என் மலர்

    சமையல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெங்காயம், பச்சை மிளகாயை வெட்டிவைத்துக் கொள்ளவும்.
    • தர்பூசணி காய் நன்கு வெந்ததும் தேங்காய்த் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    தர்பூசணி கீற்று -3

    பாசிப் பருப்பு - 100 கிராம்

    சிறிய வெங்காயம் - 4

    தேங்காய் - 1/2 மூடி

    பச்சை மிளகாய் - 3

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    கடுகு - சிறிதளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கடலை எண்ணெய்- சிறிதளவு

    உப்பு தேவையான அளவு

    செய்முறை:

    தர்பூசணி கீற்றுகளின் பழுத்த பகுதிகளை நீக்கி விட்டு, பச்சைப்பகுதிகளை சீவி விட்டு இடைப்பட்ட சதைப்பகுதிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிவைத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாயை வெட்டிவைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை ஊறவைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை உருவிவைத்துக் கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    அத்துடன், வெட்டி வைத்துள்ள தர்பூசணித் துண்டுகள், ஊற வைத்துள்ள பாசிப்பருப்பு, மஞ் சள்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்.

    தர்பூசணி காய் நன்கு வெந்ததும் தேங்காய்த் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    தர்பூசணி பாசிப்பருப்பு கூட்டு தயார். சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சப்பாத்தி மீதமானால் ஈரத்துணி சுற்றி வைத்தால் பதமாக இருக்கும்.
    • ஒரு கப் அவல், ஒரு கைப்பிடி பச்சரிசி, உளுத்தம் பருப்பு சிறிது சேர்த்து அரைத்து செட் தோசை செய்யலாம்.

    * இட்லிப்பொடி தயாரிக்கும்போது சிறிது கறிவேப்பில்லையை வறுத்து அரைத்து சேர்த்தால் மணமாகவும், பித்தத்தை போக்கவும் உதவும்.

    * பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி மென்மையாக மாறும்.

    * சப்பாத்தி மீதமானால் ஈரத்துணி சுற்றி வைத்தால் பதமாக இருக்கும்.

    * தோசைமாவு குறைவாக இருந்தால், அந்த அளவிற்கு அரிசி மாவு, தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நீர் விட்டு சிறிது நேரம் கழித்து ஆப்பம் ஊற்றலாம்.

    * ஒரு கப் அவல், ஒரு கைப்பிடி பச்சரிசி, உளுத்தம் பருப்பு சிறிது சேர்த்து அரைத்து செட் தோசை செய்யலாம்.

    * இட்லி மாவு அரைக்கும்போது சிறிது ஐஸ்வாட்டர் ஊற்ற இட்லி பஞ்சு போல் மிருதுவாக வரும்.

    * பீர்க்கங்காயுடன் தக்காளி, வரமிளகாய், வெங்காயம், வதக்கி சட்னி செய்தால் சூப்பர் சுவையுடன் இருக்கும்.

    * மீதமான அப்பளம் இருந்தால், அத்துடன் தேங்காய், கருவேப்பிலை, புளி, உப்பு, பச்சை மிளகாய் வறுத்து சேர்த்து அரைக்க அப்பள துவையல் ரெடி. மாறுபட்ட சுவையை கொண்டிருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இஞ்சி-பூண்டு விழுது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, அதில் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் கலந்து பிரிட்ஜில் வைக்கலாம்.
    • மீன் பொரிக்கும்போது பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க, அதில் சிறிது அரிசி மாவு அல்லது ரவை தடவலாம்.

    * வெங்காயத்தை வெட்டும்போது கண்களில் நீர் வராமல் இருக்க, அதை 10 நிமிடம் பிரிட்ஜில் வைத்து வெட்டுங்கள்.

    * மிளகாய் தூள் அதிகமாகிவிட்டால், சிறிது தயிர் அல்லது தேங்காய் பால் சேர்த்தால் காரம் சமநிலையாகும்.

    * தயிரை விரைவாக தயார் செய்ய, அதில் ஒரு மிளகாய் சேர்த்து வைத்தால் சீக்கிரம் பதனமடையும்.

    * சமையல் மேசையில் எறும்புகள் வராமல் இருக்க, சிறிது எலுமிச்சைச்சாறு தடவலாம்.

    * பாத்திரங்களில் எண்ணெய் ஒட்டாமல் கழுவ, சோப்புடன் சிறிது உப்பு கலந்து தேய்த்தால் பாத்திரங்கள் பளிச்சிடும்.

    * இஞ்சி-பூண்டு விழுது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, அதில் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் கலந்து பிரிட்ஜில் வைக்கலாம்.

    * தோசை மாவு விரைவாக புளிக்க, அதை குளிர்ச்சியான இடத்தில் வைக்காமல், லேசான சூடான இடத்தில் வைக்கவும்.

    * மோருடன் சிறிது இஞ்சி விழுது சேர்த்தால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

    * தக்காளி பச்சை நிறத்தில் இருந்தால், அவற்றை அரிசி இருக்கும் டப்பாவில் வைத்தால் விரைவில் சிவப்பு நிறமாகும்.

    * ஆட்டிறைச்சி மென்மையாக இருக்க, அதை பப்பாளி விழுது அல்லது தயிரில் ஊறவைத்து சமைக்கவும்.

    * மீன் பொரிக்கும்போது பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க, அதில் சிறிது அரிசி மாவு அல்லது ரவை தடவலாம்.

    * சூப் மிகவும் ருசியாக இருக்க, கடைசியாக சிறிது பட்டாணி மாவு அல்லது முந்திரி விழுது சேர்க்கலாம்.

    * பிரியாணியில் தனித்துவமான மணம் வர, இறுதியாக ஒரு ஸ்பூன் நெய் மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

    * தேன் நீண்ட நாட்கள் `பிரஷ்'ஆக இருக்க, அதை ஒளி புகாத இடத்தில் கண்ணாடி பாட்டிலில் வைப்பது நல்லது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பால் பொங்கினால் டம்ளரில் சிறிது தண்ணீரை எடுத்து ஊற்றினால் பொங்குவது அடங்கி விடும்.
    • ரசம் கொதித்து விட்டதா என்று அடிக்கடி திறந்து பார்க்கத் தேவை இல்லை.

    * தேநீர் தயாரிக்கும் போது சர்க்கரையையும், டீத்தூளையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடித்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையில் அசடுகள் இருக்க வாய்ப்புண்டு.

    * தோசைக்கல்லில் சப்பாத்தியை போட்டதும் எவர் சில்வர் கிண்ணத்தில் சுடுநீரை ஊற்றி சப்பாத்தி மீது வைத்து மெதுவாக அழுத்தினால் சப்பாத்தி பொன் நிறமாக மாறும். சீக்கிரமே வெந்தும் விடும். சில்வர் கிண்ணத்தின் அடிப்புறம் தட்டையாகவும் சாப்பாத்தி அளவுக்கு வட்ட வடிவமாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

    * கல் உப்பை பாட்டிலில் போட்டு நீர் ஊற்றி கலக்கி, அந்த தண்ணீரை வடித்து விட்டால் உப்பு சுத்தமாகி விடும். மணல் போன்ற தூசிகள் அடியில் தேங்கி விடும். மீண்டும் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்தால் மேலே தென்படும் தெளிந்த நீரை சமையலுக்குப் பயன்படுத்தலாம். அந்த உப்பு நீரை சமையலுக்குப் பயன்படுத்தும்போது ஒரு கரண்டியில் ஊற்ற வேண்டும். தூசி ஏதும் இருந்தால் எடுத்தும் விடலாம்.

    * சமையல் அறையில் ஒரு நோட்டும், பேனாவும் வைத்துக் கொண்டால் மளிகைப் பொருட்கள் முடியும் தருவாயில் அவற்றை குறித்து வைத்துக்கொள்ளலாம். பின்பு கடையில் பொருள் வாங்கும் போது யோசித்து குழம்ப வேண்டாம். இந்தக் குறிப்புகள் பயன்படும்.

    * இடுக்கிகள் இல்லாத போது, அடுப்புத் துணிக்கு நூல் துணியைப் பயன்படுத்த வேண்டும். நைலான் துணிகளில் தீப்பற்றினால் அணைப்பதுசிரமம். காலால் தேய்த்தால் நைலான் இழைகள் நெருப்புடன் பாதத்தில் ஒட்டிக்கொள்ளும். காய்கறிகள் கழுவிய தண்ணீர் வைத்துள்ள வாளியில் தீப்பிடித்த துணியைப் போடலாம். பதற்றமே தேவை இல்லை.

    * பால் பொங்கினால் டம்ளரில் சிறிது தண்ணீரை எடுத்து ஊற்றினால் பொங்குவது அடங்கி விடும்.

    * மின் அடுப்பை பயன்படுத்தும்போது அடுப்பை அணைக்காமல் மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது. அடுப்பை அணைத்த பின் மின் இணைப்பை துண்டிக்கும் வழக்கத்தை பின்பற்றினால் அடுப்பு நீடித்து உழைக்கும்.

    * ரசம் கொதித்து விட்டதா என்று அடிக்கடி திறந்து பார்க்கத் தேவை இல்லை. ரசம் கொதித்து விட்டால், மூடி, கை தாங்க முடியாத அளவுக்கு சூடாகியிருக்கும். இதைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தக்காளி சட்னி செய்யும் போது சிறிது புளி அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
    • வத்தல் குழம்பு, மீன் குழம்பில் இறுதியாக சிறிது வெல்லம் சேர்த்தால் குழம்பு ருசி அதிகரிக்கும்.

    * இஞ்சிபூண்டு அரைக்கும் பொழுது சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் பிரெஷ்ஷாக இருக்கும்.

    * வாழைப்பூ நறுக்கும்போது உப்புக்கலந்த தண்ணீரில் வாழைப்பூவை வெட்டிப்போட்டால் வாழைப்பூ கறுத்து போகாமல் இருக்கும்.

    * கடல் பாசி காய்ச்சும்போது இறுதியாக சில சொட்டு எலுமிச்சை பழச்சாறு ஊற்றினால் கடல் பாசி கண்ணாடி போல தெளிவாக இருக்கும்.

    * அசைவ இறைச்சிகள் கழுவும் போது உப்பு, மஞ்சள் தூள் போட்டு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கழுவினால் வாடை வராமல் இருக்கும்.

    * ஸ்வீட் வகைகள் செய்யும்போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொண்டால் இனிப்பு தூக்கலாக தெரியும்.

    * தக்காளி சட்னி செய்யும் போது சிறிது புளி அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

    * துவரம் பருப்பை வேகவைக்கும் பொழுது தண்ணீரில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வேக வைத்தால் பொங்காது.

    * பருப்புக் குழம்பில் இறுதியாக வெங்காயத்தை நெய்யில் தாளித்து ஊற்றினால் சுவை அதிகரிக்கும். நன்கு வாசனையாக இருக்கும்.

    * வத்தல் குழம்பு, மீன் குழம்பில் இறுதியாக சிறிது வெல்லம் சேர்த்தால் குழம்பு ருசி அதிகரிக்கும்.

    * தேங்காய்ப் பாலில் பொட்டுக்கடலையை பொடி செய்து சேர்த்து உப்பு சேர்த்து தாளித்து இறக்கினால் அவசர சட்னி ரெடி.

    * சாதம் மஞ்சளாக இருந்தால் சாதம் வடிக்கும் நேரத்தில் ஒரு துண்டு புளியை சேர்த்து பிறகு வடித்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.

    * மாவில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொதித்தவுடன் இட்லி ஊற்றினால் இட்லி பஞ்சு போல இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக சுகாதர அமைப்பு (WHO) ஒரு வரையறையை வெளியிட்டுள்ளது.
    • ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தொற்றா நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

    முறையற்ற உணவுகள் ஆட்சி செலுத்தும் ஒரு காலகட்டத்தில் ஆரோக்கியமான ஒரு உணவு முறையோ எவ்வாறு இருக்க வேண்டும் என உலக சுகாதர அமைப்பு (WHO) ஒரு வரையறையை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஆரோக்கியமான உணவு முறையில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் முழு தானியங்கள் இருக்க வேண்டும்.

    வயது வந்த நபர் ஒருவர் ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்து பகுதிகளாக பழங்கள் மற்றும் காய்கறிகளை (400 கிராம்) சாப்பிட வேண்டும்.

    ஒரு நாளைக்கு சர்க்கரையை 50 கிராமுக்கும், கொழுப்புகளை 30%-க்கும் குறைவாகவும், அயோடின் கலந்த உப்பு தினமும் 5 கிராமுக்கு குறைவாகவும் உட்கொள்வதை உறுதி செய்தலே பல நன்மைகள் ஏற்படும். இந்த முறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தொற்றா நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சட்னி தயார் செய்யும்போது புளிக்கு பதில் தோல் சீவிய மாங்காய் சேர்க்கலாம்.
    • அடைக்கு மாவு அரைக்கும்போது பரங்கிக்காய் சேர்த்து அரைத்தால் அடை பஞ்சு போல இருக்கும்.

    * பிரெட்டை முக்கோண வடிவில் டோஸ்ட் செய்து தாளித்த தயிரை அதன் மேல் ஊற்றினால் பிரெட் தயிர் வடை ரெடி.

    * காலி பிளவர், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஏலக்காய், சோம்பு, கிராம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த கலவை உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். இந்த காலிபிளவர் சட்னி, இட்லி, சப்பாத்திக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

    * தோசை மாவு அரைக்கும்போது கொஞ்சம் ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால், தோசை பளபளவென்று மெல்லியதாக வரும்.

    * இட்லிக்கு சட்னி தயார் செய்யும்போது புளிக்கு பதில் தோல் சீவிய மாங்காய்த்துண்டை சேர்த்து அரைத்தால் சட்னியின் சுவை பிரமாதமாக இருக்கும்.

    * ஒரு கரண்டி நெய்யை அடுப்பில் வைத்து காய்ச்சி அதை பஜ்ஜி மாவோடு கலந்து பஜ்ஜி செய்தால், பஜ்ஜி வாசனையாக இருக்கும்.

    * ஈரமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கலக்கினால் வெள்ளைக்கரு பாத்திரத்தில் ஒட்டி வீணாவதை தவிர்க்கலாம்.

    * மீன்களை எண்ணெய்யில் பொரிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவும். இதை தவிர்க்க மீன்களைப் பொரிக்கும்போது அடுப்பின் அருகில் பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.

    * மீன் பாத்திரத்தில் மீன் வாசம் இருந்தால் சீயக்காய்த்தூளையும், புளியையும் சேர்த்து பாத்திரத்தை துலக்கினால் மீன் வாசம் போய்விடும்.

    * ரவா தோசை தயாரிக்கும்போது இரவே ரவையை தண்ணீரில் கரைத்து வைக்கவும். மறுநாள் காலை தோசை வார்ப்பதற்குமுன் இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை சிவப்பாக மொறுமொறுவென இருக்கும்.

    * பன்னீர் துண்டுகளை ஒரு டப்பாவில் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து உடன் ஒரு ஸ்பூன் வினிகரை ஊற்றி மூடி பிரிட்ஜில் வைத்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

    * வெள்ளை உளுந்தை வறுத்து விழுதாக அரைத்து தக்காளி சட்னியுடன் சேர்த்தால் சட்னி கம கம வாசனையாக இருக்கும்.

    * முந்திரி, பாதாம், கசகசா போன்றவைகளை அரைப்பதற்கு முன்பு ஊற வைத்து பிரிட்ஜில் வைத்து அரைத்தால் விரைவில் அரைபடும்.

    * அடைக்கு அரைக்கும்போது ஒரு கீற்று பரங்கிக்காயைச் சேர்த்து அரைத்தால் அடை பஞ்சு போல இருக்கும்.

    * அரிசி கொதிக்கும்போது ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி தூவினால், உலை நீர் கொதித்து வெளியே வழியாது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களைக்கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
    • வர மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுக்கவும்.

    * இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து அதிகமாகி விட்டால், அதனுடன் ஊற வைத்த ரவை சிறிது சேர்த்து விட்டால், இட்லி மிருதுவாகவும், ரவா இட்லி போலவும் இருக்கும்.

    * சேமியாவை வாணலியில் வறுத்து விட்டு உப்புமா செய்தால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

    * கோதுமை அல்வா செய்யும் போது, வெந்நீர் தெளித்து, நெய் கலந்து கிளறினால், அல்வா சுவையும், மணமும் கூடும்.

    * அதிரச மாவை கலந்த பின், வரும் கட்டியைத் தட்டை முறுக்கு, தேன்குழல் மாவில் கலந்தால் கர கர, மொறு மொறுவென்று இருக்கும்.

    * பால் காய்ச்சும்போது சில ஏலக்காய்களைப் போட்டால், பால் நீண்ட நேரம் புளிக்காலும், மணமாகவும் இருக்கும்.

    * சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

    * உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களைக்கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

    * வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயைக்காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

    * தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

    * வர மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுக்கவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.
    • கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * முட்டையை வேக வைத்த பிறகு அதன் ஓடு லேசாக வெடிக்கும் வரை அடித்து சிறிது நேரம் குளிர்ந்த நீரில் மூழ்கடிக்க வேண்டும். அதன் பிறகு, முட்டையை எளிதில் உடைக்க இயலும். முட்டை கொதிக்கும் போது ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் சேர்த்தால் ஓடு எளிதில் வெளியேற உதவும்.

    * கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, சிறிது எண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக கலக்கவும். பின்னர், மாவில் மிளகாயை முக்கி, சூடான எண்ணெய்யில் போட்டு எடுக்கவும். இவ்வாறு செய்தால் பஜ்ஜி மொறுமொறுப்பாக இருக்கும்.

    * வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயத்தை வட்டமாக வெட்டிய பின், தோலை உரித்தால் வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும். பஜ்ஜி செய்யும் போது மாவுடன் மைதா சேர்த்தால் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

    * பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.

    * பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது.

    * மிளகாய்த்தூள் கெட்டுப்போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காய கட்டியை போட்டு வைத்தால் போதும். நீண்ட நாள் காரம் மணம் மாறாமல் இருக்கும்.

    * வடைக்கு மாவு தயாரிக்கும்போது அதில் சிறிதளவு நெய் சேர்க்க முறுமுறுப்பாக இருக்கும். எண்ணெய் தேவை குறைவாகும்.

    * கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * மீன் குழம்பு தயாரிக்கும் போது வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் வறுத்து பொடி செய்து குழம்பில் சிறிது போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

    * உள்ளங்கையில் சமையல் எண்ணெய் சில சொட்டு ஊற்றி தேய்த்து மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் வாடை பிடிக்காது.

    * மிளகு ரசத்திற்கு குழைய வைத்து வேக வைத்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரசத்தின் சுவை கூட தேங்காய் தண்ணீர் சேர்க்கலாம்.
    • நெய் மணக்கணுமா? நெய் ஜாடியில் சிறிதளவு வெல்லம் போட்டு வைக்கவும்.

    * தேங்காய் மூடியை தண்ணீரில் மூழ்க வைத்திருந்தால் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.

    *கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினாவை வாழை இலையில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.

    * பயிறு வகைகளை புழு, பூச்சி சேதப்படுத்தாமல் இருக்க விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைக்கவும்.

    * எந்த சட்னி செய்தாலும் சிறிதளவு பூண்டு சேர்த்தால் மணம் கமகமக்கும்.

    * ரசத்தின் சுவை கூட தேங்காய் தண்ணீர் சேர்க்கலாம்.

    * தோசை சுடும்போது வாசனையால் ஊரையே ஈர்க்க வேண்டுமா? தோசை வார்க்கும் முன் தோசைக்கல்லில் சிறிது நல்லெண்ணெய் தேய்க்கவும்.

    * நெய் 'கமகம'வென மணக்கணுமா? நெய் ஜாடியில் சிறிதளவு வெல்லம் போட்டு வைக்கவும்.

    * முறுக்கு, சீடைக்கு மாவை வெந்நீர் ஊற்றி பிசைந்து பொரித்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

    * இட்லி மல்லிகைப்பூ போல் இருக்க இட்லி மாவில் ஒரு கரண்டி நெய் சேர்க்கவும்.

    * வாடிய கொத்தமல்லித் தழையை வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்தால் புதிது போல் மாறிவிடும்.

    * வாணலியை சூடாக்கி பின்பு அதில் சாம்பார் வெங்காயத்தை போட்டு சூடு வர புரட்டினால் அதன் தோலினை சுலபமாக உரிக்க இயலும்.

    * தோசை தயாரிக்கும்போது உளுத்தம் பருப்புடன் ஒரு கப் ஜவ்வரிசியையும் கலந்து அரைத்தால் தோசை நன்கு வார்க்க வருவதுடன் மெல்லியதாகவும், ருசியாகவும் இருக்கும்.

    * தேங்காய் துவையல் அரைக்கும் போது சிறிது இஞ்சி சேர்த்து அரைத்தால் துவையல் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * குழம்புக்கோ, கூட்டிற்கோ துருவிய தேங்காயில் ஒரு ஸ்பூன் தேங்காய் பால் எடுத்து அடுப்பில் இருந்து இறக்கும்போது அதில் விடுங்கள். ருசியோ ருசி தான்.

    * அவியல் செய்யும்போது அரைத்த தேங்காய் விழுதை தயிரில் கலக்காமல் வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து பிறகு தயிர் சேர்க்க வேண்டும். இதனால் அவியல் நீர்த்துப் போவதை தவிர்க்கலாம்.

    * தயிரில் தக்காளி துண்டுகள், சர்க்கரை ஏலத்தூள், சிறிது உப்பு சேர்த்து ஸ்வீட் பச்சடி செய்யலாம். விருப்பமானால் வாழைப்பழம், ஆப்பிள் துண்டுகளையும் சேர்க்கலாம்.

    * மஞ்சள் பூசணி வாங்கினால் அதை சமைத்து விட்டு நடுவில் உள்ள குடல் போன்ற பாகத்தை வீணாக்காமல் அதை எண்ணெய் விட்டு வதக்கி அத்துடன் வறுத்த பருப்பு, மிளகாய், புளி, உப்பு சேர்த்து துவையல் அரைத்து சாப்பிடலாம். மிகவும் ருசியாவும் மணமாகவும் இருக்கும்.

    * மழை, குளிர் காலங்களில் வடகம் சரியாகப் பொரியாது, அவ்வாறு நமத்து விட்டால் பொரிப்பதற்கு முன் வாணலியை சூடாக்கி அதில் வடகத்தை போட்டு சற்று புரட்டி எடுத்துக் கொண்டு பிறகு எண்ணெய்யில் பொரித்தால் நன்கு பொரியும்.

    * பச்சரிசி தோசை அரைக்கும் போது கூடவே நாலைந்து ஓம இலைகளையும் சேர்த்து அரைத்தால் தோசை வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். ஓமம் குளிர் காலத்தில் நல்ல மருந்தும் கூட.

    * தேங்காய் துவையலுக்கு தேவையான பொருட்களை தாளித்து எடுக்கும் போது சிறிது தனியாவையும் சேர்த்து வறுத்து அரைத்தால் துவையல் மணமாக இருக்கும்.

    * கடலைப்பருப்பை போளி பூரணம் செய்யும்போது அதற்கு தேவையான பூரணத்திற்கு வெல்லத்துக்கு பதில் பொடித்த சர்க்கரையை பயன்படுத்தினால் போளி சுவையாக இருக்கும். போளி மெல்லியதாகவும் வெள்ளையாகவும் இருக்கும்.

    * சாம்பார், மோர், குழம்பு ஆகியவற்றிற்கு பருப்பு உருண்டை செய்து போடும் பொழுது ஒரு டீஸ்பூன் அரிசி மாவை உருண்டைக் கலவைடன் கலந்து உருட்டி செய்தால் அவை கரைந்து போகாமல் முழுசாக இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மீந்து போன சப்பாத்தியை மறுநாள் காலையில் மீண்டும் தோசைக்கல்லில் போட்டு சூடேற்றி சாப்பிடுவார்கள்.
    • சப்பாத்தியை மெல்லிசாக நூடுல்ஸ் போல வெட்டி வைத்துக்கொள்ளவும்.

    பெரும்பாலானோர் வீட்டில் தினமும் சப்பாத்தி செய்து சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். அப்படி சப்பாத்தி செய்யும் போது பல நேரங்களில் சப்பாத்தி மீந்து போயிடும். அப்படி மீந்து போன சப்பாத்தியை நிறைய பேர் பாதுகாப்பாக எடுத்து வைத்து, மறுநாள் காலையில் மீண்டும் தோசைக்கல்லில் போட்டு சூடேற்றி சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிட பலருக்கு பிடிக்காது. அப்படி போன சப்பாத்தியை வைத்து நூடுல்ஸ் செய்யலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    சப்பாத்தி

    முட்டை-4

    பெரிய வெங்காயம்-3

    தக்காளி-3

    இஞ்சி- சிறிது

    பூண்டு- சிறிது

    மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்

    மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

    மிளகுத் தூள் - 1 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் முட்டையை பொரித்து எடுத்துவைக்கவும். பிறகு சப்பாத்தியை மெல்லிசாக நூடுல்ஸ் போல வெட்டி வைத்துக்கொள்ளவும்.

    கடாயை சூடுசெய்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி போட்டு வதக்கவும். நன்கு வதக்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து குறைவான தணலில் மூடிவைக்கவும். பச்சை வாடை போனவுடன், வெட்டி வைத்த சப்பாத்தி, முட்டைப் பொரியல் போட்டு, மிளகுத் தூள், உப்பு இட்டு, கிளறி எடுத்து சுடச்சுட பரிமாறவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேவையற்ற நேரங்களில் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவது முற்றிலும் குறையக்கூடும்.
    • புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து காம்பினேஷன், உடலுக்கு நிலையான ஆற்றலை தரக்கூடும்.

    வேர்க்கடலை வெண்ணெயில் வைட்டமின் ஈ, மக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றை காலை உணவு முறையில் சேர்ப்பதால், வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தக்கூடும். இதனால், தேவையற்ற நேரங்களில் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவது முற்றிலும் குறையக்கூடும்.

    வேர்க்கடலை வெண்ணெயில் நிறைவுறா கொழுப்புகள் நிறைந்துள்ளது. அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திட உதவக்கூடும். இதில் நார்ச்சத்து உள்ளடக்கம் அதிகமாகவே உள்ளது. அவை செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுவது மட்டுமின்றி குடல் இயக்கத்தையும் மேம்படுத்தக்கூடும். இதனால், மலச்சிக்கல் அபாயம் முற்றிலும் குறையக்கூடும். புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து காம்பினேஷன், உடலுக்கு நிலையான ஆற்றலை தரக்கூடும். இதனால், பிற பணிகளில் எவ்வித சோர்வும் இன்றி கவனத்தை செலுத்த முடியும்

    இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய பீனட் பட்டரை (வேர்க்கடலை வெண்ணெய்) 2 நிமிடத்தில் வீட்டிலேயே செய்யலாம். வாங்க பார்க்கலாம்...



    தேவையான பொருட்கள்

    வறுத்த வேர்க்கடலை- 1 கப்

    சமையல் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

    ஒரு சிட்டிகை உப்பு

    2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை (உங்கள் சுவை விருப்பத்திற்கு ஏற்ப)

    முதலில் மிக்சியில் அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். மென்மையான, கிரீமி பதத்திற்கு வரும் வரை அரைக்கவும். கட்டியாக இருந்தால் எண்ணெயை சேர்த்துக்கொள்ளவும். மீண்டும் அரைத்தால் பீனட் பட்டர் ரெடி. இதனை ஒரு ஜாரில் போட்டு வைத்து பயன்படுத்தவும். 

    ×