என் மலர்

    மதுரை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் 23 நாட்கள் உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • தற்போது பிரமாண்டமாக மேடை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மதுரை:

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. விக்கிரவாண்டியில் முதலாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய த.வெ.க. தலைவர் விஜய், பூத் கமிட்டி மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுகம் என்று பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.

    தமிழகத்தில் கோலோச்சிய அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மாநில மாநாடுகளை நடத்துவது வழக்கமான ஒன்று. தொண்டர்களின் பலத்தை காட்டுவதற்கும், மெகா கூட்டணி அமைக்கும் வகையிலும் இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி நடைபெறும் இதுபோன்ற மாநாடுகள் தேர்தல்களில் திருப்புமுனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    அந்த வகையில் முதல் தேர்தலை சந்திக்க இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற (ஆகஸ்டு) 25-ந்தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் நடைபெறும் என த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார். எத்தனையோ அரசியல் கட்சிகள் மாநில மாநாடுகளை நடத்தியிருந்தபோதிலும், இப்படியொரு மாநாட்டை யாரும் பார்த்திராத வகையில் மாநாட்டை நடத்துவதற்கான ஆலோசனைகளை விஜய் வழங்கியிருக்கிறார்.



    இந்த மாநாட்டிற்காக கடந்த மாதம் 16-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் பூமி பூஜை பந்தக்கால் நடப்பது, அன்றைய தினமே இதற்கு போலீசார் பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கக்கோரி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்தை சந்தித்து மனு அளித்தார்.

    இதையடுத்து மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் ஜோரூராக தொடங்கியது. வெளியூர்களில் இருந்து மாநாட்டு பந்தல், மேடை, ஆர்ச்சுகள் அமைப்பதற்கான உபகரணங்கள், பொருட்கள் லாரிகள் மற்றும் கண்டெய்னர்களில் வந்து இறங்கின. த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் 23 நாட்கள் உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிரமாண்டமாக மேடை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    20 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநாட்டிற்காக 506 ஏக்கர் பரப்பளவிலான இடம் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலம் செம்மைப்படுத்தப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. அதில் தற்போது மாநாடு மேடை மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் இடத்தில் தடுப்பு வேலி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்படுகிறது. அதேபோல் மாநாட்டிற்கு தலைமை தாங்கும் விஜய், நடந்து வந்து தொண்டர்களை சந்திக்கும் வகையிலும் மேடை உருவாகுகிறது.

    இந்த பணிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்குவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் தற்காலி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்து செய்து தரப்பட்டுள்ளது. இந்த பணிகளை உள்ளூர் நிர்வாகிகள் கண்காணித்து வருகிறார்கள். அடுத்த வாரம் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நேரில் வந்து பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்க இருக்கிறார்.

    இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் த.வெ.க. மாநாட்டிற்கான தேதியை மாற்ற பரிசீலிக்குமாறு மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை காரணமாக கொண்டு தெரிவித்துள்ளபோதிலும், திட்டமிட்டபடி 25-ந்தேதி மாநாட்டை நடத்துவதில் த.வெ.க.வினர் உறுதியாக உள்ளனர்.

    சமீப காலமாக தென் மாவட்டங்களை குறிவைத்து மதுரையில் அரசியல் மற்றும் ஆன்மிக மாநாடுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதே தென் மாவட்டங்களில் விஜய் தலைமையில் த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மூலம் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு 4-ந்தேதி களக்காடு, நாங்குநேரி வழியாக ரோடு-ஷோ நடத்த இருக்கிறார்.

    மதுரை:

    நெல்லையைச் சேர்ந்த காமராஜ் ஐகோர்ட்டு மதுரை அமர்வில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், நான் அ.தி.மு.க.வின் நெல்லை மாவட்ட அம்மா பேரவையின் மாவட்ட இணைச் செயலாளராக பொறுப்பில் இருக்கிறேன். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    இந்நிலையில் ஆகஸ்டு 4-ந்தேதி களக்காடு, நாங்குநேரி வழியாக 'ரோடு-ஷோ' நடத்த இருக்கிறார். ஆகவே அதை முன்னிட்டு படலையார் குளம் கிராமம் முதல் கடம்போடுவாழ்வு வரை 100 வரவேற்பு பிளக்ஸ் போர்டுகளை வைக்க அனுமதி கோரி நெல்லை களக்காடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

    ஆகவே ஆகஸ்டு 4-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக வரவேற்பு பிளக்ஸ் போர்டுகளை வைக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், களக்காடு, சாலைபுதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி.
    • கூட்டணி பற்றி எல்லாம் இப்போது முடிவு செய்து விட முடியாது.

