என் மலர்

    வணிகம் & தங்கம் விலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் ரூ.2 ஆயிரத்து 200 உயர்ந்து, சவரன் ரூ.74 ஆயிரத்து 320 எனும் இமாலய உச்சத்தை எட்டியது. இது, நடுத்தர, ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால், மறுநாளே அந்தர் பல்டியாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவு சரிவை சந்தித்தது. அதாவது, கடந்த 23-ந்தேதி, சவரன் ரூ.2 ஆயிரத்து 200 குறைந்து, மீண்டும் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, 24-ந்தேதி ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்கப்பட்டது. பின்னர், 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையில் தொடர்ந்து 4 நாட்கள், தங்கம் விலை எந்தவித மாற்றங்களும் இன்றி இருந்தது.

    இதனை தொடர்ந்து, 4 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.65-ம், ஒரு சவரன் ரூ.520-ம் குறைந்து, முறையே, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 940-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 520-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,980, சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520

    27-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    26-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    25-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    24-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-04-2025- ஒரு கிராம் ரூ.111

    27-04-2025- ஒரு கிராம் ரூ.112

    26-04-2025- ஒரு கிராம் ரூ.112

    25-04-2025- ஒரு கிராம் ரூ.111

    24-04-2025- ஒரு கிராம் ரூ.111

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் பங்கு இன்றைய வர்த்தகத்தில் 5.27 சதவிதம் உயர்ந்தது.
    • சன் பார்மா, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், லார்சன் அண்டு டூர்போ பங்குகளும் உயர்வு.

    பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்று மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி ஆகியவை ஏற்றத்துடன் முடிவடைந்தது.

    கடந்த இரண்டு வாரங்களில் ஏழு நாட்கள் சரிவை சந்தித்த பங்குச் சந்தை இன்று ஏற்றத்தை கண்டது.

    கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 79,212.53 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 79,343.63 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக 79,341.35 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 80,321.88 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 1,005.84 புள்ளிகள் உயர்ந்து 80,218.37 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 289.15 புள்ளிகள் உயர்ந்து 24,328.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் பங்கு இன்றைய வர்த்தகத்தில் 5.27 சதவிதம் உயர்ந்தது. மார்ச் மாத காலாண்டில் நிகர லாபம் 2.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிறுவனத்தின் அறிவிப்பு இந்த உயர்வுக்கு காரணமாகும்.

    555 கோடி ரூபாய்க்கு எஸ்.எம்.எம். இசுசு நிறுவனத்தை கையகப்படுத்தியதாக அறிவித்ததால் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவன பங்கு 2.29 சதவீதம் அதிகரித்தது.

    சன் பார்மா, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், லார்சன் அண்டு டூர்போ, ஐசிசிஐ வங்கி நிறுவன பங்குகளும் உயர்வை சந்தித்தன.

    ஹெச்.சி.எல். டெக், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்லே, இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 23-ந்தேதி சவரனுக்கு ரூ.2,200-ம், ஒரு கிராம் ரூ.275-ம் ஏறிய வேகத்திலேயே சரிந்தது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்த வண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த 22-ந்தேதி புதிய உச்சமாக சவரன் ரூ.74,320-க்கு விற்பனையானது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இனி, தங்கம் விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், மறுநாளே அர்ந்தர் பல்டி அடித்தது. 23-ந்தேதி சவரனுக்கு ரூ.2,200-ம், ஒரு கிராம் ரூ.275-ம் ஏறிய வேகத்திலேயே சரிந்தது. அதனை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் விற்பனையாகி வருகிறது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,005-க்கும் சவரன் ரூ.72,040-க்கும் விற்பனையாகிறது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.71 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.8,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    1 கிலோ பார் வெள்ளி ஆயிரம் ரூபாய் குறைந்து ரூ.1 லட்சத்து 11ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    27-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    26-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    25-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    24-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    23-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    27-04-2025- ஒரு கிராம் ரூ.112

    26-04-2025- ஒரு கிராம் ரூ.112

    25-04-2025- ஒரு கிராம் ரூ.111

    24-04-2025- ஒரு கிராம் ரூ.111

    23-04-2025- ஒரு கிராம் ரூ.111

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 12ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்த வண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த 22-ந்தேதி புதிய உச்சமாக சவரன் ரூ.74,320-க்கு விற்பனையானது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து பெரிய அளவில் மாற்றமில்லாமல் தங்கம் விற்பனையாகி வருகிறது.

    இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.9,005-க்கும் சவரன் ரூ.72,040-க்கும் விற்பனையாகிறது.

    கடந்த 5 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 112-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 12ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    25-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    24-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    23-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    22-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    21-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    25-04-2025- ஒரு கிராம் ரூ.111

    24-04-2025- ஒரு கிராம் ரூ.111

    23-04-2025- ஒரு கிராம் ரூ.111

    22-04-2025- ஒரு கிராம் ரூ.111

    21-04-2025- ஒரு கிராம் ரூ.111

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 79,830 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது
    • எச்.சி.எல் டெக், எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை லாபத்தில் உள்ளன.

    ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதால் இந்திய பங்குச் சந்தைகள் சரிவில் வர்த்தகமாகின்றன.

    மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 79,830 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது, ஆனால் காலை 11.30 மணிக்கு 1,004 புள்ளிகள் வரை சரிந்து 78,797.39 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 50 24,289 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கி, காலை 11.30 மணிக்கு 338 புள்ளிகள் சரிந்து 23,908 புள்ளிகளாகக் குறைந்தது.

    ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை பின்தங்கின. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், எச்.சி.எல் டெக், எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை லாபத்தில் உள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்தது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த 22-ந்தேதி, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.9 ஆயிரத்து 290-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில், சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்தது.

    இனி, தங்கம் விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், மறுநாளே அர்ந்தர் பல்டி அடித்தது. 23-ந்தேதி சவரனுக்கு ரூ.2, 200-ம், ஒரு கிராம் ரூ.275-ம் ஏறிய வேகத்திலேயே சரிந்தது. நேற்றும் தங்கத்தின் விலை சற்று குறைந்தது. ஒரு கிராம் ரூ.10-ம், ஒரு சவரன் ரூ.80-ம் குறைந்து, கிராம் ரூ.9 ஆயிரத்து 5-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை. தங்கம் விலை சவரன் ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராம் ரூ.9,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    24-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    23-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    22-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    21-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    20-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    24-04-2025- ஒரு கிராம் ரூ.111

    23-04-2025- ஒரு கிராம் ரூ.111

    22-04-2025- ஒரு கிராம் ரூ.111

    21-04-2025- ஒரு கிராம் ரூ.111

    20-04-2025- ஒரு கிராம் ரூ.110

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்செக்ஸ் 315.06 புள்ளிகள் சரிவடைந்து 79,801.43 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
    • நிஃப்டி 82.25 புள்ளிகள் சரிந்து 24,246.70 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி கடந்த 7 நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று சரிவை சந்தித்துள்ளது.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் செக்சென்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 520.90 புள்ளிகள் உயர்ந்து, கடந்த 4 மாதங்களுக்குப்பின் மீண்டும் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்த 80116.49 புள்ளிகளாக இருந்தது.

    இன்று காலை வர்த்தகம் 80,058.43 புள்ளிகளுடன் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 80,173.92 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 79,724.55 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 315.06 புள்ளிகள் சரிவடைந்து 79,801.43 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 82.25 புள்ளிகள் சரிந்து 24,246.70 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஹெச்.சி.எ். டென்னாலாஜிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, கோடக் மகந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் பைனான்ஸ் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    இந்தூஸ்இந்த் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, டைட்டன், ஆசியன் பெயின்ட்ஸ் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.

    இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவன பங்கு 4 சதவீதம் வரை சரிவை சந்தித்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. நேற்று முன்தினம் இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சத்தையும் தொட்டது. நேற்று முன்தினம் மட்டும் கிராமுக்கு ரூ.275-ம், பவுனுக்கு ரூ.2,200-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 290-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், 'அந்தர்பல்டி' அடித்தது போல், நேற்று முன்தினம் எந்த அளவுக்கு உயர்ந்ததோ, அதே அளவுக்கு நேற்று குறைந்து இருந்தது.

    அதன்படி, நேற்று கிராமுக்கு ரூ.275-ம், பவுனுக்கு ரூ.2,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 15-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 120-க்கும் விற்பனை ஆனது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    23-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    22-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    21-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    20-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

    19-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    23-04-2025- ஒரு கிராம் ரூ.111

    22-04-2025- ஒரு கிராம் ரூ.111

    21-04-2025- ஒரு கிராம் ரூ.111

    20-04-2025- ஒரு கிராம் ரூ.110

    19-04-2025- ஒரு கிராம் ரூ.110

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது.
    • ஐ.டி. நிறுவனங்களின் பங்குகள் இன்று அதிக அளவில் ஏற்றம் கண்டன.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி ஆகியவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வரி விதிப்பு காரணமாக இந்த மாதம் தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்தன. பின்னர் சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியை 90 நாட்கள் நிறுத்தி வைத்தார். அதன்பின் பங்குச் சந்தை ஏற்றம் கண்டது.

