என் மலர்

    மற்றவை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பணம் தானே போச்சு. கை கால் நல்லா இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல.
    • கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை அடிக்கடி வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

    1. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

    2. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

    3. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

    4. பணம் தானே போச்சு. கை கால் நல்லா இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல..

    5. சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

    6. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

    7. கஷ்டம் தான், ஆனா முடியும்...

    8. நஷ்டம் தான், ஆனா மீண்டு வந்திடலாம்.

    9. இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?

    10. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

    11. விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு...

    12. உட்கார்ந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதைப் பார்...

    13. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

    14. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

    15. முடியுமான்னு நினைக்காதே. முடியணும்…னு நினை...

    16. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இதை விட நல்லதாகவே கிடைக்கும்.

    17. அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு...

    18. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

    19. திருப்பித் திருப்பி அதையே பேசாதே. அது முடிஞ்சு போன கதை...

    20.சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.

    21. உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

    22. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

    23. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

    24. நாலு காசு பார்க்கின்ற நேரம். கண்டதைப் பேசிக் காலத்தை கழிக்கலாமா?

    ஆம், நண்பர்களே, வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம். முயற்சியுடன் எழுந்திடுங்கள்! உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். வெற்றி நமதே!

    -நட்டாத்தி முருகேஷ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடவுள் சிறிது யோசனை செய்து அது சரி வராது.
    • மனிதன் நினைக்காத இடம் அது தான்.

    கடவுள் இந்த உலகத்தைப் படைத்துவிட்டு, இங்கேயே தங்கிவிட்டார்.

    அப்பொழுது தான் அவர் செய்த தவறு அவருக்கே புரிந்தது. தினம் எதாவது புகார் கொடுக்க மனிதர்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.

    இரவு, பகல் என்ற வித்தியாசம் இல்லை. சில பேர்கள் வந்து, என் பயிர் காய்கிறது. இன்று எனக்கு மழை தேவை. அடுத்து சிலர் வந்து இன்று மழை கூடாது. அது என் வேலையை பாதித்து விடும். நான் களிமண் பானை செய்து சுடுகிறேன்.

    இப்படி நிறைய புகார்கள் முரண்பாடாக வந்து கொண்டே இருந்தது.

    கடவுள் கிட்டத்தட்ட பைத்திய நிலைக்கே சென்றுவிட்டார். அவருக்குச் சரியான தூக்கமும் இல்லை. எல்லாருடைய ஆசைகளையும், தேவைகளையும் அவரால் நிறைவேற்ற முடியவில்லை. ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருந்தது .

    பிறகு ஒரு நாள், தன் மந்திரி சபையைக் கூட்டி, என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்.

    அதில் ஒரு சிலர், இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை . நீங்கள் இமயமலைக்குச் சென்றுவிடுங்கள். அங்கு வந்து யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள் என்றார்கள்.

    கடவுள் சிறிது யோசனை செய்து அது சரி வராது. எட்மண்ட் ஹில்லாரியும், டென்சிங்கும் அங்கு வர இருக்கிறார்கள். பிறகு ஒவ்வொருவராக அங்கேயும் வர ஆரம்பித்து விடுவார்கள்.

    வேறு யோசனை சொல்லவும் என்றார். அடுத்து ஒரு சிலர், சந்திரனுக்குச் செல்லலாமே? என்றார்கள். கடவுள் அதற்கும் அமெரிக்காவும், ரஷ்யாவும் ஆளைத் தயார் பண்ணிக் கொண்டிருகிறது என்றார்.

    சரி எதாவது தொலைதூர நட்சத்திரத்திற்குச் செல்லலாம் என்றார்கள் மற்றும் சிலர்.

    கடவுள் இதெல்லாம் நிரந்தர தீர்வு ஆகாது. எனக்கு நிரந்தரமாக இந்த மனிதத் தொல்லையில் இருந்து விடுபட வேண்டும் என்றார்.

    பிறகு , கடவுளுடைய பழைய வேலையாள் வந்து, மெல்ல அவர் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தார் . உடனே கடவுள் முகம் மலர்ந்து, ரொம்ப சரி, அப்படித்தான் செய்ய வேண்டும் என்று ஆமோதித்தார்.

    அந்தக் கிழவன் சொன்னது என்னவென்றால்,

    மனிதனால் அடைய முடியாத இடம் ஒன்று இருக்கிறது. அது வேறு எங்கேயும் இல்லை. அவனுக்குள்ளேயே இருக்கிறது. அவனுக்குள் மறைந்து கொள்ளுங்கள் என்பதே. அதிலிருந்து கடவுள் அங்கேயேதான் மறைந்து கொண்டு இருக்கிறார். மனிதன் நினைக்காத இடம் அது தான்.

