என் மலர்

    வழிபாடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இறைவனின் கட்டளையை ஏற்று வாழ்ந்த மனிதர்கள் இம்மையிலும் மறுமையிலும் சிறப்புகளை அடைந்தனர்.
    • மனிதன் எப்படி தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தனது வேதங்கள் மூலம் விளக்கி கூறினான்.

    பரந்து விரிந்த வான்வெளியில் பல கோடிக்கணக்கான கோள்கள், நட்சத்திரங்கள், துணைக்கோள்கள் போன்றவை உள்ளன. இவற்றில் மனித இனம் வாழக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் நிறைந்தது இந்த பூமி.

    இந்த பூமியில் ஆதி மனிதனை படைத்த ஏக இறைவன் அல்லாஹ். மனித வாழ்வுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இங்கு ஏற்படுத்தினான். மனிதன் எப்படி தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தனது வேதங்கள் மூலம் விளக்கி கூறினான். மேலும் மனிதர்களை நேர்வழிப்படுத்த நபிமார்களையும் அனுப்பி வைத்தான்.

    இறைவனின் கட்டளையை ஏற்று வாழ்ந்த மனிதர்கள் இம்மையிலும் மறுமையிலும் சிறப்புகளை அடைந்தனர். இத்தகைய சிறப்பான வாழ்க்கை வாழ மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் ஒன்று நன்மைகளையே நாடுவது. இதுபற்றி திருக்குர்ஆனிலும், நபி மொழிகளிலும் ஏராளமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

    நன்மை செய்ய வேண்டும் என்பது முக்கியமானதாக இருந்தாலும், ஒருவர் நன்மை செய்ய வேண்டும் என்று மனதால் நினைத்தால் கூட அதுவே நன்மையாக அமையும் என்று நபி மொழிகள் கூறுகின்றன. அதுகுறித்த நபி மொழி இது-

    "ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணி விட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும், அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கை விட்டால் , அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் பதிவு செய்கிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் பதிவு செய்கிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    இந்த உலக வாழ்வில் நாம் செய்யும் நன்மைகள், மறுமை வாழ்வுக்கான சேமிப்பாக அமைகிறது என்பதை திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது. நாம் செய்யும் நன்மைகள் எப்படி எல்லாம் நமக்கு இறைவனின் அருட்கொடைகளாக மாறுகிறது என்பதை கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் அறியலாம்.

    "இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்". (திருக்குர்ஆன் 2:110).

    நன்மைகள் செய்பவர்களை இறைவன் மிகவும் நேசிக்கின்றான் என்று திருக்குர்ஆன் இவ்வாறு சாட்சி கூறுகிறது.

    "அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்". (திருக்குர்ஆன் 2:195).

    நன்மைகள் செய்வதென்றால் அது எவ்வாறு இருக்க வேண்டும், யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகம் மனிதர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. இதற்கும் திருக்குர்ஆன் வழிகாட்டுகிறது.

    நபியே அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்" என்று; நீர் கூறும்: "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் கொடுங்கள்; மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து தக்க கூலி தருபவனாக இருக்கிறான்" (திருக்குர்ஆன் 2:215).

    மேலும் நபி (ஸல்) அவர்களிடம் ஒருமுறை, 'யாருக்கு அதிகமாக நன்மை செய்ய வேண்டும்' என்று கேட்ட போது, தாய்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பதில் அளித்தார்கள். அதன் விவரம் வருமாறு:

    ``இறைத்தூதர் அவர்களே! நான் யாருக்கு அதிக நன்மை செய்ய வேண்டும்?'' என நான் அவர்களிடம் கேட்டேன். ``உன் தாய்க்கு'' என அவர்கள் கூறினார்கள். ``பின்னர் யாருக்கு?'' என நான் கேட்டேன். ``உன் தாய்க்கு'' என்றே கூறினார்கள். ``பின்னர் யாருக்கு?'' என நான் கேட்டேன். ``உன் தாய்க்கு'' என்றே கூறினார்கள். ``பின்னர் யாருக்கு?'' என நான் (நான்காவது முறை) கேட்டேன். ``உன் தந்தைக்கும், உன் நெருங்கிய உறவினருக்கும். பின்னர், அதற்கடுத்து நெருங்கிய உறவினருக்கு'' என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள் என பஹ்ஜ் இப்னு ஹாகிம் அறிவித்தார். (நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ).

