என் மலர்

    புதுச்சேரி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசாரை கண்டதுடன் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றனர்.
    • ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சந்தேகப்படும்படி மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதுடன் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றனர்.

    ஆனால் போலீசார் அந்த கும்பலை விரட்டி மடக்கி பிடித்தனர். இதில் 11 பேர் சிக்கினர். 2 பேர் தப்பியோடி விட்டனர்.

    பிடிபட்டவர்களிடம் சோதனை செய்தபோது அவர்களிடம் ஒரு நாட்டு வெடிகுண்டு, 3 கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தனர். அந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் முத்தியால்பேட்டையை சேர்ந்த எலி கார்த்தி என்ற கார்த்திகேயன் (வயது 36), வினோபா நகரை சேர்ந்த ஜூட் அந்துவன் (36), முத்தியால்பேட்டையை சேர்ந்த எழிலன் (29), லாஸ்பேட்டையை சேர்ந்த தமிழ்மணி (24), சரண் (21), தீனா (22), பார்த்தசாரதி (23), அருண்மணி (25), கவுதம் (22), ஜீவா காலனியை சேர்ந்த மதன்ராஜ் (28), மற்றும் வானூரை சேர்ந்த அருண்குமார் (26) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து பணம், நகைகளை பறிக்க திட்டமிட்டு பதுங்கி இருந்தது தெரியவந்தது.

    மேலும் தப்பிச்சென்றவர்கள் கொட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரேம், கிருபா என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    தொடர்ந்து வெடிகுண்டு தயாரித்தல், வழிப்பறி, ஆயுதச் சட்டம் உள்பட 5 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கைதான எலி கார்த்தி என்ற கார்த்திகேயன் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது கொலை, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • மன்சுக் மாண்டவியா தலைமையில் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் தனியார் ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இன்று மாலை மத்திய மந்திரியும் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா தலைமையில் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்யின் த.வெ.க. கட்சியை சேர்க்க முயற்சி நடக்கிறதா? என்ற கேள்விக்கு அதுபற்றி தனக்கு தெரியாது என அவர் பதிலளித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கவர்னர் மாளிகை சில மாதம் முன்பு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
    • அதிக போதையில் கவர்னர் மாளிகையின் கேட் ஏறி குதித்து நள்ளிரவில் உள்ளே புகுந்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாரதி பூங்கா அருகே செயின்ட் மார்ட்டின் வீதியில் கவர்னர் மாளிகை உள்ளது.

    பிரெஞ்சு ஆட்சியில் கட்டப்பட்ட 250 ஆண்டு பழமையான இந்த மாளிகை சேதமடைந்தது. இதனால் கவர்னர் மாளிகை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளது. இதனால் குருசுகுப்பம் பழைய சாராய ஆலை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கலாச்சார மைய கட்டிடத்துக்கு கவர்னர் மாளிகை சில மாதம் முன்பு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

    கவர்னர் கைலாஷ்நாதன் குடும்பத்துடன் இங்கு தங்கியுள்ளார். ஆனால் அலுவலக பணிகளை பழைய கட்டிடத்தில் மேற்கொள்கிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கவர்னர் இல்லத்தில் புகுந்து, விருந்தினர் அறையில் ஒரு வாலிபர் படுத்து தூங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது கவர்னர் மாளிகை பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

    இந்த வாலிபரை கவர்னர் மாளிகை போலீசார் பிடித்தனர். போலீஸ் டி.ஜி.பி. உட்பட உயர் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை முத்தியால்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹரிதிக் ஜா என்பதும் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருவதும் தெரியவந்தது. இவர் தன்னுடன் படிக்கும் மாணவருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார்.

    கடற்கரையை ஒட்டியுள்ள ஓட்டலில் மது குடித்துள்ளார். அதிக போதையில் கவர்னர் மாளிகையின் கேட் ஏறி குதித்து நள்ளிரவில் உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அங்கிருந்த விருந்தினர் அறையில் படுத்து தூங்கியது தெரியவந்தது.

    மாணவர் ஹரிதிக் ஜா மீது அத்து மீறி நுழைதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் கூறிய தகவல் உண்மையா? என்பது குறித்தும் பெங்களூருவில் உள்ள கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். அவருடன் இருந்த மற்றொரு மாணவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல நலத்திட்டங்களை எனது அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
    • தமிழ்நாட்டில் கடந்தமாதம் வரவு வைக்கப்பட்டது.

    புதுச்சேரி அரசு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 63,000 குடும்பத் தலைவிகளுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கியுள்ளது. புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2,500 உதவித்தொகை, தற்போது அடுத்த இரண்டு மாதங்களுக்கு  சேர்த்து மொத்தமாக ரூ.5,000-ஆக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்பதால், முன்கூட்டியே இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்ட அறிக்கையில், 

    "குடும்ப முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெண்கள் ஆற்றும் பங்கு அளவிட முடியாதது. கல்வி சுகாதாரம், தொழில், நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் தங்கள் திறமையால் சிறந்து விளங்கி சமுதாயத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

    பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், அவர்கள் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக வலுப்பெறவும் புதுச்சேரி அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குழந்தைப் பருவம் தொடங்கி முதுமை காலம் வரை பெண்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் புதுச்சேரி அரசு செய்து வருகிறது.

    பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் முதலமைச்சரின் அரவணைப்புத் திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.50,000 வைப்புத்தொகை வழங்கும் திட்டம், அரசிடமிருந்து மாதாந்திர நிதியுதவி எதுவும் பெறாத வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம்: பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கியால் முத்திரைத்தாள் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை வழங்கும் திட்டம்: முதியோர், விதவைப் பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உயர்த்தப்பட்ட மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல நலத்திட்டங்களை எனது அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    குடும்பத்தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், அடுத்த இரண்டு மாதங்களுக்கான ரூ.5.000 உதவித்தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. பெண்கள் நன்னம்பிக்கையுடன் முன்னேறி சமூக முன்னேற்றத்தில் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது அரசின் நோக்கமாகும்.

    இந்த மகளிர் தினத்தில், பெண்கள் அனைவரும் பூரண நலத்துடனும் நிறைந்த மகிழ்ச்சியுடனும் சமூகத்தில் சமத்துவமும் சமவாய்ப்பும் பெற்று அனைத்துத் துறைகளிலும் மேன்மேலும் முன்னேறி சாதனை படைக்க வேண்டும் என உளமார வாழ்த்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    தமிழ்நாட்டில் கடந்தமாதமே மகளிர் உரிமைத்தொகையோடு, கோடை சிறப்புத் தொகை ரூ.2000 என சேர்த்து மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் படகு குழாமில் உற்சாகமாக படகு சவாரி செய்ய ஆர்வம் கொள்வார்கள்.

    சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் நோணாங்குப்பம், ஊசுட்டேரி படகு குழாமில் உற்சாகமாக படகு சவாரி செய்ய ஆர்வம் கொள்வார்கள்.

    இந்தநிலையில் மகளிர் தினத்தையொட்டி அங்கு இலவசமாக படகு சவாரி செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவின்படி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்று சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் இயங்கும் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு மற்றும் ஊசுட்டேரி படகு குழாம்களுக்கு வருகை தரும் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக படகு சவாரி செய்ய லாம்.

    அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, இச்சலுகையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் தி.மு.க.வும், புதுச்சேரியில் காங்கிரசும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்.
    • கூட்டணி என்பதன் அர்த்தம் தியாகம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கட்சி தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி காங்கிரசாருடன் ஆலோசனை நடத்தினார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரசில் மாநிலத்தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் முன்னாள் எம்.எல்.எ. அனந்தராமன், மூத்த துறை தலைவர் தேவதாஸ் ஆகியோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம்.

    தமிழகத்தில் தி.மு.க.வும், புதுச்சேரியில் காங்கிரசும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தைக்குழு தி.மு.க.வுடன் பேசி யாருக்கு எத்தனை தொகுதிகள் என முடிவு எடுப்பார்கள். தமிழக பார்முலாதான் புதுச்சேரியில் பின்பற்றப்படும்.

    கூட்டணி என்பதன் அர்த்தம் தியாகம். இது கூட்டணியிலுள்ள அனைத்துக்கட்சிக்கும் பொருந்தும். தியாகம் இல்லாவிட்டால் கூட்டணி இல்லை. கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் கூடுதல் தொகுதிகள் கேட்பார்கள். அதனை பேசி தீர்வு காண்போம். கூட்டணி பேச்சுவார்த்தையில் தமிழக வழிமுறையையே புதுச்சேரியில் கையாள்வோம்.

    புதுச்சேரி, தமிழகமும் வெவ்வேறு மாநிலங்கள், பேச்சுவார்த்தை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் புதுச்சேரியில் நடைபெறும். தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார்.

    இவ்வாறு கிரீஷ் சோடங்கர் கூறினார்.

    தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, 2 ராஜ்யசபா சீட், 41 தொகுதிகள் என கேட்ட காங்கிரசுக்கு 28 தொகுதி, ஒரு ராஜ்யசபா மட்டுமே தி.மு.க. அளித்துள்ளது. ஆட்சியில் பங்கு இல்லை என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை சுட்டி காட்டியயே காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரீஷ் சோடங்கர் கூறியுள்ளார். இதன் மூலம் புதுச்சேரியில் ஆட்சியில் தி.மு.க.வுக்கு பங்கு இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்.

    புதுச்சேரியில் 6 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்கட்சி அந்தஸ்தில் உள்ள தி.மு.க. கடந்த தேர்தலில் 13 தொகுதியில் போட்டியிட்டது. கால் நூற்றாண்டுகளாக புதுச்சேரியில் தி.மு.க. தலைமையிலோ, தி.மு.க. பங்கேற்ற ஆட்சியோ இல்லை.

    இதனால் இந்த முறை தனது தலைமையில் கூட்டணி ஆட்சி என புதுச்சேரி தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு முட்டுகட்டை போடும் வகையிலேயே கிரீஷ் சோடங்கர் கூறியுள்ளார். எனவே, கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுமா என்பது கேள்வி குறியாகி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்ற தி.மு.க. புதுவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளது.
    • தமிழகத்தை விட தொகுதி பங்கீட்டில் புதுவையில் இடியாப்ப சிக்கல் நிலவுகிறது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி முடிவாகியுள்ளது.

    தமிழகத்தில் காங்கிரஸ் கேட்ட கூடுதலான தொகுதிகள், ஆட்சியில் பங்கு, 2 ராஜ்யசபா சீட் ஆகியவை கிடைக்கவில்லை. 28 தொகுதிகளை காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கியுள்ளது.

    அடுத்தகட்டமாக புதுவைக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. புதுவையில் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்ற மோதல் காங்கிரஸ், தி.மு.க. இடையில் உள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்ற தி.மு.க. புதுவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளது. அதோடு, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 14 தொகுதிகளில் பணியாற்றி கூடுதலான வாக்குகளையும் காங்கிரசுக்கு பெற்று தந்தது.

    இதனால் கூட்டணிக்கு தலைமை தாங்குவதோடு, அதிக தொகுதிகளையும் பெற தி.மு.க. ஆர்வம் காட்டி வருகிறது. அதேநேரத்தில் இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும் என்பதில் புதுவை காங்கிரசார் உறுதியாக உள்ளனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியும், 29 தொகுதிகளில் காங்கிரசுக்கு கிடைத்த கூடுதல் வாக்குகளும் புதுவை காங்கிரசாருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் அவர்கள் பழைய பார்முலா படி காங்கிரசுக்கு 20: தி.மு.க.வுக்கு 10 என்ற நிலையை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் காங்கிரஸ் தலைமையை விட, தி.மு.க. தலைமையை எதிர்பார்க்கின்றனர்.