    மிக அருகில் உள்ளதை, மக்களின் அகங்காரம் ஏறெடுத்தும் பார்க்காது. அதில் அதற்கு சுவாரசியமும் இல்லை. ஆகவேதான் மக்கள் உண்மையை தவற விட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

    - ஓஷோ

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பழங்களில் இனிப்பு குறைவான பழங்களுக்கு மவுசு குறைவு தான்.
    • பழங்களை நார்ச்சத்துக்காக சாப்பிடுகிறேன் என்றால் அதே நார்ச்சத்து காய்கறி கீரைகளிலும் உண்டு.

    பொதுவாக பழங்களில் இனிப்பு சுவை அதிகம். பழங்களுக்கு இனிப்பு சுவை தருவது "சுக்ரோஸ்" ஆகும். சுக்ரோஸுக்குள் இருப்பது ஃப்ரக்டோஸும் க்ளூகோஸும் ஆகும்.

    எனவே பழங்களாக சாப்பிட்டாலும் நமது ரத்த க்ளூகோஸ் அளவுகள் கூடும். அதை கட்டுக்குள் வைக்க இன்சுலின் சுரப்பு ஏற்படும்.

    இவ்வாறு ஒரு உணவை சாப்பிடும் போது எத்தனை விரைவாக ரத்த க்ளூகோஸை அது ஏற்றுகிறது என்பதை அளவிட க்ளைசீமிக் இண்டெக்ஸ் (GLYCEMIC INDEX) எனும் அளவீடு உதவுகிறது.

    இனிப்பு சுவை குறைவான பழங்களுக்கு க்ளைசீமிக் இண்டெக்ஸ் குறைவான அளவில் உள்ளது ( கொய்யா காய், எலுமிச்சை, தேங்காய், நெல்லி காய் , வெள்ளரி காய் , பெர்ரிகள் )

    அதுவே இனிப்பு சுவை கூடக் கூட க்ளைசீமிக் இண்டெக்ஸ் உயர்கிறது

    ( பேரீச்சம் பழம், மா, பலா, வாழை, ஆப்பிள், மாதுளை)

    அதிலும் பழச்சாறாக்கி பருகும் போது க்ளைசீமிக் இண்டெக்ஸ் இன்னும் உயர்கிறது. எனவே ஒருவர் சீனி/ நாட்டு சர்க்கரை சேர்க்காமல் பழச்சாறு பருகினாலும் அவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

    அதுவே சீனி/ நாட்டு சர்க்கரை கலந்து அடிக்கடி பழச்சாறு பருகுபவர்களுக்கு நீரிழிவு ( Diabetes) ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாகிறது.

    பழச்சாறு அருந்துபவர்களுக்கு ஏன் அடிக்கடி அதை அருந்த வேண்டும் என்ற இச்சை ஏற்படுகிறது?

    பழச்சாறின் இனிப்பு மற்றும் அதில் உள்ள சீனியும் நாட்டு சர்க்கரையும் ஜிவ்வென்று ரத்தத்தில் க்ளூகோஸை ஏற்றும். இது மூளைக்கு மிகவும் பிடித்த விசயமாகும். மூளை இத்தகைய திடீர் க்ளூகோஸ் ஏற்றுங்களுக்கு எளிதில் அடிமையாகி விடும்

    இதனால் தான் பழச்சாறு மீதும் இனிப்பான பழங்கள் மீதும் நமக்கு இச்சை ஏற்படுகிறது.

    பழங்களில் இனிப்பு குறைந்த பழங்கள் மீது நமக்கு இச்சை தோன்றாமல் இருப்பதற்கு/ குறைவாக இருப்பதற்கு காரணமும் இது தான்.

    பழங்களில் உள்ள சத்துக்களுக்காக அதை உண்பவர்களை பருகுபவர்களை விடவும் அதன் இனிப்பு சுவைக்காகவும் தித்திப்புக்காகவும் தான் அதிகம் விற்கின்றன. இது தான் உண்மை.

    பழங்களில் இனிப்பு குறைவான பழங்களுக்கு மவுசு குறைவு தான்.

    எனினும் நீரிழிவு நோயர்கள் கூட இனிப்பான வாழைபழம், மாம்பழம், பலாப்பழம், பேரீச்சம் பழம் என்று உண்பது இதனால் தான்.

    இனிப்பான ஆப்பிள் பழத்தில் உள்ள அத்தனை சத்துகளும் இனிப்பு குறைவான கொய்யா காயில் உண்டு.

    பழங்களில் உள்ள அத்தனை ஊட்டச்சத்துகளும் நன்மைகளும் காய்கறிகளிலும் உண்டு என்பதை நாம் அறிய வேண்டும்.

    பழங்களை நார்ச்சத்துக்காக சாப்பிடுகிறேன் என்றால் அதே நார்ச்சத்து காய்கறி கீரைகளிலும் உண்டு.

    அதே பழங்களை பழக்கூழாக்கி பருகும் போது நார்ச்சத்து இன்னும் குறைந்து விடுகிறது.

    உதாரணம் ஆரஞ்சு பழத்தின் நார்ச்சத்து 3.1 கிராம் என்றால் ஆரஞ்சு பழச்சாறின் நார்ச்சத்து 0.5 கிராம் என்று ஆறு மடங்கு குறைந்து விடுகிறது.

    இதற்கடுத்தபடியாக இனிப்பு தித்திப்பு சுவை கொண்ட அனைத்து விசயங்களிலும் நம் மூளை அதற்கு அடிமை என்பதால் வரம்பு மீறினாலும் மூளை கண்டிக்காது.

    அதுவே உப்பு காரம் புளிப்பு போன்றவை இத்தகைய வரம்பு மீறினால் உடனடியாக பிரச்சனைகளை கொண்டு வந்து விடுகின்றன

    உதாரணம் குளாப் ஜாமூன் செய்யும் போது வழக்கமாக போட வேண்டிய பத்து ஸ்பூன் சீனிக்கு பதிலாக பதினைந்து ஸ்பூன் போட்டாலும் யாரும் குறை கூற மாட்டார்கள்

    ஆனால் அதுவே சோற்றில் எப்போதும் போடும் உப்பை விட சற்று அதிகமாகப் போட்டாலும் உடனே மூளை கடுப்பாகிவிடும்.

    வரம்பு மீறுதல் என்பது பழங்களை விட பழச்சாறுகளில் எளிதில் நடக்கும்.

    உதாரணம் கரும்பை கடித்து சாப்பிடு என்று கூறினால் ஒரு சிறுவனால் அதிகபட்சம் அரைக் கரும்பைக் கூட முழுவதுமாக ஒரு சமயத்தில் சாப்பிட முடியாது .

    ஆனால் அதுவே கரும்புச்சாறாக்கும் போது ஒரு முழுக் கரும்பும் சாறாகி ஒரு நிமிடத்தில் அவனால் குடித்து விட முடிகிறது.

    ஒரு ஆப்பிள் பழத்தை துண்டுகளாக வெட்டும் போது எட்டு துண்டுகள் கிடைத்தால் அதை இரண்டு சிறுவர்களுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்கலாம்.

    ஆனால் அதே ஆப்பிளை பழச்சாறாக்கினால் இரண்டு பழங்கள் போட்டு ஜூஸ் ஆக்க வேண்டும். இதில் பாலும் சீனியும் சேர்க்க வேண்டியிருக்கிறது .

    பழமாக சாப்பிடும் போது மென்று மெதுவாக சாப்பிடுவதாலும் பழங்களின் திரவத்தன்மை திடமாக( VISCOSITY MORE) இருக்கும் என்பதால் வயிற்றில் நீண்ட நேரம் இருந்து பிறகு கீழிறங்கும்.

    ஆனால் அதுவே பழச்சாறு நீர் போல இருப்பதால் சட்டென ஊற்றினால் விரைவில் வயிற்றை விட்டு இறங்கி விடும். இதனால் இண்ஸ்டண்ட் எனர்ஜி கிடைக்குமே தவிர நீண்ட நேரம் பசி அடங்காது. சீக்கிரமே அடுத்த ஸ்நாக்ஸ் மற்றும் உணவை கேட்கும் சூழல் ஏற்படும் .

    குழந்தைகளுக்கு சிறார்களுக்கு வளர் இளம் பருவத்தினருக்கு பேக்கரி ஸ்நாக்ஸ்களுக்கு பதிலாக பழங்களை உண்ணக் கொடுப்பது நல்லது.

    பழங்களை பழச்சாறாக்கி அடிக்கடி பருகுவது நன்மையன்று. அதிலும் சீனி நாட்டு சர்க்கரை தேன் போன்றவற்றை சேர்த்து பருகுவது நீரிழிவு / ஃபேட்டி லிவர் / பிசிஓடி / உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை வரவழைக்கலாம்.

    இண்ஸ்டண்ட் எனர்ஜி பெற வேண்டிய நேரங்களில் பழச்சாறுகள் கை கொடுக்கும். அப்போதும் இனிப்பு கலப்பது நன்மையன்று.

    நீரிழிவு நோயர்/ உடல் பருமன்/ பிசிஓடி/ ரத்த கொதிப்பு இருப்பவர்கள் இனிப்பு சுவை கொண்ட பழங்களை தவிர்த்து இனிப்பு சுவை குறைந்த பழங்களை விரும்பிச் சாப்பிடலாம்.

    இவர்களுக்கு பழங்களில் உள்ள அத்தனை சத்துகளும் காய்கறிகளிலும் உண்டு. எனவே காய்கறிகள் சாப்பிடலாம்.

    -டாக்டர். பரூக் அப்துல்லா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது.
    • மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர்.

    கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜர். மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர்.

    பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்துக்கான தொடர்வண்டி வசதி இத்தனையும் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்டமுடியவில்லை. அலைந்து சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் அத்தொழில்கூடமமைக்க தமிழகத்தில் தக்க இடமில்லை என்ற முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள்.

    இதைக் கேள்வியுற்ற காமராஜர் அவர்களையும் உடன் சென்றாய்ந்த நம்மவர்களையும் அழைத்தார். அமைதியாக விசாரித்தார். அதிகாரிகள் சுட்டி காட்டிய இடங்களையும் உடன் விசாரித்தார். அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டனர். அவர்கள் கேட்க்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடத்தைக் காட்ட முடியவில்லை என்றனர்.

    ஆனால் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் தமது சுற்றுபயணங்கள் மூலம் நன்கறிந்திருந்த காமராஜர் ஒரு கணம் சிந்தித்து விட்டுக் "காவிரியாற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தைக் காட்டினீர்களா?", அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள்.

    "ஏன்?… இவங்க கேட்டிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே, போய் முதல்ல அந்த இடத்தை காட்டிட்டு எங்கிட்ட வாங்க" என்றார்.

    என்ன ஆச்சர்யம்! அந்த இடத்தைப் பார்வையிட்ட செக் நாட்டு வல்லுனர்களுக்கு அந்த இடம் எல்லா வகைகளிலும் பொருத்தமான இடமாக தொன்றியது.

    அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் "பெல்" என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமே அது.

    காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற சில ஆண்டுகள் வரை எதிர்கட்சி மேடைகளில் அவர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர், இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் என்று கிண்டல் வார்த்தைகளை வீசியதுண்டு.

    அப்போது காமராஜர் மிக அடக்கமாக கூறினார், "பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை".

    -சந்திரன் வீராசாமி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • படிக்கும்போது பாடத்துறைகளையும் சீர்படுத்தி, மாற்றி மாற்றிக் கற்க வேண்டும்.
    • செய்திகளை முறைப்படுத்துதல் என்பது நினைவினை உயர்த்திக்கொள்ள உதவும்.

    நினைவாற்றலை மேம்படுத்துவதற்கு உடற்கூறு ரீதியாக சாத்தியமில்லை. மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்ற விளம்பரங்கள் எல்லாம் ஏமாற்று வேலைதான்.

    சிறந்த நினைவு என்பது நலம் மிகுந்த மூளையைப் பொறுத்தது. எனவே, நல்ல மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், ஒமேகா-3 போன்ற தாதுக்கள் அதிகம் உள்ள உணவு உண்பது நலம் பயக்கும்.

    காய்கறிகள், கீரைகள், பாதாம், வால்நட் போன்ற கொட்டை வகைகள், தேன், கிரீன் டீ, பால் சம்பந்தப்பட்ட உணவுகள், முட்டை, ஒமேகா -3 அதிகம் உள்ள மீன் போன்ற உணவுகள் மூளை வளர்ச்சிக்கும், நினைவாற்றலுக்கும் உதவும். சரியான, போதுமான அளவு தூக்கமும், உடற்பயிற்சியும் அவசியம்.

    இது தவிர நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான சில வழிமுறைகளைப் பார்ப்போமா?இவைகள் நம் குழந்தைகளுக்கும், கல்வி கற்கும் மாணவர்களுக்கும் பயன்படும்.

    1) எதைக் கற்றாலும் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு கற்க வேண்டும்.

    2) பொருளுணர்ந்து கற்பவை எளிதில் கற்கப்படுவதோடு நீண்ட நாட்களுக்கு நினைவிலிருத்தப்படுகின்றன.

    3) எதைக் கற்பதற்கும் SQ3R முறை - அது எதைப் பற்றி என்று ஒரு 'நோட்டம் விடுதல்', அது என்ன என்று கேள்வி எழுப்புதல் (Questioning), வாய்விட்டுப் படித்தல், பலமுறை திரும்பத் திரும்பக் கற்றல்(Repeat), மீள்பார்வை மிகச் சிறந்தது.

    4) கற்கும் போது #ஒப்பித்தல் அல்லது மனனம் செய்தல் சுய மதிப்பீட்டுக்கு வழி செய்கிறது. எனவே, மனப்பாடம் செய்வதற்கு, குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு #ஒப்பித்தல்_முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது

    5) இடைவெளிவிட்டு சிறுகச் சிறுக (ஒவ்வொரு பத்தியாக)கற்றலே சிறந்த நினைவிருத்தலுக்கு நல்லது.

    6) திரும்பத்திரும்ப கற்றல் மறத்தல் எல்லையைத் தாண்டிட துணைபுரியும்.

    7) கற்பவற்றை ஏற்கனவே கற்றவற்றோடு தொடர்புபடுத்தி கற்றலும், கற்கும் பல பகுதிகளுக்கு இடையேயான தொடர்பைப் புரிந்துகொண்டு கற்றலும், படித்தபின் மனனம் செய்தலும் நினைவில் இருத்தலை மேம்படுத்தும் வழிமுறைகளாகும்.

