என் மலர்

    ஆன்மிகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பத்தரை மாற்று தங்கம் என்பது பத்து பங்கு தங்கம், அரை பங்கு செம்பு கலந்தது.
    • அபரஞ்சி தங்கத்தை பற்றி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ராமாயண பாடல்களை இயற்றியபோது, கம்பர் ஓர் இடத்தில் அதிக தயக்கம் கொண்டார் என கூறுவது உண்டு.

    ராமர் பிறந்ததும் அவரது முகத்தின் பிரகாசத்தை எதனோடு ஒப்பிடுவது என்று கம்பருக்கு தயக்கம் ஏற்பட்டதாம். அதாவது, பிரகாசமான எதனோடு ஒப்பிட்டாலும், அது ராமரின் முக அழகுக்கு ஈடாகாது என்பதால் கம்பர் தயங்கியதாக இலக்கிய ஆர்வலர்கள் கூறுவது உண்டு.

    கள்ளழகரின் சிலையை பொன்னால் வடிவமைக்க நினைத்தவர்களுக்கும் அதுபோன்ற தயக்கம் ஏற்பட்டது போலும். எத்தகைய பொன்னாக இருந்தாலும், அது அழகருக்கு ஈடாகாது என எண்ணி உள்ளனர்.

    பத்தரை மாற்று தங்கம், பத்து மாற்று தங்கம் என்றெல்லாம் சொல்லப்படுவது உண்டு.

    பத்தரை மாற்று தங்கம் என்பது பத்து பங்கு தங்கம், அரை பங்கு செம்பு கலந்தது. பத்துமாற்று தங்கம் என்பது செம்பு கலக்காத சொக்கத்தங்கம். ஆனால், அதைவிடவும் கூடுதல் சிறப்பு கொண்ட தங்கத்தில் அழகரின் விக்ரகத்தை உருவாக்க வேண்டும் என பழங்காலத்திலேயே முடிவு செய்து அலசி ஆராய்ந்துள்ளனர்.

    அப்படி தேடியபோது அவர்களுக்கு அபரஞ்சி தங்கம் பற்றி தெரியவந்துள்ளது. அகராதியில் அபரஞ்சி தங்கம் என்றால் என்ன என்று நாம் தேடினால் 'புடமிட்ட பொன்' என பொருள் கிடைக்கிறது.

    அதாவது, சொக்கத்தங்கத்தைவிட இன்னும் தூய்மை கொண்டதாக சொல்கிறார்கள்.

    அழகர்கோவிலின் மூலவர் சுந்தரராஜ பெருமாள். உற்சவர் கள்ளழகர். இதில் அழகர் என்றால் அழகில் சொக்க வைப்பவர். அப்படிப்பட்ட அழகரை கண்டதும் பக்தர்களை தானாக ஈர்க்கும் வகையில் அவரது சிலை அமைய வேண்டும் என்பதற்காக அபரஞ்சி தங்கத்தை பயன்படுத்தி மிகவும் கண்ணும் கருத்துமாக இந்த சிலையை உருவாக்கி இருக்கிறார்கள். அபரஞ்சி தங்கத்தை பற்றி தமிழ் இலக்கியத்திலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    திருக்குற்றாலக் குறவஞ்சி, அபரஞ்சி தங்கத்தை குறவஞ்சியின் மேனிக்கு உவமையாக பாடியுள்ளது.

    "வஞ்சி எழில்அபரஞ்சி வரிவிழி நஞ்சி". -இதுதான் அந்த பாடல்வரி.

    இதற்கு உரை எழுதிய தமிழ் அறிஞர்கள், அபரஞ்சி என்பதை வார்த்துவிட்ட பொன் என்றும், அத்தகையை மேனி பொலிவை உடையவள் குறவஞ்சி எனவும் கூறுகிறார்கள்.

    அபரஞ்சி தங்கத்தால் செய்த 2 சிலைகள்தான் உள்ளதாக அழகர்கோவில் பட்டர்கள் கூறுகிறார்கள்.

    அதில் ஒன்று கள்ளழகர் சிலை என்றும், மற்றொன்று திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் உள்ள சிலை எனவும் தெரிவித்தனர்.

    மேலும், அழகர் விக்ரகத்துக்கு அழகர் மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற நீரால் அபிஷேகம் செய்தால் சிலை கருத்து விடக்கூடும் என்றும் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சித்திரை பெருவிழா தொடக்கம்.
    • அட்சய திருதியை.

    29-ந் தேதி (செவ்வாய்)

    * கார்த்திகை விரதம்.

    * ராமநாதபுரம் சொக்க நாதசுவாமி கோவிலில் சித்திரை உற்சவம் ஆரம்பம்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சித்திரை பெருவிழா தொடக்கம்.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    30-ந் தேதி (புதன்)

    * அட்சய திருதியை.

    * முகூர்த்த நாள்.

    * நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் உற்சவம்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    1-ந் தேதி (வியாழன்)

    * சதுர்த்தி விரதம்.

    * திருநெல்வேலி அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் தருமபதி திருக்காட்சி.

    * வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு.

    *ஆறுமுகமங்கலம் ஆயிரத்தொன்று விநாயகர் அன்ன வாகனத்தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    2-ந் தேதி (வெள்ளி)

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் விழா தொடக்கம்.

    * திருத்தணி சிவபெருமான் வெள்ளி சூரிய பிரபையில் பவனி.

    * சீர்காழி சிவபெருமான் திருமுலைப்பால் காட்சி.

    * மேல்நோக்கு நாள்.

    3-ந் தேதி (சனி)

    * சஷ்டி விரதம்.

    * தூத்துக்குடி அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல்.

    * திருக்கடவூர் சிவபெருமான் திருக்கல்யாணம்.

    * இலஞ்சி சிவபெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    4-ந் தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் பவனி.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.

    * ஆறுமுகமங்கலம் ஆயிரத்தொன்று விநாயகப்பெருமான் மூசிக வாகனத்தில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    5-ந் தேதி (திங்கள்)

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் நந்தீசுவர யாளி வாகனத்தில் பவனி.

    * கடையம் சிவபெருமான் இந்திர விமானத்தில் உலா.

    * சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று கார்த்திகை விரதம்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-16 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை.

    திதி : துவிதியை இரவு 8.48 மணி வரை. பிறகு திருதியை.

    நட்சத்திரம் : கார்த்திகை இரவு 9.52 மணி வரை. பிறகு ரோகிணி.

    யோகம் : சித்த, அமிர்தயோகம்.

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, வடபழனி முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம்

    இன்று கார்த்திகை விரதம். சந்திர தரிசனம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாவை சூடியருளல். மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் சித்திரைப் பெருவிழா தொடக்கம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம்.

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். திருவான்மியூர், ஸ்ரீசித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கமன்னர் கண்ணாடி மாளிகை எழுந்தருளல். ஆறுமுகமங்கலம் ஸ்ரீஆயிரத்தொன்று விநாயகர் அபிஷேகம். திருநெல்வேலி கம்பம் 3-வது நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீகுமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீவைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - நற்செயல்

    ரிஷபம் - பாராட்டு

    மிதுனம் - பரிசு

    கடகம் - நன்மை

    சிம்மம் - வெற்றி

    கன்னி - ஆர்வம்

    துலாம் - முயற்சி

    விருச்சிகம் - நன்மை

    தனுசு - வரவு

    மகரம் - நலம்

    கும்பம் - பக்தி

    மீனம் - பாராட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து ஜீவராசிகளுக்கும் காட்சி கொடுக்கவே இறைவன் மாசி வீதியில் வலம் வருவதாக ஐதீகம்.
    • சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் 8-ந்தேதி நடைபெறுகிறது.

    மதுரை பாண்டிய மன்னனுக்கு மீனாட்சி மகளாக பிறந்து, பட்டத்து அரசியாக மகுடம் சூடி, தேவா்களை போரில் வென்று, கடைசியாக சிவபெருமானை போருக்கு அழைத்து பின்னர் அவரையே மணம் புரிந்தார்.

