என் மலர்

    கடலூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தர்கள் ஊரணி பொங்கல் நடைபெற்றது.
    • கிரேனில் பக்தர்கள் தொங்கியபடி அலகு குத்தி சென்று பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த பில்லாலி தொட்டி கிராமத்தில் ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் செடல் உற்சவம் கடந்த 29-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சக்தி கரகம் மற்றும் சாகை வார்த்தல் விழா நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வீதி உலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் விழா நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தர்கள் ஊரணி பொங்கல் நடைபெற்றது.

    தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு உடலில் செடல் போட்டுக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். மேலும் கிரேனில் பக்தர்கள் தொங்கியபடி அலகு குத்தி சென்று பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

     

    பின்னர் சட்டி வைத்து கொதிக்கும் எண்ணெயில் வடையை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் பரவசத்துடன் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கொடி இறக்கும் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் இளைஞர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் இருந்து விவசாயிகள் 3,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் ஆடுகளை வாங்கி சென்றனர்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு மங்களூர், பெரியநெசலூர், காட்டுமயில், கழுதூர், சிறுப்பாக்கம், கொத்தனூர், வேப்பூர், தியாகதுருவம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் இருந்து விவசாயிகள் 3,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஆடிப்பெருக்கு நாளைமறுநாள் (3-ந்தேதி) கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகளின் விற்பனை களை கட்டியது. வாரச்சந்தையில் சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் ஆடுகளை வாங்கி சென்றனர்.

    இதில் கொடிஆடு, கருப்பாடு, வெள்ளாடு, ஜமுனா பூரி, சிவபாடு, ராமநாதபுரம் வெள்ளாடு உள்ளிட்ட 8 விதமான ஆட்டுரகங்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. கடந்த வாரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமான நிலையில், ஆடிப்பெருக்கையொட்டி இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    • கடலூர் புதுநகர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பில்லுக்கடை சந்து தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை குப்பை வாகனத்தை தூய்மை பணியாளர்கள் எடுத்துச்செல்ல முயன்றனர்.

    அப்போது குப்பை எடுக்கும் வாகனத்தில் கட்டு கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் அதிக அளவில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தேர்தல் வாக்கு பதிவின் போது வைக்கப்படும் மை, சீல் ஆகியவையும் கிடந்தது.

    இதனைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் தாசில்தார் மகேஷ் குப்பை அள்ளும் வாகனத்தில் இருந்த வாக்காளர் அடையாள அட்டைகளை சோதனை செய்த போது அனைத்து வாக்காளர் அடையாள அட்டைகளும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

    பின்னர் தாசில்தார் இதனை கைப்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் குப்பை வாகனத்தில் இருந்த வயர்களும் அறுக்கப்பட்டு இருந்தன. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாநகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த வாரம் புதுபிள்ளையார் குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு ராஜா வந்து சென்றுள்ளார்.
    • காசிலிங்கம் உடனடியாக காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புது பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காசிலிங்கம் (வயது 75). நிலக்கடலை வியாபாரி. இவரது மகன் ராஜா (45).

    இவர் விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் புதுபிள்ளையார் குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு ராஜா வந்து சென்றுள்ளார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் காசிலிங்கம் வீட்டின் மேல் தளத்தில் அமைந்துள்ள ராஜாவின் வீட்டிற்கு சென்று விளக்கை ஏற்றி விட்டு கீழே வந்து இரவு தூங்கியுள்ளார். பின்னர் மீண்டும் இன்று காலை விளக்கை அணைப்பதற்காக சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனே உள்ளே சென்று பார்த்தபோது வீடிற்குள் இருந்த பீரோ உடைப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 152 பவுன் நகை, ரூ.30 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து காசிலிங்கம் உடனடியாக காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. ராஜா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடவியல், கைரேகை நிபுணர்கள் மற்றும் சிறப்பு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர்.

    மேலும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அ.தி.மு.க. பொதுக்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந் தேதி பண்ருட்டிக்கு வந்தார்.
    • சத்யா பன்னீர்செல்வம் கணவர் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் நகரில் வசித்து வருபவர் சத்யா பன்னீர்செல்வம். இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021 வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார். இவரது கணவர் பன்னீர்செல்வம். இவர் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆவார்.

    கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சத்யா பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை். இதனால் சத்யா பன்னீர்செல்வமும் அவரது கணவர் பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.

    பின்னர் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொள்ளுமாறு தலைமை அலுவலகத்துக்கு மனு அளித்தனர். இதனை தொடர்ந்து சத்யா பன்னீர்செல்வத்தையும், அவரது கணவர் பன்னீர்செல்வத்தையும் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இணைத்து உத்தரவிட்டார். மேலும் சத்யா பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.க. மகளிர் அணி துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந் தேதி பண்ருட்டிக்கு வந்தார். அவருக்கு சத்யா பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை 6.30 மணிக்கு பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள சத்யா பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றனர்.

    அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவலை அறிந்ததும் சத்யா பன்னீர்செல்வம் வீட்டு முன் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சத்யா பன்னீர் செல்வம் கணவர் பன்னீர்செல்வம் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் மீண்டும் அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவது பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாமிரபரணி ஆற்றின் கட்டமைப்பு சேதமடைந்துள்ளது.
    • பராமரிப்பு சரியாக இல்லாவிட்டால் மழை பொழிவின் போது ஆபத்தில் தள்ளிவிடும்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது யார்? என்பது குறித்து போலீசார் இன்று விசாரணை நடத்தினார்கள். இதன் முடிவு 2 நாட்களில் வெளிச்சத்துக்கு வரும்.

    கடந்த ஆண்டுகளை விட மழைப்பொழிவு இந்தாண்டு அதிகம் என்ற தகவல் உள்ளது. மழை காலம் நெருங்குவதால் நீர் வழி தடங்களில் உள்ள ஷட்டர் பழுதாகி கிடைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு பராமரிப்பில் 90 அணைகள் உள்ளன. பராமரிப்பு சரியாக இல்லாவிட்டால் மழை பொழிவின் போது ஆபத்தில் தள்ளிவிடும்.

    தாமிரபரணி ஆற்றின் கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஷட்டர்கள், சங்கிலிகள், ரப்பர்கள் பழுதடைந்துள்ளதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் சரி செய்துவிட்டால் பெரிய இழப்பிலிருந்து தப்பிக்கலாம் சேதமடைந்துள்ளதை சீரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் தாமதிக்காமல் விடுவிக்க வேண்டும்.

    அஜித் குமார் மரண வழக்கில் காவல் துறையின் செயல்பாடுகளுக்கு நீதித்துறை அதிருப்தி தெரிவித்து கொண்டு தான் இருக்கிறது. காவல் துறை தனது போக்குகளை மாற்றி கொள்ள வேண்டும். சென்னை காவல் துறையை நீதிபதி எச்சரிக்கை செய்துள்ளார். 2008 முதல் தற்போது வரை சூளைமேடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    காவல் துறையினருக்கு யோகா, மன, உடற்பயிற்சி அளித்த பிறகும் தவறிழைக்கிறார்கள் என்றால் அவர்கள் காவல்துறை பணிக்கே தேவையில்லை. சென்னையில் விம்கோ நகரில் ரெயில் சிறைபிடிப்பு தான் நடக்கிறது. புறநகர் ரெயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கூறியும் ரெயிலை சிறைபிடிக்கும் போரட்டத்தினை மக்கள் நடத்தியுள்ளனர். இது ரெயில்வே துறையினரின் மெத்தனபோக்கை காட்டுகிறது. ரெயில்வே துறையில் வடமாநிலத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் தெரியாதவர்கள் நியமிக்கப்படுவதால் மொழி தெரியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் ஒட்டுக்கேட்பு கருவி வைத்ததில் யார் மீது சந்தேகம் இருக்கிறது? என்று கேட்ட போது உங்கள் மீது தான் சந்தேகம் என்றார்.



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
    • அப்போது, திமுக கூட்டணி கட்சிகளுக்கு இ.பி.எஸ். அழைப்பு விடுத்தார்.

    கடலூர்:

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:

    மாநாடு, கொடிக் கம்பம் நடுவதற்கு கூட்டணி கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

    வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சீட்களைக் குறைத்து விடுவார்கள்.

    தி.மு.க. ஆட்சிக்கு கூட்டணி கட்சிகள் ஜால்ரா போடுகின்றன. எதற்காக அசிங்கப்படுகிறீர்கள்?

    தி.மு.க. கூட்டணியில் இருந்த அனைத்துக் கட்சிகளுடனும் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு ஊழியர்கள் அரசுக்காக அரசியல்வாதியாக மாறிவிடக்கூடாது.
    • பா.ம.க.வில் நடக்கும் உட்கட்சி பிரச்சனைகளில் நாங்கள் தலையிட முடியாது.

    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், விளம்பர மாடல் ஆட்சி என கூறினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    * அரசு ஊழியர்கள் அரசுக்காக அரசியல்வாதியாக மாறிவிடக்கூடாது.

    * எனக்கு விவசாயம் தொழில் தான் உள்ளது. எனக்கென கம்பெனி எல்லாம் கிடையாது. மக்கள் பிரச்சனைக்காக தான் டெல்லி செல்வோம்.

    * 2001-ல் பா.ஜ.க.வுடன் தான் தி.மு.க. கூட்டணி வைத்தது. அப்போது ஏன் இவ்வாறு பேசவில்லை.

    * பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று அறிவித்ததால் முதலமைச்சருக்கு பயம்.

    * எங்களது கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தான் அமித்ஷா கூறிவிட்டார்.

    * அதிமுக, பாஜக, கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி கிடையாது. எங்கள் கூட்டணியை பொறுத்தவரை நான் சொல்வது தான்.

    * பா.ம.க.வில் நடக்கும் உட்கட்சி பிரச்சனைகளில் நாங்கள் தலையிட முடியாது என்றார்.

    இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு காலம் கடந்துவிட்டதாக பதில் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்க திட்டம்.
    • அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விவசாய பிரதிநிதிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இதன்பின் உரையாற்றி எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.12,000 கோடிக்கு மேல் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

    * அ.தி.மு.க. ஆட்சியில் பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும் விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வந்தோம்.

    * கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்க திட்டம்.

    * அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.

    * தொகுதிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைவு கூட வேளாண் அமைச்சருக்கு இல்லை என்றார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெல்டா பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. விவசாயம் பொய்த்து விட்டது.
    • கரும்பு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.

    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது விவசாய சங்க தலைவர் ரவீந்திரன் மற்றும் பிரதிநிதிகள் பேசியதாவது:-

    டெல்டா பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. விவசாயம் பொய்த்து விட்டது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது. இதனால் தடுப்பணைகள் கட்டி தர வேண்டும்.

    கரும்பு விவசாயிகளுக்கு மானிய தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. பெயரளவில் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே கரும்பு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். கரும்பு பயிரில் நோய் தாக்குதல் அதிகம் உள்ளதால் விவசாயம் குறைந்து விட்டது. நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த வேளாண்மை துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணப்பயிர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகள் 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுள்ளோம். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெற்கு ரெயில்வே தரப்பில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
    • கடந்த 8-ந்தேதி ஆலப்பாக்கம் ரெயில் நிலைய மேலாளரிடம் இருந்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவுக்கு அழைப்பு சென்றது உறுதி செய்யப்பட்டது.

    கடலூர் அருகே செம்மங்குப்பம் ரெயில்வே கிராசிங்கில் கடந்த 8-ந்தேதி விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரெயில் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்த பள்ளி வேன் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். வேன் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். விபத்தின் போது பங்கஜ் சர்மா என்பவர் கேட் கீப்பராக பணியில் இருந்தார். அவர் ரெயில்வே கிராசிங் பாதையை மூடாமலிருந்ததே விபத்துக்கு காரணம் என புகார் எழுந்தது.

    இதற்கிடையே, பள்ளி வேன் டிரைவர் கேட்டுக்கொண்டதாலேயே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா ரெயில்வே கேட்டை திறந்து விட்டதாகவும் தெற்கு ரெயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், பங்கஜ் சர்மா விதியை மீறி செயல்பட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பங்கஜ் சர்மாவை ரெயில்வே போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தில் மாறுபட்ட கருத்துகள் நிலவியது. எனவே, இதுகுறித்து விசாரிக்க தெற்கு ரெயில்வே தரப்பில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழு, கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பள்ளி வேன் ஓட்டுனர் சங்கர், ரெயில் நிலைய மேலாளர்கள், தண்டவாள பராமரிப்பாளர்கள், ரெயில் டிரைவர்கள் என 13 பேரிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில், தெற்கு ரெயில்வே குழுவின் விசாரணை முடிந்து அறிக்கையானது சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த 8-ந்தேதி ஆலப்பாக்கம் ரெயில் நிலைய மேலாளரிடம் இருந்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவுக்கு அழைப்பு சென்றது உறுதி செய்யப்பட்டது. அப்போது ரெயில் கடப்பதற்கு முன்பு வழங்கப்படும் ரகசிய குறியீட்டு எண் வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பங்கஜ் சர்மா தொடர்ச்சியாக 3 நாட்கள் பணியில் இருந்துள்ளார். ரெயில்கள் வரும் நேரங்களில் அவர் ரெயில்வே கேட்டை அடைக்காமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. விசாரணையின் அடிப்படையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணி நீக்கம் செய்ய விசாரணை குழு பரிந்துரை செய்தது. அதன்படி, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திராவிட மாடல் ஆட்சி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
    • தமிழர்கள் ஓரணியில் திரள்வோம்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் லால்குளத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் மறைந்த எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு மண்டபம் திறப்பு இன்று நடைபெற்றது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்த கொண்டு நூற்றாண்டு மண்டபத்தை திறந்து வைத்தார். விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் திருமாவளவன் பேசியதாவது:-

    சிதம்பரத்தில் நந்தனாருக்கு மணிமண்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட எல்.இளையபெருமாளுக்கு நூற்றாண்டு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சிக்காக நந்தனார் பாடுபட்டார். காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சிநாளாக கொண்டாடப்படும் இந்த நாளில் எல். இளையபெருமாளுக்கு மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எல்.இளையபெருமாள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டு அறிக்கை வெளியிட்டார்.

    1931-ம் ஆண்டு மக்கள் தொகையில் ஒன்றரை சதவீதம் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி வளர்ச்சி பெற்று இருந்தனர். தற்போது 78 சதவீதம் பட்டியலின மக்கள் கல்வி வளர்ச்சி பெற்றுள்ளனர். திராவிட மாடல் ஆட்சி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார். அதே போல் தற்போது தி.மு.க. அரசும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

    மீண்டும் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும். தமிழர்கள் ஓரணியில் திரள்வோம். 2026-ல் தி.மு.க ஆட்சி அமைய அனைவரும் ஒத்துழைப்போம்.

    தி.மு.க. கூட்டணிக்கு விழும் வாக்குகளில் 4-ல் ஒரு வாக்கு வி.சி.க.வுடையதாக இருக்கும். அதாவது 100 வாக்குகளில் 25 வாக்குகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி உரியதாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ×