என் மலர்

    விளையாட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையரில் இந்திய ஜோடி 2வது சுற்றில் வெற்றி பெற்றது.

    மக்காவ்:

    மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் ஹிரோகி நிஷி-காகேரு குமாகாய் ஜோடி உடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 10-21 என இழந்த இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 22-20, 21-16 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் சாய் பிரதீக்-பிருதிவி கிருஷ்ணமூர்த்தி ராய் ஜோடி, மலேசிய ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
    • அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் நேரடியாக 2வது சுற்றுக்கு தேர்வாகினர்.

    பெண்கள் ஒற்றையரில் இன்று நடைபெற்ற 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சீனாவின் கியோ ஹான்யூ உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரிவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்தது.
    • 3வது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன், சுப்மன் கில் ஜோடி 45 ரன்கள் சேர்த்தது.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் பும்ரா, பண்ட், அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    அதன்படி, இந்திய அணியின் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கே.எல்.ராகுல் 14 ரன்னில் அவுட்டானார். சாய் சுதர்சனுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.

    3வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 21 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடிய சாய் சுதர்சன் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 9 ரன்னில் அவுட்டானார். மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

    7வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய கருண் நாயர் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டாங்க், அட்கின்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது.
    • நியூசிலாந்தின் மேட் ஹென்றி 6 விக்கெட்டும், நாதன் சுமித் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 60.3 ஓவரில் 149 ரன்னில் சுருண்டது. கேப்டன் கிரேக் எர்வின் 39 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 6 விக்கெட்டும், நாதன் சுமித் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்திருந்தது. வில் யங் (41 ரன்), டிவான் கான்வே (51 ரன்) ஆகியோர் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. வில் யங் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்றி நிக்கோல்ஸ் 34 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கான்வே உடன் டேரில் மிட்செல் இணைந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தனர். கான்வே 88 ரன்னிலும், டேரில் மிட்செல் 80 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஜிம்பாப்வே சார்பில் முசரபானி 3 விக்கெட்டும், சிவாங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 31 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. ஜிம்பாப்வே அணி இன்னும் 127 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இந்திய வீரர் லக்‌ஷயா சென் 2வது சுற்றில் வென்றார்.

    மக்காவ்:

    மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் வார்டயோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-14, 14-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் மன்னேபல்லி ஹாங்காங் வீரரை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லெஹெக்கா 7-6 (7-2), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
    • அனிசிமோவா 6-4 7-6 (7-5) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    டொரண்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜிரி லெஹெக்கா (செக்) - மெக்கன்சி மெக்டொனால்ட் உடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லெஹெக்கா 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் 3-வது சுற்றில் ஆர்தர் பில்ஸ் உடன் மோத உள்ளார்.

    மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான ஆட்டத்தில் அமண்டா அனிசிமோவா (அமெரிக்கா) மற்றும் லுலு சன் (நியூசிலாந்து) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் அனிசிமோவா 6-4 7-6 (7-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கவாஸ்கர் 1979ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரே இன்னிங்சில் 732 ரன்கள் குவித்திருந்தார்.
    • சுப்மன் கில் இதுவரை இங்கிலாந்தில் தொடரில் 737 ரன்கள் அடித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 5ஆவது போட்டி இன்று தொடங்கியது. முதல் நான்கு போட்டிகளில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும், இந்தியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

    இந்த தொடரில் இந்திய அணி கேப்டனான சுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசி போட்டிக்கு முன்னதாக 8 இன்னிங்சில் 4 சதங்களுடன் (இதில் ஒரு இரட்டை சதம் அடங்கும்) 722 ரன்கள் குவித்திருந்தார்.

    இன்றைய போட்டியின் மதிய உணவு இடைவேளை வரை 15 ரன்கள் எடுத்துள்ளார். 11 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

    கவாஸ்கர் 1979ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 732 ரன்கள் குவித்திருந்தார். இதுதான் சாதனையாக இருந்தது. இதை தற்போது சுப்மன் கில் முறியடித்துள்ளார். தற்போது வரை 737 ரன்கள் அடித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாய் சுதர்சன் 67 பந்தில் 25 ரன்கள் அடித்துள்ளார்.
    • சுப்மன் கில் 23 பந்தில் 15 ரன்கள் எடுத்துள்ளார்.