    மதுரை:

    மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என்று சொல்லுகிறார்கள். இதுபோன்ற மக்களின் எழுச்சி எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது சுற்றுப்பயணத்திலும் பார்க்க முடிந்தது. அது போன்ற கூட்டம் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கும் திரளாக வருவதை பார்க்கும் போது அடுத்து அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி.

    இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு எட்டு மாதங்கள் உள்ள நிலையில், அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் பெரிய பெரிய கட்சிகள் யாரும் எதிர்பார்க்காத கட்சிகள் வரும் என்று பொதுச்செயலாளர் கூறியிருக்கிறார். எனவே கூட்டணி முக்கியமல்ல, மக்கள்தான் எஜமானர்கள். அவர்களது உணர்வுகளை வாக்குகளாக மாற்றுவதற்காக மிகச்சிறப்பான முறையில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. வேறு எந்த இயக்கத்திலும் இதுபோல பூத் கமிட்டி அமைக்கப்படவில்லை.

    எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. சீட் பேரம், தொகுதி பேரம் எல்லாம் நடக்கும். தேர்தல் நேரத்தில் தொகுதி உடன்பாட்டில் கூட கூட்டணி பிரியும். எனவே கூட்டணி பற்றி எல்லாம் இப்போது முடிவு செய்து விட முடியாது.

    1967-ல் பேரறிஞர் அண்ணா யாரும் எதிர்பாராத வகையில் கொள்கையில் முரண்பட்ட கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்தார். எனவே கூட்டணியை விட மக்களின் ஆதரவு முக்கியம். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் உங்களை எல்லாம் வழி நடத்தியவர் ஓ.பன்னீர் செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மூன்று முறை சந்தித்துள்ளார். அவரை பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா? என்று ஒரு நிருபர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி கேட்டார். அப்போது ஆவேசம் அடைந்த செல்லூர் ராஜூ, ஒரு தலைவரைப் பற்றி பாவமா இல்லையா என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது தவறானதாகும். அவர் மூன்று முறை அல்லது நான்கு முறை யாரையாவது சந்திக்கட்டும். அது பற்றி எல்லாம் இப்போது பேசுவதற்கு இல்லை என்று காட்டமாக பதில் அளித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை போலீசார் சிறையில் இருந்து அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • கொலை வழக்கிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கினர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீஸ்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இந்த வழக்கின் அப்ரூவராக மாறுகிறேன் என்று கூறி மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஏன் அப்ரூவராக மாற முடிவு செய்தார் என்று பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி முத்துக்குமரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை போலீசார் சிறையில் இருந்து அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் அவர் சார்பில் 17 பக்கங்களை கொண்ட பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகியோர்தான் அவர்களின் கடையில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து உள்ளனர்.

    பின்னர் தந்தை, மகன் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கினர். போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தின்போது அங்கு நான் இல்லை. இதனை உறுதி செய்யும் வகையில் இந்த வழக்கில் சாட்சி அளித்தவர்கள், சம்பவத்தின்போது நான் அங்கு இல்லை என்று தெரிவித்து உள்ளனர். எனவே இந்த கொலை வழக்கிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதன் காரணமாக நான் அப்ரூவராக மாறுவதற்கு அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு பிரமாண வாக்குமூலத்தில் கூறப்பட்டு இருந்தது.

    ஸ்ரீதரின் இந்த பிரமாண வாக்குமூலத்தை ஏற்கக்கூடாது என சி.பி.ஐ. மற்றும் ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பு வழங்குவதற்காக விசாரணையை வருகிற 4-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் ஆகியோர் இணைந்து இலவச வீடு திட்டத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
    • அரசின் திட்டங்களை பெற லஞ்சம் கொடுக்கும்படி ஏழை, எளியோரை கட்டாயப்படுத்துகிறார்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மற்றும் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் கிராம ஊராட்சியில் உள்ள மக்கள் பயன் பெற்றனர். இந்நிலையில் கல்வார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இணைந்து இலவச வீடு திட்டத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து உள்ளனர்.

