என் மலர்

    மகாராஷ்டிரா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது
    • கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தார்

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட தீவிர இந்து அமைப்பினரால் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மத்திய பாஜக அரசின் முன்னெடுப்பில் ரூ.1,800 கோடி பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் உள்ளது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் சூழ இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

     

    மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் இப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்பிறகே 2020 இல் பாஜகவால் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    தற்போது இந்த தீர்ப்பை வழங்கிய அனுபவம் குறித்து தனது சொந்த ஊரான புனேவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரசூட் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சில வழக்குகளில் ஒரு முடிவுக்கு வரவே முடியாதபடி இருக்கும். அப்படித்தான் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி பிரச்சனை [குறித்த வழக்கு] மூன்று மாதங்களாக என் முன் இருந்தது.

     

    அப்போது தினமும் நான் கடவுளின் சிலைக்கு முன்னாள் அமர்ந்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லும்படி வேண்டினேன். என்னை நம்புங்கள், உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் நிச்சயம் அவர் ஒரு வழியை காண்பிப்பார் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
    • 99 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அங்கு ஆளும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு), பா.ஜ.க, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) ஒரு கூட்டணியாக களம் காண்கிறது.

    சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) ஒரு அணியாகவும் போட்டியிடுகிறது. இரு அணிகளும் மும்முரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், தேவேந்திர பட்னாவிஸ், சந்திரசேகர் கிருஷ்ணராவ் பவன்குலே உள்ளிட்ட 99 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

    தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியிலும், காம்தி தொகுதியில் சந்திரசேகர் கிருஷ்ணராவ் பவன்குலேவும், ஷஹாடே தொகுதியில் ராஜேஷ் உடேன்சிங் பட்வி, துலே நகரில் அனுப் அகர்வால் களம் காண்கின்றனர். கட்கோபார் மேற்கு தொகுதியில் ராம்கடம், சிக்லி தொகுதியில் ஸ்வேதா மகாலே பாட்டீல், ஸ்ரீஜெயா அசோக் சவான் போகார் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
    • கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுள் ஒருவனான ஸ்ரீகாந்த் ஷிண்டே சிவசேனா கட்சியில் சேர்ந்தார்.

    பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளைக் கடுமையாக விமர்சித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இதற்கிடையில் இந்தக் கொலையில் தொடர்புடைய மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமின் வழங்கப்பட்டது. தெடர்ந்து மற்ற குற்றவாளிகளும் அடுத்தடுத்து ஜாமினில் வெளியே வந்தனர். கடைசியாகக் கடந்த அக்டோபர் 11 அன்று ஜாமினில் வெளிவந்த இருவருக்கு இந்து அமைப்பினரால் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுள் ஒருவனான ஸ்ரீகாந்த் பங்கார்கர் என்பவர் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் முதல்வர் ஷிண்டே சிவசேனா கட்சியில் சேர்ந்தார்.

    மகாராஷ்டிராவை சேர்நத ஸ்ரீகாந்த் கடந்த 2001 முதல் 2018 வரை அப்போதைய ஒருங்கிணைத்த சிவசேனாவில் ஜால்னா தொகுதி முனிசிபல் கவுன்சிலராக இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டில் சீட் மறுக்கப்பட்டதால் சிவசேனாவின் இருந்து வெளியேறி வலதுசாரி அமைப்பான இந்து ஜன்ஜாக்ருதி சமிதி அமைப்பில் ஐக்கியமாகியுள்ளார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    கடந்த செப்டம்பரில் கடந்த செப்டம்பர் 4 அன்று ஜாமீனில் வந்த அவர் தற்போது ஷிண்டே சிவசேனா தலைவர் முன்னாள் அமைச்சர் அர்ஜுன் கோத்கர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தொடர்ந்து ஜால்னா சட்டமன்றத் தொகுதியில் பிரசார தலைவராக அர்ஜுன் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், சிவசேனா கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பொறுப்பாளராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டதை மகாராஷ்டிர முதல்வர் ஏகாந்த் ஷிண்டே ரத்து செய்தார்.

    ஜல்னா மாவட்டத்தில் சிவசேனா கட்சி சார்பாக பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் செல்லாது என்று காந்த் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மொத்தம் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான சீட் பங்கீடு தற்போது காரசாரமாக நடந்து வருகிறது.
    • நடக்க உள்ள தேர்தலின் முடிவுகள் மகாராஷ்டிராவில் மட்டுமல்ல நாட்டின் அரசியலையே மாற்றியமைக்கும்.

    மொத்தம் தொகுதிகளைக் கொண்ட மராட்டிய மாநிலத்தில், வரும் நவம்பர் 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ந்தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் பிரசார பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

    மகாராஷ்டிர மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. ஆளும் மாஹாயுதி [ பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ்] மற்றும் மகாவிகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் தாக்கரே சிவசேனா - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ்] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன. மொத்தம் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான சீட் பங்கீடு தற்போது காரசாரமாக நடந்து வருகிறது.

    கடந்த மக்களவை தேர்தலில் மாகா விகாஸ் அகாதி - இந்தியா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி பாஜக மகாயுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் கவனத்துடன் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் காங்கிரசுடன் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    துலே பகுதியில் பிரசாரம் செய்த அவர், மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பாஜக விரக்தியில் உள்ளது. சத்ரபதி சிவாஜிக்கு சிலை வைப்பதிலும் கூட அவர்கள் ஊழல் செய்துள்ளனர். மராட்டிய மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.

    இந்தியாவை உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்றுவோம் என பாஜக கூறியது. ஆனால் நமது அண்டை நாடுகள் நம்மை விட நன்றாக செயல்படுகின்றன. அண்டை நாடுகளை விட இந்தியாவில் பட்டினி கொடுமை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

    மேலும் தொடர்ந்து பிரசாரத்தின்போது பேசிய அவர், நடக்க உள்ள தேர்தலின் முடிவுகள் மகாராஷ்டிராவில் மட்டுமல்ல நாட்டின் அரசியலையே மாற்றியமைக்கும். தேர்தல் முடிவுக்கு பிறகு, மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியாக கவிழ்ந்து விடும் என்று தெரிவித்துள்ளார். 2024 பட்டினி குறியீட்டில் இலங்கை, பர்மாவை விட பின்தங்கியும், பஞ்சத்தால் அவதிப்படும் பாகிஸ்தானுக்கு சமமான நிலையிலும் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜாமீனில் வெளிவந்த கொலை குற்றவாளிகளுக்கு இந்து அமைப்பினரால் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஜால்னா சட்டமன்றத் தொகுதியில் பிரசார தலைவராக அர்ஜுன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளைக் கடுமையாக விமர்சித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இதற்கிடையில் இந்தக் கொலையில் தொடர்புடைய மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தெடர்ந்து மற்ற குற்றவாளிகளும் அடுத்தடுத்து வெளியே வந்தனர். கடைசியாகக் கடந்த அக்டோபர் 11 அன்று ஜாமீனில் வெளிவந்த இருவருக்கு இந்து அமைப்பினரால் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

     

    இந்நிலையில் கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுள் ஒருவனான ஸ்ரீகாந்த் பங்கார்கர் என்பவர் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் முதல்வர் ஷிண்டே சிவசேனா கட்சியில் சேர்ந்துள்ளார்.

    மகாராஷ்டிராவை சேர்நத ஸ்ரீகாந்த் கடந்த 2001 முதல் 2018 வரை அப்போதய ஒருங்கிணைத்த சிவசேனாவில் ஜால்னா தொகுதி முனிசிபல் கவுன்சிலராக இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டில் சீட் மறுக்கப்பட்டதால் சிவசேனாவின் இருந்து வெளியேறி வலதுசாரி அமைப்பான இந்து ஜன்ஜாக்ருதி சமிதி அமைப்பில் ஐக்கியமாகியுள்ளார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    கடந்த செப்டம்பரில் கடந்த செப்டம்பர் 4 அன்று ஜாமீனில் வந்த அவர் தற்போது ஷிண்டே சிவசேனா தலைவர் முன்னாள் அமைச்சர் அர்ஜுன் கோத்கர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தொடர்ந்து ஜால்னா சட்டமன்றத் தொகுதியில் பிரசார தலைவராக அர்ஜுன் நியமிக்கப்பட்டுள்ளார்.

