என் மலர்

    கதம்பம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முற்காலத்தில் எல்லாம், நீர்நிலைகளைப் பராமரிப்பது என்பது மிக முக்கியமான ஒரு வேலையாகும்.
    • பயன் தராது எந்த வேலை செய்தாலும் அது வெட்டிவேலை என்றாகிவிட்டது.

    நாம பயன்படுத்துற சில சொற்களை எதன் அடிப்படையில் அப்படிப் பயன்படுத்துகிறோம் என்று எண்ணிப்பார்த்திருப்போமா? அப்படி சில சொற்களை இங்கே பார்ப்போம்..

    வெட்டிவேலை:

    பயனில்லாமல், எந்தவொரு வேலையையும் செய்யாமல் இருந்தால் வெட்டியாக இருப்பதாகவும், பயனில்லாத ஒரு வேலையைச் செய்வதை வெட்டிவேலை என்றும் குறிப்பிடுகிறோம்.

    முற்காலத்தில் எல்லாம், நீர்நிலைகளைப் பராமரிப்பது என்பது மிக முக்கியமான ஒரு வேலையாகும். ஏனெனில், நம் நாட்டில் பெரும்பாலான இடங்கள் வானம் பார்த்த பூமிதான். அது காரணமாக அவரவர் ஊர்களில் இருக்கும் கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களை வெட்டி, தூர்வாரி, ஆழப்படுத்தி பராமரித்துக் கொள்வார்கள். இதற்கென அந்தந்த ஊர் மக்களே அந்த வேலைகளைச் செய்வார்கள். இதற்கென ஊதியம் எதுவும் பெறமாட்டார்கள். அதாவது வெட்டி வேலை செய்வதற்கு எந்தப் பயனும் எதிர்பார்க்க மாட்டார்கள். அதுவே வெட்டி வேலை எனப்படும். நாளடைவில், பயன் தராது எந்த வேலை செய்தாலும் அது வெட்டிவேலை என்றாகிவிட்டது.

    மணி:

    நேரம் எவ்வளவு என்று கேட்பதற்கு நாம் மணி என்ன, மணி எத்தனை, மணி எவ்வளவு என்றுதான் கேட்கிறோம்.

    கடிகாரம் கண்டு பிடிப்பதற்கு முன்னர், நாம் நேரத்தினைக் கணக்கிட மணிக்கூண்டு கட்டி வைத்து அதில் ஒரு மணியினை ஒலிக்கச் செய்தே நேரத்தினைத் தெரிந்து கொண்டு வந்ததால், எத்தனை மணி ஒலித்தது என்பதைக் கொண்டு நேரத்தை அறிந்து வந்தோம். அது சமயம் எத்தனை மணி அடித்தது என்று கேட்பதைப் போல் இன்றும் நேரத்தினை மணியோசையின் எண்ணிக்கையின்படியே கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

    -பி.கே. பாபு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகிழ்ந்து போன கவிஞர் அந்தக் காரை தன்னுடைய கார் போலவே எண்ண துவங்கினார்.
    • மெல்லிசை மன்னர்களின் இசையில் அமைந்த சாகாவரம் பெற்ற பாடல்களில் இப்படி தான் பிறந்தது.

    கவியரசர் கண்ணதாசனிடம் ஏற்கனவே ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் நண்பர் வைத்திருந்த வெளிநாட்டு கார் மீது விருப்பம். அந்த நண்பரும் அதை விற்கப் போகிறார் என்பதை தெரிந்துகொண்ட கவிஞர், அதை தரவேண்டுமென்று விலையும் பேசி முடித்து விட்டார்.

    முழு தொகையும் தர கண்ணதாசனிடம் பணமில்லை. அப்போது மூன்றில் ஒரு பங்கு பணம் தருவதாகவும், பின்னர் மீதியை விரைவில் தருவதாகவும் சொல்ல, நண்பரும் சரி என்று சொல்லிவிட்டார். மகிழ்ந்து போன கவிஞர் அந்தக் காரை தன்னுடைய கார் போலவே எண்ண துவங்கினார்.

    அடுத்த நாள் காலை நண்பரிடம் இருந்து வெளிநாட்டுக் காரை எடுத்து கொள்ள எண்ணினார். இதற்கிடையே அந்த நண்பரிடம் சிலர் , 'கவிஞர் கடன் விசயத்தில் ரொம்ப மோசமென்றும், எனவே மீதி பணம் வருவது கஷ்டம்'என்றும் சொல்ல நண்பர் பீதியானார்.

    அடுத்தநாள் காலை கவிஞர் வண்டியை எடுத்து வர ஓட்டுனருடன் நண்பர் வீட்டுக்குபோக, அந்த நண்பரோ அந்த கார் தனக்கு மிகவும் ராசியானது என்றும், அதை விற்க தன் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கும் விருப்பமில்லை' என்றும் சொல்ல, கவிஞர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

    தான் மிகவும் விரும்பி தன்னுடயதாகவே எண்ணி இருந்த கார் தனக்கு கிடைக்கவில்லையே என்ற மனவருத்தம் இருந்தபோது அன்று மதியம் இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வரவிருந்த 'பணக்கார குடும்பம்' படத்துக்கு சோகப் பாடலின் பல்லவியை இப்படி எழுதினார். " பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக – நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக" என்று. மெல்லிசை மன்னர்களின் இசையில் அமைந்த சாகாவரம் பெற்ற பாடல்களில் இப்படி தான் பிறந்தது.

