என் மலர்

    சென்னை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • கட்சி பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்பட்டதாக நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.

    தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. மாநில செயலாளராக இருந்தவர் கே.ஆர். வெங்கடேஷ். இவர் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும் கட்சி பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார் என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    மேலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து கமல்ஹாசன் கலந்துரையாடினார்.
    • புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கியும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணி சார்பில் மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார். அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பட்டாசுகளை வெடித்து, மேள-தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து கமல்ஹாசன் கலந்துரையாடினார்.

    பின்னர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வருகை தந்த கமல்ஹாசனுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பூங்கொத்துகளை கொடுத்தும், பொன்னாடைகளை அணிவித்தும் பலர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கியும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. அனைவருடனும் கமல்ஹாசன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

    இந்த நிலையில், தொண்டர் ஒருவர் தான் கொண்டு வந்த வாளை கமலிடம் கொடுக்க முற்பட்டார். அதை வாங்க மறுத்து கமல்ஹாசன் கோபம் அடைந்தார்.

    வாளை கீழே வைக்கச்சொல்லி விட்டு தொண்டரிடம் கைகுலுங்கி, புகைப்படம் எடுத்து அவரை அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேல், பொதுச்செயலாளர் அருணாச்சலம், ஊடகப் பிரிவு செயலாளர் முரளி அப்பாஸ், இளைஞர் அணி செயலாளர் கவிஞர் சினேகன், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், வேளச்சேரி தொகுதி மாவட்ட துணைச் செயலாளர் சண்முக சுந்தரம், மகளிர் அணி செயலாளர் சினேகா மோகன்தாஸ், மீனவர் அணி செயலாளர் பிர தீப் குமார், விவசாய அணி செயலாளர் மயில்சாமி, தொழில் முனைவோர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் செல்வகுமார் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று கோவை, நெல்லை, தென்காசி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    நாளை நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    16-ந்தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    17-ந்தேதி நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதே நேரம் மதிய வேளையில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு பதிவாகக்கூடும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்!
    • பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்! 100% தேர்ச்சி விழுக்காட்டோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே 'நம்பர் ஒன்' இடத்தைப் பிடித்துள்ளது.

    அறிவொளி ஏற்றும் இச்சாதனைக்கு உழைத்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்! என்று கூறியுள்ளார். 



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • EB மெயின் ரோடு, மேனாம்பேடு சாலை, படவேட்டு அம்மன் நகர், பிள்ளையார் கோவில் தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (15.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அம்பத்தூர் சிட்கோ: EB மெயின் ரோடு, மேனாம்பேடு சாலை, யாதவாள் தெரு, வடக்கு கட்ட செக்டார் 3, படவேட்டு அம்மன் நகர், பிள்ளையார் கோவில் தெரு, கச்சினுகுப்பம், அம்பேத்கர் தெரு, எம்.ஜி.ஆர். தெரு, புதிய டைனி ஷெட், டாஸ் எஸ்டேட் 7 முதல் 10-வது தெரு வரை, சிட்கோ எஸ்டேட் 8-வது தெரு, 3-வது மெயின் ரோடு, 1-வது மெயின் ரோடு, தொழிலாளர் குடியிருப்பு, 12-வது தெரு, 5 முதல் 11-வது தெற்கு செக்டார் 3, 3-வது குறுக்குத் தெரு, எஸ்.பி. 17 முதல் 28 வரை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆழ்வார்பேட்டையில் தி.மு.க. மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
    • ஆலோசனையில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தி.மு.க. மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனையில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தல் பணிகளை கவனிக்க 8 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோடையில் நீர்நிலைகளை தூர்வார நிதி ஒதுக்கியிருக்க வேண்டும்.
    • தமிழக அரசின் செயலற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நிதி நெருக்கடி என்று கூறி குளங்களை சீரமைக்காமல் இருப்பது முறையல்ல. தற்போது பருவமழையும் தொடங்கிவிட்டதால் நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். சுமார் 25 ஆயிரம் சிறிய ஏரிகள், குளங்கள் நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித் துறை மூலம் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் முறையாக பராமரிக்கப்படாததால் பெரும்பாலான நீர்நிலைகளில் சீமை கருவை செடிகளும், ஆகாயதாமரை செடிகளும் புதராக மண்டி கிடக்கின்றன.

