என் மலர்

    ரஷ்யா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியிருப்பதை தென்கொரிய உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது.
    • இந்த வீடியோவை உக்ரைன் உளவுப் பிரிவு உறுதி செய்துள்ளது.

    தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு அச்சறுத்தலாக விளங்கும் அணு ஆயுத நாடு வட கொரியா. தற்போது ரஷியாவுடன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நெருக்கம் காட்டி வருவது நிலைமையை இன்னும் மோசமாகியுள்ளது.

    வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதால் பொருளாதார பாதிப்பை சந்தித்து இருக்கும் வடகொரியாவுக்கு எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் ரஷியா , சீனா ஆகிய நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. இதற்கிடையே சமீபத்தில் தென் கொரியாவை எதிரி நாடாக அதிகாரபூர்வமாக அறிவித்த வட கொரியா அமெரிக்காவுக்கு அணுஆயுத மிரட்டல் விடுத்திருந்தது.

     

    இந்நிலையில் மேற்கு நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் எதிராக மறைமுகமாக கடந்த 2 வருடங்களாக நடத்துவரும் உக்ரைன் போரில் வட கொரியா பங்கேற்றுள்ளதாக தகவல்கள் மட்டுமின்றி அதற்கான ஆதாரங்களும் கிடைத்து வருகின்றன. அதாவது, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு உதவும் விதமாக தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியிருப்பதை தென்கொரிய உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது.

    இது குறித்து வட கொரியாவும் ரஷியாவும் எதுவும் பேசாத நிலையில் டஜன் கணக்கான வட கொரிய வீரர்கள் ரஷிய ராணுவ தலத்தில் பயிற்சி எடுத்து சோர்ந்து ஓய்வு எடுப்பது, ரஷிய ராணுவ உபகரணங்களை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை உக்ரைன் உளவுப் பிரிவும் கண்டறிந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

    எனவே உக்ரைன் ரஷியா போர் அடுத்த மேலும் தீவிரமடையும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா மீது 100 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது உக்ரைன். மேலும் ரஷியாவின் 2 ஆயுத தயாரிப்பு மையங்களும் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷிய ராணுவம் உலகின் மிகவும் போர்த்திறன் வாய்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பப் படைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
    • பிரிக்ஸ் ஒருபோதும் யாருக்கும் எதிரானது கிடையாது.

    ரஷியாவில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு வருகிற 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் தனது அதிகாரப்பூர்வ இல்லமான நோவோ-ஓகாரியோவோவில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய பிரதமர் மோடி எனது நண்பர். அவருடன் சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் போது ரஷியா-உக்ரைன் போர் குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார். மோடியின் இந்த அக்கறைக்கு ரஷியா நன்றியுடன் இருக்கிறது. மோடியை சந்திக்கும் போது இந்திய திரைப்படங்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பது குறித்து விவாதிக்கலாம்.

    உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலக்கெடுவை அமைப்பது கடினமாக இருக்கும். ரஷியாவை போரில் அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு தள்ளியது. ரஷிய ராணுவம் உலகின் மிகவும் போர்த்திறன் வாய்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பப் படைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

    எங்களுக்கு எதிராக இந்தப் போரை நடத்துவதில் நேட்டோ சோர்வடையும். போரில் எங்களது கை ஓங்கி இருக்கிறது. நாங்கள் வெற்றி பெறுவோம். உக்ரைன் ராணுவம், துல்லியமான ஆயுத விநியோக அமைப்புகளை சொந்தமாக கையாள முடியாது. சமாதான பேச்சுவார்த்தையை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அந்த முயற்சிகளில் இருந்து உக்ரைன் பின் வாங்குகிறது.

    பிரிக்ஸ் ஒருபோதும் யாருக்கும் எதிரானது கிடையாது. இதை பிரதமர் மோடி சரியாக தெரிவித்து உள்ளார். பிரிக்ஸ் அமைப்பு மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல. ரஷியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு காரணம் அமெரிக்கா தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நமக்கும் நமது நேச நாடுகளுக்கும் உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
    • 1,572 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு முக்கிய இடங்களில் எந்நேரமும் தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளன

    2022 ஆம் ஆண்டு தொடங்கிய ரஷிய உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்த நீடித்து வருகிறது. மேற்கு நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சித்ததால் தங்களுக்கு ஆபத்து என்று கூறி ரஷியா இந்த போரை துவங்கியது. ரஷியா பக்கம் வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன. போரில் உக்ரைனுக்கு பக்க பலமாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத மற்றும் பொருளாதார ரீதியாக உக்ரைனுக்கு உதவி வருகிறது. உக்ரைனுக்கு பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ என்ற அதிநவீன ஏவுகணைகளை வழங்கியுள்ளது. இதை ரஷியா மீது உக்ரைன் பய்னபடுத்தும்பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு புதின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

     

    இந்நிலையில்தான் இந்த ஒட்டுமொத்த போரானது எந்நேரமும் மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச் செல்லும் என்று நிலவி வரும் அச்சத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ரஷிய அதிபர் புதின் முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இன்று தொலைக்காட்சி வாயிலாக பேசிய புதின், அதிகரித்து வரும் சர்வதேச பாதுகாப்பு அச்சறுத்தல் காரணமாக ரஷியாவின் அணு ஆயுதங்கள் பயன்பாடு [பயன்படுத்தாமல் இருப்பது உள்ளிட்ட கொள்கைகளில்]  திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது.

    சர்வதேச ராணுவ மற்றும் அரசியல் சூழல் தொடர்ச்சியாக மாறி வருகிறது, அதற்கு ஏற்ற முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும். நமக்கும் நமது நேச நாடுகளுக்கும் உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் ரஷிய ராணுவ தளபதிகளுடனான கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருவதால் உக்ரைன் ரஷியாவை எதிர்ப்பது என்பது உக்ரைன் வழியாக அதற்கு உதவும் அணு ஆயுத நேரடியாக ரஷியாவை எதிர்ப்பதாகக் கருதப்படும். எனவே தாங்களும் தங்களின் அணு ஆயுதங்களை உபயோகிக்கும் நிர்பந்தம் ஏற்படலாம் என்ற வகையில் புதின் பேசியுள்ளது மேற்கத்திய நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    உலகில் உள்ள மொத்த அணு ஆயுதங்களில், 8-0 சதவீதம், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளன. ரஷியாவிடம் மட்டுமே 6,732 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில், 1,572 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு முக்கிய இடங்களில் எந்நேரமும் தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1999-க்குப்பிறகு கடந்த ஜூன் மாதம் ஒரு லட்சத்திற்கும் குறைவான குழந்தைகள்தான் பிறந்துள்ளது.
    • தற்போது பெண்களுக்கு குழந்தைகள் பிறப்பது 1.5 சதவீதமாக குறைந்துள்ளது.

    வேலை செய்யும் இடங்களில் சாப்பாடு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளையை உடலுறவுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு ரஷிய மக்களுக்கு புதின் வலியுறுத்தியதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ரஷியாவின் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. உக்ரைனுக்கு எதிராக போர் நடத்தி வரும் ரஷியாவுக்கு இது மிகப்பெரிய கவலையை அளித்துள்ளது. இதனால் மக்கள் குழந்தைகள் அதிக அளவில் பெற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய முன்னோர்கள் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற வரலாறு உண்டு என ரஷிய அதிபர் புதின் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார்.

    இந்த நிலையில் பணிபுரியும் இடத்தில் இடைவேளையின்போது உடலுறவு கொள்ளுமாறு ரஷியர்களுக்கு புதின் வலியுறுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ரஷியாவில் தற்போதுள்ள மக்கள் தொகை அப்படியே நிலைத்திருக்க ஒரு பெண்ணுக்கு 2.1 என்ற சதவீதம் என்ற அளவில் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஆனால் தற்போது இது 1.5 சதவீதமாக குறைந்துள்ளது.

    1999-க்கும் பிறகு தற்போது ரஷியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஜூன் மாதம் ஒரு லட்சத்திற்கும் குறைவான குழந்தைகள்தான் பிறந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன.

