என் மலர்

    தமிழ்நாடு (Tamil Nadu)

    3 ஆயிரம் பேர் பங்கேற்ற புரட்டாசி காய்கறி திருவிழா
    X

    3 ஆயிரம் பேர் பங்கேற்ற புரட்டாசி காய்கறி திருவிழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தை பொங்கல் விழா மற்றும் புரட்டாசி மாதம் காய்கறி திருவிழா வெகு சிறப்பாக, கொண்டாப்படுவது வழக்கம்.
    • அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மெய்வழிச்சாலையில் மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம் என்னும் ஒரு மதத்தினர் உள்ளனர். இவர்கள் தங்கள் பெயருக்கு முன்பாக சாலை என சேர்த்துக்கொள்வார்கள்.

    இந்த மெய்வழி மதத்தில் 69 ஜாதிகளை சேர்ந்தவர்கள் ஒன்றாக உள்ளனர். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை, தை பொங்கல் விழா மற்றும் புரட்டாசி மாதம் காய்கறி திருவிழா வெகு சிறப்பாக, கொண்டாப்படுவது வழக்கம்.

    அதன்படி மெய்வழி தலையுக ஆண்டு புரட்டாசி மாதம், பிச்சை ஆண்டவர் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் மெய்வழி ஆலய வளாகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து காய்கறிகள், அரிசி, பருப்பு ஆகியவற்றை வைத்துக்கொண்டு வரிசையாக நின்றனர்.

    அப்போது மெய்வழி சபைக்கரர் சாலை வர்க்கவான் வந்து அனைவரிடமும் காய்கறிகள், அரிசி, பருப்புகளை பெற்றுக்கொண்டு ஆசீர்வாதம் வழங்கினார். பின்னர் அனைவரிடம் பெறப்பட்ட காய்கறிகள், அரிசி, பருப்பை கொண்டு சமையல் செய்து, அனைவருக்கும் சபைக்கரசர் வர்க்கவான் பிரசாதமாக வழங்கினார்.

    அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இவ்விழாவில், தமிழகம் மற்றும் வெளிமாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு காய்கறிகளை படைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

    Next Story
    ×