    இந்த கோடையில் நீர்நிலைகளை தூர்வார நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நீர்நிலைகளை பராமரிக்க நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என்று ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்து உள்ளது. இது தமிழக அரசின் செயலற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

    பல்வேறு துறைகளுக்கு கடன் வாங்கி செலவு செய்யும் அரசு அடிப்படைத் தேவையான, அத்தியாவசியத் தேவையான, அவசியத் தேவையான நீருக்காக நிதி ஒதுக்க முடியவில்லை என்பது மக்களை ஏமாற்றும் செயல்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
    • V. சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்?

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் அவர்கள் அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, அவர் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம்.

    ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை; தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை!

    நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான் மு.க.ஸ்டாலின் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா பொம்மை முதல்வரே?

    காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை.

    V. சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன்- மக்களே, இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனநலம் பற்றிய பல்வேறு கருத்துகளைப் பற்றி உரை நிகழ்த்தினார்.
    • நிகழ்ச்சி மகளிர் நலனில் கல்லூரியின் அர்ப்பணிப்பு உணர்வை எடுத்துக்காட்டுகிறது.

    எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் உன்னத் பாரத் அபியான் மற்றும் மாதா மருத்துவமனை ஆகியவை இணைந்து நேற்று கல்லூரித் திரையரங்கில் மகளிர் நல விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தை நடத்தின. கல்லூரித் தாளாளர் வெங்கடேஷ் ராஜா, இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி, முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் ஆகியோரின் மேலான ஆதரவுடன் நடைபெற்ற இக்கருத்தரங்கத்திற்குச் சிறப்பு விருந்தினர்களாக மாதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறைத்தலைவர் டாக்டர் ஜோஸ்பின் ரோஸி அவர்களும், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்துறைப் பேராசிரியர் டாக்டர் விஜயலட்சுமி ஞானசேகரன் அவர்களும், தாகூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் மேனாள் பேராசிரியர் டாக்டர் பிரேமலதா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    டாக்டர் ஜோஸ்பின் ரோஸி அவர்கள் மகளிருக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவு, உணவு மேலாண்மையைக் கையாளும் முறை, நல்ல உறக்கம் ஆகிய உடல் நலனைப் பேணுகின்ற வழிமுறைகள் பற்றிக் குறிப்பிட்டார்.

    அடுத்து உரை நிகழ்த்திய டாக்டர் விஜயலட்சுமி ஞானசேகரன் அவர்கள் மாதவிடாய் பற்றிய பிரச்சனைகள், மாதவிடாயை நேர்மறையாக எதிர்கொள்ளுதல், மகளிர்க்கு ஏற்படும் நோய்கள், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி விழிப்புணர்வு போன்ற பல கருத்துகளை முன் வைத்தார்.



    டாக்டர் பிரேமலதா அவர்கள் மகளிர் மனநலம், ஆரோக்கியமான மனநலத்தைப் பாதுகாத்தல், நேர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற மனநலம் பற்றிய பல்வேறு கருத்துகளைப் பற்றி உரை நிகழ்த்தினார்.

    நிகழ்ச்சியின் இறுதியாக மாணவிகள் மற்றும் பேராசிரியர்களின் பல்வேறு வினாக்களுக்கு மகளிர் நல மருத்துவர்கள் பதில் அளித்து பல்வேறு ஐயங்களைத் தீர்த்து வைத்தனர். இந்நிகழ்ச்சி மகளிர் நலனில் கல்லூரியின் அர்ப்பணிப்பு உணர்வை எடுத்துக்காட்டுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாட்ச்மேனில் இருந்து வார்டு பாய்கள், துப்புரவுப் பணியாளர்கள் முதல் துணை மருத்துவ ஊழியர்கள் வரை அனைவரும் பணம் கேட்கிறார்கள்.
    • மருத்துவர்கள் நேரடியாகக் கேட்பதில்லை, ஆனால் இது ஒரு நடைமுறை என்று அவர்களுக்குத் தெரியும்.

    சென்னை அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பிரசவத்திற்குப் பிறகு, ஊழியர்கள் கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த கார்த்திகா என்ற பெண்ணின் குடும்பத்திடம், அவரைப் பிரசவ வார்டுக்கு மாற்றவும், குழந்தையை சுத்தம் செய்யவும் வார்டு பாய்கள் தலா ரூ.3,000 லஞ்சம் கேட்டுள்ளனர்.

    பயந்த கார்த்திகாவின் குடும்பத்தினர், வேறு வழியின்றி பணம் செலுத்தியுள்ளனர். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் வரை, மொத்தம் ரூ.10,000 வரை செலவழித்ததாகத் தெரிகிறது.

