என் மலர்

    ரஷ்யா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 72 மணி நேர போர்நிறுத்தம் மே 8 ஆம் தேதி தொடக்கத்தில் இருந்து மே 10 ஆம் தேதி இறுதி வரை நீடிக்கும்
    • நிகழ்ச்சியில் பங்கேறக் பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் பலருக்கு ரஷியா அழைப்பு விடுத்தது.

    இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அடுத்த மாதம் உக்ரைனுடனான போரில் மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷிய அதிபர் புதின் இன்று அறிவித்தார்.

    4 ஆண்டுகளாக நடந்து வரும் உக்ரைன் போரில் முதல் முறையாக கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று ரஷியா தற்காலிக போர்  நிறுத்தம் அறிவித்திருந்ததது. இந்நிலையில் இரண்டாவது முறையாக புதிய போர் நிறுத்த அறிவிப்பு வந்துள்ளது. 

    72 மணி நேர போர்நிறுத்தம் மே 8 ஆம் தேதி தொடக்கத்தில் இருந்து மே 10 ஆம் தேதி இறுதி வரை நீடிக்கும் என ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த போர் நிறுத்தத்தை ஏற்கும்படி உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    எனினும் உக்ரைன் தரப்பில் அத்துமீறல்கள் ஏற்பட்டால், ரஷிய  ஆயுதப் படைகள் பதிலடி அளிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக மே 9 ஆம் தேதி நடக்கும் வெற்றி அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேறக் பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் பலருக்கு ரஷியா அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
    • ரஷிய மக்கள் வட கொரிய சிறப்புப் படைகளின் வீரத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

    உக்ரைன் நாட்டின் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா அந்நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் கொண்டு வந்துள்ளது.

    அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த சண்டையில் ரஷியா, வடகொரியா வீரர்களை வைத்து உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி புகார் கூறினார்.

    இந்த நிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா படை வீரர்களும் களம் இறங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக ரஷிய தலைமை ராணுவ கண்காணிப்பாளர் வலேரி ஜெராசிமோஸ் கூறியதாவது,

    வடகொரிய வீரர்கள் மிகுந்த தைரியம், திறமை மற்றும் வீரத்துடன் உக்ரைன் படைகளை எதிர்த்து போரிட்டனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷிய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே கையெழுத்தான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்திற்குப் பின்னர் இந்த உதவி வழங்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் போரில் ரஷியாவுக்கு உதவிக்கரம் நீட்டியதற்காக வட கொரியாவுக்கு அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். ரஷிய வீரர்களுடன் தோளோடு தோள் நின்று போராடிய வட கொரிய வீரர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பை புதின் பாராட்டியுள்ளார்.

    அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையில், "ரஷிய மக்கள் வட கொரிய சிறப்புப் படைகளின் வீரத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

    ரஷியாவிற்காக, நமது பொதுவான சுதந்திரத்திற்காக, தங்கள் ரஷிய சகோதரர்களுடன் ஆயுதமேந்திய நிலையில் போராடி தங்கள் உயிரைக் கொடுத்த மாவீரர்களை நாங்கள் எப்போதும் கௌரவிப்போம்" என்று புதின் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷிய அதிபர் புதினுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினர்.
    • வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை டிரம்ப் சந்தித்துப் பேசினார்.

    மாஸ்கோ:

    ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப், வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார்.

    இதற்கிடையே, போரை நிறுத்துவதற்காக டிரம்பின் தூதராக செயல்படும் விட்காப், மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையில் அதிபர் புதினைச் சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், உக்ரைனுடன் எந்தவித நிபந்தனை இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன் என விட்காப்பிடம் அதிபர் புதின் கூறினார். இதனை பல முறை புதின் கூறியள்ளதாக தெரிவித்தார்.

    போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக ரோம் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி 30 மணி நேர போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.
    • மாஸ்கோவிடமிருந்து தெளிவான பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    2022 இல் தொடங்கிய உக்ரைன்- ரஷியா போர் 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயும் போர் நிறுத்தம் ஏற்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளில் இழுபறி நீடித்து வருகிறது.

    இந்நிலையில் உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷிய அதிபர் புதின் முதல்முறையாக அறிவித்துள்ளார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி 30 மணி நேர போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. நேற்று இந்த போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க உக்ரைன் அழைப்பு விடுத்தது.

    குறைந்தபட்சம் பொதுமக்கள் வசிக்கும் இலக்குகளைத் தாக்கக்கூடாது என்ற தனது திட்டத்தை உக்ரைன் தொடர்கிறது. மேலும் மாஸ்கோவிடமிருந்து தெளிவான பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியிருந்தார்.

    இந்நிலையில் ரஷிய அரசுத் தொலைக்காட்சியில் பேசிய அதிபர் புதின், போர் நிறுத்தம் குறித்து எங்களுக்கு நேர்மறையான அணுகுமுறை உள்ளது. எந்தவொரு அமைதி முயற்சிகளுக்கும் நாங்கள் திறந்திருக்கிறோம், உக்ரைனும் அதற்கு விரும்புவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று பேசியுள்ளார். இதற்கிடையே அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இந்த வாரம் லண்டனில் சந்திக்க உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.
    • ஈஸ்டர் நாளில் மட்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படாது என அதிபர் புதின் தெரிவித்தார்.

    மாஸ்கோ:

    உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் இதில் உறுதியான உடன்பாடு எட்ட முடியவில்லை.

    இந்நிலையில், ஈஸ்டர் நாளில் மட்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படாது என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அதிபர் புதின் கூறுகையில், இன்று (ஏப். 19) மாலை 6 மணி முதல் (ரஷிய நேரப்படி) நாளை (ஏப். 20) நள்ளிரவு 12 மணிவரை தற்காலிக போர் நிறுத்தம் நிலவும் என குறிப்பிட்டுள்ளார்.

    ரஷியாவை போலவே உக்ரைன் தரப்பும் இந்தக் காலகட்டத்தில் சண்டையில் ஈடுபடக் கூடாது என்பதை தாங்கள் எதிர்பார்க்கிறோம் என ரஷிய மாளிகை தெரிவித்துள்ளது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அணு ஆயுத பயன்பாடு குறித்து அமெரிக்கா, ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    • இதில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது.

    மாஸ்கோ:

    அணு ஆயுத பயன்பாடு குறித்த அமெரிக்கா உடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ரோம் நகரில் இந்த வார இறுதியில் நடைபெறும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஈரானிய வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி இன்று ரஷிய தலைநகர் மாஸ்கோ வந்தடைந்தார். அவர் கிரெம்ளின் மாளிகையில் அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக, ஈரான் அதிகாரிகள் கூறுகையில், அணுசக்தி பிரச்சனையைப் பொறுத்தவரை, எங்கள் நண்பர்களான சீனா மற்றும் ரஷியாவுடன் நாங்கள் எப்போதும் நெருக்கமான ஆலோசனைகளைக் கொண்டிருந்தோம். இப்போது ரஷிய அதிகாரிகளுடன் அவ்வாறு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு என தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2003-ல் தலிபானை பயங்கரவாத குழுவில் சேர்த்தது ரஷியா.
    • தலிபான் உடன் தொடர்வு வைத்திருந்தால் ரஷியா சட்டப்படி குற்றமாகும்.

    ரஷியா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாத குழு பட்டியலில் தலிபான் அமைப்பை வகைப்படுத்தியிருந்தது. தற்போது அந்த பட்டியலில் இருந்து தலிபானை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பயங்கரவாத குழு பட்டியலில் வகைப்படுத்தியிருந்ததால், கடந்த 2003ம் ஆண்டில் இருந்து தலிபான் உடன் தொடர்பு வைத்திருந்தால் அது ரஷிய சட்டத்தின்படி குற்றமாகும். தற்போது நீக்கப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபானுக்கு இது ராஜாங்க ரீதியிலான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

    பயங்கரவாத அமைப்பு என வகைப்படுத்தப்பட்டதை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும் என கடந்த வருடம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில் தடையை நீக்க வேண்டும் என அரசு தரப்பு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மே 9, 1945 அன்று ஜெர்மனி, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியனிடம் சரணடைந்தது.
    • ரஷியாவின் மிக முக்கியமான வருடாந்திர கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.

    இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மே 9 அன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தினம் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க ரஷியா அழைப்பு விடுத்துள்ளது.

    மே 9, 1945 அன்று ஜெர்மனி, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியனிடம் சரணடைந்ததை நினைவுகூரும் வகையிலான இந்த வெற்றி தின அணிவகுப்பு, ரஷியாவின் மிக முக்கியமான வருடாந்திர கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.

    இந்நிலையில் இந்த அணிவகுப்புக்கு அழைப்புக் கடிதத்தை இந்திய பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாக ரஷிய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

    மேலும் பிற நட்பு நாடுகளுக்கும் அழைப்புக் கடிதம் பறந்துள்ளது. பிரதமர் மோடி கடைசியாக 22வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டுக்காக ஜூலை 2024 இல் ரஷ்யாவிற்கு விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 10 நாட்களுக்கு மேல் படுக்கையில் முடங்கி விடுகின்றனர்.
    • சமூக வலைத்தளங்களில் மர்ம வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் ஒரே மாதிரியான அறிகுறிகளை கூறி தங்களது அனுபங்களை பகிர்ந்து வருகின்றனர்.

    கொரோனா தொற்றுக்கு பிறகு மக்களிடையே புதுவிதமான தொற்றுநோய்கள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஷியா முழுவதும் பரவி வரும் மர்ம வைரஸால் ரஷிய மருத்துவ நிபுணர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதன் அறிகுறிகள் அதிக காய்ச்சல் மற்றும் ரத்தம் கலந்த இருமல் ஆகும். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 10 நாட்களுக்கு மேல் படுக்கையில் முடங்கி விடுகின்றனர்.

    இதனால் மர்ம வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில், இதனை மறுத்துள்ள ரஷிய அதிகாரிகள் புதிய நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா உள்ளிட்ட பொதுவான சுவாச நோய்த்தொற்றுகள் தான் என தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, மருத்துவர்கள் இந்த மர்ம வைரஸ் தொடர்பாக, இது சுவாசக்குழாய் தொற்று என்றும் அறிகுறிகள் மோசமடைந்தால் அவசர சிகிச்சை பெறுமாறும் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் சமூக வலைத்தளங்களில் மர்ம வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் ஒரே மாதிரியான அறிகுறிகளை கூறி தங்களது அனுபங்களை பகிர்ந்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாக்குதலாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பியது.
    • தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கான்வாயில் சென்ற வாகனங்களில் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், வாகனம் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து இந்த சம்பவம் அதிபர் புதினை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பியது.

    இந்த சம்பவம் மாஸ்கோவில் உள்ள உளவுத்துறை தலைமையகமான எஃப்.எஸ்.பி. அருகே நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோக்களில் கார் தீப்பிடித்து எரிவதும், அங்கிருந்தவர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.

    அதிபர் கான்வாயில் இடம்பெற்று இருந்த ஔரஸ் செனட் லிமோசின் ரக கார் ஒன்றின் எஞ்சின் பகுதியில் தீ ஏற்பட்டு, பிறகு முகப்பு பகுதி முழுக்க பரவியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காரின் பெரும்பாலான பகுதி சேதமடைந்துள்ளது. தீப்பிடித்து எரிந்த காரில் இருந்தது யார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உக்ரைன் படைகள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர்
    • அழுத்தம் கொடுப்பதற்கான முற்றிலும் அரசியல் சதி என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    2022 பிப்ரவரியில் நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயற்சிப்பதை கண்டித்து அந்நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தது. 4 ஆண்டுகளை கடந்தும் போரானது நடந்துகொண்டிருக்கிறது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் இரு நாடுகளிடையேயும் பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொண்டார்.

    அதன்படி சவுதியில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. டிரம்ப் - புதின் அலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்காவுக்கு அழைத்து சத்தம் போட்டார் டிரம்ப். இந்நிலையில் முதற்கட்டமாக 30 நாள் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்கா முன்மொழிந்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் உடன்பட்டது.

    ரஷிய அதிபர் புதினும் நேற்று முன் தினம் மாஸ்கோவில் அளித்த பேட்டியில், போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்கிறேன். உக்ரைன் படைகள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர். இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்னால் அங்கிருக்கும் படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், உக்ரைன் வீரர்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் சிக்கியுள்ளதாகவும், ரஷிய துருப்புகளால் சூழப்பட்ட ஆயிரக்கணக்கான உக்ரேனிய வீரர்களின் உயிர்களை புதின் காப்பாற்ற வேண்டும் என்றும் பேசியிருந்தார். குறிப்பிட்டு கூறாவிட்டாலும், குர்ஸ்க் பகுதியையே டிரம்ப் குறிப்பிடுகிறார். புதினிடம் தான் அவர்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டதாக அவர் மேலும் கூறுகிறார்.

    இதனையடுத்து உக்ரைன் நேற்று ஒரு அறிக்கை விட்டது. அதாவது, கடந்த ஒரு நாளில் போர் சூழ்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. குர்ஸ்க் பிராந்தியத்தில் எங்கள் இராணுவப் படைகளால் போர் சிறந்த முறையில் நடத்தப்படுகிறது. எங்கள் வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர் மற்றும் எதிரியின் நடவடிக்கைகளை சிறப்பாக எதிர்கொள்கின்றனர்.

    எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களுடனும் நாங்கள் போராடுகிறோம் என்று அந்த அறிக்கை விவரிக்கிறது. மேலும் இவை அனைத்தும் உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான முற்றிலும் அரசியல் சதி என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    இந்த சூழலுக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதின் வாய்திறந்துள்ளார். அதாவது, அதிபர் டிரம்ப் விடுத்த வேண்டுகோளுக்கு நாங்கள் அனுதாபம் தெரிவிக்கிறோம். உக்ரைன் வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தால், அவர்களுக்கு உயிரும், நிம்மதியாக வாழும் உரிமையும் உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார் புதின்.

    குர்ஸ்க் பகுதியில் இருக்கும் உண்மை நிலை குறித்து அந்தந்த நாடுகள் தங்கள் தரப்பு பார்வைகளைக் கூறி வருவதால் உண்மை நிலை என்ன என்பது மர்மமாகவே உள்ளது. அரசியல் சித்து விளையாட்டுகள் முடிவடைந்து 30 நாள் போர் நிறுத்தம் ஏற்படுமா, உக்ரேனியர்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உக்ரைனுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு அதிபர் புதின் ஒப்புதல்.
    • இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றார்.

    மாஸ்கோ:

    உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    போர் தொடங்கியதில் இருந்து இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

    இதற்கிடையே, உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் நிபந்தனைகளுடன் கூடிய சம்மதம் தெரிவித்தார்.

    இந்நிலையில், உக்ரைன் போர் நிறுத்த திட்டம் குறித்து ரஷிய அதிபர் புதின் கூறியதாவது:

    போர் நிறுத்தம் தொடர்பான உக்ரைனின் திட்டத்தை மதிப்பிடுவதற்கு முன், உக்ரைனில் ஏற்பட்ட மோதலை தீர்ப்பதில் இவ்வளவு கவனம் செலுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    சீன அதிபர், இந்திய பிரதமர், பிரேசில் அதிபர் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ஆகியோர் இந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஏனென்றால் இது விரோதங்களையும், மனித உயிரிழப்பையும் நிறுத்துவதற்கான ஓர் உன்னதமான பணியாகும்.

    போர் நிறுத்தம் தொடர்பான திட்டங்களுடன் நாங்கள் உடன்படுகிறோம். இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும். இந்த பிரச்சனையின் மூல காரணங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என தெரிவித்தார்.

    ×