    -சந்திரன் வீராசாமி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அச்சம் கொள்வதும் துரோகம்தான்..
    • அது உங்கள் உயிருக்கு நீங்கள் செய்யும் துரோகம்..!

    கோபம் கொள்வதும்

    துரோகம்தான்..

    கவலைக் கொள்வதும்

    துரோகம்தான்..

    பெருமைக் கொள்வதும்

    துரோகம்தான்..

    அச்சம் கொள்வதும்

    துரோகம்தான்..

    அவ்வப்போது

    துக்கம் கொள்வதும்கூட

    துரோகம்தான்..

    யாருக்கான

    துரோகமென்றால்?..

    அது உங்கள் உயிருக்கு

    நீங்கள் செய்யும் துரோகம்..!

    உங்கள் உயிர்மீது

    அக்கறை இருக்குமானால்..

    உங்கள் உணர்ச்சிகளின்மீது

    கவனம் கொண்டிருங்கள்..!

    உணர்ச்சிகள் உங்களுக்கு

    கட்டுப்படுகிறவரைதான்..

    நீங்கள் ஆரோக்கியமாக

    இருப்பதாக அர்த்தம்..!

    அவை உங்களைக்

    கட்டுப்படுத்திக் கொண்டிருந்தால்..

    நீங்கள் குணமாக்கப்பட

    வேண்டியவர்..!

    உள்ளார்ந்த நோய்த்தன்மை

    ஆரம்பத்தில் உணர்ச்சிகளின்

    வழியாகத்தான் வெளிக்காட்டும்..

    அதன் அடுத்த நிலைதான்..

    உடல் உபாதைகளாக உணர்வது..!

    நோய்

    உணர்ச்சிகள் வடிவத்தில்

    உள்ளபோதே..

    உங்களை நீங்கள்

    தற்காத்துக்கொள்ள முடியும்..!

    -அன்பு வேல்முருகன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேன் என்பதற்கு அமிர்தம் என்ற ஒரு பெயரும் உண்டு.
    • தேன் சாப்பிட்ட 5 மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும்.

    தேனைவிட இனிய பொருள் ஒன்று இல்லை! தேன் என்பதற்கு அமிர்தம் என்ற ஒரு பெயரும் உண்டு.

    மரம், செடி, கொடிகளில் உள்ள அமிர்தம் எனப்படும் மகரந்தத்தை பருகி தன் உடம்பிலுள்ள பையில் சேகரித்து வைத்துக்கொள்ளும். அது மாறுதலடைந்த பிறகு தேனீக்கள் உமிழ்ந்து அறைகளில் சேர்த்து வைக்கின்றன. இதுதான் தேன் என்னும் அமிர்தமாகிறது.

    தேனில் வைட்டமின் சத்துக்களும், உலோக சத்துக்களும் நிறைந்துள்ளன. தேன் சாப்பிட்ட 5 மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். ஆகவேதான் அது உடம்புக்கு உடனடி பலனை, பலத்தை கொடுக்கிறது.

    குழந்தைகளுக்கு இருமல் வந்தால் 50 மில்லி தேனுடன் அதே அளவு எலுமிச்சை பழரசம் சேர்த்து கலந்து குடிக்க கொடுத்து வந்தால் இருமல் குணமாகும்.

    பார்லி அரிசி கஞ்சியின் தெளிந்த நீருடன் தேன் சேர்த்து குடிக்க கொடுத்து வந்தால் செரியாமை, இருமல், தொண்டைப்புண், நுரையீரல் தொடர்பான நோய்கள் குணமாகும்.

    வயதானவர்களுக்கு வரக்கூடிய கோழையை அகற்றுவதற்கும், உடம்பில் வெப்பத்தை உண்டுபண்ணுவதற்கும், தெம்பு கொடுப்பதற்கும் தேன் நல்லதொரு நிவாரணியாகும்.

    பெண்களின் மார்பக காம்புகளில் வரக்கூடிய ரத்தக்கட்டு, புண் மற்றும் பால் கட்டி போன்றவற்றுக்கு தேனை அதன்மீது பூசி வருவதால் குணமாகும்.

    முகத்தில் கருமை நிறம் மற்றும் கோடு, புள்ளி ஆகியவற்றின்மீது தேனை தடவி வெந்நீரால் கழுவினால் குணமாவதோடு நல்ல வசீகரம் கிடைக்கும்.

    -மரிய பெல்சின்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அறியாமையே விதியின்‌ கைப்பாவை.
    • நம்‌ மூதாதையர்‌ சூட்டிய பெயரே விதி.

    ஒரு ஞானி பிரகதீஸ்வரர் திருக்கோவிலுக்கு விஜயம் செய்தார்.

    கல்மண்ட பத்தின் வடக்கில், அவருக்காக மேடை அலங்கரிககப்பட்டது.

    எதிரே ஆண்களும் பெண்களும் கணக்கிலடங்காது கூடியிருந்தனர்.

