என் மலர்

    மகாராஷ்டிரா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் பங்கு இன்றைய வர்த்தகத்தில் 5.27 சதவிதம் உயர்ந்தது.
    • சன் பார்மா, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், லார்சன் அண்டு டூர்போ பங்குகளும் உயர்வு.

    பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்று மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி ஆகியவை ஏற்றத்துடன் முடிவடைந்தது.

    கடந்த இரண்டு வாரங்களில் ஏழு நாட்கள் சரிவை சந்தித்த பங்குச் சந்தை இன்று ஏற்றத்தை கண்டது.

    கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 79,212.53 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 79,343.63 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக 79,341.35 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 80,321.88 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 1,005.84 புள்ளிகள் உயர்ந்து 80,218.37 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 289.15 புள்ளிகள் உயர்ந்து 24,328.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் பங்கு இன்றைய வர்த்தகத்தில் 5.27 சதவிதம் உயர்ந்தது. மார்ச் மாத காலாண்டில் நிகர லாபம் 2.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிறுவனத்தின் அறிவிப்பு இந்த உயர்வுக்கு காரணமாகும்.

    555 கோடி ரூபாய்க்கு எஸ்.எம்.எம். இசுசு நிறுவனத்தை கையகப்படுத்தியதாக அறிவித்ததால் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவன பங்கு 2.29 சதவீதம் அதிகரித்தது.

    சன் பார்மா, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், லார்சன் அண்டு டூர்போ, ஐசிசிஐ வங்கி நிறுவன பங்குகளும் உயர்வை சந்தித்தன.

    ஹெச்.சி.எல். டெக், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்லே, இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவசாயிகள் தற்கொலை விகிதத்திற்குப் பெயர் பெற்றதாக மகாராஷ்டிராவின் விதர்பா பகுதி உள்ளது.
    • பெண்கள் உயர்கல்வி கற்பதை சமூகம் எதிர்த்தது.

    அதிக விவசாயிகள் தற்கொலை விகிதத்திற்குப் பெயர் பெற்ற மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள வறண்ட மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட யவத்மால் மாவட்டம், இப்போது கொண்டாட்டங்களில் ஈடுபட ஒரு காரணம் கிடைத்துள்ளது.

    அங்குள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரின் மகள், 2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 142வது இடத்தைப் பிடித்து அசாதாரண சாதனை படைத்துள்ளார்.

    அந்த புத்திசாலிப் பெண்ணின் பெயர் அதீப் அனாம். இதன் மூலம், அதீப் தனது மாநிலத்திலிருந்து மதிப்புமிக்க இந்திய நிர்வாகப் பணியில் சேர்ந்த முதல் முஸ்லிம் பெண்மணி ஆனார்.

    "பெண்கள் உயர்கல்வி கற்பதை சமூகம் எதிர்த்தது. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் என் தந்தை என்னிடம் கூறினார்" என்று அதீப் அனாம் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டின் மேற்கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • பிரியங்கா உயர் ரத்த அழுத்ததால் பாதிக்கப்பட்டார்.

    மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் பெண் ஒருவர் தனது 6 வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர்.

    நவி மும்பை, கன்சோலி பகுதியில் வசித்து வரும் பிரியங்கா காம்ப்ளே (26) கடந்த ஏப்ரல் 23 இரவு, தனது 6 வயது மகள் வைஷ்ணவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, வீட்டின் மேற்கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    பிரியங்கா உயர் ரத்த அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மன அழுத்தம் மற்றும் விரக்தியில் இருந்ததாகவும் அவரது கணவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    முதலில் விபத்து மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால், தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் மரணம் கழுத்தை நெரித்ததால் ஏற்பட்டதாகக் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 12 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் தெளிவான தகவல் கிடைக்கவில்லை

    மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து 12 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் தெளிவான தகவல் கிடைக்கவில்லை என மும்பை தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்தால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாவர்க்கர் பற்றி அவதூறு பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது.
    • இந்த வழக்கு புனே நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    மும்பை:

    ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கடந்த 2023ல் மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரை விமர்சித்தார். அவரது இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி அவர்மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி தெரிவித்த கருத்து வரலாற்று உண்மைகள் அடிப்படையிலானது. அதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான ராகுலின் வாதங்களை அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி முன்வைக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்செக்ஸ் 315.06 புள்ளிகள் சரிவடைந்து 79,801.43 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
    • நிஃப்டி 82.25 புள்ளிகள் சரிந்து 24,246.70 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி கடந்த 7 நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று சரிவை சந்தித்துள்ளது.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் செக்சென்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 520.90 புள்ளிகள் உயர்ந்து, கடந்த 4 மாதங்களுக்குப்பின் மீண்டும் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்த 80116.49 புள்ளிகளாக இருந்தது.

    இன்று காலை வர்த்தகம் 80,058.43 புள்ளிகளுடன் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 80,173.92 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 79,724.55 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 315.06 புள்ளிகள் சரிவடைந்து 79,801.43 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 82.25 புள்ளிகள் சரிந்து 24,246.70 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஹெச்.சி.எ். டென்னாலாஜிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, கோடக் மகந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் பைனான்ஸ் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    இந்தூஸ்இந்த் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, டைட்டன், ஆசியன் பெயின்ட்ஸ் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.

    இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவன பங்கு 4 சதவீதம் வரை சரிவை சந்தித்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடியிருப்பாளரை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட்டது.
    • ஒரு வாரம் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் ஒருவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஒரு வார சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்த லீலா வர்மா என்பவர், தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், தெருநாய்களுக்கு உணவளித்து வந்தார். இதற்கு குடியிருப்பு நலச்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்களுக்கும், லீலா வர்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குடியிருப்பு நலச்சங்கத்தினர் தன்னை துன்புறுத்தி வருவதாகக் மும்பை உயர் நீதிமன்றத்த்தில் லீலா மனுதாக்கல் செய்தார்.

    கடந்த ஜனவரியில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தெருநாய்களுக்கு உணவளிப்பது தொடர்பாக, குடியிருப்பு நலச்சங்கத்தினருக்கு ஏதாவது பிரச்னை இருந்தால், அவர்கள் மாநகராட்சியை தான் அணுக வேண்டும். அதை விடுத்து, குடியிருப்பாளரை துன்புறுத்தக் கூடாது' என உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை விமர்சித்து, குடியிருப்பு நலச்சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வினீதா ஸ்ரீநந்தன், மற்ற உறுப்பினர்களுக்கு இ - மெயில் அனுப்பினார். அதில், நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள், 'நாய் மாபியா' போல் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

    இதையடுத்து, நீதித்துறையை விமர்சித்ததற்காக வினீதா ஸ்ரீநந்தன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் கிரிஷ் குல்கர்னி, அத்வைத் சேத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்றத்தை, 'நாய் மாபியா' என்று அழைப்பது போன்ற கருத்தை படித்தவர்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

    இந்த விவகாரத்தில் வினீதாவின் மன்னிப்பை ஏற்க முடியாது. அவருக்கு ஒரு வாரம் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது. மேலும் அவர் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, இந்த உத்தரவு எட்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிடே பெண்கள் கிராண்ட்பிரி செஸ் போட்டி மகாராஷ்டிராவின் புனேயில் நடந்தது.
    • இந்தியாவின் கோனேரு ஹம்பி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

    மும்பை:

    பிடே பெண்கள் கிராண்ட்பிரி செஸ் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்து வந்தது. இதன் 9-வது மற்றும் கடைசி சுற்று போட்டி நேற்று நடந்தது.

    வெள்ளை நிற காய்களுடன் களம் இறங்கிய இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி, 84-வது நகர்த்தலில் நுர்குல் சலிமோவாவை (பல்கேரியா) தோற்கடித்தார். மற்ற இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா, திவ்யா தேஷ்முக் தங்களது ஆட்டங்களில் டிரா கண்டனர்.

    ஒரு தோல்வியும் சந்திக்காத ஆந்திராவைச் சேர்ந்த 38 வயதான கோனேரு ஹம்பி 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைச் சொந்தமாக்கினார்.

