என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.1.26 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.

    நேற்று மாலை 4 மணிக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து அரசு அலுவலகங்களில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

    மேலும் எம்.எல்.ஏ., எம்.பி. அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் இருந்த தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டன.

    மேலும் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையும் உடனடியாக தொடங்கியது. தேர்தல் நடத்தை விதிமுறைப்படி உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும். மேலும் வாக்காளர்களுக்கு வழங்கும் நோக்கில் எடுத்துச் செல்லப்படும் பரிசுப்பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள்.

    தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில்அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகளாக இருக்கும் கலெக்டர்கள் நேரடியாக களமிறங்கினர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை உடனடியாக வாகன சோதனையில் ஈடுபட உத்தரவு பிறப்பித்தனர்.

    இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் உதவியுடன் சோதனையை தொடங்கினர்.

    நகரின் முக்கிய சந்திப்புகளில் நின்று அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை மறித்து பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரும், துணை ராணுவ படையினரும் துப்பாக்கி ஏந்தியபடி நின்று பாதுகாப்பு அளித்தனர்.

    இரவு விடிய விடிய சோதனை நடந்தது. பல இடங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லப்பட்ட பணமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவை கருவூலகங்களில் ஒப்படைக்கப்பட்டன.

    தொடர்ந்து இன்று காலையிலும் பறக்கும் படை அதிகாரிகள் தங்கள் சோதனையை தீவிரப்படுத்தினர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, நாகர்கோவில் என பல இடங்களில் இன்று தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.1.26 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க 2,016 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று மாலை முதல் சோதனையை தொடங்கி உள்ளனர்.

    வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருந்தால் கொண்டு செல்லலாம். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று பறக்கும் படை அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளோம்.

    தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.1.26 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் எடுத்துச் செல்வோர் அதற் கான ரசீதுகளை வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனாலும் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம் அருகே இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வந்த பங்கஜ் என்பவர் பெரும் தொகையை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. சோதனையில் அவரிடம் ரூ.35 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.

    பறக்கும் படை அதிகாரிகள் அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்களை கேட்டபோது, பங்கஜிடம் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளின்படி அந்த 35 லட்சம் ரூபாயையும் அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 35 லட்சமும் பாதுகாப்பாக திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் திருப்பூர் குமரன் சாலையில் இன்று காலை பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக ரூ.6 லட்சம் பணம் இருந்தது.அதனை பொள்ளாச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கொண்டு வந்தார். அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    கோவை உக்கடம் பகுதியில் இன்று பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். ஒரு காரில் 25 சில்வர் தட்டுகள் இருந்தன. அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால் வாக்காளர்களுக்கு பரிசாக கொடுக்கும் நோக்கில் அவை கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என்ற நோக்கில் அவை பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவலூரில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து பெருந்துறையை நோக்கி தக்காளி பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு வேனை இன்று காலை தடுத்துநிறுத்தி சோதனை செய்தனர்.

    வேனில் இருந்த கர்நாடக மாநிலம் பசுவநாபுரத்தை சேர்ந்த மகாதேவ்(38) என்பவரிடம் ரூ.53,200 பணம் இருந்தது. பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

    பெரம்பலூர் வேப்பந்தட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, சேலத்தில் இருந்து சுவாமிமலை நோக்கி சென்று கொண்டிருந்த விவேகானந்தர் என்பவர் ஓட்டி வந்த காரை தணிக்கை செய்தபோது எந்தவித ஆவணங்களும் இன்றி அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை தோட்டக்கலை அலுவலர் கோகுல பிரியா தலைமையிலான பறக்கும் படையினர் பாளை தியாக ராஜ நகர் பகுதியில் வாகன சோதனை செய்தபோது அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து பாலாஜி என்பவர் காரில் வந்தார். அவரை சோதனை செய்தபோது அவரிடம் ரூ.1.40 லட்சம் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பணம் பாளை தாசில்தார் இசக்கி பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அரியலூர் மாவட்டம் இருங்கலா குறிச்சி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் தனது காரில் ஆத்தூர் நோக்கி சென்றார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அவரது காரை நிறுத்தி பறிக்கும் படையினர் சோதனை நடத்தினார்கள்.

