என் மலர்

    வழிபாடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தர்கள் ஊரணி பொங்கல் நடைபெற்றது.
    • கிரேனில் பக்தர்கள் தொங்கியபடி அலகு குத்தி சென்று பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த பில்லாலி தொட்டி கிராமத்தில் ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் செடல் உற்சவம் கடந்த 29-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சக்தி கரகம் மற்றும் சாகை வார்த்தல் விழா நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வீதி உலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் விழா நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தர்கள் ஊரணி பொங்கல் நடைபெற்றது.

    தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு உடலில் செடல் போட்டுக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். மேலும் கிரேனில் பக்தர்கள் தொங்கியபடி அலகு குத்தி சென்று பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

     

    பின்னர் சட்டி வைத்து கொதிக்கும் எண்ணெயில் வடையை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் பரவசத்துடன் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கொடி இறக்கும் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் இளைஞர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூஜை முடிந்தவுடன் புது கயிரை எடுத்து தங்கள் கணவரின் கைகளால் மாற்றிக்கொள்ள வேண்டும்.
    • ஆடிப்பெருக்கன்று முடிந்தவர்கள் பத்திரப்பதிவு முதலான புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

    ஆடிப்பெருக்கு அன்று அனைவரும் நீர் நிலைகளுக்கு சென்று விரதமிருந்து பூஜைகள் செய்வார்கள். அப்படி நீர் நிலைகளுக்கு சென்று பூஜை செய்ய முடியாதவர்கள் வீட்டிலிருந்தே விரதமிருந்து பூஜை செய்து கடவுளின் அருளைப் பெறலாம். தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

    ஆடிப்பெருக்கு தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து வாசல் தெளித்து வீட்டைத் துடைத்து மாக்கோளமிட்டு, நீராட வேண்டும். பூஜையறையில் சாமி படங்களை பூக்களால் அலங்கரித்து புது மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், பழம், பத்தி, கற்பூரம், வெற்றிலை பாக்கு, தேங்காய் முதலான பூஜைக்குத் தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர், ஒரு நிறைகுடத்தில் இருந்து கலச சொம்பில் நீர் எடுத்து அரைத்து வைத்த மஞ்சளை சேர்க்க வேண்டும். அந்த கலச நீரை விளக்கேற்றி அதன் முன் வைத்து, தீபாராதனை செய்து, கங்கை, யமுனை, சரஸ்வதி, வைகை, காவிரி உள்ளிட்ட புனித நதிகளை மனதில் நினைத்து மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு முடிந்த பின்னர் அந்த தீர்த்தத்தை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தலையில் தெளித்துக்கொண்டு, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். எஞ்சிய நீரை வீட்டிலுள்ள மரம், செடிகளுக்கு ஊற்றி விடலாம்.



    பூஜை முடிந்தவுடன் புது கயிரை எடுத்து தங்கள் கணவரின் கைகளால் மாற்றிக்கொள்ள வேண்டும். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறை தாலியாக பாவித்து கட்டிக்கொள்ள அடுத்த ஆடிக்குள் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வசதி இருப்பின் அக்கம் பக்கத்து பெண்களை அழைத்து அவர்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம், இரவிக்கைத் துண்டு, கொஞ்சம் இனிப்பு சேர்த்து கொடுக்கலாம். இந்த பூஜையின் போது நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம். நீர்நிலைகளுக்கு சென்று வழிபட முடியாதவர்கள், வீட்டிலிருந்த படியே கடவுளை வழிபட்டு அதன் பலன்களைப் பெறலாம்.

    ஆடிப்பெருக்கன்று முடிந்தவர்கள் பத்திரப்பதிவு முதலான புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் அரிசி, பருப்பு முதலான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆடிப் பெருக்கென்று புதிய தொடக்கம் வளர்ச்சியைத் தரும் என்பது நம்பிக்கை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒவ்வொரு மக்களும் ஆற்றங்கரையில் கூடி நின்று ஆற்றுப்பெருக்கை கண்டு களிப்பர்.
    • திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள்.