    8) கற்கும் பொருட்களுக்கு இடையே இயற்கையான தொடர்பு ஏதும் இல்லாத போது கூட செயற்கைத் தொடர்புகளை (நினைவுச் சூத்திரங்கள் ) ஏற்படுத்திக் கற்றிட வேண்டும். உதாரணமாக, வானவில்லின் நிறங்களை வரிசையாக நினைவு கூர VIBGYOR என்ற பொருளற்ற செயற்கைச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

    9) பல்புலன் வழிக்கற்றல் மேம்பட்ட நினைவுக்கு வழிவகுக்கிறது. உதாரணமாக, ரேடியோ விளம்பரங்களை விட தொலைக்காட்சி விளம்பரங்கள் சுலபமாக நம் மனதில் பதிந்து வெகுநாட்களுக்கு நீடிக்கின்றன.

    10) எது ஒன்றையும் படிக்கும் போதும் அவ்வப்போது சோதித்து அறிதலும், கற்றபின் #உறக்கம் அல்லது ஓய்வெடுத்தலும், கற்றதால் ஏற்படும் மூளைப் படிமங்களை நிலை பெறச் செய்கின்றன.

    11) படிக்கும்போது பாடத்துறைகளையும் சீர்படுத்தி, மாற்றி மாற்றிக் கற்க வேண்டும். கணிதம் கற்றபின் தமிழ் கற்கலாம்; பின் ஆங்கிலம் கற்கலாம்; அதற்குப் பின் அறிவியல் கற்கலாம்.

    12) கற்கும் செய்திகளை முறைப்படுத்தி அமைப்பதன் மூலம், அந்தச் செய்திகளை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்க முடியும். எனவே, செய்திகளை முறைப்படுத்துதல் என்பது நினைவினை உயர்த்திக்கொள்ள உதவும். மன ஓர்மைக்குத் தியானப்பயிற்சி நல்லது.

    -லீலா ராமசாமி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.
    • நீலகிரி மலைக் காடுகள் இந்தக் காடுகள் பல்லுயிர்கள் வாழும் இடமாக உள்ளன.

    இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஐந்து காடுகள்...

    1. மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனக் காடுகள்... இந்தக் காடுகளில் தான் அதிகமாக புலிகள் வாழ்கிறது. இது பசுமை மாறா காடுகளாகும். இந்த காடுகளை ஒட்டிய ஆற்றுப்பகுதியில் தான் அதிகமாக சணல் பயிரிடப்படுகிறது.

    2. மேகாலயா ஷில்லாங் பகுதிகளில் உள்ள மோப்லாக் டேக் ரெஸ்ட் காடுகள்... வடகிழக்கு இந்தியாவில் உள்ள பசுமை மாறா காடுகள். இவை உலகிலேயே அழகான அருவிகளைக் கொண்டவை.

    3. தமிழ்நாட்டில் சிதம்பரம் அருகில் பிச்சாவரத்தில் உள்ள மாங்குரோவ் சதுப்பு நிலக்காடுகள் இவை 25 சதுர கிலோ மீட்டருக்கு மேல் பறந்து விரிந்து காணப்படுகிறது... ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.

    4. குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காடுகள் இந்தியாவிலேயே இந்தக் காடுகளில் மட்டும்தான் சிங்கம் வாழ்கின்றன.

    5. நீலகிரி மலைக் காடுகள் இந்தக் காடுகள் பல்லுயிர்கள் வாழும் இடமாக உள்ளன. நீலகிரி மலைக் காடுகள் 100 சதுர கிலோ மீட்டருக்கு மேல் பரந்து விரிந்து காணப்படுகின்றன.

    -வீர.அறிவொளி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
    • பிரமிடுகள் கட்டப்படும் போது அந்த இடங்கள் நைல்நதி பாசன விளைநிலமாக இருந்தது.

    எகிப்திய பிரமிடுகள் உலகப் புகழ்பெற்றவை ஆகும். செங்கல் மற்றும் பாறைகளால் கட்டப்பட்ட இவற்றில் சில உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாக இருக்கிறது. இது பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

    எகிப்திய மன்னர்கள் "பரோக்" என்றழைக்கப்பட்டார்கள். நாகரீகம் வளராத ஆரம்ப காலங்களில் மன்னரையே கடவுளாக எதிப்தியர்கள் கருதினார்கள். மன்னர் இறந்தபின் அவர் மறுபடியும் பிறப்பார் என்று நம்பினார்கள்.

    அதனால் அவர் மறுபடியும் பிறந்து மறு உலகிற்கு செல்லும்பொழுது அங்கு வாழ இந்த உடல் தேவை என்பதால் அதனை அழிக்காமல் பதப்படுத்தி பிரமிடுகளில் பாதுகாத்து வந்தனர். அத்துடன் அவருக்குத் தேவையான அத்தனை பொருள்களையும் பிரமிடுகளின் உள்ளே கொண்டுவந்து குவித்தனர்.

    அன்று பிரமிடுகளுக்காக சுரண்டப்பட்ட கனிம வளங்களால் இயற்கைவளம் குன்றி எகிப்தே பாலைவனமானது.

    பிரமிடுகள் கட்டப்படும் போது அந்த இடங்கள் நைல்நதி பாசன விளைநிலமாக இருந்தது.

    பிரமிடுகளின் பிரமாண்டம், பிரமிடுகளின் உள்ளே கொட்டிக்கிடந்த பொற்குவியலையும் பொருள்களின் குவியலையும் பார்த்தாலே எகிப்தின் அன்றய பொருளாதாரம் புரியும்.

    இயற்கை வளத்தை பிரமிடுகளுக்காக சுரண்டப்பட்டதால் குறிப்பாக கற்களுக்காக மலைகளை வெட்டி டன் கணக்கில் பாறைகளை பெயரத்தெடுத்து பிரமிடுகளாக அடுக்கியதன் விளைவு, தட்பவெப்ப நிலை மாறியது. வறட்சியால் எகிப்தின் பெரும்பகுதி பாலைநிலமானது. எகிப்துக்கு உலகப் புகழைப் பெற்றுத்தந்த பிரமிடுகளே அந்நாட்டின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது.

    -நடராசன் இராமநாதன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும்.
    • விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?.

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை அடிக்கடி வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

    1. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

    2. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

    3. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

    4. பணம் தானே போச்சு. கை கால் நல்லா இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல..

    5. சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

    6. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

    7. கஷ்டம் தான்,ஆனா முடியும்...

    8. நஷ்டம் தான் , ஆனா மீண்டு வந்திடலாம்.

    9. இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?

    10. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

    11. விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு...

    12. உட்கார்ந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதைப் பார்...

    13. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

    14.இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

    15. முடியுமான்னு நினைக்காதே. முடியணும்…னு நினை...

    16. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இதை விட நல்லதாகவே கிடைக்கும்.

    17. அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு...

    18. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

    19. திருப்பித் திருப்பி அதையே பேசாதே. அது முடிஞ்சு போன கதை...

    20. சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.

    21. உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

    22. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

    23. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

    24. நாலு காசு பார்க்கின்ற நேரம். கண்டதைப் பேசிக் காலத்தை கழிக்கலாமா?

    ஆம், நண்பர்களே, வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம். முயற்சியுடன் எழுந்திடுங்கள்! உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். வெற்றி நமதே!

    -நட்டாத்தி முருகேஷ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு சில மனிதர்களை மட்டுமே கண்ணுற்றேன் என்றார் சுவாமி.
    • மனிதன் என்றால் அவன் புனிதனாக இருக்க வேண்டும்.

    வள்ளலார் என அழைக்கப்படும் இராம லிங்க சுவாமிகள் மிகப்பெரும் ஞானி.

    வாடிய பயிரைக் கண்டு வாடினேன் என்று மற்றவர் துன்பத்துக்காக வருந்துகின்ற உயர்ந்த பக்குவத்தைக் கொண்டவர்.

    அத்தகு ஞானநிலை கொண்ட இராம லிங்க சுவாமிகள் ஒருமுறை வீதியில் விளக் கொன்றை ஏந்தி நின்று, அவ்வீதியில் சென்று வருவோரைப் பார்க்கிறார்.

    சுவாமிகள் ஏன் இவ்வாறு செய்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் சுவாமிகளிடமே வினவுகின்றனர்.

    சுவாமி! விளக்கை ஏந்தியவாறு ஒவ்வொரு வரையும் பார்க்கிறீர்களே என்ன சங்கதி..?

    இதற்கு சுவாமிகள் கூறுகிறார்; யாரேனும் மனிதர்கள் போகிறார்களா? என்று பார்க்கிறேன் .

    மனித உருவில் ஐந்தறிவு படைத்த விலங்குகளே போய்வருகின்றன. ஒரு சில மனிதர்களை மட்டுமே கண்ணுற்றேன் என்றார் சுவாமி.

    ஆம், மனிதர்கள் எல்லோரும் மனிதர்கள் அன்று. மனிதன் என்றால் அவன் புனிதனாக இருக்க வேண்டும்.

    புனிதன் என்றால் மற்றவர்களை நேசிக்கின்ற மற்றவர்கள் மீது அன்பு செலுத்துகின்ற மற்றவர் துன்பத்தை தன் துன்பம் போல எண்ணுகின்ற பக்குவத்தைக் கொண்டிருப்பதையே அது குறிக்கும்.

    ஆம், அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும் இழுக்காஇயன்றது அறம் என்பார் வள்ளுவர்.

    அழுக்காறு என்பது பொறாமையைக் குறிக்கும். அவா என்பது புலன்வழிச் செல்லுகின்ற ஆசை. வெகுளியானது கடுஞ்சினத்தைக் குறிப்பதாகும். இன்னாச் சொல் என்பது மற்றவர்களைப் புண்படுத்தும் சொல்.

    ஆக, மேற்குறித்த நான்கையும் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.

    இப்போது வள்ளுவன் கூறுகின்ற அறம் நம்மிடம் உண்டா? என்பதை நாம் ஒவ்வொரு வரும் முடிவு செய்வோமாயின், வள்ளலார் விளக்கை ஏந்தி நின்று மனிதர்கள் யாரேனும் போகிறார்களா என்று பார்த்ததன் பொருள் புரியும்.

    -யாழ்குலன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
    • குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது.

    எள்ளு சாப்பிடுவதால் பலவித பயன்கள் நமக்கு கிடைக்கும் என்பதாலே எந்த ஒரு பலகாரம் என்றாலும், அதில் கொஞ்சம் எள்ளை நம் முன்னோர்கள் சேர்த்து சமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.

    எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் மிக முக்கியமானது புற்றுநோயை எதிர்த்து நிற்பதே.

    எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு மகிமைகள் இருக்குமா..? என்று மிகைத்து பார்க்கும் அளவிற்கு இதன் தன்மை உள்ளது. அத்துடன் புற்றுநோயிற்கும் வழி செய்யுமாம். இதற்கு காரணம் என்னனு உங்களுக்கு தெரியுமா..?

    இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் எ போன்றவை தான் எள்ளின் அத்தனை மகத்துவத்திற்கும் காரணம். அத்துடன் இதை சரியான அளவில் எடுத்து கொண்டால் பலன் முழுமையாக கிடைக்குமாம்.

    பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரிதாக வருகின்ற மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பார்த்து கொள்கிறது என தாய்லாந்து ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

    மார்பக புற்றுநோயிற்கு மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது. எனவே, புற்றுநோய் அபாயம் உங்களுக்கு கிடையாது.

    எந்த எள்ளு அதிக ஆற்றல்களை கொண்டது என்கிற கேள்விக்கு பதில், கருப்பு எள் தான். எள்ளை பற்றிய பல ஆய்வுகளில் கருப்பு எள் தான் மகத்துவம் பெற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறதாம்.

    -சின்னசாமி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலை வேளையில் இஞ்சிச் சாற்றைப் பருகவேண்டும்.
    • கடுக்காயின் சிறப்பு என்னவென்றால் உடலுக்குள் புகுந்திருக்கும் நோயைச் சாதுரியமாக வெளியேற்றிவிடுமாம்.

    "காலையில் இஞ்சியும்

    கடும்பகல் சுக்கும்

    மாலையில் கடுக்காயும்

    மண்டலம் உண்டு வந்தால்

    கோலை ஊன்றிக் குறுகி நடப்போரும்

    கோலை வீசிக் குலாவி நடப்பரே!"

    என்று சித்தர் ஒருவர் பாட்டெழுதியிருக்கிறார்.

    எனவே காலை வேளையில் இஞ்சிச் சாற்றைப் பருகவேண்டும். அதனை எப்படித் தயாரிப்பது?

    இஞ்சியின் தோல்நீக்கிச் சாறெடுத்துச் சிறிதுநேரம் வையுங்கள்; அதன் அடியில் மாவு மாதிரி வெண்மையாகப் படிவதை நீக்கிவிட்டு, அச்சாற்றை மட்டும் வெறும் வயிற்றில் பருகுங்கள்.

    இஞ்சிச் சாற்றைப் பருகுவதற்குப் பதிலாக இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு அதனைச் சிறு துண்டுகளாக்கித் தேனில் ஊறவைத்தும் சாப்பிடலாம். இதனை உண்டவுடனே காலை உணவை 'full'கட்டுக் கட்டாமல் அரைமணி/முக்கால் மணி நேரத்துக்குப் பிறகுக் காலை உணவைச் சாப்பிட வேண்டும்.

    கடும்பகல் நேரத்தில் பொடித்து வைத்த சுக்கில் 1 தேக்கரண்டி எடுத்து அதே அளவு பனைவெல்லம் (கருப்பட்டி) கலந்து கொதிக்கவைத்துக் குடியுங்கள்.

    கடும்பகலிலா?! நாங்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பதா? இல்லை...சுக்கைச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதா? என்று அங்கலாய்ப்பவர்கள் மாலை நேரத்தில் காபி/டீக்கு பதிலாகச் சுக்கும் கருப்பட்டியும் கலந்து பருகலாம். வெறுமனே சுக்கையும் கருப்பட்டியையும் கலந்து குடிப்பதைவிடக் கொஞ்சம் பாலும் கலந்தால் சுவையாயிருக்குமே என்று நினைப்பவர்கள் சுக்குக் காபியாகக் கூடக் குடிக்கலாம்.

    "சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை" என்றொரு பழமொழியை எழுதிவைத்துச் சுக்கின் மகத்துவத்தை மக்குகளும் புரிந்துகொள்ள வழிவகுத்திருக்கின்றனர் நம் மக்கள்.

    அடுத்தது கடுக்காய். மாலையில் கடுக்காய் என்று சித்தர் தம் பாடலில் குறிப்பிட்டிருந்தாலும் நாம் கடும் பகலில் சாப்பிட வேண்டிய சுக்கை மாலை நேரத்துக்கு மாற்றிவிட்டதால், உடனே கடுக்காய் சாப்பிடக் கூடாது. எனவே இரவு உணவுக்குப்பின் விதை நீக்கிப் பொடிசெய்யப்பட்ட கடுக்காயை ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து வெந்நீருடன் கலந்து சாப்பிடலாம்.

    கடுக்காயின் சிறப்பு என்னவென்றால் உடலுக்குள் புகுந்திருக்கும் நோயைச் சாதுரியமாக வெளியேற்றிவிடுமாம். அதனால்தான் நம்பும்படி எதையாவது சொல்லி ஏமாற்றித் தப்பிவிடுவோரைக் 'கடுக்காய் கொடுத்துவிட்டான்' என்று கூறுகிறார்கள் போலிருக்கிறது.

    "கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்" என்ற பழமொழியும் கடுக்காயின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.

    சரி…இஞ்சி, சுக்கு, கடுக்காய் இவற்றை எத்தனை நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிடவேண்டும்?

    "ஒரு மண்டலம்" என்கிறார் சித்தர்.

    கமண்டலம் தெரியும்... அது என்ன மண்டலம் என்கிறீர்களா?

    ஒரு மண்டலம் என்பது 48 நாள்கள்!

    ஆக, 48 நாள்கள் இவை மூன்றையும் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடலிலுள்ள நோய்களெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் 'எஸ்' ஆகிவிடுமாம்!

    அப்புறமென்ன…? காலை நம்பாமல் கோலை நம்பி நடக்கும் நம்பியும் கோலை வீசிவிட்டுத் தன் சொந்தக் காலால் தெம்பாக நடப்பான் என்கிறார், பெயர் தெரியாத, இந்தச் சித்தர்.

    மக்களே! அல்சர் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த விஷப் பரீட்சையில் இறங்க வேண்டாம். இஞ்சி, சுக்கு போன்றவற்றிலுள்ள காரம் அல்சரை அதிகப்படுத்திவிடும் அபாயமுண்டு!

    "முயன்று பார்க்கலாம்" என நினைப்பவர்கள் அரைத் தேக்கரண்டி அளவுக்கு இவற்றைச் சாப்பிட்டு ஆட்டத்தை ஆரம்பியுங்கள்! வேறு உபாதைகள் ஏற்பட்டால் சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள்! சித்தர் கோபித்துக்கொள்ளமாட்டார்!

    -மேகலா இராமமூர்த்தி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அடுத்த நாள் பொண்ணு ஒரு பையனை வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாள்.
    • “நான் கிட்டத்தட்ட கடவுளை கண்டுபுடிசிட்டேன் சார் ”ன்னு பெருமையா சொன்னான்.

    ஒரு அம்மா தன் கணவர் கிட்ட சொன்னங்க,

    " ஏங்க நம்ம பொண்ணுக்கு கல்யாண வயசாகுது , காலகாலத்துல கல்யாணம் பண்ணிவைக்க வேண்டாமா?" அதுக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னாங்க.

    "நானும் அது விசயமாத்தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்னு சொன்னார் அவர். .

    பொண்ணும் இவங்க பேசுனத கேட்டுகிட்டு இருந்தாள் .

    அடுத்த நாள் பொண்ணு ஒரு பையனை வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாள்.

    அப்பா கேட்டார் " யாரும்மா இவர்! ...?"

    "அப்பா இவர் பேர் சுரேஷ் . இவர நான் விரும்பறேன், அதான் உங்க கிட்ட பேச அழைச்சிட்டு வந்தேன்". ன்னு சொன்னாள்.

    "அப்படியா! உக்காரப்பா" ன்னு சொல்லி சில கேள்விகளை கேட்டார்..

    "நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ?" அப்படின்னார்.

    "சார்..... நான் கடவுளை பத்தி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்" னு சொன்னான்.

    "உங்க ஆராய்ச்சி எல்லாம் எந்த அளவுக்கு போய்கிட்டு இருக்கு? "அப்படின்னு கேட்டார்.

    "நான் கிட்டத்தட்ட கடவுளை கண்டுபுடிசிட்டேன் சார் "ன்னு பெருமையா சொன்னான்.

    "உங்க வருமானத்துக்கு என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க"ன்னு இவர் கேட்டார் ..

    அவன் "அதெல்லாம் கடவுள் பாத்துக்குவார் சார்"ன்னு சொன்னான்

    "சரிப்பா, ரொம்ப சந்தோசம், போயிட்டு வா"ன்னு வழியனுப்பினார்...

    இப்போ அந்த அம்மா கேட்டாங்க,

    "ஏங்க.. பையன் எப்படிங்க?"

    அவர் சொன்னார் "பையனுக்கு எந்த வேலையும் இல்லை! வருமானத்துக்கும் வழியே இல்லை! வரப்போர மாமனாரைத்தான் கடவுளா நினைசுக்கிட்டு இருக்கான்" அப்படின்னார்.....

    -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்

    ×