என் மலர்

    திருநெல்வேலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி, கடனா நதி பகுதிகளில் சாரல் அடித்தது.
    • மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் மாலை நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் பிற்பகலில் ராதாபுரம் பகுதியில் திடீரென வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டது. தொடர்ந்து கனமழை பெய்ய தொடங்கியது. கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு சுமார் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக களக்காட்டில் 5 சென்டிமீட்டர் மழை கொட்டியது. மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டியிலும் சாரல் அடித்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் நேற்று பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 20 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 18 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 16 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை நேற்று பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. இன்றும் அதே நிலை நீடிக்கிறது. எனினும் மழை பொழிவு எதுவும் இல்லை. பாபநாசம் அணையில் தற்போது 93.45 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறில் 105.18 அடியும், மணிமுத்தாறில் 63.64 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி, கடனா நதி பகுதிகளில் சாரல் அடித்தது. அதிகபட்சமாக கருப்பாநதியி 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடனா அணை பகுதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்தது. சிவகிரியில் 6 மில்லிமீட்டரும், சங்கரன்கோ விலில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழுகிறது. மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக கயத்தாறு, மணியாச்சி, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் நீர் தேங்கியது.

    இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மணியாச்சியில் அதிகபட்சமாக 7.5 சென்டிமீட்டர் மழை கொட்டியது. கயத்தாறில் 37 மில்லிமீட்டரும், கடம்பூரில் 41 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டையபுரம், காடல்குடி பகுதிகளில் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. கீழ அரசடி பகுதியில் சுமார் 1 மணி நேரம் கொட்டிய மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்தது. விளாத்திகுளம் சுற்றுவட்டார கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாநகர், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினத்தில் வெயில் அடித்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கியவுடன் 1972-ம் ஆண்டு அக்கட்சியை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • தி.மு.க. ஆட்சியில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து விட்டது.

    அம்பை:

    அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடந்தது. புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் அ.தி.மு.க. பொது செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கியவுடன் 1972-ம் ஆண்டு அக்கட்சியை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் உருவான கட்சிதான் அ.தி.மு.க. கட்சி தொடங்கியதில் இருந்து 16 தேர்தலில் போட்டியிட்டு 7 முறை ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தில் அதிகமுறை ஆண்ட கட்சி நமது அதி.மு.க.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நான் முதலமைச்சரான பிறகு அ.தி.மு.க.வை அழிக்க பல சதி திட்டங்கள் தீட்டினார்கள். நம்மிடம் இருந்த சிலரே பதவி வெறியில் இந்த கட்சியை எதிர்த்து ஓட்டு போட்டார்கள். அப்படி இருந்தும் அவர்களை மன்னித்து உயர்ந்த பதவியான துணை முதலமைச்சர் பதவி கொடுத்தும், அவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இல்லை.

    அ.தி.மு.க. ஓட்டு வங்கி குறைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு வங்கியை விட தி.மு.க.வுக்குத்தான் வாக்கு வங்கி குறைந்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.

    மு.க.ஸ்டாலின் மேயர், எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதலமைச்சர் என படிப்படியாகத்தான் வந்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் கட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே துணை முதலமைச்சராகி விட்டார். தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை மு.க.ஸ்டாலின் அவரது மகனை துணை முதலமைச்சராக்கியது தான்.

    தி.மு.க. ஆட்சியில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து விட்டது. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த சிறப்புக்குழு அமைக்கப்படும் என உயர்நீதிமன்றம் சொல்லும் அளவுக்கு தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது. இந்த ஆட்சியில் கஞ்சா எங்கும் கிடைக்கிறது. அதை முதலமைச்சரால் தடுக்க முடியவில்லை.

    அ.தி.மு.க. இரண்டாகி விட்டது, மூன்றாகி விட்டது என தி.மு.க.வினர் கபட நாடகம் நடத்துகின்றனர். அ.தி.மு.க. எப்போதும் ஒன்றாகத்தான் உள்ளது. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. தி.மு.க.விற்கு தான் செல்வாக்கு குறைந்துள்ளது. அந்த கூட்டணியில் புகைச்சல் தொடங்கி விட்டது. அந்த புகைச்சல் விரைவில் நெருப்பாக பற்றி எரியும். சில நாட்களாக அதன் கூட்டணி கட்சியினர் பொது மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச தொடங்கி விட்டனர்.

