என் மலர்

    விளையாட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.
    • நாங்கள் 2010-ம் ஆண்டு முதல் மெஸ்ஸியின் ஆட்டத்தை கவனித்து வருகிறோம்.

    உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி இன்று அதிகாலை இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அர்ஜென்டினா அணியின் கேப்டனான அவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். இதனால், கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து உள்ளனர்.

    அவர் கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸி பங்கேற்றார். அவரை பார்ப்பதற்காக ஒரு தம்பதி தேனிலவை ரத்து செய்துள்ளது.

    இது தொடர்பாக மெஸ்ஸி ரசிகை கூறியதாவது:-

    கடந்த வெள்ளிக்கிழமை எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. மெஸ்ஸியை பார்ப்பதற்காக எங்களது தேனிலவு திட்டத்தை ரத்து செய்து விட்டோம். நாங்கள் 2010-ம் ஆண்டு முதல் மெஸ்சியின் ஆட்டத்தை கவனித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். அவரது கணவரும் இதே தகவலை தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 70 அடி உயரத்தில் உள்ள சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்து உள்ளார்.
    • 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். 3 நாள் சுற்றுப்பயணத்தின்படி, இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு இன்று அதிகாலை வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

    இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்ஸியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கையில் உலக கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்து உள்ளார். அப்போது இந்தியா மற்றும் அர்ஜென்டினாவின் கொடிகளை ரசிகர்கள் உயர பிடித்தபடி இருந்தனர்.

    மெஸ்ஸியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில் அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகள் இருந்ததால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை.

    மேலும் அவர் உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்து ரசிகர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகர் தனுசும், நடிகை மிருணாள் தாகூரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
    • அதனை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் மற்றும் மிருணாள் தாகூர் காதலிப்பதாக கூறப்பட்டது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுசும், பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

    அஜய் தேவ்கானுடன், மிருணாள் தாகூர் நடித்துள்ள 'சன் ஆப் சர்தார்-2' பட விழாவில் தனுஷ் கலந்துகொண்டதும், மிருணாள் தாகூருடன் கைகோர்த்துக்கொண்டு சுற்றியதும் இதற்கு தூபம் போடுவதுபோல அமைந்தது.

    இதுகுறித்து பேசிய மிருணாள் தாகூர், "நடிகர் தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. எங்கள் இருவரை பற்றியும் வதந்திகள் பரவி வருவதை அறிகிறோம். இதுபோன்ற வதந்திகளை பார்க்கும்போது, எனக்கு சிரிப்புதான் வந்தது" என்று விளக்கம் கொடுத்து இந்த சர்ச்சைக்கு முடிவுரை எழுதினார்.

    இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் அய்யரும் நடிகை மிருணாள் தாகூரும் ரகசியமாக காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் கசிந்தது.

    ஷ்ரேயாஸ் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் தங்களின் கேரியரின் உச்சத்தில் இருப்பதால் இந்த காதலை பொதுவெளியில் அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும் தங்ஙளின் நண்பர்களின் பார்ட்டி மற்றும் விழாக்களில் மட்டும் சந்தித்து காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில் இந்த வதந்திக்கு மிருணாள் தாகூர் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்துள்ளார். அதில், பிரபலங்களாக இருப்பவர்கள் என்றால் விமர்சனங்களும் வதந்திகளும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிடும். ஆரம்ப காலங்களில் அவை எனக்கு சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது 'இதுவா?' என்று எளிதாக கடந்து செல்ல கற்றுக்கொண்டேன். தேவையற்ற விமர்சனங்களை நான் கவனிக்கவே மாட்டேன். எந்த வதந்தியும் என் மனநிலையையோ, என் வாழ்க்கையையோ பாதிக்காது" என்று அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.
    • இந்திய அணி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் அரைறுதியில் நடப்பு சாம்பியன் எகிப்தை எதிர்கொள்கிறது.

