என் மலர்

    ஆன்மிகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.

    ரிஷபம்

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உடன்பிறப்புகளால் விரயம் உண்டு. நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    மிதுனம்

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். வேலைப்பளுவின் காரணமாக உத்தியோகத்திலிருந்து விடுபடலாமா என்று யோசிப்பீர்கள்.

    கடகம்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு கேட்ட இடத்திலிருந்து உதவி கிடைக்கும். மதிய நேரத்திற்கு மேல் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும்.

    சிம்மம்

    விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் மறையும் நாள். உடன் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகப் பிரச்சனைக்கு அலைபேசி மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

    கன்னி

    கடன் சுமை குறையும் நாள். காரிய வெற்றி உண்டு. காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவால் புதிய வேலை கிடைக்கும்.

    துலாம்

    துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். பொருளாதார வளர்ச்சி பெருகும். தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள்.

    விருச்சிகம்

    வருமானம் திருப்தி தரும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்திலிருந்து விருப்ப ஓய்வில் வெளிவருவது பற்றி சிந்திப்பீர்கள்.

    தனுசு

    வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சி கைகூடும். பழைய கடன்களை கொடுத்து மகிழும் வாய்ப்பு உண்டு.

    மகரம்

    குடும்பச் சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். கூடுதல் சம்பளத்துடன் கூடிய வேலை தேடி வரும்.

    கும்பம்

    வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி ஆதாயம் தரும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

    மீனம்

    எடுத்த முயற்சியில் எண்ணற்ற தடைகள் ஏற்படும் நாள். வரவை காட்டிலும் செலவு கூடும். நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோக வாய்ப்பு கைநழுவிச் செல்லலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். சொத்து பிரச்சனைகள் சுமூகமாக முடிவடையும். சொந்த பந்தங்களின் பகை மாறும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    ரிஷபம்

    நன்மைகள் நடைபெறும் நாள். நாடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். வருமானம் திருப்தி தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். தொழில் சீராக நடைபெறும்.

    மிதுனம்

    தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.

    கடகம்

    முயற்சி கைகூடும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும். பாகப் பிரிவினை சுமூகமாக முடியும்.

    சிம்மம்

    தொழில் போட்டிகள் அகலும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

    கன்னி

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். புதிய வேலைவாய்ப்பு பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

    துலாம்

    காலையில் பணப் புழக்கமும், மாலையில் மனக்கலக்கமும் ஏற்படும் நாள். உத்தியோகத்தில் பிறர் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பாகும் சூழ்நிலை உண்டு.

    விருச்சிகம்

    புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    தனுசு

    ரொக்கத்தால் வந்த சிக்' கல்கள் அகலும் நாள். பூமிப் பிரச்சனை தீரும். புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோக மாற்ற சிந்தனை அதிகரிக்கும்.

    மகரம்

    தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். விரயங்கள் மேலோங்கும். உத்தியோக உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.

    கும்பம்

    மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சனைகள் உருவாகும். முயற்சியில் குறுக்கீடு உண்டு.

    மீனம்

    நிதிப்பற்றாக்குறை ஏற்படும் நாள். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதையையும் தக்க வைத்துக் கொள்வது அரிது. கையிருப்புக் கரையலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-15 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சப்தமி விடியற்காலை 5.49 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : சித்திரை பின்னிரவு 2.16 மணி வரை பிறகு சுவாதி

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீ ராமர் மூலவருக்கும், ராகவேந்திர சுவாமிக்கும் குருவார திருமஞ்சன சேவை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ரிஷப வாகன பவனி. மதுரை மீனாட்சி யம்மன் விருஷப சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சந்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இரக்கம்

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-அன்பு

    கடகம்-மேன்மை

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-பொறுமை

    துலாம்- செலவு

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- நற்செயல்

    மகரம்-போட்டி

    கும்பம்-ஆதரவு

    மீனம்-ஜெயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
    • தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாக கூறுவர்.

    சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.

    இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

    பாடல்:-

    புனை அழல் ஓம்புகை அந்தணாளர்

    பொன்னடி நாள்தோறும் போற்றிஇசைப்ப

    மனைகெழு மாடம் மலிந்தவீதி

    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

    சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த

    சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

    கனைவளர் கூர்எரி ஏந்தி ஆடும்

    கணபதி ஈச்சரம் காமுறவே.

