என் மலர்

    கதம்பம்

    மனதுக்கு சக்தி கொடுக்கும் மந்திரம்
    X

    மனதுக்கு சக்தி கொடுக்கும் மந்திரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும்.
    • விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?.

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை அடிக்கடி வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

    1. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

    2. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

    3. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

    4. பணம் தானே போச்சு. கை கால் நல்லா இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல..

    5. சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

    6. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

    7. கஷ்டம் தான்,ஆனா முடியும்...

    8. நஷ்டம் தான் , ஆனா மீண்டு வந்திடலாம்.

    9. இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?

    10. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

    11. விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு...

    12. உட்கார்ந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதைப் பார்...

    13. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

    14.இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

    15. முடியுமான்னு நினைக்காதே. முடியணும்…னு நினை...

    16. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இதை விட நல்லதாகவே கிடைக்கும்.

    17. அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு...

    18. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

    19. திருப்பித் திருப்பி அதையே பேசாதே. அது முடிஞ்சு போன கதை...

    20. சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.

    21. உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

    22. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

    23. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

    24. நாலு காசு பார்க்கின்ற நேரம். கண்டதைப் பேசிக் காலத்தை கழிக்கலாமா?

    ஆம், நண்பர்களே, வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம். முயற்சியுடன் எழுந்திடுங்கள்! உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். வெற்றி நமதே!

    -நட்டாத்தி முருகேஷ்

    Next Story
    ×