    அதேபோல 100 நாள் வேலை திட்டத்தில் பங்கேற்று வேலை செய்யாதவர்கள் பெயரில் நிதி ஒதுக்கி ஏராளமான தொகையை ஊராட்சி செயலாளர் மோசடி செய்து உள்ளார். அரசின் திட்டங்களை பெற லஞ்சம் கொடுக்கும்படி ஏழை, எளியோரை கட்டாயப்படுத்துகிறார். இந்த மோசடி குறித்து அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கல்வார்பட்டி ஊராட்சி நிதியை முறைகேடு செய்த விவகாரத்தில் ஊராட்சி தலைவர், செயலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, கல்வார்பட்டி ஊராட்சியில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்புக்கு ஊராட்சி தலைவரும், செயலரும் ஆதரவு அளித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது போல பல்வேறு மோசடியில் அவர்கள் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    இது சம்பந்தமாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதாடினார். விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று அரசு வழக்கில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள், உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சி.பி.ஐ. அதிகாரிகள் போலீஸ்காரர்களை விசாரிப்பார்கள் என தெரிகிறது.
    • வழக்கு விசாரணையை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிறப்பு தனிப்பிரிவு போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களை காவலில் எடுக்க முடிவு செய்து, இது தொடர்பான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வந்த பின் சி.பி.ஐ. அதிகாரிகள் போலீஸ்காரர்களை விசாரிப்பார்கள் என தெரிகிறது.

    இந்த நிலையில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 5 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 5 போலீஸ்காரரின் காவலை ஆகஸ்டு 13-ந்தேதி நீட்டித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்புவதற்காக சட்டப்பூர்வமாக கொடிக்கம்பங்களை நிறுவி வருகின்றனர்.
    • ஐகோர்ட்டின் தடை உத்தரவினால் எங்கள் கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    மதுரை:

    தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சார்பில் தங்கள் கட்சி கொடியை அகற்றுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சவுந்தர், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த முழு அமர்வு, இந்த வழக்கில் தங்கள் கருத்துகளை தெரிவிக்க விரும்பும் கட்சிகள் ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதிக்குள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

    இது தொடர்பாக தமிழக அரசு ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும். அதுவரை கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்டு மாதம் 6-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இந்த உத்தரவின்பேரில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், மதுரை ஐகோர்ட்டில் ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழக வெற்றிக் கழகம் என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகும். மதச்சார்பற்ற சமூக நீதி என்பதுதான் எங்கள் கட்சியின் சித்தாந்தம். அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்புவதற்காக சட்டப்பூர்வமாக கொடிக்கம்பங்களை நிறுவி வருகின்றனர். ஆனால் ஐகோர்ட்டின் தடை உத்தரவினால் எங்கள் கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    குறிப்பாக எங்கள் கட்சி கடுமையான பாதிப்பை சந்திக்கிறது. எனவே கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் எங்கள் கட்சியையும் ஒரு தரப்பாக சேர்த்து, இதுதொடர்பாக எங்கள் தரப்பில் இருந்து சட்டப்பூர்வ கருத்துகளையும் தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    இதையடுத்து ஏற்கனவே நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என தெரிகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு விண்ணப்பித்தார்.
    • சர்வதேச போட்டிகளில் 7 நாடுகள் பங்கேற்க வேண்டும் என்பது தனிநபர் விளையாட்டு போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

    மதுரை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த சிவகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    என் மகள் ஹரினி, கடந்த மே மாதம் பிளஸ்-2 முடித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்றார். ஹரினி சூட்டிங்பால் விளையாட்டு வீரர். கடந்த பிப்ரவரி மாதம் நேபாளத்தில் நடை பெற்ற ஆசிய சூட்டிங்பால் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். கடந்தாண்டு மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற முதல் உலக கோப்பை சூட்டிங்பால் சேம்பியன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். இதனால் விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு விண்ணப்பித்தார்.

    பொதுவாக மருத்துவ மாணவர் சேர்க்கையில் விளையாட்டு பிரிவில் விண்ணப்பிப்பவர்களுக்கு சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றால் 500 மதிப்பெண், வெள்ளி பதக்கம் வென்றால் 450 மதிப்பெண், வெண்கல பதக்கம் பெற்றால் 400 மதிப்பெண், போட்டியில் பங்கேற்றால் 250 மதிப்பெண் வழங்கப்படும். இந்த அடிப்படையில் 2 சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்கள் அடிப்படையில் 900 மதிப்பெண்ணை என் மகளுக்கு வழங்கி இருக்க வேண்டும்.

    ஆனால் கடந்த 18-ந்தேதி நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் விளையாட்டு பிரிவில் ஒடிசா, காசியாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் பெற்றதற்காக 200 மதிப்பெண் வழங்குவதாகவும், சர்வதேச போட்டிகளில் பெற்றதற்கு மதிப்பெண் வழங்க, அந்தப் போட்டிகளில் குறைந்தபட்சம் 7 நாடுகள் பங்கேற்று இருக்க வேண்டும். அவ்வாறு பங்கேற்காததால் அந்த பதக்கங்களுக்கு மதிப்பெண் வழங்க முடியாது எனக் கூறப்பட்டது.

    சர்வதேச போட்டிகளில் 7 நாடுகள் பங்கேற்க வேண்டும் என்பது தனிநபர் விளையாட்டு போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். சூட்டிங்பால் போட்டி என்பது ஏழு பேர் அடங்கிய குழுவினர் விளையாடும் குழு விளையாட்டு ஆகும். இதற்கு 7 நாடுகள் விதி பொருந்தாது. எனவே சர்வதேச போட்டியில் தங்கம், வெண்கல பெற்ற பதக்கங்களுக்கு 900 மதிப்பெண் வழங்கி, விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ். சீட் வழங்கவும், என் மகளுக்காக ஒரு எம்.பி.பி.எஸ். இடத்தை காலியாக வைக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் கணபதி சுப்பிரமணியன் ஆஜராகி, மனுதாரர் மகள் சர்வதேச போட்டியில் பதக்கம் பெற்றதால் மத்திய அரசு பணிக்கு தகுதியானவர் என மத்திய அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது. அப்படியிருக்கும் போது 7 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச போட்டியில் பதக்கம் பெற்றதால் தான் மதிப்பெண் வழங்குவோம் என்பது சரியல்ல என்றார்.

    விசாரணை முடிவில் மனுதாரர் மகளுக்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றதற்காக 900 மதிப்பெண் அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 80 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
    • மாற்றங்கள் மக்களின் மனதில் இருந்து வந்தால் மட்டுமே இது போன்ற முயற்சிகள் பலனளிக்கும்.

    மதுரை:

    சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் தூய்மை நகரங்கள் பட்டியலில் மதுரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் கடைசி இடமான 40-வது இடத்தை பிடித்தது. இது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நகரின் தூய்மை பணிகளை மேம்படுத்தும் பணியில் மாநகராட்சி கவனம் செலுத்தி வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்பட்டு வருகின்றன. இது ஓரளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்ப டுத்தி வருவதாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்களின் பட்டியல் கடந்த 2024-ம் ஆண்டு தரவுகளைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் தற்போது மதுரை மாநகரில் தூய்மை பணிகளை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நகரில் குப்பைகள் கொட்டப்படும் இடங்கள் 1,152லிருந்து 749 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக குப்பைகள் பெறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதே போல், கட்டுமான பகுதிகளில் தூசியை குறைக்கும் பொருட்டு பச்சை நிற துணியை பயன்படுத்தாத கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ச்சியான குற்றங்களுக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. சமீபத்தில் கட்டுமான பகுதிகளில் பச்சை நிற துணியை பயன்படுத்துவதை மாநகராட்சி கட்டாயப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதே போல், மதுரையில் 80 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குப்பைகள் நிரம்பி வழியும்போது, அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்ற ஏதுவாகிறது. இதே போல் மாநகராட்சி ஊழியர்களின் பணிகளை கண்காணிக்க நகரம் முழுவதும் 200 கியூ.ஆர். கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. குப்பைகள் அதிகம் போடப்படும் இடங்களில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்பட்டு வருகின்றன. வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ இந்த கோலங்கள் போடப்படும் என்றார்.

    மாநகராட்சியின் இந்த முயற்சிகள் குறித்து நேதாஜி ரோட்டைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில், மாநகராட்சியின் இந்த முயற்சி ஓரளவுக்கு பயன் அளித்தாலும், முழுமையாக பயன் தரவில்லை என்பதே உண்மை. ரங்கோலி கோலங்கள் போடப்படும் இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவது குறைந்துள்ளது. எனினும் சிலர் அவற்றை மதிக்காமல் தொடர்ந்து குப்பைகள் போடப்படும் நிகழ்வுகள் தொடர்கின்றன. மாற்றங்கள் மக்களின் மனதில் இருந்து வந்தால் மட்டுமே இது போன்ற முயற்சிகள் பலனளிக்கும் என்றார்.

    இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், இந்த முயற்சி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அமல்படுத்தட்டது. அதே போன்ற முறை இங்கு முயற்சிக்கப்படுவது கண்டு மகிழ்ச்சி. எனினும் குப்பைகள் அகற்றப்படுவதை முறைப்படுத்தாமல் இது போன்ற முயற்சிகள் வீணாகவே முடியும். ஏனெனில் மதுரை மாநகராட்சியின் பல வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் பணி செய்வதில்லை. ஒரு வார்டுக்கு 5 பணியாளர்கள் அனுப்பப்பட்டால் அவர்களில் 2 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநாட்டிற்கு அனுமதி கோரி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர்.
    • 530 ஏக்கர் நிலம் மாநாட்டிற்காக வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளது.

    மதுரை:

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது.