    - திருஞானசம்பந்தர்

    விளக்கம்:-

    சிறப்பிக்கப்படும் வேள்வித் தீயை தமது கையால் உபசரிக்கும் அந்தணர்களின் திருவடியை நாள்தோறும் போற்றி, வேத கீதத்தால் வணங்கி, அத்தகையோரின் மாட மாளிகைகள் நிறைந்தது திருமருகல் திருத்தலம். இங்கு எழுந்தருளி உள்ள இறைவனே! அரும்புகள் நிறைந்த சோலைகளும், குளிர்ந்த வயல்களும் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் எரியும் நெருப்பை திருக்கரத்தில் ஏந்தி கணபதி ஈச்சரத்தில் விரும்பி நடனம் ஆடுவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பட்டினத்தார் சொத்துக்களை அவரது சகோதரி அனுபவித்து வந்தார்.
    • பச்சை வாழை மட்டையை அடுக்கி, அதன்மேல் தாயை படுக்கவைத்து பட்டினத்தார் தீ மூட்டினார்.

    ஈசனின் அருளால் துறவியாக மாறிய பட்டினத்தார், ஆரம்ப காலங்களில் தனது சொந்த ஊரிலேயே இருந்து வந்தார். ஆனால் சொத்துக்களின் மீது பற்றில்லாமல் இருந்தார். அதனால் அந்த சொத்துக்களை அவரது சகோதரியும் அனுபவித்து வந்தார். தன் சகோதரன் மீண்டும் மனம் மாறி வந்துவிட்டால், சொத்துக்கள் பறிபோய் விடுமே என்று அச்சப்பட்ட பட்டினத்தாரின் சகோதரி, அவருக்கு அப்பத்தில் விஷத்தை தடவிக் கொடுத்தார். அனைத்தையும் அறியும் சக்தியைப் பெற்றிருந்த பட்டினத்தார், அந்த அப்பத்தை வாங்கி வீட்டின் கூரையில் சொருகி வைத்து விட்டு, ''தன் வினை தன்னைச் சுடும். ஓட்டு அப்பம் வீட்டைச் சுடும்'' என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். மறுநொடியே அந்த வீடு பற்றி எரிந்தது. இதனால் அவரது சக்தியை அனைவரும் அறிந்து கொண்டனர்.

    அதேபோல் தன் தாயிடம், ''அம்மா.. நீங்கள் இறந்ததும் உங்களுடைய இறுதிச்சடங்கை செய்ய கண்டிப்பாக வருவேன்'' என்று வாக்குறுதி அளித்திருந்தார், பட்டினத்தார். அதன்படி தாய் இறந்த செய்தி கேட்டதும், அங்கு விரைந்துசென்றார், பட்டினத்தார். அவர் வருவதற்குள் இறுதிச்சடங்கை முடித்துவிட வேண்டும் என்று அவரது உறவினர்கள் அனைவரும் சிதையை மூட்டும் வேலையில் அவசரம் அவசரமாக ஈடுபட்டனர். கொள்ளி வைக்கப்போகும் தருணத்தில் அங்கு வந்து விட்ட பட்டினத்தார், சிதை மூட்டுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு, பச்சை வாழை மட்டையை அடுக்கி, அதன்மேல் தாயை படுக்கவைத்து தீ மூட்டினார். அவரது சக்தியின் காரணமாக அந்த பச்சை வாழை மட்டைகள் மளமளவென்று எரிந்தன. ஊராரும் உறவினர்களும் வாயடைத்து போய் நின்றனர். ஆனால் அவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் அங்கிருந்து அகன்றுவிட்டார், பட்டினத்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பாடு பட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

    ரிஷபம்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் மகிழ்ச்சி தரும்.

    மிதுனம்

    சச்சரவுகள் அகன்று சமாதானம் அடையும் நாள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் இடையூறு வரலாம்.

    கடகம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

    சிம்மம்

    நேற்றைய பிரச்சனைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். குடும்பப் பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

    கன்னி

    எதிரிகள் விலகும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். உடன்பணிபுரிவர்களுடன் உற்சாகப் பயணம் உண்டு.

    துலாம்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வீண்பழிகள் அகலும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.

    விருச்சிகம்

    திருப்தி வருமானம் தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் நடைபெறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    தனுசு

    உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகள் மூலம் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

    மகரம்

    புதிய பாதை புலப்படும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். மருத்துவ செலவுகள் உருவாகலாம். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

    கும்பம்

    எதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் முடிவடையாது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    மீனம்

    யோகமான நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். அன்னிய தேசத்தில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-14 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சஷ்டி பின்னிரவு 3.59 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : அஸ்தம் இரவு 11.52 மணி வரை பிறகு சித்திரை

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சஷ்டி விரதம், மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை

    இன்று சஷ்டி விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் தீர்த்தவாரி. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை.

    பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டைஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சன சேவை. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கண்ணியம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-சுபம்

    கடகம்-நன்மை

    சிம்மம்-மாற்றம்

    கன்னி-தேர்ச்சி

    துலாம்- நலம்

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- ஆதாயம்

    மகரம்-பரிவு

    கும்பம்-சாந்தம்

    மீனம்-மேன்மை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் தீர்த்தவாரி.
    • திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இந்த வார விசேஷங்கள்

    29-ந் தேதி (செவ்வாய்)

    * நயினார்கோவில் சவுந்திரநாயகி தபசுக் காட்சி.

    * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

    * நாகப்பட்டினம் நீலாய தாட்சியம்மன் ஊஞ்சல் உற்சவம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    30-ந் தேதி (புதன்)

    * சஷ்டி விரதம்.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் தீர்த்தவாரி.

    * நயினார்கோவில் சவுந்திரநாயகி மின் விளக்கு தீப அலங்கார ரதத்தில் திருமண கோலத்துடன் பவனி.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேகவல்லியம்மன் தலங்களில் திருக்கல்யாண வைபவம்.

    * சமநோக்கு நாள்.

    31-ந் தேதி (வியாழன்)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

    * மதுரை கள்ளழகர் ஆடி உற்சவம் ஆரம்பம்.

    * மதுரை மீனாட்சி அம்மன் விருட்சப சேவை.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    1-ந் தேதி (வெள்ளி)

    * திருச்செந்தார் சுப்பிரமணியர் கோவிலில் சேரமான்பெருமாள் கைலாசம் போகுதல்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் ஊஞ்சல் சேவை.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் விழா தொடக்கம்.

    * சமநோக்கு நாள்.

    2-ந் தேதி (சனி)

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கிருஷ்ணாவதாரம்.

    * ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் மஞ்சள் நீராட்டு விழா.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.

    * வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.

    * கீழ்நோக்கு நாள்.

    3-ந் தேதி (ஞாயிறு)

    * ஆடிப்பெருக்கு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் பூம்பல்லக்கில் பவனி.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராமவதாரக் காட்சி.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    4-ந் தேதி (திங்கள்)

    * மதுரை மீனாட்சி அம்மன் காலை சட்டத் தேரிலும், இரவு புஷ்பக விமானக்கிலும் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது.
    • புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.

    அமாவாசைக்கு ஐந்தாம் நாளான பஞ்சமி திதியான அன்று கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும் அனுஷ்டிக்கப்படுகிறது.

    எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும். மற்றவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள். கருடன், மகா பலம் உடையவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் தலங்களில் 'பெரிய திருவடி' என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.

    மகா விஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதி சேஷனையும், அவருடைய வாகனமாகிய கருடாழ்வாரையும் வழிபட சிறந்த நாள் நாக/கருட பஞ்சமி. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது.

    அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். நெய்வேத்தியமாக பால் கொழுக்கட்டை, பால் பாயாசம் செய்து வழிபடலாம். அம்பிகையின் ஸ்தோத்திரங்கள், அபிராமி அந்தாதி பாடி வழிபட வேண்டும்.

    கருட பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.

    நாக தோஷத்தை நீக்கக்கூடிய நாளாக நாக சதுர்த்தி, கருட பஞ்சமி அமைகிறது. மீள முடியாத வினைப்பயனில் இருந்து விடுபட சர்ப்ப வழிபாட்டையும், கருட வழிபாட்டையும் ஜோதிட முன்னோடிகள் வலியுறுத்துகின்றனர். சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் இன்னல்களை நீக்கும் வலிமை கருட பகவானுக்கு உண்டு.

    கருட பஞ்சமியன்று அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவானையும் பெருமாளையும் வழிபட்டு வர நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-13 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பஞ்சமி பின்னிரவு 2.29 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம் : உத்திரம் இரவு 9.47 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். நயினார்கோவில் அன்னை ஸ்ரீ சவுந்திர நாயகி சுபசுக்காட்சி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீகுமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உதவி

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-உயர்வு

    கடகம்-ஆசை

    சிம்மம்-இன்பம்

    கன்னி-உவகை

    துலாம்- ஈகை

    விருச்சிகம்-நிறைவு

    தனுசு- கடமை

    மகரம்-களிப்பு

    கும்பம்-மேன்மை

    மீனம்-முயற்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்களைக் கொண்ட கோலங்கள் போட வேண்டும்.
    • முக்திக்கு வழி செய்வதில் கருடனின் பங்கு அதி முக்கியமானதாக அமைகிறது.

    கருடபஞ்சமி தொடர்பாக கூறப்படும் கதை

    முன்னொரு காலத்தில் 7 அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். அவர்கள் விறகு வெட்டி பிழைப்பு நடத்தி வந்தனர். ஒருநாள் தங்கை தன் அண்ணன்களுக்குக் கஞ்சி கொண்டு சென்றாள். அப்போது வானில் கருடன் ஒன்று நாகத்தைக் கவ்விக்கொண்டு சென்றது. அப்போது அந்த நாகம் கக்கிய விஷம் தங்கை கொண்டு சென்ற கஞ்சியில் விழுந்துவிட்டது. அதை அறியாத அவள் அண்ணன்கள் அனைவருக்கும் அந்த கஞ்சியை பரிமாறினாள். அதை உண்ட அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.

    "தினமும் செய்வது போலத்தானே செய்தோம். இன்று இப்படி ஆகிவிட்டதே... என்று அழுது புரண்ட அவள், தன் அண்ணன்களை காப்பாற்ற வேண்டி இறைவனிடம் மன்றாடினாள். சிவனும், பார்வதியும் அங்கே தோன்றி அவள் அழுகைக்கான காரணத்தை கேட்டனர்... அவள் நடந்ததைக் கூறினாள். அதற்கு அவர்கள், "இன்று கருடபஞ்சமி. நீ அதை மறந்து, அதற்குரிய பூஜை செய்யாமல் வந்துவிட்டாய். அது தான் உன் பிரச்சினைக்கு காரணம்.

    இங்கேயே இப்போதே நாங்கள் சொல்வதை போல் நாகருக்கு பூஜை செய். குங்கணக்கயிற்றில் ஏழு முடிச்சிட்டு, நாகர் இருக்கும் புற்று மண்எடுத்து, அட்சதை சேர்த்து, இறந்து கிடக்கும் உன் அண்ணன்கள் முதுகில் குத்து. அவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்" என்று சொல்லி கருட பஞ்சமியின் முக்கியத்துவத்தை அவளுக்கு உணர்த்தினர். அவளும் அதேபோல் செய்தாள். இறந்து கிடந்த அண்ணன்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். இதை பிரதிபலிக்கும் வகையில் கருடபஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

    இன்றும் கூட, கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப்பெற்றுக்கொள்வதை சில இடங்களில் காணலாம்.

    விரதமுறை

    வளர்பிறை பஞ்சமியில் கருடனுக்குரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து குளித்து தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

    தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்களைக் கொண்ட கோலங்கள் போட வேண்டும். நடுவில் ஒரு பலகை போட்டு, அதன் மேல் தலை வாழை இலையை விரித்துப் பச்சரிசியைக் கொட்டி வைத்து, அதன் மேல் சக்திக்கு தகுந்தபடி பொன், வெள்ளி, தாமிரம், அல்லது மண் இவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்பின் வடிவம் ஒன்றைச் செய்து அரிசியின் மேல் வைக்க வேண்டும். பாம்பின் படத்தின் நடுவில் மஞ்சளால் செய்யப்பட்ட கவுரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பருத்தி நூலால் ஆன மஞ்சள் சரட்டை சார்த்தவும். இப்படிப் பூஜை செய்பவர்களின் கோரிக்கைகள் எல்லாம் முழுமையாக நிறைவேறும். சகல விதமான செல்வங்களையும் பெறுவார்கள். அதோடு முக்தியும் அடைவர். இந்த பூஜை செய்வதனால் நாக தோஷம் நீங்கும்.