    ஆடி மாதத்தில் வரும் 18-ந் தேதியை ஆடிப்பெருக்கு என்று கொண்டாடப்படுகிறது. இதை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கிறோம். பொதுவாக தமிழ் விழாக்கள் நாள்களின் எண்ணிக்கையை அடிப்படியாக கொண்டு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் இந்த ஆடிப்பெருக்கு விழா மட்டும் ஆடி மாதம் 18-வது நாள் என நாளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

    குறிப்பாக காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவே இந்த ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. தென்மேற்கு பருவத்தில் பெய்யும் மழையினால் அனைத்து ஆறுகளும் நிரம்பி வழியும். இதையே ஆற்றுப்பெருக்கு என்பர். இதனால் உழவர்கள் நம்பிக்கையுடன் விதை விதைப்பர். இந்த சமயத்தில் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால் தான், தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். இதற்காக நதிகளை தெய்வமாக கருதி போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து, பின் உழவு வேலையை தொடங்குகின்றனர். இதனால் தான் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் உருவானது.

    இந்த விழா தமிழ் பண்பாட்டின் சிறப்புவாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு மக்களும் ஆற்றங்கரையில் கூடி நின்று ஆற்றுப்பெருக்கை கண்டு களிப்பர். அன்றைய தினம் மக்கள் ஆற்றில் குளித்துவிட்டு, ஆற்றங்கரையில் பூஜை செய்வதற்கு ஒரு இடத்தை பிடித்துக்கொள்கின்றனர். அந்த இடத்தை பசு சாணத்தால் மெழுகி சுத்தம் செய்து, அதன்மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.

     

    மேலும் வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம், பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காண்பித்து வழிபடுகின்றனர். தங்களுக்கு தடங்கல் இல்லாத விளைச்சல் வேண்டி நீருக்கு நன்றி செலுத்தும் விதமாக வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் வீட்டில் பலவிதமான கலப்பு உணவுகளை தயார் செய்து வந்து, ஆற்றங்கரையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியோடு உணவை உண்பார்கள்.

    ஆடிப்பெருக்கு அன்று புதிதாக திருமணமானவர்கள், தங்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கி விட்டு, புதிய மஞ்சள் கயிற்றை தன் கணவன் கையால் கட்டிக்கொள்வர். இதன்மூலம் அவர்களது மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என்பதும், வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்த ஆடி மாதத்திற்குள் அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் என்கிறார்கள்.

    திருச்சி திருவரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும். ஆடிப்பெருக்கு நாளன்று திருவரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பட்டு, அம்மா மண்டபம் படித்துறைக்கு தங்கப்பல்லக்கில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்கலப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

    தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைப் பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அறப் பளீசுவரரை தொழுவது வழக்கம். பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி.
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமான் ஸ்திர வார திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-17 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : அஷ்டமி காலை 7.47 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம் : விசாகம் (முழுவதும்)

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி, திருவள்ளூர், ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கிருஷ்ணாவதாரம், சிம்ம வாகன பவனி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் ரிஷப விமானத்தில் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமான் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஓய்வு

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-உழைப்பு

    கடகம்-நட்பு

    சிம்மம்-அமைதி

    கன்னி-ஆதரவு

    துலாம்- முயற்சி

    விருச்சிகம்-சலனம்

    தனுசு- மாற்றம்

    மகரம்-ஊக்கம்

    கும்பம்-நிறைவு

    மீனம்-பண்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். வீடு, வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில், உத்தியோகத்தில் தடைபட்ட உயர்வு தானாகக் கிடைக்கும்.

    ரிஷபம்

    யோகமான நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையையடையச் சந்தர்ப்பம் வரும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    மிதுனம்

    இனிமையான நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

    கடகம்

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் மனதிற்கு பிடித்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    சிம்மம்

    பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாள். தொழில் ரீதியாக புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோக முயற்சியில் நேர்முகத் தேர்வில் வெற்றி உண்டு.

    கன்னி

    கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பக்குவமாகப் பேசி சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகளை மேலதிகாரிகள் வழங்குவர்.

    துலாம்

    வெளிவட்டார பழக்க வழக்கம் விரிடையும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

    விருச்சிகம்

    வரவு இரு மடங்காகும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.

    தனுசு

    முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு கிடைக்கலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். வரன்கள் வாயில் தேடிவரும்.

