என் மலர்

    தொழில்நுட்பம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இது திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல.
    • கணினியை பயன்படுத்த சொன்னபோது அதை யாரும் கட்டாயப்படுத்துவதாக கருதவில்லை.

    பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு வருகையால் அதிகளவில் ஆட்குறைப்பை செய்து வருகின்றன.

    தற்போது வேலையிழப்பு என்பதை தாண்டி வேலையில் உயர்ந்த நிலைக்கு செல்லவும் ஏஐ அறிவு அடிப்படை தகுதியாக மாறி வருகிறது.

    அந்த அக்சென்சர் (Accenture) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஜூலி ஸ்வீட் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதாவது, நிறுவனத்தில் ஊழியர்கள் பதவி உயர்வு பெற ஏஐ குறித்த அறிவு அவசியம் என்று அவர் கண்டிஷன் போட்டுள்ளார்.

    இது திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல, கடந்த மூன்று ஆண்டுகளாக ஊழியர்களை இந்தத் தொழில்நுட்பத்திற்கு பழக்கப்படுத்திய பிறகே பதவி உயர்வுக்கு ஏஐ அவசியம் என்ற நிலைப்பாட்டை எடுத்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஜூலி ஸ்வீட் இதுகுறித்து கூறுகையில், "பல ஆண்டுகளுக்கு முன்பு அலுவலகங்களில் கணினியை பயன்படுத்த சொன்னபோது அதை யாரும் கட்டாயப்படுத்துவதாக கருதவில்லை.

    அது வேலை செய்வதற்கான வழியாகப் பார்க்கப்பட்டது. அதேபோல் இன்று அக்சென்சரில் ஏஐ என்பது வேலை செய்வதற்கான வழியாகிவிட்டது." என்று குறிப்பிட்டார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐஐடி பாம்பேவில் கணினி அறிவியலில் பி.டெக் முடித்தவர்.
    • சாம்சங், மெட்டாவில் பணியாற்றியுள்ளார்.

    உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI இல் இந்திய ரோபாட்டிக்ஸ் நிபுணர் தேவேந்திர சிங் சாப்லோட் இணைந்துள்ளார். xAI என்பது சமூக வலைதளமான எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) உடைய ஏஐ பிரிவாகும். 

    எலான் மஸ்க்குடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, சூப்பர் இன்டலிஜென்ஸ்-ஐ உருவாக்கும் இலக்கோடு xAI குழுவில் இணைந்திருப்பதாக தேவேந்திர சிங் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது பதிவிற்கு மஸ்க் பதிலளித்து வரவேற்றுள்ளார்.

    யார் இந்த தேவேந்திர சிங் சாப்லோட்?

    தேவேந்திர சிங் இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி பாம்பேவில் கணினி அறிவியலில் பி.டெக் முடித்தவர். பின்னர், அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் மெஷின் லேர்னிங் துறையில் பிஎச்.டி பட்டம் பெற்றார்.

    தென்கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸில் தனது பணியைத் தொடங்கினார். அதன்பின், மெட்டா நிறுவனத்தில் AI ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றினார்.

    பிரான்ஸின் முன்னணி AI ஸ்டார்ட்அப் நிறுவனமான Mistral AI இல் மல்டிமோடல் ஆராய்ச்சி குழுவிற்குத் தலைமை தாங்கினார். 'மிஸ்ட்ரல் 7பி' போன்ற சக்திவாய்ந்த AI மாடல்களை உருவாக்குவ முக்கியப் பங்காற்றினார்.

    தற்போது xAI நிறுவனத்தில் தொழில்நுட்பப் பணியாளர் (Technical Staff Member) ஆகப் பொறுப்பேற்றுள்ளார்.

    தேவேந்திர சிங் தனது ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சிக்காக 2020-ம் ஆண்டு பேஸ்புக் பெல்லோஷிப் உள்ளிட்ட பல சர்வதேச அங்கீகாரங்களை பெற்றுள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குறைந்த ஊழியர்களுடன் அதிக வேலைகளை முடிக்கவும் மார்க் ஜுக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளார்.
    • பழைய திட்டங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    மெட்டா நிறுவனம் தனது மொத்தப் பணியாளர்களில் சுமார் 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டோரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மெட்டா நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் சுமார் 600 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த மிகப்பெரிய செலவினத்தைச் சமாளிக்க, செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனம் உள்ளது.

    இதுவரை 'மெட்டாவர்ஸ்' (Metaverse) திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்த மெட்டா, இப்போது தனது கவனத்தை முழுமையாக AI மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் (Wearables) போன்ற தொழில்நுட்பங்களுக்கு மாற்றியுள்ளது.

    AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தின் உள்நாட்டுப் பணிகளை வேகப்படுத்தவும், குறைந்த ஊழியர்களுடன் அதிக வேலைகளை முடிக்கவும் மார்க் ஜுக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளார்.

    தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த பணிநீக்கம் மெட்டாவின் அனைத்துப் பிரிவுகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

    குறிப்பாக, லாபகரமாக இல்லாத அல்லது 'மெட்டாவர்ஸ்' சார்ந்த பழைய திட்டங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரி 2026), 'Reality Labs' பிரிவில் சுமார் 10 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர் முறை உள்ளது.
    • குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

    உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகச் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்படுத்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் முடிவெடுத்துள்ளார்.

    உச்சநீதிமன்ற வட்டாரத்தின்படி, வழக்கு ஒதுக்கீடு (Case Allocation) மற்றும் அமர்வுகளைத் தீர்மானிக்கும் பணிகளில் இருந்து மனிதக் குறுக்கீட்டை நீக்கிவிட்டு, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த அவர் முடிவெடுத்துள்ளார்.

    தற்போது நடைமுறையில் உள்ள 'மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்' (Master of the Roster) முறையின்படி, எந்த வழக்கை எந்த நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதியே முடிவு செய்வார்.

    அண்மையில் உத்தரப் பிரதேச குண்டர் சட்டத்திற்கு எதிராக இர்பான் சோலங்கி என்பவர் தாக்கல் செய்த மனுவை சூர்யா காந்த் அமர்வு விசாரித்தது.

    விசாரணையின் போது, இதேபோன்ற ஒரு மனு ஏற்கனவே 2022-ல் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது பின்னர் தெரியவந்தது.

    தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கு, மீண்டும் ஒரு புதிய அமர்வின் முன் எப்படி பட்டியலிடப்பட்டது குறித்து நடந்த உள் விசாரணையில் உச்ச நீதிமன்றப் பதிவகத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

    எனவே இனி வழக்குகள் மற்றும் அமர்வுகளை ஒதுக்கீடு செய்யும் பணியை இனி AI மென்பொருள் கவனிக்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல், சீரான முறையில் வழக்குகளைப் பட்டியலிடும் என்று நம்பப்படுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கூகுள் மேப்ஸ் நேவிகேஷன் அனுபவத்திற்கான மிகப்பெரிய மேம்படுத்தல்.

    கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நேற்று (வியாழக்கிழமை) ஜெமினி ஏஐ மாடலை கூகுள் மேப்ஸ்-இன் "ஆஸ்க் மேப்ஸ்" என்ற அம்சத்துடன் ஒருங்கிணைப்பதாக அறிவித்தார். கூகுள் நிறுவனம் அதன் புதிய "இம்மர்சிவ் நேவிகேஷனையும்" அறிவித்துள்ளது. இது "ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கூகுள் மேப்ஸ் நேவிகேஷன் அனுபவத்திற்கான மிகப்பெரிய மேம்படுத்தல்" என்று அந்நிறுவனம் விவரித்து இருக்கிறது.

    ஏஐ மூலம் இயங்கும் "Ask Maps" அம்சம் கூகுள் மேப்ஸை ஒரு தனிப்பட்ட உதவியாளராக (பெர்சனல் அசிஸ்டண்ட்) மாற்றுகிறது. ஜெமினி மாடல்களை பயன்படுத்துவதன் மூலம், பயனர்கள் சிக்கலான அல்லது மிகைப்படுத்தப்பட்ட கேள்விகளுக்கான பதில்களைப் பெறலாம். மேலும் நிஜ உலக நிலைமைகளுக்கு ஏற்ப தனிப்பட்ட பரிந்துரைகளையும் பெறலாம்.

    எடுத்துக்காட்டாக, பயனர்கள் "வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லாத மிக அருகில் உள்ள பொது குளியலறை எங்கே?" அல்லது "எனது தொலைபேசி இறந்து கொண்டிருக்கிறது, காபிக்காக நீண்ட வரிசையில் காத்திருக்காமல் அதை எங்கே சார்ஜ் செய்வது?" போன்ற கேள்விகளைக் கேட்டு உடனடியாக உகந்த பதிலை பெறலாம்.

    "நீங்கள் "ஆஸ்க் மேப்ஸ்" பொத்தானைத் தட்டி, கேள்விகளை முன்வைத்தால் உரையாடல் நடையில் பதிலளித்து, உங்களுக்கான ஆப்ஷனை காட்சிப்படுத்தும்" என்று கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    "ஆஸ்க் மேப்ஸ் தனித்துவமான உதவியாக இருக்கும், மேப்ஸ்-ஐ க்ளிக் செய்தால்- நீங்கள் செல்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் காண்பித்து தெரிந்து கொள்ள செய்யும். மேலும், உங்களுக்கான பதில்களை பெர்சனலைஸ் செய்து திட்டங்களை செயல்பாடாக மாற்றுவதை எளிதாக்குகிறது."

    இந்த அம்சம் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வெளிவருகிறது. முதற்கட்டமாக ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் இந்த அப்டேட் விரைவில் டெஸ்க்டாப் தளத்திற்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இரு மாடல்களிலும் 50MP பிரைமரி கேமரா உள்ளது.

    நத்திங் நிறுவனத்தின் 4a மற்றும் 4a ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய விற்பனை தொடங்கியது. கடந்த சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இரு ஸ்மார்ட்போன்களுக்கும் அறிமுக சலுகைகள் வழங்கப்படுகிறது. மிட்-ரேஞ்ச் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள நத்திங் 4a சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மேம்பட்ட டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் சிப்செட், புதிய க்ளிஃப் லைட்டிங் மேட்ரிக்ஸ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    இதில் நோட்டிஃபிகேஷன் மற்றும் இன்டராக்டிவ் அம்சங்களுக்காக கூடுதல் எல்.இ.டி. வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார் செட்டப், 5400mAh பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் சலுகை விவரங்கள்:

    நத்திங் 4a 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 31,999

    நத்திங் 4a 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 34,999

    நத்திங் 4a 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 37,999

    நத்திங் 4a ப்ரோ 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 39,999

    நத்திங் 4a ப்ரோ 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 42,999

    நத்திங் 4a ப்ரோ 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 45,999

    நத்திங் 4a ஸ்மார்ட்போன் பிளாக், வைட், புளூ மற்றும் பிங்க் நிறங்களில் கிடைக்கிறது. நத்திங் 4a ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக், சில்வர் மற்றும் பிங்க் நிறங்களில் கிடைக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட் தளம், ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ், க்ரோமா மற்றும் இதர முன்னணி விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

    அறிமுக சலுகையாக இன்று (மார்ச் 13) நத்திங் போன் 4a மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 3,000 வரையிலான வங்கி சலுகைகளும், போன் 4a ப்ரோ மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 4,000 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட விற்பனை தளங்களில் எக்சேஞ்ச் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த தாக்குதல் மனித குலத்திற்கே எச்சரிக்கை மணியாக இருக்கும்.
    • இயந்திரங்கள் மனிதர்களுக்கு எதிராகத் திரும்பி, உலகம் அழியும் சூழல் நிஜமாகிவிடும் என சீனா எச்சரித்துள்ளது.

    ஈரான் உடனான போரில் அமெரிக்க ராணுவம் பல்வேறு செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளது.

    அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை (CENTCOM) தலைவர் பிராட் கூப்பர், தரவுகளை விரைவாக ஆய்வு செய்ய ஏஐ கருவிகள் உதவுவதாக தெரிவித்துள்ளார்.

    பல மணிநேரம் அல்லது நாட்கள் எடுக்கக்கூடிய தரவு ஆய்வுகளை, ஏஐ மூலம் சில நொடிகளில் முடிக்க முடிகிறது. இது எதிரியை விட வேகமாக முடிவுகளை எடுக்க உதவுகிறது. ஆனால் இலக்குகளைத் தாக்குவது குறித்த இறுதி முடிவை எப்போதும் மனிதர்களே (ராணுவ வீரர்கள்) எடுப்பார்கள் என்று கூப்பர் தெரிவித்தார்.

    பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 1,300 பேர் ஈரானில் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதில் தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 175 சிறுமிகள் கொல்லப்பட்டனர். பள்ளியை தாக்கியது அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை என்பதற்கான வீடியோ மற்றும் சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.

    பழைய உளவு தகவல்களால் தவறுதலாக ராணுவ தளத்திற்கு பதிலாக அருகில் உள்ள பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அமெரிக்க ராணுவம் உள் விசாரணை நடத்தி வருகிறது. இந்த பழைய உளவு தகவலை ஏஐ தான் வழங்கியதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை ஏஐ வழங்கிய தவறான தகவலால் இந்த தாக்குதல் நடந்திருந்தால் இது மனித குலத்திற்கே முக்கிய எச்சரிக்கை மணியாக இருக்கும்.

    இதற்கிடையே டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க ராணுவத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த முயன்று வருகிறது.

    தனது ஏஐ மாடல்களை தானியங்கி ஆயுதங்களாகவோ அல்லது உளவு வேலைகளுக்கோ பயன்படுத்தக் கூடாது என்று ஆந்த்ரோபிக் நிறுவனம் பிடிவாதம் காட்டியது. இதையடுத்து, அந்த நிறுவனத்தை Supply Chain Risk என டிரம்ப் நிர்வாகம் பட்டியலிட்டது. அந்த ஒப்பந்தத்தை ஓபன் ஏஐ கைப்பற்றியது.

    இதற்கிடையே ராணுவத்தில் கட்டுப்பாடற்ற முறையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்துச் சீனா எச்சரித்துள்ளது.

    சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் பின் கூறுகையில், மற்ற நாடுகளின் இறையாண்மையை மீற AI-ஐப் பயன்படுத்துவது, மரணத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை அல்காரிதம்களிடம் கொடுப்பது தார்மீக ரீதியான சிதைவாகும்.

    இந்த நிலை தொடர்ந்தால், 'டெர்மினேட்டர்' திரைப்படத்தில் வருவது போல இயந்திரங்கள் மனிதர்களுக்கு எதிராகத் திரும்பி, உலகம் அழியும் சூழல் நிஜமாகிவிடும்" என்று எச்சரித்தார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரான் அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தொடங்குவதற்கு முன்பே இது தொடங்கியது.
    • F-22 ஸ்டெல்த் போர் விமானங்கள், F-35 விமானங்கள் மற்றும் THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் அம்பலமாகின.

    ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலால், ஈரான் இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே இந்த போரில் மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ நடமாட்டம் அனைத்தயும் சீனாவை சேர்ந்த MizarVision என்ற ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனம் கண்காணித்து அந்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவது தெரியவந்துள்ளது.

    அமெரிக்க ராணுவ ரகசியம் என்று கருதப்படும் இவை மிகவும் எளிமையாக சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கிறது.

    ஆராய்ச்சியாளர் ஷானகா அன்செல்ம் பெரேரா மேற்கொண்ட ஆய்வின்படி, பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தொடங்குவதற்கு முன்பே ஜோர்டான், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தளங்களில் எங்கு, எந்தெந்த ஆயுதங்கள் உள்ளன என்பதை இந்த நிறுவனம் செயற்கைக்கோள் படங்களுடன் வரைபடம் போல வெளியிட்டது.

    அமெரிக்காவின் F-22 ஸ்டெல்த் போர் விமானங்கள், F-35 விமானங்கள் மற்றும் THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றின் இருப்பிடம் குறித்த தகவல்கள் இதில் அடங்கும்.

    சீனாவின் Jilin-1 செயற்கைக்கோள் கூட்டமைப்பு மற்றும் Maxar, Airbus போன்ற மேற்கத்திய செயற்கைக்கோள் தரவுகளை ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ந்து இந்த உளவு வேலையை அந்நிறுவனம் செய்து வருகிறது.

    சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இந்த செயற்கைகோள் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் ஈரானுக்குப் போர் வியூகங்களை வகுக்கப் மறைமுகமாக உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

    வழக்கமாக ராணுவ ரகசியமாக வைக்கப்படும் இத்தகைய தகவல்களை ஒரு தனியார் நிறுவனம் பொதுவெளியில் வெளியிடுவது அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பென்டகனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    உக்ரைன் போரின் போது மேற்கத்திய நாடுகள் இதேபோன்ற வணிகரீதியான செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்தியது போல, இப்போது சீனா தனது ஏஐ ஸ்டார்ட்அப்கள் மூலம் அதே உத்தியை பயன்படுத்துகிறது.

    இனி வரும் போர்கள் ஒரு ஏவுகணைத் தாக்குதலுடன் தொடங்காது. மாறாக, விண்வெளியில் இருந்து ஒவ்வொரு இலக்கையும் அடையாளம் காணும் ஒரு ஏஐ மாடலுடன் தான் தொடங்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஒப்போ நிறுவனம் கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த K14x 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷனை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரு வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், ஒப்ப K14x 5ஜி ஸ்மார்ட்போனின் குறைந்த விலை எடிஷனாக புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ K14x 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் நடைபெறுகிறது.

    அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ. 750 உடனடி தள்ளுபடி மற்றும் மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனும் மற்ற வெர்ஷன்களை போன்றே ஐசி புளூ மற்றும் ப்ரிசம் வயலெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

    ஒப்போ K14x 5ஜி அம்சங்கள்:

    6.75 இன்ச் 1604x720 பிக்சல் HD+ ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர்

    ARM மாலி-G57 MC2 GPU

    4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி

    4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

    6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 16 சார்ந்த கலர் ஓ.எஸ். 16

    50MP பிரைமரி கேமரா

    2MP போர்டிரெயிட் சென்சார்

    5MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4

    6500mAh பேட்டரி

    45 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செயலியை அணுகுவதில் 71% சிக்கல்.
    • #InstagramDown என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

    மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் உலகின் முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றாக உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை முதல் இன்ஸ்டாகிராம் உலகளவில் பெரிய அளவிலான தொழில்நுட்பக் கோளாறுகளால் முடங்கியுள்ளது.

    காலை முதல் இன்ஸ்டாகிராம் செயலியில் ஏற்பட்ட கோளாறால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    பயனர்கள் தங்களது 'டைரக்ட் மெசேஜ்' பக்கத்தை அணுக முடியவில்லை. நோட்டிபிகேஷன் வந்தாலும், மெசேஜ் பக்கம் காலியாக தெரிவதாகப் புகார் அளித்துள்ளனர்.

    தேடல் வசதி வேலை செய்யவில்லை என்றும், காண்டாக்ட் லிஸ்ட்டில் உள்ளவர்கள் மறைந்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

    இணையதள சிக்கல்களை கண்காணிக்கும் 'டவுன் டிடெக்டர்' தளத்தின்படி, இதுபோல சுமார் 10,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலான புகார்கள் அமெரிக்காவிலிருந்தும், குறிப்பிடத்தக்க புகார்கள் இந்தியாவில் இருந்தும் பதிவாகி உள்ளன. 

    71% புகார்கள் செயலியை அணுகுவதிலும், 19% புகார்கள் சர்வர் இணைப்பு தொடர்பாகவும், 5% புகார்கள் Feed தொடர்பாகவும் பதிவாகியுள்ளன.