    வேதங்கள் பற்றியும், புராணங்களைப் பற்றியும் விளக்கிக் கொண்டே வந்த ஞானியார் "யாரும் கேள்விகள் கேட்கலாம். பதில் சொல்லப்படும்" என்று தெரிவித்தார்.

    மண்டபத்தின் மேற்கு மூலையிலிருந்து ஓர் உருவம் மெதுவாக எழுந்து நின்றது.

    சபையில் இருந்த எல்லோரும் அவரையே திரும்பிப் பார்த்தார்கள்.

    "தாங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்? " என்று ஞானியார் கேட்டார்.

    அவர் சொன்னார்: "சுவாமி! விதியையும் மதியையும் பற்றி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சர்ச்சைகள் தோன்றி முடிவுக்கு வராமல் முடிந்து இருக்கின்றன.

    விதியை மதியால் வெல்லலாம் என்றும், மதியை விதி வென்றுவிடும் என்றும், இரண்டு கருத்துகள் இன்னும் இருநது கொண்டிருக்கின்றன. எது முடிவானதோ சாமிக்கு தெரிந்தால் சொல்லுங்கள். "

    கேள்வி பிறந்ததும், ஞானியார் லேசாகச் சிரித்தார்.

    மண்டபத்தில் இருந்த எல்லோரையும் பார்த்து, எல்லோரும் எழுந்து வெளியே செல்லுங்கள்; நான் கூப்பிட்ட பிறகு வாருங்கள்" என்றார்.

    மண்டபம் காலியாயிற்று.

    இரண்டு நிமிஷங்கள் கழித்து, "எல்லோரும் வாருங்கள்" என்றழைத்தார்.

    திபுதிபுவென்று எல்லோரும் ஓடிவந்து அமர்ந்தார்கள்.

    ஞானியார் கேட்டார்:

    "இந்த மண்டபத்தில் உட்கார்நதிருந்தவர்கள் வெளியே போய் மீண்டும் உள்ளே வந்திருககிறீர்கள். உங்களில் போன தடவை உட்கார்ந்த அதே இடத்தில் உட்கார்நீதிருப்பவர்கள் எத்தனை பேர? "

    எல்லோரும் விழித்தார்கள்.

    நாலைநீது பேர் மட்டும் பழைய இடத்தில் அமர்ந்திருந்தார்கள். மற்ற எல்லோரும் இடம் மாறி இருந்தார்கள். கேள்வி கேட்டவரைப் பார்த்து, ஞானியார் சொன்னார்:

    "பாருங்கள், இந்தச் சின்ன விஷயத்தில்கூட இவர்கள் மதி வேலை செய்யவில்லை.

    கொஞ்சம் நிதானமாக யோசித்தால், இவர்கள் மெதுவாக வந்து, அவரவர் இடங்களில் அமர்நீதிருப்பார்கள்! இவர்கள் மதியை மூடிய மேகம் எது? "

    கேள்வியாளர் கேட்டார்:

    "இது அவர்கள் அறியாமையைக் குறிக்கும்; இதை விதி என்று எப்படிச் சொல்கிறீர்கள்? "

    ஞானியார் சொன்னார்:

    "அறியாமையே விதியின் கைப்பாவை.

    அறிவு எல்லோருக்குமே தெளிவாக இருந்துவிட்டால், விதியும் இல்லை, விதித்தவனும் இல்லை. "

    கேள்வியார் கேட்டார்:

    "மனிதனின் அறியாமையே விதி என்றால், விதிக்கு தனி நியமங்கள் இல்லையா? "

    ஞானியார் சொன்னார்:

    இருக்கின்றன! இந்த உருவத்தில், இந்த இடத்தில் பிறக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை. உங்களைப் பிறக்க வைத்தது விதியின் பிரவாகம்.

    இப்படித்தான் வாழவேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள்; அப்படி வாழ விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.

    எப்போது நீங்கள் நினைத்தது நடக்கவில்லையோ அப்போது உங்கள் நினைவுக்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம். அதற்கு நம் மூதாதையர் சூட்டிய பெயரே விதி."

    விதியை மாற்ற முடியாதா ?

    உங்கள் வினைப் பதிவுக்கு ஏற்ப சில இறைவனின் விருப்பம்.

    அவரை சரணாகதி அடைவதின் மூலம் மாற்ற வாய்ப்புண்டு.

    விதியை மதியால் வெல்லலாம்.

    -கவியரசு கண்ணதாசன்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கம்பெனியில் இருந்து வார நாட்களில் முன்பணம் வாங்கிக்கொள்கின்றனர்.
    • தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

    தமிழ்நாட்டிலேயே அதிகம் குடிப்பது திருப்பூரில்தான். வருடத்துக்குக் கிட்டத்தட்ட 1,100 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறார்கள்.

    ஏன் இப்படி?....

    ஏனென்றால், திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம். அவர்களின் கைகளில் பணப்புழக்கமும் அதிகம். குறிப்பாக வார இறுதிகளில் திருப்பூரின் குடி எகிறுகிறது. அதிகபட்ச நிறுவனங்களில் சனிக்கிழமைதோறும் சம்பளம் போடுகின்றனர்.

    வாரச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு குடிக்க ஆரம்பித்தால், ஞாயிறு முழுக்கக் குடிதான். திங்கட்கிழமை வரையிலும் இந்தக் குடி நீள்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் குடித்துவிட்டு திங்கட்கிழமைகளில் வேலைக்கு வருவது இல்லை. அன்றும் விடுமுறை போலவே இருக்கிறது என்பதால், திங்கட்கிழமைக்கு 'சின்ன ஞாயித்துக்கிழமை' என்று திருப்பூரில் பெயர்.

    'இதை ஞாயிறு, திங்கள்னு பார்க்கிறதைவிட, கையில காசு தீர்ந்துபோற வரைக்கும் குடிப்பாங்கன்னு புரிஞ்சுக்கலாம். அதுக்காக வார சம்பளத்தைப் பத்திரமா வெச்சுக்கிட்டு வாரம் முழுக்கக் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறது இல்லை. அந்த ரெண்டு நாள்ல வெறியோட குடிச்சுட்டு செவ்வாக்கிழமை வேலைக்குப் போறது... அடுத்த அஞ்சு நாளைக்கு வேலை பார்த்துட்டு மறுபடியும் குடி. அதாவது இவங்க வேலை பார்க்கிறதே குடிக்கத்தான்னு ஆயிடுச்சு...' என்கிறார் பனியன் நிறுவனம் ஒன்றின் மேலாளர்.

    அப்படியானால் ஞாயிறு, திங்கள் தவிர்த்த மற்ற நாட்களில் குடிப்பது இல்லையா? அப்படியும் சொல்ல முடியாது. அந்த இரண்டு நாட்களிலும் அதி தீவிரக் குடி; மற்ற நாட்களில் தீவிரக் குடி. அவ்வளவுதான் வித்தியாசம். இதற்காக கம்பெனியில் இருந்து வார நாட்களில் முன்பணம் வாங்கிக்கொள்கின்றனர். முன்பணம் வாங்காத தொழிலாளர்கள் மிகமிகக் குறைவு. ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் முன்பணம் வாங்கி, மரணத்தை நோக்கி தவணைமுறையில் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். திருப்பூரில் மட்டும் ஏன் இப்படி குடித்துத் தீர்க்க வேண்டும்? முதல் காரணம், இங்கு இருக்கும் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இங்கு உதிரிகளாகத்தான் வாழ்கின்றனர். 'இப்படி வாங்குற சம்பளத்தை எல்லாம் குடிச்சே அழிச்சியன்னா, பொண்டாட்டி, புள்ளைங்களை யார் பார்க்குறது?' என்று கேள்வி கேட்க நெருங்கிய உறவுகள் யாரும் அருகில் இல்லை.

    கசக்கிப் பிழியும் வேலையின் காரணமாக நண்பர்கள்கூட இவர்களுக்கு இருப்பது இல்லை. ஒரு மனிதன் சமூகத்துடன் இணையும் புள்ளி எதுவும் கிடையாது.

    இரண்டாவது, வேலை கிடைப்பது குறித்த அச்சம் தொழிலாளர்களுக்கு இல்லை. இந்த வாரம் ஒரு கம்பெனி, அடுத்த வாரம் ஒரு கம்பெனி என்று போய்க் கொள்ளலாம். எங்கும் எப்போதும் வேலை தயாராக இருக்கிறது. இது அவர்களுக்கு ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையைத் தருகிறது. இப்போது கையில் இருப்பதைக் குடித்து அழித்தாலும், நாளையே சம்பாதித்துவிட முடியும் என எதிர்மறையான நம்பிக்கை கொள்கின்றனர்.

    -பீனிக்ஸ் கண்ணன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முந்திகாலத்தில் சட்டை எல்லாம் கிடையாது. துண்டுதான் சட்டை.
    • பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது துண்டு.

    இன்று வேட்டி, சட்டையே கல்யாணம், தீபாவளி, பொங்கலன்று அணியும் யூனிபாரம் மாதிரி ஆகிவிட்டிருக்கிறது. இதில் துண்டை யார் நினைவு வைத்திருக்க போகிறார்கள்?

    துண்டு என்பது வெறும் ஒரு முழ துணியல்ல. கிராம கலாசாரத்தில் அது மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. துண்டு இல்லாமல் பெருசுகள் வெளியே கிளம்பவே மாட்டார்கள்.

    துண்டு தோளில் அமர்ந்தால் நமக்கு மரியாதை. தோளில் துண்டை போட்டுக்கொண்டு கோவிலுக்கு போகிறவர்கள், போனதும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்வார்கள். சாமிக்கு மரியாதை.

    துண்டை எடுத்து தலையில் கட்டினால் களத்தில் இறங்கி புகுந்து விளையாட தயாராகிட்டோம்னு அர்த்தம்.

    முந்திகாலத்தில் சட்டை எல்லாம் கிடையாது. துண்டுதான் சட்டை.

    உட்காரும் முன் துண்டை எடுத்து திண்னையை சுத்தம் செய்யாமல் பெருசுகள் உட்கார மாட்டார்கள்.

    கோபம் வந்தால் துண்டை முறுக்கி சிறுசுகளை அடிக்கவும் அடிக்கலாம். அடிச்சது மாதிரியும் இருக்கும், அவர்களுக்கும் வலிக்காது.

    கோபம் வந்து வெளியேறினா அதற்கான சொற்றொடரே "துண்டை உதறி தோள்ல போட்டுட்டு போயிட்டாரு" என்பதுதான்.

    யாரும் வேண்டாம் என சொல்லி வீட்டை விட்டு வெளியேறுபவன் கூட துண்டை உதறி தோள்ல போட்டுகிட்டு தான் போவான். காரணம் "துண்டில் எதுவும் இல்லை. ஒளிச்சு வெச்சுட்டு எதையும் எடுத்துட்டு போகலை. பார்த்துக்க" என்பதற்கான அடையாளம்.

    தவிர வீட்டை விட்டு போகும் வழியில் மரத்தடியில் தூங்கவேண்டுமெனில் இன்ஸ்டன்டா துண்டு படுக்கையாகும். குளிரடிச்சால் மேலே போர்த்தி தூங்க உதவும் போர்வையாகும். சளி பிடிச்சால் துண்டு இன்ஸ்டன்டா கர்ச்சிப் ஆகும். வெய்யிலடிக்குதா துண்டுதான் தொப்பி, ஊதல்காற்றில் வேட்டியே பறக்கும் ரிஸ்க்கா? துண்டை பெல்ட் ஆக இடுப்பில் கட்டிக்கலாம்.

    அடி உதை வாங்கி துண்டை கீழே போட்டுவிட்டு தப்பித்து ஓடினால் அதற்கான சொற்றொடர் "துண்டை காணோம், துணியை காணோம்" என ஓடினான் என்பதே.

    சோகமான விஷயம் நடந்தால் துண்டை தலையில் முக்காடா போட்டுகிட்டு உட்காரலாம். அப்படி உக்காந்தா பெரிய சோகம் நடந்துருச்சுனு அர்த்தம், வர்ரவங்க எல்லாம் "என்னப்பா கப்பல் கவுந்துருச்சா"னு கேப்பாங்க.

    பஞ்சாயத்தில் பிரச்சனை வந்தால் துண்டை போட்டு தாண்டி சத்தியம் செய்யலாம். அந்த அளவு தன்மானம், மரியாதையுடன் தொடர்புள்ள விசயம் துண்டு. இன்னமும் கிரமங்களில் 'நான் சொல்வது உண்மை,. வேணும்னா துண்டை போட்டு தாண்டறேன்" என்பார்கள்

    பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது துண்டு. சந்தையில் பேரம் பேசும்போது விரல்களை துண்டால் மூடிகிட்டு பேரம் பேசலாம். அதுக்குனு தனி மொழியே இருக்கு.

    காய்கறிவிக்கறவங்க துண்டை எடுத்து சும்மாடா தலையில் கட்டி அதுக்கு மேல தான் கூடையை வெப்பாங்க.

    இப்பேர்ப்பட்ட துண்டை இப்ப யாரும் கட்டறதே கிடையாது.

    அதனால இப்படி எல்லாம் துண்டு புராணத்தை பதிவு பண்ணி வெச்சா தான் வருங்கால தலைமுறைக்கு துண்டின் மகிமை தெரியும்.

    - நியாண்டர் செல்வன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாரியார் சுவாமிகள் நிதானமாக, “அப்படியா…. சரி, என் தலைவர் இருக்கட்டும்.
    • எல்லோரும் தலைவருக்கு மாலை வாங்கிப் போடுவதற்காக, போட்டிபோட்டு வாங்கிட்டு போயிடுவாங்க….” என்றார்.

    ஒருமுறை மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் திருநாவுக்கரசரின் பெருமை பற்றி சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார் வாரியார் சுவாமிகள்.

    நாவுக்கரசர் புகழ் ஓங்கியதை பொறுக்காத சமணர்கள் மன்னர் மகேந்திரவர்ம பல்லவனிடம், நாவுக்கரசரைப் பற்றி, பொய்யான செய்திகள் சொல்லி, அவரை கொல்ல வேண்டுமென்னு தூபம் போட்டனர்.

    திருநாவுக்கரசரை கல்தூணில் சங்கிலியால் பிணைத்து, நடுக்கடலில் கொண்டபோய் மூழ்கடிக்குமாறு காவலர்களை ஏவினான் அரசன். அவர்களும் அப்படியே செய்தார்கள்.

    "சொற்றுணை வேதியன் சோதியானவன்……"

    என்று பதிகம் பாட அவர் பக்தியின் சக்தியால் இரும்பு சங்கிலிகள் மலர் சரங்களாக மாறின. கல்தூண் கனமற்ற தக்கையாகி, பின் படகாக உருவெடுக்க, அதில்ஏறி கரை ஒதுங்கினார். என்னே என் திருநாவுக்கரசரின் பக்தி! என்று வாரியார் சுவாமிகள் மனம் மகிழ்ந்து சொல்லிக் கொண்டிருக்கையில்,

    நாத்திக இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் எழுந்து,"சரி உங்க தலைவர் மாதிரி, உங்களையும் கல்லோடு சேர்த்து கட்டி, இந்த கோவில் பொற்றாமரை குளத்திலே தூக்கி போட்டுடலாம்.. உங்க தலைவர், திருநாவுக்கரசர் மாதிரி அவர் தொண்டர் நீங்க தப்பித்து வர்றீங்களான்னு பார்க்கலாமா….?" என்று கேட்க, சபையோர் திடுக்கிட்டுப் போயினர்.

