என் மலர்

    சமையல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உணவு சாப்பிடுவதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன.
    • உணவினை எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

    சாப்பிடுதல் என்பது வெறும் வழக்கமான சம்பிரதாயம் அல்ல. இன்று உடம்புக்கு இந்த அளவு உணவு தேவை, அதனால் நீங்கள் அவ்வளவு சாப்பிடுகிறீர்கள். நாளை அவ்வளவு தேவைப்படாமல் இருக்கலாம். ஒருவர் சாப்பிட வேண்டும்தான், ஆனால் அந்த உணவு நமக்கு அளிக்கும் ஊட்டத்தில் மகிழ்ந்து நம் உயிருக்கும் உணவுக்குமான தொடர்பை நன்றியுடன் உணர்ந்து சாப்பிட வேண்டும்.

    இது சாப்பிடுவதில் இருக்கும் இன்பத்தை குறைப்பதற்காக அல்ல. உணவை உண்பதில் உள்ள உண்மையான ஆனந்தமே, இன்னொரு உயிர் உங்கள் உயிருடன் ஒன்றி கலந்து நீங்களாகவே ஆகிறது என்பதை உணர்ந்து உண்பதுதான் என்கின்றனர் ஆன்மீகவாதிகள். யோக கலாச்சாரத்தில் எப்பொழுதும் உங்கள் கால்களை மடக்கி அமரவும், ஒரு சக்தி வடிவம் இருக்கும் திசைநோக்கி கால்களை நீட்டாதிருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

    உணவு சாப்பிடுவதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. எந்த நேரத்தில் உணவு சாப்பிட வேண்டும், எந்த உணவை முதலில் பரிமாற வேண்டும், இலையை எவ்வாறு மூட வேண்டும் போன்ற பல விஷயங்களை இதில் கவனிக்க வேண்டும். அவ்வாறு உணவு சாஸ்திர முறைப்படி சாப்பிடும்போது குடும்பத்தில் செல்வ செழிப்பு, மகிழ்ச்சி போன்றவை தானாகவே ஏற்படும்.

    சாப்பட்டினை நமக்கு யாராவது பரிமாற வேண்டும். இலையில் முதலில் காய்கறி, அப்பளம் போன்றவற்றை வைத்துவிட்டே சாதத்தை பரிமாற வேண்டும். எடுத்த உடனேயே சாதத்தை பரிமாறக்கூடாது. அதைப்போல வத்தல், கீரையை முதலில் பரிமாறக் கூடாது.

    உணவினை எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதைத் தெரிந்து கொண்டு உணவு உண்ணும் போது நமக்கு நன்மை பயக்கும். கிழக்கு நோக்கி அமர்ந்து சாபிட்டால், ஆயுள் வளரும். மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், பொருள் சேரும். தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், புகழ் வளரும். வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. நோய்தான் வரும்.

     

    பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்பொழுது நோய் சேரும். சாப்பிடுவதற்கு முன்பு கை, கால், வாய் ஆகியவற்றை நன்றாகக் கழுவிவிட்டு சாப்பிட அமர வேண்டும். சாப்பிடும்போது உணவில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். வேறு வேலைகள் எதுவும் செய்துக்கொண்டே உணவை உண்ணக்கூடாது. குறிப்பாக செல்போன், டி.வி. பார்த்துக்கொண்டே சாப்பிடக்கூடாது. இது தரித்திரத்தை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.

    சாப்பிடும்பொழுது வீட்டின் கதவு மூடியிருக்க வேண்டும். வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. சூரியன் உதயமாகும்போதும், அஸ்தமனத்தின்போதும் சாப்பிடக்கூடாது. இதுபோன்ற உணவு சாஸ்திரத்தை பின்பற்றி நீண்ட ஆயுள், செல்வ செழிப்பு பெற்று வாழலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெண்டைக்காய் வறுவல் செய்யும் பொழுது சிறிது புளித்த மோர் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென இருக்கும்.
    • காளானை அலுமினிய பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. அது பாத்திரத்தை கருமையாக்கி விடும்.

    * வாழைக்காயை வறுவல் செய்யும் பொழுது சிறிது பிரட் தூள் சேர்த்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

    * சாம்பார் தயாரிக்கும்பொழுது கடைசியில் சிறிது புளி கரைசல் ஊற்றினால் சுவை மிகுதியாக இருக்கும்.

    * புதினா சட்னி செய்யும் பொழுது சிறிது வேர்க்கடலை வறுத்து போட்டு செய்தால் ருசி அபாரமாக இருக்கும்.

    * கசகசா, முந்திரி சிறிது நேரம் ஊறவைத்து அரைத்து குருமாவில் சேர்த்தால் எந்த குருமாவாக இருந்தாலும் ருசியாக இருக்கும்.

    * புளி சாதம், எலுமிச்சை சாதம் முதலியவை செய்யும் பொழுது நல்லெண்ணெய் ஊற்றி கிளறினால் வாசனை தூக்கும்.

    * வெறும் வாணலியில் அவலை வறுத்து அரைத்து, அதை தோசை மாவில் கலந்து தோசை சுட்டால் தோசை மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

    * மோருடன் சிறிது இஞ்சி, சீரகம், உப்பு சேர்த்து பருகினால் வாயு தொல்லை நீங்கும்.

    * ஆப்பம் சுடும் பொழுது அந்த மாவில் சிறிது கோதுமை மாவு சேர்த்துக் கொண்டால் ஆப்பம் சீக்கிரம் உலர்ந்து போகாமல் இருக்கும்.

    * பிரியாணிக்கு சாதம் வடிக்கும்போது கொதிக்கும் தண்ணீரில் ஏலக்காயை போட்டு கொதிக்க விட்டு வடித்தால் சாதம் வாசனையாக இருக்கும்.

    * வெண்டைக்காய் வறுவல் செய்யும் பொழுது சிறிது புளித்த மோர் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென இருக்கும்.

    * காளானை அலுமினிய பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. அது பாத்திரத்தை கருமையாக்கி விடும்.

    * கத்திரிக்காய் எண்ணெய் குழம்பு சமைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் கெட்டி தயிரை கலந்தால் கத்திரிக்காய் கறுப்பாகாமல் இருப்பதுடன் சுவையும் கூடும்.

    * பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா செய்யும் போது கடைசியில் பொட்டு கடலை மாவு தூவி இறக்கினால் சுவை அதிகரிக்கும்.

    * உளுந்து வடைக்கு மிக்சியில் அரைக்கும் பொழுது மிக்சி ஜாரில் சிறிது நல்லெண்ணெய் தடவி பிறகு அரைத்தால் மிக்சியை எளிதில் கழுவி விடலாம்.

    * பச்சை மிளகாயை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து பயன்படுத்தினால் அதன் காரம் குறையும்.

    * முறுக்கு, தட்டை, சீடை போன்ற பலகாரங்கள் செய்யும் பொழுது அரிசி மாவை முதலில் வெறும் வாணலியில் லேசாக வறுத்து பின்பு பலகாரம் செய்தால் மொறுமொறுப்பு கூடுவதுடன் ருசியும் அபாரமாக கிடைக்கும்.

    * இட்லி பொடி செய்யும்போது கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு அதனுடன் கொள்ளு பருப்பையும் சிறிது சேர்த்தால் பொடி சுவையாக இருப்பதுடன் கெட்ட கொழுப்பும் குறையும்.

    * பாயசம் செய்யும் பொழுது ஜவ்வரிசியை லேசாக வறுத்து விட்டு பின்பு பாயசம் செய்தால் ஜவ்வரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக கிடைக்கும். ருசியும் அபாரமாக இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், மிருதுவாகும்.
    • பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது.

    * நெல்லிக்காய் ஊறுகாயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், எளிதில் கெடாது.

    * இட்லிக்கு உளுந்து அரைக்கும்போது ஐஸ் வாட்டர் விடவும். மாவு சூடாகாமல் இட்லி பூப்போன்று வரும்.

    * சர்க்கரைப் பாகில் எலுமிச்சை சாறு சேர்த்தால், சீக்கிரம் கெட்டியாகாது.

    * கண்ணாடி பாட்டிலில் துர்நாற்றம் வீசுகிறதா? அதில் சிறிது கடுகு போட்டு, வெந்நீர் ஊற்றவும். சிறிது நேரம் கழித்துக் கழுவினால், துர்நாற்றம் போய்விடும்.

    * பயறு வகைகளை ஊறப்போட 'மறந்துவிட்டால் பயறை 'ஹாட் பேக்'கில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மூடவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து, வழக்கம் போல குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்திக்கொள்ளவும்.

    * கேக் செய்யும்போது முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பாலில் ஊறப்போட்டு பிறகு சேர்த்தால், கேக் உதிர்ந்து விழாமல் இருக்கும்.

    * வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், மிருதுவாகும்.

    * புதிதாக அரைத்த மிளகாய்த் தூளில், சிறிது சமையல் எண்ணெய் விட்டு கிளறி வைத்தால், கார நெடி இல்லாமல் சுவை கூடும்.

    * வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது சிறிது சீரகத்துடன் தேங்காய்த் துருவலை சிவக்க வறுத்து, பொடியாக்கிப் போட்டால், பொரியல் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

    * பேக்கிங் அவனில் கேக் கலவைகளை வைத்த பிறகு கேக் வெந்திருக்கிறதா என்று தெரிந்துகொள்ள அவசரப்பட்டு, குறிப்பிட்ட நேரத்துக்கு முன், வெளியே எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால், கேக்கின், வடிவமும், சுவையும் மாறிவிடும்.

    * பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.

    * மணத் தக்காளி வற்றல் குழம்பு செய்கிறீர்களா? இரண்டு உளுந்து அப்பளங்களையும் தாளிக்கும் எண்ணெயில் அப்பளம், போட்டு பிறகு புளியைக் கரைத்து ஊற்றி வற்றல் குழம்பு செய்யவும். புது சுவையோடு குழம்பு மணக்கும்.

    * உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது, முதலில் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தடவிக்கொண்டு பிறகு உளுந்தைப் போட்டு அரைக்கவும். ஒட்டாமல் வரும்.

    * பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது.

    * வடைக்கு மாவு தயாரிக்கும்போது அதில் சிறிதளவு நெய் சேர்க்க மொறு மொறுப்பாக இருக்கும். எண்ணெய்த் தேவை குறைவாகும்.

    * கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரண்டு சமையல் முறைகளும் கடினமான நார்ச்சத்துக்களை உடைப்பதன் மூலம் காய்கறிகள் எளிதில் ஜீரணிக்க உதவும்.
    • தண்ணீரைப் பயன்படுத்தாதபோது ஊட்டச்சத்துக்கள் வீணாகிவிடும்.

    காய்கறிகளை நீராவியில் வேகவைப்பது, நீரில் கொதிக்கவிட்டு வேகவைப்பது இதில் எந்த முறையில் சமைப்பது சிறந்தது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இந்த இரு சமையல் முறையும் சுவை, நிறம், ஊட்டச்சத்துக்கள் விஷயத்தில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? எந்த முறையில் சமைப்பது காய்கறிகளில் அதிக ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க உதவிடும் என்பது குறித்து பார்ப்போம்.

    காய்கறிகளை நீரில் வேகவைக்கும்போது என்ன நடக்கும்?

    காய்கறிகளை நீரில் கொதிக்கவைத்து சமைப்பது எளிய மற்றும் வழக்கமான சமையல் முறையாகும். தண்ணீரில் காய்கறிகளை மூழ்கவைத்து 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள் வேகவைப்பது நல்லது. இந்த சமையல் முறை தொந்தரவு இல்லாதது. ஒரே சமயத்தில் வேறு சமையல் வேலைகளிலும் ஈடுபட ஏதுவானது. இருப்பினும் நீரில் கொதிக்க வைக்கும் செயல்முறையின்போது பல ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் இழக்கக்கூடும். அதனால் காய்கறிகளை வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் சூப் தயாரிக்கலாம். குழம்பில் ஊற்றிவிடலாம். அப்படி செய்யும்போது மட்டுமே ஊட்டச்சத்துக்களை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

    நீரில் கொதிக்கவிட்டு வேகவைத்த காய்கறிகள் பெரும்பாலும் மென்மையாக மாறும். கொதிக்க வைக்கும்போது காய்கறிகளின் செல் சுவர்கள் உடைந்து அதன் இயற்கையான சுவை தன்மை வெளியேறக்கூடும். இருப்பினும் உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற மாவுச்சத்து நிறைந்த காய்கறிகளை நீரில் வேகவைப்பதே சரியானது. அவை ஜீரணிக்க எளிதாகவும் மாறும்.

    எந்த முறை அதிக ஊட்டச்சத்துக்களை தக்கவைக்கும்?

    இரண்டு சமையல் முறைகளும் கடினமான நார்ச்சத்துக்களை உடைப்பதன் மூலம் காய்கறிகள் எளிதில் ஜீரணிக்க உதவும். அதே வேளையில், நீராவி முறை அதிக நன்மை தரும். இது செரிமானத்திற்கு உகந்த சேர்மங்களை அப்படியே தக்கவைத்துவிடும். குறிப்பாக முட்டைக்கோஸ், காலிபிளவர் மற்றும் புரோக்கோலி போன்ற காய்கறிகளை நீராவியில் சமைப்பதே சிறந்தது. அவற்றை தண்ணீரில் வேகவைப்பது சில ஊட்டச்சத்துக்களை குறைத்துவிடும்.

    ஆயுர்வேதத்தில் நீராவியில் சமைக்கும் முறையே சிறந்ததாக மதிப்பிடப்படுகிறது. இது உணவில் இருக்கும் உயிர் சக்தியை பாதுகாக்க உதவுகிறது. உணவை இலகுவாகவும், புத்துணர்ச்சியுடனும், அதிக ஆற்றலுடனும் வைத்திருக்கும்.

    நீராவி-கொதிக்கவைத்தல்: முக்கிய வேறுபாடுகள்

    ஊட்டச்சத்து தக்கவைப்பு: நீராவியில் வேகவைக்கும்போது மிக குறைவான வைட்டமின்களே இழக்கப்படுகின்றன. நீரில் கொதிக்க வைக்கும்போது வைட்டமின்கள் தண்ணீரில் கசிந்து விடும். அந்த தண்ணீரைப் பயன்படுத்தாதபோது ஊட்டச்சத்துக்கள் வீணாகிவிடும்.

    அமைப்பு: நீராவியில் வேகவைப்பது, காய்கறிகளை உறுதியாகவும், மிருதுவாகவும், வண்ணமயமாகவும் தக்கவைத்துவிடும். அதே நேரத்தில் தண்ணீரில் கொதிக்க விடும்போது, காய்கறிகள் மென்மையாக மாறும்.

    சுவை: இயற்கையான மற்றும் இனிப்பு சுவைகளை தக்கவைக்க நீராவி சமையல் உதவும். கொதிக்க வைப்பது, காய்கறிகளை லேசானதாக மாற்றும்.

    நேரம் - எளிமை: கொதிக்கவைக்கும் முறையுடன் ஒப்பிடும்போது நீராவியில் சமைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும்.

    காய்கறிகளை நீராவியில் வேகவைக்கும்போது என்ன நடக்கும்?

