என் மலர்

    சென்னை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • அதிமுக விவசாயப்பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நடிகை கவுதமி அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    மேலும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளராக தடா பெரியசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுக விவசாயப்பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுகவில் மிகப்பெரிய பதவியாக கருதப்படுவது கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி. அதிமுகவில் நீண்ட காலம் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'கொள்கை பரப்பு துணைக் செயலாளர் பதவி நடிகை கவுதமிக்கு இபிஎஸ் வழங்கியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • யார் சார் நீங்க... என்று கேட்ட போலீசாரை அந்த ஜோடி தரக்குறைவாக பேசினர்.
    • நாளை காலையில உன் அட்ரஸ் எல்லாம் எடுத்து விடுவேன். ஒருத்தன் இருக்க மாட்டீங்க.

    சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி தரக்குறைவாக பேசி உள்ளனர். அவர்களை கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்ததற்கு, அந்த ஜோடி கடுமையாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    உதயநிதி ஸ்டாலினை இப்போவே கூப்பிடுவேன்... பார்க்கிறாயா? என துணை முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டினார். அத்துடன் நிற்காமல் போலீசாரை கைகாட்டி மிரட்டி, அநாகரீகமாகவும் அந்த நபர் பேசினார்.

    யார் சார் நீங்க... என்று கேட்ட போலீசாரை அந்த ஜோடி தரக்குறைவாக பேசினர்.

    கைது செய்வோம் என்று போலீசார் கூறியதற்கு, அதற்கு அந்த நபர், இவன் எல்லாம் அள்ளக்கை. அரெஸ்ட் பண்ண போறீயா... முடிந்தால் பண்ணுடா...

    போய் உன் ஆளை கூட்டிட்டு வா... இன்ஸ்பெக்டரை கூட்டிக்கொண்டு வா...

    நாளை காலையில உன் அட்ரஸ் எல்லாம் எடுத்து விடுவேன். ஒருத்தன் இருக்க மாட்டீங்க என்று கெட்ட வார்த்தைகளில் வசைபாடினார். மேலும் அந்த நபர், போலீசாரின் போனை பிடுங்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

    அதற்கு அந்த பெண் இவன் எல்லாம் ஒரு ஆளு இவனை போய்... என்று சொல்லும் வீடியோ வைரலாகி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த ஜோடி கணவன் மனைவி இல்லையென தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநாட்டு பணிகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு திடலில் தங்கி இருந்து பார்வையிட்டு வருகிறார்.
    • ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு- பகலாக மாநாட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாடு வருகிற 27-ந் தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்ற இடத்தில் நடைபெறுகிறது.

    இதையொட்டி 85 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாடு நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டு நடைபெற சில தினங்களே இருப்பதால் மேடை அமைப்பு பணிகள், உணவு கூடங்கள், வாகனம் நிறுத்தும் இடங்கள், குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி கள் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை அடைந்து உள்ளது.

    மாநாடு நடைபெறும் பகுதியில் திடீரென மழை பெய்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மணல் பரப்பில் ஜல்லி கற்கள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு நிலப்பரப்பின் உயரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு பணிகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு திடலில் தங்கி இருந்து பார்வையிட்டு வருகிறார்.

    மாநாட்டு திடலுக்கு விஜய் வந்ததும் தொண்டர்களை நோக்கி சிறிது தூரம் நடந்து சென்று உற்சாகப்படுத்துகிறார்.

    இதையொட்டி 800 மீட்டர் நீளத்துக்கு மாநாட்டு மேடையுடன் சிறப்பு பிரமாண்ட நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதால் ஏற்கனவே 4 வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    தொண்டர்களின் எண்ணிக்கை அதிகமாவதை தொடர்ந்து கூடுதலாக மாநாடு திடல் அருகே ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு என மொத்தம் 225 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    வாகனம் நிறுத்தும் இடங்கள் அனைத்திலும் மின் விளக்கு, குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    மாநாடு வளாகத்தை சுற்றிலும் 20 ஆயிரம் மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாநாடு பந்தலை சுற்றிலும் ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட உள்ளன.

    சுமார் 1000 பேர் அமரும் வகையில் மாநாடு மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. மாநாடு பந்தலில் சுமார் 75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட இருக்கிறது.

    மாநாடு பாதுகாப்பில் போலீசாருடன் இணைந்து துபாயில் இருந்து வந்துள்ள சிறப்பு தனியார் பாதுகாப்பு படையினர் ஈடுபட இருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்பு காரணங்களுக்காக மாநாடு திடல் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது.

    திடலுக்கு வரும் பணியாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என யார் வந்தாலும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாநாட்டுக்கு விஜய் வருவதற்காக சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டு அவரது பாதுகாப்புக்கு என்று சிறப்பு தனிக்குழுவை துபாய் பாதுகாப்பு படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

    மாநாடு பணிகள் பற்றி கட்சி தலைவர் விஜய், மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு மாநாடு பணியை வேகப்படுத்தி வருகிறார்.

    ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு- பகலாக மாநாட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் 2 நாட்களில் மாநாடு பந்தல் பணிகள் உள்பட அனைத்து பணிகளும் நிறைவு பெற இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
    • இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

    பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவ்யூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

    யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும்போது, துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்தார். இர்பான், தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தார்.

    பாலினத்தை அறிவித்தது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய இருந்த நிலையில், மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

    தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தவறு. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர்!
    • மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீர வணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளைப் பாதுகாப்பவர்கள் காவல்துறையினர்!

    தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர்!

    அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீர வணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.

    மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீர வணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இருந்து 11,176 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • இந்த ஆண்டு தாம்பரத்தில் இருந்து பஸ்கள் புறப்படாது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட வசதியாக தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை கிடைப்பதால் வெளியூர் பயணம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டு இருப்பதால் இந்த ஆண்டு சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட செல்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.

    தீபாவளிக்கு இன்னும் 9 நாட்களே இருப்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து இன்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்குவது மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன், 4,900 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 11,176 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 2,910 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 14,086 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிற நவம்பர் 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரையில் தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 3,165 சிறப்பு பஸ்களும் 3 நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,441 பஸ்கள் ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,165 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 12,606 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    மேலும் பஸ் நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பஸ் மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு வசதியினை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும்.

    பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மேற்கூறிய 2 பஸ் நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இணைப்பு பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

    சென்னையில் இருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 28-ந்தேதி வழக்கமாக செல்லும் 2092 பஸ்களுடன் 700 சிறப்பு பஸ்களும் 29-ந் தேதி 2125 சிறப்பு பஸ்களும், 30-ந்தேதி 2075 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. 3 நாட்களும் 6,276 வழக்கமான பஸ்களும் 4,900 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 7 முன்பதிவு மையங்கள் கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்கள் செயல்படும்.

    கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

    கோயம்பேட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

    மாதவரத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    அரசு பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக 94450 14436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151, 044-24749002, 044-26260445, 044-26281611 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இது தவிர பயணிகள் நலன் கருதி கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.

    கூடுதலாக பஸ் தேவைப்பட்டால் தனியார் பஸ்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். அரசு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் அவை இயக்கப்படும்.

    ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் உரிமையாளர்களுடன் 24-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    கடந்த ஆண்டை விட இந்த வருடம் கூடுதலாக மக்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் 5.50 லட்சம் பேர் பயணம் செய்தனர். இந்த ஆண்டு 5.83 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்கு வரத்து துறை ஆணையர் போலீஸ் உயர் அதிகாரிகள் அரசு அலுவலர்கள், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை.
    • திருமாவளவனை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இந்து அறநிலை துறை சார்பாக 3 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை. எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண ஆரம்பித்துவிட்டார். வேறு வேலையில்லாததால். தி.மு.க. கூட்டணியை அவர் உடைக்கவும் முடியாது, கொளுத்தவும் முடியாது, பிரிக்கவும் முடியாது, நசுக்கவும் முடியாது.

    இது அனைத்தும் அவர் சார்ந்திருக்கக்கூடிய கட்சிக்கு வேண்டுமென்றால் ஏற்படுமே தவிர, தி.மு.க.வுக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் எந்த ஒரு சிறு பாதிப்பும் ஏற்படாது. தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்பது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்தாக இருக்கலாம்.

    தமிழ் தாய் வாழ்த்து என்பது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை மக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவராலும் பாடப்பட்டு வருகிறது. சீமான் அதில் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். தமிழ்நாடு, திராவிடம் இதை இரண்டையும் தமிழ் மண்ணில் இருந்து பிரிக்க முடியாத சொற்கள்.

    தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் திராவிடம் என்ற பெயரோடு தான் இருக்கிறது. இங்கு உள்ள கட்சிகள் திராவிடம் சார்ந்த கட்சிகள் தானே தவிர திராவிடம் சாராத கட்சிகள் இல்லை. யாரும் கட்சி ஆரம்பித்தால் கூட திராவிடம் சார்ந்து தான் கட்சியை ஆரம்பிக்கின்றனர். திராவிடம் என்பது தமிழ் மண்ணிலே ஊறிப்போன ஒன்று. அதை திராவிட கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் முன்னெடுத்துச் செல்லும்.