    கடந்த ஆண்டு முதல் பாதியில் பிறந்த குழந்தைகளை விட தற்போது 2024 முதல் பாதியில் 16 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக ரஷியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதே காலக்கட்டத்தில் உக்ரைன் சண்டை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் 49 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்கள் தொகை வீழ்ச்சி 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

    பெண்கள் குழந்தைகள் அதிக அளவில் பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு மருத்துவ சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    செல்யாபின்ஸ்க் பிராந்தியம் 24 வயதிற்கு உட்பட்ட பெண் மாணவிகள் குழந்தை பெற்றுக் கொண்டால், முதல் குழந்தைக்கு 8500 டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளது. கருத்தடைக்கு கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவாகரத்துக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற உறுப்பினர் தட்யான்யா புட்ஸ்கயா முதலாளிகள் அவர்களுடைய பெண் ஊழியர்களை குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க வலியுறுத்தும் கொள்கைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

    அரசியல்வாதியான அன்னா குஸ்னெட்சோவா, பெண்கள் 19 அல்லது 20 வயதில் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குடும்பம் மூன்று அல்லது அதற்கு மேலான குழந்தைகளை பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, "ரஷிய மக்களைப் பாதுகாப்பதே எங்கள் மிக உயர்ந்த தேசிய முன்னுரிமை. ரஷ்யாவின் தலைவிதி... நம்மில் எத்தனை பேர் இருப்போம் என்பதைப் பொறுத்தது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி" புதின் கூறியிருந்தார்.

    உக்ரைன் உடனான போரால் ரஷியாவில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் நாட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இதுவரை 45 இந்தியர்கள் ரஷிய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்ப உள்ளனர்.காலை 6 மணி முதல் நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் நாங்கள் வேலை செய்தோம், தூங்குவதற்கும் அனுமதிக்க மாட்டார்கள்.

    உக்ரைன் ரஷியா போர் கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷிய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக அங்கு மாறியுள்ள இந்திய இளைஞர்கள் சிலர் தங்களை காப்பாற்றும்படி வீடியோ வெளியிட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி ரஷியா சென்று அதிபர் புதினை சந்தித்தபோது ரஷிய ராணுவத்திலுள்ள இந்திய இளைஞர்களை பணியிலிருந்து விடுவிக்க வலியுறுத்தியிருந்தார். இதற்கு ரஷியா இசைவு தெரிவித்த நிலையில் இதுவரை 45 இந்தியர்கள் ரஷிய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்ப உள்ளனர். மேலும் 50 இந்தியர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் விடுவிக்கப்பட்டவர்களில் தெலுங்கனா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 4 இந்தியர்கள் நேற்றைய தினம் [வெள்ளிக்கிழமை] இந்தியா திரும்பியுள்ளனர். ரஷியாவில் மாதம் ரூ.1 லட்சத்தில் வேலைவாய்ப்பு எனக்கூறி அழைத்துச்செல்லப்பட்ட இவ்விளைஞர்கள் உக்ரைன் போர் தொடங்கியதும் வலுக்கட்டாயமாக ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுப் போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரஷிய ராணுவத்தில் தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    காலை 6 மணி முதல் நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் நாங்கள் வேலை செய்தோம், தூங்குவதற்கும் அனுமதிக்க மாட்டார்கள்.மனிதாபிமானமற்ற சூழலில் நாங்கள் இருந்தோம். AK-12, AK-74, கிரெனைடுகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கையாள எங்களுக்கு பயிற்சி அளித்தனர். குறைந்த உணவுடன் கடுமையான குளிரில் சுரங்கப்பாதைகளைத் தோண்டினோம். உடல் ரீதியான வலியுடன் மன ரீதியாகவும் எங்களுக்கு கடும் தொல்லைகள் கொடுக்கப்பட்டது.

    எங்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டு வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்டது. போருக்கிடையில் தாங்கள் எத்தனை நாட்கள் உயிர்பிழைக்கப் போகிறோம் என்று அஞ்சினோம். துப்பாக்கி குண்டுகளின் சத்தம் இன்னும் எங்களின் காதுகளுக்கு இரைந்து கொண்டிருக்கிறது. வேலையின்போது நாங்கள் சோர்ந்துவிட்டால் கால்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவார்கள், போரில் நண்பர்கள் பலரின் மரணத்திலிருந்தும் தாங்கள் இன்னும் மீளவில்லை என்று தெரிவித்துள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த அஜித் தோவல் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார்
    • பிரதமர்[மோடி] உங்களிடம் டெலிபோன் மூலம் பேசியிருந்தபடி அதிபர் ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பு குறித்து விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறார்.