    கொதிக்கும் நீரில் இருந்து வெளிப்படும் நீராவி மூலம் காய்கறிகளை சமைக்கும்போது தண்ணீருடன் நேரடி தொடர்பு இல்லாமல் வேகும். அந்த நீராவி காய்கறிகளின் எல்லா பகுதியிலும் சமமாக பரவி நன்றாக வேக தொடங்கும். காய்கறிகளை மென்மைத்தன்மைக்கு மாற்றுவதோடு சுவையும் குறையாமல் பார்த்துக்கொள்ளும். தண்ணீருடன் நேரடி தொடர்பு இல்லாததால் காய்கறிகளில் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்படும். குறிப்பாக நீரில் கரையும் வைட்டமின்களான பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி போன்றவை தக்கவைக்கப்படும். நீராவியில் வேகவைத்த காய்கறிகள் புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் இருப்பதற்கு இதுதான் காரணம். உதாரணமாக கேரட் நிறம் பளிச்சென்று மாறும். புரோக்கோலி மொறுமொறுப்பு தன்மையை தக்கவைத்துக்கொள்ளும். மேலும் நீராவியில் வேகவைப்பது காய்கறிகளின் இயற்கையான இனிப்புத்தன்மையை மீட்டெடுக்கவும் உதவிடும். நீராவியில் வேகவைக்கும்போது தண்ணீரில் சில துளி எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இது கலோரிகளை கூடுதலாக்காமல் சுவை மற்றும் நறுமணத்தை மேம்படுத்த துணைபுரியும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சமையலுக்கு குக்கரை அடுப்பில் வைத்தவுடனேயே வெயிட்டை போட்டு விடுங்கள்.
    • கியாஸ் அடுப்பின் பர்னர் சுத்தமாக இருந்தால் தான் தீ நீல நிறத்தில் எரியும்.

    நாம் அன்றாடம் சமையலறையில் சமையலின்போது சில விஷயங்களைப் பின்பற்றினால், குறிப்பிடத்தக்க அளவு எரிவாயுவை (கியாஸ்) மிச்சப்படுத்த முடியும்.

    அது பற்றி பார்க்கலாமா...

    * அரிசி மற்றும் நவதானியப் பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரமே வெந்து விடும். இதனால் எரிவாயு செலவும் மிச்சமாகும்.

    * முடிந்த அளவு எல்லாவித சமையல் வேலைகளுக்கும் பிரஷர் குக்கரை பயன்படுத்துங்கள். பிரஷர் குக்கரில் ஒரே சமயத்தில் பல சமையல் பொருட்களை வேக வைக்கலாம். இதனால் எரிபொருள் செலவு குறைவதோடு, சமையல் வேலையையும் சீக்கிரமாக முடிக்க முடியும்.

    * பால், குழம்பு, கூட்டு வகைகளை குளிர்பதன பெட்டியில் இருந்து அப்படியே எடுத்து கியாஸ் அடுப்பில் வைத்து சூடு பண்ணாதீர்கள். இதனால் சூடாக அதிக நேரம் ஆவதுடன், அதிக எரிபொருளும் செலவாகும். எனவே, பிரிட்ஜில் இருந்து எடுக்கும் சமையல் பொருட்களை சிறிது நேரம் வெளியே வைத்து, அதன் குளிர் குறைந்து இயல்பான தட்ப வெப்ப நிலைக்கு வந்த பிறகுதான் சூடாக்க வேண்டும்.

    * சமையலுக்குத் தேவையான காய்கறிகளை கியாஸ் அடுப்பு பற்ற வைப்பதற்கு முன்னரே நறுக்கி வைப்பது மிகவும் முக்கியம். அதுபோல் மசாலாக்களை அரைத்து கியாஸ் அடுப்பின் பக்கத்தில் வைத்துக்கொண்டால், ஒவ்வொன்றையும் தேடி எடுப்பதால் ஆகும் எரிவாயு விரயத்தைக் குறைக்கலாம்.

    * உங்கள் வீட்டு சமையலறையில் காற்று அதிகம் வீசுகிறது என்றால் ஜன்னலை அடைத்து விடுங்கள். காற்று அதிகம் அடித்தால் கியாஸ் அடுப்பின் ஜுவாலை படபடக்கும். இதனால் சமைக்க அதிக நேரம் பிடிப்பதோடு, எரிபொருளும் அதிகம் செலவாகும்.

    * சமையலுக்கு குக்கரை அடுப்பில் வைத்தவுடனேயே வெயிட்டை போட்டு விடுங்கள். ஆவி வரும் வரை காத்திருக்க வேண்டாம். இதனால் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே சாதம் வெந்து விசில் வந்து விடும். ஐந்து நிமிட கியாஸ் செலவும் மிச்சமாகும்.

    * கியாஸ் அடுப்பின் பர்னர் சுத்தமாக இருந்தால் தான் தீ நீல நிறத்தில் எரியும். ஆரஞ்சு நிறத்திலோ, மஞ்சள் நிறத்திலோ எரிந்தால் பர்னர் சுத்தமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டு அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இதனால் எரிவாயு தேவையில்லாமல் பாழாவதை தவிர்க்கலாம்.

    * குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது, சமையல் பொருட்களை அடிக்கடி சூடு செய்து சாப்பிடுவதால் ஆகும் கியாஸ் செலவை குறைக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
    • அரிசி மாவு இல்லையென்றால் இட்லி மாவு சேர்த்து பிசையலாம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை - 3

    பெரிய வெங்காயம் - 3

    கடலை மாவு - 1/4 கப்

    அரிசி மாவு - 3 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    கரம் மசாலா - 1/2 ஸ்பூன்

    மிளகு தூள் - 1/4 ஸ்பூன்

    மல்லித்தூள் - 1/4 ஸ்பூன்

    இஞ்சி, பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்

    கருவேப்பிலை - பொடியாக நறுக்கியது

    கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது

    உப்பு - தேவையான அளவு

    ஆப்ப சோடா - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகு தூள், மல்லித்தூள், இஞ்சி, பூண்டு விழுது, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, ஆப்ப சோடா சேர்த்து பிசையவும்.

    வெங்காயத்தில் இருந்து தண்ணீர் வரும். மாவிற்கு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசையவும். (அரிசி மாவு இல்லையென்றால் இட்லி மாவு சேர்த்து பிசையலாம்)

    சிறிது தளர்வாக மாவை பிசைந்து மாவின் நடுவில் பாதியாக வெட்டிய முட்டையை வைத்து உருண்டையாக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் சூடானதும் மசாலா முட்டையை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான முட்டை பஜ்ஜி தயார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
    • எந்த வகை புலாவ் செய்தாலும் அரிசியை பத்து முதல்பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்கூடாது.

    காய், கூட்டு எல்லாம் மிஞ்சிப் போனால், இவற்றை ஒன்றாகக்கலந்து, கெட்டியாக புளி கரைத்துச் சேர்த்து, சிறிது காரத்தூள், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து ஒருகொதி வந்ததும் இறக்கி விடவும். ருசி மிகுந்த பொரித்த குழம்பு ரெடி.

    இடியாப்பம் மீந்து விட்டால் அதை வெயிலில் காய வைத்து எடுத்தால் புதுவகை வடகம் தயார்.

    புளிச்சாற்றில் உப்பு, பெருங்காயம் சேர்ந்து, பச்சை மிளகாய்களை கீறி ஊற வைத்து, வெயிலில் காய வைத்து எடுத்தால் சுவையான புளி மிளகாய் தயார்.

    முறுக்குமாவு, தேன்குழல் மாவு பிசையும்போது தண்ணீர் அதிகமாகி விட்டால் டிஷ்யூ பேப்பரில் மாவை வைத்து, சற்று புரட்டி எடுத்தால் ஈரம் உறிஞ்சப்பட்டு மாவு பக்குவம் ஆகி விடும்.

    சாம்பார் பொடி அரைக்கும்போது அத்துடன் ஒரு கைப்பிடி கல் உப்பு போட்டு அரைத்தால் வண்டு, சிறு பூச்சிகள் வராது. சாம்பார் செய்யும் போது மறக்காமல் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

    துவையல் அரைக்கும்போது, சின்னக் கிண்ணத்தில் புளியை தண்ணீர் தெளித்து சூடாக இருக்கும் குக்கர் மீது வைத்து 5 நிமிடங்கள் கழித்து அரைக்க உபயோகித்தால் துவையல் நன்றாக மசியும்.

    புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். அதுபோல் எந்த வகை புலாவ் செய்தாலும் அரிசியை பத்து முதல்பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்கூடாது. அப்போது தான் புலாவ் குழையாமல் இருக்கும்.

    குருமா, கிரேவி, நூடுல்ஸ் போன்றவற்றுக்கு தக்காளி சேர்ப்பதற்கு பதில் தக்காளி கெச்சப் சேர்த்து செய்து பாருங்கள். நிறமும், சுவையும் சூப்பராக இருக்கும்.

    உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது அதில் சிறிது சோம்பைத் தூளாக்கித் தூவினால் உருளைக்கிழங்கு வறுவல் கமகம வாசனையுடன் இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அயலை மீனை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
    • இதில் உள்ள வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தும்.

    ஊறுகாய் என்றால் மாங்காய், எலுமிச்சை மட்டும் இல்லை. சில வகை மீன்களை பதப்படுத்தி ஊறுகாய் தயார் செய்து உண்ணும் வழக்கம் தமிழர்களிடையே இருந்தது. குறிப்பாக, இந்தியன் மேக்க ரல் பிஷ் எனப்படும் அயலை மீனை ஊறுகாய் செய்து உண்ணும் வழக்கம் உண்டு. இந்த அயலை மீன் ஊறுகாய் மிகவும் ருசியான ஒன்று. மேலும் அதிக நாட்கள் கெட்டுப் போகாது.

    அயலை மீனை வறுத்து, மிளகாய்தூள், வெந்தயம், கடுகு சேர்த்து வினிகரில் ஊறவைத்து, நல்லெண்ணெயில் பேக் செய்து ஊறுகாய் போல் மாற்றுவார்கள். இதனை அவ்வப்போது உணவுடன் சேர்த்து உட்கொள்ளும் போது குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிகரித்துகுடலில் உணவை உறிஞ்சும் திறன் அதிகரிக்கும். இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்புகள் இதயத்தை பாதுகாக்கும், கெட்ட கொழுப்பை குறைக்கும். இதில் உள்ள வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தும்.

    பொதுவாக அயலை மீனை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். அயலை மீனில் சுமார் 205-305 கலோரிகள், 18-19 கிராம் புரதம், 13-25 கிராம் கொழுப்பு, பொட்டாசியம் 314 மி.கி., மெக்னீசியம் 76 மி.கி., செலினியம் 44 மி.கி., சோடியம் 90 மி.கி. என்ற அளவில் உள்ளன. வைட்டமின் பி 12, நியாசின், பாஸ்பரஸ் போன்றவையும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்தும்.

    இது நோய் எதிர்ப்பு சக்தி, மூட்டு வலி, மனச்சோர்வு, ரத்த சோகை, நீரிழிவு போன்றவற்றுக்கு உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மீனுக்கு கானாங்கெளுத்தி என்ற ஒரு பெயரும் உண்டு. வெளிநாடுகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து உண்ணும் ட்யூனா மீனுக்கு இணையான சத்துக்கள் இந்த அயலை மீனில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாழைப்பூ வடை செய்யும்போது சிறிது பச்சரிசி மாவு சேர்த்தால் வடை உடையாமல் வரும்.
    • புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் அல்லது தேங்காய் பால் சேர்த்தால் சுவை கூடும்.

    தோசை மாவு அரைக்கும் போது, வேக வைத்த சாதத்தையும் சேர்த்து அரைத்தால் தோசை மென்மையாக இருக்கும்.

    தோல் சீவிய இஞ்சை இடித்து தயிரில் சேர்த்தால் தயிர் புளிக்காமல் இருக்கும்.

    வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது புளித்த மோர் சேர்த்தால் பொரியல் மொறுமொறுவென்று இருக்கும்.

    கேரட், பீட்ரூட் அல்வா செய்யும்போது சிறிது பால் பவுடர் சேர்த்து கிளறினால் அல்வாவின் ருசி கூடுதலாகும்.

    வெண்ணெய்யை காய்ச்சி இறக்கும் போது வெந்தயத்தை சேர்த்தால் நெய் வாசனை கமகமவென்று இருக்கும்.

    வாழைப்பூ வடை செய்யும்போது சிறிது பச்சரிசி மாவு சேர்த்தால் வடை உடையாமல் வரும்.

    புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் அல்லது தேங்காய் பால் சேர்த்தால் சுவை கூடும்.

    ரசம் தாளிக்க எண்ணெய்க்கு பதில் நெய் ஊற்றி தாளித்தால் ரசம் வாசனையாக இருக்கும்.

    கீரையை சமைத்து இறக்கிய பின்னர் உப்பு சேர்த்தால், கீரையில் உண்டாகும் சில ரசாயன மாற்றங்களை தடுக்கலாம்.

    சாம்பாரில் புளிப்பு அதிகமாகி விட்டால் ஒரு துண்டு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்க்கலாம்.

    பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது சர்க்கரை சேர்த்தால் பூரி சீக்கிரம் நமத்து போகாமல் இருக்கும்.

    சாலட் தயாரிக்க தக்காளி நறுக்கும் போது சாறு வெளியேவராமல் இருக்க, தக்காளியின் அடிப்பகுதியில் பிளஸ் போன்று கீறி பின்னர் வட்டமாக நறுக்கலாம்.

    ரசம் வைக்கும்போது கறிவேப்பிலை இல்லை என்றால் சிறிதளவு முருங்கையிலை சேர்த்து இறக்கினால் தனி சுவை தரும்.

    சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும்போது ஒரு டீஸ்பூன் கொள்ளுப்பருப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் உடம்பில் கொழுப்பு சேராமல் இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடனே சாப்பிட்டு விடலாம் என்பதால் இந்த அரிசிக்கு அந்த காலத்தில் மிகுந்த வரவேற்பு இருந்தது.
    • இந்த அரிசியின் ஊட்டச்சத்து மதிப்புக்கும் குறைவில்லை.

    அரிசியை ஊறவைத்து சமைத்து சாப்பிடுவதுதான் வழக்கம். ஆனால் சமைக்காமல் சாப்பிடக்கூடிய அரிசி அசாமில் விளைவிக்கப்படுகிறது. அதன் பெயர் 'கோமல் சவுல்'. மந்திர அரிசி என அழைக்கப்படும் இதை தண்ணீரில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்தால் போதும். சாதம் பதத்துக்கு மாறி சாப்பிட தயாராகிவிடும்.

    இந்த அரிசி வழக்கமான அரிசியை போல் இல்லாமல் தனித்துவமான ஸ்டார்ச் அமைப்பை கொண்டுள்ளது. அது ஊற வைக்கும்போது மென்மையாக மாற வழிவகை செய்கிறது. அப்படி மாறிய சாதத்துடன் வெல்லம், தயிர், பால் அல்லது வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவார்கள்.