    இதுகுறித்து பேசிய கார்த்திகா, "வாட்ச்மேனில் இருந்து வார்டு பாய்கள், துப்புரவுப் பணியாளர்கள் முதல் துணை மருத்துவ ஊழியர்கள் வரை அனைவரும் பணம் கேட்கிறார்கள்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

    இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டிய சேவைகள் என்று குறிப்பிட்ட கார்த்திகா,மருத்துவர்கள் நேரடியாகக் கேட்பதில்லை, ஆனால் இது ஒரு நடைமுறை என்று அவர்களுக்குத் தெரியும் என்று கூறினார்.

    மருத்துவமனை ஊழியர்களின் லஞ்சப் பட்டியல் :

    வார்டு பாய்கள் - அறுவை சிகிச்சை அறையில் இருந்து குழந்தையை சாதாரண வார்டுக்கு மாற்றுதல், குழந்தையை சுத்தம் செய்தல் மற்றும் நோயாளிக்கு பிற வகையான உதவி ஆகியவற்றுக்கு சராசரியாக ரூ.500 முதல் ரூ.3000 வரை லஞ்சம் கேட்கின்றனர்.  

    பெண் மருத்துவ உதவியாளர்கள் - பிரசவ உதவி, குழந்தைக்கு குளிப்பாட்டுதல், துணிகள் கொண்டு வருதல் மற்றும் பிற சேவைகளுக்கு ரூ.500 முதல் ரூ.1000 லஞ்சம் கேட்கின்றனர்.

    துப்புரவு பணியாளர்கள் - துப்புரவு சேவை மற்றும் நோயாளிகளின் வார்டுக்கு வழிகாட்டுதலுக்கு குறைந்தது ரூ.20 முதல் ரூ.50 லஞ்சம் கேட்கின்றனர்.

    இதுதவிர வாட்ச்மேன்கள் ரூ.100 லஞ்சமாக பெறுகின்றனர்.

    சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் குடியிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சங்கீதா, இந்த பிரச்சினை குறித்து தாங்கள் அறிந்திருப்பதாகவும், ஆனால் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறுகிறார்.

    "பணம் கேட்க வேண்டாம் என்று ஊழியர்களிடம் கூறுகிறோம், இருப்பினும் இத்தகைய புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஊழியர்களைக் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை அவர்களை அடையாளம் காண முடியவில்லை" என்றும் அவர் டாக்டர் சங்கீதா வருத்தத்துடன் தெரிவித்தார்.

    சிறுசிறு வேலைகள் முதல் நோயாளிகளை வேறு அறைக்கு மாற்றுவது அல்லது ஸ்கேன் எடுப்பது போன்ற பெரிய வேலைகளுக்கும் ரூ.50 முதல் ரூ.500 அல்லது அதற்கு மேல் பணம் கோரப்படுவதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

    பணம் கொடுக்க மறுப்பவர்கள் வாய்மொழித் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதாகவும், பார்வையாளர்கள் நேரத்திலும் நோயாளிகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 252 கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் நியமித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
    • தமிழக அரசின் இந்த அணுகுமுறை உயர்கல்வியின் தரத்தை குழி தோண்டி புதைக்கும் நிலைக்குதான் இட்டுச் செல்லும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள 100 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 252 புதிய படிப்புகள் நடப்பாண்டில் தொடங்கப்பட உள்ள நிலையில், அந்தப் படிப்புகளை நடத்துவதற்காக 252 கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் நியமித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

    தமிழ்நாட்டில் தரமானக் கல்வியை வழங்குவதாகக் கூறிக் கொள்ளும் தி.மு.க. அரசு, 4 ஆயிரத்துக்கும் கூடுதலான பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாகவே நடத்தப்படுகின்றன. அதேபோல், அரசு கலைக் கல்லூரிகளின் துறைகளையும் ஓராசிரியர் துறைகளாக மாற்ற தமிழக அரசு துடிக்கிறது. தமிழக அரசின் இந்த அணுகுமுறை உயர்கல்வியின் தரத்தை குழி தோண்டி புதைக்கும் நிலைக்குதான் இட்டுச் செல்லும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி என்பதில் எந்த குழப்பமும் வேண்டாம்.
    • சிலர் இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக கூறும் கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டாம்.

    வரும் 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி என அண்ணாமலை பேசியிருந்த நிலையில் இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

    * 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.

    * எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி என்பதில் எந்த குழப்பமும் வேண்டாம்.

    * சிலர் இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக கூறும் கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டாம்.

    * தேர்தலில் ராமராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×