வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 31 ஜூலை 2025
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-15 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சப்தமி விடியற்காலை 5.49 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : சித்திரை பின்னிரவு 2.16 மணி வரை பிறகு சுவாதி
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராமர் மூலவருக்கும், ராகவேந்திர சுவாமிக்கும் குருவார திருமஞ்சன சேவை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ரிஷப வாகன பவனி. மதுரை மீனாட்சி யம்மன் விருஷப சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சந்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இரக்கம்
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-அன்பு
கடகம்-மேன்மை
சிம்மம்-ஆதரவு
கன்னி-பொறுமை
துலாம்- செலவு
விருச்சிகம்-நன்மை
தனுசு- நற்செயல்
மகரம்-போட்டி
கும்பம்-ஆதரவு
மீனம்-ஜெயம்