    ஒரு இயக்கத்தை நாங்கள் அழிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அந்த இயக்கத்தின் தலைமை பலவீனமாக இருந்துவிட்டால் அந்த இயக்கம் தானாகவே அழிந்து விடும். இன்று எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை பலவீனமாக உள்ளது. அதனுடைய எடுத்துக்காட்டு தான் இந்த குழப்பம்.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை. நம்பிக்கைக்குரிய இணையாக அ.தி.மு.க.வை ஏற்றுக்கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை. அவரும் என்னென்னமோ எண்ணி வலைவீசி பார்க்கிறார். யாரும் அவர் பக்கம் செல்வதற்கு தயாராக இல்லை. அவரை திரும்பி கூட பார்க்கவில்லை. அதுதான் உண்மை.

    சீமான் கற்பனையில் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகலாம். ஏதாவது குட்டி கலாட்டா செய்ய வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். திருமாவளவனை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார். தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் அரசு அமைவதில் அவர் உறுதியோடு இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், முத்துராஜா எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் தவ. பாஞ்சாலன், மாமன்ற உறுப்பினர் கனக அம்மன் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண்களுக்கு உரிய உரிமையை நாம் தந்து கொண்டிருக்கிறோம்.
    • பக்தியை பகல் வேஷமாக பயன்படுத்துவோரால் அரசின் பணிகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    சென்னை:

    சென்னை திருவான்மியூரில் இந்து அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் விழாவில் சீர்வரிசை பொருட்கள் வழங்கி 31 இணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் செய்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 31 இணைகளுக்கு திருமணம் செய்து வைத்து வாழ்த்துவதில் பெருமை, மகிழ்ச்சி அடைகிறோம்.

    * ஆட்சிக்கு வந்த பின்னர் அதிக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது அறநிலையத்துறையில் தான்.

     

    * அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார்.

    * அறநிலையத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திமுக அரசு செயல்படுகிறது.

    * பெண்களுக்கு உரிய உரிமையை நாம் தந்து கொண்டிருக்கிறோம்.

    * கடந்த 3 ஆண்டுகளில் 2,226 திருக்கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    * தமிழகம் முழுவதும் 10,208 திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.

    * திருக்கோவில்களுக்கு சொந்தமான 7000 ஏக்கர் நிலங்கள் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளன.

    * 10,638 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    * திமுக அரசு பொறுப்பேற்ற பின் கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

    * திருக்கோவில்களில் நன்கொடையாளர்கள் அளித்த ரூ.1,103 கோடி நிதி மூலம் கோவில்களில் 9,123 பணிகள் நடைபெறுகின்றன.

    * கோவில்கள் தொடர்பான வழக்குகளை அறநிலையத்துறை சிறப்பாக கையாண்டு சிறந்த தீர்ப்புகளை பெற்று வருகிறது.

    * திருக்கோவில்களில் தமிழில் குடமுழுக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலும் நமக்கு சாதமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

    * 9 கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    * பக்தியை பகல் வேஷமாக பயன்படுத்துவோரால் அரசின் பணிகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    * நமது சாதனைகளை தடுக்கத்தான் பல வழக்குகள் போடப்படுகிறது. அதனை சட்டப்படியே முறியடிக்கிறோம்.

    * ஒவ்வொரு வழக்குகளிலும் அமைச்சர் சேகர்பாபு வென்றெடுக்கும்போதும் சரியான அமைச்சரைத்தான் தேர்வு செய்துள்ளோம் என மகிழ்ச்சி.

    * திமுக ஆட்சியில் அறநிலையத்துறையின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள்.

    * அனைத்து மதங்களையும் பாகுபாடின்றி நடத்துவதால் தான் திராவிட மாடல் ஆட்சியை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்று கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ரூ.56 ஆயிரம் முதல் ரூ.57 ஆயிரம் வரையில் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்தது.

    தங்கம் விலை மார்ச் மாதம் சவரனுக்கு ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், 2 மாத இடைவெளியில், அதாவது மே மாதத்தில் ரூ.55 ஆயிரம் என்ற நிலையையும் கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

    தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அதன் விலை அதிரடியாக சரிந்தது. அன்றைய நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.2,200 குறைந்திருந்தது.

    அதன் தொடர்ச்சியாகவும் விலை சரியத் தொடங்கி கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.50 ஆயிரத்து 640-க்கு வந்தது. ஒரு கட்டத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு கீழ் செல்லும் என்றெல்லாம் பேசப்பட்டது.

    ஆனால் அந்த நிலை அப்படியே மாறியது. எந்த அளவுக்கு குறைந்து வந்ததோ, அதே வேகத்தில் மீண்டும் உயர ஆரம்பித்தது. ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை அதிகரித்தது. அதன் பின்னரும் விலை உயர்ந்து, கடந்த மாதம் (செப்டம்பர்) ரூ.55 ஆயிரத்தையும் தாண்டியது.

