என் மலர்

    திருநெல்வேலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரீல்ஸ் மோகத்தால் ஆடிப்பாடி எதிரில் இருப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு விரும்பத்தகாத செயல்களை புரிந்து வருகின்றனர்.
    • நெல்லையப்பர் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    சமீப காலமாக இளைஞர்களும், இளம்பெண்களும் சமூக வலைதளங்களால் தங்களது எதிர்காலத்தை சீரழித்து வருகின்றனர். தனது நண்பர்கள் உள்ளிட்டோரிடம் அதிகமான லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் ஆபத்தை உணராமல் வீடியோ எடுக்கச்சென்று உயிரினை இழப்பதும், ஆபாச வீடியோக்களை பதிவு செய்து பொது மக்களின் கண்டனங்களை பெறுவதோடு போலீசாரின் நடவடிக்கைக்கும் உள்ளாகி தங்களது எதிர்காலத்தை இழந்து வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில் சிறுவர்-சிறுமிகளும் இன்ஸ்டா மற்றும் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கு ரீல்ஸ் செய்வதற்கு அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்கள் இடம், பொருள் அறியாமல் அனைத்து இடங்களிலும் ரீல்ஸ் மோகத்தால் ஆடிப்பாடி எதிரில் இருப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு விரும்பத்தகாத செயல்களை புரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் காந்திமதி அம்பாள் சன்னதி முன்புள்ள கோவில் வளாகத்தில் சிறுவர்-சிறுமி ஜோடி ஒன்று தக்லைப் படத்தின் புதிய பாடல் ஒன்றுக்கு முகம் சுளிக்கும் வகையில் ஆட்டம் போட்டு அதனை ரீல்ஸ் ஆக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

    ஹயகிரீவன் என்பவரது இன்ஸ்டா பக்கமான விஜே ஹயாஸ் என்ற பக்கத்திலும், அதே போல் சாக்கோ 36 என்ற இன்ஸ்டா பக்கத்திலும் நடிகர்கள் கமல்ஹாசன்-சிம்பு ஆகியோர் ஆடும் அந்த பாடலுக்கு சிறுவர்-சிறுமி 2 பேரும் சேர்ந்து ஆடிய அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

    பாண்டிய நாட்டின் பெருமைமிகு சிவ தலமான நெல்லையப்பர் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளுக்கு தனித்தனி ராஜ கோபுரங்களுடன் கூடிய தனித்தனி சன்னதிகள் அமையப் பெற்றுள்ளது.

    கோவிலில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி செய்து வருவதுடன் 100-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் கொண்டு கண்காணிக்க கூடிய பணி நடந்து வருகிறது.

    அப்படியிருக்க, சிறுவர்-சிறுமி இருவரும் ரீல்ஸ் நடனமாடியது பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்ஸ்டா மோகத்தில் ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் பெரும் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் தற்போது நெல்லையப்பர் கோவிலிலும் அந்த சம்பவம் நடந்திருப்பது பக்தர்களிடத்தில் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறையும், காவல்துறையும் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வருங்காலத்தில் இது போன்ற செயல்கள் நடக்காது என சிவனடியார்கள் கூறுகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவில் பகுதியில் முகாமிட்டு கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
    • மக்கள் பீதியில் இருந்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் கரடி வந்தது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள தெற்கு பாப்பன்குளம், ஆலடியூர், மணிமுத்தாறு போன்ற பகுதியில் அவ்வபோது மிளா, காட்டுப்பன்றி, யானை,

    சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் இரவு நேரங்களில் சுற்றி திரிகின்றன.

    இந்த பகுதிகளில் கரடி நடமாட்டம் என்பது சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இரவு நேரங்களில் அவை சாவகாசமாக வந்து பலாப்பழங்களை சாப்பிடுவதும், தெருக்களில் நடமாடுவதுமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பீதியில் இருந்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் கரடி வந்தது. அதனை பிடிக்க வனத்துறை கூண்டு வைத்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு மணிமுத்தாறு அருகே அண்ணா நகர் பகுதியில் உள்ள தங்கம்மன் கோவிலில் கரடி ஒன்று கோவில் வளாகத்தில் உள்ளே நுழைந்து சுற்றி திரிந்தது. கோவிலில் தீபம் ஏற்ற வைக்கப்பட்டிருந்த எண்ணெய் மற்றும் சுவாமிகளுக்கு படைக்கப்பட்டிருந்த சக்கரை பொங்கல் உள்ளிட்டவற்றை அந்த கரடி தின்றது.