    கருட புராணம்

    முக்திக்கு வழி செய்வதில் கருடனின் பங்கு அதி முக்கியமானதாக அமைகிறது. இதைப் பற்றி விவரமாக அறிய கருட புராணத்தை கோவில் அல்லது பொது இடங்களில் அமர்ந்து படித்து தெரிந்து கொள்ளலாம். கருட புராண புத்தகம் 19 ஆயிரம் சுலோகங்களை உள்ளடக்கியது. கடைசி அத்தியாயத்தில் மரணத்திற்குப் பின் மனிதனின் நிலையைப் பற்றிய தகவல்களும், அவரவர் செய்த வினையின் அடிப்படையில் சொர்க்க மற்றும் நகர உலக பலன் போன்ற செய்திகளும் அடங்கி உள்ளன. குறிப்பாக இந்து தர்மத்தில் ஓர் உயிர் மனித உடலை விட்டுப் பிரிந்த நேரத்தில் வீட்டில் படிக்க வேண்டிய ஒரு முக்கியமான புராணமாக கருட புராணம் சொல்லப்பட்டுள்ளது.

    பண வரவுக்கு கருட பஞ்சமி விரதம்

    கருட பூஜையை வீட்டின் முன்பகுதியில் உள்ள திறந்த வெளியில் வைத்து செய்தால் சிறப்பு. ஒரு தட்டில் நெல்லை பரப்பி அதன் மீது தேங்காய், மா இலை, சந்தனம், குங்குமம் வைத்து பூஜையை தொடங்க வேண்டும். முதலில் விநாயகரை வழிபட வேண்டும்.

    பூஜை செய்யும் பெண்கள் நல்லமுறையில் விரதம் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி செய்தால் பூஜை முடிந்ததும் விண்ணில் கருடன் பறக்கும். அதனை கண்டு தரிசிக்க வேண்டும். அதன் பின்னர் தான் விரதத்தை முடிக்க வேண்டும். ஒருவேளை கருடனை தரிசிக்க முடியாதவர்கள் அன்றையதினம் அவர்கள் ஒன்றும் சாப்பிடாமல் மறுநாள் தான் விரதத்தை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் பிறருக்கு தன்னால் இயன்றதை தானம் செய்யலாம். இப்படி செய்தால் பண வரவுக்கு பஞ்சமே இருக்காது.

    பெருமாளின் வாகனமாக விளங்கும் கருடனுக்கு உரிய விரதம் தான் கருட பஞ்சமி விரதம். ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி அன்று இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) கருட பஞ்சமி விரத தினமாகும்.

    பலன்கள்

    * கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு.

    * கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே அவனுடைய கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய தலை என்றும், சாம வேதமே அவனுடைய உடல் என்றும் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

    * கருடனை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும்.

    * திங்கள்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும்.

    * செவ்வாய்க்கிழமையில் தரிசிக்க துணிவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.

    * புதன்கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வஞ்சனை கொண்டவர் விலகுவர், விரோதிகள் அழிவர், வெற்றி உண்டாகும்.

    * வியாழக்கிழமைகளில் தரிசிக்க நீண்ட ஆயுளும், செல்வங்களும் வாய்க்கும்.

    * வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கருடன் வானில் வட்டமடித்தது பக்தர்களை பரவசம் அடையச் செய்தது.
    • புதியதாக 7 வடங்கள் தேருடன் இணைக்கப்பட்டு இருந்தது.

    108 வைணவ திருத்தலங்களில் 48-வது ஸ்தலமாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரத்தை கொண்டாடும் வகையில் 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. 5-ம் திருநாளான 24-ந்தேதி 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஆண்டாள் பெரிய அன்னவாகனம், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்னவாகனத்திலும் எழுந்தருளி காட்சி அளித்தனர். 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு சயனசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான இன்று (28-ந்தேதி, திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் மேளதாளங்கள் முழங்க கடக லக்னத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார் திருத்தேரில் எழுந்தருளினர்.

    காலை 9.30 மணிக்கு தேரோட்டத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கலெக்டர் சுகபுத்ரா வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா..., கோபாலா... என்ற பக்தி கோஷம் விண்ணை முட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது கருடன் வானில் வட்டமடித்தது பக்தர்களை பரவசம் அடையச் செய்தது.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேர் செல்லும் 4 ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேர் சக்கரங்கள் பதியாத வகையில் இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டு இருந்தன. அத்துடன் புதியதாக 7 வடங்கள் தேருடன் இணைக்கப்பட்டு இருந்தது. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் பொக்லைன் எந்திரங்கள் தேரை பின்னால் இருந்து தள்ளியதால் தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது.

    அதேபோல் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது.

    ×