    நாம் சொந்த காலில் நிற்கிறோம். தி.மு.க. சொந்த கட்சியை நம்பாமல் கூட்டணியை நம்பி உள்ளனர். சிலர் விரைவில் கூட்டணியில் இருந்து வெளியே வர இருக்கின்றனர். பல கட்சிகள் வெளியே வர உள்ளது. நடப்பதை பார்க்கும்போது அப்படி தான் தெரிகிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எதிர்த்து குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். தி.மு.க. கூட்டணி விரைவில் உடையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு, ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி செங்கோலை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார். தொடர்ந்து வீரவாள் பரிசு வழங்கப்பட்டது. தையல் எந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிமுகவை வீழ்த்த எத்தனையோ அவதராங்களை எடுத்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
    • கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் குடும்பத்தினர் மட்டுமே திமுகவில் பதவிக்கு வர முடியும்.

    நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் இன்று மாலை அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மக்கள் அடிப்படையில் துவங்கப்பட்ட கட்சி அதிமுக. பிரிந்த இயக்கத்தை ஒன்றிணைத்த பெருமை முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவை சேரும்.

    துவக்க விழா என்பது சாதாரணம் அல்ல. அதிமுகவை வீழ்த்த எத்தனையோ அவதராங்களை எடுத்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இவை அனைத்தையும் வீழ்த்தியவர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா.

    அதிமுக 2ஆக பிரிந்துவிட்டது என கூறி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக ஒன்றாகதான் இருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சியை பிளவுபடுத்த திமுக போடும் நாடகம் இது.

    கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் குடும்பத்தினர் மட்டுமே திமுகவில் பதவிக்கு வர முடியும். அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். விசுவாசமாக இருப்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக. ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி அதிமுக. அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி அதிமுக.

    தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி அதிமுக. அதிமுகவிற்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. திமுக தான் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வருகிறது. கூட்டணி கட்சிகளை தாங்கி நிற்கின்றது திமுக. அதிமுக சொந்த காலில் நிற்கிறது. சொந்த காலில் நிற்கின்றவர்களுக்கு தான் பலம் அதிகம். திமுக கூட்டணியில் பிரச்னை வந்துவிட்டது. திமுகவிற்கு மக்களிடத்தில் செல்வாக்கு சரிந்துவிட்டது. அதனால் தான் கூட்டணி கட்சியினர் மக்கள் பிரச்னைகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர்.

    திமுக ஆட்சியில் கடன் மட்டும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. திமுக ஆட்சிக்கு வரும்முன் நீட் ரத்து என சொன்னார்கள். இதுவரை நீட் ரத்துகான ரகசியத்தை உதயநிதி வெளிவிடவில்லை"

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார்.
    • எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்சி கொடிகள் கட்டி உள்ளனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. 53-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்றுதல், பொதுக்கூட்டங்கள் நடத்துதல் என பல்வேறு நிகழ்ச்சிகளை நிர்வாகிகளும், தொண்டர் களும் மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் இன்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதனையொட்டி அம்பை-ஆலங்குளம் சாலையில் வடக்கு ரதவீதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். அங்கு அவருக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    அதனைத்தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லை மேலப்பாளையம் வழியாக அம்பைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து அம்பையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    அதன்பின்னர் அங்கிருந்து மீண்டும் மேலப்பாளையம் வழியாக நெல்லை மாநகருக்கு இரவில் புறப்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் வண்ணார் பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே மேளதாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் திரளான தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

    அதனை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் நயினார் வீரபெருமாள் இல்ல திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சந்திப்பு ரெயில் நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து இரவில் ரெயில் மூலம் அவர் சேலத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

    முன்னதாக எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் இருந்து வரும்போது பாளை கே.டி.சி.நகரில் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில நிர்வாகி பொட்டல் துரை இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார். எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்சி கொடிகள் கட்டி உள்ளனர்.

