்களை அள்ளிச்சென்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவில் அருகே உள்ளது பெரிய கண்மாய் என்று அழைக்கப்படும் சோழப்பேரரி கண்மாய் ஆகும்.

    மேலூர் பகுதி கண்மாய்களில் இது ஒரு பெரிய கண்மாயாகும். இங்கு பெரியார் பாசன நீர் தேக்கி வைக்கப்பட்டு திருவாதவூர் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களுக்கு தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகள் முடிவடைந்த பின்பு இங்கு மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கமாய் உள்ளது.

    அதேபோல் இந்த ஆண்டும் மீன்பிடி திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்று (14-ந்தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து திருவாதவூர், மேலூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மட்டுமல்லாது புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வேன்கள், பைக்குகள் ஆகியவற்றில் பெண்கள், சிறியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று நள்ளிரவு முதலில் கூடினர்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் கிராம முக்கியஸ்தர்கள் இங்குள்ள திரவுபதி அம்மன் கோவில் முன்பு சாமி கும்பிட்டு தாரை, தப்பட்டை, வான வெடிகள் முழங்க பெரிய கண்மாய்க்கு ஊர்வலமாய் வந்தனர். அங்கு கண்மாயில் வந்து வெள்ளை துண்டு வீசினர். அப்போது சுற்றி இருந்த மக்கள் போட்டி போட்டு கண்மாய்க்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, குத்தா, கூடை போன்ற மீன் பிடி சாதனைகளை பயன்படுத்தி ஏராளமான மீன்களை பிடித்தனர்.

    இதில் நாட்டு மீன்களான ஜிலேபி,கட்லா,கெளுத்தி, குறவை, விரா மீன்கள் சிறிய, நடுத்தர மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை பிடித்தனர். ஒவ்வொருவரும் சுமார் 5 கிலோவிற்கு அதிக மான மீன்களை பிடித்ததால் அவர்கள் உற்சாகம் அடைந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிலோ கணக்கில் மீன்களை அள்ளிச்சென்றனர்.

    இந்த மீன்பிடித் திருவிழா சமத்துவ மீன் பிடித்து விழாவாக ஜாதி மத பேதமின்றி நடைபெற்று வருகிறது. இங்கு பிடித்த மீன்களை இப்பகுதி மக்கள் விலைக்கு விற்பனை செய்யாமல் தங்கள் வீடுகளில் கொண்டு சென்று சமைத்து சாமி கும்பிட்டு தங்கள் உறவினர்களுக்கும் வழங்கி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம் வரும் ஆண்டுகளில் நல்ல மழை பெய்து இப்பகுதியில் விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாய் உள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை 2018-ல் தாக்கல் செய்தனர்.
    • துரை தயாநிதியின் சிகிச்சை குறித்தான முழுமையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதி கூறினார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பரபரப்பு புகார் எழுந்தது.

    இதில் தொடர்புடைய ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் 2012-ல் கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை 2018-ல் தாக்கல் செய்தனர். இந்த முறைகேடு தொடர்பாக சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவு தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

    பின்னர் துரை தயாநிதிக்கு சொந்தமான மதுரை, சென்னையில் உள்ள 25 நிலங்கள், கட்டிடங்கள், வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளைத் தற்காலிகமாக முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று மதுரை மாவட்ட சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.

    இந்த வழக்கில் இருந்து மன ரீதியான உடல்நல பிரச்சனை காரணமாக தன்னை விடுவிக்க கோரி துரை தயாநிதி தரப்பில் சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துரை தயாநிதியை நேரில் ஆஜர்படுத்தி அவரது மனநிலை குறித்து உறுதி செய்ய வேண்டுமென நீதிபதியிடம் முறையிட்டனர்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துரை தயாநிதியின் சிகிச்சை குறித்தான முழுமையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக மக்கள் முதல்வரின் பேச்சை கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள்.
    • எடப்பாடி மீது நாளுக்கு நாள் புகழும், செல்வாக்கும் அதிகரிப்பதால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார்.

    மதுரை:

    மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    குஜராத் அகமதாபாத்தில் விமான விபத்து நடந்ததற்கு அனைவரும் வேதனையில் உள்ளோம். 241 பேர் பலியான சம்பவத்தில் அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி குறித்த கேள்விகளை எங்களது பொதுச்செயலாளரிடம் கேளுங்கள். கூட்டணிஆட்சியா? அ.தி.மு.க. ஆட்சியா? என்பது குறித்து எங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் பேசியதும், தேர்தல் கூட்டணி குறித்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறியுள்ளார்.

    ஒரு முன்னாள் முதலமைச்சரை தரக்குறைவாகவும், அதனை கேட்பவரின் காதுகள் கூசும் அளவிற்கு முதல்வர் பேசியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் மீது மக்களிடத்தில் மதிப்பு மரியாதை இல்லை. இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். பொது விழாவில் ஒரு முதல்வர் தகுதியற்ற முறையில் பேசியது வன்மையாக கண்டிக்கக்கூடியது.

    தமிழக மக்கள் முதல்வரின் பேச்சை கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள். இந்த போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். எடப்பாடி மீது நாளுக்கு நாள் புகழும், செல்வாக்கும் அதிகரிப்பதால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார். மதுரையே அழகாக காட்சியளிக்க காரணம் அ.தி.மு.க. ஆட்சியின் பல்வேறு திட்டங்களும், 8000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்ததால் தான். அரசர் காலத்திற்குப் பிறகு அம்மாவின் ஆட்சியில் தான் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தார்.

    அமைச்சர் மூர்த்தி மேற்கு தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், வளர்ச்சி திட்டம் தொடர்பான பணிகள் செய்வது குறித்து நாங்கள் கவலைப்படுவதே இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு தெரியும். மேலும், மத்திய அரசின் திட்டங்களுக்கு தான் தி.மு.க. அரசு தனது ஸ்டிக்கரை ஒட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • "சாப்பிட்டுவிட்டு பேருந்தை ஓட்டலாமே?" என்று பயணி கேட்டார்.
    • "நேரமில்லை, இது எனக்குப் பழக்கம்" என்று பதிலளித்துள்ளார்.

    மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சென்னைக்கு 40 பயணிகளுடன் புறப்பட்ட ஆம்னி பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை ஓட்டிக்கொண்டே உணவருந்தும் அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    ஓட்டுநர் ஸ்டியரிங்கின் நடுவில் உணவு பார்சலை வைத்துக்கொண்டு சாப்பிட்டபடி பேருந்தை இயக்கியுள்ளார்.

    இதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு பயணி, "சாப்பிட்டுவிட்டு பேருந்தை ஓட்டலாமே?" என்று கேட்டதற்கு, ஓட்டுநர், "நேரமில்லை, இது எனக்குப் பழக்கம்" என்று பதிலளித்துள்ளார்.

    இந்தப் பொறுப்பற்ற செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்தினாலும், எத்தனை எத்தனை திசை திருப்பினாலும் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள்.
    • எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள்.

    மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

    தி.மு.க. அரசு வீட்டுக்கு போகும். எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள்.

    எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்தினாலும், எத்தனை எத்தனை திசை திருப்பினாலும் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள். எங்கள் பொதுச்செயலாளரும் தெளிவாக இருக்கிறார். நாங்களும் தெளிவாக இருக்கிறோம். நீங்களும் தெளிவாக இருக்கிறீர்கள்.

    ஆனால் யாருடைய அழுத்தத்தாலோ தெளிவு இல்லாதது போல கேள்வி கேட்கிறீர்கள். கேள்வி கேட்பதும், கேட்க சொல்பவர்களும், அழுத்தம் கொடுப்பவர்களும் வேண்டுமானால் தெளிவில்லாமல் இருக்கலாம். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

    2026-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும். இப்போது உள்ள முதலமைச்சர் வீட்டுக்கு போக வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பார்கள்.

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அவர் கூறினார்.

    தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் ஆர்.பி. உதயகுமார் சென்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அன்னதானம் வழங்கினார்.
    • முருகன் படத்திற்கு அதிமுக தொட்டினார்கள் பூஜை செய்தனர்.

    தமிழ்நாட்டின் பல்வேறு முருகன் கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

    இதனையொட்டி மதுரையில் பொதுமக்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அன்னதானம் வழங்கினார்.

    அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த முருகன் படத்திற்கு அதிமுக தொட்டினார்கள் பூஜை செய்தனர். பூஜையின்போது முருகனுக்கு அரோகரா என தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது செல்லூர் ராஜுவுக்கு அரோகரா என தொண்டர் ஒருவர் கோஷம் எழுப்பவே சட்டெனெ செல்லூர் ராஜு கோவம் அடைந்து இப்படி எல்லாம் கோஷமிட கூடாது என்று தொண்டரை கடிந்து கொண்டார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவல்துறை தரப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும்.
    • காவல்துறை மனுவை பரிசீலனை செய்யும் வரை முன்னேற்பாடுகள் செய்யலாம். பூஜை செய்யக் கூடாது

    இந்து முன்னணி சார்பில் வருகிற 22ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கு முன்னதாக சில நாட்கள் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு செய்ய அனுமதி கோரி முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும். காவல்துறை மனுவை பரிசீலனை செய்யும் வரை முன்னேற்பாடுகள் செய்யலாம். பூஜை செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், காவல்துறை சார்பில் அரசியலமைப்பு மற்றும் சட்டப்படி உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    விசாரணையின்போது பெங்களூரு ஸ்டேடியம் நிலச்சரிவு போன்ற அசம்பாவிதம் நடைபெற்றால் என்ன செய்வது என காவல்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    தமிழக இந்து முன்னணி மாநிலச் செயலாளர் முத்துக்குமார், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் தற்காலிக மாதிரி கோவில்கள் அமைக்கப்படுகின்றன.

    அவற்றில் வரும் 10 முதல் 22-ம் தேதி வரை காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலையில் 5 முதல் 7 மணி வரையும் பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும், 22-ம் தேதி ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் மற்றும் திருப்புகழ் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை அம்மா திடல் தனியார் பட்டா நிலம். அங்கு மாநாடு நடத்த சம்பந்தப்பட்டவரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு கட்சியினருக்கு மாநாடு மற்றும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கியை பயன்படுத்தவும் அனுமதி கோரி, மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

    ஆனால், அறுபடை வீடுகள் மாதிரி அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்தவும் அனுமதி மறுத்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து, முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் முத்துக்குமார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆயிரம் ஆண்டு பழமையான திருப்பரங்குன்றம் மலை” என்கிறார் அமித்ஷா.
    • பரங்குன்றம் என்பது மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் சொல்.

    மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "முருகனின் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என திமுக அரசு சொல்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டுவதிலேயே திமுக அரசு முனைப்பாக இருக்கிறது. . ஜூன் 22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கலந்து கொண்டு நமது வலிமையை காட்ட வேண்டும்" என்று விமர்சனம் செய்திருந்தார்.

    அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு மதுரை சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பான அவரது பதிவில், "ஆயிரம் ஆண்டு பழமையான திருப்பரங்குன்றம் மலை" என்கிறார் அமித்ஷா.

    பரங்குன்றம் என்பது மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் சொல். அதனை ஆயிரம் ஆண்டு என சுருக்குவதில் தான் சனாதனத்தின் சதி இருக்கிறது.

    சமஸ்கிருதத்தை பல்லாயிரம் ஆண்டு என்று சொல்லிக்கொண்டே தமிழை ஆயிரம் ஆண்டுக்குள் அடக்குவது தான் கீழடி துவங்கி திருப்பரங்குன்றம் வரை அவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக அரசு 100க்கு 100 சதவீதம் தோல்வி அடைந்த அரசு.
    • தமிழகத்தின் பெருமை கூறும் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்த மோடியை பாராட்டதது ஏன்?

    பெண்களுக்கு எதிரான குற்றங்களால் தமிழ்நாடு மலிந்து காணப்படுகிறது. தமிழ்நாட்டு முதல்வருக்கு இதைப் பற்றி எந்த அக்கறையோ, கவலையோ கிடையாது.

    2024-ல் பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றார். ஒடிசா, ஹரியானாவிலும் வென்றோம். மஹாராஷ்டிராவிலும் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

    2025ல் டெல்லி கெஜ்ரிவால் ஆட்சி முடிவுக்கு வந்து, 27 ஆண்டுக்குப் பிறகு பாஜக ஆட்சி. டெல்லி போல 2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி கண்டிப்பாக மலரும்.

    திமுக ஆட்சியில் எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் ஊழல் மயமாகிவிட்டது. மோடி தலைமையிலான மத்திய அரசு கொடுக்கும் பணத்தை திமுக அரசு மக்களுக்கு கிடைக்காமல் செய்கிறது.

    தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக அரசு 100க்கு 100 சதவீதம் தோல்வி அடைந்த அரசு.

    தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதத்தை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. தென் தமிழகத்திற்கு எதையுமே செய்யாமல் திமுக அரசு துரோகம் செய்கிறது.

    முருகனின் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என திமுக அரசு சொல்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டுவதிலேயே திமுக அரசு முனைப்பாக இருக்கிறது.

    தமிழ், தமிழ் எனக்கூறும் திமுக அரசு உயர்கல்வியை தமிழ் வழியில் கொண்டு சேர்க்காதது ஏன்?

    தமிழகத்தின் பெருமை கூறும் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்த மோடியை பாராட்டதது ஏன்?

    திமுக ஆட்சியை எப்படி அகற்றப்போகிறோம் என்ற சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாட்டிற்கு வந்து உங்களிடம் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்பதில் வருத்தம்.
    • வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமான ஒன்று.

    மதுரையில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மண்ணில் மீனாட்சி அம்மனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன்.

    ஜூன் 22ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தி தர வேண்டும்.

    தமிழ்நாட்டிற்கு வந்து உங்களிடம் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்பதில் வருத்தம்.

    அமித் ஷாவால் எங்களை தோற்கடிக்க முடியாது என முதலமைச்சர் சொல்கிறார். ஆனால், தமிழக மக்கள் அவர்களை தோற்கடிப்பர்.

    2026ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக- பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும். வரும் தேர்தலில் திமுக தலைமையிலான ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்.

    ஆபரேஷன் சிந்தூருக்கு தமிழகத்திலிருந்து வந்த ஆதரவு குரல் என்றும் மறக்க முடியாதது.

    பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை அவர்கள் நாட்டிற்குள்ளேயே புகுந்து அழித்தோம். பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ சென்று பயங்கரவாதிகளை தாக்கி அழித்தது நமது ராணுவம். பிரதமர் மோடியின் ஆட்சியில் ராணுவத்தில் தன்னிறைவான நிலை ஏற்பட்டு உள்ளது.

    வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமான ஒன்று. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

    டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை வீழத்தியது போல் திமுக ஆட்சியையும் வீழ்த்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய திட்டங்களுடன் கூடிய தேர்தல் வியூகத்தை அமித்ஷா தயார் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
    • அமித்ஷா இன்று மாலை ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மதுரை:

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதே சமயம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 10 இடங்களில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது. இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை தீவிர கள ஆய்வு மேற்கொண்டது.

    இதையடுத்து தமிழ்நாட்டில் 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை விருப்பம் தெரிவித்தனர். அதன்பேரில் பலகட்ட ஆலோசனை நடத்திய அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் டெல்லி சென்றபோது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    அதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி உருவாக வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் மாதம் 11-ந்தேதி தமிழகம் வந்த அமித்ஷா அந்த கூட்டணியை உறுதிப்படுத்தினார். மேலும் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்ற அமித்ஷா, அவர் அளித்த விருந்திலும் கலந்துகொண் டார். அதனை வரவேற்ற அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர்.

    இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், அதில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை குறிவைத்தும் மதுரையை மையப்படுத்தி மாநில கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை காய் நகர்த்தி வருகிறது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பா.ஜ.க.வுக்கு எதிரானது உள்பட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அவர்களுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்ட பா.ஜ.க., சட்டமன்ற தேர்தலுக்கு தாங்களும் ஆயத்தமாகி விட்டதை அறிவிக்கும் வகையில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று மதுரையில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பிரமாண்டமாக நடக்கிறது. ஒத்தக்கடை வேலம்மாள் திடலில் இன்று மாலை நடைபெறும் அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு தமிழ்நாட்டில் 2026-ல் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்து ஆலோசனை வழங்குகிறார்.

    முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு 10.30 மணியளவில் அமித்ஷா மதுரை வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்திர ராஜன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    இதையடுத்து மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்கி ஓய்வெடுத்த அமித்ஷா, இன்று  உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் மீண்டும் ஓட்டலுக்கு திரும்பிய அவர் பா.ஜ.க. மையக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.