    மகரம்

    அலைச்சல் அதிகரிக்கும் நாள். சொந்த பந்தங்கள் வழியில் சுபச்செலவுகளை செய்யும் சூழ்நிலை உருவாகும். திடீர் பயணம் திகைக்க வைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

    கும்பம்

    ஒற்றுமை பலப்படும் நாள். வழக்குகள் சாதகமாகும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் ஏற்படும். அரசு வேலைக்காக செய்த முயற்சி கைகூடும்.

    மீனம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விரத நாட்களில் கோவில் பிரசாதம் சாப்பிடும் நோக்கத்திற்காகவே சிலர் கோவிலுக்கு செல்வதுண்டு.
    • சனிக்கிழமை சனி பகவான், பெருமாள் மற்றும் நவக்கிரக வழிபாடு செய்யலாம்.

    விரதம் இருக்கும் போது கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிடலாமா என்பது அனேக பக்தர்களின் சந்தேகமாக உள்ளது. சிலர், கடவுளுக்கு தானே விரதம் இருக்கிறோம் அதனால் பிரசாதத்தை சாப்பிடலாம் என்பார்கள். பசியைக் கட்டுப்படுத்தி இறை சிந்தனையோடு விரதம் இருக்க வேண்டும். எனவே , தாங்கள் கடுமையான விரதம் இருப்பதாகவும் அதனால் இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது என்றும் சிலர் சொல்வார்கள். இதில் எது சரி என்று பார்க்கலாம்.

    விரதம் இருக்கும் போது எந்த தெய்வத்தை நினைத்து விரதம் இருக்கிறோமோ, அன்றைய நாள் அந்த தெய்வத்தின் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு வருவது வழக்கம். அப்படி கோவிலுக்கு செல்லும் போது அந்த கோவிலில் பிரசாதம் கொடுத்தால் தாராளமாக வாங்கி கடவுளின் பெயரைச்சொல்லி சாப்பிடலாம். அதில் எந்த தவறும் இல்லை.

    எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் பிரசாதம் கிடைத்துவிடாது. கோவில் பிரசாதம் கிடைப்பது கடவுளின் அருள் கிடைப்பது போன்றதுதான். அதுமட்டுமில்லாமல் பிரசாதம் சிறிய அளவில் தான் வழங்கப்படும். அதனால் உங்கள் விரதம் ஒருபோதும் தடைபடாது.

    விரதம் இருக்கும் போது நீங்கள் கோவிலுக்கே செல்லவில்லை. ஆனாலும் அக்கம் பக்கத்தினர் கோவில் பிரசாதம் என்று உங்களுக்கு கொடுக்கும் போது சற்றும் தயங்காமல் அந்த பிரசாதத்தை சாப்பிடலாம். எந்த வித தயக்கமும் தேவை இல்லை.

    விரத நாட்களில் கோவில் பிரசாதம் சாப்பிடும் நோக்கத்திற்காகவே சிலர் கோவிலுக்கு செல்வதுண்டு. அப்படிதான் செல்லக் கூடாது. ஏனென்றால் கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை இரண்டு மூன்றுமுறை வாங்கி சாப்பிட்டு விட்டு நானும் விரதம் இருக்கிறேன் என்று சொல்வதில் எந்தவித பலனும் இல்லை.

    சிலர் ஒரு பொழுது விரதம் இருப்பார்கள். சிலர் நீராகாரம் மட்டும் அருந்துவார்கள். இன்னும் சிலர் ஒரு நாள் முழுவதும் உண்ணா நோன்பிருப்பார்கள். அதிலும் சிலர் விரதம் இருக்கிறேன் என்று நீர் கூட அருந்தாமல் இருப்பார்கள். அவரவர் உடல்நிலை மற்றும் மனநிலை பொருத்து தான் விரதம் இருக்க வேண்டும்.

    எந்தெந்த கடவுளுக்கு எந்தெந்த நாட்களில் விரதம் இருக்கலாம் என்று பார்க்கலாம்...

    ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானையும், திங்கட்கிழமை சிவனையும், செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானையும் வணங்கி விரதமிருந்து வழிபடலாம். புதன்கிழமை பெருமாள், வியாழன்கிழமை நவக்கிரக வழிபாடு, வெள்ளிக்கிழமை அம்மனை விரதமிருந்து வணங்கலாம். சனிக்கிழமை சனி பகவான், பெருமாள் மற்றும் நவக்கிரக வழிபாடு செய்யலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பறவைகளின் தலைவனான கருடன், விஷ்ணுவின் வாகனமாக திகழ்கிறார்.
    • கோவிலில் கருட பகவானை வணங்கிய பின்பு பெருமாளை வணங்குவதே சிறப்பாக கருதப்படுகிறது.

