என் மலர்

    விளையாட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புளோரியன் விர்ட்ஸ் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்.
    • பேயர் லெவர்குசன் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று லிவர்பூல். இந்த அணி ஜெர்மனியை சேர்ந்த அட்டாக் மிட்பீல்டர் புளோரியன் விர்ட்ஸை 157 மில்லியன் டாலர் கொடுத்து வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.

    தற்போது புளோரியன் விர்ட்ஸ் பேயர் லெவர்குசன் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்கு டிரான்ஸ்பர் கட்டணமாக இந்த தொகையை செலுத்த இருக்கிறது லிவர்பூல். இதன் மூலும் 100 மில்லியன் பவுண்ட்ஸ்க்கும் அதிகமான விலைக்கு டிரான்ஸ்பர் ஆன வீரர்கள் பட்டியலில் புளோரியன் விர்ட்ஸ் இணைய இருக்கிறார்.

    செல்சி அணி என்சோ பெர்னாண்டஸை கடந்த 2023-ல் 106.7 பவுண்ட்ஸ்க்கு ஒப்பந்தம் செய்தது. பின்னர் 115 மில்லியன் பவுண்ட்ஸ்க்கு மொய்சஸ் கெய்சிடோவை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2ஆவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 207 ரன்கள் சேர்த்தது.
    • ஸ்டார்க் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2ஆவது இன்னிங்சில் ரபாடா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (11ஆம் தேதி) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ரபாடாவின் (5 விக்கெட்) அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 212 ரன்னில் சுருண்டது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. புதிய பந்தில் ஸ்டார்க் அபாரமாக பந்து வீச முதல் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பவுமா 3 ரன்களுடனும், பெடிங்காம் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 36 ரன்களிலும், பெடிங்காம் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த இருவரையும் பேட் கம்மின்ஸ் வீழ்த்தினார். அதன்பின் வந்தவர்கள் தொடர்ச்சியாக வெளியேற தென்ஆப்பிரிக்கா 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் பின்தங்கியுள்ளது. பேட் கம்மின்ஸ் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினர். லபுசேன் (22), கவாஜா (6), கேமரூன் க்ரீன் (0), ஸ்மித் (13), டிராவிட் ஹெட் (9) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அலேக்ஸ் ஹேரி தாக்குப்பிடித்து 43 ரன்கள் சேர்த்தார். மிட்செல் ஸ்டார்க்கு தாக்குப்பிடித்து விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார். இதனால் நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 1344 ரன்கள் எடுத்திருந்தது.

    ஸ்டார்க் 16 ரன்களுடனும், நாதன் லயன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. நாதன் லயன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்திருந்தது.

    9ஆவது விக்கெட்டுக்கு ஸ்டார்க் உடன் ஹேசில்வுட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை வீழ்த்த தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டனர். இறுதியாக 207 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஸ்டார்க் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹேசில்வுட் கடைசி விக்கெட்டாக 17 ரன்னில் ஆட்டமிழந்தார். ரபாடா அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ஆஸ்திரேலியா 281 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
    • 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும்.

    மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டு மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.

    மேம்பட்ட காற்றோட்டம் உள்ளிட்ட அமைப்புடன் கூடிய புதிய ஹைபிரிட் ஆடுகளம் அமைக்கப்படுகிறது.

    மைதானத்தில் புதிய லாக்கர் அறைகள் கட்டப்படுகின்றன. லிஃப்ட், விருந்தோம்பல் பகுதிகள், பெரிய LED திரைகள், மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள், CCTV கண்காணிப்பு மற்றும் புதிய ஒலி அமைப்பு ஆகியவை நிறுவப்பட உள்ளன.

    மேலும் மைதானத்தின் இருக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளன. இந்த மைதானத்தில் 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும்.

    இந்த புதுப்பித்தல்கள் அஸ்டெகா மைதானத்தை உலகத் தரம் வாய்ந்த மைதானமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னுக்கு சுருண்டது.
    • ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பாட் கம்மின்ஸ் முதல் இன்னிங்சில் 18.1 ஓவரில் 6 மெய்டனுடன் 28 ரன் மட்டுமே வழங்கி 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

    புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்னிங்சில் ஒரு கேப்டனின் ஆகச் சிறந்த பந்துவீச்சு இதுவா–கும்.

    இதற்குமுன் 1982-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் பாப் வில்லிஸ் 101 ரன்னுக்கு 6 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் சிறந்த பந்து வீச்சாக இருந்தது. 43 ஆண்டு கால அந்த சாதனையை கம்மின்ஸ் முறியடித்தார். ஐ.சி.சி. நடத்தும் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி ஒன்றில் சிறந்த பந்து வீச்சாகவும் இது அமைந்தது.

    மேலும், கம்மின்ஸ் எடுத்த 6 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்டில் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 300-ஆக உயர்ந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 40-வது வீரர், ஆஸ்திரேலிய அளவில் 8-வது பவுலர் என்ற சிறப்பையும் கம்மின்ஸ் பெற்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3-வது உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா வெண்கலப் பதக்கம் வென்றார்.

    முனீச்:

    3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் வரும் 14-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்திய அணியில் மொத்தம் 36 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள்.

    தமிழகத்தைப் பூர்விகமாக கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    25 மீட்டர் பிஸ்டல் பெண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் மனு பாக்கர் 6வது இடம்பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

    இந்நிலையில், பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். நடப்பு தொடரில் இந்திய அணி 2 பதக்கங்கள் வென்றுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, பிரிட்டனின் ஹீதர் வாட்சன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ஜகாரோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ஒரு கட்டத்தில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா. 8வது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் கேரி- மிட்செல் ஸ்டார்க் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்த நிலையில் அலெக்ஸ் கேரி 43 ரன்னில் அவுட்டானார்.

    இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இன்னும் 3 நாள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெறுவது ஆஸ்திரேலியாவா, தென் ஆப்பிரிக்காவா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென்ஆப்பிரிக்கா நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.
    • கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்த 138 ரன்னில் சுருண்டது.

    உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ரபாடாவின் (5 விக்கெட்) அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 212 ரன்னில் சுருண்டது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. புதிய பந்தில் ஸ்டார்க் அபாரமாக பந்து வீச நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தென்அப்பிரிக்கா 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. பவுமா 3 ரன்களுடனும், பெடிங்காம் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 36 ரன்களிலும், பெடிங்காம் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த இருவரையும் பேட் கம்மின்ஸ் வீழ்த்தினார். அதன்பின் வந்தவர்கள் தொடர்ச்சியாக வெளியேற தென்ஆப்பிரிக்கா 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    பேட் கம்மின்ஸ் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதி வருகின்றன.
    • கோப்பையை வெல்லும்அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும்.

    ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும். இது முந்தைய சீசனை விட 125 சதவிகிதம் அதிகமாகும். 2-வது இடத்ததை பிடிக்கும் அணிக்கு ரூ.18.49 கோடி பரிசு கிடைக்கும்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.12.33 கோடி கிடைக்கும். இது கடந்த முறை சாம்பியனான ஆஸ்திரேலியா பெற்ற பரிசு தொகையை விட கூடுதலாகும்.

    இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்து இருந்தது. 2 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளிடம் தோற்று இந்தியா ஐ.சி.சி. கோப்பையை இழந்தது என்பது குறிப் பிடத்தக்கது. 4-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.10.25 கோடி கிடைக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது
    • இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் அடித்தார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும் அடித்தனர்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 5 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள்முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் பவுமா 3 ரன்களுடனும் பெடிங்ஹாம் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சச்சினின் மிக முக்கியமான சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.

    ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சினை ஸ்டீவ் ஸ்மித் முந்தியுள்ளார்.

    ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சச்சின் 6 அரைசதங்கள் நடித்துள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 7 அரைசதங்கள் அடித்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

    அதே சமயம் இப்பட்டியலில் 10 அரைசதங்களுடன் யாரும் நெருங்க முடியாத உயரத்தில் விராட் கோலி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஷாருக் கான் 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
    • உர் ரஹ்மான் 2 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார்.

    டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், கோவையில் இன்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சியாச்செம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்குகியது. தொடக்க ஆட்டக்காரர் ஜிதேந்திர குமார் 17 ரன்னும், சுரேஷ் லோகேஷ்வர் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாலசுப்ரமணியன் சச்சின் 15 ரன்னும், ஆண்ட்ரி சித்தார்த் 20 ரன்னும், மாதவ பிரசாத் 4 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்துள்ளது. ஷாருக் கான் 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கோவை கிங்ஸ் அணி நிர்ணயித்த 170 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான ராம் அரவிந்த் மற்றும் பாலசந்தர் அனிருத் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அதிரடியாக ஆடிய பாலசந்தர் அனிருத் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சத்ருவேத், ராம் அரவிந்துடன் ஜோடி சேர்ந்து கோவை பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அபாரமாக விளையாடிய ராம் அரவிந்த், 48 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இதன்பின் களமிறங்கிய அதீக் உர் ரஹ்மான் 2 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். இருப்பினும், கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற சத்ருவேத், 23 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அசத்தினார்.

    இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 17.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் மதுரை பாந்தர்ஸ் நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
    • அதன்படி, முதலில் ஆடிய கோவை 169 ரன்கள் எடுத்துள்ளது.

    கோவை:

    டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், கோவையில் இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சியாச்செம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்குகியது. தொடக்க ஆட்டக்காரர் ஜிதேந்திர குமார் 17 ரன்னும், சுரேஷ் லோகேஷ்வர் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    பாலசுப்ரமணியன் சச்சின் 15 ரன்னும், ஆண்ட்ரி சித்தார்த் 20 ரன்னும், மாதவ பிரசாத் 4 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்துள்ளது. ஷாருக் கான் 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

    ×