    பலர் எக்ஸ் தளத்தில் #InstagramDown என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வந்தன.
    • அல்ட்ரா மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடலை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இதுபற்றி ஆப்பிள் தரப்பில் வழக்கம் போல எந்த தகவலும் வழங்கப்படாமல் உள்ளது. இதுவரை மடிக்கக்கூடிய ஐபோனின் ரென்டர்கள், கான்செப்ட் டிசைன் மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வந்தன.

    இந்த நிலையில், மடிக்கக்கூடிய ஐபோன் பற்றிய புதிய விவரங்கள் லீக் ஆகியுள்ளது. சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஐபோன் மாடலுக்கு `ஐபோன் அல்ட்ரா' என பெயர் சூட்ட இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இது ஆப்பிள் தற்போது விற்பனை செய்து வரும் டாப் எண்ட் ஐபோன் ப்ரோ மேக்ஸ் மாடல்களின் மேல் நிலைநிறுத்தப்படும்.

    அல்ட்ரா சீரிசில் டாப் எண்ட் ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்ஸ், மேக்புக் என இதர சாதனங்களிலும் அல்ட்ரா மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. இவை அந்தந்த சாதனங்களில் அதிக அம்சங்களுடன், விலை உயர்ந்த டாப் எண்ட் மாடலாக இருக்கும். புதிய ஐபோன்களின் விலை குறித்த தகவல்கள் தெளிவற்றதாகவே உள்ளன. எனினும், மடிக்கக்கூடிய ஐபோன்கள் சீனாவில் 10,000 யுவான்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1.33 லட்சம்) வரை தொடங்கலாம்.

    மடிக்கக்கூடிய ஐபோன்களின் டாப் எண்ட் மாடல்கள் விலை 20,000 யுவான்கள் (இந்திய மதிப்பில் ரூ. 2.6) லட்சம் வரை செல்லும் என்று கூறப்படுகிறது. விலை அடிப்படையில் பார்க்கும் போது, என்ட்ரி லெவல் மற்றும் டாப் எண்ட் மாடல்களின் அம்சங்களில் அதிக இடைவெளி இருக்கும். ஏற்கனவே வெளியான தகவல்களில் ஆப்பிள் தனது மடிக்கக்கூடிய ஐபோனை 2,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1.8 லட்சம்) விலையில் விற்பனைக்கு கொண்டு வரும் என்று கூறப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போக்கோ C85x 5ஜி ஸ்மார்ட்போன் 6300mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. போக்கோ C85x 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் HD+ ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. புதிய போக்கோ ஸ்மார்ட்போன் யுனிசாக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    மெமரியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. வரை ரேம் எக்ஸ்பான்ஷன் வசதியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த சியோமி ஹைப்பர் ஓ.எஸ். கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 32MP பிரைமரி கேமரா, இரண்டாவது லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் போக்கோ C85x 5ஜி ஸ்மார்ட்போன் 6300mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அல்லது 1000 முறை சார்ஜிங் செய்த பிறகும் பேட்டரி ஹெல்த் 80 சதவீதம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 7.5 வாட் ரிவர்ஸ்-வயர்டு சார்ஜிங் வசதி உள்ளது.

    போக்கோ C85x 5ஜி அம்சங்கள்:

    6.9 இன்ச் 1600x720 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் யுனிசாக் டி8300 6 நானோமீட்டர் பிராசஸர்

    Arm மாலி-G57 MC2 GPU

    4 ஜி.பி. ரேம்

    64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 16 சார்ந்த சியோமி ஹைப்பர் ஓ.எஸ்.

    டூயல் சிம் ஸ்லாட்

    32MP பிரைமரி கேமரா, 2-வது லென்ஸ்

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    எஃப்.எம். ரேடியோ

    வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP52)

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4

    யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்

    6300mAh பேட்டரி

    15 வாட் சார்ஜிங்

    இந்திய சந்தையில் புதிய போக்கோ C85x 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு மற்றும் கிரீன் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போக்கோ C85x 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மார்ச் 14-ஆம் தேதி தொடங்குகிறது.

    ×