    வேல்முருகன் கொண்டு வந்த பையில் ரூ.12 லட்சம் இருப்பது தெரிய வந்தது. அந்த பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ராஜேஷ் இன்று காலை ஆரணி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக லோடு ஆட்டோவில் வந்தார். அப்போது அவரிடம் ரூ. 75 ஆயிரத்து 500 இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் வளையாத்துரை சேர்ந்த புகழ் இன்று காலை தனது மோட்டார்சைக்கிளில் ஆரணி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்பங்தாங்கள் கூட்ரோடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் புகழை நிறுத்தி சோதனை செய்தனர். அவரது பையில் ரூ.1 லட்சம் இருந்தது. ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜூஜூ வாடி சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். அருகில் உள்ள கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்தல் விதிமுறைக்குட்பட்டு எந்தவித பொருட்களையும் எடுத்து வர அனுமதிக்கப்படுவதில்லை.

    இரு மாநிலங்களுக்கும் இடையே இயக்கப்படும் கார் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களையும் நிறுத்தி சோதனை நடத்திய பின்னரே போலீசார் அனுமதித்து வருகின்றனர்.

    சென்னையில் பறக்கும் படையினருடன் இணைந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் உள்ள 12 துணை கமிஷனர்கள் தலைமையில் இந்த வாகன சோதனை நடைபெற்றது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று காய்கறி ஏற்றி சென்ற லாரி, வேன், மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் பறக்கும் படை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் சென்னையில் பல இடங்களில் கார்கள் மற்றும் மினி லாரிகளை மடக்கி சோதனையில் ஈடுபட்டனர். பார்சல் கொண்டு சென்றவர்களிடம் என்ன பார்சல் என்று பரிசோதனை செய்தே அனுப்பினார்கள்.

    மேலும் மோட்டார் சைக்கிள்களையும் வழி மறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிள்களில் உள்ள பெட்டி, இருக்கைகளுக்கு அடியில் பொருள் வைக்கும் இடம் ஆகியவற்றையும் திறந்து பார்த்தனர்.

    சென்னை மாநகர பகுதிகள், தாம்பரம், ஆவடி மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பறக்கும் படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இனிவரும் நாட்களில் சோதனை தீவிரம் அடைய உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். உரிய ஆவணம் கொடுத்து பணத்தை பெற்று செல்லலாம்.

    அதிக அளவில் பணம் எடுத்து சென்றால் வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பார்கள். இதே போல் வியாபாரிகள் நகை, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கி செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவைகள் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிளஸ்-2 மாணவி கொலை சம்பவம் குறித்து அறிவியல் பூர்வமான விசாரணையை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது.
    • மாணவி கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரபாண்டியனை விசாரணை அதிகாரியாக நியமிக்கிறோம்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆ.குமாரபுரத்தை சேர்ந்த வக்கீல் மாரீஸ்வரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் பிளஸ்-2 மாணவி கடந்த 10-ந்தேதி மாயமான நிலையில், 11-ந்தேதி உடலில் படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். மாணவி கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், விசாரணையை முறையாக நடத்தவும் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும், மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், இந்த கொலை வழக்கின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதியை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு பிளஸ்-2 மாணவி கொலை சம்பவம் குறித்து அறிவியல் பூர்வமான விசாரணையை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ் குமார், ஜோதிராமன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி வாதிடுகையில், குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றார்.

    இதற்கிடையே மாணவியின் பெற்றோர் சார்பில் ஆஜரான வக்கீல், மாணவி இறப்பு விவகாரத்தில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். அப்போது நீதிபதிகள் இந்த விவகாரத்தை பொருத்த அளவில் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் சம்பந்தமில்லாத நபர்களை கைது செய்து விடுவார்கள் என்றனர்.

    பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அவர்களுடைய வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவாக போலீசார் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மாணவி கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரபாண்டியனை விசாரணை அதிகாரியாக நியமிக்கிறோம். இந்த விசாரணை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் தொடர்ந்து மாணவி கொலை வழக்கை இந்த கோர்ட்டு தீவிரமாக கண்காணிக்கும் என்று உத்தரவிட்டு, ஏப்ரல் 2-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்கள் ஓய்வில் இருந்தேன்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    கூட்டத்தில் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மு.பெ.சாமிநாதன் மற்றும் எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்கள் ஓய்வில் இருந்தேன். இப்போது குணம் அடைந்து விட்டேன். இதனால் கட்சிப் பணியையும் தொடங்கிவிட்டேன். வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 28 மாதங்கள் கழித்து தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் எனக்கூறி மகளிர் உரிமைத்தொகை கொடுத்துள்ளார்.
    • விளாத்திகுளம் சம்பவத்தில் மெத்தனமாக இருப்பது ஏன்?.

    கோவை:

    கோவையில் அ.தி.மு.க. சார்பில் நடந்த மகளிர் தின நிகழ்ச்சியில் நடிகை கவுதமி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறுதிவரை பெண்களுக்காகவே வாழ்ந்தார்.

    ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறார். இதற்கு சாட்சி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராடிய பின்னர் 28 மாதங்கள் கழித்து தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் எனக்கூறி மகளிர் உரிமைத்தொகை கொடுத்துள்ளார்.

    ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். மு.க.ஸ்டாலின் தனது ஆட்சி முடியும் தருவாயில் கொடுத்துள்ளார். அவர்களுக்கு வாக்குரிமை வந்துவிட்டது என்பதற்காகத் தான் இப்போது கொடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விளாத்திகுளம் வன்கொடுமை, கொலை சம்பவத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் எதுவும் சொல்ல முடியும் என்று கனிமொழி எம்.பி., கூறியிருப்பது மனிதத் தன்மையற்றது.

    பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஒரு ஆறுதல் கூட சொல்ல முடியாத நீங்கள் எப்படி உங்களைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும். கரூர் சம்பவத்தில் இரவோடு இரவாக அறிக்கை தந்தவர்கள், விளாத்திகுளம் சம்பவத்தில் மெத்தனமாக இருப்பது ஏன்?.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிகப்பெரிய பெருமை என்னவென்றால், போதைப்பொருள் பரவலால் இந்தத் தலைமுறையையும், அடுத்த இரண்டு தலைமுறைகளையும் நாசமாக்கி அழித்ததுதான்.

    வரும் சட்டசபை தேர்தலில் எத்தனை முனை போட்டி இருந்தாலும், அது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க இடையிலான நேரடிப் போட்டியாகவே இருக்கும். மற்றவர்கள் இடையில் வந்த 'தொல்லைகள்' போன்றவர்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விளம்பரம் தேடுவதிலேயே தான் இந்த ஆட்சியினர் குறிக்கோளாக உள்ளனர்.
    • போனமுறை எத்தனையோ பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர்

    கோவை:

    கோவையில் அ.தி.மு.க. சார்பில் நடந்த மகளிர் தினவிழாவில் நடிகை விந்தியா பேசியதாவது:-

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஞாபகம் இருக்கிற அளவுக்கு இந்த 5 ஆண்டுகளில் நாங்கள் சாதனை செய்துள்ளோம் என மைக்கிலேயே மேகி கிண்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    அப்படி என்ன சாதனைகள் செய்து விட்டார் என்று யோசித்து பார்த்தேன். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகளில் எந்த அரசும் 5 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி கடன் வாங்கியது இல்லை. ஆனால் 5 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி கடன் வாங்கியது தான் தி.மு.க அரசின் சாதனை.

    காமராஜர் காலத்தில் இருந்து எடப்பாடியார் காலம் வரையிலான ஆட்சியில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று படித்தனர். ஆனால் இந்த 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மாணவர்கள் போதையில் சுற்றி கொண்டு குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுதான் இந்த தி.மு.க அரசின் சாதனை.

    இதுபோன்ற சாதனைகள் செய்துள்ள பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கே உண்டு. இதற்கு மேல் தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க. இருக்கும். ஆனால் தமிழ்நாடு இருக்காது.

    தி.மு.க. பல்லு முளைக்காத குழந்தை முதல் பல்லு போன மூதாட்டி வரை யாருக்கும் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக முதலமைச்சர் கூறுகிறார். வெல்லும் பெண்கள் என்ற பெயரில் வெட்கமே இல்லாமல் இந்த ஆட்சியினர் விளம்பரம் தேடுகின்றனர். விளம்பரம் தேடுவதிலேயே தான் இந்த ஆட்சியினர் குறிக்கோளாக உள்ளனர்.

    இன்று தி.மு.க ஆட்சியில் இருப்பதற்கு காரணம் பெண்கள் தான். ஆனால் அந்த பெண்களுக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.

    போனமுறை எத்தனையோ பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர். இப்பவும் கட்டு, கட்டாக, பொய்களை தூக்கி கொண்டு வருவார்கள். யாரும் அவர்களை நம்பாதீர்கள். தி.மு.க.வினர் உண்மையான விஷயங்களை எப்போதும் சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு அது தெரியாது. நேருக்கு நேர் நின்று சண்டை போடுவதற்கு தி.மு.க.வுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தெரியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக அரசியல் களத்தில் ஒரு மாபெரும் புயலாக உருவெடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
    • தம்பி.. உங்கள் தாத்தா காலத்து கற்பனைத் கதைகளை சினிமா திரைக்கதைக்கு வேண்டுமானால் பயன்படுத்தலாம்.

    தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "கல்லாப் பெட்டி" கனவுகளும்...

    கற்பனைப் போர் வீரர்களும்!

    தமிழக அரசியல் களத்தில் ஒரு மாபெரும் புயலாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    சில ஊடகங்கள் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கிற்காக, கற்பனைக் கதைகளை எழுதி "உண்மைக்குப் புறம்பான" செய்திகளைப் பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    முன்னர் இதேபோல் பவன் கல்யாண் அவர்களை நம்மோடு தொடர்பு செய்து வதந்திகள் கிளப்பப்பட்டன. "அவர் பேசிவிட்டார் கைகோர்த்துவிட்டார்" என்று "வாடகை வியாபாரி" ஒருவர் பரப்பிய பொய்செய்தியை வைத்து ஊடகங்கள் ஒப்பாரி வைத்தன. ஆனால், பவன் கல்யான் அவர்களே ஒரு நேர்காணலில், "நான் இவர்களுடன் பேசி இருபது ஆண்டுகள் ஆகிறது" என்ற உண்மையை உடைத்தபோது, வதந்தி பரப்பியவர்களின் முகத்திரை கிழிந்தது.

    மீண்டும் அதே 'பழைய ஸ்கிரிப்ட்டை' அரங்கேற்ற நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது. தன்மானத்தை விற்று, சில "கல்லாப் பெட்டி" முதலாளிகளின் லாபத்திற்காகச் செய்திகளைச் சமைக்கும் சில எழுதுகோல்களுக்கு ஒன்று புரியவில்லை..

    தம்பி.. உங்கள் தாத்தா காலத்து கற்பனைத் கதைகளை சினிமா திரைக்கதைக்கு வேண்டுமானால் பயன்படுத்தலாம், அரசியலுக்கு இனி எடுபடாது. பொய்ச் செய்திகளைப் பரப்பித் தொண்டர்களைக் குழப்பலாம் என்று கணக்கு போட்டால், அது உங்கள் கணக்கைத் தான் முடித்து வைக்கும்.

    போட்டிக்கு என்று சில "Virtual Warriors" உங்களை குறித்து இதே போல சில செய்திகளை சிறப்பாக பரப்பினால்??? நீங்கள் தாங்க மாட்டீர்கள். தமிழக வெற்றிக் கழகத்தை குறித்து போலி செய்திகளை பரப்பும் போலி ஊடகங்கள் தானாகவே "ஜோசியம்" பார்ப்பதை நிறுத்துங்கள். சட்டம் ஒழுங்கு சீரழிவை திசைத்திருப்ப இப்படி பொய் செய்தி பரப்புவது முற்றிலும் தவறு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தகுந்த விழிப்புணர்வு அளிக்கப்படும்.
    • தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தல் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தகுந்த விழிப்புணர்வு அளிக்கப்படும்.

    * 2,106 பறக்கும் படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

    * வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்ட 7 நாளில் 5 நாள் தான் மனுத்தாக்கல் செய்ய முடியும். மற்ற 2 நாள் விடுமுறை நாட்கள்.

    * உரிய ஆவணம் இருந்தால் பணம் பறிமுதல் செய்யப்படாது. பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாது.

    * நகை வாங்க கொண்டு செல்லப்படும் பணம் உங்களுடையது தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

    * தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கரூர் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்தது.
    • 3-வது முறையாக நேற்று விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.

    த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அவர் கரூருக்கு சென்றார். அங்கு வாகனத்தின் மேற்கூரையில் நின்று பேசினார். அவரை பார்ப்பதற்காக அங்கு பெருங்கூட்டம் கூடியிருந்தது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள்.

    நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து முதலில் தமிழக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தியது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்தது.

    இந்த சம்பவத்துக்கு காரணம் பாதுகாப்பு குறைபாடுகள் என்று தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் சொல்லப்பட்டதால் போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி, 2-வது முறையாக ஜனவரி 19-ந்தேதி, 3-வது முறையாக நேற்று விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். நேற்று விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் கரூர் வழக்கு விசாரணைக்கு தமிழ்நாட்டில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி வழங்குமாறு விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் காலம் என்பதால் அடிக்கடி டெல்லி வந்து செல்வதில் சிரமம் இருக்கிறது. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நடந்த 3 விசாரணையிலும் சட்டத்திற்கு உட்பட்டு முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளதாகவும், வேட்பாளர் தேர்வு, பிரசாரம் என பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் விசாரணைக்கு ஆஜராவதை சிபிஐ பரிசீலிக்க வேண்டும் என விஜய் தரப்பு கோரிக்கை மனு வழங்கி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

    தங்கம் விலை கடந்த 10, 11-ந்தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், 12, 13, 14-ந்தேதிகளில் விலை குறைந்து காணப்பட்டது.

    கடந்த 13-ந்தேதி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும், 14-ந்தேதி கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 760-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 80 -க்கும், நேற்று ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 760-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 80 -க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.276-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:

    15-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,080

    14-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,080

    13-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    12-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,760

    11-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:

    15-03-2026- ஒரு கிராம் ரூ.280

    14-03-2026- ஒரு கிராம் ரூ.280

    13-03-2026- ஒரு கிராம் ரூ.290

    12-03-2026- ஒரு கிராம் ரூ.290

    11-03-2026- ஒரு கிராம் ரூ.300

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாற்றத்தை கொண்டு வரக்கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது.
    • தேர்தல் அறிவிப்புக்கு பிறகு மக்கள் இவ்வளவு அதிகமாக ஆர்ப்பரித்து வருவது இதற்கு முன் பார்த்ததில்லை.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்லியில் நடந்த சி.பி.ஐ. விசாரணையில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் உரிய பதிலை அளித்துள்ளார்.

    முதல்-அமைச்சராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்தையும் விட்டு மக்கள் பணிக்காக விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.

    தற்போது அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள். இது தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புவதையே காட்டுகிறது.

    மாநிலத்தில் சட்டம் -ஒழுங்கு நிலைமை சரியாக இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழலே நிலவுகிறது.

    தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற மன நிலையில் மக்கள் உள்ளனர். அந்த மாற்றத்தை கொண்டு வரக்கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது.

    தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் சிறந்த வேட்பாளர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் உள்ளனர்.

    தமிழக வெற்றிக்கழகம் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தமிழக வெற்றிக்கழகம் என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்தால் விஜய்க்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் வருகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் பதிலளித்து கூறும்போது, விஜய் முதல்-அமைச்சராகவே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்து உள்ளார். துணை முதல்-அமைச்சர் என்ற பேச்சுக்கே இடமில்லை.

    தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு மக்கள் இவ்வளவு அதிகமாக ஆர்ப்பரித்து வருவது இதற்கு முன் பார்த்ததில்லை என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன.
    • தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் தமிழ் நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப புகட்டுவார்கள்.

    சென்னை:

    மக்களை காக்க வேண்டிய போலீஸ் அதிகாரி களே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது கண்டிக்கத்தக்கது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் உள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல் படையின் நான்காம் படைப்பிரிவில் பெண் போலீசாருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அதன் கட்டளையர் (கமாண்டண்ட்) செந்தில்குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். பெண்கள் உள்ளிட்ட மக்களை காக்க வேண்டிய போலீஸ் அதிகாரிகளே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது கண்டிக்கத்தக்கது.

    கண்காணிப்பாளர் நிலை அதிகாரியான செந்தில் குமார் மீது 45 வயது பெண் போலீசாரை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல புகார்கள் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீது விசாரணை நடத்துவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இப்போது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு உடந்தையாக இருந்த பெண் உதவி ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து பாலக்காடு செல்லும் அரசுப் பஸ்சில் கோவைக்கு பயணிக்கும்போது பாலியல் தொல்லை கொடுத்த போலீசாரை கல்லூரி மாணவி ஒருவர் காலணியால் அடித்த நிகழ்வு நடந்திருக்கிறது. பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நடமாட வேண்டும் என்றால் அதற்கு காவல்துறைதான் கவசமாக இருக்க வேண்டும். ஆனால், வேலியே பயிரை மேய்வதை போல காவல்துறையினரே பாலியல் தொல்லை கொடுத்தால் பெண்கள் நடமாட முடியாத நிலை உருவாகி விடும். தமிழ்நாட்டில் இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

    தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து விட்டன. இதற்கு காரணம் தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கட்டுப்படுத்தப்படாததும் தான். இதற்கெல்லாம் காரணமான தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் தமிழ் நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×