    2-வது மாநாட்டை மதுரையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ந் தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் மாநாட்டுக்கான பூமி பூஜை கடந்த 16-ந்தேதி நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் சேர்ந்து முகூர்த்தகால் நட்டனர்.

    இதனை தொடர்ந்து, மாநாட்டிற்கு அனுமதி கோரி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர்.

    இந்தநிலையில், மாநாட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று மதுரை வந்தார். அவர், பாரபத்திக்கு சென்று பணிகளை பார்வையிட்டார்.

    இதனை தொடர்ந்து, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்தார். மாநாட்டுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வலியுறுத்தினார்.

    அப்போது, 530 ஏக்கர் நிலம் மாநாட்டிற்காக வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. இதில் 300 ஏக்கரில் மாநாடு நடைபெறும். மீதமுள்ள இடம் கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. 1½ லட்சத்திற்கும்மேல் தொண்டர்கள் வருவார்கள் என தெரிவித்ததாக தெரிகிறது.

    அப்போது போலீஸ் தரப்பில், மாநாடு நடைபெறும் தேதி ஆகஸ்டு 25 என முடிவு செய்து இருக்கிறீர்கள். ஆனால், 27-ந்தேதி விநாயகர் சதுர்த்தி வர இருக்கிறது. அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டி இருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளதா? என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

    அதற்கு புஸ்சி ஆனந்த் தரப்பில், நிர்ணயித்த தேதியில் மாநாடு நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம் எனக்கூறியுள்ளனர்.

    இதனால் குறிப்பிட்ட தேதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நடைபெறுமா? அல்லது தேதி மாற்றப்படுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேயருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்களும் கோஷம் எழுப்பினர்.
    • அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராகவும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் கமிஷனர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி சொத்துவரி முறைகேடு புகாரில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த 5 மண்டல தலைவர்கள் மற்றும் 2 நிலை குழு தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்திற்கு மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் கருப்பு சேலை அணிந்திருந்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் சோலைராஜா தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சண்முகவள்ளி, பைக்காரா கருப்புசாமி, ரூபிணி குமார், நாகஜோதி, ரவி, மாயத்தேவன் ஆகியோர் எழுந்து நின்று மேயர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் கிளம்பியது. இதனால் மாமன்ற கூட்டம் தொடங்கியதும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சோலை ராஜா தலைமையில் கூட்ட மன்ற அரங்கின் மையப்பகுதிக்கு வந்து மேயர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

    அப்போது மேயர் இந்திராணி பேசுகையில், இது மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டிய இடம். அ.தி.மு.க.வினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள், கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கே வந்து கபட நாடகம் ஆட வேண்டாம் என்று தெரிவித்தார்.

    மேயரின் பேச்சுக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மேயருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்களும் கோஷம் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர் கோஷம் எழுப்பிய அ.தி.மு.க. கவுன்சிலர்களை உடனடியாக வெளியேற்றும்படி மேயர் இந்திராணி மாமன்ற காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாமன்ற அறைக்கு வெளியே இருந்த போலீசார் உள்ளே வந்து அ.தி.மு.க. கவுன்சிலர்களை வெளியேற்றினர்.

    வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராகவும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். சொத்துவரி முறைகேட்டில் தொடர்புடைய மண்டல தலைவர்கள் பதவிகளை மட்டுமே ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மேயர் இந்திராணியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனால் அவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா தெரிவித்தார்.

    இதனிடையே மாநகராட்சி சொத்து வரி விவகாரத்தில் மண்டல தலைவர் பதவியை ராஜினாமா செய்து மேயரிடம் கடிதம் அளித்த மண்டல தலைவர்கள் வாசுகி, சுவிதா, பாண்டிச்செல்வி, சண்முக புவனேஸ்வரி, முகேஷ் சர்மா, நிலைகுழு தலைவர்கள் மூவேந்திரன், விஜயலட்சுமி ஆகியோரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் ஒப்புதல் அளித்த தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கியதால் தந்தை, மகன் உயிரிழப்பு.
    • லாக்-அப் டெத் மரணம் என வழக்குப்பதிவு செய்து காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜ்- பென்னிக்ஸ் ஆகிய தந்தை மற்றும் மகனை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில் இருவரையும் கொடுமையான முறையில் தாக்கியது தெரியவந்தது. இருவரும் லாக்-அப் மரணம் அடைந்ததாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், தான் அப்ரூவராக மாற அனுமதித்தால் காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும், உண்மையையும் கூறுவதாக, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது ஸ்ரீதர் அப்ரூவராக மாறுவதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோன்று கொலை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ×