என் மலர்

    சென்னை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக முதலமைச்சருக்கு உடல் நலம் சரியில்லை, அதனால் நலம் விசாரிப்பது வழக்கம்.
    • ராமதாஸ் இருக்குமிடம்தான் பாட்டாளி மக்கள் கட்சி.

    பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    இதுகுறித்து ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழக முதலமைச்சரிடம் நலம் விசாரித்தேன். அவர் நன்றாகவே இருக்கிறார். மருத்துவரிடமும் விசாரித்தேன். அவர் விரைவில் குணமடைவார். குணமடைய வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக முதலமைச்சருக்கு உடல் நலம் சரியில்லை, அதனால் நலம் விசாரிப்பது வழக்கம். இதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை.

    எப்படி ராமன் இருக்குமிடம் சீதைக்கு அயோத்தியோ அப்பதுதான், ராமதாஸ் இருக்குமிடம்தான் பாட்டாளி மக்கள் கட்சி.

    பொதுக்குழுவில், அழைப்பு விடுப்பது குறித்து கட்சி தீர்மாணிக்கும். உரியவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
    • பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 9 ஆம்தேதி (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் (Confluence) அரங்கில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை பல்கலையில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் வசந்தி தேவி.
    • 2002- 2005ஆம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி இருந்துள்ளார்.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான கல்வியாளர் வசந்தி தேவி (87) சென்னையில் காலமானார்.

    சென்னை பல்கலையில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் வசந்தி தேவி.

    1973ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றவர் வசந்தி தேவி

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தராக 1992- 1998 வரை வசந்திதேவி இருந்துள்ளார்.

    2002- 2005ஆம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி இருந்துள்ளார்.

    2017இல் வாழ்நாள் சாதனையாளருக்கான சக்தி விருதை வென்றவர் வசந்தி தேவி.

    2016ஆம் ஆண்டில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து வசந்திதேவி போட்டியிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொலைபேசியில் பேசிய நிலையிலும் வெளியேறும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்துள்ளார்.
    • முதல்வரை பன்னீர்செல்வம் சந்தித்தது தொகுதி அல்லது சொந்த பிரச்னைக்காக இருக்கலாம்.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

    இதுதொடர்பாக கேள்வி கேட்ட செய்தியாளர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தே.ஜ.கூட்டணியில் இருந்து வெளியேறிய பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். அந்த நிலையிலும் வெளியேறும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்துள்ளார்.

    பன்னீர் செல்வம் வெளியேறியது சொந்தப் பிரச்னையா அல்லது வேறு காரணமா எனத் தெரியவில்லை. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டால் வரும் 26ம் தேதி பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன்.

    முதல்வரை பன்னீர்செல்வம் சந்தித்தது தொகுதி அல்லது சொந்த பிரச்னைக்காக இருக்கலாம். இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை. அது தவறான கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனசாி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • 11.8.2025 முதல் 23.8.2025 வரை 3ம் கட்டமாக அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனசாி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K பழனிசாமி அவர்கள், 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு 11.8.2025 முதல் 23.8.2025 வரை மூன்றாம் கட்டமாக, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சட்டமன்றத் தொகுதி வாரியாக, புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம் தொடர் பிரச்சார் சூராவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அதன்படி, 11.8.2025- கிருஷ்ணகிரி மேற்கு, 12.8.2025- கிருஷ்ணகிரி கிழக்கு, 13.8.2025- திருப்பத்தூர், 14.8.2025- திருப்பத்தூர், வேலூர் புறநகர், 15.8.2025- திருவண்ணாமலை மத்தியம், திருவண்ணாமலை வடக்கு, 16.8.2025- திருவண்ணாமலை தெற்கு,

    திருவண்ணாமலை கிழக்கு, 18.8.2025- திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை மத்தியம், வேலூர் புறநகர், 19.8.2025-,

    வேலூர் மாநகர், 20.8.2025-ராணிப்பேட்டை மேற்கு, ராணிப்பேட்டை மேற்கு, ராணிப்பேட்டை கிழக்கு, 21.8.2025- காஞ்சிபுரம், 22.8.2025- செங்கல்பட்டு மேற்கு, செங்கல்பட்டு கிழக்கு, 23.8.2025- சென்னை புறநகர், செங்கல்பட்டு கிழக்கு.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுய விளம்பரத்திற்காக அல்ல என்பதை இனியாவது உணரவேண்டும்.
    • நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்கி நீக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் திட்டமா, கட்சி விளம்பரமா?

    நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்!

    தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, கட்சி விளம்பர பாணியில் "ஸ்டாலின்" பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்ற தீர்ப்பை வழங்கியதன் மூலம், மக்கள் பணத்தில் திமுக

    அரசு செய்யும் வெற்று விளம்பரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    அஇஅதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் அவர்கள் தொடர்ந்த இவ்வழக்கில் கிடைத்த இந்தத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது.

    மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும் நலத்திட்டங்களில் எல்லாம் "ஸ்டாலின்" என்று தனது பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு திட்டங்கள் மக்கள் நலனை மேம்படுத்துவதற்குதானே தவிர, சுய விளம்பரத்திற்காக அல்ல என்பதை இனியாவது உணரவேண்டும்.

    மேலும், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பொதுமக்கள் வரிப்பணத்தில் இயங்கும் திட்டங்களுக்கு "உங்களுடன் ஸ்டாலின்", "நலம் காக்கும் ஸ்டாலின்" என்று விளம்பர அரசியலை மனதில் வைத்து சூட்டிய பெயரை உடனடியாக நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்கி நீக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒவ்வொன்றும் 6000 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
    • சேலம் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 19.05.2023 அன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்து, அதனை விரைவில் எய்திடும் வகையில் அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

    2000-ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். இது மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மாபெரும் வளர்ச்சி பெற வித்திட்டது.

    அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி' என்பதை முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் விதமாக, மதுரை மாநகரில் ரூ.314 கோடி மதிப்பீட்டில், 5.34 லட்சம் சதுரடி கட்டுமான பரப்பளவுடனும், திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் ரூ.403 கோடி மதிப்பீட்டில், 5.58 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவுடனும், புதியடைடல் பூங்காக்களை நிறுவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 18.02.2025 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

    இவற்றின் கட்டுமானப்பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் நடைபெற்று வருகின்றன. மேலும், 5.57 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவில், 21 தளங்களுடன் கட்டப்பட்ட பட்டாபிராம் டைடல் பூங்கா, முதலமைச்சரால் 22.11.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஓசூரில் ரூ.400 கோடி செலவில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் ஒவ்வொன்றும் 6000 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

    இவை மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புத்தொழில்களை ஆதரிக்கவும், டைடல் நியோ லிமிடெட் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தின் மூலம் 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி கட்டுமான பரப்பளவுடன் மினி டைடல் பூங்காக்களை அமைக்க அரசு முடிவெடுத்து, விழுப்புரம் மற்றும் திருப்பூர் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 24.06.2022 அன்றும், வேலூர் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 18.02.2023 அன்றும், தூத்துக்குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 19.05.2023 அன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

    அவற்றில் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று விழுப்புரம் மினி டைடல் பூங்கா 17.02.2024 அன்றும், தஞ்சாவூர் மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்கள் 23.09.2024 அன்றும், தூத்துக்குடி மினி டைடல் பூங்கா 29.12.2024 அன்றும் முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்டன. திருப்பூர், வேலூர் மற்றும் காரைக்குடி மினி டைடல் பூங்காக்களின் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவை விரைவில் செயல்பட துவங்கும். மேலும், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வடி வமைப்பு பணிகள் முடிவுற்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளது.

    அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலையில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை, பெரும்பாக்கத்தில் 6.94 கோடி ரூபாய் செலவில் அழகுப்படுத்தப்பட்ட பூங்கா மற்றும் வில்லிவாக்கம், பாடி, வடபழனி ஆகிய இடங்க ளில் 11.50 கோடி ரூபாய் செலவில் மேம்பாலங்களின் கீழ் அழகுபடுத்தும் பணிகள் ஆகிய 4 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்து, 91.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 முதல்வர் படைப்பகங்கள் உள்ளிட்ட 26 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர் ரா. ராஜேந்திரன் சந்தித்து, தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு புதுடெல்லியில் 3.7.2025 அன்று நடைபெற்ற விழாவில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்று, கள்ளக்குறிச்சி-2 மற்றும் அரூர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் லாப பங்கீட்டு ஈவுத்தொகையாக 22 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கில், குண்டாறு அணை, ஏலகிரி, பூண்டி நீர்த்தேக்கம், முத்துக்குடா கடற்கரை மற்றும் மதுரை ஓட்டல் தமிழ்நாடு வளாகம் ஆகியவற்றில் 18 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகளையும், அருங்காட்சியக துறை சார்பில், சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் 6 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக் கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்ட மைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்திற்கும் சென்னை-இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகம் முழுவதும் உள்ள பூத் முகவர்கள் விவரம் புகைப்படத்தோடு பிரத்யேக செயலியில் இணைக்கப்பட்டுள்ளது.
    • கட்சித் தலைவர் விஜய் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் வீடியோ காலில் பேசி ஆலோசனை செய்கிறார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்காக 'மை டி.வி.கே.' என்ற பிரத்யேக செயலியை த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 30-ந்தேதி அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு செயலி மூலம் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் கட்சித் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுமார் 69 ஆயிரம் பூத் முகவர்களை நியமனம் செய்துள்ளார்.

    பூத் கமிட்டி உறுப்பினர்கள் தினந்தோறும் அந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று த.வெ.க. கொள்கைகள் மற்றும் வருங்கால முதல்வர் வேட்பாளர் விஜய் என்பதையும் மக்களிடையே பிரசாரம் செய்து வருகின்றனர். இது மட்டுமின்றி தொகுதியில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகளையும் நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரச்சனைகளை தீர்க்க கோரி மனு செய்து வருகின்றனர்.

    தீர்க்கப்படாதபட்சத்தில் த.வெ.க. சார்பில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பூத் முகவர்கள் விவரம் புகைப்படத்தோடு பிரத்யேக செயலியில் இணைக்கப்பட்டுள்ளது.

    கட்சித் தலைவர் விஜய் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் வீடியோ காலில் பேசி ஆலோசனை செய்கிறார். மேலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பூத் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.

    இந்நிலையில் த.வெ.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 3-ந்தேதி சுமார் 80 மாவட்டங்களில் நடக்கிறது. கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு வாக்குச்சாவடியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வாக்காளர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது உள்பட 2026 தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் பற்றி தீவிரமாக ஆலோசனை நடைபெற இருக்கிறது.

    பூத் முகவர்களாக அந்தந்த பகுதியில் இருப்பவர்களே நியமனம் செய்யப்பட்டுள்ளதால் ஒரு வீடு விடாமல் இரவு-பகல் பாராமல் த.வெ.க.வினர் பணியாற்றி வருகின்றனர்.

    கூட்ட ஏற்பாடுகளை கட்சித் தலைவர் விஜய் உத்தரவின்படி, பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தலின்படி 234 தொகுதிகளிலும் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11 லட்சத்து 58 ஆயிரத்து 910 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர்.
    • மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், 2025-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1 கோடியே 3 லட்சத்து 78 ஆயிரத்து 835 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர். ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11 லட்சத்து 58 ஆயிரத்து 910 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர்.

    இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடனும், அப்பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடினோம்.
    • நேற்று முதல் மாணவர்களுக்காக நடைபெறும் உளவியல் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தோம்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்று துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டோம்.

    நேற்று நடந்த மாணவரின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடனும், அப்பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடினோம்.