    ஆனால், வாரியார் சுவாமிகள் நிதானமாக, "அப்படியா…. சரி, என் தலைவர் இருக்கட்டும்;

    உன் தலைவர் யாரு? அவர் மதுரைக்கு வந்திருக்காரா…. அவர் வந்தா, அவருக்கு நீ என்ன செய்வே?" என்று கேட்டார்.

    அந்த நாத்திக அன்பர், "எங்க தலைவர் மதுரைக்கு வந்தால் அவருக்கு மாலை மரியாதை செய்வதுதான் என் முதல் வேலை. அன்றைக்கு பூக்கடையிலே மாலையே கிடைக்காது; எல்லோரும் தலைவருக்கு மாலை வாங்கிப் போடுவதற்காக, போட்டிபோட்டு வாங்கிட்டு போயிடுவாங்க…." என்றார்.

    "தலைவருக்கு மாலை மரியாதை செய்கின்றனரே…. அவர் தொண்டனான உனக்கு யாரும் மாலை மரியாதை செய்ய மாட்டார்களா?" என்று கேட்டார் வாரியார்.

    "அதெப்படி…..? தலைவருக்குத்தான் மாலை மரியாதை செய்வாங்க; அதெல்லாம் தொண்டனுக்கு எப்படி கிடைக்கும்….?" என்றார் அந்த அன்பர்.

    உடனே வாரியார், "எப்படி மாலை மரியாதையெல்லாம் உன் தலைவரைத் தவிர, தொண்டரான உனக்கில்லையோ, அதுபோலத்தான் அற்புத சக்தி, அருமை, பெருமையெல்லாம் என் தலைவர் திருநாவுக்கரசருக்கு மட்டும்தான் உண்டு; அவர் தொண்டனான எனக்கு அந்த சக்தி கிடையாது……" என்று சொல்லவும், அந்த அன்பர் வாயடைத்துப்போய் உட்கார்ந்து விட்டார்.

    -செல்வகுமார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மன ஒற்றுமை, உடல் ஒற்றுமை இருக்கும் என்பதை கண்டறிய இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.
    • மனித யோனிகளின் தன்மைகளை மிருக யோனிகளின் தன்மையோடு ஒப்பிட்டு கூறியிருக்கிறர்கள் ரிஷிகள்.

    யோனி என்பது புணர்ச்சி உறுப்புகளைக்குறிக்கும். தாம்பத்திய உறவில் ஈடுபடும் ஆண், பெண் இருவருக்குமிடையே எந்த அளவிற்கு மன ஒற்றுமை, உடல் ஒற்றுமை இருக்கும் என்பதை கண்டறிய இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

    மனித யோனிகளின் தன்மைகளை மிருக யோனிகளின் தன்மையோடு ஒப்பிட்டு கூறியிருக்கிறர்கள் ரிஷிகள். தாம்பத்திய உறவில் ஈடுபடும் மனிதனின் எண்ணம் மற்றும் செயல்பாடுகள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மிருகத்தின் செயல்பாடுகளை ஒத்திருக்கும் என்பது ரிஷிகளின் கருத்தாகும். நட்சத்திர யோனி விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

    அசுவினி - ஆண் குதிரை

    பரணி - ஆண் யானை

    கார்த்திகை - பெண் ஆடு

    ரோகிணி - ஆண் நாகம்

    மிருகசீரிஷம் - பெண் சாரை

    திருவாதிரை - ஆண் நாய்

    புனர்பூசம் - பெண் பூனை

    பூசம் - ஆண் ஆடு

    ஆயில்யம் - ஆண் பூனை

    மகம் - ஆண் எலி

    பூரம் - பெண் எலி

    உத்தரம் - எருது

    அஸ்தம் - பெண் எருமை

    சித்திரை - ஆண் புலி

    சுவாதி - ஆண் எருமை

    விசாகம் - பெண் புலி

    அனுஷம் - பெண் மான்

    கேட்டை - கலைமான்

    மூலம் - பெண் நாய்

    பூராடம் - ஆண் குரங்கு

    உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)

    திருவோணம் - பெண் குரங்கு

    அவிட்டம் - பெண் சிங்கம்

    சதயம் - பெண் குதிரை

    பூரட்டாதி - ஆண் சிங்கம்

    உத்திரட்டாதி - பாற்பசு

    ரேவதி - பெண் யானை

    மிருகங்களை மூன்று வகையாக பிரிக்கலாம் அவை:

    1.தாவர உண்ணிகள்

    2.ஊண் உண்ணிகள்

    3. அனைத்துண்ணிகள்.

    தாவர உண்ணிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் அவை:

    1. கொம்புள்ளவை

    2. கொம்பில்லாதவை

    ஆடு, எருது,பசு,எருமை,மான், இவை கொம்புள்ள தாவர உண்ணிகளாகும்.

    குதிரை,யானை இவை கொம்பில்லாத தாவர உண்ணிகளாகும்.

    நாய்,பூனை, புலி,சிங்கம், நாகம்,சாரைஇவை ஊண் உண்ணிகளாகும்.

    எலியும் குரங்கும் அனைத்துண்ணிகளாகும்.

    கொம்புள்ள தாவர உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். இதுபோல் கொம்பில்லாத தாவர உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும்.

    ஊண் உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும்.

    எலி, கீரி போன்ற அனைத்துண்ணிகளுக்கு புணர்ச்சி உறுப்பு ஒரே மாதிரியாக இருக்கும்.

    நாகம்,சாரை போன்ற ஊண் உண்ணிகளுக்கு புணர்ச்சி உறுப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்.

    மனிதர்களின் யோனி பேதங்கள் மிருகங்களின் யோனி பேதங்களை ஒத்திருக்கும் என்பது ரிஷ்களின் கருத்தாகும். ஆண்,பெண் இருவருடைய யோனி பேதங்களை அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் மூலமாக கண்டறிந்து அவை பரஸ்பரம் இணைவதற்கு ஏற்றவைதானா என்பதை கண்டறிவது யோனிப்பொருத்தம் பார்ப்பதின் நோக்கமாகும்.

    மிருகங்கள் புணர்ச்சியில் ஈடுபடும்போது குண பேதங்கள் காணப்படும். உதாரணமாக ஆடுகள் அடிக்கடி புணர்ச்சியில் ஈடுபடும். ஆனால் புணர்ச்சி நேரம் மிகவும் குறைவுதான். நாய்கள் அடிக்கடி புணர்ச்ச்சியில் ஈடுபடுவதில்லை, ஆனால் புணர்ச்சி நேரம் அதிகமாகும்.

    பூனை, புலி, சிங்கம் போன்ற மிருகங்கள் புணர்ச்சியின்போது மிகவும் ஆக்ரோஷமாக செயல்படும்.

    யானை, நாகம் போன்றவை மறைவான இடத்தில் மட்டுமே புணர்ச்சியில் ஈடுபடுபவை.

    அவரவர் ஜென்ம நட்சத்திரத்தை தெரிந்துகொண்டால் அவரின் எண்ணம் மற்றும் செயல்பாடுகள் புணர்ச்சியின்போது எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

    தாவர உண்ணிகளுக்கும் அனைத்துண்ணிகளுக்கும் ஊண் உண்ணிகள் பகையாகும்.

    கொம்புள்ள தாவர உண்ணிகள் கொம்பில்லா தாவர உண்ணிகளுக்கு பகையாகும்.

    ஒரே வகையை சேர்ந்த மிருகங்களின் யோனிகள் பரஸ்பர நட்பாகும்.

    வெவ்வேறு வகையை சேர்ந்த மிருக யோனிகள் பரஸ்பரம் பகையாகும். இதன் அடிப்படையில் மிருக யோனிகளின் பகை விவரம் தரப்பட்டுள்ளது.

    குதிரை X எருமை

    குதிரை X பசு

    யான X சிகம்

    ஆடு X குரங்கு

    பாம்பு Xகீரி

    பூனை X நாய்

    பசு X புலி

    எருமை X புலி

    மான் X புலி

    எலி X பூனை

    எலி Xபாம்பு

    மான் X நாய்

    - ரவி சங்கரன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மூக்கின் வழியாக உள்ளிழுக்கும் காற்றில் மாசு கலந்திருக்கும்போது, மாசு அளவைப் பொறுத்து பாதிப்பு ஏற்படுகிறது.
    • மூளையில் ஞாபகத்திறன் குறைந்து மூளை தன்னிலை இழந்து நிற்கும்.

    நாம் சுவாசிக்கும் காற்றில் 78 சதவீதம் நைட்ரஜனும் 21 சதவீதம் ஆக்ஸிஜனும் மீதமுள்ள 1 சதவீதம் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு, ஓசோன், மீத்தேன் என்று இன்னும் பல வாயுக்களும் கலந்துள்ளன.

    வளர்ந்துவரும் நாகரிகத்தாலும், வாகனங்களின் அதிகரிப்பாலும், தொழிற்சாலைகளின் தொடர் இயக்கத்தாலும், காற்று மாசு அதிகரித்து வருகிறது.

    காற்று மாசுபடுவதால் நுரையீரல் நோய் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், காற்றும் கபாலத்தினுள் இருக்கும் மூளையும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. காற்று மாசுபட்டால் நமது மூளையிலும் பாதிப்பு ஏற்படும் என்கின்றன, புதிய ஆய்வுகள்.

    நமது மூக்கில் உள்ள ஆல்பாக்டரி எபிதீலியம் எனும் உறுப்பு, நாம் வாசனையை உணர்வதற்கு உதவுகிறது. இதுவே நம் மூளையையும் காற்றையும் தொடர்புபடுத்துகிறது. நமது மூக்கின் வழியாக உள்ளிழுக்கும் காற்றில் மாசு கலந்திருக்கும்போது, மாசு அளவைப் பொறுத்து பாதிப்பு ஏற்படுகிறது. மாசுத்துகளின் அளவு அதிகமாக இருந்தால், நமது மூக்கில் இருக்கும் முடியானது துகள் உள்ளே செல்லாமல் தடுக்கிறது. இந்த துகளானது கொஞ்சம் சிறியதாக இருந்தால் நமது தொண்டை பகுதிவரை செல்கிறது. ஆனால், இந்த துகள் நுரையீரலை சென்றடையாமல், நாம் இதை இருமல் மற்றும் தும்மல் வழியாக வெளித்தள்ளுகிறோம்.

    இந்த துகள், மிகவும் நுண்ணிய அளவில் இருந்தால் ஆல்பாக்டரி எபிதீலியம் வழியாகச்சென்று மூளையில் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளையில் ஞாபகத்திறன் குறைந்து மூளை தன்னிலை இழந்து நிற்கும்.

    நம் வீட்டில் காற்றை சுத்தப்படுத்தும் தொட்டிச்செடிகளை வளர்க்கலாம். துளசி, கற்றாழை, மஞ்சள், மணி ப்ளான்ட், ஓமவல்லி, புதினா ஆகிய சிறிய செடிகள் காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை. வேப்பமரம், புங்கமரம் ஆகிய இரண்டையும் வளர்க்கலாம்...!!!

    -மைக்கேல் ராஜ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்.
    • பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம்.

    ஒன்று வாங்கினால்

    ஒன்று இலவசம் என்பது

    இன்று நிறைய கடைகளில்

    வாடிக்கை ஆகி விட்டது

    வாழ்க்கையிலும் அப்படித்தான்..

    கோபத்தை வாங்கினால்

    இரத்தக் கொதிப்பு இலவசம்

    பொறாமையை வாங்கினால்

    தலைவலி இலவசம்


    வெறுப்பை வாங்கினால்

    பகை இலவசம்

    கவலையை வாங்கினால்

    கண்ணீர் இலவசம்


    நம்பிக்கையை வாங்கினால்

    நண்பர்கள் இலவசம்

    உழைப்பை வாங்கினால்

    ஆரோக்கியம் இலவசம்

    அமைதியை வாங்கினால்

    ஆனந்தம் இலவசம்


    நேர்மையை வாங்கினால்

    நிம்மதி இலவசம்

    அன்பை வாங்கினால்

    அனைத்து நன்மைகளும் இலவசம்

    இலவசமாக எது வேண்டுமென்று

    இன்றேனும் முடிவு செய்யுங்கள்.

    . -திருச்சி தர்மா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எழுத்துக்களை நேராக எழுதுபவர்கள் எந்த பிரச்சனைக்கும் சுலபமாக முடிவு காண்பார்கள்.
    • சங்கிலி தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.

    நாம் ஒருவரது குணத்தை கைரேகை, நட்சத்திரம், ராசி, பிறந்த தேதி மூலம் தெரிந்து கொள்ளலாம். கையெழுத்து மூலமும் அறிய முடியும். ஒருவர் எழுதும் போது அவரது கையெழுத்தானது மாறுபடும். அதன் மூலம் ஒருவரது குணத்தை அறியலாம்.

    பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாகப் பேரார்வம் உடையவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகார தன்மை உடையவர்கள்.

    சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையும் திட்டவட்டமாக செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.

    எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்க்கையில் இன்பம் காண்கிறவர்கள்.

    எழுத்துக்களை இடப்பக்கமாகச் சாய்த்து எழுதுபவர்கள் பயந்த சுபாவம் உடையவர்கள். நடந்து முடிந்த விஷயங்களை நினைத்து கவலைப்படுவார்கள்.


    எழுத்துக்களை நேராக எழுதுபவர்கள் எந்த பிரச்சனைக்கும் சுலபமாக முடிவு காண்பார்கள். இவர்கள் இன்னல்களை எதிர்த்து நிற்க மன உறுதி படைத்தவர்கள்.

    வார்த்தைகளுக்கு இடையே நிறைய இடம் விட்டு, எழுத்துக்களை பிரித்து எழுதுகிறவர்கள் சமூகத்தில் தனித்திருப்பார்கள்.

    சங்கிலி தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.

    எழுத்துக்களையும், வரிகளையும் நெருக்கிக் குறுக்கி எழுதுகிறவர்கள் குறுகிய மனப்பான்மைக் கொண்டவர்கள்.

    எழுதும் போது அடிக்கடி அடித்தும், திருத்தியும் எழுதுகிறவர்கள், குழப்பமான மனப்போக்கு உடையவர்கள்.

    எழுத்துக்களை நீட்டி நீட்டி வேகமாக எழுதுகிறவர்கள் எந்தக் காரியத்திலும் அசாதாரண துணிச்சலைக் காட்டுவார்கள்.

    எழுத்துக்களைச் சுழித்து எழுதுகிறவர்கள் வீண் பெருமையும், அகங்காரமும் உடையவர்கள்.

    எழுத்துக்களின் சுழிகளை அதிகமாகச் சுழிப்பவர்கள் விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள்.

    எழுத்துக்களை குறுக்கி மெதுவாக எழுதுகிறவர்கள், கடுஞ்சிரத்தையும், பிறர் விரும்பாத மனோபாவத்தையும் கொண்டவர்கள்.

    எழுத்துக்களின் சுழிகளைத் தெளிவாக எழுதாதவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்.

    -நட்டாத்தி முருகேஷ்

    ×