    உக்ரைன் போரும் இந்தியாவும் 

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவால் உதவ முடியும் என அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட மேற்கு நாடுகள் கூறி வரும் நிலையில் மோடியின் ரஷிய பயணம் மற்றும் அதன்பின்னான உக்ரைன் பயணம் சர்வதேச கவனம் பெற்றது. ரஷியாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமே என்று மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த ஆகஸ்ட் 23 அன்று உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மோடி ரஷியா உடனான போர் நிறுத்தம் குறித்தும் இந்தியா- உக்ரைன் வர்த்தக உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் தேசிய மாநாடு பணிகள் தொடர்பாக நேற்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் ரஷியா சென்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

     

    அஜித் தோவல் தூது 

    மேலும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த அஜித் தோவல் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார். மோடி உக்ரைன் சென்று சரியாக இரண்டரை வாரங்கள் கழிந்து ரஷியா சென்றுள்ள அஜித் தோவல் அதிபர் புதினை சந்தித்து கைகுலுக்கி பேசுகையில், பிரதமர்[மோடி] உங்களிடம் டெலிபோன் மூலம் பேசியிருந்தபடி அவரது உக்ரைன் பயணம் குறித்தும், அதிபர் ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பு குறித்தும் உங்களிடம் விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறார். எனவே உங்களை சந்தித்து இதுபற்றி விளக்கமாக கூற என்னை தனிப்பட்ட முறையில் பிரதமர் [மோடி] அனுப்பி வைத்துள்ளார் என்று பேசியுள்ளார்.  அதிபர் புதின் மற்றும் அஜித் தோவல் சந்திப்பின்போது இருவரும் தனியே உரையாடியுள்ளனர். அப்போது உக்ரைன் போரை நிறுத்துவதற்காக மோடியின் அமைதி திட்டத்தை அஜித் தோவல் புதினிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தீவிரமாகும் போர் 

    இதற்கிடையே அக்டோபர் 22 முதல் 24 வரை நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வரவேண்டும் என பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் உக்ரைன் போர் தொடர்பாக அதிபர் புதினின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மோடி உக்ரைன் சென்று திரும்பிய சில நாட்களிலேயே ரஷியா- உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைய தொடங்கியது. இருவரும் மாறி மாறி டிரோன்கள் மூலமும் ராக்கெட்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தி வருகிறனர். உக்ரைன் தலைங்கர் கீவில் மின்சார கட்டமைப்பைக் குறிவைத்து ரஷியா பெரிய அளவில் தாக்குதல் நடத்தி இருந்தது குறிப்பிடத்தத்க்து.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷிய அதிபர் புதினை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார்.
    • அப்போது பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார்.

    மாஸ்கோ:

    உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி முயற்சி எடுத்து, உக்ரைன் அரசும் அதற்கு ஒத்துழைத்தால் பேச்சு வார்த்தையில் பங்கேற்க ரஷியாவும் தயங்காது என அதிபர் புதின் சமீபத்தில் தெரிவித்தார்.

    இதற்கிடையே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் ரஷியா சென்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார்.

    இதுதொடர்பாக, அதிபர் புதின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா-ரஷியா இடையே இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், அக்டோபர் 22 முதல் 24 வரை நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வரவேண்டும் என பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    ரஷிய பயணத்தின்போது உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, அதிபர் புதினுடன் ஆலோசிப்பார் என தெரிகிறது.

    பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
    • ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    ஜனநா யக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்திய கருத்துக்கணிப்பில் இரு வரும் இடையே சிறிய அளவில்தான் வித்தியாசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறும்போது, கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் சில விகிதங்களில் முன்னேறி வந்தாலும் தொடக்கம் முதலே டிரம்ப் சராசரியாக 47 சதவீத ஆதரவுடன் உறுதியான இடத்தில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

    விலடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசிய புதின், "அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தான் எங்களது விருப்பமான வேட்பாளராக இருந்தார். ஆனால் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகி கமலா ஹாரிஸை ஆதரித்தார். ஆகவே நாங்களும் கமலா ஹாரிஸை ஆதரிக்கிறோம்.

    கமலா ஹாரிஸின் சிரிப்பு தனித்துவமாக உள்ளது. அந்த சிரிப்பே அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உணர்வைத் தருகிறது.

    முன்பு அதிபராக இருந்த ட்ரம்ப், ரஷியாவிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்தார். கமலா ஹாரிஸ் அத்தகைய செயல்களை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்.

    ஆனால் இறுதியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை அமெரிக்க மக்கள் தான் முடிவு செய்வார்கள்" என்று தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷியா சென்ற நிலையில் பிரதமர் மோடி உக்ரைன் சென்று ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
    • உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்ப்பு.