    நேற்று முதல் மாணவர்களுக்காக நடைபெறும் உளவியல் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தோம்.

    மேலும், அவ்வகுப்பில் பயிலும் மற்ற மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்து நம்பிக்கையளிக்கும் விதமாக உரிய ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அ.தி.மு.க.வை 8 பேர்தான் நடத்தி வருகிறார்கள்.
    • விஜய் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை விட்டு கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

    அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    பாரதிய ஜனதா திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமியை கட்டுப்படுத்த காய்களை நகர்த்தி வருகிறது. பல விஷயங்களில் எடப்பாடி பழனிசாமி மவுனமாக இருக்கிறார். அ.தி.மு.க.வின் அடிப்படை கொள்கைகளில் இருந்து அவர் விலகி செல்கிறார். அ.தி.மு.க.வை 8 பேர்தான் நடத்தி வருகிறார்கள். அங்குள்ள பல மூத்த தலைவர்களுக்கு பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தது பிடிக்கவில்லை. தமிழகத்தில் 14 சதவீதம் உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகளை இழந்து விடுவோம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமியும் முதலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று தான் சொல்லி இருந்தார். ஆனால் விஜய் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியதும் பாரதிய ஜனதா பதறி விட்டது.

    அ.தி.மு.க.வுக்கும் விஜய் கட்சிக்கும் இடையே ரகசிய பேச்சு நடந்தது எனக்கு தெரியும். விஜய் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை விட்டு கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் விஜய் கட்சியினர் முதல்-மந்திரி பதவியை விட்டு தரவேண்டும் என்றனர். ஆனால் அதை அ.தி.மு.க. ஏற்கவில்லை. என்றாலும் பேச்சுவார்த்தை முடியாமல் தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருந்தது. இதை அறிந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் அ.தி.மு.க.வுக்கும் விஜய் கட்சிக்கும் கூட்டணி வந்தால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தனர். அந்த பயத்தில்தான் அமித்ஷா அவசரம் அவசரமாக சென்னைக்கு வந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்கள் மூலமாக அறிவித்தார்.

    பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தால் அ.தி.மு.க. வுக்கு தான் பாதிப்பு ஏற்படப் போகிறது. இது அ.தி.மு.க.வில் உள்ள பல மூத்த தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். என்றாலும் வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்பதற்கு முன்பு 2 ஆண்டுகள் நாகலாந்து மாநிலத்தில் கவர்னராக இருந்தார்.
    • கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் அவர் கவர்னர் பதவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றப்படுவார் என்று அடிக்கடி சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுவதும் பிறகு அது வதந்தி என்று அறிவிக்கப்படுவதும் வழக்கமாகி விட்டது. அந்த வகையில் நேற்று முதல் சமூக வலை தளங்களில் கவர்னர் ரவி மாற்றப்படுவார் என்று புதிய தகவல் பரவி வருகிறது.

    தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்பதற்கு முன்பு 2 ஆண்டுகள் நாகலாந்து மாநிலத்தில் கவர்னராக இருந்தார். அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு தொடர்ந்து 4 ஆண்டுகளாக அவர் கவர்னர் பதவியில் இருக்கிறார்.

    வருகிற செப்டம்பர் மாதம் வந்தால் அவர் தொடர்ச்சியாக கவர்னர் பதவியில் இருப்பது 6 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு சமமாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் அவர் கவர்னர் பதவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனால்தான் அவர் எந்த நேரத்திலும் மாற்றப்படுவார் என்று அடிக்கடி தகவல் பரவுகிறது. தற்போதும் அதன் அடிப்படையில்தான் தகவல் பரவி இருப்பதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

    கவர்னர் ஆர்.என்.ரவி துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படலாம் என்றும் அந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதை கவர்னர் மாளிகை அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்தனர்.

    கவர்னர் ஆர்.என்.ரவி தற்போது ஆகஸ்டு 15 சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் சுதந்திர தினத்தன்று விருந்து தொடர்பாக அவர் ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.

    ×