    அல்லாஹ்வின் நல்லடியார்களே, நாளும் நன்மைகள் பல செய்வோம், இறையருள் பெறுவோம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
    • கரூரில் அமராவதி நதியின் வடக்கரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-4 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சப்தமி காலை 10.58 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 10.01 மணி வரை பிறகு உத்திரட்டாதி

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை

    திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருப்பெந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.

    ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடக்கரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-நிறைவு

    மிதுனம்-வரவு

    கடகம்-நட்பு

    சிம்மம்-நன்மை

    கன்னி-பாசம்

    துலாம்- செலவு

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு- சலனம்

    மகரம்-முயற்சி

    கும்பம்-இன்பம்

    மீனம்-பணிவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாளைய தினத்தில் இயன்றவரை பானகம், வெல்லம், வெல்லப்பாகு மட்டுமே உண்டு உபவாசம் இருப்பது சிறப்பு.
    • சாகம்பரி தேவி மூலிகை சக்திகள் நிறைந்த அசோக மரத்தை தோற்றுவித்தத் திருநாள் புதாஷ்டமி தினமாகும்.

    அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு பிறகு வரும் எட்டாவது திதியானது 'அஷ்டமி' எனப்படும். இந்த அஷ்டமி திதி புதன்கிழமையன்று அமையப் பெற்றால் அத்தினத்திற்கு 'புதாஷ்டமி' என்று பெயர். நாளை (18-ந்தேதி) புதாஷ்டமி தினமாகும்.

    அளப்பரிய நன்மைகளை அள்ளித்தரும் வழிபாட்டிற்குரிய விரத தினமாக புதாஷ்டமி தினம் கருதப்படுகிறது. பொதுவாக அஷ்டமி தினமானது காளி, துர்க்கை, பைரவர், சப்தகன்னியர் போன்ற தெய்வங்களுக்குரிய வழிபாட்டு தினமாக கருதப்படும்.

    குறிப்பாக அஷ்டமி திதிகளில் பைரவர் வழிபாடு சிறப்பானது. நாளை புதாஷ்டமி விரதம் இருந்தால் தொலைந்து போனது கிடைக்கும். கிடைப்பது நல்லதாக அமையும்.

    அவ்வகையில் இந்த புதாஷ்டமியும் அஷ்டமாதர்களை வழிபடுவதற்குரிய சிறப்பான விரத தினமாக நமது பெரியோர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.

    முன்னொரு காலத்தில் கவுசிகன் என்பவன் அவருடைய சகோதரி விஜயை ஆகியோர் கங்கைக்கரையில் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் மேய்ச்சலில் இருந்த அவர்களுடைய அரியவகை எருது ஒன்று காணாமல் போய்விட்டது. இதனால் பதறித் தவித்து அலைந்தனர்.

    அப்பொழுது, பசியால் வாடிய கவுசிகன், கங்கைக்கரையில் புதாஷ்டமி விரதபூஜையில் ஈடுபட்டிருந்த தேவமகளிரைக் கண்டு, பசி அதிகமாக இருப்பதாகவும் ஏதாவது உணவு இருந்தால் தாருங்கள் என்று கேட்டான். அதற்கு அந்த பெண் பூஜையில் சிரத்தையாக ஈடுபடுவோருக்கு மட்டுமே தர இயலும் என்று கூறினாள். இதையடுத்து கவுசிகனும், விஜயையும் அப்பூஜையில் பங்கேற்று, அவர்கள் அளித்த பிரசாதத்தினை உண்டு விரத பூஜையில் பங்கேற்றனர்.

    அதன் பலனாக, தொலைந்த எருது கிடைத்தது. அதோடு அவனது வாழ்வும் வளம்பெறத் தொடங்கியது. விஜயை நற்கணவனைப் பெற்றாள். கவுசிகனும் அயோத்தியின் அரசன் ஆனான்" எனப் புராணங்கள் சொல்கின்றன.



    "இந்த புதாஷ்டமி விரதம் மேற்கொள்வது எப்படி?" என்று பார்க்கலாம்.