    மதுரையை ஆண்ட மகாராணிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த விழாவை பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடுகிறார்கள். இந்தாண்டு சித்திரை திருவிழா நாளை மறுநாள் (29-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா நடைபெறும் நாட்களில் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி-சுந்தரேசுவரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். அனைத்து ஜீவராசிகளுக்கும் காட்சி கொடுக்கவே இறைவன் மாசி வீதியில் வலம் வருவதாக ஐதீகம். எனவே ஒவ்வொரு நாளும் மக்கள் பெருந்திரளாக கூடி தரிசிப்பார்கள்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் பல உள்ளன. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் வைபவம் மே 6-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7.35 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறு கால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தின செங்கோல் வழங்குவார்கள். அடுத்த நாள் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து எட்டு திக்கிலும் தேவா்களை வென்று கடைசியாக இறைவனுடன் அம்மன் போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நடக்கிறது.

    சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் 8-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் வடக்கு மேற்கு ஆடி வீதிகள் சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த விழாவை காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வருவார்கள். அதே போன்று திருப்பரங்குன்றத்தில் இருந்து தெய்வானை, முருகப்பெருமானும், பவளகனிவாய் பெருமாளும் வந்து பங்கேற்பார்கள். மறுநாள் (9-ந்தேதி) மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து அழகர்கோவிலில் நடக்கும் சித்திரை விழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 10-ந்தேதி அழகர் கோவிலில் இருந்து பக்தர்கள் புடைசூழ மதுரையை நோக்கி அழகர் அதிர்வேட்டுகள் முழங்க புறப்படுகிறார். 18 கி.மீ. தூரம் வரும் அவர், வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    11-ந்தேதி மூன்று மாவடியில் அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடக்கிறது. 12-ந்தேதி விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், கள்ளழகர் தங்கக்குதிரையில் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்குகிறார். ராமராயர் மண்டபத்தில் அவரை குளிர்விக்க தீர்த்தவாரியும் நடக்கிறது. அடுத்த நாள் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். பின்னர் தசாவதாரங்களில் காட்சி அளிக்கிறார். பூப்பல்லக்கில் தல்லாகுளத்தில் பவனி வருவார். 15-ந்தேதி மலைக்கு புறப்படுகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 14-ந்தேதி சித்திரை தேரோட்டமும் நடைபெற உள்ளது.
    • 15-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வருகின்ற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. தொடர்ந்து மே மாதம் 13-ந்தேதி திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும், 14-ந்தேதி சித்திரை தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    இங்கு கொல்கத்தா, பாம்பே, கேரளா, கர்நாடகா, அமெரிக்கா பல்வேறு நாடுகளில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டு இருந்து நினைத்த காரியங்கள் கைகூட நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    விழாவில் இரவு தாலி கட்டிக்கொண்டு கோவில் வளாகத்தில் ஒப்பாரி வைத்து ஆடிப்பாடி கும்மியடித்து சந்தோஷமாக இருந்து தேரோட்டத்தின் போது தெய்வநாயக செட்டியார் பந்தலடைய அடைந்த பிறகு தாலி கட்டிய திருநங்கைகள் பக்தர்கள் கணவரை நினைத்து ஒப்பாரி வைத்து அழுது பூசாரி கையால் தாலி அறுத்துவிட்டு அருகில் உள்ள கிணற்றில் குளித்து வெள்ளை புடவை அணிந்து சோகக் காட்சியுடன் செல்வார்கள்.

    தொடர்ந்து 15-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம்.
    • வழக்கம்போல் அமாவாசை அன்று இரவு நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் நாளை நடைபெறாது.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி சித்திரை மாதத்திற்கான அமாவாசை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளும், இரவு சித்திரை கரக (பெரிய பூங்கரகம்) ஊர்வலமும் நடைபெற உள்ளது.

    ஆகையால் வழக்கம்போல் அமாவாசை அன்று இரவு நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் நாளை நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவிலில் லட்சார்ச்சனையும் நடைபெற உள்ளது.
    • ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் கிரிகுஜாம்பிகை, பிறையணி அம்மன் சமேத நாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவார பாடல் பெற்ற தலமாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையதாகும்.

    ராகு பகவான் சிவபெருமானை பூஜித்த தலமாக கருதப்படும் இங்கு நாகவல்லி, நாகக்கன்னி என இரு தேவியருடன் 'மங்கள ராகு'வாக ராகு பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இவரது திருமேனியில் பாலாபிஷேகம் செய்யும் போது, அந்த பாலானது நீல நிறமாக மாறுவது தனிச்சிறப்பாகும். இதனால் இத்தலம் ராகு பரிகார தலமாக விளங்குகிறது.

    இந்த நிலையில், ராகு பகவான் 1½ ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வார். இந்த விழாவானது கோவிலில் விமரிசையாக நடைபெறுவது உண்டு. அதன்படி, இன்று மாலை 4.20 மணிக்கு ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனையொட்டி நேற்று முன்தினம் மாலை கோவிலில் முதல்கால யாகசால சிறப்பு பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, நேற்றும் பூஜைகள் நடைபெற்ற நிலையில், இன்று மாலை மகா பூர்ணாஹூதி நடைபெற்று, கடங்கள் புறப்பாடு ஆகி மூலவர் நாகவல்லி, நாககன்னி சமேத ராகுபகவானுக்கு கலசாபிஷேகம், பாலாபிஷேகத்துடன் கூடிய சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து, தங்க கவசத்துடன் கூடிய சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன. இதில் தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு பகவானை தரிசனம் செய்ய உள்ளனர்.

    தொடர்ந்து, கோவிலில் லட்சார்ச்சனையும் நடைபெற உள்ளது. இந்த ராகு பெயர்ச்சியின் தாக்கத்தில் இருந்து விடுபட ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம்.

    ராகு பெயர்ச்சியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு ஹோமங்கள், லட்சார்ச்சனை, அபிஷேகங்கள், தயிர் பள்ளயம், சந்தனக்காப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக சிறப்பு ஏற்பாடுளும் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சிவகுருநாதன், உதவி ஆணையர் உமாதேவி, அறங்காவலர்கள் கண்ணையன், பானுமதி, சின்னையன், ஜெயராமன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடு.
    • 27-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 28-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் 7ம் நாளான நேற்று மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன்பின் ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். திமஞ்சனம் கண்டருளி இன்று அதிகாலை 1மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    8ம் நாளான இன்று (25-ந் தேதி) காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்து சேர்ந்தார்.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நாளை (26-ந் தேதி) காலை நடைபெறுகிறது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தோளுக்கினியானில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார்.

    பின்னர் அதிகாலை 5.45 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது.

    விழாவின் நிறைவு நாளான 28-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் இணை ஆணையர் சிவராம் குமார், கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த மாதம் வரை மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி.
    • பக்தர்கள் தினமும் மலையேறி சென்று சாமி தரிசனம்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் வரை மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின் மதுரை ஐகோர்ட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தினமும் அனுமதி அளிக்கலாம் என உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த ஒரு மாதமாக பக்தர்கள் தினமும் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மழை நாட்களில் மட்டும் பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்து வருகிறது.

    இந்த நிலையில் சித்திரை மாத பிரதோஷம் (இன்று), 27-ந்தேதி அமாவாசை முன்னிட்டு இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.

    காலை 6.30 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப் பட்டது. வனத்துறையினர் உடைமைகளை சோதனை செய்த பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப் பட்டனர். சிறுவர்கள், பெண்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் சுமார் 3 முதல் 4 மணி நேரம் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    கடும் வெயிலால் பக்தர்கள் சிரமமடைந்தனர். மலை பகுதிகளில் போதிய குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர் வசதியை செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தர மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    நாளை மறுநாள் அமாவாசை மற்றும் விடுமுறை நாட்கள் என்பதாலும் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 8 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் செல்வம் பெருகும்.
    • பெண்கள் கோவிலில் மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கை கூடும்.

    விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வத்திராயிருப்பு கிராமத்தின் அருகே உள்ளது, அர்ச்சுனாபுரம். நல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படும் இந்த ஊரில் பச்சை பசுமை வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது, நல்லதங்காள் திருக்கோவில்.

    கோவை, கடலூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மக்கள், நல்லதங்காளை குலதெய்வமாக வழிபடுகின்றனர். அண்ணன்-தங்கை பாசத்தின் வெளிப்பாட்டில், இறையருளால் பொழிந்த அன்புத் திருக்கோவிலே 'நல்லதங்காள் திருக்கோவில்' ஆகும்.