    1-8-2025 (இன்று) ஆடி சுவாதி

    பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வார், ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரம், பஞ்சமி திதியில் அவதரித்ததாக புராணம் கூறுகிறது. பறவைகளின் தலைவனான கருடன், விஷ்ணுவின் வாகனமாக திகழ்கிறார்.

    கசியப முனிவருக்கு கத்ரு, வினதை என்ற இரு மனைவிகள் இருந்தனர். அதில் வினதைக்கு பிறந்தவர் தான் கருடாழ்வார். இவரது சகோதரன் அருணன். இவர் சூரிய பகவானின் தேரோட்டியாக திகழ்கிறார். கசியப முனிவரின் மற்றொரு மனைவியான கத்ருக்கு ஆயிரம் பாம்புகள் குழந்தைகளாக இருந்தனர்.

    ஒரு சமயம் வினதை, வானத்தில் வெள்ளை குதிரை பவனி செல்வதை பார்த்து, அதன் அழகை புகழ்ந்தார். அப்போது கத்ரு, அது முழுமையான வெள்ளைக் குதிரை இல்லை. அதன் வால் கருப்பு என்றாள். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் யார் சொல்வது தவறோ, அவர் மற்றவருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இதையடுத்து கத்ரு தனது குழந்தைகளான ஆயிரம் பாம்புகளில் ஒருவரான கார்க்கோடகனை வெள்ளைக் குதிரையின் வாலில் சுற்றி கருப்பு நிறமாக தோன்ற செய்தாள். இதைக் கண்ட வினதை ஏமாந்து, தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். கத்ருவின் அடிமையானாள். இதையடுத்து கத்ரு, வினதைக்கு பல கொடுமைகள் செய்து வந்தாள்.

    தன் தாயின் நிலைமையை கண்டு வருந்திய கருடன், தன் தாயை விடுவிக்க எண்ணினார். அதற்காக தேவலோகத்தில் இருக்கும் அமிர்த கலசத்தை கொண்டு வந்து தன் தாயை அடிமை வாழ்வில் இருந்து மீட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

    பெருமாள் கோவில்களில் பெருமாள் சன்னிதியின் முன்பாக கருடன் வீற்றிருப்பார். கோவிலில் கருட பகவானை வணங்கிய பின்பு பெருமாளை வணங்குவதே சிறப்பாக கருதப்படுகிறது. ஆடி சுவாதி நாளில் விரதம் இருந்து கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும், மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்கும், எதிரிகளின் பயம் விலகும், வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு.
    • இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-16 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : அஷ்டமி முழுவதும்.

    நட்சத்திரம் : சுவாதி மறுநாள் விடியற்காலை 4.51 மணி வரை. பிறகு விசாகம்.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகனுக்கு கிளி வாகன சேவை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், வெள்ளி சப்பரத்தில் பவனி. மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கிளி வாகன பவனி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் உற்சவம் ஆரம்பம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுபம்

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-ஆதரவு

    கடகம்-ஆதாயம்

    சிம்மம்-தாமதம்

    கன்னி-விருப்பு

    துலாம்- தேர்ச்சி

    விருச்சிகம்-அலைச்சல்

    தனுசு- வெற்றி

    மகரம்-நன்மை

    கும்பம்-பணிவு

    மீனம்-பக்தி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.

    ரிஷபம்

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உடன்பிறப்புகளால் விரயம் உண்டு. நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    மிதுனம்

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். வேலைப்பளுவின் காரணமாக உத்தியோகத்திலிருந்து விடுபடலாமா என்று யோசிப்பீர்கள்.

    கடகம்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு கேட்ட இடத்திலிருந்து உதவி கிடைக்கும். மதிய நேரத்திற்கு மேல் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும்.

    சிம்மம்

    விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் மறையும் நாள். உடன் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகப் பிரச்சனைக்கு அலைபேசி மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

    கன்னி

    கடன் சுமை குறையும் நாள். காரிய வெற்றி உண்டு. காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவால் புதிய வேலை கிடைக்கும்.