    இங்கிலாந்து- இந்தியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா, பண்ட், அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஓவல் சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்தனர். இதனால் ஜெய்ஸ்வால் பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்டார். அவர் 2 ரன்கள் எடுத்த நிலையில் அட்கின்சன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

    அடுத்த கே.எல். ராகுல் உடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் ஸ்விங் பந்தை திறமையாக எதிர்கொண்டு விளையாடினர். என்றாலும், கிறிஸ் வோக்ஸ் வீசிய 16ஆவது ஓவரில் கே.எல். ராகுல் இன்சைடு எட்ஜ் மூலம் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

    அப்போது இந்தியா 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. 4ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்துள்ளார். இருவரும் நேர்த்தியாக பந்தை எதிர்கொண்டு ரன்கள் சேர்த்து வந்தனர். இந்திய அணி 23 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. அத்துடன் முதல்நாள் உணவு இடைவேளை விடப்பட்டது. சாய் சுதர்சன் 23 ரன்களுடனும், சுப்மன் கில் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அட்கின்சன் பந்தில் ஜெய்ஸ்வால் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
    • இன்சைடு எட்ஜ் மூலம் ஸ்டம்பை பறிகொடுத்தால் கே.எல். ராகுல்.

    இங்கிலாந்து- இந்தியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா, பண்ட், அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். ஓவல் சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்தனர். இதனால் ஜெய்ஸ்வால் பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்டார். அவர் 2 ரன்கள் எடுத்த நிலையில் அட்கின்சன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

    அடுத்த கே.எல். ராகுல் உடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் ஸ்விங் பந்தை திறமையாக எதிர்கொண்டு விளையாடினர். என்றாலும், கிறிஸ் வோக்ஸ் வீசிய 16ஆவது ஓவரில் கே.எல். ராகுல் இன்சைடு எட்ஜ் மூலம் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

    அப்போது இந்தியா 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. 4ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முன்னணி 6 அணிகள் ஒரு பிரிவாக பிரிக்கப்படும்.
    • மற்ற 6 அணிகள் மற்றொரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும்.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்தி வருகிறது. இதில் 9 அணிகள் புள்ளிகள் பட்டியலில் இடம்பெறும். 2025 முதல் 2027 வரை நடத்தப்படும் போட்டிகளில் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

    இனிமேல் தலா 6 அணிகளா இரண்டு பிரிவுகளாக பிரித்து டெஸ்ட் தொடரை நடத்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கான யதார்த்தம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்த சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    ஐசிசி தரவரிசையில் முதல் 6 இடங்களை பிடித்துள்ள அணிகள் ஒரு பிரிவாகவும், மீதமுள்ள 3 அணிகளுடன் மேலும் 3 அணிகள் சேர்க்கப்பட்டு 2ஆவது பிரிவாகவும் பிரிக்கப்படும்.

    முதல் பிரிவில் கடைசி இடம் பிடிக்கும் அணி, அடுத்த முறை 2ஆவது பிரிவுக்கு தள்ளப்படும். 2ஆவது பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணி முதல் பிரிவுக்கு முன்னேறும். இதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். முன்னணி அணிகள் அடிக்கடி மோதிக்கொள்ளும். இதனால் வருவாய் அதிக அளவில் ஈட்டலாம் என்பது ஐசிசி-யின் திட்டம்.

    தற்போதைய நிலையில் பாகிஸ்தான் 7ஆவது இடத்தில் உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது பாகிஸ்தான் 2ஆவது பிரிவுக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் போன்ற அணிகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். அவர்கள் முன்னணி அணிகளுடன் விளையாடாத நிலை ஏற்படும்.

    இந்த நிலையில் இந்த திட்டத்தை எதிர்க்க பாகிஸ்தான் தயாராகி வருகிறது. இந்த முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்றால் முழு உறுப்பினர் நாடுகளான 12 பேரில், 3-ல் 2 பங்கு உறுப்பினர் நாடுகள் ஆதரவு தேவை.

    "கிரிக்கெட் அதிக்கம் செலுத்தும் சில நாடுகளின் சொத்து அல்ல. சிறிய அணிகளுக்கு டாப் லெவல் போட்டிகளில் விளையாட தொடர்ந்த வாய்ப்பு அளிக்கப்பட்டால் மட்டுமே அவர்களால் முன்னேற முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இங்கிலாந்து இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.
    • இந்தியா வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஒல்லி போப் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணி கேப்டன் சுப்டன் கில் தொடர்ந்து ஐந்து போட்டிகளிலும் டாஸ் தோற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் பும்ரா, ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் நீக்கப்பட்டு கருண் நாயர், ஜுரேல், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்படடுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கே.எல். ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
    • கே.கே.ஆர். அணி அவரை வாங்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பெரும்தொகை கொடுத்து ஏலம் எடுத்தது. டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடினார். மேலும், இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கே.எல். ராகுலை ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் உறுதியானால், கேப்டன் பதவி கூட கொடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    ×