    மாநகரில் திருமண விழாவிற்கு வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க மேலப்பாளையம் கருங்குளத்தில் தொடங்கி சிக்னல் வழியாக வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலை முழுவதும் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து கொக்கிரகுளம், ஸ்ரீபுரம் வரையிலும் கொடி தோரணங்களும், பிரமாண்ட வரவேற்பு பதாகைகளும் மாநகர் மாவட்டம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் புறநகரில் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் தருவையில் தொடங்கி அம்பை வரையிலும் பிரமாண்ட கட் அவுட்டுகள், வரவேற்பு பேனர்கள், கொடிகள் கட்டப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கார் மூலம் நெல்லை மேலப்பாளையம் வழியாக அம்பைக்கு செல்கிறார்.
    • எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் இடையே புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    அ.தி.மு.க. 53-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதனையொட்டி அம்பை-ஆலங்குளம் சாலையில் வடக்கு ரதவீதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். அங்கு அவருக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    அதனை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லை மேலப்பாளையம் வழியாக அம்பைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். முன்னதாக அவர் சேரன்மகாதேவியில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு அம்பையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போல் சமீப காலமாக அதிரடி முடிவுகளை எடுத்து வரும் எடப்படி பழனிசாமி, கட்சியை பலப்படுத்தவும், வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்திலும் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவிக்கலாம் என்று கட்சி நிர்வாகிகள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

    கட்சியின் பொதுக்குழுவை கூட்டுதல், உட்கட்சி தேர்தல், கட்சியின் வளர்ச்சி பணிகள் என பல முக்கிய முடிவுகளை எடப்பாடி பழனிசாமி இந்த பொதுக்கூட்டத்தில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பொதுக்கூட்டத்தில் பேசி முடித்த பின்னர் அங்கிருந்து மீண்டும் மேலப்பாளையம் வழியாக நெல்லை மாநகருக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் வண்ணார்பேட்டை செல்லப் பாண்டியன் மேம்பாலம் அருகே பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அதனை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சந்திப்பு ரெயில் நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து இரவில் ரெயில் மூலம் அவர் சேலத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் இடையே புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்சி கொடிகள் கட்டும் பணி, வழிநெடுகிலும் வரவேற்பு பேனர்கள் வைக்கும் பணியில் நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
    • சிறார் குற்ற விதிகளின்படி நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    திருநெல்வேலியில் ஜல் நீட் அகாடமி என்ற பெயரில் நீட் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. அந்த மையத்தில் ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வுக்காக அங்கேயே தங்கி படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அந்த நீட் பயிற்சி மையத்தில், ஆசிரியர் வருவதற்கு முன்பு சில மாணவர்கள் தூங்கியதால் அவர்களை வரவழைத்து பிரம்பால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.

    இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியில் மாணவர்களை ரத்தம் சொட்ட சொட்ட பிரம்பால் அடித்து சித்ரவதை செய்தது அப் பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீன் என தெரியவந்துள்ளது.

    காலணிகளை விடுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காலணியை சரியாக அடுக்கவில்லை எனக்கூறி, மாணவிகள் மீது ஜலாலுதீன் காலணிகளை வீசும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி மையத்தின் உரிமையாளரும், பயிற்சியாளருமான ஜலாலுதீன் அகமத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, 323, 355, 75 JJ act பிரிவுகளில் மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலப்பாளையம் உதவி ஆணையர் சரவணன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்துகின்றனர்.

    மேலும், இந்த விவகாரத்தை மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்துகிறார்.

    சிறார் குற்ற விதிகளின்படி நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவியின் தந்தை தன்னிடம் பேசிய அந்த நபரின் ஆடியோவை வாட்ஸ் அப் குரூப்களில் பரப்பினார்.
    • ஏமாற்றப்பட்டதை அறிந்தபோதிலும், புகார் அளித்தால் அவமானம் என கருதி பலரும் போலீசை நாடவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

    நெல்லை:

    பங்குச்சந்தை மோசடி, பணம் இரட்டிப்பு மோசடி உள்ளிட்ட பல்வேறு வகையிலான மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களை குறிவைத்தும் இணையதள மோசடிகள் அரங்கேற்றம் தொடங்கி உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு போன் செய்து அவர்களது ஆசைகளை தூண்டி பணம் பறிக்கும் நூதன மோசடிகளில் கும்பல்கள் களம் இறங்கி உள்ளன.

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாகவும், அதற்கான தகவல்களில் ஆதார் எண், வங்கி கணக்கு எண் சரியாக இருக்கிறது. ஆனால் ஜிபே போன் நம்பர் தவறாக இருப்பதாக கூறி மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், அவர்களிடம் ஜிபே எண்ணை பெற்றுக்கொள்கின்றனர்.