    இதுகுறித்தான காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி இருந்தது. இந்த தகவலை அப்பகுதி மக்கள் அம்பை வனத்துறையினருக்கு தெரிவித்தனர். உடனே வனத்துறையினர் விரைந்து சென்று கோவில் பகுதியில் முகாமிட்டு கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேவியர் காலனி பூங்கா ஆகியவற்றை மேயர் ராமகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • உதவி பொறியாளர் மனோகர், சுகாதார ஆய்வாளர் பெருமாள், துப்புரவு கண்காணிப்பாளர் ஜானகிராமன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டலத்தில் மேயர் ராமகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், 50-வது வார்டு மாட்டு சந்தை, குடிசை பள்ளி அருகில் உள்ள நுண் உரமாக்கும் மையத்தில் தேங்கி உள்ள குப்பைகள், கழிவுகளை அப்புறப்படுத்தவும், ஆமீம்புரம் 7-வது தெருவில் கழிவுநீர் ஓடை அமைக்கும் பணியை உடனே தொடங்கவும், அப்பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் கூடுதல் கட்டிடம் விரைவில் அமைத்திட நடவடிக்கை எடுக்கவும், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து நடத்திடவும், கழுவுநீர் ஒடைகளை முழுமையாக சுத்தம் செய்யவும், நேதாஜி ரோடு பாதாள சாக்கடை உடைப்பு குழாய்களை மாற்றிட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் 52-வது வார்டு சேவியர் காலனி ஆர்.சி. சர்ச் தெருவில் கடந்த மழை வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்கியது. இன்று அதனை பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் கழிவு நீர், மற்றும் மழை காலங்களில் மழை நீர் சீராக செல்லும் வகையில் சேவியர் காலனியில் இருந்து புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள வேய்ந்தான்குளத்திற்கு செல்லும் வகையில் பெரிய கால்வாய் அமைத்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து சேவியர் காலனி பூங்கா ஆகியவற்றை மேயர் ராமகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா, மேலப்பாளையம் உதவி கமிஷனர் சந்திரமோகன்,50-வது வார்டு கவுன்சிலர் ரசூல் மைதீன், 52-வது வார்டு கவுன்சிலர் நித்திய பாலையா, கவுன்சிலர்கள் சுந்தர், வில்சன் மணிதுரை, மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபாய் சாகுல், தி.மு.க. மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, இளநிலை பொறியாளர் ஜெய கணபதி, உதவி பொறியாளர் மனோகர், சுகாதார ஆய்வாளர் பெருமாள், துப்புரவு கண்காணிப்பாளர் ஜானகிராமன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூடங்குளம் அருகே உள்ள உலகரட்சகர்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் 2 டன் அளவு பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்கள் வழியாக படகுகளில் இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலை, கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுபவதை தடுக்க நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்திலும் கிழக்கு கடற்கரை சாலையில் கூடங்குளம் பகுதியில் சோதனை சாவடி அமைத்து நெல்லை மாவட்ட போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கூடங்குளம் கடல் வழியாக படகில் தடை செய்யப்பட்ட பீடி இலையை ஒரு கும்பல் கடத்துவதற்கு முயற்சி செய்வதாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே அவரது தலைமையின் கீழ் இயங்கும் தனிப்படை கூடங்குளம் பகுதிக்கு விரைந்தது.

    கூடங்குளம் அருகே உள்ள உலகரட்சகர்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் அந்த வழியாக வந்த மினிலாரியை தடுத்து நிறுத்தினர். டிரைவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் 2 டன் அளவு பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது கூடங்குளத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலையை அனுப்பி வைக்க கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார்.