    நாளைய தினத்தில் இயன்றவரை பானகம், வெல்லம், வெல்லப்பாகு மட்டுமே உண்டு உபவாசம் இருப்பது சிறப்பு. மாவிலைகளால் தைக்கப்பட்ட இலையில் கற்கண்டு சேர்த்த அன்னத்தினை இட்டு நிவேதித்து அஷ்டமாதர்களான பிராமி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சண்டி, மற்றும் சாமுண்டி ஆகியோரை வழிபட வேண்டும். அந்த அன்னத்தை தானம் செய்வதாலும் அறிவாற்றல் சிறக்கும். மூளைபலம் உண்டாகும். முன்னோர்கள் ஆசிகள் கிட்டிடும். இந்த நாளில் எழுதுபொருள்களை தானம் செய்வதால் வித்யா கடாட்சம் உண்டாகும்.

    புதன் கிரகமானது புத்திக்கு உரிய காரகத்துவம் உடைய கிரகம். கற்றலில் மந்தமானவர்கள், மூளைத்திறன் குறைந்தவர்கள், மந்தபுத்தி உடையவர்கள், படிப்பினைக் கண்டு அஞ்சுபவர்கள், குழப்பமான நிலையில் இருப்பவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள் ஆகியோர் புதாஷ்டமி அன்று விரதம் இருந்து இறைவழிபாடு செய்திட, அப்பிரச்சனைகளில் இருந்து நிரந்தர நிவாரணம் பெற முடியும்.

    புதாஷ்டமி விரதம் எளிமையானது. நாளை அதிகாலை 4.30 மணி, 6 மணி, 8 மணி, 10 மணி, மதியம் 12 மணி, மாலை 3, 6.30 மணி, இரவு 8.30 மணிக்கு என 8 முறை விளக்கேற்ற வேண்டும். குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் மற்றும் இனிப்பு வகைகளை பிரசாதமாக கொடுக்க வேண்டும்.

    சிவாலயங்களில் உள்ள பைரவர் சன்னதியில் செவ்வரளி மாலை அணிவித்து வணங்க வேண்டும். கடன் தொல்லை ஏற்படாமல் இருக்க, குழந்தைகளுக்கு நோய் நொடி தாக்காமல் இருக்க இந்த வழிபாடு உதவும். மேலும் பெண்களுக்கு தடையின்றி திருமணம் நடக்க இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

    சாகம்பரி தேவி மூலிகை சக்திகள் நிறைந்த அசோக மரத்தை தோற்றுவித்தத் திருநாள் புதாஷ்டமி தினமாகும். எனவே புதனும் அஷ்டமியும் கூடும் நாட்களில் ஆலயங்களில் உள்ள அசோக மர தரிசனம் மற்றும் மரத்தை வலம் வருதல் விசேஷமானது.

    மருத்துவ குணம் கொண்டது அசோக மரம். இந்த மரத்தின் பட்டை, பெண்களின் கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு மருந்தாக உள்ளது. தமிழகத்தில் ஓசூர், திருவண்ணாமலை, ரமணர் ஆசிரமம் ஆகிய இடங்களில் அசோக மரங்கள் உள்ளன.

    சகல புண்ணிய பலன்களையும் அள்ளித் தந்திடும் இந்த புதாஷ்டமி விரத தினத்தன்று, இயன்றளவு சிவாலய வழிபாடு செய்து அளப்பறிய நற்பலன்களை பெறலாம்.

    பெண்கள் நாளை புதாஷ்டமியில் ஸ்ரீகால பைரவரை வணங்கி புனிதமான நல்வரங்களைப் பெற வேண்டிய பைரவ பூஜை செய்யலாம்.

    நாளை பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நன்று. ஐந்து வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும். ஐந்து தனி தனி அகல் எடுத்துக் கொண்டு, ஒரு அகலில் நல்லெண்ணெய், இன்னொரு அகலில் இலுப்பை எண்ணெய், மற்றொன்றில் விளக்கெண்ணெய், பசு நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும்.

    ஒரு எண்ணெய் மற்றொரு எண்ணெயுடன் சேரக்கூடாது. இவ்வாறு ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். குறிப்பாக கால பைரவர் சிவபெருமானின் ருத்ரஅம்சமாக கருதப்படுபவர். சிவனின் நெற்றி கண்ணில் இருந்து தோன்றியவர். இதனால் உக்கிரமான ஆற்றல் அவரிடம் நிரம்பி உள்ளது.