    தல வரலாறு

    அர்ச்சுனாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்லதம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் இளம் வயதிலேயே தாய், தந்தையை இழந்தனர்.

    சிறிது காலத்தில் நல்லநம்பி ஆட்சிக்கு வந்தான். தாய்-தந்தையை இழந்த போதிலும் நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி வளர்த்து வந்தான். தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையை ஆண்டு வந்தவர், காசிராஜா. இவருக்கு தன் தங்கை நல்லதங்காளை மிகுந்த சீர்வரிசையுடன் திருமணம் செய்து கொடுத்தார், நல்லதம்பி.

    திருமணம் ஆன இளம் வயதிலேயே நல்லதங்காள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ஆனாள். இதில் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள். சிறிது காலத்தில் நல்லதங்காளின் கணவன், அவளை விட்டு நீங்கினான்.

    இந்நிலையில், மானாமதுரையில் மழை பொய்த்ததால் பஞ்சம் தலைவிரித்தாடியது. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மழை இல்லை. உண்ண உணவு இன்றி மக்கள் வறுமையில் வாடினர், பலரும் மாண்டனர்.

    நல்லதங்காள் குடும்பமும் அந்நிலைக்கு ஆளானது. அவள், அண்ணன் கொடுத்தனுப்பிய சீதனப் பொருட்களை ஒவ்வொன்றாக விற்று பசியை போக்கினாள். ஒரு கட்டத்தில் வீட்டில் எதுவுமே இல்லை என்ற நிலை வந்தது. சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் போனது. மனம் உடைந்த நல்லதங்காள் தன் ஏழு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, தான் பிறந்த அர்ச்சுனாபுரம் கிராமத்துக்கு வந்தாள்.

    அப்போது அவளது அண்ணன் நல்லதம்பி வேட்டையாட காட்டுக்கு சென்று இருந்தார். அண்ணன் வரும்வரை அரண்மனையில் தங்கி இருக்கலாம் என்று எண்ணிய நல்லதங்காள் அங்கு சென்றாள்.

    ஆனால் நல்ல தம்பியின் மனைவி மூளியலங்காரியோ, பல நாட்கள் பட்டினி கிடந்த நல்லதங்காளையும், அவளது பிள்ளைகளையும் உண்ண உணவு கூட கொடுக்காமல் அரண்மனையை விட்டே துரத்தினாள்.

    மூளியலங்காரியின் கடும் சொற்களால் மனம் உடைந்த நல்லதங்காள் குழந்தைகளுடன் வந்த வழியே திரும்பினாள். "எந்த உதவியும் இல்லாமல் இப்படி பரிதாப நிலைக்கு ஆளாகிவிட்டேனே... இனி, யாரை நம்பி நான் வாழப்போகிறேன்? என் பிள்ளைகள் எப்படி வாழப்போகிறார்கள்?" என்று பலவாறு யோசித்தாள்.

    அப்போது, அவளது குழந்தைகள், 'அம்மா பசிக்குது... ஏதாவது வாங்கிக் கொடும்மா...' என்று அழ ஆரம்பித்தன. அவளது கையிலோ பணமோ அல்லது பொருளோ எதுவும் இல்லை.

    குழந்தைகளின் பசியைப் போக்க வழி தெரியாமல் தவித்த அவளுக்கு, அங்கிருந்த ஒரு பாழடைந்த கிணறு கண்ணில் பட்டது. நேராகக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள். பசியால் துடித்து அழுத குழந்தைகளை ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்டாள். ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கிப் போட்ட பிறகு, தானும் அதே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.

    மனைவியின் உதாசீனத்தால் தனது தங்கை, பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த நல்லதம்பி துடிதுடித்தான். அவன் மனைவியை கொன்று விட்டு பின்பு அந்த கவலையில் அவனும் இறந்து போனான்.

    அண்ணன் - தங்கை பாசத்தைக் கண்டு மெச்சிய சிவனும், பார்வதியும் அங்கே தோன்றினர். தற்கொலை செய்த நல்லதங்காள், அவளது பிள்ளைகளை உயிர் பெறச் செய்ததோடு, நல்லதம்பியையும் உயிர்ப்பித்தனர்.