    பின்னர் அந்த நம்பருக்கு ஒரு ரகசிய எண் குறுந்தகவலாக வரும். அதனை சொல்லுங்கள் என்று கூறி கேட்டு வாங்கி அந்த வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை முழுவதும் பறித்துவிடுகின்றனர். இந்த வகை மோசடிகளில் தமிழகத்தில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது பணத்தை ரூ.5 ஆயிரத்தில் தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை இழந்துள்ளனர்.

    குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை குறிவைத்து போனில் அந்த மோசடி கும்பல் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக நெல்லை மாநகரில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் அந்த கும்பல் போன் செய்து ஆதார், வங்கி கணக்கு எண், செல்போன் எண் உள்ளிட்ட விபரங்களை வாங்கி கொண்டு பணத்தை பறித்து வருகிறது.

    இதில் சமீபத்தில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவியின் தந்தைக்கு மர்ம நபர்கள் போன் செய்துள்ளனர். அவர்கள் தங்களது மகளுக்கு மத்திய அரசு உதவித்தொகைக்கு விண்ணப்பித்து இருக்கின்றனர். அதில் வங்கி கணக்கு எண் தவறாக உள்ளது என கூறியுள்ளார். அதே நேரத்தில் அந்த மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை அவரது ஆதார் கார்ட்டில் இருப்பது போலவே அந்த நபர் தெளிவாக கூறியுள்ளார்.

    இதனை உண்மை என்று நம்பி அந்த மாணவியின் தந்தை தொடர்ந்து பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் மர்ம நபர் ஜிபே நம்பரை கேட்கவும், அவர் உஷாராகிவிட்டார். இதுகுறித்து நான் ஒருமுறை பள்ளிக்கு சென்று நேரில் விளக்கம் கேட்டுக்கொண்டு அதன் பின்னர் எனது நம்பரை தெரிவிக்கிறேன் என்று அவர் தெரிவித்த உடன் மர்மநபர் போனை வைத்து விட்டார். அதன்பின்னர் அவரை அந்த நபர் தொடர்பு கொள்ளவே இல்லை.

    அதன்பின்னர் மாணவியின் தந்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வேறு ஒருவர் மூலம் போன் செய்து கேட்கும்போது, அப்படி எந்த உதவித்தொகைக்கும் விண்ணப்பம் இதுவரை பெறப்படவில்லை என்பதும், அது மோசடி செய்வதற்காக வந்த செல்போன் அழைப்பு என்பது தெரியவந்தது.

    இதனிடையே மாணவியின் தந்தை தன்னிடம் பேசிய அந்த நபரின் ஆடியோவை வாட்ஸ் அப் குரூப்களில் பரப்பினார். இதனால் ஏராளமான பெற்றோர்கள் உஷாரான நிலையில், நெல்லை மாநகரில் ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என பலர் பணத்தை இழந்துள்ளனர். ஏமாற்றப்பட்டதை அறிந்தபோதிலும், புகார் அளித்தால் அவமானம் என கருதி பலரும் போலீசை நாடவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

    இதனிடையே இந்த மோசடிகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தற்போது மோசடிகள் குறித்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பெற்றோரின் செல்போன் எண்களுக்கும் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் வாட்ஸ் அப் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    தங்கள் மகனுக்கு பள்ளிக்கல்வித் துறையிலிருந்து உதவி பணம் வழங்க இருக்கிறோம். ஆகவே தங்கள் ஜிபே நம்பர் மற்றும் ஓடிபி-யை சொல்ல வேண்டும் என்று யாராவது தொலைபேசியில் கேட்டால் அந்த நபரிடம் ஏதும் தகவலை பகிர வேண்டாம். பண இழப்பை தவிர்க்கவும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், நெல்லையில் இதுபோன்ற மோசடிகள் தற்போது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக பெரிய அளவில் புகார்கள் வரவில்லை என்றாலும், மாநகரில் 5-க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதில் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தை குறிவைத்து அவர்களது ஆசையை தூண்டி மோசடி நடக்கிறது.

