என் மலர்

    ஜிம்பாப்வே

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது.
    • நியூசிலாந்தின் மேட் ஹென்றி 6 விக்கெட்டும், நாதன் சுமித் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 60.3 ஓவரில் 149 ரன்னில் சுருண்டது. கேப்டன் கிரேக் எர்வின் 39 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 6 விக்கெட்டும், நாதன் சுமித் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்திருந்தது. வில் யங் (41 ரன்), டிவான் கான்வே (51 ரன்) ஆகியோர் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. வில் யங் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்றி நிக்கோல்ஸ் 34 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கான்வே உடன் டேரில் மிட்செல் இணைந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தனர். கான்வே 88 ரன்னிலும், டேரில் மிட்செல் 80 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஜிம்பாப்வே சார்பில் முசரபானி 3 விக்கெட்டும், சிவாங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 31 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. ஜிம்பாப்வே அணி இன்னும் 127 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 180 ரன்கள் குவித்தது.
    • கான்வே, ரச்சின் ரவீந்திரா தலா 47 ரன்னும், சைய்பட் 30 ரன்னும் எடுத்தனர்.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்தது. லீக் போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இதில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. கான்வே, ரச்சின் ரவீந்திரா தலா 47 ரன்னும், சைய்பட் 30 ரன்னும் எடுத்தனர்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் லுங்கி நிகிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரெடொரியஸ் அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்ரிக்ஸ் 37 ரன்னும், டிவால்டு பிரேவிஸ் 31 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா 3 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து முத்தரப்பு தொடரின் கோப்பையைக் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது மேட் ஹென்றிக்கு அளிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இத்தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் ஜிம்பாப்வே தோல்வி கண்டது.
    • இதனால் ஜிம்பாப்வே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது. பிரையன் பென்னட் 61 ரன்கள் அடித்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

    ஆனால் கேப்டன் ரஸ்ஸி வான்டர் டுசென்-ரூபின் ஹெர்மன் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.

    ஹெர்மன் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் அடித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    வான் டர் டுசென் 52 ரன்னும், பிரெவிஸ் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இந்த தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி கண்ட ஜிம்பாப்வே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இதன்மூலம் 236 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

    புலவாயோ:

    தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையிலான 2-வது டெஸ்ட் புலவாயோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வியான் முல்டர் முச்சதம் அடித்து அசத்தினார். அவர் 367 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் தனகா சிவாங்கா, மடிகிமு தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே அணி 170 ரன்னில் சுருண்டது. 456 ரன்கள் பின்தங்கியதால் தென் ஆப்பிரிக்கா பாலோ-ஆன் கொடுத்தது. சீன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் பிரேனெலன் சுப்ராயன் 4 விக்கெட்டும், முல்டர், கொடி யூசுப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கைடனோ 40 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய நிக் வெல்ச் அரை சதம் கடந்து 55 ரன்னில் வெளியேறினார்.

    அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் கிரெய்க் எர்வின் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 236 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் பாஸ்ச் 4 விக்கெட்டும், செனூரன் முனுசாமி 3 விக்கெட்டும், கோடி யூசுப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அந்த அணியின் வியான் முல்டர் சதமடித்து 147 ரன்னில் அவுட்டானார்.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 90 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அறிமுகப் போட்டியில் சதமடித்த லுவான்- ட்ரே பிரிட்டோரியஸ் 153 ரன்னில் அவுட்டானார். கார்பின் போஸ்ச் சிறப்பாக ஆடி சதமடித்து, 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் சவாங்கா 4 விக்கெட்டும், முசபராபானி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சீன் வில்லியம்ஸ் சதமடித்து 137 ரன்னில் அவுட்டானார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 4 விக்கெட்டும், கோடி யூசுப், கேசவ் மகராஜ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    167 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வியான் முல்டர் 147 ரன்கள் குவித்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் மசகாட்சா 4 விக்கெட்டும், சிவாங்கா, மசேகேசா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 536 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    மசகாட்சா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 57 ரன்கள் எடுத்தார். கிரெய்க் எர்வின் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை ஒரு ரன்னில் இழந்தார். அவர் 49 ரன்னில் அவுட்டானார். முசபராபானி 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 328 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதுடன், 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

    ஆட்ட நாயகன் விருது அறிமுகப் போட்டியில் சதமடித்த லுவான்-ட்ரே பிரிட்டோரியசுக்கு அளிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 4 விக்கெட்டும், கோடி யூசுப், கேசவ் மகராஜ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், கிரேக் எர்வினின் விக்கெட்டை தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்டில் 200 விக்கெட் கைப்பற்றிய முதல் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

    கேசவ் மகராஜ் 59 டெஸ்டில் (99 இன்னிங்ஸ்) 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் 11 முறை 5 விக்கெட்டும், ஒருமுறை 10 விக்கெட்டும் (ஒரே டெஸ்டில்) வீழ்த்தியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 418 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
    • அறிமுக போட்டியில் சிறப்பாக ஆடிய பிரிட்டோரியஸ் சதமடித்து 153 ரன்னில் அவுட்டானார்.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 90 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அறிமுகப் போட்டியில் பொறுப்பாக ஆடிய லுவான்- ட்ரே பிரிட்டோரியஸ் சதமடித்து அசத்தினார். அவர் 153 ரன்னில் அவுட்டானார்.

    கார்பின் போஸ்ச் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் சவாங்கா 4 விக்கெட்டும், முசபராபானி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அந்த அணியின் சீன் வில்லியம்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 137 ரன்னில் வெளியேறினார். கேப்டன் கிரெய்க் எர்வின் 36 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து ஆடவில்லை.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 4 விக்கெட்டும், கோடி யூசுப், கேசவ் மகராஜ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    167 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சை ஆடியது.

    இரண்டாம் நாள் இறுதியில் தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரை 216 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாப்வே 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

    ஹராரே:

    அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

    முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என அயர்லாந்தும், ஒருநாள் தொடரை 2-1 என ஜிம்பாப்வேவும் கைப்பற்றின.

    இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் லோர்கன் டக்கர் 46 ரன்கள் எடுத்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் ட்ரெவர் குவாண்டு 3 விக்கெட்டும், ரிச்சர்ட் ங்வாரா, சிக்கந்தர் ராசா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. தொடக்கத்தில் ஜிம்பாப்வே அணி விரைவில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சிக்கந்தர் ராசா 22 ரன், ரியான் பர்ல் 27 ரன் எடுத்து அவுட்டாகினர்.

    அந்த அணியின் டோனி முன்யோங்கா ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார்.

    இறுதியில் ஜிம்பாப்வே அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து போராடி வெற்றி பெற்றது. டோனி முன்யோங்கா 43 ரன் எடுத்து களத்தில் இருந்தார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஜிம்பாப்வே முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 49 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய அயர்லாந்து 249 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ஹராரே:

    அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 49 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்லி மாதேவரே 61 ரன்னும், சிக்கந்தர் ராசா 58 ரன்னும் எடுத்தனர்.

    அயர்லாந்து சார்பில் மார்க் அடேர் 4 விக்கெட்டும், கர்டிஸ் கேம்பர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பால்பிர்னி 11 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.

    அடுத்து இணைந்த பால் ஸ்டிர்லிங்-கர்டிஸ் கேம்பர் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர். பால் ஸ்டிர்லிங் 89 ரன்னும், கர்டிஸ் கேம்பர் 63 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், அயர்லாந்து அணி 48.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 249 ரன்கள் அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (18-ம் தேதி) நடைபெற உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.
    • டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே சென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னெட் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 169 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் கிரெய்க் எர்வின் 66 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே வீரர்கள் துல்லியமாகப் பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    இறுதியில், அயர்லாந்து 46 ஓவரில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றதுடன் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் இன்னிங்சில் அயர்லாந்து 260 ரன்களும், 2-வது இன்னிங்சில் 298 ரன்களும் சேர்த்தது.
    • முதல் இன்னிங்சில் 297 ரன்கள் சேர்த்த ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் 228 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    ஜிம்பாப்வே- அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 6-ந்தேதி ஜிம்பாப்வேயின் புலவாயோவில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஆண்டி மெக்பிரைன் 90 ரன்களும், மார்க் அடைர் 78 ரன்களும சேர்த்தனர். ஒரு கட்டத்தில் அயர்லாந்து 82 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இருவரும் சிறப்பாக விளையாடி 7-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

    பின்னர் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 267 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் நிக் வெல்ச் 90 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். முசாரபானி 47 ரன்கள் எடுத்தார்.

    7 ரன்கள் முன்னிலையுடன் அயர்லாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆண்டி பால்பிரைன் 66 ரன்களும், லோர்கன் டக்கர் 58 ரன்களும் அடிக்க அயர்லாந்து 298 ரன்கள் குவித்தது.

    இதனால் ஜிப்பாப்வே அணிக்கு 292 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்லி மாதவேரே 61 ரன்களுடனும், நியாம்குரி 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கைவசம் 3 விக்கெட், 109 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜிம்பாப்வே களம் இறங்கியது. வெஸ்லி மாதவேரே 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வே 228 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இதனால் அயர்லாந்து 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 90 ரன்கள் அடித்த ஆண்டி மெக்பிரைன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அயர்லாந்து 2வது இன்னிங்சில் 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 4ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 187 ரன்கள் எடுத்தது.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மெக் பிரின் 90 ரன்னும், மார்க் அடைர் 78 ரன்னும் எடுத்தனர்.

    ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 7 விக்கெட்டும், நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிக் வெல்க் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய முசாராபாணி 47 ரன் எடுத்து அவுட்டானார்.

    அயர்லாந்து சார்பில் மெக் கார்த்தி 4 விக்கெட்டும், மெக் பிரின் 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 2வது இன்னிங்சில் களமிறங்கிய அயர்லாந்து 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பால்பிரின் 66 ரன்னும், லார்கன் டக்கர் 58 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அந்த அணியின் வெஸ்லி மாதவரே ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். பிரியன் பென்னட் 45 ரன்கள் சேர்த்தார். போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்னதாக முடிக்கப்பட்டது.

    நான்காம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது.

    மீதம் ஒருநாள் உள்ள நிலையில் 109 ரன்கள் எடுத்தால் ஜிம்பாப்வே அணியும், 3 விக்கெட் எடுத்தால் அயர்லாந்து அணியும் வெற்றி பெறும் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ×