என் மலர்

    தூத்துக்குடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.
    • விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    மேலும் கடற்கரையில் அமைந்துள்ளதால் சுற்றுலா தலமாகவும் விளங்கி வருவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அதிலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் ஏராளமானவர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இங்கு வழங்கப்படும் நோய் தீர்க்கும் இலை விபூதி பிரசித்தி பெற்றதாகும். இலை விபூதி பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இங்கு சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கிறது. தற்போது ஐப்பசி மாதம் கந்த சஷ்டி திருவிழா நடைபெற உள்ள நிலையில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் விடுமுறையை கொண்டாட ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வழக்கம் போல் இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பஸ்சை ஓட்டி வந்தவர் நிற்காமல் அவர்கள் மீது மோதி தப்பிச் சென்றுள்ளார்.
    • முத்தையாபுரம் போலீசார் அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    குரும்பூர்:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருபவர் வைப்பார் கல்லூரணியை சேர்ந்த சேதுராஜ். இவர் தினமும் அந்த நிறுவனத்தில் இருந்து பணியாளர்களை பஸ் மூலம் அழைத்து செல்வது வழக்கம்.

    நேற்று காலை வழக்கம் போல் சேதுராஜ் தூத்துக்குடி நிறுவனத்தில் இருந்து பஸ்சை எடுத்துக் கொண்டு புறபட்டுள்ளார். முத்தையாபுரம் பகுதியில் வந்த போது பஸ்சை சாலையோரம் நிறுத்தி விட்டு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அந்த பஸ்சை கடத்தி சென்றுள்ளார்.

    உடனே டிரைவர் சேதுராஜ் இதுகுறித்து நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக முத்தையாபுரம் போலீசார் அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின் ரோட்டில் அந்த பஸ் சென்றதாக கூறியதால் அதனை பிடிப்பதற்காக திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் சந்தனகுமார் அந்த வழியாக வந்த வாழவல்லான் பகுதியை சேர்ந்த பால்ஐசக் அன்புராஜ் என்பவரது வாகனத்தில் சென்றுள்ளனர்.

    குரும்பூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பாலம் அருகே வந்தபோது எதிரே வந்த பஸ்சை, காவலர் சந்தனகுமார் நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் அந்த பஸ்சை ஓட்டி வந்தவர் நிற்காமல் அவர்கள் மீது மோதி தப்பிச் சென்றுள்ளார்.

    இதில் காவலர் சந்தனகுமார், அவருடன் வந்த பால்ஐசக் அன்புராஜ் மற்றும் அந்த வழியாக வந்த கொழுவைநல்லூரை சேர்ந்த வின்சென்ட் ஆகிய 3 பேர் மீது மோதி சுமார் 30 மீட்டர் இழுத்துச் சென்றுள்ளது.

    இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த காவலர் சந்தனகுமாரும், வின்சென்டும் ஆத்தூர் சங்கர் மருத்துவமனையிலும், பால் ஐசக் அன்புராஜ் தூத்துக்குடி தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதில் பஸ்சை திருடி வந்த மர்மநபர் அதனை சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் நிறுத்தி விட்டு தப்பி ஓடி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் பஸ்சை திருடியது மதுரை சேர்ந்த அழகுமணி என்பவரின் மகன் தமிழ்அன்பன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    போலீசார் விரட்டி சென்று பிடித்தபோது தமிழ்அன்பனுக்கு கீழே விழுந்ததில் கை, கால்களில் காயம் ஏற்பட்டதில் அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளி நேரம் முடிந்ததும் பள்ளியின் நுழைவு வாயில் பூட்டு போடப்பட்டு மூடப்படும்.
    • ஒரு பூட்டு தான் பள்ளி நிர்வாகம் சார்பில் போடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மாவடிப் பண்ணையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    தினமும் பள்ளி நேரம் முடிந்ததும் பள்ளியின் நுழைவு வாயில் பூட்டு போடப்பட்டு மூடப்படும்.

    இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு சத்துணவு முட்டை வந்துள்ளது. எனவே பணியாளர் முட்டையை இறக்குவதற்காக வருகை தந்துள்ளார். அப்போது ஏற்கனவே பள்ளி சார்பில் போடப்பட்டிருந்த பூட்டுக்கு மேல் மற்றொரு பூட்டும் போடப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பணியாளர் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு அவர் ஒரு பூட்டு தான் பள்ளி நிர்வாகம் சார்பில் போடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையில் காலையில் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருகை தர ஆரம்பித்தனர். அவர்கள் பள்ளி நுழைவு வாயிலில் பூட்டுப் போடப்பட்டிருந்ததால் பள்ளிக்குள் போக முடியாமல் நீண்ட நேரம் வெளியிலேயே காத்திருந்தனர்.

    அதன்பின்னர் பள்ளி ஆசிரியர்கள் வந்து அந்த பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து பூட்டை உடைத்து மாணவ, மாணவிகள் உள்ளே சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த பள்ளியின் நுழைவு வாயிலை பூட்டு போட்டு பூட்டிச் சென்றது தெரியவந்தது.

    பள்ளி கதவுகளுக்கு பூட்டுபோட்டதால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மாணவ, மாணவிகள் வெளியே காத்திருந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணபட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரேத பரிசோதனைக்காக ஆபிரகாம் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் 60-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது60) பேண்ட் வாத்திய கலைஞரான இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    ஆபிரகாமுக்கும், அவரது வீட்டுக்கு எதிரே தனியாக வசித்து வரும் முகமது ஜின்னா (55) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு குடிபோதையில் இருந்த ஆபிரகாம் அவதூறாக பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

    இதனால் அவருக்கும் முகமது ஜின்னாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முகமதுஜின்னா வீட்டின் அருகே கிடந்த கல்லை எடுத்து ஆபிரகாம் தலையில் போட்டு கொடூரமாக தாக்கிவிட்டு தனது வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு இருந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த தகவலைத் தொடர்ந்து தூத்துக்குடி நகர போலீஸ் ஏ.எஸ்.பி. மதன், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதுடன் முகமது ஜின்னாவை கைது செய்தனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆபிரகாம் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மீன்பிடி துறைமுகத்திற்கு உள்ளே நுழைந்த லாரியை சுற்றி வளைத்து அவர்கள் சோதனையிட்டனர்.
    • உரிய ஆவணங்களின்றி 65 பேரல்களில் பயோ டீசல் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களை குறி வைத்து கள்ளசந்தையில் பயோ டீசல் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று இரவு மீன் பிடித்துறை முகத்திற்கு பயோ டீசல் விற்பனைக்கு வருவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது மீன்பிடி துறைமுகத்திற்கு உள்ளே நுழைந்த லாரியை சுற்றி வளைத்து அவர்கள் சோதனையிட்டனர். அதில் தென்காசி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடியில் விற்பனை செய்வதற்காக உரிய ஆவணங்களின்றி 65 பேரல்களில் பயோ டீசல் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. மேலும் இதன் மதிப்பு ரூ. 8 லட்சம் என்றும், சுமார் 15 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் என்பதும் தெரிய வந்தது.

    இதை்தொடர்ந்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார் லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த கந்தன் மற்றும் கே.வி.கே. நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    தொடர்ந்து லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட பயோ டீசல் மற்றும் கைதான 2 பேரையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்று பவுர்ணமி என்பதால் இன்றும் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது.
    • அனிதா, சுவேதா, முருகலட்சுமி, ஆகிய 3 பெண்களும் காப்பாற்றப்பட்டனர்.

    விளாத்திகுளம்:

    மதுரை ஜி.ஆர். நகரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பவுர்ணமியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்தனர்.

    குலதெய்வத்தை தரிசனம் செய்து விட்டு இன்று காலை 6 மணி அளவில் பெரியசாமிபுரம் கடற்கரைக்கு குளிப்ப தற்காக 20 பேர் சென்றுள்ளனர். இதில் பெரும்பாலும் பெண்களாக இருந்தனர்.

    நேற்று பவுர்ணமி என்பதால் இன்றும் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது. அந்த நேரத்தில் 20 பேரும் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

    அதிகமான காற்றுடன் கடல் சீற்றம் அதிகமாக இருந்த நிலையில் கடலில் குளித்த மதுரை ஜி.ஆர். நகரை சேர்ந்த இலக்கியா (வயது 21), கன்னியம்மாள் (50), முருக லட்சுமி (38), ஸ்வேதா (22), அனிதா (29) ஆகிய 5 பெண்களும் கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர்.

    அப்போது அவர்களுடன் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் இலக்கியா, கன்னியம்மாள் ஆகிய இருவரும் அலையில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அனிதா, சுவேதா, முருகலட்சுமி, ஆகிய 3 பெண்களும் காப்பாற்றப்பட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேம்பார் போலீசார் அவர்களுக்கு வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

    பவுர்ணமியை முன்னிட்டு குலதெய்வம் வழிபாடு செய்வதற்காக வந்த பெண்கள் குளிக்கும்போது கடல் சீற்றத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக வேம்பார் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று துரை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.50 கோடி என கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா மற்றும் பீடி இலைகள், விரலி மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது.

    இதைத்தடுக்க மாவட்டம் முழுவதும் கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி முறப்பநாடு பகுதியை சேர்ந்த துரை என்பவரது வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று துரை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் 3 கிலோ கிரிஸ்டல் மெத்தமைட்டல் என்ற ஐஸ் போதைப்பொருளும், சாரஸ் என்ற போதைப்பொருள் 300 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.50 கோடி என கூறப்படுகிறது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கருவாடு கூடத்தில் சோதனை நடத்தினர்.
    • விரலிமஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா மட்டுமின்றி பீடி இலை, பயோ டீசல், விரலி மஞ்சள் உள்ளிட்ட பொருட்களும் சட்டவிரோதமாக கடத்தப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் கடற்கரை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் தாளமுத்துநகர் கோமாஸ்புரம் சுனாமி காலனியில் ஒரு கருவாடு கூடத்தில் ஏராளமான விரலிமஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கருவாடு கூடத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தலா 40 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் விரலிமஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவற்றை தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.

    இதைத்தொடர்ந்து விரலிமஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த விரலிமஞ்சள் மூட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்றவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 68.36 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபக்கோவிலான கிருஷ்ணா புரம், வெங்கடாஜலபதி கோவிலில் 2.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தாக அன்னதானக் கூடம் கட்டும் பணி, திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டும் பணி மற்றும் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சரவணப் பொய்கையில் செயற்கை நீருற்றுகள், வண்ண விளக்குகள், நடை பாதையுடன் கூடிய அழகிய பூங்காவாக புதுப்பொலிவுடன் புனரமைக்கும் பணி, என மொத்தம் 5.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

    திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 29.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பக்தர்கள் தங்கும் விடுதி கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுமை பெறாத நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின்பு, பக்தர்களின் நலன் கருதி கூடுதல் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள 19.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 48.36 கோடி ரூபாய் செல வில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பக்தர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது, இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள், 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள், ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள், சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், பெருந்திட்ட வரைவின் கீழ் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முடி காணிக்கை மண்டபம், 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள சுகாதார வளாகங்கள், 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 7.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் என மொத்தம் 68.36 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கனிமொழி எம்.பி., தலை மைச்செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சுகுமார், தலைமைப் பொறியாளர் பெரியசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூரில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஆர்.அருள்முருகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெற்றது.
    • காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    குலசேகரன்பட்டினம்:

    இந்தியாவில் தசரா பெருந்திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்தான் பிரசித்தியாக கொண்டாடப்படுகிறது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து முத்தாரம்மன் கோவிலில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில், வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது.

    இந்நிலையில், பத்தாவது நாளில் முத்தாரம்மன் கோவில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று இரவு கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி, காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    இரவு 11 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன் எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தைக் காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

    முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் 3 முறை அம்மனை வலம்வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். அதன்பின் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார்.

    தொடா்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர் புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அம்மன் சம்ஹாரம் செய்தார். அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார்.

    அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர்.

    குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருவிழாவையொட்டி கோவிலில் கடந்த 9 நாட்களும் காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    உடன்குடி:

    இந்தியாவில் தசரா பெருந்திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்தான் பிரசித்தியாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பல்வேறு தசரா குழுவினர் கோவிலுக்கு வந்து காப்பு கட்டி சென்றனர்.

