என் மலர்

    சென்னை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவை வரும் சிறப்பு ரெயில் ரேணிகுண்டா, பகலா, காட்பாடி ஆகிய மாற்றுப்பாதை வழியாக இயக்கப்படும்.
    • காச்சிகுடாவில் இருந்து வருகிற 10-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-

    * ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06182), ரேணிகுண்டா, பகலா, காட்பாடி ஆகிய மாற்றுப்பாதை வழியாக இயக்கப்படும்.

    * அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (22504), 1 மணி நேரம் 45 நிமிடம் தாமதமாக புறப்படும்.

    * காச்சிகுடாவில் இருந்து வருகிற 10-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17652), 1 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030-க்கும் விற்கப்பட்டது.
    • ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விறபனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,240-க்கும் விற்பனையானது.

    இதனை தொடர்ந்து, தற்போது தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14.270-க்கும் சவரனுக்கு 1,920ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு விற்பனையாது. மொத்தத்தில் இன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு 2,560 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து விற்பனையாகிறது. காலையில் விலை குறைந்த நிலையில் தற்போது கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    02-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

    01-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    31-01-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    30-01-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,800

    29-01-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,34,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    02-02-2026- ஒரு கிராம் ரூ.300

    01-02-2026- ஒரு கிராம் ரூ.320

    31-01-2026- ஒரு கிராம் ரூ.320

    30-01-2026- ஒரு கிராம் ரூ.405

    29-01-2026- ஒரு கிராம் ரூ.425

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுமார் 25 கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
    • தபால் துறை, இன்சூரன்ஸ், வங்கிகள், தணிக்கை துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் இதில் கலந்துகொள்ள தயாராகி வருகின்றனர்.

    சென்னை:

    மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

    மத்திய தொழிற்சங்கங்கள் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ. என்.டி.யூ.சி, எல்.பி.எப். உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

    தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை கண்டித்து போராட்டம் நடக்கிறது. தொழிலாளர் நலச் சட்டம் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 4 ஆக சுருக்கி லேபர் கோடு என்று அமைக்கப்பட்டு சட்டங்கள் இருப்பதை கண்டிக்கும் வகையில் போராட்டத்தை தொழிலாளர்கள், விவசாயிகள் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    சுமார் 25 கோடி தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

    தபால் துறை, இன்சூரன்ஸ், வங்கிகள், தணிக்கை துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் இதில் கலந்துகொள்ள தயாராகி வருகின்றனர்.

    தொழிலாளருக்கு விரோதமாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட சில சங்கங்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து களத்தில் இறங்க உள்ளன.

    12-ந்தேதி அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிட்டு இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தினக்கூலி அடிப்படையிலும், தற்காலிக அடிப்படையிலும் நியமிக்கப்பட்டவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
    • கவுரவ ஆசிரியர்களாக பணியாற்றும் 292 பேரும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறையில் கவுரவ விரிவுரையாளர்கள், கவுரவ பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பால சேவிகா ஆசிரியர்களாக பணியாற்றி வரும் 292 பேர் தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்குக் கூட புதுவை அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டு, இட ஒதுக்கீட்டு முறைகளை பின்பற்றி, முறையான ஆள்சேர்ப்பு விதிகளின்படி ஒப்பந்த அடிப்படையிலும், தினக்கூலி அடிப்படையிலும், தற்காலிக அடிப்படையிலும் நியமிக்கப்பட்டவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

    கவுரவ ஆசிரியர்களாக பணியாற்றும் 292 பேரும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள். 292 கவுரவ ஆசிரியர்களையும் பணி நிலைப்பு செய்ய புதுவை அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

    5-ந்தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இதற்கிடையே இன்று முதல் 5-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

    6 மற்றும் 7-ந்தேதிகளில் உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 1-2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • நியாய விலைக்கடைகளை முதலமைச்சர் திறந்து வைத்து, அப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

    சென்னை:

    வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் 11.74 கோடி ரூபாய் செலவில் தரைதளம் மற்றும் நான்கு தளங்களுடன் 21,850 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    இம்மையத்தின் தரைத் தளத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள், வரவேற்பு அறை, மின்தூக்கி லாபி, 5 சிந்தாமணி நியாய விலைக் கடைகள் மற்றும் 1 அமுதம் நியாய விலைக் கடை என 6 நியாய விலைக் கடைகள், சாய்வுதளம், மின் தூக்கி (பயணிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர் வசதியுடன்) மற்றும் கழிப்பறை வசதிகள்.

    முதல் தளத்தில் பிசியோதெரபி, உடற்பயிற்சி வசதிகள், எலெக்ட்ரோதெரபி அறைகள், அல்ட்ரா சவுண்ட் பிரிவு, உடற்சிகிச்சைக்கான வசதிகள், காத்திருப்பு அறை, மின்தூக்கி மற்றும் கழிப்பறை வசதிகள்;

    2-ம் தளத்தில் செயற்கை மூட்டு (கை,கால்) மையம், மின் தூக்கி மற்றும் கழிப்பறை வசதிகள்;

    3-ம் தளத்தில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான அத்தியாவசிய வசதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், நோயாளிகள் சிகிச்சைக்கான 15 படுக்கை வசதிகள், மின் தூக்கி மற்றும் கழிப்பறைகள்;

    4-ம் தளத்தில் மருத்துவ ஆலோசனை அறைகள், நோயாளிகள் காத்திருப்பு அறை, பணியாளர்கள் உடைமாற்றும் அறை, உணவு அருந்தும் இடம், மின்தூக்கி மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

    கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மைய வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள 6 நியாய விலைக் கடைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, அப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

    கொளத்தூர், ரெட்டேரி சந்திப்பு அருகில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.4.98 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ள கொளத்தூர் ஏரிக்கரை பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    இப்பூங்காவில் நடைபாதை வசதி, குழந்தைகள் விளையாடும் இடம், இசை பூங்கா, இருக்கை வசதிகள், அமரும் படிக்கட்டுகள், ஒப்பனை அறை, நவீன கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள், கண்காணிப்பு அறை, மின் அறை மற்றும் ஊஞ்சல் இருக்கைகள் போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன.

    வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஆர்.பி காலனி 8-வது தெருவில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 310 திறந்தவெளி மின் மாற்றி கட்டமைப்புகளை, பாதுகாப்பான வளைதள மின் மாற்றிகளாக மாற்றி அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக, ஜவகர் நகரில் உள்ள கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரண பொருட்கள், மடிக்கணினிகள், பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, மாவு அரவை எந்திரங்கள், சலவை பெட்டிகள், காதொலி கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 248 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எதிரிகள் யார் துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.
    • ஒவ்வொரு குடும்பத்தினரும் தமிழக மக்களும் அம்மாவின் ஆட்சி எப்படி இருந்தது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

    இது தொடர்பாகவும் சட்டமன்றத் தேர்தலை தனிக்கட்சி தொடங்கி சந்திக்க போகிறீர்களா? என்பது பற்றி நிருபர்கள் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    எதிரிகள் யார் துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இது பற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை. வருகிற சட்டமன்றத்தேர்தலில் எனது தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சியை அமைப்போம். அது எப்படி நடக்கும் என்பதை நீங்களே விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்றார்.

    இதனிடையே அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று நடிகர் விஜய் விமர்சித்துள்ளாரே என்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, அ.தி.மு.க. ஆட்சி எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு குடும்பத்தினரும் தமிழக மக்களும் அம்மாவின் ஆட்சி எப்படி இருந்தது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவேதான் இப்போதும் அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என்று அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்றார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்திருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு முடிவு இருக்கும். அதன் அடிப்படையில் அவர்கள் செயல்பட்டு இருப்பார்கள். அது பற்றி எல்லாம் எப்படி கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விஜய்யின் பேச்சை பார்த்து அ.தி.மு.க.வினர் ஏமாற மாட்டார்கள்.
    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சி உள்ளது.

    சென்னை:

    அண்ணா நினைவிடத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    த.வெ.க. தலைவர் விஜய் அ.தி.மு.க. தலைவர்களான எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் ரோல் மாடல் என்று கூறிக்கொண்டு அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று விமர்சிக்கிறார்.