    மாஸ்கோ:

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் செய்துவருகின்றன. அமெரிக்காவும் உதவி வருகிறது. இதனால் ரஷியாவிடம் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இந்த நாடுகளால் பேச முடியவில்லை.

    சீனா ரஷியாவுடன் இணக்கமாக உள்ளது. இருந்தபோதிலும் பேச்சுவார்த்தை என வரும்போது விலகி நிற்கிறது. இந்தியா உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் நட்பு நாடாக விளங்குகிறது. சமீபத்தில் ரஷியாவிற்கு சென்ற பிரதமர் மோடி, உக்ரைனுக்கும் சென்றார்.

    இதனால் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும் என உலக நாடுகள் நம்புகின்றன.

    இதற்கிடையே, பிரதமர் மோடி ரஷியா, உக்ரைன், போலந்து சுற்றுப்பயணத்தை முடிக்கு கொண்டு இந்தியா திரும்பிய நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியிடம் டெலிபோனில் பேசினார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உக்ரைன் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையில் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும்.

    இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில் போரின் முதல் வாரங்களில் ரஷியா மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையே எட்டப்பட்ட பூர்வாங்க ஒப்பந்தம் ஒருபோதும் செயல்படுத்தப்படாது. அவை பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக அமையும் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தினர்.
    • மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் எனத் தகவல்.

    ரஷியாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகாப்டர் ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா கிராமத்தில் உள்ள தளத்திற்கு நேற்று புறப்பட்டது. ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிட நேரங்களில் தனது தொடர்பை துண்டித்தது.

    இந்த ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேர் பயணித்தனர்.

    மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.

    இந்நிலையில், காணாமல் போன ரஷிய ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த 22 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டறியப்பட்டன. மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷியாவின் பெல்கோரோட் நகர் மீது உக்ரைன் ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியது.
    • தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் பெரிய அளவில் பொருள் சேதங்கள் ஏற்பட்டதாக பெல்கோரோட் பிராந்திய கவர்னர் தெரிவித்தார்.

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 2½ ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு தரப்பும் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வராமல் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

    குறிப்பாக ரஷியா மீதான தாக்குதலை உக்ரைன் அண்மை காலமாக தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷிய தலைநகர் மாஸ்கோவின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் நடத்தியது.

    இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ரஷியாவின் பெல்கோரோட் நகர் மீது உக்ரைன் ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியது.

    பெல்கோரோட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் பெரிய அளவில் பொருள் சேதங்கள் ஏற்பட்டதாக பெல்கோரோட் பிராந்திய கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்தார்.

    இதுப்பற்றி அவர் கூறுகையில், "உக்ரைனின் குண்டு வீச்சில் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 6 சிறுவர்கள் உள்பட 37 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எம்ஐ-8 ரஷியாவிலும், அண்டை நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
    • இரண்டு எஞ்சின் ஹெலிகாப்டரான எம்ஐ-8 1960 களில் வடிவமைக்கப்பட்டது.

    ரஷியாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகாப்டர் ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா கிராமத்தில் உள்ள தளத்திற்கு புறப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் புறப்பட்ட சில மணி நேரங்களில் திட்டமிடப்பட்ட நேரத்தில் தொடர்பை துண்டித்தது.

    இந்த ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேருடன் சென்ற ரஷிய ஹெலிகாப்டர் நாட்டின் கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் காணாமல் போனதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைப்பின் முதற்கட்டத் தகவல் வெளியானது.

    இந்நிலையில், மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    1960 களில் வடிவமைக்கப்பட்ட இரண்டு எஞ்சின் ஹெலிகாப்டரான எம்ஐ-8 ரஷியாவிலும், அண்டை நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

    முன்னதாக ஆகஸ்ட் 12 ஆம் தேதி, 16 பேருடன் பயணித்த எம்ஐ-8 ஹெலிகாப்டர் ரஷியாவின் தூர கிழக்குப் பகுதியான கம்சட்காவில் அதிகாலையில் விபத்துக்குள்ளானது.

    கம்சட்கா தீபகற்பம் அதன் இயல்புக்காக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. இது மாஸ்கோவிற்கு கிழக்கே 6,000 கிமீ (3,728 மைல்கள்) மற்றும் அலாஸ்காவிற்கு மேற்கே சுமார் 2,000 கிமீ தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×