    வேண்டுதல்கள் நிறைவேற கடும் விரதம் இருந்து காளி, அம்மன் போன்ற சுவாமி வேடங்கள், குரங்கு, சிங்கம், பெண் போன்ற 100-க்கு மேற்பட்ட வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

    மேலும் ஊர் பெயரில் தசரா குழு அமைத்து அதில் நையாண்டி மேளம், தாரை தப்பட்டை, செண்டை மேளம், கரகம், காவடி, டிஸ்கோ போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் பல்வேறு ஊர்களுக்கு சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

    தசரா குழுவினரின் கலை நிகழ்ச்சி மிகவும் அசத்தலாக இருந்தது. 10-ம் திருநாளான விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று இரவு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலையில் இருந்தே பக்தர்கள் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து வசூல் செய்த காணிக்கையை செலுத்த தொடங்கினார்கள். இன்று பிற்பகல் வரை சுமார் 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்.

    இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர். இரவில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

    இதற்காக 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம், பக்தர்கள் வரும் தனியார் வாகனங்ளை நிறுத்த 30 தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள் தயார் செய்யப்பட்டிருந்தது.

    மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, தீயணைப்பு துறை என மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறையினர் குலசையில் முகாமிட்டுள்ளனர்.

     

     9-ம் திருநாளான நேற்று இரவு அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் பவனி வந்த காட்சி

     9-ம் திருநாளான நேற்று இரவு அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் பவனி வந்த காட்சி

    திருவிழாவையொட்டி கோவிலில் கடந்த 9 நாட்களும் காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. முத்தாரம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வோறு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். மேலும் தினமும் கோவில் கலையரங்கத்தில் மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    இன்றும் காலை 6 மணி, 7.30 மணி, 9 மணி, 10.30 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவர் கோவில் முன்பாக எழுந்தருளி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவிலில் அம்மனுக்கு சாந்தாபிஷேக ஆராதனையும் தொடர்ந்து தேரில் எழுந்தருளி கோவில் கலையரங்கம் வந்தடைவார். அங்கு காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.

    காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதி உலாவும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்கிறார். பின்னர் கொடி இறக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு காப்பு களையுதல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. நாளை மறுநாள் (14-ந் தேதி) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடக்கிறது.

    தசரா திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் தாண்டவன் காடு கண்ணன், செயல் அலுவலர் ராம சுப்பிரமணியன் அறங்காவலர்கள் ரவிந்திரன் குமரன், மகராஜன், கணேசன், வெங்கடேஷ்வரி மற்றும் மாவட்ட அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் செய்துள்ளனர்.

    திருவிழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் டி.எஸ்.பி.வசந்தராஜன் தலைமையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தசரா உடை அணிந்த போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவில்பட்டியில் வேட்டையன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இயக்குனரிடம் தெரிவித்து அந்த காட்சியை விரைவில் நீக்குவதாக அவர் தெரிவித்துள்ளனர்.

    கோவில்பட்டி:

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'வேட்டையன்' திரைப்படம் கடந்த 10-ந்தேதி வெளியானது. இந்த படத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி குறித்து சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    அதில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தங்கள் பள்ளியின் ஆசிரியர் ஒருவரை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்பு கிளம்பி உள்ளது.

    இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காந்திநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் வேட்டையன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இதுகுறித்து புகார் அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ இதுதொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேட்டையன் படத்தில் கோவில்பட்டி காந்திநகர் அரசு பள்ளி குறித்து தவறாக சித்திரிக்கப்பட்டு இருப்பதாக மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் என்னிடம் தெரிவித்தனர். அந்தப் பள்ளி நடுநிலைப்பள்ளியாக இருந்தது. நான் அமைச்சராக இருந்த போது அதனை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியிருந்தேன். மேலும் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளும் அந்த பள்ளிக்கு செய்து கொடுத்திருக்கிறேன்.

    இது சிறப்பான பள்ளி. பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வரும் பள்ளி. இந்த நிலையில் வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி அங்கு பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுமக்களின் மனதை வேதனைப்படுத்தும் வகையில் உள்ளது.

    இதுகுறித்து வேட்டையன் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், லைக்கா நிறுவனத்தின் நிர்வாகியுமான தமிழ்குமரனை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளேன். இதுகுறித்து இயக்குனரிடம் தெரிவித்து அந்த காட்சியை விரைவில் நீக்குவதாக அவர் தெரிவித்துள்ளனர். அந்த காட்சியை படத்திலிருந்து நீக்க நான் முயற்சி எடுத்து வருகிறேன். இன்றைக்குள் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால் பொது மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×