    இது பற்றி அவரது கட்சியில் சேர்ந்து உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் அவர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். 1988-ம் ஆண்டு அ.தி.மு.க. பிளவுபட்ட போது 1989-ம் ஆண்டு தேர்தலில் எங்கள் வாக்குகள் ஜெயலலிதா அணிக்கும் ஜானகி அணிக்கும் தான் சென்றது.

    இப்போதும் அ.தி.மு.க. வாக்குகள் என்றும் எங்களுக்குதான் கிடைக்கும். விஜய் நினைப்பதை போல அவருக்கு கிடைக்காது. விஜய்யின் பேச்சை பார்த்து அ.தி.மு.க.வினர் ஏமாற மாட்டார்கள். தேர்தலுக்குப் பிறகு எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை அமைச்சர்களாக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதே நேரத்தில் அதற்காக எந்த அழுத்தமும் கொடுக்கப்போவது இல்லை.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் எனது அருமை அண்ணன்தான். எடப்பாடி பழனிசாமி எப்படி எனக்கு அருமை அண்ணனோ அதே போன்று தான் ஓ.பன்னீர் செல்வமும். செங்கோட்டையன் கூட எனக்கு அருமை அண்ணன் தான்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சி உள்ளது. தமிழகம் கஞ்சா சந்தையாக விளங்கி வருகிறது. போதை பொருள் புழக்கம் பட்டி தொட்டி எங்கும் இருக்கிறது. யாருக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

    வருகிற தேர்தலில் உறுதியாக தி.மு.க. ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி முடிவுக்கு கொண்டு வரும். தி.மு.க. ஆட்சி மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளார்கள். தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதனால் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என தி.மு.க.வினர் எண்ணுகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறதா? இல்லையா? என்பதே தெளிவாக தெரியவில்லை. ஆனால் தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளதை போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

    எங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை எல்லாம் மறந்துவிட்டு தி.மு.க.வை வீழ்த்தவே அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் முழு மனதுடன் இணைந்துள்ளோம்.

    விஜய் தி.மு.க.வை வீழ்த்தும் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். விஜய் எங்களுக்கு எதிரி அல்ல. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான்.

    தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் எங்களுக்கும் சொல்லி கொடுத்த பாடம். அதை தான் நாங்கள் செயல்படுத்த உள்ளோம்.

    இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. ஜெயலலிதா ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளிக் குழந்தைகள் இப்படி போதையில் மூழ்கித் தடம் புரள்வதைக் கண்டும் காணாமல் கடந்து போவது அலட்சியத்தின் உச்சம்.
    • இப்படிப்பட்ட ஒரு சுயநல ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விடும்!

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை வியாசர்பாடியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு கஞ்சா எடுத்துச் சென்ற சம்பவம் இந்த போதை மாடல் அரசின் அவல ஆட்சிக்கான உதாரணம். பள்ளி மாணவர்கள் கைகளில் கஞ்சாவும், பைகளில் பட்டாக் கத்தியும் புழங்கும் நிலையில், "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று விளம்பர விழா எடுக்க தி.மு.க. அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

    "அப்பா" என்ற அடைமொழிக்கு ஆசைப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது கண்முன்னே பள்ளிக் குழந்தைகள் இப்படி போதையில் மூழ்கித் தடம் புரள்வதைக் கண்டும் காணாமல் கடந்து போவது அலட்சியத்தின் உச்சம். "அரசுப்பள்ளி எனது கோட்டை" என்று முழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அரசுப்பள்ளிகளில் இத்தனை அக்கிரமங்கள் நடக்கையில் எங்கே போனார் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

    பதின்ம வயது பள்ளி மாணவனுக்கு கூட கஞ்சா விற்கப்படுகிறது என்றால் திமுகவின் ஏவல்துறை எந்தளவிற்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும்? தங்களின் அவல ஆட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீதும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடுபவர்கள் மீதும் பொய் வழக்கு போடுவதில் மட்டுமே திமுக அரசு அதீத கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், நமது சமூகக் கட்டமைப்பை அரித்துக் கொண்டிருக்கும் போதைப் பொருட்களை எப்படி ஒழிக்க முடியும்? இப்படிப்பட்ட ஒரு சுயநல ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விடும்! என்று கூறியுள்ளார். 