    இதனை வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் தான் அரங்கேற்றுகிறது. அவர்களிடம் பணத்தை இழந்தால் நமக்கு தான் கஷ்டம். அவர்கள் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் சென்று பதுங்கி விடுவார்கள். பணத்தை மீட்பது கடினம். எனவே மக்களாகத்தான் தெளிவாக இருக்க வேண்டும் என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று மாலை முதல் நாளை நள்ளிரவு வரை கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.
    • கடற்கரைகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் ஐதராபாத்தில் உள்ளது. தற்போது தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்காய்ஸ் எனப்படும் அந்த மையம் கடல் சீற்றம் குறித்த எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி இன்று மாலை முதல் நாளை நள்ளிரவு வரை நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் மிக அதிகமாக இருக்கும்.

    இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு அலையும் 18 முதல் 22 நொடி நேரம் வரை இருக்கவும், 1.2 முதல் 2 மீட்டர் உயரம் வரை எழும்பவும் வாய்ப்புள்ளது. எனவே கடற்கரையோரம் வசிப்பவர்கள் போதிய முன் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திட வேண்டும். கடற்கரைகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநகரில் இன்றும் காலை முதலே மாநகர பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு கனமழை பெய்ய ஆரம்பித்தது. மாநகரில் சந்திப்பு, மேலப்பாளையம், பாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது.

    பேட்டையில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து சாலைகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட மாநகராட்சி 17-வது வார்டு பழைய பேட்டை சர்தார்புரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையே தெரியாத அளவிற்கு மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லமுடியாமல் சிரமத்துடன் சென்றனர்.

    மாநகரில் இன்றும் காலை முதலே மாநகர பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கி கிடந்தது. மாநகரில் பாதாள சாக்கடை பணிகள் நடக்கும் பகுதிகளில் மழை காரணாக சாலைகள் சகதியாக காணப்பட்டது. பாளை வ.உ.சி. மைதானம், மகாராஜாநகர் சாலைகளிலும் குளம் போல் மழைநீர் தேங்கி கிடந்தது.

    ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், காலையில் இருந்தே பெய்த மழையால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதி அடைந்தனர். பணிக்கு செல்வோர் குடை பிடித்தபடி சென்றனர். அதிகபட்சமாக பாளையில் 11 மில்லிமீட்டரும், நெல்லையில் 4.4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மாவட்டத்தின் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் திடீர் கனமழை பெய்தது. அங்குள்ள சாலையோரம் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இன்றும் காலையில் இருந்தே சாரல் அடித்தது. இதேபோல் களக்காடு, மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இன்று சாலையில் சாரல் மழை பெய்தது.

    சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இன்று அதிகாலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் அவதி அடைந்தனர். மாவட்டத்தில் சேரன்மகாதேவியில் 10.6 மில்லிமீட்டரும், அம்பையில் 5.6 மில்லிமீட்டரும், களக்காடு மற்றும் நாங்குநேரியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அவ்வளவாக பெய்யவில்லை. என்றாலும் மணிமுத்தாறு அணை பகுதியில் மட்டும் 1.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் இருந்து வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. இன்றும் காலையில் இருந்தே வெயில் அடிக்கவில்லை. இதனால் ரம்மியமான சூழ்நிலை நிலவியது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 44 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சிவகிரியில் லேசான சாரல் பெய்தது.

    ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் 10 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடுமுறை முடிந்துவிட்டதால் அருவிக்கரைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் ஏராளமான இடங்களில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. குறிப்பாக எட்டயபுரம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    அதிகபட்சமாக எட்டையபுரத்தில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. கோவில்பட்டியில் 7 மில்லிமீட்டரும், சூரன்குடி, கழுகுமலையில் தலா 6 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு சாரல் அடித்தது. இன்றும் காலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், கருவிழிகள் ஆகியவற்றை தானமாக அளிப்பதற்கு முன் வந்தனர்.
    • டீன் ரேவதி பாலன் தலைமையில் அரசு மரியாதைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி நயினார் (வயது 50). இவருக்கு மனைவி மற்றும் 11 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இவர் திசையன்விளையில் உள்ள டிம்பர் டிப்போவில் பணியாற்றி வந்தார். கடந்த 10-ந்தேதி திசையன்விளைக்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தொடர்ந்து அவர் திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார்.

    இதனையடுத்து அவரது உறவினர்கள் மந்திரமூர்த்தி நயினார் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், கருவிழிகள் ஆகியவற்றை தானமாக அளிப்பதற்கு முன் வந்தனர்.

    இதையடுத்து நேற்று அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. பின்னர் உடற்கூறாய்வு செய்யப்பட்டு மந்திரமூர்த்தி நயினார் உடல் நெல்லை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை டீன் ரேவதி பாலன் தலைமையில் அரசு மரியாதைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அணைகளை பொறுத்த வரை பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அணைகள், மலைப்பிரதேசங்கள், புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

    புறநகரில் சேரன்மகாதேவி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதமான காற்றும் வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. மாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக களக்காடு மலைப்பகுதியில் பெய்த மழையால் தலையணையில் நீர் வரத்து அதிகரித்தது. அங்கு அதிகபட்சமாக 27.40 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நேற்று ஆயுதபூஜை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அங்கு அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளிலும் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகாமாக இருந்தது. மாநகரில் மழை பெய்யவில்லை. எனினும் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது.

    அணைகளை பொறுத்த வரை பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சேர்வலாறில் 27 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 14 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. கொடுமுடியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் அங்கு 17 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு நேற்று முன்தினம் 430 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், மலைப்பகுதியில் நேற்று பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை வினாடிக்கு 552 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 94.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் 106.33 அடி நீர் இருப்பு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதி யில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டுகளில் கனமழை பெய்தது. நாலுமுக்கில் 29 மில்லிமீட்டரும், ஊத்தில் 26 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. காக்காசியில் 19 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    தென்காசி மாவட்டத்தில் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக அங்கு 31 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராமநதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 55.50 அடியாக உள்ளது. கடனா அணை நீர்மட்டம் 46 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 49.87 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை நிரம்பி வழிகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர் விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் அங்கு முகாமிட்டு குளித்து மகிழ்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடம்பூரில் அதிகபட்சமாக 68 மில்லிமீட்டர் மழை பெய்தது. கயத்தாறில் 27 மில்லிமீட்டர் மழை பெய்தது. சூரன்குடி, சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று அதிகாலை பக்தர்கள் அனைவரும் குலசேகரபட்டினத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
    • ஓலை குடிசையில் தங்கி இருந்தவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதால் உயிரிழப்பு, காயம் ஆகியவை யாருக்கும் ஏற்படவில்லை.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் நடைபெறும் பிரசித்தி பெற்ற தசரா திருவிழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்தும், பல்வேறு வேடங்கள் அணிந்தும் கோவிலுக்கு செல்வார்கள். அதன்படி நெல்லை மாவட்டத்தில் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் இந்த ஆண்டும் வேடங்கள் அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.

    அதன்படி வண்ணார்பேட்டையை சேர்ந்த தாமோதரன் என்பவர் பாளை அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் தனது உறவினர்களுடன் தசராவையொட்டி மாலை அணிந்து விரதம் இருந்தனர். இதன் காரணமாக அந்த தசரா பக்தர்கள் குழுவினர் அண்ணா நகர் பகுதியில் ஒரு ஓலை குடிசை அமைத்து அதில் தங்கியிருந்தனர். நேற்று இரவு தங்களது மோட்டார் சைக்கிள்களை அந்த ஓலை குடிசையில் நிறுத்திவிட்டு, அவர்களும் அந்த ஓலை குடிசையில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை பக்தர்கள் அனைவரும் குலசேகரபட்டினத்திற்கு புறப்பட்டு சென்றனர். அவர்களுக்கு உணவு சமைத்த குழுவினர் மட்டுமே அந்த ஓலை குடிசையில் இருந்தனர். அதிகாலை 3 மணி அளவில் ஓலை குடிசையில் வைக்கப்பட்டிருந்த விளக்கு ஒன்று கவிழ்ந்து விழுந்துள்ளது. இதனால் தீப்பிடித்துள்ளது.

    பின்னர் சிறிது நேரத்திலேயே தீ பரவி எதிர்பாராத விதமாக ஓலை குடிசை முழுவதும் தீ பரவியது. இதனை பார்த்து சமையல் குழுவினர் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினர். உடனடியாக பாளை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனால் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து ஐகிரவுண்டு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் தீயணைப்பு மாவட்ட அலுவலர் வினோத் மற்றும் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து தண்ணீரை விரைவாக பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஓலை குடிசையில் தங்கி இருந்தவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதால் உயிரிழப்பு, காயம் ஆகியவை யாருக்கும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் குடிசையில் நிறுத்தப்பட்டிருந்த பக்தர்களின் 9 மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகி முற்றிலும் நாசமானது. இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    ×