    அப்போது நல்லதங்காளும், நல்லதம்பியும், "நாங்கள் இறந்தது, இறந்ததாகவே இருக்கட்டும். மனிதப் பிறவி எடுத்து மாண்டவர்கள் மீண்டும் உயிர் பெற்றார்கள் என்ற வரலாறு ஏற்பட வேண்டாம். எனவே நாங்கள் இறந்ததாகக் கருதி அருள்புரிய வேண்டும்" என கூறினார்கள்.

    சிவனும் அவ்வாறே அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாக நல்லதங்காள் தெய்வ ஜோதியில் ஐக்கியமாகி தெய்வமாகிவிட்டாள்.


    கோவில் அமைப்பு

    நல்லதங்காள் கோவில் அமைப்பு மற்ற கோவில்களைப் போல் அல்லாமல் வித்தியாசமாகக் கட்டப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏழு குழந்தைகளின் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு, தனியே இன்னொரு சன்னிதியில் வைக்கப்பட்டு இருக்கிறது.


    இந்த கோவிலுக்குச் சற்று தொலைவில் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்து போய்க் காணப்படுகிறது. நல்ல தங்காள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது இந்த கிணற்றில்தான் என்று சொல்கிறார்கள். மழைக்காலத்தில் மட்டுமே நீர்வரத்துள்ள அர்ச்சுனா நதியின் கரையில் உள்ளது நல்லதங்காளின் கிணறு.


    இந்த கோவிலுக்கு வந்து வேண்டினால் குடும்ப உறவு பலப்படும். தரித்திர நிலை உள்ளவர்கள், பணம் கையில் தங்காதவர்கள், இத்தல அன்னையிடம் முறையிட்டு, 8 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் செல்வம் பெருகும்.

    திருமணமாகாத பெண்கள் கோவிலில் மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கை கூடும், வாழ்வில் நலம் ஏற்படும் என்பது இக்கோவில் பக்தர்களின் நம்பிக்கை.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும், ஒவ்வொரு ஆடி மாதமும் நடைபெறும் பொங்கல் விழாவில் நல்லதங்காளின் உறவினர் வழித் தோன்றல்களாக வந்தவர்கள், மானாமதுரையில் இருந்து இங்கு வந்து விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்தத் திருவிழா நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அத்துடன், மாதந்தோறும் பவுர்ணமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது.

    ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருவில்லிபுத்தூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அர்ச்சுனாபுரம் சிற்றூர். திருவில்லிபுத்தூர் - மதுரை சாலையில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து மேற்கில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது வத்திராயிருப்பு. இந்த ஊரின் அருகில் உள்ளது அர்ச்சுனாபுரம். இங்கு வயல்வெளிக்கு மத்தியிலேயே கோவில் கொண்டுள்ளாள் நல்லதங்காள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆள்காட்டி விரலால் பிடித்து ஜெபித்தால் உரிய பலன் கிடைக்காது.
    • மந்திரத்தை ஜெபிக்கும் போது உதடுகள் அசையக்கூடாது.

    தெய்வ வழிபாடு எவ்வளவு சிறப்புக்குரியதோ, அதே போன்று பூஜை அறையிலோ அல்லது தனியொரு இடத்திலோ அமர்ந்து, தெய்வீக மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்தபடி செய்யும் ஜெப வழிபாடும் அத்தகைய சிறப்புக்குரியது. அது தொடர்பான சில தகவல்களை இங்கே தெரிந்துகொள்வோம்..


    * மந்திர ஜெபம் செய்வதற்கு, துளசி மாலை அல்லது ருத்ராட்ச மாலையை பயன்படுத்துவதே சிறப்பானது.

    * நம் உடலில் உள்ள 72 ஆயிரம் நாடிகளும், 108 புள்ளிகளில் இணைவதால், அதனை தூண்ட 108 எண்ணிக்கையில் மணிகள் அமைந்த மாலையை பயன்படுத்த வேண்டும்.

    * ஜெபிப்பதற்கான மாலையை வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரல் கொண்டு மட்டுமே பிடிக்க வேண்டும். ஆள்காட்டி விரலால் பிடித்து ஜெபித்தால் உரிய பலன் கிடைக்காது.