    சீனாவின் ஜூ ஜினெரும் 7 புள்ளிகளுடன் அவருடன் சமநிலையில் இருந்தார். ஆனால் போட்டி விதிப்படி கருப்பு நிற காயுடன் (5 முறை) விளையாடுகையில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் ஹம்பி மகுடம் சூடினார். ஜினெர் 2-வது இடம் பெற்றார்.

    இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 5½ புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தார். தமிழகத்தின் வைஷாலி 4 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாட்டின் வரலாற்றில் அமித் ஷா ஒரு தோல்வியுற்ற உள்துறை அமைச்சர்.
    • ஒருநாள் கூட அந்தப் பதவியை வகிக்க அவருக்கு உரிமை இல்லை.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதல் முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் இரண்டு வெளிநாட்டினரும் அடங்குவர்.

    இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து மகாராஷ்டிராவின் சிவசேனா (UBT) எம்பி சஞ்சய் ராவத் காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் அமித் ஷா ஒரு தோல்வியடைந்த உள்துறை அமைச்சர், அவர் பதவி விலக வேண்டும் என்று கோரினார்.

    அவர் கூறியதாவது, பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நாடு முழுவதிலுமிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். அவர்களில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆறு பேர் அடங்குவர்.

    பயங்கரவாதிகள் சுடுவதற்கு முன்பு தங்கள் மதத்தைக் கேட்டதாகப் பாதிக்கப்பட்ட சிலரின் குடும்ப உறுப்பினர்கள் கூறினர். பயங்கரவாதிகள் மக்களைக் கொல்வதற்கு முன்பு மதத்தைக் கேட்டால் அதற்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே காரணம்.

    வெறுப்பு அரசியல் ஒருநாள் பெரிய பூமரங் போன்று வெடிக்கும். வேறு யாரும் அதற்குப் பொறுப்பல்ல. மேலும் இது மேற்கு வங்காளத்திலிருந்து ஜம்மு-காஷ்மீருக்குப் பரவிவரும் வெறுப்பின் விளைவு. ஆளும் கூட்டணியினர் அரசை அமைப்பதிலும், கவிழ்ப்பதிலும் எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைப்பதிலுமே 24 மணி நேரமும் மும்முரமாக ஆலோசித்து வருகின்றனர்.

    அதன்பின்பு மக்களை எவ்வாறு பாதுகாப்பார்கள்? நாட்டின் வரலாற்றில் அமித் ஷா ஒரு தோல்வியுற்ற உள்துறை அமைச்சர். முழு நாடும் அவரது ராஜிநாமாவை எதிர்பார்க்கிறது. ஒருநாள் கூட அந்தப் பதவியை வகிக்க அவருக்கு உரிமை இல்லை.

    பஹல்காமில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். ஆனால் அங்கு ஒரு பாதுகாப்புக் காவலர் கூட இல்லை.

    இருப்பினும், அமித் ஷா ஸ்ரீநகரில் தரையிறங்கியபோது, அவரது பாதுகாப்புக்காக 75 வாகனங்கள் கொண்ட ஒரு கான்வாய் இருந்தது. 500க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் இருந்தனர். அவருடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவும் இருந்தது. ஒருவருக்கு இவ்வளவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

    ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஒரு பாதுகாப்புக் காவலர் கூட இல்லை. இதெல்லாம் ஏன் நடந்தது? ஏனென்றால், இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள இரண்டு லட்சம் பணியிடங்களை மோடி அரசு நிரப்பவில்லை. பாதுகாப்புத் துறையின் பட்ஜெட்டை அவர்கள் குறைத்துள்ளனர். 

    காஷ்மீரின் மீதான தனது கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, மோடி அரசு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை நீக்கி, ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது. எனவே, நேற்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு முழுப் பொறுப்பாகிறது.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலுமாக முடிவுக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக நடக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. மோடி-அமித் ஷா நாடாளுமன்றத்தில் நம் அனைவரிடமும் (பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக) பொய் சொல்கிறார்கள்" என்று தெரிவித்தார்.   