    மேலும் விலை ஏறுமுகத்தில் காணப்பட்டு, ரூ.56 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ரூ.56 ஆயிரம் முதல் ரூ.57 ஆயிரம் வரையில் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது.

    இந்த ஏற்ற, இறக்கத்துக்கு கடந்த 16-ந் தேதி ஒரு முற்றுப்புள்ளி வைத்தது போல, ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்தது. ரூ.57 ஆயிரத்தை கடந்த 3-வது நாளில் ரூ.58 ஆயிரத்தையும் தங்கம் விலை தாண்டி அதிர்ச்சியை கொடுத்துவிட்டது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.58 ஆயிரத்துக்கு 240-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    20-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,240

    19-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,240

    18-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,920

    17-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,280

    16-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,௧௨௦

     

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    20-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    19-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    18-10-2024- ஒரு கிராம் ரூ. 105

    17-10-2024- ஒரு பவுன் ரூ. 103

    16-10-2024- ஒரு கிராம் ரூ. 103

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாட்டின் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகித்தது ஆர்எஸ்எஸ் தான்.
    • ஒண்டி வீரன், குயிலி போன்றவர்களுக்கு திருமாவளவன் மரியாதை செலுத்தாதது ஏன்?

    மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆர்எஸ்எஸ்காரர், அருந்ததியர் மக்களுக்காக எல்.முருகன் போராடியது உண்டா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்தநிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாட்டின் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகித்தது ஆர்எஸ்எஸ் தான்.

    * அருந்ததியினர் இடஒதுக்கீட்டிற்காக சட்ட போராட்டம் நடத்தி உள்ளோம்.

    * ஒண்டி வீரன், குயிலி போன்றவர்களுக்கு திருமாவளவன் மரியாதை செலுத்தாதது ஏன்?

    * தேர்தலின்போது ஒரு அருந்ததியினருக்கு கூட சீட் கொடுக்காதது ஏன்?

    * அருந்ததியினர் இடஒதுக்கீடு டேட்டா கொடுத்தது பாஜக தான்.

    * கடைநிலை பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என திருமா நினைக்கிறாரா.

    * 7 நீதிபதிகள் தீர்ப்பை சேலஞ்ச் செய்கிறார் என்றால் திருமாவின் நோக்கம் என்ன?

    * அருந்ததியினர் இடஒதுக்கீடு பற்றி பேச திருமாவுக்கு தகுதியில்லை என்று கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
    • டானா புயல் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் கடற்கரையை நோக்கி நகரும்.

    சென்னை:

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

    மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 23-ந்தேதி வங்கக்கடலில் டானா புயல் உருவாக வாய்ப்புள்ளது.

    டானா புயல் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் கடற்கரையை நோக்கி நகரும்.

    மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் வலுப்பெறும் டானா புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா
    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், அவருக்கு துணை நிற்கும் துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்.

    சென்னை:

    மாணவர்களும், ஆசிரியர்களும் கல்வி வேட்கை கொள்ள வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்வது போன்ற திராவிட மாடல் அரசு மேற்கொள்ளும் முன்னெடுப்புகள் சிறப்புமிக்கது என கனவு ஆசிரியர்களின் கல்விச்சுற்றுலா குறித்து மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    2023-24-ம் கல்வி ஆண்டில் "கனவு ஆசிரியர்'' விருது பெற்ற 55 ஆசிரியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்லப்பட உள்ளனர்.

    கல்விச்சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள், பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாசாரம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர். பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச்சுற்றுலா செல்லும் கனவு ஆசிரியர்கள் திருச்சியில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து கலந்துரையாடி வாழ்த்துகளை பெற்றனர்.

    இந்த சம்பவம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்திருந்தார். இந்த பதிவிற்கு மறுபதிவிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

    திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா? அத்தகைய கல்வியின் சிறப்பை நமது தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களும் - ஆசிரியப் பெருமக்களும் உணர்ந்து கல்வி வேட்கை கொள்ள மேற்கொள்ளும் நமது திராவிட மாடல் அரசின் சிறப்பான முன்னெடுப்பு.

    இந்த பதிவு குறித்து நான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பேசியபோது, இதுவரையில் எத்தனை மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளோம் என கேட்டேன். ஆறு நாடுகளுக்கு 236 மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளதாகவும் - இந்த பயணத்துடன் 92 ஆசிரியர்களும் இந்த வாய்ப்பினைப் பெற்றதாகவும் கூறினார். இதைக் கேட்டதும் மகிழ்ச்சியால் என் நெஞ்சம் நிறைந்தது.

    இந்த முன்னெடுப்புகளைச் செய்துவரும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், அவருக்கு துணை நிற்கும் துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×