    * ஜெபிக்கும் வேளையில் தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித் துணியில் அமர்வது அவசியம். ஏனெனில் மந்திர ஜெபம் செய்கையில், நம் உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். அதற்காகத்தான் மின்கடத்தாப் பொருட்களான தர்ப்பை, கம்பளித் துணியை பயன்படுத்துகிறோம்.


    * ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாத படி ஒரு துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.

    * முக்கியமாக, ஒரு குருவிடம் தீட்சைப் பெற்ற மந்திரத்தைத்தான் ஜெபிக்க பயன்படுத்த வேண்டும். அந்த மந்திரத்தை ஜெபிக்கும் போது உதடுகள் அசையக்கூடாது. மனதிற்குள்தான் உச்சரிக்க வேண்டும். இதனை 'மானஸ ஜெபம்' என்று அழைப்பார்கள்.

    * எந்த ஒரு செயலும் அதற்குரிய இடத்தில் செய்யும்போதுதான் சிறப்பு பெறும். உணவு தயாரிக்கும் பணியை, சமையல் அறையில் அல்லாமல் வேறு அறையில் செய்தால் அசவுகரியம் ஏற்படுவது இயல்பு. அது போலவே, மந்திர ஜெபத்தை அமைதியான இடத்தில், அமைதியான சூழலில்தான் செய்ய வேண்டும்.

    * சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால், அதிக பலன் உண்டு. கிரகணம், பவுர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்வதாலும் பன்மடங்கு பலன் கிடைக்கும். மந்திர ஜெபம் செய்து வரும் காலங்களில், எளிமையாக ஜீரணமாகும் உணவை உட்கொள்ள வேண்டும். அதேபோல் மென்மையான ஆடைகளை அணிய வேண்டும்.


    திசையும்.. பலனும்..

    * தென்கிழக்கு நோக்கி ஜெபம் செய்தால் நோய் தீரும்.

    * வடமேற்கு நோக்கி ஜெபம் செய்தால் தீயசக்திகள் மறையும்.

    * வடக்கு நோக்கி ஜெபம் செய்தால் தங்கம், கல்வி கிடைக்கும்.

    * வடகிழக்கு நோக்கி ஜெபம் செய்தால் முக்தி கிடைக்கும்.

    * தெற்கு நோக்கி ஜெபம் செய்தால் பெரும் தீமை வந்துசேரும்.

    * தென்மேற்கு நோக்கி ஜெபம் செய்தால் வறுமை உண்டாகும்.

    * மேற்கு நோக்கி ஜெபம் செய்தால் பொருட்செலவு ஏற்படும்.

    * கிழக்கு நோக்கி ஜெபம் செய்தால் வசியம் ஏற்படும்.


    பலன் தரும் இடங்கள்

    ஜெபம் செய்யும்போது அமைதியான இடம் தேவை. அது எந்த இடம் என்பதைப் பொறுத்தும் பலன்கள் கிடைக்கும்.

    வீடு - பத்து மடங்கு பலன்

    காடு - நூறு மடங்கு பலன்

    நீர்நிலைகள் - ஆயிரம் மடங்கு பலன்

    மலை உச்சி - கோடி மடங்கு பலன்

    சிவன் கோவில் - இரண்டு கோடி மடங்கு பலன்

    அம்பிகை சன்னிதி - பல கோடி மடங்கு பலன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-12 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவாதசி காலை 8.30 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: உத்திரட்டாதி மறுநாள் விடியற்காலை 4.17 மணி வரை பிறகு ரேவதி

    யோகம்: சித்த/அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். மதுரை ஸ்ரீ வீரராகவப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சுவாமி அம்பாள் மாலை ரிஷப வாகனத்தில் உலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. சமயபுரம் ஸ்ரீ மரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-முயற்சி

    கடகம்-துணிவு

    சிம்மம்-நற்சொல்

    கன்னி-பக்தி

    துலாம்- மேன்மை

    விருச்சிகம்-உற்சாகம்

    தனுசு- ஆதரவு

    மகரம்-லாபம்

    கும்பம்-உயர்வு

    மீனம்-ஈகை

    ×