    சென்னை:

    5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 7-4, 7-4, 7-2 என்ற நேர்செட்டில் டீகான் ரஸ்செலை தோற்கடித்தார். ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் 7-1, 7-6, 7-1 என்ற நேர்செட்டில் வான் நிகெர்க்கை விரட்டியடித்தார். மற்றொரு பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 7-3, 7-4, 7-4 என்ற நேர்செட்டில் ஹாய்லி வார்டை வீழ்த்தினார்.

    இந்திய அணி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் எகிப்தை எதிர்கொள்கிறது. முன்னதாக எகிப்து அணி கால்இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றியது.

    மற்றொரு கால்இறுதியில் ஹாங்காங் 3-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை வென்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. ஜப்பான்-மலேசியா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஆனால் செட் கணக்கின் அடிப்படையில் ஜப்பான் வெற்றி பெற்று அரைஇறுதியை எட்டியது. அரைஇறுதியில் ஹாங்காங்- ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கையில் உலகக் கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட இந்த சிலையை மெஸ்ஸி காணொலி மூலமாக இன்று திறந்து வைத்துள்ளார்.
    • இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

    உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவுக்கு வந்தடைந்தார். அதிகாலை 3 மணிக்கு வந்த அவரை ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

    இந்நிலையில் கொல்கத்தாவில் லேக்டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்ஸியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கையில் உலகக் கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை மெஸ்ஸி காணொலி மூலமாக இன்று திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

    இதனையடுத்து மெஸ்ஸியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

    இதில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், நடிகர் ஷாருக்கான் உள்பட பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மெஸ்ஸியுடன் ஷிப் ஷங்கர் பத்ரா என்ற அவரது தீவிர ரசிகரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 56 வயதான பத்ரா தனது வீட்டை அர்ஜென்டினா கொடி நிறத்தில் வர்ணம் தீட்டி அழகு பார்த்தவர். தான் நடத்திய டீ கடையை அர்ஜென்டினா ரசிகர் கிளப் என்ற பெயரில் மாற்றினார். தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் மெஸ்ஸியை காண ஆர்வமாக உள்ளார். ஏற்கனவே ரூ.7 ஆயிரத்துக்கு இரு டிக்கெட் வாங்கியுள்ள நிலையில் இப்போது மெஸ்ஸியை நேரில் பார்க்கும் அரிய வாய்ப்பு அவருக்கு கிட்டியுள்ளது.

    கொல்கத்தா பயணத்தை முடித்துக் கொண்டு மெஸ்ஸி பிற்பகல் ஐதராபாத்துக்கு செல்கிறார். அங்கு இரவில் காட்சி கால்பந்து போட்டியில் ஆடுகிறார். நாளை மும்பைக்கு செல்லும் அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 15-ந்தேதி டெல்லிக்கு புறப்படும் அவர் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுகிறார். 3 நாள் இந்திய பயணத்தில் அவர் மொத்தம் 72 மணி நேரம் செலவிடுகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மெஸ்ஸியுடன் ஷிப் ஷங்கர் பத்ரா என்ற அவரது தீவிர ரசிகரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • 56 வயதான பத்ரா தனது வீட்டை அர்ஜென்டினா கொடி நிறத்தில் வர்ணம் தீட்டி அழகு பார்த்தவர்.

    கொல்கத்தா:

    உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவுக்கு வந்தடைந்தார். 14 ஆண்டுக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு வருகை தருவதால் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். கொல்கத்தா முழுவதும் மெஸ்ஸியின் ஜூரம் ஆட்டுவிக்கிறது. அவரது கட்அவுட்கள், சுவரொட்டிகளை பல இடங்களில் பார்க்க முடிகிறது.

    கொல்கத்தாவிற்கு வந்தடைந்த மெஸ்ஸியை அவரது ரசிகர்கள் வழிநெடுகிலும் கூட்டமாக நின்று ஆரவாரமாக வரவேற்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சூர்யவன்ஷி 95 பந்தில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • இதில் 14 சிக்சர்களும் அடங்கும்.

    துபாய்:

    ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. இதில் பீகாரைச் சேர்ந்த 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். அவர் 95 பந்தில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 14 சிக்சர்களும் அடங்கும்.

    ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 32 பந்தில் 100-ஐ கடந்து டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய இந்தியர்களில் 3-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் (14 சிக்சர்) அதிக சிக்சர் அடித்தவர் என்ற புதிய சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

    ஏற்கனவே, ஐ.பி.எல். மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் வரும் 26ம் தேதி தொடங்குகிறது.
    • பிரிடோரியா கேபிடல்ஸ் அணி கேப்டனாக கேசவ் மகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கேப் டவுன்:

    தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான ஏற்பாடுகளில் அனைத்து அணியினரும் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் சுழல்பந்து வீச்சாளரான கேசவ் மகராஜ், பிரிடோரியா கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் கேசவ் மகராஜ் 33 போட்டிகளில் 27 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆந்திர பிரதேச அணி 19.1 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    புனே:

    சையத் முஷ்டாக் அலி கோப்பையின் நடப்பு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ந்டந்து வருகிறது.

    இந்நிலையில், புனேவில் உள்ள டி.ஒய்.பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆந்திர பிரதேச அணி 19.1 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்ரீகர் பரத் 39 ரன்னும், நிதிஷ் ரெட்டி 25 ரன்னும் எடுத்தனர்.

    மத்திய பிரதேச அணி சார்பில் ஷிவம் ஷுக்லா 4 விக்கெட்டும், திரிபுரேஷ் சிங் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    எளிய இலக்கை துரத்திய மத்திய பிரதேச அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. நிதிஷ்குமார் ஒரே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இதன்மூலம் நடப்பு தொடரில் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை நிதிஷ் ரெட்டி பெற்றுள்ளார்.

    அடுத்து இணைந்த ரிஷப் சௌகான்-ராகுல் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ரிஷப் சௌகான் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

    இறுதியில், மத்திய பிரதேச அணி 17.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணி வெற்றியைப் பதிவுசெய்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
    • பெண்கள் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.

    கட்டாக்:

    ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான அனுபமா உபாத்யாயா உடன் மோதினர்.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் ஆதிக்கம்
    • மலேசியாவை 297 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

    2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் இன்று துபாயில் தொடங்கியது. இத்தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

    இந்த நிலையில் இன்று ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகள் போட்டியைத் தொடங்கின. அதன்படி இந்திய அணி, யுஏஇயையும், பாகிஸ்தான் மலேசிய அணியையும் எதிர்கொண்டன. முதல் போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 433 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 434 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய யுஏஇ அணி தொடக்கம் முதலே சரிவைச் சந்தித்தது. இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 234 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    மறுபுறம், தொடரின் இரண்டாவது போட்டியில் மலேசிய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மலேசியா, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 346 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மலேசியா, 19.4 ஓவர்களிலேயே 48 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் 297 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தானும் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலிய அணி 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது.
    • தென் ஆப்பிரிக்கா 75 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது.

    வெலிங்டன்:

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் வெலிங்டனில் நடைபெற்ற இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி இன்று நிறைவடைந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டி முடிவடைந்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில் ஆஸ்திரேலிய அணி 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. தென் ஆப்பிரிக்கா 75 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வெற்றி பெற்ற நியூசிலாந்து (66.67 சதவீதம்) அணி சில புள்ளிகள் கூடுதலாக பெற்ற நிலையில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இதனால் 3-வது இடத்தில் இருந்த இலங்கை அணி (66.67 சதவீதம்) 4-வது இடத்திற்கு இறங்கியுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் (50.00 சதவீதம்) மற்றும் இந்தியா (48.15 சதவீதம்) அணிகளும் தலா ஒரு இடம் சரிந்து 5 மற்றும் 6-வது இடத்திற்கு இறங்கியுள்ளன.

    இங்கிலாந்து (30.95 சதவீதம்) 7-வது இடத்திலும், வங்கதேசம் (16.67 சதவீதம்) 8-வது இடத்திலும் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (4.76 சதவீதம்) கடைசி இடத்திலும் உள்ளன.

    ×