    கடந்த 6 நாட்களாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்த நிலையில் இன்று 7ஆவது நாளாகவும் உயர்வுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. மேலும் கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு சென்செக்ஸ் தற்போது 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.

    இன்றைய வர்த்தகத்தில் 520.90 புள்ளிகள் உயர்ந்து 80,116.49 புள்ளிகளில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நிறைவடைந்தது.

    ஹெச்.சி.எல். நிறுவனத்தின் பங்கு 7.72 சதவீதம் உயர்ந்தது. 2024-25 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டின் நிகர லாபம் 4307 கோடி ரூபாய் என வெளியிட்டிருந்தது. இதனால் அதன் பங்கு அதிக ஏற்றம் கண்டது.

    டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டாடா கல்சண்டன்சி சர்வீசஸ், டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், மாருதி நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டனம்.

    கோடக் மஹிந்திரா, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, எஸ்.பி.ஐ. ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி இன்றைய வர்த்தகத்தில் 161.70 புள்ளிகள் உயர்ந்து 24328.95 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    வெளிநாட்டு நிதி வரவு மற்றும் நேர்மறையான உலகளாவிய டிரெண்ட்ஸ் ஆகியவை பங்குச் சந்தை உயர்வுக்கு காரணம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்கம் விலை நேற்று அதிகரித்து காணப்பட்டது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை தினமும் பேசப்படக்கூடிய ஒரு சொல்லாக மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் 'கிடுகிடு'வென தங்கம் விலை உயர்ந்து கொண்டே வந்து, புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது.

    அதிலும் கடந்த 9-ந்தேதியில் இருந்து ராக்கெட் வேகத்தில் விலை ஏறி வருகிறது. கடந்த 13-ந்தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரம் என்ற உச்சத்தை கடந்து இவ்வளவு விலையா? என அப்போது பேசப்பட்டது. அதன் பிறகு 2 நாட்களுக்கு விலை குறைந்து அனைவரும் சற்று மூச்சுவிட்ட நிலையில், மீண்டும் 16-ந்தேதியில் இருந்து உயரத் தொடங்கியது.

    இந்த முறை ராக்கெட் வேகத்தைவிட 'ஜெட்' வேகத்தில் விலை எகிறி வருகிறது. இதன் விளைவால் கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.71 ஆயிரம், 21-ந்தேதி ரூ.72 ஆயிரம் என்ற இதுவரை இல்லாத உச்சத்தையும் தாண்டியிருந்தது.

    இதன் தொடர்ச்சியாக தங்கம் விலை நேற்றும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 15-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 120-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.275-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 200-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 290-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.275 குறைந்து ரூ.9,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    21-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    20-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

    19-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

    18-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-04-2025- ஒரு கிராம் ரூ.111

    21-04-2025- ஒரு கிராம் ரூ.111

    20-04-2025- ஒரு கிராம் ரூ.110

    19-04-2025- ஒரு கிராம் ரூ.110

    18-04-2025- ஒரு கிராம் ரூ.110

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூடுதல் சேவைகளையும் சிறார்களுக்கு வழங்க முடியும்.
    • வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறார்களுக்கான வைப்பு கணக்குகளைத் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது.

    10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், சேமிப்பு (savings) மற்றும் கால(term) வைப்பு கணக்குகளைத் சுயமாக திறந்து நிர்வகிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

    ஆர்பிஐ சுற்றறிக்கையின்படி, வங்கிகள் தங்கள் இடர் மேலாண்மைக் கொள்கையின் அடிப்படையில் நெட் பேங்கிங் சேவை, ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் காசோலை புத்தகங்கள் போன்ற கூடுதல் சேவைகளையும் சிறார்களுக்கு வழங்க முடியும்.

    இருப்பினும், சிறார்களின் கணக்குகள் அதிகமாகப் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 76.1 புள்ளிகள் உயர்ந்து 24,201.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
    • காளையின் ஆதிக்கத்துடன் லாபத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

    வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) (ஏப்ரல் 22) பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது.

    மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் உயர்ந்து வர்த்தகமாகின்றன.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 319.89 புள்ளிகள் உயர்ந்து 79,728.39 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

    தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76.1 புள்ளிகள் உயர்ந்து 24,201.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

    நேற்று இவ்விரண்டு குறியீடுகளும் காளையின் ஆதிக்கத்துடன் லாபத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.   

    ×