    பண்டைய காலத்தில் வயல் வேலைக்கு செல்லும் விவசாயிகள், நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள் இந்த அரிசியை உடன் எடுத்து சென்றார்கள். சமைக்க வேண்டிய அவசியமில்லாமல் தண்ணீரில் ஊற வைத்தால் போதும். உடனே சாப்பிட்டு விடலாம் என்பதால் இந்த அரிசிக்கு அந்த காலத்தில் மிகுந்த வரவேற்பு இருந்தது. எடுத்து செல்வதற்கும் எளிதானது, உணவு தயாரிக்க சுலபமானது மட்டுமின்றி பசி உணர்வை போக்கி நிறைவாக சாப்பிட்ட உணர்வையும் தரக்கூடியது. திருவிழாக்கள் மற்றும் குடும்பத்தினர் ஒன்றாக பங்கேற்கும் நிகழ்வுகளில் இந்த அரிசி பயன்படுத்தப்பட்டது.

    இந்த அரிசியின் ஊட்டச்சத்து மதிப்புக்கும் குறைவில்லை. இதிலிருக்கும் கார்போஹைட்ரேட் உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கக்கூடியது. அதேவேளையில் மெதுவாக வெளியிடும் ஸ்டார்ச்சை கொண்டிருப்பதால் சோம்பலாக உணர வைக்காமல் உற்சாக நிலையை தக்கவைக்கும். இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் செரிமானத்தை ஊக்குவிக்கும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவிடும். பிரீரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். உடலுக்கு தேவையான இரும்பு சத்தையும் அளிக்கும். உணவில் இருந்து அத்தியாவசிய தாதுப்பொருளை போதுமான அளவு பெற முயற்சிப்பவர்களுக்கு இந்த அரிசி சிறந்த தேர்வாக அமையும். பால் அல்லது தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் புரதம், கால்சியம் கொண்ட சமச்சீர் உணவாக மாறும். வெல்லம், வாழைப்பழம் சேர்ப்பதன் மூலம் இரும்புச்சத்து, நார்ச்சத்து உடலுக்கு கிடைக்கும்.

    அசாமின் பாரம்பரிய அரிசியாக இருந்த கோமல் சவுலை விவசாயிகள் வருடத்திற்கு ஒருமுறை பயிரிட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த அரிசியின் பயன்பாடு குறைந்து போனது. தற்போது மீண்டும் இந்த அரிசி ரகத்துக்கு மவுசு கூடியுள்ளது. அசாம் மாநிலத்தை கடந்து மற்ற பகுதியில் வசிப்பவர்கள் மத்தியிலும் இந்த அரிசிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. ஆன்லைன் தளங்களிலும் இந்த மந்திர அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலை அகற்றி வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
    • தக்காளி விலை அதிகமாக இருக்கும்போது சூப், குழம்பு தயார் செய்ய தக்காளி சாஸ் பயன்படுத்தலாம்.

    ரவா தோசை செய்யும்போது 2 ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்யவும். தோசை சிவந்து மொறுமொறுவென்று இருக்கும்.

    தேங்காய் பர்பி கிளறும்போது பழுத்த மாம்பழம் ஒன்றை தோல் சீவி துருவி கலந்து விட்டால் சுவையான கலர்புல் பர்பியாக இருக்கும்.

    தேயிலையை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் சர்க்கரை, தேங்காய் துருவல் போட்டு பருகினால் சுவையாக இருக்கும்.

    இட்லி மாவு கொஞ்சமாக இருந்தால் ரவையை வறுத்து மாவுடன் கலந்து சிறிது நேரம் ஊற வைத்த பிறகு தோசை வார்த்தால் மொறுமொறுவென்று இருக்கும்.

    பால் பாயாசம் செய்யும் போது இரண்டு பச்சை வாழைப் பழத்தை நன்கு பிசைந்து போடவும். சுவை கூடும். மணமாகவும் இருக்கும்.

    ரவையை டால்டா விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊற வைத்து பிறகு சர்க்கரைப்பாகு வைத்து கேசரி கிளறினால் ருசி அதிகரிப்பதுடன் டால்டாவும் குறைவாக செலவாகும்.

    வடை தட்டும்போது உள்ளே ஒரு பன்னீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுத்தால் வித்தியாசமான, ருசியான வடை தயார்.

    சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலை அகற்றி வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

    பீட்ரூட்டின் தோலை நகத்தினால் கீறிப் பார்த்தால் உள்ளே நல்ல ரோஸ் நிறத்தில் இருந்தால் அது இனிப்பான காயாகும்.

    வற்றல் செய்யும் கூழில் சிறிதளவு வடிகஞ்சியையும் சேர்த்து கொள்ளுங்கள். இப்படி செய்தால் வற்றல் மாவாக கரையும்.

    பஜ்ஜியில் அதிக காரம் வேண்டாம் என்று விருப்பப்பட்டால் உப்பையும், ஓமத்தையும் சேர்த்து அரைத்து பஜ்ஜி செய்யலாம். சுவையாக இருக்கும்.

    தேங்காய் பர்பி செய்கிறீர்களா? வேர்க்கடலையின் சிவப்புத் தோலை நீக்கி, இரண்டாக உடைத்து நெய்யில் பொரித்து போட்டு செய்யுங்கள். கூடுதல் சுவை கிடைக்கும்.

    தக்காளி விலை அதிகமாக இருக்கும்போது சூப், குழம்பு தயார் செய்ய தக்காளி சாஸ் பயன்படுத்தலாம். ருசியாக இருக்கும்.

    குழம்பில் மஞ்சள் பொடி அதிகமாகி விட்டால் வருந்த வேண்டாம். சுத்தமான ஒரு வெள்ளைத் துணியை குழம்பில் போடுங்கள். அதிகமான மஞ்சள் பொடி உறிஞ்சப்படும்.

    முறுக்கு, தட்டை, தேன்குழல் நமத்து போகாமல் இருக்க வேண்டுமானால், மாவு பிசையும்போது வெந்நீர் ஊற்றி பிசைய வேண்டும்.

    காய்ந்த மிளகாயை நீளவாக்கில் வெட்டி, அதனுடைய விதைகள் சிவக்கும் அளவுக்கு எண்ணெய்யில் வறுத்த பின்னர் துவையலோ, பொடியோ செய்தால் மணமும் ருசியும் தூக்கலாக இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எண்ணெயில் சிறிது மிளகைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது.
    • பூரிக்கு மாவு பிசையும்போது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

    • தயிர் பச்சடியில் பாலாடையை போட்டால் எளிதில் புளித்து விடாமல் இருக்கும்.

    • டீயில் சிறிதளவு சுக்குத்தூள், மிளகுத்தூள், ஏலக்காய் தூள் கலந்தால் அதிக ருசி கிடைக்கும். அஜீரணக் கோளாறும் சீராகும்.

    • முட்டையை தண்ணீரில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

    • வெந்தயக் கீரையை சமைக்கும்போது சிறிது சர்க்கரையை சேர்த்தால் அதில் உள்ள கசப்பு சுவை நீங்கிவிடும்.

    • சமையலுக்கு பட்டாணி பயன்படுத்தும்போது அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும்.

    • நறுக்கிய வெங்காயத்துடன் சிறிது வெண்ணெய் சேர்த்து வைத்தால் நீண்ட நேரம் பிரெஷ்ஷாக இருக்கும்.

    • எண்ணெயில் சிறிது மிளகைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது.

    • பூரிக்கு மாவு பிசையும்போது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

    • கோதுமை மாவு தோசைக்கு காலையிலேயே மாவை கரைத்து வைத்தால் மாலையில் சுடும் போது ஒட்டாமல் வரும்.

    • சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, பெருங்காயம், வெந்தயம், சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால் சாம்பார் நல்ல வாசனையோடு மட்டுமின்றி நீண்ட நேரம் கெடாமலும் இருக்கும்.

    • சுண்டல், வெள்ளை சுண்டல், ராஜ்மா, காராமணி போன்ற பருப்பு வகைகளை கிரேவியாக சமைக்கும் பொழுது, வெந்த பருப்பில் இருந்து சிறிதளவு எடுத்து அரைத்து கரைத்து விட்டால் கிரேவி கெட்டியாக இருப்பதுடன் ருசியும் கூடும்.

    • காய்ந்த ரொட்டியை துண்டுகளாக நறுக்கி நன்றாக காய வைத்து எடுத்து வைத்தால் அவற்றை புலாவ், பிரியாணி ஆகியவற்றில் வறுத்துப் போட சுவையாக இருக்கும்.

    • கத்திரிக்காய் காம்புகளை கழுவிக்கொண்டு ரசம் அல்லது சாம்பார் கொதிக்கும்போது போட்டால் சுவையாக இருக்கும்.

    • முருங்கைக்கீரை உருவிய காம்புகளை சுத்தம் செய்து ரசத்தில் போட்டு குடித்தால் மூட்டுகளுக்கு நல்ல பலம் கிடைக்கும்.

    • கத்திரிக்காயை நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால் கறுத்துப் போகாமல் இருக்கும்.

    • வாழைப்பூ, வாழைக்காய் போன்ற காய்கறிகளை நறுக்கும் பொழுது ஏற்படும் கறையைப் போக்க, கைகளை வாழைப்பழத் தோலின் உட்பகுதியில் தேய்த்து விட்டு சோப்பு போட்டு கழுவினால் கை பளிச்சென்று ஆகிவிடும்.

    • கசக்கும் காய்களை அரிசி கழுவிய நீரில் சில நிமிடம் போட்டு சமைத்தால் கசப்பு குறையும்.

    • சில முள்ளங்கிகள் அதிக வாடை வீசும். அவற்றை அரை மணி நேரம் முன்பாக தண்ணீரில் ஊறவைத்து பிறகு சமைத்தால் வாசனை வராது.

    • குளிர் காலத்தில் லேசான சுடு பாலில் உறை ஊற்றி வைத்தால் சீக்கிரம் கெட்டித்தயிர் கிடைக்கும்.

    • பன்னீரை, வினிகர் தெளித்த பாலீத்தின் பையில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

    • சேமியா உப்புமா செய்யும் போது பாதி அளவு நீரும், பாதி தேங்காய் பாலும் கலந்து செய்தால் உப்புமா ருசிக்கும்.

    • வெண்ணெய் காய்ச்சிய வாணலியில் உருளைக்கிழங்கு அல்லது அவரைக்காயை வதக்கி வறுவல் செய்தால் சுவையும், மணமும் கூடுதலாக இருக்கும்.

    • பச்சடி, சூப் செய்ய சிவப்பு நிற வெங்காயத்தை பயன்படுத்துவது நல்லது. இது ருசியைக் கூட்டும்.

    ×