    சிவாலயங்களில் வடகிழக்கு திசை நோக்கி இருக்கும் பைரவரை வழிபட்டால் உடனடியாக அவரது அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். பைரவரை ஒருவர் எந்த அளவுக்கு வழிபடுகிறாரோ அந்த அளவுக்கு அவரிடம் வாழ்வில் உள்ள அனைத்து பயங்களும் நீங்கி விடும். பயம் நீங்கினால் தானாகவே வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

    அதுமட்டுமல்ல பைரவர் வழிபாடு அஷ்டசித்திகளையும் தரும் ஆற்றல் கொண்டது. நாளை புதாஷ்டமி தினத்தில் வழிபட்டால் பைரவரிடம் இரட்டிப்பு பலன் பெற முடியும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 16 கோவில்களில் இருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தனர்.
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை ஆகியவை சார்பில் 91-ம் ஆண்டு கருட சேவை பெருவிழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து, 26 பெருமாள்கள் கருடசேவை விழா நேற்று (திங்கட்கிழமை) நடந்தது.

    இதனைத் தொடர்ந்து, 16 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி பெருவிழா என்கிற நவநீத சேவை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இதில் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள், நரசிம்மப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், மேல ராஜவீதி நவநீத கிருஷ்ணன், விஜயராமர் சன்னதி, எல்லையம்மன் தெரு ஜனார்த்தனப் பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கீழ ராஜவீதி வரதராஜப் பெருமாள், தெற்கு ராஜவீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராம சுவாமி பெருமாள், மகர்நோம்புச்சாவடி நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதப் பெருமாள், படித்துறை வெங்கடேசப் பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆகிய 16 கோவில்களில் இருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தனர்.

    பின்னர் அங்கிருந்து 16 பெருமாள்களும் புறப்பட்டு கீழராஜவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஒரே நேரத்தில் 16 சுவாமிகள் அவர்களுக்கு சேவை சாதித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். விழாவில் நாளை (புதன்கிழமை) விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரத உற்சவம்.
    • திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    இந்த வார விசேஷங்கள்

    17-ந் தேதி (செவ்வாய்)

    * சஷ்டி விரதம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராத்திரி உற்சவம் ஆரம்பம்.

    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரத உற்சவம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    18-ந் தேதி (புதன்)

    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா, ஊஞ்சலில் விருட்சப சேவை.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    19-ந் தேதி (வியாழன்)

    * திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    * சுவாமிமலை முருகப் பெருமானுக்கு தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * மேல்நோக்கு நாள்.

    20-ந் தேதி (வெள்ளி)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    21-ந் தேதி (சனி)

    * சர்வ ஏகாதசி.

    * திருத்தணி சுப்பிரமணியர் திருக்குளம் வலம் வரும் காட்சி.

    * திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * சமநோக்கு நாள்.

    22-ந் தேதி (ஞாயிறு)

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    23-ந் தேதி (திங்கள்)

    * பிரதோஷம்.

    * கார்த்திகை விரதம்.

    * செப்பறையில் ஆனி உற்சவம் ஆரம்பம்.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    • ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-3 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சஷ்டி நண்பகல் 12.41 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : சதயம் இரவு 11.06 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் ரதோற்சவம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை.

    ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி சமீபம் 3-ம் ஆண்டு நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருப்பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆக்கம்

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-இணக்கம்

    கடகம்-வரவு

    சிம்மம்-செலவு

    கன்னி-வெற்றி

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- தெளிவு

    மகரம்-கவனம்

    கும்பம்-போட்டி

    மீனம்-சிறப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • பெசன்ட்நகர் ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-2 (திங்கட்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பஞ்சமி பிற்பகல் 2.04 மணி வரை பிறகு சஷ்டி.

    நட்சத்திரம் : அவிட்டம் இரவு 11.53 மணி வரை பிறகு சதயம்.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருவான்மியூர், மயிலாப்பூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்

    இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. சோழவந்தான் ஸ்ரீஜனகை மாரியம்மன் சிம்ம வாகன பவனி. திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீமகாலிங்க சுவாமி,

    திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்சுவரர், திருவான்மியூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீவிஜயாசனப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன அலங்கார சேவை. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீபூவண்ணநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-பெருமை