     

    மேலும் வரும் நவம்பர் 20 ஆம் தேதி மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் போட்டியிடுவேன் என்றும் ஸ்ரீகாந்த் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆளும் மகாயுதி கூட்டணி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] இடையே சீட் பகிர்வு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒருநாள் சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.
    • டாக்டர்கள் என்னை ஓய்வெடுக்க அறிவுறுத்தினர்.

    மும்பை:

    உத்தவ் சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே சமீபத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரே மகனும், முன்னாள் மந்திரியுமான ஆதித்ய தாக்கரே வெளியிட்ட தகவலில், "முழு உடல் பரிசோதனைக்காக முன்பே திட்டமிட்டதன் படி உத்தவ் தாக்கரே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார்" என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் ஒருநாள் சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். நேற்று முன்தினம் தனது இல்லமான மாதோஸ்ரீக்கு வெளியே கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    டாக்டர்கள் என்னை ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். ஆனால் ஒருவர் எவ்வளவு ஓய்வெடுக்க முடியும்? துரோகிகளை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும்வரை எனக்கு ஓய்வே கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவசேனா உடைய காரணமாக இருந்த முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை உத்தவ் தாக்கரே துரோகிகள் என்று குறிப்பிடுவது வழக்கம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேர்தல் சீட் கொடுக்காமல் பணத்தை திருப்பிக் கேட்டால் அவமானப்படுத்தியாகவும் புகார்.
    • கோபால் ஜோஷி மீது மோசடி, எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷியை மகாராஷ்டிராவில் வைத்து பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

    மக்களவை தேர்தலின்போது, கோபால் ஜோஷி மற்றும் 2 பேர் தன்னிடம் ரூ.2 கோடி வாங்கியதாகவும், தனது கணவருக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறியதாகவும் ஜே.டி.எஸ். முன்னாள் எம்.எல்.ஏவின் மனைவி அளித்த புகார் அளித்திருந்தார்.

    மேலும், தேர்தல் சீட் கொடுக்காமல் பணத்தை திருப்பிக் கேட்டால் தன்னை அவமானப்படுத்தியாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த புகாரை தொடர்ந்து, பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    கோபால் ஜோஷி மீது மோசடி, எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே, தனக்கும், தனது சகோதரர் கோபால் ஜோஷிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது.
    • லாரன்ஸ் பிஷ்னோய் குழு சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.

    நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 12 ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    லாரன்ஸ் பிஷ்னோய் குழுவால் முன்னாள் அமைச்சர் படுகொலை செய்யப்பட்டதே சல்மான் கானுக்கு விடுக்கப்பட்ட மற்றொரு எச்சரிக்கை தான் என்று கூறப்பட்டது. கடந்த 1998 ஆம் ஆண்டு சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வகை கருப்பு மான் ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பிஷ்னோய் சமூக மக்களால் வணங்கப்படுகிறது. கருப்பு மானை வேட்டையாடிய விவகாரத்தில் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து லாரன்ஸ் பிஷ்னோய் குழு அவருக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.

    இந்த வரிசையில் தான் நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நடிகர் சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது.

    அந்த செய்தியில், "இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால், அவர் ரூ. 5 கோடி கொடுக்க வேண்டும். பணம் கொடுக்கவில்லை என்றால், சல்மான் கானின் நிலை இந்த விவகாரத்தில் பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும்.

    சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக மும்பை காவல் துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தான் இந்த ரூ.25 லட்ச கான்ட்ராக்ட்டை எடுத்துள்ளது.
    • சுகா பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக ஏகே 47 ஏகே 92 ரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளார்

    பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த சுகா என்ற நபரை நவி மும்பை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பான்வேல்லில் உள்ள நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் வைத்து அவரை கொலை செய்ய 25 லட்சம் பணம் கொடுப்பதாக ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது என்று நவிமும்பை போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குற்றப்பத்திரிகையில் 5 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது. சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தான் இந்த ரூ.25 லட்ச கான்ட்ராக்ட்டை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுகா பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக ஏகே 47 ஏகே 92 ரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளார் என்றும் சல்மானை கொலை செய்ய குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 5 பேரை நியமித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    சல்மானை கொலை செய்த பின்பு கொலைகாரர்கள் கன்னியாகுமரியில் ஒன்றுகூடி இலங்கைக்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் நேஹ்ரா கும்பல்கள், சல்மான் கானை வேவு பார்க்கும் நோக்கத்துடன் அவரின் பந்த்ரா இல்லம், பான்வேல் பண்ணை வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் அவரின் நடமாட்டத்தை கண்காணிக்க 60 - 70 பேரை களமிறக்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கானை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பது குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஏப்ரல் 24ம் தேதி பான்வேல் காவல்நிலையத்தில் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெடிகுண்டு மிரட்டலால் 12 விமானங்களும் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    • வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் புரளி என்று பின்னர் தெரிய வந்தன.

    கடந்த 3 நாட்களில் இந்தியாவில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டலால் 12 விமானங்களும் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் புரளி என்று பின்னர் தெரிய வந்தன.

    வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சத்தீஸ்கரை சேர்ந்த 2 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதில் ஒருவர் பெயர் நிர்பன் ஃபஸ்லுதீன் (33) என்றும் இன்னொரு நபர் 17 வயதான சிறுவன் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சிறுவன் கைது செய்யப்பட்ட ஃபஸ்லுதீனின் எக்ஸ் கணக்கை ஹேக் செய்து சமூக வலைத்தளங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் மும்பை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன் சிறார் சிறைக்கு அடைக்கப்பட்டான். வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக ஃபஸ்லுதீனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது.
    • மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    மகாராஷ்டிராவில் மகாயுதி, மஹா விகாஸ் அகாதி என இரண்டு பெயர்களில் மெகா கூட்டணி உள்ளன. மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன. மகாயுதி கூட்டணிதான் ஆட்சி அமைத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். அஜித் பவார் மற்றும் பா.ஜ.க.வின் பட்நாவிஸ் ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர்.

    மகா விகாஸ் அகாதி என்ற எதிர்க்கட்சி கூட்டணியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன.

    தற்போது முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தால், தேர்தலுக்குப்பின் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இரண்டு கூட்டணியும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்துதான் தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பட்நாவிஸ், அஜித் பவார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மகாயுதி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பட்நாவிஸ் "முதல் மந்திரி இங்கே அமர்ந்து இருக்கிறார். உங்களுடைய முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று எதிர்க்கட்சிகளிடம் கேளுங்கள். முதலில் உங்களுடைய முதல்வர் வேட்பாளரை தெரிவிக்கவும். உங்களுடைய முதல்வர் வேட்பாளரை தெரிவியுங்கள் என சரத் பவாரிடம் வலியுறுத்துகிறேன்" என்றார்.

    ஏக்நாத் ஷிண்டே "உயர்ந்த பதவியை பெறுவதற்கு யாரும் ஆசைப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் அரசாங்கம் செய்த பணிகள் எங்கள் முகம்" என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
    • ஏ.சி. எந்திரத்தின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    மும்பை:

    மும்பை அந்தேரி மேற்கில் லோசந்த்வாலா வளாகம் உள்ளது. இங்குள்ள ரியல் பேலஸ் கட்டிடம் 14 மாடிகளை கொண்டது.

    அடுக்குமாடி குடியிருப்பான இந்த கட்டிடத்தின் 10-வது மாடியில் இன்று காலை 8.05 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள்.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அவர்கள் தீயில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும் ஆம்புலன்சுகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தன. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

    மூத்த குடிமக்கள் தம்பதியான சந்திரபிரகாஷ் சோனி (74), காந்தா சோனி (74) மற்றும் அவர்களது வீட்டு உதவியாளர் பெலுபேட்டா (42) ஆகிய 3 பேரும் தீயில் கருகி பலியானார்கள். 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.

    ஏ.சி. எந்திரத்தின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. போலீசார் இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×