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மராத்தி, ஆங்கில மீடியம் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயம்.
    • இந்த நடவடிக்கை இந்தி திணிப்பாகும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் மராத்தி, ஆங்கிலம் மீடியம் பள்ளிகளில் 3-வதாக இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது என அம்மாநில அரசு தெரிவித்தது.

    தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இனிமேல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி 3-வது கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் 1-ம் வகுப்பில் 2025-2026-ல் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    2, 3, 4 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு தேசிய கல்விக் கொள்கை 2026-27-ல் அமல்படுத்தப்படும். 5, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு 2027-28 முதல் அமல்படுத்தப்படும். 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 2028-29ஆம் ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, இந்த நடவடிக்கை இந்தி திணிப்பாகும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்துள்ளது என அம்மாநில பள்ளிக் கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மும்மொழிக் கொள்கை "அறிவியல் ரீதியானது அல்ல" என்றும், இளம் மாணவர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மொழிக் குழு எச்சரித்துள்ளது.
    • தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கை இருப்பதால், இந்தியைத் தேர்ந்தெடுத்தோம் என்று முதல்வர் கூறினார்.

    மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவதாக பாஜக கூட்டணி அரசு அறிவித்தது. இதன்படி முதற்கட்டமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஏற்கனவே உள்ள மராத்தி, ஆங்கிலத்துடன், இந்தி மொழியை மூன்றாவது மொழியாகக் கட்டாயமாக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதை இந்தி திணிப்பு என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில் இந்தியை மூன்றாவது மொழியாக அறிமுகப்படுத்தப்படுவதை மகாராஷ்டிரா அரசின் மொழி ஆலோசனைக் குழு வெளிப்படையாக எதிர்த்துள்ளது.

    மேலும் தனது கடிதத்தில், இந்த நடவடிக்கை கல்வி ரீதியாக நியாயமானது அல்ல. மாணவர்களின் உளவியலுக்கு ஏற்றது அல்ல என்று தெரிவித்துள்ளது.

    மும்மொழிக் கொள்கை "அறிவியல் ரீதியானது அல்ல" என்றும், இளம் மாணவர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மொழிக் குழு எச்சரித்துள்ளது. அதற்குப் பதிலாக, மராத்தி உட்பட இரண்டு மொழிகள் மட்டுமே பன்னிரண்டாம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.

    SCERT (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) இத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு குழுவுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும். எங்கள் உறுப்பினர்களில் பேராசிரியர்கள் மற்றும் மொழியியல் மற்றும் மொழி அறிவியலில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்கள் இருவரும் உள்ளனர்" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், குழுவின் கடிதத்தைப் படிக்கவில்லை என்றும் இந்தி, மராத்திக்கு மாற்று அல்ல என்றும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "மராத்தி கட்டாயம். ஆனால் தேசிய கல்விக் கொள்கையின் கீழ், மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்வது கட்டாயமாகும், அவற்றில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்.

    எனவே அமைச்சர் தலைமையிலான மொழிக் குழு தங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்தபோது, இந்தி கற்பிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கை எங்களிடம் இருப்பதால், இந்தியைத் தேர்ந்தெடுத்தனர்" என்று தெரிவித்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது.
    • 6-வது தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    மும்பை:

    மும்பையில் நேற்று நடந்த 38வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 6வது தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், தோல்விக்கு பிறகு சென்னை கேப்டன் தோனி கூறியதாவது:

    அணியில் எதுவும் சரியாக செல்லாத நிலையில் அதற்காக உணர்ச்சி வசப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

    ஒருவேளை நாங்கள் தகுதியாக முடியாத சூழல் இருந்தால் அடுத்த சீசனுக்கு சிறந்த லெவனை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    கடந்த 2020 ஐ.பி.எல். சீசனும் எங்களுக்கு மோசமான சீசனாக இருந்தது. அதிலிருந்து எப்படி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.

    வீரர்களை மாற்றுவதில் அதிகமாக விருப்பம் காட்ட வேண்டியதில்லை. அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்தாலே போதுமானது.

    சிறப்பாக செயல்பட்ட மும்பை அணிக்கு வாழ்த்துகள் என தெரிவித்தார்.

    ×