    கடகம்-மேன்மை

    சிம்மம்-உயர்வு

    கன்னி-தெளிவு

    துலாம்- கவனம்

    விருச்சிகம்-தாமதம்

    தனுசு- களிப்பு

    மகரம்-உழைப்பு

    கும்பம்-மாற்றம்

    மீனம்-பாராட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேத காலத்தில் உலகம் முழுவதுமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது.
    • சுனை நீரைக் கொண்டு இங்கிருக்கும் தெய்வ விக்கிரகங்கள் அனைத்திற்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஊரில் ஒன்று, சிருங்கேரி. இங்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட, சைவ மத பீடம் இருக்கிறது. இந்த ஊரின் அருகில் 'கேசவே' என்ற திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு 'கமண்டல நதி கணபதி திருக்கோவில்' இருக்கிறது. உயிர்கள் அனைத்துக்கும் ஆதாரமாக, அவசியமாக இருக்கும் ஒரே பொருள், நீர். அந்த நீர் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கும் ஆலயமாக இந்த கமண்டல கணபதி கோவில் திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில், விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக உள்ள ஒரு சிறிய துளையில் இருந்து தண்ணீர் பொங்கி வந்தபடியே இருக்கிறது.

    வேத காலத்தில் உலகம் முழுவதுமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது தாகத்தை தணிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அனைத்து உயிர்களும் பரிதவித்தன. அப்போது அன்னை உமாதேவி இந்த கோவிலில் வீற்றிருக்கும் தன் மூத்த மைந்தனான கமண்டல கணபதி விக்ரகத்திற்கு அடியில், வற்றாத தண்ணீர் சுனையை ஏற்படுத்தி உலக உயிர்களின் தாகத்தை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது.

    சில நேரங்களில் பொங்கியும், சில நேரங்களில் சாதாரண அளவிலும் இந்த துளையிலிருந்து நீர் வந்து கொண்டே இருக்கிறது. இந்த சுனை நீரைக் கொண்டு இங்கிருக்கும் தெய்வ விக்கிரகங்கள் அனைத்திற்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனை புனித தீர்த்தமாக கருதி பக்தர்கள் குடுவைகளில் பிடித்துச்செல்கின்றனர். விநாயகரின் முன்பாக உற்பத்தியாகும் புனித நீர், அங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் ஓடி, சற்று தொலைவில் பாயும் துங்கா நதியில் கலக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
    • பாலதண்டயுதபாணி சுவாமி கோவில்க ளில் பவனி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-1 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சதுர்த்தி பிற்பகல் 3.02 மணி வரை

    பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : திருவோணம் நள்ளிரவு 12.16 மணி வரை பிறகு அவிட்டம்

    யோகம் : அமிர்த, மரணயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருவோண விரதம், அம்மன் கோவில்களில் பால் அபிஷேகம், ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை

    இன்று திருவோண விரதம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் புறப்பாடு. காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், சோழ வந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி, பழனி ஸ்ரீ பாலதண்டயுதபாணி சுவாமி கோவில்களில் பவனி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பணிவு

    ரிஷபம்-பண்பு

    மிதுனம்-கடமை

    கடகம்-அமைதி

    சிம்மம்-நட்பு

    கன்னி-நலம்

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-பாசம்

    தனுசு- பணிவு

    மகரம்-பக்தி

    கும்பம்-ஆதாயம்

    மீனம்-சிறப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூமியில் பிறந்த அனைவரும் தங்களின் கர்ம வினைகளுக்கேற்ற பலன்களை அடைவது உறுதி.
    • திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    திருச்சியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருகமணி என்ற ஊர். இங்கு ஆனந்தவல்லி உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

    பூமியில் பிறந்த அனைவரும் தங்களின் கர்ம வினைகளுக்கேற்ற பலன்களை அடைவது உறுதி. அதில் ஒருவரின் வாழ்க்கையின் முக்கியமான, திருமணத் தடையும் இருக்கலாம். 30 வயதைக் கடந்தும், ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கு திருமணம் நடைபெறாமல் உள்ளது. இதற்கு பலவிதமான காரணங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் விலகி நிம்மதியாக வாழ்வதற்கு சித்தர்கள் மூலமாக சிவபெருமான் பல வழிகளைக் காட்டியுள்ளார். அவற்றில் ஒன்றுதான், இந்த பெருகமணி அகத்தீஸ் வரர் கோவில் வழிபாடு.

    இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால், திருமணத் தடை விலகி விரைவிலேயே திரு மணம் நடைபெறும் என்கிறார்கள். இந்த ஆலயத்தில் கருவறையில், 'அகத்தீஸ்வரர்' என்ற பெயரில் சிவபெருமான் வீற்றிருக் கிறார். இத்தல இறைவியின் திருநாமம், 'ஆனந்தவல்லி' என்பதாகும். ஆலய தல விருட்சமாக வில்வ மரம் இருக்கிறது.

    பல கோடி யுகங்களுக்கு முன்பாக சிவபெருமான், தமிழ் மொழியை முருகப்பெருமானுக்கு கற்றுத்தந்தார். முருகப்பெருமான், தமிழின் சுவையை சித்தர்களின் தலைவராக கருதப்படும் அகத்தியருக்கு போதித்தார். அத்தகைய சிறப்புமிக்க அகத்தியருக்குரிய 'ஓம் அகத்தீசாய நமக' என்ற குரு மந்திரத்தை நாம் ஜெபித்தால், அனைத்து விதமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.

    இந்த பூமியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆலயங்களிலும் அகத்தியர் வழிபாடும், பூஜையும் செய்திருக்கிறார். தவிர, அகத்தியரால் உருவான ஆலயங்களும் ஏராளமாக இருக்கின்றன. அகத்தியரால் உருவாக்கப்பட்ட சிவலிங்கங்கள் மூலவராக அமைந்த ஆலயங்களுக்கு 'அகத்தீஸ்வரர் கோவில்' என்றே பெயர் அமைந்திருக்கும்.

    அகத்தியர் சித்தர்களின் தலைவராகப் போற்றப்படுவது போல, பெண் சித்தர்களின் தலைவியாக அகத்தியரின் மனைவி லோபமுத்ரா போற்றப்படுகிறார். அகத்தியருக்கும், லோபமுத்ராவிற்கும் திருமணம் நடந்த இடமாகவே திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் உள்ள பெருகமணி அகத்தீஸ்வரர் கோவில் திகழ்கிறது.

     

    அகத்தியர் - லோபமுத்ரா

    ஒரு தலைசிறந்த சிவபக்தனை மணம் முடிக்க வேண்டும் என்று லோபமுத்ரா சபதம் எடுத்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்காக, அகத்தியர் பல்வேறு விதமான உபதேசங்களை, லோபமுத்ராவுக்கு வழங்கினார். அதன் முடிவாக, தான் எதிர்பார்த்த தலைசிறந்த சிவனடியார் அகத்தியர் என்பதை லோபமுத்ரா உணர்ந்துகொண்டார். அதன்பிறகு அவர்கள் இருவரும் இங்கு திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

    30 வயதைக் கடந்தும் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. அகத்தியர் பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் அன்று, இங்கே வருகை தருவது மேலும் சிறப்பான அருளைப் பெற்றுத் தரும் என்கிறார்கள். அப்படி வரும் போது, இங்குள்ள மூலவருக்கும், அம்பாளுக்கும் ஒரு மரிக்கொழுந்து மாலை மற்றும் ஒரு மல்லிகைப் பூ மாலை அணிவித்து ஒரு முகூர்த்த நேரம் (90 நிமிடங்கள்) பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் தல விருட்சமான வில்வ மரத்தை, அகத்தியருக்கு பிடித்த 8 எண் இலக்கத்தை குறிக்கும் வகையில் எட்டின் மடங்குகளில் வலம் வர வேண்டும். அப்போது 'அகத்தீசாய நமக' என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதற்கான பலனை திருமணமாகாதவர்கள், விரைவில் அடைவார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்காரம்.
    • திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு வைகாசி-31 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திருதியை பிற்பகல் 3.27 மணி வரை

    பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : உத்திராடம் நள்ளிரவு 12.11 மணி வரை

    பிறகு திருவோணம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை

    மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் கோவில்களில் ஹோமம், வழிபாடு வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்

    இன்று சங்கடஹர சதுர்த்தி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்காரம். அரியங்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் தெப்ப உற்சவம். சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் விருஷப வாகன புறப்பாடு. மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் விடாயாற்று குமரகுருபர சுவாமி குரு பூஜை. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருச்சி உச்சிப் பிள்ளையார், ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமாள் கோவில்களில் காலை ஹோமம், அபிஷேகம், வழிபாடு. மதுரை ஸ்ரீ கூடலகர், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள், ஸ்திரவார திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாராட்டு

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-அமைதி

    கடகம்-நன்மை

    சிம்மம்-நட்பு

    கன்னி-நலம்

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-பாசம்

    தனுசு- ஆதாயம்

    மகரம்-சோர்வு

    கும்பம்-பக்தி

    மீனம்-ஓய்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சீதை, தனக்கு நேரும் துன்பத்திற்கு எல்லாம், தான் செய்த முன்வினைப் பயன்தான் என்று நம்பினார்.
    • நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.

    ஒருவர் நமக்கு துன்பம் விளைவித்தால், அவர்களை நாம் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு நாம் செய்த முன்வினைப் பயனும் கூட காரணமாக இருக்கலாம். ஆகையால் நமக்கு வந்த துன்பத்தில் இருந்து விடுபடுவதற்குத்தான் நாம் முயற்சிக்க வேண்டுமே தவிர, நமக்கு துன்பம் விளைவித்தவர்களின் மீது கோபம் கொண்டு அவர்களை பழி வாங்க நினைக்கக்கூடாது.

    ராமாயண இதிகாசத்தில், அனுமனிடம் இதுபற்றி சீதைபிராட்டி சொன்ன விஷயத்தை இங்கே பார்க்கலாம்..

    ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதை, அசோகவனத்தில் பலம் பொருந்திய பல அரக்கிகளின் நடுவே கடும் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அந்த அரக்கிகள், ராவணனின் விருப்பத்திற்கு அடிபணியும்படி சீதையை தினமும் துன்புறுத்தி வந்தனர். ஆனால் அதற்காக சீதை, அந்த அரக்கிகள் மீது கோபம் கொள்ளவில்லை. தனக்கு நேரும் துன்பத்திற்கு எல்லாம், தான் செய்த முன்வினைப் பயன்தான் என்று நம்பினார்.

    சீதையை திருப்பி அனுப்பும்படி, ராமபிரான் பல முறை ராவணனுக்கு தூது அனுப்பியும் அவன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் வேறு வழியின்றி யுத்தம் தொடங்கியது. அந்த யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டான். அந்தச் செய்தியை, அசோகவனத்தில் இருந்த சீதையிடம் வந்து கூறினார், அனுமன்.

    அதைக்கேட்டு மகிழ்ச்சியுற்ற சீதை, "நான் முன்பு ஒரு முறை உயிர் துறக்க நினைத்தபோது, நீதான் வந்து என்னைக் காப்பாற்றி, ராமர் விரைவில் என்னை மீட்பார் என்று கூறினாய். அப்போது உனக்கு சிரஞ்சீவியாக இருக்கும் வரம் அளித்தேன். இப்போது ராமரின் வெற்றிச் செய்தியை கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று கூறினார்.

    அதற்கு அனுமன், "தாயே எனக்கு வரம் எதுவும் தேவையில்லை. கடந்த பல மாதங்களாக உங்களை துன்புறுத்திய இந்த அரக்கிகளை தீயிட்டு கொளுத்துவதற்கு மட்டும் எனக்கு அனுமதி தாருங்கள்" என்று வேண்டினார்.

    அதற்கு மறுப்பு தெரிவித்த சீதை "இந்த அரக்கிகள் என்னை துன்புறுத்தினாலும், அவர்களை தண்டிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. ஏனெனில் இந்த துன்பங்களுக்கு நான் செய்த முன்வினை பாவமே காரணம். பொன்மான் என்று நினைத்து மாயமானுக்கு ஆசைபட்டேன். அதை கொண்டு வர என் கணவரை அனுப்பினேன். அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததாலும், 'லட்சுமணா, லட்சுமணா' என்று அபயக் குரல் எழுப்பியதாலும், பயந்து போன நான், எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை சென்று பார்த்து வரும்படி கூறினேன். அவர், என் கணவருக்கு எந்த ஆபத்தும் நேர்ந்திருக்காது என்று மறுத்து கூறியும், அதை ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனைக் கண்டித்தேன். ஒரு பாவமும் அறியாமல், இரவும் பகலுமாக எங்களை கண்ணிமை போல காத்து வந்த லட்சுமணனை மனம் நோகச் செய்ததுதான், நான் அனுபவித்த துன்பத்திற்குக் காரணம். எனவே நீ அரக்கிகளை எதுவும் செய்துவிடாதே" என்றார்.

    நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.

    ×