    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செஞ்சி அருகே பாக்கம்-கெங்கவரம் காப்புக்காடு 1897-ம் ஆண்டு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது.
    • அழிந்துவரும் வனவிலங்குகளையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பாக்கம்-கெங்கவரம் காப்புக்காடு 1897-ம் ஆண்டு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. இக்காடு கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு கொண்ட இக்காட்டில் சிறுத்தை, கரடி, அரியவகை சிலந்திகள், அழிந்துவரும் நிலையில் உள்ள பாம்புகள், பெரிய அணில், லங்கூர் குரங்குகள், எறும்பு திண்ணி, தங்கப்பல்லி, புல்புல் ரேசர் ஸ்னேக் என்கிற அரியவகை பாம்பு, 15 குடும்பங்களைச் சேர்ந்த 56 வகை பாம்புகள், தவளைகள், தேரைகள் உள்ளது என்று உள்நாட்டு பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது.

    எனவே நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து பேசி முடிவெடுத்து வருகின்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பாக்கம்-கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என அறிவித்து அழிந்துவரும் வனவிலங்குகளையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கி அனுமதிக்கப்படுகின்றனர்.
    • கடந்த டிசம்பர் 27-ந்தேதி முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 25 ஆயிரம் பேர் விக்டோரியா பொது அரங்கை பார்வையிட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விக்டோரியா மகால் அமைக்கப்பட்டது. கடந்த 1883-ம் ஆண்டு சீன செராமிக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கம் தற்போது ரூ.32.62 கோடியில் அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    விக்டோரியா மகாலை பொதுமக்கள் பார்ப்பதற்கு தனி இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்து பொதுமக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு ஸ்லாட் இருக்கும் வகையில் 60 பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பதிவு செய்யாமல் வருவோரும் மகாலை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. கியூ.ஆர்.கோடு மூலம் பெயர் பதிவு செய்யும் வசதி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கி அனுமதிக்கப்படுகின்றனர்.

    கடந்த டிசம்பர் 27-ந்தேதி முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 25 ஆயிரம் பேர் விக்டோரியா பொது அரங்கை பார்வையிட்டுள்ளனர்.

    தற்போது பொதுமக்கள் காத்திருந்து பார்க்கக்கூடிய சூழல் நிலவி வருவதால் காத்திருப்பு அறை புதிதாக கட்டப்பட்டுள்ளது. மழை, வெயில் பாதிப்பு இல்லாமல் பார்வையாளர்கள் அரங்கிற்கு செல்வதற்கு முன்னதாக குளு குளு வசதியுடன் கூடிய காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த நவீன காத்திருப்போர் அறை 4 அமைக்கப்பட்டு இருப்பதால் அங்கு வரக்கூடிய பார்வையாளர்கள் அதில் சிறிது நேரம் தங்க வைக்கப்படுகின்றனர். ஒரு அறையில் 20 பேர் வரை அமரலாம். இந்த வசதியை பொதுமக்கள் வரவேற்று இருப்பதோடு வெயில் மற்றும் மழையில் இருந்து விலகி பாதுகாப்பாக காத்திருந்து செல்வதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக பாராட்டுகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூட்டணி குறித்து ஊடகங்கள் தேவையற்ற செய்திகளை வெளியிட வேண்டாம்.
    • தமிழகம், தேசிய அளவில் உள்ள அனைத்து கட்சிகளும் தே.மு.தி.க.விற்கு தோழமை கட்சிகள் தான்.

    சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கூட்டணி குறித்து தே.மு.தி.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதுதான் இறுதியான அறிவிப்பு.

    * கூட்டணி குறித்து ஊடகங்கள் தேவையற்ற செய்திகளை வெளியிட வேண்டாம்.

    * வெகு விரைவில் அனைவரையும் அழைத்து நல்ல செய்தியை கூறுவோம்.

    * இன்று கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

    * இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என வெளியான செய்தியிலும் உண்மையில்லை.

    * தமிழகம், தேசிய அளவில் உள்ள அனைத்து கட்சிகளும் தே.மு.தி.க.விற்கு தோழமை கட்சிகள் தான்.

    * மற்றவர்கள் பேசினால் பேச்சுவார்த்தை, தே.மு.தி.க. பேசினால் தனிப்பெயரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×