என் மலர்

    உள்ளூர் செய்திகள் (District)

    கரூரில் பெண் அடித்துக் கொலை
    X

    கரூரில் பெண் அடித்துக் கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் முத்தாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
    • கொலை சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர்:

    கரூர் அருகே திண்டுக்கல்-கரூர் நெடுஞ்சாலையில் சின்னம நாயக்கன்பட்டி பிரிவு டாஸ்மாக் கடை செல்லும் வழியில் வெங்கக்கல் பட்டியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான சிறிய தகரக் கொட்டகை அமைந்துள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு வரை இதில் கறிக்கடை செயல்பட்டு வந்தது.

    தற்போது இங்கு கடை இன்றி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இன்று காலை இந்த கொட்டகையின் உள்ளே பெண் பிணம் கிடப்பதாக வெள்ளியணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு பிணமாக கிடந்த பெண் தலையில் அடிபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    யாரோ மர்ம நபர் அவரை தலையின் பின் பகுதியில் தாக்கி கொலை செய்துவிட்டு உடலை அலங்கோலமாக போட்டு விட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்ட பெண் அதே பகுதி புலியூர் வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்தாயி என்பது தெரியவந்தது. இவர் கட்டிட சித்தாள் வேலை செய்து வந்தார்.

    இதையடுத்து போலீசார் முத்தாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    நேற்று இரவு முத்தாயியுடன் அவருடன் பணிபுரியும் நபர் வண்டி சாவி காணவில்லை என மது போதையில் சண்டையிட்டதாக தெரிகிறது.

    இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முத்தாயி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தார்கள்.

    இந்த கொலை சம்பவம் கரூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×