    அந்த நேரத்தில் ஒரு காரில் வேகமாக வந்த 4 பேர் கும்பல் போலீசாரை கண்டதும் காரை திருப்பிக்கொண்டு தப்ப முயன்றது. அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தபோது அந்த கும்பல் தான் பீடி இலையை இலங்கைக்கு கடத்த முயன்றது என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பீடி இலையுடன் லாரியையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீசாரின் பிடியில் சிக்கிய 5 பேரையும் கூடங்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர்கள் கூத்தங்குழி கிராமத்தை சேர்ந்த ஜெனா(வயது 70), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சண்முகம்(25), ஏரலை சேர்ந்த சந்தோஷ்குமார்(23), தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணி ராஜ்(36), வள்ளியூர் அருகே உள்ள தளபதி சமுத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார்(42) என்பது தெரியவந்தது.

    அந்த கும்பல் கடல் வழியாக கடத்த முயன்ற பீடி இலையின் இலங்கை மதிப்பு ரூ.50 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிகிச்சை பலனின்றி சந்தனகுமார் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள செட்டிக்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 35). செங்கல் சூளை தொழிலாளி.

    அதே பகுதியை சேர்ந்தவர் ரெஜிமன் (19). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் இரவு நேரங்களில் காற்றாலைகளில் வேலைக்கு சென்று சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தார்.

    இவ்வாறு அவர் சேமித்து வைத்திருந்த பணத்தின் ரூ.28 ஆயிரத்தை சந்தனகுமாருக்கு கடனாக கொடுத்துள்ளார்.

    குறிப்பிட்ட காலத்தில் அந்த பணத்தை சந்தகுமார் திருப்பி கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ரெஜிமன் தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு சந்தனகுமாரிடம் கேட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை ரெஜிமன், சந்தனகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது கடனை திருப்பி தருமாறு சந்தனகுமாரிடம் கேட்டார். அப்போது சந்தனகுமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ரெஜிமனை வெட்ட முயன்றுள்ளார்.

    இதைப்பார்த்த ரெஜிமன் ஆவேசமடைந்தார். மேலும் சந்தனகுமாரிடம் இருந்து அரிவாளை பறித்த ரெஜிமன் அந்த அரிவாளால் சந்தனகுமாரை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் அலறிதுடித்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சந்தனகுமார் பரிதாபமாக இறந்தார்.

    முன்னதாக பழவூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ரெஜிமனை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு சந்தனகுமார் பலியானதால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரில் சிக்கி இருந்த 4 பேரின் உடலை மீட்டனர்.
    • போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் கீ்ழூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிரெதிரே வந்த கார்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதியது.

    இந்த கோர விபத்தில் பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரில் சிக்கி இருந்த 4 பேரின் உடலை மீட்டனர்.

    பின்னர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கலாம்.
    • மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும்.

    தூத்துக்குடி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்தமிழக கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இந்த புதிய காற்று சுழற்சி காரணமாக 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்காசி மாவட்ட தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கலாம். மேலும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

    தூத்துக்குடியை பொறுத்தவரை தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு. விருதுநகர், மதுரை மாவட்டத்திலும் மழை எதிர்பார்க்கலாம்.

    சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக அம்பாசமுத்திரம், மாஞ்சோலை, கோதையாறு, சிவகிரி, புளியங்குடி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, களக்காடு, நாங்குநேரி ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும். இடி-மின்னலும் வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பகல் நேரங்களில் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
    • வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி பகுதியில் பெய்த மழையால் சாலையோரம் தண்ணீர் தேங்கியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருவதால் மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பகல் நேரங்களில் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மாவட்டத்தின் பெரும்பாலான நீர்நிலைகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள சுமார் 1,200 குளங்களில் 700-க்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டுவிட்டன. சுமார் 300 குளங்களில் ஓரளவுக்கு தண்ணீர் இருக்கிறது.