    இதனால் தமிழகத்தை விட தொகுதி பங்கீட்டில் புதுவையில் இடியாப்ப சிக்கல் நிலவுகிறது. இந்த நிலையில் புதுவை காங்கிரசாருடன் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், கூடுதல் பொறுப்பாளர் அஞ்சலி நிமல்கர் ஆகியோர் இன்று காலை ஆலோசனை நடத்தினர்.

    புதுவை காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் பெத்தபெருமாள், கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், பாலன், கார்த்திகேயன், சீனியர் துணை தலைவர் தேவதாஸ், பொதுசெயலாளர் ரத்னா ரமேஷ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன், மகிளா காங்கிரஸ் தலைவி நிஷா, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் ஜெயபால், மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்சவர்தன் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது நிர்வாகிகள் தரப்பில், கடந்த தேர்தல் நெருக்கத்தில் காங்கிரசிலிருந்து பலர் வெளியேறினர். இதனால் கட்சியில் நெருக்கடி ஏற்பட்டது. காங்கிரஸ் தொகுதிகளைக்கூட திமுகவுக்கு விட்டுக்கொடுத்தோம். ஆனால் தற்போது ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். இதனால் வெற்றி சாதகமாக உள்ளது.

    இதனால் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் பெற்றதை போல 21 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை விட்டுத் தரக்கூடாது என வலியுறுத்தினர்.

    இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்ட மேலிட பொறுப்பாளர் கட்சி தலைமைக்கு தகவல் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியுள்ளார்.

    ஏற்கனவே கிரீஷ் சோடங்கர் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக தி.மு.க. தலைமை கூறியுள்ளது. இதனால் புதுவை தி.மு.க. நேரடியாக மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தாது என கூறப்படுகிறது.

    இதனால் புதுவை தொகுதி பங்கீடையும் தி.மு.க.வின் தலைமையே பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உங்கள் மகன் பெண் பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டையை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், தன்னை போலீஸ் அதிகாரி எனக்கூறியுள்ளார்.

    மேலும் உங்கள் மகன் பெண் பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடுமே என எண்ணி தங்கள் மகனை விடுவிக்க வேண்டுமாறு கூறியுள்ளனர்.

    அப்போது வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதை நம்பிய பெற்றோர், அவர் கூறிய எண்ணுக்கு ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சத்தை அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இதுபற்றி விசாரித்தபோது, பலாத்கார வழக்கில் மகன் கைது செய்யப்படவில்லை என்பதும் மர்மநபர் போலீஸ்போல் பேசி மோசடி செய்தது தெரியவந்தது.

    இதேபோல் முத்தியால் பேட்டையை சேர்ந்த பெண் ஒருவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி அவரின் மகனும் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளதாகவும் அவரை விடுவிக்க ரூ.5 லட்சத்தை கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டி பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.

    இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வில்லியனூர் சுல்தான்பேட்டை முதல்மாட வீதி, கோட்டைமேடு, கண்ணகி ஹை மாஸ் வழியாக அணிவகுப்பு நடத்தினர்.

    புதுச்சேரி:

    தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், மத்திய தேர்தல் துறை அதிகாரிகள், மற்றும் போலீஸ் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம், உத்தரவின்பேரில் ஐ.ஜி. மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் தேர்தல் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பொது அமைதியை பேணுதல், குற்ற செயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பதட்டமான ஓட்டுச்சாவடியை அடையாளம் காணுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக மத்திய காவல் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அதன் முன்னோட்டமாக வில்லியனூர் பகுதியில் சட்டம்-ஒழுங்கு போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணியன் மேற்பார்வையில், வட்ட ஆய்வாளர் கலைச்செல்வன் மற்றும் உதவி ஆய்வாளர் திருமுருகன் தலைமையில் இந்திய திபெத்திய எல்லை துணை ராணுவப்படையினர்

    சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வில்லியனூர் சுல்தான்பேட்டை முதல்மாட வீதி, கோட்டைமேடு, கண்ணகி ஹை மாஸ் வழியாக அணிவகுப்பு நடத்தினர்.