    துலாம்

    துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். பொருளாதார வளர்ச்சி பெருகும். தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள்.

    விருச்சிகம்

    வருமானம் திருப்தி தரும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்திலிருந்து விருப்ப ஓய்வில் வெளிவருவது பற்றி சிந்திப்பீர்கள்.

    தனுசு

    வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சி கைகூடும். பழைய கடன்களை கொடுத்து மகிழும் வாய்ப்பு உண்டு.

    மகரம்

    குடும்பச் சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். கூடுதல் சம்பளத்துடன் கூடிய வேலை தேடி வரும்.

    கும்பம்

    வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி ஆதாயம் தரும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

    மீனம்

    எடுத்த முயற்சியில் எண்ணற்ற தடைகள் ஏற்படும் நாள். வரவை காட்டிலும் செலவு கூடும். நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோக வாய்ப்பு கைநழுவிச் செல்லலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். சொத்து பிரச்சனைகள் சுமூகமாக முடிவடையும். சொந்த பந்தங்களின் பகை மாறும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    ரிஷபம்

    நன்மைகள் நடைபெறும் நாள். நாடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். வருமானம் திருப்தி தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். தொழில் சீராக நடைபெறும்.

    மிதுனம்

    தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.

    கடகம்

    முயற்சி கைகூடும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும். பாகப் பிரிவினை சுமூகமாக முடியும்.

    சிம்மம்

    தொழில் போட்டிகள் அகலும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

    கன்னி

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். புதிய வேலைவாய்ப்பு பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

    துலாம்

    காலையில் பணப் புழக்கமும், மாலையில் மனக்கலக்கமும் ஏற்படும் நாள். உத்தியோகத்தில் பிறர் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பாகும் சூழ்நிலை உண்டு.

    விருச்சிகம்

    புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    தனுசு

    ரொக்கத்தால் வந்த சிக்' கல்கள் அகலும் நாள். பூமிப் பிரச்சனை தீரும். புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோக மாற்ற சிந்தனை அதிகரிக்கும்.

    மகரம்

    தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். விரயங்கள் மேலோங்கும். உத்தியோக உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.

    கும்பம்

    மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சனைகள் உருவாகும். முயற்சியில் குறுக்கீடு உண்டு.

    மீனம்

    நிதிப்பற்றாக்குறை ஏற்படும் நாள். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதையையும் தக்க வைத்துக் கொள்வது அரிது. கையிருப்புக் கரையலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-15 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சப்தமி விடியற்காலை 5.49 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : சித்திரை பின்னிரவு 2.16 மணி வரை பிறகு சுவாதி

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீ ராமர் மூலவருக்கும், ராகவேந்திர சுவாமிக்கும் குருவார திருமஞ்சன சேவை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ரிஷப வாகன பவனி. மதுரை மீனாட்சி யம்மன் விருஷப சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சந்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இரக்கம்

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-அன்பு

    கடகம்-மேன்மை

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-பொறுமை

    துலாம்- செலவு

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- நற்செயல்

    மகரம்-போட்டி

    கும்பம்-ஆதரவு

    மீனம்-ஜெயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
    • தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாக கூறுவர்.

    சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.

    இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

    பாடல்:-

    புனை அழல் ஓம்புகை அந்தணாளர்

    பொன்னடி நாள்தோறும் போற்றிஇசைப்ப

    மனைகெழு மாடம் மலிந்தவீதி

    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

    சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த

    சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

    கனைவளர் கூர்எரி ஏந்தி ஆடும்

    கணபதி ஈச்சரம் காமுறவே.

    - திருஞானசம்பந்தர்

    விளக்கம்:-

    சிறப்பிக்கப்படும் வேள்வித் தீயை தமது கையால் உபசரிக்கும் அந்தணர்களின் திருவடியை நாள்தோறும் போற்றி, வேத கீதத்தால் வணங்கி, அத்தகையோரின் மாட மாளிகைகள் நிறைந்தது திருமருகல் திருத்தலம். இங்கு எழுந்தருளி உள்ள இறைவனே! அரும்புகள் நிறைந்த சோலைகளும், குளிர்ந்த வயல்களும் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் எரியும் நெருப்பை திருக்கரத்தில் ஏந்தி கணபதி ஈச்சரத்தில் விரும்பி நடனம் ஆடுவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!

    ×