    தற்போது கோடை மழை பரவலாக பெய்தாலும் அந்த மழைநீரால் வெப்பத்தை தான் தணிக்க முடிகிறதே தவிர நீர்நிலைகளின் நீர்மட்டத்தை உயர்த்த முடியவில்லை. அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய பிரதான அணைகளில் மட்டும் தண்ணீர் இருப்பு போதுமான அளவு இருக்கிறது. நேற்று சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    அதே நேரத்தில் மாவட்டத்தில் வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைகளின் நீர் இருப்பு கோடை வெயிலின் தாக்கத்தால் வேகமாக குறைந்து ஒற்றை இலக்கத்தை நெருங்கி வருகிறது. 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையில் 10.25 அடி நீர் இருப்பு உள்ளது. இதில் சுமார் 8 அடி வரை சகதி தான் இருக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    அதேபோல் 23 அடி கொண்ட நம்பியாறு அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், 52.50 அடி கொண்ட கொடுமுடியாறு அணை 14.75 அடியாகவும் உள்ளது. இதனால் களக்காடு, ராதாபுரம் சுற்றுவட்டார விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோடை மழை ஓரளவு பெய்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாடாவது ஏற்படாத நிலை இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    மாவட்டத்தில் நேற்று சேரன்மகாதேவி, அம்பை, முக்கூடல் சுற்றுவட்டார கிராமங்களில் மாலையில் சுமார் 1/2 மணி நேரம் கனமழை பெய்தது. அம்பை, சேரன்மகாதேவியில் தலா 11 மில்லிமீட்டர் மழை பெய்தது. வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி பகுதியில் பெய்த மழையால் சாலையோரம் தண்ணீர் தேங்கியது.

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் 1/2 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டிய கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சிவகிரி சுற்றுவட்டாரத்தில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆழ்வார்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மணியாச்சி, கயத்தாறு, காமநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கோடை மழை பரவலாக பெய்தது. குறிப்பாக சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவில்பட்டி, விளாத்திகுளம் சுற்றுவட்டாரத்திலும் இடியுடன் கூடிய கன மழை பரவலாக பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. வெப்பம் தணிந்ததால் மக்களும் நிம்மதி அடைந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தன்னுடைய கணவர் லண்டனுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக நம்பத்தகுந்த இடத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.
    • சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை டவுனை சேர்ந்த பிரபல இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் கவிதா-ஹரி சிங்கின் மகள் ஸ்ரீகனிஷ்காவுக்கு கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் இருட்டுக்கடை உரிமத்தை வரதட்சணையாக கேட்டு சித்ரவதை செய்ததாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் இருட்டுக்கடை உரிமையாளர் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

    இந்த விவகாரத்தில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், இருட்டு கடை உரிமையாளரின் மருமகனான பல்ராம் சிங் குடும்பத்திற்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தபோது 10 நாட்கள் கூடுதல் அவகாசம் கேட்டு அவர்கள் தரப்பில் வக்கீல் மனு செய்தார்.

    இந்த நிலையில் இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்கா நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனரிடம் மேலும் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், தன்னுடைய கணவர் லண்டனுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக நம்பத்தகுந்த இடத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.

    வரதட்சணை புகார் மீது சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு வராமல் வெளிநாடு தப்ப முயற்சி செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

    எனவே சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது. என் கணவர் மீது துரிதமாக விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
    • கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும், கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லையை பொறுத்த வரை நேற்று 2-வது நாளாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகரில் நேற்று மாலையில் தொடங்கி சுமார் 1 மணி நேரம் பயங்கர இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. மேலும் சூறைக்காற்றும் வீசியது.

    சில இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரில் பாளை சமாதான புரம், கே.டி.சி. நகர், வண்ணார்பேட்டை, சந்திப்பு, புதிய பஸ் நிலையம், பெருமாள்புரம் பகுதிகளில் பரவலாக பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. கன்னடியன் கால்வாய் பகுதியை ஒட்டிய கிராமங்க ளிலும் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 31.20 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு மற்றும் மூலைக்கரைப்பட்டி யில் தலா 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அம்பை சுற்றுவட்டா ரத்தில் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டாலும் உடனடியாக சீரமைக்கப்பட்டு மின்வினியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.

    களக்காடு சுற்றுவட்டாரத்தில் பெய்த கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அங்கு 9.40 மில்லிமீட்டர் மழை பெய்தது. 1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையினால் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    மூலைக்கரைப்பட்டி தங்கம் நகரில் மின்னல் தாக்கியது. இதனால் வீடுகளில் இருந்த மின் மீட்டர்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின் சாதனங்கள் கருகின. 50-க்கும் மேற்பட்ட மின் சாதனங்கள் சேதமடைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். அத்துடன் அங்குள்ள சுடலை மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பால் விற்பனை கடையில் மின்னல் தாக்கியதில் வயர்கள் கருகி தீ பற்றியது.

    இதனைத் தொடர்ந்து கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயினால் கடையில் இருந்த பொருட்கள் நாசம் அடைந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மின் சாதனங்கள் கருகியதால் பொதுமக்கள் பாதிப்படைந்து ள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. குறிப்பாக விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அதிகபட்சமாக விளாத்திகுளத்தில் 23 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோடு செல்சினி காலனி அருணா நகர் பகுதியில் நேற்று மாலையில் மழை பெய்தபோது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த மீனாட்சி(வயது 60) என்பவர் மீது பயங்கரமாக இடியுடன் கூடிய மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

    புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதிய நேரம் மக்கள் வெளியில் நடமாடுவதையே தவிர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் மேகம் திரண்டு பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், சாமி நத்தம், சில்லாநத்தம், ஜம்புலிங்கபுரம், ராஜாவின் கோவில், தட்டப்பாறை ஆகிய கிராமங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்தது. தட்டப்பாறையில் இடி-மின்னல் தாக்கி பசுமாடு இறந்தது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

    ஏற்கனவே கோடை மழையால் பாதிக்கப்பட்டு வந்த உப்பு உற்பத்தி, கடந்த சில நாட்களாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது. பல உப்பளங்களில் பாத்திகளை தயார் செய்து உப்பு உற்பத்திக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று திடீரென பெய்த மழையால் மீண்டும் உப்பு உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பல்ராம் சிங் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
    • பல்ராம்சிங் வீட்டார் தரப்பில் வக்கீல் பரிமளம் ஆஜரானார்.

    நெல்லை:

    நெல்லையின் பிரபல இருட்டுக்கடை உரிமையாளரான கவிதா- ஹரிசிங் தம்பதியரின் மகள் கனிஷ்காவிற்கும், கோயம்புத்தூரை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன்- மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவர் பல்ராம்சிங் வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமத்தை எழுதி தருமாறு கேட்பதாக கூறி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் கனிஷ்கா புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு பாளையங்கோட்டையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பல்ராம் சிங் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில் இன்று பல்ராம் சிங் நேரில் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்பார்த்து இருட்டுக்கடை உரிமையாளர் தரப்பினர் வக்கீல் ரமேஷ் என்பவருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர்.

    ஆனால் பல்ராம்சிங் வீட்டார் தரப்பில் வக்கீல் பரிமளம் ஆஜரானார். தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பல்ராம் சிங் சென்றிருப்பதால் 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் தரப்பு வக்கீல், போலீஸ் நிலையத்தில் மனு அளித்துவிட்டு சென்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தவறான தகவல்களும் தொடர்ந்து வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
    • உண்மைக்கு மாறாக செய்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் ஜீவன் மயோபதி மருத்துவமனை தலைமை இயன்முறை மருத்துவர் டேனியல் ராஜா இன்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் முன்னாள் மத்திய மந்திரியும், நடிகருமான நெப்போலியன் நடத்தி வரும் ஜீவன் அறக்கட்டளை மயோபதி மருத்துவ மனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறேன்.

    எங்கள் நிறுவனத் தலைவரின் மூத்த மகன் தனுஷின் குடும்ப வாழ்க்கை குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் அவதூறாகவும், தவறான தகவல்களும் தொடர்ந்து வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

    இது எங்கள் நிறுவனர் நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், அவரிடம் பணிபுரியும் எங்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. எனவே உண்மைக்கு மாறாக தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அந்த செய்திகளை உடனடியாக தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனுஷ் நெப்போலியன், அவரது மனைவி அக்ஷயா ஆகியோர் ஒன்றாக நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×