    இதுபோல் புதுச்சேரியில் பெரிய கடை போலீஸ் நிலையம் அருகே இருந்து ஆம்பூர் சாலை, எஸ்.வி.பட்டேல் சாலை, அண்ணா சாலை, குமரகுரு பள்ளம், மறைமலை அடிகள் சாலை வழியாக புதிய பஸ் நிலையம் வரை துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு சென்றனர்.

    ரோந்து பணியின்போது துணை ராணுவப்படையினர் துப்பாக்கி வைத்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுவையில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு இந்திய திபெத்திய எல்லை காவல் படையினர் வந்துள்ளனர்.
    • சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    புதுவையில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு இந்திய திபெத்திய எல்லை காவல் படையினர் வந்துள்ளனர். அவர்கள் நேற்று இரவு வில்லியனூரில் நகரப் பகுதியில் கொடி அணிவிப்பு நடத்தினர்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலத்துங்கன், மத்திய தேர்தல் துறை அதிகாரிகள், மற்றும் காவல்துறை டிஐஜி சத்திய சுந்தரம், உத்தரவின் பேரில் ஐஜி மற்றும் சீனியர் எஸ். பி மேற்பார்வையில் தேர்தல் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பொது அமைதியை பேணுதல், குற்ற செயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பதட்டமான ஓட்டு சாவடியை அடையாளம் காணுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக மத்திய காவல் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அதன் முன்னோட்டமாக வில்லியனூர் பகுதியில் சட்டம் ஒழுங்கு காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் மேற்பார்வையில், வட்ட ஆய்வாளர் கலைச்செல்வன் மற்றும் உதவி ஆய்வாளர் திருமுருகன் தலைமையில் இந்திய திபெத்திய எல்லை காவல் படையினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வில்லியனூர் சுல்தான்பேட்டை முதல் மாட வீதி, கோட்டைமேடு, கண்ணகி ஹை மாஸ் வழியாக சென்று கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாதது வலியும் வருத்தமும் அளிக்கிறது
    • 13 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம்

    புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புதுச்சேரி லாஸ் பேட்டை விமான நிலையத்துக்கு வந்தார்.

    பிரதமர் மோடியை கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். அங்கிருந்து லாஸ்பேட்டை ஹெலி பேடு மைதானத்திற்கு வருகைதந்த பிரதமர் மோடி ரூ.1,571.73 கோடி மதிப்பிலான 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது தவிர பிரதமர் மோடி ரூ.1,142.23 கோடி மதிப்பில் 19 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாதது வலியும் வருத்தமும் அளிக்கிறது. பல ஆண்டுகளாக மக்கள் விரும்பும் கோரிக்கையை 13 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

    பிரதமர் மோடி முன்பே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி விழா மேடையிலேயே முதலமைச்சர் ரங்கசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 50 வயதை கடந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீனவர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.
    • ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி மாநிலத்தில் 50 வயதை கடந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீனவர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.

    இதனை தொடர்ந்து இதற்கு தடையாக இருந்த ஒரு சில விதிகள் புதுச்சேரி அரசால் திருத்தப்பட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 50 வயது நிறைவடைந்த 323 மீனவர்களுக்கு இந்த ஆண்டு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் மீன்வளத்துறை மூலம் ஓய்வூதியம் பெறும் மீனவர் இறந்துவிட்டால் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதே போல் 2025-26-ம் ஆண்டிற்கான மழைக்கால நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வீதம் விடுபட்ட 328 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.19 லட்சத்து 68 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த நிவாரணம் மீனவர்கள் வங்கி கணக்கில் இன்று செலுத்தப்படுகிறது.

    ×