    வழக்கமாக மையக்குழு கூட்டம் என்பது ஒருநாள் முழுவதும் நடைபெறும். ஆனால் குறுகிய காலத்தில் அமித்ஷா வந்துள்ளதால் குறைந்த நேரத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், மேலிட பார்வையாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன் னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன்,கே.பி.ராம லிங்கம், கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், கார்த்தியாயினி, பொன் பாலகணபதி, ஏ.பி.முருகானந்தம், கனகசபாபதி, வி.பி.துரைசாமி, எச்.ராஜா உள்ளிட்ட 22 பேர் பங்கேற்றுள்ளனர்.

    அப்போது தமிழகத்தில் அமைப்பு ரீதியாக பா.ஜ. க.வை பலப்படுத்துதல், அரசியல் ரீதியாக அதிரடியான சட்டமன்ற தேர்தல் வியூகம் வகுத்தல், அதற்கேற்றவாறு எந்தமாதிரியான முன்னெடுப்புகளை பா.ஜ.க. மேற்கொள்ள வேண்டும், அ.தி.மு.க.- பா.ஜ.க கூட்டணி அமைத்த பிறகு தற்போதைய அரசியல் சூழல் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா கேட்டு அறிந்தார்.

    2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகளை மையக்குழு உறுப்பினர்களுக்கு வழங்குகிறார்.

    மேலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், தென் மாவட்டங்களில் பா.ஜ.க. நல்ல வளர்ச்சி கண்டுள்ளதால் அங்கு கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுதல், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் மூலம் அங்குள்ள வாக்காளர்களின் தி.மு.க. வுக்கு எதிரான மனநிலையை பா.ஜ.க.வுக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

    பின்னர் மாலை 4 மணியளவில் ஒத்தக்கடை வேலம்மாள் திடலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு பேச உள்ளார். மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றி வியூகம் வகுத்து அதன் மூலம் ஆட்சியை பிடிக்க காரணமாக இருந்த அமித்ஷாவின் தமிழகம் வருகையும் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க.வினர் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்கள்.

    அதற்கேற்ப 2026 மிஷன் என்ற இலக்கை நிர்ணயித்து, தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வகையில் புதிய திட்டங்களுடன் கூடிய தேர்தல் வியூகத்தை அமித்ஷா தயார் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் இரண்டாம் இடத்தை 10 தொகுதிகளில் பெற்றதுடன், அதில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகளை கட்டாயம் வென்றாக வேண்டும், தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க. காலூன்ற வேண்டும் என்பதற்காக அமித்ஷா நேரடியாக களம் இறங்குகிறார்.

    மேலும் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப பா.ஜ.க. நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் வியூகம் வகுத்து அவர் பேச உள்ளார். தற்போது கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., அ.ம.மு.க., ஓ.பி.எஸ்.சின் அ.தி.மு.க. உரிமை மீட்புக்குழு ஆகியவற்றுடன் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளையும் ஒருங்கிணைக்க அமித்ஷா திட்டமிட்டு உள்ளார்.

    மேலும் அமித்ஷாவின் இந்த மதுரை பயணத்தின்போது பா.ஜ.க. மாநில நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து தேர்தலுக்கான வேலைகள் குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார். கட்சியின் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்தும் இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படுகிறது.



    மதுரை வருகை தந்துள்ள அமித்ஷா இன்று மாலை ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் மூலம் தென்மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் அவர்களுக்கான ஓட்டு வங்கியை அப்படியே அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு கொண்டு வரவும் திட்டமிட்டு அதற்கான வழிமுறைகளையும் அமித்ஷா இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த இருக்கிறார்.

    மதுரையில் இன்று அமித்ஷா பங்கேற்கும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 2026 சட்ட மன்ற தேர்தலுக்கான பிரசாரத்தின் தொடக்கம் என்றும், கட்சியினருக்கு புதிய ஊக்கம் கொடுப்பதாக அமையும் என்றும் கட்சியினர் தெரிவித்தனர்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம், விரகனூர் ரிங் ரோடு, மீனாட்சி அம்மன் கோவில், ஒத்தக்கடை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் வேலம்மாள் திடல் ஆகிய பகுதிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆகியோர் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ×