என் மலர்

    டென்னிஸ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதில் அமெரிக்காவின் கோகோ காப் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தானின் ரிபாகினா, அமெரிக்காவின் கேட் மெக்னல் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-4, 6-0 என்ற செட் கணக்கில் ரஷியாவின் கமீலா ராக்கிமோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • இதில் ரோகன் போபண்ணா ஜோடி காலிறுதியில் வெற்றி பெற்றது.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஜப்பானின் டகேரு யுசுகே ஜோடி, அர்ஜெண்டினாவின் மேக்சிமோ கோன்சலஸ்-ஆண்ட்ரஸ் மால்டெனி ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய போபண்ணா ஜோடி 7-6 (7-5), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் லாரன்சோ சொனெகாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், குரோசியாவின் மரின் சிலிக் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய சின்னர் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் அடுத்த சுற்றில் சின்னர், பிரான்ஸ் வீரர் டெரன்ஸ் ஆட்மனேவை சந்திக்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகெர் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய மரியா சக்காரி முதல் செட்டை 7-6 (7-5) என வென்றார். இதற்கு பதிலடியாக அமெரிக்க வீராங்கனை 7-6 (7-5) என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மரியா சக்காரி 7-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் செக் வீராங்கை பார்பரா கிரெஜ்சிகோவா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அன்னா பிளின்கோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
    • இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, சிலி நாட்டின் அலெஜாண்ட்ரோ டபிலோ உடன் மோதினார்.

    இதில் டபிலோ முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்டு ஆடிய லாரன்சோ முசெட்டி 2வது செட்டை 6-2 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 7-6 (7-5) என வென்று சிலி வீரர் டபிலோ சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
    • காலிறுதியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலாஷ்விலி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லாரன்சோ முசெட்டி 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்றது.
    • இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் அதிரடியாக ஆடி சாம்பியன் பட்டம் வென்றார்.

    சியோல்:

    பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்றது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்ட்ரோவா முதல் செட்டை 6- 1 என எளிதில் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட இகா ஸ்வியாடெக் அதிரடியாக ஆடி 7-6 (7-3) என 2வது செட்டை கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இகா ஸ்வியாடெக் 7-5 என வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது.
    • இதில் கிரெஜ்சிகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    சியோல்:

    பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செக் நாட்டின் சினியாகோவா-கிரெஜ்சிகோவா ஜோடி, அமெரிக்காவின் கேட்டி மெக்னலி- ஆஸ்திட்ரேலியாவின் மாயா ஜாயிண்ட் ஜோடியுடன் மோதியது.

    இதில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரெஜ்சிகோவா ஜோடி 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு 44 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
    • ஒட்டுமொத்தமாக 52.80 கோடி ரூபாய் அல்காரஸ்க்கு பரிசுத் தொகையாக கிடைத்தது.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் கார்லஸ் அல்காரஸ்- ஜெனிக் சின்னர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அல்காரஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    கடந்த ஆண்டைவிட 39 சதவீதம் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டது. அதன்படி இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் 5 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாக கிடைத்தது. இந்திய பண மதிப்பில் சுமார் 44 கோடி ரூபாய் ஆகும். ஒட்டுமொத்தமாக 6.09 மில்லியன் டாலர் (52.80 கோடி ரூபாய்) பரிசுத் தொகை கிடைத்தது. ஆனால், மொத்த பரிசுத் தொகையையும் அல்காரஸால் சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல முடியாதாம்.

    ஏனென்றால் அமெரிக்க சட்டப்படி 37 சதவீதம் வரி செலுத்த வேண்டுமாம். அதன்படி 1.7 மில்லியன் டாலர் வரியாக செலுத்த வேண்டும். அதுவும் இல்லாமல் 1.08 மில்லியன் முதல் 5 மில்லியன் வரையில் வருவாய் ஈட்டினால் நியூயார்ச் மாநிலத்திற்கு 9.65 சதவீதம் வரி செலுத்த வேண்டும். அப்படி பார்த்தால் சுமார் பாதி அளவு பணத்தை வரியாக மட்டுமே செலுத்த வேண்டுமாம்.

    அதேவேளையில் அமெரிக்கா- ஸ்பெயின் நாட்டின் வரி ஒப்பந்தத்தின்படி ஒருமுறை வரி கட்டினால், அதன்பின் வரி கட்ட வேண்டாம். அதனால் சொந்த நாடு திரும்பும்போது மீண்டும் வரி கட்டத்தேவையில்லை.

    சின்னருக்கு எதிராக அல்காரஸ் 15 முறை மோதியதில் 10 முறை வெற்றி பெற்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 4-2 என வெற்றிபெற்றுள்ளார். அதில் இரண்டு முறை அமெரிக்க ஓபனில் கிடைத்த வெற்றியாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றில் இருவரும் சந்திப்பது இது 3-வது முறையாகும்.
    • ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரசுக்கு ரூ.43½ கோடி பரிசாக வழங்கப்பட்டது.

    நியூயார்க்:

    'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று அரங்கேறியது. இதில் நடப்பு சாம்பியன் ஜானிக் சின்னர், கார்லஸ் அல்காரசுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

    இந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜானிக் சின்னரை வீழ்த்தி, கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு ரூ.43½ கோடியும், 2-வது இடம் பெற்ற ஜானிக் சின்னருக்கு ரூ.21¾ கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றில் இருவரும் சந்திப்பது இது 3-வது முறையாகும். முந்தைய இரு மோதல்களில் ஜூன் மாதம் நடந்த பிரெஞ்சு ஓபனில் அல்காரசும், ஜூலை மாதம் நடந்த விம்பிள்டனில் ஜானிக் சின்னரும் வெற்றி பெற்றிருந்தனர். இதுவரை இருவரும் 14 முறை நேருக்கு நேர் மோதி இருந்தனர். இதில் அல்காரஸ் 9-5 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்தார்.

    2004 முதல் 2008-ம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்து முன்னாள் ஜாம்பவான் ரோஜர் பெடரர் அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை தொடர்ச்சியாக வென்று இருந்தார். அதன் பிறகு யாரும் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை தக்கவைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செரீனா 2012 முதல் 2014 வரை அமெரிக்க ஓபன் கோப்பையை தொடர்ச்சியாக வென்று இருந்தார்.
    • சபலென்கா கைப்பற்றிய 4-வது கிராண்ட் சிலாம் இதுவாகும்.

    நியூயார்க்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கிய பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான சபலென்கா (பெலாரஸ்) - அமெரிக்காவை சேர்ந்த 8-வது வரிசையில் உள்ள அமண்டா அனிஸ்மோவா மோதினார்கள்.

    இதில் சபலென்கா 6-3, 7-6 ( 7-3) என்ற நேர் செட் கணக்கில் அனிஸ் மோவாவை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டார். அமெரிக்க ஓபன் கோப்பையை வெல்ல அவருக்கு 1 மணி 34 நிமிட நேரமே தேவைப்பட்டது.

    சபலென்கா கடந்த ஆண்டு ஜெசிகா பெகுலாவை தோற்கடித்து அமெரிக்க ஓபன் கிராண்ட் சிலாமை கைப்பற்றினார். தற்போது தொடர்ச்சியாக 2-வது முறையாக பட்டம் பெற்றுள்ளார். இதன் மூலம் செரீனா வில்லியம்சுக்கு பிறகு அமெரிக்க ஓபன் பட்டதை தொடர்ச்சியாக வென்ற வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். செரீனா 2012 முதல் 2014 வரை அமெரிக்க ஓபன் கோப்பையை தொடர்ச்சியாக வென்று இருந்தார்.

    சபலென்கா கடந்த ஜனவரி மாதம் மேடிசன் கெய்சிடம் (அமெரிக்கா) ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியிலும், ஜூன் மாதம் கோகோ கவூப்பிடம் (அமெரிக்கா) பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியிலும் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தார். இந்த ஆண்டில் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அமெரிக்க வீராங்கனையை பழி தீர்த்துக் கொண்டு பட்டத்தை வென்று சாதித்தார்.

    27 வயதான சபலென்கா கைப்பற்றிய 4-வது கிராண்ட் சிலாம் இதுவாகும். அவர் அமெரிக்க ஓபன் பட்டதை 2 தடவையும் (2024, 2025 ), ஆஸ்திரேலிய ஓபன் பட்டதை 2 முறையும் ( 2023, 2024 ) வென்றுள்ளார்.

    அமெரிக்க ஓபன் கோப்பையை வென்ற சபலென்காவுக்கு ரூ.44 கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த அனிஸ்மோவா ரூ. 22 கோடி பெற்றார். சபலென்கா தனது 100-வது கிராண்ட்சி லாம் வெற்றியை பெற்றார்.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜானிக் சின்னர் (இத்தாலி) -இரண்டாம் வரிசையில் உள்ள அல்காரஸ் (ஸ்பெயின்) மோதுகிறார்கள்.

    இந்த ஆண்டில் இருவரும் 3-வது முறையாக கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். சின்னர்-அல்காரஸ் மோதும் இறுதி ஆட்டத்தை அமெரிக்கா அதிபர் டிரம்ப் நேரில் பார்க்கிறார்.

    ×