என் மலர்

    கிரிக்கெட் (Cricket)

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வங்கதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி இழந்தது.
    • நெதர்லாந்து அணி கூட நம்மை வீழ்த்தி டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுவிடலாம் என நினைக்கும்.

    பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதல் 2 போட்டிகளின் முடிவில் இருவரும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றிருந்தனர்.

    இதனையடுத்து தொடரை கைப்பற்றும் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச மண்ணில் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

    இந்நிலையில் இருதரப்பு தொடர்களிலேயே வெற்றி பெற முடியாத நிலையில், ஐசிசி கோப்பையை என்ன திருடியா கொண்டு வரப்போகிறீர்கள் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடவுளுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். நாம் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டோம் என்பதை பாருங்கள். ஜிம்பாப்வே போன்ற அணிகள் கூட நம்மை எளிதாகத் தோற்கடித்துவிடும் போலிருக்கிறது. நெதர்லாந்து அணி கூட பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடரில் ஆடினால், நம்மை வீழ்த்தி டெஸ்ட் அந்தஸ்தை எளிதாக பெற்றுவிடலாம் என நினைக்கும். அந்த அளவுக்கு கிரிக்கெட்டை கேலிக்கூத்தாக்கி விட்டீர்கள்.

    பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஏன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தீர்கள்? வங்கதேச அணி 350 ரன்கள் குவித்திருக்கும். லிட்டன் தாஸ் மெதுவாக ஆடியதால் தான் 290 ரன்களுக்குள் சுருண்டனர். இருதரப்பு தொடர்களிலேயே வெற்றி பெற முடியாத நிலையில், ஐசிசி கோப்பையை என்ன திருடியா கொண்டு வரப்போகிறீர்கள்.

    பாகிஸ்தான் அணியின் போட்டிகளை இனி ஒரு சீரியஸான ஆட்டமாகப் பார்க்க முடியாது. இது ஒரு 'காமெடி சீரிஸ்' போல ஆகிவிட்டது.

    என கம்ரான் அக்மல் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்மிருதி மந்தனா ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை தனதாக்கினார்.
    • பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ்-க்கு வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்றிரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆண்டின் சிறந்த வீரருக்கான பாலிஉம்ரிகர் விருதை இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் பெற்றுக் கொண்டார்.

    கடந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்ததுடன் அதில் 4 சதம் உள்பட 754 ரன்கள் குவித்து கலக்கிய சுப்மன் கில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இவர் இந்த விருதை பெறுவது இது 2-வது முறையாகும்.

    கடந்த சீசனில் சர்வதேச கிரிக்கெட்டில் 1,703 ரன்கள் எடுத்து அசத்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை தனதாக்கினார்.

    இதே போல் இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த மகத்தான பங்களிப்புக்காக இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் அங்கம் வகித்தவரான ரோஜர் பின்னி, பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோருக்கு உயரிய வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது வழங்கப்பட்டது. சர்வதேச போட்டியில் சிறந்த அறிமுக வீரருக்கான விருது வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கும், சிறந்த அறிமுக வீராங்கனைக்கான விருது சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனிக்கும் கிடைத்தது.

    விருது பெற்றவர்களை தவிர்த்து ஆண்கள் 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய வீரர்கள், 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனைகள், ஜூனியர் வீரர், வீராங்கனைகள் உள்ளிட்டோரும் விழாவில் ஒரு குடும்பம் போல் பங்கேற்று சிறப்பித்தனர். அவர்களும் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் மிதுன் மன் ஹாஸ், துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எந்தவொரு வடிவத்திலும் நாட்டிற்காக உலகக் கோப்பையை வெல்வதுதான் எங்களின் இறுதி இலக்கு.
    • இந்த எண்ணம் எப்போதும் எனக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) 2026-ம் ஆண்டுக்கான நமன் விருதுகள் நேற்று வழங்கப்பட்டது.

    2024-25 காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டவா்கள் 2026-ம் ஆண்டு விருதுப் பட்டியலில் இடம் பிடித்தனா்.

    சிறந்த வீரருக்கான பாலி உம்ரிகா் விருது இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. அவா் இந்த விருதை 2-வது முறையாக கைப்பற்றினார்.

    சிறந்த வீராங்கனை விருதை ஸ்மிருதி மந்தனா 5-வது தடவையாக வென்றார். அப்போது 2027 உலகக் கோப்பை எங்களின் முக்கியமான இலக்கு என்று சுப்மன்கில் கூறினார்.

    இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

    கடந்த முறை இந்தியாவில் கோப்பைக்கு மிக நெருக்கமாக இருந்தோம். தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைப்பது எங்களுக்கு ஒரு சிறந்த சூழ்நிலை. எந்தவொரு வடிவத்திலும் நாட்டிற்காக உலகக் கோப்பையை வெல்வதுதான் எங்களின் இறுதி இலக்கு. இந்த எண்ணம் எப்போதும் எனக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது

    இவ்வாறு சுப்மன்கில் தெரிவித்தார்.

    2023 உலகக் கோப்பை தொடரில் இந்தியா தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று அசத்தியது. ஆனால் அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து கோப்பையை இழந்தது.

    2027-ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நம்பியா ஆகியவற்றில் நடக்கிறது. இதில் 14 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்திய அணி 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. 2011-ம் ஆண்டு தோனி 2-வது தடவையாக உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 2027-ல் 3-வது உலகக் கோப்பையை வெல்வதை சுப்மன்கில் இலக்காக கொண்டுள்ளார்.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் 3-வது தடவையாக 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய நியூசிலாந்து 91 ரன்களில் சுருண்டது.

    மவுங்கானுய்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மவுங்கானுய் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 14.3 ஓவரில் 91 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜேம்ஸ் நீஷம் 26 ரன் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    தென் ஆப்பிரிக்கா சார்ப்பில் கொபானி மொகோனா 3, ஜெரால்ட் கோட்ஸீ, ஓட்னில் பார்ட்மேன், கேசவ் மகராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 16.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்து வென்றது. 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்த அந்த அணி டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடப்பு ஆண்டுக்கான நமன் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
    • இந்த விழாவில் ஆண்டின் சிறந்த வீரர் விருது சுப்மன் கில்லுக்கு அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு பிசிசிஐ விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான நமன் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.

    இந்த விழாவில் ராகுல் டிராவிட்டுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார் ஐசிசி தலைவர் ஜெய்ஷா.

    மேலும், முன்னாள் வீரர் ரோஜர் பின்னி மற்றும் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவித்தனர். ஆண்டின் சிறந்த வீரர் விருது சுப்மன் கில்லுக்கு அளிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய வங்கதேசம் 50 ஓவரில் 290 ரன்கள் குவித்தது.

    டாக்கா:

    பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசமும், 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானும் வென்றன.

    இந்நிலையில்,இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹசன் தமிம் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 107 ரன்னில் அவுட்டானார். லிட்டன் தாஸ் 41 ரன்னும், சயிப் ஹசன் 36 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் தவ்ஹித் ஹிருடோய் பொறுப்புடன் ஆடி 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். சல்மான் ஆகா சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர்106 ரன்னில் வெளியேறினார். சாத் மசூத் 38 ரன்னும், ஷஹீன் அப்ரிடி 37 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பாகிஸ்தான் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இறுதியில், பாகிஸ்தான் 50 ஓவரில் 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரை என கைப்பற்றி அசத்தியது.

    வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், நஹித் ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இவர் பாகிஸ்தான் அணிக்காக 54 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    • 2017-ல் பாகிஸ்தான் அணி அவரது தலைமையைில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான சர்பராஸ் கான் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இவர் கடந்த 2023-ம் ஆண்டு பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார்.

    இவரது தலைமயில் பாகிஸ்தான் இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 2006-ல் 19 வயதிற்கு உட்பட்டோருக்கு உலகக் கோப்பைமற்றும் 2017-ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்றுள்ளது.

    தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளதால், பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்ட இருக்கிறார்.

    கராச்சியை சேர்ந்த இவர் பாகிஸ்தான் அணிக்காக 54 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பாகிஸ்தான் அணி கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போட்டியில் தொடர்ந்து உத்வேகம் கிடைப்பது முக்கியம்.
    • தற்போது அந்த உத்வேகம் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு கிடைத்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் 3-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில் இந்திய அணி இன்னும் பல உலக கோப்பைகளை வெல்லும் என்று முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து உள்ளார்.

    மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது:-

    இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் சமீபகாலமாகத் தொடர்ந்து ஐ.சி.சி. கோப்பைகளை வென்று வருகிறது. இந்த வெற்றிப் பயணம் வெறும் தொடக்கம் மட்டுமே என்று நான் நம்புகிறேன்.

    போட்டியில் தொடர்ந்து உத்வேகம் கிடைப்பது முக்கியம். தற்போது அந்த உத்வேகம் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு கிடைத்துள்ளது. நாம் இந்த வேகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த அணிகள் இன்னும் பல உலக கோப்பைகளை வெல்லும்.

    இந்த வெற்றிக்கு தனியாக ரகசியம் ஏதுமில்லை. இது முழுக்க முழுக்க வீரர்கள்- வீராங்கனைகளின் கடின உழைப்புக்கு கிடைத்ததாகும். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்- வீராங்கனைகள் தாங்கள் எட்டியிருக்கும் இந்தச் சாதனைகளை அடைவதற்காக மிகக் கடுமையாக உழைக்கிறார்கள்.

    களத்தில் விளையாடிச் சாதிக்கும் வீரர்கள் மட்டுமே இதற்கு முழு காரணம் அல்ல. இந்த வெற்றிக்கு தங்கள் கடின உழைப்பை அர்ப்பணிக்கும் எண்ணற்ற நபர்களும் இருக்கிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் மேற்கொண்டு வந்த முயற்சிகள் அனைத்தும் தற்போது முழுமையான வெற்றியாக கிடைத்திருப்பதையும், நாங்கள் எதிர்பார்த்த சாதனைகளை எட்டியிருப்பதையும் காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.

    ஆண்கள் அணி மட்டுமல்லாமல், மும்பையில் பெண்கள் அணியும் உலகக் கோப்பையை வென்ற அந்த தருணம் மிகவும் அற்புதமாக இருந்தது.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டி20 உலகக் கோப்பையில் கடைசி 3 போட்டிகளிலும் அரைசதம் விளாசினார்.
    • தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.

    இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்தியா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால்தான் கோப்பையை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இருந்தது. இந்த மூன்று போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடினார். மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அத்துடன் தொடர் நாயகன் விருதை வென்றும் அசத்தினார்.

    உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியுடன் சஞ்சு சாம்சன் சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது கேரள மாநில அமைச்சர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த நிலையில் நாளை சஞ்சு சாம்சனுக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கும் விழா அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். விளையாட்டு அமைச்சர், தலைமை செயலாளர் மற்றும் பல மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    கேரளாவின் கடற்கரை நகரான விழிஞ்சத்தில் பிறந்தவர் சஞ்சு சாம்சன்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூன் 4-ந் தேதி நடைபெற்றது.
    • திருமண சடங்கு நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்கு தொடங்கியது.

    முசோரி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் குல்தீப் யாதவ். சமீபத்தில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    31 வயதான குல்தீப் யாதவ் தனது நீண்ட நாள் தோழி வன்ஷிகாவை காதலித்து வந்தார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூன் 4-ந் தேதி நடைபெற்றது.

    இந்த நிலையில் குல்தீப் யாதவ்- வன்ஷிகா திருமணம் உத்தரகாண்ட் மாநிலம் முசோரி மலை பிரதேசத்தில் உள்ள ஐ.டி.சி. கவாய் ஓட்டலில் இன்று நடந்தது. திருமண சடங்கு நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்கு தொடங்கியது. இருவரும் திருமணத்திற்கான 7 உறுதிமொழிகளை எடுத்தார்கள்.

    திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    குல்தீப் யாதவ்-வன்ஷிகா இடையேயான மஞ்சள் பூசும் மற்றும் மெகந்தி நிகழ்ச்சி (மருதாணி) நேற்று நடைபெற்றது.

    இதில் கிரிக்கெட் வீரர்கள், குடும்ப நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். ரிங்கு சிங் தனது வருங்கால மனைவியும், எம்.பி.யுமான பிரியா சரோஜ்யுடன் பங்கேற்றார். யசுவேந்திர சாஹல், சுரேஷ் ரெய்னா, நிதிஷ் ராணா, இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திலீப், பாடகர் கைலாஷ் கெர், நடிகர் குணால் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    குல்தீப் யாதவ்-வன்ஷிகா திருமண வரவேற்பு வருகிற 17-ந்தேதி லக்னோவில் நடக்கிறது. இதில் விராட்கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக இவர்கள் திருமணம் கடந்த நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. குல்தீப் யாதவ் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றதால் திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டது. இன்று இருவரது திருமண விழா கோலாகலமாக நடந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது.
    • கடந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் செயல்பட்டு வந்தார்.

    டெல்லி:

    நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் ஐதராபாத் - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

    இதனிடையே, ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் செயல்பட்டு வந்தார்.

    இந்நிலையில், நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படமாட்டேன் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ஆலோசகராக செயல்பட போதிய கால அவகாசம் வழங்காததால் இந்த முடிவு எடுத்துள்ளதாக பீட்டர்சன் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐபிஎல் தொடரில் போட்டி வர்ணனையாளராக செயல்படுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.
    • மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் கம்பீர், சூர்யகுமார் உள்ளிட்டோர் உலகக் கோப்பையுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    மும்பை:

    2026 டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. சஞ்சு சாம்சன் முதல் ஜஸ்பிரித் பும்ரா வரை பல வீரர்கள் அசத்தினர். இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில், மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் உலகக் கோப்பையுடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஐசிசி தலைவர் ஜெய் ஷாவும் இவர்களுடன் சாமி தரிசனம் செய்தார்.

    2024-ம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. அப்போது உலகக் கோப்பையுடன் ஜெய் ஷா, ரோகித் சர்மா ஆகியோர் கோவிலில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புகைப்படம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×